Author: admin

வேத காலத்தில் தொடங்கிய கொலைவெறி தொடர்கிறது ‘ஜெ.என்.யூ’ மீது பார்ப்பனிய முகமூடிகளின் கொடூரத் தாக்குதல்

வேத காலத்தில் தொடங்கிய கொலைவெறி தொடர்கிறது ‘ஜெ.என்.யூ’ மீது பார்ப்பனிய முகமூடிகளின் கொடூரத் தாக்குதல்

புதுடில்லி ஜவகர்லால் நேரு பல்கலைக் கழக வளாகத்தில் முகமூடி அணிந்து, ‘இந்துத்துவ பார்ப்பனிய’ கும்பல், மாணவர் களையும் பேராசிரியர்களையும் பயங்கர ஆயுதங்களுடன் குறி வைத்து தாக்கியிருப்பது நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. மாணவர் தலைவர்களையும், இஸ்லாமிய மாணவர்களையும் குறி வைத்து நடத்தப்பட்ட இந்த  மூர்க்கத்தனமான தாக்குதலில் 34 மாணவர்கள் படுகாயத்துடன் ‘எய்ம்ஸ்’ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு முதல் உதவி சிகிச்சை மட்டும் வழங்கப்பட்டு வெளியே அனுப்பப்பட்டுள்ளனர். விரல்கள் உடைந்து, கடுமையான தலைக் காயங்களுடன் அனுமதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவமனையில் அனுமதித்து உரிய சிகிச்சை செய்தால் தாக்குதல் நடத்திய கும்பலுக்கு எதிரான சாட்சியமாகிவிடும் என்று மனசாட்சியே இல்லாமல் மருத்துவமனை நிர்வாகம் அரசு  அதிகார மிரட்டலுக்கு பணிந்து செயல்பட்டிருக்கிறது. மாணவர்களைக் காப்பாற்றும் பொறுப்பிலுள்ள துணைவேந்தர் ஜெகதேஷ் குமார், மாணவர்களைக் காப்பாற்றத் தவறிய குற்றத்துக்காக பதவி விலக வேண்டும் என்று, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கம் மற்றும் ஆசிரியர் கழகங்கள் வலியுறுத்தியுள்ளன. “வளாகத்தில் அமைதிப் பேரணி நடத்தியபோது என்னை குறி வைத்து...

தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

தோழர்களுக்கு முக்கிய வேண்டுகோள்

  ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ இதழ்களுக்கு சந்தாக்களை புதுப்பிக்கும் பணிகளை தோழர்கள் விரைந்து தொடங்கிடுமாறு கேட்டுக் கொள்கிறோம். – நிர்வாகி பெரியார் முழக்கம் 26122019 இதழ்

அயோத்தி தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

அயோத்தி தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்

அயோத்திப் பிரச்சினையில் உச்சநீதிமன்றத் தீர்ப்பை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமையில் டிசம்பர் 6ஆம் தேதி மாலை 4 மணியளவில் சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கலந்து கொண்டு தீர்ப்பில் உள்ள முரண்பாடுகளை சுட்டிக்காட்டி உரையாற்றினார். மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட் கட்சி ஜி. இராமகிருட்டிணன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், விடுதலை சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சிந்தனைச் செல்வன், திருமுருகன் காந்தி உள்ளிட்ட பலரும் பேசினர். அதைத் தொடர்ந்து சென்னை சேப்பாக்கத்தில் இந்திய தவ்ஹீத் ஜமாத் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்திலும் பங்கேற்று பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேசினார். பெரியார் முழக்கம் 26122019 இதழ்

குடியுரிமைச் சட்டத் திருத்த எதிர்ப்புப் பேரணியில் கழகம் பங்கேற்பு

குடியுரிமைச் சட்டத் திருத்த எதிர்ப்புப் பேரணியில் கழகம் பங்கேற்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் டிசம்பர் 23ஆம் தேதி நடந்த மாபெரும் பேரணியில் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். தி.மு.க. கூட்டணி கட்சிகளைத் தவிர, இஸ்லாமியர் அமைப்புகள், பல்வேறு இயக்கங்கள் பங்கேற்றன. திராவிடர் விடுதலைக் கழகம் பேரணியில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் பங்கேற்றது. அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன், தலைமைக் குழு உறுப்பினர்கள் இரா. உமாபதி, அய்யனார், அன்பு தனசேகர்  மற்றும் மயிலை சுகுமார், வடசென்னை மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் ஏசுகுமார், ராஜீ, தென் சென்னை மாவட்டக் கழகத் தலைவர் வேழவேந்தன், எம்.ஜி.ஆர். நகர் கரு. அண்ணாமலை உள்ளிட்ட சென்னை மாவட்டக் கழகத் தோழர் கள் ஏராளமாகப் பங்கேற்றனர். ஈரோட்டிலிருந்து 20க்கும் மேற்பட்ட தோழர்களும் குடியாத்தம் பகுதி, காஞ்சிபுரம் பகுதி கழகத்தினரும் பேரணியில் பங்கேற்றனர். கழகக் கொடிகளுடன் ஒலி பெருக்கி வழியாக கழகத் தோழர்கள்...

அயோத்தி தீர்ப்பு: சென்னையில் கருத்தரங்கம்

அயோத்தி தீர்ப்பு: சென்னையில் கருத்தரங்கம்

“வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் சார்பில், பாபர் மசூதி தீர்ப்பு ஒரு பார்வை” என்ற தலைப்பில் 14.12.2019 அன்று மாலை 6:30 மணியளவில், சென்னை பிராட்வே பிரகாசம் சாலையிலுள்ள ஹயாத் மஹாலில்  கருத்தரங்கம் நடைபெற்றது. நிகழ்வில் கழக பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார். நிகழ்வில், பேராசிரியர் ஜவாஹிருல்லா (மாநில தலைவர், தமுமுக), பேராசிரியர் அ.கருணானந்தன் (வரலாற்றுத் துறை தலைவர்(ஓய்வு) விவேகானந்தா கல்லூரி, சென்னை), எஸ்.எம். பாக்கர் (மாநில தலைவர், ஐசூகூது),  எஸ்.கே. ஷமீமுல் இஸ்லாம் (மாநில செயலாளர், வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த்),  செய்யது முஹம்மது புஹாரி (மாநிலத் தலைவர், வஹ்தத்தே இஸ்லாமி ஹிந்த்) ஆகியோரும் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர். பெரியார் முழக்கம் 26122019 இதழ்

திண்டுக்கல்லில் 20 ஆண்டுகளாக அரசு ஒப்புதலுக்காக முடக்கிக் கிடக்கும் வள்ளுவர் சிலை

