Category: குடி அரசு 1927

ஜில்லா போர்டு பிரசிடெண்டு தேர்தல்கள் 0

ஜில்லா போர்டு பிரசிடெண்டு தேர்தல்கள்

வகுப்பு துவேஷம் ஒழித்ததற்கு இது ஒரு சாக்ஷி தமிழ் நாட்டிலுள்ள பதினொரு ஜில்லாக்களின் ஜில்லா போர்டு பிரசிடெண்டு ஸ்தானங்களில் இது சமயம் திருச்சி நீங்கலாக (அங்கு மாத்திரம் பார்ப்பன பிரசிடெண்டு) மற்ற 10 ஜில்லாக்களில் பார்ப்பனரல்லாத பிரசிடெண் டுகளே இருந்து வருகிறார்கள். அதாவது ஸ்ரீமான்கள் செங்கல்பட்டுக்கு ஆ.மு.ரெட்டியும், தென்னாற்காட்டுக்கு சீத்தாராம ரெட்டியும், வடஆற்காட்டுக்கு கிருஷ்ணசாமி நாயுடுவும், சித்தூருக்கு முனிசாமி நாயுடுவும், சேலத்திற்கு எல்லப்ப செட்டியாரும், கோயமுத்தூருக்கு ரத்தினசபாபதி முதலியாரும், தஞ்சைக்கு பன்னீர்செல்வமும், மதுரைக்கு போக்ஸ் துரையும், இராமநாத புரத்திற்கு இராமநாதபுர ராஜாவும், திருநெல்வேலிக்கு குமாரசாமி ரெட்டி யாருமாக இருக்கிறார்கள். இது ஜஸ்டிஸ் கட்சி ஏற்பட்டதால் இம்மாதிரி பார்ப்பனரல்லாத கனவான்கள் வரமுடிந்தது என்பதும், அதனாலேயே பார்ப்பனர்கள் நமது ஜஸ்டிஸ் கட்சியையும் அதன் தலைவரான பனக்கால் ராஜாவையும் வெட்டிப் புதைக்க வேண்டு மென்று சொல்லுவதும், இப்பொழுது ஏற்பட்ட அரைப் பார்ப்பனரான சுப்பராய மந்திரிசபையின் மூலம் இதை மாற்றி இத்தனை ஜில்லா போர்டுகளையும் பார்ப்பன மயமாக...

தொழிலாளர் 0

தொழிலாளர்

சென்னைப் பார்ப்பனத் “தலைவர்கள்” தாங்கள்தான் தொழிலாளர்கள் விஷயத்தில் அதிக அக்கரையுள்ளவர்கள் என்றும், தொழிலாளர்களுக்கு வேண்டிய சகல சவுகரியங்களும் தங்களால்தான் செய்யக் கூடுமென்றும், தொழிலாளர்களுக்கு வேண்டிய பிரதிநிதித்துவங்களெல்லாம் தங்களால்தான் வாங்கிக் கொடுக்கக்கூடும் என்றும், சொல்லி இது காலபரியந்தம், தொழி லாளர்களை ஏமாற்றி அவர்களுடைய ஓட்டுக்களைப் பெற்று பதவி பெற்று வந்தது யாவருக்கும் தெரிந்த விஷயமே. சென்ற வருஷத்திய முனிசிபல் தேர்தல்களிலும், சட்டசபை தேர்தல்களிலும், அதற்கு முன் நடந்த தேர்தல் களிலும் இப்பார்ப்பனர்களின் சூழ்ச்சிகளை அறியாமல் ஏமாந்து, தொழிலா ளர்கள் தங்களுடைய ஓட்டுக்களை எல்லாம் பார்ப்பன அபேட்சகர்களுக்கே கொடுத்து பார்ப்பனரல்லாதாரை தோற்கடிக்க செய்ததும் யாவருக்கும் தெரிந்த விஷயமே. இப்படி இருக்க, இப்போது ³ தொழிலாள சகோதரர்களில் தங்களுக்கு தாங்களே பிரதிநிதியாய் இருக்கலாம் என்பதாக கருதி, வரப்போகும் சென்னை முனிசிபல் தேர்தலுக்கு தங்கள் சகோதரர்களிலேயே இரண்டொருவரை அபேட்சர்களாய் நிறுத்தத் தீர்மானித்திருக்கிறார்கள். இதை அறிந்த ³ பார்ப்பனர்கள் தொழிலாளர்களை ஏமாற்ற புதிதாய் ஒரு வழி கண்டு பிடித்து...

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் 0

வகுப்புவாரி பிரதிநிதித்துவம்

இந்தியாவில் தற்காலமிருக்கும் பல்வேறு மதங்கள், பல்வேறு ஜாதிகள் முதலியவைகளை உத்தேசித்து ஒருவருக்கொருவர் நம்பிக்கை உண்டாக் கவும் ஒற்றுமை உண்டாக்கவும் என்பதாகக் கருதி சென்ற சீர்திருத்தத்தின் போது தகுந்தபடி விசாரணை செய்து சில வகுப்புகளுக்கு பிரதிநிதித்துவ ஸ்தானங்கள் ஒதுக்கி வைத்தும் சில வகுப்பார்களுக்கே தனித்தொகுதிகள் மூலம் பிரதிநிதித்துவங்கள் ஏற்படுத்தியும் வைத்திருப்பது யாவரும் அறிந்த விஷயமே. இதிலிருந்து சமீபத்தில் வரப்போகும் சீர்திருத்த விசாரணைக் கமிஷன் போது முன்பு பொது தொகுதியில் ஒதுக்கி வைத்த வகுப்பாரும் இனித் தங்களுக்குத் தனித் தொகுதி மூலம் பிரதிநிதித்துவம் அளிக்கப்பட வேண்டும் என்ற கிளர்ச்சியைப் பார்த்து சிறு தொகையினரான நம் நாட்டுப் பார்ப்பனர்கள் இம்முறை அமுலுக்கு வந்து விட்டால் தாங்கள் இப்பொழுது அனுபவித்துக் கொண்டிருக்கிற ஏகபோக மிராசு போய் விடுமென்றும், தங்கள் சமூகத்துக்குத் தகுந்தபடி வீதாச்சாரம் கிடைப்பதாயிருந்தால் இப்பொழுது கிடைத்துக் கொண்டிருப்பதில் 10ல் ஒரு பாகங்கூட கிடைக்காமல் போய் விடுமே என்று பயந்து இக்கிளர்ச்சியை யொழிக்க பல வழிகளிலும் சூழ்ச்சி...

