Category: திவிக

பேராவூரணி கூட்டத்தில் கொளத்தூர் மணி விளக்கம் தேசிய குடியுரிமை-மக்கள் பதிவேடுகள் அனைத்து தரப்பினருக்கும் ஆபத்தானவை

பேராவூரணி கூட்டத்தில் கொளத்தூர் மணி விளக்கம் தேசிய குடியுரிமை-மக்கள் பதிவேடுகள் அனைத்து தரப்பினருக்கும் ஆபத்தானவை

இந்த தேசிய மக்கள் பதிவேடும், இந்தியக் குடியுரிமைப் பதிவேடும் இஸ்லாமியருக்கு மட்டும் எதிரானதா? இல்லை, அனைத்துத் தரப்பினருக்கும் எதிரானது. தேசிய குடியுரிமை பதிவேடு, தேசிய மக்கள் பதிவேடு இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல, அனைத்துப் பிரிவினரையும் பாதிக்கும்; எளிய குடிமக்கள் தலையில் தங்களை நிரூபித்துக் கொள்ளும் சுமையை அழுத்துகிறது மத்திய அரசு என்றார் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி. பிப். 17, 2020 அன்று பேராவூரணியில் நடந்த பொதுக் கூட்டத்தில் கொளத்தூர் மணி ஆற்றிய உரை: குடியுரிமை திருத்தச் சட்டத்தின் பாதிப்புகளை எனக்கு முன்னர் உரையாற்றிய பலரும்  விளக்கி யிருக்கிறார்கள். குறிப்பிட்ட மதத்தினரை மட்டும் விலக்கி, குறிப்பிட்ட நாடுகளை உலகின் கொடூரமான நாடுகள் என்பதாக அடையாளப்படுத்துகிற ஒரு சட்டம்; அதிலும் ஒரு குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு முன்னால் வந்தவர்களுக்கு மட்டும் – 2014க்குப் பின் அந்த நாடுகளெல்லாம் எந்த கொடுமைகளையும் செய்வதில்லை; 2014உடன் நிறுத்திவிட்டார்கள் என்பதைப்போல  -–இந்த சட்டத்தை ஏன் கொண்டு வந்தார்கள்...

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம் நடத்திய அண்ணா நினைவு கருத்தரங்கு

‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம் நடத்திய அண்ணா நினைவு கருத்தரங்கு

நிமிர்வோம் 13 ஆவது வாசகர் வட்ட நிகழ்வு. பேரறிஞர் அண்ணாவின் 51 ஆவது நினைவு நாளை முன்னிட்டு அண்ணா நினைவு தின சிறப்பு வாசகர் வட்டமாக திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை அலுவலகத்தில் 16.02.2020 அன்று மாலை 6:30 மணியளவில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில் ஊடகவியிலாளர் பிரகாஷ் வரவேற்புரையாற்றினார். தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் சு.பிரகாஷ்  தலைமை வகித்தார்.  அண்ணாவின் இரங்கலுக்காக கலைஞர் எழுதிய கவிதையின் சிறு பகுதியை, ‘இதயத்தை தந்திடண்ணா’ என்ற தலைப்பில் யாழினி வாசித்தார். நிகழ்வில் 30.12.2019 அன்று வேலூர் கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி  ஆற்றிய உரை, ‘இந்திய நாட்டினருக்கும் எதிரானது தான் குடியுரிமை திருத்தச் சட்டம்’ என்கிற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. இதனை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்  வெளியிட, பேராசிரியர் மு.நாகநாதன்  பெற்றுக் கொண்டார். கடந்த வாசகர் வட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்  ஆற்றிய உரை, ‘குடியுரிமை சட்டங்களை ஏன்...

கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

கும்பகோணத்தில் கண்டன ஆர்ப்பாட்டம்

16.2.2020 ஞாயிற்றுக் கிழமை மாலை ஆறு மணி அளவில் தஞ்சை மாவட்டம் கும்ப கோணத்தில் மீன் மார்க்கெட் அருகில் மக்கள் அரசு கட்சி பொதுச் செயலாளர் ராஜ்குமார் தலைமையில் நடைபெற்ற அக் கட்சியின், குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான கண்டனக் கூட்டத்தில் பல்வேறு அரசியல் இயக்கங்கள் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் இணைந்து பெருவாரியான மக்கள் கலந்து கொண்டனர். அதில்  அழைக்கப்பட்டிருந்த அனைத்துக் கட்சித் பொறுப்பாளர்களும் உரையாற்றினார்கள். மக்கள் அரசு கட்சியின் தலைவர் வழக்கறிஞர் அருள்மொழிவர்மன் சிறப்புரை ஆற்றினார். அக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக அழைக்கப்பட்டிருந்த திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பல்வேறு வரலாற்று நிகழ்வுகளை சுட்டிக்காட்டி அக்கூட்டத்தின் நோக்கத்தையும், மக்கள் இந்த நேரத்தில் ஒன்றுபட்டு நிற்க வேண்டியதின் மிக முக்கியமான தேவையையும் வலியுறுத்தி நல்லதொரு கண்டன உரையாற்றினார்கள். கூட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் நாச்சியார்கோயில் கிளையின் சார்பாக மூன்றாவது தவணையாக கழகக் கட்டமைப்பு நிதிக்காக ரூ.20,000/- கழகத் தலைவரிடம் வழங்கப்பட்டது....

பெரியார் சிலை உடைப்பு எதிரொலி: பேராவூரணியில் ஆர்ப்பாட்டம்!

பெரியார் சிலை உடைப்பு எதிரொலி: பேராவூரணியில் ஆர்ப்பாட்டம்!

காஞ்சிபுரம் மாவட்டம் சாலவாக்கம் அருகே கலிப்பட்டு கிராமத்தில் சமூக விரோதிகளால் பெரியார் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்தச் செயலை கண்டித்து பேராவூரணியில் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பேராவூரணி பெரியார் சிலை அருகில் நடைபெற்ற இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், திராவிட முன்னேற்ற கழகம், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் கட்சி, தமிழக மக்கள் புரட்சி கழகம், அறநெறி மக்கள் கட்சி, விதை நெல் இலக்கிய கூடம் உள்ளிட்ட அமைப்புகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்துகொண்டு பெரியார் சிலையை உடைத்தவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி முழக்கமிட்டனர். கூட்டத்தில் உண்மைக்கு மாறாக பெரியாரை அவதூறு செய்யும் நோக்கத்தோடு ‘துக்ளக்’ இதழ் விழாவில் பேசிய ரஜினிகாந்துக்கு எதிராகவும்,  கலவரத்தை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்த தமிழ்நாடு அமைச்சர்...

திரைமறைவில் நடக்கும் இரகசிய பேரங்கள் இராஜபக்சேவை இந்தியா அழைத்தது ஏன்?

திரைமறைவில் நடக்கும் இரகசிய பேரங்கள் இராஜபக்சேவை இந்தியா அழைத்தது ஏன்?

சென்னை ஆர்ப்பாட்டத்தில் விடுதலை இராசேந்திரன் விளக்கம் இராஜபக்சேவின் இந்திய வருகையைக் கண்டித்து ‘ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு’ சார்பாக, சென்னை, வள்ளுவர் கோட்டம் முன்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை அதில் பங்கேற்றுள்ள அமைப்புகள் நடத்தியுள்ளன.  ஆர்ப்பாட்டத்தில் பெருமளவு பங்கேற்ற திராவிடர் விடுதலைக் கழகத்தின்  பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், இன்றைய தினம் ஈழத் தமிழர்களின் உரிமைகளைக் காவு கொடுத்து, பா.ஜ.க.வின் நரேந்திர மோடி அரசும்-சிங்கள இன வெறி அரசின் பிரதமரான இராஜ பக்சேவும் இணைந்து  நடத்திடும் ஈழத் தமிழரின் தேசிய இன  அடையாளமழித்து, அங்கு ஒற்றை ஆட்சி முறையை, ஆழ வேரூன்றச் செய்வதற்காக மேற் கொள்ளும் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்தி உரை யாற்றினார்.  அவரது உரையில் குறிப்பிட்டதாவது : இலங்கைப் பிரதமர் மஹிந்த இராஜபக்சே  5 நாள் அரசு முறைப் பயணமாக 07.02.2020 அன்று புது டெல்லிக்கு வருகை தந்திருக்கிறார். இவரை விமான நிலையம் சென்று வரவேற்றிருக்கிறார், இந்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணை...

எதிர்த்த ஊர் மக்களே மேளதாளத்துடன் வரவேற்பு

எதிர்த்த ஊர் மக்களே மேளதாளத்துடன் வரவேற்பு

தலித் மக்கள் உரிமைக்காக வாதாடி வென்ற வழக்கறிஞர்  ப.பா. மோகனுக்கு பாராட்டு ஈரோடு மாவட்டம், சென்னிமலை அருகே உள்ள  வடுகபாளையத்தில் கடந்த ஆறு ஆண்டு களுக்கு முன்பு, ஊர்ப் பொதுமக்கள் சுடுகாடு கேட்டு போராடி, இறந்த உள்ளூர்க்காரரின் உடலை நடுரோட்டில் வைத்து சாலை மறியல் செய்த காரணத்தால், 43 பேர் கைது செய்யப்பட்டு சிறைப் படுத்தப்பட்டனர். இதில் திராவிடர் விடுதலைக் கழகம், புரட்சிகர இளைஞர் முன்னணி, விடுதலை வேங்கைகள், தற்சார்பு விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட இயக்கங்கள் களப்பணி ஆற்றி, மூத்த வழக்கறிஞர்  ப.பா. மோகன் மூலமாக, கடந்த 6 ஆண்டு களாக பெருந்துறை நீதிமன்றத்தில் வழக்கு நடை பெற்று வந்தது. இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட் டிருந்த 43 பேரும் கடந்த 27.12.2019 அன்று பெருந் துறை நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில், எவ்வித கட்டணமும் வாங்காமல் வாதாடி விடுதலை பெற்றுத்தந்த மூத்த வழக்கறிஞர்  ப.பா மோகன் மற்றும் இந்தப்...

