Category: குடி அரசு 1927

பார்ப்பனரும் அரசியலும் 0

பார்ப்பனரும் அரசியலும்

அரசியல் விஷயத்தில் நாம் பார்ப்பனர்களை நம்பக்கூடாது என்றும், அவர்களது அரசியல் நோக்கம் என்பதெல்லாம் பார்ப்பனரல்லாதாரை மிதித்து பார்ப்பனர்கள் எப்படியாவது அதிகாரத்திற்கும் பதவிக்கும் உத்தியோ கத்திற்கும் வர வேண்டும் என்பதைத்தவிர வேறில்லை என்றும், பார்ப்பனர் கள் தங்களுக்கு உத்தியோகம் பதவி முதலியவைகள் கிடைக்கக்கூடும் என்று எண்ணுகிற விஷயங்களில் அதற்கு விலையாக தேசத்தையோ மானத்தையோ நாணயத்தையோ கூட விடப் பின்வாங்க மாட்டார்கள் என்றும், இந்தப்படி செய்தே நமது நாட்டை ஆயிரக்கணக்கான வருஷங் களாய் அன்னிய ஆக்ஷிக்கு அதாவது மனிதத்தன்மை அற்ற ஆக்ஷிக்கு அடிமைப்படுத்தி நமது நாட்டிற்கு அடியோடு சுயமரியாதை இல்லாமற் செய்து விட்டார்களென்றும், இக்குணங்களான பார்ப்பனீயம் நமது நாட்டை விட்டு ஒழிந்தாலல்லது நமக்கு என்றென்றைக்கும் விடுதலையோ சுயமரியாதையோ ஏற்படாதென்றும் அனேக தடவைகளில் எழுதியும் பேசியும் வந்திருப் பதுடன் அதே வேலையிலேயே நமது வாழ்நாளைக் கடத்தியும் வருகிறோம். ஆனால் நம்மில் ஒருசாராருக்கே, அதாவது பார்ப்பனர்களை பின்பற்றினாலொழிய வாழ முடியாது என்கிற கூட்டத்தாருக்கு இந்த உண்மை கள்...

மதுரை அமெரிக்கன் காலேஜ் மாணவர்களுக்குள் சுயமரியாதை உதயம் 0

மதுரை அமெரிக்கன் காலேஜ் மாணவர்களுக்குள் சுயமரியாதை உதயம்

சென்ற வாரம் சென்னை பச்சையப்பா ஆஸ்ட்டலில் பார்ப்பன ரல்லாத வாலிபர்கள் தங்களுக்கு பார்ப்பனரல்லாத சமையல்காரரையே வைத்து சமையல் செய்து சாப்பிட்டு வருவதும் அதன் காரணங்களையும் எழுதி மற்ற காலேஜ் பார்ப்பனரல்லாத பிள்ளைகளும் இதை பின்பற்ற வேண்டும் என்று வேண்டிக் கொண்டோம். அதற்கிணங்க இவ்வாரம் மதுரை அமெரிக்கன் காலேஜிலுள்ள பார்ப்பனரல்லாத பிள்ளைகளும் தங்களுக்குள் பார்ப்பன சமையல்காரரைத் தள்ளிவிட்டு பார்ப்பனரல்லாத சமையல்காரரை வைத்து சமைத்து சாப்பிடுவதுடன் வகுப்பு வித்தியாசமில்லாமல் தங்களுடன் கூட உட்கார்ந்து சாப்பிட சம்மதிக்கும் மாணவர்களையெல்லாம் சேர்த்து ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிடத் தீர்மானித்து அந்தப்படி நடத்தி வருகிறார்கள் என்பதைக் கேட்க மிகவும் சந்தோஷமடைகிறோம். மதுரை காலேஜில் இப்படி நேர்ந்ததற்கு ஒரு தகுந்த காரணமும் சொல்லப்பட்டது. அதாவது அக்காலேஜ் மாணவர்களில் இரண்டொரு பார்ப் பன மாணவர்களுக்கும் பார்ப்பனரல்லாத மாணவர்களுக்கும் மிகவும் நேச மாய் இருந்ததோடு மாமிச உணவு முதல் கொண்டு வித்தியாசமில்லாமல் ஒன்றாய் உட்கார்ந்து சாப்பிட்டு வருவது வழக்கமாய் இருந்து வந்தது. சமீபத்தில் ஒரு...

பார்ப்பனப் புரோகிதம் ஒழிந்தது! 0

பார்ப்பனப் புரோகிதம் ஒழிந்தது!

“பார்ப்பன குருமாருக்கு” கொடுத்து வந்த வரியும் ஒழிந்தது. மதுரை பிராமணரல்லாத மகாநாட்டில் தோன்றிய தீர்மானங்களை நம் சகோதரர்கள் செய்கையில் நடத்தி வருவதை நம் “திராவிடன்” “குடியரசு” பத்திரிகைகள் வாயிலான் அறிந்து மகிழ்ச்சியடைகிறோம். நிற்க நம் மகாநாட்டிற்கு உப காரியதரிசியாய் விளங்கி நமக்கு அல்லும் பகலும் உழைத்தவரும், உழைக் கின்றவருமான திருவாளர்.டி. கொண்டல் நாயுடு அவர்கள் அன்னையார் விண்ணவர்க்கு விருந்தாயது பற்றி 19. 2. 27 குண்ணத்தூரில் தமதில்லத்தில் சடங்குக் கிரியைகள் நடைபெற்றன. இக்கிரியைகளுக்கு மதுரையினின்று திருவாளர்கள் ஐகோர்ட்டு வக்கீல் பி. ரங்கசாமி நாயுடு அவர்கள் பி.ஏ.பி.எல்., எஸ். கூடலிங்கம் பிள்ளை அவர்கள், பெஞ்ச் கோர்ட்டு மாஜிஸ்திரேட் சின்ன சாமி ராஜா அவர்கள், பென்ஷன் பட்டாளம் சுபேதார் சுப்பா நாயுடு அவர்கள், ஜவுளி வியாபாரம் சின்னசாமி நாயுடு அவர்கள், ஆத்தூர் சின்னசாமி நாயுடு அவர்கள், நிலச்சுவான்தார்கள் அ.சு. சீனிவாசலு நாயுடு அவர்கள், அ.சு. அக்கையசாமி நாயுடு அவர்கள் மற்றும் கிராமங்களினின்று அநேக நில...

‘நீலாம்பிகை திருமணம்’ 0

‘நீலாம்பிகை திருமணம்’

சுவாமி வேதாசலம் அவர்களின் அருமைப்புதல்வி திரு.செல்வி நீலாம்பிகையம்மைக்கும் நமது நண்பரான திருவாளர் திருவரங்கம் பிள்ளை அவர்களுக்கும் நடந்த திருமணச் சடங்கு சம்பந்தமாக சில விபரங்கள் பொது மக்கள் கவனத்தை இழுக்கும்படி நேர்ந்தது பற்றி வருந்துகிறோம். ஆயினும் இச்சடங்கானது இது சமயம் தமிழ்நாட்டில் வெகு மும்மரமாய் நடந்துவரும் தமிழ் மக்களின் மனிதத்தன்மை உணர்ச்சியின் எழுச்சிக்கு இடையூறாய் நிற்குமோவென்னும் ஐயத்தால் அவற்றை வெளியிட்டாக வேண்டிய நிலைமை ஏற்பட்டது பற்றி வெளியிடலாயிற்று. அதற்கு சமாதானமாக பண்டிதர் ஆனந்தம் அவர்கள் எழுதிய கட்டுரையானது குளிக்கப் போய் சேற்றைப் பூசிக்கொண்டது போல் செய்து விட்டாலும் “கண்டு களித்தோன்” என்னும் நண்பர் எழுதிய மற்றொரு கட்டுரையும் அதை ஒருவாறு திருவாளர் கா.சுப்பிரமணியபிள்ளை அவர்கள் சரி என்று ஒப்புக்கொண்ட தாக்கலும் மக்களுக்கு திருப்தி அளிக்கும் எனக் கருதி அவ்விஷயத்தை அத்துடன் நிறுத்திவிடலாம் என்பதாக முடிவு செய்து “இவ்விஷயம் இத்துடன் முடிவு பெற்றது” என்பதாக குறிப்பும் எழுதி முடித்துவிட்டோம். ஆனால் மறுபடியும் சுவாமி...

சுயமரியாதைக்கு சத்தியாக்கிரகம் வாலிபர்களுக்கு விண்ணப்பம் 0

சுயமரியாதைக்கு சத்தியாக்கிரகம் வாலிபர்களுக்கு விண்ணப்பம்

பார்ப்பனரல்லாத மக்களின் சுயமரியாதைக்காக சத்தியாக்கிரகம் செய்யவேண்டும் என்பதாக பார்ப்பனரல்லாத வாலிபர் பலர் உள்ளத்தில் ஆத்திரம் பொங்கித் ததும்பிக் கொண்டிருக்கிறது. இவ்விதமான உணர்ச்சி யைக் கண்டு நாம் மிகுதியும் மகிழ்ச்சி உறுகிறோம். ஸ்ரீமான் தண்டபாணி பிள்ளையும் மதுரை அருணாசலமும் விண்ணப்பமும் வேண்டுகோளும் விடுத்த பிறகு பல வாலிபர்கள் தங்கள் தங்கள் பெயர்களைக் கொடுத்து சத்தியாக்கிரகத்தை சடுதியில் ஆரம்பிக்கும் படியாகச் சொல்லி தங்கள் உற்சாகத்தைக் காட்டி வருகிறார்கள் . தமிழ்நாட்டில் ஏதாவது ஒரு பயனுள்ள வேலை செய்யவேண்டு மானால் அது சத்தியாக்கிரகத்தைத் தவிர வேறில்லை என்பதை நாம் மனப்பூர்த்தியாக ஒப்புக் கொள்கிறோம். நமது நாட்டில் ஆசாரச் சீர்திருத்தமும் அரசியல் சீர்திருத்தமும் ஆரம்பித்து எவ்வளவு காலமாய் நடைபெற்று வருகிறது? இவ்விரண்டிற்காக நமது மக்கள் சிலவழித்த காலம், பொருள் எவ்வளவு? இவ்வளவு ஆகியும் இதன் பெயரைச் சொல்லிக் கொண்டு ஒவ்வொரு தலைவர் என்போரும் மக்களை ஏமாற்றி தன் தன் சுயநலத்திற்கு வழி தேடிக் கொண்டார்களேயல்லது நாடு அடைந்த...

குருக்களின் புரட்டு 0

குருக்களின் புரட்டு

சகோதரர்களே! இதுவரை அரசியல் புரட்டையும், மதப் புரட்டையும் பற்றிச் சொல்லி வந்தேன். இனி ஆச்சாரியார், குரு, மகந்து, சங்கராச்சாரியார்கள், மடாதிபதிகள் என்பவர்களின் பேரால் நடக்கும் புரட்டுகளையும் சற்று கவனித்துப் பாருங்கள் . எந்த தனிப்பட்ட நபர் மீதிலும் எனக்கு எவ்விதமான மன வருத்தமும், துவேஷமும் இல்லை. இவர்களுக்கு கொடுக்கும் பணம் நின்றுவிட்டால் எனக்கு ஒன்றும் லாபம் கிடையாது. நான் சொல்லுவதெல்லாம் நம்முடைய பணம் எவ்வளவு அக்கிரம வழியிலும், அவிவிவேக வழியிலும் செலவா கிறது என்பதையும் இதன் மூலம் நமது சுயமரியாதைகள் எவ்வளவு தூரம் பாதிக்கப்படுவதோடு நாம் எந்தெந்த வழிகளில் ஏமாற்றப்படுகிறோம் என்ப தையும் உங்கள் அறிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்கிற எண்ணமே அல்லாமல் வேறல்ல. ஆசாரியார், மகந்து, மடாதிபதி, சிஷ்யன், குரு என்று சொல்லும் வார்த்தைகள் தமிழ் வார்த்தைகள் அல்ல. அவை ஆரியர்கள் நாட்டு வார்த் தைகள் . அவர்கள் இங்கு வந்தபிறகு அவ்வார்த்தைகளை நம்முள் புகுத்தி அவர்களே அவர்களை...

