Category: சிறப்பு கட்டுரை

கோடைக்கால விடுமுறை  “குழந்தைகள் சிறப்பு பழகு முகாம்”

கோடைக்கால விடுமுறை “குழந்தைகள் சிறப்பு பழகு முகாம்”

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் குழந்தைகள் பழகு முகாம் வரும் மே மாதத்தில் நடைபெற உள்ளது. நாள் : 10.5.2017 முதல் 14.5.2017 (5 நாட்கள்) இடம் : பெங்களுர் . குழந்தைகள் சிறப்பு பழகு முகாமில் கற்பனைத் திறன் வளர்த்தல், படைப்பாற்றல் பெருக்குதல், குழு உரையாடல், கதை உருவாக்கல், ஓவியப் பயிற்சி, கவிதை புனைதல், கட்டுரை வரைதல், அறிவியல் சார்ந்த விளையாட்டுகள் உள்ளிட்ட நிகழ்வுகள் கோடையில் கொண்டாடுவோம் ! பள்ளி விடுமுறையை பயனுள்ளதாக்குவோம் ! 10 வயது முதல் 15 வயது முடிய உள்ளவர்கள் பங்கேற்கலாம். குறைந்த பட்ச பங்களிப்புக் கட்டணம் குழந்தை 1க்கு : Rs.1500/= (ரூபாய் ஒரு ஆயிரத்து ஐநூறு மட்டும்) குறிப்பு : Rs1500/= செலுத்த இயலாதவர்கள் Rs1000/= (ஒரு ஆயிரம் மட்டும்) செலுத்தலாம். முன் பதிவு அவசியம். பதிவு செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள வேண்டிய எண் : 98424 48175

ஆர்.எஸ்.எஸ். ஆணையை ஏற்று குண்டு வைத்தோம்: அசீமானந்தா ஒப்புதல் ஒப்புதல் வாக்கு மூலத்துக்குப் பிறகும் விடுதலையான பயங்கரவாதியின் கதை

ஆர்.எஸ்.எஸ். ஆணையை ஏற்று குண்டு வைத்தோம்: அசீமானந்தா ஒப்புதல் ஒப்புதல் வாக்கு மூலத்துக்குப் பிறகும் விடுதலையான பயங்கரவாதியின் கதை

இராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்காவில் ரம்சான் தொழுகையில் 5000 இஸ்லாமியர்கள் ஈடுபட்டிருந்த போது குண்டு வெடித்தது. இதில் 3 பேர் இறந்தனர் 17 பேர் படுகாயமடைந்தனர். வழக்கம்போல் இதில் இஸ்லாமியர்களே குற்றவாளி என்று கைது செய்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு குண்டு வைத்தது இந்து தீவிரவாதிகள், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்பது கண்டறியப்பட்டது. தேசிய புலனாய்வு நிறுவனம் இந்த வழக்கை விசாரித்தது. சிறப்பு நீதிமன்றம் வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் ஆர்.எஸ்.எஸ்.காரர், அசீமானந்தாவை விடுதலை செய்து விட்டு 3 பேரை மட்டும் குற்றவாளி என்று கூறியிருக்கிறது. அசீமானந்தா டெல்லி உயர்நீதி மன்றத்தில் பல தாக்குதல்களை நானே திட்டமிட்டேன் என்று ஒப்புதல் வாக்குமூலமே தந்திருந்தார். ‘காரவான்’ ஆங்கில இதழுக்காக லீனா கீதா ரெங்கநாத் எனும் செய்தியாளர் தனது குழுவினருடன் அம்பாலா சிறையில் அசீமானந்தாவை பேட்டி கண்டார். 2013ஆம் ஆண்டு நான்கு முறை சந்தித்து, 9 மணி நேரம் 26 நிமிடம் பதிவு செய்தார். தனது பயங்கரவாத...

இஸ்லாமிய அமைப்புகள்-இயக்கங்கள்-கடும் கண்டனம்

ஃபாரூக் படுகொலையைக் கண்டித்து இஸ்லாமிய அமைப்புகள், இயக்கங்கள், தோழர்கள் வெளியிட்ட அறிக்கையிலிருந்து சில பகுதிகள்: கோவை இஸ்லாமிய கூட்டமைப்பு கடந்த 16ஆம் தேதி (வியாழக்கிழமை) இரவு கோவை, உக்கடம் பகுதியில் திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தோழர் பாரூக், சில நபர்களால் கொலை செய்யப்பட்டு இறந்தார். இச்செயலை கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத்கள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு வன்மையாக கண்டிக்கிறது. இஸ்லாமிய வழிகாட்டுதலை மீறி யாரேனும் சில முஸ்லிம்கள் இந்தக் கொடூரத்தை செய்திருப்பார் களேயானால் அவர்களை ஒட்டுமொத்த இஸ்லாமிய சமூகமும் வன்மையாக கண்டிக்கிறது. மேலும் இந்த நடவடிக்கை இஸ்லாமிய வழிமுறையும் இல்லை என்பதை இந்த நேரத்தில் தெளிவுபடுத்திக் கொள்ள விரும்புகிறோம். மேலும் குற்றவாளிகளுக்கு சட்டப்படி உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். கோவை மாவட்ட அனைத்து ஜமாஅத்கள் மற்றும் இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தோழர் பாரூக் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவிக்கிறோம். இக்கூட்டமைப்பு சார்பில் அனைத்து உண்மை குற்றவாளிகளையும் கைது  செய்து...

119 பேர் மரணமடைந்த குண்டுவெடிப்புகளுக்கு திட்டமிட்டேன்: அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்

119 பேர் மரணமடைந்த குண்டுவெடிப்புகளுக்கு திட்டமிட்டேன்: அசீமானந்தாவின் ஒப்புதல் வாக்குமூலம்

ஒப்புதல் வாக்கு மூலத்துக்குப் பிறகும் விடுதலையான பயங்கரவாதியின் கதை ‘என்னை கோபால் கோட்சே இருந்த அதே கொட்டடியில் வைத்திருக்கிறார்கள்’ என்று பெருமையாக சொல்லிக் கொண்டார் அசீமானந்தா. இராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தர்காவில் ரம்சான் தொழுகையில் 5000 இஸ்லாமியர்கள் ஈடுபட்டிருந்த போது குண்டு வெடித்தது. இதில் 3 பேர் இறந்தனர் 17 பேர் படுகாயமடைந்தனர். வழக்கம்போல் இதில் இஸ்லாமியர்களே குற்றவாளி என்று கைது செய்தனர். தீவிர விசாரணைக்குப் பிறகு குண்டு வைத்தது இந்து தீவிரவாதிகள், ஆர்.எஸ்.எஸ்.காரர்கள் என்பது கண்டறியப்பட்டது. தேசிய புலனாய்வு நிறுவனம் இந்த வழக்கை விசாரித்தது. சிறப்பு நீதிமன்றம் வழக்கில் முக்கிய குற்றவாளியான முன்னாள் ஆர்.எஸ்.எஸ்.காரர், அசீமானந்தாவை விடுதலை செய்து விட்டு 3 பேரை மட்டும் குற்றவாளி என்று கூறியிருக்கிறது. அசீமானந்தா டெல்லி உயர்நீதி மன்றத்தில் பல தாக்குதல்களை நானே திட்டமிட்டேன் என்று ஒப்புதல் வாக்குமூலமே தந்திருந்தார். ‘காரவான்’ ஆங்கில இதழுக்காக லீனா கீதா ரெங்கநாத் எனும் செய்தியாளர் தனது குழுவினருடன்...

ஒரே மேடையில் நூறுக்கும் அதிகமான கலைஞர்கள் ! ‘மகுடம்’ இசை முழக்கம் அதிர்ந்தது அரங்கம்

ஒரே மேடையில் நூறுக்கும் அதிகமான கலைஞர்கள் ! ‘மகுடம்’ இசை முழக்கம் அதிர்ந்தது அரங்கம்

தலைநகர் சென்னையில் நடந்த ‘மகுடம்’ தமிழர் வல்லிசை மண்ணின் இசைக் கருவிகள் மார்தட்டி அணி வகுக்கும் எழுச்சி இசை முழக்கமாய் கடந்த மார்ச் 12ஆம் தேதி ஞாயிறு மாலை காமராசர் அரங்கில் ஒலித்தது. தமிழ்நாட்டில் தமிழர் இசையில் மிளிர்ந்த எத்தனையோ தாளக் கருவிகளும் இசைக் கருவிகளும் காணாமலே போய் விட்டன. இந்த இசைக் கலைஞர்கள் ஒடுக்கப்பட்ட ஜாதியில் பிறந்தவர்கள் என்பதற்காக ஜாதிய சமூகம் அவர்களை ஒதுக்கியதுபோலவே தமிழர்களின் அடையாளங்களைப் பேணிய இசைக் கருவிகளையும் அழித்துவிட்டது. அழிந்து வரும் தமிழர் வல்லிசையை மீட்டெடுத்து, அந்தக் கலைஞர்களைக் கண்டறிந்து, அவர்களை ஒரே மேடையில் இசைக்க வைக்கும் கடும் முயற்சியில் இறங்கியது ‘மகுடம்’ அமைப்பு. தலைநகரில் தந்தை பெரியார் தமிழிசை மன்றம் தொடங்கி தமிழிசை விழாக்களை ‘ஆனா ரூனா’ என்று அன்புடன் அழைக்கப்படும் மாணவர் நகலக நிறுவனர் மறைந்த நா. அருணாசலம் நடத்தி வந்தார். அவரது நினைவு நாள் நிகழ்வில் அந்தப் பணி தொய்வின்றி தொடரும்...

தோழர் ஃபாரூக்கை யாராலும் கொல்ல முடியாது!

திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சேர்ந்த தோழர் ஃபாரூக்கை துடிதுடிக்க கொன்று போட்டிருக்கின்றார்கள் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகள். தோழர் ஃபாரூக் ஒரு இஸ்லாமியராகப் பிறந்தும் தன்னுடைய கொள்கையாக குரானைத் துறந்து, பெரியாரியத்தை ஏற்றுக் கொண்டவர். பேஸ்புக்கிலும், வாட்ஸ்அப்பிலும் தொடர்ச்சியாக கடவுள் நம்பிக்கைக்கு எதிராகவும், மத நம்பிக்கைக்கு எதிராகவும் பிரச்சாரம் செய்தவர். அவருடைய வாட்ஸ்அப் குரூப்பில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 400 பேர்வரை இருந்துள்ளனர். இவர்களில் பெரும்பாலான நபர்கள் பெரியாரின் கொள்கைகளில் ஈடுபாடு உடையவர்களாய் இருந்துள்ளனர். இது இஸ்லாமிய மத வெறியர்களுக்குக் கடும் கோபத்தை ஏற்படுத்தி இருக்கின்றது. மேலும் தனது குழந்தைகள் கையில் ‘கடவுள் இல்லை, கடவுள் இல்லை, கடவுள் இல்லை’ என்ற முழக்கம் இருக்கும் பதாகைகளைக் கொடுத்து அதைப் புகைப்படம் எடுத்து பதிவிட்டிருக்கின்றார். தன்னுடைய குழந்தைகளை வருங்காலத்தில் நாத்திகர்களாக வளர்க்கப் போவதாகவும் சபதம் செய்திருக்கின்றார் தோழர் ஃபாரூக் அவர்கள். அதனால் இஸ்லாமிய மத வெறியர்களின் கடும் கண்டனத்துக்கு ஆளாகி இருக்கின்றார். ஆனால்...

