அன்னூர் தோழர்கள் கழகத்தில் இணைந்தனர்

கோவை மாவட்டம் அன்னூர், நல்லி செட்டிப்பாளையத்தில் ஜன. 5, 2020 அன்று கழகத்தின் கோவை மாவட்டச் செயலாளர்  வெள்ளிங்கிரி  தலைமையில்  திராவிடர் விடுதலைக் கழகக் கொடியை மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் ஏற்றி வைத்தார். பெயர்ப் பலகையை கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி திறந்து வைத்தார்.

தலைமை செயற்குழு உறுப்பினர் மடத்துக்குளம் மோகன் மந்திரமா தந்திரமா செய்து விளக்கிக் காட்டினார். நல்லிசெட்டிபாளையம் மோகன் உறுதிமொழி வாசிக்க தோழர்கள் வழி மொழிந்தனர்.  அதனைத் தொடர்ந்து  விஷ்ணு, மோகன் குமார், பார்த்திபன், மனோ ரஞ்சினி, தேவ பிரகாஷ், வெற்றிவேல், கோகுல், நந்தகுமார், தினேஷ் ஆகியோர்  திராவிடர் விடுதலைக் கழகத்தில் இணைந்தனர்.

மற்றும் மாவட்ட மாநில தோழமைக் கழக பொறுப்பாளர்கள் தந்தை பெரியாரின் பணிகள் குறித்தும் சாமியார்களின் பித்தலாட்டங்கள் குறித்து விளக்கியும், இந்த அமைப்பு ஏன்? எதற்காக? என்றும் விளக்கமாக கருத்துரையாற்றினர்.

புதிய தோழர்களை உருவாக்குதல் முதல் அனைத்து  நிகழ்ச்சிகளையும் களப்பணியாளர் விஷ்ணு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்.  நிகழ்ச்சியில் விமலாதேவி-அன்பழகன் இணையர்களின் குழந்தைக்கு கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி அறிவுக்கனல் என்று பெயர் சூட்டினார்.  பார்த்திபன் நன்றி தெரிவித்தார்.   நிகழ்வில் கோவை, பொள்ளாச்சி, ஆனைமலை, திருப்பூர் பகுதி தோழர்கள் பொறுப்பாளர்கள்  நல்லிசெட்டிபாளையம் பெரியார் நகர் பகுதி தோழர்கள், பொதுமக்கள் தோழமை அமைப்பினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.‘

பெரியார் முழக்கம் 09012020 இதழ்

You may also like...