Category: பெரியார் முழக்கம்

தொலைக்காட்சியில் சோதிடத்துக்கு தடை: கருநாடக முதல்வர் வலியுறுத்துகிறார்

தொலைக்காட்சியில் சோதிடத்துக்கு தடை: கருநாடக முதல்வர் வலியுறுத்துகிறார்

office 2010 key windows 7 key sale windows 10 home-key windows 10 education windows 10 pro key office 2016 key windows 10 key office 2013 key windows 7 key  Buy Windows 7  |  Sale Windows 7 Ultimate Keys   |  Windows 10 Home Key Sale  |  windows 8.1 key sale  |  Windows 10 Product Key Sale  |  Microsoft Office 2016 Serial Keys  |  Windows 7 Professional Download ISO  |  MS Office 2016 Key For Activation Latest Full Free Download  |  How to download and install the Microsoft Office 2016   |  Windows 10 Product Key [UPDATED]  |  Windows 7 Ultimate ISO download  |  Legit Windows 7 Product Key Online Store, PayPal...

இந்து முன்னணி சலசலப்புகளை முறியடித்து நம்பியூரில் நடந்த பரப்புரைப் பயண நிறைவு விழா

இந்து முன்னணி சலசலப்புகளை முறியடித்து நம்பியூரில் நடந்த பரப்புரைப் பயண நிறைவு விழா

office 2010 key windows 7 key sale windows 10 home-key windows 10 education windows 10 pro key office 2016 key windows 10 key office 2013 key windows 7 key  Buy Windows 7  |  Sale Windows 7 Ultimate Keys   |  Windows 10 Home Key Sale  |  windows 8.1 key sale  |  Windows 10 Product Key Sale  |  Microsoft Office 2016 Serial Keys  |  Windows 7 Professional Download ISO  |  MS Office 2016 Key For Activation Latest Full Free Download  |  How to download and install the Microsoft Office 2016   |  Windows 10 Product Key [UPDATED]  |  Windows 7 Ultimate ISO download  |  Legit Windows 7 Product Key Online Store, PayPal...

பெண்களை இழிவுபடுத்தும் ‘அய்யப்பன் பக்தி’

office 2010 key windows 7 key sale windows 10 home-key windows 10 education windows 10 pro key office 2016 key windows 10 key office 2013 key windows 7 key  Buy Windows 7  |  Sale Windows 7 Ultimate Keys   |  Windows 10 Home Key Sale  |  windows 8.1 key sale  |  Windows 10 Product Key Sale  |  Microsoft Office 2016 Serial Keys  |  Windows 7 Professional Download ISO  |  MS Office 2016 Key For Activation Latest Full Free Download  |  How to download and install the Microsoft Office 2016   |  Windows 10 Product Key [UPDATED]  |  Windows 7 Ultimate ISO download  |  Legit Windows 7 Product Key Online Store, PayPal...

இதுதான் பத்திரிகை நீதியா?

இதுதான் பத்திரிகை நீதியா?

‘தினத்தந்தி’ நாளேடு ‘சேரி’ இருக்க வேண்டும் என்று வெளிப்படையாக நியாயப்படுத்துகிறதா? ஒரு காலத்தில் இதே தீண்டாமைக்கு உள்ளாக் கப்பட்டிருந்த சமூகத்தைச் சார்ந்தவர்கள் நடத்தும் நாளேடு, இப்படி ஒரு செய்தியை வெளியிட லாமா? வன்மையாகக் கண்டிக்கிறோம். பெரியார் முழக்கம் 17122015 இதழ்

ஆச்சாரியார் அரசியலின் கைத்தடியே ம.பொ.சி. பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? (4) வாலாசா வல்லவன்

ஆச்சாரியார் அரசியலின் கைத்தடியே ம.பொ.சி. பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? (4) வாலாசா வல்லவன்

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. (சென்ற இதழ் தொடர்ச்சி.) ஆந்திர மாநில மசோதா விவாதத்தின் போது 15-7-1953 இல் சட்டசபையில் பேசிய விநாயகம் சித்தூர் பகுதியின் வரலாற்றை எடுத்துக் கூறிவிட்டு, “I cannot understand why the Government or the Members interested in the Andhara Bill should take objection. It  narrates  the history of the chittor district. After all it is a history of how the Tamillians were slowly  made to appear as Telugus in my parts.” “என்னுடைய பகுதியின் பிரச்சனையை அரசாங்கமோ, உறுப்பினர்களோ புரிந்து கொள்ள மறுப்பது ஏன் என்று எனக்குப் புரியவில்லை. என்னுடைய பகுதியில் தமிழர்கள்...

வினா… விடை…!

வினா… விடை…!

வெள்ளப் பாதிப்புக்குள்ளான இந்துக் கோயிலை இ°லாமியர்கள் துடைப்பத்தால் கூட்டி சுத்தப்படுத்தினார்கள். – செய்தி அதெப்படி சுத்தமாகும்? ‘தர்ப்பை’யுடன் வேத மந்திரம் ஓதி தீட்டுக் கழித்தால்தான் உண்மையான சுத்தம் வரும்! பம்பாயில் அகமதா நகரில் பிளாட்பாரத்தி லிருந்த ஷானி சிலையை ஒரு இளம் பெண் தடையை மீறி வழி பட்டதால் கோயிலில் பூஜை நடத்தி தூய்மைச் சடங்குகள் நடந்தன. – ‘இந்து செய்தி இந்துப் பெண்களை புண்படுத்துறாங்கப்பா… இந்து முன்னணிக்காரங்களே, ஓடி வாங்க…. சீரிரங்கம், நாமக்கல், திருப்பூரில் தீமைகள் நடப்பதற்கு காரணமாக இருந்ததாகக் கூறி இந்துக் கோயில்களை இடித்துத் தள்ள உத்தரவிட்ட தொல்பொருள் துறை ஆய்வாளருக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ். – செய்தி இந்த ஆய்வாளருக்கு ‘பாரத ரத்னா’ விருதே தரலாம்! மாட்டுக்கறி வைத்திருந்ததாகக் கூறி படுகொலை செய்யப்பட்ட முதியவர் முகம்மது அதிலாக் வாழ்ந்த பிஷாகா கிராமத்தில், கிராமம் தீட்டாகிவிட்டதை சுத்தப்படுத்த மாட்டு மூத்திரத்தைக் கொண்டு வீடுகளைக் கழுவினர். – ‘இந்து’ செய்தி மாட்டு சாணத்தையும்...

ஆகமம்

ஆகமம்

‘ஆகமம்’ என்பதன் பொருள் ‘ஒரு ஏற்பாடு’ என்பதுதானே ஒழிய அதற்கு வேறு பொருளொன்றும் இல்லை. ஏற்பாடு என்பவையெல்லாம் காலத்திற்கு, நிலைமைக்கு ஏற்றவைகளே ஒழிய முக்காலத்திற்கும் எல்லா சந்தர்ப்பங்களுக்கும் ஏற்றவையல்ல. மற்றும் எந்த ஏற்பாடும் மனிதனால் செய்யப்படுபவை. ஆகமம் என்னும் சொல்லைப் போலவே ‘அய்தீகம்’ என்னும் தன்மையும் உண்டு. அய்தீகம் என்பதற்குப் பொருள் ஆதார மில்லாமல் தொன்று தொட்டு நடந்துவரும், சொல்லி வரும் விஷயங்களுக்குச் சொல்லும் சொல்லாகும். – பெரியார் (‘விடுதலை’ 29.11.1969; தந்தை பெரியார் 92ஆவது பிறந்த நாள் மலர், 1970)

கர்ப்பகிரக ‘தீண்டாமை’யை மீண்டும் உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்

கர்ப்பகிரக ‘தீண்டாமை’யை மீண்டும் உறுதிப்படுத்தியது உச்சநீதிமன்றம்

தமிழகக் கோயில்களில் அர்ச்சகர்கள் நியமனம் குறித்து உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரஞ்சன் கோகாய், என்.வி. இரமணா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த நவம்.16, 2015இல் வழங்கிய 54 பக்க தீர்ப்பு, குழப்பங்களையே உருவாக்கியிருக்கிறது என்றே சொல்ல வேண்டும். வழக்கின் பின்னணி குறித்து சுருக்கமாக இப்படிக் கூறலாம். தமிழ்நாட்டில் ஆகமக் கோயில்களில் அர்ச்சகர்களாவதற்கு பரம்பரை அடிப்படையில் (அப்பா-மகன்-பேரன் என்று அடுத்தடுத்த வாரிசுகளாக) உரிமை உண்டு என்று 1959ஆம் ஆண்டு இந்து அறநிலையத் துறை சட்டம் ஏற்பு வழங்கியது. கோயில் கர்ப்பகிரகத்தில் கடவுளிடம் நெருங்கும் உரிமை பார்ப்பனருக்கு மட்டுமே உண்டு என்று கூறுவதன் வழியாக ஏனைய பார்ப்பனரல்லாத மக்கள் ‘சூத்திரர்’ என்ற இழிவுக் குள்ளாக்கப்படுவதை பெரியார் சுட்டிக்காட்டி, போராட்டங்களைத் தொடங்கினார். இதைத் தொடர்ந்து அன்றைய கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சியில் ஜாதி வேறுபாடின்றி அனைவரும் அர்ச்சகர் ஆவதற்கும், பரம்பரை அர்ச்சகர் முறையை ஒழித்தும், ‘இந்து அற நிலையத்துறை’ சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு தமிழக சட்டமன்றத்திலும்,...

கழகத்தின் இணையத்தள செயல்பாடுகள்

கழகத்தின் இணையத்தள செயல்பாடுகள்

இனி வரும் காலத்தில் கையடக்கமான தந்தி போன்ற சாதனம் அனைவரிடமும் இருக்கும்” என்று கூறிய சமூக விஞ்ஞானி பெரியாரின்எழுத்துக்களை அடுத்த தலைமுறையிடம் சேர்க்கும் பொருட்டு நமது கழகத்தின் நவீன செய்திதொடர்பு சாதனமாக, கழகத்தின் கொள்கை நிலைப்பாடுகளை, பிரச்சார நோக்கங்களை, போராட்ட முறைகளை, மாவட்ட வாரியான செய்திகளை கழக தோழர்களிடமும், அனைத்து மக்களிடம் சென்று சேர்க்கும் வலுவுள்ள இணையதளமாக (www.dvkperiyar.com) நமது இணையதளம் செயல்பட ஆரம்பித்துள்ளது. இயக்க தோழர்களுக்கு அதைப் பற்றிய ஓர் அறிமுகம் – இயக்கம் : முகப்பு பக்கத்தில் இயக்கம் என்ற Menuவின் கீழ் பெரியார் வாழ்க்கை வரலாறு ஆண்டுவாரியாக தொகுத்துள்ளோம். தலைமை அவ்வப்போது அறிவிக்கும் அறிக்கைகளின் பட்டியல் அடுத்து வரும். கழகத்தின் கொள்கை, பிரகடனம், உறுதிமொழி, மாநில மற்றும் பொறுப்பாளர்களின் பட்டியல், துணை இயக்கங்களின் அறிமுகம் மற்றும் அதனதன் பொறுப்பாளர்கள், கழகத்தில் இணைய விரும்பும் தோழர்களுக்கு படிவம் ஆகிய அனைத்தும் இதன் கீழ் வரும். மாவட்ட செய்திகள் :...