தோழர் ஃபாரூக் குடும்பநிதி !

தோழர் ஃபாரூக் குடும்பநிதி !

தோழர் ஃபாரூக் அவர்கள் கடந்த 16.03.2017 அன்று சமூக விரோதிகளால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். தோழர் பாரூக் அவர்களுக்கு மனைவி, இரண்டு குழந்தைகள் உள்ள குடும்பம் உள்ளது. பெரிய பொருளாதார பிண்ணனி இல்லாத நிலையிலும் கூட தன் குடும்ப வருமானத்திற்கான உழைப்பின் இடையேயும் இந்த சமூகம் குறித்த அக்கரையோடு சிந்தித்து அதற்காக ஜனநாயகத் தன்மையோடு இயங்குகிற எமது கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டு சமுதாய பணியாற்றியவர். தோழர் ஃபாரூக் அவர்களின் எதிர்பாராத படுகொலையை அடுத்து அவரின் குடும்பம் சொல்லொனா துயரத்தில் ஆழ்ந்துள்ள இச்சமயத்தில் அவர்களுக்கு ஆறுதலாகவும், துணையாகவும் இருக்க வேண்டியது நம் அனைவரின் கடமையாகும். இப்போது நம்மால் இயன்ற உதவிகளைச் செய்து தோழர் ஃபாரூக் அவர்கள் குடும்பத்தின் துயரத்தில் பங்கெடுத்துக் கொள்வோம். வாய்ப்பு உள்ள தோழர்கள் தங்களால் இயன்ற நிதியை கீழ் உள்ள கழகத்தின் பொருளாளர் தோழர் துரைசாமி அவர்களின் வங்கிக்கணக்கில் செலுத்தியுதவுமாறு வேண்டுகிறோம். K.S.Duraisamy Savings A/c No :...

மத பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்கள்!

தமிழ்நாடு மாணவர் கழக சார்பில் “யார் தேச விரோதிகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் 5.2.2017 அன்று மாலை நடைபெற்றது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கம். (சென்ற இதழ் தொடர்ச்சி) 2002ஆம் ஆண்டு குஜராத்தில் மோடி முதலமைச்சராக இருந்தபோதுதான் இஸ்லாமியர் களுக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலை நடந்தது. பாபர் மஸ்ஜிதில் பூஜை முடிந்து, சபர்மதி துரித வண்டியில் திரும்பிய கரசேவகர்கள், இரயிலில் தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டனர். 56 பயணிகள் கொடூரமாக இறந்தனர். இந்த சதியை செய்தவர்கள் இஸ்லாமியர்கள் என்று குஜராத் காவல்துறையும் அரசும் குற்றம் சாட்டியது. சிறப்பு நீதிமன்றம் 9 ஆண்டுகளுக்குப் பிறகு 2011இல் அளித்த தீர்ப்பில் 11 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி குற்றம்சாட்டப்பட்ட 63 பேரை விடுதலை செய்தது. இரயில் பெட்டியை வெளியிலிருந்து எரிப்பதற்கான வாய்ப்புகளே இல்லை; தீ – இரயில்...

ஜக்கி அவர்களே! பதில் சொல்லுங்கள்!

ஜக்கி அவர்களே! பதில் சொல்லுங்கள்!

ஜக்கி வாசுதேவ் – தொலைக்காட்சிகளுக்கு பேட்டி அளித்து வருகிறார். அவரது பேட்டி தொடர்பான பல கேள்விகளை நாம் எழுப்ப வேண்டியிருக்கிறது. ‘ஆதியோகி சிவன்’ சிலை – அதைப் பார்ப்பவர்கள் நினைவி லிருந்து நீங்கவே நீங்காது; அந்த வகையில் 112 அடியில் வடிவமைத்திருக்கிறோம் என்கிறார். அப்படியானால் உருவ வழிபாடே கூடாது என்று இதுவரை இவர் கூறிவந்த கருத்துக்கு விடை கொடுத்து விட்டாரா? ஆதியோகி சிலை கடவுள் சிலை அல்ல; அது சிவன் சிலையும் அல்ல என்கிறார் ஜக்கி. அப்படியானால் அந்த சிலையில் சிவனின் அடையாளத்தைக் குறிக்கும் – கழுத்துப் பாம்பு; தலையில் சந்திரன் உருவங்கள் இடம் பெற்றிருப்பது ஏன்? எனது மய்யம் அமைந்த பகுதியில் ஒரு அங்குலம்கூட வனப்பகுதி கிடையாது; இந்தப் பகுதிகளில் நடமாடும் மான்களை வேட்டையாடி மான் கறி சாப்பிட்டவர்கள், எங்கள் கட்டிடம் வந்த பிறகு, அது கிடைக்காமல் போனதால் எங்களை எதிர்க் கிறார்கள் என்கிறார். அப்படியானால் மான்கள் நடமாடக்கூடிய, அதன்...

வாக்குறுதியை மீறும் இலங்கை அய்.நா. என்ன செய்யப் போகிறது?

வாக்குறுதியை மீறும் இலங்கை அய்.நா. என்ன செய்யப் போகிறது?

2015ஆம் ஆண்டு அய்.நா.வில் இலங்கை அரசே கொண்டு வந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை இப்போது நினைவுகூர வேண்டும். காமன்வெல்த் நாடுகள், பன்னாட்டு நீதிபதிகளின் பங்கேற்புடன் போர்க் குற்றங்கள் குறித்து ஒரு கலப்பு விசாரணை, தீர்ப்பாயத்தை அமைப்போம் என்பதே அத்தீர்மானம். மனித உரிமை ஆணையத்தில் இடம் பெற்றிருந்த 47 நாடுகளில், இந்தியா உள்ளிட்ட 37 நாடுகள் இத்தீர்மானத்தை ஆதரித்தன. இப்போது பன்னாட்டு விசாரணைக்கு அனுமதிக்க மாட்டோம் என்கிறது இலங்கை. தமிழர்கள் பிரச்சினைக்கு அந்த அரசு மேற் கொள்ள வேண்டிய விசாரணை ஆணையம் நியமித்தல், இராணுவத்தைத் திரும்பப் பெறுதல் உள்ளிட்ட தீர்வுத் திட்டங்கள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க 18 மாதங்கள் அய்.நா. காலஅவகாசம் தந்தது. இப்போது பிப்.24 முதல் மார்ச் 27 வரை நடைபெறவிருக்கும் அய்.நா. கூட்டத்தில் அப்படி ஒரு அறிக்கையை தாக்கல் செய்யாமல், மேலும் தங்களுக்கு கால அவகாசம் கேட்கிறது இலங்கை. தமிழர் பிரச்சினையை தள்ளிப் போட்டுக் கொண்டே போக வேண்டும் என்பதே இதில்...

வாழ்வாதாரத்தினை அழிக்கும் ‘அய்ட்ரோ கார்பன்’ திட்டம்

வாழ்வாதாரத்தினை அழிக்கும் ‘அய்ட்ரோ கார்பன்’ திட்டம்

மீத்தேன் திட்ட செயல்பாட்டுக்கான அனுமதியை ரத்து செய்து விட்டதாக மத்திய அரசு கடந்த 2016ஆம் ஆண்டு அறிவித்தது. இதனால் காவிரி டெல்டாவில் போராட்டங்கள் அடங்கியிருந்தது. இந்நிலையில் புதுக்கோட்டை மாவட்டம், நெடுவாசலில் மீத்தேன், ஷேல் கேஸ் போன்ற இன்னொரு வடிவில் இயற்கை எரிவாயு எடுக்கும் புதிய திட்டத்தை மத்திய அரசு அறிவித்துள்ளது. இத்திட்டத்தின் பெயர் ஹைட்ரோ கார்பன் திட்டம் என சொல்லப்படுகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்தக் கூடாது என நெடுவாசல் பகுதியில் மக்கள் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த திட்டம் மீத்தேன் திட்டத்தின் மறு வடிவம் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். இப்போது மோடி அரசு அறிவித்துள்ள ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு முன்னர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை மையப்படுத்தி 760 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் சுமார் 500 மீட்டர் ஆழத்தில் படிந்துள்ள மீத்தேன் மற்றும் ஷேல் கேஸ் எரிவாயுவை வெளிக்கொணரும் வகையில் காவிரிப் படுகையில் இந்த திட்டத்திற்கான ஒப்பந்தத்தை அளித்திருந்தது மத்திய அரசு....

தோழர் விடுதலை இராசேந்திரன் மின்னூல்கள்

இந்தியா விலைபோகிறது! – விடுதலை க. இராசேந்திரன் http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/9.pdf சிறப்பு பிரம்மதேய மண்டலங்கள் – விடுதலை இராசேந்திரன் http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/24.pdf தனியார் துறையில் இடஒதுக்கீடு ஏன்? எதற்கு? – விடுதலை இராசேந்திரன் http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/34.pdf பண்பாடு சமூகம் அரசியலில் மனுவின் ஆதிக்கம் – விடுதலை இராசேந்திரன் http://dvkperiyar.com/wp-content/uploads/2015/09/panpattu-samooka.pdf மரண தண்டனையை ஒழிப்போம் – விடுதலை இராசேந்திரன் http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/63.pdf மனுதர்மம் என்ற அதர்மம் – தொகுப்பு விடுதலை இராசேந்திரன்  http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/67.pdf மோடித்துவ முகமூடி – விடுதலை க. இராசேந்திரன்  http://dvkperiyar.com/wp-content/uploads/2015/11/modithuva-mugamudi.pdf

தோழர் கொளத்தூர் மணி மின்னூல்கள்

இடஒதுக்கீடு உரிமை போராட்ட வரலாறு – கொளத்தூர் மணி http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/7.pdf ஈழம் முதல் அணுவுலை வரை.. சமகால பிரச்சனைகளில் பெரியாரியல் பார்வை – கொளத்தூர் மணி http://dvkperiyar.com/wp-content/uploads/2015/09/elam-muthal-anu-vulai-varai.pdf காந்தியார் படுகொலைநாள் – கொளத்தூர் மணி http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/18.pdf சுதந்திர வேட்கை- கொளத்தூர் மணி http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/26.pdf சேதுக் கால்வாய்த் திட்டம் – கொளத்தூர் மணி http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/27.pdf தமிழர் பண்பாடு- கொளத்தூர் மணி http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/32.pdf திராவிடர் கழகம்- பெயர் மாற்றம் – தோழர் கொளத்தூர் மணி http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/37.pdf தோழர் கொளத்தூர் மணியுடன் நேர்காணல் http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/40.pdf பார்ப்பன இந்திய தேசிய – பன்னாட்டுக்கொள்ளை – கொளத்தூர் மணி http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/45.pdf பெயருக்கு பின்னால்…கொளத்தூர் மணி உரை http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/52.pdf பெரியாருக்கு எதிரான ‘முனை மழுங்கும்’ வாதங்கள் – கொளத்தூர் மணி http://dvkperiyar.com/wp-content/uploads/2015/09/periyarukku-ethirana.pdf பெரியாரும் தனிதமிழ்நாடும் – கொளத்தூர் மணி http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/58.pdf விடுதலை வேட்கை- கொளத்தூர் மணி http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/72.pdf

ஹிட்லர் – முசோலினியை ஆதரித்த-ஆர்.எஸ்.எஸ்.

