Category: குடி அரசு 1927

வருணாசிரம மகாநாடு 0

வருணாசிரம மகாநாடு

காங்கிரசின்போது காங்கிரசுப் பந்தலில் வருணாசிரம மகாநாடு என்பதாக ஒரு மகாநாடு நடக்கப்போவதாய் பல பத்திரிகைகளில் தெரிய வருகின்றது. வருணாசிரம மகாநாடு என்பது என்ன என்று நாம் மக்களுக்கு விளக்க வேண்டியதில்லை. ஆனாலும் சிறிது குறிப்பிடுவோம். என்னவெனில் உலகத்திலுள்ள மக்கள் எல்லாம் 6 வருணத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், அதாவது:- 1. பிராமணன் 2. க்ஷத்திரியன் 3. வைசியன் 4. சூத்திரன் 5. பஞ்சமன் 6. மிலேச்சன் என்பதாக பிரிக்கப்பட்டிருக்கின்றது என்றும், அதில் பிராமணன் உயர்ந்தவன் குருவாயிருக்கத்தக்கவன், க்ஷத்திரியன் அதைவிடத் தாழ்ந்தவன் அரசனாயிருக்கத்தக்கவன், வைசியன் அதைவிடத் தாழ்ந்தவன் வியாபாரியாய் இருக்கத்தகுந்தவன், சூத்திரன் அதைவிடத் தாழ்ந்தவன் மேல்கண்ட மூவருக்கும் அடிமையாய் இருக்க வேண்டியதோடு சிறப்பாக பிராமணர்களுக்கு அடிமையாகவும் இருப்பதுடன் சூத்திரனது பெண்களும் பொருள்களும் பிராமணர்களுக்கே உரியது என்றும், கொடுக்காவிட்டால் பலாத்காரத்தினால் பிடுங்கிக் கொள்ளலாம் என்றும், அவர் படிக்கவும் கடவுளை நெருங்கி வணங்கவும் உரிமையற்றவன் என்கின்றதுமான கொள் கையை கொண்டது. ஆதிதிராவிடர், ஆதிசூத்திரர், அவர்ணஸ்தர் நாம் சூத்திரர்...

ஐந்துக்கு இரண்டு பழுதில்லை – சித்திரபுத்திரன் 0

ஐந்துக்கு இரண்டு பழுதில்லை – சித்திரபுத்திரன்

நான் கொஞ்ச காலமாக மறைந்திருந்தேன். இனி அடிக்கடி தோன்று வேன். அன்பர்கள் வரவேற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகின்றேன். ஏதாவது விஷயத்தைப் பற்றி பேசுகிற போது முழுதும் உண்மையா யிருக் காது என்று சந்தேகப்படுகிற காலத்தில் “ஐந்துக்கு இரண்டு பழுதில்லை” என்கிற பழமொழி சொல்வதுண்டு. அது எப்பொழுது ஏற்பட்டது, எதற்காக ஏற்பட்டது என்கிற விபரம் அநேகமாய் நமது தமிழ் மக்களுக்குத் தெரியா தென்றே நினைக்கிறேன். தெரியாதென்று நினைப்பதால் அதைப்பற்றி நான் கண்டு பிடித்த முடிவை சொல்லுகிறேன். “ஐந்துக்கிரண்டு பழுதில்லை” யென்பதானது ஐந்து விஷயம் சொன்னால் அதில் இரண்டாவது பொருத்தமாயிருக்கும். அப்படி இருந்தாலே போதும் என்கிற கருத்துக்கொண்டே இப்பழமொழி வழங்கப்பட்டிருக்கிறது. அது எப்பொழுது என்று பார்ப்போமானால் ஆரியர்கள் நமது நாட்டில் வந்து பொய்யும் புரட்டும் புளுக ஆரம்பித்த காலத்தில் அப்புரட்டுகளை யாராவது கண்டுபிடித்து கேழ்க்க ஆரம்பித்தால் “ஐந்துக்கு இரண்டு பழுதில்லாமல்” அதாவது முன் சொன்னது போல் ஐந்தில் இரண்டு விஷயங்கள் நிஜமா யிருந்தாலே போதுமென்று...

அருஞ்சொல் பொருள் 0

அருஞ்சொல் பொருள்

அசார்சமாக – அசட்டையாக, அக்கறையில்லாமல், ஈடுபாடின்றி அபஜயமடைய – தோல்வியடைய ஆத்ம ஸ்துதி – தற்புகழ்ச்சி உபத்ரவித்து – தொல்லை கொடுத்து கர்ண பரம்பரை – செவி வழி ( செய்தி ) கால பரியந்தம் – காலம் வரை குசினிக்காரன் – சமையல்காரன் குதிரை தேய்தல் – குதிரை உடலைத் தேய்த்து அழுக்கு அகற்றி பளபளப்பாக்குதல் சமராதனை – பார்ப்பனர்க்கு விருந்திடல், பிராமண போஜனம் சலீஸாக – மலிவாக சாச்வத – நிரந்தரமான, நித்தியம், திடம், மோட்சம் சைன்யம் – படை தற்பித்து – பயிற்சி தாத்பிரியமான – விளக்கம், நோக்கம், பாராட்டு திரவிய சகாயம் – பொருள் உதவி திரவிய அபேiக்ஷ – பண ஆசை , பொருள் ஆசை திரிகரண சுத்தியாக – மனம், மொழி, மெய் ( மனோ வாக்கு காயம்) ஆகிய மூன்று பொறிகளுக்கு உண்மை யாக, தூய்மையாக திருஷ்டாந்தம் – எடுத்துக்காட்டு தூஷணை...

அய்யங்காரின் பார்ப்பனப் பிரசாரம் 0

அய்யங்காரின் பார்ப்பனப் பிரசாரம்

ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார், ஸ்ரீமான்கள் முத்துரங்க முதலியார், ஓ. கந்தசாமி செட்டியார் ஆகிய இருவரையும் பார்ப்பனரல்லாதார் என்கிற பெயருக்காக கூட இழுத்துக் கொண்டு தென்னாட்டில் பார்ப்பனப் பிரசாரம் செய்து வருவதும், அவ்விரு கனவான்களை ஏவிவிட்டு பார்ப்பனரல் லாதாருக்கு விரோதமாகப் பேசும்படி செய்து வருவதும் பத்திரிகையில் பார்த்திருக்கலாம். ஆனாலும் அவர்கள் போகிற இடங்களில் ஜனங்கள் கேள்விகள் கேட்க ஆசைப்படுவது இந்தக் காலத்தில் மிகவும் சகஜமானது என்பதும் யாவருக்கும் தெரியும். பிரசாரத்திற்குப் போகிறவர்கள் கூடுமானவரையிலா வது நியாயமான கேள்விகளுக்குப் பதிலளிக்க வேண்டியது நியாயமான பிரசாரர்களின் கடமை. அப்படிக்கில்லாமல் கேள்வி கேட்கிறவர்களை அடக்கி விடவும், அவர்களைத் தொந்தரவு செய்ய ஆள்களைத் தயார் செய்து ஏவி விடுவதும், அந்தச் சமயத்தில் மாத்திரம் தப்பித்துக் கொள்ள முடியுமேயல்லாமல் பிரசாரம் கோரிய பலனைத் தருவது கஷ்டமான காரியம் என்பதை நாம் சொல்ல வேண்டியதில்லை. இதுவரையில் பார்ப்பன பத்திரிகைகளில் வந்த சேதிகளைக் கொண்டே பார்ப்போமானால் ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார் கோஷ்டிகளான ஸ்ரீமான்கள் சத்தியமூர்த்தி, எம்....

கோவை மகாநாடும் பார்ப்பனரல்லாதார் கடமையும் 0

கோவை மகாநாடும் பார்ப்பனரல்லாதார் கடமையும்

கோவையில் அடுத்த வாரம் கூடப்போகும் பார்ப்பனரல்லாதார் விசேஷ மகாநாட்டைப்பற்றி இதுவரை குடி அரசு 4, 5 தலையங்கம் எழுதி ஆகிவிட்டது. மாயவரம் மகாநாடு நடந்தது முதல் விசேஷமாய் கோவை மகாநாட்டைப் பற்றியே எங்கும் பேச்சாய் இருக்கிறது. இம்மகாநாட்டில் தமிழ்நாட்டுக்கு ஒரு புது உணர்ச்சி ஏற்படக்கூடும் என்பது நமது அபிப்பி ராயம். ஆன போதிலும் இம் மகாநாடு சம்பந்தமாய் தலைவர்கள் என்போ ருக்கு பெருத்த பொறுப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதையும் யாரும் மறந்து விடக் கூடாது. ஏனெனில் பொது மக்களின் கவனத்தை இம்மகாநாடு பெரிதும் இழுத்துக் கொண்டிருப்பதுடன் இம்மகாநாட்டின் முடிவை பார்ப்பன ரல்லாதார் மாத்திரம் அல்லாமல் பார்ப்பனரும் சர்க்காரும் வெகு ஆவலாய் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். இம்மகாநாட்டில் ஒரு கட்டுப்பாடானதும் எல்லோரையும் கட்டுப்படுத்தக் கூடியதுமான ஒரு திட்டத்தை ஏற்படுத்த முடிய வில்லையானால் பிறகு பார்ப்பனரல்லாதார் அரசியலிலும் சமூக இயலிலும் முன்னேறும் காலம் சமீபத்தில் இல்லையென்றே தீர்மானித்துவிட வேண்டியதுதான். பார்ப்பனரல்லாத சமூகப் பிரமுகர்கள் என்போர் இவ்விஷயமாய் இனி...

திராவிடர் கழகம் கோவிற்பட்டி                                18 – வது ஆண்டு நிறைவு விழா 0

திராவிடர் கழகம் கோவிற்பட்டி 18 – வது ஆண்டு நிறைவு விழா

தலைமை முன்னுரை      அன்பர்களே! நமது நண்பரும் அரசியல் தலைவருமான திருவாளர் வி.ஓ.சிதம்பரம் பிள்ளை அவர்கள் என்னைப்பற்றி சொல்லியவைகள் யாவும் என்னிடம் உள்ள அன்பினால் அல்லாது அவ்வளவு உண்மை யென்று தாங்கள் நம்பிவிடக்கூடாதென்று தங்களைக் கேட்டுக் கொள்ளுகிறேன். என்னை அவர் தலைவர் என்று சொன்னதற்கு ஆக நான் மிகுதியும் வெட்கப்படு கிறேன். அவர் வங்காளப் பிரிவினையின் போது தமிழ்நாட்டில் சிறப்பாக இந்த ஜில்லாவில் அரும்பெரும் தலைவராயிருந்து நடத்திய பெரும் கிளர்ச்சி யின் போது நான் உல்லாசத்துடன் விடலைப் புருஷனாய் விளையாடிக் கொண்டிருந்தேன். அவரையும் அவர் போன்றாரையும் கண்டே பொதுத் தொண்டில் இறங்கினேன். அன்றியும் நான் சிவஞான யோகிகள் வாசித்துக் கொடுத்த உபசாரப் பத்திர வாக்கியங்களுக்கும் நான் ஒரு சிறிதும் பொருத்த முடையவன் அல்லன். ஆகிலும் அப்பத்திரத்தில் எனது கொள்கைகளை புகழ்ந் திருக்கும் விஷயங்களைப் பொருத்தவரை அக்கொள்கைக்கு அதை ஒரு நற்சாக்ஷிப் பத்திரமாக எடுத்துக் கொண்டு அதற்காக எனது நன்றியை செலுத்துகின்றேன். இத்திராவிட சங்கம்...

