‘நிமிர்வோம்’ வாசகர் வட்டம் நடத்திய அண்ணா நினைவு கருத்தரங்கு
நிமிர்வோம் 13 ஆவது வாசகர் வட்ட நிகழ்வு. பேரறிஞர் அண்ணாவின் 51 ஆவது நினைவு நாளை முன்னிட்டு அண்ணா நினைவு தின சிறப்பு வாசகர் வட்டமாக திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை அலுவலகத்தில் 16.02.2020 அன்று மாலை 6:30 மணியளவில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கத்தில் ஊடகவியிலாளர் பிரகாஷ் வரவேற்புரையாற்றினார். தென்சென்னை மாவட்ட அமைப்பாளர் சு.பிரகாஷ் தலைமை வகித்தார். அண்ணாவின் இரங்கலுக்காக கலைஞர் எழுதிய கவிதையின் சிறு பகுதியை, ‘இதயத்தை தந்திடண்ணா’ என்ற தலைப்பில் யாழினி வாசித்தார். நிகழ்வில் 30.12.2019 அன்று வேலூர் கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை, ‘இந்திய நாட்டினருக்கும் எதிரானது தான் குடியுரிமை திருத்தச் சட்டம்’ என்கிற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது. இதனை கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் வெளியிட, பேராசிரியர் மு.நாகநாதன் பெற்றுக் கொண்டார். கடந்த வாசகர் வட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரை, ‘குடியுரிமை சட்டங்களை ஏன்...