நெகிழ வைத்த நிதி !

திராவிடர் விடுதலைக் கழகம் மேட்டூர் காவலாண்டியூர் கிளை சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் மற்றும் நிதி சேகரிப்பின் போது 08.12.2015 அன்று செட்டியூரில் மாற்றுத் திறனாளி பெண் ஒருவர் தனது பங்களிப்பு நிதியாக ரூ.50-ஐ கொளத்தூர் தா.செ.பழனிச்சாமி யிடம் வழங்கியது, அனைவரையும் நெகிழ வைத்தது, அவர் அளித்த ரூ.50, விலை மதிப்பற்ற அவரது உணர்வின் வெளிப்பாடு. பெரியார் முழக்கம் 10122015 இதழ்

ஜாதி ஆணவ வெறிக் கொலைக்கு தமிழகத்தில் மற்றொரு பெண் பலி

ஜாதி ஆணவ வெறிக் கொலைக்கு தமிழகத்தில் மற்றொரு பெண் பலி

‘கவுரவக் கொலை’ என்ற பெயரில் ஜாதி வெறிக்கு குடும்பத்தினரே பெண்களை கொலை செய்யும் அளவுக்கு ஜாதியம் வெறி பிடித்து நிற்கிறது. இந்தக் கொலைகளையும் இந்தக் கொலைகளை தண்டனையாக அறிவிக்கும் ஜாதி பஞ்சாயத்துக்களையும் தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலிமையடைந்து வருகிறது. தமிழ்நாடு அரசே கடுமையான ஒரு சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு செவிமெடுக்கவில்லை. மோடி ஆட்சி இதற்கு ஒரு தனி சட்டம் இயற்ற முன் வந்து அதற்கான மசோதாவை மாநில அரசுகளின் கருத்துகளைக் கேட்டு அனுப்பியது. ஆந்திரா, கேரளா போன்ற தென் மாநிலங்கள் இந்த மசோதா குறித்து கருத்துகளைத் தெரிவித்து விட்டன. தமிழ்நாடு அரசோ எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் அலட்சியம் காட்டுகிறது. தமிழ்நாட்டில் கடந்த 3 ஆண்டுகளில் 98 பேர் – இப்படி ‘கவுரவ’க் கொலைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்கள். இப்போது மீண்டும் இதேபோல் ஒரு கொலை நடந்திருக்கும் அதிர்ச்சியான செய்தி வெளி வந்திருக்கிறது. இராமநாதபுரம் வட்டம் புத்தேந்தல்...

புராணங்கள், வரலாறுகளில் – பார்ப்பன சூழ்ச்சிகளும் – படுகொலைகளும் பார்ப்பன பயங்கரவாதங்கள் பற்றிய ஒரு தொகுப்பு:

புராணங்கள், வரலாறுகளில் – பார்ப்பன சூழ்ச்சிகளும் – படுகொலைகளும் பார்ப்பன பயங்கரவாதங்கள் பற்றிய ஒரு தொகுப்பு:

நந்தன் : தில்லை நடராசன் கனவில் வந்ததாகக் கூறி, சிவபக்தனாகி, ஆண்டவனை தரிசிக்க வந்தவன் நந்தன். தீண்டப்படாத சமூகத்தைச் சார்ந்தவன். கொள்ளிடம் என்ற சிற்றூரிலிருந்து புறப்பட்டு தில்லைக்கு நடராசனை தரிக்க வந்தபோது தீட்சதப் பார்ப்பனர்கள் தீயில் குளித்து தீட்டைப் போக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்தனர். நந்தன் தீயில் குதித்தான். அப்போது தில்லை நடராசன் நேரில் தோன்றி, எதிரே இருந்த நந்தியை விலகச் சொல்லி, நந்தனுக்கு கர்ப்பக்கிரகத்துக்கு வெளியில் வைத்தே ‘தரிசனம்’ தந்ததாக ‘பெரிய புராணத்தில்’ சேக்கிழார் எழுதியுள்ளார். உண்மை என்னவென்றால், நந்தன் தீயில் எரிக்கப்பட்டான் என்பதே. சம்பூகன் : பார்ப்பனர்கள் மட்டுமே கடவுளை நேரடியாக தவம் செய்ய உரிமை பெற்றவர்கள். ராமன் ஆட்சியில் சம்பூகன் என்ற ‘சூத்திரன்’ கடவுளை நோக்கி நேரடியாக தவம் செய்தான். பார்ப்பனர்கள் – இதை அதர்மம் என்று கூறி, சூத்திரன் தவம் செய்ததால், அக்கிரகாரத்தில் பிறக்க வேண்டிய ஒரு குழந்தை, தாயின் கர்ப்பத்திலே இறந்துவிட்டதாக புகார்...

என்றென்றும் நினைவில் நிற்கும் மாநாடு

என்றென்றும் நினைவில் நிற்கும் மாநாடு

சென்னை மாவட்டக் கழக மாநாட்டுப் பணிகள் தொடங்கியது முதல் கடும் மழை கொட்டிக் கொண்டே இருந்தது. திருப்பூர், கோவை, விழுப்புரம், தூத்துக்குடி, நாகை, விருதுநகர், மாவட்டங்களிலிருந்து தோழர்கள் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மாநாட்டில் பங்கேற்கும் ஆர்வத்துடன் கடும் இடர்ப்பாடுகளை யும் கடந்து வந்திருந்தனர். கழகப் பொருளாளர் இரத்தினசாமி, முதல் நாளே மாநாட்டுப் பணிகளில் பங்கேற்க சென்னை வந்தார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி நவம்பர் 17ஆம் தேதி சென்னை வந்தவர், 19 நாள்களுக்குப் பிறகு டிசம்பர் 5ஆம் தேதி காலையில் தான் மேட்டூர் புறப்பட்டுச் சென்றார். மலேசியாவில் பினாங்கு துணை முதல்வர் இராமசாமி ஏற்பாடு செய்த ஈழத் தமிழர் உரிமை மாநாட்டில் பங்கேற்க தோழர் கொளத்தூர் மணி, நவம்பர் 19ஆம் தேதி சென்னையிலிருந்து பினாங்கு பயணமானார். இந்த மாநாட்டில் தமிழ்நாட்டிலிருந்து ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, நாடு கடந்த தமிழீழ அரசின் தமிழகப் பிரதிநிதி பேராசிரியர் சரசுவதி உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்....

கொட்டிய மழையிலும் நடந்த “பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு”

கொட்டிய மழையிலும் நடந்த “பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு”

திராவிடர் விடுதலைக்கழகம், சென்னை மாவட்டத்தின் சார்பாக மக்களைப் பிரிக்கும் ”பார்ப்பன மதவாத எதிர்ப்பு மாநாடு” 01.12.2015 செவ்வாய்க் கிழமை சென்னை மேற்கு மாம்பலம் சந்திர சேகர் திருமண மண்டபத்தில் தபோல்கர் – பன்சாரே – கல்புர்கி நினைவரங்கத்தில் நடைபெற்றது. காலை முதல் மாலை வரை முழு நாள் மாநாடாக நடைபெற்ற இந்த சிறப்பான மாநாட்டில் கலை நிகழ்ச்சி, கருத்தரங்கம், பட்டி மன்றம், கருத்துரை ஆகியன இடம் பெற்றன. சென்னையில் காலத்தின் அவசியம் கருதி பல்வேறு தடங்கல்களை முறியடித்து கழகத் தோழர்களின் பெரு முயற்சியால் இம்மாநாடு வெற்றிகரமாக நடத்தப்பட்டது. மாநாட்டின் முந்தைய நாள் இரவிலேயே கடும் மழை பெய்தது. கடும் மழைக்குமிடையே தோழர்கள் மாநாட்டு பணிகளை மேற்கொண்டார்கள். காலையிலேயே மாநாடு துவங்கும் நேரத்திலேயே கடும் மழை இருந்தாலும் அதனை பொருட்படுத்தாமல் கழக மாநாட்டின் கருத்துரைகளைக் கேட்க தோழர்கள், தோழமை அமைப்புகள், பொது மக்கள் வருகை என 200க்கும் மேற்பட்டோரால் அரங்கம் நிறைந்தது. காலை...

ஆச்சாரியார் அரசியலின் கைத்தடியே ம.பொ.சி. பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? (3) வாலாசா வல்லவன்

ஆச்சாரியார் அரசியலின் கைத்தடியே ம.பொ.சி. பெரியார் தமிழ் இனத்தின் பகைவரா? (3) வாலாசா வல்லவன்

பெரியாருக்கு எதிராக அவ்வப்போது சில வரலாற்றுப் புரட்டர்கள் புறப்படுவதும், பதிலடி கிடைத்தவுடன் பதுங்குவதும் வாடிக்கையாகி விட்டது. ‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. 2ம் பாகம் படிக்க வழக்குரைஞர் பா.குப்பன் பெரியார் மீது சுமத்தும் மற்றொரு குற்றச்சாட்டு “தமிழ்ப் பார்ப்பனர்களிடம் சினப் பாய்ச்சல்; தெலுங்குப் பிராமணர்களிடம் இனப்பாசம்!” (பக் 53) என்று எழுதியுள்ளார். எந்த ஆதாரத்தின் அடிப்படையில் பா.குப்பன் தமிழ்ப் பார்ப்பனர் தெலுங்குப் பார்ப்பனர் என்று வரையறை செய்தார் என்பது அவருக்கே வெளிச்சம். பழந்தமிழகத்தில் பார்ப்பனர் என்ற சாதியே கிடையாது. தொல்காப்பியர் காலக் கட்டத்தில் சுமார் 2000 ஆண்டுகளுக்கு முன்பு வட இந்தியப் பார்ப் பனர்கள் தமிழகத்தில் வந்துள்ளனர். தொல்காப்பி யத்திலேயே வடமொழிச் சொற்களைச் சேர்ப் பதற்கான விதிகளை அவர் உருவாக்கியதிலிருந்தே இதனை நாம் உணர முடிகிறது. பெரியாரியல் வாதிகளும், மார்க்சிய வாதிகளும், உண்மையான தேசிய இன விடுதலையில் அக்கறை உள்ளவர்களும் தலைவர்களின் அரசியல்...