ஒரு சிறு குறிப்பு 0

ஒரு சிறு குறிப்பு

சென்னையில் உள்ள முக்கிய வைத்தியர்களில் அனுபவம் பெற்ற இரண்டு கனவான்கள் நமது உடல் நிலையைப் பற்றி கவனித்து சரீரத்தில் ரத்த ஓட்ட வேகம் ( க்ஷடடிடின ஞசநளளரசந) அதிகமாயிருப்பதாகவும், சுமார் 150 டிக்கிரி பிரஷர் இருக்க வேண்டியது 200 டிக்கிரி போல் இருப்பதாகவும், இது போலவே கூடுதலாகிக் கொண்டு வருமாகில் ரத்தக் குழாய்கள் வெடித்து ரத்த ஓட்டம் நின்று கால் கை அல்லது மூளை முதலியதுகள் ஸ்தம்பித்துப் போகுமென்றும் அபிப்பிராயம் சொல்லி, அதற்கு சிகிச்சையாக குறைந்தது இரண்டு தடவை மூன்று மூன்று நாள்கள் முழுப்பட்டினி இருக்க வேண்டும் என்றும், இராத்திரி சாப்பாட்டை குறைத்துவிட வேண்டுமென்றும், மாமிச ஆகாரத்தை அறவே நீக்கி விட வேண்டும் என்றும், கண்டிப்பான சிகிச்சை சொல்லி இருக்கிறார்கள். ஸ்ரீலஸ்ரீ கைவல்ய சுவாமிகளுமிதற்கு முன்பே இதே அபிப்பிராயத்தை இரண்டு மூன்று தடவைகளில் சொல்லி இருக்கிறார். அன்றியும் நமக்கு சரீரத்தில் முன்னை விட எடை அதிகமாயிருந்தாலும், அதிகமான பலக்குறைவும் மூச்சு வாங்குதலும்...

எது பொய்ப் பிரசாரம் ?   19-4-27 தேதி “தமிழ்நாடு” தலையங்கத்திற்கு பதில் 0

எது பொய்ப் பிரசாரம் ? 19-4-27 தேதி “தமிழ்நாடு” தலையங்கத்திற்கு பதில்

“தமிழ்நாடு” தனது ஏப்ரல் மீ 19 ² பத்திரிக்கையில் “பொய் பிரசாரம்” என்பதாக பேரிட்டு ஒரு தலையங்கம் எழுதியிருக்கிறது. அதில் தமிழ்நாட்டைப் பற்றி “சுதேசமித்திரனும்” “குடி அரசும்” “தமிழ்நாடு” யோக்கியதைக் குறித்து எழுதிய குறிப்புகளுக்கு பதில் எழுதியதாக ஜனங்கள் நினைக்கும்படி என்ன என்னமோ உளறிக் கொட்டி இருக்கிறது. அவற்றுள் மித்திரனைப் பற்றி எழுதியிருப்பவைகளை நாம் கவனிக்க வேண்டியதில்லை. ஏனெனில் ஸ்ரீமான்கள் அய்யங்காரும், நாயுடுகாரும் நினைத்தால் சண்டை போட்டுக் கொள்வார்கள், நினைத்தால் ராஜியாகி விடுவார்கள். ஏனென்றால், மித்திரன் ராஜீய அபிப்பிராயத்திற்கும் கொள்கைக்கும் “தமிழ்நாடு” வுக்கும் யாதொரு வித்தியாசமும் இல்லை என்று “தமிழ்நாடு”வே எழுதியிருக் கிறபடியால் நாம் அதை கவனிக்க வேண்டியதில்லை. தவிர “தமிழ்நாடு” “குடிஅரசு”வைப் பற்றி எழுதியதை மாத்திரம் எடுத்து கொள்ளுவோம். உண்மையும் யோக்கியதையும் பெருமையும் உள்ள பத்திரிகை களாயிருந்தால் தன்னைப்பற்றி ஏதாவது ஒரு பத்திரிகை எழுதினால் அதுகளை எடுத்து சரியாய் போட்டு அதற்கு சமாதானம் சொல்ல வேண்டியது கிரமம். அப்படிக் கில்லாமல்...

பழய கருப்பனே கருப்பன் 0

பழய கருப்பனே கருப்பன்

சென்னையில் இருந்து டாக்டர் வரதராஜுலு நாயுடுவால் வெளியிடப் போகும் “தமிழ்நாடு” தினசரிப் பத்திரிகை வெளியாக வேண்டும், வெளியாக வேண்டும் என்று எதிர்பார்த்தவர்களில் யானும் ஒருவன். அதனால் நமது சமூகத்திற்கோ, நாட்டிற்கோ, பெருத்த அனுகூலம் ஒன்றும் ஏற்பட்டு விடாது என்ற முடிவு ஏற்கெனவே இருந்தாலும், சுதேசமித்திரனால் நாட்டுக்கும் நமது சமூகத்திற்கும் ஏற்படும் கெடுதியையாவது கொஞ்சம் குறைக்காதா என்று எதிர்பார்த்தோம். கடைசியாக வெளிவந்தது. வெகு ஆவலாய்ப் படித்துப் பார்த்தோம். பழய கருப்பனே கருப்பனல்லாமல் வேறு ஒரு சங்கதியையும் காணோம். மறுபடியும் பார்ப்பனர்கள் காலுக்குள் நுழையும் தந்திரங்களே நிறைந்திருப்பதும் சுதேசமித்திரன் காலில் விழுந்து அதை ஆதரித்து அதனால் தான் வாழப் பார்ப்பதும் அல்லாமல் வேறு ஒன்றையுங் கண்டு பிடிக்கமுடியவில்லை. அதோடு வழக்கம் போல் ஜஸ்டிஸ் கட்சியை வைவ தின் மூலம் பார்ப்பனர்களின் தயவைச் சம்பாதிப்பதில் கண்ணுங் கருத்துமாய் காணப்படுகிறது. உதாரணமாக இரண்டொரு விஷயங்களை மாத்திரம் எடுத்துக் காட்டுகிறோம். ஏனென்றால், கோயமுத்தூரில் நாயுடு கான்பரன் சிலிருந்து இந்த...

* உண்மையான சுத்தவீரன் “ பார்ப்பனர் கீழ் வேலை செய்வதைக் காட்டிலும் சாவதே மேல்” 0

* உண்மையான சுத்தவீரன் “ பார்ப்பனர் கீழ் வேலை செய்வதைக் காட்டிலும் சாவதே மேல்”

செங்கல்பட்டு ஜில்லா பொன்னேரியில் காஞ்சீபுரம் ரிடயர்ட் சால்ட் சப்இன்ஸ்பெக்ட்டருடைய குமாரரான பி. சுப்பரமணிய முதலியார் என்கிற 22- வயதுள்ள ஒரு வாலிபர் ஒரு பார்ப்பனருக்குக் கீழ் இருந்து வேலை செய்வதைப் பார்க்கிலும் செத்துப்போவதே மேல் என்பதாகக் கருதி தன்னுடைய நண்பர் ஒருவருக்கு கீழ்க்கண்ட விதமாக ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டுப் பாஷாண சம்பந்தமான மருந்தைச் சாப்பிட்டு விட்டு, உயிர் துறந்தார். அக்கடிதமாவது;- பொன்னேரி லோகல் பண்டு ஆஸ்பத்திரி 7-4-27. அன்புமிக்க மாணிக்கம்! இந்தமாதம் 8- தேதி எனக்கு குறிப்பிடத்தக்க ஒரு அதிர்ஷ் டவசமான நாளாகும். அது என்னவென்றால் நான் இந்த உலகத்தையும், உன்னையும், எனது பந்துக்களையும் விட்டு சந்தோஷமாகவும், திருப்தி யாகவும் பிரியும் நாளாகும். ஒரு பார்ப்பன எஜமானன் கீழ் இருந்து வேலை செய்ய இனி என்னால் முடியாது. பார்ப்பன எஜமானன் கீழ் வேலைசெய்து ஜீவிப்பதைக் காட்டிலும், செத்துப்போவது மேலானதெனவும், புத்திசாலித்தனமான தெனவும் நான் தெரிந்து கொண்டேன். என்னுடைய பார்ப்பன எஜமானனுடைய...

