Author: admin

70 ஆண்டு மூட நம்பிக்கையை தகர்த்த – ஆத்தூர் தோழர்கள் அறிவியல் பரப்புரை

70 ஆண்டு மூட நம்பிக்கையை தகர்த்த – ஆத்தூர் தோழர்கள் அறிவியல் பரப்புரை

சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு அருகே ஒரு கிராமத்தில் 70 ஆண்டு களாக மாடி வீடுகளே கட்டப்படுவது இல்லை; அது ‘சாமி குத்தம்’ என்று மக்கள் அஞ்சி வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் கழகத் தோழர்கள் அந்த கிராமத்தில் அறிவியல் பரப்புரை நடத்தி மக்களின் அச்சத்தைத் தகர்த்தனர். இது குறித்த செய்தி: சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் மல்லியக்கரை அஞ்சலுக்குட்பட்ட கருத்த ராஜப்பாளையம் என்ற கிராமத் தில் சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு அடுக்கு மாடி வீடும் கட்டப்படவில்லை.காரணம் அங்கு அனைவராலும் மிகவும் அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ள பெரியசாமி கோவிலின் கோபுரத்தின் உயரத்திற்கு மேல்  அந்த பகுதியில் எந்த ஒரு வீடு கட்டினாலும் அவர் இறந்து விடுவார் அதுபோல் இறந்தும் இருக்கிறார் என்ற மிகப்பெரிய மூட நம்பிக்கையில் பயத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த செய்தி ‘சன்’  மற்றும் ‘மக்கள்’ தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பட்டுள்ளது. செய்தித்தாள் களிலும் வெளி வந்துள்ளது. அங்கு பொருளாதார வசதி...

பாதிரியார் சகாயராஜ் தீண்டாமை வெறி சங்கராபுரத்தில் ஆர்ப்பாட்டம்: தோழர்கள் கைது

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தாலுகா மையனூர் கிராமத்தில் ஏசு குழந்தை பள்ளி இயங்கி வருகிறது. இதன் தலைமையாளர் பாதிரியார் சகாயராஜ் இந்த பள்ளியில் படிக்கும் நான்கு சிறுவர்களை செப்டம்பர் 5 அன்று அங்கு படிக்கும் மாணவர்களின் செருப்பை திருடியதாக பிடித்து, அதற்கு தண்டனையாக அடித்தும்,  விளையாட்டு திடலை சுற்றிவரச் சொல்லியும் கொடுமைப்படுத்தி யுள்ளனர். நான்கு பேரில் இருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை விட்டுவிட்டு,  இருளர் சமூகத்தை சேர்ந்த இருவரை கடுமையாக தாக்கியுள்ளனர். அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று வெளியூர் போக பணம் இல்லாததால் வீடு திரும்ப முயன்றபோது, பள்ளி ஊழியர்கள் பார்த்து பள்ளிக்கே கொண்டு சென்றனர். செய்தி பெற்றோர்களுக்கு தெரிந்து அவர்கள் பாதிரியார் சகாயராஜை சந்தித்து விவரம் கேட்டபோது, அவர் பெற்றோர்களை மிரட்டியதோடு இது பிற்படுத்தப்பட்டோர் பலம் வாய்ந்த பகுதி அவர்களை அழைத்து உங்களை தாக்குவேன். நாளை காலை வந்து விடுப்பு சான்றிதழ் (கூஊ) பெற்றுக்கொள்ளுங்கள் என்றிருக்கிறார். இவர்களும் இது...

வினா… விடை…

வினா… விடை…

ஆகமவிதிகள் மீறாமல் கோயில்களை பழுது பார்க்க உயர்நீதிமன்றம் 60 பேர் கொண்ட ஒரு குழுவை நியமித்துள்ளது. – செய்தி ஒரு சந்தேகம். உறுப்பினர்கள் ஆகம விதிப்படித் தான் நியமிக்கப்பட்டிருக் காங்களா? பெரியார் முழக்கம் 10112016 இதழ்

நன்கொடை

கழக வளர்ச்சி நிதிக்கு பெங்களூர் தோழர்கள் சிவகுமார் – ரூ.5000, எம்.ஜி.ஆர். மணி – ரூ.3000, சித்தார்த்தன்- ரூ.2000, ‘புரட்சிப் பெரியார் முழக்க’ வளர்ச்சி நிதிக்கு விழுப்புரம் மதியழகன்-ரூ.100, நாகராசன்-ரூ.100 ஆகியோர் நன்கொடையாக வழங்கினர். பெரியார் முழக்கம் 10112016 இதழ்

கிறிஸ்துதாஸ் காந்திக்கு எதிரான மிரட்டலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி அவர்கள் ஊடகத்தில் புராண கற்பனை கதாபாத்திரமான இராமனை கொளுத்துவேன் என்று தன் கருத்தினை பதித்ததற்காக …  பார்ப்பன இந்துத்துவ ஊடகம் ‘தினமலர்’ அவரை பற்றிய விவரங்களுடன் செய்தியை வெளியிட்டு, அவரின் அலைபேசி எண்ணையும் அதில் பதித்து, பார்ப்பன அடிமைகளை தூண்டும் விதமாக செய்திகளை வெளியிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாய் பார்ப்பன கும்பல் ஒரு முன்னாள் அதிகாரி என்றும் கருத்தில் கொள்ளாமல் தன் காலித்தனத்தை காட்டும் விதமாக, அவரை தரக்குறைவான வார்த்தை களாலும், அவரை ஜாதியின் பெயரால் இழிவு படுத்தியும், கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளது. அவர்களை கண்டித்து தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு மற்றும் மதச் சார்ப்பின்மை இயக்கம் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் 3.11.2016 வியாழக்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடந்தது. அதில் திராவிடர் விடுதலைக் கழகம் தலைமை நிலைய செயலர் தபசி குமரன் தன் கண்டனத்தை இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக பதிவு செய்தார். பெரியார் முழக்கம் 10112016 இதழ்

டெல்லி மக்களை முகமூடி போட வைத்த ‘மகாவிஷ்ணு’

டெல்லி மக்களை முகமூடி போட வைத்த ‘மகாவிஷ்ணு’

‘மகா விஷ்ணு’ டெல்லியில் பொது மக்களை யெல்லாம் முகமூடி போட வைத்து விட்டார். தீபாவளி பட்டாசு வெடிப்புக்குப் பிறகு புதுடில்லியில் ‘காற்று மாசு’ அதிகரித்து மக்கள் உயிருக்கு ஆபத்துகளை உருவாக்கியுள்ளது.  பஞ்சாப், அரியானா மாநிலங்களில் வைக்கோல் போன்ற விவசாய கழிவுப் பொருள்களை எரிப்பது இதற்கு ஒரு காரணம். இதை மேலும் சிக்கலாக்கியது தீபாவளி பட்டாசு வெடிப்பு. புதுடில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டு, தொழிற்சாலைகள் மூடப் பட்டுள்ளன. மக்கள் முகமூடியுடன் நடமாடுகிறார்கள். இந்திய வானியல் துறை முன்னாள் தலைமை இயக்குனரும் விஞ்ஞானியுமான ‘இலட்சுமண் சிங்’ நாளேடு ஒன்றுக்கு அளித்த பேட்டியில், “தீபாவளிக்கு பட்டாசு வெடிப்பதை நிறுத்த வேண்டும்” என்று கூறியுள்ளார். மணப்பாறையில் பெரியார் பிறந்த நாள் மணப்பாறை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக நடைபெற்ற பெரியார் பிறந்த நாள் பெரியார் பெருந்தொண்டர்  சேகர் தலைமையில் நடைபெற்றது. தனபால், திராவிடர் கலைக் குழு சங்கீதா;  திராவிட முன்னேற்றக் கழக மாவட்ட பிரதிநிதி துரைஅழகிரி, ஆதி...

நாச்சியார்கோவிலில் கொளத்தூர்மணி பேச்சு இடஒதுக்கீடு வறுமை ஒழிப்பு திட்டமல்ல

தஞ்சைமாவட்டம் திருவிடைமருதூர்ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 138வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் 17.10.2016 அன்று மாலை 6மணியளவில் நாச்சியார்கோவில் வடக்கு வீதியில் அமைக்கப்பட்ட சுயமரியாதைச் சுடரொளி குடந்தை ஆர்பிஎஸ் ஸ்டாலின் நினைவு மேடையில் தலைமை கழக பேச்சாளர் சாக்கோட்டை இளங்கோவன் தலைமையில் மிகுந்த எழுச்சியுடன் நடைப்பெற்றது. துவக்கத்தில், மக்கள்பாடகர் பள்ளத்தூர் நாவலரசன் குழுவினரின் பகுத்தறிவு பண்பாடும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.  கும்பகோணம் ஒன்றிய அமைப்பாளர் சா. வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார்.  திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா. காளிதாசு, நாகை மாவட்ட செயலாளர் தெ. மகேசு, தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித. திருவேங்கடம் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.  பின்னர், பொதுக்கூட்டத்திற்கு தலைமையேற்று கழகப் பேச்சாளர் சாக்கோட்டை இளங்கோவன் தலைமை உரையாற்றினார். இறுதியாக, கழகத் தலைவர் கொளத்தூர்மணி சிறப்புரையாற்றினார்.  அவர் தனது உரையில், “ஜாதி ஒழிப்பிற்கு ஒரு இடைக்கால நிவாரணம் என்றால் அது அனைத்து ஜாதியை சேர்ந்தவர்களும்...