கழகம் – ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ நீட்டிய உதவிக் கரம்

உதவிக்கரம் நீட்டியோர் திராவிடர் விடுதலைக் கழகம், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இணைந்து நடத்திய நிவாரணப் பணிகளுக்கு உதவிட முன்வந்தோர் பட்டியல்: திருப்பூர் வணங்காமண் ஆடையகம் சார்பில் ஊமை அழகிரி 150 புதிய சட்டைகள், 150 வேட்டிகள்; மேட்டூர் கழகம் சார்பில் அரிசி மூட்டைகள், தண்ணீர் பாக்கெட், பருப்பு, ரொட்டி, மருந்துகள், தனி வாகனத்தில் அனுப்பி வைக்கப்பட்டன. சென்னை ஆனந்தன் 225 பெட்சீட்டுகள் வழங்கினார். திருப்பூர் மாவட்டக் கழகத் தோழர்கள் ஏராளமாக அரிசி மூட்டைகள், ரொட்டி, தண்ணீர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்களை அனுப்பினர். குவைத்திலிருந்து செந்தில் ரூ.50,000; தஞ்சையிலிருந்து மணி வண்ணன் ரூ.25,000; சூலூர் பனிமலர் ரூ.10,000; சென்னை பாண்டியன் ரூ.4000; அமெரிக்காவிலிருந்து நாடு கடந்த தமிழீழ அரசு சார்பில் ரூ.44,000. குறிஞ்சி நாடன் ரூ.3,000; வளர் தங்கம் குடும்பத்தார் ரூ.2000. செந்தில் (எப்.டி.எல்.) வழியாக உதவியோர் ரூ.8,600. தேனி ஆசிரியர் மணிமேகலை ரூ.5000. சுவீட்சர்லாந்து இளம் இராயல் விளையாட்டுக் கழக சார்பில்...

ஏழ்மையும்-சுனாமியில் இறப்பதும் முன்வினைப் பயனாம் – எச். ராஜாவின் பார்ப்பனத் திமிருக்கு பதிலடி!

ஏழ்மையும்-சுனாமியில் இறப்பதும் முன்வினைப் பயனாம் – எச். ராஜாவின் பார்ப்பனத் திமிருக்கு பதிலடி!

ஆட்சி அதிகாரம் வந்துவிட்டது என்ற திமிரில் எச். ராஜா போன்ற பார்ப்பனர்கள் எல்லை மீறி தூற்றுகிறார்கள். வாய்க்கொழுப்பு பூணூல் திமிருடன் பேசுகிறார்கள்; எழுதுகிறார்கள். நடிகர் கமல்ஹாசன், தனது 61ஆவது பிறந்த நாளில் வெளியிட்ட சில கருத்துகளுக்காக ‘துக்ளக்’ பத்திரிகையில் எச். ராஜா ஒரு கடிதம் எழுதியிருக்கிறார். கமல்ஹாசன் பேசும் பகுத்தறிவு கருத்துகள் குழப்பம் மற்றும் பார்ப்பனியத்தின் கலவையாகவே இருக்கிறது என்பது வேறு சேதி. ஆனால், இந்த கடிதத்தில் எச்.ராஜா தன்னை அசல் பார்ப்பனராக அடையாளம் காட்டியிருப்பதை சுட்டிக்காட்ட வேண்டும். ஒருவர் ஏழையாகவும் தீண்டப்படாத ஜாதியிலும் பிறப்பதற்கு முன் ஜென்மத்தின் பலன்தான் காரணம் என்று பார்ப்பனர்கள் கூறி, இந்த ஏற்றத்தாழ்வுகளை நியாயப்படுத்தி வந்தார்கள். பெரியாரி யக்கம், பார்ப்பனரின் இந்த பிறவித் திமிரைத்தான் கேள்விக்கு உட்படுத்தியது. கடவுளையும் ‘கடவுள்’ பெயரால் அதிகாரங்களையும் பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கப் பிடிக்குள் பறித்துக் கொண்டதை பெரியார் இயக்கம் கிழித்துக் காட்டியவுடன் பார்ப்பனர்கள் ஏற்றத்தாழ்வுகளை தாங்கள் ஏற்கவில்லை என்றும், ஜாதி...

மாட்டிறைச்சி தடை: சில தகவல்கள்

மாட்டிறைச்சி தடை: சில தகவல்கள்

இந்தியாவில் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்ட மற்றும் தடை விதிக்கப் படாத மாநிலங்களின் விவரம் வருமாறு: பஞ்சாப் மற்றும் அரியானா: இரு அண்டை மாநிலங்களிலும் பசுவதை தடை செய்யப்பட்டு உள்ளது. பஞ்சாப் அரசு மாட்டிறைச்சி விற்பனைக்கும் தடை விதித் துள்ளது. எனினும் இந்த மாநிலங்களில் மாட்டிறைச்சி உண்போருக்கான தண்டனை நடைமுறைகள் எதுவும் இல்லை. ராஜஸ்தான்: எத்தகைய கால்நடை வதையும் தடை செய்யப்பட்டு உள்ளது. மீறுவோருக்கு 2 ஆண்டு சிறை மற்றும் ரூ.1,000 அபராதம். இமாச்சல பிரதேசம்: பசுக்கள் மட்டு மின்றி காளைகள், எருமைகள், கன்றுகள் போன்ற விலங்குகளை கொல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது. மீறுவோருக்கு 1 ஆண்டு சிறை. குஜராத்: பசுக்களை கொல்வது, மாட்டிறைச்சிகளை விற்பது, வாங்குவது ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு செல்லுதல் அனைத்துக்கும் தடை. மீறுவோருக்கு 7 ஆண்டு வரை சிறை. உத்தரபிரதேசம்: பசுவதை தடை செய்யப்பட்டு உள்ளது. மீறுவோருக்கு 7 ஆண்டு வரை சிறை. எனினும் டப்பாக்களில்...

பகுத்தறிவுக்கு எதிரான மதவெறி சக்திகள் – டாக்டர் பார்கவா கட்டுரை

பகுத்தறிவுக்கு எதிரான மதவெறி சக்திகள் – டாக்டர் பார்கவா கட்டுரை

உயிரியல் துறை விஞ்ஞானியும், தேசிய அரசு ஆணையத்தின் முன்னாள் தலைவருமான டாக்டர் பார்கவா, ‘இந்து’ நாளேட்டில் எழுதிய கட்டுரையின் சில பகுதிகள். நாம் எதனை உண்ண வேண்டும், என்ன உடை உடுத்த வேண்டும், எதனைப் படிக்க வேண்டும், பார்க்க வேண்டும், யாரை நேசிக்க வேண்டும் என்பது குறித்தெல்லாம் முடிவெடுக்க விரும்புகின்ற தற்போதைய அரசின் செயல்பாட்டில் கலாச்சார சகிப்பின்மை என்பது ஆதிக்கம் செலுத்திடும் அம்சமாக உள்ளது. இந்துத்துவா கொள்கையின் மூலாதாரமாக ஆர்.எஸ்.எஸ். எனும் ராஷ்டிரியஸ்வயம் சேவக் அமைப்பு இருக்கிறது. பாஜக அரசில் இந்த ஆர்எஸ்எஸ் அமைப்பின் செல்வாக்கு ஓங்கியுள்ள நிலையில், “பகுத்தறிவு கோட்பாடு, காரணத்தைத் தேடி விவாதித்து கேள்விக்குள்ளாக்கும் நெறி ஆகியவற்றிலிருந்து இந்திய தேசத்தை விலகச் செய்து, அதன் வாயிலாக ஜனநாயகத்திலிருந்தும் தேசத்தை விலகச் செய்கின்ற இந்து மதவாத எதேச்சாதிகாரத்தை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோமா?”  என்ற கேள்வியை நாம் எழுப்பிடலாம். அவ்வாறு நாம் நகர்ந்து கொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. வன்முறைத் தாக்குதல்களோடு மட்டுமின்றி,...

முஸ்லிம்கள் மீது பழிபோடும் பார்ப்பனியம்  ஈரோடு மாநாட்டில் ஆளூர் ஷாநவாஸ் முழக்கம்

முஸ்லிம்கள் மீது பழிபோடும் பார்ப்பனியம் ஈரோடு மாநாட்டில் ஆளூர் ஷாநவாஸ் முழக்கம்

ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்ற இந்து பார்ப்பன-பயங்கரவாத எதிர்ப்பு மாநாட்டில், ‘எங்கள் பார்வையில் மக்களைப் பிளவுப் படுத்தும் பார்ப்பனீய மதவாதம்’ என்ற பொதுத் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், ‘இசுலாமியர் பார்வையில்’ என்கிற தலைப்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலாளர் ஆளூர் ஷாநவாஸ் பேசினார். அவரது உரையின் தொடர்ச்சி – முஸ்லீம்கள் வீடுகட்டினால் யார் வேண்டு மானால் வாடகைக்கு வரலாம். ஆனால், பார்ப் பனர்கள் வீட்டில் வேறுயாரும் வசிக்க முடியாது. இந்த நாட்டில் அனைத்து பயங்கரவாத செயல்களையும் செய்வது பார்ப்பனீயம். ஆனால், பழியை சுமப்பது முஸ்லீம்கள்.  இந்த சூழ்ச்சி அரசியலை நாம் புரிந்துகொள்ளவேண்டும். அடுத்த குற்றச்சாட்டு,  முஸ்லீம்கள் தீவிர மதநம்பிக்கை உடையவர்கள் அவர்களது குரானில் நான்கு பெண்டாட்டிகளைத் திருமணம் செய்ய சொல்லியிருக்கிறது. எவ்வளவு வேண்டுமானலும் குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளலாம் என சொல்லியிருக்கிறது. அதனால் அவர்கள் அந்த மதக் கருத்தை பின்பற்றி நிறைய திருமணம்...