பார்ப்பனக் கொடுமைக்காக உயிர்விட்ட சுத்த வீரன் 0

பார்ப்பனக் கொடுமைக்காக உயிர்விட்ட சுத்த வீரன்

பார்ப்பன எஜமானன் கீழ் இருந்து வேலை பார்த்து வயிறு பிழைப் பதை விட சாவதே மேல் என்பதாகக் கருதி ஒரு சுத்த வீரன் பாஷாணத்தைச் சாப்பிட்டு உயிர்விட்டுத் தனது சுயமரியாதையைக் காத்துக் கொண்ட செய்தியை வேறு பக்கம் பிரசுரித்திருக்கிறோம். இவ்வீரனை நாம் உண்மை யான சுத்த ரத்தோட்டமுள்ள சுத்தவீரனென்றே சொல்லுவதோடு, மனமாரப் பாராட்டுகிறோம். இவ்வீரனின் தியாகமானது பார்ப்பனரல்லாத சமூகத்திற்காக இதுவரை பாடுபட்ட எல்லாப் பெரியார்களின் தியாகத்தை விட மிகப்பெரிய தியாகமென்றும், மற்றவர்கள் செய்த வேலைகளையெல்லாம் விட மிகப் பெரிய பலனை அளிக்கக்கூடியது என்றும் சொல்லுவோம். நாயர் பெருமானின் பிராமணத் தியாகமும், தியாகராய பெருமானின் தன்னலமற்ற சேவையும் மற்றும் பலரின் சிறைவாசமும் இவ்வீரனின் தியாகத் திற்கு ஒரு விதத்திலும் சமானமாகாதென்றே சொல்லுவோம். இதைப்பற்றி எழுதும் போது நமது உடம்பு சிலிர்த்துக் கொண்டே இருக்கிறது. பார்ப்பனரல்லாத மக்கள் இவ்வீரனைக் கொண்டாட வேண்டும். ஒவ்வொரு ஊரிலும் கூட்டங்கள் போட்டு அவனைப் பாராட்டித் தீர்மானங் கள் செய்தனுப்ப...

காங்கிரஸ் பைத்தியம் 0

காங்கிரஸ் பைத்தியம்

மகாத்மா காந்தி அவர்களாலும், அவர் பேச்சைக் கேட்டு சிறைக்கு சென்ற பதினாயிரக்கணக்கான தேசபக்தர்களாலும் ஒரு கோடி ரூபாய் செலவு செய்து பிரசாரம் செய்ததின் பலனாலும் பாமர மக்களிடையே காங்கிரஸ் என்கிற பதத்திற்கு நமது நாட்டில் ஒருவித மதிப்பும் செல்வாக்கும் ஏற்பட்ட தோடு படித்த வகுப்பார்களுக்கு அதன் மூலம் உத்யோகம், பதவி, பட்டம், அதிகாரம் முதலியதுகள் கிடைப்பதற்கு இடமிருப்பதால், அதனிடத்தில் ஒருவித பைத்தியமும் ஏற்பட்டிருக்கிறது. அதனாலேயே ஒரு கூட்டத்தார் காங்கிரசின் பெயரை சொல்லிக் கொண்டு பிழைப்பதையும் மறைக்க முடியாது. ஆகவே, காங்கிரசின் பேரில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் குருட்டு நம்பிக்கையில், அதனால் தேசத்திற்கும், தேசத்தின் பெரும்பான்மை மக்களான குடியானவர்கள், தொழிலாளிகள், ஏழை மக்கள் முதலியவர்களுக் கும் ஏற்பட்ட கெடுதியையும், சர்க்காருக்கு அதனால் ஏற்படும் ஆதிக்கத் தையும் பலத்தையும் வெளியில் எடுத்துச் சொல்லக்கூட பயப்படுகிறார்கள். யாராவது துணிந்து வெளியில் எடுத்துச் சொல்ல வந்தாலும் அது மிகக் கஷ்டமாக இருக்கிறது. அதாவது மத சம்மந்தமான புரட்டுகளை வெளியில்...

வாலாஜாபாத் சொற்பொழிவு 0

வாலாஜாபாத் சொற்பொழிவு

ஸ்ரீமான் ரெட்டியார் அவர்கள் இதுவரை செய்த வேலைகளையும் செய்யப்போகும் வேலைகளையும் பற்றி சொன்னது தமக்கு மிகுந்த திருப்தி அளிக்கின்றதெனவும் இவ்வளவு வேலைகள் அவர் செய்திருந்தாலும் தற்கால பார்ப்பன அகராதிப்படி அவர் பெரிய தேசத்துரோக ஜாப்தாவில் சேர்க்கப்பட்டிருக்கிறார் என்றும் தமிழ்நாட்டில் உள்ள சுமார் 9 பார்ப்பன ரல்லாத ஜில்லா போர்டு மெம்பர்களில் இரண்டு ஜில்லா போர்டு மெம்பர்கள் தான் “ தேசத்துரோகிகள்” என்று சொல்லப்படுகிறார்கள் என்றும், அவர்கள் செங்கல்பட்டு போர்டு ஸ்ரீமான் ரெட்டியாரும் தஞ்சாவூர் போர்டு ஸ்ரீமான் பன்னீர் செல்வமுமே யாவார்கள் என்றும், ஸ்ரீமான் பன்னீர் செல்வத்தைவிட ஸ்ரீமான் எம்.கே. ரெட்டியாரே அதிகமான அதாவது பிராயசித்தமே இல்லாத “ தேசத்துரோகி” என்றும் ஸ்ரீமான் பன்னீர் செல்வம் தன்னுடைய ஆட்சியில் பல பார்ப்பனருக்கு உத்தியோகம் சோறு, படிப்பு முதலியவைகள் கொடுக்கிறார் என்றும், இவர் அடியோடு மறுக்கிறார் ஆதலால் தான் பெரிய “ தேசத்துரோகியாகி”விட்டார் என்றும் அப்பேர்பட்ட தேசத்துரோகியை பாராட்டும் கூட்டத்திற்கு தேசத்துரோகிகளுக்கு உபாத்தியாயரான ஸ்ரீமான்...

மகாத்மாவின் தேக அசௌக்கியம் 0

மகாத்மாவின் தேக அசௌக்கியம்

மகாத்மா காந்தி அசௌக்கியமாக இருப்பதாகவும் அவருடைய தென்னாட்டுச் சுற்றுப் பிரயாணம் பாதிக்கப்படும் என்பதாகவும் பொதுவாய் தெரிய வருகிறது. ஆனாலும் அவருடைய சிஷ்ய கோடிகள், அதாவது அவரைக் கொண்டு வந்து ஆட்டி வைத்து யோக்கியதையும் பணமும் சம்பாதித்துக் கொள்ள நினைத்திருப்பவர்கள் அந்த விபரத்தைப் பற்றி ஜனங்கள் சரியாய் உணருவதற்கு இடமில்லாமல் குழப்பமடையும்படி யாகவும், முன்னுக்கு பின் முரணாகவும் ஏமாற்றுத் தந்திகள் அடித்தவண்ண மாயிருக்கின்றார்கள். காயலாவினுடைய உண்மையையும் சரியாய்த் தெரியப் படுத்தாமல் ஏதேதோ தந்திரமாயும் மூடு மந்திரமாயும் தெரிவித்து வரு கிறார்கள். ஸ்ரீமான் ஸி. ராஜகோபாலாச்சாரி தந்தியை விட்டு விட்டு, ஸ்ரீமான் தேசாய், நியானியிலிருந்து கொடுத்திருக்கும் தந்தியை பார்க்கும் பஷத்தில் மகாத்மாவுக்கு மூளைக்கொதிப்பும், ரத்தோட்டக் குரைவும், கைக்கால் சரியான சுவாதீனமற்ற தன்மையும் காட்டுகிறதாகவும், தக்க ஓய்வு எடுத்துக் கொள்ள வேண்டுமென்று டாக்டர்கள் அபிப்பிராயம் கொடுத்திருப்பதாகவும் குறைந் தது இனியும் இரண்டு மூன்று மாதத்திற்கு அதாவது கோடைகால முழுவதற்கும் ஓய்வு எடுத்துக் கொண்டு சுற்றுப்பிரயாணத்தை நிருத்த...