மந்திரிகளின் நியமனம் 0

மந்திரிகளின் நியமனம்

ஜஸ்டிஸ் கக்ஷி மந்திரி பதவியில் இருந்த காலத்தில் யாருக்காவது ஸ்தல ஸ்தாபனங்களில் நியமனம் செய்தால் அவர்கள் ஒவ்வொருவருக்கும் நமது பார்ப்பனர்கள் ஒவ்வொரு பொய்க் கதையைக் கட்டி பார்ப்பனரல்லாதார் இயக்கத்தைத் தூஷித்துக் கொண்டு பாமர மக்களுக்கு அவ்வியக்கத்தினிடம் அருவருப்புண்டாகும்படி எவ்வளவோ சூழ்ச்சிகளெல்லாம் செய்து கொண்டு வந்தது பொது ஜனங்களுக்குத் தெரிந்ததுதான். ஆனால் அம்மாதிரி நியமனங்கள் பார்ப்பனர்களுக்காவது அக்கோஷ்டியைச் சேர்ந்த பார்ப்பன ரல்லாதாருக்காவது கிடைத்துவிட்டால் அதைப்பற்றி வெளியிலே பேசாமல் ரகசியமாக அனுபவித்துக் கொண்டு வந்ததும் யாவரும் அறிந்தது. உதாரணமாக ஸ்ரீமான் ஸி.வி. வெங்கட்டரமண ஐயங்காருக்கு கோயம் புத்தூர் ஜில்லா போர்டுக்கு நியமனம் செய்த காலத்தில் இந்தப் பார்ப்பனர்கள் ஒரு வார்த்தையாவது பேசவே இல்லை. அதே சமயத்தில் சென்னை முனிசிபாலி டிக்கு ஸ்ரீமான் தணிகாசலம் செட்டியாரை அதே மந்திரிகள் நியமனம் செய்த காலத்தில் கொல்லை வழிப் பிரவேசமென்று எழுதியிருந்தார்கள். அதற்குச் சமாதானமாகத் தேர்தலில் தோற்றவர்களை நியமனம் செய்வதுதான் கொல்லை வழிப் பிரவேசமே யொழிய தேர்தலுக்கு நின்று...

மலையைக் கெல்லி எலியைப் பிடித்தார்கள் 0

மலையைக் கெல்லி எலியைப் பிடித்தார்கள்

சேலம் ஜில்லா போர்டு தலைமைப் பதவிக்கு திருவாளர் எல்லப்ப செட்டியார் அவர்கள் வரக்கூடாதென்பதாக சேலத்திலுள்ள சில பார்ப்பனர் களும், அவர்களது தயவில் முன்னுக்கு வரலாமென்று கருதி அவர்களது வாலைப் பிடித்துக் கொண்டு திரியும் சில பார்ப்பனரல்லாதார்களும் ஒன்று கூடி சுயமரியாதைக்கு பங்கமுண்டுபண்ணும் கூட்டத்திற்கு அனுதாபம் காட்டி வருகிற மந்திரியைப் பிடித்துக் கசக்கி என்னென்னமோ சூழ்ச்சிகளெல்லாம் செய்து பார்த்தும் வேண்டும் என்றே மனச்சாட்சிக்கு விரோதமான எத்தனை யோ அக்கிரமமான உத்திரவுகளைப் போடச் செய்தும் கடைசியாக கனம் மந்திரி சுப்பராயனுடைய அக்கிரமங்களையும் ஜெயித்து திருவாளர் எல்லப்ப செட்டியாருடைய (தலைவர்) தேர்தல் சர்க்காரால் ஒப்புக் கொள்ளப்பட்டு விட்டது. பார்ப்பனர்களால் செய்யப்பட்ட இவ்வளவு சூழ்ச்சிகளாலும் கனம் சுப்பராயனின் மந்திரி தன்மை, மானங்கெட்டு நாடு சிரிக்க ஏற்பட்டதுதானே தவிர பார்ப்பனர்களுக்காவது திரு எல்லப்ப செட்டியாருக்காவது ஒரு வித நஷ்டமும் ஏற்பட்டுவிடவில்லை. நமது நாட்டு சரித்திரத்தில் ஆயிரக்கணக்கான வருடங்கள் தொட்டு நாளது வரையில் யாராவது ஒரு பார்ப்பனரல்லாதார் எந்தப் பார்ப்பனருடைய...

ஸ்ரீமான் ஜோசப்பின் குட்டிக்கரணம் 0

ஸ்ரீமான் ஜோசப்பின் குட்டிக்கரணம்

சென்னை அரசாங்கத்தில் கிருஸ்தவர் என்கிற சலுகையின் பேரில் ஸ்ரீமான் ஆரோக்கியசாமி முதலியாருக்கு மந்திரிப் பதவி கிடைத்ததிலிருந்து ஸ்ரீமான் நமது ஜோசப்புக்கு நாக்கில் தண்ணீர் சொட்ட ஆரம்பித்து விட்டது. அதோடு மாத்திரமல்லாமல் அந்த மந்திரிப் பதவி பார்ப்பனர்கள் மூலமாகத் தான் விற்கப்படுகிறதென்கிற தீர்மானமும் ஏற்பட்டு விட்டது. அதோடு கூட அம்மந்திரிப் பதவிக்கு பார்ப்பனர்களுக்குக் கொடுக்க வேண்டிய விலை “ஜஸ்டிஸ்” கட்சியைத் திட்டி பார்ப்பனரல்லாதாரைக் காட்டிக் கொடுக்க வேண்டியதுதான் என்கிற முடிவும் அவருக்கு ஏற்பட்டதாகத் தெரிகிறது. சமீபத்தில் மதுரையில் பேசினதும் ஸ்ரீ சத்தியமூர்த்தியைப் புகழ்ந்ததும் மற்றும் அவர் தெரிவித்த அபிப்பிராயமும், ஸ்ரீமான் ஜோசப்பின் புதிய பிறப்பைக் காட்டுகிறது. ஸ்ரீமான் சத்தியமூர்த்தியை ஒரு மனிதர் புகழ் வாரானால் அம்மனிதருடைய யோக்கியதை இன்னதென்று நாம் சொல்லிக் காட்ட வேண்டியதில்லை. உதாரணமாக “மலம் நல்ல வாசனையாயிருக்கிறது என்று ஒருவர் சொல்லுவாரானால் அவர் மூக்கின் யோக்கியதையைப் பற்றி சொல்லவும் வேண்டுமா?” என்ற பழமொழி ஒன்றுண்டு. அதுபோலவே ஸ்ரீமான் சத்தியமூர்த்தியின் யோக்கியப்...

சேலம் ஜில்லா போர்டு தலைவர் தேர்தல் 0

சேலம் ஜில்லா போர்டு தலைவர் தேர்தல்

முதன் மந்திரியால் மூன்று முறை நிறுத்தப்பட்டது சேலம் ஜில்லா போர்டு மெம்பர் திரு. ராஜமாணிக்கம் பண்டாரம் முதல் பேர் சென்னை கவர்னரின் அந்தரங்க காரியதரிசிக்கு அனுப்பிய தந்திச் செய்தி , ஜில்லா போர்டு தலைவராயிருந்த திரு போல்க்ஸ் தலைவர் பதவியை ராஜிநாமா செய்யப் போவதாக அறிவித்தவுடனே லோக்கல் போர்டு ஆக்டு 17-வது பிரிவின்படி மார்ச் 31 ² வேறு ஒரு தலைவரைத் தேர்ந்தெடுக்க ஒரு கூட்டம் கூட்டும்படி தீமானிக்கப்பட்டது. திருபோல்ஸின் ராஜிநாமாவை ஒப்புக்கொண்ட பிறகு அந்தக் கூட்டத்தில் தானே மறு தலைவர் தேர்தலையும் நடத்தவேண்டுமென்று மந்திரி உத்தரவு கொடுத்தார். அந்த உத்தரவுபடி திரு போல்சின் ராஜிநாமாவை ஒப்புக்கொண்ட கூட்டத்திலேயே ராவ்பகதூர் எல்லப்பசெட்டியார் ஏகமனதாக எல்லோராலும் தலைவராகத் தேர்ந்தெடுக் கப்பட்டார். ஆனால் தேர்தல் முடிவை 6-வாரம் வரை கெஜட்டில் பிரசுரம் செய்யாமல் மந்திரி நிறுத்தி வைத்தார். மே15 தேதி திரு எல்லப்ப செட்டியார் தேர்தலை ரத்து செய்து உடனே வேறு தேர்தல் நடத்தவேண்டுமென...

அரசியல் பார்ப்பனர்களின் யோக்கியதை 0

அரசியல் பார்ப்பனர்களின் யோக்கியதை

சத்தியம் என்பது அவர்கள் பெரியோர் தேடிவைத்த சொத்து சென்ற வாரம் தூத்துக்குடியில் நடந்த பார்ப்பனப்பிரசாரத்தில் ஸ்ரீமான்கள் ஆ.மு. ஆச்சாரியார் பல உபன்யாசங்கள் செய்தாராம். அவர்கள் (³ ஆச்சாரியார்) பேசும்போது வரதராஜுலு நாயுடு ஒரு போக்கிரி என்றும் தான் ஒருநாளும் பார்ப்பனப்பிள்ளை சாப்பிடுவதை பார்ப்பனரல்லாத குழந்தை பார்த்துவிட்டால் பல நாள் பட்டினி கிடப்பேன் என்று சொல்ல வில்லை என்றும் உறுதி கூறினாராம். பார்ப்பனர்களுக்கு பொய் சொல்வ தென்றால் அது அவர்களுடைய வேதபாராயணம் செய்வதுபோலும். “ஏக தலைவர்” ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் பொய்யிக்கு அளவே இல்லை என்பதற்கு ஆதாரமாக சென்ற தேர்தலுக்கு ஆள்கள் சேர்க்கும் முறையில் ஸ்ரீமான்கள் நரசிம்மராஜு ராமலிங்கம் செட்டியார் இன்னும் மற்றவர்களும் ஆந்திர தேசத்துப் பத்திரிக்கைகளும் வண்டி வண்டியாய் ருஜு செய்தன. ஆனால் ஸ்ரீமான் அய்யங்காரோ தோள் மேல் தொண்ணூரு அடி அடித்தாலும் துடைத்துவிட்டால் ஒன்றும் சோதிக்காது என்று சொல்வதுபோல் அத்தனையும் ஜீரணம் செய்துகொண்டு இனியும் “தலைவராகவே” விளங்குகிறார். ஸ்ரீமான் சத்தியமூர்த்தி சாஸ்திரிகளின்...

பார்ப்பன அயோக்கியத்தனம் 0

பார்ப்பன அயோக்கியத்தனம்

‘அகில இந்திய பிராமண சம்மேளனம்’ என்பதாகப் பேர் கொண்டு தஞ்சாவூர் ஜில்லாவில் உள்ள ஒரு மூலைக் கிராமத்தில் வக்கீல் பார்ப்பனர், உத்தியோகப் பார்ப்பனர், பஞ்சாங்கப் பார்ப்பனர், காப்பிக்கடைப் பார்ப்பனர், தூதுவப் பார்ப்பனர் ஆகிய பலதிறப்பட்ட சுமார் 100 உருப்படிகள் கூட்டம் கூடி ஒன்று சேர்ந்து “அகில இந்தியப் பிராமண சம்மேளனம்” என்பதாகப் பேர் வைத்துக் கொண்டு பல தீர்மானங்கள் செய்து இதை இந்தியாவில் உள்ள இந்துக்கள் என்று சொல்லப்படும் இருபத்தைந்து கோடி மக்களுக்குக் கட்டுப்பட்டதாக கருதும்படி சூழ்ச்சி செய்திருக்கிறார்கள். அங்கு நடந்த தீர்மானங்களையும் மகாநாட்டின் வரவேற்பு அக்கிராசனர் மகாநாட்டின் தலைவர் ஆகியவர்கள் பிரசங்கங்களும் படித்துப் பார்த்தால் உண்மையான கலப்பற்ற பார்ப்பனரல்லாதார்களின் இரத்தம் கொதிக்காமல் இருக்கவே முடியாது. அவ்விருவர் பிரசங்கத்திலும் ஒற்றுமையாகக் காணப்படும் விஷயங்கள் பல இருந்தாலும் அவற்றில் முக்கியமானது இத் தேசத்தில் இந்துக்களில் பார்ப்பனர்கள் தவிர மற்றவர்கள் எல்லாம் சூத்திரர்கள் என்றும், க்ஷத்திரியரும், வைசியரும் கிடையாது என்றும் பேசியிருக்கிறார்கள். க்ஷத்திரி யரும்,...

