Category: பெரியார் முழக்கம்

திருப்பூர், கோவை, திண்டுக்கல்லில்  மக்கள்  பேராதராவுடன் தெருமுனைக் கூட்டங்கள்

திருப்பூர், கோவை, திண்டுக்கல்லில் மக்கள் பேராதராவுடன் தெருமுனைக் கூட்டங்கள்

திருப்பூர்: ஆகஸ்ட் 7,8 ஆகிய தேதிகளில் மங்கலம் நான்கு வழி சந்திப்பு, சுல்தான் பேட்டை, பெரியாண்டிபாளையம் பிரிவு, குமரன் கல்லூரி, ஊத்துக்குளி ஆர்.எஸ், கூழிபாளையம், மன்னரை, காங்கேயம் பேருந்து நிலையம், நத்தக்காடையூர், படியூர், பொங்கலூர், அருள்புரம், வீரபாண்டி பிரிவு, உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. ஆகஸ்ட் 21,22 ஆகிய தேதிகளில் பல்லடம் பகுதிகளுக்கு உட்பட்ட மகாலட்சுமி நகர், வடுகபாளையம், கேத்தனூர், காமநாயக்கன்பாளையம், லட்சுமி மில்ஸ், காரணம்பேட்டை, அனுப்பட்டி, எம்.ஜி.ஆர் சாலை ஆகிய இடங்களில் நடைபெற்றது. ஆகஸ்ட் 22 அன்று பல்லடம் லட்சுமி மில்ஸ் பகுதியில் 50வது தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. அதனையொட்டி கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. கழகப் பொருளாளர் துரைசாமி, மாவட்டத் தலைவர் முகில்ராசு, கழக முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன், கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், திருப்பூர் தெற்கு மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் சுப்பிரமணியம், திமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு ஒன்றிய தலைவர் முஜிபுர் ரகுமான், மாவட்ட அமைப்பாளர் சங்கீதா, மாநகர...

பறைக் கருவிகளை எரிக்கச் சொன்னவர் பெரியார் திரிபு வாதங்களுக்கு ஆதரத்துடன் மறுப்பு (2) – கொளத்தூர் மணி

பறைக் கருவிகளை எரிக்கச் சொன்னவர் பெரியார் திரிபு வாதங்களுக்கு ஆதரத்துடன் மறுப்பு (2) – கொளத்தூர் மணி

பெரியார் முடிவெய்தி 50 ஆண்டுகள் கழிந்த பின்னரும் பெரியார் பற்றிய நினைவுகளும், தாக்கங்களும் ஒவ்வொரு நாளும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. அதன் தொடர்ச்சியாக மற்றொரு செய்தியையும் பார்ப்போம்.  அது 21.12.1946 நாளிட்ட ‘குடிஅரசு’  இதழில் துணைத் தலையங்கமாக “தாழ்த்தப் பட்டோரும் தப்பட்டை வாசித்தாலும்”  என்ற தலைப்பில் வந்துள்ள வேண்டுகோள் அறிவிப்பு. “சென்ற சில மாதங்களுக்கு முன்பு (கடந்த நவம்பர் மாதம் என்பதே சரி) பெரியார் ஈ.வெ.ராமசாமியவர்கள்  வாணியம்பாடியில் சொற்பொழிவு நிகழ்த்தும் போது (சொற்பொழிவு முடிந்தவுடன் என்பதே சரி)  அக்கூட்டத்திலேயே “பறையர்கள்”  எனப்படுவோர் தமது இழிவுக்கு காரணமான தப்பட்டைகளைக் கொளுத்திவிட்டனர்  என்ற செய்தி யாவரும் அறிந்ததே.  இந்நிகழ்ச்சியை அப்பகுதியில் பல இடங்களில் பலர் தமது பறைகளைக் கொளுத்தி வருகின்றனராம். தாழ்த்தப்பட்ட வகுப்பினரில் ஒருவரான “பறையர்” எனப்படுவோர் தமது தொழிலின் காரணமாகவே பறையர் என்று அழைக்கப்படுவதும், அதனாலேயே இழிவாக எண்ணப்படுவதும், நடத்தப்படுவதும் யாவரும் நன்கு அறிந்த செய்திகளே யாகும்.  எனவே, வாணியம்பாடி தோழர்களைத் தொடர்ந்து எல்லா...

பகுத்தறிவு நடிகர் மாரிமுத்து உடலுக்கு தோழர்கள் இறுதி மரியாதை

பகுத்தறிவு நடிகர் மாரிமுத்து உடலுக்கு தோழர்கள் இறுதி மரியாதை

திரைப்பட நடிகரும் பகுத்தறிவாளருமான தோழர் மாரிமுத்து அவர்கள் சென்னையில் 08.09.2023 அன்று காலை 10 மணியளவில் முடிவெய்தினார். தேனி மாவட்டத்தில் ஒரு குக்கிராமத்தில் பிறந்து பொறியியல் படிப்பு முடித்து சென்னையில் திரைப்படத் துறைக்கு வந்த அவர் பல இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக பணியாற்றி இருக்கிறார். நீண்ட காலம் ஊடக வெளிச்சம் பெறாமல் இருந்த அவர் அண்மைக்காலமாக அவர் சீரியல் வழியாகவும், பரியேறும் பெருமாள் போன்ற திரைப்படங்களின் வழியாகவும் ஊடக வெளிச்சத்தைப் பெற்றார். தனக்கு ஜாதி கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்றும் கருப்புச் சட்டை தான் தனக்கு பிடித்த உடை என்றும் பல பேட்டிகளில் வெளிப்படையாக கூறியதோடு தனது மகன், மகளுக்கு ஜாதி மறுப்புத் திருமணம் செய்வதே தனது நோக்கம் என்றார். நடிகர் வடிவேலுவின் பிரபலமான நகைச்சுவை காட்சிகளான ‘கிணறு காணாமல் போவது, போலிஸ் அடிச்சுக் கேட்டாலும் சொல்லிவிடாதே’ போன்ற காட்சிகளை உருவாக்கியதே மாரிமுத்து தான் என்று நடிகர் வடிவேலு பதிவு...

கொலைகார சாமியாரை  கைது செய்யக் கோரி கழகம் புகார் மனு

கொலைகார சாமியாரை கைது செய்யக் கோரி கழகம் புகார் மனு

சென்னை : “டெங்கு, மலேரியா, காலரா போன்று சனாதனமும் ஒழிக்கப்பட வேண்டிய ஒன்று” என்று பேசிய மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் தலையை கொண்டு வருபவர்களுக்கு ரூ.10 கோடி நிர்ணயித்த அயோத்தி சாமியார் பரம்ஹன்ஸ ஆச்சாரியாவை கைது செய்து சிறையில் அடைக்க கோரி கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி தலைமையில் இராயப்பேட்டை காவல் ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி, சனாதன சக்திகளின் கனவு தமிழ்நாட்டில் ஒருபோதும் பலிக்காது, சனாதனத்திற்கு எதிரான கருத்தில் உறுதியாக நிற்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் துணை நிற்கும் என்று கூறினார். கோவை : கோவை மாநகரக் கழக சார்பில் காட்டூர் காவல் ஆய்வாளரிடம் புகார் அளிக்கப்பட்டது. திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கழக அமைப்பாளர் மருதமூர்த்தி தலைமையில் திண்டுக்கல் மாவட்டத் துணைக் கண்காணிப்பாளரிடம் புகார் அளிக்கப்பட்டது....

தலையங்கம் – அமைச்சர் உதயநிதியின் உறுதியை பாராட்டுகிறோம்

தலையங்கம் – அமைச்சர் உதயநிதியின் உறுதியை பாராட்டுகிறோம்

தமிழக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆட்சியே போனாலும், சனாதன எதிர்ப்பை கைவிட மாட்டோம், திராவிட இயக்கம் தோன்றியதே சனாதன எதிர்ப்புக்காகத்தான் என்று உறுதியுடன் அறிவித்து விட்டார். இந்த கொள்கை உறுதியை நாம் பாராட்டி வரவேற்கிறோம். தேர்தல் வாக்கு வங்கி அரசியல் என்று வந்துவிட்டால், பல நேரங்களில் கொள்கைகளை பின்வாங்கச் செய்துவிடும். இதுதான் பொதுவான தமிழகத்தின் அரசியல், ஆனால் உதயநிதி என்ற இளைஞர் அதில் மாறுபட்டு தனது கொள்கை அடையாளத்தைப் பற்றி நிற்பது அரசியலில் ஓர் அதிசயம் என்றே கூறுவோம். பத்திரிக்கையாளர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு  அவர் பதிலளிக்கும் பண்பும், பாங்கும் கூட மிகவும் மாறுபட்டதாகவே இருக்கிறது. போகிறப் போக்கில் ஊதித்தள்ளிவிடுகிறார். இந்தியாவுக்கு பாரத் என்று பெயர் சூட்டிய மோடியின் முயற்சி குறித்த கேள்விக்கு ‘9 ஆண்டுகளில் இந்தியாவை மாற்றிக் காட்டுவேன் என்றார் மோடி, இதோ மாற்றிவிட்டார்’ என்று பதிலளிக்கிறார். தனது தலைக்கு 5 கோடி விலை...

பாரத தேசத்துக்கு சரித்திர ஆதாரம் உண்டா?

பாரத தேசத்துக்கு சரித்திர ஆதாரம் உண்டா?

இந்தியாவை ‘பாரத தேசம்’ என்றும் இந்திய அரசியலை இராம ராஜ்ஜியம் என்றும் காங்கிரஸ்காரர்கள் (ஆரிய-பார்ப்பனர்) சொல்லும் காரணம் என்ன? இவற்றிலிருக்கும் உண்மை என்ன? என்பவை சிந்திக்கப்படத்தக்கவையாகும். நிலப்பரப்புக்கு எடுத்துக் காட்டும் ஆதாரமும் காட்ட வேண்டுமானால், பூகோளத்திலிருந்து கையாளப்பட வேண்டும். அதுபோலவே, பண்டைய அரசியலுக்கு  எடுத்துக்காட்டும் ஆதாரமும் காட்டப்பட வேண்டுமானால், சரித்திரத்தில் இருந்து கையாளப்பட வேண்டும். பெரியார், விடுதலை – 12.6.1933 உண்மையாக இந்த நாட்டை ஆண்ட அரசர்கள், உண்மை சரித்திரப்படி எத்தனையோ பேர்கள் இருக்கும் போது – ஆளாததும் அறிவுக்கும், உண்மைக்கும், உரிமைக்கும் மாறுபாடானதுமான ஒரு பெயரை மக்கள் அமுலுக்குக் கொண்டுவர வேண்டுமானால் அது எப்படி நியாயமாகும் என்று கேட்கிறோம்.  அதிலும் இந்தப் பெயர்களை, போலித் தன்மைகளை வைத்துக் கொண்ட அதன் மூலம் உண்மையான, சரித்திர ஆதாரமான பெயரைக் கொண்டு ஒரு நாட்டை அதாவது திராவிட நாட்டை திராவிட நாடு என்றழைத்து, அது உரிமைபெற வேண்டுமென்று  முயற்சிப்பவர்கள் கூட்டத்தில் புகுந்து கொண்டு,...