ஒரு விசேஷம் 0

ஒரு விசேஷம்

சென்னை சட்ட சபையில் மந்திரிகளின் மீது நம்பிக்கை இல்லாத தீர்மானம் வந்து விவாதம் நடந்த காலத்தில் ஜனாப் அப்பாசலி பேசும் போது “இண்டிபெண்டண்ட் கட்சியார்களும் மந்திரிகளும் யாதொரு முக்கியமான வேலை செய்யாவிட்டாலும் வேட்டை நாய்கள் போன்ற சுயராஜ்யக் கட்சி யாரை பெட்டிக்குள் பாம்பு அடங்கினது போல் செய்து அவர்களின் தடை வேலைகளையும் தேசீய வேஷங்களையும் மூட்டை கட்டி வைக்கச் செய்து விட்டோமே, இதைவிட வேறு என்ன செய்யவேண்டு”மென்று பேசிக் கொண்டே வரும்போது ஸ்ரீமான் சத்தியமூர்த்தி மந்திரி கணம் சுப்பராயனைப் பார்த்து உங்களுக்கு உள் உளவாயிருந்ததற்கு இப்படித்தானா சபையில் எங்கள் மானத்தைக் கெடுப்பது என்று ரகசியமாய் கெஞ்சினாராம். கணம் சுப்பராயன் உடனே ஜனாப் அப்பாசலிக்கு ஜாடைகாட்டி, கண்ணைச்சிமிட்டி உட்காரச்சொன்னாராம். இந்த காட்சியைப்பார்த்து சட்ட சபையிலுள்ள மந்திரிகளுள்பட எல்லாக் கட்சியாரும் சிரித்தார்களாம். ஐயோ பாவம். சுயராஜ்யக் கட்சியின் நிலைமை இப்படி ஆகிவிட்டது.! குடி அரசு – துணைத் தலையங்கம் – 10.04.1927

வெட்கப்படுகிறார்கள் 0

வெட்கப்படுகிறார்கள்

சென்னை சுயராஜ்யக் கட்சியில் உள்ள பல பார்ப்பனரல்லாதார் அக்கட்சி யில் இருப்பதற்காக இப்போது வெட்கப்படுகிறார்கள் என்று நன்றாய்த் தெரிகிறது. அவர்கள் யார் என்று பொது ஜனங்கள் அறிய ஆசைப்படுவது சகஜம் தான். நாம் அதை தெரிய ஒறே ஒரு சூசனை காட்டு கிறோம். அதாவது சுயராஜ்யக் கட்சியில் உள்ள பார்ப்பனரல்லாதார்களில் யார் யார் உள்ளதற்குள் யோக்கியர்கள் என்று பெரும்பான்மையோர்களால் நினைக்கப்பட்டார்களோ, அவர்களில் பெரும்பான்மையோரும், இனி அந்தக் கட்சியில் இருந்தால் அடுத்த தேர்தலில் தங்களுக்கு ஸ்தானம் கிடைக்காமல் போய்விடுமோ என்பவர்களில் சிறுபான்மையோரும் சேர்ந்து இப்போது தனிக்கட்சி ஏற்படுத்தலாமா அல்லது ஜஸ்டிஸ் கட்சியையே சுவாதீனப் படுத்திக் கொள்ளலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சமயத்தில் ஜஸ்டிஸ் கட்சியார் புத்திசாலிகளாகவும் உண்மையாய் பார்ப்பன ரல்லாதாருக்கும் உழைப்பவர்களாயிருந்தால் ராஜீய அபிப்பிராய பேதத்தை யும், சுயநலத்தையும், சொந்த விரோதத்தையும் மூட்டைக்கட்டி வைத்துவிட்டு வருகிறவர்களை மனப்பூர்வமாக வரவேற்பார்களாக. குடி அரசு -– துணைத் தலையங்கம் – 10.04.1927

மேட்டூர் திட்டப் புரட்டு 0

மேட்டூர் திட்டப் புரட்டு

சட்டசபையில் கோவை ஸ்ரீமான்கள் ராவ் பகதூர் சி.எஸ். இரத்தின சபாபதி முதலியார் அவர்கள் கேள்வியும், சர். சி.பி. ராமசாமி அய்யர் அவர்கள் பதிலும், சி.எஸ். ஆர். முதலியார்:- மேட்டூர் அணைக்கு அஸ்திவாரம் வெட்ட வாங் கப் போகும் குறிப்பிட்ட மாதிரி இயந்திரம் தாங்கள் வாங்க உத்தேசித் திருக்கும் கம்பெனியில் மாத்திரம் தான் கிடைக்கக் கூடியதா? அல்லது வேறு கம்பெனிகளிலும் கிடைக்குமா? சர்.சி.பி. அய்யர் :- அது ஒரு குறிப்பிட மாதிரி என்று நான் நினைக்கவில்லை. இந்த குழிதோண்டும் இயந்திரம் மிகவும் பேர்போனது, சுக்கூர் பம்பாய் முதலிய இடங்களில் குழி வெட்ட இதையே உபயோகிக் கிறார்கள். ( மற்ற இடத்தில் இது போன்றது கிடைக்குமா கிடைக்காதா என்று முதலியார் கேட்டதற்கு பதில் இல்லை.) சி.எஸ்.ஆர். முதலியார் :- அது ஒரு குறிப்பிட்ட மாதிரியாய் இல்லா மல் சாதாரணமானதாயிருந்தால் தாங்கள் ஏன் மற்ற கம்பெனிகளிலிருந்தும் அதன் விலையை தெரிந்து விலை குறைவாய்க் கிடைக்கும் இடத்தில்...

