‘ஏல விவசாயி’

‘ஏல விவசாயி’ என்னும் பெயர் பெற்ற ஒரு தமிழ் மாதாந்த சஞ்சிகை எமது பார்வைக்கு வந்தது. இது எழுபது எண்பதாயிரம் ஏக்கர் ஏல விவசாய பூமிகளில் சுமார் 40 லட்சம், 50 லட்சம் ரூபாய் பெறுமான மகசூல்களை உண்டாக்கும் 2 ஆயிரத்துக்கதிகமான ஏல விவசாயிகளை அங்கத்தினராகக் கொண்ட திருவாங்கூர் ஏல விவசாய சங்கத்தினின்றும் வெளியிடப்பட்டு வருவது பல துறைகளிலும் ஆராய்ச்சியுள்ள திரு.ஆர். நாராயணசாமி அவர் களை ஆசிரியராகக் கொண்டது.

விவசாயமே எல்லாத் தொழில்களிலும் சிறந்ததாயிருந்தும் நம் நாடு விவசாயத்தையே ஆதாரமாகக் கொண்டிருந்தும் விவசாய வளர்ச்சிக்குரிய புதுவிதமான கருவிகளைக் குறித்தும் புது முறைகளைப் பற்றியும் ஐக்ய இயக்கம், கூட்டுறவு இயக்கம், விவசாய சங்கம் ஆகியவைகளைப் பற்றியும் விவசாயப் பொருள்களைச் சேகரம் செய்து செலவழிக்கும் முறைகளைக் குறித்தும் நமது நாட்டில் தாய்ப் பாஷையில் உலவும் பத்திரிகைகள் மிகச் சிலவே. ஆகவே இவ்விஷயங்களைக் குறித்தும் மிளகு, இஞ்சி, லவங்கம், எலுமிச்சை, ஆரஞ்சு, காபி, சணல் ஆகியவைகளைக் குறித்தும் விசேஷமாக ஏல விவசாயத்தைக் குறித்தும் முதலாளி , தொழிலாளிகளைக் குறித்தும் தமிழ் மொழி, தமிழ்நாடு திருவாங்கூர் சரித்திரம் அரசியல் ஆகியவைகளைப் பற்றியும் இந்த ஏல விவசாயி என்னும் பத்திரிகை எழுதி வரும். ஆதலால் இப்பத்திரிகையை விவசாயிகள், வியாபாரிகள், தொழிலாளிகள், முதலாளிகள், தமிழ்நாட்டார், தாய்நாட்டார் ஆகிய அனைவரும் ஆதரிக்கக் கடமைப்பட் டுள்ளார்கள். இதன் வருஷ சந்தா ரூ.2 . வேண்டுவோர் “மானேஜர், ஏல விவசாயி, உத்தமபாளையம், மதுரை ஜில்லா” என்ற விலாசத்திற்கு எழுதி பெற்றுக் கொள்ளலாம்.

( ப – ர். )

குடி அரசு – மதிப்புரை – 28.08.1927

You may also like...

Leave a Reply