தமிழ்நாடு மாணவர் கழக சார்பில் “யார் தேச விரோதிகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் 5.2.2017 அன்று மாலை நடைபெற்றது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையிலிருந்து. (சென்ற இதழ் தொடர்ச்சி) இந்தியாவில் சுதந்திரப் போராட்டம் நடந்த காலத்தில் இரண்டாவது உலக யுத்தமும் நடந்து கொண்டிருந்தது. அந்த காலகட்டங்களில் யூதர்களை இனப்படுகொலை செய்து, உலக வரலாற்றில் இன்று வரை வெறுக்கப்படும் இனப் படுகொலையாளர் ஹிட்லரை ஆதரித்ததுதான் ஆர்.எஸ்.எஸ். ஹிட்லரின் ஸ்வஸ்திக் கொடியை தங்கள் கொடியாக வைத் திருந்தார்கள்; முதல் உலகப் போர் நடந்தபோது இந்தியாவில் ஆயுதம் தாங்கிய உள்நாட்டுப் புரட்சியை நடத்தி இந்தியாவை ‘இந்து இராஜ்யமாக்க’த் திட்ட மிட்டார்கள். அப்போது ஆர்.எஸ்.எஸ். தலைவராக இருந்த ஹெட்கேவர் என்ற ‘சித்பவன்’ பார்ப்பனர், தங்களது குருவான திலகரிடம் இந்த யோசனையை முன் வைத்தபோது, திலகர் அது  நடைமுறையில் தோல்வியைத் தழுவி விடும் எனக் கூறிவிட்டார். ஹிட்லரின்...

காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை எதிர்த்தது-ஆர்.எஸ்.எஸ்.

காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை எதிர்த்தது-ஆர்.எஸ்.எஸ்.

தமிழ்நாடு மாணவர் கழக சார்பில் “யார் தேச விரோதிகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் 5.2.2017 அன்று மாலை நடைபெற்றது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையிலிருந்து. (சென்ற இதழ் தொடர்ச்சி) தேச விரோதிகள், அரசியல் சட்டத்தை மதிக்காதவர்கள் என்று கூக்குரல் போடுவோர், எத்தகைய ‘தேசபக்தர்கள்’? நாம் கேட்பது, “நீங்கள் கூறும் தேசபக்தியின் அளவுகோலை உங்களுக்கே பொருத்திப் பாருங்கள்” என்பது தான். சட்டங்களையோ, அரசு அமைப்பையோ விமர்சித்துப் பேசுவதே ‘தேசவிரோதம்’ என்றால், சங்பரிவாரங்களே! உங்களின் வரலாறு என்ன என்பதுதான் நமது கேள்வி! இந்திய அரசியல் சட்டம் குறித்து 1993ஆம் ஆண்டு ஜனவரி முதல் தேதி ஆர்.எஸ்.எஸ். ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட்டது. அந்த வெள்ளை அறிக்கை இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் இந்துக்களுக்கு எதிரானது என்று கூறுகிறது. இவர்கள்தான், இப்போது அம்பேத்கரையும் தங்கள் ‘இந்துத்துவ’ அணியில் இழுத்துக் கொண்டு தலித் மக்களை ஏமாற்றலாம்...

அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதம் ஆளுநர்கள் மய்ய அரசின் கங்காணிகள்

தமிழ்நாட்டில் இப்போது ஆளுநராக இருப்பவர் செயல்பாடு கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி வருகிறது. அரசியல் நிர்ணய சபையில் ஆளுநர் பதவி குறித்து கடும் விவாதங்கள் நடந்துள்ளன. முரசொலி மாறன் எழுதிய ‘மாநில சுயாட்சி’ நூலிலிருந்து சில பகுதிகள்: கவர்னரைக் குடியரசுத் தலைவர் நியமிக்கிறார். குடியரசுத் தலைவர் நியமிக்கிறார் என்றால் பிரதமர் நியமிக்கிறார் என்று பொருள். பிரதமர் நியமிக்கிறார் என்றால் மத்திய அரசை ஆளுகின்ற கட்சி அப்படி முடிவு எடுக்கிறது என்று பொருள். அரசியல் நிர்ணய சபை எடுத்த எடுப்பிலேயே இந்த முடிவுக்கு வந்து விடவில்லை. பலவித முடிவுகளை அலசி ஆராய்ந்து, இறுதியில் இப்படி நியமனம் செய்யும் முடிவுக்கு வந்தது. அவற்றையெல்லாம் ஆராய்ந்தால், கவர்னர் பதவியை நியமனப் பதவி யாக்கியதன் உள்நோக்கம் நன்கு புலப்படும். அரசியல் நிர்ணய சபையின் துவக்கக் காலத்தில், வயது வந்தோருக்கு வாக்குரிமை என்கிற அடிப்படையில் மாநிலத்து வாக்காளர்கள் அனை வரும் பெரும்பான்மை வாக்குகளால் அந்த மாநிலத்து கவர்னரைத் தேர்ந் தெடுக்கலாம்...

‘இந்திய தேச பக்தி’ பேசும் பா.ஜ.க. பரிவாரங்களே! ‘இந்தியா’ என்ற சொல்லை ஏற்க மறுப்பது ஏன்?

‘இந்திய தேச பக்தி’ பேசும் பா.ஜ.க. பரிவாரங்களே! ‘இந்தியா’ என்ற சொல்லை ஏற்க மறுப்பது ஏன்?  விடுதலை இராசேந்திரன் கேள்வி (நிகழ்ச்சி காணொளி இங்கே சொடுக்கவும்) தமிழ்நாடு மாணவர் கழக சார்பில் “யார் தேச விரோதிகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் 5.2.2017 அன்று மாலை நடைபெற்றது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையிலிருந்து சில பகுதிகள்: மாணவர்கள், இளைஞர்கள் நடத்திய வரலாறு காணாத எழுச்சிப் போராட்டத்தில் தேச விரோதிகள் ஊடுருவி விட்டதாக பா.ஜ.க.வினரும், காவல் துறையும் கூறுகிறார்கள். தமிழக முதல்வர் பன்னீர் செல்வமும், சட்டமன்றத்தில் இதே கருத்தை மத்திய உளவுத் துறை தயாரித்துத் தந்திருந்த அறிக்கையை படித்தார். ‘தேச விரோதிகள்’ குறித்து நாம் பேசுவதற்கு முன்பு ‘தேச பக்தர்கள்’ குறித்து விவாதிக்க வேண்டும். உண்மையில் தேசபக்தி என்பதற்கான விளக்கம்தான் என்ன? இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றுபட் டிருந்தபோது, தேசபக்தியின்  அர்த்தம் வேறு; பாகிஸ்தான்...

காந்தி படுகொலை நாள் சிந்தனை: பாசிசத்தை தமிழகம் ஏற்காது

காந்தி படுகொலை நாள் சிந்தனை: பாசிசத்தை தமிழகம் ஏற்காது

‘விடியல்’ ஜனவரி மாத இதழில் விடுதலை இராசேந்திரன் எழுதிய கட்டுரை. ஜனவரி 30, காந்தி, கோட்சேயின் துப்பாக்கிக் குண்டுக்கு பலியான நாள். அந்த நாளை நியாயமாக இந்துத்துவா எதிர்ப்பு நாள் என்று அறிவித்திருந்தால் சரியாக இருக்கும். ஆனால், தீண்டாமை எதிர்ப்புக்கு அரசு ஊழியர்கள் உறுதி ஏற்கும் நாளாக அது குறுக்கப்பட்டது. பார்ப்பனியத்தின் திட்டமிட்ட ஒரு சதி தான். இந்திய வரலாற்றில் காந்தியின் ஆளுமை பாத்திரத்தை குறைத்து மதிப்பிட்டுவிட முடியாது. அவருடன் உடன்படுகிற முரண் படுகிற கருத்துகள்; அவரை உறுதியாக ஆதரித்தவர்கள், எதிர்த்தவர்கள் இருவருக் குமே உண்டு. தவறான புரிதல்களில் அவ்வப் போது குழப்பமான கருத்துகளை வெளிப் படுத்தியவர்தான் காந்தி. ஆனால் அதற்கு உள்நோக்கம் அவரிடம் ஏதும் இல்லை என்றுதான் மதிப்பிட வேண்டியிருக்கிறது. இந்தியாவை இந்துக்களின் இராஷ்டிர மாக்குவதே – சித்பவன் பாப்பனரான திலகர் கேட்ட சுயராஜ்யம். திலகர் காலத்துக்குப் பிறகுதான் காங்கிரஸ் தலைமை காந்தியிடம் வருகிறது. காந்தி தனது சுதந்திரப் போராட்...

உலக நாடுகளை ஏமாற்ற சிங்களத்தின் புதிய சதித் திட்டங்கள் தமிழினம் என்ன செய்யப் போகிறது?

உலக நாடுகளை ஏமாற்ற சிங்களத்தின் புதிய சதித் திட்டங்கள் தமிழினம் என்ன செய்யப் போகிறது?

இலங்கைக்கு அய்.நா. மனித உரிமைக்கு தந்த கெடு 2017 மார்ச் மாதத்தோடு நிறைவடைகிறது. மீண்டும் உலக நாடுகளை ஏமாற்றும் முயற்சிகளில் இறங்கியுள்ளது இலங்கை. தமிழர்கள் இந்த சதியை முறியடித்து முன்னெடுக்க வேண்டிய திட்டங்கள் என்ன? கடந்த 2015 அக்டோபர் மாதம், இலங்கை அரசு அய். நா. வின் மனித உரிமைகள் குழுவிடமும் இலங்கை மக்களிடமும் ஒரு வாக்குறுதியை அளித்திருந்தது. “கடந்த காலத்தில் நடந்தவை குறித்து சட்ட ரீதியான மற்றும் பிற வகைகளிலும் முழுமையான நடவடிக்கைகளை எடுப்பதன் மூலம் உண்மை, நீதி, நிவாரணம் மற்றும் மீண்டும் தவறுகள் நடக்காதிருப்பதை உறுதி செய்வது” என்பதே அந்த வாக்குறுதி. 15 மாதங்கள் கடந்து விட்ட நிலையில், கடந்த ஜனவரி 13, 2017 அன்று, இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் மங்கள சமர வீரா, இலண்டனில் நடந்த ஒரு கலந்துரையாடல் கூட்டத்தின் போது, தனது வாக்குறுதிகளை நிறைவேற்ற இலங்கை அரசுக்கு இன்னும் அதிக நேரம் தேவைப்படுகிறது என்று...