“தீபாவளி புனிதமா ? வணிகமா?” சென்னையில் தோழர்கள் துண்டறிக்கை விநியோகம்

விழிப்புணர்வு துண்டறிக்கை திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்ட தோழர்களால் தியாகராய நகர் கடைவீதியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. மாணவர்கள், மாணவியர்கள், தாய்மார்கள் என மக்கள் ஆர்வமாக துண்டறிக்கையை வாங்கி படித்தது அவர்களின் தேடலை, தேவையை நன்கு உணர்த்தியது. சிலர் இருபது முப்பது துண்டறிக்கை களை அவர்களின் பகுதியில் விநியோகிக்க வாங்கிச் சென்றதும், ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க கம்யூனிஸ்ட் தோழர் தாமாக முன் வந்து துண்டறிக்கை விநியோகத்திற்கு உதவியாய் வந்ததும், திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் துண்டறிக்கையை பெற்றுக்கொண்டு தோழர்களின் பணியை பாராட்டியது, தோழர்களுக்கு பெரும் ஊக்கமாய் அமைந்தது. தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன் தலைமையில் மாவட்ட செயலாளர் இரா. உமாபதியுடன் தோழர்கள் துண்டறிக்கையை விநியோகம் செய்தனர். பெரியார் முழக்கம் 10112016 இதழ்

“அய்யப்பசாமி; பறையுங்கோ!”

சபரிமலை அய்யப்பன் ‘கட்டை பிரம்மச்சாரி’ என்பதால் ‘மாதவிலக்கு’ எனும் ‘தீட்டுக்கு’ உள்ளாகும் பெண்களை கோயிலுக்குள் அனுமதிக்க முடியாதாம்! ‘அய்யப்பனுக்காக’ அவனது வழக்கறிஞர்கள் இப்படி வாதாடுகிறார்கள். ‘நியூஸ் 18’ தொலைக்காட்சி விவாதத்தில் (நவ. 7) பேசிய இரண்டு பார்ப்பனர்கள் (இதில் ஒருவர் பெண்) – பெண்களை அய்யப்பன் கோயிலுக்குள் அனுமதிக்கலாம் என்று கேரள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி கூறுவதை ஏற்கவே முடியாது என்று அடம் பிடித்தார்கள். “கூடாது; கூடாது; இது அடாவடி.” அய்யப்பன், பிரம்மச்சாரி கோலத்தில் அங்கே இருக்கிறான். 10க்கு மேல் 50 வயதுக்குள் உள்ள பெண்கள் ‘பிரம்மச்சாரி’யை நேரில் தரிசித்தால் பகவான் கவனம் திசை திரும்பி விடாதா? பிரம்மச்சரியம் குலைந்து விடாதா? இது நாட்டுக்கே பேராபத்தாகி விடும் – என்று தொலைக்காட்சியில் பதறுகிறார்கள். ஆனாலும், ‘இவாள்கள்’ அய்யப்பனை இப்படியெல்லாம் அவமதிக்கக்கூடாது என்பதே அடியேனின் கருத்து. அய்யப்பன் பிரம்மச்சர்யம் என்ன அவ்வளவு பலவீனமானதா? பெண்களைப் பார்த்தாலே சபலத்துக்கு ஆளாகி விடுவானா? இதைக்...

தலையங்கம் கேள்விக்குறியாகும் எதிர்காலம்!

தமிழ்நாட்டில் படித்த இளைஞர்களின் எதிர்காலம் பெரும் கேள்விக்குறியாகியிருக்கிறது என்பதற்கு அண்மையில் தமிழ்நாடு தேர்வாணை யம் நடத்திய ‘குரூப்-4’ தேர்வே சரியான சாட்சி. 5,451 காலி இடங் களுக்கு தேர்வு எழுதியவர்கள் 15 இலட்சத்து 64 ஆயிரத்து, 471 பேர். 12ஆம் வகுப்புதான் கல்வித் தகுதி என்றாலும், பொறியியல் பட்டதாரிகள் பல்லாயிரக்கணக்கில் பங்கேற்றுள்ளனர். 11 மாவட்டக் கல்வி அதிகாரி பணியிடங்களுக்கு 2014இல் நடத்திய தேர்வில் 3000 பேர் தேர்வு எழுதினர். 2015இல் முதன்மை தேர்வு (மெயின் தேர்வு) நடந்து முடிந்து 15 மாதங்கள் ஓடிய பிறகும் இன்னும் தேர்வு முடிவுகள் வெளியிடப்படவில்லை. துணை ஆட்சியர், மாவட்ட காவல்துறை அதிகாரி போன்ற குரூப்-1 தேர்வுகள் இப்போது அறிவிக்கப்பட்டுள்ளன. இந்தத் தேர்வில் பங்கேற்று தேர்ச்சிப் பெறக் கூடியவர்கள் குறைந்தது மூன்று முறை தேர்வு எழுதியவர் களாகவே இருக்கிறார்கள். பட்டப் படிப்பு முடித்தது முதல் இந்தத் தேர்வுக்காகவே தயாராகி வரும் மாணவர்களுக்கு இறுதி கட்டத்தில் வயதுத் தடை...

திருப்பூரில் அறிவியல் மன்றம் நடத்திய மகளிர் சந்திப்பு

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்திய மகளிர் சந்திப்பு திருப்பூரில் 23.10.2016 அன்று நடைபெற்றது. இதில் திருப்பூர் கோவை பகுதி தோழர்கள் 30 பேர் கலந்து கொண்டனர். காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடந்த இந் நிகழ்வு பெரும் உற்சாகத் துடனும் பயனுள்ளதாகவும் நடைபெற்றது. முதல் நிகழ்வாக கலந்து கொண் டோர் தங்களைப் பற்றியும் தங்களுக்கு பொது வாழ்விலுள்ள பங்கு பற்றியும் அறிமுகப்படுத்திக் கொண்டனர். பிறகு அந்தக் காலப் பெண்கள் வாழ்வு தான் சிறந்தது என்று ஒரு குழுவும் அதனை மறுத்து இந்தக் காலப் பெண்கள் வாழ்வு தான் சிறந்தது என்று ஒரு குழுவும் விவாதித்தனர். இதில் பெண்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் முன்னேற்றங்கள் குறித்து பல்வேறு கருத்துகள் முன் வைக்கப்பட்டு விவாதித்தனர். பிற்பகல் பெரியார் ஒர் அறிமுகம் என்ற தலைப்பில் சிவகாமி பேசினார். பிறகு பொட்டு வைத்தல், தாலி ஓர் அடிமைச் சின்னம், அணிகலன்...

மதுரையில் 480 தோழர்கள் கைது ஆணவக் கொலைகளைத் தடுக்காத காவல்துறை அலுவலகம் முற்றுகை

ஆணவக் கொலைகளைத்  தடுக்கத் தவறிய காவல்துறையைக் கண்டித்து, தென்மண்டல காவல் துறை ஐ.ஜி. அலுவலகத்தை முற்றுகை இடும் போராட்டம் 3.11.2016 அன்று, காலை 11-00 மணியளவில் நடைபெற்றது. மதுரை, புதூர் பேருந்து நிலையத்தில் அணி திரண்ட தோழர்களிடையே கூட்டமைப்பின் தலைவர்கள் உரையாற்றினர். போராட்ட ஒருங்கிணைப்பாளர்  தமிழ்ப்புலிகள்கட்சித் தலைவர் நாகை. திருவள்ளுவன் நோக்க உரையாற்றினார். திராவிடர் விடுதலை கழகத் தலைவர்கொளத்தூர்மணி, சி.பி.எம்.எல். மக்கள் விடுதலைக் கட்சியின் மீ.த.பாண்டியன், த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கோவை இராமக்கிருட்டிணன், மனிதநேய மக்கள் கட்சிப் பொதுச்செயலாளர் அப்துல் சமது, எச்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் தெகலான் பாகவி, ஆதிதமிழர்ப் பேரவைத் தலைவர் இரா.அதியமான், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் புதுக் கோட்டை செரீப், மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகப் பொதுச் செய்லாளர் பிரிசெல்லா பாண்டியன், இளந்தமிழகம் செந்தில், மே 17 இயக்கம் திருமுருகன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழ்நேசன், விடுதலைக் கட்சி துணைப் பொதுச்செயலாளர் ஆற்றலரசு ஆகியோர் உரையாற்றிய பின்னர்...

