Category: பெரியார் முழக்கம்

அரசியலில் பங்கேற்காத இந்த இயக்கத்தை நோக்கி திரண்டிருக்கும் இளைஞர் கூட்டத்தைப் பார்த்து வியக்கிறேன் – மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் முழக்கம்

அரசியலில் பங்கேற்காத இந்த இயக்கத்தை நோக்கி திரண்டிருக்கும் இளைஞர் கூட்டத்தைப் பார்த்து வியக்கிறேன் – மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் முழக்கம்

  சனாதனத்தை வேரறுப்போம், வெறுப்பு அரசியலை வீழ்த்துவோம், மாநில உரிமைகளைக் காப்போம் என்ற முழக்கங்களோடு திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் “இது தமிழ்நாடு! இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநில மாநாட்டில்” கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன், பெருமையடை கிறேன். இந்த இரண்டு நாள் மாநாடு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு பல்வேறு முன்னணி பேச்சாளர்கள் எல்லாம் பங்கேற்று கருத்துரை வழங்கியிருக்கிறார்கள். இந்த மாநாட்டை மிகச் சிறப்பாக ஒருங்கிணைத்து நடத்தி இருக்கக்கூடிய அண்ணன் கொளத்தூர் மணி அவர்களுக்கும் திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். திவிகவுடன் எனக்கு நெருக்கம் குறிப்பாக இந்த மேடையில் நம்முடைய கொள்கையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்கிற ஒரு வாய்ப்பாக அமைந்திருக்கிறது. இளைஞர்களுக்கு நம்முடைய கருத்துக்களை கொள்கைகளை விளக்கக்கூடிய ஒரு முயற்சியாக திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணியின் சார்பாக நடந்த “திராவிட மாடல் பயிற்சிப் பாசறை” கடந்த ஆறு மாதங்களில் “திராவிட இயக்க வரலாறு”,...

சுயமரியாதை எங்கள் அடையாளம்  சனாதனம் எமக்கு அவமானம்

சுயமரியாதை எங்கள் அடையாளம் சனாதனம் எமக்கு அவமானம்

திராவிடர் விடுதலை கழகம் நடத்திய சனாதனத்துக்கு எச்சரிக்கை விடும் இளைஞர் மாநாட்டிலிருந்து (ஏப்ரல் 29, 30 – 2023) சில செய்தித் துளிகள் : மாநாட்டை தொடங்கி வைத்துப் பேசிய தர்மபுரி நாடாளுமன்ற உறுப்பினர் டி.என்.வி. செந்தில்குமார், தேர்தல் களத்தில் தனது வெற்றிக்கு வாக்காளர்களிடம் வாக்குகளைச் சேகரித்த கழகத் தலைவர் கொளத்தூர் மணிக்கு நன்றி கூறியதோடு தன்னுடைய அரசியல் கட்சி திமுக என்றாலும் சமுதாய அமைப்பு – திராவிடர் விடுதலைக் கழகம் தான் என்று பெருமையுடன் குறிப்பிட்டார். சட்டமன்ற உறுப்பினர் மருத்துவர் எழிலன் தமிழ்நாடு முழுதும் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பயிற்சி முகாம்களில் ‘உயிர் தோற்றம்’ குறித்து தாம் பேசியதையும் தனது தேர்தல் வெற்றிக்கு திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் கடுமையாக உழைத்ததை யும் நினைவு கூர்ந்தார். மேடையில் அமைக்கப்பட்ட பதாகையில் ‘சுயமரியாதை எங்கள் அடையாளம்; சனாதனம் எமக்கு அவமானம்’ என்று ஒரு பக்கத்திலும். ‘பன்முகத் தன்மையை சிதைக்காதே; ஒற்றைப்...

சனாதன சக்திகளுக்கு எச்சரிக்கை வரலாறு படைத்தது சேலம் மாநாடு  ஆர்ப்பரித்து அணிவகுத்த கருஞ்சட்டைகள்  வைக்கம் போராட்டம் முடியவில்லை

சனாதன சக்திகளுக்கு எச்சரிக்கை வரலாறு படைத்தது சேலம் மாநாடு ஆர்ப்பரித்து அணிவகுத்த கருஞ்சட்டைகள் வைக்கம் போராட்டம் முடியவில்லை

வைக்கம் நூற்றாண்டையொட்டி வைக்கம் போராட்டம் முடியவில்லை எனும் தலைப்பில் ஜாதி – தீண்டாமை எதிர்ப்பு இயக்கத்தை முன்னெடுக்க கழகம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கழகத் தலைவர் கொளத்தூர் மணி திறந்தவெளி மாநாட்டில் முன்மொழிந்த தீர்மானம் வைக்கம் போராட்டம் முடிந்து 100 ஆண்டுகள்உருண்டோடிவிட்டன. வைக்கத்தில் மகாதேவன் கோயிலைச் சுற்றியுள்ள வீதிகளில் தீண்டப்படாத மக்கள் நடமாடும் உரிமைக்காகத் தொடங்கிய போராட்டம் ஒரு வருடம் 7 மாதங்கள் நீடித்தது. பிற்காலத்தில் கோயில் நுழைவு உரிமைக்கும் வழிவகுத்த இந்தப் போராட்டத்தை பெரியார், டி.கே. மாதவன் உள்ளிட்ட தலைவர்கள் வழி நடத்தினார்கள்.  போராட்டத்தில் பங்கேற்றதற்காக கிரிமினல் சட்டப் பிரிவுகளில் வழக்குகள் தொடரப்பட்டு இரண்டு முறை சிறை ஏகி கடுங்காவல் தண்டனைக்கு உள்ளாகிய ஒரே தலைவர் பெரியார்தான். வைக்கம் வீதிகளில் நடமாடும் உரிமை கிடைத்தாலும் நாடு முழுதும் வைக்கங்கள் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. வளர்ச்சிப் பாதையில் வழிகாட்டும் தமிழ்நாட்டில் கிராமங்களில் ஜாதி தீண்டாமைக் கொடுமைகள் நீடிக்கவே செய்கின்றன. ஜாதிய...

வரலாற்று ஆதாரங்களுடன் கொளத்தூர் மணி விளக்கம் செங்கல்பட்டு சுயமரியாதை மாநாடு நடத்தும் முடிவுக்கு பெரியார் வந்து சேர்ந்த காரணிகள்

வரலாற்று ஆதாரங்களுடன் கொளத்தூர் மணி விளக்கம் செங்கல்பட்டு சுயமரியாதை மாநாடு நடத்தும் முடிவுக்கு பெரியார் வந்து சேர்ந்த காரணிகள்

காங்கிரசில் இருந்த காலத்திலேயே அவரை இயக்கியது சுயமரியாதை உணர்வு தான். இராமாயணம், மனுசாஸ்திரத்தைத் தீயிட வேண்டும் என்று காங்கிரஸ் மாநாட்டிலேயே பேசினார். ¨        கள் இறக்கும் தொழிலைச் செய்பவன் மேல் ஜாதி; கள் குடிப்பவன் மட்டும் கீழ் ஜாதியா? என்று கேட்ட பெரியார், சீமைச் சாராயம் குடித்த பிரிட்டிஷ் துரைகளிடம் கைகட்டி நின்றவர்கள் இந்த பெரிய ஜாதி தான் என்று அம்பலப்படுத்தினார்.   பிப்ரவரி 18, 2023 அன்று கோவை மாநகரக் கழகம் நடத்திய “1929 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை இயக்க மாநாடும், தமிழ் நாட்டு அரசியலும் கருத்தரங்க”த்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. (சென்ற இதழ்த் தொடர்ச்சி) திருப்பூரில் 1922ஆம் ஆண்டு காங்கிரஸ் மாநாடு நடைபெறுகிறது, பெரியார் ஒரு தீர்மானத்தைக் கொண்டு வருகிறார். “எல்லோருக்கும் கோயில் நுழைவு உரிமை வேண்டும் நாடார் உள்ளிட்ட அனைவருக்கும்” என்கிறார். அப்போது நாடாரும் தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்த காலம், பெரியார் தென்...

அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழவல்லோம்? தேன்மொழி

அன்னை என்று புகழாமல் நாம் வேறு என்ன என்று புகழவல்லோம்? தேன்மொழி

பிறப்பும் கல்வியும் :  1920ஆம் ஆண்டு, மார்ச் மாதம் 10ஆம் நாள், வேலூரில் பிறந்தவர் காந்திமதி (மணி யம்மையின் இயற் பெயர்). அவரின் அப்பா கனகசபை விறகுக் கடை வைத்திருந்தார். அம்மா பத்மாவதி. காந்திமதி வேலூர், கொசப் பேட்டை அரசுப் பெண்கள் இடைநிலைப் பள்ளியில் படித்தார். மே 15, 1943ஆம் ஆண்டில் கனகசபை இறந்துவிட, எவ்வித வைதிகச் சடங்குகளும் இன்றி, தமிழ்ப் பாடல்களைப் பாட வைத்து இறுதிக் காரியங்கள் நடத்தினார் கனகசபையின் நண்பரான அண்ணல் தங்கோ. (தனித்தமிழ்ப் பற்றாளரான அண்ணல் தங்கோ அவர்கள்தான் காந்திமதி என்னும் பெயரைத் தமிழ்ப் பெயராகவும், காந்திமதியின் அரசியல் ஈடுபாடு கருதியும் க.அரசியல்மணி என மாற்றி அமைத்தவர் ஆவார்.) அந்த நிகழ்ச்சிக்குப் பெரியாரும் வந்திருந்தார். அதன்பின்,1943 ஜூலை மாதத்தில் முழுநேரப் பணியாளராக பெரியாரிடம் வந்துசேர்ந்தார். பெரியார் அவரை, குலசேகரன்பட்டினம் தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் புலவர் படிப்பில் சேர்த்தார். தேர்வு எழுத மதுரை சென்றபோது அவருடைய உறவினர் ஒருவரை...