நமது கோர்ட்டுகள் 0

நமது கோர்ட்டுகள்

கோர்ட்டு என்பது சூதாடுமிடம் நமது வகுப்பார் சீர்குலைந்து மானங்கெட்டு பார்ப்பனர்களின் அடிமை களாகி அவர்களின் வாலைப் பிடித்துக்கொண்டு திரிவதற்கு முக்கியக் காரணம் நம் நாட்டில் ஏற்பட்டிருக்கும் கோர்ட்டுகள் என்று சொல்லப்படும் சூதாடுமிடங்களும் அவைகளுக்கு ஜட்ஜுகள் என்று சொல்லப்படும் சூதாட்ட நிர்வாகிகளுமே ஆவார்கள். சீட்டு மேஜை அதாவது ஒருவர் ஒரு வீட்டை சூதாட்டத்திற்கு வாடகைக்கு கொடுத் திருந்தால் அவ்வீட்டில் சூதாடிகளை ஒன்று சேர்த்து அவ்வாட்டத்திற்கு அநுகுணமான சாமான்களையும் ஆட வசதியையும் செய்து கொடுத்து சீட்டு மேஜைக் காசு என்னும் கூலி வாங்குகிறவன் ஒருவனுண்டு. சூது ஆட வருகிற வர்கள் ஒவ்வொரு வெற்றிக்கும் இவ்வளவு என்று கொடுத்து வருவதுண்டு. சாதாரணமாக காலை முதல் மறுநாள் காலை வரையில் ஆளுக்கு இவ்வளவு என்பதாக கையில் பணம் வைத்துக் கொண்டு சூதாட ஆரம்பித்தால் கடைசி யாய் எழுந்து போகும் போது நாலுபேர் தோல்வி அடைந்து கடன்காரராய் எழுந்து போவதும் இருவர் சம்பாதிப்பவர்களாகவும் இருவர் அசலோடு போவதாகவும் காணப்படும்....

காந்தியைக் காட்டி காசு பரித்தல் 0

காந்தியைக் காட்டி காசு பரித்தல்

நமது நாட்டுப் பார்ப்பனர்கள் மகாத்மாவைக் காட்டி காசு பரிக்கிறார் கள் என்று பொதுவாய் எழுதி வந்தோம். இப்போது அது வாஸ்தவமாகவே நடைபெற்றுவிட்டது. அதாவது திருச்சியில் ஒரு கொட்டகையில் மகாத்மா வைக் கொண்டுபோய் வைத்து பார்க்க வருகிறவர்களிடம் டிக்கட்டு போட்டு பணம் வசூல் செய்கிறதாக சங்கதி எட்டுகிறது. மேடை ரூ. 25-க்கு மேல் ரிசர்வெட் ரூ.15 முதல் 25 வரை, முதல் வகுப்பு ரூ. 10 முதல் 15 வரை, இரண்டாவது வகுப்பு ரூ. 5 முதல் 10வரை, மூன்றாம் வகுப்பு ரூ. 2 முதல் 5 வரை என்பதாகவும், டிக்கட்டுகள் சாஸ்திரி & கம்பெனியிலும் வைத்தியா & கம்பெனியிலும் கிடைக்கும் என்பதாகவும் திருச்சி டாக்டர் ராஜனால் துண்டு நோட்டீசு வினி யோகிக்கப்பட்டது நமது பார்வைக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. மகாத்மாவின் பிரசங்கமும் அவர் தரிசனமும் அவர் தாமதிப்பதும் சங்கராச்சாரி போடும் வரிக்கு மேல் போய் விட்டது. அது செலவாவதும் சங்கராச்சாரி செலவு செய் வது...

மகாத்மாவுக்கு முதலியாரின்                   நற்சாக்ஷி பத்திரம் 0

மகாத்மாவுக்கு முதலியாரின் நற்சாக்ஷி பத்திரம்

ஸ்ரீமான் கல்யாணசுந்திர முதலியார் அவர்கள் மகாத்மா காந்திக்கு ஒரு நற்சாக்ஷி பத்திரம் வழங்கினார். அதாவது மகாத்மா தன்னைப் பற்றி ஞாபகம் வைத்திருக்கிறாராம். 5, 6´க்கு முன் தான் மகாத்மாவின் பிரசங் கத்தை மொழிபெயர்த்தது மகாத்மாவுக்கு இன்னம் ஞாபகத்திலிருக்கிறதாம். அதனாலேயே மகாத்மாவுக்கு நல்ல ஞாபகக் குறிப்பு இருக்கிறதாம். ஆனால் அதே மகாத்மா ஒருசமயம் சென்னைக்கு வந்த காலத்தில் ஸ்ரீமான் சர். தியாகராயர் வீட்டில் இறங்கி கொஞ்சநாள் தங்கியும் இருந்து விட்டு போனபிறகு ஒரு விஷயத்தில் சர். தியாகராயரைப் பற்றி மகாத்மாவை கேட்ட போது தமக்கு அவரைப் பற்றி தெரியாது என்று சொல்லி விட்டாராம், கொஞ்சநேரம் பிரசங்கம் மொழிபெயர்த்ததைப்பற்றி ஞாபகத்தில் வைத் திருந்த மகாத்மாவுக்கு தாம் இறங்கி கொஞ்சநாள் இருந்தவர் ஞாபகத்திற்கு வராமல் போனது என்ன காரணமோ என்பதை ஸ்ரீமான் முதலியார்தான் சொல்லவேண்டும், மகாத்மாவுக்கு ஞாபக சக்தி அதிகம் என்று தீர்மானிப் பதானால் பார்ப்பனரின் அடக்குமுறை சக்தி அதைவிட அதிகமென்றுதான் தீர்மானிக்கவேண்டும். இல்லாவிட்டால் ஸ்ரீமான்...

நீல் சத்தியாக்கிரகமும் “தலைவர்களும்” 0

நீல் சத்தியாக்கிரகமும் “தலைவர்களும்”

நீல் சத்தியாக்கிரகத்தை நடத்துவதற்கு ஆதாரமாயிருந்த சென்னைத் ‘தலைவர்’களில் ஒருவரான திரு. குழந்தை திரு. சாமிநாத முதலியாரைப் பிடித்தவுடன் ஒரு விளம்பரத்தை வெளியிட்டிருக்கிறார். அதில் தான் சத்தியாக்கிரகத்திற்கு தலைவனல்லவென்றும் சத்தியாக்கிரகி அல்லவென்றும், ஸ்ரீமான் சாமிநாத முதலியாரே அதன் தலைவரென்றும் எழுதி இருக்கிறார். சத்தியாக்கிரகக் கூட்டங்களுக்கெல்லாம் தலைமை வகித்து, சத்தியாக் கிரகங்களுக்கு உற்சாகத்தையும் கொடுத்து பேசி விட்டு, தன்னுடையப் பெய ரையும் பரப்பிக் கொண்டு, இப்போது தலைவர் என்பவரை சர்க்கார் பிடித்த வுடன் ‘நான் தலைவனல்ல,’ ‘சத்தியாக்கிரகியல்ல’ என்று எழுதி வேறு ஆசாமியை காட்டிக் கொடுத்து விட்டு தப்பித்துக் கொள்ளப் பார்ப்பது எவ்வளவு பயங்காளித் தனம் என்பதை நேயர்களே கவனிக்க வேண்டும். சென்னைத் தலைவர்களின் யோக்கியதை வெளியாவதற்கு திரு குழந்தை உதவி செய்தது நமக்கு மகிழ்ச்சியே. ஆனால் முதலிலேயே சத்தியாக்கிரக கூட்டமொன்றில் திரு. தண்டபாணி பிள்ளை அவர்கள் பேசும்போது இந்த மாதிரி கனவான்களின் யோக்கியதைகளை எடுத்துச் சொல்லி “தக்க சமயத்தில் இவர்கள் ஏமாற்றி விட்டுப்...

மதத்தைப் பற்றிய விபரீதம் 0

மதத்தைப் பற்றிய விபரீதம்

மத சம்மந்தமான புரட்டுகளை நாம் வெளியாக்கி கண்டித்து வருவதில் வைதீகக் கொள்கையுடைய பார்ப்பனரல்லாதாரிலே அனேகருக்கு மன வருத்தம் ஏற்பட்டிருப்பதாகத் தெரிய வருகிறது. அதற்கேற்றாப் போல் மதத்தின் பேரால் வயிறு வளர்க்கும் பார்ப்பனர்களும் நம்மைப் பற்றி இம் மாதிரி ஆசாமிகளிடம் விஷமப் பிரசாரமும் செய்து வருவதினால் அவசரப் பட்டு மிகவும் விபரீத கொள்கைக்கும் மூட வழக்கங்களுக்கும் கட்டுப் பட்டவர்களும் “பழக்கம்” “பெரியோர் போன வழி” என்கிற வியாதிக்கும் ஆளானவர்களும் இம்மாதிரி விபரீதமாக கருதி வருத்தப்படுவதில் நமக்கு ஆச்சரியம் ஒன்றும் தோன்றவில்லை. தன வைசிய நாடு என்கிற நாட்டுக் கோட்டை செட்டியார்கள் நாட்டில் நாம் பிரசாரத்திற்கு சென்றிருந்த காலையிலும்கூட நெற்குப்பை என்ற ஒரு ஊரிலுள்ள வைதீகச் செட்டியார்மார்களை இப்படித்தான் ஒரு பார்ப்பனன் சொல்லி ஏமாற்றிவிட்டான். அதாவது ராமசாமி நாயக்கர் என்கிற ஒருவன் வந்து நாட்டையே பாழாக்குகிறான், கலி அவனால்தான் வெளியாகிறது, நாஸ்திகம் பேசுகிறான், அவன் பேச்சைக் கேட்டால் சிறுபிள் ளைகள் எல்லாம் கெட்டுப் போவார்கள்...

வேண்டுகோள் 0

வேண்டுகோள்

“திராவிடன்” சென்னையில் தென்னிந்திய மகாஜன சங்கம் லிமிடெட் கம்பெனி யாரால் பார்ப்பனரல்லாத மக்களின் முன்னேற்றத்திற்கு என்பதாக “ஐஸ்டிஸ்”, “திராவிடன்” என்கிற இரு தினசரி பத்திரிகைகள் முறையே இங்கிலீசிலும் தமிழிலுமாக நடந்து வருகின்றன. அவைகள் ஜஸ்டிஸ் கட்சியானது அரசியல் அதிகாரத்தில் இருந்த காலமாகிய சென்ற ஆறு வருஷ காலமாக மந்திரிகளின் ஆயிரக்கணக்கான ரூபாய் நன்கொடைகளினாலும் அக்கட்சிப் பிரமுகர் களின் நன்கொடையாலும் நடைபெற்று வந்தன. இப்போது அக்கட்சி அதி காரமும், ஆரவாரமும் அக்கட்சியார் பாமர மக்கள் இடையில் தங்களது கொள்கைகளைச் சரியாகப் பரப்பாததாலும் பாமர மக்களிடம் அளவுக்கு மீறின நம்பிக்கையால் சரியான பிரசாரம் செய்யாமல் அலட்சியமாக இருந்து விட்டதாலும் அவர்களின் எதிர்கட்சியராகிய பார்ப்பனர்கள் தங்களுக்கு அனுகூலமாய் இக்குறைகளை உபயோகித்துக்கொண்டு காங்கிரஸ், சுயராஜ் யம் என்னும் பல பாமர மக்கள் ஆசையால் ஏமாறத்தக்க பெயர்களால் விஷமப் பிரசாரம் செய்ததின் பலனாலும், அதிகாரப் பதவி இழக்க நேரிட்ட தால் இப்பத்திரிகைகள் கஷ்டத்திலிருக்கின்றன. ஆனபோதிலும், இக் கட்சியார் இப்போது...