உலக நாடுகளில் மோடிக்கு நடக்கும் வரவேற்புகள் பின்னணியில் பார்ப்பன-பனியாக்கள்

உலக நாடுகளில் மோடிக்கு நடக்கும் வரவேற்புகள் பின்னணியில் பார்ப்பன-பனியாக்கள்

வெளிநாடுகளுக்கு பறந்து கொண்டிருக்கிறார் மோடி. அவ்வப்போது இந்தியாவுக்கும் வந்து போகிறார். மோடி பறக்கும் நாடுகளில் எல்லாம் அங்கே வாழும் ‘இந்தியர்’கள் நடத்தும் விழாக்கள் மிகப் பெரிய அளவில் நடத்தப்படுகிறது. அமெரிக்காவின் மெய்டன் மைதான சதுக்கம், இலண்டன் வெம்பில்டன் அரங்கம் என்று நடக்கும் இந்த மாபெரும் வரவேற்பு விழாக்கள் திட்டமிடப் பட்டு நடத்தப்படுகின்றன. பெருமளவில் கூட்டம் திரட்டப்படுகிறது. இந்த வேலைகளை செய்வது எல்லாம் அந்நாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கிற ‘இந்துத்துவ’ பார்ப்பன சக்திகள்தான். இலண்டனில் வெம்பில்டன் மைதானத்தில் 60,000 பேர் திரண்டதாக செய்திகள கூறுகின்றன. இதை முன்னின்று நடத்தியது ‘தேசிய இந்து மாணவர் கழகம்’ என்ற அமைப்பு. 29 வயதுடைய மயூரி பார்மர் என்ற செல்வாக்கு மிக்க பார்ப்பன குடும்பத்தின் இளைஞர், இதற்கான பொறுப்பாளராக செயல்பட்டார். இந்த ஏற்பாடுகள் எல்லாம் பா.ஜ.க.வின் பொதுச் செயலாளராக உள்ள ராம் மாதவ் என்பவரால் திட்டமிடப்படுகின்றன. உலகம் முழுதும் பரவிக் கிடக்கும் பார்ப்பன-பனியா தொழிலதிபர்களை ஒருங்கிணைத்து மோடிக்கு ஆதரவாக...

சுழலும் வரலாற்றுச் சக்கரம் – மேதகு பிரபாகரன் மாவீரர் நாள் உரை

சுழலும் வரலாற்றுச் சக்கரம் – மேதகு பிரபாகரன் மாவீரர் நாள் உரை

மனிதனை மனிதன் அடிமை கொள்கிறான்; அழிக்க முயல்கிறான்; மனிதனை மனிதன் சுரண்டி வாழ்கிறான். அன்று தொட்டு இன்றுவரை மனிதனே மனிதனின் முதன்மையான எதிரியாக விளங்கி வருகிறான். ஒருவனது சுதந்திரத்தை இன்னொருவன் விழுங்கிவிட எத்தனிக்கும்போது, தர்மம் செத்து விடுகிறது; உலகில் அதர்மமும் அநீதியும் பிறக்கிறது. சாதி என்றும், வர்க்கம் என்றும், இனம் என்றும் பிளவுகள் எழுந்து மனிதரிடையே முரண்பாடு தோன்றுகிறது; மோதல்கள் வெடிக்கின்றன. இந்த உலகில் அநீதியும் அடிமைத்தனமும் இருக்கும் வரை, சுதந்திரத்தை இழந்து வாழும் மக்கள் இருக்கும் வரை, விடுதலைப் போராட்டங்களும் இருக்கத்தான் செய்யும். இது தவிர்க்க முடியாத வரலாற்று நியதி. ஏனெனில், சுதந்திர எழுச்சியின் உந்துதலால்தான் மனித வரலாற்றுச் சக்கரமும் சுழல்கிறது. ஒடுக்கப்படும் உலக மக்களில் ஒரு பிரிவினராக நாமும் சுதந்திரம் வேண்டிப் போராடி வருகிறோம். எல்லா விடுதலைப் போராட்டங்களையும்விட எமது போர்க்குரல், இன்று உலக அரங்கில் மிகப் பெரிதாக ஒலிக்கிறது. எமது சுதந்தரப் போர் ஏனைய விடுதலைப் போராட்டங்களைவிட...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

அரைகுறை ஆடைகளுடன் வரும் பக்தர்களை இந்து கோயிலுக்குள் அனுமதிக்கக் கூடாது. – மதுரை உயர்நீதிமன்றம்ஆணை ஆனால், அர்ச்சகர்கள் மட்டும் மேலாடை இல்லாமலேயே வரலாம்! அதுல நீதிமன்றம் தலையிட முடியாது. கூடங்குளம் முதலாவது அணு உலையில் அடுத்த மாதம் மின் உற்பத்தி தொடங்க வாய்ப்பு. – இயக்குனர் ஆர்.எஸ். சுந்தர் அமைச்சர் நாராயணசாமி போயிட்டாரேன்னு கவலைப் பட வேண்டாம்; இதோ ஆர்.எஸ்.சுந்தர் வந்துட்டாருல்ல… பாரிசில் நடந்த தாக்குதலில் பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்த அரியானாவில் வேதம் ஓதி ‘மகாயாகம்’. – செய்தி இனிமே சிரியாவுல நடக்குற தாக்குதலுக்கும் யாகம் நடத்து வீங்க போலிருக்கு. பீகார் தோல்வி: பா.ஜ.க.வை குறைகூறும் அதிருப்தியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். – அமைச்சர் கட்காரி தாராளமா எடுங்க… ஆனா அதிருப்தி தெரிவித்த பீகார் மக்களை ஒன்றும் செஞ்சுடா தீங்கய்யா. மாட்டிறைச்சி ஏற்றுமதி வர்த்தகம் செய்வோரில் 95 சதவீதம் பேர் இந்துக்கள். – முன்னாள் நீதிபதி சச்சார் உள்நாட்டுல எவரும்...

குஜராத் இனப் படுகொலையை தூண்டியவர் மோடி

குஜராத் இனப் படுகொலையை தூண்டியவர் மோடி

2013 செப்டம்பர் 18 அன்று கலவரத்தில் கொலை செய்யப்பட்ட காங்கிரஸ் எம்.பி. எஷான் ஜஃரியின் மனைவி திருமதி ஜக்கியா ஜஃப்ரி, அகமதாபாத் 11 ஆவது பெருநகர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்துப் பூர்வமான குற்றமுறையீட்டின் சுருக்கத்தை கீழே தந்திருக்கிறோம். அதில் மோடிக்கு எதிராக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள்: 2002 பிப்ரவரி 27 அன்று துயரார்ந்த கோத்ரா சம்பவம் நடைபெறுவதற்கு முன்பு ‘மகாயஜ்னா’ என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்./விஸ்வ இந்து பரிசத் அமைப்புகளின் வன்முறை நடவடிக்கைகள் குறித்து, புலனாய்வு அமைப்புகள் அனுப்பிய செய்திகளை அரசு வேண்டுமென்றே உதாசீனம் செய்தது. இந்த செய்திகளில் பைசாபாத் – அயோத்யாவிற்கு அனுப்பப்பட்ட 2800 மற்றும் 1900 கரசேவகர்கள் செல்லும் வழியெல்லாம் முஸ்லிம் மக்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். கோத்ரா ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் வரும் சமயத்தில் கரசேவகர் களால் முஸ்லிம்களுக்கு எதிராக ஆத்திரமூட்டும் வகையில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இவ்வாறு ஆத்திரமூட்டும் வகையில் முழக்கங்கள் எழுப்பப் படுவது தொடர்பாக...

ராஜிவ் கொலை விசாரணையில் காங்கிரசின்  துரோகம்

ராஜிவ் கொலை விசாரணையில் காங்கிரசின் துரோகம்

தமிழக முதல்வர் 7 பேரை விடுதலை செய்தவுடன் துள்ளி குதிக்கும் காங்கிரசார், ராஜிவ் மீது உண்மையான பற்று கொண்டவர்கள் தானா? ராஜீவ் பாதுகாப்பில் அலட்சியம் காட்டியதோடு தவறு செய்தவர்களை காப்hபற்ற முயன்றார்கள். இதோ, ஆதாரங்களுடன்…. ராஜீவ் காந்தி கொலை நடந்தபோது மத்தியில் ராஜீவின் ‘எடுபிடி’யான சந்திரசேகர் தலைமை யிலான ஆட்சி நடந்தது. வி.பி. சிங் ஆட்சியைகவிழ்த்த காங்கிரஸ், தனது ஆதரவோடு சந்திர சேகர் தலைமையில் ஒரு பொம்மை ஆட்சியை உருவாக்கியிருந்தது. சந்திரசேகர் ஆட்சியில் சட்ட அமைச்சராக இருந்தவர் சுப்ரமணியசாமி. ராஜீவ் கொலை நடந்த அடுத்த 6வது நாளில் ஜெக்தீஷ் சரண்வர்மா (ஜெ. எஸ். வர்மா) என்ற உச்சநீதி மன்ற தலைமையில் ஒரு விசாரணை ஆணை யத்தை சந்திரசேகர் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த சுபத்காந்த் சகாய், 1991 மே 27 ஆம் தேதி அறிவித்தார். ராஜீவ் காந்திக்கு செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளில் கோளாறுகள், குறைகள் நடந்தனவா என்பது குறித்து ஆராய்வதே இந்த...

மார்ச் 29இல் மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம்

மார்ச் 29இல் மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம்

  எதிர்வரும் 29-03-2014 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், ( நிகழ்விடம் பின்னர் அறிவிக்கப்படும்) திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம் கீழ்கண்ட பொருள்கள் குறித்து விவாதிக்க, கழக செயலவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி அவர்கள் தலைமையில், நடைபெற  உள்ளது. அனைத்து செயலவை உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் பொருள்: இந்துத்துவ எதிர்ப்புப் பரப்புரை பரப்புரை வாகனம் வாங்குதல் மய்ய அரசுப் பணிகளில் தென்னாட்டுக்கு வஞ்சனை பல்கலைக் கழகங்களில் சோதிடக் கல்வி பகுத்தறிவு பரப்புரை தொடர் கூட்டங்கள் ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் நன்கொடை திட்டம் எதிர்கால வேலைத் திட்டம் கொளத்தூர் மணி   விடுதலை இராசேந்திரன் (தலைவர்)    (பொதுச் செயலாளர்) பெரியார் முழக்கம் 20032014 இதழ்

ஜாதியமைப்பு – ஏன் விவாதிக்கப்படுவதில்லை?

ஜாதியமைப்பு – ஏன் விவாதிக்கப்படுவதில்லை?

அம்பேத்கரின் ஜாதி ஒழிப்பு நூலுக்கு அருந்ததிராய் எழுதிய முன்னுரையிலிருந்து ஒரு பகுதியை கடந்த வாரம் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்திருந்தது. இது தொடர்பாக ‘அவுட் லுக்’ பத்திரிகை யில் அருந்ததிராய் விரிவாக பேட்டி அளித் துள்ளார். அரசியல், பொருளாதாரம், ஊடகங் களில் பனியாக்கள் பார்ப்பனர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதை புள்ளி விவரங் களுடன் சுட்டிக்காட்டிய அருந்ததிராய் அரசியல் கட்சிகள் ஜாதியமைப்பு ஜாதி பிரச்சினைகள் குறித்து ‘கண்டு கொள்ளாத’ போக்கை மேற்கொள்வதையும் சுட்டிக் காட்டியுள்ளார். ‘மண்டல்’ பரிந்துரை அமுலாக்கத்துக்குப் பிறகு சமகால இந்திய அரசியலில் ஜாதி ஒரு அடிப்படை அம்சமாக மாறியிருக்கிறதே என்ற வாதத்துக்கு அருந்ததிராய் பதிலளித் துள்ளார். இந்தியாவில் சமகாலத்தில் அதிகாரம், ஊடகம், பொருளாதாரங் களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்கும் ஆதிக்க ஜாதிப் பிரிவினரையும் உரிமைகள் மறுக்கப் பட்டோரையும் பார்க்க மறுக்கிறார்கள். மண்டல் குழு பரிந்துரை அமுலுக்கு வந்த பிறகு, ஜாதி அரசியலுக்குள் வந்துவிட வில்லை. அதற்கு முன்பே ஜாதி என்ற என்ஜின்தான்...