12 மணி நேர வேலை சட்டம்; அரசு திரும்பப் பெற வேண்டும்

12 மணி நேர வேலை சட்டம்; அரசு திரும்பப் பெற வேண்டும்

1948ஆம் ஆண்டு இயற்றபட்ட தொழிற்சாலை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்திருக்கிறது தமிழ்நாடு அரசு. தொழிலாளர் களின் 8 மணி நேர வேலையை 12 மணி நேரமாக உயர்த்தி அறிவித்திருக்கிறது தமிழ்நாடு அரசு. இந்த சட்டத்திற்கு திமுகவின் கூட்டணி கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து சட்டமன்றத்தில் இருந்து வெளிநடப்பு செய்திருக்கிறது. இப்படிப்பட்ட ஒரு சட்டம் ஏன் கொண்டு வரப்பட்டுள்ளது என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தரும் விளக்கம் ஏற்றுக் கொள்வதாக இல்லை. பல தொழில் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வரும்போது இப்படி கடநஒiடெந hடிரசள என்ற ஒரு சட்ட திருத்தத்தை அவர்கள் கோருகின்றனர். அதற்காகவே இந்த திருத்தம் கொண்டு வரப்பட்டிருக்கிறது, தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் இல்லை, அவர்கள் விரும்பினால் வேலை செய்யலாம் என்று ஒரு விளக்கத்தை அவர் வழங்கியிருக்கிறார். முதலாளிகளிடம் அதிகாரத்தைக் கொடுத்துவிட்டு அவர்கள் தொழிலாளிகளுக்கு உரிய பாதுகாப்பை வழங்குவார்கள் என்று எதிர்பார்ப்பதில்...

புத்தகங்கள் வெளியீடு! புதிய தலைப்புகள்! 42 புத்தகங்கள்!

புத்தகங்கள் வெளியீடு! புதிய தலைப்புகள்! 42 புத்தகங்கள்!

ரூ.4000/- மதிப்புள்ள நூல்கள் ரூ.3000/-க்கு சலுகை விலையில் சேலத்தில் ஏப்.29.30 ல் நடைபெறும் “இது தமிழ்நாடு,இளைய தலைமுறையின் எச்சரிக்கை” மாநாட்டை முன்னிட்டு நிமிர்வோம் வெளியீட்டில் புத்தகங்கள் வெளியிடப் படுகின்றன. திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் எழுதி 2022 டிசம்பர் மாதம் நாட்டுடைமையாக்கப்பட்ட புத்தகங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட 37 தலைப்புகளும், கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேட்டி, உரைகள் ஆகியவை 3 புத்தகங்களாகவும், திமுக துணைப் பொதுச்செயலாளர் மேனாள் ஒன்றிய அமைச்சர் ஆ இராசா கருத்தரங்க உரை நூல் வடிவில் “எங்களை தனிநாடு கேட்க வைத்து விடாதீர்கள்” எனும் நூலும் ஆகியவற்றோடு “நான் பார்ப்பனர்களுக்கு அல்ல, பார்ப்பனீயத்துக்கே எதிரானவன்” (எனும் அம்பேத்கரின்  மேற்கோள் குறித்து) வெளியான ஆங்கில புத்தகத்தின் தமிழ் வடிவம். எட்வின் பிரபாகரன் மொழிப் பெயர்ப்பில். இவை அனைத்தும் சேர்த்து மொத்தமாக 42 புத்தகங்களாய் வெளியிடப்பட உள்ளது.இவற்றின் மொத்த பக்கங்கள் 4211 இதன் விலை ரூ. 4000/- மாநாட்டு திடலில் அனைத்து...

டெல்லி ”இந்தியன் எக்ஸ்ப்பிரஸ்”  சிறப்புக் கட்டுரை “தாய் வீட்டில்” வி.பி.சிங் சிலை

டெல்லி ”இந்தியன் எக்ஸ்ப்பிரஸ்” சிறப்புக் கட்டுரை “தாய் வீட்டில்” வி.பி.சிங் சிலை

வி.பி.சிங் சிலை சென்னையில் தமிழக அரசு நிறுவுவதை விவரித்து அருண் ஜனார்த்தன் டெல்லி இந்தியன் எக்ஸ்பிரஸ் ஏட்டில் (ஏப்.24) சிறப்புக் கட்டுரை ஒன்றை எழுதியுள்ளார். அதன் தமிழாக்கம். வி.பி.சிங் அமுல்படுத்திய மண்டல் பரிந்துரைக்கு  ஆதரவு தந்த கட்சிகளில் ஒன்று திராவிட முன்னேற்றக் கழகம். வி.பி.சிங் அமைச்சரவையில் திமுக இடம்பெற்ற போதும் சரி வி.பி. சிங் ஆட்சி கவிழ்க்கப்பட்ட போதும் சரி, அவருடைய மண்டல் பரிந்துரைகளை முழுமையாக ஆதரித்து நின்ற கட்சி திமுக. மண்டல் தூதுவர் என்ற புகழ்பெற்ற வி.பி.சிங் வரலாறு இந்தி மொழிகளில் மட்டுமே இடம்பெற்றிருந்த போது வடமாநிலங்களிலிருந்து வெகு தொலை வில் இருக்கும் தமிழ்நாடு அவருக்கு முழு உருவச்சிலை அமைக்க முடிவெடுத்திருக் கிறது. தமிழ்நாட்டு மக்களின் நன்றி உணர்வை வெளிப்படுத்த அவருக்கு சிலை அமைக்கப் போவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் அறிவித் துள்ளார். இதன் மூலம் ஒரே கல்லில் பல மாங்காய்களை அவர் வீழ்த்தி இருக்கிறார். சமூக நீதியை மையமாக...

வி.பி.சிங் சிலை : தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும்

வி.பி.சிங் சிலை : தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்க்கும்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு ஒன்றை அறிவித்திருக்கிறார். சமூக நீதி காவலர் வி.பி.சிங் அவர்களுக்கு சென்னையில் முழு உருவச் சிலை அமைக்கப்படும் என்று 110 விதியின் கீழ் அவர் அறிவித்திருக்கிறார். சட்டமன்றத்தில் பாஜக உட்பட அனைத்துக் கட்சி உறுப்பினர்களும் இதை மகிழ்ச்சியுடன் வரவேற்றிருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்க ஒன்றாகும். “இந்திய அரசியலில் ஓர் அதிசயம் வி.பி.சிங்”, தன்னை முன்னிலைப் படுத்திக் கொள்ளாமல் தன்னுடைய ஆட்சி அதிகாரத்தை சமூக நீதிக் கொள்கைக்காக பலிகடாவாக கொடுத்தவர் வி.பி.சிங். நம்பிக்கை வாக்கெடுப்புத் தீர்மானத்தை அவர் கோரும் போது 27ரூ மக்களின் சமூக நீதி ஆணையின் அடிப்படையில் நான் இந்த நம்பிக்கை வாக்கெடுப்பை கோருகிறேன். இதில் நம்பிக்கையுள்ளவர்கள் எனக்கு வாக்களிக்கட்டும், எதிர்ப்பவர்கள் என்னை எதிர்த்து வாக்களிக்கட்டும். பிரதமர் பதவியைத் தூக்கியெறிந்து விட்டு நான் வெளியே வரத் தயாராக இருக்கிறேன் என்று நாடாளுமன்றத்திலே பிரகடனப்படுத்தி அதன் வழியாக பதவியைத் தூக்கி எறிந்து விட்டு சமூக நீதியை...

காவல்துறை அதிகாரிகள், அரசு அலுவலர்களை தோழர்கள் சந்தித்து நிதி திரட்டினர்

காவல்துறை அதிகாரிகள், அரசு அலுவலர்களை தோழர்கள் சந்தித்து நிதி திரட்டினர்

சேலம் கழக மாநாட்டை ஒட்டி நன்கொடை திரட்டும் பணி ஏப்ரல் 17, அந்தியூரில் கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன் தலைமையில் ஈரோடு மாவட்டத் தலைவர் நாத்திகஜோதி முன்னிலையில் நடைபெற்றது. வியாபாரிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பு மக்களும் மாநாட்டு நிதியை வழங்கினார்கள். அந்தியூரில் ரூ.13,030 நன்கொடை திரட்டப்பட்டது. பங்கேற்றோர் : இராம.இளங்கோவன், நாத்திகஜோதி, காவை ஈசுவரன், சித்துசாமி, இளவரசன், இளம்பிள்ளை தங்கதுரை, தங்கமாபுரிபட்டினம் ராமசந்திரன், நங்கவள்ளி கிருஷ்ணன், பிரபாகரன், வனவாசி உமாசங்கர், நந்தினி , கே.ஆர்.தோப்பூர். அஜித்குமார் ஆகியோர். சேலம் மேற்கு : தனிநபர் வசூல் பணி சுசீந்திரன், சாரா தலைமையில் ஏப்ரல் 17 ஆம் தேதி சங்ககிரியில் நடைபெற்றது. சங்ககிரி பேரூராட்சி தலைவர், பேரூராட்சி செயல் அலுவலர், காவல்துறை உயர் அதிகாரி மற்றும் அரசு அலுவலர்கள் பலரும் மாநாட்டு நிதி வழங்கினார்கள். ரூ. 25,300 வசூலானது. இளைஞர்கள் அதிகளவில் பெரியாரிய இயக்கத்தில் இருப்பதை பார்த்து அரசு அதிகாரிகள் பாராட்டி...