சேலம் மாநாட்டில் நடந்தது என்ன? : சிறப்புக் கூட்டத்தில் விரிவாக விளக்கினார், மூத்த வழக்கறிஞர் துரைசாமி

சேலம் மாநாட்டில் நடந்தது என்ன? : சிறப்புக் கூட்டத்தில் விரிவாக விளக்கினார், மூத்த வழக்கறிஞர் துரைசாமி

‘1971இல் சேலம் மாநாட்டில் நடந்தது என்ன?’ என்ற தலைப்பில் தந்தை பெரியார் திராவிடர் கழகத் துணைத் தலைவரும் மூத்த வழக்கறிஞருமான செ. துரைசாமி, சென்னையில் தலைமைக் கழக அரங்கில் நடந்த சிறப்புக் கூட்டத்தில் ஒன்றரை மணி நேரம் விரிவாகப் பேசினார். நிகழ்ச்சிக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். சேலம் மாநாட்டையொட்டி இந்துக் கடவுள்களை புண்படுத்தி விட்டதாக மாநாட்டு வரவேற்புக் குழு உறுப் பினர்கள் மீது தொடரப்பட்ட வழக்கில் தந்தை பெரியார் ஆணையை யேற்று தோழர்கள் சார்பில் வாதாடியவர் வழக்கறிஞர் துரைசாமி. வழக்கு முதலில் சேலம் நீதிமன்றத்தி லும் பிறகு சென்னை பெருநகர நீதி மன்றத்திலும் நடந்தது. பிறகு சென்னை உயர்நீதி மன்றம், உச்சநீதிமன்றத்திலும் நடந்தது. சேலம் – சென்னை பெருநகர நீதிமன்றங்களின் வழக்கில் அரசு தரப்பு சாட்சியாக ‘துக்ளக்’ சோ சாட்சிய மளித்தபோது அவரை குறுக்கு விசாரணை செய்தார், வழக்கறிஞர் துரைசாமி. பெரியாரை நோக்கி சேலம் ஊர்வலத்தில் செருப்பு...

அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு முழக்கத்தோடு கோவையில் ஆயிரமாயிரம் இளைஞர்கள் அணி வகுத்த மாட்சி

அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு முழக்கத்தோடு கோவையில் ஆயிரமாயிரம் இளைஞர்கள் அணி வகுத்த மாட்சி

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் சார்பாக கோவையில் கடந்த 9.2.2020 அன்று நீலச் சட்டை பேரணி ஜாதி ஒழிப்பு மாநாடு நடைபெற்றது. காவல்துறை அனுமதி மறுப்பின் காரணமாக இரண்டு முறை ஒத்திவைக்கப்பட்ட இந்த நிகழ்வு பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்புத் தோழர்களின் இடையறாத முயற்சியால் நீதிமன்றத்தின் மூலமாக அனுமதி பெறப்பட்டு பேரணியும் மாநாடும் திட்டமிட்டபடி நடந்துள்ளது. இந்தப் பேரணியும் மாநாடும் பொதுமக்களின் பார்வையை ஈர்த்து விடக்கூடாது என்று அரசும் காவல் துறையும் பேரணி துவங்கும் போதும் மாநாடு நடைபெறும் பொழுதும் பல்வேறு இடையூறுகளை ஏற்படுத்திய வண்ணமே இருந்தார்கள். பேரணி நடைபெறும் 9.2.2020 முந்தைய நாள் மதியம் திடீரென காவல்துறை ஏற்கனவே அனுமதி வழங்கப்பட்டிருந்த பேரணி செல்லும் பாதைக்கு அனுமதி மறுத்து குறுகலான சாலையில் பொதுமக்களின் பார்வை படாத இடத்தில் ஊர்வலப் பாதையை மாற்றி அமைத்தது. கோவையில் அனைத்து இயக்கங்களும் கட்சிகளும் பொதுக் கூட்டங்கள் நடத்தும் வ.உ.சி. பூங்கா மைதானத்தில ஜாதி ஒழிப்பு மாநாட்டை நடத்துவதற்கு...

மடத்துக்குளம் பகுதியில் குடியுரிமைச் சட்ட ஆபத்துகளை விளக்கி பரப்புரை

மடத்துக்குளம் பகுதியில் குடியுரிமைச் சட்ட ஆபத்துகளை விளக்கி பரப்புரை

காந்தியார் படுகொலை நாளை முன்னிட்டு, 30.1.2020 அன்று உடுமலை. மடத்துக்குளம் பகுதியில் காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரையில் உடுமலை மடத்துக்குளம் முற்போக்காளர் கூட்டமைப்பு சார்பாக காந்தி படுகொலை  நாள் ஊஹஹ., சூசுஊ., சூஞசு. எதிர்ப்புப் பரப்புரை பயணமாக நடத்தப்பட்டது.  வேன்கள், இரு சக்கர வாகனம் மூலம் திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு உறுப்பினர் இரா. மோகன்  தலைமையில் துவங்கியது.குமரலிங்கம், மடத்துக்குளம், கணியூர், காரத் தொழுவு, துங்காவி, பூளவாடி, குடிமங்கலம், பெதப்பம்பட்டி, கொங்கல் நகர், முக்கோணம் பகுதி, குட்டை திடல், இறுதியாக உடுமலை சித்தரக் கூடம் ஆகிய பகுதிகளில் மக்களின் ஆதரவுடன் சிறப்பாக நடைபெற்றது. பரப்புரை பயணத்தில், இந்திய ஜக்கிய கம்யூனிஸ்ட் , ஆதி தமிழர் பேரவை, விடுதலைச் சிறுத்தைகள், தமிழர் பண்பாட்டு இயக்கம், திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், திராவிடர் தமிழர் கட்சி ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். இறுதியில்...

நாச்சியார் கோயில் கழகக் கூட்டத்தில் கழகத்தினர் வழங்கிய ரூ.30,000 நிதி

நாச்சியார் கோயில் கழகக் கூட்டத்தில் கழகத்தினர் வழங்கிய ரூ.30,000 நிதி

பெரியாரின் 41 ஆவது நினைவு நாள் கூட்டம் 1.2. 2020 அன்று சனிக்கிழமை மாலை 7 மணியளவில் தஞ்சை மாவட்டம்  நாச்சியார் கோவில் வடக்கு வீதியில்   மிகச் சிறப்பாக நடை பெற்றது.   மாவட்டத் தலைவர் சாக்கோட்டை இளங்கோவன் தலை மையிலும் தலைமைக் குழு உறுப்பினர்  இளைய ராஜா மற்றும் சோலை மாரியப்பன் முன்னிலையிலும் தொடங்கியது. கூட்டத்திற்கு, குடந்தை ஒன்றிய அமைப்பாளர் வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். அதனைத் தொடர்ந்து தஞ்சை மாவட்ட செயலாளர் கு. பாரி, நாகை மாவட்ட செயலாளர்  தே.மகேஷ், மனிதநேய மக்கள் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ராஜ்முகமது , சிவபுரம் மாணவர் கபிலன் ஆகியோர் உரையாற்றினர் . அதனைத் தொடர்ந்து நாச்சியார் கோவில் தி.வி.க . கிளைக் கழகம் சார்பில் இரண்டாவது தவணையாக ரூ.30,000  (முப்பதாயிரம் மட்டும்) கழகத் தலைவர் தா.செ. மணியிடம் வழங்கப்பட்டது. கழகத்  தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரை நிகழ்த்தினார். ஒன்றரை மணி நேரத்திற்கும் மேலாகவே பேச்சு...

‘கற்க கல்வி’ அறக்கட்டளை சார்பில் மணியம்மையார் நூற்றாண்டு விழா – பொதுக் கூட்டம்

‘கற்க கல்வி’ அறக்கட்டளை சார்பில் மணியம்மையார் நூற்றாண்டு விழா – பொதுக் கூட்டம்

‘கற்க கல்வி’ அறக்கட்டளை சார்பாக 02.02.2020 அன்று மாலை 6 மணியளவில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழா மற்றும் தமிழ் வழியில் பயிலும் 2000 மாணவர்களுக்கான கல்வி உதவி வழங்கும் விழாவும், சென்னை எம்.ஜி.ஆர் நகர் மார்க்கெட் பகுதியில் நடைபெற்றது. கற்க கல்வி அறக்கட்டளை செயலாளரும், திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு உறுப்பினருமான கரு அண்ணாமலை நிகழ்விற்கு தலைமை வகித்தார்.  திவிக தலைமைக் குழு உறுப்பினர் கு. அன்பு தனசேகர் நிகழ்வை ஒருங்கிணைத்தார். ப.அமர்நாத் வரவேற்புரை யாற்றினார். ‘விரட்டு’ வீதி நாடகக் குழுவினர், ‘ஹசவiஉடந 21’ அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டம் என்ற தலைப்பில், தேசிய கல்விக் கொள்கையின் ஆபத்தை விளக்கும் வகையில் வீதி நாடகத்தை நிகழ்த்திக் காட்டினர். அதைத் தொடர்ந்து, மருத்துவர் எழிலன், மா.சுப்பிரமணி (தென் சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர்), வழக்கறிஞர் எஸ். துரைசாமி (துணைத் தலைவர் தந்தை பெரியார் திராவிடர் கழகம்), கொளத்தூர் மணி...

கழகத் தோழர்களே!

கழகத் தோழர்களே!