‘சனாதன வாழ்வியல்’ எது என்று பதில் சொல்! சனாதன முகமூடிக்குள் பார்ப்பனியம்

‘சனாதன வாழ்வியல்’ எது என்று பதில் சொல்! சனாதன முகமூடிக்குள் பார்ப்பனியம்

சனாதனம் என்ற முகமூடியில் பார்ப்பனியம் இப்போது பதுங்கி நிற்கிறது. சனாதனம் என்பது ஒரு வாழ்க்கை முறை, அது வர்ணாசிரமம் அல்ல என்று வாதிடுகிறார்கள். சனாதனவாதிகளுக்கு சில கேள்விகள். வர்ணாசிரமம் வேறு; சனாதனம் வேறு என்று கூறும் நீங்கள், வர்ணாசிரமத்தை எதிர்க்கிறோம் என்று கூறத் தயாரா? சனாதனம் ஒரு வாழ்க்கை முறை என்று கூறுகிறார்கள், அந்த வாழ்க்கை முறை என்ன? அதன் பண்புகள் என்ன என்பதை விளக்குவார்களா? வருணாசிரமம் அல்லாத சனாதன வாழ்க்கை முறை எப்போது எந்த காலத்தில் இங்கே நிலவியவது? பால்ய விவாகம், சதி எனும் உடன்கட்டை ஏற்றும் கொடுமை தீண்டாமை, பிராமணன் வணக்கத்தக்கவன், சூத்திரன் பிராமணர்களின் வைப்பாட்டி மகன், கணவனை இழந்த பெண்களுக்கு மொட்டை அடித்து காவி வெள்ளை ஆடை அணிவித்து சமூகத்தில் இருந்து ஒதுக்கி வைத்தல், 10 வயது பிராமண சிறுவன் 70 வயது சூத்திர முதியவரை வாடா போடா என்று அழைத்து இழிவுபடுத்துதல், இப்படிப்பட்ட வாழ்க்கை முறையை...

ஆளுநரே திரும்பி போ திண்டுக்கல் மாவட்ட கழகம் கருப்புகொடி

ஆளுநரே திரும்பி போ திண்டுக்கல் மாவட்ட கழகம் கருப்புகொடி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அன்னை மதர்தெரசா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவிற்கு வருகை தந்த தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்தும் அவருக்கு கருப்பு கொடி காட்டி எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி தலைமையில் 10க்கும் மேற்பட்ட இயக்கத் தோழர்கள் ஒன்றாக இணைந்து பல்கலைக்கழகம் அருகே கருப்புக் கொடிகாட்டி போராட முயன்ற நிலையில் காவல்துறையினர் அனைவரையும் கைது செய்து பழனி அழைத்து வரப்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். தொடர்ந்து தமிழக கவர்னர் R.N.ரவியே திரும்பிப்போ சனாதானத்தின் மறு உருவமே வராதே உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை எழுப்பியவாறு எதிர்ப்பை வெளிப்படுத்தினர். பெரியார்முழக்கம் 07092023

‘தினமலம்’ பார்ப்பன ஏட்டுக்கு தீ!

‘தினமலம்’ பார்ப்பன ஏட்டுக்கு தீ!

காலை சிற்றுண்டி வழங்குவதன் காரணமாக பள்ளிக் கழிவறைகள் நிரம்பி வழிகின்றன என்ற வர்ணாசிரம திமிரோடு தலைப்பு செய்தி வெளியிட்ட தினமலம் நாளேட்டை கழகத் தோழர்கள் தீயிட்டுக் கொளுத்தினர். சென்னை : பள்ளி மாணவர்களுக்கு “காலை சிற்றுண்டி” திட்டத்தை இழிவுபடுத்தி செய்தி வெளியிட்ட சனாதன வெறி பிடித்த தினமலரை கண்டித்து தினமலம் நாளிதழ் எரிப்பு போராட்டம் இன்று 01.09.2023 வெள்ளிக்கிழமை காலை 11 மணியளவில் தினமலம் நாளேடு அலுவலகம் அருகே இராயப்பேட்டை மணிக்கூண்டு அருகில் நடைபெற்றது. கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் போராட்டத்திற்கு தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் தினமலம் நாளிதழை தீயிட்டு கொளுத்தி தினமலம் நிர்வாகத்திற்கு எதிராக முழக்கங்கள் எழுப்பப்பட்டன. மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்க வளர்மதி, தமிழ்நாடு மாணவர் கழக இரண்யா உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிறைவுரையாற்றினார். கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கரு.அண்ணாமலை, சேத்துப்பட்டு இராசேந்திரன், மயிலை...

இழி தொழில்களை தலித் மக்கள் செய்ய வேண்டும் என்று பெரியார் சொன்னாரா? அவதூறு பரப்புவோருக்கு மறுப்பு (1) – கொளத்தூர் மணி

இழி தொழில்களை தலித் மக்கள் செய்ய வேண்டும் என்று பெரியார் சொன்னாரா? அவதூறு பரப்புவோருக்கு மறுப்பு (1) – கொளத்தூர் மணி

பெரியார் முடிவெய்தி 50 ஆண்டுகள் கழிந்த பின்னரும் பெரியார் பற்றிய நினைவுகளும், அதனால் ஏற்படும் அதிர்வுகளும் தாக்கங்களும் ஒவ்வொரு நாளும் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. பாரதிய ஜனதா கட்சி, நாம் தமிழர் கட்சி, தோழர் அல்லது அய்யா பெ.மணியரசன் (நோக்கம் வேறுவேறாகக் கூட இருக்கலாம்) போன்ற விபீசண, அனுமார் கூட்டங்கள் சில வரிகளை உருவி எடுத்தும், திரித்தும் எப்படியேனும் பெரியாரை, திராவிடத்தை கொச்சைப்படுத்த வேண்டும் என்று செயல்பட்ட வண்ணம் உள்ளனர். இவர்களுக்கு தரவுகளைத் தேடும் சிரமத்தை இவர்களது முன்னோடிகளான ரவிக்குமார், குணா, ம.பொ.சி, வ.வே.சு அய்யர் போன்ற பலரின் அன்றைய பதிவுகள் பயன்படுகின்றன. ஒருமுறை பார்ப்பன பேச்சு அடியாள் எச்.ராஜாவிடம் “பெரியாரைப் படித்திருக்கிறீர்களா? என்று கேட்டதற்கு “நான் மணியரசன் எழுதி வருவதைப் படிக்கிறேன்; அதுவே போதும்” என்றான். அப்படித்தான் பல வாழ்க்கை வரலாறுகளும் கூட எழுதப்பட்டு வருகின்றன. ஓர் எடுத்துக்காட்டாக தோழர் ‘பாலசிங்கம் இராஜேந்திரன்’ என்பவர் எழுதி ‘நீலம்’ வெளியீட்டில் “இளையபெருமாள்...

வினா விடை

வினா விடை

• ஒரே நாடு ஒரே தேர்தல் : ஒன்றிய ஆட்சி திட்டம் – செய்தி ஒரே ஜாதி, ஒரே மக்கள் என்ற திட்டத்தை எப்போது கொண்டுவர போறீங்க.. • அண்ணாமலை பிராமணர்களை புறக்கணிக்கிறார் – எஸ்.வி.சேகர் அப்படியா, விடாதிங்க; சத்ரு சம்ஹார யாகம் நடத்துங்க, நல்ல பலன் கிடைக்கும். • நெடுஞ்சாலை திட்டத்துக்கு கூடுதல் செலவு ஆகியுள்ளது என்று தான் சி.ஏ.ஜி அறிக்கை கூறுகிறது. அது ஊழல் அல்ல–- அண்ணாமலை அந்த கூடுதல் செலவுக்கே காரணம் ஊழல் இல்லையா என்பதுதான் கேள்வியே? • சனாதன தர்மத்தை எதிர்க்க எதிர்க்க அது வளரும் – தமிழிசை அப்படியா, சனாதன தர்மம் மாறவே மாறாததுன்னு சொன்னீங்க, இப்ப எப்படி வளரும். • திராவிட கட்சிகள் எனது பங்காளிகள், எதிரி அல்ல – சீமான் பயப்படாதிங்க சீமான், அவ்வளவு சீக்கிரம் கைது செய்யமாட்டாங்க. • நான் ஒரு முஸ்லிமாக இருந்தாலும் எனக்கு கோயில் கட்டினார்கள். அதுதான்...

மக்கள் ஆதரவோடு தெருமுனைக் கூட்டங்கள்

மக்கள் ஆதரவோடு தெருமுனைக் கூட்டங்கள்

சென்னை : சென்னை மாவட்டக் கழக சார்பில் எது திராவிடம்? எது சனாதனம்? தெருமுனைக் கூட்டங்கள் 28.08.2023 திங்கள் அன்று சிந்தாதிரிப்பேட்டை, சாமி நாயக்கன் தெருவில் மாலை 5 மணிக்கும், மாலை 7:30 மணியளவில் கலவைத் தெருவிலும் நடைபெற்றது. அனைத்து சாதி அர்ச்சகர் பயிற்சி பெற்ற மாணவர்கள் சங்கத் தலைவர் ரங்கநாதன், சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி, தமிழ்நாடு மாணவர் கழகம் தேன்மொழி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்ட அமைப்பாளர் விடுதலைச் செழியன் ஆகியோர் உரையாற்றினர். 29.08.2023 செவ்வாய் மாலை 6 மணிக்கு தரமணி நூறடி சாலையிலும், அதனைத் தொடர்ந்து இரவு 8 மணிக்கு பெருங்குடி நூறாடி சாலையில் நடைப்பெற்றது. மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, பெரியார் நம்பி, இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், எட்வின் பிரபாகரன், இரண்யா ஆகியோர் கூட்டத்தின் நோக்கத்தை விளக்கிப் பேசினார்கள்.. கூட்டத்தில் பங்கேற்ற கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், கருத்துரையாற்றிய தோழர்களுக்கு நூல்களை வழங்கி பாராட்டுத் தெரிவித்தார்....