பேரணி ; ஓர் அறிவிப்பு

பேரணி ; ஓர் அறிவிப்பு

எச்சரிக்கைப் பேரணியில் சிறப்பாக – மிடுக்காக அணிவகுத்து வரும் மாவட்டத்திற்கு பரிசுகள் வழங்கி மாநாட்டில் கவுரவிக்கப்படும். தோழர்களே! பரிசுகளைத் தட்டிச் செல்ல தயாராகுவீர்! எந்த மாவட்டம் முந்துகிறது என்று பார்க்கலாம். – திராவிடர் விடுதலைக் கழகம் பெரியார் முழக்கம் 27042023 இதழ்

இளைய தலைமுறையின் எச்சரிக்கை மணி – சேலத்தில் ஒலிக்கப் போகிறது

இளைய தலைமுறையின் எச்சரிக்கை மணி – சேலத்தில் ஒலிக்கப் போகிறது

திராவிட இயக்க வரலாற்றுப் பக்கங்களில் சேலம் பல முத்திரைகளைப் பதித்து நிற்கிறது. 1944இல் நீதிக் கட்சி – திராவிடர் கழகமாக பெயர் மாற்றம் பெற்றது சேலத்தில் தான். 1971இல் சேலத்தில் பெரியார் நடத்திய மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலம், இந்தியா முழுதும் பேசும் பொருளாகியது. இராமன் உள்ளிட்ட வேத மதக் கடவுள்களை ஊர்வலத்தில் அவமதித்ததாகக் குற்றச்சாட்டு; பெரியார் அஞ்சவில்லை. ஆம்; அப்படித்தான் செய்தேன்; சூத்திரனாக இருக்க மாட்டேன் என்ற உணர்ச்சியுள்ள ஒவ்வொருவரும் இதைத் தான் செய்வார்கள் என்றார் பெரியார். அப்போது நடந்த சட்டமன்ற தேர்தலில் இப்பிரச்சினையை முன்வைத்து காங்கிரசாரும் பார்ப்பனர்களும் தி.மு.க.வை தோற்கடிக்க தீவிரமாக செயல்பட்டனர். ஆனால் 184 இடங்களில் தி.மு.க. வெற்றி வாகை சூடியது. “நீங்கள் உலகப் புகழ் பெற்று விட்டீர்கள்; என் மீது சுமத்தப்பட்ட பழி நீங்கியது” என்று பெரியார், கலைஞருக்கு தந்தி மூலம் பாராட்டினார். தமிழர் வழிபாட்டு உரிமை மாநாடு; வேத மரபு எதிர்ப்பு மாநாடுகளை திராவிடர் விடுதலைக்...

சென்னையில் மாநாடு விளக்கக் கூட்டம்

சென்னையில் மாநாடு விளக்கக் கூட்டம்

புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் மற்றும்”இது தமிழ்நாடு! இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு!” விளக்கக் கூட்டம் ஏப்ரல் 13, மாலை 6 மணியளவில் அயனாவரம், ஜாயின்ட் ஆபிஸ் அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சேத்துப்பட்டு இராசேந்திரன் தலைமை வகித்தார். வட சென்னை மாவட்ட அமைப்பாளர் தட்சிணாமூர்த்தி முன்னிலை வகித்தார். முன்னதாக மாவட்டத் தலைவர் வேழவேந்தன் அம்பேத்கர் படத்தைத் திறந்து வைத்தார். நாத்திகனின் மந்திரமா? தந்திரமா ? நிகழ்ச்சி கூட்டத்தின் தொடக்கமாக நடைபெற்றது. தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர் திருப்பூர் மகிழவன் மாநாட்டின் நோக்கங்கள் குறித்து உரையாற்றினார். தொடர்ந்து, சென்னை கழகச் செயலாளர் இரா.உமாபதி, தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக்குழு உறுப்பினர் அன்பு தனசேகர் உள்ளிட்டோர் சிறப்புரையாற்றினர். திமுக பொதுக்குழு உறுப்பினர் சைதை மா.அன்பரசன் நிறைவுரையாற்றினார். பெரியார் முழக்கம் 20042023 இதழ்

கழகம் எடுத்த புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

கழகம் எடுத்த புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழா

வேலூர்: புரட்சியாளர் அம்பேத்கர் 132ஆவது பிறந்தநாள் விழா வேலூர் மாவட்டக் கழக சார்பில் மாவட்டச் செயலாளர் சிவா தலைமையில் குடியேற்றம், கொண்டசமுத்திரம் ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு திராவிடர்  விடுதலைக் கழகம் மற்றும் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் இணைந்து மாலை அணிவித்து முழக்கங்கள் எழுப்பி வீரவணக்கம் செலுத்தப்பட்டது. பின்பு அனைவரும் ஜாதி ஒழிப்பு உறுதி மொழியை எடுத்துக் கொண்டனர். நண்பகல் 12 மணிக்கு வேலூர் மாநகரில் விசிக ஒருங்கிணைத்த “ஜனநாயகம் காப்போம்! சனாதனத்தை வேரறுப்போம்!”பேரணியில் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். நண்பகல் 2 மணிக்கு ராமாலையில் திராவிட் மற்றும் பகுதித் தோழர்கள் ஒருங்கிணைப்பில் அம்பேத்கருடைய புகைப்படத்திற்கு மாலை அணிவித்து பள்ளி மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் சிறப்பு உணவு வழங்கப்பட்டது. மாலை 5 மணிக்கு  வேலூர் மாவட்டம் புட்டவாரபள்ளி கிராமத்தில் அமல்ராஜ், ஒருங்கிணைப்பில் பொதுமக்களோடு இணைந்து அம்பேத்கர்  பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.   இரவு பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது....

ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பில் 1 லட்சம் மாநாட்டு நிதி!

ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பில் 1 லட்சம் மாநாட்டு நிதி!

முதல் தவணையாக கழகத் தலைவரிடம் வழங்கினார்கள் ஈரோடு வடக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக வருகின்ற  ஏப்ரல் 29, 30 சேலத்தில் நடைபெறும் இது தமிழ்நாடு! இளைய தலைமுறை யின் எச்சரிக்கை மாநாட்டிற்காக கழகத் தோழர்கள் ஈரோடு வடக்கு மாவட்டத் திற்கு உட்பட்ட கோபி, கொளப்பலூர், காசிபாளையம், அளுக்குளி, அந்தியூர், குருவரெட்டியூர், பவானி ஆகிய பகுதிகளில் கழக ஆதராவாளர்களிடம் துண்டறிக்கை அளித்தல் மற்றும் நன்கொடை திரட்டும் பணிகளில் சிறப்பாக செயல்பட்டனர்.  மாநில வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன் தலைமையில் மாவட்ட தலைவர் நாத்திகசோதி, மாவட்ட செயலாளர் எலத்தூர் செல்வக்குமார் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இரமேசு, அழகிரி, கிருஷ்ணமூர்த்தி, இராவணன், அருளானந்தம், வேணுகோபால், வீரகார்த்திக், சுந்தரம், வினோத், வேலுச்சாமி, கருப்பணன், சுப்பிரமணியம், ரகுநாதன், மூர்த்தி, நிவாஸ் ஆகியோர் கலந்து கொண்டு நன்கொடை திரட்டும் பணியில் இணைந்து செயல்பட்டனர். அவ்வாறு நன்கொடையாக பெறப்பட்ட மாநாட்டு நிதியை முதல் தவணையாக ரூ. 1,00,000 (ஒரு லட்சம்...

ட இது தமிழ் நாடு; இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு  ட கருத்துச் செறிவு அரங்கங்கள்; கலை நிகழ்ச்சிகள் அடர்த்தியான நிகழ்வுகளுடன் சேலம் மாநாடு

ட இது தமிழ் நாடு; இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு ட கருத்துச் செறிவு அரங்கங்கள்; கலை நிகழ்ச்சிகள் அடர்த்தியான நிகழ்வுகளுடன் சேலம் மாநாடு

ஏப்ரல் 29,30 – சேலம் : திராவிடர் விடுதலைக் கழகத்தின் 2 நாள் மாநில மாநாடு. 29.04.2023 – பெரியார் அரங்கம் : காலை 9.00 மணி – கழகக் கொடியேற்றம் – நிர்மல்குமார் மாநகர அமைப்பாளர், கோவை 9.30 – புதுவை “விடுதலைக் குரல்” கலைக்குழு இசை நிகழ்ச்சி. தொடக்க உரை : DNV செந்தில்குமார் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர், தி.மு.க. 10.30  – கருத்தரங்கம் – கருப்பு சிவப்பு நீலம் இணையும் புள்ளிகள் தலைமை : இராம இளங்கோவன் (வெளியீட்டு செயலாளர்) மாநில உரிமைகளில் : மருத்துவர் எழிலன் (ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர்) சனாதன எதிர்ப்பில் : பேராசிரியர் ஜெயராமன் (தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்) கார்ப்பரேட் சுரண்டலில் : மதுக்கூர் இராமலிங்கம் (தீக்கதிர் ஆசிரியர்) பெண்ணியலில் : முனைவர் சுந்தரவள்ளி (த.மு.எ.க.ச.) இட ஒதுக்கீட்டில் : கு.அன்பு தனசேகர் (கழக தலைமைக் குழு உறுப்பினர் போலி அறிவியல்...

கழகத் தோழர் திலீபன் மீது வன்முறைக் கும்பல் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

கழகத் தோழர் திலீபன் மீது வன்முறைக் கும்பல் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர்திலீபன் (பழனி) மீது கொடும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வேலூர் மாவட்ட செயலாளர் சிவா தலைமையில் பாணாவரம் காவல்நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் அதிகாரம், மக்கள் தமிழகம் கட்சி, ஊர் பொது மக்கள் தோழைமை இயக்கத் தோழர்கள் 100 மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் முடிவில் தோழர்கள் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் சிறைவைக்கப்பட்டனர். நிகழ்வில் தலைமை குழு உறுப்பினர் அய்யனார், சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி, மக்கள் தமிழகம் கட்சி விஸ்வநாதன், மக்கள் குடியரசு இயக்கம் ஜான் மண்டேலா, திவிக பேரணாம்பட்டு நகர செயலாளர் தோழர்கள் ச.பார்த்திபன், மற்றும் மகிழவன், இரண்யா, அன்பழகன், ராஜேஷ், மணி, அருண், சூரியா, குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 20042023 இதழ்    

மாநாட்டு நன்கொடையை அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம்

மாநாட்டு நன்கொடையை அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம்

வங்கிக் கணக்கு PURATCHI PERIYAR MUZHAKAM Karur Vysya Bank, Adyar Branch Current Acct No.: 1257115000002041 IFSC : KVBL0001257 ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ கரூர் வைஸ்யா வங்கி, அடையாறு கிளை ‘கரண்ட்’ அக்கவுண்ட் எண் :: 1257115000002041 IFSC : KVBL0001257 கூகுள் பே எண் : 9444115133   பெரியார் முழக்கம் 20042023 இதழ்