சென்னைக்கு செல்கிறோம் 0

சென்னைக்கு செல்கிறோம்

சுமார் ஐந்து ஆறு மாதங்களாய் நாம் தெரிவித்து கொண்டு வந்த படிக்கு ‘திராவிடன்’ பத்திரிகை விஷயமாய் சென்னைக்குச் செல்லுகிறோம். பார்ப்பனரல்லாதார் நன்மையையும் சுயமரியாதையையும் முன்னிட்டு ‘திராவிடன்’ பத்திரிகையையும் ஏற்று நடத்த வேண்டும் என்று நம்மை பலர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க பார்ப்பனரல்லாதார் இயக்கமாகிய தென் இந்திய நல உரிமைச் சங்கத்தின் சில முக்கிய தலைவர்களுக்கும் தோன்றிற்று. இதன் பயனாக நாம் மகா ஜனங்களையும் அபிப்பிராயம் கேட்டதில் அவர் களும் பெரும்பான்மையோர்கள் அந்தப்படியே கட்டளை இட்டார்கள் . அன்றியும் பல பிரபுக்களும் வேண்டிய சகாயம் செய்வதாக வாக்களித்து ஏற்றுக் கொள்ளும்படியாகவே வற்புறுத்தினார்கள் . எனவே சென்னைக்கு செல்லுகின்றோம். இதைப்பற்றி இந்த சமயத்தில் இரண்டொரு வார்த்தைகள் தெரியப் படுத்த வேண்டியது அவசியமெனக் கருதி வெளியிடுகிறோம். முதலாவது ஏற்கனவே தமிழ் நாட்டில் 2, 3 தமிழ் தினசரிகள் இருக்கும் போது ‘திராவிடன்’ என்கிற தினசரி பத்திரிகை ஒன்று நமக்கு வேண்டுமா? தமிழ் மக்கள் இவ்வளவு பத்திரிகைகளையும்...

சுயமரியாதைப் பிரசாரம் 0

சுயமரியாதைப் பிரசாரம்

கனவான்களே! இந்த இடங்களில் இதற்கு முன் அநேக தடவைகளில் வந்து பேசியி ருக்கின்றேன். அப்போது வந்த சமயங்களில் நான் எதைப்பற்றி பேசினே னோ அதே விஷயங்களைப்பற்றித்தான் இப்போதும் பேச வந்திருக் கின்றேன். ஆனால் அந்தக் காலங்களில் எனது பிரசங்கத்தைக் கேட்க வந்த ஜனங்களை விடவும் உற்சாகத்தைவிடவும் இப்போது எத்தனையோ மடங்கு அதிகமான ஜனங்களும் உற்சாகங்களும் காணப்படுவது எனக்கே ஆச்சரிய மாய் இருக்கிறது. ஒரு சமயம் எனது கொள்கைகள் ஏதாவது மாற்றமடைந்து விட்டதா என்பதாக நானே யோசித்துப் பார்ப்பதுண்டு. எவ்வளவு யோசித் தாலும் எனது பழைய கொள்கைகளிலிருந்து ஒரு சிறிதும் மாற்றிக் கொண்ட தாக எனது மனச்சாக்ஷி சொல்லுவதே இல்லை. மகாத்மா காங்கிரஸ் காலத்திலும், அதற்கு முன் நான் தனியே அபிப் பிராயம் கொண்டிருந்த சமயத்திலும் எந்தக் கொள்கையில் நம்பிக்கை கொண்டிருந்தேனோ அவற்றில் ஒரு சிறிதும் மாற்ற மேற்பட்டதாக எனக்குத் தோன்றுவதே இல்லை. அதாவது மகாத்மாவின் ஒத்துழையாமை காங்கிர சுக்கு முன்னால் பார்ப்பனரல்லாதார்...

நெற்றிக் கண்ணைக் காட்டினாலும்              குற்றம் குற்றமே 0

நெற்றிக் கண்ணைக் காட்டினாலும் குற்றம் குற்றமே

சுவாமி வேதாசலம் அவர்கள் அருமைக் குமாரத்திக்கும் நமது நண்பர் திருவரங்கம்பிள்ளை அவர்களுக்கும் நடந்தேறிய திருமணச் சடங்கானது தமிழ்மக்களையே குழப்பத்தில் கொண்டு வந்து விட்டு விட்டது. சுவாமி வேதாசலம் அவர்களும் திருவாளர் கா. சுப்பிரமணிய பிள்ளை அவர்களும் தமிழ் நாட்டிலேயே தமிழ் மக்களின் பழய நாகரிக விஷயமாய் தக்க ஆராய்ச்சி உள்ளவர்கள் . ஏனையவர்களை இவர்களுக்கு சமமானவர்கள் அல்லது இவர்களுக்கு அடுத்தவர்கள் என்று சொல்ல வேண்டுமேயல்லாமல் இவர்களுக்கு மீறினவர்கள் என்று சொல்ல முடியாது என்பது நமது அபிப்பிராயம். அப்படிப்பட்ட இரு ஞான பாஸ்கரர்கள் கூடிச் செய்த திருமணம் பார்ப்பனீயத் திருமணமாய் நடந்தேறிற்றென்றால் மற்ற வர்கள் எவ்வளவு தூரம் பார்ப்பனீயத்திற்கு உயர்வு கொடுக்க மாட்டார்கள்! உயர்வு கொடுக்க விரும்பார்களா என்பதை யோசிக்கும்படி அவர்களுக்கே விட்டு விடுகிறேன். இதற்கு ஏதாவது தகுந்த சமாதானம் இவர்கள் சொல்லாத வரையில் திருத்த முடியாத குற்றமாவதோடு மக்களுக்கு குழப்பமும் நமது முயற்சிக்கு இடையூறும் ஏற்படும் என்பதையும் வணக்கத்துடன் தெரிவித்துக் கொள்ளுகிறோம்....

மறுபடியும் பெசண்டம்மையார் 0

மறுபடியும் பெசண்டம்மையார்

ஒரு விதத்தில் மறைந்து போன ஸ்ரீமதி பெசண்டம்மையாரின் அரசியல் செல்வாக்கை மறுபடியும் உயிர்ப்பிக்க கொஞ்ச நாளாகவே அந்தரங் கத்தில் பல ஏற்பாடுகள் நடந்து வருகின்றதை நாம் அறிவோம். அதற்காக பல பத்திரிகைகளையும் வசப்படுத்த செய்துவரும் முயற்சியையும் நாம் அறிந்துவருகிறோம். பெசண்டம்மையாரின் ஆதிக்கம் அல்லது தலைமை என்பது பெரிதும் விபூதி பூசும் அய்யர்களான பார்ப்பனர்களின் ஆதிக்கம்தான். மகாத்மா காந்தி யின் ஆதிக்கமென்பது பெரிதும் நாமம் போடும் அய்யங்கார்களான பார்ப்பனர்களின் ஆதிக்கம்தான். “நாட்டுக்கு எந்த துரை வந்தாலும் தோட்டிக்கு புல் சுமக்கும் வேலை போகாது” என்பது போல் பார்ப்பன சூழ்ச்சி யால் எந்த தலைவர் போய் எந்த தலைவர் வந்தாலும் பார்ப்பனர்களுக்கு யோகமே தவிர நமது கதி இவர்கள் காலை நக்கிக் கொண்டு திரிய வேண்டிய தாய்தான் இருக்குமேயல்லாமல் ஒருக்காலும் சுயமரியாதையுடன் வாழ முடியாது. இதற்கு சாட்சி மகாத்மா ஆதிக்கத்தால் ஏற்பட்ட பலனே போது மானது. இனி நமக்கு மகாத்மாக்களும் வேண்டாம், உலக ரக்ஷகிகளும்...

இந்திய சட்டசபையில்                                     மூட நம்பிக்கைக்கு தீர்க்காயுசு அறிவின் வளர்ச்சிக்கு ஆபத்து 0

இந்திய சட்டசபையில் மூட நம்பிக்கைக்கு தீர்க்காயுசு அறிவின் வளர்ச்சிக்கு ஆபத்து

“மதாச்சாரியார்களை தூஷிப்பதை தடுக்க வேண்டியதற்காக” என்னும் பெயரால் இந்திய சட்டசபையில் ஒரு சட்டம் நிறைவேற வேண்டிய சடங்குகள் எல்லாம் செய்தாய் விட்டது. இனி, “சட்டமாய் விட்டது”என்று சொல்ல வேண்டியதுதான் பாக்கி. இந்த சட்டத்தைப் போல் ஒரு முட்டாள் தனமானதும் மனித சமூகத் தின் அறிவு வளர்ச்சிக்கு ஆபத்தானதுமான சட்டம் உலகத்தில் எந்த சட்ட புஸ்தகத்திலுமே இருக்காது என்பது நமது அபிப்பிராயம். இதைப்பற்றி முன்னமே ஒரு தடவை எழுதியுமிருக்கிறோம். மகமது நபிகளை எவனோ ஒருவன் கண்டித்து விட்டான் என்கிற காரணத்திற்காக உலகத்தையே குருடர்களும் செவிடர்களுமாக்க ஒரு சட்டம் கொண்டு வருவது எவ்வளவு கொடுமையானது என்பதை யாரும் யோசிக் காமல் இம்மாதிரியான அவிவேகமான காரியத்தில் இறங்குவது நமக்கு மிகவும் வருத்தமாய் இருக்கிறது. ஒரு யோக்கியனை ஒரு அயோக்கியன் கண்டித்து விட்டதற்காக உலகத்திலுள்ள அயோக்கியர்களை எல்லாம் எந்த யோக்கியனும் கண்டிக்கக் கூடாது என்று சட்டமியற்றுவது பிசாசுகள் அரசாங் கத்தில் கூட நடைபெற முடியாத காரியம் என்பதே...

மகாத்மாவும் காங்கிரசும் 0

மகாத்மாவும் காங்கிரசும்

காங்கிரஸ் ஏற்பட்டது முதல் நாளது வரை பொது மக்களுக்கு எந்த விதமான நன்மையும் ஏற்படவில்லை என்பதையும் பல கெடுதிகள் ஏற்பட்டி ருக்கிறது என்பதையும் மகாத்மா மனதார அறிந்திருந்தும், அக்கெடுதிகளை ஒழிக்க தன்னால் கூடியவரை பாடுபட்டுப் பார்த்தும் முடியவில்லை என்று ஒப்புக்கொண்டும், காங்கிரஸ் பெயரைச் சொல்லிக் கொண்டு ஒரு கூட்டத்தார் பாமர மக்களை ஏமாற்றிப் பிழைக்கிறார்கள் என்பதையும் ஒப்புக் கொண்ட பிறகும், மகாத்மா எல்லோரையும் காங்கிரசில் சேருங்கள் என்பதும் பம்பாய் பார்ப்பனரல்லாதார் மகாநாட்டுக்கு மகாநாட்டார் மகாத்மாவை அழைத்தால் அதற்கு பதிலாக “நல்ல எண்ணத்தோடு எல்லோரும் காங்கிரசில் சேருங்கள்” என்று தந்தி அடிப்பதும் நமக்கு ஆச்சரியமாயிருக்கிறது. மகாத்மா காந்தி போன்றவர்களே காங்கிரஸ் முத்திரை (லேபிள்) இல்லாமல் மகாத்மாவாக இருக்க முடியவில்லை என்றால் மற்றவர்கள் காங்கிரஸ் முத்திரையைப் போட்டுக் கொண்டு வாழ்வதில் நமக்கு அதிசயம் எப்படி தோன்றும். குடி அரசு – செய்தி விளக்கம் – 11.09.1927

சென்னையில் காலராவைத் தடுக்க கார்போரேஷன் கமிஷனர் அவர்கள் திட்டம் 0

சென்னையில் காலராவைத் தடுக்க கார்போரேஷன் கமிஷனர் அவர்கள் திட்டம்

சென்னையில் பரவி வரும் காலரா, வைசூரி முதலிய தொத்து வியாதிகளைத் தடுப்பதற்காக சென்னை நகர சபைக் கமிஷனர் ஸ்ரீமான் ச. வெங்கிட்டநாராயணா அவர்கள் செய்த ஏற்பாடுகளைப் பற்றிய குறிப்பு ஒன்று வரப்பெற்றோம். அதில் வைத்திய இலாகா தலைமை அதிகாரிகள் அபிப்பிராயப்படியே தண்ணீரை சுத்தப்படுத்துவதற்காகவும் வைசூரி, காலரா பரவிய பாகங்களை சுத்தம் செய்வதற்காகவும், ³ வியாதிகளால் பீடிக்கப் பட்டவர்களுக்கு சிகிச்சை செய்வதற்காகவும், வியாதி வராமல் தடுக்கவும் நகர சபைக் கமிஷனர் எடுத்துக் கொண்ட முயற்சியும், அநுசரிக்கும் முறைகளும் மிகவும் பாராட்டத்தக்கவைகளாகவே இருக்கின்றன. நகர சபை அங்கத் தினர்கள் நகரத்தின் nக்ஷமத்தில் உண்மையில் அக்கரையுள்ளவர்களா யிருந்தால் நகர nக்ஷமத்தைக் கருதி கமிஷனர் செய்திருக்கும் ஏற்பாடுகளை ஆதரித்து அவ்வேற்பாடுகள் அமுலில் கிரமமாய் நடைபெறுவதற்கும் உதவியாயிருக்க வேண்டியவர்கள் என்பதே நமது அபிப்பிராயம். ஆனால் நகர சபையில் உள்ள ஜனப்பிரதிநிதிகள் என்பவர்களில் சிலர் நகரத்தின் nக்ஷமங்களில் ஒரு சிறிதும் கவலையில்லாமல் கார்ப்பரேஷன் ஸ்தாபனம் பார்ப்பன அக்கிராரமாகவும், பார்ப்பனர்களுக்கு உணவளிக்கும்...

