Category: பெரியார் முழக்கம் 2013

குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம்

குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம்

தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் சார்பில் விடுமுறைக் காலங்களில் குழந்தைகள் பழகு முகாம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. அடுத்தகட்டமாக வரும் அரையாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களான டிசம்பர் 25, 26, 27 ஆகிய 3 நாட்கள் திண்டுக்கல்லில் முகாம் நடைபெற உள்ளது. 3 நாட்களுக்கான பயிற்சி, உணவு, தங்குமிடம் மற்றும் சுற்றுலா அனைத்திற்கும் சேர்த்து கட்டணம் ரூ.750. டிசம்பர் 24 இரவே பெற்றோர்கள் குழந்தைகளை திண்டுக்கல் பயிற்சி மய்யத்திற்கு அழைத்து வந்துவிட வேண்டும். பெற்றோர்கள் மய்யத்தில் தங்க இயலாது. நகைகள், செல்போன்கள் அனுமதிக்க இயலாது. – ஆசிரியர் சிவகாமி / பேசி: 9842448175 மாநில ஒருங்கிணைப்பாளர் தமிழ்நாடு அறிவியல் மன்றம் பெரியார் முழக்கம் 21112013 இதழ்

தொண்டினால் கிடைக்கும் புகழ்

தொண்டினால் கிடைக்கும் புகழ்

“சிலர் புகழ் வேண்டாம், எனக்கு அதில் ஆசையே கிடையாது” என்று கூறுவார்கள். இது பகட்டுப் பேச்சேயன்றி நடைமுறையில் சாத்தியமானதல்ல; அது மட்டுமல்ல, புகழை விரும்பாதவன் மனித உணர்ச்சியோடு இருப்பவன் என்று கூறிவிட முடியாது. புகழ் நிலைத்திருக்க முடியும் என்றால் ஒரு நல்ல பாடகன் என்பவனின் புகழ் அவனோடு மறைந்துவிடும். அல்லது அவனைவிடப் பாடுபவன் தோன்றினால் அவன் உயிர் நாளிலேயே அவன் புகழ் அழிபட்டுவிடும். அதே போன்றுதான் ஒவ்வொரு தனிப்பட்ட புகழும். ஆனால், பொதுக் காரியத்துக்காக அதனால் மக்களுக்கு என்றும் நன்மையைப் பயக்கக் கூடியதாகச் செய்யப்படும் காரியங்களையும் அக்காரியவாதிகளின் புகழையும் என்றும் மறைக்க முடியாது. அவ்விதமான பெரியோர்கள் முதலில் ஏச்சுக்கும், தொல்லைக்கும் ஆளவார்கள். பின்னர்தான் நிலையாக விளங்கும். – காயல் பட்டினத்தில் ‘சீதக்காதி’ நினைவுநாள் விழாவில் பெரியார் பேருரை – 24.4.47 பெரியார் முழக்கம் 21112013 இதழ்

மயிலாடுதுறையில் ‘புத்தகச் சோலை’ புதிய கட்டிடம் திறப்பு

மயிலாடுதுறையில் ‘புத்தகச் சோலை’ புதிய கட்டிடம் திறப்பு

திராவிடர் விடுதலைக் கழகத்தைச்சார்ந்த தோழர் ந. விஜயராகவன், ‘புத்தகச் சோலை’ என்ற புதிய புத்தக விற்பனை நிலையத்தை மயிலாடுதுறையில் தொடங்கியுள்ளார். புத்தகச் சோலையின் புதிய கட்டிடத் திறப்பு விழா 17.11.2013 ஞாயிறு காலை 10.30 மணியளவில் நடந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் புதிய கட்டிடத்தைத் திறந்து வைத்து உரையாற்றினார். நாகை மண்டல கழக அமைப்புச் செயலாளர் நா. இளையராசா வரவேற்புரையாற்ற, பெரு வணிகரும் பெரியாரியலாளருமான சா.மீ.சு. முத்துச் செல்வன், வே. மோகன்தாசு, நா.க. உள்ளிட்ட தோழர்கள் உரையாற்றினர். “ஒரு பெரியாரியல்வாதியாக நான் இருந்ததால்தான் கடும் நெருக்கடிகளை துணிவாக எதிர்கொண்டு இந்த நிறுவனத்தை என்னால் தொடங்க முடிந்தது” என்று உரிமையாளர் ந. விஜயராகவன் தனது ஏற்புரையில் குறிப்பிட்டார். மோ.சுகந்தி விஜயராகவன் நன்றி கூறினார். கழகத் தோழர்கள், நண்பர்கள் ஒத்துழைப்பு ஆதரவுடன் தொடங்கப்பட்டுள்ள இந்த புத்தகச் சோலைக் கட்டிடம் கம்பீரமாக முகப்பில் பெரியார் படத்துடன் தோற்றமளிக்கிறது. இரண்டடுக்கு மாளிகையாக எழுந்து நிற்கும் இந்த...

தலையங்கம்: இடித்தது சுற்றுச் சுவரை மட்டும் அல்ல!

தலையங்கம்: இடித்தது சுற்றுச் சுவரை மட்டும் அல்ல!

ஈழப் போரில் சிங்கள இராணுவத்தால் கொன்று குவிக்கப்பட்ட தமிழர்கள், தாயகத்தின் விடுதலைக்காக இராணுவத்தை எதிர்த்துப் போராடி களப்பலியான மாவீரர்கள் நினைவாக தஞ்சையில் கடுமையான உழைப்பினால் கட்டி எழுப்பப்பட்ட முள்ளி வாய்க்கால் முற்றம் – தமிழினத்தின் வரலாற்றுச் சின்னம்! இழிவையும், மடமையையும், மக்கள் பொதுப் புத்தியில் ஏற்றிக் கொண்டிருக்கிற கோயில்கள் அல்ல இவை. இந்த முற்றம், தமிழர்களின் உள்ளத்தில் விடுதலை வேட்கையை கனலாக மூட்டி நிற்கிறது. தமிழ்நாட்டில் இத்தகைய எழுச்சியூட்டும் முற்றங்கள் தான் கோயில்களுக்கு மாற்று என்று நாம் கருதுகிறோம். இந்த முற்றத்தைக் கட்டி எழுப்ப எத்தனையோ தமிழர்கள் தங்களை அர்ப்பணித்து உழைத்திருக்கிறார்கள். தங்கள் ஆற்றல்களை பங்களிப்புகளாக வழங்கியிருக்கிறார்கள். அது செங்கல்லும் சிமெண்டும் கலந்த கட்டிடம் மட்டுமல்ல; உணர்வுகளைச் சுமந்து நிற்கும் பாசறையும்கூட! அத்தகைய முள்ளிவாய்க்கால் முற்றம் திறக்கப்பட்டு, நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்ட அடுத்த சில நாட்களிலேயே தமிழக அரசின் நெடுஞ்சாலைத் துறை நெஞ்சில் ஈரமின்றி அதன் சுற்றுச் சுவரையும் அழகு மிளிர உருவாக்கப்பட்டிருந்த...

உங்கள் வரவேற்பு, பாராட்டு எனக்கு வேண்டாம்

உங்கள் வரவேற்பு, பாராட்டு எனக்கு வேண்டாம்

‘இந்த ஊருக்கு சுமார் 20, 25 வருடங்களுக்கு முன்பு (அதாவது 1922, 23) இரண்டு மூன்று தடவை வந்திருக்கிறேன். அப்போது காங்கிர°காரனாய் வந்தேன். அதன் பிறகு இப்போதுதான் வர வாய்ப்புக் கிடைத்தது. இதுவும் நீங்கள் ஒரு வருஷ காலமாய் எங்களை அடிக்கடி வந்து அழைத்ததன் பயனாக இன்று வர முடிந்தது. நாட்டின் அரசியல், சமுதாய இயல், பொருளாதார இயல், கிராமங்களுக்குத் தெரிவதில்லை. ஒவ்வொரு கிராமத்தையும் அங்குள்ள செல்வாக்குள்ள யாரோ ஒருவர் இருவர் அடக்கி ஆண்டு தங்கள் நலனுக்கு ஏற்ற வண்ணம் பயன்படுத்திக் கொள்கிறார்கள். அப்படிப்பட்டவர்களுக்கு எங்கள் வரவு மிகவும் கஷ்டமாகவும் அதிருப்தியாகவும் வெறுப்பாகவும் இருக்கிறது. இந்த வெறுப்பு நான் ஊர்வலம் வந்தபோது நன்றாய்த் தெரிந்தது. எப்படியெனில் பல சுவர்களில் என்னைப் பற்றி நீங்கள் புகழ்ந்து எழுதி வரவேற்புக் கூறியிருக்கிறீர்கள். ஆனால் சில சுவர்களில் ‘சாமி இல்லை என்னும் பாவி இராமசாமி ஒழிக’ என்று எழுதப்பட்டிருந்ததையும் நான் பார்த்தேன். இதன் காரணம் என்ன?...