தலையங்கம் வடநாட்டுத் தொழிலாளர் பிரச்சினையில் பா.ஜ.க.வின் அற்ப அரசியல்

தலையங்கம் வடநாட்டுத் தொழிலாளர் பிரச்சினையில் பா.ஜ.க.வின் அற்ப அரசியல்

தமிழ்நாட்டில் வேலை தேடி வரும் வடமாநிலத்தவர்கள் படுகொலைக்கு உள்ளாகிறார்கள்; திட்டமிட்டு தாக்கப்படுகிறார்கள் என்று சமூக வலைதளங்களில் வதந்தியைப் பரப்பினார்கள். இதனால் அச்சமடைந்த வடமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பத் தொடங்கினர். வதந்தியைத் திட்டமிட்டு பரப்பியவர்கள் பா.ஜ.க.வினர். தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட்டு பீகார் முதல்வர் நிதிஷ்குமாரிடம் பேசி தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட நிலை ஏதும் இல்லை என்று விளக்கி வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்புகளை வழங்கி வருகிறது என்று விளக்கியுள்ளார். வதந்தியைப் பரப்பிய பா.ஜ.க.வைச் சார்ந்த பிரசாந்த் உமாரோ, சுபம் சுக்ளா, யுவராஜ் சிங்ராஜ்புட் ஆகியோர் மீதும் வடமாநில இந்தி பத்திரிகையான ‘தைனிக்’ ஆசிரியர் பாஸ்கர் மற்றும் ‘தன்வீர் போஸ்ட்’ பத்திரிகை ஆசிரியரான முகம்மது தன்வீர் ஆகியோர் மீதும் தமிழ்நாடு காவல்துறை வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. இவர்களைக் கைது செய்ய வடமாநிலங்களுக்கு தமிழகக் காவல்துறை தனிப் பிரிவு விரைந்துள்ளது. தமிழ்நாட்டில் நீண்டகாலமாக வடநாட்டு தொழிலாளர்கள் மீது தி.மு.க. வெறுப்பை விதைத்து வருகிறது என்று...

அரசியல் இலாபத்துக்காக நடத்தப்பட்டதே ‘புல்வாமா’ தாக்குதல்

அரசியல் இலாபத்துக்காக நடத்தப்பட்டதே ‘புல்வாமா’ தாக்குதல்

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இந்திய ராணுவத்தினர் மீது தீவிரவாதிகளின் தற்கொலைப் படை தாக்குதல் ஒன்றை நடத்தியது. இந்த தாக்குதல் அப்போது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. 40 இந்திய ராணுவத்தினர் வீர மரணம் அடைந்தனர். பாஜக இதையே தன்னுடைய தேர்தல் பிரச்சாரமாகவும் மாற்றிக் கொண்டது. நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து வந்துவிட்டது, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற பிரச்சாரத்தை அவர்கள் முடுக்கி விட்டார்கள். இது குறித்து அப்போது ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் இரண்டு நாட்களுக்கு முன்பு “கூhந றுசைந” இணையதளத்திற்காக கரண் தாப்பருக்கு ஒரு பேட்டியை அளித்திருக்கிறார். அந்த பேட்டியில் அவர் தெரிவித்திருக்க கூடிய கருத்துக்கள் அதிர்ச்சி தரக்கூடியவை, இது அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்பட்ட தாக்குதல் என்பதை அவரும் உறுதிப்படுத்தியிருக்கிறார். இராணுவத்தினர் ஜம்முவில்...

கல்வி, வேலை, சமூகத் துறைகளில் திராவிட இயக்கச் சாதனை ரம்யா

கல்வி, வேலை, சமூகத் துறைகளில் திராவிட இயக்கச் சாதனை ரம்யா

12.03.2023 அன்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற “அன்னை மணியம்மையார் பிறந்தநாள் மற்றும் மகளிர் தின பெண்கள் சந்திப்பு” நிகழ்ச்சியில் நிகழ்த்திய உரையின் சென்ற இதழ்த் தொடர்ச்சி. கல்வி, வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டுப் பெண்கள், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் எவ்வளவு வேகமாக முன்னோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே, திராவிட மாடலின் சாதனைக்கு சாட்சியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் எழுத்தறிவு இல்லாத இளம்பெண்கள் 15 முதல் 24 வயது வரை 2.93ரூ இருக்கிறார்கள். (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்) இதில் கேரளா மட்டும்தான் நம்மை விட முன்னேறி இருக்கிறது. அங்கு எழுத்தறிவு இல்லாத இளம்பெண்கள் 0.09ரூ மட்டும்தான். ஆனால், பீகாரில் 36.2ரூ, ராஜஸ்தானில் 28.7ரூ, ஜார்கண்டில் 28.64ரூ, உத்திரப் பிரதேசத்தில் 24.22ரூ, மத்திய பிரதேசத்தில் 22.39ரூ, குஜராத்தில் 15ரூ என வட இந்தியாவின் பல இந்தி பேசும் மாநிலங்களில் இரட்டை இலக்கங்களில்தான் நிலைமை இருக்கிறது. தமிழ்நாட்டில் பெண்கள் எழுத்தறிவு அதிகம் பெற்றிருப்பதற்கு...

ட அமைச்சர் உதயநிதி – அய். பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர்களிடம் நேரில் மாநாட்டு அழைப்பிதழ்   ட நன்கொடை திரட்டும் பணியில் தோழர்கள் தீவிரம்  பேரெழுச்சியுடன் சேலம் மாநாட்டுப் பணிகள்

ட அமைச்சர் உதயநிதி – அய். பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர்களிடம் நேரில் மாநாட்டு அழைப்பிதழ் ட நன்கொடை திரட்டும் பணியில் தோழர்கள் தீவிரம் பேரெழுச்சியுடன் சேலம் மாநாட்டுப் பணிகள்

சென்னை : சேலத்தில் வருகிற 29,30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இது தமிழ்நாடு! இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு! அழைப்பிதழை, மாநாட்டில் சிறப்புரையாற்ற உள்ள மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி உள்ளிட்ட கழகத் தோழர்கள் நேரில் சந்தித்து வழங்கினார்கள். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினரும், விசிக தலைவருமான தொல்.திருமாவளவன், விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மருதையன், தபெதிக பிரச்சார செயலாளர் சீனி.விடுதலை அரசு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் சிங்கராயர், கருஞ்சட்டைப் பதிப்பக இயக்குனர் பெல் ராஜன், யூடியூபர்கள் மைனர் வீரமணி, மகிழ்நன் உள்ளிட்ட தோழர்களுக்கு மாநாட்டு அழைப்பிதழை கழகத் தோழர்கள் வழங்கினார்கள். மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலுவை சந்தித்து மாநாட்டு...

சேலம் மாநாடு: களப்பணிகளில் தோழர்கள் தீவிரம்

சேலம் மாநாடு: களப்பணிகளில் தோழர்கள் தீவிரம்

ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் “இது தமிழ்நாடு! இளம் தலைமுறையின் எச்சரிக்கை” மாநாட்டையொட்டி சேலம் கிழக்கு மாவட்டக் கழகம் சார்பில் மார்ச் 04 ஆம் தேதி கொங்கனாபுரம் பகுதியில் கடைவீதி வசூல் மேற்கொள்ளப்பட்டது. முதல்நாள் வசூல் ரூ.5490/- ஆனது. மாநாட்டுத் துண்டறிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மாநாட்டையொட்டி சுவரெழுத்துப் பணி களையும் சேலம் மாவட்டக் கழகத் தோழர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். கோவை மேட்டுப்பாளையத்தில் மாவட்டத் தலைவர் பா.இராமசந்திரன்  ஏற்பாட்டில் சுவரெழுத்துப் பணிகள் நடைபெறுகிறது. மாநாட்டு நிகழ்ச்சி நிரல் இறுதி செய்யப்பட்டு வருகிறது.  மாநாட்டு நிதி திரட்டலுக்கான நன்கொடை சீட்டுகள் மாவட்டக் கழகங் களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  தோழர்கள் குடும்பத்தோடு திரள ஆயத்தமாகிறார்கள். மாநாட்டின் தலைப்பையும் கருப்பு-சிவப்பு-நீலம் இணைந்து நிற்பதையும் பல்வேறு அமைப்புகள் வரவேற்றன. பெரியார் முழக்கம் 09032023 இதழ்

கலிபோர்னியா மாநிலத்தில் ஜாதிப் பாகுபாடுகளுக்குத் தடை

கலிபோர்னியா மாநிலத்தில் ஜாதிப் பாகுபாடுகளுக்குத் தடை

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், ஜாதிப் பாகுபாடுகளைத் தடை செய்யும் மசோதாவைக் கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே வாஷிங்டன் மாநிலத்திலுள்ள சீட்டில் நகரசபை இதேபோல ஒரு சட்டத்தை நிறைவேற்றி யுள்ளது. இப்போது அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலமே இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. மாநில சட்டமன்ற செனட்டர் ஆயிஷா வகாப் என்ற முஸ்லிம் பெண், இந்த மசோதாவை அறிமுகம் செய்துள்ளார். இவர் ஆப்கானிஸ்தானத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு அமெரிக்காவின் குடியுரிமைப் பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றுள்ளார். இது சமூகநீதி மனித உரிமைப் பிரச்சினை என்று அவர் கூறியுள்ளார். இந்த மசோதாவுக்கு அமெரிக்க இந்துக்கள் கூட்டமைப்பு போன்ற பார்ப்பன சனாதன அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தகவல்: ‘டைம்ஸ் ஆப் இந்தியா’, மார்ச் 24, 2023 பெரியார் முழக்கம் 13042023 இதழ்

வைக்கம் போராட்டம்: சில வரலாற்றுக் குறிப்புகள் சனாதனத்தின் முகத்திரையைக் கிழிக்க சேலத்தில் கூடுவோம்; வாரீர்!

வைக்கம் போராட்டம்: சில வரலாற்றுக் குறிப்புகள் சனாதனத்தின் முகத்திரையைக் கிழிக்க சேலத்தில் கூடுவோம்; வாரீர்!