திண்டுக்கல்லில் 20 ஆண்டுகளாக அரசு ஒப்புதலுக்காக முடக்கிக் கிடக்கும் வள்ளுவர் சிலை

திருவள்ளுவர் இலக்கியப் பேரவை மற்றும் பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் சார்பில், திண்டுக்கல்லில் அரசின் ஆணையிருந்தும் 20 ஆண்டுகளாகத் திறக்க முடியாமல் முடங்கியிருக்கும் திருவள்ளுவர் சிலையை உடனே நிறுவிட அரசின் ஒப்புதலை வேண்டி, 13.12.2019 அன்று காலை 10 மணியளவில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் பெரியார் சரவணன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), கோவை இராமகிருட்டிணன் (தந்தை பெரியார் திராவிடர் கழகம்), பொழிலன் (தமிழக மக்கள் முன்னணி), குடந்தை அரசன் (விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி)   உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 26122019 இதழ்

குடியுரிமைப் பதிவேடு: மோடியின் திடீர் பல்டிக்கு காரணம் என்ன?

குடியுரிமைப் பதிவேடு: மோடியின் திடீர் பல்டிக்கு காரணம் என்ன?

1971ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு அசாமில் சட்ட விரோதமாக குடியேறிய வங்க தேசத்தவரை குடிமக்களாக ஏற்க முடியாது என்ற அடிப்படையில் அசாமிய குடிமக்கள் பதிவேடு தயாரிக்கப்பட்டுள்ளது. சுமார் 19 இலட்சம் பேர் உரிய ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக ஊடுருவியவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர். குடியரசுத் தலைவராக இருந்த பக்ருதீன் அலி அகமது குடும்ப வாரிசுகள், கார்கில் போரில் போராடி குடியரசுத் தலைவரிடமிருந்து வீரப்பதக்கம் பெற்ற இஸ்லாமியர் குடும்பத்தினரும் சட்ட விரோத குடியேறிகளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர். இந்தப் பட்டியலில் இந்துக்களும் ஏராளம் உண்டு. இந்த 19 இலட்சம் பேரில்  இந்துக்களை மட்டும் மீண்டும் குடிமக்களாக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை திருத்தச் சட்டம் அனுமதிக்கிறது. 2014ஆம் ஆண்டு வரை அசாமில் வாழ்ந்த இஸ்லாமியர் அல்லாதவருக்கு இந்த உரிமை வழங்கப்பட்டிருக்கிறது. இது தங்களின் வாழ்வாதாரத்தையும் அசாமியர் என்ற அடையாளத்தையும் கடுமையாகப் பாதிக்கும் என்று அசாமியர்கள் போராடி வருகிறார்கள். உள்துறை அமைச்சர் அமித்ஷா, அசாமைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்களிலும்...

பள்ளிபாளையம் மாநாட்டில் கொளத்தூர் மணி உரை

பள்ளிபாளையம் மாநாட்டில் கொளத்தூர் மணி உரை

தமிழர் வேலை வாய்ப்புகளைப் பறித்த தமிழக அரசின் ஆபத்தான சட்டத்திருத்தம் பள்ளிபாளையத்தில் 20.9.2019 அன்று நடந்த திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை. (சென்ற இதழ் தொடர்ச்சி) முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போது தமிழ்நாட்டின் அரசு வேலை வாய்ப்புகளை பிற மாநிலத்தவர் – பிற நாட்டினர் அபகரிக்கும் ஆபத்தான திருத்தச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்ததை கழகத் தலைவர் கொளத்தூர் மணி சுட்டி காட்டினார். இந்தியாவில் தற்போது உயர்கல்விக்குச் செல்கிறவர்கள் ( 18 வயது முதல் 23 வயதுவரை) எண்ணிக்கை  சராசரி 25.2% என்று உள்ளது. இதை 2035ற்குள் 50% ஆக உயர்த்தப் போவதாக கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 25% ஆக இருக்கும் போதே 50,000 உயர்கல்வி நிலையங்கள் உள்ளன. 2035இல் 50% ஆக உயரும் போது 12,300 கல்லூரிகளாக இருக்குமாம். எவ்வளவு அறிவுப்பூர்வமான...

பள்ளிபாளையம் மாநாட்டில் கொளத்தூர் மணி உரை நகர்ப்புற ஏழைகளைப் பற்றி மட்டுமே பேசுகிறது, புதிய கல்விக் கொள்கை

பள்ளிபாளையம் மாநாட்டில் கொளத்தூர் மணி உரை நகர்ப்புற ஏழைகளைப் பற்றி மட்டுமே பேசுகிறது, புதிய கல்விக் கொள்கை

பள்ளிபாளையத்தில் 20.9.2019 அன்று நடந்த திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை. (சென்ற இதழ் தொடர்ச்சி) இதற்கு முன்பாக மண்டல அளவில் தான் மத்திய அரசுப் பணிகளுக்கு தேர்வு செய்து பணியில் அமர்த்தப்பட்டார்கள். இந்தியாவை ஒன்பது மண்டலங்கள் மற்றும் இரண்டு துணை மண்டலமாக பிரித்திருந்தார்கள். அதில் தேர்வு நடக்கும். நமக்கு கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு சேர்ந்தது மண்டலமாக இருந்தது. இப்போது அதை மாற்றி ஒரே நாடு கொள்கைப் படி அகில இந்திய தேர்வாக மாற்றி விட்டார்கள். இப்போது இந்திய அளவில் தேர்வுகள் நடைபெறுவதால் கேள்வித்தாளை இரண்டே மொழியில் தான் கொடுக்கிறார்கள். ஒன்று ஆங்கிலம் மற்றொன்று இந்தி. இதில் இந்தி பேசத் தெரிந்த மாநிலத்தைச் சேர்ந்தவன் தாய் மொழியில் தேர்வெழுதுவான். நாமெல்லாம் அந்நிய மொழியில் தேர்வெழுதுவோம். ஆங்கிலமும் நமக்கு அந்நிய மொழி தான். மோடி ஆட்சிக்கு வந்த பின்...