வகுப்புவாரி உரிமையை விட்டுவிட சென்னை முஸ்லீம்கள் ஒப்புவதில்லை 0

வகுப்புவாரி உரிமையை விட்டுவிட சென்னை முஸ்லீம்கள் ஒப்புவதில்லை

புதிய சீர்திருத்தத்தின்படி அரசியலில் மகமதியர்களுக்கு கொடுத்திருக்கும் வகுப்புவாரிப்பிரதிநிதித்துவத்தை ஒழிப்பதற்காக சென்னை பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து வருவதும் தங்கள் பணச் செலவில் சில மகமதி யர்களை தங்களுக்கு அடிமையாக்கிக் கொண்டு அவர்களுக்கு தேர்தல்களில் தாங்கள் உதவி செய்து மகமதிய சமூகத்திற்கு அனுகூலமில்லாமல் தங்களது சுயநலத்திற்காக அவர்களை உபயோகித்து வருவதும் யாவரும் அறிந்ததே. சமீபத்தில் டில்லியில் இது விஷயமாய்க் கூட்டம் கூடியதில் தங்களுக்கு வகுப்புவாரித் தொகுதி வேண்டாம் என்றும், கலப்புத் தொகுதியில் தங்களுக்கு என்று சில ஸ்தானங்கள் ஒத்தி வைத்தால் போதுமென்றும், சில மகமதியர்கள் ஒப்புக்கொண்டதாக விஷயங்கள் வெளியாயிருக்கின்றன. ஆனால் பல நிபந்தனைகளின் மேல் அம்மாதிரி ஒப்புக்கொண்டதாக பின்னால் விஷயங்கள் வெளிவருகின்றன. ஆனால் பல சுவாதீன முஸ்லீம்களும் சமூக விஷயத்திலும் மார்க்க விஷயத்திலும் அபிமானமும் பொறுப்பும் உள்ள முஸ்லீம்களும், இந்த விஷயத்தை ஆnக்ஷபித்து தங்களுக்கு இப்போதுள்ள வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அதாவது முஸ்லீம்களாலேயே தெரிந்தெடுக் கும் பாத்தியமே வேண்டுமென்று சொல்லி வருவதோடு மேல்படி ஒதிக்கி வைக்கும்...

வேண்டுகோள் 0

வேண்டுகோள்

தஞ்சை ஜில்லாவில் சுற்று பிரயாணம் செய்யும் நண்பர் சிற்சில இடங்களில் சிலர் படங்களை நெருப்பிற்கிரையாக்கியதாக ‘திராவிடன்’ பத்திரிகையில் காணப்படுகிறது. இதை நாம் பலமாய் ஆnக்ஷபிப்பதற்காக மன்னிக்க வேண்டுகிறோம். இம்மாதிரியான காரியம் நமக்கு ஒரு பலனையும் தராததோடு மனித சமூகத்திற்கு திருப்தி அளிக்காது என்றும் வணக்கமாய் தெரிவித்துக் கொள்ளுகிறோம். அக்குறிப்பிட்ட கனவான்களிடம் நமக்கு எவ்வித குரோதமும் இருக்க நியாயமில்லை. அவர்கள் மோசங்களையும் தந்திரங்களையும் சூழ்ச்சிகளையும்தான் நாம் வெளிப்படுத்தி அதுகளுக்கு யோக்கியதை இல்லாமல் செய்ய வேண்டுமேயொழிய அந்த நபர்களிடம் விரோதம் கொள்வது நியாயமல்ல. ஆதலால் இனி அம் மாதிரியான சம்பவங் கள் நடைபெறக்கூடாது என்று எதிர்பார்க்கிறோம். தவிர கூட்டங்களில் கலவரம் செய்விப்பதும் ஒழுங்கல்ல வென்றே நினைக்கிறோம். யார் வந்து எதை வேண்டுமானாலும் பேச நாம் இடங்கொடுக்க வேண்டும். நமக்கு ஆண்மையிருந்தால் அக்கூட்டத்திற்கு இடைஞ்சல் இல்லாமலும், கூட்ட முறைக்கு விரோதமில்லாமலும் கேள்வி கேட்கவோ, அக்கூட்டத்திலேயே பேச அனுமதி கேட்டு பேசவோ செய்யலாம். கேள்வி கேட்கவும் பேசவும்...

சுயராஜ்யக் கட்சியாரின் சமாதானம் 0

சுயராஜ்யக் கட்சியாரின் சமாதானம்

சுயராஜ்யக் கட்சியார் என்கிற தமிழ் நாட்டுப் பார்ப்பனக் கட்சியாரின் பூளவாக்கு சென்ற மாதம் சட்டசபை வரவு செலவு திட்டத்தின் போது வெளியாய் விட்டதால், அதை மறைக்க என்னென்னமோ தந்திரங்களும் மந்திரங்களும் செய்கிறார்கள். என்ன செய்தும் அதை மறைக்க மறைக்க நாற்றம் அதிகமாகிறதே தவிர குறைந்தபாடில்லை. இவர்களின் நடவடிக்கையைப் பற்றி இவர்களுக்கு உதவி செய்து வந்த தமிழ்நாட்டுக் காங்கிரஸ் தேசிய பத்திரிகைகள் என்று சொல்லப்படும் “தமிழ்நாடு” “நவசக்தி” “தேசபந்து” முதலிய பார்ப்பனரல்லாதார் பத்திரிகைகளும் “சுயராஜ்யா” “ஹிந்து” முதலிய பார்ப்பன பத்திரிகைகளும், “வசுமதி” “மராட்டா” முதலிய வெளி மாகாண பத்திரிகைகளும் கண்டித்திருக்கும் சாராம்சத்தை மற்றொரு பக்கத்தில் பிரசுரித்திருக்கிறோம். இதுகளிலிருந்து “சுதேசமித்திரன்” என்கிற ஒரு பார்ப்பனப் பத்திரிகை போக, மற்றபடி பார்ப்பனர் தயவில் நடக்கும் பத்திரிகைகள் கூட வேஷத்திற்கானாலும் கண்டிக்காமல் விடவேயில்லை. ஆகவே இப்பார்ப்பனர்களின் நடத்தை மோசமான தென்பதும் வஞ்சகமான தென்பதற்கும் இனி யாரும் சந்தேகப்பட இடமேயில்லை. ஆனால் இக்கூட்டத்தார் கொஞ்சமும் தங்கள் காரியத்திற்கு வெட்கப்படாமல்,...

தேசத்தின் தற்கால நிலையும் பார்ப்பனரல்லாதார் கடமையும் 0

தேசத்தின் தற்கால நிலையும் பார்ப்பனரல்லாதார் கடமையும்

இன்றைக்கு 40, 50 வருடங்களுக்கு முன்னிருந்த நிலையை விட தற்பொழுது தேசம் மிகக் கேவல நிலையடைந்திருக்கிறது என்றும், காங்கிரஸ் மகாசபை, ராஜீயத் தலைவர்கள்,முட்டுக்கட்டைத் திட்டம், சர்க்காருடன் யுத்தம் முதலியவை ஏற்பட்டதின் பலன் சர்க்காரின் வரியும் குடிகளின் வறுமையும் அதிகரித்ததேயொழிய வேறு நாட்டின் நலத்திற்கானவை ஒன்றும் ஏற்பட வில்லையென்றும், தேசத்தின் பெயரையும் மகாஜனங்களின் பெயரையும் சொல்லிக் கொண்டு படித்தவர்களில் ஒரு வகுப்பார் தங்கள் சுயநலத்துக்கான சவுகரியங்களை ஏற்படுத்திக் கொள்ளவே ராஜீயக் கிளர்ச்சி செய்து வந்தார் கள் என்றும், நாடு வறுமையினின்றும் விடுபட அவர்கள் ஒன்றும் செய்யவே யில்லையென்றும், இந்நிலையில் ராஜீய சுதந்திரம் கிடைக்கினும் தேசம் விடுதலை பெற்று விட்டதாகக் கருதப்படமுடியாதென்றும், சுயராஜ்யம் ஏழை களுக்கே மிக அவசியமானதென்றும், தனவந்தர்களுக்கும் உயர்ந்த அந்தஸ் திலிருப்பவருக்கும் சுயஆட்சியினால் இப்பொழுதுள்ளதை விட அதிகமான அநுகூலங்கள் ஏற்பட இடமில்லையாதலால் அவர்களுக்கு தேசவிடுதலை யைப் பற்றிய கவலை ஏற்படாதென்றும், ஏழை மக்களின் நிலைமை மேன்மை படுத்துவதே சுயராஜ்யத்துக்கான வேலை செய்வதாகும்...