வைக்கத்தில் ‘முறை ஜெபம்’ என்ற சடங்கு நிகழும்போது, தீண்டப்படாதவர்கள் கோயிலைச் சுற்றி எந்த வீதிகளிலும் நடப்பதற்கு அனுமதிப்பது இல்லை. டி.கே. மாதவன் என்ற ஈழவ சமுதாய வழக்கறிஞர் நீதிமன்றம் போவதற்கான பாதை அடைக்கப்பட்டதால்தான் பிரச்சினை தீவிரமாகியது. அது என்ன முறை ஜெபம்? 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை நம்பூதிரி பார்ப்பனர்களுக்காக மட்டும் திருவிதாங்கூர் அரசர் நடத்தும் ஒரு சடங்குதான் ‘முறை ஜெபம்’. 150 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மன்னர் ‘பிராமணன்’ ஒருவனைக் கொன்றதற்காக நடத்தப்படும் பிராயச்சித்த சடங்கு. 60 நாட்கள் இந்த ஜபம் நடக்கும். அனைத்து நம்பூதிரிகளும் பங்கேற்பார்கள். ஒவ்வொரு நம்பூதிரிக்கும் ஏதாவது வசதி குறைவுகள் இருக்கிறதா என்பதை அரசர் நேரில் கேட்டு அறிந்து குறைகளை உடனடியாகத் தீர்த்து வைப்பார். அவர்கள் தேவைகள் முழுமையாக நிறைவேற்றப்படும். 25 ஆண்டுகாலம் இந்த சடங்கை நடத்த வேண்டும் என்று தொடங்கியபோது முடிவு செய்யப்பட்டது. பார்ப்பனர்கள் விடுவார்களா? 25 ஆண்டுகாலத்துக்குப் பிறகும் இந்த சடங்கைத் தொடர்ந்து...

மீண்டும் ‘கருவறைத் தீண்டாமை’யை நிலைநாட்டத் துடிப்பு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தில் ‘ஓட்டை’ போட்டுவிட்டது நீதிமன்றம்

மீண்டும் ‘கருவறைத் தீண்டாமை’யை நிலைநாட்டத் துடிப்பு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தில் ‘ஓட்டை’ போட்டுவிட்டது நீதிமன்றம்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகரா கலாம் என்று திராவிட மாடல் அரசு கொண்டு வந்த சமூக புரட்சித் திட்டத்தில் மாபெரும் ஓட்டையைப் போட்டிருக்கிறது மதுரை உயர்நீதிமன்ற கிளை. மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் திருவரங்கம் குமர வயலூர் கோயிலில் நியமிக்கப்பட்ட பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களான எஸ்.பிரபு, எஸ்.ஜெயபால் ஆகியோரது நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறார். அதற்கு அவர் கூறுகிற காரணம், “இந்தக் கோயில் காமிகா ஆகமத்தின் கீழ் வருகிறது. இந்தப் பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் அந்த ஆகமக் கோயிலில் பூஜை செய்ய முடியாது. ஆதி சிவாச்சாரியார், ஆதி சைவர்கள் மட்டும் தான் இங்கு பூஜை செய்ய உரிமை உண்டு” என்று அவர் கூறியிருக்கிறார். பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் தங்களை ‘அகஸ்தியர் குலம்’ என்று கூறியபோது அதற்கு சான்று கேட்டார் நீதிபதி. காமிகா ஆகமபடி ஆதி சிவாச்சாரியார்கள் தான் பூசை செய்ய வேண்டும் என்றால் அவர்கள் சிவாச்சாரியார் குலம் என்பதற்கு சான்று கேட்டீர்களா என்று வழக்கறிஞர்...

நங்கவள்ளி ஒன்றியத்தில் பகுத்தறிவுப் பரப்புரை

நங்கவள்ளி ஒன்றியத்தில் பகுத்தறிவுப் பரப்புரை

திராவிடர் விடுதலைக் கழக சேலம் மாவட்டம்,நங்கவள்ளி ஒன்றியத்தின் சார்பில் 22.02.2023 புதன்கிழமை கிராமப்புற பகுத்தறிவு பிரச்சார தெருமுனை கூட்டங்கள் நடைபெற்றன முதல் தெருமுனை கூட்டம் பக்க நாடு சந்தை அருகில் மாலை 5.00 மணிக்கு நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. காவை இளவரசனின் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் புதியவன், மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி சீ.அன்பு, கழக தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல் ஆகியோர் கருத்துரை யாற்றினார்கள். இப்பகுதியில் பெருமளவில் மக்கள் ஆர்வத்துடன் பிரச்சாரத்தை உற்று கவனித்ததோடு உண்டியல் வசூல் 840 ரூபாய் வழங்கி ஆதரவளித்தனர். முடிவில் சிவக்குமார் நன்றியுரையாற்றினார். இரண்டாவது நிகழ்வு ஆடையூர் குடியிருப்பு பகுதியில் 7.00 மணி அளவில் நடைபெற்றது. மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்த கிராமப்புற பகுத்தறிவு பிரச்சார தெருமுனை கூட்டத்திற்கு நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இக் கூட்டத்தில் புதியவன் மற்றும் வழக்கறிஞர் வித்யாபதி...

விஞ்ஞானிகள் கடும் கண்டனம்: மருத்துவ சோதிட வகுப்பைத் தொடங்குகிறது மருத்துவக் கவுன்சில்

விஞ்ஞானிகள் கடும் கண்டனம்: மருத்துவ சோதிட வகுப்பைத் தொடங்குகிறது மருத்துவக் கவுன்சில்

ஆயுர்வேத மருத்துவப் படிப்பில் ‘மருத்துவ சோதிடம்’ என்ற புதிய வகுப்பை இந்திய மருத்துவக் கட்டமைப்புக்கான தேசிய கவுன்சில் உருவாக்கியுள்ளது. இதற்கு ‘அறிவியல் கழகம்; தடைகள் தகர்ப்பு’ என்று விஞ்ஞானிகள் – அறிவியலாளர்களைக் கொண்ட அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வானத்திலுள்ள கிரகங்கள் மனித உடல்கள் மீதும் உணவியல் மீதும் தாக்கத்தை உருவாக்குகிறது என்பது அறிவியலுக்கு எதிரான மூடநம்பிக்கை. இந்த மூட நம்பிக்கைகளை அறிவியல் பாடத்தில் சேர்ப்பது கண்டனத்துக்குரியது என்று அந்த அமைப்பு அ றிக்கை வெளியிட்டுள்ளது. இந்த வகுப்புக்கு இதுவரை 1000 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். மருத்துவ அறிவியல் பயிலும் மாணவர்களை மூடநம்பிக்கைகளில் ஆழ்த்தும் இந்த வகுப்பு, இந்திய கல்வி முறையை மதிப்பிழக்கச் செய்து நாட்டுக்கு கேடு விளைவிப்பதாகி விடும். இந்த கேலிக் கூத்து நாடகங்களை குடிமக்கள் வேடிக்கைப் பார்க்கக் கூடாது; எதிர்க்க வேண்டும் என்று அறிவியல் கழகம் தனது கண்டன அறிக்கையில் கூறியுள்ளது. பெரியார் முழக்கம் 02032023 இதழ்

இதுதான் தமிழ்நாடு; இதுதான் பெரியார் மண்!

இதுதான் தமிழ்நாடு; இதுதான் பெரியார் மண்!

மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தைச் சார்ந்த ஒரு பட்டதாரி பெண்,  தன்னை நரபலி தரப்போகிறார்கள் என தனது குடும்பத்தினரிடம் பயந்து பாதுகாப்பு கேட்டு தமிழ்நாடு வந்துள்ளார். மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, அவரை உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர் முன்னிலையில் ஒப்படைத்து, நீதிபதி உரிய பாதுகாப்பு வழங்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளார். அரசு வழக்கறிஞரும் பாதுகாப்பை உறுதி செய்துள்ளார். தமிழ்நாடு தான் தன்னைப் பாதுகாக்கும் என்று தமிழ்நாடு வந்ததாக அந்தப் பெண் கூறி உள்ளார். ஆர்.எஸ்.எஸ் குடும்பம், சொந்த மகளை நரபலி தருகிறது; பெரியார் மண் அவரை காப்பாற்றுகிறது. இதுதான் தமிழ்நாடு; இதுதான் பெரியார் மண். சங்கிகளே என்ன சொல்லப் போகிறீர்கள்? பெரியார் முழக்கம் 02032023 இதழ்

கோவை கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேச்சு

கோவை கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேச்சு

இலண்டனில் இறைச்சி சாப்பிட்ட வ.வே.சு. அய்யர் தான் சேரன்மாதேவி குருகுலத்தில் வர்ணத் தீண்டாமையை அமுல்படுத்தினார் ¨          செங்கல்பட்டு மாநாட்டுக்கு உலக பகுத்தறிவாளர்கள் அமைப்புகளை எடுத்துக்காட்டி மூடநம்பிக்கைகளை ஒழிக்க பெண்களுடன் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார் பெரியார். ¨          திருமணத்துக்கு தாலி என்ற திட்டத்துக்கு மாற்றாக கல்லூரி படிக்க வரும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழக முதல்வரின் திட்டம் செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டுக் கோரிக்கையின் விரிவாக்கம் தான். பிப்ரவரி 18, 2023 அன்று கோவை மாநகரக் கழகம் நடத்திய “1929 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை இயக்க மாநாடும், தமிழ் நாட்டு அரசியலும் கருத்தரங்க”த்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. சுயமரியாதை இயக்கம் 1929ஆம் ஆண்டு பிப்ரவரி 17, 18 ஆகிய தேதிகளில் நடந்தேறிய மாநாடு, முதல்நாள் மாநாடு என்பது பெரிய ஊர்வலம் வந்து சேர்வதற்கு நீண்ட நேரமானது. தலைமையுரை வரவேற்புரை யுடன் முதல்நாள் நிகழ்வு நிறைவு பெற்றது. அடுத்தநாள்...

மதுரையில் மணிமேகலை – மா.பா.மணி அமுதன் சுயமரியாதை இணையேற்பு விழா

மதுரையில் மணிமேகலை – மா.பா.மணி அமுதன் சுயமரியாதை இணையேற்பு விழா

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மதுரை மாவட்டச் செய லாளர் மா.பா மணியமுதன் – மணிமேகலை ஆகியோரின் சுயமரியாதை இணையேற்பு விழா 26.02.23 ஞாயிறு அன்று மதுரை மேலூர் ரஹ்மா திருமண மண்டபத்தில் காலை 10.30 மணியளவில் துவங்கி நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்தார். இணையேற்பு விழாவிற்கு ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் இரா.அதியமான் முன்னிலை வகித்தார். விழாவின் துவக்க நிகழ்வாக வானவில் இன உணர்வுப் பாடலைப் பாடினர். மணமக்களை வாழ்த்தி அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் பசும்பொன் பாண்டியன், தமிழ் தேச மக்கள் முன்னணியின் தலைவர் மீ.த.பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர்கள் வன்னி அரசு, கனியமுதன், தமிழ்மண் தன்னுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. ஜெயராமன், கழகத்தின் பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், கழகப் பொருளாளர் துரைசாமி ஆகியோர் பேசினர். தோழர்களின் வாழ்த்துரைகளுக்கு பின்பு கழகத் தலைவர்...