பள்ளிப் பாளையம் மாநாட்டில் கொளத்தூர் மணி உரை தமிழர் கல்வி-வேலை வாய்ப்புகளைப் பறிக்கும் ‘பார்ப்பன’ ஆட்சி கொள்கைகள்

பள்ளிப் பாளையம் மாநாட்டில் கொளத்தூர் மணி உரை தமிழர் கல்வி-வேலை வாய்ப்புகளைப் பறிக்கும் ‘பார்ப்பன’ ஆட்சி கொள்கைகள்

பள்ளிப்பாளையத்தில் 20.9.2019 அன்று நடந்த திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை. இரண்டு செய்திகளை முன் வைத்து தான் இந்த பயணம். ஒன்று எங்களுடைய கல்வி உரிமைகளை பறிக்கிறாய், வேலை வாய்ப்புரிமையை பறிக்கிறாய். வேலை வாய்ப்பு உரிமை என்பது, தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு நிறுவனங்களில் நமக்கு உரிமை வேண்டும் என்பது தான். அப்படித் தான் 2014இல் நாம் போராட்டத்தை முன்னெடுத்தோம். அன்பு தனசேகர் (தி.வி.க. தலைமைக் குழு உறுப்பினர்) பல்வேறு தகவல்களை திரட்டிக் கொடுத்தார். அதனடிப்படை யில், பல்வேறு இயக்கங்களை உடனழைத்துக் கொண்டு சாஸ்திரி பவன் எதிரே ஆர்ப்பாட்டத்தை நடத்தினோம். தமிழ்நாட்டில் இயங்குகிற மத்திய அரசு அலுவலகங்களில், வெளி மாநிலத்து ஆட்களை பணிக்கு அமர்த்துவதை நிறுத்த வேண்டும் என்பதை கோரிக்கையாக வைத்து அந்த போராட்டத்தை நாம் நடத்தினோம். அதைத் தொடர்ந்து பல்வேறு இயக்கங்கள் இப்போதும் அது...

பா.ஜ.க.வின் வெற்று வாக்குறுதிகளை  மக்கள் நம்ப மாட்டார்கள்

பா.ஜ.க.வின் வெற்று வாக்குறுதிகளை மக்கள் நம்ப மாட்டார்கள்

குடியுரிமைச் சட்டத் திருத்தத்தால் இந்தியர்களுக்கு பாதிப்பு இல்லை; எதிர்க் கட்சிகள் வதந்திகளைக் கிளப்புகின்றன என்று பா.ஜ.க. வினர் எதிர்ப் பிரச்சாரம் செய்கிறார்கள். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் இதே குரலில் பேசுகிறார். இப்போது கொண்டு வரப்பட்ட குடியுரிமைச் சட்டத் திருத்தம் இஸ்லாமியர்களிடம் அச்சத்தை உருவாக்கியிருக் கிறது. தாங்கள் எதிர்காலத்தில் இரண்டாம் தர குடிமக்களாக்கப் படுவோம் என்று நியாயமாகவே  உணருகிறார்கள். காரணம் இந்தச் சட்டத் திருத்தம் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ் தான் நாடுகளிலிருந்து இந்தியா வுக்கு வரும் இஸ்லாமியர் களுக்கு மட்டும் குடியுரிமை வழங்கப்பட மாட்டாது என்று கூறுகிறது. இப்படி மத அடிப்படையில் குடிமக்களை தனிமைப் படுத்துவது, அரசியல் சட்டத் துக்கும் மதச் சார்பின்மைக்கும் எதிரானது. எனவே ஒதுக்கப் பட்ட இஸ்லாமியர்களுக்கும் குடியுரிமை வழங்கப்படும் என்று, ஒரு அவசரச் சட்டம் பிறப்பித்தாலே போதும். இதை மோடி  அரசு செய்வதற்கு எந்த சட்டரீதியான தடையும் இல்லை. இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல; மத நம்பிக்கையற்ற நாத்திகர்களுக்கும் குடி...

2019இல் கழகத்தின் களப் பணிகள்

2019இல் கழகத்தின் களப் பணிகள்

2019ஆம் ஆண்டில் திராவிடர் விடுதலைக் கழகம் ஆற்றிய களப்பணிகளை திரும்பிப் பார்க்கிறது. வழக்கமாக கழகத் தோழர்கள் நடத்தும் பெரியார், அம்பேத்கர் பிறந்த நாள், நினைவு நாள் நிகழ்வுகள், தமிழர் திருநாள் விழா நிகழ்ச்சிகள், தெருமுனைக் கூட்டங்களைத் தவிர, ஏனைய நிகழ்வுகள், கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் வெளி வந்த பதிவுகளின் அடிப்படையில் தொகுக்கப்பட்டிருக்கின்றன. கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ ஏடுகளுக்கு சந்தாக்கள் சேர்க்கும் பணிகளில் பல மாவட்டங்களில் தோழர்கள் முனைப்புக் காட்டி செயல்பட்டனர். செயல்படாத மாவட்டங்களும் உண்டு. கழகத்தின் தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் இதற்காக மாவட்டம் தோறும் கழகப் பொறுப்பாளர்களை சந்தித்து சந்தா சேர்ப்பு இயக்கத்தை விரைவுபடுத்தினர். கழகத்துக்காக சொந்தமாக தலைமைக் கழகம் உருவானது – 2019ஆம் ஆண்டில். இது மிகவும் குறிப்பிடத்தக்கது. மக்களவைக்கான தேர்தல் நடந்ததும் 2019ஆம் ஆண்டில்தான். புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளில் ஒரே ஒரு தொகுதியில் மட்டுமே பா.ஜ.க. வெற்றி பெற முடிந்தது....

தலைமைக் கழகம்: தோழர்களின் சாதனை

தலைமைக் கழகம்: தோழர்களின் சாதனை

2019ஆம் ஆண்டு கழகத் தோழர்கள் செயல்பாடுகளில் முன்னுரிமை பெற்றிருப்பது கழகத்துக்கு சொந்தமாக தலைமைக் கழகம் ஒன்றை வாங்கியதில் காட்டிய முனைப்பான செயல்பாடுகளாகும். கழகத் தோழர்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டு ஒவ்வொருவரும் குறைந்தது ரூ.20,000 நிதி திரட்ட வேண்டும் என்று கழக தலைமைக் குழுவால் இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. பெரும்பான்மைத் தோழர்கள் இலக்கை எட்டிக் காட்டினர். கழகத்தின் செயல்பாடுகள் மீது நம்பிக்கையும் கழகத்தின் மீது மதிப்பும் கொண்ட ஆதரவாளர்கள் தாமாகவே முன் வந்து நிதி வழங்கியதோடு, நிதி திரட்டும் இயக்கத்திலும் தங்களை இணைத்துக் கொண்டனர். இது கழகத்திற்குக் கிடைத்த மிகச் சிறந்த பெருமையாகும். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வார ஏடும், ‘நிமிர்வோம்’ மாத இதழும் தடையின்றி வெளி வந்து கொண்டிருப் பதற்குக் காரணம் தோழர்கள் திரட்டிய சந்தாக்கள் தான். பெரியார் முழக்கம் 26122019 இதழ்