காங்கிரஸ் 0

காங்கிரஸ்

காங்கிரஸ் என்னும் பதத்திற்கு கூட்டம் என்பது பொருள். நமது நாட்டில் இது அரசியல் சம்பந்தமான கூட்டமென்பதற்கே குறிக்கப்படுகிறது. அரசியல் என்பதற்கு பொருள் அரசாட்சி, ராஜரீக முறை என்று இருந்தாலும் அது அரசாங்கத்துடன் ராஜரீக முறை விஷயமாய் செய்யும் கிளர்ச்சி என்ப தற்கே சொல்லப்படுகிறது. காங்கிரஸ் என்பதும் அரசியல் கிளர்ச்சி என்பதும் நமது நாட்டு வார்த்தையும் தத்துவமும் அல்ல. அது மேல் நாடுகளில் பாமர மக்களின் பேரில் யார் ஆதிக்கம் செலுத்துவது என்கிற விஷயமாய் ஏற்படும் கிளர்ச்சிகளுக்காக ஏற்படுத்தப்பட்டதே அல்லாமல் இங்கே சொல்லிக் கொள்ளப்படுகிற சுயராஜ்யம், சுதந்திரம் என்கிற போலி வார்த்தைகளுக்கும் அதன் தத்துவத்திற்கும் ஏற்பட்டதல்ல. மேல் நாடுகளில் சுய ஆட்சி, சுயராஜ்யம் என்பதற்கு சரியான பொருளே ஒரு தேசம் அனேகமாய் அரசன் என்பவனால் ஆளப்படாமல் அந்தந்த நாட்டு மக்களாலேயே நிர்வகிக் கப்படுவது. நமது நாட்டில் முதல் முதல் அதாவது காங்கிரஸ் ஆரம்பித்த காலத்தில் சுய ஆட்சி, சுயராஜ்யம் என்பதற்கே இன்ன பொருள்...

பார்ப்பனீயப் புரோகிதப் பகிஷ்கார சங்கம் 0

பார்ப்பனீயப் புரோகிதப் பகிஷ்கார சங்கம்

ஆரம்பப் பிரசங்கம் சகோதரிகளே! சகோதரர்களே! நான் இன்று பேசத் துணிந்த விஷயமாகிய பார்ப்பனீயப் புரோகித பகிஷ்கார விஷயம் சாமானியமானதல்ல. ஆயிரக்கணக்கான வருஷங் களாய் அநேக தலைமுறையாய் நம்மவர்கள் குருட்டு நம்பிக்கையில் ஈடுபட்டு மதத்தின் பேரால் ஆத்மார்த்தம் என்றும், மோக்ஷம் என்றும், தர்மம் என்றும், புண்ணியம் என்றும், கடமை என்றும் கருதி சுயமரியாதை இழந்து நடந்து வந்திருக்கும் அர்த்தமற்ற ஒரு காரியத்தைப் பற்றி உங்கள் முன் பேசுவதென்பது சுலபமான காரியமென்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஏனெனில் இம்மூட நம்பிக்கையும் அர்த்தமற்ற நடவடிக்கைகளும் நமது மக்கள் ரத்தத்திலேயே கலந்து விட்டது. இதுகளைப் பற்றி யோசிப்பதுவே மிகப்பாவம் என்பதாக கருதப்படுகிறது. கொஞ்ச காலத்திற்கு முன் இம்மாதிரி விஷயங்களுக்கு ஒரு கூட்டம் கூட்டுவது என்றால் கூட்டத்திற்கு வந்து என்ன பேசுகிறார்கள் என்று கேட்பதற்கு கூட மனிதர்களுக்கு பொறுமை இருக்காது. ஒரே அடியாய் “காலம் கெட்டுவிட்டது, கலியின் வக்கிரம் இம்மாதிரி நாஸ்திகம் வளருகிறது” என்று எவ்வளவோ வெறுப்பார்கள். ஆனால் இப்போது...

தஞ்சை ஜில்லா போர்டு 0

தஞ்சை ஜில்லா போர்டு

தஞ்சை ஜில்லா போர்டு, போர்டின் ஆதரவில் நடைபெறும் பள்ளிக் கூடங்களில் 25 ஆதிதிராவிடர் பிள்ளைகளுக்கு உண்டி உடை கொடுத்து இலவசமாய்க் கல்வி போதிக்க ஏற்பாடு செய்திருப்பதாகக் கேட்டு மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். பார்ப்பனரல்லாத பிரசிடெண்டு வந்ததினால்தான் இவ்வித சௌகரியம் செய்ய முடிந்தது. இதற்காக ³ போர்டாரைப் பெரிதும் பாராட்டுகிறோம். குடி அரசு – பெட்டிச் செய்தி – 27.03.1927

“வகுப்பு உரிமை” வேண்டாம் என்று சொல்லிதிரியும் போலி தேசாபிமானி, தேசீயவாதிகளுக்கு ஒரு விண்ணப்பம் 0

“வகுப்பு உரிமை” வேண்டாம் என்று சொல்லிதிரியும் போலி தேசாபிமானி, தேசீயவாதிகளுக்கு ஒரு விண்ணப்பம்

நமது சென்னை அரசாங்கத்தின் 1925, 26 -வது வருஷத்திய நிர்வாக அறிக்கைபடி உத்தியோக விஷயங்களில் கீழ்கண்ட கணக்குகள் குறிக்கப் பட்டிருக்கின்றன. நமது சர்க்கார் உத்தியோகத்தை மூன்று பிரிவுகளாக பிரிக்கப் பட்டிருக்கின்றது. அதாவது (1) கெஜட்டட் ஆபீசர் என்று சொல்லுவது. இது குறைந்தது சுமார் 250 ரூபாய்க்கு மேல்பட்டு 5500 ரூபாய் சம்பளம் வரையில் வாங்கக் கூடியது. இரண்டாவது 100 ரூபாய்க்கு மேல்பட்டு 250 ரூபாய் வரை வாங்கக் கூடியது. மூன்றாவது 35 ரூபாய்க்கு மேல்பட்டு 100 ரூபாய் வரையில் உள்ளது. ஆகவே, இந்த மூன்று உத்தியோகத்திலும் பார்ப்பனர்கள் இவ்வ ளவு பேர்கள் இருக்கிறார்கள் என்றும், பார்ப்பனரல்லாதார் இவ்வளவு பேர்கள் இருக்கிறார்கள் என்றும் கணக்கு போட்டிருக்கிறார்கள். இவ்வுத்தியோகங் களிலும் பார்ப்பனர்களே ஏகபோகமாய் அனுபவித்து வரும் நீதி இலாகா அதாவது முனிசீப், சப்ஜட்ஜி, ஜட்ஜிகள் முதலிய உத்தியோகங்களைப் பற்றி குறிப்பிடவே இல்லை. அதில்லாமலே உள்ள உத்தியோகங்களுக்கு சர்க்கார் குறிப்புப்படி எப்படி இருக்கிறது என்று பார்த்தால்...