புரட்சிப் பெரியார்முழக்கம், நிமிர்வோம் இதழுக்கு சந்தா சேர்க்கும் இயக்கத்தை விரைவுப் படுத்துவீர்! 2020ஆம் ஆண்டில் இதழ்கள் தொடர்ந்து வெளிவர வேண்டிய பொறுப்பை தோழர்கள் உணர்வார்கள் என்று நம்புகிறோம். இயக்க இதழ்கள் தான் தோழர்களை இணைக்கும் இணைப்புச் சங்கிலி. தோழர்களின் செயல்பாடுகளை சுமந்து வரும் கழகத்தின் ‘தூது மடல்’. ஒரு இயக்கம் உயிரோட்டமாக தன்னை இறுத்திக் கொள்வதற்கு இயக்க இதழ்களே சுவாசக் காற்று என்பது, நீங்கள் அறியாதது அல்ல! தோழர்களே! விரைந்து செயல்படுங்கள்! பிப்ரவரி இறுதிக்குள் சந்தா சேர்ப்பு இயக்கத்தை நிறைவு செய்தாக வேண்டிய கடமை உணர்ந்து, களத்தில் இறங்குங்கள்! பெரியார் முழக்கம் 06022020 இதழ்

ஆசிரியருக்குக் கடிதம் வேத மந்திரங்களின் அர்த்தத்தை தமிழில் கூற ஏன் மறுக்கிறார்கள்?

ஆசிரியருக்குக் கடிதம் வேத மந்திரங்களின் அர்த்தத்தை தமிழில் கூற ஏன் மறுக்கிறார்கள்?

பிறப்பின் அடிப்படையில் மட்டுமே ஒருவர் ‘இந்து’ என்று அடையாளப்படுத்தப்படுகிறார். இந்து ‘சனாதன தர்மம்’ இந்துக் கடவுள்களின் பிறப்பு, இந்து மத நூல்கள் குறித்து பெரும்பாலான இந்து மக்களுக்கு எதுவும் தெரியாது. அதன் காரணமாகத்தான் பார்ப்பனர்கள் சூழ்ச்சியாக, தங்கள் பார்ப்பனிய வேத மதத்தை இந்து மதம் என்று கூறி பார்ப்பனரல்லாத மக்களை ஏமாற்றி வருகிறார்கள். அர்ச்சகர் ஆகும் உரிமை தங்களுக்கே உண்டு என்று உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடுகிறார்ககள். ஆனால் வழிபாடுமுறைகள் குறித்து புரோகிதர்களுக்கு தேர்வுகள் எதுவும் நடத்தப்படுவது இல்லை. கல்வித் தரத்தை உயர்த்த ‘நீட்’ தேர்வு 5ஆம் வகுப்புக்கு தேர்வு; 8ஆம் வகுப்புக்கு தேர்வு என்றெல்லாம் பேசுகிறவர்கள் அர்ச்சகர் புரோகிதர் ஆவதற்கும் ‘தகுதி’ வேண்டும். அதற்கான தேர்வு வேண்டும் என்றும் ஏன் வலியுறுத்துவது இல்லை? அதேபோல் சமஸ்கிருதத்தில் புரோகிதப் பார்ப்பனர்கள் ஓதும் மந்திரங்களின் தமிழ்மொழி பெயர்ப்பை ஏன் மக்களிடம் எடுத்துச் சொல்லக் கூடாது? இந்தி திரைப்படம் ஓடினால் புரிந்து கொள்வதற்கு அதற்கு...

திருப்பூர்-கொளத்தூர்-மேட்டூரில் தமிழர் திருநாள்

திருப்பூர்-கொளத்தூர்-மேட்டூரில் தமிழர் திருநாள்

திருப்பூர் மாவட்ட திவிக சார்பில் பதினோராம் ஆண்டு தை 1 தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா நாள் 26.1.2020 ஞாயிறு காலை 8 மணிக்கு மாஸ்கோ நகர் பெரியார் திடலில் நிகர் கலைக்குழுவினர் பறை முழக்கத் துடன் ஆரம்பித்தது. தமிழர் விழா, பகுதி மக்களின் ஒத்துழைப்போடு நடைபெறும் இவ்விழாவில் முதல் நிகழ்வாக காலை 9 மணி அளவில் தோழர் புல்லட் இரவி (அமமுக) பொங்கல் வழங்கினார். அதனை தொடர்ந்து சிறுவர் சிறுமி களுக்கான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளை சேகர் (அதிமுக) தொடங்கி வைத்தார். கழகப் பொருளாளர் துரைசாமி தொடக்க உரையாற்றிய பின் திருப்பூர் மாவட்டத் தலைவர் முகில்ராசு, செயலாளர் நீதிராசன், அமைப்பாளர் அகிலன், சங்கீதா, மாநகர் தலைவர் தனபால், செயலாளர் மாதவன் மற்றும் மாநகர் அமைப்பாளர் முத்து ஆகியோர் பல்வேறு விளையாட்டு போட்டிகளை திறம்பட நடத்தினர். உடன் தமிழ்நாடு மாணவர் கழக நிர்வாகிகள் தோழர் சந்தோஷ் மற்றும் பிரசாந்த் ஒருங்கிணைத்தனர் சிறுவர்...

உள்ளாட்சியில் வெற்றி பெற்ற முதல் திருநங்கை: கழகத் தோழர்கள் நேரில் வாழ்த்து

உள்ளாட்சியில் வெற்றி பெற்ற முதல் திருநங்கை: கழகத் தோழர்கள் நேரில் வாழ்த்து

தமிழகத்தில் முதன் முதலாக தேர்தலில் நின்று, தமிழகத்தின் முதல் திருநங்கை ஒன்றியக் (கருவேப்பம்பட்டி) கவுன்சிலராக திமுக சார்பில் வெற்றி பெற்ற ரியா அவர்களை அவரது இல்லத்தில், திராவிடர் விடுதலைக் கழகம் திருச் செங்கோடு நகரம் சார்பாக, நகரச் செயலாளர் பூபதி, சோம சுந்தரம், விஜய்குமார், பிரகாஷ், மனோஜ் ஆகியோர் சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்ததுடன்,  கழகத்தின் வெளியீடுகளான இவர்தான் பெரியார், கருஞ்சட்டைக் கலைஞர் புத்தகங்கள் மற்றும் நிமிர்வோம் மாத இதழ்களை வழங்கி வாழ்த்துகள் தெரிவித்தனர். பெரியார் முழக்கம் 30012020 இதழ்

சிலை உடைப்பைக் கண்டித்து பெரியார் இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

சிலை உடைப்பைக் கண்டித்து பெரியார் இயக்கங்கள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு மாவட்டம் களியப்பேட்டை கிராமத்தில் உள்ள  பெரியார் சிலை 23.01.2020 அன்று இரவு மர்ம நபர்களால் மர்மமான முறையில்  உடைக்கப்பட்டது. பெரியாரின் சிலை உடைப்பைக்  கண்டித்து செங்கல்பட்டு பேருந்து நிலையம் எதிரில், செங்கல்பட்டு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைப்பில், திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகளின் சார்பில், மர்ம நபர்களை கைது செய்யக்கோரி மாலை 4 மணியளவில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில், தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார், செங்கல்பட்டு மாவட்ட கழகத் தோழர்கள் மற்றும் திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 30012020 இதழ்

ரஜினிகாந்த் வீடு முற்றுகை: கழகத் தோழர்கள் கைது

ரஜினிகாந்த் வீடு முற்றுகை: கழகத் தோழர்கள் கைது

பெரியாரை இழிவாகப் பேசிய நடிகர் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி, தென் சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி தலைமையில் 22.01.2020 அன்று காலை 11 மணியளவில் ரஜினிகாந்த் வீடு முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வலியுறுத்தி கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மேலும் ரஜினிகாந்தின் உருவ பொம்மையும் கொளுத்தப்பட்டது. நூற்றுக்கு மேற்பட்ட தோழர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். செய்தியாளர் சந்திப்பின்போது உமாபதி, ‘இனியும் ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்கா விட்டால் தொடர்ந்து ரஜினிகாந்த் படங்கள் திரையிடப்படும் திரையரங்கங்கள் முற்றுகையிடப்படும்’ என  தெரிவித்தார். சுமார் ஒரு மணி நேரம் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அதன் பின் தோழர்கள் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். மாலை 6 மணியளவில் தோழர்கள் விடுதலை செய்யப்பட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சேலம், புதுச்சேரி மற்றும் சென்னை கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர்.   பெரியார் முழக்கம் 30012020 இதழ்

‘முழக்கம்’ உமாபதி – பிரியா ஜாதி மறுப்பு மண விழா

‘முழக்கம்’ உமாபதி – பிரியா ஜாதி மறுப்பு மண விழா

திராவிடர் விடுதலைக் கழகத் தோழ ரும் புரட்சிப் பெரியார் முழக்கம் ஏட்டில் எட்டு ஆண்டு காலம் பொறுப்பாள ராகப் பணி புரிந்த வருமான ‘முழக்கம்’ உமாபதி – சி. பிரியா, ஜாதி மறுப்பு வாழ்க்கை இணையேற்பு விழா 19.1.2020 ஞாயிறு மாலை 7 மணியளவில் மயிலாப்பூர் சிசுவிஹார் சமுதாய நலக் கூடத்தில் சிறப்புடன் நடந்தது. மணவிழாவுக்கு பேராசிரியர் சரசுவதி தலைமை தாங்கினார். பேராசிரியர் மங்கை வரவேற்புரை நிகழ்த்தினார். கோவை இசை மதி, பெண்ணுரிமைப் பாடல்களைப் பாடினார். பெண்ணிய, பெரியாரிய வரலாற்று ஆசிரியர் வ. கீதா வாழ்த்துரை வழங்கினார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உறுதிமொழி கூறி மணவிழாவை நடத்தி வைத்தார். கழகத்  தோழர்கள், நண்பர்கள், உறவினர்கள் ஏராளமாகத் திரண்டு வந்து வாழ்த்தினர். மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு ரூ.1000/- நன்கொடையை மணமக்கள் வழங்கினர். பெரியார் முழக்கம் 23012020 இதழ்