கோவையில் பார்ப்பனரல்லாதார் மகாநாடு 0

கோவையில் பார்ப்பனரல்லாதார் மகாநாடு

கோவையில் சென்னை மாகாண பார்ப்பனரல்லாதார் விசேஷ மகாநாடு ஜுலை மாதம் 2, 3 தேதிகளில் அதாவது ஆனி மாதம் 18, 19 தேதி சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் நடத்துவதாய் முடிவாகத் தீர்மானிக்கப்பட்டு விட்டது. கோவை ஜில்லா மகாநாடாக கூட்டுவதாயிருந்த இந்த மகாநாடு காங்சிரசில் உள்ள சில பார்ப்பனரல்லாதாரின் உணர்ச்சியை அனுசரித்து மாகாண விசேஷ மகாநாடாகக் கூட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது. அதோடு கூட, காங்கிரஸ் பார்ப்பனர்கள் தேசத்தின் பெயரால், காங்கிரஸ் என்கிற ஸ்தாபனத்தைக் கைக்கொண்டு அதன் மூலம் பார்ப்பனரல்லாதார்க்கு செய்து வரும் கெடுதியையும், தேசத்தின் விடுதலையைக் காட்டிக்கொடுத்து தேசத் துரோகம் செய்து பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்திக்கொள்ள செய்துவரும் சூக்ஷியையும் அறிந்து ஒன்றா காங்கிரசினது யோக்கியதையை வெளியிலெடுத்துச் சொல்லி பாமர மக்களை அக்காங்கிரஸ் படுகுழி மோசத் தில் இருந்து தப்புவிக்க வழிதேட வேண்டும். அல்லது காங்கிரஸைக் கைப் பற்றி அதிலுள்ள அயோக்கியர்களையும், சுயநலக்காரரையும் வெளியாக்கி காங்கிரசின் மூலம் தேசத்திற்கு உண்மையான விடுதலையும், சுயமரியாதை...

ஸ்ரீனிவாசய்யங்கார் பணத்தின் மகிமை 0

ஸ்ரீனிவாசய்யங்கார் பணத்தின் மகிமை

சென்ற வாரம் தூத்துக்குடியில் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்கார் சிஷ்யர் களில் ஒருவரான ஒரு குப்புசாமி முதலியார் அவர்கள் தூத்துக்குடியில் “காங்கிரஸ்” (பார்ப்பன) பிரசாரம் செய்யும் போது ஒரு கூட்டத்தில் ஸ்ரீமான் ஈ. வெ. ராமசாமி நாயக்கரும் தானும் ஒரே கள்ளுக்கடையில் கள்ளுக்குடித் தோம் என்றும் தனக்கு சீனிவாசய்யங்கார் சிலவுக்குக் கொடுக்கிறார் என்றும் மற்றும் பலவிதமாய் பெண்டு பிள்ளைகளைக் குறித்தும் வேடிக்கையாகப் பிரசங்கம் செய்தார் என்றும் அக்கூட்டத்தில் உள்ள பார்ப்பனர்கள் குலுங்கி குலுங்கி நகைத்தார்கள் என்றும் ஸ்ரீனிவாசய்யங்கார் கக்ஷியாரை ஆதரிப் பதாக சொல்லிக்கொள்ளும் சில பார்ப்பனரல்லாதார்கள் கூட இதைப்பற்றி வருத்தப்பட்டார்கள் என்றும் ஸ்ரீமான் வெ. நாராயணன் என்பவர் தூத்துக்குடி யில் சில கனவான்கள் முன்னிலையில் நமக்குச் சொன்னார். இது உண்மை யானால் ஸ்ரீ. ஸ்ரீனிவாசய்யங்காரின் பணத்தின் மகிமையே மகிமை. குடி அரசு – செய்தி விளக்கம் – 12.06.1927

நாகையில் வெறுக்கத்தக்க சேதி 0

நாகையில் வெறுக்கத்தக்க சேதி

நாகையில் நமது சகோதரர்களில் சிலர் அதாவது ஜனாப் அப்துல் அமீத்கான், ஜனாப் தங்க மீரான் சாயபு, ஸ்ரீமான் கிருபாநிதி முதலியவர்கள் பிரசாரம் செய்ய வந்த காலையில் கூட்டத்தில் சிலர் மிக இழி தன்மையாய் நடந்து கொண்டதாக பத்திரிகையில் காணப்படுகிறது. (அதாவது கூட்டத்தில் பாதரiக்ஷ எறியப்பட்டதாம்). அது வாஸ்தவமானால் நாகையில் உள்ள எனதன்பான தொழிலாளர் சகோதரர்களும், நாகையில் உள்ள பார்ப்பன ரல்லாத பிரமுகர்களுக்கும் கூட அவமானகரமான காரியமென்றே சொல்லுவோம். இவ்விழித் தகைமை ஆன காரியத்தினால் பார்ப்பனரல்லாத சமூகத்திற்கு வந்த நன்மை என்ன? பொது வாழ்வில் யாவருடைய குற்றத் தையும் ஆண்மையுடன் கண்டிக்க யாவருக்கும் உரிமை உண்டு. இம் மாதிரியான காரியங்களினால் மிகவும் சமூகத்திற்கே அவமானத்தை விளைவிக்கத் தக்கதாகவும் நடந்து கொண்டதற்கும் அக்கூட்டத்தில் நமது பெயரும் நமது பத்திரிகையின் பெயரும் அடிபட்டுக் கொண்டு இம்மாதிரி நடந்ததற்கும் நாம் மிகுதியும் வெட்கமடைகிறோம். பார்ப்பன சூழ்ச்சியின் பயன் என்னவாய் முடிகிறது. பார்ப்பன வஞ்சக புரோசீஜர் கோட் ஆகிய...

“வரதராஜுலுவின் அறிக்கை” ராமசாமியின் சமாதானம் -II 0

“வரதராஜுலுவின் அறிக்கை” ராமசாமியின் சமாதானம் -II

மேல்கண்ட தலையங்கமிட்டு சென்ற வாரம் நான் எழுதிய விஷயங் களுக்கு மறுபடியும் 6-6-27 தேதி “தமிழ்நாடு” பத்திரிகையில் பதில் எழுதுமுகத்தான் சில விஷயங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அப்பதிலின் தன்மையைப் பற்றி விவகரிக்கு முன்பாக அப்பத்திரிகை ஏதாவது ஒரு சமாதானம் எழுத முன்வந்ததற்காக அதைப் பாராட்டுவதுடன் மிகுதியும் மகிழ்ச்சியடைகிறேன். ஏனெனில் இதுவரை ஒரு பத்திரிகையாவது காங்கி ரசைப் பற்றி இவ்வளவு நாளாக நான் எழுதிக்கொண்டு வந்த விஷயங் களுக்கு பதில் என்பதாக ஒரு வரி கூட எழுத முன்வராமல் வழக்கம் போல் தங்கள் தங்கள் “தேசாபிமானப் பிரசாரத்தை” நடத்திக்கொண்டும் பார்ப்பன ரல்லாதார் இயக்கத்தை வைது கொண்டுமே வந்திருக்கின்றன. ஆனால் காரைக்குடி “ஊழியன்” பத்திரிகை கூட ஒரு சமயத்தில் நம்மைப்பற்றி “சுயமரியாதைப் பிரசாரம் செய்வது தேசத்திற்கு ஆபத்து” என்று மாத்திரம் எழுதிற்றே அல்லாமல் காங்கிரசைப் பற்றி நாம் எழுதியதற்கு பதில் ஒன்றும் எழுதவில்லை. “தமிழ்நாடு” துணிந்து எழுத முன் வந்து விட்டதால் இனி ஒரு சமயம்...

“சத்தியாக்கிரகம்” 0

“சத்தியாக்கிரகம்”

ஜாக்கிரதை ! ஜாக்கிரதை !! ஜாக்கிரதை !!! நமது நாட்டில் இப்போது சில தொண்டர்களுக்கு வயிற்றுப் பாட்டிற்கு வேறு மார்க்கமில்லாததால் ஊராரை ஏமாற்றவேண்டி “சத்தியாக்கிரகம்”, “சத்தியாக்கிரகம்” என்று சொல்லி அவர்கள் வயிறு வளர்க்கப் பார்க்கிறார்கள். சத்தியாக்கிரகம் என்பதை விளையாட்டுப் பிள்ளைகள் மண்ணுக் கொழிக்கும் வேலை போல நினைத்துக் கொண்டு அதன் யோக்கியதையைக் கெடுக்கும் விஷயத்தில் நம் நாட்டுத் தொண்டர் என்போர்களில் சிலருக்கு வெகு துணிவு ஏற்பட்டு விட்டது. சத்தியாக்கிரகம் செய்யும் முன் சத்தியாக்கிரகம் செய்யவேண்டிய அவசியம் இன்னது என்பதையும் வெளிப்படுத்தி அதற்கு நாட்டினரின் சம்மதி பெற்று சத்தியாக்கிரக விஷயத்திற்கு செல்வாக்கு உண்டாக்கி அதற்குத் தக்க யோக்கியதை உள்ளவர்களால் துவங்கப் படவேண்டிய காரியம். சத்தியாக்கிரகம் செய்வது பெட்ரோல் எண்ணைக்குப் பக்கத்தில் நெருப்பு புழங்கப்படுவதில் எவ்வளவு ஜாக்கிரதையாய் இருக்க வேண்டுமோ அதுபோல சத்தியாக்கிரகமெனும் நெருப்பை உபயோகிக்க வேண்டியது. தவறினால் தோல்வி ஏற்படுவது மாத்திரம் அல்லாமல் குறிப் பிட்ட லக்ஷியத்திற்கு அழிவு ஏற்படும் என்றே சொல்லுவோம்....

ஈரோடு முனிசிபாலிட்டி 0

ஈரோடு முனிசிபாலிட்டி

ஈரோடு முனிசிபல் சேர்மென் ஸ்ரீமான் சீனிவாச முதலியார் அவர்கள் மீட்டிங்கு கூட்டிய விதத்தைப் பற்றி சென்ற வாரம் எழுதி இருந்தோம். அதாவது சில கவுன்சிலர்கள் முனிசிபாலிடியில் இருப்பதால் ஸ்ரீமான் முதலியாரின் நன்மைக்கும் மற்றும் சில காரியங்கள் செய்வதற்கும் தடையாய் இருப்பதாகக் கருதி அவர்களை நீக்கிவிட வேண்டி ஒரு மீட்டிங்கை ஒரு நாள் 5 1/2 மணிக்குக் கூட்டி 5 மணிக்கே தான் ஆபீசுக்கு வந்து கோரம் இல்லை என்பதாக மீட்டிங்கை ஒத்தி வைத்துவிட்டு வேறு யாரும் வந்து மீட்டிங்கு நடத்தாமல் இருக்கும் பொருட்டு காவலாக தாம் வெளியில் வந்து நின்று கொண்டு இருந்ததும் கவுன்சிலர்கள் வந்து சண்டை போட்டதுமான விஷயங் களைப் பற்றி ஒரு நிரூபர் எழுதியதை சென்ற வாரம் எழுதி ஒரு குறிப்பும் போட்டிருந்தோம். இப்போது அதற்கேற்றாற்போலவே இவ்வாரம் ஒரு அவசர மீட்டிங்கு போட்டு ஒரு கவுன்சிலரை மூன்று மீட்டிங்குகளுக்கு வராததால் அவர் நீக்கப்பட்டு விட்டதாக தானே ஏற்பாடு செய்து...

மித்திரன் நிரூபரின் அயோக்கியத்தனம் 0

மித்திரன் நிரூபரின் அயோக்கியத்தனம்

நமது பத்திரிகாலயத்தில் ஒரு பார்ப்பனர் சூழ்ச்சியால் இரண்டு அச்சுக் கோர்ப்போர்கள் திடீரென்று சொல்லாமல் நின்று விட்டதற்குக் காரணமாக கோவையில் இருந்து மித்திரன் நிரூபர் ஒருவர் மிகவும் அயோக் கியத்தனமான ஒரு நிரூபத்தை மித்திரனுக்கு அனுப்பி இருக்கிறார். அதாவது ஒரு விஷயத்தை நாம் அச்சுக் கோர்க்கும்படி சொன்னதாகவும் அதை அச்சுக் கோர்ப்போர் கோர்க்க மறுத்து வேலை நிறுத்தம் செய்துவிட்டார்கள் என்றும் எழுதியிருக்கிறார். இது மிகவும் அல்ப ஜாதித்தனம் என்றே சொல்லுவோம். எல்லா பத்திரிகை நிரூபர்களுக்கும் மானம், வெட்கம், சுத்த ரத்தோட்டம் முதலிய தன்மைகள் குறைந்தது கொஞ்சமாவது இருப்பதாகக் காண்கிறோம். நமது சுதேசமித்திரன் நிரூபர்களுக்கு மாத்திரம் பெரும்பாலும் இக்குணங்கள் காணப்படுவதே இல்லை. இதன் காரணமும் நமக்குத் தெரிவதில்லை. மித்திரனுக்காவது மனிதத் தன்மையும் யோக்கியப் பொறுப்பும் இருந்தால் அச்சுக் கோர்ப்போர் கோர்க்க மறுத்தது என்ன விஷயம் என்றாவது அல்லது வேறு சமாதானமாவது எழுதுவான் என்று நினைக்கிறோம். நமது பத்திரிகை பதிப்பகத்தில் உள்ள அச்சுக் கோர்ப்போரை கலைக்க...