மதவெறிகளைக் கடந்த மனித உறவுகள்

மதவெறிகளைக் கடந்த மனித உறவுகள்

குஜராத் கலவரத்தின்போது தன்னைக் கொலை செய்ய கத்தியுடன் வந்தவரைப் பார்த்து கண்ணீருடன் கையெடுத்துக் கும்பிட்டு மன்றாடும், கலவரப் படம், மனசாட்சியை உலுக்கிப் போட்டது. அப்படி, உயிருக்கு மன்றாடியவர் குத்புதின் அன்சாரி – தையல் கடை நடத்திய ஒரு இஸ்லாமியர். மத வெறியுடன் கத்தியை தூக்கிக் கொண்டு வந்தவர் அசோக் மோச்சி – செருப்பு தைக்கும் தொழிலாளி. 12 ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் நட்புடன் அன்பைப் பரிமாறிக் கொண்ட நிகழ்வு, கேரள மாநிலம் கண்ணூரில் நடந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கலை இலக்கிய அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு இது. குத்புதீன் – குஜராத்திலிருந்து இடம் பெயர்ந்து, மேற்கு வங்கத்தில் குடியேறிவிட்டார். நிகழ்ச்சியில் பேசிய குத்புதீன், “குஜராத்தில் மதவெறி தற்காலிகமாக அடக்கப்பட்டுள்ளது. இது மோடியை டெல்லிக்கு வழியனுப்பி வைப் பதற்குத்தான். என்னைக் கொலை செய்ய வந்த அசோக் மோச்சி மீது எனக்கு பகை இல்லை. அன்பு மட்டுமே உள்ளது. இவர்களை மோடி, தனது...

மே மாதம் முழுதும் கழக பயிற்சி முகாம்கள்!

மே மாதம் முழுதும் கழக பயிற்சி முகாம்கள்!

11.3.2014 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் சென்னை தலைமை நிலைய அலுவலகத்தில் திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு கூடியது. கழக செயலவைத் தலைவர் சு.துரைசாமி தலைமையில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் முன்னிலையில் கூடிய இக்கலந்துரையாடல் கூட்டத்தில் கீழ்கண்டோர் பங்கேற்றனர்: ஈரோடு ப. இரத்தினசாமி, பால். பிரபாகரன், தி.தாமரைக்கண்ணன், தபசி. குமரன், சூலூர் தமிழ்ச்செல்வி, புதுவை லோகு அய்யப்பன், அன்பு. தனசேகரன், இராம. இளங்கோவன், பல்லடம் விஜயன், மேட்டூர் அ. சக்திவேல், மயிலாடுதுறை இளையராஜா, திண்டுக்கல் இராவணன், கொளத்தூர் குமார், திருப்பூர் சிவகாமி, பேராசிரியர் இராமகிருட்டிணன். தலைமைக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள்: பொறுப்பாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள்: சேலம் மண்டல பொறுப்பாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மே மாதம் 2, 3, 4 ஆகிய மூன்று நாட்கள் ஏற்காட்டிலும், கோவை மண்டல பொறுப்பாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மே மாதம் 12, 13, 14 ஆகிய மூன்று...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

குஜராத் கலவரத்துக்காக எங்கள் கட்சித் தலைவர் ராஜ்நாத் முஸ்லிம்களிடம் மன்னிப்புக் கேட்கவில்லை.  – பா.ஜ.க. செய்தி தொடர்பாளர்  முக்தார் அப்பாஸ் அப்படி மன்னிப்புக் கேட்டிருந்தால் அதற்காக மன்னிச்சுடுங்கன்னு சொல்ல வர்ரீங்களா… அந்தமான் சிறையிலே அடைக்கப்பட்டிருந்தார் பகத்சிங்.  – அகமதாபாத்தில் மோடி பேச்சு மோடிஜி! பகத்சிங் இருந்தது டில்லி சிறை; அந்தமான் சிறையிலிருந்தது வி.டி. சவர்க்கார். அட விடுங்கப்பா; ஏதோ ஒரு சிறை என்கிறீர்களா? ஹி…. ஹி…. அய்.நா.வில் அமெரிக்க தீர்மானத்தை பார்ப்பன ஊடகங்களும் ‘அசல் திராவிடர் இயக்கமும்’ சேர்ந்து ஆதரிக்கின்றன.  – ‘தமிழ்நெட்’ இணையதளம் இப்படியும் கூறலாமே! அதே தீர்மானத்தை ‘அசல் தமிழ் ஈழம்’ பேசும் ‘தமிழ் நெட்’டும் இராஜபக்சேவுடன் சேர்ந்து கொண்டு எதிர்க்கிறது. சென்னை ‘பல்நோக்கு சிறப்பு மருத்துவமனைக்கு’ அரசு மருத்துவமனiயிலிருந்து சிறப்பு மருத்துவர்கள் மாற்றப்பட்டு விட்டதால் அரசு மருத்துவமனைகளில் பணிகள் பாதிப்பு.  ‘தினமலர்’ செய்தி விடுங்க…. பொது மருத்துவமனைகளை எல்லாம் அரசு செயலகங்களாக மாற்றி அம்மா அறிவிச்சுடுவாங்க! ஓட்டுக்கு பணம் வாங்காதீர்...

கழக வளர்ச்சி-கழக ஏடு குறித்து விவாதம்: கோவை மண்டல கழக கலந்துரையாடல் முடிவுகள்

கழக வளர்ச்சி-கழக ஏடு குறித்து விவாதம்: கோவை மண்டல கழக கலந்துரையாடல் முடிவுகள்

21-03-2014 வெள்ளிக்கிழமை அன்று காலை 11-00 மணியளவில், பொள்ளாச்சி ‘பர்வானா இல்லத்”தில் (வங்கி பணியாளர்கள் சங்க கட்டிடம்) கோவை மண்டல கழக கலந்துரையாடல் கூட்டம் மண்டல அமைப்புச் செயலாளர் பல்லடம் விஜயன் தலைமையில் நடைபெற்றது. மேட்டுப்பாளையம் இராமச்சந்திரன் கடவுள் மறுப்பும், பொள்ளாச்சி விஜயராகவன் ஆத்மா மறுப்பும் கூற, கோவை மாவட்டத்தை நிர்வாக வசதிக்காக பொள்ளாச்சி மாவட்டம் என தனியாக பிரித்தல், மாவட்ட அமைப்புகளை புதுப்பித்தல், பயிற்சி வகுப்புகள் நடத்துதல் உள்ளிட்ட கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கங்கள் குறித்து பல்லடம் விஜயன் உரையாற்றி துவக்கி வைத்தார். தலைமை சொல்லும் வேலைகளை மட்டும் செய்தால் போதாது; கிராமப்புற பிரச்சாரம் உள்ளிட்ட பல வேலைகளை நாமே முன்னெடுக்க வேண்டும் என்று செயலவைத் தலைவர் துரைசாமி வலியுறுத்தினார். உயர்கல்வி நிலையங்களில் ஒடுக்கப்பட்ட மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதற்கு எதிராகவும், ஜோதிடக் கல்விக்கு எதிராகவும் போராட வேண்டிய அவசியம் குறித்து வழக்குரைஞர் பன்னீர்செல்வம் பேசினார். தலைமைக் கழகம் சொல்லும் அனைத்து பணிகளுக்கும் முழுமையான...

பார்ப்பன உளவியல் கட்டமைக்கும் பெண்ணடிமை: பூங்குழலி

பார்ப்பன உளவியல் கட்டமைக்கும் பெண்ணடிமை: பூங்குழலி

பெண்களுக்கு எதிரான வன்முறைகள், குறிப்பாக பாலியல் வன்முறைகள் குறித்து இன்று அதிகம் விவாதிக்கப்படுகிறது. பெண்கள் மீதான பாலியல் வன்கொடுமைகளும், வன்புணர்வுகளும் இந்தியாவில் மட்டும் நடக்கவில்லை. ஆனால் பிற நாடுகளில் நடப்பதற்கும் இந்தியாவில் நடப்பதற்கும் அடிப்படையிலேயே பெரிய வேறுபாடு உள்ளது. இன்று இந்தியாவெங்கும் முதன்முதலாக வன் புணர்வை ஒரு விவாதப் பொருளாக மாற்றியிருக்கும் தில்லி கொடுமையையே எடுத்துக் கொள்வோம். அந்த கொடூரச் செயலில் ஈடுபட்டவர்கள், பாதிக்கப்பட்ட பெண் அழகாக இருந்தாள்; அவள் அழகில் தூண்டப்பட்டு அவளை வன்புணர்வு செய்தோம் என்று சொல்லவில்லை. அல்லது அவள் கவர்ச்சிகரமாக ஆடை அணிந்திருந்தாள்; அதனால் தூண்டப்பட்டோம் என்றுகூட சொல்லவில்லை. மணமாகாத அப்பெண் இரவு நேரத்தில் தனியாக ஒரு ஆணுடன் எப்படி நடமாடலாம்? அவளுக்கு பாடம் புகட்டவே அவளை வன்புணர்வு செய்தோம் என்று கூறினர். அண்மையில் சென்னையில் பலியான உமா மகேஸ்வரி விசயத்திலும் அதுவே நடந்துள்ளது. இரவில் தனியாக நடமாடினார்; கேலிசெய்யப்பட்ட போது, துணிச்சலுடன் அந்த ஆண்களை செருப்பால்...