காஞ்சி கோயிலில் ‘பார்ப்பனர்’ திணிக்கும் தீண்டாமை

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோயில் என்றாலே சங்கர்ராமன் என்ற அர்ச்சகர் வெட்டிக் கொலை செய்யப் பட்டது நினைவுக்கு வரும். சங்கர்ராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட காஞ்சி ஜெயேந்திரன் உள்ளிட்ட அனைவரும் விடுதலையாகிவிட்டார்கள். ஆனால், சங்கர்ராமனை கொலை செய்தது யார் என்பதற்கு விடை கிடைக்கவில்லை. தன் கண் முன்னே தனது பக்தன் வெட்டி வீழ்த்தி இரத்த வெள்ளத்தில் சாய்ந்ததை நேரில் பார்த்துக் கொண்டிருந்த “வரதராஜப் பெருமாளும்” அப்படியே “கல்லு”போலவே இருக்கிறார். அதே வரதராஜப் பெருமாள் கோயிலுக்குள் இப்போது பார்ப்பனர் நடத்தும் ‘தீண்டாமை’ வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது. இந்தக் கோயிலுக்குள் ‘மாமுனிவர்’ வைணவ கோயில் ஒன்று உள்ளது. இந்தக் கோயிலுக்குள் உள்பிரகாரத்தில் பார்ப்பனர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுகிறார்கள். அய்யங்கார் பார்ப்பனர்களை மட்டுமே அங்கே உட்கார வைத்து, அவர்களை வழிபடுவதுபோல் ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ பாட அனுமதிக்கப்படுகிறது. பார்ப்பனரல்லாத வைணவர்கள் கோயில் உள்புற வளாகத் துக்குள்ளேயே அனுமதிக்கப்படுவது இல்லை. கோயில் வளாகத்துக்குள்ளேயே பார்ப்பனரல்லாதவர்கள் அனுமதிக்கப் படாததை எதிர்த்து சில...

கோயமுத்தூர் வாக்காளர்களுக்கு ஓர் வேண்டுகோள்  (ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்)

கோயமுத்தூர் வாக்காளர்களுக்கு ஓர் வேண்டுகோள் (ஸ்ரீமான் ஈ.வெ.ராமசாமி நாயக்கர்)

நமது நாட்டின் அடிமைத் தன்மைக்கும், அழிவுத் தன்மைக்கும் நமது ஒற்றுமைக் குறைவுதான் காரணமாயிருப்பதென்பதை எல்லோரும் அறிந்த விஷயம். அரசாங்கத்தாரால் நமக்குக் கொடுக்கப்படும் கல்வியும் அக்கல்வி கற்றதற்காக நமக்குக் கொடுக்கப்படும் உத்தியோகமும், பதவியும், அரசாங்கத் தாரால் நமக்கு வழங்கப்பட்டதெனச் சொல்லும் இத்தேர்தல் முறைகளும் ஆகிய இம்மூன்றும் நமது ஒற்றுமையின்மைக்குப் பிறப்பிடமாயிருக்கிறது. முதலிரண்டு காரியமும் படித்தவர்களைப் பற்றிக்கொண்டு ஒற்றுமைக் குறைவும் அடிமைத் தன்மையும் அவர்களால் உண்டாக்கப்பட்டு வந்தாலும் மூன்றாவதான தேர்தல் முறைகளான ( எலக்ஷன்கள் ) படித்தவர்களோடு அல்லாமல் சாது ஜனங்களையும், வியாபாரிகளையும், பொது மக்களையும் ஒற்றுமையோடு வாழ்வதற்கில்லாமல் பிரித்து வைக்கவும், துவேஷங்களை யும், குரோதங்களையும் உண்டாக்கி கட்சிப் பிரதிகட்சிகளை ஏற்படுத்தவும் சாத்தியமாயிருக்கிறது. இக்காரணங்களால்தான் பொதுநலத்திற்கு உண்மை யாய் உழைக்கிறவர்கள் இத்தேர்தல்களை காங்கிரஸின் வேலைத் திட்டங் களில் புகவிடாமல் தள்ளிவைத்துக் கொண்டே வந்தார்கள். இப்பொழுது நியாயமாகவோ, அநியாயமாகவோ எப்படியோ காங்கிரஸிற்குள்ளாக தேர்தல் கள் வந்து புகுந்துவிட்டதாய் காங்கிர°காரர்களும், பொது ஜனங் களும் எண்ணும் படியாய்...

சென்னையில் முற்றுகைப்போராட்டம் ,கைது !

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 26.04.2016 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று நடைபாதை கோயில்களை உடனே அகற்று என தமிழக அரசை வலியுறுத்தி கழக பொதுச்செயலாளர் தோழர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகை.முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இம்முறைக்கப்போராட்டத்தின் போது சட்ட விரோதமான உள்ள நடைபாதைக் கோயில்களை அகற்று !உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு பத்து ஆண்டுகள் ஆகியும் அத்தகைய கோயில்களை அகற்றாமல் இனியும் காலதாமதப்படுத்தாதே ! என தமிழக அரசை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முற்றுகையில் ஈடுபட்ட கழக தோழர்கள் கைதுசெய்யப்பட்டு மாலை 7 மணியளவில் விடுவிக்கப்பட்டார்கள். இம்முற்றுகைப் போராட்டத்தில் தலைமை நிலைய செயலாளர் தோழர் தபசி குமரன்,மாவட்ட தலைவர் வேழவேந்தன்,மாவட்ட செயலாளர் உமாபதி, தலைமைக்குழு உறுப்பினர் விழுப்புரம் அய்யனார், வடசென்னை மாவட்ட தலைவர் ஏசுகுமார்,கழக வழக்கறிஞர் அருண் உள்ளிட்ட 40 தோழர்கள் கலந்துகொண்டு கைதாகினர்.  

தாசர் தினம்

தாசர் தினம்

    தேசபந்துவினிடம் இத்தேசத்தார் வைத்திருந்த பேரன்பையும், அவருடைய மரணத்தினால் அடைந்துள்ள துக்கத்தையும் காட்டும்பொருட்டு ஜுலை µ முதல் தேதி மாலை 5 மணிக்குத் தேசமெங்கும் பொதுக்கூட்டங் கள் கூட்டித் தீர்மானங்கள் செய்யவேண்டுமென்று மகாத்மா காந்தி ஒரு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். தேசபந்து காலஞ்சென்று அன்றுடன் பதினாறுநாள் ஆகின்றமையால் அன்று அவரது சிரார்த்த தினமும் ஆகும். தமிழ்நாட்டார் இத்தினத்தைத் தகுந்தவண்ணம் நடத்திவைக்க வேண்டுமென நாம் சொல்ல வேண்டுவதில்லை. எல்லாக் கட்சியினரும், எல்லாச் சமூகத் தினரும் அன்று ஒன்றுபட்டு விண்ணுற்ற பெரியாரின் ஆன்மா சாந்திய டையுமாறு இறைவனை வழுத்துவார்களென நம்புகிறோம். தேசபந்துவின் ஞாபக தினத்தில், தேசத்திற்குத் தற்போது இன்றியமையாததாயிருக்கும் ஒற்றுமை விதை விதைக்கப்படுமாக. கைம்மாறு யாது ? இமயம் முதல் கன்னியாகுமரிவரையில் இந்நாட்டு மக்கள் தேச பந்துவின் எதிர்பாரா மரணத்தினால் துயரக்கடலில் மூழ்கியிருக்கின்றனர் என்று கூறுதல் மிகையாகாது. நாட்டில் ஒவ்வொரு மூலை முடுக்கிலிருந்தும் வந்து கொண்டிருக்கும் செய்திகள் இதற்குச் சான்றாகும். லோகமான்ய திலகரின் மரணத்திற்குப்...