ஈழ விடுதலையில் மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் மகத்தான பங்களிப்பு

தமிழ்நாட்டில் தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு ஆக்கப்பூர்வமான உதவிகளை செய்த பெருமை மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு உண்டு. இதை எவராலும் மறுக்க முடியாது. விடுதலைப் புலிகள் இயக்கமே இதை நன்றியுடன் பதிவு செய்திருக்கிறது. விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இரண்டு தவணைகளில் பல கோடி ரூபாய் நிதியை வழங்கியவர் – மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தான். இரண்டாவது முறை – அரசு நிதியிலிருந்து வழங்கிய காசோலைக்கு ராஜீவ் ஆட்சி எதிர்ப்பு தெரிவித்ததால் “அந்தக் காசோலையைக் கிழித்தெறியுங்கள்; எனது சொந்தப் பணத்தைத் தருகிறேன்” என்று கூறி, சொந்தப் பணத்தை எடுத்துத் தந்தவர் அவர்தான். சென்னை துறைமுகத்தில் விடுதலைப் புலிகளுக்கு ஆயுதங்கள் வந்து இறங்கியபோது அதை துறைமுகத்திலிருந்து வெளியே எடுப்பதற்கு தடைகள் வந்தபோது, முதல்வர் என்ற முறையில் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி, ஆயுதங்களைக் கிடைக்கச் செய்தவர் எம்.ஜி.ஆர். தான். ஈழத் தமிழர்களுக்காக தான் கருப்புச் சட்டை அணிந்ததோடு, தனது சக அமைச்சர்களையும்...

ஜல்லிக்கட்டு மீதான பண்பாட்டு மயக்கமும், நாட்டு மாடுகள் மீதான திடீர் அக்கறையும்

எங்களது ஊர்ப் பகுதிகளில் ஒரு சொலவடை உண்டு. ‘மாடுமுட்டிப் பய’ என்பார்கள். என்ன என்று பெரியவர்களிடம் கேட்டால் சொல்வார்கள், “மாடு நம்மை முட்ட வந்தால் புத்தியுள்ளவங்க என்ன பண்ணுவோம்… விலகி நிற்போம். ஆனா இவன் என்ன பண்ணுவான்னா மாட்டுக்குச் சமமா மல்லுக்கு நிப்பான். அந்தளவுக்கு புத்திகெட்ட பய…” அதுபோன்ற பகுத்தறிவுக்கு ஒவ்வாத ஒரு செயல்தான் ஜல்லிக்கட்டு. மனித அறிவும், அறிவியல் தொழில்நுட்பமும் மேம்படாத காலத்தில் மாட்டை அடக்குவது அல்லது அணைத்து, வசப்படுத்துவது வீரமாக இருந்திருக்கலாம். ஆனால், இந்த அறிவியல் தொழில்நுட்ப காலத்தில் மாட்டோடு மல்லுக்கு நிற்க எந்த அவசியமும் இல்லை. மாட்டை வசப்படுத்த ஆயிரம் வழிகள் இருக்கின்றன. மாட்டிற்கும், நமக்கும் என்ன பொருத்தம்? அதன் உருவ அளவு என்ன? நமது உருவ அளவு என்ன? அதன் கொம்புகள், வலுவான கால்கள் என்ன? நமது உடலமைப்பு என்ன? அதன் பலம் என்ன? நமது பலம் என்ன? அதோடு மோதி நமது பலத்தை நிரூபிக்க...

‘பசுவதைத் தடை’ச் சட்டத்தின் அரசியல் பின்னணி

பசுவதைத் தடைச் சட்டத்தின் அரசியல் வரலாறு குறித்த சுருக்கமான பின்னணி: ட           ஆக. 21, 2003 – வேளாண் அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் பசுவதை தடை மசோதா அறிமுகம் செய்ய முயன்றார். கூட்டணி கட்சிகளான தி.மு.க., பா.ம.க., தெலுங்கு தேசம் எதிர்த்தன. காங்கிரசும் எதிர்க்கவில்லை; அ.இ.அ.தி.மு.க.வும் எதிர்க்கவில்லை. ட           1924இல் காந்தி இவ்வாறு எழுதினார்: “இந்துக்கள் இந்தியாவில் விரும்புவது சுயராஜ்யமேயன்றி இந்து இராஜ்யம் அல்ல; இந்து இராஜ்யமாக இருந்த போதும் சகிப்புத் தன்மை அதன் அம்சமாக இருந்தால், அங்கே முஸ்லிம், கிறிஸ்தவர்களுக்கு இடம் உண்டு. கட்டாயப் படுத்தி பசுவதையை நிறுத்தாமல், கிறிஸ்தவர், முஸ்லிம், பிறரும் தாங்களாகவே முன் வந்து பசுவதையை நிறுத்தினால், அது இந்து மதத்தின் பெருமைக்கு சான்றாக இருக்கும். ஆகவே இந்து ராஜ்யம் குறித்து கனவு காண்பதுகூடத்  தேசத் துரோகம் என்றே நான் கூறுவேன்” என்றார் காந்தி. ட           சங்பரிவாரங்கள், ‘கோமாதா பக்தி’யை முஸ்லிம், கிறிஸ்தவ வெறுப்பு அரசியலுக்கே...

தமிழர் புத்தாண்டு தை முதல் நாளே! தமிழர் இல்லந்தோறும் விழா எடுப்போம்!

தமிழக முதல்வர் ஜெயலலிதா-இந்துத்துவ உணர்வோடு தமிழ்ப் புத்தாண்டை சித்திரைக்கு மாற்றினாலும் தமிழர் புத்தாண்டு தை முதல் நாளே என்பதை ஆணித்தரமாக விளக்கும் கட்டுரை இது. கட்டுரை ஆசிரியர் ‘சோதிடப் புரட்டு’ நூலை எழுதிய கனடா வாழ் சிந்தனையாளர் நக்கீரன். பஞ்சாங்கத்தில் உள்ள 60 ஆண்டுகளில் ஒன்றேனும் தமிழில் இல்லை. தமிழன் என்று தன்னைச் சொல்லிக் கொள்ளும் தன்மானம் உள்ள ஒருவனாவது அவற்றைத் தமிழ் ஆண்டு என்று ஒப்புக் கொள்ள மாட்டான். இந்த அறுபது ஆண்டுகளை கடவுளர்களோடு தொடர்புபடுத்தி, ஆபாசம் வழியும் கதைகளையும் புராணிகர்கள் உருவாக்கி விட்டார்கள். நாரதரும் கிருஷ்ணனும் உறவு கொண்டு பெற்ற குழந்தைகளே ‘பிரபவ முதல் அட்சய முடிய 60 ஆண்டுகள்’ என்று தமிழ்க் கலை களஞ்சியமான ‘அபிதான சிந்தாமணி’ கூறுகிறது. இதற்குப் புராண ஆதாரங்கள் வேறு உள்ளன. இந்த 60 ஆண்டுகளுக்கு மேல் 61 ஆவது ஆண்டைக் குறிக்கப் பெயர் இல்லை. மீண்டும் ‘பிரபவ’ ஆண்டிலிருந்து தான் தொடங்க...

சைவத்தையும் ஆரியத்தையும் எதிர்த்தவர் வள்ளலார்

திராவிடர் விடுதலைக் கழகம் கடந்த 24.12.2016, பெரியார் நினைவு நாளன்று “திரு மூலர், வள்ளலார், பெரியார் வழியில் – வேத மரபு மறுப்பு மாநாட்டை” நடத்தியது. “வேத மரபை மறுப்போம்! வெகு மக்கள் உரிமைகளை மீட்போம்!” என்ற முழக்கத்துடன் கூட்டப்பட்ட அம்மாநாட்டில் தமிழ்ச் சூழலில் வேத மரபு மறுப்பு என்பது எத்தனை ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதை விளக்கும் பல்வேறு தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தப்பட்டன. திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நெறியாள்கை யில் காலையில் நடந்த கருத்தரங்கத்தில் “வள்ளலாரின் சன்மார்க்கத்தில் வேத மரபு மறுப்பு” என்ற தலைப்பில் பூங்குழலி ஆற்றிய உரையின் எழுத்து வடிவம். வள்ளலார் கடவுள் மறுப்பாளர் அல்ல. ஆனால் கடவுள் மறுப்பாளரான பெரியாரே அங்கீகரித்து பதிப்பித்துப் பரப்பக் கூடிய அளவுக்கு வள்ளலாரின் ஆறாம் திருமுறையில் என்னதான் இருந்தது என்ற கேள்வி எழுந்தது. அதைப் புரிந்து கொள்வதற்கு முன் நாம் வள்ளலார் வாழ்ந்த காலத்தின் சமயச் சூழலைப்...

தோழர்களின் தொய்வில்லா களப்பணிகளோடு 2016இல் கழகம் பதித்த சுவடுகள்

தோழர்களின் தொய்வில்லா களப்பணிகளோடு 2016இல் கழகம் பதித்த சுவடுகள்

பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடுகள்; பெரியார் பயிலரங்கங்கள்; மூட நம்பிக்கை களுக்கு எதிரான பரப்புரைப் பயணம்; ஜாதி ஆணவக் கொலை எதிர்ப்பு; கண்டன ஆர்ப் பாட்டங்கள்; கைதுகள் என்று 2016ஆம் ஆண்டு திராவிடர் விடுதலைக் கழகம் தொய்வின்றி களப்பணியாற்றியது. சுயநலம், சந்தர்ப்பவாத அரசியல் மேலோங்கி நிற்கும் சமூக சூழலில், பெரியார் இலட்சியங்களை ஏற்று ஆயிரக்கணக்கான இளைஞர்கள் – சமுதாயக் கவலையோடு உழைப்பு, நேரம், சொந்தப் பொருளை செலவிட்டு, பெரியார் கொள்கைப் பணிகளுக்காக தங்களை அர்ப் பணித்திருக்கிறார்கள். இத்தகைய தோழர் களின் கொள்கை உணர்வும் களப் பணிகளுமே திராவிடர் விடுதலைக் கழகத்தின் உண்மை யான வலிமை என்று பெருமையோடு,  கடந்த ஆண்டில் கழகத்தின் களப்பணிகள் குறித்த ஒரு சுருக்கமான தொகுப்பை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. ஜனவரி 24 அன்று திருச்சியில் கழக செயலவை கூடியது. ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு தோழர்கள் திரட்டிய சந்தாக்களை வழங்கினர். அய்தராபாத் பல்கலைக்கழகத்தில் உயர்...