திருச்சி மாவட்டக் கழகம் நடத்திய போராட்டம் வெற்றி

திருச்சி மாவட்டக் கழகம் நடத்திய போராட்டம் வெற்றி

திருச்சி மாவட்டம் 19 ஆவது வார்டு ஜெயில்பேட்டை பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டு வரும் 320 குடியிருப்புகள், கட்டிடப் பணிகள், அவர்கள் நிர்ணயித்த 12 மாதங்கள் முடிந்து, மேலும் 6 மாதகாலம் தாமதமாகி வருகிறது. இதனை கண்டித்தும், விரைந்து கட்டிடப் பணிகளை தரமாக முடித்து பயனாளிகளுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் கழகத்தின் சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் தோழமை அமைப்புகளை இணைத்துக் கொண்டு கடந்த 21.2.13 அன்று நடைபெற்றது. கழகத்தின் ஆர்ப்பாட்டத்தினை கவனித்த தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் திருச்சி மாவட்ட தலைமை பொறியாளர் சுரேஷ், கழகத் தோழர் பொன்னுசாமியை அழைத்து, “போரட்டத்தினை கவனித்தோம்; இன்னும் 3 மாத காலங்களில் கட்டிப் பணியை விரைந்து முடித்து விடுவோம்” என உறுதி கூறினார். தொடர்ந்து 100க்கும் மேற்பட்ட பணியாளர்கள் புதிதாக வரவழைக்கப்பட்டு, கட்டிடப் பணி விரைவாக நடைபெற்று வருகிறது. இதற்கிடையே கட்டுமானத்துக்கு தடை கோரி, தனி நபர் ஒருவர் தொடர்ந்த...

மோடி ஆட்சியின் முறைகேடுகள், ஊழல்கள்

மோடி ஆட்சியின் முறைகேடுகள், ஊழல்கள்

  டாட்டாவின் நானோ திட்டத்திற்கு ஒரு சதுர மீட்டர் ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள நிலத்தை வெறும் ரூ.900க்கு தரப்பட்டது. இதனால் டாட்டா குழுமம் அடித்த ஜாக்பாட் ரூ.33,000 கோடி. அதானி குழுமத்திற்கு முந்த்ரா துறைமுகம் மற்றும் முந்த்ரா விசேட பொருளாதார மண்டலம் உருவாக்கிட நிலம் சதுர அடி / ச.மீ. ஒன்றுக்கு வெறும் ஒரு ரூபாய்க்கு அதாவது வெறும் 10 காசுகளுக்கு தரப்பட்டது. இதனை அதானி குழுமம் பின்னர் சதுர மீட்டர் ரூ.100க்கு விற்று கொழுத்த இலாபம் பார்த்தனர். இந்த விற்பனை சட்ட விரோதமானது. கே.ரஹேஜா என்ற ரியல் எஸ்டேட்டுக்கு முக்கிய பகுதியில் ஒரு ச.மீ. ரூ.470 வீதம் 3.76 லட்சம் சதுர மீட்டர் விற்கப்பட்டது. அதற்கு அருகாமையில் விமானப்படை நிலம் கேட்டபொழுது ஒரு சதுர மீட்டர் ரூ.1100 என கூறப்பட்டது. நவ்சாரி விவசாயப் பல்கலைக்கழகத்திற்கு சொந்தமான 65,000 ச.மீட்டர் நிலம் சத்ராலா ஓட்டல் குழுமத்திற்கு விடுதிகட்ட தாரை வார்க்கப்பட்டது. பல்கலை...

மரணத்திலும் கொள்கை வழுவாத பெரியார் தொண்டர்

மரணத்திலும் கொள்கை வழுவாத பெரியார் தொண்டர்

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள மல்லிகுந்தம் பகுதியில் வசித்து வந்த முன்னாள் இராணுவ வீரரும், உறுதியான பெரியாரியல்வாதியுமான, தோழர் தம்புசாமி  8-3-2014 அன்று இயற்கை எய்தினார். பெரியார் பிறந்தநாள் அன்று ஆண்டுதோறும் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து வந்த அவர், தான் இறந்த பின்னர் எந்த விதமான மதச் சடங்குகள் செய்யக்கூடாது என்றும், தனது மனைவியின் பூ, பொட்டு, வளையல் முதலியவற்றை நீக்கும் எந்த விதமான முட்டாள்தனங்களையும் செய்யக்கூடாது என்றும், முடிந்த வரை நாத்திக தோழர்களால் தனது உடல் அடக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் நீண்ட ஒரு கடிதம் எழுதி வைத்து விட்டு முடிவெய்தினார். தம்புசாமி அவர்களின் நினைவேந்தல் கூட்டம் 19-03-2014 புதன்கிழமை அன்று தம்புசாமி இல்லம் அருகே நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத்தலைவர் கொளத்தூர் மணி, தம்புசாமியின் படத்தை திறந்து வைத்து, தோழரின் கடிதத்தை படித்துக் காட்டி இரங்கல் உரை ஆற்றினார். பெரியார் முழக்கம் 27032014 இதழ்

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

காங்கிரஸ் தனித்துப் போட்டியிடுவதால் தொண்டர்கள் மகிழ்ச்சி.   – காங்கிரஸ் தலைவர் ஞான தேசிகன் நிச்சயமாக! தி.மு.க., அ.தி.மு.க. தொண்டர்கள் மகிழ்ச்சியின் உச்ச கட்டத்தில் மிதக்கிறார்கள்! ஏப்.24 அன்று காலையில் குளிச்சிட்டு, சாமி கும்பிட்டு, நாடு நல்லா இருக்கணும் என்று நினைத்து, வாக்குச் சாவடிக்குப் போய் தாமரைச் சின்னத்துல ஒரு விரலால் ஒரு குத்து குத்துங்க.  – இல. கணேசன் பேச்சு அப்படியே செய்துடறோம்! ஓட்டுப் போட வரும்போது இதுக்கெல்லாம் தனித்தனியாக சான்றிதழ்களையும் கையோடு கொண்டுவரவேண்டுமா கணேசன் ‘ஜி’? பலரையும் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய இல.கணேசனை இந்த முறை நாம் எல்லோரும் சேர்ந்து நாடாளு மன்றத்திற்கு அனுப்பியே ஆக வேண்டும்.  – தமிழிசை சவுந்தர்ராஜன் அது முடியாதுங்க மேடம்! மக்கள்தான் ஓட்டுப் போட்டு அனுப்பணும்! நரேந்திர மோடி இரயில் என்ஜின் மாதிரி. நம்முடைய கூட்டணி கட்சிகள் ரயில் பெட்டி; மோடி எனும் என்ஜின் இல்லாவிடில் பெட்டிகள் தானாக நகர முடியாது. – பா.ஜ.க. செயலாளர் வானதி இதை, மோடிகிட்ட...

பன்னாட்டு விசாரணை தீர்மானத்தை இந்தியா நீர்த்து போகச் செய்யக் கூடாது: ஆளுநர் மாளிகை முற்றுகை: கைது

பன்னாட்டு விசாரணை தீர்மானத்தை இந்தியா நீர்த்து போகச் செய்யக் கூடாது: ஆளுநர் மாளிகை முற்றுகை: கைது

அய்.நா.வின் அமெரிக்கா கொண்டுவரும் தீர்மானம் பன்னாட்டு விசாரணையை உறுதிப் படுத்துவதாக இருக்க வேண்டும் என்றும், அப்படி இருந்தால் இந்தியா தலையிட்டு துரோகம் செய்யக்கூடாது என்றும் வலியுறுத்தி, ஆளுநர் மாளிகையை முற்றுகையிடும் போராட்டம் நடத்தி தோழர்கள் கைதானார்கள். 24-03-2014 திங்கட்கிழமை காலை 11-00 மணியளவில், ஆளுநர் மாளிகை முற்றுகையிடுவதற்காக, சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் எதிரிலிருந்து ஆளுநர் மாளிகை நோக்கி புறப்பட்ட சுமார் 200 பேர் கைது செய்யப்பட்டனர். இலங்கை மீது சுதந்திரமான பன்னாட்டுப் புலனாய்வு அமைத்திட இந்திய அரசு வகை செய்ய வலியுறுத்தி நடைபெற்ற இந்த முற்றுகைப் போராட்டத்தில், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை க.இராசேந்திரன், த.பெ.தி.க பொதுச்செயலாளர் கோவை இராமகிருஷ்ணன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம் தியாகு, தமிழ்நாடு மக்கள் கட்சி செல்வி, சேவ் தமிழ்ஸ் செந்தில், பேராசிரியர் சரசுவதி, காஞ்சி மக்கள் மன்றம், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகம், எஸ்.டி.பி.ஐ, உள்ளிட்ட 18 இயக்கங்களை...

இழிதொழிலுக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு

இழிதொழிலுக்கு எதிரான உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு

மனித மலத்தை எடுத்தல், சாக்கடைக் குழிக்குள் இறங்கி மூச்சுத் திணறி இறத்தல் என்று துப்புரவுத் தொழிலாளர்களான தாழ்த்தப்பட்டோர், இப்போதும் ஈடுபடுத்தப்படுவதற்கு உச்சநீதிமன்றம் கடும் கண்டனத்தை தெரிவித்திருப்பதோடு அவர்கள் புனர்வாழ்வுக்கான திட்டங்களையும் முன் வைத்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி. சதாசிவம், நீதிபதிகள் ரஞ்சன் கோகி, என்.வி.இரமணா ஆகியோரடங்கிய அமர்வு 27.3.2014 அன்று பாராட்டத்தக்க தீர்ப்பை வழங்கியுள்ளது. 1993 ஆம் ஆண்டிலிருந்து இந்த ஆபத்தான வேலையில் உயிரிழந்த குடும்பங் களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும், இத்தகைய வேலைகளில் ஈடுபடுத்தும் ஒப்பந்தக்காரர்கள் குற்றத்துக்கு பொறுப்பு ஏற்கச் செய்ய வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்தத் ‘தொழிலில்’ ஈடுபடுத்தப்படுவோரை விடுவித்து அவர்களுக்கு மறுவாழ்வுக்காக மாத ஊதியத்துடன் கூடிய வேறு தொழில் பயிற்சிகள், குடியிருப்பு மனைகள் அல்லது வீடுகள் வழங்குதல், குடும்பத்தில் ஒருவருக்கு மாற்றுத் தொழில் செய்வதற்கான சலுகைக் கடன் வழங்குதல் ஆகிய திட்டங்களை முன் வைத்துள்ளது உச்சநீதிமன்றம். இரயில்வே துறையில், இப்போதும்...