சுயமரியாதைக்கு லாபம் இல்லை  ஜார்ஜ் ஜோசப்பிற்கு ஏற்பட்ட ஏமாற்றம் 0

சுயமரியாதைக்கு லாபம் இல்லை ஜார்ஜ் ஜோசப்பிற்கு ஏற்பட்ட ஏமாற்றம்

காங்கிரஸ் என்பது ஒரு பெரிய தேசத் துரோகமான சபை என்றும், அது பார்ப்பனர்களும் படித்தவர்களுமான சிலர் தேசத்தைக் காட்டிக் கொடுத்து பிழைப்பதற்காக ஏற்படுத்திக் கொண்ட சபை என்றும், நாட்டில் எத்தனைக் கெத்தனை காங்கிரசுக்கு செல்வாக்கிருக்கிறதோ அத்தனைக்கத்தனை தேசத் துக்கும் குறிப்பாய் பார்ப்பனரல்லாதாருக்கும், ஏழை மக்களுக்கும் துரோகமும் கஷ்டமும் ஆபத்துமே அதிகரிக்குமென்றும், எவ்வளவோ ஆதாரங்களுடன் முழு மூடர்களுக்கும் புரியும்படியாக புள்ளி விபரங்களுடனும் உண்மை சம்பவங்களுடனும் எழுதியும் பேசியும் வந்திருக்கிறோம். இது இன்று நேற் றல்ல என்பதையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். ஆதார மூலமாய் அறிய வேண்டுமென்கிற ஆவலுள்ளவர்களுக்கு ஒரு விஷயத்தை ஞாபக மூட்டு கிறோம். சுமார் நான்கு வருஷங்களுக்கு முன்பாக சென்னை மைலாப்பூர் மந்தைத் தெருவில் நாம் ஒரு பிரசங்கம் செய்ததற்காக சர்க்கார் ராஜ துவேஷத் திற்காகவும், வகுப்புத் துவேஷத்திற்காகவும் நம்மீது நடவடிக்கை எடுத்துக் கொண்டது நேயர்களுக்கு நினைவிருக்கலாம். அந்தப் பிரசங்கத்திலேயே இந்த விஷயமாய் யோசிப்பது ஆதாரத்தில் இருக்கிறது. ஆதாரத்தில் இன்றும் இருக்கிறது. ஆனாலும்...

மதப்புரட்டு 0

மதப்புரட்டு

அரசியலின் பெயரால் அரசியல்காரர்கள் தேசீயக்காரர்கள் என்போர் கள் தங்கள் சுயநலத்திற்கு மக்களை எவ்வளவு தூரம் ஏமாற்றி பாழ்படுத்தி வருகிறார்கள் என்று சொல்லி வந்தேனோ அதைவிடக் கொஞ்சமாவது குறைந்ததல்ல இந்த புரோகிதர்கள் அல்லது பார்ப்பனர்கள் என்கிற ஒரு கூட்டத்தார் மதத்தின் பேரால் நம்மை ஏமாற்றி நமது ஒற்றுமையைக் குலைத்து நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த நமது பொருளையும் கொள்ளை கொண்டு நமது நாட்டையும் சமூகத்தையும் பாழாக்கி நம்மை சுயமரியாதையற்ற மனிதர்களாக நடைப்பிணமாய் வாழும்படி செய்து வருவது. இதன் ரகசியத்தை நாம் கொஞ்சமும் உணராமல் இம்மாதிரியான வஞ்சகச் செயலுக்கும் நாமே உதவியாயும் இருந்து நீடூழி காலம் நம்மையும் நமது பின் சந்ததியையும் நிரந்தர அடிமையாக வேண்டியதான ஆதாரங்களையும் சிருஷ்டித்து வருகிறோம். இதை விளக்குகிறபோது உங்கள் மனம் ஒரு சமயம் பதைத் தாலும் பதைக்கும். தயவு செய்து கொஞ்சம் பொறுமையோடு கவனித்து கேட்ட பிறகு உங்கள் பகுத்தறிவையும் நடுநிலைமையில் இருந்து உபயோகப் படுத்தி பார்ப்பீர்களானால் அதன் உண்மை...

மந்திரி சபை 0

மந்திரி சபை

தற்கால மந்திரி கட்சி அரசியல் ரீதியில் ஒன்றும் பயனுள்ளதாய் இல்லா விட்டாலும் செய்யவும் முடியாது என்பதாகவே வைத்துக் கொண்டாலும், சமூக சம்மந்தமாகவாவது ஏதாவது பிரயோஜனமுண்டா என்பதாக பார்த்தால் அதிலும் பார்ப்பனரல்லாதாருக்கு நமக்கு ஒரு பிரயோஜனமில்லாததோடு எதிர்க்கட்சியார் சொல்லுகிறபடி அதாவது ஸ்ரீமான் சுப்பராயன், சி. இராஜ கோபாலாச்சாரியாரும், எஸ். சீனிவாசய்யங்காரும் சொல்லுகிறபடியும், ஸ்ரீமான் ஏ. ரங்கநாத முதலியார், சர்.சி.பி. இராமசாமி அய்யரும், பெசண்டம் மையும் சொல்லுகிறபடியும், ஸ்ரீமான் ஆரோக்கியசாமி முதலியார், சர்க்காரும் மற்றும் மேற்கண்ட ஆசாமிகளும் சொல்லுகிறபடியும் ஆடுகிறவர்களேயல் லாமல் வேறென்ன? எத்தனைக்கெத்தனை இந்த மந்திரிகளை நிலைக்க வைத்திருக்கிறோமோ அத்தனைக்கத்தனை பார்ப்பன ஆதிக்கத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் நமது பார்ப்பனரல்லாதார் இதுவரை செய்து கொண்டிருந்ததையும் கெடுத்துக்கொள்ளவுமே உதவுமேயல்லாமல் மற்றபடி யாதொரு நன்மையும் உண்டாகாது. இம் மாதிரியாகப் பார்ப்பனர்கள் சொற்படி ஆடும் மந்திரிகளை வைத்துக் கொண்டிருப்பது பார்ப்பனரல்லாத சமூகத் திற்கே பெரிய அவமானமாகும். அதுமாத்திரமல்லாமல் 47 அங்கத்தினரைக் கொண்டதாக உள்ள ஒரு கட்சியானது தேசத்தின் பெயரைச் சொல்லிக்...

செங்கல்பட்டில் கதர்ச் சாலை திறப்பு விழா 0

செங்கல்பட்டில் கதர்ச் சாலை திறப்பு விழா

காங்கிரசின் பெயராலும், சுயராஜ்யமென்னும் பதத்தின் பெயராலும் மக்களை ஏய்த்து பல அக்கிரமங்கள் செய்யப்படுகிறது. சுயராஜ்யமின்ன தென்று மகாத்மா காந்தியும் இன்னும் சொல்லாமல் அதனை அடைவதற்குத் தகுதியாகுங்கள் என்றுதான் சொல்லுகின்றார். மதுரையில் நிறைவேற்றப்பட்ட நிர்மாணத் திட்டங்களை நம் பிராமணரல்லாத மக்கள் கைக்கொண்டு மனப் பூர்வமாகப் பாடுபடுவார்களாயின், சுயராஜ்யம் தானாகவே தேடிக்கொண்டு வந்துவிடும். நாம் சுயராஜ்யமடையக் கருதுவதற்கு முன் சுயமரியாதையை நிலை நிறுத்த வேண்டுவது முதற்கடமை. சுயமரியாதையில்லாத சுயராஜ்யம் வந்தும் பயனில்லை. இச்சுயமரியாதையை அடைவதற்கு பாமர மக்களுக் குள் போதிய பிரசாரம் செய்ய வேண்டும். இதற்கு “ஜஸ்டிஸ்”, “திராவிடன்” பத்திரிகைகளின் உழைப்பு அத்தியாவசியம். அப்பத்திரிகைகளின் வளர்ச்சி பிராமணரல்லாத சமூகத்தின் கதிமோட்சத்திற்கான வளர்ச்சி என்பதை மறக் கக் கூடாது. பிராமணரல்லாத சங்கமென்னும் பெயர் துவேஷம் காரணமெனச் சொல்லப்பட்ட போதிலும் சரி, அதற்குக் காரணமானவர்கள் அவர்கள்தான். அதில் துவேஷமெங்கிருக்கின்றதென விளங்கவில்லை. நமது சுயமரியா தைக்காக நாம்பாடுபட்டால் அதை துவேஷமென்று சொல்லுவதா? கொசுக் கள் கடிக்காமல் கொசுவலை போட்டுக்கொள்வது...

சுவாமிகளும் தேவடியாள்களும்  – சித்திரபுத்திரன் 0

சுவாமிகளும் தேவடியாள்களும் – சித்திரபுத்திரன்

நமது நாட்டில் உள்ள எல்லா கெட்ட காரியங்களுக்கும் “நமது நாட்டு கடவுள்”களே வழிகாட்டிகளாகயிருக்கிறார்கள் . அதாவது சூது வாது, வஞ்சகம், பொய், புரட்டு, திருட்டு, விபசாரம், குடி, கூத்தி, கொலை, ஜீவ இம்சை முதலிய எந்த கெட்ட தொழிலை எடுத்துக் கொண்டாலும் சில கடவுள் களிடத்தில் இவையாவும் மொத்தமாகவும், சில சில கடவுள்களிடத்தில் தனித் தனியாகவும் சில்லரையாகவும் ஏற்படுத்தப்பட்டிருப்பதைப் பார்த்து வரு கிறோம். இதே குணங்கள் நமது கடவுள்களுக்கு இருப்பதாக நாமே தினப்படி யும், மாதப் படியும், வருஷப்படியும் காலnக்ஷப மூலமாகவும், நடிப்பு மூலமாக வும், பூஜை மூலமாகவும், பஜனை மூலமாகவும், திருவிழாக்கள் மூலமாகவும் நடத்திக் காட்டிக் கொண்டும் வருகிறோம். இவைகளுக்காகவே நமது பெரியவர்களும் ஏராளமான சொத்துக்களையும் விட்டு இவைகள் தவறாமல் நடந்து வரச் செய்திருக்கிறார்கள் . தற்கால தர்ம பரிபாலனம் என்பதும் பெரும்பாலும் இக்காரியங்களைப் பரிபாலனம் பண்ணுகிறவைகளாகவே இருக்கின்றன. இந்த நிலையில் ஏற்படுத்திய கடவுளை வணங்கும் மக்களுக்கு ஒழுக்கம் எப்படி...

இன்னமுமா பார்ப்பனப் பத்திரிகைகளை ஆதரிக்கிறீர்கள் 0

இன்னமுமா பார்ப்பனப் பத்திரிகைகளை ஆதரிக்கிறீர்கள்

நமது நாட்டுப் பார்ப்பனர்கள் தங்களது விஷங்களை பெரும்பாலும் பார்ப்பனப் பத்திரிகைகள் மூலமாகவே கக்கி பார்ப்பனரல்லாத மக்கள் அதுகளைப் படிப்பதாலேயே அவ்விஷம் ரத்தத்தில் ஊரிப் போகின்றது. இதை பல தடவைகள் சொல்லியும் எழுதியும் வந்திருக்கிறோம். இப்பொழு தும் நமது பார்ப்பனர்களின் பிழைப்புக்கான சகல ஆயுதங்களும் அதாவது தேசத்தின் பேரால் காங்கிரஸ் சுயராஜ்ஜியம் என்னும் ஆயுதமும் மதத்தின் பேரால் மோக்ஷம் என்னும் ஆயுதமும் ஏறக்குறைய அடியோடு மழுங்கிப் போய் வருகிறதென்றே சொல்லலாம். காங்கிரஸ் சுயராஜ்ஜியம் என்பதன் மூலம் அல்லாது வயிறு வளர்க்க மார்க்கமில்லாத சில வயிற்றுச் சோற்று கூலிகள் தவிர மற்றவர்கள் இதை மதித்திருந்த காலம் மலையேரிப் போய் விட்டது. அது போலவே – மதத்தின் பேரால் அல்லது வாழ முடியாத – வெளி யில் தலைகாட்ட முடியாத – சில பாஷாண்டிகள் தவிர மற்றவர்கள் பார்ப்பனர் மூலம் அடையும் மோட்சத்தை மதிக்கும் காலமும் மலையேறிப் போய் விட்டது. ஆகவே இது சமயம் நமது...