தலையங்கம் – உதயநிதி பேசியதில் என்ன தவறு

தலையங்கம் – உதயநிதி பேசியதில் என்ன தவறு

டெங்கு, காலரா, மலேரியா நோய்களை போல சனாதனம் என்ற சமூக நோயை ஒழிக்க வேண்டும் என்று தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதை, பாஜக திரித்து பொய்களை கலந்து மக்களிடம் விற்பனை செய்யத் தொடங்கியிருப்பது அவர்களின் தரம் தாழ்ந்த பிரச்சாரத்தை வெளிப்படுத்துகிறது. உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாஜக தலைவர் ஜே.பி. நட்டா, நிர்மலா, அண்ணாமலை போன்றவர்களே இந்த அற்ப பிரச்சாரத்தில் இறங்கியுள்ளனர். சனாதன தர்மம் தான் இந்து கலாச்சாரம் என்று கூறி இந்துக்களின் எதிர்ப்பை ‘இந்தியா’ கூட்டணிக்கு எதிராக திருப்பி விட முயற்சிக்கிறார் அமித்ஷா. சனாதன ஒழிப்பு என்றால் இந்துக்களை இனப்படுகொலை செய்ய வேண்டும் என்று சங்கிகள் அவரது ஆதரவு ஊடகங்கள் திரிபுவாதம் செய்கின்றன, திராவிடத்தை ஒழிப்போம், காங்கிரசை ஒழிப்போம், காங்கிரஸ் இல்லாத இந்தியாவை உருவாக்குவோம் என்று பாஜக தலைவர்கள் பேசிவருகிறார்களே, அதன் அர்த்தம் அவர்களை எல்லாம் இனப்படுகொலை செய்வது என்பது தானா என்று அமைச்சர்...

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்ற பாஜக திட்டத்துக்கு அம்பேத்கர் தரும் பதில் இந்தியா இன்றும் ஒரே தேசமாக உருவாகவில்லை – கொளத்தூர்மணி

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ என்ற பாஜக திட்டத்துக்கு அம்பேத்கர் தரும் பதில் இந்தியா இன்றும் ஒரே தேசமாக உருவாகவில்லை – கொளத்தூர்மணி

இந்தியா முழுவதும் ஒரே தேர்தல்’என்ற முழக்கத்தை முன்வைக்கிறது பாஜக. ஆனால் இந்தியா இன்னும் ஒரே தேசமாக இருக்கவில்லை என்கிறார் அம்பேத்கர் என்று உறுதியாக கூறியதோடு வடநாடு பிற்போக்கானது, தென்னாடு முற்போக்கானது என்றும் தெளிவுப்படுத்தியிருப்பதை கழகத் தலைவர் எடுத்துக் காட்டினார். சூலூரில் 30.0.2023 அன்று நடைபெற்ற கலைஞர் நூற்றாண்டு நிறைவுப் பொதுக் கூட்டத்தில் ஆற்றிய உரையின் ஒரு பகுதி. அம்பேத்கர் 1955இல் ‘மொழி வழி மாநிலங்கள் பற்றிய சிந்தனைகள்’ என்ற ஒரு புத்தகம் எழுதுகிறார். அதுவரைக்கும் ஒன்றுபட்ட இந்தியா, இந்தி ஆட்சி மொழி என்றெல்லாம் பேசிக் கொண்டிருந்த அம்பேத்கர், அந்த நூலில் இந்த நாட்டில் எவ்வளவு வேறுபாடுகள் உள்ளன, கன்னியாகுமரியில் இருப்பவர்களுக்கு டெல்லி வெளிநாடு போல் தெரிகிறது. எனவே இந்தியாவிற்கு இரண்டாவது தலைநகரம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று எழுதுகிறார். இரண்டாவது தலைநகரமாக ஹைதராபாத்தை பரிந்துரைக்கிறார். எப்போதும் இந்தியாவுக்கு இரண்டாவது தலைநகர் வேண்டும், ஆங்கிலேயர் இருந்தபோது இரண்டாவது தலைநகரமாக சிம்லா இருந்தது; முகலாயர்...

வைக்கம் போராட்டம் : வெளிவராத செய்திகள்

வைக்கம் போராட்டம் : வெளிவராத செய்திகள்

1) வைக்கத்தில் சூத்திர வகுப்புப் பெண்கள் கோயிலுக்குள் நுழைவதற்கு அதிகாரிகள் மறுத்ததாக 15.6.1924 சுதேசமித்திரன் ஏட்டில் வெளிவந்த செய்தி தெரிவிக்கிறது. கோவில் மதில்களுக்கு வெளியே உள்ள பொதுச் சாலைகளில் தீண்டப்படாதார் நடக்கக் கூடாது என்பதும், சாதி இந்துக்கள் என்கிற சூத்திரர் குறிப்பாக பெண்கள் கோயிலுக்குள் போகக் கூடாது என்பதும் இந்துமத ஆசாரம். இதையும் மீறினார் ஈ.வெ.ரா. நாகம்மை. இந்நிகழ்ச்சி பற்றிய பின்வரும் செய்தி இதை எண்பிக்கிறது. கொச்சி, ஜூன் 20 – வைக்கத்தில் கிளர்ச்சி தொடர்ந்து நடைபெறுகிறது. வைக்கம் கோயிலுக்கு உள்ளே சாதி இந்துப் பெண்களான திருமதி நாயக்கரும், மற்றுமுள்ள பெண்களும் நுழையக்கூடாது என தேவசம் போர்டு தடை செய்திருந்தது. அதையும் மீறி அவர்கள் நுழைந்து விட்டார்கள். இது பற்றி தேவஸ்வம்போர்டு ஊழியர் ஒருவர் நேரில் சத்தியாகிரக ஆசிரமத்திற்கு வந்து, அங்கிருந்த பொறுப்பாளர்களிடம் திருமதி நாயக்கர் கோவிலுக்குள் நுழைந்தது கடுமையான குற்றம் (Grievous Error) என்றும், சாதி இந்துக்கள் கோயிலுக்குள் நுழைய...

சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்துகிறது பாஜகவுக்கு 77 கோடி நன்கொடை தந்ததற்காக விதிகளை மீறி டெண்டர்

சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்துகிறது பாஜகவுக்கு 77 கோடி நன்கொடை தந்ததற்காக விதிகளை மீறி டெண்டர்

மத்திய தணிக்கைத்துறை – ஒன்றிய ஆட்சி கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம். அந்த நிறுவனமே இப்போது மோடி ஆட்சியின் ஊழல் முறைகேடுகளை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திவருகிறது. • பாஜவுக்கு நிதி தந்தவர்களுக்கும் விதிகளை மீறி திட்ட அனுமதி • சமர்ப்பித்த ஆவணங்கள் தவறாக இருந்தும் அனுமதி வழங்கப்பட்ட அவலம் • உச்சநீதிமன்ற நீதிபதிகள் தாமாக முன்வந்து விசாரிக்கக்கூடிய அடுத்த ஊழல் அம்பலம் பிரதமரின் நெருக்கம் இருந்தால் போதும் கனவிலும் நினைக்காத திட்டங்களும் கிடைக்கும் என்பது ஒன்றிய பாஜ அரசின் சித்தாந்தமாக மாறிவிட்டதோ என்று ஐயப்படுகின்ற அளவுக்கு அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கிறார் அதானி. நாட்டின் எல்லைப் பகுதிகள், கடலோரப் பகுதிகள், துறைமுகங்கள், சுற்றுலா தலங்கள், 100 மாவட்ட தலைமையகங்கள் ஆகியவற்றை இணைக்கும் 34,800 கிமீ நீள சாலை அமைப்பது தான் பாரத் மாலா திட்டத்தின் நோக்கமாகும். நாட்டின் மிகப்பெரிய நெடுஞ்சாலைத் திட்டங்களில் ஒன்று என்பதால் தகுதி வாய்ந்த, முன் அனுபவம் பெற்ற நிறுவனங்களுக்குதான் இந்த திட்டம்...

கோவையில் ஆளுநருக்கு எதிராக கழகம் ஆர்ப்பாட்டம்

கோவையில் ஆளுநருக்கு எதிராக கழகம் ஆர்ப்பாட்டம்

கோவை : பாரதியார் பல்கலைக் கழகத்திற்கு பட்டமளிப்பு விழாவிற்கு கலந்து கொள்ள வருகை தந்த ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து கழகப் பொருளாளர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கழக வெளியீட்டுச் செயலாளர் இராம இளங்கோவன், கோவை மாவட்ட தலைவர் இராமச்சந்திரன், திருப்பூர் மாவட்ட தலைவர் முகில்ராசு திண்டுக்கல் மாவட்ட தலைவர் மருதமூர்த்தி, திராவிடத் தமிழர் விடுதலை இயக்க நந்தன் தம்பி உட்பட 37 தோழர்கள் கைதாகினர். கைதான தோழர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட உக்கடம் கண்ணன், கல்லூரி மாணவர் தொண்டாமுத்தூர் நவீன் ஆகியோர் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி முன்னிலையில் தங்களை கழகத்தில் இணைத்துக் கொண்டனர். பெரியார்முழக்கம் 31082023

200 வயதில் மோடி ஆட்சியில் அறுவை சிகிச்சை செய்து காப்பீடு பெற்றவர்கள்

200 வயதில் மோடி ஆட்சியில் அறுவை சிகிச்சை செய்து காப்பீடு பெற்றவர்கள்

மோடி ஆட்சியில் மருத்துவ காப்பீடு திட்டத்தில் மெகா ஊழல்கள் நடந்துள்ளது. தணிக்கை ஆணையம் வெளி யிட்டுள்ள இன்னொரு முக்கியமான ஆய்வறிக்கை பிரதான் மந்திரி ஜன் ஆரோக்ய யோஜ்னா (ABPMJAY எனப்படும் மருத்துவ சிகிச்சை திட்டம் குறித்ததாகும். இந்த திட்டத்துக்கு அடிப்படை Socio Economic Caste Census எனப்படும் சமூக பொருளாதார சாதிய மக்கள் தொகை கணக் கெடுப்பு என ஒன்றிய அரசு கூறுகிறது. ஆனால் இந்த அடிப்படையே பல குறைபாடுகளை கொண்டுள்ளது என்பது தணிக்கை ஆணையத்தின் கருத்து. இந்த திட்டத்துக்கு பல்வேறு தகவல் தொழில்நுட்பத்தையும் தரவுகள் சேகரித் தலுக்கான மென் பொருளையும் ஒன்றிய அரசு தான் உருவாக்கியது. இதில் பல கோளாறுகளும் குறைகளும் உள்ளன. இதன் விளைவாக பல முறைகேடுகள் நடக்க வாய்ப்பு உள்ளது. அவ்வாறு நடந்தவற்றை தணிக்கை ஆணையம் பட்டியலிடுகிறது. அவற்றில் சில: சிகிச்சை பெற தகுதிகள் இருந்தும் நிராகரிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை சுமார் 60 லட்சம். தகுதிகள் இல்லாமலேயே சிகிச்சை...