சென்னை-திருப்பூரில் தமிழர் திருநாள் விழா எழுச்சி

சென்னை-திருப்பூரில் தமிழர் திருநாள் விழா எழுச்சி

திருப்பூரில் திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தமிழ்ப் புத்தாண்டு பொங்கல் விழா 16.1. 2020 அன்று வீரபாண்டி பிரிவு பெரியார் படிப்பக திடலில் நடைபெற்றது. காலை 10 மணியளவில் திருப்பூர் கழகத் தோழர் சரஸ்வதி பொங்கல் வழங்கி நிகழ்வினை துவக்கி வைத்தார். தொடர்ந்து குழந்தைகளுக்கும் பெரியவர்களுக்கும்  விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. விளையாட்டு போட்டிகளை அமுதம் கணேசன், லட்சுமணன், தனபால் ஆகியோர் ஒருங்கிணைத்தனர். மாலை 6 மணிக்கு குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் தொடங்கியது. கிராமிய பாடல் களுக்கு விஷாலிகா, அனுஸ்ருதா, கீர்த்திகா, கீர்த்தனா, வரதன், வயிரவன், வேல் ஆகிய குழந்தைகள் நடனமாடினர். பாரதிதாசன் கவிதைகளை இளைய பாரதி பாடினார். பெரியாரை பற்றியும் நீட் தேர்வு அவலத்தைப் பற்றி யும் அறிவுமதி பேசினார்.  சிலம்பக் கலையை அறிவுமதி செய்து காட்டினார். பூங் குன்றன் திருக்குறளையும் பெரியார் பாடல்களையும் பாடினார். பெரியார் பாடல்களை யாழினியும் யாழிசையும் பாடினர்; பிரபாகரன் நடனம் ஆடினார்.  மேடை...

கல்லக்குறிச்சியில் கழகம் தடைமீறி ஆர்ப்பாட்டம்

கல்லக்குறிச்சியில் கழகம் தடைமீறி ஆர்ப்பாட்டம்

இசுலாமியர்களையும் ஈழத்தமிழர்களையும் பாதிக்கின்ற குடியுரிமை சட்டத்தை திரும்பப் பெறக் கோரி கல்லக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு ஊராட்சி மும்முனை சந்திப்பில்  08.01.2020 அன்று 4 மணியளவில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடந்தது. காவல்துறையில் அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் தடையை மீறி நடந்தது. கார்மேகம்  ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகித்தார். கல்லை மாவட்டச் செயலாளர் க. இராமர், மாவட்டத் தலைவர் க. மதியழகன், மாவட்ட அமைப்பாளர் சி. சாமிதுரை, பெரியார் வெங்கட் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.  குமார், அன்பு, துளசிராசா, வீரமணி, சங்கர், கழகத்தில் புதிதாக இணைந்துள்ள நாராயண குப்பம் இராசா உள்ளிட்ட முப்பதிற்கும் மேலான கழகத்  தோழர்கள் ஆர்பாட்டத்தில் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 16012020 இதழ்

கழக செயல்பாடுகளை தீவிரப்படுத்துகிறது, சேலம் மாவட்டக் கழகம்

கழக செயல்பாடுகளை தீவிரப்படுத்துகிறது, சேலம் மாவட்டக் கழகம்

05.01.2020 அன்று காலை 11 மணியளவில்  கழகத்தின் பொறுப் பாளர்களுக்கான கலந்துரையாடல் கூட்டம் சேலம் தாதகாப்பட்டி சாலையில் புதிதாக அமைக்கப் பட்டுள்ள அலுவலகத்தில் மாவட்டத் தலைவர் க. சக்திவேல் தலைமையிலும், மாவட்டச் செயலாளர் இரா. டேவிட் முன்னிலையிலும் நடைபெற்றது. அதில்  இயக்கத்தின் செயல் பாடுகளை முடுக்கிவிடும் விதமாக முதலாவதாக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ மற்றும் ‘நிமிர்வோம்’ இதழ்களுக்கான சந்தா சேர்ப்புகளை துரிதப்படுத்தி ஜனவரி மாத இறுதிக்குள் ஒப்படைக்க வேண்டும் எனவும், கிழக்கு மாவட்டம் முழுதுமாக தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவதெனவும், தெருமுனை பிரச்சாரத்துக்காக ஒலிபெருக்கியுடன் கூடிய மேடை வடிவமைப்போடு  சொந்தமாக பிரச்சார வேன் (மஹேந்திர வேன்) ஒன்று வாங்கவும் பொறுப்பாளர்களின் ஒருமித்த கருத்தோடு முடிவெடுக்கப்பட்டது. பெரியார் முழக்கம் 16012020 இதழ்

‘ஜே.என்.யூ’ வன்முறைக் கும்பலைக் கைது செய்: கோவையில் மாணவர்கள் போர்க் கொடி

‘ஜே.என்.யூ’ வன்முறைக் கும்பலைக் கைது செய்: கோவையில் மாணவர்கள் போர்க் கொடி

தமிழ்நாடு மாணவர்  கூட்டமைப்பு சார்பாக கோவை  பந்தயச் சாலையில் 10.01.2020 அன்று மாலை 4 மணியளவில்,  புதுடில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் மாணவர்கள் மீது தாக்குதல் நடத்திய ‘வன்முறை’யாளர்களை உடனே கைது செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு மாணவர் கழகம் கனல்மதி ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை தாங்கினார். சபரி கிரி (தமிழ்நாடு மாணவர் கழகம்), தினேசு (இந்திய மாணவர் மன்றம்), சம்சீர் அகமது மாநில அமைப்பாளர் (இந்திய மாணவர் ஜனநாயக சங்கம்), பூர்ணிமா (அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்), சந்தோஷ் (தமிழ்நாடு மாணவர் கழகம்), அபுதாகீர் (Campus), சண்முகவேல் பிரபு (தமிழ்நாடு மாணவர் மன்றம்), சௌந்தர் (தமிழ்நாடு மாணவர் கழகம்), பிரசாந்த் (தமிழ்நாடு மாணவர் கழகம்) ஆகியோர் தங்களது கண்டனங்களை பதிவு செய்தனர். தமிழ்நாடு மாணவர் கழகம் ஒருங்கிணைத்த ஆர்பாட்டத்தில், இந்திய ஜனநாயக மாணவர் சங்கம், இந்திய மாணவர் சங்கம், தமிழ்நாடு மாணவர் மன்றம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த மாணவர்களோடு...

நடிகர் ரஜினிக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும்.. வழக்கறிஞர் அருண் அறிக்கை

நடிகர் ரஜினிக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும்.. வழக்கறிஞர் அருண் அறிக்கை

பெரியார் குறித்து அவதூறாக பேசிய நடிகர் ரசினிகாந்த் மீது நீதிமன்ற வழிகாட்டுதலின் அடிப்படையில் மீண்டும் வழக்கு பதிவு செய்யப்படும் . நீதிமன்ற படிக்கட்டுகள் சில நேரங்களில் மிக நீண்டதாகவும் நெடியதாகவும் இருக்கிறது . எவ்வளவு தூரமாக இருந்தாலும் இலக்கை அடையும் வரை நம்முடைய பயணம் தொடரும். மீண்டும் வழக்கு தொடர கழக தலைவர் அண்ணன் கொளத்தூர் மணி அவர்கள் ஒப்புதல் வழங்கி இருக்கிறார் ஆகவே நீதிக்கான போராட்டம் தொடரும் . துக்ளக் ஏட்டின் 50ஆவது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தந்தை பெரியார் அவர்கள் 1971 இல் சேலத்தில் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டி பேரணியில் ராமன் சீதை சிலைகளை நிர்வாணமாக செருப்பு மாலை அணிவித்து எடுத்து வந்தார்கள் என்ற ஒரு பொய்யான செய்தியை உள்நோக்கத்தோடு வன்முறையை தூண்டும் விதமாக வெறுப்புப் பிரச்சாரம் செய்தார். ரஜினிகாந்தின் இந்த உள்நோக்கத்தோடு பேசிய பேச்சு வன்முறையை தூண்டும் விதமாகவும்,வெறுப்பு பிரச்சாரமாகவும் இருக்கிறது...

கழகத் தோழர்களே!

கழகத் தோழர்களே!

கழக ஏடுகளான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ மாத இதழ்களுக்கு உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கி விட்டீர்களா? கழகத்தின் களப் பணிகளை ஆதரவாளர்களிடம் கொண்டு சேர்க்கும் ஏடு ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, வாரம் தோறும் நடக்கும் நிகழ்வுகளை பெரியாரியல் பார்வையில் பதிவு செய்து வருகிறது. பெரியாரியல் குறித்த ஆழமான கட்டுரைகள், சமூகம், சுற்றுச் சூழல், கலை, இலக்கியம் குறித்த விரிவான கட்டுரைகளுடன் வெளி வருகிறது ‘நிமிர்வோம்’. தேர்தல் அரசியலில் பங்கெடுக்காத ஒரு சமுதாய இயக்கம், 2002ஆம் ஆண்டிலிருந்து 17 ஆண்டுகளாக வாரந்தோறும் பெரியார் முழக்கத்தையும், மூன்று ஆண்டுகளாக மாதந்தோறும் ‘நிமிர்வோம்’ இதழையும் இடைநிறுத்தமின்றி நடத்தி வருகிறது. அரசியல் கட்சிகளால்கூட ஏடு நடத்த முடியாத நிலையில் திராவிடர் விடுதலைக் கழகம் இந்தப் பணியை தொய்வின்றி செயல்படுத்தி வருகிறது. தோழர்கள் இது குறித்த கவலை புரிதலுடன் களமிறங்கினால் ஏடுகளின் எண்ணிக்கையை மேலும் உயர்த்த முடியும் என்று உறுதியாக நம்புகிறோம். தோழர்களே! விரைந்து கழக ஏடுகள் தொடர்ந்து...