அய்.நா.வின் பன்னாட்டு விசாரணை – சில தகவல்கள்

அய்.நா.வின் பன்னாட்டு விசாரணை – சில தகவல்கள்

‘பன்னாட்டு விசாரணை’ குறித்த பல்வேறு தகவல்களை எளிமையாக விளக்குகிறது, இக்கட்டுரை. ஒரு நாடு தனது நாட்டில் நடக்கும் பரவலான மனித உரிமை மீறல்களுக்கு நீதி வழங்க முடியாத நிலை ஏற்படும்போது, அங்கு பன்னாட்டு விசாரணைக்கு ஆணையிடும் கடமை சர்வதேச சமூகத்திற்கு உண்டு. எனவே நியூயார்க்கில் உள்ள அய்.நா. பாதுகாப்புச் சபை, ஜெனீவாவில் அய்.நா. மனித உரிமைப் பேரவை ஆகிய அமைப்புகள் சர்வதேச விசாரணைக்கு ஆணையிடுகின்றன. இவையன்றி அய்.நா. பொதுச் செயலர் /அய்.நா. மனித உரிமை ஆணையர், பல்வேறு பன்னாட்டு அமைப்புகளும் இதுபோன்ற சர்வதேச விசாரணைக்கு ஆணையிடுகின்றனர். பாதுகாப்பு சபை மற்றும் மனித உரிமைப் பேரவையின் விசாரணைகளே அதிக அதிகாரமிக்கதாகக் கருதப்படுகின்றன. பன்னாட்டு விசாரணை எவ்வாறு நடக்கும்? அய்.நா.வின் சார்பில் நடத்தப்படும் பன்னாட்டு விசாரணைக்கு என குறிப்பிட்ட ஒரு வடிவம் ஏதும் இல்லை. ஒரு நாட்டில் நடந்து முடிந்த ஒரு நிகழ்வு அல்லது தற்போதும் தொடரும் நிகழ்வுகள் குறித்த உண்மை நிலையை அறியும்...

திராவிடர் விடுதலைக் கழக செயலவை நிகழ்வுகள்

திராவிடர் விடுதலைக் கழக செயலவை நிகழ்வுகள்

29.3.2014 அன்று மயிலாடு துறையில் திராவிடர் விடுதலைக் கழக செயலவை – செயலவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் நடந்தது. நாகை மாவட்ட கழகத் தலைவர் மகா லிங்கம், ‘கடவுள்-ஆத்மா’ மறுப்பு களைக் கூற, தஞ்சை மண்டலச் செயலாளர் வழக்கறிஞர் இளைய ராசா வரவேற்றுப் பேசினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடக்க உரையாற்றினார். பொருளாளர் இரத்தினசாமி, கழகப் பரப்புரைக்காக 30 பேர் பயணிக்கக்கூடிய பயன்படுத்தப் பட்ட வாகனம், கழகத் தலைவர் ஒப்புதலுடன் வாங்கப்பட் டுள்ளதையும், அதற்குத் தேவை யான நிதி குறித்தும் விளக்கினார். ஒவ்வொரு மாவட்டக் கழகமும் வாகனத்துக்கான நன்கொடை யாக பொது மக்களிடமிருந்து திரட்டித்தரக்கூடிய நிதி மற்றும் குடும்ப ரீதியாக வழங்கக்கூடிய நிதியை நிர்ணயம் செய்யலாம் என்ற ஆலோசனையை முன் வைத்தார். அதன்படி செயலவை உறுப்பினர்கள் இயக்கம் மற்றும் குடும்ப சார்பில் வழங்கக் கூடிய நன்கொடையைத் தெரிவித்தனர். உரையாற்றிய மாவட்ட பொறுப்பாளர்கள் : சென்னை ஜான், காஞ்சிபுரம்...

தலையங்கம்: அய்.நா.வில் நிறைவேறிய அமெரிக்க தீர்மானம்

தலையங்கம்: அய்.நா.வில் நிறைவேறிய அமெரிக்க தீர்மானம்

அய்.நா.வில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வந்துள்ள தீர்மானத்தை சர்வதேச தமிழர் அமைப்புகளும், மனித உரிமை அமைப்புகளும் வரவேற்றுள்ளன. மயிலாடுதுறையில் 29.3.2014 அன்று கூடிய திராவிடர் விடுதலைக் கழக செயலவை, இத் தீர்மானம் கடந்த காலங்களில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைவிட மேலும் முன்னேற்றம் கண்டிருப்பதை சுட்டிக்காட்டி, வரவேற்றுள்ளது. 2012-2013 ஆண்டுகளில், அய்.நா. வலியுறுத்திய ‘நம்பகத் தன்மையான விசாரணை’யை நடத்தும் தீர்மானத்தை ராஜபக்சே ஆட்சி முற்றிலும் புறந்தள்ளிய நிலையில் இப்போது அய்.நா. மனித உரிமை ஆணையரின் நேரடி கண்காணிப்பு வளையத்துக்குள் இலங்கை கொண்டு வரப்பட்டிருப்பது ஒரு முக்கிய திருப்பம். இதில் இந்தியா மேற்கொண்டுள்ள நிலைப்பாடு தமிழினத்துக்கு இழைத்த துரோகமாகும். மனித உரிமைக் குழுவில் இடம் பெற்றுள்ள 47 நாடுகளில் 23 நாடுகள் தீர்மானத்தை ஆதரித்தும், கியூபா, ரஷ்யா, சீனா, வெனிசுலா, மாலத்தீவு, பாகிஸ்தான் உள்ளிட்ட 12 நாடுகள் எதிர்த்தும் வாக்களித்துள்ளன. ஓட்டெடுப்பில் பங்கேற்காமல் ஒதுங்கிய 12 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. உண்மையில் இந்தியா நடுநிலை...

கழக செயலவையின் முடிவுகள்

கழக செயலவையின் முடிவுகள்

‘இந்துத்துவ சக்தி’களை எப்போதுமே எதிர்த்து வரும் சி.பி.அய். – சி.பி.எம். – இஸ்லாமிய கட்சிகள் – ‘விடுதலை சிறுத்தை’களை ஆதரிக்க வாக்காளர்களுக்கு ‘திராவிடர் விடுதலைக் கழகம்’ வேண்டுகோள் ஜாதி வெறியின் குறியீட்டு அடையாளமாக தர்மபுரியில் பா.ம.க. வேட்பாளரை தோற்கடிப்பீர்! கழக செயலவையின் முடிவுகள் மயிலாடுதுறையில் மார்ச் 29, 2014 இல் கூடிய கழக செயலவையில் எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் கழகத்தின் நிலைப்பாடு குறித்து விவாதித்து கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன. தேர்தல் நிலைப்பாடு ஆர்.எஸ்.எஸ் பரிவாரங்களும் அதன் அரசியல் முகமான பா.ஜ.க.வும், இந்தியாவின் ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் பெரும் தொழில் நிறுவனங்களின் பின்பலத்தோடு நாடாளுமன்ற தேர்தல் களத்தில் களமிறங்கியுள்ளன. பல்வேறு மொழி பேசும் தேசிய இனங்களையும், பல்வேறு பண்பாடுகளையும் கொண்ட நாட்டில் “ஒரே நாடு-ஒரே பண்பாடு” என்ற ஒற்றை அடையாளத்தைத் திணிப்பதே இவர்களின் இலட்சியம் என்பதை கடந்தகால வரலாறுகள் மெய்ப்பிக்கின்றன. தங்களின் பாசிச அடையாளத்தை மறைத்துக் கொண்டு ‘வளர்ச்சி’ என்ற பொய்...

குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம்: பங்கேற்பாளர்களுக்கு வேண்டுகோள்

குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம்: பங்கேற்பாளர்களுக்கு வேண்டுகோள்

குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம்: பங்கேற்பாளர்களுக்கு வேண்டுகோள் தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் சார்பாக கோடை விடுமுறைக் காலத்தில் கொடைக்கானலில் குழந்தைகள் பழகு மகிழ்வு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மே மாதம் 15 முதல் 19 வரை 5 நாள்கள் முகாம் நடைபெற உள்ளது. இந்த முகாமில் 8 வயது முதல் 16 வயது வரை உள்ள குழந்தைகள் பங்கேற்கலாம். 5 நாள்களுக்கு உணவு தங்குமிடம், சுற்றுலா உள்பட ரூ.1000 மட்டும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பங்கேற்க விரும்புவோர் ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம். முகாமிற்கு குழந்தைகளை அனுப்பும் பெற்றோர்கள் கவனத்திற்கு: பயிற்சி நடைபெறும் இடம் : கொடைக்கானல் வரவேண்டிய இடம் : திண்டுக்கல் பேருந்து நிலையம் வரவேண்டிய நேரம் : 14.05.2014 புதன் கிழமை 4 மணிக்குள் திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு வந்துவிட வேண்டும். அங்கிருந்து கொடைக்கானலுக்கு குழந்தைகளை மட்டும் தனிப் பேருந்தில் நாங்களே அழைத்துச்...

பெண்கள் தந்த ‘பெரியார்’ பட்டம்: ‘குடிஅரசு’ கூறும் வரலாறு

பெண்கள் தந்த ‘பெரியார்’ பட்டம்: ‘குடிஅரசு’ கூறும் வரலாறு

பெரியார் பற்றிய அவதூறுகள் – தீவிர ‘தமிழ்த் தேசியம்’ பேசும் சில குழுக்களால் இணைய தளங்களிலும் எழுத்துகளிலும் பரப்பப்பட்டு வருகின்றன. தமிழனுக்கு அடையாளம் ஜாதியே என்று பார்ப்பனியத்துக்கு சேவை செய்யவும் ஒரு சிலர் புறப்பட்டிருக்கிறார்கள். ம.பொ.சி.யின் பேத்தியான பரமேசுவரி, ‘பெரியார்’ என்ற பட்டத்தை பெண்கள் கொடுத்தார்கள் என்பதற்கே சான்று எதுவும் இல்லை என்று எழுதியிருக்கிறார். இந்த அவதூறுகளுக்கு மறுப்பாக பெண்கள் மாநாட்டில் 13.11.1938இல் பெரியாருக்கு பட்டம் தந்த செய்தியை ‘குடிஅரசு’ (நவம்.20, 1938) இதழிலிருந்து எடுத்து இங்கு வெளியிடுகிறோம். தமிழ்மொழிக்கும் பெண்கள் உரிமைக்கும் 1938ஆம் ஆண்டிலேயே பெரியார் இயக்கம் குரல் கொடுத்திருக்கிறது என்பதை ‘காமாலைக் கண்’ கொண்டு பார்ப்போருக்கு உணர்த்திட, பெண்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களையும் இங்கு வெளியிடுகிறோம். தீர்மானங்களில் சில: இந்தியாவில் இதுவரையும் தோன்றின சீர்திருத்தத் தலைவர்கள் செய்ய இயலாமற் போன வேலைகளை இன்று நமது தலைவர் ஈ.வெ.ராமசாமி அவர்கள் செய்து வருவதாலும், தென்னாட்டில் அவருக்கு மேலாகவும், சமமாகவும் நினைப்பதற்கு...

மோடி பிரதமராகக் கூடாது – ஏன்?

மோடி பிரதமராகக் கூடாது – ஏன்?