இறை நம்பிக்கையாளர்களையும் இன உணர்வாளர்களையும் இணைத்தது – சேலம் மாநாடு

வேத மரபுக்கு எதிராகப் போர்க்குரல்! இந்து மதத்துக்கு தாங்களே உரிமைக் குரியவர்கள் போல் வெகுமக்களை ஏமாற்றி வந்த பார்ப்பனிய மிரட்டலுக்கு பதிலடி தந்துள்ளது சேலம் மாநாடு. வேத மரபினை மறுப்போம், வெகு மக்கள் உரிமைகளை மீட்போம் என்கிற பார்ப்பன இந்துத்துவ எதிர்ப்பு இலட்சிய முழக்கத்தை முன் வைத்து சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சித்தர்கள், வள்ளலார், பெரியார் அடிச்சுவட்டில் வேத மரபு மறுப்பு மாநாடு டிசம்பர் 24, 2016 அன்று சேலம் போஸ் மைதானம் அருகில் உள்ள நேரு கலையரங்கத்தில் இசை நிகழ்ச்சி, கருத்தரங்கம், வீதிநாடகம், கழகத் தலைவருக்கு பிரச்சார ஊர்தி வழங்குதல், புரட்சி பெரியார் முழக்க சந்தா வழங்குதல் கழக கட்டமைப்பு நிதி மற்றும் பொது மாநாடு எழுச்சியுடன் நடைப்பெற்றது. முன்னதாக தந்தை பெரியாரின் 40ஆவது நினைவு நாளை முன்னிட்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகத் தலைவர் கொளத்தூர்...

மோடி அறிவிப்பால் கறுப்புப் பணம் ஒழிந்து விடுமா? பேராசிரியர் ஜெயரஞ்சன்

சராசரியாக ஆண்டுக்கு ரூ.35 லட்சம் கோடி கள்ளப் பணம் பன்னாட்டு வர்த்தகம் வாயிலாக வெளியேறுகிறது கறுப்புப் பணம் உள்நாட்டில் முதலீடு செய்யப்படுவது மிகவும் சொற்பம். இதுகுறித்து ஆய்வு நடத்திய தேவ்கர் என்ற பொருளாதார வல்லுநர், 2010ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட ‘The Driver and Dynamics of Illicit Financial Flows’ என்ற நெடிய ஆய்வுக் கட்டுரையில், இந்திய நாட்டில் உருவாகும் கறுப்புப் பணத்தில் ஐந்தில் ஒரு பகுதி மட்டுமே உள்நாட்டு சொத்துகளில் முதலீடு செய்யப்படு வதாக நிறுவுகிறார். மீதமுள்ள கறுப்புப் பணம் அனைத்தும் வெளிநாடுகளில்தான் முதலீடு செய்யப்படு கிறது. இத்தகைய பணம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குத்தான் பெருமளவில் சென்றடைகின்றன என்பதையும் அவர் பொதுவெளியில் உள்ள புள்ளி விவரங்களைப் பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளார். இவ்வாறு வெளியேறும் பணத்தின் அளவின்படி பார்த்தால் இந்தியா, உலகிலேயே மூன்றாவது இடத்தில் உள்ளது. மிக முக்கியமாக, அவரது ஆய்வின் வாயிலாக நாம் நமது நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட கள்ளப்...

வேத மரபு மறுப்பாளர்கள் ஒன்று கூடுகிறார்கள்! ‘களை’ கட்டுகிறது சேலம் மாநாடு!

பூமியில் இருந்த கடவுள் களை விண்ணுலக கடவுள் களாக மாற்றிய பார்ப்பனர்கள், அந்த கடவுள்களிடம் நேரடி தொடர்புக்கு ‘மந்திர சக்தி’, ‘யாகம்’, ‘சடங்கு’களை சமூகத் தில் திணித்த வரலாற்றை கடந்த இதழில்  எழுதியிருந்தோம். பார்ப்பனர்களின் சடங்குகளும் யாகங்களும் எல்லை மீறிய போது மக்கள் வெறுக்கும் நிலை உருவானது. அப்போது இந்த புரோகித சடங்குகளுக்கு எதிர்ப்புகள் உருவாகத் தொடங்கின. எந்த வகையான எதிர்ப்புகள்? சடங்கு, யாகங்களை கை விட்டு, காடுகளுக்குச் சென்று உடலை வருத்திக் கொண்டு, ‘ஆன்ம பலம்’ பெற்று வாழ்வின் துயரங்களுக்கு விடை காண முடியும் என்று நம்பிய சிலர், காடுகளுக்குப் போனார்கள். சடங்கு, யாகங்களை எதிர்த்தார்கள். யாகம் செய்வதைவிட ‘தியானமே’ சரியானது என்பது இவர்கள் கொள்கை. இதற்காக காடுகளுக்கு சென்றவர்கள் உருவாக்கிய சிந்தனைதான் ‘ஆரண்யகம்’, யாக மோசடிகளை புரோகித நயவஞ்சகத்தை ‘ஆரண்யகம்’ தோலுரித்தது. (யாகம் – சடங்குகளுக்கு எதிராக உருவானதே தியானம். இப்போது பார்ப்பனியம் ‘தியான’த்தையும், வேத மரபோடு இணைத்துக்...

இந்துவாக சாக மாட்டேன்!

இந்துவாக சாக மாட்டேன்!

கெடுவாய்ப்பாக, நான் ஒரு தீண்டத்தகாத இந்துவாகப் பிறந்து விட்டேன். அதைத் தடுப்பது என் சக்திக்கு அப்பாற்பட்டது. ஆனால், அருவருக்கத்தக்க இழிவான நிலையில் வாழ்வதை என்னால் தடுத்துக் கொள்ள முடியும். எனவே நான் உறுதியாகக் கூறுகிறேன்: நான் ஓர் இந்துவாக சாக மாட்டேன். தனித்து இருந்த ஒரு நீர்த் துளி கடலிலே கலந்து, கரைந்து தன் இருத்தலைத் தொலைப்பது போல் ஒரு தனி மனிதன் சமூகத்தில் கரைந்து தன் முழுமையைத் தொலைத்துவிடுவதில்லை. மனிதன் சுதந்திரமானவன். அவன் இந்த சமூகத் திற்குத் தொண்டு செய்வதற்காகப் பிறக்க வில்லை. தான் மேம்பாடு அடைவதற் காகவே பிறந்தான். இந்தக் கருத்து புரிந்து கொள்ளப் பட்டதாலேயே வளர்ந்த நாடுகளி லெல்லாம் ஒரு மனிதன் மற்றொரு மனிதனை அடிமைப்படுத்திவிட முடிவ தில்லை. தனி மனிதனுக்கு எந்தவொரு பாத்திரமும் வழங்காத மதம் எனக்கு ஏற்புடையதில்லை. அதனால் தனி மனிதனை ஏற்றுக்கொள்ளாத இந்து மதம் எனக்கு ஏற்புடையதாயில்லை. ஒரு வகுப்பைச் சேர்ந்தவர்கள் மட்டுமே...

காவல்துறை தடைகளைத் தகர்த்து புலியூரில் ‘மாவீரர் நாள்’

தமிழீழ விடுதலைக்காக ஆயுதப் போராட்டங் களில் வீரச்சாவை தழுவிய வீரர்களுக்கு வணக்கம் செலுத்தும் மாவீரர் நாள் நவம்பர் 27 அன்று புலம்பெயர்ந்த நாடுகளில் உணர்வுபூர்வமாக 1989ஆம் ஆண்டு முதல் நிகழ்ந்து வருகிறது. 1990ஆம் ஆண்டிலிருந்து மேட்டூர் அருகே உள்ள கொளத்தூர் புலியூர் பிரிவிலும் ‘மாவீரர் நாள்’ நிகழ்வு நடந்து வருகிறது. இந்தியாவில் முதன்முதலாக புலிகள் 1984லிருந்து 1986 முடிய ஆயுதப் பயிற்சி எடுத்த பகுதி இது என்பது குறிப்பிடத்தக்கது. தோழர் கொளத்தூர் மணி அவர்களுக்கு சொந்தமான இடத்தில் மூன்று ஆண்டுகள் நடந்த இந்த பயிற்சியில்தான் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மூத்த தலைவர்கள் பயிற்சி பெற்றார்கள். மேதகு பிரபாகரன், இந்த பயிற்சித் தளத்துக்கு அவ்வப்போது வந்து அறிவுறுத்தல்களை வழங்கி வந்தார். விடுதலைப் புலிகளின் முன்னணி தளபதி பொன்னம்மான், போராளிகளுக்கு பயிற்சிகளை அளித்தார். களத்தில் வீரமரணமடைந்த அவரது நினைவாக அப்பகுதியில் பேருந்து நிறுத்தத்தில் நினைவு நிழற்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. புலிகள் பயிற்சி எடுத்த பகுதிக்கு ‘புலியூர்’...

நவ.27 – மாவீரர் நினைவு நாள் தேசியத் தலைவரின் வழிகாட்டும் உரைகள்!

1989ஆம் ஆண்டு இந்திய இராணுவம், ஈழத்தில் தமிழர்களை கொன்றொழித்துக் கொண்டிருந்த காலகட்டம். அப்போது மேதகு பிரபாகரன், இந்திய இராணுவத்தின் தீவிரத் தேடுதலில் இருந்தார். தமிழீழக் காடு ஒன்றில் தலைமறைவாக இருந்த பிரபாகரன், அங்கிருந்து தான் முதன்முதலாக ‘மாவீரர் நாள்’ திட்டத்தை அறிவித்தார். “இந்த வருடத்திலிருந்து வீரச்சாவு அடைந்த எல்லோரையும் மொத்தமாக ஒரு வருடத்தில் நினைவு கூர்ந்த அந்த நாளையே மாவீரர் நாளாக பிரகடனப்படுத்தி உள்ளோம். அதற்கு இன்னொரு காரணமும் உண்டு. அதாவது எங்களது விடுதலைப் போராளிகளில் முதலாவது வீரச்சாவு அடைந்த சங்கரின் நினைவு தினமான இன்று அந்த மாவீரர் நாளை நாங்கள் பிரகடனப்படுத்தி உள்ளோம். அத்தோடு வழமையாக மக்களில் ஒரு பழக்கம் உண்டு. உயர்ந்த பதவிகள், வசதியானவர்கள் இப்படிப் பட்டவர்களைத்தான் பெரிதாகப் பார்க்கும் பழக்கம் உண்டு. அதுபோல் எமது விடுதலை காலத்திலும் தலைவர்களை மட்டும் பிரித்துப் பார்த்து அவர்களது செய்கைகளை மட்டும் பெரிதாகப் பார்க்கக் கூடாது என்பதற்காகவும் எல்லா போராளிகளும் சமம்...

நவ.26 ஜாதி ஒழிப்பு வீரர்கள் நாளில்… உரத்து சிந்திப்போம்!