பாரதத் தாயின் துயரம் 0

பாரதத் தாயின் துயரம்

– சித்திரபுத்திரன் ஏ காங்கிரசே! நீ என்று ஒழிகிறாயோ அன்றுதான் நான் விடுதலை அடைவேன். நீ இப்போது பாரதத் தாயாகிய என்னை மீளா நரகத்திலாழ்த்தி விட்டாய். என் மக்களில் பெரும்பாலோரை அயோக்கியர்களாக்கி விட்டாய். யோக்கியமான மக்களை குறைத்து விட்டாய். நீ இல்லாமலிருந்தால் இப் போது தலைவர்கள் தேசபக்தர்கள் என்று சொல்லிக் கொள்ளும் அனேக அயோக்கியர்கள் என் சார்பாய் பேசி வயிறு வளர்க்க முடியுமா? நீ இல்லா விட்டால் எனது அருமைப் புத்திரனான காந்தி மகான் எனக்காகச் செய்த தவமும் தியாகமும் ஆத்ம சக்திப் பிரயோகமும் பலனற்றுப் போகுமா? நீ இல்லா விட்டால் உன்னுடைய உபத்திரவம் இல்லாவிட்டால் எனது அருமை மகன் மகாத்மா மூலையில் உட்காரமுடியுமா? நீ இல்லாவிட்டால் பம்பாயில் கூடிப் பேசிய அயோக்கியர்களும் சுயநலக்காரரும் துரோகிகளும் “ஜனப் பிரதிநிதிகள்” ஆவார்களா? என் பெயரைச் சொல்லி என்னைக் காட்டி கொடுத்து மாதம் 1 – க்கு 1000, 2000, 3000, 4000, 5000,...

குட்டு வெளியாய் விட்டது 0

குட்டு வெளியாய் விட்டது

பார்ப்பன சுயராஜ்யக் கட்சியின் மோசத்தை வெளியிட உடனே சம்பள பிரேரணையை எதிர்க்க வேண்டும் என்று நமது “ குடி அரசு” கூறிற்று, சட்டசபையில் மைனாரடி கட்சியார் எதிர்க்கக்கூடாதென்கிறார்கள். மந்திரி சம்பள விஷயத்தைப் பற்றி ஆலோசித்த அநேக கூட்டங்கள் சீனிவாசய்யங் கார் பங்களாவில் கூடியது யாவும் அந்தரங்கம் வெளியிட முடியாது என்றார்கள். முடிவில் சம்பளப் பிரேரபணையின் பொழுது வெளியே போய் விட்டார்கள். இவையாவும் சுத்த புரட்டென்றும் மந்திரி கட்சியை கைவிட்டு விடாதீர்கள் என்று நேருவும், சீனிவாசய்யங்காரும் தந்தி கொடுத்தார் களென்பதையும், அண்டப்புளுகர் திரு. சத்தியமூர்த்திக்கு மாதா மாதம் சம்பளம் மந்திரிகளால் கொடுக்கபடுகிறதென்றும் “குடி அரசு” அக்காலத் திலேயே கூறியிருக்கிறது. இவைகளை யாரும் மருக்கவில்லை. இச்சம் பவத்தை யொட்டி எண்ணற்ற, அர்த்தமற்ற அறிக்கைகள் வெளிவந்தது. நேற்றைய ஐயங்கார், ஐயர் சண்டையில் குட்டு வெளியாயின. சத்தியமூர்த்தியிடமிருந்து டெல்லியில் கிடைத்த தந்தியை சினிவாசய் யங்கார் எனக்கு காட்டி அதன்படி நடக்கவேண்டுமென்றும் கூறினார். எங்கள் மாகாணக் கமிட்டி தடுத்திருப்பதால்...

ஐயங்காருக்கு அமெரிக்கா மாதின்  நற்சாக்ஷி பத்திரம் 0

ஐயங்காருக்கு அமெரிக்கா மாதின் நற்சாக்ஷி பத்திரம்

ஸ்ரீ.ளு.சீனிவாசஐயங்காருடையவும் அவர்தம் சிஷ்ய கோஷ்டிகளு டையவும், மோசத்தைப் பற்றியும் அவர்களது தேசத்துரோகம் நாணயமற்ற தனம் பார்ப்பனரல்லாதாரிடம் துவேஷம் திறமையின்மை ஆகியதுகளைப் பற்றியும் நாம் பன்முரை எடுத்துக் காட்டி இருக்கிறோம். அதற்கு அனுசரனை யாக அநேக சாக்ஷிகளும் குவிய ஆரம்பித்த இக்காலத்தில் ஐயங்கார் கூறும் ஒரே பதில் யாதெனில் “ நான் பலர்களுக்கு கொடுத்து வந்த பணத்தை நிருத்தி விட்டேன் அதற்குத்தான் இவ்விதம் கூருகிறார்கள். அதை நம்பாதீர்கள்” என்கிறார். ஆனால் இன்று ஐயங்கார் யோக்கியதையைப் பற்றி, ஓர் அமெ ரிக்கா மாது சொல்வதற்கென்ன சொல்கிறார். மிஸ். கிரேஸ் ஹட்சின்ஸ் என்ற அமெரிக்கா மாது எழுதுவதாவது, “மகாத்மா காந்தி அரசியல் விஷயங் களிலே தலையிடுவதில்லை. அவர் சமய இயக்கத்தையே நடத்திவருகிறார். இந்தியா உயர்ந்த வாழ்வை பெறவேண்டுமானால் அது அங்குள்ள 7000 கிராமங்களின் வாயிலாகவே முடியும்” ………………………………………….. “ இந்தியன் நேஷனல் காங்கிரஸுக்குத் தலைமை வகித்தவர் ளு. சீனிவாச ஐயங்கார் என்ப வர், நடுத்தரமான யோக்கியதை...

“வரதராஜுலு அறிக்கை” க்கு ராமசாமியின் அபிப்பிராயம் 0

“வரதராஜுலு அறிக்கை” க்கு ராமசாமியின் அபிப்பிராயம்

தமிழ்நாடு” பத்திரிகையின் ஜுன் µ 3 – ம் தேதி தலையங்கமாகிய “வரதராஜுலு அறிக்கை” என்னும் விஷயத்திற்கு நான் ஏதாவது சமாதானம் சொல்ல வேண்டும் என்பதாக நமது வாசகர்கள் எதிர் பார்க்கக் கூடுமென் பதாக நினைத்தே அதே தலையங்கமிட்டு இவ்வியாசத்தைத் துடங்குகிறேன். ஸ்ரீ வரதராஜுலு அறிக்கையின் முதல் வாக்கிய ஆரம்பத்தில் “காங்கிரஸ் மகாசபையே தேசத்தில் பிரதானமானது” என்பதாக ஆரம்பிக்கப்பட் டிருக்கிறது. அது எந்த விஷயத்தில் யாருக்குப் பிரதானமானது? எந்த தேசத்திற்குப் பிரதானமானது? தேசத்தில் உள்ள 33 கோடி மக்களில் எந்த வகுப்பாருக்கு எந்தக் கூட்டத்தாருக்கு பிரதானமானது? தென்னாட்டில் படித்த வகுப்பாரான பார்ப்பனருக்கும், வடநாட்டில் படித்த கூட்டத்தாரான சிலருக்கும் உத்தியோகம் சம்பாதித்துக் கொடுப்பதற்கும், அவர்களை வாழ வைக்கவும் பிரதானமானதே அல்லாமல் வேறு யாருக்கு? எதற்கு? அதனால் என்ன பிரயோஜனமுண்டென்றும் கேழ்க்கிறேன்? காங்கிரஸ் ஏற்பட்டு 40 வருஷத்திற்கு மேலாகியும் தேசமக்களின் பெரும்பாலோரான விவசாயி, தொழிலாளி, குடியானவன் ஆகிய கூட்டத்தாருக்கு என்ன நன்மை செய்திருக் கிறது?...

அருஞ்சொல் பொருள் 0

அருஞ்சொல் பொருள்

அதைரியம் – பயம் அத்தியந்த – நம்பகமான அவிவேகம் – அறிவற்று, பகுத்தறிவு இன்றி அனாமத்து – தனி, தனி நிலை, வேறு நிலை அஸ்வார்சமாய் – ஈடுபாடின்றி ஆவலாதி – குறை கூறுகை ஆஸ்பதமான – இடமான, பற்றுக்கோடான கலர – கலந்துகொள்ள, கலந்து வாழ கொம்பு தம்பட்டம் – தாரை தப்பட்டை சிலாசாசனம் – கல்வெட்டு சுசீலமாக – நற்பண்புடன் தத்துக்கள் – தடைகள் துராக்கிரகம் – வீண்பகை, வீணாசை, பேராசை துர்ராக்கிரகம் துரந்தரர்கள் – பொறுப்பாளர்கள், தாளாளர்கள் நியமம் – சமயக் கடைமை, நன்னெறி பரியந்தம் – அதுவரை, எல்லை பால்யை – இளம்பெண் பிரக்யாதி – நன்கு அறியப்படுதல், கீர்த்தி, பிரீதி – விருப்பம், விழைவு மனக்கிலேசம் – மனக்கலக்கம், துயரம் ஜன்மிகள் – நிலக்கிழார்கள், ஜமீன்தார்கள்

ஸ்ரீ சு.மு. ஷண்முகம் செட்டியார் கவனிப்பாரா? 0

ஸ்ரீ சு.மு. ஷண்முகம் செட்டியார் கவனிப்பாரா?

காங்கிரஸ் கிரீட் என்னும் முக்கிய கொள்கையில் ஜாதி வித்தியாசத்தை ஒழிப்பதையும் ஒரு கொள்கையாகத் திருத்த வேண்டு மென்று காங்கிரசுக்கு சிபார்சு செய்வதாக சேலம் மகாநாட்டில் தீர்மானித்த தீர்மானத்தை காங்கிரசில் பிரேரேபிப்பதாய் ஸ்ரீமான் ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் ஒப்புக் கொண்ட படி காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் அவர் பிரேரேபணை கொண்டு வருவாரா? என்று கேட்கின்றோம். இப்பிரேரேபணை காங்கிரசில் நிறைவேறாது என்பது நமக்குத் தெரிந்திருந்தாலும், நிறைவேறினாலும் அதனாலேயே பிரமாதமான பலன் ஏற்பட்டுவிடாது என்பது உறுதியானாலும் மக்களுக்குள் சமத்துவம் ஏற்பட வேண்டியது காங்கிரசின் நோக்கமல்ல என்பதையும், சுயராஜ்யம், சுயராஜ்யம் என்று சொல்லி படித்தவர்கள் உத்தியோகம் பெறவேண்டியதுதான் அதன் நோக்கம் என்பதையும் ருஜுவாக்க இதுவும் ஒரு சந்தர்ப்பமாகுமே என்கின்ற ஆசையால்தான் இதை ஸ்ரீமான் செட்டியார் அவர்களுக்கு ஞாபகமூட்டி கவனிக்கும்படி வேண்டுகின்றோம். குடி அரசு – வேண்டுகோள் – 25.12.1927

மகாத்மாவைப் பற்றி “தமிழ்நாடு” வின் கவலை 0

மகாத்மாவைப் பற்றி “தமிழ்நாடு” வின் கவலை

“தமிழ்நாடு” பத்திரிகையானது 16-12-27 தேதி உபதலையங்கத்தில் கண்ணோட்டம் என்னும் தலைப்பின் கீழ் ஒரு வியாசம் எழுதி இருக்கின்றது. அதில் ஸ்ரீமான் காந்தி அவர்களை மகாத்மா என்று சொல்லாமல் வெறும் காந்தி என்று சொல்வதால் தனக்குப் பெரிய கவலை ஏற்பட்டு விட்டதாகக் காட்ட வெளிவந்து, உலகம் போற்றும் உத்தமர்களில் மகாத்மா காந்தி ஒருவர் என்றும், அதை மறுப்பவர் ஒன்று இழிகுணம் படைத்தவராக இருக்க வேண்டும் அல்லது மதியற்றவர்களாக இருக்கவேண்டுமென்றும் எழுதியிருக் கிறது. மகாத்மா காந்தி என்பவரை ஸ்ரீமான் காந்தி என்று சொல்வதால் இழி குணப் பட்டமும், மதியற்ற பட்டமும் வந்தாலும் வரட்டும் நமக்கு அதைப் பற்றி கவலையில்லை. ஸ்ரீமான் காந்தி என்றைய தினம் மக்களுக்குள் வருணம் நான்கு உண்டு. அதுவும் அவைகள் பிறவியில் ஏற்படுகின்றன. அந்தந்த வருணத் தானுக்கும் ஒவ்வொரு தர்மம் உண்டு. அதைத்தான் அவனவன் செய்ய வேண்டும் என்று சொல்லுகிறார் என்பதாக நாம் உணர்ந்தோமோ அன்றே அவரிடம் மகாத்மா தன்மை அங்கு...