காவல்துறை வளாகங்களில் வழிபாட்டு தலங்களுக்கு தடை

காவல்துறை வளாகங்களில் வழிபாட்டு தலங்களுக்கு தடை

காவல்துறை வளாகங்களில் – கோயில், மசூதி, சர்ச் போன்ற வழிபாட்டுத் தலங்கள் இருப்பது கவனத்துக்கு கொண்டு வரப்பட் டுள்ளது. “அரசு அலுவலகங்களில் வழிபாட்டுத் தலங்களை அனுமதிக்கக்கூடாது என்று அனைத்து காவல்துறை பிரிவுக்கும் அறிவுறுத்தப்படுகிறது” என்ற சுற்றறிக்கை 2013 ஆம் ஆண்டு மார்ச் 13 ஆம் தேதி அனைத்து காவல்துறை நிர்வாக அலு வலகங்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. காவல்துறை இயக்குநர் அலுவலகத்தி லிருந்து அனுப்பப்பட்ட இந்த சுற்றறிக்கை யில் இயக்குனர் கே. இராமானுஜம் கையெழுத்திட்டுள்ளனர். காவல்துறை வளாகத்தில் இடம் பெற்றுள்ள காவல் நிலையங்களுக்கும் இது பொருந்தும். வழிபாடுகள் எதுவும் நடக்கக்கூடாது என்பது காவல் நிலையங் களில் நடக்கும் ஆயுத பூஜைகளுக்கும் பொருந்தும். ஏற்கனவே சென்னை உயர்நீதிமன்றம் காவல் நிலையங்களில் பூஜைகள் போடுவதை தடைசெய்து தீர்ப் பளித்துள்ளது. இப்போது அ.இ.அ.தி.மு.க. ஆட்சியிலும் 7 மாதங்களுக்கு முன்பு காவல்துறை இயக் குனராலேயே சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுள்ளது. சுற்றறிக்கையின் நகல் வெளியிடப்பட்டுள்ளது. பெரியார் முழக்கம் 21112013 இதழ்

வினாக்கள்… விடைகள்…

வினாக்கள்… விடைகள்…

மனித உரிமைகளைப் பாதுகாக்கக்கூடிய அமைப்புகள் எங்கள் நாட்டில் இருக்கின்றன. புகார் தெரிவித்தால் அரசு விசாரிக்கும். – ராஜபக்சே பேட்டி அப்படியா? இராணுவத்துக்கே மனித உரிமைப் பிரிவு என்று பெயர் மாற்றம் செய்து விட்டீர்களா? சொல்லவே இல்லை! இலங்கை தமிழர் பகுதியை பார்வயிடச் சென்ற ‘சேனல்-4’ தொலைக்காட்சிக் குழுவினர் ரயிலை சிங்களர்கள் மறித்து குழுவினரை திருப்பி அனுப்பினர்.  – செய்தி ஓகோ! ராஜபக்சே கூறிய மனித உரிமைக் குழு, இது தானா? இப்பத்தான் விளங்குது! கேரள முதல்வர் உம்மன்சாண்டி – மக்கள் சந்திப்பு திட்டத்தின் வழியாக மாவட்டந் தோறும் சென்று மக்களை சந்தித்து வருகிறார்.       -செய்தி முதலமைச்சரை மக்கள் நேரிலேயே பார்க்கலாமா? என்ன சொல்றீங்க? நம்பவே முடியவில்லையே; எங்க தமிழ்நாட்டு மக்களும் கேரளாவுக்கு வந்து முதலமைச்சரை நேரிலேயே பார்க்க அனுமதிப்பீங்களா… ப்ளீ°….. பாட்னாவில் மோடி கூட்டத்தில் நடந்த தொடர் வெடிகுண்டு வெடிப்பு தொடர்பாக நான்கு இந்து இளைஞர்களை தேசிய புலனாய்வு அமைப்பு கைது...

வாழ்நாள் முழுவதும் நான் தொண்டனே!

வாழ்நாள் முழுவதும் நான் தொண்டனே!

நான் மறைந்து நின்று சிலரைத் தூண்டிவிட்டு எந்தக் காரியத்தையும் செய்யச் சம்மதிக்க மாட்டேன். ஒரு சமயம் எனக்கு அப்படிச் செய்ய ஆசையிருந்தாலும் எனக்கு அந்தச் சக்தி கிடையாது. மறைவாய் இருந்து காரியம் செய்ய, சக்தியும் சில சவுகரியமும் வேண்டும். அந்த சக்தியும் சவுகரியமும் எனக்கில்லாததாலேயேதான், நான் என் வாழ்நாள் முழுவதும் தொண்டனாகவே இருந்து தீரவேண்டியதாய் இருக்கிறது என்பதோடு, எதையும் எனக்குத் தோன்றிய எண்ணங்களை வெளிப்படுத்தித் தாட்சண்யம் இல்லாமல் கண்டிக்க வேண்டியவனாகவும் இருக்க வேண்டியிருக்கிறது.                                               (பெரியார், ‘குடிஅரசு’ – 24.11.1940 பெரியார் முழக்கம் இதழ் 26122013

பட்டுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்

பட்டுக்கோட்டையில் கண்டன ஆர்ப்பாட்டம்

30.11.2013 அன்று பட்டுக்கோட்டை அஞ்சல் நிலையம் அருகில் தலைவர் கொளத்தூர் மணியையும், தோழர்களையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேராவூரணி திராவிடர் விடுதலைக் கழகப் பொறுப்பாளர் கி. திருவேங்கடம், ஒரத்தநாடு ஒன்றிய பொறுப்பாளர் க.சொ. சிவசுப்பிரமணியன், திருவாரூர் மாவட்ட கழக அமைப்பாளர்இரா. காளிதாசு, தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் கு.பாரி, நல்லக்கோட்டை ஒன்றிய செயலாளர் பெ. முருகன், வடசேரி கழகத் தோழர் அ.மா. பிரபாகரன், மன்னார்குடி கழகத் தோழர் செந்தமிழன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். பெரியார் முழக்கம் இதழ் 26122013

மக்கள் சந்திப்பு இயக்கம்: திருவாரூர் மாவட்டக் கழகம் முடிவு

மக்கள் சந்திப்பு இயக்கம்: திருவாரூர் மாவட்டக் கழகம் முடிவு

திருவாரூர் மாவட்ட திராவிடர் விடுதலைக்கழக செயல்வீரர்கள் கூட்டம் மன்னார்குடியில் டிசம்பர் 4 அன்று திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா. காளிதாசு தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்ற மாநில பொருளாளர் ஈரோடு ரெத்தினசாமி, செயலவை தலைவர் திருப்பூர் துரைசாமி, மாநில பரப்புரை செயலாளர் தூத்துக்குடி பால் பிரபாகரன் ஆகியோர் உரையாற்றினர். கழகத் தோழர்கள் 7 பேரை தமிழக அரசு தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ததையும், இச் சம்பவங்களில் தொடர்பில்லாத கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீதும் தேசிய பாதுகாப்புச் சட்டம், பாய்ச்சப்பட்டதற்கும் திருவாரூர் மாவட்ட கழகம் வன்மையாக கண்டிக்கிறது. மக்கள் சந்திப்பு இயக்கத்தை திருவாரூர் மாவட்டம் முழுவதும் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. கூட்டத்தில் கழக ஒன்றிய செயலாளர்கள் மன்னை சேரன், ரமேஷ், நீடா நல்லிக் கோட்டை முருகன், வலங்கைமான் செந்தமிழன், கோட்டூர் அனுராசு, திருவாரூர் கலைவேந்தன், நகர செயலாளர்கள் கரிகாலன், பிரபாகரன், கலைவாணன் உள்பட நிர்வாகிகள் பங்கேற்றனர்....

கருத்துச் செறிவு மிக்க திராவிடர் பண்பாட்டு மலர்

கருத்துச் செறிவு மிக்க திராவிடர் பண்பாட்டு மலர்

சுயமரியாதைக் கலைப் பண்பாட்டுக் கழகம், திருப்பூரில் அக்.20 ஆம் தேதி நிகழ்ந்த திராவிடர் வாழ்வியல் விழா, உணவு விழாவையொட்டி ‘திராவிடர் பண்பாட்டு மலர்’ ஒன்றையும் வெளியிட்டுள்ளது. வாழ்வியலின் மூலக் கூறுகளான திருமணம், மறுமணம், கல்யாண விடுதலை, குழந்தைப் பேறு, கர்ப்பத் தடை, சோதிடம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெரியாரின் ஆழமான கட்டுரைகளை தேடிப்பிடித்து தொகுத்திருப்பது மலரின் தனிச் சிறப்பாகும். ‘வா°து’ மூடநம்பிக்கை, பெயர் சூட்டல் குறித்து – கொளத்தூர் மணி கட்டுரைகளும், சங்க இலக்கியங்களிலேயே பார்ப்பனியம் ஊடுருவியதை விளக்கும் – விடுதலை இராஜேந்திரன் கட்டுரையும் நல்ல கருத்து விளக்கங்களை முன் வைக்கின்றன. ‘திராவிடர் உடை’ என்ற கட்டுரை, வேட்டி சேலை அணிவதும், இந்து மதப் பண்பாடு என்று சங்கராச்சாரி கூறுவதை எடுத்துக்காட்டி, அதையே தமிழர்களின் அடையாளமாக தமிழ்ப் பண்பாடு பேசுவோரையும் சுட்டிக்காட்டி, தமிழர் அடையாளம் இந்துப் பண்பாடா என்ற கேள்வியை எழுப்புகிறது. உணவு மற்றும் உடையைப் பொறுத்தவரை மதம், கலாச்சாரப் பார்வையைத்...