நவரத்தினம்  – சித்திரபுத்திரன்

நவரத்தினம் – சித்திரபுத்திரன்

  சாதிக்கர்வமும், மூடநம்பிக்கையும் இந்தியர்களில் பிராமண சகோ தரரிடமாத்திரம் இருப்பதாக எண்ணுவது பிசகு, பிராமணரல்லாத சில வகுப்பாரிடமும், பஞ்சமரென்போரின் சில வகுப்பாரிடத்திலும் இருக்கிறது. ஆனால், இவர்கள் படிப்படியாய் மேல் சாதியார்  என்போரிடத்திலிருந்துதான் கற்றுக்கொண்டவர்கள். பிராமணர்களும், அவர்களைப்போல் நடிப்பவர்களும் தங்கள் பெண்கள் விதவை ஆகிவிட்டால் பெரும்பாலும் அவர்களை விகாரப்படுத்த வேண்டுமென்ற எண்ணங்கொண்டே, கட்டாயப்படுத்தி மொட்டையடிப் பதும், நகைகளைக் கழற்றிவிடுவதும், வெள்ளைத்துணி கொடுப்பதும், அரைவயிறு சாப்பாடு போடுவதுமான கொடுமைகளைச் செய்து வருகிறார் கள். ஆனால், இவர்களுக்கடங்காத சில °திரீகள் வயது சென்றவர்களாகியும் மொட்டையடித்துக் கொள்ளாமலும், நகைகள் போட்டுக்கொண்டும், காஞ்சி புரம், கொரநாடு முதலிய ஊர்களினின்றும் வரும் பட்டுப்புடவைகளைக் கட்டிக்கொண்டும் நான்கு பேர் நன்றாய் சாப்பிட்டுக் கொண்டுமிருக்கிறார்கள். ஜ°டி° கட்சிக்குப் பாமர ஜனங்களிடத்தில் செல்வாக்கு இல்லாதி ருப்பதற்குக் காரணம், அவர்கள் சர்க்காரை வைவது போல வேஷம் போடக் கூட பயப்படுவதுதான். பாமர ஜனங்கள் சர்க்காரை வைதால்தான் சந்தோஷப் படுவார்கள். ஏனெனில் சர்க்காரின் நடவடிக்கை அவர்களுக்குப் பிடிக்க...

திராவிட சங்கம்

திராவிட சங்கம்

திராவிட சங்கம்   நாகப்பட்டிணத்தில் திராவிட சங்கமென ஓர் சங்கம் நிறுவப்பட்டி ருப்பதாகத் தெரியவருகிறது.  ஆனால் முன்பு பிராமணரல்லாதார் சங்கமென்ற பெயருடன் இருந்த ஒரு சங்கத்தையே திராவிட சங்கமெனப் பெயர் மாற்றிப் புதிதாக நிர்வாக உத்தியோக°தர்கள் தெரிந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.  சங்கத் தின் அக்கிராசனர் ஸ்ரீமான் கே.ஸி.சுப்பிரமணியஞ் செட்டியார் அவர்கள் கதரை ஆதரிக்க வேண்டுமென்றும், தீண்டாமையை ஒழிக்கவேண்டுமென ஸ்ரீமான் திருஞானசம்பந்தன் அவர்களும் பேசியிருப்பதாகத் தெரியவரு கிறது.  இப்படி வெரும் வாய் வார்த்தையுடனே நின்று விடுவதாயிருந்தால் இச்சங்கம் முன்பு இருந்த பெயருடனேயே இருந்து உத்தியோகத்தை எதிர் பார்த்துக்கொண்டே இருக்கலாம்.  புதிதாக இவர்கள் பெயரை மாற்றிச் சங்கத்தை நிறுவியதற்கு ஏதாவது ஒரு காரணமாவது, நன்மையாவது அதில் ஏற்படவேண்டாமா? அப்படி ஏற்படவேண்டுமாயின் சங்கத்தின் அங்கத்தி னர்கள் ஒவ்வொருவரும் கதர் உடுத்த வேண்டுமென்றும். சங்கத்தின் அங்கத்தினர்களாய் இருப்பவர்களுக்கு மனிதன் பிறவியில் உயர்வு தாழ்வும், தீண்டாமையும் இல்லையென்றும் ஒரு தீர்மானம் செய்திருப்பார்களானால் புதுச்சங்கம் ஏற்படுத்தியது சரியென்று சொல்லலாம். காங்கிர° சம்பந்தப்பட்ட பிராமணர்...

குடி அரசு – தலையங்கம் 1925

குடி அரசு – தலையங்கம் 1925

இந்து மகாசபை ஆதியில் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலேயே இது பிராமண ஆதீனத்திற்காக ஏற்படுத்தப்பட்டதென்றும், பிராமணரல்லாதாரின் பிறவி இழிவைப் பலப்படுத்துவதாய் முடியுமென்றும்,  இந்தியாவின் ஜனசமூகத்தின் நான்கிலொரு பாகத்திற்கு மேலாய் இருக்கும் மகமதிய சகோதரர்களின் அதிருப்திக்கும், சந்தேகத்திற்கும் இடமளிக்கக் கூடியதாகும் என்றும் இந்து மகாசபை ஆரம்பித்ததற்கே, மகமதிய சகோதரர்களின் நடவடிக்கையைத்தான்  முக்கியக் காரணமாகச் சொல்லி வருவதால் வெகு கஷ்டப்பட்டு மகாத்மாவினால் ஏற்பட்ட இந்து – மு°ஸீம் ஒற்றுமை அடி யோடு மறைந்து போகுமென்றும், நமது குடி அரசின் பத்திராதிபர் பல தடவை களிலும், பல பிரசங்கங்களிலும் சொல்லிக்கொண்டே  வந்திருக்கின்றார். அதுமாத்திரமல்லாமல், நமது தமிழ்நாட்டில், இந்து மகாசபைக்கு கிளைகளாக ஏற்படுத்தப்பட்ட சபைகளிலெல்லாம் வருணாசிரம தர்மிகளும், பிறவியிலேயே தாங்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்களுமே அக்கிராசனாதிபதிகளாகவும், காரியதரிசிகளாகவும் நியமுகம் பெற்றிருக் கின்றார்களென்பதும், அநுபவத்தில் தெரிந்த விஷயம். பொது ஜனங்களை ஏமாற்றுவதற்காக, இந்து சபையில் இருக்கும்பொழுது தீண்டாமை ஒழிய வேண்டுமென்று ஓர் போலித் தீர்மானத்தை ஏற்படுத்திக் கொள்ளுவதும், அதே ஆசாமிகள்...

களை கட்டும் கழக கட்டமைப்பு நிதி திரட்டல் காவலாண்டியூர் 10112016

திராவிடர் விடுதலைக் கழக கட்டமைப்பு நிதி திரட்டல் கிளை : காவலாண்டியூர்  தி.வி.க ஆதரவாளர்கள் 1. திரு.ராமு போர்வெல் காண்ட்ரக்டர் கண்ணாமூச்சி ரூபாய் பத்தாயிரம் 10000/= 2. திரு.ராஜா தி.மு.க. (ஜல்லிமேடு) கண்ணாமூச்சி ரூபாய் பத்தாயிரம் 10000 | = 3.வளர்மதி விஸ்வநாதன் கண்ணாமூச்சி ரூபாய் ஐந்தாயிரம் 5000/= 4. திரு.சத்தியானந்தம் நெடுஞ்செழியன் நகர் செட்டியார் ரூபாய் ஐந்தாயிரம் 5000/= 5. திரு.இராஜா நஞ்சுண்டபுரம்.காவலாண்டியூர் ரூபாய் ஐந்தாயிரம் 5000/= 6. திரு. கார்த்திக் நஞ்சுண்டபுரம் காவலாண்டியூர் ரூ. ஐந்தாயிரம் 5000/= 7. திரு.சேகர் நஞ்சுண்டபுரம் காவலாண்டியூர் ரூ. ஐந்தாயிரம் 5000/= 8. திரு.கண்ணன் பழ வியாபாரி காவலான்டியூர் ரூ ஐந்தாயிரம் 5000 | = தோழர்கள்… 1. க ஈசுவரன ஒ். செயலாளர் தி.வி.க.காவலாண்டியூர் ரூ பத்தாயிரம் 10000/= 2. இரா.விசயக்குமார் கபிலன் ஸ்டுடியோ காலாண்டியூர் ரூ பத்தாயிரம் 10000/= 3. காவை . இளவரசன் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியாளர் காவலாண்டியூர் ரூ. பத்தாயிரம்...

வங்கி வேலைவாய்ப்பில் திட்டமிட்டு வஞ்சிக்கப்படும் தமிழ் நாடு ! ஆதாரங்கள் !

பாரத ஸ்டேட் வங்கியில் (state bank of india) காலியாக உள்ள பணிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இத்தேர்வில் தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை திட்டமிட்டே தடுக்கும் வேலை நடந்துள்ளது. அதனை நீரூபிக்கும் ஆவணங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அநீதி குறித்து கழக ஏடான புரட்சிப் பெரியார் முழக்கம் 10.11.2016 இதழில் தலையங்கம் வந்துள்ளது.அதனை படிக்க : https://www.facebook.com/dvk12/photos/a.1630398280577399.1073741828.1630392030578024/1835861566697735/?type=3 ஆதாரங்கள் : 1) முதலில் வந்த அறிவிப்பில் தமிழ்நாட்டில் இத்தேர்வை தமிழில் மட்டுமே எழுதவேண்டும் என அறிவிக்கப்பட்டது. மேலும் விண்ணப்பங்கள் பெற கடைசி நாள் என 25.04.2016 என அறிவிக்கப்பட்டது. 2)அறிவிப்பில் திருத்தம் என இரண்டாவது ஒரு அறிவிப்பை 20.04.2016 அன்று வங்கி வெளியிடுகிறது. விண்ணப்பம் பெற கடைசி நாளாக 28.04.2016 என தேதி நீட்டிக்கப்படுகிறது. 3) திருத்தப்பட்ட அறிவிப்பில் தமிழ்நாட்டில் தமிழில் மட்டும் தேர்வு எழுதவேண்டும் என்பதை திருத்தி ஆங்கிலத்திலும் எழுதலாம் என மாற்றப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும்தான் தேர்வு மொழியாக தமிழ், ஆங்கிலம்...

தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 09112016

திருப்பூர் துரைசாமி மாநில பொருளாளர் ரத்தினசாமி மாநில அமைப்புச் செயலாளர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது கலந்து கொண்டவர்கள் சூலூர் பன்னிர் செல்வம். தி.குமார் தலைவர் கிருட்டிணகிரி மாவட்டம் செயலாளர் காகுமார் அலேசீபம் இல்லத்தில் நடைபெற்றது துணைச் செயலாளர் ப வஞ்சிநாதன் சங்கர் அனுமந்தப்பா.இராஜேஷ் பிரபு மற்றும் 20 பேர் கலந்து கொண்டனர் டிசம்பர் 24 தஞ்சை நிகழ்வு கட்டமைவு நிதி . முழக்கம் சந்தா அமைப்பு செயல்பாடுகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது கா.குமார் நன்றி யுரை 2.00 முடிந்தது

கழகத் தோழர் பாரூக் அவர்களின் சார்பாக கழகத் தலைவர் அறிவுரை கழகத்தில் வாதம் சென்னை 09112016

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் மரண ஊர்வலத்தில் இந்து முன்னணியினர் நடத்திய கலவரத்தின் போது, காவல்துறை சில இந்து முன்னணியினரை கைது செய்ததோடு, இந்து முன்னணியினரை சமாதானப்படுத்தும் நோக்கில் சில இஸ்லாமியரை கைது செய்தது . அதில் கோவையை சேர்ந்த பெயரில் மட்டுமே இஸ்லாமிய அடையாளம் உடைய இறை மறுப்பாளரான திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் “பாரூக் ” கையும் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தது. இந்து அமைப்புகள் தந்த அழுத்தத்தால் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பதிந்தது காவல்துறை. அவருக்கு வழங்கப்படும் சட்ட வாய்ப்பான அறிவுரை கழகத்தின் ( Advisory board) முன்பு ஆஜர் படுத்த , இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். ” பாரூக் ” சார்பாக அவர் பக்க நியாயங்களை அறிவுரை கழகத்தில் உள்ள முன்னாள் நீதிபதிகள் முன்பு எடுத்துரைக்க கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி “பாரூக்...

கிறிஸ்துதாஸ் காந்தி அவர்களுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை 03112016

முன்னாள் IAS அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி அவர்கள் ஊடகத்தில் புராண கற்பனை கதாபாத்திரமான இராமனை கொளுத்துவேன் தன் கருத்தினை பதித்ததற்காக … பார்ப்பன இந்துத்துவ ஊடகம் தினமலர் அவரை பற்றிய விவரங்களுடன் செய்தியை வெளியிட்டு, அவரின் அலைபேசி எண்ணையும் அதில் பதித்து, பார்ப்பன அடிமைகளை தூண்டும் விதமாக இந்த செய்திகளை வெளியிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாய் பார்ப்பன கும்பல் ஒரு முன்னாள் அதிகாரி என்றும் கருத்தில் கொள்ளாமல் தன் காலித்தனத்தை காட்டும் விதமாக, அவரை தரக்குறைவான வார்த்தைகளாலும், அவரை ஜாதியின் பெயரால் இழிவு படுத்தியும், கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளது. அவர்களை கண்டித்து தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு மற்றும் மதச்சார்ப்பின்மை இயக்கம் வள்ளுவர் கோட்டத்தில் 03 11 2016 வியாழக்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடந்தது . அதில் திராவிடர் விடுதலைக் கழகம் தலைமை நிலைய செயலர் தோழர் தபசி குமரன் தன் கண்டனத்தை இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக பதிவு செய்தார்.

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வடசென்னை 05112016

வட சென்னை மாவட்டம் சார்பாக புளிந்தோப்பு கே.பி.பார்க் கில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் 05112016 அன்று நடைபெற்றது. கழக பாடகர் தோழர் அருள்தாஸ் பகுத்தறிவு பாடல்களை பாடி கூட்டத்தை துவக்கி வைத்தார் . தொடர்ந்து தோழர் காவை இளவரசனின் மந்திரமல்ல தந்திரமே நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி அப்பகுதி மழலைகளை மட்டுமில்லாமல் இளைஞர்களையும், பெண்களையும் பெரிதும் கவர்ந்தது. தொடர்ந்து முனைவர் .சுந்தரவள்ளி பெரியாரின் சிந்தனைகள் , கொள்கைகள் , இன்றைக்கும் ஏன் பெரியார் தேவைப்படுகிறார், இந்துத்துவத்தின் திணிப்பு போன்றவகளை பற்றி குழந்தைகளுக்கும் புரியும் எளிய முறையில் பேசினார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போது ஒருவர் முழுமையான டாஸ்மார்க் உதவியுடன் போதையில் இந்துத்துவ பிரதிநிதியாக வந்து இதெல்லாம் பேசக்கூடாது என்றார். எதெல்லாம் என்று கேட்டதற்கு அவரிடம் பதிலில்லை. அவருக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது அது மட்டும்தான் போலும், நம் தோழர்கள் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதை தொடர்ந்து பேசிய முனைவர் அந்த அண்ணனுக்காகவும்...

அறிவுரைக் குழுமம் முன் கழகத் தலைவர் வாதம் சென்னை 08112016

இன்று 08.11.2016 மதியம் 2 மணியளவில் அறிவுரைக் குழுமம் முன் கழக தலைவர் அவர்கள் நேரில் வாதுரைக்கிறார். கடந்த மாதம் கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொலை செய்யப்பட்டதையடுத்து கோவையில் இந்து மதவாதிகள் வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தினர். அந்த வன்முறை செயல்களுக்கு துளியும் சம்மந்தம் இல்லாத கழக தோழர் பாரூக் அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு தமிழக காவல் துறை அவரை சிறையில் அடைத்துள்ளது. மேலும் அவர் மீது குண்டர் சட்டத்தையும் பாய்ச்சியுள்ளது. இவ்வழக்கின் மீதான அறிவுரை குழுமத்தின் விசாரணை இன்று 8.11.2016 மதியம் 2 மணியளவில் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் அவ்வமயம் நேரில் ஆஜராகி கழக தோழர் பாரூக் அவர்கள் தரப்பு வாதங்களை முன் வைக்கிறார்.  

தென்மண்டல ஐ.ஜி.அலுவலக முற்றுகை – ஆணவக்கொலை மதுரை 03112016

ஆணவக் கொலைகளைத்  தடுக்கத்  தவறிய காவல்துறைக் கண்டித்து, தென்மண்டல காவக்துறை ஐ.ஜி. அலுவலகத்தை முற்றுகை இடும் போராட்டம்  3-11-2016 அன்று, காலை 11-00 மணியளவில் நடைபெற்றது. மதுரை, புதூர் பேருந்து நிலையத்தில் அணிதிரண்ட தோழர்களிடையே கூட்டமைப்பின் தலைவர்கள் உரையாற்றினர். போராட்ட ஒருங்கிணைப்பாளர்  தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் நாகை.திருவள்ளுவன் நோக்க உரையாற்றினார். திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சி.பி.எம்.எல். மக்கள் விடுதலைக் கட்சியின் மீ.த.பாண்டியன், த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கோவை இராமக்கிரிட்டிணன், மனிதநேய மக்கள் கட்சிப் பொதுச்செயலாளர் அப்துல் சமது, எச்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் தெகலான் பாகவி, ஆதிதமிழர்ப் பேரவைத் தலைவர் இரா.அதியமான், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் புதுக்கோட்டை செரீப், மக்கள் ஜனநாயக முன்னேஏற்றக் கழகப் பொதுச் செய்லாளர் பிரிசெல்லா பாண்டியன், இளந்தமிழகம் செந்தில், மே 17 இயக்கம் திருமுருகன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழ்நேசன், விடுதலைக் கட்சி துணைப் பொதுச்செயலாளர் ஆற்றலரசு போன்றோர் உரையாற்றிய பின்னர் ஐ.ஜி...

‘இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்க!’

‘இஸ்லாமிய சிறைவாசிகளை விடுதலை செய்க!’