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட்டம் 0

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கூட்டமும் அதில் நடந்த விஷயங் களும் ‘தமிழ்நாடு’ பத்திரிகையில் பார்த்தால் விளங்கும். எவ்வளவு தந்திரமாகவும், ஒழுங்கீனமாகவும் தேர்தல்களை நடத்தி இருக்கின்றார்கள் என்பதைப் பார்க்கும்போது காங்கிரஸ் தலைவர் என்பவ ரான ஸ்ரீ சீனிவாசய்யங்காரின் யோக்கியதையைவிட அதில் கலந்து கொண்டவர்களின் யோக்கியதையே பெரிதும் கவனிக்கத்தக்கது. கோவையில் கூடிய பார்ப்பனரல்லாதார் மகாநாட்டில் காங்கிரசில் சேரப் பிரியமுள்ளவர்கள் காங்கிரசில் சேரலாம் என்பதாக ஒரு தீர்மானம் நிறைவேறியவுடன் பார்ப்பனர்கள் தங்களது அடிமைகளல்லாத வேறு யாரும் காங்கிரசிற்குள் நுழைந்துவிடாதபடி எவ்வளவு நிர்பந்தங்கள் ஏற்படுத்தினார் கள் என்பதை பொது வாழ்வில் கலந்துள்ள யாரும் அறியாமல் இருக்க முடியாது. காங்கிரசில் சேர்க்கும் இரசீதுகளை தாங்களே தங்களுக்கு வேண்டிய வர்களுக்கே வினியோகித்து தங்கள் சொற்படி கேட்பவனை மாத்திரம் சேர்க்கும்படி கட்டளையிட்டதை யாராவது மறுக்க முடியுமா? அப்படி யிருந்தும் தங்களுக்கு வேண்டாதவர்கள் யாராவது எந்த நிர்வாக கமிட்டி யிலாவது சேர்ந்துவிட்டால் அவர்களை ஒழிக்க வேறு கமிட்டிகளை ஏற்படுத்தச் செய்து ஏற்கனவே ஏற்பட்ட...

சென்னையில் ஏமாற்றுந் திருவிழா 0

சென்னையில் ஏமாற்றுந் திருவிழா

இவ்வாரத்தில் சென்னையில் மக்களை ஏமாற்றுந் திருவிழாக்கள் பல நடக்கப் போவதாக விளம்பரங்கள் எங்கு பார்த்தாலும் பறக்கின்றன. இதைக் கண்டு அநேக ஆயிரமக்கள் வெளியூர்களிலிருந்து சென்னைக்கு போகவும் கூடும். சர்க்கார் காரியாலயங்களுக்கும் பள்ளிக்கூடங்களுக்கும் விடுமுறை நாளானதாலும் வக்கீல்களுக்கும் உபாத்தியாயர்களுக்கும் ஓய்வு காலமான தாலும் விவசாயக்காரருக்கும் வேலை ஒழிந்த காலமானதாலும் வியாபாரி களுக்கும் வேலையில்லாத காலமானதாலும் ரயில் சத்தமும் இதை உத்தே சித்து குறைக்கப்பட்டிருக்கிறதாலும் இம்மக்களை அவ்விளம்பரங்கள் சுலபமாக கவர்ந்து விடுவதில் அதிசயம் ஒன்றுமில்லை. இம்மக்களல்லாத பிரபுகளுக்கும் சுகவாசிகளுக்கும் இம்மாதிரி ஒரு சந்தர்ப்பம் கிடைப்பதே அரிதானதால் அவர்களும் இதில் கலந்து இக்கூட்டத்தில் காணப்படுவதில் ஆச்சரியமுமில்லை. ஆனால் இவ்வேமாற்றுந்திருவிழாக்களில் நிர்வாகிகள் யார்? கொள்கைகள் என்ன? அதனால் மக்களுக்கு ஏற்படும் பலன் என்ன? என்பவைகள் தான் இங்கு கவனிக்கத்தக்கது. இத்திருவிழாவின் விளம்பரத்திற்கு பங்கு எடுத்துக்கொள்ளாத பத்திரிகைகளே நமது நாட்டில் மிக மிக சொற்பம். ஏனெனில் மனிதன் இது சமயம் நம்நாட்டில் வாழவும் பத்திரிகைகள் நடைபெறவும் இத்திருவிழாக் களின்...

தூத்துக்குடி திரு. சோமசுந்தரம் பிள்ளை                     “நவசக்தி” யில் எழுதிய                                   “இந்து மதமும் வைக்கம் வீரரும்”                    என்ற கட்டுரைக்குச் சமாதானம் 0

தூத்துக்குடி திரு. சோமசுந்தரம் பிள்ளை “நவசக்தி” யில் எழுதிய “இந்து மதமும் வைக்கம் வீரரும்” என்ற கட்டுரைக்குச் சமாதானம்

ஸ்ரீமான் தூத்துக்குடி கா. சோமசுந்தரம் பிள்ளை அவர்கள் ‘இந்து மதமும் வைக்கம் வீரரும்’ என்பதாக ஒரு வியாசம் 7-12-27 தேதி ‘நவசக்தி’யில் எழுதி இருக்கிறார். அதற்கு சமாதானமாக பல கனவான்கள் ஆராய்ச்சி மூலமாகவும் மற்றும் பொதுவாகவும் வியாசங்கள் எழுதி பிரசுரிக்க நமக்கு அனுப்பி இருக்கின்றார்கள். நாம் அவற்றை அவ்வியாசம் தோன்றிய பத்திரிகைகளுக்கு அனுப்பும்படி எழுதி விட்டோம். நம்மையும் பிரசுரிக்கும் படி வற்புறுத்தினால் ஒருக்கால் பிரசுரிக்கலாம். ஆனாலும் அவைகள் பிரசுரமாகும் முன்பு நமது சமாதானத்தை தெரிவிக்க விரும்புகிறோம். அவ்வியாசத்தின் சாராம்சத்தை முதலில் சுருக்கமாக குறிப்பிடுவோம். 1. “நாயக்கர் பேச்சிலும் எழுத்திலும் இந்து மதத்தை மனம் போனவாறு இழிந்து கண்டித்து வருகிறார்….. 2. பிராமணரல்லாதார் முன்னேற்றத்திற்கு என்று கூறும் முறையில் அவரது கூற்றால் அச்சமூகத்தாருக்கு எவ்வித மதஉணர்ச்சியும் அற்றுப்போகும்…… 3. மதவுணர்ச்சியற்று நாஸ்திகம் பரவும்படி செய்வதே இவரது தொண்டாயிருக்கின்றது………… 4. இத்தொண்டின் பயனாய் தேசாபிமானிகள், மதாபிமானிகள் ஆகியவர்கள் மனம் புண்படுகின்றது…………….. 5. ய இவர்...

பைத்தியக்காரனுக்கும் உஷார்காரனுக்கும் 0

பைத்தியக்காரனுக்கும் உஷார்காரனுக்கும்

சம்பாஷணை – சித்திரபுத்திரன் பைத்தியக்காரன் : ஸ்ரீமான்கள் பிரகாசமும், சாம்பமூர்த்தியும் இப்போது ஸ்ரீமான்கள் சீனிவாசய்யங்கார் சத்தியமூர்த்தி முதலியவர்களுடன் சண்டை போட்டுக் கொண்டு ஒருவருக்கொருவர் பார்ப்பனக் குட்டுகளை வெளியாக்கி வருகிறார்களே, இந்த சமயத்தில் நாம் காங்கிரசைப் பிடித்துக் கொள்ளலாமே? உஷார்காரன் : அட போடா! பைத்தியக்காரப் பயலே. பார்ப்பனர்கள் சங்கதி உனக்குத் தெரியாதா? சுயராஜ்யப் பத்திரிகைக்கு ஏதாவது கொஞ்சம் பணம் வேண்டியிருக்கும். இல்லாவிட்டால் ஆந்திர தேசத்தில் சுயராஜ்யக் கட்சியையும் சீனிவாசய்யங்கார் கோஷ்டியையும் திட்டினால்தான் மதிப்புக் கிடைக்கிறதாகவிருக்கும். அதற்காக ஸ்ரீமான்கள் பிரகாசமும் சாம்பமூர்த்தி யும் போட்ட புது வேஷமேயல்லாமல் இதில் நமக்கொன்றும் லாபமில்லை. மேற்படி இரண்டு யோக்கியர்களும் சட்டசபைத் தேர்தலின் போது செய்த உபத்திரவம் உனக்குத் தெரியாதா? இவர்கள் ஜஸ்டிஸ் கக்ஷியை வைதது உனக்குத் தெரியாதா? இதே ஸ்ரீமான் சாம்பமூர்த்தி முழங்காலுக்கு மேல் வேட்டியைக் கட்டிக்கொண்டு காந்தியைப் போல் வேஷம் போட்டுக்கொண்டு பார்ப்பனரல்லாதாரை திட்டவில்லையா? பார்ப்பனரல்லாதார் என்கிற சண்டை வரும் போது திடீரென்று எல்லாப்...

முடியுமா? 0

முடியுமா?

இவ்வருஷம் நடைபெறப்போகும் காங்கிரஸ் மகாநாட்டில் காங்கிரஸ் கொள்கையில் ஒரு திருத்தம் செய்ய வேண்டும் என்பதாக சேலம் மகா நாட்டில் ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது நேயர்களுக்கு நினைவிருக் கலாம். அதன் கருத்தாவது:- “இந்திய சமூக வளர்ச்சிக்கும் சுயராஜ்யம் விரைவில் பெருதற்கும் ஜாதி வித்தியாசம் முதலிய சமூக ஊழல்கள் விரோதமாயிருப்பதால் அவற்றையும் ஒழிப்பது காங்கிரசின் முக்கிய கொள்கையாக இருக்க வேண்டும். இது அடுத்த காங்கிரசில் திருத்தப்படவேண்டும்” என்பதே. ஆகையால் இத்தீர்மானங்களை பிரேரேபிக்கவேண்டும் என்பதாக ஸ்ரீ ஆர்.கே. ஷண்முகம் செட்டியார் அவர்களை பலர் கேட்டுக் கொண்டுமிருக் கிறார்கள். அவரும் ஆகட்டும் என்று வாக்களித்திருக்கின்றார். ஆனால் அவர் இவ்வருஷம் எல்லா இந்திய காங்கிரஸ் கமிட்டிக்கு தெரிந்தெடுக் கப்பட்டால் தான் இதை பிரேரேபிக்க முடியும். இந்த உளவு தெரிந்த பார்ப்ப னர்கள் கண்டிப்பாய் இவ்விஷயத்தில் சூழ்ச்சி செய்வதாயிருந்தாலும் பார்ப் பனரல்லாத மாகாணக் கமிட்டி மெம்பர்களாவது அவரை தெரிந்தெடுத்து இந்த விஷயத்தைப் பற்றி பேசவாவது சந்தர்ப்பம் அளிப்பார்களா என்பது உறுதி...