புரசைவாக்கம் பார்ப்பனரல்லாத                     வாலிபர் சங்கம் 0

புரசைவாக்கம் பார்ப்பனரல்லாத வாலிபர் சங்கம்

அன்புள்ள வாலிபர்களே! அவைத் தலைவர் என்னைப்பற்றி பெருமைபடுத்தி பேசிய தெல்லாம் அவர்கள் என்மீது கொண்ட அன்பேயன்றி வேறல்ல. அவர்கள் சொல்லிய வற்றிற்கு நான் சிறிதும் பொருத்தமுடையவனன்று. ஆனால் எனது கொள்கை களையும் தொண்டுகளையும் ஆதரித்து பேசியிருக்கின்றதிலிருந்து என் கொள்கைக்கு சிறிதாவது நாட்டில் மதிப்பிருக்கிறதென்றும் மக்கள் ஆதரிக் கிறார்களென்றும் ஏற்படுவதோடு, இதனால் என் தொண்டுக்குப் பின் பல மிருக்கிற தென்றும் நான் உணர்கிறேன். வாலிபர்கள் எனது எண்ணமெல்லாம் எப்பொழுதும் வாலிபர்கள்களாகிய உங்கள் மீதுதான் போய்க் கொண்டிருக்கிறது. ஏனெனில் மோட்ச லோகத்தில் ஒரு காலும் பூலோகத்தில் ஒரு காலும் வைத்துக் கொண்டு வீண் வேதாந்தம் பேசிக் கொண்டிருக்கிற பெரியோர்களைப் பற்றி எனக்கு அதிக கவலை இல்லை. ஆகையால் வாலிபர்களாகிய உங்கள் முன் பேச எனக்கு அளவில்லா ஆசை யுண்டாகின்றது. சமீபத்தில் இரண்டு வாலிப மகாநாடுகள் கூடப் போகின்றன. அவைகளில் ஒன்று அகில இந்திய வாலிபர் மகாநாடென்றும், மற்றொன்று பார்ப்பனரல்லாதார் வாலிபர் மாகாண மகாநாடு என்றும்...

பத்திரப்பதிவு இலாக்காக்களில் மக்களுக்கு சுயராஜ்ஜியக் கக்ஷியார் செய்த அக்கிரமம் 0

பத்திரப்பதிவு இலாக்காக்களில் மக்களுக்கு சுயராஜ்ஜியக் கக்ஷியார் செய்த அக்கிரமம்

சென்ற வாரத்தில் சென்னை சட்டசபை வரவு செலவு விவாதத்தின் போது பத்திரப்பதிவு இலாக்கா சம்மந்தமாக ஜனங்களுக்கு இப்போது இருக்கும் கஷ்டத்தை நீக்கும்படி அதாவது அதிகமாயிருக்கும் கட்டண விகிதத்தை குறைக்கும் படிக்கும் முக்கியமாக வெளியில் வர சௌகரியப் படாத பெண்களின் சௌகரியத்தை ஒட்டியும் காயலா முதலியவைகளால் அவஸ்த்தைப் பட்டுக்கொண்டு படுத்தப் படுக்கையில் கிடக்கும் ஏழை குடியானவர்களுக்கும் பத்திரம் ரிஜிஸ்டர் செய்ய வேண்டுமானால் ரிஜிஸ்டர் கட்டணம் முன்னையை விட இப்போது சரிபங்கு அதிகமாய் விட்டதால் அதாவது சப் ரிஜிஸ்ட்ரார் வீட்டுக்கு வருவதற்கு முன்னால் 10 ரூ. கட்டண மாயிருந்தது. இப்போது 20 ரூபாயாக உயர்த்தப்பட்டிருப்பதை குறைத்து ஜனங்களுக்கு சவுகரியம் செய்யும்படி ஒரு தீர்மானம் ஜஸ்டிஸ் கக்ஷியாரால் கொண்டு வரப்பட்டது. இதை அறிந்து சுயராஜ்யக் கக்ஷியார் இப் பெருமை ஜஸ்டிஸ் கக்ஷிக்கு விடக்கூடாது என்பதாக தாங்களும் இந்த விஷயத்தில் ஒரு தீர்மானம் கொண்டு வந்ததாய் ஜனங்களுக்கு காட்டுவதற்காக வேஷத்திற்காக ஒரு தீர்மானம் அனுப்பி யிருந்தார்கள். அக்ராசனர்...

ஸ்ரீ ஜோசப் கற்ற பாடம் 0

ஸ்ரீ ஜோசப் கற்ற பாடம்

ஸ்ரீமான் ஜார்ஜ் ஜோசப் மதுரையில் ஒர் பிரபல பாரிஸ்டர். நல்ல குடும்பத்தில் பிறந்து நல்லொழுக்கத்தில் சிறந்து அதிக வருமானமும் வக்கீல் தொழிலும் உடையவராய் மதுரைக்கு ஓர் மாமணியாய் விளங்கி வந்தவர். சேலம் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடுவின் மேல் மதுரையில் கேசு ஏற்பட்ட போது, பொது வாழ்வில் உணர்ச்சி மேலிட்டு தீவிரமாய் ஜார்ஜ் ஜோசப் இறங்கி இடைவிடாத ஊழியம் புரிந்து வந்திருக்கிறார். மதுரை மில்களிலுள்ள தொழி லாளர்களின் கஷ்ட நஷ்ட காலங்களிலும், வேலை நிறுத்த காலங்களிலும் அவர்களுடன் கலந்து அதில் ஈடுபட்டு தம்மாலான சகல உதவிகளையும் தியாகத்துடன் செய்து வந்திருக்கிறார். மதுரை ஜில்லா கள்ள ஜன சமூகத்தா ருக்கு ஏற்பட்ட கொடுமையான சட்டதிட்டங்களுக்கு அனாவசியமாய் அவர் கள் இரையாகாதிருக்கும்படி சாக்கிரதையாய் கவனித்து வந்தார். அவர்க ளுடைய சத்தியாக்கிரகத்தின் போதும், அவர்களுடைய சில கிராமங்களைப் போலீசார் கொளுத்தி பலரை சுட்டுக் கொன்று பலரைக் கைது செய்து பெண்டு பிள்ளைகளையும் இம்சித்து வந்த அந்தக் காலத்தில்...

பார்ப்பன ஏமாற்றலும் மடாதிபதிகளின் மடமையும் 0

பார்ப்பன ஏமாற்றலும் மடாதிபதிகளின் மடமையும்

நம்நாட்டு மடாதிபதிகளுக்கு வருஷம் 1000, 10000, 100000, 1000000 ரூபாய்கள் என்பதாக வருஷ வருமானம் வரும்படியான சொத்துக்களை நமது முன்னோர்கள் நம் மக்களின் அன்புக்கும் ஒழுக்கத்திற்கும் ஆத்மார்த்த விஷயங்களுக்குமாக உபயோகப்பட வேண்டும் என்பதாகக் கருதி பொது நலத்திற்கு விட்டு அதை நிர்வகிக்க அக்காலத்தில் உண்மையாயும், யோக்கிய மாயும் நடந்து வந்த சன்னியாசிகள் வசம் இப்பொறுப்பையும் விட்டு வந்தார்கள். ஆனால், இப்போது இப் பெரும் பொறுப்பேற்ற பொது நல ஸ்தாப னங்கள் எந்நிலையிலிருக்கிறது? என்பதும், இதை யார் அனுபவிக்கிறார் கள்? என்பதும், இதற்கு நிர்வாக கர்த்தாக்களாகிய சன்னியாசிகள் என்போரின் யோக்கி யதை எப்படி இருக்கிறது? என்பதும் நாம் சொல்லவேண்டியதில்லை. இம்மாதிரியான மடங்களையும் தேவஸ்தானங்களையும் தர்மத்திற்காகவும் பொது நலத்திற்காகவும் அக்காலத்தில் சொத்துக்கள் விட்ட தர்மவான்களின் இஷ்டப்படி யோக்கியமாய் நடந்து வருகிறதா? என்பதை கவனிக்க இந்துமத பரிபாலன சட்டம் என்பதாக ஒரு சட்டம் இயற்றியதற்கு இம் மடாதிபதிகள் தங்கள் சுயநலத்துக்கும் போக போக்கியத்திற்கும் குறைவு வந்துவிடும்...