9-9-2016 அன்று பிற்பகல் சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில், தமிழக மக்கள் ஜனயாகக் கட்சியின் ஒருங்கிணைப்பில், அக்கட்சியின் தலைவர் புதுக்கோட்டை ஷெரீப் தலைமையில், பத்து ஆண்டுகள் சிறைவாசம் முடித்த அனைத்து சிறைவாசிகளையும், மத பேதம் இன பேதம் பார்க்காமல் விடுதலை செய் என்ற ஒற்றைக் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவ்வார்ப்பாட்டத்தில் அனைத்துக் கட்சி, அமைப்புகள், ஜனநாயக சக்திகளும் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர். பெரியார் முழக்கம் 13102016 இதழ்

ஆயுத பூஜை நிறுத்தக் கோரி

ஆயுத பூஜை நிறுத்தக் கோரி

சென்னை-கோவையில் கழகம் மனு காவல் நிலையங்களில் ஆயுத பூஜை போடுவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தி, இதற்கான அரசாணை, நீதிமன்றத் தீர்ப்புகளை சுட்டிக்காட்டி, மாநகர காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் சென்னை மாவட்டக் கழக சார்பில் கடந்த அக்.5ஆம் தேதி மனு அளிக்கப்பட்டது. தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன் தலைமையில் கழகப் பொறுப்பாளர் இரா. உமாபதி, ஏசு, அய்யனார், வேழவேந்தன் உள்ளிட்ட 20 தோழர்கள் உடன் சென்றனர். கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் அரசு அலுவலகங்களில் எந்தவித மத சடங்குகளை நடத்த கூடாது என அரசு பிறப்பித்த உத்தரவையும் நீதி மன்ற ஆணையையும் நடை முறைப் படுத்த கோரி மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல்துறை ஆணையரி டமும் மேட்டுப்பாளையம் இராமசந்திரன் தலைமையில் நேருதாஸ், நிர்மல்குமார், சூலுர் பன்னீர் செல்வம்,  உக்கடம் கிருட்டிணன், ஜெயந்த், ஸ்டாலின், கிருத்திகா, விக்னேஷ், வினோத், இயல் ஆகிய தோழர்கள் மனு கொடுத்தனர். பெரியார்...

நவீன மருத்துவமும் வைதீகச் சடங்குகளும்!

நவீன மருத்துவமும் வைதீகச் சடங்குகளும்!

சென்னை அரசு தலைமைச் செயலகத்தில் இந்த ஆண்டு ஆயுத பூஜை கொண்டாட்டங்கள் நிறுத்தப்பட்டு விட்டன என்று ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளன. இதற்கு கூறப்பட்டள்ள காரணம் முதலமைச்சர் உடல்நலம் குன்றியிருக்கும் சூழலில் கொண்டாட்டங்கள் கூடாது என்பதாகும். இந்த ‘சூழலில்’ மட்டுமல்ல; எப்போதுமே அரசு அலுவலகங்களில் மத கொண்டாட்டங்கள் நடக்கக் கூடாது. காரணம், அனைத்து மதத்தினரும் பணியாற்றக் கூடிய அலுவலகங்களில் ஒரு குறிப்பிட்ட மதத்துக்கு மட்டும் தனி உரிமைகள் இருக்கக் கூடாது. ‘பூஜை’கள் என்பது பக்திக்காக நடப்பவை அல்ல; அது ‘கொண்டாட்டம்’ என்ற உண்மையை அரசு ஊழியர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். அதனால்தான் முதல்வர் உடல்நலமின்றி இருக்கும்போது கொண்டாட்டம் கூடாது என்கிறார்கள். மற்றொரு பக்கத்தில் முதல்வர் நலம் பெற வேண்டும் என்று பூஜைகள், யாகங்களை அக்கட்சியின் அமைச்சர்கள், பொறுப்பாளர்கள் நடத்துகிறார்கள். தர்மபுரி மாவட்டத்தில் தமிழக அமைச்சர் ஒருவர் யாகம் நடத்தும்போது அந்த புகையினால் மயக்கமடைந்தார் என்று செய்தி வந்திருக்கிறது. தரையில் சோறு சாப்பிடுகிறார்கள். இது உடல்...

பா.ஜ.க.வின் துரோகம் தோலுரிக்கிறது, ஆதரவு ஏடு

பா.ஜ.க.வின் துரோகம் தோலுரிக்கிறது, ஆதரவு ஏடு

காவிரிப் பிரச்சினையில் தமிழகத்துக்கு துரோகம் செய்வது பா.ஜ.க. தான் என்பதை விளக்கி, பா.ஜ.க. ஆதரவு நாளேடான ‘தினமணி’யே (அக்.5) தலையங்கம் தீட்டியுள்ளது. ‘கைப்புண்ணுக்கு கண்ணாடி தேவை இல்லை’ என்பதுபோல் பா.ஜ.க.வின் துரோகத்தை அதன் ஆதரவு ஏடே அம்பலமாக்கும் அந்தத் தலையங்கத்தை இங்கே வெளியிடுகிறோம். காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை மாற்றியமைக்கக் கோரும் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால், அந்த வழக்கு தீர்ப்பாகும்வரை, காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்கும் உத்தரவை நீதிபதிகள் தள்ளி வைக்கவேண்டும் என்று மத்திய அரசின் வழக்குரைஞர் ரோத்தகி முன்வைத்த வாதத்தை ஏற்றுக்கொண்டு, தொழில்நுட்பக் குழுவை அனுப்ப உச்சநீதிமன்றம் தீர்மானித்துள்ளது. இவ்வாறு ஒரு வழக்கு நிலுவையில் இருப்பது மத்திய அரசுக்கு இதுவரை தெரியாதா? மேலாண்மை வாரியத்தை மூன்று மாதங்களில் அமைக்க உத்தரவிட்ட நேரத்தில் மத்திய அரசு சும்மா இருந்துவிட்டு, அக்டோபர் 4ஆம் தேதிக்குள் அமைக்க வேண்டும் என்று செப்டம்பர் 30ஆம் தேதி நீதிமன்றம் கூறிய போதும் சும்மா இருந்துவிட்டு, இப்போது...

அன்று ‘குடவோலை’ இன்று ‘ஏலம்’

அன்று ‘குடவோலை’ இன்று ‘ஏலம்’

சோழர் கால ஆட்சியிலேயே ‘குடவோலை’ முறை வழியாக மக்கள் பிரதிநிதிகளை தேர்ந்தெடுக்கும் ஜனநாயக முறை அறிமுகப்படுத்தப்பட்டது என்று பெருமையுடன் வரலாறுகள் பேசப்படுகின்றன. இந்த குடவோலை முறை எப்படி நடந்தது? காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் அரசின் தொல்லியல் துறை கண்டுபிடித்த கல்வெட்டுகள் குறித்து, எழும்பூர் அருங்காட்சியகத்தில் அந்தத்துறை சார்பாக அண்மையில் கருத்தரங்கு நடைபெற்றது. கருத்தரங்கில் பேசிய தொல்லியல் துறை அதிகாரி நீலகண்டன், ‘உத்திரமேரூர்’ பகுதியில் நடந்த குடவோலை முறை பற்றி விளக்கம் அளித்தார். இந்த முறைப்படி, “தேர்தலில் போட்டியிடுவோர் நான்கு வேதங்களைப் படித்திருக்க வேண்டும்” என்ற நிபந்தனையிருந்திருக்கிறது. கல்வெட்டுகளிலிருந்து கிடைக்கப் பெற்ற தகவல் இது என்று அவர் சுட்டிக் காட்டியுள்ளார். பார்ப்பனர்கள் மட்டுமே போட்டியிட முடியும் என்பதை இத்தகவல் உறுதிப்படுத்துகிறது. இதுதான் சோழர்கள் காலத்தில் நடந்த ‘குடவோலை ஜனநாயகம்’. குடவோலை முறையை உலகுக்கே அறிமுகம் செய்த ஊர் உத்திரமேரூர்தான் என்று வரலாறுகளில் எழுதுகிறார்கள். அதன் ‘யோக்கியதை’ இப்படித்தான் இருந்திருக்கிறது. இப்போது அதே உத்திரமேரூரில்...

கட்சி நலனுக்காக கூட்டாட்சி தத்துவத்தை பலியிடுகிறது பா.ஜ.க. அலுவலகம்  முற்றுகை: கைது

கட்சி நலனுக்காக கூட்டாட்சி தத்துவத்தை பலியிடுகிறது பா.ஜ.க. அலுவலகம் முற்றுகை: கைது

காவிரிப் பிரச்சினையில் பா.ஜ.க.வின் துரோகத்தைக் கண்டித்து சென்னை மாவட்ட திரவிடர் விடுதலைக் கழகம், அக்.7ஆம் நாள் பகல் 11 மணியளவில் பா.ஜ.க. அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்தியது. கழகத் தோழர்கள் 65 பேர் கைதானார்கள். ஒரே நாள் இடைவெளியில் இந்தப் போராட்டத்துக்கான ஏற்பாடுகளை கழகத்தினர் செய்தனர். தியாகராயர் நகர், பா.ஜ.க. அலுவலகம் அருகே தோழர்கள் திரண்டனர். மாவட்ட செயலாளர் உமாபதி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலை வகித்தார். போராட்டத்தை விளக்கி கீழ்க்கண்ட வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் நகர் முழுதும் ஒட்டப்பட்டிருந்தன. “துரோகம் செய்யாதே! பா.ஜ.க. அலுவலகம் முற்றுகைப் போராட்டம்! அன்று வழக்கைக் காரணம் காட்டி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்தது மோடி ஆட்சி. இன்று உச்சநீதிமன்றம் வாரியம் அமைக்க ஆணை பிறப்பித்தும் ஏற்க மறுக்கிறதுஅதே மோடி ஆட்சி.” என்ற வாசகங்கள் இடம் பெற்றிருந்தன. பா.ஜ.க.வின் துரோகங்களை அம்பலப்படுத்தும் பதாகைகளை ஏந்தி தோழர்கள் முழக்கமிட்டனர். பா.ஜ.க. அலுவலகம்...

பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரை

சமூக நீதியின் நோக்கத்தையே சிதைக்கிறது ‘வடிகட்டும்’ முறை மக்கள் விரோத கல்விக் கொள்கைக்கு எதிரான கூட்டு போராட்டக் குழு சார்பில் சென்னையில் சேப்பாக்கத்தில் செப்.29 அன்று பகல் 11 மணியளவில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  ஆயிரக்கணக்கில் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தொடங்கி வைத்தார். கழகச் சார்பில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்றுப் பேசினார். அவரது உரையிலிருந்து: “குலக் கல்வித் திட்டமாக சமஸ்கிருத திணிப்பாக புதிய கல்விக் கொள்கை வந்திருக்கிறது என்று இங்கே உரையாற்றிய பலரும் சுட்டிக்காட்டினர். குலக் கல்வி, சமஸ்கிருத அடிப்படையில் வரும் எந்தத் திட்டத்தையும் தமிழகம் ஏற்காது என்பதே தமிழகத்தின் பொதுச் சிந்தனை. இந்த சிந்தனையை மக்கள் கருத்தாக கட்டமைத்தது தான் பெரியார் இயக்கத்தின் வெற்றி. இரண்டு சிந்தனைக்கும் பின்னால் இருப்பது பார்ப்பனிய எதிர்ப்பு. மக்கள் விடுதலைக்கான இந்த சிந்தனைப் போக்கை தமிழகத்தின் கருத்தோட்டமாக உருவாக்குவதற்கு இந்த மண்ணில் மகத்தான போராட்டங்கள் நடந்தன. அந்தப் போராட்டத்தின் தாக்கத்தைத்தான் இப்போது...

‘இராமன்’ பட எரிப்பு: த.பெ.தி.க. – தி.வி.க. தோழர்கள் கைது

டெல்லியில் ‘இராவணன்’ உருவத்தை எரித்துக் கொண்டாடும் இராமலீலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, சென்னையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் ‘இராமன்’ படத்தை எரித்து பதிலடி தந்தனர். இராயப்பேட்டை நல்வாழ்வு மண்டபத்தின் அருகே இராமன் படம் எரிக்கப்பட்டது. 11 தோழர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 285ஆவது பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு ‘ரிமாண்ட்’ செய்யப்பட்டுள்ளது. திராவிடர் விடுதலைக் கழக இணையதளம் பொறுப்பாளர் விஜயகுமார், காஞ்சி தினேஷ்குமார் ஆகியோரும் வழக்கில் இணைக்கப்பட்டு ரிமான்ட் செய்யப்பட்டுள்ளனர் பெரியார் முழக்கம் 20102016 இதழ்

அரை ‘டிரவுசர்’ போய் முழு ‘டிரவுசர்’ வந்தது!

அரை ‘டிரவுசர்’ போய் முழு ‘டிரவுசர்’ வந்தது!

ஆர்.எஸ்.எஸ். சீருடையை மாற்றிக் கொண்டு விட்டதாம். அரைக்கால் காக்கி சட்டைக்குப் பதிலாக முழுக்கால் சட்டை (பேண்ட்) போட ஆரம்பித்து விட்டார்கள். 90 ஆண்டுகால பாரம்பர்யத்தை மாற்றிக் கொண்டுவிட்டார்கள். ‘காலத்துக்கேற்ப மாற வேண்டும் என்கிறார்’ ஆர்.எஸ்.எஸ். தலைவர் பகவத். சரிதான்; 90 ஆண்டுகாலமாக பெண்களை ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராக்க முடியாது என்று தடை போட்டு வைத்திருக்கிறீர்களே, அதையும் மாற்றிக் கொள்ள வேண்டியது தானே! அரைக்கால் சட்டை போடுவதற்குத்தான் பெண்களுக்கு சங்கடம்; இப்போதுதான் முழுக்கால் ‘பேண்ட்’ வந்துவிட்டதே! இனிமேலாவது பெண்களை சேர்க்கலாமே! ‘நாம் எப்போதும் இந்துக்கள்; இந்துக்களுக்குள் பேதம் கூடாது’ என்கிறார் பகவத். நல்லது; இதற்குப் பிறகாவது, “நான் பிராமணன்; உயர்குலத்தவன்; ஏனைய இந்துக்கள் ‘சூத்திரர்கள்’; என்னுடைய ‘பிராமண’ அடையாளத்துக்காகவே பூணூல் போடுகிறேன்” என்று பார்ப்பனர்கள் பூணூல் போட்டு திரிகிறார்களே! ஆர்.எஸ்.எஸ். உறுப்பினராகிவிட்டால் எந்த ‘இந்து’வும் பூணூல் போடக் கூடாது என்று உடம்புக்கும் ஒரு பொதுவான அடையாளத்தைக் கொண்டு வரலாமே! ‘இந்து’ என்றால் ஒருவர் விபூதியும், ஒருவர் நாமமும்,...

ஈழத்தில் உரிமை உயிர்வாழ துடிக்கிறது (1)

ஈழத்தில் உரிமை உயிர்வாழ துடிக்கிறது (1)

பறிக்கப்படும் தமிழர் நிலங்கள் அருட்தந்தை ஆ. குழந்தை இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் ஒரு மாத காலம் சுற்றுப் பயணம்செய்து மக்களை சந்தித்து, கள நிகழ்வுகளைக் கண்டறிந்து திரும்பியுள்ளார் அருட்தந்தை ஆ. குழந்தை. தமிழர்கள் மீதான ஒடுக்கு முறைகளை விளக்கி ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்துக்காக அவர் எழுதிய கட்டுரை இது.   15.08.2016 அன்று மருதமடு மாதா கோவில் திருவிழாவில் மன்னார் மறை மாவட்ட பரிபாலகர் ஆயர் கிங்ஸ்லி சுவாமிபிள்ளை அவர்கள் “நாட்டின் இப் போதையை நடைமுறைச் செயல்பாடுகளும் எழுந்துள்ள பிரச்சினைகளும் முரண்பாடான அறிக்கை களும் நம்பிக்கை தருவனவாக இல்லை. மாறாக நல்லாட்சியும் நல்லிணக்கமும் மந்த நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன என்பதையே தெளிவாக காட்டுகின்றன. இதனால் நாம் விரக்தி அடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்” என்று கூறினார். ஈழமக்களின் கோரிக்கை களையும் உரிமை களையும் சிங்கள பேரினவாத அரசு கொடுக்காமல் ஈழத்தமிழ் மக்களை விரக்தியில் தள்ளுகிறது. ஈழத்தமிழர்களின் வரலாற்றுத் தொன்மையையும்  தமிழ் இனக் குழுவின் எண்ணிக்கையை சிங்களபேரினவாத அரசு திட்டமிட்டு குறைத்து அழிக்கிறது. அது கையாளுகின்ற...

ஓணம் – தீபாவளி ஒப்பிட்டு சிந்தியுங்கள்!

பார்ப்பனர்கள் ‘தேவர்’கள், அவர்கள் கொடுங்கோன்மையை எதிர்த்தவர்கள் ‘அசுரர்’கள் – இப்படித்தான் புராணங்களுக்கு பார்ப்பனர்கள் கற்பனை வடிவம் கொடுத்தார்கள். ‘தேவ-அசுர’ப் போராட்டம் என்பது ஆரியர்-திராவிடர் போராட்டம் தான். தீபாவளி – திராவிடன் ‘நரகாசுரன்’ என்ற அசுரனை ‘மகாவிஷ்ணு’ எனும் பார்ப்பன அவதாரம் சூழ்ச்சியாக கொன்ற நாள். கொன்ற நாளை கொண்டாடி மகிழச் சொன்னார்கள் பார்ப்பனர்கள். நமது மக்களும் ‘இழிவை’ சுமந்து கொண்டாடுகிறார்கள். ஆனால், கேரள மக்கள் கொண்டாடும் ‘ஓணம்’ – இதற்கு நேர் எதிரானது. ஓணம் ‘மாவலி’ என்ற அசுரனை வரவேற்கும் பண்டிகை. கேரளத்தை ஆண்ட ‘மாவலி’ என்ற திராவிட மன்னன் ஆட்சியில் மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்தார்கள். அதை சகிக்க முடியாத தேவர்களாகிய பார்ப்பனர்கள் விஷ்ணுவிடம் முறையிட விஷ்ணு, வாமன அவதாரம் எடுத்து மாவலியை அழித்தான். எப்படி அழித்தான்? “வாமன அவதாரம் எடுத்து வந்த விஷ்ணு, மாவலியிடம் மூன்றடி நிலம் வேண்டும் என்று யாசகம் கேட்டான். இதற்குப் பின்னால் அடங்கியுள்ள சதியை புரிந்து கொண்ட மாவலியின் குரு...