தலையங்கம் சிவனின் சக்தியா? அறிவியலின் வளர்ச்சியா?

தலையங்கம் சிவனின் சக்தியா? அறிவியலின் வளர்ச்சியா?

சந்திராயன் நிலவில் இறங்கிய இடத்திற்கு சிவசக்தி என்று பெயர் சூட்டியுள்ளார் மோடி. சிவசக்திக்கும் இந்த சந்திராயன் அறிவியலுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது?. சந்திராயன் என்ற அறிவியலை உருவாக்கி அதற்காக உழைத்து சாதனை படைத்த விஞ்ஞானிகள் இப்படி சிவசக்தி என்று பெயர் சூட்டியதை ஏற்றுக் கொள்கிறார்களா என்ற ஒரு கேள்வி அடிப்படையில் இருக்கிறது. மத நம்பிக்கையற்றவர்கள், பிற மதத்தவர் என பலரும் இந்த விஞ்ஞானிகள் குழுவில் பணியாற்றி உள்ளனர். நிலவில் சந்திராயன் இறங்கிய இடத்திற்கு ஏதோ நிலவில் உள்ள தாசில்தார் அலுவலகம் மோடியின் ஆட்சிக்கு அந்த இடத்தை பட்டா போட்டு கொடுத்துவிட்டதை போல சொந்தம் கொண்டாடி அதற்கு பெயர் சுட்டுவது என்ற எல்லைக்கு போய்விட்டார். அறிவியலும் மூடநம்பிக்கையும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை. மூட நம்பிக்கைகள் ஒவ்வொன்றுக்கும் இன்றைக்கு அறிவியல் விடை கண்டு வருகிறது. பிரபஞ்சத்தில் பல புதிர்கள் கண்டுபிடிக்கப்படாத போது, கடவுள்களால் உருவாக்கப்பட்டவை என்று சொல்லப்பட்டவை அனைத்திற்கும் இன்றைக்கு அறிவியல் அதற்கான விடைகளை தந்து...

கலவரத்தைத் தூண்டும் இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை கோரி நங்கவள்ளியில் ஆர்ப்பாட்டம்

கலவரத்தைத் தூண்டும் இந்து முன்னணியினர் மீது நடவடிக்கை கோரி நங்கவள்ளியில் ஆர்ப்பாட்டம்

நங்கவள்ளி கிளைக் கழக சார்பில் எது சனாதனம்? எது திராவிடம்? தெருமுனைக் கூட்டம் 26.07.2023 அன்று மாலை 5 மணியளவில் தானாபதியூர் பகுதியில் காவல் துறை அனுமதியுடன் நடைபெற்ற போது, திட்டமிட்டு தெருமுனைக் கூட்டத்தை தடுத்து நிறுத்தி கலவரத்தை தூண்டும் விதமாக செயல்பட்ட இந்து முன்னணியினர் மீது கழக தோழர்கள் காவல் நிலையத்தில் புகார் கொடுத்து ஒரு மாத காலம் ஆகியும், வழக்கு பதிவு செய்யாத நங்கவள்ளி காவல் துறையை கண்டித்து. 24.08.2023 (வியாழன்) மாலை 4 மணிக்கு நங்கவள்ளி பேருந்து நிலையத்தில் சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்ட தலைவர் சூர்யகுமார், நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணன், நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் இராஜேந்திரன், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தங்கதுரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேலம் மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி...

சென்னை, கோவை, ஈரோடு மாவட்டங்களில் தொடர் கூட்டங்கள் திண்டுக்கல் 40 கூட்டங்களை நிறைவு செய்தது

சென்னை, கோவை, ஈரோடு மாவட்டங்களில் தொடர் கூட்டங்கள் திண்டுக்கல் 40 கூட்டங்களை நிறைவு செய்தது

சென்னை : சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பாக 21.08.2023 திங்கள் மாலை 5 மணிக்கு கோடம்பாக்கம் மார்கெட் அருகிலும், மாலை 7 மணிக்கு தர்மாபுரம் மாரியம்மன் கோவில் அருகிலும், 23.08.2023 செவ்வாய் மாலை 5 மணிக்கு, மடுவாங்கரை புதியத் தெருவிலும் இரவு 7:30 மணிக்கு, பழைய பூந்தமல்லி சாலை, கங்கை அம்மன் கோவில் அருகிலும், 23.08.2023 புதன்கிழமை மாலை 5 மணிக்கு ஜாபர்கான்பேட்டை, கங்கையம்மன் கோயில் அருகிலும், மாலை 7 மணி ஜோன்ஸ் சாலை சாரதி நகர் சந்திப்பிலும், 24.08.2023 வியாழன் அன்று மாலை 5.30 மணிக்கு ஜோன்ஸ் சாலை கூத்தாடும் பிள்ளையார் கோயில் தெருவிலும், மாலை 7.30 மணிக்கு சைதாப்பேட்டை, குயவர் வீதியிலும், 25/08/2023 வெள்ளிக்கிழமை அன்று மாலை 5.30 மணிக்கு சைதாப்பேட்டை கலைஞர் பொன்விழா வளைவு அருகிலும், மாலை 7.30 மணிக்கு அரங்கநாதன் சுரங்கப்பாதை அருகிலும், 26.08.2023 சனிக்கிழமை அன்று மாலை 6 மணிக்கு தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலையிலும்,...

சனாதனம் அன்றும் இன்றும்

சனாதனம் அன்றும் இன்றும்

• வேத கால சனாதனம் வேத பாடசாலை மட்டுமே நடத்தியது மோடி கால சனாதனம் மக்கள் பேசாத சமஸ்கிருதத்திற்கு மட்டுமே கூடுதல் நிதியை ஒதுக்குகிறது. • வேத கால சனாதனம் கல்வி உரிமையைத் தடுத்தது, மோடி கால சனாதனம் சூத்திரர் உயர்கல்வியைத் தடுக்க நீட், நெக்ஸ்ட் தேர்வுகளை நடத்துகிறது. • வேத கால சனாதனம் பெண்களை விதவையாக்கி – மொட்டை அடித்து இழிவுபடுத்தியது, மோடி கால சனாதனம் பழங்குடிப் பெண்களை நிர்வாணமாக்கி ஊர்வலம் போகும் வன்முறையாளர்களுக்கு ஜே போடுகிறது. • வேத கால சனாதனம் கோயில் பூஜைகளில் பெண்களை தடுத்தது, மோடி கால சனாதனம் ஐயப்பன் கோவிலில் பெண்கள் நுழையவே தடுக்கிறது. • வேத கால சனாதனம் கடல் பயணத்திற்கு தடைப் போட்டது, மோடி கால சனாதனம் கடல் தாண்டிப் போய் சனாதனத்தை பரப்புகிறது. • வேத கால சனாதனம் அரசர்களை ராஜ குருவின் கட்டளைக்கு அடக்கி வைத்தது, மோடி கால...

மணிப்பூர் கலவரம்; பாஜக ஆட்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

மணிப்பூர் கலவரம்; பாஜக ஆட்சியைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேலம் : ஜூலை 23- ஆம் தேதியன்று கொளத்தூர் பேருந்து நிலையத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்ப் புலிகள் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்று வரும் வன்முறைகளை தடுக்கத் தவறிய ஆளும் பாஜக மற்றும் ஒன்றிய மோடி அரசைக் கண்டித்து சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியகுமார் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தி.மு.க தலைமைக்கழக பேச்சாளர் பன்னீர்செல்வம், கழக தலைமைக்குழு உறுப்பினர் காவை.ஈசுவரன், சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் கு.சூரியகுமார், கொளத்தூர் நகரத் தலைவர் சி.இராமமூர்த்தி, கொளத்தூர் வி.சி.க மாணவரணி ஜீவா, வி.சி.க. கொளத்தூர் ஒன்றியச் செயலாளர் சேட்டுகுமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.வி.சி.க. நகர து.செயலாளர் பழனி நன்றி கூறினார்.

மணிப்பூர் மக்களுக்கு தமிழகம் துணை நிற்கும்

மணிப்பூர் மக்களுக்கு தமிழகம் துணை நிற்கும்

ஜுலை 18 அன்று சென்னையில் மணிப்பூர் மாணவர்கள் அங்கு நடக்கும் கலவரங்கள் குறித்து செய்தியாளர்களிடம் விளக்கி தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் , இயக்கங்கள் மக்களின் ஆதரவைக் கேட்டனர். இந்த சந்திப்பில் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் பங்கேற்று மணிப்பூரில் மத வெறி மோதலை உருவாக்கும் நோக்கத்தோடு மாநில, ஒன்றிய பாஜக செய்யும் சதிகளை விளக்கினார். உலக நாடுகள், ஐநா மனித உரிமைகள் ஆணையம் மணிப்பூர் பிரச்சனையை கவலையுடன் அணுகும் போது பிரதமர் மோடி அதுகுறித்து வாய்திறக்காமல் இருப்பதை சுட்டிக்காட்டினார். மெய்தீஸ் பிரிவினருக்கு மாநில பாஜக ஆட்சியே கமாண்டோ போலீஸ் உதவியுடன் ஆயுதங்களைத் தந்து தாக்குதலை தூண்டிவிடுவதையும் சுட்டிக்காட்டினார். இந்நிகழ்வில் காங்கிரஸ் கட்சி ஒருங்கிணைப்பாளர் சசிகாந்த் செந்தில், பச்சை தமிழகம் சுப.உதயகுமார் ஆகியோரும் பங்கேற்றனர். கழகம் சார்பில் மாவட்டச் செயலாளர் உமாபதி, கரு.அண்ணாமலை, கழகத் தோழர்கள் அஜித்,விஷ்ணு ஆகியோர் பங்கேற்றனர்.