நினைவு நாளில் பெரியார் சிலைகளுக்கு மாலை

நினைவு நாளில் பெரியார் சிலைகளுக்கு மாலை

கோவை : கோவை மாநகர திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பெரியார் 46 வது நினைவு நாளில் தலைமை செயற்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் தலைமையில் பெரியார் சிலைக்கு  மாலை அணிவித்து, மாநகர துணை தலைவர் வெங்கட் கொள்கை முழக்கங்கள் எழுப்பி, விஷ்ணு உறுதிமொழி வாசிக்க தோழர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்று வீரவணக்கம் செலுத்தப்பட்டது. கலந்து கொண்ட அனைத்து தோழர்களுக்கும் சுரேஷ்-தர்ஷினி இணையர்  தேனீர் வழங்கினர். சென்னை :  24.12.2019 அன்று காலை 9 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன்  தலைமையில் சென்னை சிம்சனில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. உடன் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தென் சென்னை மாவட்ட செயலாளர் வேழவேந்தன், தென் சென்னை மாவட்ட செயலாளர் இரா.உமாபதி, வட சென்னை மாவட்ட செயலாளர் இராஜீ, தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் சுகுமார் மற்றும் கழகத் தோழர்கள் திரளாக பங்கேற்றனர்....

‘நிமிர்வோம்’ வாசகர் வட்ட சந்திப்பு : புதிய தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

‘நிமிர்வோம்’ வாசகர் வட்ட சந்திப்பு : புதிய தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

‘நிமிர்வோம்’ நான்காம் ஆண்டு துவக்க விழா மற்றும் நிமிர்வோம் வாசகர் வட்டத்தின் 12ஆவது சந்திப்பு 04.01.2020 அன்று  மாலை 5 மணிக்கு திவிக தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு தென் சென்னை மாவட்ட அமைப்பாளர் சுகுமார் தலைமை வகித்தார். ‘பெரியாரைக் கொச்சைப்படுத்தும் குழப்பவாதிகள்’ நூலை ஆய்வு செய்து, இமானுவேல் துரையும், ‘ஆர்.எஸ்.எஸ் பரப்பும் வதந்திகளும், உண்மைகளும்’ என்ற தலைப்பில் எட்வின் பிரபாகரனும் கருத்துரை வழங்கினர்.  CAA மற்றும் NRC குறித்து கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன்  விரிவாக சிறப்புரையாற்றினார். இறுதியாக இசை இனியாழ் நன்றி கூறினார். நிகழ்வில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்றார். சென்னையைச் சார்ந்த தோழர்கள் அறிவுமதி, ஆதவன், தமிழன்பன், வினோத் ஆகியோர் கழகத்தில் இணைந்தனர். பெரியார் முழக்கம் 16012020 இதழ்

ஜாதி வெறியர்களின் மீது 10 பிரிவுகளில் வழக்கு, செல்வன் இணையர் இளமதி இன்னும் மீட்கப்படவில்லை

ஜாதி வெறியர்களின் மீது 10 பிரிவுகளில் வழக்கு, செல்வன் இணையர் இளமதி இன்னும் மீட்கப்படவில்லை

கொளத்தூரில் ஜாதி வெறியர்களின் வன்முறை வெறியாட்ட சம்பவத்தின் மீதான நடவடிக்கைகள் ! சேலம் மாவட்டம் கொளத்தூரில் 09.03.2020 அன்று நடைபெற்ற செல்வன் – இளமதி ஜாதி மறுப்பு திருமணத்தையொட்டி ஜாதி வெறியர்கள் நடத்திய கொலை வெறித்தாக்குதல், ஆள்கடத்தல்,கொள்ளை இவற்றின் மீதான காவல் துறையின் முதல் தகவல் அறிக்கைகள் 2. (இணைப்பு) ( 09.03.2020 அன்று கொளத்தூரில் நடந்தது என்ன ? அறிய : https://www.facebook.com/1630392030578024/posts/2651540068463210/ ) திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி மற்றும் கழகத்தோழர்கள் தாக்குதல் சம்பவம் நடந்த 09.03.2020 நள்ளிரவு முதல் அடுத்த நாள் காலை வரை காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராடியதன் விளைவாக மனமகன் செல்வன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கொலை முயற்சி,ஆள் கடத்தல்,கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இளமதியின் தந்தை, பெரியப்பா, மாமா உள்ளிட்ட 18 பேர் கைது செய்யப்பட்டு தீண்டாமை வன்கொடுமைச் சட்டம் மற்றும் கொலை முயற்சி,ஆள் கடத்தல்,கொள்ளை ஆகிய குற்றங்களுக்கான மணமகன்...

இனமானப் பேராசிரியர் பெருந்தகை  மறைந்தாரே…!!!

இனமானப் பேராசிரியர் பெருந்தகை மறைந்தாரே…!!!

இனமானப் பேராசிரியர் பெருந்தகை  மறைந்தாரே…!!! இனமானப் பேராசிரியர் இன்று முடிவெய்திவிட்டார். நிறை வாழ்வு அவர் வாழ்ந்திருக்கிறார். திராவிடர் இயக்கத்தின் ஆற்றல் மிகு பேச்சாளர், எழுத்தாளர். தான் ஏற்றுக்கொண்ட இலட்சியத்திற்காக தன் வாழ்நாள் முழுதும் தடம் பிறழாமல் வாழ்ந்து காட்டிய ஒரு உன்னதமான சுயமரியாதைக்காரர். நீண்ட பொது வாழ்க்கைக்கு சொந்தக்காரர். தமிழகத்தில் திராவிடர் இயக்கத்தில் மூத்தத் தலைவர்களில் ஒருவரை இன்றைக்கு தமிழகம் இழந்து நிற்கிறது. மாணவப் பருவத்திலிருந்து தொடங்கி, திராவிடர் இயக்கத்தின் பயணத்தில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்ட ஒரு அற்புதமான சிந்தனையாளரை இழந்து நிற்கும் தமிழகத்தின் உணர்வுகளோடு திராவிடர் விடுதலைக் கழகமும் தன்னுடைய உணர்வுகளை, இரங்களை, துயரத்தை பகிர்ந்து கொள்கிறது. #விடுதலை_இராசேந்திரன் #பொதுச்செயலாளர்_திராவிடர்_விடுதலைக்_கழகம்

திருப்பூரில் மகளிர் தின விழா !  கருத்தரங்கம்

திருப்பூரில் மகளிர் தின விழா ! கருத்தரங்கம்

திருப்பூரில் மகளிர் தின விழா ! கருத்தரங்கம் மற்றும் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு நிறைவு விழா 09.03.2020 திங்கள்கிழமை மாலை 7.00 மணியளவில் திருப்பூர் குமரன் சாலை,நளன் உணவக அரங்கில் நடைபெற்றது. பெரியார் பிஞ்சுகள் யாழினி, யாழிசை, அமுதினி ஆகியோரின் பகுத்தறிவுப் பாடலுடன் நிகழ்வு ஆரம்பமானது. தோழர் பார்வதி அவர்கள் வரவேற்புரையாற்றினார். தொடர்ந்து தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் தோழர் சிவகாமி அவர்கள் தலைமையுரையாற்றினார். கவிஞர் கனல்மதி அவர்கள் பெரியாரின் ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூல் குறித்த விமர்சனஉரையாற்றினார். அடுத்து தோழர் விஜயகுமார் தோழர் ஆசிட் தியாகராஜனின் வாழ்வும் பணியும் குறித்து உரையாற்றினார். இந் நிகழ்வில் தோழர் ஆசிட் தியாகராஜன் அவர்களின் படத்தை தோழர் மடத்துக்குளம் மோகன் அவர்களும், அன்னை மணியம்மையார் அவர்களின் படத்தை தோழர் சுசீலா அவர்களும், இனமானப் பேராசிரியர் க அன்பழகன் அவர்களின் படத்தை கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் திறந்து வைத்தார்கள். விளையாட்டுப் போட்டிகளில்...

ஜாதி வெறியர்களால் கடத்தப்பட்டு இருக்கும் செல்வனின் மனைவி இளமதியை மீட்க வலியுறுத்தி சென்னையில ஆர்ப்பாட்டம் !

ஜாதி வெறியர்களால் கடத்தப்பட்டு இருக்கும் செல்வனின் மனைவி இளமதியை மீட்க வலியுறுத்தி சென்னையில ஆர்ப்பாட்டம் !

இன்று 11.03.2020 புதன் சென்னையில ஆர்ப்பாட்டம் ! நேரம் : மாலை 4 மணி இடம் : சிம்சன் பெரியார் சிலை அருகில், சென்னை. தமிழக அரசே ! காவல்துறையே ! ஜாதி வெறியர்களால் கடத்தப்பட்டு இருக்கும் செல்வனின் மனைவி இளமதியை_உடனடியாக_மீட்க_வலியுறுத்தியும், கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டு தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கண்டு பிடித்து கைது செய்ய வலியுறுத்தியும், #ஜாதி_வெறியர்களின்_கொலை_வெறித்_தாக்குதலைக் #கண்டித்தும்_ஆர்ப்பாட்டம்… தலைமை : தோழர் உமாபதி, தென்சென்னை மாவட்டச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம். தொடர்புக்கு :7299230363

இளமதியை உடனடியாக மீட்க வலியுறுத்தி மதுரையில் ஆர்ப்பாட்டம் !

இளமதியை உடனடியாக மீட்க வலியுறுத்தி மதுரையில் ஆர்ப்பாட்டம் !

