திருவண்ணாமலை தாலூகா தென் இந்திய நல உரிமைச் சங்க மகாநாடு

அன்புள்ள சகோதர சகோதரிகளே!

இன்றைய தினம் உங்களால் அடியேனுக்கு அளிக்கப்பட்ட வரவேற் பும் நீங்கள் வாசித்துக் கொடுத்த பத்திரங்களும் எனக்கு அளவற்ற மகிழ்ச்சி யைக் கொடுத்தன. எனினும் அத்தகைய குதூகலமான வரவேற்புக்கும் இத்தகைய பத்திரங்களுக்கும் நான் பொருத்தமுடையேன் அல்லேன் என்பது எனக்குத் தெரியும். நீங்கள் மனதாரப் பொறுத்துக் கொண்டிருப்பதுடன், என் தொண்டை நீங்களெல்லோரும் ஒப்புக் கொண்டு உங்களுடைய மனமார்ந்த ஆதரவளிப்பதற்கு என் மனப்பூர்த்தியான வந்தனத்தையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்ளுகின்றேன். (கரகோஷம்). இக்கூட்டம் திருவண்ணா மலை தாலூகா தென்னிந்திய நல உரிமைச் சங்கத்தின் திறப்பு விழாவின் பொருட்டு கூட்டப்பட்டதாகச் சொல்லப்பட்ட போதிலும், இங்கு ஏற்கனவே சங்கம் நிறுவப் பட்டு வேலைகளும் செய்து வந்திருப்பதாகத் தெரிகின்றது. அன்றியும் இன்று இக்கூட்டம் என்னை வரவிடுத்து என் கடனாற்றச் செய்வ தன் பொருட்டானதன்றி சில தீர்மானங்களையும் நிறைவேற்றுவதற்காகவும் கூட்டப்பட்டதென்பது நிகழ்ச்சிக் குறிப்பினாலறியப்படலாம். ஆதலால் இது ஒரு மகாநாட்டுக்குச் சமானமானதென்றே கருதுகின்றேன். கடைசியாக உங்களுடைய வரவேற்புப் பத்திரங்களில் குறிப்பிட்டுள்ள விஷயங்களுக் குத் தனித் தனியாகப் பதிலளிக்க வேண்டிய அவசியமில்லை என்றே கருதுகின்றேன். மேலும் எனக்குச் சில தினங்களாக தேக அசௌக்கியமா யிருப்பதால் அவ்வாறு பேசுவதற்கும் ஆற்றலில்லை. ஆயினும், முக்கியமாக ஒன்றை மட்டும் குறிப்பிட்டுக் கூற விரும்புகின்றேன். அதாவது நீங்கள் நம் சுயமரியாதையை நிலை நிறுத்தவும் நம் தேசத்தின் குறைகளையுணர்ந்து அவற்றை ஒழித்து நமது இலட்சியத்தை நிறைவேற்றப் பெரும் உறுதியுடன் உழைக்க முற்பட்டிருப்பதற்கு நான் அளவற்ற மகிழ்ச்சியடைகின்றேன். அதோடு கதர் விஷயத்தில் நீங்கள் மனப்பூர்த்தியான ஆதரவு அளிக்க முன் வந்திருப்பது எனக்குச் சந்தோஷத்தைக் கொடுக்கின்றது. நமது நிர்மாணத் திட்டத்தின் வேலைகளின் சம்பந்தமாக என்னாலான உதவியை அப்போ தைக்கப்போது செய்து உங்களை ஊக்கமூட்ட எப்போதும் தயாராக விருக்
கிறேன் (கரகோஷம்). மற்றபடி முடிவுரை ரூபமாகவோ அல்லது உபந்நியாச ரூபமாகவோ, எல்லா விஷயங்களையும் நடவடிக்கைகளின் முடிவில் கூறலா மென்று கருதி நிகழ்ச்சிக் குறிப்பிற் கண்ட விஷயங்களை கவனிக்க உத்தே சிக்கின்றேன். நிகழ்ச்சிக் குறிப்பில் இனி நடக்க வேண்டிய விஷயங்களில் முதலாவதாக பொங்கல் வசூல் உண்டி திறக்கப்படுமென்றும், பின் *தீர்மானங் களென்றும், அடுத்த படியாக இத்தகைய சங்கங்களினால் ஏற்படும் நற்பயன் கள் என்பது பொருளாக தேசபக்தர் ஸ்ரீ ஆரியா அவர்களும், திராவிடன் ஆசிரியர் திருவாளர் கண்ணப்பரவர்களும், திரு. புரிசை முருகேசனும், தண்டபாணி பிள்ளையும் சொற்பெருக்கிடுவார்களென்றும் காணக்கிடக்கின் றன. கடைசியாக அக்குறிப்பில் அக்கிராசனரின் முடிவையும் சேர்க்கப்பட்டி ருக்கின்றது. கனவான்கள் கடைசி வரையில் பொறுமையோடு கேட்டுக் கொண்டிருந்து இம்மகாநாட்டை வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள் ளுகிறேன். (பெருத்த கரகோஷம்).

குறிப்பு : திருவண்ணாமலையில் 6.2.27 இல் நடைபெற்ற தென்னிந்திய நல உரிமைச் சங்க மகாநாட்டில் தலைமை வகித்து முன்னுரையாக ஆற்றிய சொற்பொழிவு.

குடி அரசு – சொற்பொழிவு – 13.02.1927

You may also like...

Leave a Reply