‘குடியுரிமை’ சட்ட நகல் எரிப்பு

‘குடியுரிமை’ சட்ட நகல் எரிப்பு

ஈழத் தமிழர்களையும், இந்திய வம்சாவளி முஸ்லிம்களையும் புறக்கணிக் கும் புதிய குடியுரிமைச் சட்டத்தைத் திரும்பப் பெறக் கோரி சட்டத் திருத்த நகல் எரிப்புப் போராட்டம் மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி ஒருங்கிணைப்பில், 12.12.2019 அன்று மாலை 4 மணிக்கு, சென்னை அண்ணா சாலை தலைமை தபால் நிலையம் எதிரில் (தர்ஹா அருகில்) நடைபெற்றது. இந்த போராட்டத்தில் மனிதநேய ஜன நாயகக் கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி, தமிழக வாழ்வுரிமைக்  கட்சித் தலைவர் வேல் முருகன், விடுதலை தமிழ்ப் புலிகள் கட்சித் தலைவர் குடந்தை அரசன், திராவிடர் விடுதலை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்ட செயலாளர் உமாபதி, தந்தை பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்டப் பொறுப்பாளர் குமரன், திராவிட இயக்கத் தமிழர் பேரவை பொதுச் செயலாளர் சுப வீரபாண்டியன், தமிழ்நாடு முசுலீம் முன்னேற்ற கழகப்...

குத்துச்சண்டை போட்டியில் வென்றவர்களுக்கு மயிலை தி.வி.க. நினைவுப் பரிசு

குத்துச்சண்டை போட்டியில் வென்றவர்களுக்கு மயிலை தி.வி.க. நினைவுப் பரிசு

அகில இந்திய மற்றும் தமிழ்நாடு அளவிலான குத்துச் சண்டை போட்டியில் சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். அதில் பதக்கம் வென்றவர் களுக்கு திவிக சார்பில் நினைவு பரிசுகளை கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் வழங்கினர். அகில இந்திய போட்டியில் அஸ்வின் – வெண்கலம், பிரவீன் – வெள்ளி, மகேஷ் – வெள்ளி, ராஜ் – வெண்கலம், சரண் – வெண்கலம், மாணிக்கம் – வெண்கலம், கார்த்திக் – வெண்கலம் வென்றனர். தமிழ்நாடு அளவிலான போட்டியில் மாணிக்கம் தங்கப் பதக்கத்தையும், கார்த்திக் வெண்கல பதக்கத்தையும் வென்றனர்.  நிகழ்வில் கழக வார ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கான 100 சந்தா மற்றும் மாத ஏடான நிமிர்வோமிற்கான 20 சந்தா தொகைகளை கழகத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளரிடம் மயிலை பகுதி சார்பாக தோழர்கள் வழங்கினர். பெரியார் முழக்கம் 19122019 இதழ்

நாகை திருவள்ளுவன் மீதான பொய் வழக்குகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாகை திருவள்ளுவன் மீதான பொய் வழக்குகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையத்தில்  சுவர் இடிந்து விழுந்து 17 பேர் இறந்ததற்கு நீதிக் கேட்டு போராடிய நாகை திருவள்ளுவன் மீது தாக்குதல் நடத்தி, பொய் வழக்குகள் பதிந்து சிறையிலிட்டதைக் கண்டித்து பெரியாரிய உணர் வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக  கண்டன ஆர்ப் பாட்டம் 09.12.2019 அன்று மாலை 3 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. படுகொலை செய்யப்பட்ட தலித் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், சுவர் கட்டிய சிவசுப்ரமணியன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும், தோழர் நாகை திருவள்ளுவனை தாக்கிய காவலர்கள் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும், தோழர் நாகை திருவள்ளுவன் மீது போடப்பட்ட அனைத்து பொய் வழக்குகளும் திரும்ப பெற்று அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி...

திராவிடர் விடுதலைக் கழக வெளியீடுகள் இப்போது ‘கிண்டி’லில் படிக்கலாம்

திராவிடர் விடுதலைக் கழக வெளியீடுகள் இப்போது ‘கிண்டி’லில் படிக்கலாம்

அமேசான் கிண்டில் (Amazon Kindle) என்பது மின்னூல்கள் (E-Books) வாசிக்க உதவும் கருவி (Device). கிண்டில் என்பது ஒரு படிப்பான் (Reader). அமேசான் தளத்தில் இக்கருவியை வாங்கலாம். 4000 ரூபாயிலிருந்து  16000+ எனப் பல ரகங்களில் கிடைக்கிறது. எப்படியும் மூன்று மாதங்களுக்கு ஒரு முறை கிண்டில் கருவிகளுக்கு ஆஃபர் போடுகிறார்கள். கவனித்துக் கொண்டே இருந்தால் வரும்போது வாங்கி பயன்படுத்திக் கொள்ளலாம். அல்லது நீங்கள் உங்கள் மொபைல் அல்லது கணினியில் கிண்டில் செயலியை  (APP) இலவசமாகத் தரவிறக்கம் செய்துகொண்டும் அதன்மூலம் நூல்களை வாங்கிப் படிக்கலாம். கூகுள் ப்ளே ஸ்டோர், ஆப்பிள் ஸ்டோர் போன்ற இடங்களில் கிண்டில் ஆப் இலவசமாகக் கிடைக்கும். உங்கள் மொபைலில் கிண்டில் செயலி (Kindle App) டவுன்லோடு செய்து எப்போது வேண்டுமானாலும் வாசிக்கலாம். வாசிக்கும்போது இணைய இணைப்புகூட அவசியமில்லை ஆனால் கிண்டில் கருவிக்கென சில பிரத்யேக மேன்மைகள் உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள் – உதாரணம்: கண் கூசாது, கவனம்...

திண்டுக்கல்லில் இராவணன்  படத்திறப்பு

திண்டுக்கல்லில் இராவணன் படத்திறப்பு

முடிவெய்திய கழகத்தின் பெரியாரியப் பணியாளர் இராவணன் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு, 15.12.2019 அன்று காலை 10 மணியளவில் திண்டுக்கல், தலைமை அஞ்சலகம் அருகில் உள்ள வாழ்க வளமுடன் அரங்கில் நடைபெற்றது. நிகழ்விற்கு திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை மாநில அமைப்புச் செயலாளர் புலேந்திரன் தலைமை தாங்கினார். ஆனந்த் முனி ராசன், மரிய திவாகரன், கி. இரவிச்சந்திரன், கோபி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்க, பெரியார் நம்பி வரவேற்புரையாற்றினார். இராவணன் படத்தைத் திறந்து கழகத் தலைவர் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மீ.த. பாண்டியன், துரை சம்பத் (த.பெ.தி.க.), பொள்ளாச்சி விஜயராகவன், உள்ளிட்ட அமைப்பு களைச் சேர்ந்த தோழர்கள் நினைவேந்தல் உரை நிகழ்த்தினர். பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு சார்பாக நிகழ்வு ஒருங்கிணைப்பு செய்யப்பட்டது. பெரியார் முழக்கம் 19122019 இதழ்