இன்று 11.03.2020 புதன் மதுரையில் ஆர்ப்பாட்டம் ! நேரம் : மாலை 4 மணி இடம் : புதூர் பேருந்து நிலையம் அருகில், மதுரை. தமிழக அரசே ! காவல்துறையே ! ஜாதி வெறியர்களால் கடத்தப்பட்டு இருக்கும் செல்வனின் மனைவி இளமதியை உடனடியாக மீட்க வலியுறுத்தியும், கொலை வெறி தாக்குதலில் ஈடுபட்டு தலைமறைவாக இருக்கும் குற்றவாளிகள் அனைவரையும் உடனடியாக கண்டு பிடித்து கைது செய்ய வலியுறுத்தியும், #ஜாதி_வெறியர்களின்_கொலை_வெறித்_தாக்குதலைக் #கண்டித்தும்_ஆர்ப்பாட்டம்…

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஜாதி ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஜாதி ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பில் திருவள்ளுவராண்டு 2051 (9 – 2 – 2020) – அன்று வ.உ. சி. திடலில் நடைபெற்ற சாதி ஒழிப்பு மாநாட்டில் நிறைவேற்றப்பட்டத் தீர்மானங்கள்:   வீரவணக்கத் தீர்மானங்கள்   சாதிக் கொடுமைகளை எதிர்த்தும், சாதி ஆதிக்கத்தை ஒழிக்கும் நோக்கத்தோடும் களமாடிய வலியுறுத்திக் கருத்துப்போர் நிகழ்த்திய திருவள்ளுவர், ஒளவையார் தொடங்கி எண்ணற்ற தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள், கருத்தாளர்கள் மற்றும் 1957 ஆம் ஆண்டு சாதிஒழிப்புக்காக சாதியைப் பாதுகாக்கின்ற சட்டத்தைத் தீயிட்டுக் கொளுத்திச் சிறை சென்றதோடு மட்டுமின்றி, அப்போராட்டக் காலச் சூழலில்  ஈகியர்களான எண்ணற்ற தோழர்கள் உள்ளிட்ட 20 – ஆம் நூற்றாண்டின் சாதி ஒழிப்புப் போராளியர்களாக முனைந்து எழுந்த அறிஞர்கள், இயக்கச் செயற்பாட்டாளர்கள், களப் போராளியர்கள், முன்னின்ற பொதுமக்கள் என அனைவருக்கும் மற்றும் அண்மையில் மேட்டுப்பாளையத்தில் தீண்டாமைச் சுவர் இடிந்து விழுந்த நிலையில் மறைவுற்ற பதினேழு ஏதுமறியா மக்களுக்கும் பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு வீரவணக்கம் செலுத்துகிறது....

நாச்சியார் கோயிலில், தந்தை பெரியார் 46-வது நினைவு நாள் பொதுக்கூட்டம் !

நாச்சியார் கோயிலில், தந்தை பெரியார் 46-வது நினைவு நாள் பொதுக்கூட்டம் !

நாச்சியார் கோயிலில், தந்தை பெரியார் 46-வது நினைவு நாள் பொதுக்கூட்டம் ! நாள் : 01.02.2020 சனிக்கிழமை. நேரம் : மாலை 7.00 மணி இடம் : வடக்கு வீதி,நாச்சியார்கோயில், #தஞ்சை_மாவட்டம். சிறப்புரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். நிகழ்ச்சி ஏற்பாடு : திராவிடர் விடுதலைக் கழகம், தஞ்சை மாவட்டம்.

நடிகர் ரஜினிகாந்த் மீது தொடரபட்ட அவதூறு வழக்கின் நிலை குறித்து திராவிடர் விடுதலைக் கழகம் விளக்கம்

நடிகர் ரஜினிகாந்த் மீது தொடரபட்ட அவதூறு வழக்கின் நிலை குறித்து திராவிடர் விடுதலைக் கழகம் விளக்கம்

நடிகர் ரஜினிகாந்த் மீது திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்த அவதூறு வழக்கின் தற்போதைய நிலை என்ன ? நீதிமன்றம் என்ன கூறியுள்ளது ? துக்ளக் ஏட்டின் 50ஆவது ஆண்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் தந்தை பெரியார் அவர்கள் 1971 இல் சேலத்தில் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டி பேரணியில் ராமன் சீதை சிலைகளை நிர்வாணமாக செருப்பு மாலை அணிவித்து எடுத்து வந்தார்கள் என்ற ஒரு அவதூறை நடக்காத ஒரு சம்பவத்தை பெரியாரின் பெயருக்கு களங்கம் கற்பிக்கும் உள்நோக்கத்தோடு பேசினார். நடக்காத ஒன்றை உள் நோக்கத்தோடு பேசிய நடிகர் ரஜினிகாந்தின் இந்த அவதூறு பேச்சுக்கு மன்னிப்பு கேட்க திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் வலியுருத்தினார்.மேலும் தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் உள்நோக்கத்தோடு பேசிய ரஜினியின் மீது தக்க சட்ட நடவடிக்கை கோரி தமிழ்நாட்டில் 50க்கும் மேற்பட்ட காவல் நிலையங்களில் கழகத்தோழர்கள்...

அவுட்லுக் இல்லை.. 1971ல் வெளியான துக்ளக்கைத்தானே ரஜினி காட்டியிருக்கணும்.. கொளத்தூர் மணி!

அவுட்லுக் இல்லை.. 1971ல் வெளியான துக்ளக்கைத்தானே ரஜினி காட்டியிருக்கணும்.. கொளத்தூர் மணி!

1971-ஆம் ஆண்டு சேலம் பேரணியில் நடந்த விஷயம் வெளிவந்த துக்ளக் ஏட்டை காண்பிக்காமல் அவுட்லுக்கின் ஜெராக்ஸை ரஜினி காட்டுவது ஏன் என திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி தெரிவித்தார். துக்ளக் 50 ஆவது ஆண்டு விழாவில் ரஜினிகாந்த் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அந்த விழாவில் ரஜினி பேசுகையில் 1971-ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த பேரணியில் ராமர், சீதையின் சிலைகள் உடையில்லாமல் செருப்பு மாலை அணிவித்து கொண்டு செல்லப்பட்டது. இதை துக்ளக் பத்திரிகையில் இதழின் ஆசிரியர் சோ தைரியமாக வெளியிட்டார். அந்த புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன என்றார் ரஜினி. ரஜினியின் கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. மிகவும் உணர்ச்சிப்பூர்வமான சம்பவம் என்பதால் வரலாற்றை தவறாக கூறிய ரஜினிகாந்த் மன்னிப்பு கேட்க வேண்டும் என திராவிடர் கழக அமைப்புகள் கோரின. கற்பனை இந்த நிலையில் ரஜினிகாந்த் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தனது கையில் ஒரு பத்திரிகையை காண்பித்த ரஜினிகாந்த், நான்...

நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர புகார் ஒப்புகைச் சீட்டை அனுப்புக – கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை

நடிகர் ரஜினிகாந்த் மீது வழக்கு தொடர புகார் ஒப்புகைச் சீட்டை அனுப்புக – கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை

நடிகர் ரஜினிகாந்த் மீது கழகத்தின் சார்பாக பல்வேறு இடங்களில் காவல்துறையிடம் அளிக்கப்பட்டுள்ள புகார்கள் சம்பந்தமாக கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி விடுத்துள்ள அறிக்கை : – அன்பார்ந்த தோழர்களுக்கு, என் வணக்கங்கள். துக்ளக் ஏட்டின் ஐம்பதாவது ஆண்டு விழாவில் பெரியாரை – பெரியாரின் இயக்கத்தை கேவலப்படுத்த வேண்டும் என்ற தீய உள்நோக்கத்தோடு நடிகர் இரஜினிகாந்த் பேசிய பேச்சுக்கு பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியதோடு, சமூகத்தில் அமைதியைக் குலைக்கும் வகையில் பேசிய அவருடைய அவதூறு பேச்சுக்கு தக்க நடவடிக்கை எடுக்க கோரி காவல்நிலையங்களில் புகார் அளிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் வைத்திருந்தோம். அவ்வாறு காவல் நிலையங்களில் அளிக்கப்பட்ட புகாரின் நகல் ஒன்றினையும் அந்த காவல்நிலையங்களில் புகாரைப் பெற்றுக்கொண்டதற்காக கொடுக்கப்பட்ட சிஎஸ்ஆர் இரசீது நகலையும் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன். ஏதேனும் காவல்நிலையத்தில் புகார் பெற்று கொண்ட பின்னாலும் அதற்கான சிஎஸ்ஆர் வழங்கப்படாமல் இருக்குமேயானால்,மீண்டும் ஒருமுறை அந்த புகாரினுடைய படியை வைத்து அதனுடன் “நாங்கள் இத்தனையாம் நாள் உங்களிடம் அளித்த...