இளைய தலைமுறைக்கு ஒரு வரலாற்றுச் செய்தி. நவம்பர் 26, 1957 தமிழக வரலாற்றில் ஒரு முக்கிய நாள். அன்றுதான் ஜாதியை ஒழிக்க வேண்டும் என்ற புரட்சிகரப் போராட்டம் நடந்தது. போராட்டத்தை அறிவித்தவர் பெரியார். அது என்ன போராட்டம்? இந்தியாவின் அரசியல் சட்டத்தில் ஜாதியைப் பாதுகாக்கும் அரசியல் சட்டப் பிரிவுகளை தீ வைத்து எரிக்கும் போராட்டம். அப்படி ஒரு போராட்டம் நடந்ததா என்று வியப்படையாதீர்கள். உண்மையில் நடந்தது. அரசியல் சட்டம் தமிழ்நாடு முழுதும் வீதிகளில் எரிக்கப்பட்டது. பெரியார் இயக்கத்தின் தொண்டர்கள் 10000 பேர் எரித்தார்கள். கைதானவர்கள் 3000க்கும் மேல். அவர்களில் பெண்கள், ஆண்களும் சிறுவர்களும் இருந்தார்கள். 3 மாதத்திலிருந்து 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனைப் பெற்றார்கள். மற்றொரு வியப்பான செய்தி தெரியுமா? இவர்கள் அனைவரும் பிணையில் வெளிவர மனு போட வில்லை; எதிர் வழக்காடவில்லை! “ஆம் சட்டத்தை எரித்தோம்; நீதிமன்றம் வழங்கும் தண்டனையை ஏற்கத் தயாராக வந்துள்ளோம்” என்று நெஞ்சு நிமிர்த்தி...

மாவீரர் நாள் கொளத்தூர் 2016 – காணொளிகள்

சேலம் மாவட்டத்தில் மேட்டூர் அருகே கொளத்தூர் பகுதியில், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தினர் பயிற்சி எடுத்த இடத்தில் தளபதி ரோய் நினைவிடமும், தளபதி பொன்னம்மான் நினைவாக அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்கூடமும் அமைந்துள்ள புலியூர் பகுதியில், ஒவ்வொரு வருடமும் பொதுமக்கள் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக மாவீரர் நாள் நிகழ்வு நடைபெறும். இந்த ஆண்டு 27-11-2016 அன்று முன்னால் அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன், கொளத்தூர் மணி, விடுதலை ராஜேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். யூ டியூப் வீடியோ லிங்க் மாவீரர் நாள் 2016 நிகழ்வு https://www.youtube.com/watch?v=chwrDdNQ8wg கொளத்தூர் மணி உரை https://www.youtube.com/watch?v=Y93bnQUde6A விடுதலை ராசேந்திரன் உரை https://www.youtube.com/watch?v=HrjlY09zLUc சுப்புலட்சுமி ஜெகதீசன் உரை https://www.youtube.com/watch?v=tF_n1Nv5gNE

ஜாதி ஒழிப்பு நாள் ! 1956 நவம்பர் 26 – துண்டறிக்கை

ஜாதி ஒழிப்பு நாள் ! 1956 நவம்பர் 26 – துண்டறிக்கை

(துண்டறிக்கை அச்சிட தோழர்கள் இக்கட்டுரையை பயன்படுத்திக்கொள்ள வேண்டுகிறோம்.) ஜாதி ஒழிப்பு நாள் ! 1957 நவம்பர் 26 3000 தோழர்கள் சிறையில் வாடிய மகத்தான வரலாறு. 1957 நவம்பர் 26இல் பெரியார் இயக்கம் ஜாதி ஒழிப்புக்காக சட்டத்தை எரித்த நாள். 3000 தோழர்கள் 6 மாதம் முதல் 3 ஆண்டு வரை சிறைத் தண்டனை பெற்றனர். அந்த நாள் நினைவாக சில வரலாற்றுக் குறிப்புகள். இன்றைக்கும் போர் வீரர்களின் நினைவுக் கல்வெட்டுகளில் அவர்களுடைய பெயர்கள் தெரியாத காரணத்தால் ‘பெயர் தெரியாமல் மரித்துப் போன போர்வீரர்கள்’ என்று எழுதப்படுவது வழக்கம். அதேபோல்பெரியார் நடத்திய ஜாதி ஒழிப்புக்கான அரசியல் சட்டஎரிப்புப் போரில் பங்கேற்று மாதக் கணக்கில் சிறைக்கொடுமைகளை அனுபவித்த பெயர் தெரியாத தோழர்கள்பலர் உண்டு. சட்ட எரிப்புப் போரில் பங்கேற்ற பெரியாரின் கருஞ்சட்டைத் தொண்டர்களின் உறுதிமிக்க தியாக வரலாற்றிலிருந்து சில செய்திகள்: • சிறையிலிருந்த தோழர் திருவாரூர் முத்துகிருட்டிணனின்மனைவிதான் அவரது கடையையும் குழந்தைகளையும் கவனித்துக் கொண்டார். காலராவினால் திடீரென முத்துகிருட்டிணன் மனைவி இறந்து...

‘இராம லீலா’வுக்கு எதிரான அசுரர்களின் கலகக் குரல்!

அறிவியல் ரீதியிலான ஆய்வுகளே இல்லாத காலத்திலேயே  பார்ப்பன புராணங்களை வாசித்து, தனது சொந்த புரிதலின் அடிப்படையில் அரசியல் உள்ளடக்கத்தை வழங்கியவர் பெரியார். பார்ப்பனியத்திற்கு எதிராகத் தமிழகத்தில் நடத்தப்பட்ட தாக்குதல் அறிவுத் தளத்தோடு நின்றுவிடவில்லை. மக்கள் மத்தியில் இயக்கங்களாக முன்னெடுத்துச் செல்லப்பட்டன. ‘தேவ-அசுர’ப் பேராட்டத்தில் பார்ப்பனியத்துக்கு எதிரான ‘அசுர மரபு’ இன்னும் உயிர்த் துடிப்போடு பழங்குடி மக்களிடம் இருப்பதையும், பார்ப்பன மரபுக்கு எதிராக தமிழ்நாட்டில் பெரியார் இயக்கம் நடத்திய மக்கள் இயக்கங்களையும் வரலாற்று பின்புலத்தோடு, படம் பிடிக்கிறது இக்கட்டுரை. அமர், அசுர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள். ஜார்கண்ட் மாநில பழங்குடியினரிலேயே சிறுபான்மை யிலும் சிறுபான்மையினரான அசுர் பழங்குடியினத்த வரின் மொத்த மக்கள் தொகை சுமார் 26,500. அம் மக்கள் இன்றும் தங்களை அசுர வாரிசுகளாகக் கருதிக்  கொள்கின்றனர். அங்கே மகிஷாகர், அசுர்களின் மூதாதையர்., மகிஷன், இராவணன், சம்பூகன் போன்றோரின் துண்டிக்கப்பட்ட தலையிலிருந்த வழிந்தோடிய குருதி, தொன்மங்களாகவும் இனக் குழுச் சடங்குகளாகவும் இன்றும் பழங்குடி மக்களின்...

சங்பரிவாரங்கள் திப்பு சுல்தானை எதிர்ப்பது ஏன்?

கர்நாடக மாநில அரசு ‘திப்பு சுல்தான் ஜெயந்தி’ என்று பிறந்த நாள் விழாவை ஆண்டுதோறும் நடத்துகிறது. இதற்கு பா.ஜ.க. சங்பரிவாரங்கள் எதிர்ப்பு தெரிவித்து வன்முறையில் இறங்கி வருகின்றன. திப்புசுல்தான் மீது இவர்களுக்கு ஏன் இவ்வளவு கோபம்? நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 2012 பிற்பகுதியில் பாஜகவிலிருந்து வெளியேறி கர்நாடக ஜனதா பக்சா கட்சி யினை துவக்கிய எடியூரப்பா, திப்பு சுல்தான் மாடல் தலைப்பாகையை அணிந்து கொண்டு கையில் வாளுடன் முஸ்லிம் மக்கள் மத்தியில் வாக்கு சேகரித்தார். இரண்டு ஆண்டுகள் கழித்து பா.ஜ.க.வில் சேர்ந்து மீண்டும்அதன் தலைவராகி தற்போது நவம்பர் 10ல் நடைபெற்ற திப்பு ஜெயந்தி விழா எதிர்ப்பில் முன்னணியில் உள்ளார். மைசூர் மன்னரான திப்பு சுல்தான் (1750-1799) சமூக அடையாளங்களைக் கடந்து கலாச்சார நிகழ்வுகளில் ஒவ்வொருவருடைய உருவ மாகத் தோற்றமளிக்கிறார். மைசூரின் வேங்கையாக திப்பு சுல்தான் கருதப்பட்டார். 19ஆம்நூற்றாண்டின் கன்னட நாட்டுப்புற பாடல்களில், போர்க்களத்தில் மரணமடைந்த திப்புவின்மரணம் பாடல்களாக வலம் வந்தன. கர்நாடகாவின்...

வங்கி வேலைவாய்ப்பில் திட்டமிட்டு வஞ்சிக்கப்படும் தமிழ் நாடு ! ஆதாரங்கள் !

பாரத ஸ்டேட் வங்கியில் (state bank of india) காலியாக உள்ள பணிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டுள்ளது. இத்தேர்வில் தமிழக இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை திட்டமிட்டே தடுக்கும் வேலை நடந்துள்ளது. அதனை நீரூபிக்கும் ஆவணங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்த அநீதி குறித்து கழக ஏடான புரட்சிப் பெரியார் முழக்கம் 10.11.2016 இதழில் தலையங்கம் வந்துள்ளது.அதனை படிக்க : https://www.facebook.com/dvk12/photos/a.1630398280577399.1073741828.1630392030578024/1835861566697735/?type=3 ஆதாரங்கள் : 1) முதலில் வந்த அறிவிப்பில் தமிழ்நாட்டில் இத்தேர்வை தமிழில் மட்டுமே எழுதவேண்டும் என அறிவிக்கப்பட்டது. மேலும் விண்ணப்பங்கள் பெற கடைசி நாள் என 25.04.2016 என அறிவிக்கப்பட்டது. 2)அறிவிப்பில் திருத்தம் என இரண்டாவது ஒரு அறிவிப்பை 20.04.2016 அன்று வங்கி வெளியிடுகிறது. விண்ணப்பம் பெற கடைசி நாளாக 28.04.2016 என தேதி நீட்டிக்கப்படுகிறது. 3) திருத்தப்பட்ட அறிவிப்பில் தமிழ்நாட்டில் தமிழில் மட்டும் தேர்வு எழுதவேண்டும் என்பதை திருத்தி ஆங்கிலத்திலும் எழுதலாம் என மாற்றப்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டும்தான் தேர்வு மொழியாக தமிழ், ஆங்கிலம்...

