ஜஸ்டிஸ் திருநாள்

பிப்ரவரி 26 தேதி சனிக்கிழமையை ஜஸ்டிஸ் 10 வது வருஷ நாளாகக் கொண்டாடும்படி தலைவர் பணகால் ராஜா அவர்கள் பார்ப்பன ரல்லாத மக்களுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதற்காக ஒவ் வொரு ஊரிலும் உள்ள பார்ப்பனரல்லாத மக்கள் அந் நாளைக் கொண்டாட வேண்டியவிதம் என்னவென்றால் ஜஸ்டிஸ், திராவிடன், குடி அரசு பத்திரி கைகளுக்கு சந்தாதாரர்களை சேர்ப்பது தான். வாலிபர்கள் ஒவ்வொருவரும் கண்டிப்பாய் அன்றைய தினம் ஏதாவது ஒரு புது சந்தாதாரரையாவது சேர்த்து விட்டுத்தான் சாப்பிடுவதாக விரதமெடுத்துக் கொள்ள வேண்டும். ஜஸ்டிஸ் பத்திரிகையில் ராய்ட்டர் அசோசியேட் பிரஸ், பிரீ பிரஸ் ஆகிய தந்தி நிரூபங் கள் மாதம் 1-க்கு 1000 ரூபாய்க்கு மேற்பட்ட சிலவில் வாங்கி சென்ற மாதம் முதல் பிரசுரம் செய்யப்பட்டு வருகிறது. திராவிடனுக்கும் அசோசியேட் பிரஸ் நிரூபங்கள் வாங்கி பிரசுரம் செய்யப்பட்டு வருகிறது. ஆகவே, பிப்ரவரி µ 26- தேதியை இவற்றிற்கு சந்தா சேர்க்கும் தினமாக கொண்டாட வேணுமாய் பார்ப்பனரல்லாத வாலிபர்களை கேட்டுக் கொள்ளுகிறேன்.

ஈ.வெ.ராமசாமி

குடி அரசு – தலையங்கம் – 20.02.1927

You may also like...

Leave a Reply