சென்னையில் கழகம் தொடர் கூட்டங்கள் சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக 5.4.2014 முதல் 10.4.2014 வரை மோடி ஏன் பிரதமர் ஆகக் கூடாது என்பதை விளக்கி 5 நாள் தொடர் விளக்க தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. முதல் நாள் 5.4.2014 சனி மாலை 6 மணியளவில் சைதாப்பேட்டை-ஆலந்தூர் சாலை ஐந்து விளக்கு அருகில் நடந்த கூட்டத்தில் மனோகரன் தலைமை வகிக்க சிவா முன்னிலை வகித்தார். 6.4.2014 ஞாயிறு மாலை 6 மணியளவில் திருவான் மியூர் ஜெயந்தி தியேட்டர் அருகில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஆ.சிவகுமார் தலைமை வகித்தார். 7.4.2014 திங்கள் மாலை 6 மணியளவில் இராயப் பேட்டை டாக்டர் நடேசன் சாலை சந்திப்பில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்திற்கு சித்தார்த் தலைமை வகிக்க, செந்தில் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது. தொடர் கூட்டத்தில் சென்னை மண்டல அமைப்புச் செயலாளர் அன்பு தனசேகர், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், வழக்கறிஞர் துரை...

பெரியார் மீது அவதூறு கக்கும் ம.பொ.சி. பரம்பரைக்கு மறுப்பு

பெரியார் மீது அவதூறு கக்கும் ம.பொ.சி. பரம்பரைக்கு மறுப்பு

மதிவண்ணன் நூல் வெளியீட்டு நிகழ்வில் பேசிய பத்திரிகையாளர் விஷ்ணுபுரம் சரவணன், பெரியார் மீது ம.பொ.சி.யின் பேத்தி பரமேசுவரி என்பவர், இணையதளத்தில் அவதூறுகள் எழுதி வருவதை சுட்டிக்காட்டி பேசினார். அவரது உரையையும், அவதூறுக்கு மறுப்பாக ‘குடிஅரசு’ பதிவுகளையும் (4 ஆம் பக்கம்) வெளியிடுகிறோம். ராவ் சாகிப் எல்.சி.குருசாமி சட்டமேலவை உரைகள் மற்றும் மதிவண்ணன் எழுதிய, ‘உள் ஒதுக்கீடு’; ‘தொடரும் விவாதம்’; ‘மெல்ல முகிழ்க்கும் உரையாடல்’, ‘ஏதிலியைத் தொடர்ந்து வரும் நிலா’ ஆகிய மூன்று நூல்கள் வெளியீட்டு நிகழ்வு 15.3.2014 அன்று சென்னை அய்கப் அரங்கில் நடைபெற்றது. ‘கருப்புப் பிரதிகள்’ இந்த நூல்களை வெளியிட் டுள்ளது. நூல்களை ஆதித் தமிழர் பேரவைத் தலைவர் அதியமான் வெளியிட, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பெற்றுக் கொண்டார். வ.கீதா, புனித பாண்டியன் மற்றும் தோழர்கள் உரையாற்றினர். நீலகண்டன் தொகுத்து வழங்கினார். ‘மெல்ல முகிழ்க்கும் உரையாடல்’ நூலை அறிமுகம் செய்து பத்திரிகையாளர் விஷ்ணுபுரம் சரவணன் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்த...

அரசியல் வழியாக – ‘சோதிட நம்பிக்கையாளர்கள்’ எழுப்பும் கேள்விகளுக்கு பதில்

அரசியல் வழியாக – ‘சோதிட நம்பிக்கையாளர்கள்’ எழுப்பும் கேள்விகளுக்கு பதில்

சோதிட நம்பிக்கையாளர்கள் சோதிடமும் ஒரு அறிவியல் தான் என்று முன் வைக்கும் வாதங்களுக்கு அறிவியல் மறுப்பு. எம்.ஜே. அக்பர் எழுதிய நேருவின் வாழ்க்கை வரலாற்றில் ஓர் ஆச்சரியமான சம்பவம் குறிப்பிடப்படுகிறது. குல்சாரிலால் நந்தாவின் வற்புறுத்தலின்பேரில் ஜோஷி என்ற சோதிடரைச் சந்தித்தார் நேரு. 1950களின் இறுதியில் இந்தச் சந்திப்பு நடந்திருக்கலாம். நடக்கப் போகின்ற பலவற்றைப் பற்றி நேருவிடம் ஜோஷி சொன்னார். அவர் சொன்னவற்றில் முக்கியமானது நேருவின் மரண நாள். சோதிடர் சொன்ன நாள் 27 மே, 1954. இந்தச் சம்பவத்திற்கு நேர்மாறாக இன்னொரு சம்பவத்தை நேருவின் அந்தரங்கச் செயலாளராக இருந்த மத்தாய் தனது நினைவுகளில் குறிப்பிடுகிறார். நேரு அவரிடம், “நான் 74 வயதுக்கு மேல் இருக்க மாட்டேன்” என்று சொல்லி யிருக்கிறார். சோதிடர்கள் சொல்லியிருப்பார்கள் என்ற மத்தாய்க்கு நேரு அளித்த பதில்: “இல்லை. குடும்பத்தில் இருந்த ஆண்களின் வயதுகளின் சராசரியைக் கணக்கிட்டேன். சரியாக 74 வருடங்கள், 6 மாதங்கள், 13 நாட்கள் வருகின்றன.”...

வினாக்கள்… விடைகள்…!

வினாக்கள்… விடைகள்…!

பா.ஜ.கவில் நமோ மோடி பஜனை பாடுவதை ஏற்க முடியாது.   – ஜஸ்வந்த் சிங் எவ்வளவு காலத்துக்குத்தான் ராம பஜனையே பாடிக் கொண்டிருப்பது? ஒரு மாற்றம் வேண்டாமா? எம்.ஜி.ஆர்., கலைஞர், ஜெய லலிதாவை முதலமைச்சர் களாக்கியதே காங்கிரஸ் தான்.  – தங்கபாலு காங்கிரஸ் முதல்வர் நாற்காலியில் உட்காரும் வாய்ப்புகள் வந்தபோதும்கூட காங்கிரஸ் அதை உதறிவிட்டு, இவர்களை முதல்வராக்கியதா சொல்ல வர்றீங்க… அப்படித் தானே…. பா.ஜ.க. கூட்டணியை நடிகர் ரஜினி ஆதரிப்பதாக வெளிப் படையாக அறிவிக்க வேண்டும்.    – பா.ஜ.க. தலைவர்கள்    வற்புறுத்தல் ஆமாம்! ரஜினி ‘வாய்ஸ்’ கொடுத்தால்தான் மோடி அலை வீசுதுன்னு மக்களை நம்ப வைக்க முடியும் ! குஜராத்தில் மனிதமலத்தை எடுக்கும் தொழிலில் 13 லட்சம் பேர் ஈடுபட் டுள்ளார்கள்.  – கர்மோச்சி அந்தோலன் ஆய்வு மய்யம் தகவல்! சும்மா சொல்லக்கூடாது; மோடி எப்படி எல்லாம் வேலை வாய்ப்புகளை உருவாக்குறாரு, பாருங்க! கூடங்குளம் அணுமின் நிலையத்தில் 3 மற்றும் 4 ஆவது பிரிவுகள் தொடங்க, ரஷ்யாவுடன் இந்தியா ஒப்பந்தம்...

காவல்துறையின் இழிவான அறிவிப்பு: அரசியல் சட்டமும் மனு சாஸ்திரமும் ஒன்றுதானாம்!

காவல்துறையின் இழிவான அறிவிப்பு: அரசியல் சட்டமும் மனு சாஸ்திரமும் ஒன்றுதானாம்!

மோடி எதிர்ப்பு பரப்புரைக்கு சென்னை மாவட்டக் கழக சார்பில் காவல்துறையிடம் அனுமதி கேட்கப்பட்டது. தென் சென்னை நாடாளுமன்றத் தொகுதியின் தேர்தல் பணிக்கான காவல் உதவி ஆணை யாளர், இதற்கான அனுமதி வழங்கும் ஆணையில், கூட்டத்துக்கான அனுமதிக்கு நிபந்தனையாக, “மனு சாஸ்திர புத்தகம் மற்றும் சட்டப் புத்தகங்களை எரிக்கக் கூடாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. “அரசியல் சட்டத்துக்கு சமமானது-மனு சாஸ்திரம்” என்று கூறுவது வன்மையான கண்டனத்துக்கு உரியது. சட்டத்தின் முன் அவைரும் சமம் என்று சட்டம் எழுதி வைத்துக் கொண்டு சமூகத்தில் ‘பிராமணன்’ மேலானவன், ‘சூத்திரன்’ இழிவானவன் என்று கூறும் மனு சாஸ்திரத்தை சட்டத்துக்கு சமமானதாகக் கருதுகிறது, காவல்துறை. திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மனு சாஸ்திர எரிப்புப் போராட்டத்தின் தாக்கத்தை அரசின் இந்த ஆணையில் காண முடிகிறது. ஆனாலும், தேர்தல் ஆணைய கட்டுப்பாட்டில் இயங்கும் காவல்துறை இப்படி ஒரு நிபந்தனையை விதித்திருப்பது தமிழினத்தையே அவமதிப்பதாகும். பெரியார் முழக்கம் 10042014 இதழ்

திராவிடர் விடுதலைக் கழக இணையதள செயல்பாட்டாளர்களின் கலந் துரையாடல் மற்றும் பயிற்சி வகுப்பு

திராவிடர் விடுதலைக் கழக இணையதள செயல்பாட்டாளர்களின் கலந் துரையாடல் மற்றும் பயிற்சி வகுப்பு

6.4.2014 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை நுங்கம்பாக்கம் இரயில் நிலையம் எதிரிலுள்ள ‘பிரிட்ஜ் அகடாமி’ அரங்கில், திராவிடர் விடுதலைக் கழக இணையதள செயல்பாட்டாளர்களின் கலந் துரையாடல் மற்றும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. கழக இணைய தள செயலாளர் அன்பு. தனசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கழதத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் தி.தாமரைக் கண்ணன் உள்பட 50 தோழர்கள் கலந்து கொண்டனர். திராவிடர் விடுதலைக் கழக அதிகாரபூர்வ இணையதளமான செழுமைப்படுத்துவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இணையதளங்களில் பெரியார் பற்றியும், பெரியார் இயக்கங்கள் பற்றியும் அவதூறு பரப்புவதை, எப்படி எதிர்கொள்வது என்றும் விளக்கமளிக்கப்பட்டது. இணையதளத்தில் பெரியார் முழக்கம், புகைப்படம், ஒலி, ஒளி, அறிக்கைகள், நிகழ்வுகள், மின்னூல்கள் முதலியவற்றை பதிவேற்றுவதற்கு தனித்தனியாக பொறுப்பாளர்கள் கீழ்கண்டவாறு நியமிக்கப்பட்டனர். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழை இணையத்தில் பதிவேற்றும் பணி,...