கழுவேத்தி மூர்க்கன் திரைப்பட ஆய்வு

கழுவேத்தி மூர்க்கன் திரைப்பட ஆய்வு

மதுரை மாவட்டக் கழக சார்பில் சமத்துவ சமுதாயத்தை நோக்கிய கலைப் படைப்பான “கழுவேத்தி மூர்க்கன்” திரைப்படத்திற்கு பாராட்டு விழா, ஜூலை 21, மாலை 5 மணிக்கு மதுரை பிரசிடென்ட் ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மேலூர் சத்யமூர்த்தி வரவேற்புரையாற்றினார், மாவட்ட செயலாளர்.மா.பா.மணி அமுதன் தலைமை தாங்கினார், மாவட்ட தலைவர் காமாட்சி பாண்டி முன்னிலை வகித்தார், மாவட்ட கழக காப்பாளர் தளபதி வாழ்த்துரை வழங்கினார். கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். கழுவேத்தி மூர்க்கன் திரைப்பட இயக்குநர் சை.கெளதமராஜ் ஏற்புரையாற்றினார். வாசுகி நன்றி கூறினார்.

மதுரையில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு கருத்தரங்கம்

மதுரையில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு கருத்தரங்கம்

மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஜூலை 1 அன்று மெஜஸ்டிக் ஹோட்டலில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் யோகேஸ் வரவேற்புரையாற்றினார், மாவட்டத் தலைவர் காமாட்சி பாண்டி தலைமை தாங்கினார், சத்தியமூர்த்தி – முருகேசன் முன்னிலை வகித்தனர். சேரன் மாதேவி போராட்டம் குறித்து மாவட்ட கழக காப்பாளர் தளபதியும், திராவிடமும் சமூக நீதியும் குறித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாணவரணித் தலைவர் ராஜிவ் காந்தியும், வைக்கம் போராட்டத்தின் தேவை நேற்றும் இன்றும் எனும் தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணியும் கருத்துரையாற்றினார்கள். அழகர் பிரபாகரன், வாசுகி, வேங்கைமாறன், விஜய், வீரலட்சுமி, கண்ணன், காமாட்சி உள்ளிட்ட கழகத் தோழர்களும், பல்வேறு தோழமை அமைப்பு தோழர்களும் மதுரை மாவட்ட திமுக நிர்வாகிகளும் இந்த கருத்தரங்கில் பங்கேற்றனர்.

கலைஞரின் பராசக்தி உருவாக்கிய புயல்

கலைஞரின் பராசக்தி உருவாக்கிய புயல்

84. மாடர்ன் தியேட்டர் தயாரித்த மாயாவதி திரைப்படம் தோல்வியை தழுவியது, அதை சரி செய்ய கலைஞரின் மந்திரி குமாரி நாடகத்தை திரைப்படமாக்கி கலைஞர் வசனம் எழுத மாடர்ன் தியேட்டர் உரிமையாளர் டி.ஆர்.சுந்தரம் முடிவு செய்தார். பல தொடக்க விழாவுக்கு நல்ல நாள் தேதி குறிக்க ஒரு சோதிடரை கூட்டி வந்தார்கள். அவரிடம் கலைஞர் தோல்வி அடைந்த மாயாவதி படத்திற்கும் நீங்கள் தானே தொடக்க விழாவுக்கு நல்ல நாள் பார்த்தீர்கள் என்று கேட்க சோதிடர் தலை குனிந்து நின்றார். 85. பராசக்தி படம் குறித்து பேராசிரியர் அன்பழகன் இவ்வாறு கூறினார், ‘இந்த படம் பார்த்ததும் நின்று விடும் அளவில் ஒரு கலைக்காட்சி அல்ல, பார்ப்போர் உள்ளத்தைத் தடவி அதில் படிந்துள்ள வஞ்சக சூழ்ச்சி கருத்துக்களைத் துடைத்து வெளியேற்றி அங்கு குடிகொள்ளும் அறசக்தி என்று குறிப்பிட்டார் ’ 86. பராசக்தி படத்துக்கு போட்டியாக பக்தியை வளர்க்க எஸ்.எஸ்.வாசன் தயாரித்த படம் தான் அவ்வையார். அதில்...

5 ஆண்டுகளில் விளம்பரத்திற்கு மட்டும் ரூ.2,700 கோடி செலவிட்ட மோடி அரசு!

5 ஆண்டுகளில் விளம்பரத்திற்கு மட்டும் ரூ.2,700 கோடி செலவிட்ட மோடி அரசு!

புதுதில்லி, ஜூலை 22 – கடந்த 5 ஆண்டுகளில் ஒன்றிய பாஜக அரசு விளம்பரத்திற்காக மட்டும் ரூ.2 ஆயிரத்து 700 கோடி அளவிற்கான தொகையை செலவிட்ட நிலையில், இந்த தொகை, ஓராண்டில் 8 வடகிழக்கு மாநிலங்களின் வளர்ச்சிக்கு ஒதுக்கப்பட்ட நிதிக்கு இணையான ஒன்றாகும் என விமர்சனங்கள் எழுந்துள்ளன. நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் பல்வேறு முக்கிய மான கேள்விகளை அரசிடம் எழுப்பியிருந்த னர். அதில், கடந்த 5 ஆண்டுகளில் ஒன்றிய அரசு விளம்பரங்களுக்காக செலவிட்ட தொகை எவ்வளவு? என்ற கேள்வியும் முன்வைக்கப் பட்டு இருந்தது. இதற்கு ஒன்றிய அரசு தற்போது பதில ளித்துள்ளது. அதில், கடந்த 5 ஆண்டுகளில் ஒன்றிய அரசின் விளம்பரச் செலவு ரூ. 2 ஆயி ரத்து 700 கோடி என தெரிவிக்கப்பட்டு உள் ளது. கடந்த 2014 – 2015 நிதியாண்டில் அச்சு ஊடகங்களுக்கு ரூ.424.84 கோடி, மின்னணு ஊடகங்களுக்கு...

மோடி ஏன் அஞ்சுகிறார்

மோடி ஏன் அஞ்சுகிறார்

மணிப்பூரில் மே 3-ஆம் தேதி தொடங்கிய கலவரம் இப்போது 82 நாட்களாக தொடர்கிறது. தொடர்ந்து அங்கே வன்முறைகள் மிக மோசமான அளவில் நடந்து வருகிறது. மே நான்காம் தேதி இரண்டு பெண்களை கலவரக்காரர்கள் நிர்வாணமாக அழைத்து வந்து பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிருடன் எரித்துக் கொல்லப்பட்ட செய்தி உலகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. சம்பவம் நடந்த அடுத்த நாளே 27 பழங்குடிகள் மோசமாக பாதிக்கப்பட்டது இப்போது வெளியாகியிருக்கிறது. இதில் 7 பேர் கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர், 2 பேர் எரித்துக் கொல்லப்பட்டிருக்கிறார்கள், 5-பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பதாக அடுத்தடுத்த அதிர்ச்சிகரமான செய்திகள் வந்தவண்ணம் உள்ளன. சுதந்திர போராட்ட வீரரின் மனைவி 80 வயதுடைய, அவரை வீட்டிற்குள்ளேயே வைத்து உயிருடன் எரித்துக் கொன்றிருக்கிறார்கள் கலவரக்காரர்கள். அண்டை மாநிலமான மிசோராமிலும் இந்த கலவரம் பரவத் தொடங்கியிருக்கிறது. மெய்தீஸ் இன மக்கள் அங்கிருந்து வெளியேறுமாறு எச்சரிக்கை விடுமளவுக்கு வந்துவிட்டது. பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்...

தலையங்கம் சமூகநீதிக்கு ஆதரவாக குரல்கொடுக்கும் கொலிஜியம்

தலையங்கம் சமூகநீதிக்கு ஆதரவாக குரல்கொடுக்கும் கொலிஜியம்

சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகளாக என். செந்தில்குமார், ஜி.அருள் முருகன் என்ற இரண்டு வழக்கறிஞர்களை உச்சநீதிமன்ற கொலிஜியம் நியமித்துள்ளது. உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியை உள்ளடக்கிய கொலிஜியம் எந்த அடிப்படையில் இவர்கள் தேர்வு செய்யப்பட்டார்கள் என்பதை ஒளிவு மறைவின்றி வெளிப்படைத்தன்மையோடு அறிவித்திருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கதாகும். வழக்கறிஞர் என்.செந்தில்குமார் பட்டியலினப் பிரிவை சார்ந்தவர், விளிம்பு நிலை சமூகத்தினருக்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்ற நோக்கத்தோடும், கடந்த காலங்களில் அரசியல் சட்டம் மற்றும் கிரிமினல் சட்டங்கள் தொடர்பான வழக்குகளில் திறமையாக வாதாடியதற்கான சான்றுகளின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த அறிக்கை கூறுகிறது. அதேபோல் நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள வழக்கறிஞர் ஜி.அருள் முருகன் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர், இந்த சமுதாயத்திற்கு உரிய பிரதிநிதித்துவம் தரப்பட வேண்டும் என்ற கண்ணோட்டத்துடனும், சிவில், கிரிமினல் மற்றும் ரிட் மனுக்கள் மீதான வழக்குகளில் அனுபவம் மிக்கவர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்ற கொலிஜியம் செய்த பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் உச்சநீதிமன்றம்...

சனாதனம் தோலுரிப்பு : திராவிட மாடல் சாதனை விளக்கம் தெருமுனைக் கூட்டங்களுக்கு பேராதரவு!

சனாதனம் தோலுரிப்பு : திராவிட மாடல் சாதனை விளக்கம் தெருமுனைக் கூட்டங்களுக்கு பேராதரவு!

எது சனாதனம்? எது திராவிடம்? தெருமுனைக் கூட்டங்கள் சென்னை மாவட்டக் கழகம் சார்பாக இரண்டாவது வாரமாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அது பின்வருமாறு :- ஜுலை 15-ஆம் தேதியன்று ராயப்பேட்டை இலாயிட்ஸ் காலனி மற்றும் வி.எம்.தெருவிலும், ஜுலை 17-ஆம் தேதியன்று இராயபேட்டை பகுதிகளில் உள்ள கொலைகாரப்பேட்டை மற்றும் ராயப்பேட்டை பெருமாள் கோயில் வீதியிலும், ஜுலை 18-ஆம் தேதியன்று ஐஸ் ஹவுஸ் NKT பள்ளி அருகில் மற்றும் திருவல்லிக்கேணி பி.வி.நாயக்கன் சாலையிலும், ஜுலை 19-ஆம் தேதியன்று ஐஸ் ஹவுஸ் இஸ்ஸபா தெரு மற்றும் ஷேக் தாவூத் தெருவிலும் ஜூலை 20-ஆம் தேதியன்று மீசார்பேட்டை மார்கெட் மற்றும் ஜாம் பஜார் சிட்டிபாபு சாலையிலும், ஜுலை 21-ஆம் தேதியன்று திருவல்லிக்கேணி மாணிக்கவாசகம் தெரு மற்றும் தேவராஜ் தெருவிலும் ஜுலை 22-ஆம் தேதியன்று ஆயிரம் விளக்கு மாடர்ன் பள்ளி அருகில் மற்றும் அப்பல்லோ மருத்துவமனை அருகிலுள்ள மக்கிஸ் கார்டனிலும் நடைபெற்றது. நாத்திகன் – உமாபதி குழுவின் அரசியல்...