பெரியார் வெற்றி பெறுகிறார்!

பெரியார் வெற்றி பெறுகிறார்!

ராய்ப்பூரில் கூடிய காங்கிரஸ் கட்சி மாநாடு தன்னுடைய கட்சி விதிகளில் பல முக்கிய திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஏன் வெளியேறினார், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்று அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய சமூக நீதிக் கொள்கையை காங்கிரஸ் கட்சி ஏற்க வேண்டும் என்று மாநாடுகளில் தீர்மானம் கொண்டு வந்து காங்கிரஸ் கட்சியின் பார்ப்பன தலைவர்கள் அந்த தீர்மானத்தை தோற்கடித்ததன் காரணமாக பெரியார் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பெரியார் கட்சியில் இருந்தபோது கதர் மூட்டைகளை தூக்கி கொண்டு ஊர் ஊராக விற்பனை செய்தவர் தான், கள்ளுண்ணாமை என்ற கொள்கையை ஆதரித்து தன் தோட்டத்திலிருந்த தென்னை மரங்களை எல்லாம் வெட்டி வீழ்த்தியவர் தான் பெரியார், கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை ஈரோட்டில் இந்தியாவே வியக்கும் அளவுக்கு நடத்தி முடித்தவர் தான் பெரியார், ஆனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதற்குப் பிறகு அதன் காந்தியக் கொள்கைகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்தினார்.  கதர்...

பெண்களின் சுயமரியாதையை நிலைநாட்டும் திராவிட மாடல் (அன்றும்-இன்றும்)

பெண்களின் சுயமரியாதையை நிலைநாட்டும் திராவிட மாடல் (அன்றும்-இன்றும்)

12.03.2023 அன்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற “அன்னை மணியம்மையார் பிறந்தநாள் மற்றும் மகளிர் தின பெண்கள் சந்திப்பு” நிகழ்ச்சியில் நிகழ்த்திய உரை. பெண்களின் சுயமரியாதை என்பது எதில் அடங்கியிருக்கிறது என்பதில் இருந்துதான் தலைப்பை ஆராய வேண்டியிருக்கிறது. கல்வி, வேலை வாய்ப்பு அதன்மூலம் சமூகத்தில் பெண்கள் அடையும் வளர்ச்சியில்தான் அவர்களின் சுயமரியாதை அடங்கியிருக்கிறது. பெண்கள் வளர்ச்சி இல்லாமல் ஒட்டுமொத்த சமூகத்தின் வளர்ச்சி இல்லை. அதை திராவிடர் இயக்கம் நன்கு புரிந்து வைத்திருந்தது. பெண் என்றால் எப்படி இருக்க வேண்டுமென்று இந்துமதம் நிறைய கட்டுபாடுகள் வைத்திருக்கிறது. இந்து மதம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், ஜாதிய கட்டமைப்பு பலமாக இருக்க வேண்டும். ஜாதிய கட்டமைப்பு பலமாக இருக்க வேண்டும் என்றால் பெண்களை அடக்கி, ஒடுக்கி வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் ஜாதி கவுரவம் பெண்களிடத்தில்தான் இருக்கிறது. பெண்களுடைய கற்பில்தான் குடும்ப கவுரவம், ஜாதிப் புனிதம் இருக்கிறது. ஒரு பெண் திருமணம் ஆகும்வரை...

தலையங்கம் மனு சாஸ்திரத்துக்கு சியாட்டில்  தந்த மரண அடி

தலையங்கம் மனு சாஸ்திரத்துக்கு சியாட்டில் தந்த மரண அடி

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு சென்ற இந்து சனாதனவாதிகள் தங்களின் ஜாதியையும் உடன் சுமந்து போய் ஜாதியமைப்பே இல்லாத நாட்டில் ஜாதியத்தையும் அதன் பாகுபாடுகளையும் திணித்து விட்டார்கள். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, மேலை நாட்டுக் கலாச்சாரம் – நமது சனாதன கலாசாரத்தை சீரழித்து விட்டது என்கிறார். உண்மையில் சனாதன கலாச்சாரம் தான் மேலை நாடுகளின் சமத்துவப் பண்பாட்டை சீர்குலைத்து வருகிறது. அதன் எதிரொலிதான் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்திலுள்ள சியாட்டில் நகராட்சி ஜாதிப் பாகுபாடுகளைத் தடை செய்து தீர்மானம் நிறைவேற்றியதாகும். அமெரிக்காவுக்குக் குடியேறிய அந்நாட்டு குடிமக்களாகிய தெற்கு ஆசியர்களிடையே ‘இந்து சனாதனம்’ திணித்த ஜாதியப் பாகுபாடுகளால் பணியிடங்களிலும் குடியேறிய மக்களிடமும் பாகுபாடுகளைக் கொண்ட ‘மனுவாதம்’ தலைவிரித்தாடத் தொடங்கியது. நவீன தொழில்நுட்பங்களுடன் இயங்கும் தொழில் நிறுவனங்களிலும் அமெரிக்காவின் மிகப் பெரிய தொழில் நுட்பப் பூங்கா இயங்கும் சிலிகான் பள்ளத்தாக்கிலும் பணியிடங்களில் பாகுபாடுகள் காட்டப்படுகின்றன. இந்தப் பூங்காவில் மிகப் பெரிய தொழிலதிபராகக் கருதப்படும் சிஸ்கோ என்பவர், தொழிலாளர்கள்...

களப்பணி: செயல்வீரர்களுக்கு கழகத் தலைவர் பாராட்டு

களப்பணி: செயல்வீரர்களுக்கு கழகத் தலைவர் பாராட்டு

கழகம் நடத்தும் ஏப்.29, 30இல் “இளம் தலைமுறையின் எச்சரிக்கை” மாநாட்டிற்கான களப் பணியில் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கும் சேலம் மாவட்ட கழகத் தோழர்களுக்கு கழகத் தலைவர் பாராட்டுதல்களை தெரிவித்து பயனாடை அணிவித்தார். கழகத் தலைவரின் ஆலோசனைப்படி சேலம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மாநாட்டிற்கான ஆதரவு திரட்டுதல் மற்றும் நிதி வசூலுக்காக நங்கவள்ளி அன்பு, இராஜேந்திரன் தலைமையில் சேலம் மேற்கு குழுவும், நங்கவள்ளி கிருஷ்ணன், இளம்பிள்ளை தங்கதுரை தலைமையில் சேலம் கிழக்கு குழுவும் அமைக்கப்பட்டு மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் துண்டறிக்கை வழங்குவது மற்றும் நிதிதிரட்டுவது ஆகியவற்றில் தோழர்கள்  தொய்வின்றி கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் மிகச் சிறப்பாக களப்பணியாற்றி வந்ததை நாள்தோறும் கவனித்து வந்த கழகத் தலைவர், தோழர்களைப் பாராட்டும் விதமாக நிகழ்வு ஒன்றை மாவட்டக் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யக் கேட்டுக்கொண்டார் அதன்படி மேட்டூர் கழக நகரத் தலைவர் செ. மார்ட்டின் உணவு ஏற்பாட்டுக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டார். கொளத்தூர் உக்கம்பருத்திக்காடு கழகத் தோழர்கள்...

வைக்கம் : சில வரலாற்றுக் குறிப்புகள் காங்கிரஸ் பார்ப்பனர்களுக்கு ஒரு நீதி; பெரியாருக்கு ஒரு நீதி

வைக்கம் : சில வரலாற்றுக் குறிப்புகள் காங்கிரஸ் பார்ப்பனர்களுக்கு ஒரு நீதி; பெரியாருக்கு ஒரு நீதி

வைக்கம் போராட்டத்தில் பெரியார் சிறைச் சாலைகளையும் அடக்குமுறைகளையும் சந்தித்தார். அதே நேரத்தில் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் பார்ப்பனர்கள் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பட்டனர். வைக்கம் போராட்டத்தைப் பார்வையிட வந்த காங்கிரஸ் தலைவர் சீனிவாச அய்யங்கார் வைக்கம் திவான் வீரராகவ அய்யங்கார் வீட்டில் தங்கினார். மற்றொரு காங்கிரஸ் தலைவர் எஸ்.வி. வெங்கட்ரமண அய்யங்கார், காவல்துறை ஆணையர் அனுப்பிய காரைப் பயன்படுத்தினார். தீண்டாமையை ஆதரித்த வைதீகர்களுடன் சேர்ந்து விருந்து உண்டார். வைக்கம் போராட்டத்தில் மன்னர் மரணமடைந்த வுடன் மகாராணி அதிகாரத்துக்கு வந்தவுடன் போராட்டத்தின் கோரிக்கைகளை ஏற்க முன் வந்தார். அப்போது திவான் பெரியாரோடு நாங்கள் பேச விரும்பவில்லை என்று கூறிவிட்டார். காரணம் பெரியார், திருவாங்கூர் சமஸ்தானத் துக்கும் வைதீகர்களுக்கும் எதிராக சமரசமின்றி போராடியது தான். இந்த நிலையில் ராஜாஜியை திவான் அழைத்து காந்தியாரோடு சமரசம் பேச ஏற்பாடு செய்யுமாறு கூறுகிறார். வைக்கம் போராட்டத்தில் பெரியார் பங்கேற்பதையே விரும்பாத ராஜாஜி, திவான் வேண்டுகோளை ஏற்று காந்தியாரோடு...