நடிகர் ரஜினிகாந்த் வீடு முற்றுகை சென்னை 22012020

நடிகர் ரஜினிகாந்த் வீடு முற்றுகை சென்னை 22012020

தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்யான செய்தியை பேசி, பெரியார் மீது அவதூரை பரப்பிய ரஜினிகாந்த் மீது நடவடிக்கை எடுக்ககோரி சென்னை காவல் ஆணையரிடத்தில் 18.01.2020 அன்று காலை 11 மணியளவில் தென் சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி தலைமையில் மனு அளிக்கப்பட்டது. மனு அளித்த பின் பத்திரிக்கையாளர் சந்திப்பின் போது, தமிழக அரசும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், காவல்துறை இதற்கு நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் அடுத்த கட்ட போராட்டமாக ரஜினிகாந்த் வீடு முற்றுகையிடப்படும் என்று உமாபதி அறிவித்தார். அதன்படி இதுவரை காவல்துறை சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, நடிகர் ரஜினிகாந்தும் இதுவரை தனது அவதூறு கருத்திற்கு வருத்தமும் தெரிவிக்காத காரணத்தினால், வருகிற 22.01.2020 (புதன்கிழமை) காலை 10 மணியளவில் போயஸ் கார்டனில் உள்ள ரஜினிகாந்த் அவர்களின் வீடு முற்றுகையிடப்படவுள்ளது.   சென்னை மாவட்ட கழகம்  

நடிகர் ரஜினிகாந்த் நிபத்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் – திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி வலியுறுத்தி அறிக்கை

நடிகர் ரஜினிகாந்த் நிபத்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் – திராவிடர் விடுதலைக் கழக தலைவர் கொளத்தூர் மணி வலியுறுத்தி அறிக்கை

1971 ஆம் ஆண்டு சேலத்தில் நடந்த மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை ஒட்டி நடந்த பேரணியில் இராமன் சீதை ஆகியோர் உருவங்களை நிர்வாணமாக எடுத்துச் செல்லப்பட்டது என்று ஒரு அப்பட்டமான பொய்யை நடிகர் இரஜினிகாந்த் துக்ளக் ஆண்டு விழாவில் பேசிய செய்தி வெளிவந்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு பொய்யான தகவலைப் பரப்பி அதன் வழியே தமிழகத்தில் பெரியார் மீது மக்கள் கொண்டிருக்கிற நல்லெண்ணத்தை சிதைக்க வேண்டும் என்ற தீய உள்நோக்கோடும், தங்கள் எஜமானர்களை மகிழச் செய்ய வேண்டும் என பேசப்பட்டதாகவே நாங்கள் நம்புகிறோம். இந்த பொய்யான தகவலைப் பரப்பியதற்காக நடிகர் ரஜினிகாந்த் உடனடியாக பொதுவெளியில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அதுமட்டுமில்லாமல் தந்தை பெரியாரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு செ வதந்தியைப் பரப்பி பொது அமைதியைக் குலைக்கும் நடிகர் ரஜினிகாந்த் மீது அனைத்து காவல் நிலையங்களிலும் கழகத் தோழர்களும் பெரியாரியல் பற்றாளர்களும் தமிழ் உணர்வாளர்களும் உடனடியாக புகார்...

தமிழர் திருநாள் பொங்கல் விழா சென்னை 13012020

தமிழர் திருநாள் பொங்கல் விழா சென்னை 13012020

தமிழர் திருநாள் பொங்கல் விழா பொதுக்கூட்டம் திருவல்லிக்கேணி பகுதி சார்பாக நடைபெறவிருக்கிறது… இயக்குனர் வெற்றிமாரன் விடுதலை இராசேந்திரன் பொதுச் செயலாளர் திராவிடர் விடுதலைக் கழகம் பேராசிரியர் சுந்தரவள்ளி தமுஎகச திருநங்கை சாம்பவி சாதிக்கப் பிறந்தவர்களின் சமூக அமைப்பு.. ஆர்.என்.துரை திமுக சென்னை மேற்கு மாவட்ட துணை செயலாளர். ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றவுள்ளனர்.. நாள்: 13.01.2020 திங்கள் கிழமை நேரம்: மாலை 5 மணி

அன்னூர் தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

அன்னூர் தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

கோவை மாவட்டம் அன்னூர், நல்லி செட்டிப்பாளையத்தில் ஜன. 5, 2020 அன்று கழகத்தின் கோவை மாவட்டச் செயலாளர்  வெள்ளிங்கிரி  தலைமையில்  திராவிடர் விடுதலைக் கழகக் கொடியை மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் ஏற்றி வைத்தார். பெயர்ப் பலகையை கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி திறந்து வைத்தார். தலைமை செயற்குழு உறுப்பினர் மடத்துக்குளம் மோகன் மந்திரமா தந்திரமா செய்து விளக்கிக் காட்டினார். நல்லிசெட்டிபாளையம் மோகன் உறுதிமொழி வாசிக்க தோழர்கள் வழி மொழிந்தனர்.  அதனைத் தொடர்ந்து  விஷ்ணு, மோகன் குமார், பார்த்திபன், மனோ ரஞ்சினி, தேவ பிரகாஷ், வெற்றிவேல், கோகுல், நந்தகுமார், தினேஷ் ஆகியோர்  திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்தனர். மற்றும் மாவட்ட மாநில தோழமைக் கழக பொறுப்பாளர்கள் தந்தை பெரியாரின் பணிகள் குறித்தும் சாமியார்களின் பித்தலாட்டங்கள் குறித்து விளக்கியும், இந்த அமைப்பு ஏன்? எதற்காக? என்றும் விளக்கமாக கருத்துரையாற்றினர். புதிய தோழர்களை உருவாக்குதல் முதல் அனைத்து  நிகழ்ச்சிகளையும் களப்பணியாளர் விஷ்ணு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். ...

நெல்லைக் கண்ணன் கைதுக்கு வாழ்வுரிமை கூட்டமைப்பு கண்டனம்

நெல்லைக் கண்ணன் கைதுக்கு வாழ்வுரிமை கூட்டமைப்பு கண்டனம்

பாஜகவின் அழுத்தத்தின் காரணமாக 01.01.2020 நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதை அடுத்து, தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பு சார்பாக ஆலோசனைக் கூட்டமும் தொடர்ந்து பத்திரிக்கை யாளர் சந்திப்பும் 02.01.2020 அன்று சென்னை நிருபர்கள் சங்கத்தில் நடைபெற்றது. எந்த உள்நோக்கமும் இல்லாமல் வட்டாரப் பேச்சு வழக்கில் நெல்லை கண்ணன் பேசியதற்கு, பாஜக தலைவர்கள் உள்நோக்கம் கற்பித்த தோடு அதனைப் பெரிதுபடுத்தி தமிழக அரசு அவரை கைது செய்யும் அளவிற்கு கொண்டு சென்றது மிகவும் கண்டனத்திற்கு உரியது என்றும், தமிழக அரசு அவரை உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தப்பட்டது. அதேவேளை, தொடர்ச்சியாக மதம், சாதி, மொழி, இனம் அடிப் படையில் மக்களிடையே பாகு பாட்டை உண்டாக்கி கலவரத்தை தூண்டுகிற விதத்தில் பேசி வரும் எச்.ராஜா போன்ற ஆர்.எஸ்.எஸ். – பாஜக தலைவர்களை பல்வேறு புகார்கள், வழக்குகளுக்கு பின்னரும் கைது செய்யாமல் இருப்பது உள் நோக்கம் கொண்டது. எனவே, நெல்லை கண்ணனை விடுவிப்பதோடு மட்டுமல்லாமல், கலவரத்தைத் தூண்டும்...

குடியாத்தத்தில் ஆய்வரங்கம்

குடியாத்தத்தில் ஆய்வரங்கம்

NRC – CAA பற்றிய ஆய்வரங்க நிகழ்வு 31.12.2019 அன்று மாலை 6 மணிக்கு குடியாத்தத்தில்  நடைபெற்றது. இதில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி BJP, RSS மற்றும் இந்துத்துவ அமைப்புகளின் வன்முறையாட்டங்களையும், அவர்களின் சதித் திட்டங்களையும் CAA, NRC சட்டத்தின் அபாயத்தையும் ஆதாரபூர்வமாக விளக்கி நீண்ட உரையாற்றினார். இந்நிகழ்வில் விசிக வேலூர் பாராளுமன்ற செயலாளர் சிவ. செல்லபாண்டியன், த.ஒ.வி.இ. துணைச் செயலாளர் செவ்வேள், திக மண்டல செயலாளர் சடகோபன் ஆகியோர் உரையாற்றினர்.  பல்வேறு தோழமை அமைப்புகளின் தோழர்கள், பொது மக்கள், பெண்கள் என அரங்கம் நிறைந்த நிகழ்வாக இருந்தது. நிகழ்வு தொடங்குவதற்கு முன்பாக புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு கழகத் தலைவர் மாலை அணிவித்தார். முழக்கம் எழுப்பபட்டது. பின்பு பெரும் திரளாக தோழர்கள் ஒன்றுதிரண்டு ஊர்வலமாக நிகழ்வு நடைபெறும் அரங்கம் வரை சென்றனர். நிகழ்ச்சி ஏற்பாட்டை வேலூர் மாவட்ட கழகத் தோழர்கள் செய்தனர். கழகத் தலைவர் உரை காண சொடுக்கவும் பெரியார்...

குடியுரிமைச் சட்டத் திருத்த எதிர்ப்புப் பேரணியில் கழகம் பங்கேற்பு

குடியுரிமைச் சட்டத் திருத்த எதிர்ப்புப் பேரணியில் கழகம் பங்கேற்பு

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் டிசம்பர் 23ஆம் தேதி நடந்த மாபெரும் பேரணியில் இலட்சக்கணக்கான மக்கள் திரண்டனர். தி.மு.க. கூட்டணி கட்சிகளைத் தவிர, இஸ்லாமியர் அமைப்புகள், பல்வேறு இயக்கங்கள் பங்கேற்றன. திராவிடர் விடுதலைக் கழகம் பேரணியில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் பங்கேற்றது. அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன், தலைமைக் குழு உறுப்பினர்கள் இரா. உமாபதி, அய்யனார், அன்பு தனசேகர்  மற்றும் மயிலை சுகுமார், வடசென்னை மாவட்டக் கழகப் பொறுப்பாளர்கள் ஏசுகுமார், ராஜீ, தென் சென்னை மாவட்டக் கழகத் தலைவர் வேழவேந்தன், எம்.ஜி.ஆர். நகர் கரு. அண்ணாமலை உள்ளிட்ட சென்னை மாவட்டக் கழகத் தோழர் கள் ஏராளமாகப் பங்கேற்றனர். ஈரோட்டிலிருந்து 20க்கும் மேற்பட்ட தோழர்களும் குடியாத்தம் பகுதி, காஞ்சிபுரம் பகுதி கழகத்தினரும் பேரணியில் பங்கேற்றனர். கழகக் கொடிகளுடன் ஒலி பெருக்கி வழியாக கழகத் தோழர்கள்...