அரசியல் சட்ட எரிப்பு நாள் – தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் கருத்தரங்கம்

அரசியல் சட்ட எரிப்பு நாள் – தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் கருத்தரங்கம்

மதுரை  மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நவம்பர் 25 அன்று மாலை 4 மணிக்கு தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்தேச மக்கள் முன்னணித் தலைவர்.மீ.த.பாண்டியன்; தமிழ்ப் புலிகள் கட்சி பொதுச் செயலாளர் பேரறிவாளன்; தமிழக வாழ்வுரிமை கட்சி பரப்புரைச் செயலாளர் பெரியார் சரவணன்; மகாமுனி – மே 17; குமரன் – புரட்சிகர இளைஞர் முன்னணி; கிட்டு ராசா- தபெதிக; பரிதி -தமிழ் தமிழர் இயக்கம்; மணிபாபா- தமிழக வாழ்வுரிமை பாதுகாப்பு மக்கள் கட்சி உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர். அன்று மாலை 6 மணிக்கு  “ஜாதியை பாதுகாக்கும் சட்ட எரிப்பு நாள்” கருத்தரங்கம் நடைபெற்றது. எழுத்தாளர்.மதிமாறன் சிறப்புரையாற்றினார். நிகழ்விற்கு திவிக மதுரை மாவட்ட செயலாளர் மணி அமுதன். மா.பா தலைமை தாங்கினார். மாநகர் தலைவர் காமாட்சி பாண்டி முன்னிலை வகித்தார்.  வழக்கறிஞர்கள் – சட்ட கல்லூரி மாணவர்கள் -ஆதித்தமிழர் பேரவை , அகில இந்திய...

நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வ தகவல்கள் மத்திய அரசுத் துறை, உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடே இல்லை

நாடாளுமன்றத்தில் அதிகாரபூர்வ தகவல்கள் மத்திய அரசுத் துறை, உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடே இல்லை

மத்திய அரசுத் துறை செயலாளர்களில்  82 பேர்களில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினர் வெறும் 4 பேர்களே. 20 அய்அய்எம் நிறுவனங்களில் தாழ்த்தப் பட்ட, பழங்குடியினர் வெறும் 11 பேர்களே என்கிற அதிர்ச்சிகர தகவல் நாடாளுமன்றத்தில் வெளியாகியுள்ளது. மத்திய அரசுத்துறைகளில் உயர் பதவி களுக்கானப் பணியிடங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனமாகிய அய்அய்எம் கல்லூரிகளில் பேராசிரியர்களுக்கான பணியிடங்களில் இதர பிற்படுத்தப்பட்டவர்கள், தாழ்த்தப்பட்ட, பழங்குடி யினர்கள், முசுலீம்களுக்கு உரிய பிரதிநிதித்துவம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் கேள்விக்கு அமைச்சர்கள் அளித்த பதிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்றத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் கே.சோமநாத்பிரசாத் எழுப்பிய கேள் விக்கு, மத்திய பணியாளர், பொது குறைகளை மற்றும் ஓய்வூதியத்துறை அமைச்சர் ஜித்தேந்திர சிங் எழுத்து மூலம் அளித்த பதிலில் குறிப்பிடுகையில், மத்திய அரசுத் துறைகளில் செயலாளர் பதவிக்கான 82 பணியிடங்களில் நான்கு இடங்களில் மட்டுமே தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர் உள்ளதாக வும், மத்திய அரசின் உயர்கல்வி நிறுவன மாகிய 20 அய்அய்எம் நிறுவனங்களில்...

குடியுரிமை திருத்தம்: ‘நோபல்’ பரிசு பெற்ற விஞ்ஞானி கடும் எதிர்ப்பு

குடியுரிமை திருத்தம்: ‘நோபல்’ பரிசு பெற்ற விஞ்ஞானி கடும் எதிர்ப்பு

மத்திய பாஜக அரசு நிறைவேற்றியுள்ள குடியுரிமை சட்டத் திருத்தமசோதாவுக்கு, நாட்டின் புகழ்பெற்ற நீதிபதிகள், ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகள், வரலாற்று ஆய்வாளர்கள், பொருளாதார அறிஞர்கள், எழுத்தாளர்கள், கலைஞர்கள் என அனைத்துத் தரப்பினரும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், வேதியியல் துறைக்கான ‘நோபல் பரிசு’ பெற்ற இந்திய வம்சாவளி தமிழரும், இலண்டன் ‘ராயல் சொசைட்டி’ தலைவருமான வெங்கட் ராமன் ராமகிருஷ்ணனும், குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்துள்ளார். இந்தச் சட்டம் மூலம், ஜெர்மனியில் தேசிய இனவாதத்தைத் தூக்கிப் பிடித்த பாசிஸ்ட் ஹிட்லரின் பாதையில் இந்தியா பயணிப்பதாகவும், இது இந்தியாவுக்கு ஆபத்து என்றும் அவர் எச்சரித்துள்ளார். இது தொடர்பாக பேட்டி ஒன்றில் அவர் மேலும் கூறியிருப்பதாவது: “நான் வெளிநாட்டில் வாழ்ந்தாலும் நான் இந்தியாவை மிகவும் விரும்புகிறேன். இந்தியா ஒரு சிறந்த சகிப்புத் தன்மையுள்ள இலட்சியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாக நான் எப்போதும் நம்புகிறேன். இந்தியா வெற்றி பெற வேண்டும் என்றும் நான் விரும்புகிறேன். நாடு விடுதலையடையும்போது, எந்தவொரு மதத்திற்கும்...