மன்னையில் ‘உயிர் வலி’ ஆவணப்படம் வெளியீடு

மன்னையில் ‘உயிர் வலி’ ஆவணப்படம் வெளியீடு

வசதி வாய்ப்புப் படைத்தவர்கள் தண்டனையில் இருந்து தப்பி விடுகின்றனர். அப்பாவி மக்களை மட்டும் பாதிக்கும் மரண தண்டனையை சட்டப் புத்தகத்திலிருந்து நீக்க வேண்டுமென மன்னார்குடியில் நடைபெற்ற ‘உயிர்வலி’ ஆவணப்பட வெளியீட்டு விழாவில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் பேசினார். மரண தண்டனைக்கு எதிரான வரலாற்றுப் பதிவு ‘உயிர்வலி’ (சக்கியடிக்கும் சத்தம்) ஆவணப்பட வெளியீட்டு விழா மன்னார்குடி தமிழ் இனஉணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் மாமன்னர் மருதுபாண்டியர் திருமண அரங்கத்தில் தமிழின உணர்வாளர் பா.வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்றது. ‘உயிர்வலி’ ஆவணப்படத்தை திருவாரூர் மாவட்ட முன்னாள் ம.தி.மு.க. செயலாளர் இரயில் பா°கர் வெளியிட, மன்னை வட்ட லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அனையாவிளக்கு அய்யப்பன் பெற்றுக் கொண்டார். இராஜிவ் காந்தி கொலை வழக்கில் பொய்யான குற்றச்சாட்டின்பேரில் 22 ஆண்டுகாலமாக தூக்குதண்டனை கைதியாக சிறையில் வாடும் பேரறிவாளனின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ‘உயிர்வலி’ ஆவணப்படம் குறித்து பொங்கு தமிழ் இயக்க செயலாளர் மருத்துவர் பாரதிச் செல்வன், தமிழக தலித்...

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் உரை: ‘ஆதார்’ அடையாளம் அல்ல; ஆபத்து!

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் உரை: ‘ஆதார்’ அடையாளம் அல்ல; ஆபத்து!

14.12.2013 அன்று சென்னையில் மக்கள் சிவில் உரிமைக் கழகம் நடத்திய ‘ஆதார்’ குறித்த கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் சுருக்கம். ‘ஆதார்’ அடையாள அட்டையை கட்டாய மாக்கும் முயற்சிக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஆனாலும், சமையல் எரிவாயுவுக்கு மான்யம் பெற ஆதார் எண் அவசியம் என்று சில நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்தில் இன்னும் பல லட்சம் பேர் ஆதார் அட்டைகளைப் பெறவில்லை. இதற்கிடையே இதை வழங்கும் பணி டிசம்பர் 31 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஆதார் அட்டை வழியாக ஒருவரின் விரல் ரேகை, விழிப்படலம் என்று பல்வேறு அடையாளங்கள் பதியப்பட்டு, ஒவ்வொருவருக்கும் ஒரு குறியீட்டு எண் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்தில் வாழும் குடி மக்களும் இதன் வழியாக இந்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படு கிறார்கள் என்பது இதில் அடங்கியுள்ள ஆபத்தான அம்சம். இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை மக்கள் நலத் திட்டங்களை...

அறிவியல் வேறு; தொழில்நுட்பம் வேறு!

அறிவியல் வேறு; தொழில்நுட்பம் வேறு!

அறிவியல் வேறு; தொழில்நுட்பம் வேறு! தமிழக அரசு பதிப்பித்த 10 ஆம் வகுப்புத் தமிழ்ப் பாடப் புத்தகத்தில், “தமிழ்மொழியில் அறிவியல் சிந்தனைகள்’ என்ற பாடம் இருக்கிறது. அதில் வரும் வரிகள் இவை: “தமிழ் இலக்கியத்தை நுண்ணிதின் ஆய்கின்றபோது எத்தனையோ அறிவியல் கருத்துக்கள் ஆழப் புதைந்து கிடப்பதனை அறியலாம். அறிவியல் வளர்ச்சி மிகுந்த காலம் ஒன்று இருந்திருக்கக் கூடும் என்பதனை, அதனை ஆராய்வோரே அறிவர்.” பாடத்தில் தமிழருக்கு விண்ணியல், பொறியியல், மண்ணியல், கனிமவியல், அணுவியல், நீரியல் போன்ற பல இயல்களில் ஆழ்ந்த அறிவு இருந்தது என்று கூறப்படுகிறது. இத்தகைய பாடங்கள் மாணவர்களைக் குழப்பத்தில் ஆழ்த்தக் கூடியவை. அறிவியல் என்பது கோட்பாடு (தியரி), சோதனை (எக்°பெரிமெண்ட்), கண்டறிதல் (ஃபைண்டிங்°) என்ற மூன்றையும் உள்ளடக்கிய செயல்பாடு. இயற்கையில் இருப்பதை, நடப்பதைப் பதிவு செய்வது மட்டும் அறிவியல் ஆகி விடாது. உதாரணமாக, ‘செம்புலப் பெயல் நீர்போல’ என்று செம்மண்ணைப் பற்றிப் புலவர் எழுதிவிட்டதால், அவர் மண்ணியல் அறிஞர்...

தலையங்கம் : குரூப் 1 – தேர்வு வயது வரம்பை உயர்த்துக!

தலையங்கம் : குரூப் 1 – தேர்வு வயது வரம்பை உயர்த்துக!

வேலை வாய்ப்புகளை வழங்குவதில் தமிழகம் பின் தங்கியுள்ளது என்று ‘டீம்லீ°’ எனும் நிறுவனத்தின் ஆய்வு தெரிவிக்கிறது. முன்னெப் போதும் இல்லாத அளவுக்கு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் துறைகளில் வேலை வாய்ப்பு குறைந்து வருவதோடு நாடு முழுதும் சுகாதாரம் மற்றும் மருந்து உற்பத்தித் துறை ஏறுமுகமாக இருந்தாலும், தமிழகம் மட்டும் பின்னடைந்துள்ளது என்றும் அந்த ஆய்வு கூறுகிறது. தென்னக நகரங்களிலேயே வேலை வாய்ப்பில் மிகவும் பின்தங்கியிருப்பது சென்னைதான் என்றும் ஆய்வு கூறுகிறது. மிகவும் கவலையளிக்கக் கூடிய இளைஞர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கக் கூடிய பிரச்சினை குறித்து ஆட்சியாளர்கள் கவலைப் படுவதாகத் தெரியவில்லை. அடுத்து வரவிருக்கும் தேர்தல்கள்தான் அழுத்தமாக விவாதிக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் பன்னாட்டு நிறுவனங்களை இறக்குமதி செய்தபோது வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என்று உறுதிமொழியை மத்திய மாநில ஆட்சிகளின் தமிழக அமைச்சர்கள் கூறினார்கள். அப்படி வேலைவாய்ப்பு ஏதும் அதிகரித்து விடவில்லை. தமிழ்நாட்டில் தொழில் நிறுவனங்கள் புதிதாக வேலைக்கு ஊழியர்களை சேர்க்காமல், குறைந்த ஊதியத்தில்...

அறிவுரைக் குழுமத்தின் முன் கழகத் தலைவர்-தோழர்கள் வாதுரை

அறிவுரைக் குழுமத்தின் முன் கழகத் தலைவர்-தோழர்கள் வாதுரை

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் தோழர்கள் கிருட்டிணன், அருள்குமார், அம்பிகாபதி ஆகியோர், கடந்த 17.12.2013 அன்று பிற்பகல் 3 மணியளவில் சென்னையில் அறிவுரைக் குழுமம் முன் நேர் நிறுத்தப்பட்டனர். சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்திலுள்ள அறிவுரைக் குழுமத்துக்கு தோழர்கள் வருவதை அறிந்த கழகத் தோழர்கள், ஆதரவாளர்கள், வழக்கறிஞர்கள் ஏராளமாகத் திரண்டு வந்திருந்தனர். தோழர்களை சந்திக்க காவல்துறை செய்த கெடுபிடி காரணமாக கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் பதட்டம் நிலவியது. தோழர் கொளத்தூர் மணி சார்பில் விடுதலை இராசேந்திரனும், ஏனைய தோழர்களுக்கு பொருளாளர் இரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், அமைப்புச் செயலாளர் தாமரைக் கண்ணன், குழுமத்தின் முன் வாதிட்டனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி சுமார் 45 நிமிடங்கள் இந்த வழக்குப் பொய்யாக புனையப்பட்டது என்பதை காவல் துறை சாட்சி யங்கள், தேசியப் பாதுகாப்புச் சட்...

