நீதித் துறையில் சனாதனம்

112 ஆண்டுகால சென்னை உயர்நீதி மன்றத்தில் ஒரு பட்டியல் இனத்தவர்கூட நீதிபதியாக வர முடியவில்லையே என்று கேட்டார் பெரியார். கலைஞர் ஆட்சி நடந்தது; வரதராசன் என்ற தலித் – தலைமை நீதிபதி யானார். பிறகு உச்சநீதிமன்றம் வரை சென்றார்.

இப்போது நீதித்துறையில் நிலை என்ன?

ட           நீதித் துறையில் இடஒதுக்கீடுகள் இல்லை; கே.ஆர். நாராயணன், குடியரசுத் தலைவராக இருக்கும்போது மட்டும் இதற்காகக் குரல் கொடுத்தார். அது வெற்றி பெறவில்லை. தற்போது உச்சநீதி மன்றத்தில் தலித் நீதிபதிகள் 2 பேர் மட்டுமே.

ட           மோடி ஆட்சி பரிந்துரைக்கும் நீதிபதிகளில் ஆர்.எஸ்.எஸ். உணர் வுள்ளவர்களே தேர்வு செய்யப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் பா.ஜ.க. மகளிர் அணி பொறுப்பில் இருந்த ஒருவர் நீதிபதியாக்கப் பட்டுள்ளார். அவர் இந்தியாவில் வாழும் கிறிஸ்தவர்களை தேசவிரோதிகளாக்கி தனது முகநூலில் பதிவிட்டவர்.

ட           உச்சநீதிமன்றத்தில் முதல் பெண் நீதிபதி பாத்திமா பீவி, 1989இல் தேர்வு செய்யப்பட்டார். இது வரை உச்சநீதிமன்றத்தில்

பெண் நீதிபதிகளாக இருந்தவர்கள் 11 பேர் மட்டுமே (4.2. சதவீதம்). 77 ஆண்டு சுதந்திர இந்தியாவில் முதல் பெண் தலைமை நீதிபதியாகும் வாய்ப்பு தற்போது நீதிபதியாக இருக்கும்

பி.வி. நாகரத்தினாவுக்கு 2027இல் தான் கிடைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

இதிலும் இந்தியாவிலே தமிழ்நாட்டில்தான் உயர்நீதிமன்றத் தில் 14 பெண்கள் நீதிபதிகளாக உள்ளனர்.

அதே வேளையில் பாட்னா, மணிப்பூர், மேகாலயா, திரிபுரா, உத்தரகாண்ட் உள்ளிட்ட 5 உயர்நீதிமன்றங் களில் பெண் நீதிபதிகளே கிடையாது.

ட           இங்கிலாந்தில் நீதிமன்றங்களில் 32 சதவீதம் பெண்கள். அமெரிக்கா வில் 34 சதவீதம். ஆனால் இந்திய உயர்நீதிமன்றங்களில் 11.5 சதவீதம் மட்டுமே.

ட           சபரிமலை கோயிலுக்குள் பெண்கள் அனுமதி இல்லை. சனாதனம் மிரட்டுகிறது. இந்துத்துவ ஆட்சி எதிர்க்கிறது. ஆர்.எஸ்.எஸ்.சில் சுயம்சேவக்காக பெண்கள் வரமுடியாது.

ட           முன்னணி அமைப்புகளை உருவாக்கி அதில் தான் பெண்களை சேர்க்கிறார்கள்; இதுதான் சனாதனம்; இது தான் மனுதர்மம்.

பெரியார் முழக்கம் 23032023 இதழ்

You may also like...