அரசியல் சட்ட எரிப்பு நாள் – தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் கருத்தரங்கம்

மதுரை  மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நவம்பர் 25 அன்று மாலை 4 மணிக்கு தமிழீழ தேசிய தலைவர் பிரபாகரன் பிறந்த நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.

தமிழ்தேச மக்கள் முன்னணித் தலைவர்.மீ.த.பாண்டியன்; தமிழ்ப் புலிகள் கட்சி பொதுச் செயலாளர் பேரறிவாளன்; தமிழக வாழ்வுரிமை கட்சி பரப்புரைச் செயலாளர் பெரியார் சரவணன்; மகாமுனி – மே 17; குமரன் – புரட்சிகர இளைஞர் முன்னணி; கிட்டு ராசா- தபெதிக; பரிதி -தமிழ் தமிழர் இயக்கம்; மணிபாபா- தமிழக வாழ்வுரிமை பாதுகாப்பு மக்கள் கட்சி உள்ளிட்டோர் கருத்துரையாற்றினர். அன்று மாலை 6 மணிக்கு  “ஜாதியை பாதுகாக்கும் சட்ட எரிப்பு நாள்” கருத்தரங்கம் நடைபெற்றது. எழுத்தாளர்.மதிமாறன் சிறப்புரையாற்றினார். நிகழ்விற்கு திவிக மதுரை மாவட்ட செயலாளர் மணி அமுதன். மா.பா தலைமை தாங்கினார். மாநகர் தலைவர் காமாட்சி பாண்டி முன்னிலை வகித்தார்.  வழக்கறிஞர்கள் – சட்ட கல்லூரி மாணவர்கள் -ஆதித்தமிழர் பேரவை , அகில இந்திய மஜ்லீஸ் கட்சி உள்ளிட்ட தோழமை அமைப்புத் தோழர்கள் மற்றும் திவிக மதுரை மாவட்ட கழக தோழர்கள், மேலூர் பொறுப்பாளர் சத்திய மூர்த்தி, மாளவிகா,  பொன்னான்டி, குமார்,  மருது பாண்டி உள்ளிட்டோர்  பங்காற்றினர்.

பெரியார் முழக்கம் 19122019 இதழ்

You may also like...