மகாத்மா காந்தியும் பார்ப்பனப் பிரசாரமும் 0

மகாத்மா காந்தியும் பார்ப்பனப் பிரசாரமும்

மகாத்மா காந்தியும் வர்ணாசிரமமும் என்பதாக இரண்டொரு தலையங் கங்கள் எழுதி வந்ததை நேயர்கள் படித்திருப்பார்கள் . இப்பொழுது மகாத்மா காந்தியும் பார்ப்பனீய பிரசாரமும் என்பது பற்றி எழுத நேர்ந்ததற்கு மிகவும் வருத்தப்படுகிறோமாகினும் எழுதாமலிருப்பதற்கு முடியவில்லை. இதற்கு முன் எழுதிய தலையங்கத்தில் நாம் கண்டிக்க நேர்ந்த விஷயமானது மகாத்மா அவர்கள் வர்ணாசிரம தர்மம் என்கிற ஜாதிப் பிளவுகள் உண்டு என்றும், அதுவும் மக்களுக்கு பிறவியிலேயே உண்டு என்றும் அவனவன் பிறவி ஜாதிக் கேற்ற தர்மத்தையே (தொழிலையே) செய்து தீர வேண்டுமென்றும் அந்தப்படி செய்யாமல் தவறுவானேயானால் அவன் தாழ்ந்த ஜாதியான் ஆகிவிடுவான் என்றும் மகாத்மா சொல்லியும் எழுதியும் வந்த விஷயத் தைத்தான் நாம் தமிழ் நாட்டின் நிலைமையையும், நாகரீகத்தையும், தமிழ் மக்களின் முன்னேற்றத்தையும், அவர்களது உரிமையையும் சுயமரியாதை யையும் உத்தேசித்து கண்டிக்க நேர்ந்தது. இப்பொழுது “குதிரை கீழே தள்ளினதல்லாமல் புதைக்குழியும் தோண்டிற்று” என்கிற பழமொழிபோல் பழய புராணப் பிரசாரம் என்கிற பார்ப்பனப் பிரசாரம் செய்ய...

புதுக்கோட்டை முஸ்லீம் மகாநாடு 0

புதுக்கோட்டை முஸ்லீம் மகாநாடு

சமஸ்தான முஸ்லீம் பிரஜைகளின் முதலாவது மகாநாட்டில் சைபுல் இஸ்லாம் பத்திரிகை ஆசிரியரான மௌலானா மௌலி அஹமது சயிது சாஹிப் அவர்கள் 15. 2. 27 ல் அக்கிராசனம் வகித்து நிகழ்த்திய அக்கிராசனப் பிரசங்கம் மிகவும் நீண்டதாகையால் நமது பத்திரிகையில் முழுதும் பிரசுரிக்க முடியாததற்கு மிக வருந்துகிறோம். நாமறிந்த வரையில் மௌலானா அவர் கள் நமது நாட்டுப் பெரும்பான்மையான அரசியல்வாதிகளைப் போல் கீர்த்திக்கும், பெருமைக்கும், சுயநலத்திற்கும், குடும்ப வாழ்க்கைக்கும் ஆசை பட்டுக் கொண்டு தனது கொள்கைகளை மாற்றிக்கொண்டும், உள்ளொன்றும் புறமொன்றும் ஆகப் பேசியும், எழுதியும் காலங் கழிப்பவரல்ல. சரியோ, தப்போ தனது மனதிற்குட்பட்டதை ஒளிக்காமல் சொல்லும் சுபாவம் கொண்ட வர். அவர் தனது அக்கிராசன பிரசங்கத்தில் கூறியிருக்கும் ஒற்றுமை, கதர் முதலிய சில முக்கிய விஷயங்களை மாத்திரம் பின்னால் குறிப்பிடுவோம். குடி அரசு – துணைத் தலையங்கம் – 20.02.1927

கோயமுத்தூர்                                        தொழிலாளர் வேலை நிறுத்தம் 0

கோயமுத்தூர் தொழிலாளர் வேலை நிறுத்தம்

கோயமுத்தூரில் நூலாலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் ஏற்பட்டதைப் பற்றி நாம் மிகவும் மன வருத்தமடைகிறோம். தொழிலாளர்கள் பால் நமக்குண்டான அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்ளுகிறோம். நிற்க, இம்மாதிரியான ஒரு சம்பவம் ஏற்பட்டதானது பார்ப்பனரல்லாத ஏழை மக்களி னது துரதிஷ்டவசமென்றே சொல்ல வேண்டியிருக்கிறது. தொழிலாள சகோதரர்கள் தங்களை ஒழுங்காய் நடத்தித் தரத்தக்க ஒரு தலைவரை தங்க ளுக்குள் அடைய யோக்கியதையற்ற காரணத்தினாலேயே இம்மாதிரியான துரதிர்ஷ்ட்ட வசமான சம்பவம் ஏற்பட நேரிட்டதென்பதே நமதபிப்பிராயம். அல்லாமலும் கோவை தொழிலாளர்களின் தலைவரான ஸ்ரீமான் என்.எஸ். ராமசாமி அய்யங்காரவர்கள் தொழிலாளர்களுக்குத் தலைவராயிருந்து நடத்த எந்த விதத்தில் உரிமையுடையவர் அல்லது யோக்கியதை உடையவர் என்பது நமக்கு விளங்கவில்லை. தொழிலாளரைத் தவிர மற்ற யாரும் தொழிலாள ருக்குத் தலைவராயிருக்கக் கூடாதென்று அநேகத் தடவைகளில் நாம் எழுதியும் தொழிலாளர் கூட்டங்களில் பேசியும் வந்திருப்பது நேயர்க ளுக்கு ஞாபகமிருக்கலாம். அல்லாமலும் இம்மாதிரி வேலை நிறுத்தம் செய்வதைப் பற்றியும் நாம் பலமாகக் கண்டித்து எழுதியும் பேசியும் வந்தி...

ஜஸ்டிஸ் திருநாள் 0

ஜஸ்டிஸ் திருநாள்

பிப்ரவரி 26 தேதி சனிக்கிழமையை ஜஸ்டிஸ் 10 வது வருஷ நாளாகக் கொண்டாடும்படி தலைவர் பணகால் ராஜா அவர்கள் பார்ப்பன ரல்லாத மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதற்காக ஒவ் வொரு ஊரிலும் உள்ள பார்ப்பனரல்லாத மக்கள் அந் நாளைக் கொண்டாட வேண்டியவிதம் என்னவென்றால் ஜஸ்டிஸ், திராவிடன், குடி அரசு பத்திரி கைகளுக்கு சந்தாதாரர்களை சேர்ப்பது தான். வாலிபர்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாய் அன்றைய தினம் ஏதாவது ஒரு புது சந்தாதாரரையாவது சேர்த்து விட்டுத்தான் சாப்பிடுவதாக விரதமெடுத்துக் கொள்ள வேண்டும். ஜஸ்டிஸ் பத்திரிகையில் ராய்ட்டர் அசோசியேட் பிரஸ், பிரீ பிரஸ் ஆகிய தந்தி நிரூபங் கள் மாதம் 1-க்கு 1000 ரூபாய்க்கு மேற்பட்ட சிலவில் வாங்கி சென்ற மாதம் முதல் பிரசுரம் செய்யப்பட்டு வருகிறது. திராவிடனுக்கும் அசோசியேட் பிரஸ் நிரூபங்கள் வாங்கி பிரசுரம் செய்யப்பட்டு வருகிறது. ஆகவே, பிப்ரவரி µ 26- தேதியை இவற்றிற்கு சந்தா சேர்க்கும் தினமாக கொண்டாட வேணுமாய் பார்ப்பனரல்லாத...

சுசீந்திரம் சத்தியாக்கிரகம் 0

சுசீந்திரம் சத்தியாக்கிரகம்

திருவாங்கூர் சமஸ்தானத்தில் பொது ஜனங்கள் அதாவது ஈழவர் முதலானவர்களை சில பொதுத் தெருக்களில் நடக்க விடாமல் கொடுமைப் படுத்தி வந்ததின் காரணமாக வைக்கத்தில் சத்தியாக்கிரகம் செய்ததும், அது ஒருவாறு அனுகூலமாய் முடிவடைந்ததும் நேயர்களுக்கு ஞாபகமிருக்கலாம். அதன் பிறகும் அதே ராஜ்ஜியத்தில் மற்றும் பல பொதுத் தெருக்களில் நடக்க உரிமை கொடுக்காமல் ஜனங்களை உபத்திரவப் படுத்துவதும், சிற்சில இடங்களை அந்த சர்க்கார் அனுமதித்து வருவதும் நேயர்கள் அறிந்திருக் கலாம். ஆனால் நாகர்கோவிலுக்கு அடுத்த சுசீந்திரம் என்னும் ஒரு ஊரிலும் இதே மாதிரி ஈழவர் முதலான ஜனங்களை நடக்க விடாமல் கொடுமைப் படுத்தி வந்ததை உத்தேசித்து அதில் சத்தியாக்கிரகம் சென்ற ´ ஆரம்பிக் கப்பட்டது. ஆனால் அதிகாரிகளும் சில அதிகாரிகளுக்கு நல்ல பிள்ளை ஆக வேண்டு மென்று நினைத்தவர்களும், அந்த சத்தியாக்கிரகம் நடத்தின தலைவர்களை ஏமாற்றி, சீக்கிரத்தில் யெல்லோருக்கும் வழி திறந்து விடப் படும் என்றும், சத்தியாக்கிரகத்தை நிறுத்திவிடும்படியும் சொல்லி வஞ்சித்து சத்தியாக்கிரகத்தை திடீரென்று...

சமூக முன்னேற்றம் 0

சமூக முன்னேற்றம்

x அரசியலின் பேரால் தொண்டு செய்து வந்த ஒருவன் அரசியலை வெறுத்து அதன் பேரில் குற்றம் சொல்லிக் கொண்டு சமூக முன்னேற்றமே பிரதானமானது என்பதாக இன்று உங்கள் முன் பேச வேண்டிய காரணம் என்ன என்பதைப் பற்றியும், மத சம்பந்தமாக தற்காலம் உள்ள விஷயங் களையும் ஏன் குற்றம் சொல்லுகிறேன் என்கிற விஷயத்தைப் பற்றியும், சமூக முன்னேற்றத்திற்கு உழைப்பதை அரசியலிலும் மத இயலிலும் உழைப்பது என்று ஏன் சொல்லுகிறேன் என்பதைப் பற்றியும் நீங்கள் பொறுமையோடு கவனிக்க வேண்டும். அரசியல் என்பதும் மத இயல் என்பதும் ஒரு சமூகத் தின் முன்னேற்றத்துக்கு ஏற்பட்டதே தவிர அரசியலுக்கும் மதத்துக்குமாக சமூகம் ஏற்பட்டதல்ல. ஆகவே அரசியல் என்பதும், மதம் என்பதும் சமூக முன்னேற்றத்திற்கு அனுகூலமாயிருப்பதாயிருந்தால் மாத்திரம் அவற்றில் ஈடுபட்டு ஒரு மனிதன் உழைக்க வேண்டுமேயல்லாமல் மனிதனுக்கு ஒரு வேலை வேண்டுமே என்கிற காரணத்திற்காக வீணானதும், சமூகத்திற்கும் நாட்டிற்கும் கேடு சூழ்வதுமான காரியங்களைக் கட்டிக் கொண்டு அழுது...

டெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும்   – சித்திரபுத்திரன் 0

டெல்லி கிருஷ்ணனும் தமிழ்நாட்டு கிருஷ்ணனும் – சித்திரபுத்திரன்

டெல்லியில் உள்ள பாலகிருஷ்ண சுவாமி கோவிலில் கிருஷ்ண ஜயந்தி என்கிற பண்டிகையின் போது தீண்டாதவர்கள் என்கிறவர்களை எல்லாம் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தமிழ்நாடு பத்திரிகை யில் காணப்படுகிறது. புராணங்களின்படி கிருஷ்ணன் என்பதாக ஒரு சுவாமி யோ ஆசாமியோ இருந்ததாக நாம் ஒப்புக்கொள்வதானால் அது ஒரே சாமி யாகத் தான் இருந்திருக்கலாமே தவிர, டெல்லிக்கு ஒரு கிருஷ்ணனும் தமிழ்நாட்டுக்கு ஒரு கிருஷ்ணனும் இருந்திருக்க முடியாது. அப்படியிருக்க டெல்லி கிருஷ்ணன் “தீண்டாதவர்கள்” கோவிலுக்குள் போனால் ஒடிப் போகாமல் கோவிலுக்குள்ளாகவே தைரியமாய் உயிருடன் இருக்கும்போது, நமது தமிழ்நாட்டு கோவில்களில் உள்ள கிருஷ்ணன் மாத்திரம் தீண்டாத வர்கள் உள்ளே போனால் கோவிலை விட்டு ஓடிப் போவதோ அல்லது ஒரே அடியாய் செத்துப் போவதோ ஆனால் இந்த மாதிரி கிருஷ்ணனை வைத்து பூஜை செய்வதால் நமக்கு என்ன பலன் அவரால் உண்டாகக் கூடும். ஒரு மனிதன் உள்ளே வந்தால் தாக்குப் பிடிக்காத கிருஷ்ணன் யாருக்கு என்ன செய்யமுடியும். ஆதலால் நாம்...

‘ஏல விவசாயி’ 0

‘ஏல விவசாயி’

‘ஏல விவசாயி’ என்னும் பெயர் பெற்ற ஒரு தமிழ் மாதாந்த சஞ்சிகை எமது பார்வைக்கு வந்தது. இது எழுபது எண்பதாயிரம் ஏக்கர் ஏல விவசாய பூமிகளில் சுமார் 40 லட்சம், 50 லட்சம் ரூபாய் பெறுமான மகசூல்களை உண்டாக்கும் 2 ஆயிரத்துக்கதிகமான ஏல விவசாயிகளை அங்கத்தினராகக் கொண்ட திருவாங்கூர் ஏல விவசாய சங்கத்தினின்றும் வெளியிடப்பட்டு வருவது பல துறைகளிலும் ஆராய்ச்சியுள்ள திரு.ஆர். நாராயணசாமி அவர் களை ஆசிரியராகக் கொண்டது. விவசாயமே எல்லாத் தொழில்களிலும் சிறந்ததாயிருந்தும் நம் நாடு விவசாயத்தையே ஆதாரமாகக் கொண்டிருந்தும் விவசாய வளர்ச்சிக்குரிய புதுவிதமான கருவிகளைக் குறித்தும் புது முறைகளைப் பற்றியும் ஐக்ய இயக்கம், கூட்டுறவு இயக்கம், விவசாய சங்கம் ஆகியவைகளைப் பற்றியும் விவசாயப் பொருள்களைச் சேகரம் செய்து செலவழிக்கும் முறைகளைக் குறித்தும் நமது நாட்டில் தாய்ப் பாஷையில் உலவும் பத்திரிகைகள் மிகச் சிலவே. ஆகவே இவ்விஷயங்களைக் குறித்தும் மிளகு, இஞ்சி, லவங்கம், எலுமிச்சை, ஆரஞ்சு, காபி, சணல் ஆகியவைகளைக்...

இது சத்தியாக்கிரகமாகுமா? 0

இது சத்தியாக்கிரகமாகுமா?

சென்ற வாரம் சென்னை மவுண்ட் ரோட்டில் உள்ள நீல் துரை உருவச் சிலையை இரண்டு தொண்டர்கள் உடைத்ததற்காக அவர்கள் ஒவ்வொரு வருக்கும் மூன்று மூன்று மாதம் கடுங்காவலும், முன்னூறு ரூபாய் அபராத மும், அது செலுத்தப்படாவிட்டால், மேல்கொண்டு 3 µ, தண்டனையும் அனுபவிக்கத்தக்கது என்பதாக தண்டிக்கப் பெற்றிருக்கிறார்கள். ஒரு சிலையின் கையை ஒடிப்பது சத்தியாக்கிரகமாகுமா? தொண்டர்களின் மன உறுதியையும் அவர்களது தேசாபிமான வெறியையும் மெச்சிக் கொள்வதா னாலும் இச்செய்கைக்கு சத்தியாக்கிரகம் என்ற பெயர் ஒரு சிறிதும் பொருந் தாது என்பதே நமது அபிப்பிராயம். அக்கிரமத்தை ஒழிக்க எவ்வித கஷ்டத்தையும், அனுபவிக்கத் தயாரா யிருக்கும் இம்மாதிரி ஊக்கமுள்ள தொண்டர்களை தலைவர்கள் என்ப வர்கள் சரியான வழியில்நடத்தி பயன் உண்டாகும்படியாக உபயோகப்படுத் திக் கொள்ள வேண்டுமேயல்லாது இம்மாதிரி ஒழுங்கல்லாத காரியங்களைச் செய்வதற்கு உதவியாயிருக்கக் கூடாதென்பதே நமது அபிப்பிராயம். ஒரு சிலையின் கையை உடைப்பது துர்ராக்கிரகமென்பதே நமது அபிப்பிராயம். சிலையை எடுக்கும்படி போராடலாம். அதற்காக சத்தியாக்...

“திராவிடன்”                                         வேண்டுமா?                      வேண்டாமா? 0

“திராவிடன்” வேண்டுமா? வேண்டாமா?

சகோதரர்களே! பார்ப்பன ஆட்சியாலும், பார்ப்பன சூழ்ச்சியாலும், பார்ப்பன மதத் தாலும், பார்ப்பன பத்திரிகை பிரசாரத்தாலும் நீங்கள் இழந்து கிடக்கும் சுய மரியாதையும், சுதந்திரத்தையும், ஒற்றுமையையும் திரும்பவும் அடைய வேண்டுமா? வேண்டாமா? வேண்டுமானால் அதற்கென்றே உங்கள் தொண்டர்களால், பலவித கஷ்ட நஷ்டங்களுக்கும் பழிகளுக்கும் ஆளாகி நடத்தப்பட்டு வரும் ‘திராவிடனை’ வாங்கிப் படியுங்கள். ‘திராவிடன்’ தான் போலி தேசீயத்தையும் சுயராஜ்யப் புரட்டையும் தைரியமாய் வெளியாக்கி சுயமரியாதைக்கென்றே உழைப்பவன். எனவே, ‘திராவிடன’ன்றிக் கண்டிப்பாய் உங்களுக்கு கதி மோட்சமில்லை; இதை நம்புங்கள். குடி அரசு – அறிவிப்பு – 28.08.1927

மகாத்மா காந்தியும் வருணாசிரமும்                   II 0

மகாத்மா காந்தியும் வருணாசிரமும் II

“மகாத்மா காந்தியும் வருணாசிரமமும்” என்னும் விஷயமாய் இரண்டு வாரங்களுக்கு முன் “குடி அரசி”ல் மகாத்மாவின் வருணாசிரம அபிப்பி ராயத்தை கண்டித்தெழுதியது நேயர்கள் பார்த்திருக்கக்கூடும். அதன் பிறகு பலர் பல பல விதமாக நமக்கு கடிதம் மூலமாய், மகாத்மாவை தாக்குவது தர்ம மல்லவென்றும், அபிப்பிராய பேதத்தை மகாத்மாவிடம் நேரில் தெரிந்து கொள்ளலாம் என்றும், நேரில் சொன்னால் நமது அபிப்பிராயத்தை மகாத்மா ஒப்புக் கொள்வார்கள் என்றும், எப்படி இருந்தாலும் மகாத்மாவைப் பற்றி ஒரு வார்த்தையாவது வித்தியாசமாய் எழுதினால் நமது செல்வாக்கே அடியோடு போய்விடும் என்றும், நமது பத்திரிகை ஆகிய “குடி அரசு” கூட ஜனங்களால் மதிக்கப்படாது போய் விடுமென்றும், மகாத்மா பார்ப்பனரல்லாதார் ஆதலால் அவர் பேரில் குற்றம் சொல்லக்கூடாது என்றும் இப்படியாக பல பேர் பல விதத்தில் கடித மூலமாயும் நேரிலும் நமக்கு தெரிவிக்கிறார்கள். மற்றும் சிலர், பல பத்திரிகைகளிலும் ஜாடை ஜாடையாய் நமது அபிப்பிராயத்தை கண்டித்தும், மகாத்மாவை ஆதரித்தும் எழுதி வருகிறார் கள்....

திருவண்ணாமலை தாலூகா தென்னிந்திய நலவுரிமைச் சங்கத் திறப்புவிழா 0

திருவண்ணாமலை தாலூகா தென்னிந்திய நலவுரிமைச் சங்கத் திறப்புவிழா

காங்கிரசால் நேர்ந்த கஷ்டங்கள்சுயமரியாதை வாழ்வே சுதந்தர வாழ்வு சகோதரர்களே! சகோதரிகளே! நீங்கள் இன்று மாலை சில மணி நேரங்களாக இங்கு நடத்தப்பட்ட சொற்பொழிவுகளை அமைதியுடன் கேட்டிருந்தீர்கள். எனக்கு இரண்டொரு தினங்களாக தேக அசௌக்கியமாயிருக்கின்றது. ஆதலால் உங்களை நெடு நேரம் காக்க வைக்காமல் நான் சொல்ல வேண்டியவைகளைச் சுருக்கமாக விளக்கி விட உத்தேசித்திருக்கிறேன். இன்று கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நீங்களே நன்கறிவீர்கள். பின்னும் இத்தகைய சங்கங்களால் ஏற்படும் நற்பலன்களைக் குறித்து அறிவாளிகள் பலரும் நன்கெடுத்துப் பேசி னார்கள். ஆதலால் இன்னும் நான் புதிதாகச் சொல்ல வேண்டியது ஒன்று மில்லை. எனினும் நான் ஒரு விஷயத்தை மட்டும் சொல்லிவிட்டு கூட்ட நடவடிக்கைகளை முடித்துவிடுகிறேன். இதுகாறும் பேசியவர்கள் நம்மை பிராமணர்கள் மத சம்மந்தமான விஷயங்களிலும் அரசியலிலும் சமுதாயத் துறையிலும் ஏமாற்றி வருவதை அனுபவமாக எடுத்து நன்கு விளக்கினார்கள். அவர்கள் எடுத்துக் காட்டிய விஷயங்கள் குறித்து பலருக்கு பலவிதமான அபிப்பிராயங்கள் தோன்றலாம். சிலர் அவற்றை பிராமண துவேஷம்...

பொது வாசக சாலைகளில் பார்ப்பன ஆதிக்கம் 0

பொது வாசக சாலைகளில் பார்ப்பன ஆதிக்கம்

எல்லா மக்களின் பொது நலத்திற்கென்று ஏறக்குறைய ஒவ்வொரு முக்கிய பட்டணங்களிலும் வாசக சாலைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. அவைகள் பெரும்பாலும் பார்ப்பனரல்லாதார் பணத்தைக் கொண்டே நடப்பதாயிருந்தாலும் பார்ப்பன ஆதிக்கமே அதில் தலைசிறந்து விளங்கும். சிற்சில வாசக சாலைகளில் பார்ப்பனரல்லாதவர்களே காரியதரிசிகளாகக்கூட இருக்கலாம். ஆனாலும், அவ்வூர் முனிசீப்போ, டிப்டி கலெக்டரோ, மேஜிஸ் திரேட்டோ, சர்க்கிள் இன்ஸ்பெக்டரோ, ரிவினியூž இன்ஸ்பெக்டரோ பார்ப்ப னர்களாயிருந்து விட்டால் இந்தப் பார்ப்பனரல்லாத வக்கீல்களோ, பெரிய மனிதர்களோ அப்பார்ப்பன உத்தியோக மெம்பர்களுக்கு அடிமையாயிருப் பதுடன் அப்பார்ப்பன மெம்பர்கள் செய்யும் பார்ப்பனீயப் பிரசாரத்திற்கு செகரட்ரி என்கிற பெயரால் கையாட்களாகவும் இருந்து வருகிறார்கள். நமது நாட்டில் உள்ள ஒவ்வொரு வாசக சாலையிலும் “சுதேசமித்திரன்”, “இந்து” முதலிய பார்ப்பனீயப் பிரசார பார்ப்பனப் பத்திரிகைகள் வந்து கொண்டிருக் கும். “இந்து”, “சுதேசமித்திரன்” இல்லாத ரீடிங்குரூம் ஒரு ரீடிங்கு ரூமாகுமா என்று சொல்லிவிடுவார்கள். தங்கள் ரீடிங்கு ரூமுக்கு மெயில் பத்திரிகை வருகிறது என்று பெருமையும் பேசிக் கொள்வார்கள். ஆனால், “திராவிடன்”,...