அன்று ‘அவதாரங்களாக’ வந்த பார்ப்பனர்கள் இன்று ‘ஆட்சி அதிகாரங்களாக’ வருகிறார்கள் ‘குடியுரிமை’ சட்டத்தின் பின்னணி

அன்று ‘அவதாரங்களாக’ வந்த பார்ப்பனர்கள் இன்று ‘ஆட்சி அதிகாரங்களாக’ வருகிறார்கள் ‘குடியுரிமை’ சட்டத்தின் பின்னணி

பார்ப்பனர் – திராவிடர் போராட்டம் ரொம்பவும் வளர்ந்துவிட்டது; பார்ப்பனர்களும் துணிந்துவிட்டார்கள்; துணியக் காரணமும் இல்லாமல் இல்லை. இன்று ஆட்சி அவர்கள் அதிகாரத்தில் இருக்கிறது. அநேகமாக அவர்கள் ஆதிக்கத்திற்கு இதுவே கடைசி காலமாகவும் இருக்கக் கூடும். இன்று தவறின், நாளை ஆட்சி யார் கைக்குச் செல்லுமோ என்று அஞ்சுகிறார்கள். ஆகவே ஆட்சி தம் ஆதிக்கத்தில் உள்ள போதே நம்மீது பாய்ந்து தம் ஆதிக்கத்தை நிலைநாட்டிக் கொள்ள நினைக்கிறார்கள். –  பெரியார், ‘விடுதலை’ 19.03.1948 இஸ்லாமியர்களை எதிரிகளாகக் கட்டமைத்து வேத பார்ப்பன புரோகிதக் கும்பல் இந்துக்களை அணி திரட்டுகிறது. இதுவே ‘அவாளின்’ நீண்டகால தந்திரம். பார்ப்பனரல்லாத ‘இந்து’க்களை ‘வர்ணம்-ஜாதி’களாக்கி, ‘சூத்திரர்’, ‘பஞ்சமர்’ என்று இழிவு படுத்தும் பார்ப்பனர்கள், தங்களின் சமூக-புரோகித மேலாதிக்கத்தை வெகு ‘இந்து’ மக்களிடம் மறைப்பதற்கு ஓர் எதிரியைக் கட்டமைக்க வேண்டியிருக்கிறது. அதற்கு ‘இஸ்லாமியர்கள்’ பலிகடாவாக்கப்படுகிறார்கள். காஷ்மீரில் 370ஆவது பிரிவை நீக்கி இஸ்லாமியர் களின் சிறப்புரிமையை பறித்தார்கள். அயோத்தியில் 400 ஆண்டுகளுக்கு மேலாக...

அன்பு தனசேகர்-லதா இணையரின் 25ஆவது மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு நன்கொடை

அன்பு தனசேகர்-லதா இணையரின் 25ஆவது மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு நன்கொடை

கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர்-லதா இணையரின் 25ஆவது மணவிழா மகிழ்வு – சந்திப்பு – டிசம்பர் 11ஆம் தேதி தியாகராயர் நகர் சபரி உணவகத்தில்  நடந்தது. கழகத் தோழர்கள், நண்பர்கள், குடும்பத்துடன் பங்கேற்று – அன்பு தனசேகரின் துடிப்பு மிக்க கொள்கை செயல்பாடு களையும் – துணைவியார் லதா, அனைத்து குடும்பப் பொறுப்புகளையேற்று செயல்பட்டு வருவதையும் பாராட்டினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தோழர் அன்பு தனசேகர் பல ஆண்டுகாலமாக பெரியாரிய கொள்கைகளை பரப்புவதிலும் இயக்கச் செயல்பாடுகளிலும் தீவிரமாகப் பங்கேற்று செயல்படுவதை சுட்டிக்காட்டிப் பேசினார். அன்பு தனசேகர் -லதா, அன்பு மகள்கள் தமிழ்ச் செல்வி, இளவேனில் இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டின் வளர்ச்சிக்கு ரூ.10,000/- நன்கொடை வழங்கப் பட்டது. பெரியார் முழக்கம் 02012020 இதழ்

நாமக்கல் மாவட்டத்தில் கட்டமைப்பு நிதி வழங்கியோர்

நாமக்கல் மாவட்டத்தில் கட்டமைப்பு நிதி வழங்கியோர்

சேலம் மேட்டூரில் 2019 மே 25 ஆம் தேதி  நடைபெற்ற நாத்திகர் பேரணி விழாவில் நாமக்கல் மாவட்டத்தின் சார்பில் ரூ 1,11,400 கட்டமைப்பு நிதி வழங்கப்பட்டது. அதில் குமாரபாளையம் பகுதியில் நிதி அளித்தவர்கள் விவரம்: குமாரபாளையம் மாதுராசு   ரூ. 5000 ஆ.சுப்பிரமணி, கல்லிபாளையம்    ரூ. 5000 மோகன் கிருட்டிணவேணி   ரூ. 5000 பா.செல்வராஜ்   ரூ. 5000 T.சேகர், ஏஜென்சி பவானி   ரூ. 5000 மு.சாமிநாதன் சந்திரா ரூ. 5000 உதயம் ஆப்டிக்கல்ஸ்     ரூ. 1500 ஸ்ரீராம் கார்மென்ட்ஸ்      ரூ. 2000 லோகேஸ் கங்கா      ரூ. 1000 மாயாவி, காளிப்பட்டி   ரூ. 1000 M.G நாத், பவானி     ரூ. 1000 கௌதம், G L லூம்ஸ்                 ரூ. 2000 EB AD சீனிவாசன்     ரூ. 1000 செல்வராஜ்      ரூ. 2000 திராவிடமணி கௌதம்      ரூ. 1000 மோகன்   ரூ. 1000 காந்தகுரு...

கழக ஏடுகளுக்கு சந்தாக்களை தோழர்கள் வழங்கினர்

கழக ஏடுகளுக்கு சந்தாக்களை தோழர்கள் வழங்கினர்

கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ ஏடுகளுக்கு உறுப்பினர் பட்டியலுடன் சென்னை மாவட்டக் கழக சார்பில் ரூ.30,000/-த்தை கழகப் பொதுச் செயலாளரிடம் வடசென்னை மாவட்டக் கழகச் செயலாளர் ராஜி வழங்கினார். கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி கழக ஏடுகளின் சந்தாத் தொகையாக ரூ.20,000/- வழங்கினார். கோவை மாவட்டக் கழக சார்பில் நிர்மல் குமார் ரூ.23,900/- வழங்கினார். இணைய தள பொறுப்பாளர் விஜய்குமார் ரூ.12,000/- வழங்கினார். பெரியார் முழக்கம் 02012020 இதழ்

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

குடியுரிமைச் சட்டத்துக்கு எதிராக திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் NRC மற்றும் CAA  திருத்த சட்டங்களை திரும்ப பெற மத்திய மாநில அரசை வலியுறுத்தி 23.12.19 திங்கள் கிழமை தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக ஆர்ப்பாட்டம்  மாநகராட்சி அலுவலகம் முன்பு மாலை 4 மணி அளவில் நடைபெற்றது. பிரசாந்த்  (நகரச் செயலாளர், தமிழ்நாடு மாணவர் கழகம்) இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு தலைமையேற்று உரையாற்றினார்.  தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் கார்த்திகா, பவானி முன்னிலை வகித்தனர்.  தேன்மொழி (மாவட்டச் செயலாளர், தமிழ்நாடு மாணவர் கழகம்), சம்சீர் அக்மத் (மாவட்டச் செயலாளர், இந்திய மாணவர் சங்கம்), முகமது சஹீத் (மாநில ஒருங்கிணைப்பாளர், ஜனநாயக மாணவர் பேரவை),  அஸ்லாம் (தமிழக மக்கள்  ஜனநாயக கட்சி)  ஆகியோர் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்தும் இந்தியா முழுவதும் போராட்டத்தில் மாணவர்கள் மீது நடத்திய வன்முறை தாக்குதலுக்கு எதிராக  கண்டன உரையை பதிவு செய்தனர். திவிக மாநில பொருளாளர் சு.துரைசாமி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் திருவள்ளுவர் பேரவை அருண், திவிக தோழர்கள்...

