தோழர் ஃபாரூக் குடும்ப நிதி திருப்பூர் இயற்கைக் கழகம் வழங்கியது

திருப்பூர் இயற்கைக் கழகம் (NATURE SOCIETY OF TIRUPUR) அமைப்பு கழகத் தோழர் ஃபாரூக் குடும்ப நிதி வழங்கியது.

இசுலாமிய மத அடிப்படைவாதிகளால் பகுத்தறிவு கருத்துக்களை பேசிய காரணத்தினால் கொடூரமாக வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட கழகத்தோழர் ஃபாரூக் அவர்கள் குடும்பத்திற்கு கழகம் நிதியை திரட்டி வருகிறது.

அவ்வகையில் ஃபாரூக் குடும்பத்திற்கு நிதியாக திருப்பூர் இயற்கைக் கழகம் (NATURE SOCIETY OF TIRUPUR) அமைப்பின் தோழர்கள் 29.03.2016 அன்று மாலை Rs40,500/= (ரூபாய் நாற்பதினாயிரத்து ஐநூறு)ஐ கழக பொருளாளர் தோழர் துரைசாமி அவர்களிடம் வழங்கினார்கள்.

அப்போது திராவிடர் விடுதலைக் கழகத்தின் திருப்பூர் மாவட்டத்தலைவர் தோழர் முகில்ராசு,கழகத்தோழர் பரிமளராசன் ஆகியோர் உடனிருந்தனர்

17553996_1914198708864020_6881193188646858224_n

You may also like...