குரல் உள்ளவரை பேசுவேன்!

குரல் உள்ளவரை பேசுவேன்!

நான் (எனக்கு ஞாபகமிருக்கிற வரையில்) என்னுடைய 10 ஆவது வயதிலிருந்தே நாத்திகன். சாதி, சமயச் சடங்கு முதலியவற்றில் நம்பிக்கை யில்லாதவன். ஒழுக்க சம்பந்தமான காரியங்களில்கூட மற்றவர்களுக்குத் துன்பமோ, தொல்லையோ தரப்படாது என்பதைத்தவிர, மற்றபடி வேறு காரியங்களில் ஒழுக்கத்துக்கு மதிப்புக் கொடுத்த வனும் அல்ல. பணம், காசு, பண்டம் முதலியவை களில் எனக்குப் பேராசை இருக்கிறது என்றாலும், அவைகளைச் சம்பாதிப்பதில் சாமர்த்தியத்தை யாவது காட்டியிருப்பேனே யொழிய, நாணயக் குறைவையோ, நம்பிக்கைத் துரோகத்தையோ காட்டியிருக்க மாட்டேன். யாரையும் ஏமாற்றலாம் என்பதில் நான் சிறிதுகூட முற்பட்டிருக்க மாட்டேன். வியாபாரத் துறையில் பொய் பேசியிருந்தாலும், பொது வாழ்வுத் துறையில் பொய்யையோ, மனமறிந்து மாற்றுக் கருத்தையோ வெளியிட்டிருக்க மாட்டேன். இப்படிப்பட்ட நான், எதற்காக ஒரு சமுதாயத்தாரிடம் விரோதமோ, குரோதமோ கொள்ள வேண்டும்? நான் நமது நாட்டையும் சமுதாயத்தையும் ஆங்கில நாட்டுத் தன்மைக்கும், நாகரிகத்திற்கும் கொண்டுவர வேண்டும் என்கின்ற ஆசையுடையவன். இதற்கு முட்டுக்கட்டையாகப் பார்ப்பனச் சமுதாயம் இருக்கிறது என்று சரியாகவோ...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

நிர்வாகிகள் ஒருபுறமும், தலைவர்கள் ஒருபுறமும் வேட் பாளர்கள் மறுபுறமும் ஒருங்கிணைப்பின்றிச் செயல்பட்டதால் தான் காங்கிர° தோற்றது.  – சோனியா அப்படி, விளக்கமாக சொல்லுங்க. நாங்ககூட, ஏதோ, வாக் காளர்கள்தான் தோற்கடிச்சுட்டதா தப்பாகவே புரிஞ்சுகிட் டோம்! நாடாளுமன்ற தேர்தல் கூட்டடணி பற்றி முடிவு செய்ய அ.தி.மு.க. பொதுக்குழு ஜெயலலிதாவுக்கு அதிகாரம்.   – செய்தி அதிகாரத்தை அம்மா முறையாகப் பயன்படுத்தி, வெற்றிக் கூட்டணியை அமைக்காவிட்டால், எந்த நேரத்திலும் பொதுக் குழு அதிகாரத்தைப் பறித்துவிடும், எச்சரிக்கை! அமெரிக்காவுக்கான இந்திய பெண் தூதர் கைது பிரச்சினையை – பத்திரிகைகள் பக்கம் பக்கமாக செய்தி போடுகிறதே! – ஒரு வாசகரின் வியப்பு அதெல்லாம் ஒன்றுமில்லை. அந்தப் பெண் தூதர் படத்தை வெளியிடத் தடைபோட்டுவிட்டால் செய்தியும் நின்று விடும். தூதர் தேவயானி மீது அமெரிக்காவில் தொடரப்பட்ட வழக்கை அந்நாடு திரும்பப் பெற வேண்டும் என்பதுதான் இப்போதைய முக்கிய கோரிக்கை.   – அமைச்சர் கமல்நாத் விடாதீங்க…. வழக்கை திரும்பப் பெறாவிட்டால், அவசரமாக...

பார்ப்பனர் எச்சில் இலையும் ‘புண்ணிய’மானது!

பார்ப்பனர் எச்சில் இலையும் ‘புண்ணிய’மானது!

பார்ப்பனர் சாப்பிட்ட எச்சில் இலை மீது ‘சூத்திரர்கள்’ உருண்டு வழிபாடு செய்தால், நோய் தீர்ந்து, புண்ணியம் கிடைக்கும் என்ற நம்பிக்கை , இப்போதும் கருநாடகத்தில் தொடருகிறது. மங்களூர் அருகே உள்ள குக்கே சுப்ரமணியசாமி கோயிலில் ஆண்டுதோறும் ‘மடே° நானா’ என்ற பெயரில் நடக்கும் இழிவை எதிர்த்து பிற்படுத்தப்பட்ட ‘இந்து’ மடாதிபதிகளும் போர்க்கொடி உயர்த்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த அவமானத்தை தலைகுனிய வைக்கும் இழிவை நிறுத்தக்கோரி மங்களூர் துணை ஆளுநர் அலுவலகம் எதிரில் கடந்த சனிக்கிழமை டிசம்பர் 7 ஆம் தேதி ஒரு நாள் பட்டினிப் போராட்டம் நடந்தது. கருநாடகாவைச் சார்ந்த வேதிக் பிற்படுத்தப்பட்டோர் அமைப்பு, பார்ப்பன இழிவுக்கெதிராக நடத்திய இந்தப் போராட்டத்தில், சித்தே°வர மடாதிபதி பசவராஜா தேவாரூ, மைசூர் பேட்டாட புரா மடாதிபதி சிரச்ரேட்டி சிவாச்சார்ய சுவாமி, கருநாடகா சமூகநலத் துறை அமைச்சர் எச். ஆஞ்சநேயா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு கண்டித்துப் பேசினர். கடந்த பல ஆண்டுகளாகவே இதை எதிர்த்து இயக்கங்கள்...

மகாராஷ்டிராவில் பில்லி சூன்ய மூடநம்பிக்கைகள் குற்றமாகிறது!

மகாராஷ்டிராவில் பில்லி சூன்ய மூடநம்பிக்கைகள் குற்றமாகிறது!

மூடநம்பிக்கைகளுக்கு எதிரான மசோதா, மராட்டிய சட்டமன்றத்தில் டிசம்பர் 13 ஆம் தேதி நிறைவேறியது. நரபலி தருவது, பில்லி சூன்யம் மந்திரிப்பது, நோய் தீர்க்க மூடநம்பிக்கைகளைப் பயன்படுத்துவது உள்ளிட்ட மூடநம்பிக்கைகள் தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டுள்ளது. இந்த மசோதா, மகாராஷ்டிர மேலவையில் அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்படும். பகுத்தறிவாளர் நரேந்திர தபோக்கர் சுட்டுக் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அவரது நினைவாக அவசர சட்டமாக – இதை மகாராஷ்டிர அரசு பிறப்பித் திருந்தது. இப்போது சட்டசபையில் சட்டமாக்கப்பட்டுள்ளது. சட்டத்தில் குறிப்பிட்ட மூடநம்பிக்கைகளில் ஈடுபடுவோருக்கு 6 மாதம் முதல் 7 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க சட்டம் வகை செய்கிறது. மசோதா குரல் ஓட்டின் மூலம் நிறைவேற்றப்பட்டது. பாரதிய ஜனதா, சிவசேனா போன்ற இந்து மத அமைப்புகள் இந்த மசோதாவில் ஏராளமான திருத்தங்களைக் கொண்டுவந்தன. அதில் பெரும்பாலான திருத்தங்களை மாநில அரசு ஏற்றுக் கொண்டது. இதன்படி, சோதிடம், வா°து சா°திரம் போன்ற மூடநம்பிக்கைகள், மசோதாவிலிருந்து விலக்கப்பட்டுவிட்டன. மசோதாவை அறிமுகம் செய்து பேசிய...

தலைமைக் கழகத்தில் நடந்த சாதி மறுப்பு மணவிழா

தலைமைக் கழகத்தில் நடந்த சாதி மறுப்பு மணவிழா

திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் 15.12.13 அன்று காலை அமெரிக்காவில் ஆராய்ச்சிப் பட்டம் முடித்த தோழர் இராசசேகர குமார், ஆராய்ச்சியாளர் தோழியர் சிறீதேவி ஆகியோரின் சுயமரியாதை ஜாதி மறுப்பு மணவிழா சிறப்புடன் நடந்தது. இராசசேகர குமார், திருநெல்வேலியையும், சிறீதேவி கோவையையும் சேர்ந்தவர்கள். தமிழகத்தில் பட்ட மேற்படிப்பை முடித்து பிரான்சிலும், அமெரிக்காவிலும் ஆராய்ச்சி மேற்படிப்பை மேற்கொண்டவர்கள். தமிழச்சி (பிரான்°) அவர்களின் பெரியாரின் பதிவுகளை இணையத்தில் படித்து பெரியாரை உள்வாங்கிக் கொண்ட இவர்கள், நான்கு ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமலேயே இரு குடும்பத்தினரின் சம்மதமும் பெற்று இணையர்களாக வாழ்ந்து வருகின்றனர். இப்போது, பெரியாரின் சுயமரியாதை திருமண வழியில் திருமணத்தைப் பதிவு செய்ய விரும்பினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் திருமணத்தை தலைமை அலுவலகத்தில் நடத்தி வைத்தார். நிகழ்வில் மணமக்கள் இருவரும் பெரியாரியல் கொள்கைக்கு எப்படி வந்தோம் என்பதை அனுபவங்களின் வழியாக விளக்கி உரையாற்றினர். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பெரி யார்...