கழக நாள்காட்டி வெளிவந்து விட்டது

கழக நாள்காட்டி வெளிவந்து விட்டது

செயலவையில் 2020ஆம் ஆண்டுக்கான நாள் காட்டிகள் விற் பனைக்கு கொண்டு வரப்பட்டன. கழகத் தோழர்கள் நாள் காட்டிகளை வாங்கிச் சென்றனர்.  கழக ஏடுகளுக்கான உறுப்பினர்கள் சேர்க்கும் இரசீது புத்தகங்களையும் தோழர்கள் பெற்றுச் சென்றனர். இவ்வாண்டு நாள்காட்டியில் சமூகத்துக்குப் போராடிய பெண் போராளிகள் படம் இடம் பெற்றுள்ளன. தொடர்புக்கு : தபசி குமரன், தலைமை நிலையச் செயலாளர். பேசி: 9941759641 நாள்காட்டி ஒன்றின் விலை : ரூ. 70/- ஓவியர் பரதன் வடிவமைப்பில் உருவாகும் நாள்காட்டி: ஒவ்வொரு ஆண்டும் கழக நாள்காட்டியை இயக்க ஆதரவாளர் ஓவியர் பரதன் – எம்.எஸ். ஆப்செட் நிறுவனம் வழியாக அதற்கான படங்களை  எந்த கட்டணமும் இன்றி சிறப்புடன் வடிவமைத்து தருகிறார். கழக சார்பில் அவருக்கு நன்றி செலுத்துகிறோம். பெரியார் முழக்கம் 02012020 இதழ்

தர்மபுரி மாவட்டக் கழக சார்பில் ரூ.35,000 கட்டமைப்பு நிதி

தர்மபுரி மாவட்டக் கழக சார்பில் ரூ.35,000 கட்டமைப்பு நிதி

கழக செயலவை யில் கழகக் கட்டமைப்பு நிதி யாக ரூ.35,000/- தர்மபுரி மாவட்டத் தலைவர் வேணுகோபால், அமைப்பாளர் சந்தோஷ் ஆகியோர் கழகத் தலைவர், பொதுச் செய லாளரிடம் வழங்கினர்.   பெரியார் முழக்கம் 02012020 இதழ்

பேராவூரணியில் பெரியார் நினைவு நாள் பொதுக் கூட்டம்

பேராவூரணியில் பெரியார் நினைவு நாள் பொதுக் கூட்டம்

பேராவூரணியில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் பெரியார் நினைவு நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது.  பேராவூரணி அண்ணா சிலை அருகில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு திராவிடர் விடுதலை கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் சித. திருவேங்கடம் தலைமை வகித்தார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பா. பாலசுந்தரம், திராவிட முன்னேற்றக் கழகம் க. அன்பழகன், திராவிடர் கழகம் இரா. நீலகண்டன், காங்கிரஸ் கட்சி ஷேக். இப்ராஹிம், அறநெறி மக்கள் கட்சி ஜேம்ஸ், மனிதநேய ஜனநாயக கட்சி அப்துல் சலாம், திராவிடர் விடுதலைக் கழகம் நாவலரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ‘பெரியார் இன்றும் தேவைப்படுகிறார்’ என்ற தலைப்பில் தமிழக மக்கள் புரட்சி கழகத்தின் தலைவர் அரங்க குணசேகரன், தாளாண்மை உழவர் இயக்கத்தின் தலைவர் கோ. திருநாவுக்கரசு, கல்வியாளர்கள் கே.வி. கிருஷ்ணன், புலவர் சு போசு, தமிழக மக்கள் புரட்சி கழகத்தின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆறு நீலகண்டன், தமிழக மக்கள் விடுதலை இயக்கம் முனைவர் ஆ. ஜீவா,...

தீவிர சிகிச்சைப் பிரிவில் இந்திய பொருளாதாரம் : பொருளாதார ஆய்வாளர் எச்சரிக்கிறார்

தீவிர சிகிச்சைப் பிரிவில் இந்திய பொருளாதாரம் : பொருளாதார ஆய்வாளர் எச்சரிக்கிறார்

இன்று நாடு எதிர்கொள்ளும் நிலையானது, ‘ஒரு சாதாரண பொருளாதார மந்தநிலை அல்ல’என்று மத்திய அரசின்முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகரான அரவிந்த் சுப்பிரமணியன் எச்சரிக்கை செய்துள்ளார். அரவிந்த் சுப்பிரமணியன், பன்னாட்டு நாணய நிதியத்தின் (ஐஎம்எப்) இந்திய அலுவலக முன்னாள்தலைவர் ஜோஷ் பெல்மனுடன் இணைந்து கட்டுரை ஒன்றை கடந்த வாரம் வெளியிட்டிருந்தார். அதில், “வங்கிசாரா நிதி நிறுவனங்களில் காணப்படும் பிரச்சனைகள் உள்ளிட்டவை காரணமாக, இந்தியப் பொருளாதாரம் தீவிர சிகிச்சைப் பிரிவை நோக்கிச் செல்கிறது” என்று கூறியிருந்தார். இந்நிலையிலேயே, ‘இந்தியாவில் நிலவுவது சாதாரணமான பொருளாதார மந்த நிலை அல்ல!’ என்று மீண்டும் எச்சரித்துள்ளார். இதுதொடர்பாக ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அரவிந்த் சுப்பிரமணியன், பேட்டி அளித்துள்ளார். அதில், மேலும் அவர் கூறியிருப்பதாவது: 2011 மற்றும் 2016-க்கு இடையிலான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 2.5 சதவிகித புள்ளிகள் மிகையாக கணக்கிடப்பட்டுள்ளன. ஏற்றுமதி புள்ளி விவரங்கள், நுகர்வோர் பொருட்களின் புள்ளி விவரங்கள், வரி வருவாய் புள்ளி விவரங்கள்-...

தலையங்கம் பார்ப்பனர்கள் பெரும்பான்மை ‘இந்து’க்களின் பிரதிநிதிகளா?