தென்மண்டல ஐ.ஜி.அலுவலக முற்றுகை – ஆணவக்கொலை மதுரை 03112016

ஆணவக் கொலைகளைத்  தடுக்கத்  தவறிய காவல்துறைக் கண்டித்து, தென்மண்டல காவக்துறை ஐ.ஜி. அலுவலகத்தை முற்றுகை இடும் போராட்டம்  3-11-2016 அன்று, காலை 11-00 மணியளவில் நடைபெற்றது. மதுரை, புதூர் பேருந்து நிலையத்தில் அணிதிரண்ட தோழர்களிடையே கூட்டமைப்பின் தலைவர்கள் உரையாற்றினர். போராட்ட ஒருங்கிணைப்பாளர்  தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் நாகை.திருவள்ளுவன் நோக்க உரையாற்றினார். திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சி.பி.எம்.எல். மக்கள் விடுதலைக் கட்சியின் மீ.த.பாண்டியன், த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கோவை இராமக்கிரிட்டிணன், மனிதநேய மக்கள் கட்சிப் பொதுச்செயலாளர் அப்துல் சமது, எச்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் தெகலான் பாகவி, ஆதிதமிழர்ப் பேரவைத் தலைவர் இரா.அதியமான், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் புதுக்கோட்டை செரீப், மக்கள் ஜனநாயக முன்னேஏற்றக் கழகப் பொதுச் செய்லாளர் பிரிசெல்லா பாண்டியன், இளந்தமிழகம் செந்தில், மே 17 இயக்கம் திருமுருகன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழ்நேசன், விடுதலைக் கட்சி துணைப் பொதுச்செயலாளர் ஆற்றலரசு போன்றோர் உரையாற்றிய பின்னர் ஐ.ஜி...

‘தீபாவளி’ புனிதமா? வணிகமா?

இந்து மதப் பண்டிகையில் ஒன்றான தீபாவளி கொண்டாட்டம் தேவையா? இந்தத் தீபாவளி கதை – தமிழர்களை அழித்தொழித்ததைக் கொண்டாடச் சொல்லும் கதை என்பது ஒன்று. இதையும் தாண்டி இதில் அடங்கியுள்ள கேடுகள் என்ன? உயிருக்கு ஆபத்தான நச்சுகளைக் கொண்டு தயாரிக்கப்படும் பட்டாசு தொழிற்சாலைகளில் குழந்தைத் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். அந்த பிஞ்சுக் கரங்கள் வெந்து, நோய்களை சுமந்து வாழ்க்கையை தொலைக் கின்றன. பட்டாசு ஆலைகளில் பாதுகாப்பு இல்லை. வெடி விபத்துக்குள்ளாகி, ஆண்-பெண் தொழிலாளர்கள் உயிர்ப்பலி ஆகிறார்கள். வணிக நிறுவனங்கள் இந்தப் பண்டிகையை நுகர்வோர் கலாச்சாரமாக்கி பொருள்களை வாங்கிக் குவிக்கத் தூண்டுகின்றனர். தள்ளுபடிகள் அறிவிக்கப்படுகின்றன. எண்ணெய் தேய்த்துக் குளிக்கச் சொன்ன ‘மகாவிஷ்ணு’, தள்ளுபடி விலையில் மிக்சி, கிரைண்டர், குளிர்சாதனப் பெட்டிகள், 4ஜி அலைபேசிகளை வாங்கச் சொன்னாரா? இது மதத்தின் புனிதமா? வர்த்தகத் தந்திரமா? புரிந்து கொள்ளுங்கள். மதம், வர்த்தக சந்தையுடன் இணைக்கப்பட்டுவிட்டது. எனவே மதப்பண்டிகை ‘வர்த்தகத் திருவிழா’ என்ற வடிவமெடுத்துள்ளது. இனி ‘நரகாசுரனை’ கொன்ற...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார் ஆந்திராவில் ‘இராவண விழா’

ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினத்தில் அகில இந்திய தலித் உரிமைகள் அமைப்பு ஆண்டுதோறும் இராவணன் விழாவை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு ‘இராவண விழா’ அக்டோபர் 9ஆம் தேதி விசாகப்பட்டினத்திலுள்ள ‘அம்பேத்கர் பவனில்’ எழுச்சி யுடன் நடந்தது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்பு விருந் தினராகப் பங்கேற்று, தமிழ் நாட்டில் பெரியார் நடத்திய இராமாயண எதிர்ப்பு இயக்கங்களின் வரலாறுகளையும் ‘இராமன்’ எரிப்புப் போராட்டம் மற்றும் ‘இராமலீலா’வுக்கு எதிராக நடத்திய ‘இராவண லீலா’ நிகழ்வுகளையும் விவரித்து விரிவாக ஆங்கிலத்தில் பேசினார். கழகத் தலைவர் உரையை தெலுங்கு மொழியில் பேராசிரியர் பிரக்ஞா மொழி பெயர்த்துக் கூறியபோது கூட்டத்தினர் பலத்த கரவொலி எழுப்பி வரவேற்றனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையின் சுருக்கம். “இராம லீலா நடைபெறும் தருணத்தில் இராவணனின் மேன்மையைக் குறித்து பேச இங்கு கூடியிருக்கும் நம்மிடையே மூன்று கேள்விகள் எழுகின்றன. முதலாவதாக, இராமாயணம் என்பது வெறுமனே ஒரு கற்பனைக் கதை மட்டுமே என்பதை...

கோட்சேக்கு ஆர்.எஸ்.எஸ். தொடர்பு இல்லையா?

காந்தியைக் கொன்றது ஆர்.எஸ்.எஸ்.  என்று ராகுல் காந்தி பேசியதற்காக கொதித்தெழுந்து நீதிமன்றம் போனார்கள். ஆனால் கோட்சேவுக்கும் ஆர்.எஸ்.எஸ்.சுக்கும் உள்ள தொடர்பை இவர்களால் மறுக்க முடியுமா? பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் பார்வையிலிருந்து மாறாமல் இருந்துகொண்டே காந்தியின் புகழ்பாடுவது ஒரு கலைதான். இந்தக் கலையைத்தான் செழுமைப்படுத்திக் கொண்டிருக்கிறது ஆர்.எஸ்.எஸ். தலைமையிலான சங்பரிவாரம். மகாத்மா காந்தியின் படுகொலை உலகத்தில் ஏற்படுத்திய அதிர்ச்சியும் கோபமும் சோகமும் சூழ்ந்த சூழலில் எடுக்கப்பட்ட ஒரு அரசியல் தந்திர நடவடிக்கைதான் இது. ஆர்.எஸ்.எஸ். அமைப்புக்கும் தனக்கும் இருந்த தொடர்பைக் கோட்ஸே துண்டித்துக் கொண்டார் என்றுதான் பா.ஜ.க. தலைவர்களும் அதன் பழைய அவதாரமான ஜனசங்கத் தலைவர்களும் கூறிவந்தனர், கூறிவருகின்றனர். பிரதமர் பதவிக்கு ஆசைப்பட்ட அத்வானியும் இதைத்தான் கூறினார். அவருக்கு உடனடியாக மறுப்பு தெரிவித்துக் கண்டித்தவர் நாதுராம்  கோட்ஸேயின் தம்பி கோபால் கோட்ஸேதான். இவரும் காந்தி கொலைவழக்கில் தண்டிக்கப்பட்டவர். தான் எழுதிய ‘நான் ஏன் காந்தியைக் கொன்றேன்’ என்ற புத்தக வெளியீட்டு விழாவில் டிசம்பர் 1993...

ஈழத்தில், மீண்டும் எழுகிறார்கள் தமிழர்கள்!

யாழ்ப்பாணத்தில் செப்.24 அன்று ‘எழுக தமிழ்’ என்ற எழுச்சிப் பேரணியை பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் திரண்டு நடத்தியிருக்கிறார்கள். வடக்கு மாகாண முதல்வர் விக்னேசுவரன் உருவாக்கிய அரசியல் சார்பற்ற ‘தமிழ் மாநிலக் குழு’ என்ற அமைப்பின் சார்பில் அவரே தலைமையேற்று வழி நடத்திய பேரணி இது. இதில் ஈபி.ஆர்.எல்.எஃப். டெலோ, புளோட் உள்ளிட்ட அமைப்புகளின்  அரசியல் பிரிவுகளைச் சார்ந்த அனைவரும் பங்கேற்றனர். தமிழ் தேசிய கூட்டணியில் சம்பந்தம் தலைமை யிலான ஒரு பிரிவினர் மட்டும் பங்கேற்க வில்லை. 2009 முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்குப் பிறகு மக்கள் ஆளும் சிங்களப் பேரினவாத அரசை எதிர்த்து வெளிப் படையாக போர்க்குரல் எழுப்பி வெளியே வந்திருக்கிறார்கள் என்ற அளவில் இந்தப் பேரணி முக்கியத்துவம் பெறுகிறது. தமிழர் பகுதி இராணுவ ஆக்கிரமிப்பில் இருக்கும் சூழலில் மக்களின் இந்தப் போராட்டக் குரல் அந்த மக்களின் விடுதலை உணர்வுத் தீ அணைந்து விடவில்லை என்பதை உலகுக்கு அறிவித்திருக்கிறது. பேரணியின் இறுதியில் வெளியிடப்பட்டுள்ள பிரகடனங்கள் மிகவும் முக்கியமானதாகும்....

‘சுய குடும்ப நலன்’-‘சுய புகழ்ச்சி’ மறுத்த தலைவர்

பெரியார் பிறந்த நாளையொட்டி ‘தமிழ் இந்து’ நாளேடு, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனிடம் பெரியார் பற்றிய கட்டுரையை கேட்டிருந்தது. பொதுச் செயலாளர் எழுதிய கட்டுரை செப்.19 இதழில் மாற்றங்களுடன்  வெளியிட்டுள்ளது. அக்கட்டுரையின் முழு வடிவம் இங்கே பதிவு செய்யப்படுகிறது. நாதசுரக் குழாய் இருந்தால் ஊதியாக வேண்டும்; தவுலாக இருந்தால் அடிபட்டுத்தானாக வேண்டும் என்பதுபோல் எனக்கு தொண்டைகுரல் உள்ள வரை பேசியாக வேண்டும்; பிரசங்கம் செய்தாக வேண்டும்.  – பெரியார் அரசு மக்களுக்கு வழங்கிடும் ‘இலவசங்கள்’ தேவைதானா? என்ற சூடான விவாதங்கள் நடக்கின்றன. ஆனால் சமூகத்தையே அரித்துக் கொண்டிருக்கிற ஒரு ‘இலவசம்’ குறித்து விவாதங்கள் நடப்பது இல்லையே! மக்களின் பொதுச் சிந்தனைக்குள் கொண்டு வரப்படாத அந்த ‘இலவசம்’தான் ஜாதி; இந்த ஜாதியை எவரும் தியாகம் செய்தோ, உழைத்தோ, விலை கொடுத்தோ வாங்குகிறார்களா என்ன? இந்த ‘இலவசம்’ ஒரு சமூகத்தில் மனிதர்களின் நிலையை தீர்மானிக்கிறது. இந்த இலவசம் சமூகத்தின் பெரும் பகுதி மக்களின் கலாச்சார...