எதிர்பார்த்த எதிர்ப்புகள்      I 0

எதிர்பார்த்த எதிர்ப்புகள் I

நாம் சில காலமாக எதிர்பார்த்திருந்தபடியே நமது தொண்டிற்கு ஸ்ரீமான்கள் வரதராஜுலுவும், கல்யாணசுந்தர முதலியாரும் வெளிப்படை யாய் வந்து எதிர்க்க நின்று விட்டார்கள். இனி இதில் ரகசியம் ஒன்றும் இல்லை. இவர்களை மூடி மூடி வைத்து எவ்வளவு தூரம் சரிப்படுத்த பார்க்கலாம் என்று நினைத்தோமோ அவ்வளவுக்கவ்வளவு அஸ்திவாரத்துடன் எதிர்க்க சவுகரியம் செய்து கொண்டு ஆரம்பித்துவிட்டார்கள். ஸ்ரீ வரதராஜுலு வழக்கம்போல் ஒரு கொள்கையும் இல்லாமல் வாயில் வந்த வார்த்தைகளை உளறிக் கொண்டு தேசீயம் என்கின்ற ஆயுதத்தின் மூலமாய் மறுபடியும் வெளியாய்விட்டார். ஸ்ரீ முதலியார், அவருக்கு அண்ணனாய் சமயம் சீர்திருத்தம் என்னும் ஆயுதத்தைக் கொண்டு வெளியாய்விட்டார். எனவே இவைகளுக்கு பதில் சொல்லித் தீரவேண்டியது நமது கடமையாய் போய்விட்டது. இருவரும் தாங்கள் ஆத்திரப்படும் விஷயம் இன்னது என்பதைக் குறிப்பிடாமலும் நமது பெயரையும் நமது பத்திரிகையின் பெயரையும் நாம் என்ன சொல்கின்றோம் என்பதையும் குறிப்பிடாமலும் நமக்கும் நாம் எழுதினவைகளுக்கும் தாங்கள் என்ன சமாதானம் சொல்லுகிறார்கள் என்பதைக் குறிப்பிடாமலும் ஜாடை...

பட்டுக்கோட்டை தாலூக்கா பேராவூரணியில் சுயமரியாதை மகாநாடு 0

பட்டுக்கோட்டை தாலூக்கா பேராவூரணியில் சுயமரியாதை மகாநாடு

நானும் எனது சகாக்களும் எதைச் சரி என்று உணர்ந்தோமோ, அதையே எல்லோரும் அனுஷ்டிக்க வேண்டுமென்ற கருத்துடனேயே இயன்ற தொண்டு செய்து வருகிறோம். எங்களுக்கு இத்தொண்டு வயிற்றுப் பிழைப்புக்காக ஏற்பட்டதல்லவென்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். நாம் இந்நாட்டில் பிறந்து இந்நாட்டில் வளர்ந்து வீரத்துடனும் கீர்த்தியுடனும் வாழ்ந்து வந்து இன்று அன்னியர்கள் ஏமாற்றத்தில் அகப்பட்டு சுயமரியாதை அற்று மிருகங்களைப் போல் நடத்தப்பட்டு வரும் கொடுமைகளைக் கண்டே அதை நிவர்த்திக்க உழைத்து வருகின்றோம். ஏனெனில் நமது மக்களில் 100-க்கு 90 பேர் இப்போது கிணற்றுத் தவளையாகவே இருந்து வருகின்றனர். உலகத்தின் இதர தேசங்களையும் அத்தேசத்தாரின் நிலைமையையும் அவர்களது பழக்க வழக்கங்களையும் மற்ற காரியங்களையும் நம்மில் அநேகர் தெரிந்து கொண்டிருக்கவில்லை. இது விஷயங்களையறிந்து நமது நிலைமையையும் கவனித்து எங்கள் புத்திக்குச் சரியென்று பட்டதைச் சொல்லவே முன் வந்திருக்கின்றோம். அதை நீங்கள் செம்மையாய் கவனித்து யோசனை செய்து பார்த்து உங்கள் புத்திக்குச் சரியென்று பட்டால் அதைச் செய்ய வேண்டுமென்றே உங்களை...

ஸ்ரீனிவாசய்யங்காரும் மிரட்டலும் 0

ஸ்ரீனிவாசய்யங்காரும் மிரட்டலும்

ராயல் கமிஷனில் மகமதிய சமூகம் அதாவது எந்த எந்த மாகாணத்தில் அச்சமூகம் அதிகமாய் இருக்கின்றதோ அங்கெல்லாம் அதாவது பஞ்சாப், அலஹாபாத், கல்கத்தா முதலிய இடங்களிலுள்ள பிரபலஸ்தர்களும் மகமதிய பிரதிநிதிகளும் பஹிஷ்காரக் கூட்டத்தில் மகமதியர் சேரக் கூடாது என்று தீர்மானித்துவிட்டதையறிந்த ஸ்ரீ சீனிவாசய்யங்கார் அம்மகமதியர்களை மிரட்ட ஆரம்பித்திருக்கிறார். அதாவது பஹிஷ்கார இயக்கத்தில் மகமதி யர்கள் சேராவிட்டால் சர்க்காருடன் தாங்கள் சேர்ந்து கொண்டு மகமதியர் களை துன்புறுத்த நேரிடும் என்று சொல்லுகின்றார். இது ஸ்ரீசீனிவாசய்யங்கார் சொல்லுவதல்ல. அந்த ஜாதி சொல்வதென்றுதான் சொல்லவேண்டும். அக்கூட்டம் இதுவரை அப்படியேதான் செய்து வந்திருக்கின்றது. இந்து அரசாங்கத்தை ஒழித்து மகமதிய அரசாங்கத்தை கொண்டு வந்ததும் இந்த கொள்கைதான். மகமதிய அரசாங்கத்தை ஒழித்து வெள்ளைக்கார அரசாங் கத்தைக் கொண்டு வந்ததும் இந்த கொள்கைதான். இப்போது அந்த வெள்ளைக்கார அரசாங்கத்தை மிரட்டி தங்கள் ஆதிக்கத்தை பலப்படுத்திக் கொண்டுவருவதும் இந்தகொள்கைதான். ஆகவே சுயமரியாதை உள்ள மகமதியர்கள் இதற்குச் சரியான பதில் கடாவுவார்களே அல்லாமல் பயந்துகொண்டு...

பார்ப்பனரல்லாதார் கக்ஷி சட்டசபை மெம்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை 0

பார்ப்பனரல்லாதார் கக்ஷி சட்டசபை மெம்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை

புதிய சட்டசபை கூடி சுமார் ஒரு வருஷமாகின்றது. இந்த ஒரு வருஷ காலத்தில் பார்ப்பனரல்லாதார் சமூகத்திற்கு சட்ட சபையின் மூலம் நிகழ்ந்த நன்மைகள் என்ன வென்று பார்ப்போமானால் ஒன்றும் இல்லையென்று சொல்ல வேண்டியதுடன் பல கெடுதிகள் நடந்திருப்பதாகவும் சொல்லாம லிருக்க முடியாது. புது சட்டசபை கூடிய உடன் முதன் முதல் நடந்த சங்கதி பார்ப்பன ரல்லாதார் ஆதிக்கத்தில் இருந்த தாலூக்கா ஜில்லா போர்டுகளை பார்ப்பன ஆதிக்கத்திற்கு கொண்டு வர முயற்சிக்கப் பட்டது. அதிலும் பார்ப்பனர்களே சிறிது வெற்றி பெற்றார்கள். அடுத்தபடியாக ‘ஜஸ்டிஸ்’ மந்திரிகள் காலத்தில் ஏற்படுத்தப்பட்டி ருந்த சர்வகலாசாலை – யுனிவர்சிட்டி சட்டத்தை திருத்தி அந்த இலாக்கா முழுவதும் பார்ப்பன மயமாக்க ஸ்ரீ சத்தியமூர்த்தியால் ஒரு சட்டம் கொண்டு வரப்பட்டு சட்டசபையில் இருக்கிறது. மூன்றாவதாக, பார்ப்பனரல்லாதாரை ஒழிக்க பெரிதும் போராடி பாடுபட்டு வருவதாகிய வருணாசிரம தர்மத்திற்கு சட்டசபை ஆதரவளித்து வருவதற்கு அறிகுறியாகப் பிராமணன், க்ஷத்திரியன், வைசியன், சூத்திரன், பஞ்சமன் என்கின்ற பாகு...

பார்ப்பனர் சொல்லுகிறபடி பணம் கொடுக்காவிட்டால்  அதற்கு பெயர் காங்கிரஸ் துவேஷமாம் 0

பார்ப்பனர் சொல்லுகிறபடி பணம் கொடுக்காவிட்டால் அதற்கு பெயர் காங்கிரஸ் துவேஷமாம்

சென்னைக் கார்ப்பரேஷன்காரர் காங்கிரஸ் பொருட்காட்சிக்கு ரூபாய் கொடுக்கக் கூடாதென்று ஜஸ்டிஸ் கட்சியார் ஆட்சேபித்ததற்காக அவர்களை காங்கிரஸ் துவேஷிகள் என்று பார்ப்பனப் பத்திரிக்கைகள் விஷமப் பிரசாரம் செய்கின்றன. காங்கிரஸ் பொருள்காட்சி என்ற பெயர் வைத்துக்கொண்டு காங்கிரஸ் பெயரால் வெள்ளைக்காரர்கள் பொருள்களை காட்சி சாலை வைப்பதாக வெள்ளைக்கார கம்பெனியிடம் ரகசியமாய் ஒப்பந்தம் பேசி லஞ்சம் வாங்கிக் கொண்டு இவர்கள் நடத்தும் பொருட்காட்சிக்கு பணம் கொடுக்கா விட்டால் அதற்கு பெயர் காங்கிரஸ் துவேஷம் என்றால் அதற்கு நாம் பயப்படுவதா என்கின்றோம். பட்டாஸ் வெடி விற்றுத் தருவதாகவும் கல்பூரம் விற்றுத் தருவதாகவும் சைனாக்காரரிடம் ஒப்பந்தம் பேசி கூலி வாங்கிக் கொண்டு பண்டிகையும் பூசையும் பார்ப்பனர் ஏற்படுத்தி இருந்தால் பட்டாசு வாங்காதீர்கள் கல்பூரம் கொளுத்தி புகையாக்காதீர்கள் என்று நாம் சொன்னால் அது மத துவேஷமும் சாமி துவேஷமும் ஆகுமா என்று கேட்கின்றோம். இந்தப் பார்ப்பனர்கள் இப்படியே நம்மை மிரட்டி மிரட்டி கை கண்டு விட்டாலும் நம்மில் சில கேனங்களும்...

பஹிஷ்காரமும் ஜஸ்டிஸ் கக்ஷியும் 0

பஹிஷ்காரமும் ஜஸ்டிஸ் கக்ஷியும்

பஹிஷ்காரக் கூட்டத்தில் ஜஸ்டிஸ் கட்சியாரும் சேர்ந்து கொண்டால் தேவலாம் போல அக் கட்சி பிரமுகர்களுக்கு தோன்றுவதாய்த் தெரிகின்றது. ஏனெனில் பாமர ஜனங்களிடம் தங்களுக்குச் செல்வாக்கில்லை என்று நினைப்பதுடன் அரசாங்கத்தாரும் தங்களைக் கண்டால் பயப்படுவதில்லை என்றும் நினைப்பதாய்க் காணப்படுகிறது. அவர்கள் அப்படி நினைத்திருப் பது தப்பு என்பது நமது கெட்டியான அபிப்பிராயம். பாமர மக்கள் எப்போதும் பாமர மக்களாகவே இருக்க முடியாது. இப்பொழுது சற்று கண்விழித்துக் கொண்டு வருகின்றார்கள். பாமர மக்களிடம் செல்வாக்குப் பெற்று ஏதாவது நன்மை செய்ய வேண்டுமானால் பாமர மக்கள் மனம் மகிழும்படியான மாதிரி யிலேயே போய்க் கொண்டிருப்பதினால் ஒருபலனும் ஏற்படாது. அவர்கள் உண்மையை உணர்ந்து நன்மையைக் கடைபிடிக்கும்படி செய்ய வேண்டும். அதற்காக காத்திருந்தாலும் குற்றமில்லை. இரண்டொரு தடவை தோல்வி ஏற்பட்டாலும் குற்றமில்லை. இல்லாவிட்டால் முக்கியமான சமயத்தில் ஆபத்து வந்துவிடும். பிறகு சுலபமாய் திருத்த முடியாமலும் போய் விடும். ஆதலால் தக்க அஸ்திவாரத்துடனும் நிலையான கொள்கைகளுடனும் வேலை செய்ய வேண்டியதுதான்...