தலையங்கம் பார்ப்பனர்கள் பெரும்பான்மை ‘இந்து’க்களின் பிரதிநிதிகளா?

பா.ஜ.க. – சங் பரிவாரங்கள் சில மாயைகளை பொது மக்கள் சிந்தனையில் திணித்து வைத்துள்ளனர். அந்த மாயை களைத் தகர்த்து மக்களிடம் உண்மையான விளக்கங்களை நாம் புரிய வைக்க வேண்டும். இந்தியாவில் இந்துக்கள் பெரும் பான்மையாக வாழ்கிறார்கள். அப்படி யானால்  நமது நாடு இந்துக்கள் நாடு தானே என்று ஒரு கேள்வி முன் வைக்கப்படுகிறது. இது நேர்மையற்ற வாதம். ஜனநாயக நாட்டில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்றவர்கள் வெற்றி பெறுகிறார்கள்.  இந்தியாவில் இருப்பது அத்தகைய ஜனநாயகத் தேர்தல் முறை. இது தேர்தலுக்கான ஒரு வழிமுறையே தவிர, ஜனநாயகத்துக்கான  அடையாளம் அல்ல. ஜனநாயகம் என்பது நாட்டில் எது பெரும்பான்மையாக இருக்கிறதோ, அதற்கான ஆட்சி நடத்த வேண்டும் என்பது அல்ல. இந்தியா சுதந்திரம் பெற்றபோது எழுதப் படிக்கத் தெரியாதவர்கள்தான் பெரும்பான்மை. எனவே எல்லோரையும் எழுதப் படிக்கத் தெரியாதவர்களாக வைத்திருப்பதே சுதந்திர இந்தியாவின் இலட்சியம் என்று கூற முடியுமா? மருத்துவ வசதியற்றவர்களும், வேலை இல்லாதவர் களுமே அப்போது...

கழக செயல்பாடுகளை தீவிரப்படுத்த தோழர்கள் உறுதி

கழக செயல்பாடுகளை தீவிரப்படுத்த தோழர்கள் உறுதி

கழக செயலவைக் கூட்டத்தில் பேசிய கழகப் பொறுப்பாளர்கள், 2020ஆம் ஆண்டில் செயல்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துவோம் என்று அறிவித்தனர். திராவிடர் விடுதலைக் கழக செயலவை, சென்னை இராயப்பேட்டை விஜய் திருமண மண்டபத்தில் டிசம்பர் 28, 2019 அன்று காலை 10.30 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் கூடியது. தென்சென்னை மாவட்டக் கழக அமைப்பாளர் மயிலை சுகுமார், கடவுள், ஆத்மா மறுப்பு முழக்கங்களைக் கூறினார். அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி தொடக்க உரையாற்றினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத்தின் கடந்தகால செயல்பாடுகள் – பெரியாரியலை எதிர்நோக்கும் ஆபத்துகள், கழக அமைப்புகள் முனைப்போடு செயல்பட வேண்டிய தேவை, அடுத்து மேற்கொள்ள வேண்டிய செயல் திட்டங்கள் குறித்து தலைமைக் குழுவில் நடந்த விவாதங்கள், கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ குறித்த வரவு செலவு கணக்குகளை விளக்கி ஒரு மணி நேரம் பேசினார். தொடர்ந்து கழகத்...

திராவிடர் விடுதலைக் கழகச் செயலவை அறைகூவல்

திராவிடர் விடுதலைக் கழகச் செயலவை அறைகூவல்

பா.ஜ.க.வின் ‘இந்துராஷ்டிரம்’ அமைக்கும் முயற்சிகளை முறியடிக்க மக்களை ஒன்று திரட்டுவோம் பா.ஜ.க.வின் ‘இந்துராஷ்டிரம்’ அமைக்கும் முயற்சியைத் தடுக்க மக்கள் சக்தியை அணி திரட்டுவோம் என்று திராவிடர் விடுதலைக் கழக செயலவை அறைகூவல் விடுத்துள்ளது. நாடு இராணுவ ஆட்சியை நோக்கி நகரும் ஆபத்தையும் செயலவை எச்சரித்துள்ளது. திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலவையில் நிறைவேற்றிய தீர்மானங்கள்: இந்தியாவின் மதச் சார்பற்ற அடையாளத்தை உருக்குலைத்து ‘இந்து இராஷ்டிரமாக்கும்’ முயற்சிகளை பா.ஜ.க. நடுவண் ஆட்சி தீவிரப்படுத்தி வருகிறது. இதற்கான வழிகாட்டும் அதிகாரங்களை ஆர்.எஸ்.எஸ். கையில் எடுத்துக் கொண்டுள்ளது. மெஜாரிட்டி மக்களாக இந்துக்களைக் கொண்ட ஒரு நாடு இந்து நாடாகவே இருக்க வேண்டும் என்று சங்பரிவாரங்கள், பா.ஜ.க. முன் வைக்கும் கருத்துகளின் உள்ளடக்கம் மிக மிக ஆபத்தானது என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறோம். ‘மெஜாரிட்டி இந்துக்கள்’ போர்வைக்குள் மைனாரிட்டி பார்ப்பனர்கள் புகுந்து கொண்டு மெஜாரிட்டி இந்துக்களின் பண்பாடு, உணவு, பழக்க வழக்கங்கள், வழிபாட்டு முறைகளை சிதைத்து, பார்ப்பன சமஸ்கிருதப் பண்பாடே...

“குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்போம்” – கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிவிப்பு.

“குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்போம்” – கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிவிப்பு.

“குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணியில் பங்கேற்போம்” – கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிவிப்பு. டிச.23 திங்கள் அன்று அனைத்துக் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற உள்ள ‘குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணி’யில் திராவிடர் விடுதலைக் கழகம் பங்கேற்கிறது. – கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிவிப்பு. இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றும் RSS ன் திட்டப்படி மத்திய பாஜக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் தான் புதிய குடியுரிமை திருத்த சட்டம் . பாஜக அரசின் இந்த புதிய குடியுரிமை திருத்த சட்டம் இந்த அரசியல் சட்ட சாசனம் உறுதியளிக்கும் மதசார்பற்ற தன்மை எனும் அடிப்படையே தகர்க்கிறது. நாட்டு மக்களை மதத்தின் அடிப்படையில் பிளவு படுத்தி ஒரு மதம், ஒரு மொழி,ஒரு கலாச்சாரம் என்கிற ஆபத்தான ஜனநாயகத்திற்கு எதிரான, பன்முகத்தன்மைக்கும்,அடிப்படை மனித உரிமைகளுக்கும் எதிரான இந்த புதிய குடியுரிமை திருத்த சட்டம் RSS ன்...