தில்லை நடராசன் வழக்கு: தீட்சதர்களுக்கு ஆதரவாக ஜெயலலிதா ஆட்சி சதி

தில்லை நடராசன் வழக்கு: தீட்சதர்களுக்கு ஆதரவாக ஜெயலலிதா ஆட்சி சதி

28.11.2013 அன்று உச்சநீதிமன்றத்தில் நடந்த விவாதம் குறித்த சுருக்கமான குறிப்புகள்: சிதம்பரம் நடராசர் கோயிலை இந்து அறநிலையத் துறை 2009 ஆம் ஆண்டில் தன்னுடைய கட்டுப்பாட்டில் கொண்டு வந்ததற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்து தோற்ற தீட்சிதர்கள் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்திருக்கின்றனர். அவர்களுக்கு ஆதரவாக, சுப்பிரமணிய சாமி இந்த வழக்கில் இணைத்துள்ளார். கோயிலை அறநிலையத் துறை மேற்கொண்டதற்கு ஆதரவாக ஆறுமுகசாமி (சிவனடியார்), வி.எம். சவுந்தரபாண்டியன் (சிதம்பரம்) ஆகியோர் வழியாக மனித உரிமை பாதுகாப்பு மையமும் சத்தியவேல் முருகனாரும் இவ்வழக்கில் தலையிட்டுள்ளனர். இவ்வழக்கு சௌகான், பாப்டே ஆகிய நீதிபதிகள் கொண்ட அமர்விற்கு நவம்பர் 28 அன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர்களான தீட்சிதர்கள் சார்பில் யாரும் வாதிடவில்லை. மாறாக, சுப்பிரமணிய சாமி வாதத்தை துவக்கி வைத்தார். சுப்பிரமணிய சாமியுடைய வாதங்களின் சுருக்கம்: “பிராமணர்கள்” எனப்படுவோர் பிறப்பினால் தோன்றுபவர்களல்ல. குணம் தான் ஒருவர் “பிராமணரா” என்பதைத் தீர்மானிக்கிறது என்று கீதை கூறுகிறது. அதனால்தான்...

தலையங்கம்: மீண்டும் ‘377’

தலையங்கம்: மீண்டும் ‘377’

டெல்லி உயர்நீதிமன்றத்தால் 2009 இல் நீக்கம் செய்யப்பட்ட இந்திய குற்றவியல் சட்டத்தின் 377 ஆவது பிரிவுக்கு இப்போது உச்சநீதிமன்றம் உயிர் கொடுத்திருப்பது நாடு முழுதும் விவாதங்களை உருவாக்கி இருக்கிறது. “இயற்கைக்கு விரோதமாக உடல்உறவு கொள்வது தவறு; மீறுவோருக்கு ஆயுள் தண்டனை” என்று கூறும் இந்தச் சட்டம் 1860 இல் மெக்காலே உருவாக்கிய குற்றவியல் சட்டத்தில் இடம் பெற்றதாகும். பிரிட்டிஷ்காரர்கள் அன்றைய இங்கிலாந்தில் இதே போன்ற சட்டம் இருந்ததால் இந்தியாவுக்கும் கொண்டு வந்தார்கள். இன்று இங்கிலாந்திலேயே அந்த சட்டம் நீக்கப்பட்டுவிட்டது. 2014 ஆம் ஆண்டு முதல் இங்கிலாந்தில் ஆணும்-ஆணும் அல்லது பெண்ணும்-பெண்ணும் திருமணம் செய்து கொள்ளும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. திருமணத்தின் அடுத்தக்கட்டப் பரிமாணம் ‘இது’ என்று இங்கிலாந்து அறிவித்துள்ளது. 18 ஆப்பிரிக்க நாடுகளும், 20 ஆசிய நாடுகளும் இந்த ‘ஓர் பால்’ திருமண முறையை சட்டபூர்வமாக அங்கீகரித்துள்ளன. 78 நாடுகள் இதை குற்றமாகக் கருதுகின்றன. பாலின உறவுகள் தனி மனித உரிமைகளின் பாற்பட்டது....

‘திராவிடர் விடுதலைக் கழகத்தின் தொடர்பயணம்’

‘திராவிடர் விடுதலைக் கழகத்தின் தொடர்பயணம்’

‘இலக்கு நோக்கிய பயணத்தில் இணைய வரும் தோழர்களே, வாருங்கள்!’ என்ற அழைப்பை ஏற்று வந்த தோழர்களுடன் 2012 Aug 12 ஆம் நாள் திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோட்டில் உதயமானது. 2001 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்த பெரியார் திராவிடர் கழகத்தில் தலைவராக இருந்த கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் விடுத்த அழைப்பை ஏற்று, விலகி வந்த பெரும்பாலான பெரியார் திராவிடர் கழக மத்தியக் குழு உறுப்பினர்களுடன் தொடங்கப் பட்ட இந்த அமைப்பு, திராவிடர் விடுதலைக் கழகம் என்ற தனிப் பெயரை சூட்டிக்கொண்டு, தனது பயணத்தைத் தொடர்ந்தது. இயக்கம் தொடங்கியதிலிருந்து – ஜாதி, தீண்டாமைக்கு எதிராக கழகத்தின் பணிகள் பெரியார் காட்டிய வழியில் தீவிரம் பெற்றன. புதிய சவால்களையும் கழகம் எதிர்கொண்டது. சமூக நீதியான இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பயன்படுத்தி, தங்களை மீட்டெடுத்துக்கொண்ட, பிற்படுத்தப் பட்ட ஜாதிகளைச் சார்ந்த சில தலைவர்கள் ஜாதிய அமைப்புகளை ஒன்று சேர்த்துகொண்டு, தலித் மக்களுக்கு...

கரியாம்பட்டி அருந்ததியர் மக்கள் மீது நடக்கும் தொடர் தாக்குதல்!

கரியாம்பட்டி அருந்ததியர் மக்கள் மீது நடக்கும் தொடர் தாக்குதல்!

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகில் உள்ள கிராமம் கரியாம்பட்டி – நடுப்பட்டி. இக்கிராமத்தில் கடந்த 24.11.2013 அன்று மாலை 3.30 மணியளவில் சுமார் 200 பேர் கொண்ட சாதி இந்து வன்கொடுமை கும்பல் கத்தி, அரிவாள், உருட்டுக்கட்டை, பெட்ரோல் உள்ளிட்ட ஆயுதங்களுடன் தலித் குடியிருப்பிற்குள் அத்துமீறி உள்ளே நுழைந்துள்ளனர். அங்கிருந்த தலித் மக்களை சாதிய ரீதியாக இழிவாகப்பேசி அவமானப்படுத்தியுள்ளனர். தாக்குதலிலும் ஈடுபட்டுள்ளனர். இக்கொடிய வன்முறையில் 8 வீடுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன, 27 வீடுகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. வீட்டிலிருந்த தொலைக்காட்சி, பீரோ, மிக்சி உள்ளிட்ட பொருட்கள் அடித்து சூறையாடப்பட்டுள்ளன. இத்தாக்குதலில் பெருமாள் (36), நாகராஜ் (34), சுப்பிரமணி (28) ஆகிய 3 தலித்துகள் காயமடைந்தனர். மூவரும் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகின்றனர். இச்சம்பவம் குறித்து நிலக்கோட்டை காவல்நிலையத்தில் 5 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 22 தலித்துகளும், 51 சாதி இந்துக்களும் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறை...

திருச்சி மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

திருச்சி மாவட்டக் கழகக் கலந்துரையாடல்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் திருச்சி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் 2.12.13 மாலை 7.30 மணிக்கு சகிலா விடுதியில் மாவட்டத் தலைவர் மீ.இ. ஆரோக்கியசாமி தலைமையில் நடை பெற்றது. சிறப்பு அழைப்பாளர்களாக செயலகத் தலைவர் திருப்பூர் துரைசாமி, மாநில பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி, மாநில பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் கலந்து கொண்டனர். திருச்சி மாவட்டக் கழகத்திலிருந்து தோழர்கள் மண்டல அமைப்புச் செயலாளர் புதியவன், மாவட்டச் செயலாளர் கந்தவேல் குமார், மாவட்ட அமைப்பாளர் குணராஜ், மாவட்ட பொருளாளர் மனோகரன், திருவரங்கம் அமைப்பாளர் அசோக், பெரியார் பெருந் தொண்டர் டாக்டர் எ°.எ°.முத்து, பொன்னு சாமி, பழனி, முருகானந்தம், தமிழ் முத்து, ஞானம் உள்பட பலர் கலந்து கொண்டனர். கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கழகத் தலைவர் மற்றும் தோழர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ஏவியுள்ள தமிழக அரசை கண்டிக்கிறோம். ஆதித் தமிழர் பேரவையின் மாநில மகளிரணி செயலாளர் இராணி, அருந்ததியினருக்கான 6 சதவீதம் உள்ஒதுக்கீட்டை...