பட்டியல் தயாரிப்பு ; வழிகாட்டுகிறது திண்டுக்கல் மாவட்டம்

பட்டியல் தயாரிப்பு ; வழிகாட்டுகிறது திண்டுக்கல் மாவட்டம்

திண்டுக்கல் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 9.7.2023 அன்றுகாலை 10 மணியளவில் பழனியில் உள்ள பூம்புகார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு மாநில அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி தலைமை வகித்தார், மாவட்ட அமைப்பாளர் மருத மூர்த்தி முன்னிலை வகித்தார். கழகப் பொருளாளர் திருப்பூர்.துரைசாமி, தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக் செயற்குழு உறுப்பினர் இரா.உமாபதி உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர். திண்டுக்கல் மாவட்டத்தின் சார்பில் “வைக்கம் போர் இன்னும் முடியவில்லை” என்கிற தலைப்பில் சேகரிக்கப்பட்ட ஜாதித் தீண்டாமை குறித்த புள்ளி விவரங்கள் அடங்கிய பட்டியலை தலைமைக் குழு உறுப்பினர்களிடம் ஒப்படைத்தனர்.பட்டியல் தயாரிப்புக்கு தனிப் படிவங்களை அச்சிட்டு நூறு கிராமங்களுக்கு மேள் நேரில் சென்று தீண்டாமைக் கொடுமைகளை திரட்டியுள்ளனர். 1. எது திராவிடம்? எது சனாதனம்? என்னும் தலைப்பில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 50 தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது. 2 ஐம்பது புரட்சிபெரியார் முழக்கம் இதழுக்கு ஒரு மாதத்திற்குள் சந்தா சேர்த்து...

‘ராஜாஜி’க்கு ‘மூக்காஜீ’ பதிலடி

‘ராஜாஜி’க்கு ‘மூக்காஜீ’ பதிலடி

74. சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த பார்ப்பனர் ஹெச்.வி.ஹண்டே இது மூன்றாம் தர ஆட்சி என்று திமுகவை சாடிய போது முதல்வராக இருந்த கலைஞர் எழுந்து அதற்கு பதிலடி தந்தார். “இது மூன்றாம் தர ஆட்சி அல்ல, நான்காம் தர ஆட்சி, சூத்திரர்களால் சூத்திரர்களுக்காக ஆளப்படும் ஆட்சி” என்று பதிலடி தந்து சட்டப்பேரவை குறிப்பிலும் அதை பதிவேற்ற வைத்தார். 75. இட ஒதுக்கீடு அமல்படுத்துவதால் உயர் சாதியினர் பாதிக்கப்படுகிறார்கள் என்று எதிர்ப்பு எழும்பிய போது கலைஞர் அதற்கு ஒரு உதாரணத்துடன் பதில் அளித்தார். சலவை செய்து அலமாரிகளில் அடுக்கி வைக்கப்பட்ட துணிகளுக்கு மீண்டும் சலவை செய்ய தேவையில்லை, அழுக்காகி கிடைக்கும் துணிகளுக்குத் தான் சலவை செய்ய வேண்டும் என்று பதில் அளித்தார். 76. சாலையில் தார் ஊற்றி கொளுத்தும் வெயிலில் வேலை செய்யும் தொழிலாளிகளின் அவலம் கலைஞரின் கண்ணில் தான் பட்டது. நேரில் கண்ட அவர் காலில் சாக்கு துணியை கட்டிக்...

மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தேவை எனும் சனாதனத்தை பனகல் அரசர் எப்படி நிறுத்தினார்?

மருத்துவம் படிக்க சமஸ்கிருதம் தேவை எனும் சனாதனத்தை பனகல் அரசர் எப்படி நிறுத்தினார்?

1925-இல் நீதிக்கட்சியில் இருந்த கிஆபெ விஸ்வநாதன் திருச்சி நகர நீதிக்கட்சி தலைவர் மகனை உடன் அழைத்துச் சென்று முதன்முதலில் பனகல் அரசரிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார். நல்ல மதிப்பெண் பெற்றிருந்தும் கூட நீதிக்கட்சியின் தலைவர் மகனுக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காததை சுட்டிக்காட்டினார். உடனே பனகல் அரசர் மருத்துவக் கல்லூரி அதிகாரியை தனது அறைக்கு அழைத்து விவரம் கேட்கிறார். அந்த மாணவருக்கு சமஸ்கிருதம் தெரியவில்லை, அதனால் தான் இடம் கிடைக்கவில்லை என்று அதிகாரி விளக்கம் தருகிறார். அப்படி ஏதும் சட்டம் இருக்கிறதா என்று பனகல் அரசர் கேட்க, சட்டம் ஏதுமில்லை அது மரபாகத்தான் பின்பற்றப்படுகிறது என்று அந்த அதிகாரி கூறுகிறார். அத்தகைய மரபுகள் தேவையில்லை, அதை பின்பற்ற வேண்டாம் என்று பனகல் அரசர் கூற மாணவருக்கு மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைத்தது. இந்த தகவல் முத்தமிழ்காவலர் கி.ஆ.பெ விஸ்வநாதன் வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறது. இந்த வரலாற்று நூலை எழுதியவர், பிரபல எழுத்தாளர் முகம்...

வாலாஜா வல்லவனின் உரை; கடந்த இதழின் தொடர்ச்சி! தேவதாசி முறை –  ‘மனுநீதி’ சனாதனங்களை எதிர்த்தது திராவிடம்

வாலாஜா வல்லவனின் உரை; கடந்த இதழின் தொடர்ச்சி! தேவதாசி முறை – ‘மனுநீதி’ சனாதனங்களை எதிர்த்தது திராவிடம்

நீங்கள் நான்கு வருணங்களாக பிரித்து வைத்தீர்கள், ஊருக்கு வெளியே தான் குடியிருக்க வேண்டும், நல்ல நகை போடக்கூடாது, சூத்திரர்கள், மேல் ஜாதிக்காரர்கள் பயன்படுத்திய பழைய ஆடைகளைத் தான் உடுத்த வேண்டும், ஈய பாத்திரம் தான் பயன்படுத்த வேண்டும், பொன் வெள்ளி நகைகளை அணியக்கூடாது என்று துரத்திய மக்களை ஊருக்குள் அழைத்து சமத்துவபுரம் கட்டிக் கொடுத்தவர் தான் கலைஞர், இதுதான் திராவிடம். மேற்கூறியவை சனாதனம், அதற்கு எதிரானது தான் திராவிடம். ராஜராஜ சோழன் காலத்தில் இருந்து நீங்கள் தேவதாசி முறையை கொண்டு வந்தீர்கள், டாக்டர் முத்துலட்சுமி ரெட்டியின் மசோதா காரணமாக 1929 இல் தேவதாசி முறையை ஒழித்துக் கட்டியது எங்கள் திராவிடம். சனாதனத்திற்கு நேர் எதிரானது திராவிடம், ‘எதைக் கொடுத்தாலும் கொடு ஆனால் சூத்திரனுக்கு கல்வியை மட்டும் கொடுக்காதே என்கிறது மனுநீதி’, அதற்கு நேர் எதிராக சென்னை மாகாணத்தில் 1922 முதல் 1926 க்குள் பனகல் அரசர் ஆட்சியில் 12250 தொடக்கப் பள்ளிகள்...

அமலாக்கத்துறையா? ஆளும்கட்சி எடுபிடியா?

அமலாக்கத்துறையா? ஆளும்கட்சி எடுபிடியா?

அமலாக்கத்துறை இயக்குநர் சஞ்சய் குமார் மிஸ்ராவின் பதவிக்காலத்தை நீட்டித்தது சட்ட விரோதம், வரும் ஜூலை 31ஆம் தேதியோடு அவரை பணியில் இருந்து விடுவிக்க வேண்டுமென்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. தேர்தல் நெருங்கி வரும் சமயத்தில் எதிர்க்கட்சிகளை பழிவாங்க மிக முக்கிய கேடயமாக அமலாக்கத்துறையை பயன்படுத்தி வந்த பாஜகவிற்கு இத்தீர்ப்பு பேரதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. 1984-ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்திய வருவாய்த்துறை அதிகாரி சஞ்சய் குமார் மிஸ்ரா. உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவரான இவரை, 2018ஆம் ஆண்டில் அமலாக்கத்துறை இயக்குநராக ஒன்றிய பாஜக அரசு நியமித்தது. 2020-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திலேயே இவருடைய பதவிக்காலம் முடிவுற்ற நிலையில், ஒன்றிய அரசால் மேலும் ஒரு ஆண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது. மீண்டும் 2021-ஆம் ஆண்டில் ஒரு முறையும், 2022-ஆம் ஆண்டில் ஒருமுறையும் என தொடர்ந்து பணி நீட்டிப்பு கொடுத்துக்கொண்டே இருந்தது ஒன்றிய அரசு. 2020-ஆம் ஆண்டு மே மாதத்திலேயே 60 வயதை நிறைவு செய்த சஞ்சய்...

கழகக் கூட்டங்கள் முரசொலி ஏடு பாராட்டுகிறது!

கழகக் கூட்டங்கள் முரசொலி ஏடு பாராட்டுகிறது!

சமூகநீதிப் போராட்டங்கள் பெற்றுத்தந்த உரிமைகள், நமது தமிழ்நாட்டை முன்னேறிய மாநிலமாக மாற்றியுள்ளது. திராவிடக் கொள்கைகளே நமது மாற்றங்கள், கட்டமைப்புகள் அனைத்துக்கும் காரணமாக உள்ளன. இந்த நிலையில் தான் வல்லூருகள் போல நம்மைச் சூழ்ந்துகொள்ள துடிக்கின்றன வகுப்புவாத அரசியல் சக்திகள். சனாதனத்தை விரட்டி சமூகநீதி காத்த திராவிட நிலத்தில் மீண்டும் சனாதனத்தை நிறுவ விரும்புகின்றனர். முயற்சி செய்கின்றனர். அதற்காக பல மட்டங்களில் அரசியல் செய்து வருகின்றனர். கிடைக்கும் மேடைகளில் சனாதன கருத்துக்கு ஆதரவாக பேசி, மக்களை திசை திருப்புகின்றனர். இந்த வேளையில் திராவிடர் விடுதலைக் கழகம் எது திராவிடம்? எது சனாதனம்? என நடத்தும் தெருமுனைக் கூட்டம் நடத்தி வருகிறது. சென்னையில் 200 இடங்களில் நடத்த திட்டமிட்டு, அதற்கான பிரச்சார வாகனத்தையும் வடிவமைத்துள்ளனர். தமிழ்நாடு முழுவதும் 1000 இடங்களில் இந்த கூட்டங்கள் நடைபெற உள்ளன. தேர்தல் காலம் நெருங்கி வருவதால் முன் எப்போதை விடவும் வகுப்புவாத சக்திகளும் சாதிய சக்திகளும் தமிழ்நாட்டைச் சூழ்ந்து...