ராயல் கமிஷன் பஹிஷ்காரத்தின் யோக்கியதை 0

ராயல் கமிஷன் பஹிஷ்காரத்தின் யோக்கியதை

ராயல் கமிஷன் பஹிஷ்காரத்திற்கு இந்தியா முழுவதற்கும் இப்போது இரண்டு தலைவர்கள்தான் முக்கியமானவர்கள். அவர்களில் காங்கிரஸ் தலைவர் என்கின்ற முறையில் ஸ்ரீமான் சீனிவாசய்யங்கார் ஒருவர். மற்றப்படி சட்ட ஒழுங்குக்கு கட்டுப்பட்ட கக்ஷிக் காரர்கள் தலைவர் என்று ஸ்ரீமதி பெசண்டம்மையார் இரண்டாமவர் ஆவார். மற்றவர்கள் எல்லோரும் இவர்கள் இருவர்களில் கட்டுப்பட்டவர்கள். எனவே, இந்த இருவருக்குள்ளாகவும் பலமான அபிப்பிராய பேதம் ஏற்பட்டு விட்டது. ஆனால் புரட்டுக்கார பத்திரிகைகள் இதை ஜனங்கள் அறியாதபடி சந்திலும் பொந்திலும் போட்டு மறைத்து வைத்து வருகின்றன. ஆனாலும் சமீபத்தில் வெளியாகித்தான் தீரும். என்னவெனில் பஹிஷ்காரப் பேச்சு பேசும் தலைவர்கள் அநேகமாய் புரட்டர்கள் என்றும் தங்களுக்கு மானம் போய் விட்டதாக வேஷம் போடு கிறார்கள் என்றும் உண்மையிலேயே பார்லிமெண்டார் இந்தியரை கமிஷ னில் நியமிக்காததானது இவர்களது சுயமரியாதைக்கு பங்கமாயிருப்பதாக கருதுவார்களானால் அதே பார்லிமெண்டாரால் நியமிக்கப்பட்ட மற்ற பதவி களில் இருக்கலாமா என்றும் அதாவது சட்டசபை, ராஜாங்க சபை மற்றும் அது சம்மந்தமான பதவி...

ஐந்துக்கு இரண்டு பழுதில்லை – சித்திரபுத்திரன் 0

ஐந்துக்கு இரண்டு பழுதில்லை – சித்திரபுத்திரன்

நான் கொஞ்ச காலமாக மறைந்திருந்தேன். இனி அடிக்கடி தோன்று வேன். அன்பர்கள் வரவேற்க வேண்டுமென்று கேட்டுக் கொள்ளுகின்றேன். ஏதாவது விஷயத்தைப் பற்றி பேசுகிற போது முழுதும் உண்மையா யிருக் காது என்று சந்தேகப்படுகிற காலத்தில் “ஐந்துக்கு இரண்டு பழுதில்லை” என்கிற பழமொழி சொல்வதுண்டு. அது எப்பொழுது ஏற்பட்டது, எதற்காக ஏற்பட்டது என்கிற விபரம் அநேகமாய் நமது தமிழ் மக்களுக்குத் தெரியா தென்றே நினைக்கிறேன். தெரியாதென்று நினைப்பதால் அதைப்பற்றி நான் கண்டு பிடித்த முடிவை சொல்லுகிறேன். “ஐந்துக்கிரண்டு பழுதில்லை” யென்பதானது ஐந்து விஷயம் சொன்னால் அதில் இரண்டாவது பொருத்தமாயிருக்கும். அப்படி இருந்தாலே போதும் என்கிற கருத்துக்கொண்டே இப்பழமொழி வழங்கப்பட்டிருக்கிறது. அது எப்பொழுது என்று பார்ப்போமானால் ஆரியர்கள் நமது நாட்டில் வந்து பொய்யும் புரட்டும் புளுக ஆரம்பித்த காலத்தில் அப்புரட்டுகளை யாராவது கண்டுபிடித்து கேழ்க்க ஆரம்பித்தால் “ஐந்துக்கு இரண்டு பழுதில்லாமல்” அதாவது முன் சொன்னது போல் ஐந்தில் இரண்டு விஷயங்கள் நிஜமா யிருந்தாலே போதுமென்று...

எஸ்.சி. போசின் விடுதலை 0

எஸ்.சி. போசின் விடுதலை

நமது நாட்டிற்கு ஒரு வெட்கக்கேடு சுயசாதி போஸ் (சுபாச் சந்திர போஸ்) விடுதலையானது பற்றி ஏறக் குறைய எல்லோரும் கொண்டாடுகிறார்கள். இதிலிருந்து இந்திய மக்களின் சுரணை (மானம்) கெட்டதன்மை நன்றாய் வெளியாகிறது. சுபாச் சந்திரபோஸ் சர்க்காரால் காரணம் சொல்லாமல் விசாரணை செய்யாமல் சுமார் 2 1/2 வருஷ காலம் ஜெயிலில் அடைத்து வைக்கப் பட்டிருந்தார். மகாத்மா காந்தியும் இந்த அக்கிரமத்தை அறிந்து ஸ்ரீமான் தாசும் அடைபட்டு விடுவாரோ என பயந்து ஒத்துழையாமையையும் அதனால் மக்கள் பட்ட கஷ்ட நஷ்டங்களையும் பலிகொடுத்து ஸ்ரீ தாசுக்கு ஏதோ பெரிய ராஜி செய்து கொண்டதாய் பாவனை காட்டி சர்க்கார் ஸ்ரீமான் தாசைப் பிடித்தடைக்காமல் செய்தார். இதன் பலனாக தேசம் குட்டிச்சுவர் ஆகி அயோக்கியர்கள் முன்னுக்கு வந்தார்கள். பதவிக்குப் போட்டி போட்டார்கள். பதவி பெற்றார்கள். அதிலேயே மகிழ்ந்திருந்தார்கள். தங்களுக்குப் பதவி வேண்டிய போதெல்லாம் பதவி வேட்டைக்கு சுபாச் சந்திரபோஸ் பெயரை சொல்லிக் கொண்டார்கள். இவ்வளவுதானே அல்லாமல் அவரை...

ஒரு சமாதானம் 0

ஒரு சமாதானம்

சென்ற வாரம் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு தமது பத்திரிகையில் “நாயக்கரின் நயவஞ்சகம்” என்று எழுதிய விஷயங்களுக்குப் பதிலாக “ஸ்ரீவரதராஜுலுவின் வண்டவாளம்” என்னும் தலைப்பின் கீழ் சில விஷயங்களை அதாவது, அதில் பல கனவான்கள் எழுதியதாக எழுதப் பட்டிருந்தக் கடிதங்களுக்குச் சமாதான காகிதம் ஸ்ரீமான் நாயுடுவாலேயே நாயக்கருக்குக் கொஞ்ச காலத்திற்கு முன் எழுதியதாகக் காட்டப்பட்டிருந்த கடிதத்திற்கும் சமாதானமாகவும், அடுத்த வாரம் எழுதுவதாகப் பதில் எழுதியிருந்தோம். அதை உத்தேசித்து அநேகக் கனவான்கள் நமக்குப் பலவிதமான கடிதங்கள் எழுதியிருக்கிறார்கள். அதாவது நாம் எழுதப் போகும் பதிலுக்கு மேலும் மேலும் தக்க ஆதாரங்களாக சிற்சில விஷயங் களைக் குறித்து அனுப்பி இருப்பதும், பலர் நாயுடுவைத் தங்கள் தங்கள் இஷ்டப்படிக் கண்டித்து நாயுடுவுக்குப் பதில் என்கிற முறையில் எழுதி பல கடிதங்களும்; இவ்விதம் இருவர் சண்டைபோட்டுக் கொள்வது ஒழுங்கல்ல வென்கிற முறையில் சிற்சில கடிதங்களும்; இந்த விஷயத்தைப் பற்றி நாம் சென்ற வாரம் எழுதினதுபோல் இவ்வாரம் எழுதிப் பிரசுரிக்கப்...

காங்கிரஸ் பைத்தியமும் பொய்மான் வேட்டையும் 0

காங்கிரஸ் பைத்தியமும் பொய்மான் வேட்டையும்

கோயமுத்தூரில் நடக்கப் போகும் கோயமுத்தூர் ஜில்லா பார்ப்பன ரல்லாதார் மகாநாட்டை தென் இந்திய பார்ப்பனரல்லாதார் மகாநாடாக நடத்த வேண்டும் என்பதாக சில ஜஸ்டிஸ் கட்சித் தலைவர்கள் விரும்பியதால் கோய முத்தூர் ஜில்லா மகாநாட்டு வரவேற்பு சபையினரும் அதற்கு இசைந்து 25 தேதி ஒரு மீட்டிங்கு கூட்டித் தென் இந்திய பார்ப்பனரல்லாதார் சங்க நிர்வாக சபை அம்மாதிரியே தீர்மானித்து வேண்டிக் கொண்டால் அந்தப் படிக்கே தங்களது மகாநாட்டை மாகாண பார்ப்பனரல்லாதார் மகாநாடாக நடத்துவதாகத் தீர்மானமும் செய்தாய் விட்டது. இதன் பலனாக ஜுன் 11, 12 தேதிகளில் கூட்டுவதாயிருந்த மகாநாடு மறுபடியும் தேதி மாறினாலும் மாறலாம். ஜில்லா மகாநாட்டை மாகாண மகாநாடாக மாற்ற வேண்டிய அவசியம் என்ன என்பதைப் பற்றி நண்பர்கள் ஐயுறலாம். அதற்கு நாம் ஒரே பதில் அளிக்கிறோம். காங்கிரஸ் பைத்தியமும் பொய்மான் வேட்டையுமே தான் காரணம். அதாவது, ஜஸ்டிஸ் கட்சியைச் சேர்ந்த சில கனவான்களுக்கு காங்கிரஸினி டத்தில் பைத்தியம் ஏற்பட்டிருப்பதும் காங்கிரசிலுள்ள...

ஸ்ரீ வரதராஜுலு ஐயங்கார் 0

ஸ்ரீ வரதராஜுலு ஐயங்கார்

ஸ்ரீமான் பி. வரதராஜுலு நாயுடுவுக்கு மறுபடியும் மைலாப்பூர் பார்ப்பனர்கள் உபநயனம் என்னும் பூணூல் கல்யாணம் செய்து தங்கள் ஜாதியில் சேர்த்துக் கொண்டார்கள். ஆதலால் அவரை இனி வரதராஜலு அய்யங்கார் என்றுதான் அழைக்க வேண்டும். இந்த கோஷ்டியார் சுவீகரிக்கத்தக்க ஒரு சந்தர்ப்பம் வருவதற்கு ஸ்ரீமான் வரதராஜலு பட்ட பாடு இவ்வளவு அவ்வளவு என்று சொல்ல முடியாது. முன்பு ஸ்ரீ காந்தியையும், ஒத்துழையாமையையும்கூடத் தாக்கி, சுயராஜ்ஜியக் கக்ஷியுடன் கூடிக் குலாவி எவ்வளவோ கூத்தாடியும், அதைப்பற்றி தனது பத்திரிகையில் எவ்வளவோ பிரசாரம் செய்து பார்த்தும் அதற்கு செல்வாக்கு இருக்கின்றவரை கூடவே இருந்தும் பார்ப்பனர்களின் புகழ் விளம்பர சாகரத்தில் ஆழ்ந்திருந்துவிட்டு அக்கக்ஷிக்கு சாவு மணியடிக்கப் போகின்றதென்று தெரிந்தவுடன் தனக்கும் அதற்கும் சம்மந்தமில்லை என்று சொல்லி அதைவிட்டு ஒரே தாவாகத் தாவி வெளியில் வந்து விட்டதும், பிறகு அது அடியோடு செத்து குழியில் போட்டு புதைக்கப்படும்போது தானும் ஒருகை மண்ணை அள்ளிப் போட்டு விட்டு நல்ல பிள்ளை போல்...

திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதை சங்க மகாநாடு வைபவம் ஊர்வலமும் கூட்டத்தில் குதூகலமும் 0

திருநெல்வேலி ஜில்லா சுயமரியாதை சங்க மகாநாடு வைபவம் ஊர்வலமும் கூட்டத்தில் குதூகலமும்

இவ்வாண்டுவிழாவுக்கு நான் தலைமை வகிக்க வேண்டுமென்று கட்டளை இட்ட கனவான்கள் எல்லாம் என்னைப்பற்றி அதிகம் கூறினார்கள். அது என்னை மிகுதியும் வெட்கப்படும்படி செய்துவிட்டது. அதனால் நான் என்ன பேசவெண்டுமென்று எண்ணினேனோ அதை மறக்கச் செய்தது. அவர்களுக்கு என்னிடமும் எனது இயக்கத்திடமும் உள்ள பற்றும், அவர்களின் இயற்கையான பெருந்தன்மையும், அளவுக்கு மீறி என்னை புகழச் செய்தது. அப் புகழுரைகளுக்கு நான் சிறிதும் அருகனல்ல. ஆனாலும் (இல்லை இல்லை முழுதும் பொருந்தும். இன்னமும் அதிகமாயும் பொருந்தும் என்கின்ற கூச்சல்) அதற்கு வந்தனம் செலுத்துகின்றேன். இயக்கம் ஆரம்பித்த காலத்தில் எதிர்ப்புகள் பலமாய் இருந்தது. இன்னும் யாவரும் ஏகமனதாய் ஆதரிப்பதாகவும் எண்ண இடமில்லை. இன்னும் அதிக எதிர்ப்பு இருக்கிறது. ஆயினும் இத்தகைய மகான்கள் எல்லாம் ஆதரவு அளித்துவருவதை கண்டு மிக தைரியங்கொண்டு அந்த ஆசையின் மீது அவர்கள் உரையை நான் சகித்துக் கொண்டிருக்கிறேன். ‘குடி அரசை’ப் பற்றி மிக அதிகமாகக் கூறினார்கள். அதில் உள்ள குற்றமெல்லாம் எனக்குத்...

“உருண்டைக்கு நீளம் புளிப்புக்கு அவளப்பன்” 0

“உருண்டைக்கு நீளம் புளிப்புக்கு அவளப்பன்”

“உருண்டைக்கு நீளம் புளிப்புக்கு அவளப்பன்” என்பதாக ஒரு பழமொழி உண்டு. அதாவது ஒரு ராஜாவைப் பார்க்க எல்லோரும் எலுமிச்சம் பழம் கொண்டுபோனார்களாம். திருவாழ்தான் என்பவன் ஒரு புளியம்பழம் கொண்டுபோய் கொடுத்துப் பார்த்தானாம். ராஜா திருவாழ்தானைப் பார்த்து இது என்ன என்று கேட்டாராம். அதற்குத் திருவாழ்தான் “உருண்டைக்கு நீளம் புளிப்புக்கு அவளப்பன்” என்றானாம். என்னவெனில் எலுமிச்சம்பழம் உருண்டை, புளியம்பழம் நீளம். புளிப்பு விஷயத்தில் இது அதைவிட அதிகமான புளிப்பு என்று சொன்னானாம். அதைப் போலவே ஜஸ்டிஸ் கட்சி மந்திரி காலம் மிகக் கொடுமை யாகவும், தேசத் துரோகமாகவும் இருந்ததாகப் பார்ப்பனர்களால் கூறப்பட்டு வந்தது. நமது நற்காலமாகவே ஜஸ்டிஸ் மந்திரி ஆட்சியும் மறைந்தது. இரட்டை ஆட்சியை வெட்டிப் புதைப்போம், மந்திரிகளை எதிர்த்தே தீருவோம் என்ற நமது அய்யங்கார்கள் சுப்பராய மந்திரிக்கட்சியை அமைத் தார்கள். இது உருண்டைக்கு நீளமாகவும் புளிப்புக்கு அதனப்பனாகவும் ஏற்பட்டு விட்டது. நாம் இந்த ரகசியத்தை முன்னமேயே வெளியிட்ட பொழுது நேற்று வரை...

இந்திய சட்டசபை மெம்பருக்கு ஒரு வேண்டுகோள் 0

இந்திய சட்டசபை மெம்பருக்கு ஒரு வேண்டுகோள்

இந்திய சட்டசபையில் பார்ப்பனரல்லாதார் சுயமரியாதையை உத்தே சித்து சட்ட சம்மந்தமாக பல வேலைகளை செய்ய வேண்டியிருக்கிறது. குறிப்பாக இந்து லாவில் பிராமணன் சூத்திரன் என்கிற பாகுபாடு களும் அதற்கு தக்கபடி பிராமணன் என்பவனுக்கு ஒரு விதமாகவும் சூத்திரன் என்பவனுக்கு ஒரு விதமாகவும் சட்டங்கள் செய்யப்பட்டிருக்கின்றன. அவை களை சட்டத்தில் வைத்துக் கொண்டிருப்பது நியாயமா என்று கேட்கின்றோம். ஒரு பார்ப்பன இந்திய சட்டசபை மெம்பர்கூட இம்மாதிரி பிராமணன் சூத்திரன் என்கின்ற வித்தியாசம் சட்டத்தில் இருக்கக்கூடாது என்று சொல்லி ஒப்புக்கொண்டாலும் கூட பார்ப்பனரல்லாத மெம்பருக்கு உணர்ச்சி வரவேண் டாமா என்று கேட்கின்றோம். ஸ்ரீமான் ஷண்முகம் செட்டியார் அவர்களுக்கு உபயோக மற்றதும் வேஷமானதுமான ராயல் கமிஷன் பஹிஷ்காரத்தில் இருக்கும் சுறுசுறுப்பில் ஏதாவது ஒரு பகுதியாவது இந்த சூத்திர பட்டமும் பாரபக்ஷமும் ஒழிவதில் கவலை இருக்க வேண்டாமா என்று கேட்கின்றோம். இனி உள்ள நாள்களையும் இது போல் வீணே கழிக்காமல் காரிய வழியில் கழிக்கும்படியாய் மிகவும் வணக்கமாய்...

கும்பாபிஷேகத்தின் ரகசியம் 0

கும்பாபிஷேகத்தின் ரகசியம்

குருக்கள் பார்ப்பனர்கள் சம்பாஷணை – சித்திரபுத்திரன் நடேச குருக்கள் : ஏண்டா சுப்பா! இந்த 4, 5 மாதமாய் நம்ம கோயி லுக்கு அபிஷேகம் வற்றதில்லே பிரார்த்தனை வற்றதில்லை முன்னைப் போல் அதிக சனங்கள் அர்ச்சனை செய்ய வற்றதில்லையே என்ன சங்கதி? சுப்புக் குருக்கள் : சங்கதியா! சங்கதி. ஈரோட்டில் ராமசாமி நாயக்கன் இருக்கான் அல்ல. அவன் “குடி அரசு” என்னும் ஒரு பேப்பர் போட்றான். அதில் சும்மா இதையே எழுதுறான். பார்ப்பானுக்குப் பணம் கொடுக்காதே, பார்ப்பான் காலில் விழாதே, பார்ப்பானைக் கொண்டு சடங்கு செய்யாதே, கோயிலுக்குப் போனால் நீயாகவே சாமி கும்பிட்டு விட்டு வந்துவிடு, பார்ப்பானைத் தேங்காய் பழம் ஒடைக்கச் சொல்லாதே, அவன் தீபார்த்தனை காட்ட நீ கும்பிடாதே, அவன் கிட்ட பிரசாதம் வாங்காதே என்று இப்படி யெல்லாம் எழுதியும் போற பக்கம் எல்லாம் பேசியும் நம்ம தலையில் கை வெச்சுகிட்டு வற்றான். அவன் பேச்சைக் கேட்டுக்கிட்டு இந்த சூத்திரன்கள்...

மானமற்ற ஜாதி 0

மானமற்ற ஜாதி

மதுரையில் 29-11-27 -ல் ஸ்ரீமான் ஈ.வெ. ராமசாமி நாயக்கர் செய்த பிரசங்கத்தில் யாரோ ஒரு காங்கிரஸ் தொண்டர் ஸ்ரீ நாயக்கரை பல கேள்விகள் கேட்டதாகவும் அதனால் குழப்பமுண்டானதாகவும் குறிப்பிட்டி ருக்கிறார். இது உண்மையல்ல. நாயக்கரை யாரும் எவ்வித கேள்வியும் கேட்கவில்லை. ஒருவர் பண்டிதர், பண்டிதர் என்று சத்தம் போட்டார். அதற்கு அங்கு இருந்தவர் அவரை கலகம் செய்ய வந்திருக்கிறார் என்று சந்தேகப்பட்டு கண்டித்து மேடையில் கொண்டு வந்து உட்கார வைத்தார்கள். கூட்டம் கலையும் வரை பேசாமல் உட்கார்ந்திருந்துவிட்டு போய்விட்டார். அதுசமயம் நாயக்கரும் சத்தம் போட்டவரையும், அவரைக் கண்டித்த வர்களையும், அவரை கூட்டி வந்து உட்கார வைத்தவர்களையும் தக்கபடி கண்டித்துவிட்டு இம்மாதிரி சிறு விஷயங்களை நாளையதினம் சில அயோக்கிய பத்திரிகைகளும் அயோக்கிய நிருபர்களும் கூட்டத்தில் குழப்பம் என்றும் கேள்விகளென்றும் எழுதி இக்கூட்டத்தின் பெருமையைக் கெடுக்க சூழ்ச்சி செய்வார்கள் என்றும் சொன்னார். பார்ப்பனப் பத்திரிகை களும் பத்திரிகை நிருபர்களும் பெரும்பாலும் ஸ்ரீமான் ராமசாமி நாயக்கர்...

சர்.பி. ராஜகோபாலாச்சாரியார் 0

சர்.பி. ராஜகோபாலாச்சாரியார்

சர்.பி. ராஜகோபாலாச்சாரியார் பெங்களூரில் காலமானதாகக் கேட்டு வருத்தமடைகிறோம். அவர் வித்தியாசம் பாராட்டாதவர். மூடக் கொள்கைகளில் நம்பிக்கை யில்லாதவர். உத்தியோகத்திலும் கூடுமானவரை யோக்கியமாய் நடந்து கொண்டவர். பார்ப்பனரல்லாதார் அநேகரின் அன்புக்கும் விஸ்வாசத்திற்கும் பாத்திரமாயிருந்தவர். உத்தியோக முறையில் பார்ப்பனரல்லாதாருக்கு சிறிதா வது நன்மை செய்த பார்ப்பனர் இருப்பாரானால் அதில் ஸ்ரீமான் சர். பி. ராஜ கோபாலாச்சாரியாரே முதன்மையானவர். அவரது குடும்பத்திற்கு நமது அனு தாபத்தை தெரிவித்துக் கொள்ளுகின்றோம். குடி அரசு – இரங்கலுரை – 04.12.1927

மனுதர்ம சாஸ்திரம் 0

மனுதர்ம சாஸ்திரம்

சுயமரியாதை இயக்கம் ஏற்பட்ட பிறகு மக்களுக்கு எங்கு பார்த்தாலும் மனிதரின் சுயமரியாதைக்கு விரோதமான ஆதாரங்களை ஒழிப்பதில் கவலையும் ஊக்கமும் அதிகமாகி வருகின்றது. சென்னை, வடஆற்காடு, சேலம், தஞ்சை, திருநெல்வேலி, மதுரை முதலிய இடங்களில் கூடிய பல மகாநாடுகளில் வர்ணாசிரம தர்மம் என்பதை கண்டித்திருப்பதுடன் அதற்கு ஆதாரமான புஸ்தகங்களையும் பகிஷ்கரிக்கத் தீர்மானங்களும் ஏகமனதாய் நிறைவேற்றப்பட்டு வந்திருக்கின்றன. சில மகாநாடுகள் மனுதர்ம சாஸ்தி ரத்தை நெருப்பில் கொளுத்தி சாம்பலைக் கரைத்தும் வந்திருக்கின்றன. அரசாங்கமும் சட்டசபை மெம்பர்களும் இதைக் கவனிக்கப் போகி றார்களா என்று தீர்மானிக்க முடியவில்லை. பழைய காலமாயிருந்திருக் குமானால் இம்மாதிரி பெரும்பான்மையான மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் உணர்ச்சியை மதித்து அரசாங்கமானது வருணாசிரமத்தை அழித்து சட்டம் செய்திருக்கும் என்பதோடு வருணாசிரமக் கொள்கைக்காரர்களை கழுவி லேற்றி இருக்கும் என்றும் கூட சொல்லலாம். ஏனெனில், நிரபராதிகளான 8000 சமணர்கள் கழுவேற்றப்பட்டதாக சொல்லும் சரித்திரத்தைப் பார்க்கும்போது இவ்வளவு அக்கிரமமும் ஜீவகாருண்யமும் அறிவும் அற்றத் தன்மையான கொடுமையை சகித்துக் கொண்டிருக்கும் என்றும்...