சங்கராபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

சங்கராபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

30.11.2013 சனிக் கிழமை மாலை 3 மணியளவில் விழுப்புரம் மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட கழகத் தோழர்கள் மீது போடப்பட்டுள்ள தேசியப் பாதுகாப்புச் சட்டத்தைக் கண்டித்தும், கழகத் தலைவரை எந்தவித நிபந்தனையுமின்றி விடுதலை செய்யக் கோரியும் சங்கராபுரம் பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட அமைப்புக் குழு உறுப்பினர் ச. பெரியார் வெங்கட் தலைமை தாங்கினார். செ. நாவாப்பிள்ளை, கா. இராமர், ந. அய்யனார் ஆகியோர் உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீது போடப்பட்டுள்ள தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை கண்டித்தும் எந்தவித நிபந்தனையு மின்றி கழகத் தலைவரை விடுதலைச் செய்ய வேண்டும் என்றும்,  சங்கராபுரம் நகரத்தில் ஜாதிப் பெயர்களை தூக்கிப் பிடிக்கும் வணிகம் மற்றும் தொழிற் சாலைகள் உடனடியாக தங்கள் கடைகளிலுள்ள ஜாதிப் பெயரை அகற்றி, சமூக மாற்றத்திற்கு வழி வகுக்க வேண்டும் என்றும், ஜாதி...

இன விடுதலைப் போராளி மண்டேலா – விடை பெற்றார்!

இன விடுதலைப் போராளி மண்டேலா – விடை பெற்றார்!

கறுப்பினப் போராளி, இன விடுதலை இயக்கங்களின் நாயகர், சிறைப் பறவை மண்டேலா, அம்பேத்கர் முடிவெய்திய அதே டிசம்பர் 6 ஆம் நாளில் விடைபெற்றுக் கொண்டுவிட்டார். “வன்முறைக்கு இடம் கொடுக்காமல் அமைதியான வழியில்தான் எங்கள் போராட்டங்களை தொடங்கினோம். ஆனால், அரசு வன்முறையை ஏவியது. வன்முறைக்கு வன்முறைதான் தீர்வு என்பதால் நாங்களும் எங்கள் வழிமுறைகளை மாற்றிக் கொண்டோம். நாங்கள் தேர்ந் தெடுத்தது வன்முறையைத் தானே தவிர, பயங்கரவாதத்தை யல்ல” என்று கூறிய மண்டேலா, பிறகு அந்த வன்முறைப் போராட்டத்தையும் கைவிட் டார். வரலாறாகிப் போன அந்த விடுதலை வீரர் பற்றிய சுருக்கமான வரலாறு இதுதான்: (நன்றி: குமுதம் ரிப்போர்ட்டர்) 18 ஜூலை 1918 அன்று தென்னாப்பிரிக்காவின் வெஸோ என்ற குக்கிராமத்தில் பிறந்தவர் ரோலிலாலா மண்டேலா. பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். தந்தை பெயர் காட்லா. பள்ளி ஆசிரியருக்கு ரோலிலாலா வாயில் நுழையவில்லை போல. “இனி உன் பெயர் நெல்சன்” என்று சொல்லி விட்டார். கருப்பின மக்களை...

அம்பேத்கர் மணிமண்டபத்தில் கழக சார்பில் வீர வணக்கம்

அம்பேத்கர் மணிமண்டபத்தில் கழக சார்பில் வீர வணக்கம்

சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் டிசம்பர் 6 அன்று புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில், அம்பேத்கர் மணி மண்டபத்தில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மாலை அணி வித்தார். இராயப் பேட்டை பத்ரி நாராயணன் படிப் பகத்தில் வைக்கப் பட்டிருந்த அம்பேத்கர் படத்துக்கும், மயிலை விசாலாட்சி தோட்டத்திலுள்ள அம்பேத்கர் சிலைக்கும் தோழர்கள் புடை சூழ, பொதுச் செயலாளர் ஜாதி ஒழிப்பு முழக்கங்களுடன் மாலை அணிவித்தார். பெரியார் முழக்கம் இதழ் 12122013

தமிழர் ‘இனப்படுகொலை’ உறுதியாகிறது

தமிழர் ‘இனப்படுகொலை’ உறுதியாகிறது

முள்ளிவாய்க்கால் படுகொலையைத் தொடர்ந்து, முதலில் அயர்லாந்து நாட்டிலுள்ள ‘மக்கள் நிரந்தரத் தீர்ப்பாயம்’ விசாரணை ஒன்றை நடத்தியது. வியட்நாமில் அமெரிக்காவின் மனித உரிமை மீறல்கள் போர்க் குற்றங்களை அம்பலப்படுத்திய பெருமை இந்த ஆணையத்துக்கு உண்டு. நேர்மையும் நம்பகத் தன்மையும் கொண்ட இந்த ஆணையத்தின் முன் இலங்கை இராணுவத்தின் போர்க் குற்றம் தொடர்பாக ஏராளமான ஆவணங்கள் சான்றுகளாக உலகத் தமிழர் அமைப்புகளின் முயற்சியால் சேகரித்து முன்வைக்கப்பட்டன. மனித உரிமை மீறல்கள் போர்க் குற்றங்களை உறுதிப்படுத்தியது, இந்த விசாரணை ஆணையம். ஆனால், இனப்படுகொலைக்கான அறிகுறிகள் தெரிகிறது என்றும், அந்தக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்த சான்றுகள் தேவை என்றும் கூறியது. மீண்டும் மக்கள் நிரந்தரத் தீர்ப்பாயம் இது குறித்து இம்மாதம் ஜெர்மனியில் கூடி விரிவாக ஆராய்ந்து இனபடுகொலை குறித்து விசாரிக்க நிபுணர் குழு ஒன்றை நியமித்திருக்கிறது. இந்த நிலையில் சிங்கள இராணுவத்துக்கு அனைத்து உதவிகளையும் செய்து வந்த இந்திய அரசின் பிரதிநிதி ஒருவரே ‘இனப் படுகொலை’ நடந்தது உண்மையே...

தலையங்கம்: ‘மக்கள் சந்திப்புத் திட்டத்தை’ தீவிரப்படுத்துவோம்!

தலையங்கம்: ‘மக்கள் சந்திப்புத் திட்டத்தை’ தீவிரப்படுத்துவோம்!

‘மக்கள் சந்திப்புத் திட்டம்’ – கழக சார்பில் தோழர்களின் வேலைத் திட்டமாக முன் வைக்கப்பட்டுள்ளது. கழகத்தின் பொருளாளர் ஈரோடு இரத்தினசாமி, செயலவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் ஆகியோர், தோழர்களை மாவட்டந்தோறும் நேரில் சந்தித்து இதற்கான நன்கொடைப் படிவங்கள், துண்டறிக்கைகளை வழங்கியுள்ளனர். திராவிடர் விடுதலைக் கழகத்தின் பெரியாரியல் செயல்பாடுகளையும் அதன் முன்னுரிமைத் திட்டங்களையும் மக்களிடம் விளக்குவதற்கும் அவர்களின் ஆதரவை நன்கொடை வழியாக உறுதி செய்யவுமே இத்திட்டம். பெரியார் கொள்கைகள் உருவாக்கிய தாக்கம், தமிழ்நாட்டை வேறு மாநிலங்களிலிருந்து தனித்துவம் மிக்கதாக மாற்றியது. ஒப்பிட்டளவில் சமூக மாற்றத்துக்கு தமிழகத்தை பக்குவப்படுத்திய பெருமையும் சிறப்பும் பெரியாரியலுக்கு உண்டு. ஆனால், தமிழ்நாட்டை இன்று வேறு திசை நோக்கி இழுத்துச் செல்லக்கூடிய ஆபத்தான முயற்சிகள் முனைப்பாக அரங்கேறி வருகின்றன. திராவிட அரசியல் கட்சிகள், பதவி அரசியல் என்ற இலக்கை நோக்கி ஓடிக் கொண்டிருக்கின்றன. அவர்களுக்கான கொள்கை அடையாளங்களை கைவிட்டுவிட்டார்கள். தமிழ்நாட்டில் வேர் பிடிக்க முடியாமல்...