தெருமுனைக் கூட்டங்கள் வெற்றிநடை; மக்கள் பேராதரவு

தெருமுனைக் கூட்டங்கள் வெற்றிநடை; மக்கள் பேராதரவு

சென்னை : எது திராவிடம்? எது சனாதனம்? முதல் தெருமுனைக் கூட்டம், ஜுலை 10, மாலை 5 மணிக்கு மடிப்பாக்கத்தில் நடைப்பெற்றது. பாடகர் ஜெய்பீம் அறிவுமானன் பகுத்தறிவு பாடல்களை பாடினார், மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, எட்வின் ஆகியோர் சிறப்புரையாற்றினர். இரண்டாவது கூட்டம் கீழ்க்கட்டளை பெரிய தெருவில் மாலை 7 மணிக்கு தொடங்கி நடைப்பெற்றது. பாடகர் ஜெய்பீம் அறிவுமானன் பகுத்தறிவு பாடல்களை பாடினார், கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, சேத்துப்பட்டு இராசேந்திரன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மூன்றாவது கூட்டம் 11.07.2023 அன்று மாலை 5 மணிக்கு நங்கநல்லூரில் எட்வின் பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கமாக பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் இரா.உமாபதி, இரண்யா ஆகியோர் பறை இசைக்க கூட்டம் தொடங்கியது. மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி, எட்வின் பிரபாகரன், அன்னூர் விஷ்ணு ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்ச்சி முடிந்த...

சேலம் மாநாடு: கழகம் தயாராகிறது!

சேலம் மாநாடு: கழகம் தயாராகிறது!

சேலத்தில் ஏப்ரல் 29, 30 தேதிகளில் கழகம் நடத்தவிருக்கும் இரண்டு நாள் மாநாடு தோழர்களிடம் பெரும் உற்சாகத்தை உருவாக்கியுள்ளது. ‘இது தமிழ்நாடு; இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு’ என்ற தலைப்பு தோழர்களை ஈர்த்துள்ளது. சேலத்தில் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை யில் கூடி மாநாட்டுப் பணிகளை ஆலோசித்தது. 20.02.2023 திங்கள் மாலை 4.00 மணியளவில் கருப்பூர் சக்திவேல் இல்லத்தில் எதிர்வரும் ஏப்ரல் 29, 30 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறும் திராhவிடர் விடுதலைக் கழக மாநில மாநாடு குறித்து ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட கலந்துரை யாடல் கூட்டம் நடைபெற்றது. கலந்துரை யாடல் கூட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களும், பொறுப்பாளர் களும் மாநாடு குறித்தும், மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மற்றும் மாநாட்டினை குறித்து பொதுமக்களிடம் சுவரெழுத்து மற்றும் துண்டறிக்கைகள் வாயிலாக...

மடத்துக்குளம் மோகன் நினைவேந்தல் கூட்டம்

மடத்துக்குளம் மோகன் நினைவேந்தல் கூட்டம்

01.06.2023 காலை 10.00 மணியளவில் திருப்பூர் மாவட்ட திவிக சார்பாக மறைந்த கழக தலைமைக் குழு உறுப்பினர் தோழர் மடத்துக்குளம் மோகன் நினைவேந்தல் நிகழ்வு மடத்து குளம் நான்கு சாலை சந்திப்பு பகுதியில் மடத்து குளம் திவிக ஒன்றியத் தலைவர் த.கணக்கன் தலைமையில் நடைபெற்றது. மோகன் குடும்பத்தினர் ஜோதி  – அறிவுமதி முன்னிலை வகித்தனர்.   பன்னீர்செல்வம், CITU தாலுகா செயலாளர். வீ.சிவகாமி, தலைவர், தமிழ்நாடு அறிவியல் மன்றம். முகில் ராசு, மாவட்ட தலைவர் , திவிக. முருகேசன், வழக்கறிஞர் பிரிவு, திராவிட தமிழர் பேரவை. தங்கவேல், மாவட்ட  அமைப்பாளர், திராவிட தமிழர் கட்சி, ஜின்னா ஆகியோர் நினைவேந்தல் உரையாற்றினர்.   சபரி, சரசுவதி, ஜெயந்தி, சிரிஜா, ரூபா, மாரிமுத்து, தாராபுரம் செல்வம், தமிழ்நாடு மாணவர் கழகத் தோழர்கள் யாழிசை,யாழினி, அறிவுமதி, முத்தமிழ், காரைக்குடி கனல் மதி ஆகியோர் கலந்து கொண்டனர்.   நிகழ்வினை மடத்துக்குளம் திவிக ஒன்றியச் செயலாளர் சிவானந்தம்...

நங்கவள்ளி ஒன்றியம் தயாராகிறது

நங்கவள்ளி ஒன்றியம் தயாராகிறது

18.06.2023 ஞாயிறு பிற்பகல் 2 மணியளவில் நங்கவள்ளி நகர கழக கலந்துரையாடல் கூட்டம் தோழர் காவை ஈசுவரன் , தலைமைக் குழு உறுப்பினர் தலைமையில், நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன்  இல்லத்தில் கடவுள் மறுப்பு வாசகத்துடன் தொடங்கியது. கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:   1). தீண்டாமை நிலவுகின்ற கிராம பகுதிகளான நங்கவள்ளி ஒன்றியத்தில் தோழர்கள் பிரபாகரன், அருள்குமார், நாகராஜ் ஆகியோரது தலைமையில் கணக்கெடுப்பு நடத்துவதெனவும், கொங்கனாபுரம் ஒன்றியத்தில் தங்கதுரை, கண்ணன், கவியரசு ஆகியோரது தலைமையிலும், மேச்சேரி ஒன்றியத்தில் கிருஷ்ணன், சிவா, சந்திரசேகர் ஆகியோரது தலைமையிலும், தீண்டாமை நிலவுகின்ற கிராம பகுதிகளை கண்கெடுப்பு நடத்தி வருகிற ஜூன் 25 ஆம் தேதிக்குள் மாவட்ட கழகத்திடம் ஒப்படைப்பதென தீர்மானிக்கப்பட்டது.   2) எது திராவிடம், எது சனாதனம் என்னும் தலைப்பில் கிராம பிரச்சார கூட்டங்கள் நங்கவள்ளி ஒன்றிய கிளைக் கழகத்தின் சார்பில் முதல்கட்டமாக 10 கிராமங்களில் நடத்துவதென தீர்மானிக்கப்பட்டது.   3) நங்கவள்ளியில்...

சேலம் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் நடந்த ஜாதி மறுப்புத் திருமணம்

சேலம் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டத்தில் நடந்த ஜாதி மறுப்புத் திருமணம்

சேலம் கிழக்கு – மேற்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக கலந்துரையாடல் கூட்டம் 20.06.2023 செவ்வாய் காலை 11.00 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது.   கலந்துரையாடல் கூட்டத்தில் மாநிலப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, மாநில அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம், திருப்பூர் மாவட்ட தலைவர் முகில் ராசு, ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் நாத்திக ஜோதி ஆகியோர் கலந்து கொண்டனர்.   கொளத்தூர் நகர தலைவர் ராமமூர்த்தி கடவுள் – ஆத்மா மறுப்புடன் கூட்டம் தொடங்கியது. கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட மாநகர , நகர, கிளைக் கழக பொறுப்பாளர்களும், தோழர்களும் தீண்டாமை நிலவும் பகுதிகளின் பட்டியலை கணக்கெடுத்துக் கொண்டிருப்பதாகவும் வரும் 25.06.2023ம் தேதி பட்டியலை மாவட்ட கழகத்திற்கு சமர்பிப் பதாகவும் தெரிவித்தனர்.   மேலும் சேலம் மாநகரம் சார்பாக 25 தெருமுனைக் கூட்டங்களும், மேட்டூர் நகர கழகம் 30...

தன் மீது புனையப்பட்ட போலி வழக்கை தோலுரித்த வி.பி.சிங்

தன் மீது புனையப்பட்ட போலி வழக்கை தோலுரித்த வி.பி.சிங்

ஜூன் 25 விபி.சிங் பிறந்தநாள்.  சமூக நீதி காவலர், மண்டல் பரிந்துரைகளை அமுலாக்கி இன்றுவரை ஒன்றிய அரசு பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் இடம்பெறுகிறார்கள் என்று சொன்னால் அதற்கு வாய்ப்புக் கதவை திறந்து விட்ட ஒருவர் தான் விபி.சிங். 11 மாதங்கள் தான் அவருடைய ஆட்சி நீடித்தது. நேர்மைக்கும் ஊழலற்ற ஆட்சிக்கும் வழிகாட்டியாக அவர் திகழ்ந்தார். ஆனால் நாட்டில் ஊழல் பெருகிவிட்டது அரசியலில் நேர்மை இல்லை என்று வாய்கிழிய பேசுகிறவர்கள், விபி.சிங்கை பாராட்ட மனம் வருவதில்லை. காரணம் அவர் சனாதனத்தை எதிர்த்தார். சமூக நீதிக்கு ஆதரவாக குரல் கொடுத்தார்.   இன்று வரை விபி.சிங் அவர்களுக்கு ஒரு தபால் தலை கூட எந்த ஒரு ஒன்றிய அரசும் வெளியிடவில்லை. அவரது சொந்த ஊரான அலகாபாத்தில் ஒரு வீதிக்கு கூட அவரது பெயர் சூட்டப்படவில்லை. எந்த ஒரு அரசு அலுவலக கட்டிடத்துக்கும்  அவரது பெயர் சூட்டப்படவில்லை.   தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தான் தமிழ்நாடு...

