நிமிர்வோம் பிப்ரவரி 2017 இதழ் வாசகர் கடிதஙகள்
நன்னன் நேர்காணல் நிமிர்வோம் இதழில் பேராசிரியர் நன்னன் அவர்களின் பேட்டி -இளைஞர்களுக்கு உந்து சக்தியாக இருந்தது. பெரியார் இயக்கம் எதிர் நீச்சலில் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சென்ற வரலாற்றை -இளைய தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும். பேராசிரியர் நன்னன் –மொழியியல் அறிஞர் என்ற பார்வை மட்டுமே எங்களிடம் இருந்தது. அவர் பெரியாரியச் சிந்தனையில் ஆழமானப் பற்றுகொண்டு -அந்த நெறியை வாழ்க்கையாக்கிக் கொண்டவர் என்பதை பேட்டியிலிருந்து அறிந்தோம். -வே.கண்ணன், வில்லிவாக்கம் மேக்நாட் சாகா பஞ்சாங்கமும்அறிவியலும் பஞ்சாங்கம் அறிவியலுக்கு எதிரானது என்பதை விஞ்ஞானி மேக்நாட் சாகா அறிக்கையிலிருந்து வெளி யிட்டிருந்தது மிகவும் சிறப்பு. ‘நிமிர்வோம்’ கட்டுரையை படித்தபிறகு தேவிகாபுரம் சிவா நூலை தேடிப்போய் வாங்கிப் படித்தேன். கல்வியில்மிகச்சிறந்தமாணவனாகஇருந்தாலும் -சமூகத்தின் தீண்டாமைக் கொடுமையை அவர் அனுபவித்திருக்கிறார். காலில் செருப்பு அணியாமலே சொந்த ஊருக்குநடந்தேசென்றிருக்கிறார். சொந்தகிராம மான சியாத்தாலி (இப்போது வங்கதேசம்) யில் சரசுவதி கோயிலுக்கு வழிப்படச் சென்ற அவரை பார்ப்பன அர்ச்சகர் விரட்டி அடித்த போதுதான்...