தலையங்கம் நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் மீது நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் வரவேண்டும்

தலையங்கம் நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் மீது நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் வரவேண்டும்

மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதியாக இருக்கிற ஜி.ஆர். சாமிநாதன் அரசியல் சட்டத்தை எதிர்த்தும், மதவாதக் கொள்கையை ஆதரித்தும் பகிரங்கமாக பேசத் தொடங்கி இருக்கிறார். மகர சடகோபன் என்பவர் எழுதிய “திருப்பாவையில் நிர்வாக மேலாண்மை” என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்திருக்கிறது. அந்த மேடையில் எச்.ராஜா, ரங்கராஜ் பாண்டே ஆகியோரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு மேடையை பகிர்ந்து கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் ஆர்.எஸ்.எஸ். கருத்தை அப்படியே எதிரொலித்திருக்கிறார். இந்தியா இந்துக்கள் நாடாக இருக்கும் வரைத்தான் இங்கு மதச்சார்பின்மை நீடிக்க முடியும் என்று ஆர்.எஸ்.எஸ். கூறுகிறது. ஜி.ஆர்.சாமிநாதன் இதே கருத்தை பாரதிய சம்பிரதாயத்தை நாம் காப்பாற்றுகிற வரையில் தான் அரசியல் சட்டமே இங்கு இருக்கும் என்று கூறுகிறார். பாரதிய சம்பிரதாயம் என்றால் என்ன? அது பார்ப்பனிய சம்பிரதாயம். இந்திய சம்பிரதாயம் என்ற வார்த்தையைக் கூட அவர்கள் பயன்படுத்த தயாராக இல்லை. ஆர்.எஸ்.எஸ். பயன்படுத்தும் ‘பாரதிய’ என்ற சொற்றொடரைத் தான் இவரும் பயன்படுத்துகிறார்....

கரைபுரளும் உற்சாகம்; விளிம்புநிலை மக்களின் எளிய நன்கொடைகள் முழு வீச்சில் மாநாட்டுப் பணிகள்

கரைபுரளும் உற்சாகம்; விளிம்புநிலை மக்களின் எளிய நன்கொடைகள் முழு வீச்சில் மாநாட்டுப் பணிகள்

ஏப். 29, 30 தேதிகளில் கழக மாநாட்டுப் பணிகளில் கழகச் செயல் வீரர்கள் முழு வீச்சில் களத்தில் இறங்கியுள்ளனர். கோவை : கோவை மாவட்டக் கழகத்தினர் ஏப்ரல் 8-ஆம் தேதி மாலை 5 மணியளவில் வ.உ.சி மைதானத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிச்செல்வன், மண்டலக்குழுத் தலைவர் கதிர்வேல், மாநகராட்சி கல்விக் குழுத் தலைவர் நா.மாலதி, கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.ஆ.ரவி, வடவள்ளி சண்முகசுந்தரம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளை சந்தித்து மாநாட்டு அழைப்பிதழை வழங்கினார்கள். கலந்து கொண்டோர்: தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், நிர்மல் குமார், கிருட்டிணன், வெங்கட், மாதவன் சங்கர், துளசி, நிலா. ஏப்ரல் 7-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் துண்டறிக்கை பரப்புரை நடைபெற்றது. பொள்ளாச்சி : கழக மாநாட்டு விளக்க தெருமுனைக்...

கழக ஏட்டுக்கு புதிய கணினியை நன்கொடையாக வழங்கினார் பெரியாரிஸ்ட் அசோக்குமார்

கழக ஏட்டுக்கு புதிய கணினியை நன்கொடையாக வழங்கினார் பெரியாரிஸ்ட் அசோக்குமார்

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழுக்காக தொழில் முனைவரும் பெரியாரியலாளருமான கோவை அசோக்குமார், புதிய மடிகணினி (லேப் டாப்) கருவியை வழங்கி யுள்ளார். கழக சார்பில் தோழருக்கு நன்றி தெரிவிக்கிறோம். பெரியார் முழக்கம் 02032023 இதழ்

சென்னை மாவட்டக் கழகத்துக்கு திருவல்லிக்கேணி பகுதி தோழர்கள் ‘ஸ்கார்பியோ’ கார் பரிசளிப்பு

சென்னை மாவட்டக் கழகத்துக்கு திருவல்லிக்கேணி பகுதி தோழர்கள் ‘ஸ்கார்பியோ’ கார் பரிசளிப்பு

சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி பகுதி கழகத் தோழர்கள் மாவட்டக் கழகப் பயன்பாட்டுக்கு ஸ்கார்பியோ கார் ஒன்றை வாங்கி (2009ஆம் ஆண்டு மாடல்) கழகத்துக்கு அளித்துள்ளனர். சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா. உமாபதியிடம் அவரது பிறந்த நாளான பிப். 17 அன்று இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில் தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன், உமாபதியிடம் வழங்கினார். கழகப் பணிகளுக்கு இந்த கார் பயன்படும். தனது பிறந்த நாளையொட்டி தோழர்கள் வழங்கிய ரூ.2500/- நன்கொடையை கழக ஏட்டுக்கு பொதுச் செயலாளரிடம் வழங்கினார் இரா. உமாபதி. பெரியார் முழக்கம் 02032023 இதழ்  

சேலம் மாநாடு: கழகம் தயாராகிறது!

சேலம் மாநாடு: கழகம் தயாராகிறது!

சேலத்தில் ஏப்ரல் 29, 30 தேதிகளில் கழகம் நடத்தவிருக்கும் இரண்டு நாள் மாநாடு தோழர்களிடம் பெரும் உற்சாகத்தை உருவாக்கியுள்ளது. ‘இது தமிழ்நாடு; இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு’ என்ற தலைப்பு தோழர்களை ஈர்த்துள்ளது. சேலத்தில் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை யில் கூடி மாநாட்டுப் பணிகளை ஆலோசித்தது. 20.02.2023 திங்கள் மாலை 4.00 மணியளவில் கருப்பூர் சக்திவேல் இல்லத்தில் எதிர்வரும் ஏப்ரல் 29, 30 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறும் திராhவிடர் விடுதலைக் கழக மாநில மாநாடு குறித்து ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட கலந்துரை யாடல் கூட்டம் நடைபெற்றது. கலந்துரை யாடல் கூட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களும், பொறுப்பாளர் களும் மாநாடு குறித்தும், மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மற்றும் மாநாட்டினை குறித்து பொதுமக்களிடம் சுவரெழுத்து மற்றும் துண்டறிக்கைகள் வாயிலாக...

வைக்கம் போராட்டம்: பெரியாரை சிறுமைப்படுத்துவோருக்கு பதிலடி

வைக்கம் போராட்டம்: பெரியாரை சிறுமைப்படுத்துவோருக்கு பதிலடி

வைக்கம் போராட்டத்தில் பெரியார் பங்களிப்பு பெரிதாக இல்லை என்று சில பேர்வழிகள் உளறத் தொடங்கியிருக்கிறார்கள். பெரியார் மீதான காழ்ப்புணர்ச்சியில் வரலாறு புரியாது பேசும் அரை வேக்காடுகள் – வரலாற்றை ஒழுங்காகப் படித்து விட்டுப் பேச வேண்டும். வைக்கம் போராட்டத்தில் இரண்டு முறை சிறை சென்ற ஒரே தலைவர் பெரியார் மட்டுமே. முதலில் அருவிகுட்டியில் ஒரு மாதம் சிறை; பிறகு திருவனந்தபுரத்தில் 4 மாதம் கடும் சிறை. பெரியாருக்கு முன் கைது செய்யப்பட்ட அனைவரும் அரசியல் கைதிகளாகவே நடத்தப்பட்டனர். பெரியார் மட்டுமே கிரிமினல் கைதியாக கடும் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். பெரியாருக்கு சிறையில் சிறப்பு சலுகை எதுவும் தரப்படக் கூடாது என்று நீதிமன்றமே உத்தரவிட்டது. 24 மணி நேரமும் திருவனந்தபுரம் சிறையில் கை, கால்களில் விலங்குகளுடன் கிரிமினல் கைதிக்கான உடையோடு கழுத்தில் கைதி எண் பட்டை தொங்கவிடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வைக்கம் போராளிகளில் ஒருவரான கே.பி. கேசவமேனன், ‘பந்தனத்தில் நின்னு’ என்ற நூலில் இதைப்...

ஜாதித் தடைகளை உடைத்த வைக்கம்… நூற்றாண்டைத் தொட்ட வரலாற்றின் பக்கங்கள்…

ஜாதித் தடைகளை உடைத்த வைக்கம்… நூற்றாண்டைத் தொட்ட வரலாற்றின் பக்கங்கள்…

வைக்கம் என்ற சொல் கேரளாவில் பலவற்றுடன் தொடர்பு உடையது. எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர், பாடகர் வைக்கம் விஜயலட்சுமி, வைக்கத்தப்பன் கோயில் என வைக்கம் பல வகையில் பிரபலமானது. பெரும்பாலான இந்தியர்கள் காந்தியுடன் வைக்கத்தை தொடர்புப்படுத்தி பேசுவார்கள். தமிழ்நாட்டில் வைக்கம் என்றால் அது பெரியாரின் அடையாளமாக இருக்கிறது. ஆனால் சமூக இயக்கத்தின் அடிப்படை யிலான விளைவுகள் வைக்கத்திற்கு அதற்கும் மேல் இருக்கிறது. கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள வைக்கத்தோடு தொடர்புடைய மிக முக்கிய நாள் மார்ச் 30. வைக்கம் கோயில் தெரு நுழைவுப் போராட்டம் தொடங்கப்பட்டதன் நூற்றாண்டு, இந்த ஆண்டு மார்ச் 30ஆம் தேதி எட்டியிருக்கிறது. 1924ஆம் ஆண்டில் இதே நாளில்தான் அப்போராட்டம் தொடங்கப் பட்டது. இந்தியாவில் கோயில் நுழைவுப் போராட்டங்களின் மிக முக்கிய மைல்கல் வைக்கம் போராட்டம். வைக்கம் மகாதேவர் கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளைப் பயன்படுத்துவதில் ‘தீண்டப்படாதோர்’ எனக் கருதப்படும் சமூகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இந்த அகிம்சை...