கழகத் தலைவர் கைதைக் கண்டித்து வைகோ நடத்திய பொதுக் கூட்டம்

கழகத் தலைவர் கைதைக் கண்டித்து வைகோ நடத்திய பொதுக் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தைக் கண்டித்தும், அவர் மீதும் கழகத் தோழர்கள் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நீக்கக் கோரியும் ம.தி.மு.க. சார்பில் 7.12.2013 மாலை புரசைவாக்கம் ‘தானா’ வீதியில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. ம.தி.மு.க. மாவட்டப் பொறுப்பாளர் ஜீவா தலைமையில் நடந்த கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்தின், த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன், த.தே.பொ.க. சார்பில் அருண் பாரதி, கரும்பு விவசாயிகள் கழகத்தின் சார்பில் பொன்னையன், நாகை தருமன், ஈட்டிமுனை இளமாறன் உள்ளிட்ட பலரும் கண்டன உரையாற்றினர். மழையையும் பொருட்படுத்தாமல் கூட்டம் நடந்தது. மேடையின் பின்புறத்தில் தோழர் கொளத்தூர் மணி, சிறைக் கம்பிகளுக்குள் அடைபட்டிருப்பதுபோல் வண்ணப் பதாகை நிறுவப்பட்டிருந்தது. இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டேயை ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி நேரில் சந்தித்து, கொளத்தூர் மணியை விடுதலை செய்ய வேண்டும்...

அறிவுரைக் குழுமத்தில் தோழர்கள் நேர் நிறுத்தம்: தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நீக்குக!

அறிவுரைக் குழுமத்தில் தோழர்கள் நேர் நிறுத்தம்: தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நீக்குக!

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் உமாபதி, இராவணன், மனோகரன், மாரிமுத்து ஆகியோர் 2013 டிசம்பர் 9 ஆம் தேதி அறிவுரைக் குழுமத்தின் முன் பிற்பகல் 3 மணி யளவில் நேர்நிறுத்தப்பட்டனர். உமாபதி, இராவணன் ஆகியோருக்காக பொதுச்செய லாளர் விடுதலை இராசேந்திரனும், மாரிமுத்து, மனோகரனுக்காக மருத்துவர் எழிலனும் வாதுரைத்தனர். விடுதலை இராசேந்திரன் நீதிபதிகள் முன் பேசுகையில் குறிப்பிட்டதாவது: “நாட்டின் பாதுகாப்புக்கு, பொது ஒழுங்குக்கு, சமுதாயத்துக்கு இன்றியமையாத பொருள்களை வழங்குதலுக்கு, அதற்கு சேவை ஆற்றுவதற்கு எதிராக பாதிப்புகளை ஏற்படுத்தினால் மட்டுமே தேசியப் பாதுகாப்புச் சட்டம் பயன்படுத்தப்படவேண்டும். அத்தகைய எந்தக் குற்றமும் சாட்டப்படாத நிலையில், தேசியப் பாதுகாப்புச் சட்டம் இந்த வழக்கில் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தபால் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி யதாக பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. வழக்குகளில் பிணை வழங்கப்படவில்லை. பிணை வழங்கு வதை நீதிமன்றம் நிலுவையில் வைத்துள்ளது. ஆனால்,...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

கோயில் கருவறைக்குள் உள்ள சிலை மந்திரத்தால் உயிரூட்டப்பட்டது; பாதுகாப்புக்காக கருவறையை அற நிலையத் துறை வீடியோ படம் எடுப்பது, பக்தர்களைப் புண்படுத்துவதாகும்.   – அர்ச்சகர் சங்கம் எதிர்ப்பு ஆகம விதிகளில் திருத்தம் கொண்டு வந்து கருவறைக்குள் ஒரு கண்காணிப்புக் காமராவைப் பொருத்தி விடலாமே! குரங்கு, எலி, பூனைகளுக்கு காபிப் பழத்தை உணவாகக் கொடுத்து, அவை மலம் கழிக்கும் போது வெளியாகும் கொட்டைகள்தான் உயர்ந்த ‘காபி’ ரகமாக தயாரிக்கப்படுகிறது.  – ‘இந்து’ தமிழ் ஏடு செய்தி அக்கிரகாரத்துல ‘பேஷா’ மணக்கும் காபி வாசனை – ரகசியம், இப்பதாண்டா அம்பி புரியறது! ஜப்பான் நாட்டில் திருமணங்களை நடத்தி வைக்க புரோகிதர்களாக ரோபோக்களை (எந்திர மனிதர்களை) பயன்படுத்து கிறார்கள்.  – ‘தினமலர்’ செய்தி அந்த ரோபோக்களை எங்க நாட்டுக்கு அனுப்பிடா தீங்க… ஓமகுண்டம் புகை மூட்டத்துல ஓட்டம் புடுச்சிடும். செவ்வாய்க் கிரகத்துக்கு இந்தியா விண்கலம் அனுப்பிய அடுத்த 15 நாளில் அமெரிக்காவும் அனுப்பியுள்ளது.  – செய்தி இரண்டு கலங்களும்...

சிறப்பு வினா… விடைகள்…

சிறப்பு வினா… விடைகள்…

சங்கர்ராமன் கொலை வழக்கில் ஜெயேந்திரன், விஜயேந்திரன் விடுதலை.  – செய்தி ‘ஆன்ம விடுதலை’ கிடைக்கிறதோ இல்லையோ; இந்த ‘பூத’ உடலுக்காவது விடுதலை கிடைத்ததே! நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டபோது ஜெயேந்திரர் முகம் இறுக்கத்துடன் காணப் பட்டது. விஜயேந்திரர் எதையோ சிந்தித்துக் கொண்டிருந்தார். – செய்தி அப்படி என்ன சிந்தித்துவிடப் போகிறார்கள்? போயும் போயும் ஒரு ‘சூத்திர’ நீதிபதி நம்ம ‘தலைவிதி’யை நிர்ணயிக்கிறானே என்று சிந்தித்திருப்பார்கள்! தீர்ப்பு வெளிவந்தவுடன் செய்தியாளர்கள், ஜெயேந்திரனிடம் பேச முற்பட்டபோது அவர் கையை மட்டும் அசைத்தார். ‘சுவாமிகள் மவுனவிரதம்’ இருப்பதாக சீடர்கள் தெரி வித்தனர்.  – செய்தி மவுன விரதம் இருப்பதாக – சாமிகள் சீடர்களிடம் கூறியிருப்பார் போல! தீர்ப்பு வந்தவுடன் ஜெயேந்திரர் புதுச்சேரி யிலிருந்து தனி விமானத்தில் தூத்துக்குடி சென்று, அங்கிருந்து காரில் திருச்செந்தூர் போய் சாமி தரிசனம் செய்தார்.  – செய்தி ஆதி சங்கரர் நடந்தே போனார்; அவரது ‘வாரிசு’ தனி விமானத்தில் பறக்கிறது. பாரத வரலாற்றில் மகான்கள் தங்கள் தவவலிமையில் இன்னல்களைக்...

“என் பிள்ளைகளை கொலை செய்வதாக மிரட்டினார்கள்”: சங்கர்ராமன் மனைவி கண்ணீர் பேட்டி

“என் பிள்ளைகளை கொலை செய்வதாக மிரட்டினார்கள்”: சங்கர்ராமன் மனைவி கண்ணீர் பேட்டி

ஜெயேந்திரனும் அவரது கூட்டாளிகளும் சங்கர்ராமன் கொலை வழக்கில் விடுதலையாகி விட்டார்கள். முதலில் குற்றவாளிகளை அடையாளம் காட்டிய சங்கர்ராமன் மனைவியும், மகளும் இறுதியில் அடையாளம் காட்ட அஞ்சினர். என் பிள்ளைகளை கொலை செய்து விடுவதாக மிரட்டியதே காரணம் என்கிறார், சங்கர்ராமனின் மனைவி, ‘ஜுனியர் விகடன்’ ஏட்டுக்கு (4.12.13) அவர் அளித்த பேட்டி இது. 3369 நாட்கள்… 24 குற்றவாளிகள்… 1873 பக்க குற்றப் பத்திரிகை… 189 அரசு தரப்பு சாட்சிகள்… என்ற பீடிகையோடு நடந்த சங்கரராமன் கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெயேந்திரர், விஜேயேந்திரர் உள்ளிட்ட அத்தனை பேரையும் விடுதலை செய்துள்ளது புதுவை நீதிமன்றம். தமிழகத்தில் நடந்தால் நியாயமான விசாரணை நடக்காது என்று வேறு மாநிலத்துக் மாற்ற ஜெயேந்திரர் வைத்த கோரிக்கையை ஏற்று சங்கர் ராமன் கொலை வழக்கு புதுவைக்கு மாற்றப்பட்டது. கடந்த 2005 ஆம் ஆண்டு தொடங்கி 9 ஆண்டுகள் நடந்தது வழக்கு. இந்த வழக்கில் நீதிபதி சி.°.முருகன் கடந்த 27 ஆம்...