தீபாவளி : பெரியார் எழுப்பும் வினாக்கள்

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள் தனமுமான காரியம் என்று 50 ஆண்டு களாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்தி விட்டார்கள் என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை மானவமானத்தை உணராமல் கொண்டாடி வரு கிறார்கள். இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய, இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல, தமிழர்கள் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை. அவனது தலைமைக்கு அடிமை, மீட்சிபெற விருப்பமில்லாத மானங்கெட்ட ஈனப்பிறவி என்பதைக்காட்டிக் கொள்ளப் போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது. “மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்” என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடு கிறார்கள் என்றுதான் சொல்லவேண்டி இருக்கிறது. வெளிநாட்டிலிருந்து பிழைப்புக்கு வழி தேடிக்கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித்தன்மைக்கு ஏற்ப மடமையினால் கொண்ட கருத்துக்களை மதுக்குடி வெறியில் உளறி...

‘தமிழ்த் தாய் வாழ்த்து’ பாட மறுத்த அதே எம்.எஸ்…

எம்.எஸ். சுப்புலட்சுமியை ஏதோ சமூகத்தை மாற்ற வந்த போராளிபோல் பார்ப்பனர்கள் கொண்டாடுகிறார்கள். அவரது நூற்றாண்டு விழா தொடர்பான செய்திகள் வேறு எந்த நூற்றாண்டு கண்ட தலைவர்களுக்கும் இல்லாத அளவுக்கு விளம்பரப்படுத்தப்படுகின்றன. கல்கி சதாசிவம் என்ற பார்ப்பனரை ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த சுப்புலட்சுமி திருமணம் செய்து கொண்ட பிறகு, அவர் ‘பார்ப்பனியப் பாரம்பர்யத்தின்’ பெருமைக்குரிய குறியீடாக மாற்றப்பட்டார். அதன் காரணமாகவே தமிழ்மொழி வாழ்த்தான மனோன்மணியம் சுந்தரனாரின் ‘நீராடும் கடலுடுத்த’ பாடலை பாடித்தருமாறு அன்றைய தி.மு.க. அரசு கேட்டுக் கொண்டபோது, அதை பாட மறுத்தார். தமிழ் மொழி வாழ்த்து, ‘பார்ப்பனிய மரபுக்கு’ எதிரானதாகவே அவரும் அவருக்கு நெருக்கமான உறவுகளும் உறுதி காட்டின. பார்ப்பன பாரம்பர்யத்திலும் இந்து பழமையிலும் ஆழமான பிடிப்புள்ளதாகவே காட்டிக் கொண்ட அதே எம்.எஸ். சுப்புலட்சுமியைத் தான் வாயில் சிகரெட்டுடன் மேலே படத்தில் பார்க்கிறீர்கள். நடிகையும் பாடகியுமான டி. பாலசரசுவதியுடன் (இடது) எம்.எஸ். சுப்புலட்சுமி, 1937ஆம் ஆண்டு ஒரு புகைப்பட ஸ்டுடியோவில் எடுத்துக்கொண்ட படம் இது....

‘தீபாவளி’ புனிதமா? வணிகமா?

இந்து மதப் பண்டிகையில் ஒன்றான தீபாவளி கொண்டாட்டம் தேவையா? இந்தத் தீபாவளி கதை – தமிழர்களை அழித்தொழித்ததைக் கொண்டாடச் சொல்லும் கதை என்பது ஒன்று. இதையும் தாண்டி இதில் அடங்கியுள்ள கேடுகள் என்ன? உயிருக்கு ஆபத்தான நச்சுகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பட்டாசு தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அந்த பிஞ்சுக் கரங்கள் வெந்து, நோய்களை சுமந்து வாழ்க்கையை தொலைக் கின்றன. பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு இல்லை. வெடி விபத்துக்குள்ளாகி, ஆண்-பெண் தொழிலாளர்கள் உயிர்ப்பலி ஆகிறார்கள். வணிக நிறுவனங்கள் இந்தப் பண்டிகையை நுகர்வோர் கலாச்சாரமாக்கி பொருள்களை வாங்கிக் குவிக்கத் தூண்டுகின்றனர். தள்ளுபடிகள் அறிவிக்கப்படுகின்றன. எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொன்ன ‘மகாவிஷ்ணு’, தள்ளுபடி விலையில் மிக்சி, கிரைண்டர், குளிர்சாதனப் பெட்டிகள், 4ஜி அலைபேசிகளை வாங்கச் சொன்னாரா? இது மதத்தின் புனிதமா? வர்த்தகத் தந்திரமா? புரிந்து கொள்ளுங்கள். மதம், வர்த்தக சந்தையுடன் இணைக்கப்பட்டுவிட்டது. எனவே மதப்பண்டிகை ‘வர்த்தகத் திருவிழா’ என்ற வடிவமெடுத்துள்ளது. இனி ‘நரகாசுரனை’ கொன்ற...

விருதுநகரில் பெரியார் பிறந்த நாள் மற்றும் கழக அறிமுக விழா பொதுக் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் எழுச்சியோடு தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் கழக அறிமுக விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. விருதுநகரில் தந்தை பெரியாரின் 138வது பிறந்த நாள் விழா மற்றும் கழக அறிமுக விழா பொதுக்கூட்டம். 01.10.2016 அன்று விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. செந்தில் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கவிஞர் வினோத் முன்னிலையில்,மாவட்ட தலைவர் பாண்டி வரவேற்புரை யாற்றினார். தமிழ்நாடு அறிவியல் மன்ற பொருப்பாளர் ஆசிரியர் சிவகாமி, டார்வின்தாசன், புதிய தமிழகம் மாநில மாணவரணி செயலாளர் குட்டிஜெகன், தமிழ்புலிகள் மாநில கொள்கை பரப்புச்செயலாளர் கலைவேந்தன் ஆகியோரின் உரைக்குபின் தியாகி இமானுவேல் பேரவை நிறுவனர் பூ.சந்திரபோஸ், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்வில் கழகப் பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன், கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, கழகப் பொருளாளர் துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வின்...

ஈழத்தில் உரிமை உயிர்வாழ துடிக்கிறது (3) வளங்களை சூறையாடும் பன்னாட்டு நிறுவனங்கள் அருட்தந்தை ஆ. குழந்தை

ஈழத்தில் உரிமை உயிர்வாழ துடிக்கிறது (3) வளங்களை சூறையாடும் பன்னாட்டு நிறுவனங்கள் அருட்தந்தை ஆ. குழந்தை

இலங்கையின் வடக்கு-கிழக்குப் பகுதிகளில் ஒரு மாத காலம் சுற்றுப் பயணம் செய்து மக்களை சந்தித்து, கள நிகழ்வுகளைக் கண்டறிந்து திரும்பி யுள்ளார் அருட்தந்தை ஆ. குழந்தை. தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகளை விளக்கி ‘புரட்சிப் பெரியார் முழக்க’த் துக்காக அவர் எழுதிய கட்டுரை இது. (சென்ற இதழ் தொடர்ச்சி) அடிப்படை வசதி பறிப்பு தமிழர்கள் வீடுகட்ட இலங்கை பணம் ஐந்தரை இலட்சம் அரசு கொடுக்கின்றது. ஆனால் வீட்டுக் கட்டுமான பொருட்களின் விலை அதைவிட இரண்டுமடங்கு அதிகமாக இருக்கின்னறன. காலோபிளாக்ஸ் கல்லை பயன்படுத்தி தட்டிகளை வைத்து வீடு கட்டுகின்றனர். மின் விளக்குகள் தமிழ் மக்கள் வாழும் பகுதிகளில் இல்லை. (எ.டு.) ஒட்டுச் சுட்டான் பிரதேசத்தில் உள்ள முத்துஐயன், கட்டுக்குளம், கனகரத்தினபுரம், தட்டயமலை முத்துவிநாயகர்புரம் ஆகிய ஊர்களில் உள்ள 350 குடும்பங்கள் மின்சாரா வசதியின்றி குப்பி (மண்ணெய்) விளக்குகளை பயன்படுத்து கின்றனர். இராணுவ முகாம்களையும் நகரங் களையும் இணைக்கும் முக்கிய சாலைகளை மட்டும் சீனா போட்டுக்...