அவசர நிலையை எதிர்த்து வீதிக்கு வந்த கலைஞர்

அவசர நிலையை எதிர்த்து வீதிக்கு வந்த கலைஞர்

40.1975 ஜூன் 25-ம் தேதி அவசர நிலையை பிரகடனப்படுத்தினார் இந்திரா காந்தி. எமர்ஜென்சி காமராசரையும் கலைஞரையும் ஒன்று சேர்த்தது. இருவரும் வெவ்வேறு காலங்களில் இந்திரா காந்தியை ஆதரித்ததற்கு இன்று நாடு விலை கொடுக்கிறது என கலைஞரிடம் கூறினார் காமராசர்.   41.எமர்ஜென்சி காலத்தில் பத்திரிகைகள் கடும் தணிக்கைகளுக்கு உள்ளாகின. எமர்ஜென்சிக்கு எதிராக காமராசரின் கருத்துக்களை முரசொலியில் வெளியிட்டார் கலைஞர். காமராசரின் கருத்துக்கள் முரசொலியில் முதல்முதலாக வெளியானது அப்போதுதான்.   சென்னை கடற்கரையில் பல லட்சம் மக்களை திரட்டி அனைவரையும் அவசரநிலை பிரகடனத்திற்கு எதிராக உறுதி ஏற்க வைத்தார் கலைஞர்.   43 . மத்திய தகவல் தொடர்பு துறை விடுதலை, முரசொலி ஏடுகளை தணிக்கை செய்தது. அகில இந்திய வானொலியில் தலைமை செய்தியாளராக இருந்து ஓய்வு பெற்ற சங்கராச்சாரி சீடர் சவுமி நாராயணன் என்ற பார்ப்பனர், விடுதலை முரசொலி ஏடுகளின் தணிக்கை அதிகாரியாக இருந்தார். “அண்ணாவை பெற்ற தாயை விட நேசிக்கிறேன்”...

எது நாத்திகம்?

எது நாத்திகம்?

நமது நாட்டிலோ, சாமி தாசி வீட்டிற்குப் போகும் உற்சம் வேண்டாம் என்றால், அது நாஸ்திகம்! சமணரைக் கழுவேற்றும் உற்சவம் வேண்டாம் என்றால், அது நாஸ்திகம்! குடம்,குடமாய் நெய்யையும், வெண்ணெயையும் கொண்டு போய் நெருப்பில் போட்டு வீணாக்கும் கார்த்திகை தீப உற்சவம் வேண்டாம் என்றால், அது நாஸ்திகம்! இளங் குழந்தைகளைப் பாலில்லாமல் கஷ்டப்பட வைத்துவிட்டு, குடம் குடமாய்ப் பாலைக் கொண்டு போய்க் கல்லின் மீது கொட்டும் பாலாபிஷேக உற்சவம் வேண்டாம் என்றால் அது நாஸ்திகம்! பெரியார், குடிஅரசு – 13.1.1929 பெரியார் முழக்கம் 29062023 இதழ்

பாட்னா கூட்டம் காலத்தின் தேவை

பாட்னா கூட்டம் காலத்தின் தேவை

2024 தேர்தலை கூட்டாக சந்திப்பது என்று பாட்னாவில் கூடிய 17 எதிர்க்கட்சிகள் முடிவு செய்திருப்பது ஒரு வரலாற்று திருப்பமாகும்.  காலத்தின் அறைகூவலை சந்திப்பதற்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்தக் கூட்டத்தில் பல நல்ல முடிவுகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.  அடுத்த கூட்டம் சிம்லாவில் நடைபெற இருக்கிறது, அடுத்த தொடர் நடவடிக்கைகள் குறித்து அதில் முடிவெடுக்கப்படும்  என்று எதிர்க்கட்சிகள் முடிவு செய்து இருக்கின்றன.   பாரதிய ஜனதா கட்சி எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைப் பார்த்து இப்பொழுதே அலறத் தொடங்கி இருக்கிறது.  போட்டோ ஷுட் நடத்துகிறார்கள் என்று  அமித் ஷா கூறியிருப்பது இறுமாப்பையும் ஆணவத்தையும் காட்டுகிறது. வருகிற தேர்தலில் இதற்கு மக்கள் நிச்சயம் சரியான பாடத்தை புகட்டுவார்கள்.   தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்த கூட்டத்தில் பங்கேற்று பல ஆக்கபூர்வமான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.  தேர்தல் முடிந்த பிறகு கூட்டணி அமைத்துக் கொள்ளலாம் என்று முடிவுக்கு வருவது முறையானது அல்ல என்று அவர் எச்சரிக்கை செய்திருக்கிறார்.  எந்த...

தலையங்கம் கோயில் நுழைவு உரிமைக்கு வெடிக்கும் போராட்டங்கள்

தலையங்கம் கோயில் நுழைவு உரிமைக்கு வெடிக்கும் போராட்டங்கள்

தமிழ்நாட்டில் தீண்டப்படாத மக்கள் கோயில்களில் நுழைய இன்றும் அனுமதிக்கப்படுவதில்லை. இதை எதிர்த்து ஆங்காங்கே உரிமைப் போராட்டங்கள் வெடித்துக் கிளம்பி இருக்கின்றன,  இது வரவேற்கத்தக்க ஒரு நல்ல திருப்பமாகும்.  விழுப்புரம் மாவட்டம் மேல்பாதி திரவுபதி அம்மன் கோயிலில்  ஒரு சாதிக்காரர்கள் கோயில் எங்களுக்குத் தான் சொந்தம் என்று கூறி தலித் மக்களை உள்ளே விட மறுத்தார்கள்.  இதை எதிர்த்து போராட்டம் நடத்தியும், அதிகாரிகள் சமரச பேச்சு வார்த்தை நடத்தியும், சாதிக்காரர்கள் இதை ஏற்க மறுத்த காரணத்தினால் அதிகாரிகள் அந்த கோயிலுக்கு சீல் வைத்து விட்டனர்.   கோயிலுக்கு எப்படி சீல் வைக்கலாம்? தலித் மக்களையும்  உள்ளே அழைத்துச் சென்றிருக்க வேண்டாமா?  என்று சிலர் சில கருத்துக்களை முன் வைக்கிறார்கள். ஜாதித் தீண்டாமை ஒழிப்பு போராட்டம் என்பது  ஒரு நீண்டப் போராட்டம்,  அது  பல  மைல்கற்களை தாண்டி தாண்டித்தான் செல்ல வேண்டி இருக்கிறது.  கோயில்களில் வழிபாட்டு சடங்குகள் நிறுத்தப்பட்டு இருக்கிறது, எனவே புனிதம் கெட்டுவிட்டது...

தோழர்களுக்கு வேண்டுகோள்!

தோழர்களுக்கு வேண்டுகோள்!

கழக நூல்கள் தோழர்களுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு பல மாதங்கள் ஆன நிலையில் சில பகுதிகளில் தோழர்கள் அதற்கான தொகையை அனுப்பி வைக்கவில்லை, கடும் பொருளாதார நெருக்கடியில் நூல்கள் அச்சடிக்கப்படுகிற நிலையில் தோழர்கள் இதில் ஒத்துழைக்க வேண்டுகிறோம். விற்பனையாகாத நூல்களை தலைமை கழகத்திற்கு உடனடியாக அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறோம்.   தபசி குமரன் தலைமை நிலைய செயலாளர் பெரியார் முழக்கம் 29062023 இதழ்

சென்னையில் கழக தலைமைக் குழு கூடியது

சென்னையில் கழக தலைமைக் குழு கூடியது

திராவிடர் விடுதலைக் கழக தலைமை குழு கூட்டம் ஜூன் 23 காலை 10:30 மணியளவில் பெருங்குடியில் கழகப் பொதுச் செயலாளர் இல்லத்தில் கூடியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் தலைமைக் குழு உறுப்பினர்கள் பொருளாளர் திருப்பூர் துரைசாமி ,அமைப்பு செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், வெளியீட்டுச் செயலாளர் கோபி. இளங்கோவன், தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன், தமிழ்நாடு அறிவியல் மன்ற தலைவர் ஆசிரியர் சிவகாமி, சூலூர் பன்னீர்செல்வம், விழுப்புரம் அய்யனார், காவலாண்டியூர் ஈஸ்வரன், சென்னை இரா.உமாபதி, அன்பு தனசேகர், இணையதள பொறுப்பாளர் விஜயகுமார், முகநூல் பொறுப்பாளர் பரிமளராசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.   தமிழ்நாட்டில் கிராமங்களில் நிலவும் தீண்டாமை வடிவங்களை நேரில் சென்று பார்த்த அனுபவங்களை தோழர்கள் பகிர்ந்து கொண்டனர். முதல் கட்டமாக தயாரிக்கப்பட்ட பட்டியல்களை தொகுத்து மாவட்ட காவல்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம்,...

ஆகமம் தெரிந்தால் போதும்; ஜாதி ஒரு தடையல்ல ஆகமக் கோயில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் •  சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பான தீர்ப்பு

ஆகமம் தெரிந்தால் போதும்; ஜாதி ஒரு தடையல்ல ஆகமக் கோயில்களில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் • சென்னை உயர்நீதிமன்றம் சிறப்பான தீர்ப்பு

அர்ச்சகர் பதவி மதம் தொடர்பானது அல்ல, அவர் நடத்தும் பூஜை, சடங்குகள் தான் மதம் தொடர்பானது. முறையாக ஆகமம் தெரிந்த எந்த ஜாதியினரும் ஆகமக் கோயில்களில் அர்ச்சகராகலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெளிவான தீர்ப்பை (ஜுன் 26) வழங்கியுள்ளது.   அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் பிரச்சனையில் சென்னை உயர்நீதிமன்றம் மிகச் சிறப்பான ஒரு தீர்ப்பை வழங்கியிருக்கிறது. சேலம் சுகவனேஸ்வரர் கோயிலில் அர்ச்சகர் பணிக்கு விண்ணப்பங்கள் கோரி அறநிலையத்துறை விளம்பரம் வெளியிட்டது. இதை எதிர்த்து கோயில் பரம்பரை அர்ச்சகர் முத்து சுப்பிரமணிய குருக்கள் என்பவர் வழக்கு தொடர்ந்திருந்தார். பாரம்பரிய முறையில் தான் அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் பழக்கவழக்கங்களை மாற்றக்கூடாது என்று அவர் தன்னுடைய மனுவில் குறிப்பிட்டிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தனது தீர்ப்பில் சில முக்கிய கருத்துகளை சுட்டிக்காட்டி இருக்கிறார். ஆகம கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிப்பவர்கள் ஆகமங்களையும் சடங்குகளையும் தெரிந்திருந்தால் போதும், அவர்களுக்கு ஜாதியோ, பரம்பரையோ ஒரு தடையாக இருக்க...