வைக்கம் : சில வரலாற்றுக் குறிப்புகள் பெரியார் பேச்சு: மிரண்டது திருவாங்கூர் சமஸ்தானம்

வைக்கம் : சில வரலாற்றுக் குறிப்புகள் பெரியார் பேச்சு: மிரண்டது திருவாங்கூர் சமஸ்தானம்

  வைக்கம் : சில வரலாற்றுக் குறிப்புகள்  நம்பூதிரிகளின் திமிர் வைக்கத்தில் தீண்டாமையை நம்பூதிரிகளும் நாயர்களும் நியாயப் படுத்தினர். போராட்டத்தைக் கடுமையாக எதிர்த்தவர்களில் ஒருவர் தேவன் நீலகண்டன் நம்பியாத்திரி என்ற நம்பூதிரிப் பார்ப்பனர். காந்தி இவரை சந்தித்துப் பேச விரும்பினார். ‘இண்டம் துருத்திமனை’ என்ற இடத்தில் வாழ்ந்த இந்த நம்பூதிரி ஒரு நிலப்பிரபு. இவரது கட்டுப்பாட்டின் கீழ் 48 “பிராமணக்” குடும்பங்கள் இருந்தன. காந்தி வைசியர் என்பதால் இவரை தனது வீட்டுக்குள் விட மறுத்த இவர், தனியாக ஒரு தாழ்வாரத்தை உருவாக்கி காந்தியுடன் பேசினார். அவர் காந்தியுடன் பேசிய கருத்துகள் பச்சையான பார்ப்பன வெறியை வெளிப்படுத்தின. “முற்பிறப்பின் மோசமான கர்மாவின்படி நெருங்க முடியாத ஜாதியில் அவர்கள் பிறந்திருக்கிறார்கள்; எனவே அவர்களை அப்படித்தான் நடத்த வேண்டும்.” “கொள்ளையர்கள், குடிகாரர்களைவிட இவர்களை மோசமாக நடத்த வேண்டும்; இவர்கள் சட்டபடி குற்றவாளிகள் என்பதால் அவர்களை ஒதுக்கி வைக்க முடியும்; ஆனால் தீண்டப்படாத வர்களை சட்டம் தண்டிக்காத...

வைக்கம் போராட்டத்தில் நாகம்மையார்

வைக்கம் போராட்டத்தில் நாகம்மையார்

பெரியாரின் இணையர் நாகம்மையார், சகோதரி கண்ணம்மாள் மற்றும் பெரியாரின் உறவுப் பெண்கள் வைக்கம் போராட்டத்தில் பங்கேற்றனர். 1924 – மே, ஜூன், ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் நாகம்மையார் வைக்கத்திலேயே தங்கி போராட் டத்தை நடத்தினார். நாகம்மையார் ‘தீண்டப்படாத’ பிரிவைச் சார்ந்தவர் அல்ல; எனவே அவர் வீதியில் அனுமதிக்கப்பட்டார். தன்னுடன் ‘தீண்டப்படாத’ ஜாதிப் பெண்ணையும் அழைத்துச் சென்றதால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வீதியில் நடந்து சென்று கோயிலுக்குள்ளும் நுழைந்து வழிபாடு நடத்த முயலுகிறார். உடன் தீண்டப்படாத ஜாதிப் பெண்ணை அழைத்து வந்ததால் எதிர்த்தார்கள். பிறகு கோயிலுக்கு வெளியே ‘தீண்டப்படாத’ ஜாதிப் பெண்ணுடன் சேர்ந்து வழிபாடு செய்தார். தனக்குக் கிடைத்த வீதிகளில் நடக்கும் உரிமையை கோயில் வழிபாட்டு உரிமையையும் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்துக்குப் பயன்படுத்தினார் நாகம்மையார். நாகம்மையார் ‘சாணார்’ பெண்களுடன் கோயில் வழிபாட்டுக்கு போகும்போது ஒரு பார்ப்பனர் பெரிய தடியை வைத்துத் தடுத்தார். அந்தப் பார்ப்பனர் பேச்சுத் திறனும் கேட்கும் திறனும் இழந்தவர். அருகில்...

கலாnக்ஷத்ராவைக் காப்பாற்றத் துடிக்கும் சனாதன சக்திகள்

கலாnக்ஷத்ராவைக் காப்பாற்றத் துடிக்கும் சனாதன சக்திகள்

பார்ப்பனர்களின் புனித பீடங்களாக கருதப்படுவதில் ஒன்று கலாnக்ஷத்ரா. நாடாளுமன்றத்தில் தனிச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்து அதன் மூலம் உருவாக்கப்பட்ட நிறுவனம். அந் நிறுவனம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்டிருக்கிறது. இங்கு நடைப்பெறுகிற நடனக் கல்லூரியில் நடனம் பயில்வதற்கு ஏராளமான வெளிநாட்டு மாணவ மாணவிகள் வருகிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாக இக்கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தரப்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த மாணவிகள் நிறுவனத்தின் இயக்குனர்களாக இருக்கிற ரேவதி ராமச்சந்திரன், நடனத்துறை தலைவராக இருக்கிற ஜோஷ்னா மேனன் ஆகியோரிடம் பாலியல் தொல்லைக் குறித்து பல புகார்கள் கூறியும் அதுவும் கடந்த ஐந்து ஆண்டுகளாக புகார்களை தந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாணவிகள் போராட்டம் தீவிரமடைந்தது. இதற்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி தேசிய மகளிர் ஆணையம் தலையிட்டு ஒரு பேராசிரியர் மீது பாலியல் தொந்தரவு செய்ததாக வழக்குப் பதிவு செய்யுமாறு தமிழ்நாடு காவல்துறை இயக்குனருக்கு அறிவுறுத்தியது....

கடைகடையாக வசூல் பணி : மக்களைச் சந்தித்து மாநாட்டுத் துண்டறிக்கைகள் களப்பணியில் தோழர்கள் உற்சாகம்

கடைகடையாக வசூல் பணி : மக்களைச் சந்தித்து மாநாட்டுத் துண்டறிக்கைகள் களப்பணியில் தோழர்கள் உற்சாகம்

ஏப். 29, 30 சேலம் மாநாட்டுப் பணிகளில் தோழர்கள் ஒவ்வொரு நாளும் கடை கடையாகச் சென்று வசூல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை : ஏப்ரல் 29.30 தேதிகளில் சேலத்தில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டை ஒட்டி சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பாக மார்ச் 29, புதன்கிழமை அன்று ஆயிரம் விளக்கு பகுதியில் பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடத்தில் துண்டறிக்கை வழங்கி பரப்புரை மேற்கொண்டனர். இரண்டாவது நாளாக 30.03.2023 அன்று மாலை 7 மணியளவில், சேத்துப்பட்டு பகுதி கடைவீதிகளில் நடைபெற்றது. திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர் இராஜேஷ் தலைமையில், வீரா, குமார், லட்சுமணன், மாணிக்கம், விஜயகாந்த், யாழினி, அருண்குமார், அருண் ஆகியோர் கலந்து கொண்டு துண்டறிக்கை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மயிலைப் பகுதி சார்பாக 30.03.2023 அன்று மாலை 7 மணியளவில் தேனாம்பேட்டை திருவள்ளூர் சாலையில் இராவணன் தலைமையில் பிரவின், கார்த்திக், உதயா, உமாபதி, சிவா, மனோகர் உள்ளிட்ட தோழர்கள் கடைவீதி வசூலை மேற்கொண்டனர். மூன்றாவது நாளாக...

“பெரியார் எனும் பெருவிளக்கு நமக்கு உறுதுணை”

“பெரியார் எனும் பெருவிளக்கு நமக்கு உறுதுணை”

அண்ணல் காந்தியும், தந்தை பெரியாரும் ஒப்பற்றத் தியாகிகளும் இணைந்து முன்னெடுத்த வைக்கம் போராட்டம், தமிழ்நாட்டில் சமூக நீதிப் போராட்டங்களுக்கு வழிகாட்டியாக இருந்தது. இதுவே பின்னாளில் இந்தியாவிற்கே சமூக நீதிக்கான விதையாக அமைந்தது. பெரியார், அய்யா முத்து, டி.கே. மாதவன், கேசவ மேனன், ஜார்ஜ் ஜோசப், நீலகண்ட சாஸ்திரி, காந்திராமன், மண்ணத்து பத்மநாபன் போன்ற தியாகிகளை மீண்டும் அறிமுகப்படுத்தி, அவர்களின் உணர்வுகளை இளைய சமுதாயத்திற்கும், மக்களுக்கும் ஊட்ட வேண்டிய பொறுப்பு இப்பொழுதும் நமக்கு இருக்கிறது. சனாதனக் கொடுமைகளைத் தகர்த்தெறிய வேண்டிய இந்த நேரத்தில் ஜாதிய மதவாத சக்திகளும் தலைதூக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். தேசத்தை இருளில் ஆழ்த்தும் இவர்களை விரட்ட பெரியார் எனும் பெருவிளக்கு நமக்கு உறுதுணையாக இருக்கும். எனக்கு மனிதப் பற்றைத் தவிர வேறு எந்தப் பற்றும் இல்லை என்று சொன்ன மாசற்றத் தலைவராய் சமூக சீர்திருத்தத்திற்கு வித்திட்டவர் தலைவர் பெரியார். அவரது தேவை தமிழ்நாடு மற்றும் இந்தியாவிற்கு...

மாநாட்டு மண்டபத்தை  தலைவர் பார்வையிட்டார்

மாநாட்டு மண்டபத்தை தலைவர் பார்வையிட்டார்

சேலம் மாநாடு நடக்கும் ‘சந்திர மகால்’ மண்டபத்தை கழகத் தலைவர், மாவட்டக் கழகத் தோழர்களுடன் சென்று பார்வையிட்டார். (பிப்.17, 2023) பெரியார் முழக்கம் 23022023 இதழ்  

சிங்காரவேலர் சிலைக்கு  கழக சார்பில் மாலை

சிங்காரவேலர் சிலைக்கு கழக சார்பில் மாலை

சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலரின் 164ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சிங்காரவேலர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு சென்னை மாவட்டக் கழகம் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்ட கழகச் செயலாளர் இரா. உமாபதி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி, அருண், கிஷோர், மயிலைப் பகுதி கழகத் தலைவர் இராவணன், மனோகர், மக்கள் குடியரசு இயக்கம் ஜான் மண்டேலா, மே 17 இயக்கம் முகிலன், திராவிடர் கழகம் மாரிமுத்து உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 23022023 இதழ்