உருவமாக சித்தரிக்கும் புகைப்படம் போலியானது சீரடி சாய்பாபா ‘அற்புத’ மோசடிகள்

புட்டபர்த்தி சாய்பாபா மரணத்துக்குப் பிறகு சீரடி சாய்பாபா திட்டமிட்டு பிரபலமாக்கப்பட்டு வருகிறார். புட்டபர்த்தி உயிருடன் வா ழ்ந்த காலத்திலேயே ‘இவர் மோசடிக்காரர்; சீரடி பாபாதான் உண்மையான கடவுள் அவதாரம்’ என்று பேசியவர்களும் இருந்தார்கள். ‘பாபா’க்கள் என்ற மனிதர்களுக்கு, ‘கடவுள் அவதாரம்’ என்ற முகமூடியைப் போட்டு, அவர்கள் ‘அற்புதங்களை’ நிகழ்த்தும் ஆற்றல் பெற்றவர்கள் என்ற கதைகளை உருவாக்கிப் பரப்புகிறார்கள். ‘அவதாரங்கள்’ எடுத்த ‘கடவுள்கள்’ இனியும் வர மாட்டார்கள். மக்களிடம் அவதார மகிமைகளைத் தொடர்ந்து பேசி ஏமாற்ற முடியாது என்பதால், அவ்வப்போது சில மனிதர்களைப் பிடித்து ‘அவதாரமாக’ தோளில் தூக்கி ஆடும் செப்படி வித்தைகள் நடக்கின்றன. சில ஆண்டுகளுக்கு முன் ‘கல்கி’ அவதாரம் எடுத்து வந்திருக்கிறார் என்று ஒரு பார்ப்பனர் விளம்பரப்படுத்தப் பட்டார். ஒரு கட்டத்தில் அவர் மோசடிக்காரர் என்ற உண்மை அம்பலமான பிறகு, ‘கல்கி’ அவதாரக் கூச்சல், பஜனைகள் முடிவுக்கு வந்தன. துவாரக பீட பார்ப்பனர் சங்கரச்சாரி சுகபோனந்த சரசுவதி சில ஆண்டுகளுக்கு முன் சீரடி சாய்பாபாவை இந்துக்கள் வணங்கக் கூடாது; அவர்...

ஒரு களப் போராளியின் வரலாற்றுப் பக்கங்களிலிருந்து…

ஒரு களப் போராளியின் வரலாற்றுப் பக்கங்களிலிருந்து…

தூக்குத் தண்டனைக்குள்ளாகி ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டு முழு ஆயுள் சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலையானவர் தோழர் ஏ.ஜி. கஸ்தூரிரங்கன். பெரியார் இலட்சியங்களில் ஊன்றி நின்று, திராவிடர் விவசாய சங்கத்தை அப்பகுதியில் வழி நடத்தி, பிறகு மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து, தன் மீது திணிக்கப்பட்ட ‘முக்கொலை’ பொய் வழக்கில் அரசு அதிகாரத்தால் தண்டிக்கப்பட்டு விடுதலையாகி மீண்டும் திராவிடர்கழகத்தில் இணைந்து விவசாய சங்கத்தை வழி நடத்தி, இறுதியில் தமிழர் தன்மானப் பேரவையைத் தொடங்கி, 84ஆம் அகவையில் முடிவெய்தினார், தோழர் ஏ.ஜி.கே.! தங்களை  விளம்பரப்படுத்திக் கொள்ளாதவர்கள் இத்தகைய களப்போராளிகள். ஏ.ஜி.கே.வை சமூகப் போராளியாக்கிய இளம்பருவ அனுபவங்களை ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறது. பசு. கவுதமன், சாக்கோட்டை இளங்கோவன் முயற்சி – உழைப்பால் வெளி வந்திருக்கும் ‘ஏ.ஜி. கஸ்தூரிரங்கனின் நினைவுகளும் நிகழ்வுகளும்’ நூலிலிருந்து சில பகுதிகள்: நாகையை அடுத்த அந்தணப்பேட்டை  வயல்களால் சூழப்பட்ட இருண்ட கிராமம். சேறு, சகதியாகிக் காயக்கூடிய மண்பாதை. சில ஒற்றையடிப் பாதைகள். இருட்டு ஆரம்பித்தால்...

ஜோதிராவ் புலே – ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்

இந்துத்துவ தத்துவஞானி ராதாகிருஷ்ணன் கொண்டாடப்படுகிறார்; கல்லடிப்பட்டு கல்விக்கூடங்கள் நடத்திய புலே இருட்டில் இருக்கிறார்! முன்னாள் குடியரசுத் தலைவரான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான இன்று ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்படுகிறது. நல்ல ஆசிரியர் என்பதற்கான இலக்கணம் குறித்தும் அவர் மாணவர் சமுதாயத்துக்கு ஆற்ற வேண்டிய பணிகள் குறித்தும் அவரவர் பாணியில் கருத்துக்களை அள்ளித் தெளிக்கிறார்கள். ஊடகமும் சமூக ஊடகங்களும் நிரம்பி வழிகின்றன. எந்த ஊடகமும் முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆசிரியர் சமுதாயத்துக்கும் மாணவர் சமுதாயத்தும் என்ன செய்தார் என்று எப்போதுமே சொல்வதில்லை. ராதாகிருஷ்ணன் யார்? ஆந்திராவின் திருத்தணி அருகே உள்ள சர்வபள்ளி என்ற கிராமத்தில் ஒரு பார்ப்பன குடும்பத்தில் பிறந்தவர் ராதாகிருஷ்ணன். கிறித்துவ மிஷனரி பள்ளிகளிலும் சென்னை கிறித்துவ கல்லூரியிலும் படித்த அவர், இளம் வயதிலேயே பேராசிரியராக நியமிக்கப்பட்டவர். இதெல்லாம் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் நடந்தவை. இந்திய சுதந்திரப் போராட்டத்தின் ஊடாக இந்து சமூகம் சாதி படிநிலைகள் மூலம் அடிமைப் படுத்தி...

இஸ்லாமிய சிறைவாசிகளுக்கு மறுக்கப்படும் உரிமைகள்

தமிழ்நாட்டில் 14 ஆண்டுகளுக்குமேல் சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள், அவர்களுக்கான சட்டரீதியான உரிமைகள் மறுக்கப்பட்டு, ஒடுக்குமுறைக்கு உள்ளாகி வருகிறார்கள். இந்த சிறைவாசிகளின் உரிமைகளை வலியுறுத்தும் கருத்தரங்கம் கடந்த 20ஆம் தேதி சென்னை இக்ஷா அரங்கில் நடைபெற்றது. இந்திய சிறுபான்மை பாதுகாப்பு இயக்கம் ஏற்பாடு செய்த இக்கருத்தரங்கில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். அப்பாதுரை, மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் பேராசிரியர் சரசுவதி, பேராசிரியர் அ.மார்க்ஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய குழு உறுப்பினர் அ. சவுந்தர்ராசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல் ரஹ்மான் உள்ளிட்ட பலரும் பேசினர். இது குறித்து இந்திய சிறுபான்மை பாதுகாப்பு இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கை : அண்ணா பிறந்த நாளின்போது நீண்டகாலம் சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்யும் வழக்கத்தை தமிழக அரசு கடைப்பிடித்து வந்தது. இது உண்மையிலேயே பாராட்டத்தக்க செயலாகும். ஆனால், வழக்குக் காரணத்தைக் காட்டி தமிழக அரசு இந்த பழக்கத்தை சில ஆண்டுகளாக நிறுத்தி...

கழக தோழர்களுக்கு ஒரு அறிவிப்பு ! விநாயகர் சிலைகளை கரைப்பது தொடர்பாக காவல்துறை மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்திற்கு கோரிக்கை மனு

விநாயகர் சதுர்த்தி நிகழ்ச்சியில் சிலைகளை கரைப்பது குறித்து உச்சநீதி மன்றம் மற்றும் அரசின் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றின் உத்தரவுகளை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி கழகத்தின் சார்பில் தமிழகத்தின் மாவட்ட காவல்துறை மாசுக்கட்டுப்பாட்டுவாரியம் மற்றும் இந்து அறநிலையத்துறை ஆகிய அலுவலகங்களுக்கு கடிதங்கள் கொடுக்கப்பட உள்ளதை அறிவோம். அவ்விண்ணப்பங்களை தயாரிப்பதற்கான மாதிரிகள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அதனை தோழர்கள் தங்கள் பகுதிற்கேற்ப மாற்றியமைத்து அந்தந்த அலுவலங்களில் கொடுக்கும் படி கேட்டுக்கொள்கிறோம். மாவட்ட ஆட்சியாளர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் ஆகியோர் கோட்டாட்சியர், மாவட்ட துணை கண்காணிப்பாளர் மற்றும் வட்டாட்சியர், அந்தந்த பகுதி காவல் நிலையங்கள் ஆகியவற்றிலும் மேலும் மாவட்ட மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், இந்து அறநிலையத் துறை ஆகியவற்றிலும் கடிதங்கள் கொடுக்கும் படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இந்நிகழ்வை பதிவு செய்து கழக தலைமைக்கு செய்தியாக அனுப்பவும். அந்தந்த பகுதி நாளிதழ்களில் இச்செய்தியை இடம் பெற செய்வது இன்னும் சிறப்பானதாக இருக்கும். சிலை கரைப்பு குறித்து 2004 ஆம் ஆண்டு சென்னை உயர்...

‘விநாயகர்’ ஊர்வலங்களில் விதி மீறல்கள் தடுத்து நிறுத்த கழகம் களமிறங்கும்!

திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 12.8.2016 அன்று மாலை, சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற ‘அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரைப் பயணம்’ நிறைவு விழா பொதுக் கூட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்து நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: இந்திய அரசியலமைப்புச் சட்டம், குடிமக்களுக்கு பல அடிப்படை உரிமைகளை வழங்கியிருப்பதைப் போலவே அதன் 51ஏ பிரிவின்படி அடிப்படை கடமைகளையும் வரையறுத்துள்ளது. அறிவியல் மனப்பான்மை, மனித நேயம், ஆய்வு மனப்பான்மை, சீர்திருத்தம் ஆகியவற்றை வளர்த்தெடுப்பது என்பதை குடிமக்கள் அனைவரின் அடிப்படை கடமை என்று உள்பிரிவு ‘எச்’ (h) வலியுறுத்துகின்றது. இதனை வலியுறுத்தியே “நம்புங்கள் அறிவியலை! நம்பாதீர்கள் சாமியார்களை!” எனும் முழக்கத்தோடு அச்சம் போக்கும் அறிவியல் பரப்புரைப் பயணத்தை தமிழகத்தின் நான்கு முனைகளிலிருந்தும் திராவிடர் விடுதலைக் கழகம் மக்களின் பெரு வரவேற்போடும், ஆதரவோடும் நடத்தி முடித்துள்ளது. அரசியல் அமைப்புச் சட்டம் வலியுறுத்தும் அடிப்படை கடமைகளை நிறைவேற்றும் இப்பயணங்களுக்கு ஆதரவாக பாதுகாப்பு வழங்கியும் வந்த சிறு இடையூறுகளைக்...