கிணத்துக்கடவில் தொடரும் சாதித் தீண்டாமைக் கொடுமைகள்

கிணத்துக்கடவில் தொடரும் சாதித் தீண்டாமைக் கொடுமைகள்

கோவை மாவட்டம், கிணத்துக் கடவு அருகே பத்தனம் என்கிற கிராமத்திலுள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் மாணவர்களிடம் ஆசிரியர்கள் சாதித் தீண்டாமையைக் கடைப்பிடிக்கின்றனர். இதையறிந்த திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் அந்த ஊருக்குச் சென்று அங்கு படிக்கின்ற தலித் மாணவ, மாணவிகளையும் அவர்தம் பெற்றோர்களையும் அவர்களுடைய வீடுகளுக்கேச் சென்று சந்தித்து விவரங்கள் கேட்டறிந்தனர். அதன்படி அவர்கள் சொன்னது, – அந்தப் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளையும் அந்தப் பள்ளியின் ஆசிரியர் ஈ°வரி என்பவர், தேநீர் வாங்க, பள்ளி வளாகங்களை சுத்தம் செய்ய பெருக்க பயன்படுத்து வாராம். ஆனால், பள்ளிக் கழிப்பறையை மட்டும் கழுவி சுத்தம் செய்ய தலித் மாணவ, மாணவிகளைப் பயன்படுத்துவாராம். இது பல காலமாக நடந்து கொண்டிருக்கிறது. அது தற்போதுதான் வெளி வந்துள்ளது. அதாவது தற்போது அந்தப் பள்ளியில் படிக்கும் சுபாஷினி என்கிற மாணவி கழிப்பறை சுத்தம் செய்ய தண்ணீர் கொண்டு வராததால் அவரை ஆசிரியர் ஈ°வரி அடித்து...

பெரியார் கருத்து வெற்றி பெறுகிறது! திருமணமின்றி சேர்ந்து வாழலாம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பெரியார் கருத்து வெற்றி பெறுகிறது! திருமணமின்றி சேர்ந்து வாழலாம்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

திருமணமாகாமல் ஆணுடன் சேர்ந்து வாழும் பெண்கள் மற்றும் அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளைப் பாதுகாக்கச் சட்டம் இயற்றுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து, வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை 28.11.2013 அன்று வழங்கியது. திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழ்ந்த பெண்ணையும், அவருக்குப் பிறந்த குழந்தையையும் தனியாகத் தவிக்கவிட்டு, திடீரென ஆண் ஒருவர் பிரிந்து சென்றார். இதனால் பாதிக்கப்பட்ட அந்தப் பெண், தன்னை தவிக்கவிட்டுச் சென்ற அந்த ஆணிடம் இருந்து பராமரிப்பு செலவு பெற்றுத் தரக்கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கின் விசாரணை, நீதிபதி கே.எ°.ராதாகிருஷ்ணன் தலைமையிலான அமர்வு முன்னிலையில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், “திருமண மாகாமல் ஆணுடன் சேர்ந்து வாழும் பெண்கள், அவர் களுக்குப் பிறக்கும் குழந்தைகளைப் பாதுகாக்கும் வகையில் உரிய சட்டத்தை இயற்ற வேண்டும்” என மத்திய அரசுக்கு உத்தர விட்டது. மேலும், “திருமணமாகாமல் ஆண்-பெண் சேர்ந்து வாழ்வது குற்றமும் அல்ல, பாவம் அல்ல....

திருமணம் வேண்டாதது! பெரியார்

திருமணம் வேண்டாதது! பெரியார்

உலகில் அர்ச்சகன், மாந்திரிகன், சோதிடன் இவர்களைவிடப் பித்தலாட்டத்தில் கைதேர்ந்தவர்கள் கிடையாது. மதமும் கடவுள் சங்கதியும் மனித சமூகத்தின் வளர்ச்சியைப் பெரிதும் தடுத்து நிறுத்திவிட்டன. குறிப்பாகப் பெண்கள் சங்கதியை எடுத்துக் கொள்ளுங்கள். பார்ப்பான் நம்மை எப்படிக் கீழ்ச்சாதி என்று கூறி அடிமை வேலை வாங்குகிறானோ, அதைப்போலத்தான் மக்களில் சரி பகுதி எண்ணிக்கையுள்ள பெண்களை நடத்தி வருகிறோம். பெண்கள் என்றால் வெறும் குட்டிபோடும் கருவி என்றுதான் நடத்தி வருகிறோம். பெண்களும் கணவன்மார்கள் நகை, நட்டு வாங்கிக் கொடுத்தால் போதும் – நல்ல துணிமணி வாங்கிக் கொடுத்தால் போதும் என்கிற அளவுக்குத் தங்களைக் குறுக்கிக் கொண்டு விட்டார்கள். பிராமணன்-சூத்திரன் என்ற அமைப்புக்கும் பேதத்திற்கும், புருஷன்-பெண்டாட்டி என்ற விகிதத்துக்கும் எந்தவித வேறுபாடும் கிடையாதே! உலகத்திற்குப் பயன்படும்படியான பேர் பாதி மனித சக்தியை, பெண்ணடிமை மூலம் நாம் விரயப்படுத்திக்கொண்டு இருக்கின்றோம். இதற்கு ஒரு பரிகாரம் என்ன என்றால், ‘கலியாணம்’ என்பதையே சட்ட விரோதமாக ஆக்கவேண்டும். இந்தக் ‘கலியாணம்’ என்ற...

குடும்பம் குடும்பமாய் திரண்டு-வீரவணக்கம்: ‘புலியூரி’ல் மாவீரர் நாள் எழுச்சி

குடும்பம் குடும்பமாய் திரண்டு-வீரவணக்கம்: ‘புலியூரி’ல் மாவீரர் நாள் எழுச்சி

நவம்பர் 27 அன்று மாலை 6.05 மணிக்கு கொளத்தூர் புலியூர் பிரிவு, தண்டாசாலையில் தளபதி பொன்னம்மான் நினைவு நிழற்கூடத்தில் தமிழீழ ஆதரவாளர் ஒருங்கிணைப்பு குழு சார்பில் மாவீரர் நாள் நினைவேந்தல் நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற்றது. இந்நிகழ்ச்சிக்கு கழக மாவட்ட அமைப்பாளர் டைகர் பாலன் தலைமை வகித்தார். பொது மக்கள், பள்ளி-கல்லூரி மாணவர்கள், வணிகர்கள், மருத்துவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், தமிழக வாழ்வுரிமைக் கட்சி, நாம் தமிழர், ம.தி.மு.க., விடுதலை சிறுத்தைகள், பா.ம.க. மற்றும் தோழமை அமைப்புகள் உட்பட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டு மாவீரர் களுக்கு வீரவணக்கம் செலுத்தினர். வீரவணக்க நிகழ்வுக்கு பின் மேட்டூர் டி.கே.ஆர். இசைக் குழுவினரின் இசை நிகழ்ச்சியை தொடர்ந்து தமிழக வாழ்வுரிமைக் கட்சியை சார்ந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் காவேரி, காமராசு, கழகப் பொருளாளர் இரத்தினசாமி ஆகியோரது உரைக்குப் பின் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரையாற்றினார். சரியாக 6.04 மணிக்கு மாவீரர்...

‘ஆனந்த விகடனு’க்கு பெரியார் பேட்டி: “எங்க வூட்டு மோர், எங்க வூட்டு தண்ணீரை சுத்தப்படுத்திடுமா?”

‘ஆனந்த விகடனு’க்கு பெரியார் பேட்டி: “எங்க வூட்டு மோர், எங்க வூட்டு தண்ணீரை சுத்தப்படுத்திடுமா?”

மறைந்த பத்திரிகையாளர் சாவி, தந்தை பெரியாரை திருச்சி பெரியார் மாளிகையில் சந்தித்து எடுத்த இந்தப் பேட்டி, 4.4.1965 ‘ஆனந்த விகடன்’ இதழில் வெளி வந்துள்ளது. அப்பேட்டியை மீண்டும் 15.1.2014இல் அந்த ஏடு மறு வெளியீடு செய்துள்ளது. பல்வேறு வரலாற்றுத் தகவல்கள் அடங்கிய அந்த சந்திப்பை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. திருச்சி பெரியார் மாளிகைக்குள் காலடி எடுத்து வைக்கும்போதே, எங்கள் பார்வையில் பட்ட கறுப்புச் சட்டை இளைஞர், “ஐயா, உள்ளேதான் இருக்கார். நீங்க வரப்போறீங்கன்னு சொல்லியிருக்கேன். உள்ளே போங்க” என்று புன்சிரிப்போடு வழி காட்டுகிறார். உள்ளே… கட்டிலின் மீது சம்மணமிட்டு அமர்ந்திருந்த பெரியாரைப் பார்த்ததும், ‘வணக்கம் ஐயா!’ என்று கும்பிடுகிறோம். “வாங்க… வாங்க… ரொம்ப சந்தோசம்…” எங்களை மிக்க மகிழ்ச்சியுடன் வரவேற்றபடியே, “இப்படி உட்காருங்க” என்கிறார். சாதாரண வெள்ளைப் பனியன். நாலு முழம் வேட்டி. வயிற்றின் நடுப் பாதியில் வேட்டியின் இரு முனைகளையும் பனியனுக்கு மேல் கட்டியிருக்கிறார். அந்த முனைகள்...