திண்டுக்கல்லில் 20 ஆண்டுகளாக அரசு ஒப்புதலுக்காக முடக்கிக் கிடக்கும் வள்ளுவர் சிலை

திண்டுக்கல்லில் 20 ஆண்டுகளாக அரசு ஒப்புதலுக்காக முடக்கிக் கிடக்கும் வள்ளுவர் சிலை

திருவள்ளுவர் இலக்கியப் பேரவை மற்றும் பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் சார்பில், திண்டுக்கல்லில் அரசின் ஆணையிருந்தும் 20 ஆண்டுகளாகத் திறக்க முடியாமல் முடங்கியிருக்கும் திருவள்ளுவர் சிலையை உடனே நிறுவிட அரசின் ஒப்புதலை வேண்டி, 13.12.2019 அன்று காலை 10 மணியளவில் திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு உரையாற்றினார். மேலும் பெரியார் சரவணன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி), கோவை இராமகிருட்டிணன் (தந்தை பெரியார் திராவிடர் கழகம்), பொழிலன் (தமிழக மக்கள் முன்னணி), குடந்தை அரசன் (விடுதலைத் தமிழ்ப் புலிகள் கட்சி)   உள்ளிட்ட தலைவர்களும் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 26122019 இதழ்

பள்ளிபாளையம் மாநாட்டில் கொளத்தூர் மணி உரை

பள்ளிபாளையம் மாநாட்டில் கொளத்தூர் மணி உரை

தமிழர் வேலை வாய்ப்புகளைப் பறித்த தமிழக அரசின் ஆபத்தான சட்டத்திருத்தம் பள்ளிபாளையத்தில் 20.9.2019 அன்று நடந்த திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா மாநாட்டில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிகழ்த்திய உரை. (சென்ற இதழ் தொடர்ச்சி) முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருக்கும்போது தமிழ்நாட்டின் அரசு வேலை வாய்ப்புகளை பிற மாநிலத்தவர் – பிற நாட்டினர் அபகரிக்கும் ஆபத்தான திருத்தச் சட்டத்தை தமிழக அரசு கொண்டு வந்ததை கழகத் தலைவர் கொளத்தூர் மணி சுட்டி காட்டினார். இந்தியாவில் தற்போது உயர்கல்விக்குச் செல்கிறவர்கள் ( 18 வயது முதல் 23 வயதுவரை) எண்ணிக்கை  சராசரி 25.2% என்று உள்ளது. இதை 2035ற்குள் 50% ஆக உயர்த்தப் போவதாக கல்விக் கொள்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 25% ஆக இருக்கும் போதே 50,000 உயர்கல்வி நிலையங்கள் உள்ளன. 2035இல் 50% ஆக உயரும் போது 12,300 கல்லூரிகளாக இருக்குமாம். எவ்வளவு அறிவுப்பூர்வமான...

குத்துச்சண்டை போட்டியில் வென்றவர்களுக்கு மயிலை தி.வி.க. நினைவுப் பரிசு

குத்துச்சண்டை போட்டியில் வென்றவர்களுக்கு மயிலை தி.வி.க. நினைவுப் பரிசு

அகில இந்திய மற்றும் தமிழ்நாடு அளவிலான குத்துச் சண்டை போட்டியில் சென்னை மயிலாப்பூர் பகுதியைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். அதில் பதக்கம் வென்றவர் களுக்கு திவிக சார்பில் நினைவு பரிசுகளை கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் வழங்கினர். அகில இந்திய போட்டியில் அஸ்வின் – வெண்கலம், பிரவீன் – வெள்ளி, மகேஷ் – வெள்ளி, ராஜ் – வெண்கலம், சரண் – வெண்கலம், மாணிக்கம் – வெண்கலம், கார்த்திக் – வெண்கலம் வென்றனர். தமிழ்நாடு அளவிலான போட்டியில் மாணிக்கம் தங்கப் பதக்கத்தையும், கார்த்திக் வெண்கல பதக்கத்தையும் வென்றனர்.  நிகழ்வில் கழக வார ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்திற்கான 100 சந்தா மற்றும் மாத ஏடான நிமிர்வோமிற்கான 20 சந்தா தொகைகளை கழகத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளரிடம் மயிலை பகுதி சார்பாக தோழர்கள் வழங்கினர். பெரியார் முழக்கம் 19122019 இதழ்

நாகை திருவள்ளுவன் மீதான பொய் வழக்குகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாகை திருவள்ளுவன் மீதான பொய் வழக்குகளைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மேட்டுப்பாளையத்தில்  சுவர் இடிந்து விழுந்து 17 பேர் இறந்ததற்கு நீதிக் கேட்டு போராடிய நாகை திருவள்ளுவன் மீது தாக்குதல் நடத்தி, பொய் வழக்குகள் பதிந்து சிறையிலிட்டதைக் கண்டித்து பெரியாரிய உணர் வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக  கண்டன ஆர்ப் பாட்டம் 09.12.2019 அன்று மாலை 3 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. படுகொலை செய்யப்பட்ட தலித் மக்களுக்கு நீதி கிடைக்க வேண்டும், சுவர் கட்டிய சிவசுப்ரமணியன் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிய வேண்டும், தோழர் நாகை திருவள்ளுவனை தாக்கிய காவலர்கள் மீதும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவர்களை உடனடியாக பணி இடைநீக்கம் செய்யப்பட வேண்டும், தோழர் நாகை திருவள்ளுவன் மீது போடப்பட்ட அனைத்து பொய் வழக்குகளும் திரும்ப பெற்று அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி...

திண்டுக்கல்லில் இராவணன்  படத்திறப்பு

திண்டுக்கல்லில் இராவணன் படத்திறப்பு

முடிவெய்திய கழகத்தின் பெரியாரியப் பணியாளர் இராவணன் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு, 15.12.2019 அன்று காலை 10 மணியளவில் திண்டுக்கல், தலைமை அஞ்சலகம் அருகில் உள்ள வாழ்க வளமுடன் அரங்கில் நடைபெற்றது. நிகழ்விற்கு திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை மாநில அமைப்புச் செயலாளர் புலேந்திரன் தலைமை தாங்கினார். ஆனந்த் முனி ராசன், மரிய திவாகரன், கி. இரவிச்சந்திரன், கோபி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்க, பெரியார் நம்பி வரவேற்புரையாற்றினார். இராவணன் படத்தைத் திறந்து கழகத் தலைவர் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மீ.த. பாண்டியன், துரை சம்பத் (த.பெ.தி.க.), பொள்ளாச்சி விஜயராகவன், உள்ளிட்ட அமைப்பு களைச் சேர்ந்த தோழர்கள் நினைவேந்தல் உரை நிகழ்த்தினர். பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு சார்பாக நிகழ்வு ஒருங்கிணைப்பு செய்யப்பட்டது. பெரியார் முழக்கம் 19122019 இதழ்

அரசியல் சட்ட எரிப்பு நாள் – தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் கருத்தரங்கம்

அரசியல் சட்ட எரிப்பு நாள் – தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் கருத்தரங்கம்

மதுரை  மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நவம்பர் 25 அன்று மாலை 4 மணிக்கு தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் கருத்தரங்கம் நடைபெற்றது. தமிழ்தேச மக்கள் முன்னணித் தலைவர்.மீ.த.பாண்டியன்; தமிழ்ப் புலிகள் கட்சி பொதுச் செயலாளர் பேரறிவாளன்; தமிழக வாழ்வுரிமை கட்சி பரப்புரைச் செயலாளர் பெரியார் சரவணன்; மகாமுனி – மே 17; குமரன் – புரட்சிகர இளைஞர் முன்னணி; கிட்டு ராசா- தபெதிக; பரிதி -தமிழ் தமிழர் இயக்கம்; மணிபாபா- தமிழக வாழ்வுரிமை பாதுகாப்பு மக்கள் கட்சி உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர். அன்று மாலை 6 மணிக்கு  “ஜாதியை பாதுகாக்கும் சட்ட எரிப்பு நாள்” கருத்தரங்கம் நடைபெற்றது. எழுத்தாளர்.மதிமாறன் சிறப்புரையாற்றினார். நிகழ்விற்கு திவிக மதுரை மாவட்ட செயலாளர் மணி அமுதன். மா.பா தலைமை தாங்கினார். மாநகர் தலைவர் காமாட்சி பாண்டி முன்னிலை வகித்தார்.  வழக்கறிஞர்கள் – சட்ட கல்லூரி மாணவர்கள் -ஆதித்தமிழர் பேரவை , அகில இந்திய...

அன்பு தனசேகர்-லதா இணையரின் 25ஆவது மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு நன்கொடை

அன்பு தனசேகர்-லதா இணையரின் 25ஆவது மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு நன்கொடை

கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர்-லதா இணையரின் 25ஆவது மணவிழா மகிழ்வு – சந்திப்பு – டிசம்பர் 11ஆம் தேதி தியாகராயர் நகர் சபரி உணவகத்தில்  நடந்தது. கழகத் தோழர்கள், நண்பர்கள், குடும்பத்துடன் பங்கேற்று – அன்பு தனசேகரின் துடிப்பு மிக்க கொள்கை செயல்பாடு களையும் – துணைவியார் லதா, அனைத்து குடும்பப் பொறுப்புகளையேற்று செயல்பட்டு வருவதையும் பாராட்டினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தோழர் அன்பு தனசேகர் பல ஆண்டுகாலமாக பெரியாரிய கொள்கைகளை பரப்புவதிலும் இயக்கச் செயல்பாடுகளிலும் தீவிரமாகப் பங்கேற்று செயல்படுவதை சுட்டிக்காட்டிப் பேசினார். அன்பு தனசேகர் -லதா, அன்பு மகள்கள் தமிழ்ச் செல்வி, இளவேனில் இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டின் வளர்ச்சிக்கு ரூ.10,000/- நன்கொடை வழங்கப் பட்டது. பெரியார் முழக்கம் 02012020 இதழ்