திண்டுக்கல்லில் இராவணன் படத்திறப்பு

முடிவெய்திய கழகத்தின் பெரியாரியப் பணியாளர் இராவணன் நினைவேந்தல் மற்றும் படத்திறப்பு நிகழ்வு, 15.12.2019 அன்று காலை 10 மணியளவில் திண்டுக்கல், தலைமை அஞ்சலகம் அருகில் உள்ள வாழ்க வளமுடன் அரங்கில் நடைபெற்றது. நிகழ்விற்கு திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை மாநில அமைப்புச் செயலாளர் புலேந்திரன் தலைமை தாங்கினார். ஆனந்த் முனி ராசன், மரிய திவாகரன், கி. இரவிச்சந்திரன், கோபி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகிக்க, பெரியார் நம்பி வரவேற்புரையாற்றினார். இராவணன் படத்தைத் திறந்து கழகத் தலைவர் உரையாற்றினார். அதனைத் தொடர்ந்து மீ.த. பாண்டியன், துரை சம்பத் (த.பெ.தி.க.), பொள்ளாச்சி விஜயராகவன், உள்ளிட்ட அமைப்பு களைச் சேர்ந்த தோழர்கள் நினைவேந்தல் உரை நிகழ்த்தினர். பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு சார்பாக நிகழ்வு ஒருங்கிணைப்பு செய்யப்பட்டது.

பெரியார் முழக்கம் 19122019 இதழ்

You may also like...