சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் உரை (2) கலைஞரின் தனித்துவமான நிர்வாகத் திறன்
தம்மம் சிந்தனையாளர் பேரவை சார்பில் ‘கலைஞரின் பன்முக ஆளுமை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் செப்.8, 2018 மாலை 5 மணியளவில் பெரியார் திடலில் உள்ள மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது. விடுதலை இராசேந்திரன் உரையில் குறிப்பிட்ட தாவது: (சென்ற இதழ் தொடர்ச்சி) ‘முன்னேறிய ஜாதியினருக்கு இடஒதுக்கீடுகள் வேண்டாமா?’ என்று சட்டமன்றத்தில் எதிர்க் கட்சிகள் கேட்ட போது, கலைஞர் இப்படி பதில் கூறினார். ‘அழுக்குத் துணிகளைத்தான் சலவைக்குப் போட வேண்டும். ஏற்கனவே சலவை செய்து அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் துணிகளை சலவைக்குப் போட வேண்டிய தேவையில்லை” என்றார். 1971இல் கலைஞர் ஆட்சிக்கு வந்தவுடன், பெரியார் கோயில் கர்ப்பகிரகத்துக்குள் ‘சூத்திரர்கள்’ நுழைவதற்கு இருந்த தடையை எதிர்த்து, கர்ப்பக்கிரக நுழைவுப் போராட்டத்தை அறிவித்தார். போராட்ட வீரர்களின் பட்டியல் ‘விடுதலை’ ஏட்டில் வெளியிடப்பட்டு வந்தன. பெரியாரை சந்திக்க வந்த கலைஞர், ‘என்னுடைய ஆட்சி நடக்கும்போது, நீங்கள் போராடலாமா?’ என்று கேட்டார். “நான் எனது கடமையைச் செய்கிறேன்; நீங்கள் உங்கள்...
