மோடி பிரதமராகக் கூடாது – ஏன்?

சென்னையில் கழகம் தொடர் கூட்டங்கள்

சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக 5.4.2014 முதல் 10.4.2014 வரை மோடி ஏன் பிரதமர் ஆகக் கூடாது என்பதை விளக்கி 5 நாள் தொடர் விளக்க தெருமுனைக் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

முதல் நாள் 5.4.2014 சனி மாலை 6 மணியளவில் சைதாப்பேட்டை-ஆலந்தூர் சாலை ஐந்து விளக்கு அருகில் நடந்த கூட்டத்தில் மனோகரன் தலைமை வகிக்க சிவா முன்னிலை வகித்தார்.

6.4.2014 ஞாயிறு மாலை 6 மணியளவில் திருவான் மியூர் ஜெயந்தி தியேட்டர் அருகில் நடைபெற்ற கூட்டத்திற்கு ஆ.சிவகுமார் தலைமை வகித்தார்.

7.4.2014 திங்கள் மாலை 6 மணியளவில் இராயப் பேட்டை டாக்டர் நடேசன் சாலை சந்திப்பில் நடைபெற்ற தெருமுனைக் கூட்டத்திற்கு சித்தார்த் தலைமை வகிக்க, செந்தில் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது.

தொடர் கூட்டத்தில் சென்னை மண்டல அமைப்புச் செயலாளர் அன்பு தனசேகர், தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், வழக்கறிஞர் துரை அருண், வழக்கறிஞர் திருமூர்த்தி, காஞ்சி மாவட்ட அமைப்பாளர் செங்குட்டுவன், விழுப்புரம் அய்யனார், சென்னை மாவட்ட தலைவர் பா. ஜான் ஆகியோர் உரை யாற்றினர்.

19.3.2014 அன்று மாலை தேனாம்பேட்டையில் மாலை 6 மணியளவில் ஆர்.பரணிகுமார் தலைமையில் மோடி பிரதமராகக் கூடாது-ஏன்? விளக்க தெரு முனைக் கூட்டம் நடைபெற்றது. கு. அன்புதனசேகர், தபசி குமரன், வழக்கிறஞர்கள் துரை அருண், திரு மூர்த்தி, செங்குட்டுவன் (காஞ்சி மாவட்ட அமைப் பாளர்) ஆகியோர் உரையாற்றினர். பார்த்திபன் நன்றி கூறினார்.

பெரியார் முழக்கம் 10042014 இதழ்

You may also like...