தற்கால நிலை    அரசியலும் சமூகஇயலும் 0

தற்கால நிலை அரசியலும் சமூகஇயலும்

கனவான்களே! அரசியலும், சமூக இயலும் என்பது பற்றி எனது அபிப்பிராயங்களை பத்திரிகை மூலம் தெரிந்திருப்பீர்கள். அதாவது, அரசியல்வேறு சமூக இயல் வேறு என்பதாக இரண்டுமே தனித்தனி இயல்கள் கிடையாது. இவ்விரண்டும் வேறு வேறாகத் தனிப்படுத்தக்கூடிய விஷயமல்ல. அரசியல் என்றாலும் சமூக இயல் என்றாலும் இரண்டும் ஒரு நாட்டின் ஒரு சமூகத்தின் முன்னேற் றத்திற்குத்தானே யல்லாமல் வேறு காரியத்திற்கல்ல. எனவே ஒரு நாட்டின் சமூகத்தின் முன்னேற்றத்திற்கு என்று வைத்துக்கொண்டு அரசியல் என்றால் அதில் சமூக முன்னேற்றம் இல்லாமலிருக்க முடியாது. அது போலவே சமூக இயல் என்றாலும் அரசியல் முன்னேற்றம் அதில் இல்லாமலிருக்க முடியாது. இரண்டும் தனித்தனி பிரிக்கப்படாத தன்மை யுடையது. நமது நாட்டில் இப்போது இவ்விரண்டும் வேறு வேறாக காணப்படுவதின் காரணம் உண்மை யான அரசியல் தொண்டும் உண்மையான சமூக இயல் தொண்டும் இல்லாமல் வெறும் வேஷத்தில் பாமர மக்களை ஏய்த்து, சிலர் தங்கள் சுயநலத்தை வளர்க்கவும் பாடுபடுவதினால், அதாவது நம் நாட்டு...

பார்ப்பனர் அக்கிரமம் 0

பார்ப்பனர் அக்கிரமம்

பார்ப்பனர்கள் உத்தியோகத்திலும் சட்ட சபைகளிலும், ஸ்தல ஸ்தாபனங்களிலும், பெரிய ஜமீன்களிலும், குடித்தனங்களிலும், இந்திய அரசாங்கங்களிலும் போய் அமர்ந்து கொண்டு இருப்பதின் முக்கிய நோக்கங் கள் இன்னவை என்பது நமது மக்களுக்கு சரிவர விளங்குவதேயில்லை. ஏதோ அவர்கள் படித்தார்கள். அதனால் உத்தியோகம் பார்க்கிறார்கள். யார் உத்தியோகம் பார்த்தால் தான் என்ன, யார் சட்டசபைக்கு போனால் தான் என்ன, யார் கவுன்சிலர் ஆனால் தான் என்ன என்பதாக தர்ம நியாயம் பேசி விட்டு பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளைகளாக வாழ்ந்தால் போதும் என்று நினைத்து விடுகிறார்கள். இந்த ஏமாளித்தனத்தைப் பார்த்தே பார்ப்பனர் களும் நம்மவர்களை சுலபமாய் ஏமாற்றி பதவி பெற்று நம்மையே அழிக்கப் பாடுபடுகின்றார்கள். எந்தப் பதவியில் பார்ப்பனர் இருந்தாலும் அதன் மூலம் நமது கழுத்தை அறுக்க அதை உபயோகப்படுத்திக் கொள்ளுகிறார்கள் என்பதை நமது ஜனங்கள் உணர்வதே இல்லை. அல்லாமலும் நம்மில் அநேகர் கொஞ்சமாவது சகோதர அபிமானமின்றி மானம் வெட்கம் எல்லா வற்றையும் துறந்து பார்ப்பனர்களுக்கு...

கோவில்களின் பேரால் பார்ப்பனீயத் தொல்லை 0

கோவில்களின் பேரால் பார்ப்பனீயத் தொல்லை

நமது நாட்டில் இருக்கும் பார்ப்பனர்கள் அரசியலின் பெயராலும், மதத்தின் பெயராலும், மதச் சடங்கின் பெயராலும் நமக்கு இழைத்து வரும் கேடுகளுக்கும் தொல்லைகளுக்கும் அளவேயில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வினாடியும் இக்கொடுமைகளிற் சிக்கி சீரழிந்து சுயமரியாதை, மானம், வெட்கமற்று அல்லற்படுகிறோம். இவைகளில் இருந்து வெளியேற நாம் பிரயத்தனப்படுமிக்காலத்திலேயே மேலும் மேலும் நமக்கு இழிவை உண்டாக்கித் தொல்லைப் படுத்துகிறார்களென்றால் மற்றபடி நாம் சும்மா இருந்தோமேயானால் நமது கதி என்னவாகும்? “அன்ன நடைக்கு ஆசைப்பட, உள்ள நடையும் போயிற்று” என்பதுபோல் கோவில்களில் நமக்கென்று தனி இடமும், பார்ப்பனர்களுக்கென்று தனி இடமும் கூடாது என்று நாம் சொல்ல ஆரம்பித்த பிறகு கோவிலுக்குள் நீ வரவே கூடாது என்று சொல்லவும், கோவிலை மூடிக் கதவைத் தாழ்போட்டுக்கொள்ளவும் ஆரம்பித்து விட்டார்கள். தெலுங்கில் ஒரு பழமொழி உண்டு. “காலானிக்கு வேஸ்தே மூலானிக்கி வஸ்த்துடு” என்பார்கள். அதன் அர்த்தம் 10-க்கு அடிபோட்டால் 5-க்கு வருவான் என்பது. அதுபோல் கோவிலுக்குள் வர வேண்டாம் என்பதாகவே...

திருப்பூர்  மகாநாடு 0

திருப்பூர் மகாநாடு

திருப்பூரில் மகாநாடு கூடிக்கலைந்தாகி விட்டது. தீர்மானங்கள் கவர்னருக்கு அனுப்பியாய் விட்டது. மற்ற விஷயங்கள் எப்படிப் போனாலும் இதனால் கவர்னர் தயவு இரண்டொரு ஆசாமிகளுக்கு கிடைத்தாய் விட்டது. அதன் மூலம் சிலருக்கு உத்தியோகமும் சிலருக்குப் பட்டமும் வந்துவிடப் போகிறது. இதைப் பொறுத்தவரையில் உறுதி தான். மற்றபடி உபசரணைத் தலைவர் மகாநாட்டுத் தலைவர் பிரசங்கங்கள் ஸ்ரீமான் முத்துரங்க முதலியார், ஓ.கந்தசாமிசெட்டியார் முதலிய கனவான் களின் பிரசங்கங்களைப்போல் என்றே சொல்லவேண்டும். பெரும்பாலும் சர்க்காரையும் மந்திரிகளையும் புகழ்ந்து பார்ப்பனரல்லாதார் கட்சியை ஆசை தீர எழுதிக்கொடுத்தபடி வைததுதான் முக்கிய அம்சமாகும். மகாநாட்டுத் தலைவர் ஸ்ரீமான் சர். முத்தைய்ய செட்டியாரைப் பற்றி நாம் விசேஷமாக சொல்ல வேண்டியதில்லை. அவரது கொள்கையைப் பற்றியும் சொல்ல வேண்டியதில்லை. சுருக்கமாக சொல்வதானால் பச்சயப்ப முதலியார் தர்ம ஸ்தாபன தர்மகர்த்தாக்களில் இவர் ஒருவராயிருப்பதில் அப் பள்ளிக்கூடத்திற்கு ஒடுக்கப்பட்ட வகுப்புப் பிள்ளைகளை சேர்த்துக் கொள்ளக்கூடாது என்று கட்சி கட்டிக் கொண்டிருப்பவர். ஆனால் ஒடுக்கப் பட்டவர்கள் உபாத்தியாயர்களாக இருப்பதில்...

வருணாச்சிரம தர்மம் 0

வருணாச்சிரம தர்மம்

நமது பார்ப்பனர்கள் தங்களை உயர்த்திக் கொள்ளுவதற்காக வேண்டிச் செய்த சூழ்ச்சியில் “வருணாச்சிரம தருமம்”என்பதாக ஒரு பிரிவை உண்டு பண்ணி மக்களுக்கும் பிறவியிலேயே உயர்வு தாழ்வைக் கற்பித்துத் தாங்கள் கடவுள் முகத்திற் பிறந்தவர்கள் என்றும் உயர்ந்தவர்கள் என்றும், தங்களுக்கடுத்தவர்கள் சிலர் கடவுளின் தோளிற் பிறந்தவர்கள் க்ஷத்திரியர்களென்றும் மற்றும் சிலர் கடவுளின் தொடையிற் பிறந்தவர் வைசியர்களென்றும், ஆனால் கலியுகத்தில் க்ஷத்திரியரும் வைசியரும் இல்லை என்றும் தங்களைத் தவிர மீதியுள்ளவர்களெல்லாம் கடவுளின் பாதத்தில் பிறந்தவர்கள் `சூத்திரர்கள்’ என்றும், அச்சூத்திரர்கள் தங்களது வைப்பாட்டி மக்கள், தங்களது அடிமைகள், தங்களுக்குத் தொண்டு செய்வ தற்கென்றே கடவுளால் பிறப்பிக்கப்பட்டவர்கள் என்றும் சொல்லுவதோடு இந்த சூத்திரர்களுக்கு எந்தவித சுதந்திரமுமில்லை என்றும், அவர்கள் சொத்து, சுகம் வைத்துக்கொள்ளுவதற்குக் கூட பாத்தியதையில்லாதவர்க ளென்றும், அப்படி மீறி வைத்திருந்தால் அவர்களிடமிருந்து பிராமணர்கள் பலாத்காரத்தினால் பிடுங்கிக் கொள்ளலாமென்றும் இன்னும் நினைப்பதற்கே சகிக்க முடியாததான அநேக இழிவுகளை யெல்லாம் கற்பித்து இவைகளுக் காதாரம் வேதத்திலேயே இருக்கிறதென்றும், வேதம் கடவுளால்...

பயப்படுகிறோம்               மகாத்மா காந்தியின் தமிழ்நாட்டு விஜயம் 0

பயப்படுகிறோம் மகாத்மா காந்தியின் தமிழ்நாட்டு விஜயம்

இது ஒரு சங்கராச்சாரி விஜயமாகிவிடும் என்பதாகவே பயப் படுகிறோம். மகாத்மா காந்தியவர்கள் உலகம் போற்றும் பெரியார் என்பதிலும், பரிசுத்தமான எண்ணமுடையவர் என்பதிலும், மக்களுக்கு நன்மை செய்வ தில் உண்மையான ஆசை உள்ளவர் என்பதிலும், அதே கருத்துக்கொண்டு உழைக்கிறார் என்பதிலும் யாருக்கும் எவ்வித அபிப்பிராய பேதமுமிருக்க நியாயமில்லை. ஆனபோதிலும் அதோடுகூடவே மகாத்மா காந்தியவர்கள் நம் நாட்டுப் பார்ப்பனர்கள் கையில் சிக்கி இருப்பவர் என்பதையும், நம் நாட்டு விஷயங்களைப் பார்ப்பனர்கள் மூலம் அறிந்து பார்ப்பனக் கண்ணாடியினால் தான் பார்த்தறியக் கூடிய நிலைமையில் இருக்கிறார் என்பதையும், நாம் மறைப்பதில் பிரயோஜனமில்லை. சாதாரணமாக இந்துமுஸ்லீம் அபிப்பிராய பேதங்கள் விஷயமாக மகாத்மா காந்தியவர்கள் எவ்வளவு பேசினார், எவ் வளவு எழுதினார், எவ்வளவு பட்டினி கிடந்தார், எவ்வளவு வருத்தப்பட்டார் என்பதைப் பற்றி வாசகர்களுக்கு நாம் எடுத்துக்காட்டவேண்டியதே இல்லை. அப்பேர்ப்பட்ட மகாத்மா பிராமணர் பிராமணரல்லாதார் அபிப்பிராய பேதம் என்பதைப்பற்றி நாளிதுவரை என்ன பேசினார், என்ன எழுதினார், என்ன பட்டினி இருந்தார், என்ன...

மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் 0

மகாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

பின்னர் கீழ்க்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன:- 1. பொங்கல் உண்டி வசூலில் இருந்து ரூபாய் நூறு தியாகராயர் ஞாபக நிதிக்களித்து மிகுதியை இச்சங்க உபயோகத்திற்கு வைத்துக் கொள்ளும்படி அனுமதி கொடுக்க வேணுமாய்த் தீர்மானிக்கப்படுகிறது. 2. இச்சங்கம் மதுரைப் பார்ப்பனரல்லாதார் மகாநாட்டில் நிறைவேறிய எல்லாத் தீர்மானங்களையும் மனமுவந்து ஒப்புக் கொள்வதுடன் அவற்றை அனுபவத்தில் நடைபெறச் செய்வதற்குக் கீழ்க்கண்ட கனவான்கள் அடங்கிய நிர்வாக சபையை நியமிக்கிறது:- போஷகர்கள்:- ராவ்பகதூர் வீரப்ப செட்டியார், திருஞான சம்பந்த முதலியார். உப பிரஸிடெண்டுகள் :- முத்துக் குமாரசாமி முதலியார், ராஜரத்தின முதலியார். காரியதரிசி:- சாமி செட்டியார். கூட்டுக்காரியதரிசி:– முத்துச்சாமி நாயனார். நிர்மாண கர்த்தாக்கள்:- எம்.பி. ரங்கசாமி ரெட்டியார்,ஆதி மூல உடையார். பொக்கிஷதார் :- ஆறுமுக முதலியார் மற்றும் பலர் நிர்வாக சபை மெம்பர்கள் 3. தேவஸ்தான மசோதாவை சட்டமாக அங்கீகரித்ததற்காக மேன்மை தங்கிய ராஜப் பிரதிநிதி அவர்களையும் சென்னை கவர்னர் அவர்களையும் இக்கூட்டம் சந்தோஷத்துடன் பாராட்டுகின்றது. இந்தத் தீர்மானத்தை...

அறிவை அடக்க புதிய சட்டம் 0

அறிவை அடக்க புதிய சட்டம்

மத ஸ்தாபகர்களைக் குற்றம் சொல்வதைப்பற்றி தண்டிக்க என்னும் பேரால் ஒரு புதிய சட்டம் வேண்டுமென்றும் இப்போது எங்கும் ஒரே கூச்சலா யிருக்கிறது. இந்த சந்தர்ப்பத்தை நமது நாட்டுப் பார்ப்பனர்கள் தங்களுக்கு அனுகூலமாய் உபயோகப்படுத்திக்கொண்டு தங்களுடைய அக்கிரமங்களை நிலைக்க வைத்துக்கொள்ள எண்ணி அவர்களும் கூடவே கோவிந்தா போடுகிறார்கள். இம்மாதிரி ஒரு சட்டம் ஏற்படுத்துவதானது மனித உரிமையை அடக்குவதாகுமேயல்லாமல், மனித தர்மத்திற்கு நீதி செய்ததாகாது என்பதாக நாம் வலியுறுத்துவோம். மதம் என்று சொல்வது ஒரு மனிதனுடைய கொள்கை அல்லது அபிப்பிராயமாகுமே யல்லாமல், அது உலகத்திலுள்ள மனித கோடிகள் அத்தனை பேரும் கட்டுப்பட்டு நடந்துதான் ஆகவேண்டுமென்று கட்டாயப்படுத்தக் கூடியதல்ல. அப்படி எல்லோரையும் கட்டாயப் படுத்தப் பட்ட விஷயம் இந்த உலகத்தில் ஒன்றுகூட இல்லையென்பதே நமது அபிப்பி ராயம். உலக மனிதர்களில் 100 – க்கு 99 3/4 பேர்களால் ஒப்புக்கொள்ளுவ தாகச் சொல்லப்படும் கடவுளையும் அவரது தத்துவங்கள் என்பதையும் மறுப்ப தற்கே எல்லா மனிதனுக்கும் உரிமை...

திருவண்ணாமலை தாலூகா தென் இந்திய நல உரிமைச் சங்க மகாநாடு 0

திருவண்ணாமலை தாலூகா தென் இந்திய நல உரிமைச் சங்க மகாநாடு

அன்புள்ள சகோதர சகோதரிகளே! இன்றைய தினம் உங்களால் அடியேனுக்கு அளிக்கப்பட்ட வரவேற் பும் நீங்கள் வாசித்துக் கொடுத்த பத்திரங்களும் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி யைக் கொடுத்தன. எனினும் அத்தகைய குதூகலமான வரவேற்புக்கும் இத்தகைய பத்திரங்களுக்கும் நான் பொருத்தமுடையேன் அல்லேன் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் மனதாரப் பொறுத்துக் கொண்டிருப்பதுடன், என் தொண்டை நீங்களெல்லோரும் ஒப்புக் கொண்டு உங்களுடைய மனமார்ந்த ஆதரவளிப்பதற்கு என் மனப்பூர்த்தியான வந்தனத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். (கரகோஷம்). இக்கூட்டம் திருவண்ணா மலை தாலூகா தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் திறப்பு விழாவின் பொருட்டு கூட்டப்பட்டதாகச் சொல்லப்பட்ட போதிலும், இங்கு ஏற்கனவே சங்கம் நிறுவப் பட்டு வேலைகளும் செய்து வந்திருப்பதாகத் தெரிகின்றது. அன்றியும் இன்று இக்கூட்டம் என்னை வரவிடுத்து என் கடனாற்றச் செய்வ தன் பொருட்டானதன்றி சில தீர்மானங்களையும் நிறைவேற்றுவதற்காகவும் கூட்டப்பட்டதென்பது நிகழ்ச்சிக் குறிப்பினாலறியப்படலாம். ஆதலால் இது ஒரு மகாநாட்டுக்குச் சமானமானதென்றே கருதுகின்றேன். கடைசியாக உங்களுடைய வரவேற்புப் பத்திரங்களில் குறிப்பிட்டுள்ள...

பாவி டயர் 0

பாவி டயர்

பஞ்சாப்பில் நடந்த படுகொலைக்கு காரணஸ்தர்களில் ஒருவரான ஜனரல் டயர் துரை செத்துப்போனதற்கு அநேக பத்திரிகைகள் சந்தோஷம் கொண்டாடுவதன் மூலமாய் டயரை பலவாராக கண்டபடி வைது எழுதி வருகின்றன. செத்துப்போன ஜனரல் டயர் துரையை விட கொடுமையானவர்கள் நம் நாட்டில் உயிரோடு இருந்து கொண்டு பிள்ளை குட்டிகள் பெற்றுக் கொண்டு சுகமாய் வாழுகிறார்கள். இந்த டயர்களைப் பற்றி எந்தப் பத்திரிகையாவது எழுதுகின்றார்களா? ஒன்றுமேயில்லை. காரணம் என்ன. நமது பத்திரிகைகளுக்கு பெரும்பாலும் சுயபுத்தி கிடையாது. ஒரு பார்ப்பனப் பத்திரிகை வழி காட்டினால் அதை குரங்குப்பிடியாய் பிடித்துக் கொண்டு “கங்காதரா மாண்டாயோ கங்காதரா மாண்டாயோ” என்று கத்த வேண்டியது தான். பாவி டயராவது அவரது வகுப்பு பெண்மீது கல்லுப் போட்டார்கள் என்கிற காரணத்தைச் சொல்லி அந்த வீதியில் வயிற்றினால் ஊர்ந்து கொண்டுபோ மூக்கினால் உரைத்துக் கொண்டுபோ என்பதான நிபந்தனை போட்டாவது அவர்களுக்கு இஷ்டமான தெருவில் போகும்படி இடம் கொடுத்தார். நமது நாட்டிலிருக்கும் படுபாவி டயர்கள் நாம்...

காங்கிரசில் தீண்டாமை விலக்கு நிதி 0

காங்கிரசில் தீண்டாமை விலக்கு நிதி

தீண்டாமை விலக்கு என்பது ஒத்துழையாமை தத்துவத்தில் பட்ட நிர்மாணத் திட்டங்களுள் உச்ச ஸ்தானம் பெற்றிருந்தது. அதற்காக எவ்வளவோ பணங்களும் ஒதிக்கி வைத்து அத் திட்டத்தை நிறைவேற்ற ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது; ஆனால் அவைகள் என்ன கதி அடைந்தன என்பதை கவனிப்போம். தீண்டாமை விலக்கு நிதிக்காக தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியார் ரூ. 20000 ஒதுக்கி வைத்து இருந்தார்கள். அந்தப் பணத்தை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அந்த வேலைக்கு உபயோகப்படுத்த ஸ்ரீமான் சி. இராஜகோபாலாச்சாரியார் ஒரு சிறிதும் இடம் கொடுக்காமல் தனது வசம் அந்த ரூபாயை ஒப்புவித்து விடும்படிக்கும் தான் அந்த வேலை செய்து கொள்வதாகவும் சொல்லிப் பணத்தை எடுத்து தன் பெயருக்கு பாங்கியில் போட்டுக் கொண்டார். கமிட்டியில் இருந்து தான் விலகும் வரையிலும் அந்தப் பணத்தை தான் சும்மா வைத்துக் கொண்டிருந்து விட்டு கடைசியாக அதை சீனிவாசய்யங்காருக்கு தேர்தல் செலவுக்கு ஏற்பட கமிட்டி வசம் அதை ஒப்புவித்தார். அவரும் தனக்கு பூரா அதிகாரம்...

நன்றி கெட்ட தன்மை 0

நன்றி கெட்ட தன்மை

சென்னையில் வர்த்தகர்கள் சங்கம் வியாபாரச் சங்கம் என்பதாக இரண்டொரு சங்கங்கள் இருந்து வந்தாலும் அவைகள் முழுவதும் ஐரோப் பியர்கள் ஆதிக்கமாகவே இருந்து வருவதோடு இந்திய வியாபாரிகளுக்கு அவற்றில் போதிய செல்வாக்கும் சுதந்திரமும் இல்லை என்பதாகக் கண்டு காலஞ் சென்ற பெரியார் சர்.பி. தியாகராய செட்டியார் அவர்கள் பெரு முயற்சி செய்து தென் இந்திய வர்த்தக சங்கம் என்பதாக ஒன்றை ஏற்படுத்தி அது நிலைத்திருப்பதற்கு வேண்டிய சகல சௌகரியங்களும் செய்து கொடுத்து அதன் மூலம் ஐரோப்பிய சங்கங்களுக்கு இருப்பது போலவே சென்னை முனிசிபாலிடிக்கும், சென்னை சட்டசபைக்கும், இந்திய சட்டசபைக்கும் அங்கத்தினர்களை தெரிந்தெடுக்கும் உரிமைகள் முதலிய பெருமைகளையும் வாங்கிக் கொடுத்து அதற்கு ஒரு யோக்கியதையையும் உண்டாக்குவதற்கு எவ்வளவோ கஷ்டமும் பட்டார். இப்போதும் மற்ற எல்லா ஸ்தாபனங்களை யும் நமது பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்திற்காக சூழ்ச்சிகளாலும், தந்திரங் களாலும் சுவாதீனப்படுத்திக் கொண்டது போலவே இதையும் கைப்பற்றிக் கொண்டு இருப்பதோடு அச்சங்கத்திற்கு இவ்வளவு பெருமையும், யோக்கி யதையும்...