அன்பு தனசேகர்-லதா இணையரின் 25ஆவது மணவிழா மகிழ்வாக கழக ஏட்டுக்கு நன்கொடை

கழகத் தலைமைக் குழு உறுப்பினர் அன்பு தனசேகர்-லதா இணையரின் 25ஆவது மணவிழா மகிழ்வு – சந்திப்பு – டிசம்பர் 11ஆம் தேதி தியாகராயர் நகர் சபரி உணவகத்தில்  நடந்தது. கழகத் தோழர்கள், நண்பர்கள், குடும்பத்துடன் பங்கேற்று – அன்பு தனசேகரின் துடிப்பு மிக்க கொள்கை செயல்பாடு களையும் – துணைவியார் லதா, அனைத்து குடும்பப் பொறுப்புகளையேற்று செயல்பட்டு வருவதையும் பாராட்டினர்.

கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தோழர் அன்பு தனசேகர் பல ஆண்டுகாலமாக பெரியாரிய கொள்கைகளை பரப்புவதிலும் இயக்கச் செயல்பாடுகளிலும் தீவிரமாகப் பங்கேற்று செயல்படுவதை சுட்டிக்காட்டிப் பேசினார். அன்பு தனசேகர் -லதா, அன்பு மகள்கள் தமிழ்ச் செல்வி, இளவேனில் இந்த நிகழ்வுகளை ஏற்பாடு செய்திருந்தனர். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டின் வளர்ச்சிக்கு ரூ.10,000/- நன்கொடை வழங்கப் பட்டது.

பெரியார் முழக்கம் 02012020 இதழ்

You may also like...