6 பேர் விடுதலை; தமிழ்நாட்டின் வரலாற்றுக் குறிப்பு நாள்
ராஜீவ் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேரையும் 11.11.2022 அன்று உச்ச நீதிமன்றம் விடுதலை செய்துவிட்டது. இது ஒரு வரலாற்று சிறப்புமிக்க நாள் என்று தான் கூற வேண்டும். மனித உரிமையாளர்களுக்கு சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி. உச்ச நீதிமன்றம் இந்தத் தீர்ப்பின் வழியாக பல செய்திகளை கூறியிருக்கிறது. ஒன்று, பேரறிவாளன் விடுதலைக்கு என்னென்ன காரணங்கள் சொல்லப்பட்டதோ அத்தனை காரணங்களும் ஏனைய 6 பேருக்கும் அப்படியே பொருந்தும் என்பது ஒன்றாகும். இரண்டாவது தமிழக அமைச்சரவையின் முடிவு தான் இறுதியானது. அதை ஆளுநர்கள் கிடப்பில் போடுவதால் தடுத்து விட முடியாது, என்று மாநில உரிமையும் இதில் நிலை நாட்டப்பட்டுள்ளது. இது ஆளுநர் சண்டித்தனத்திற்கு கிடைத்த சரியான ஒரு பதிலடி. மூன்று, தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு எழுவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்பது தான். ஏற்கனவே பேரறிவாளன் விடுதலை செய்யப்பட்டு விட்டார். எனவே அமைச்சரவையின் முடிவும் தி.மு.க. ஆட்சி தொடர்ந்த...