சமய சீர்திருத்தம் 0

சமய சீர்திருத்தம்

சகோதரர்களே! “சமய சீர்த்திருத்தம்” என்பது பற்றி பேசுவது என்பது என்னைப் போன்ற ஒருவருக்கு இலேசான காரியமல்ல. அதற்குத் தக்க ஆராய்ச்சி வேண்டும். சீர்திருத்தத்தைப் பற்றிப் பேசவும் எனக்குப் போதுமான திறமையில்லை. நான் சமய ஆராய்ச்சி செய்யவில்லை. கடந்த ஆறேழாண் டுகளாக அரசியலில் மகாத்மா காந்தியின் தலைமையின் கீழ் நடைபெற்று வந்த காங்கிரசில் நான் உழைத்து வந்தது அன்பர் பலர் அறிவர். அரசியலின் மூலம் நாட்டின் சீர்திருத்தத்திற்கு அரும்பாடு பட்டும் யாதொரு பலனும் அடைய இயலாமல் போனதாலும், அதற்கு காரணம் சமய சம்மந்தமான கொள்கைகளே தடை என்று உணர்ந்ததாலும் அக்குறைகளை நீக்க உழைப்ப துதான் அவசியமெனத் தோன்றிய பின்னர் அவ்வழியில் உழைத்துப் பார்க்க லாமென முற்பட்டேன். சமயத்தின் பேரால் உண்டாகும் கஷ்ட நஷ்டங் களையும் விடுதலைக்கு விரோதமானவைகளையும் மக்கள் சுயமரியாதை யற்ற வாழ்க்கையில் துன்புறுவதையும் ஒழிக்கவே முதலில் பாடுபட வேண்டும். அப்பொழுதுதான் நாம் விடுதலை அடைய முடியும். நம் நாடு விடுதலையடைய முடியாததற்கும்...

“ திராவிடன் ” 0

“ திராவிடன் ”

“திராவிடன்” பத்திரிகையை நாம் ஏற்று அதற்கு பத்திராதிபராயிருந்து “குடி அரசு” கொள்கையின்படி நடத்தலாமா என்கிற விஷயத்தில் பொது ஜனங்களின் அபிப்பிராயத்தை அறிய “வேண்டுகோள்” என்று தலையங்க மிட்டு ஒரு விண்ணப்பம் 6.3.27 தேதி “குடி அரசின்” தலையங்கமாக எழுதி இருந்தோம். பொறுப்புள்ள நண்பர்களை நேரிலும் கலந்து பேசினோம். அதற்கு இதுவரை ஐந்நூற்றுச் சில்லரை கனவான்கள் தனி முறையிலும் 7, 8 சங்கங்களும் 3, 4 பொதுக் கூட்டங்களும் தீர்மான மூலமாகவும், தங்கள் தங்கள் அபிப்பிராயங்களை தெரிவித்திருக்கிறார்கள். அவற்றுள் 500 பேர் வரையிலும் மற்றும் சங்கங்களும் பொதுக்கூட்டங்களும் “திராவிடனை” ஏற்றுக் “குடி அரசு” கொள்கைப்படி நடத்தும்படியும் 20 பேர்கள் ஒவ்வொரு வர் ஒவ்வொரு விதமாக அதாவது நிபந்தனை பேரில்தான் நடத்த வேண்டும் என்றும், உடல் நலம் கெட்டு போகும் என்றும், “குடி அரசு” குன்றி விடும் என்றும், வேறு பெயர் மாற்ற வேண்டும் என்றும், பிரசாரத்திற்கு போதுமான காலம் இல்லாமல் போய் விடுமென்றும்...

வகுப்பு வாதம் ஒழிந்ததா? 0

வகுப்பு வாதம் ஒழிந்ததா?

சென்னையில் பார்ப்பனர் கையாளாக இருந்து வந்த ஸ்ரீமான் பக்தவத் சலு நாயுடுவைப்பற்றி பலரும் அறிந்திருக்கக்கூடும். அவர் கார்பரேஷனில் இருக்கும் வரையும் பார்ப்பனர்கள் இஷ்டப்படி கமிஷனரை வைவதையே தொழிலாகக் கொண்டவர். அவருடைய புத்திசாலித்தனம் அறிய வேண்டு மானால் ஒரு விஷயத்தில் பார்க்கலாம். அதாவது கமிஷனர் முனிசிபல் பள்ளிக்கூடங்களுக்கு புஸ்தகங்கள் வாங்குவதில் ஆயிரக்கணக்கான ரூபாய்க்கு வெள்ளைக்காரர் கம்பெனியிலும் பார்ப்பனர் கம்பெனியிலும் வாங்கி வருவதைத் தெரிந்தும், ஒரு நாயுடு கம்பெனியில் நூறு ரூபாய் சில்லரைக்கு புஸ்தகம் வாங்க நேரிட்டதற்காக ஸ்ரீ பக்தவத்சலு நாயுடு அவர்கள், புஸ்தகக் கடைக்காரரும் கம்மீஷனரும் நாயுடுவாய் இருப்பதால் தானே இந்த பள்ளிக்கூடப் புஸ்தகங்கள் நாயுடு கம்பெனியாரிடம் வாங்கப் பட்டது என்பதாய் ஒரு கேள்வி கேட்டார். இந்த கேழ்வி கேட்ட ஸ்ரீ பக்தவத் சலமும் ஒரு நாயுடுதான் என்பதை வாசகர்கள் ஞாபகத்தில் வைத்துக் கொண் டால் இந்தக் கேள்வியில் எவ்வளவு புத்திசாலித்தனமிருக்கும் என்பதை அறியலாம். அவ்வளவு தூரம் பார்ப்பன மயக்கத்தில் ஆழ்ந்து கிடந்த...

சமாதானம் 0

சமாதானம்

சென்ற வாரம் ‘எது வீணான அவதூறு’ என்னும் தலையங்க முடிவில், ‘மற்ற விஷயங்களைப்பற்றி அடுத்த வாரம் எழுதுகிறோம்’ என்று எழுதி யிருந்தோம். ஸ்ரீமான் ராமநாதன் அவர்கள் கடிதம் கிடைத்து. அவர்களை நேரிலும் பார்த்து பேச நேர்ந்தது. அவைகளில் சம்பாஷணைகளின் தோற்றம் எப்படி இருந்தாலும் அதைப்பார்த்தவுடன் மற்றவர்களுக்கு எப்படி படக்கூடுமோ அந்த உணர்ச்சியோடு கூடி அந்த சம்பாஷணை நடைபெறவில்லை என்று சொன்னார். உதாரணமாக ‘ஊழியன்’ பத்திரிகையில் கண்ட சம்பாஷணையில் ‘ பிராமணர்களைக் காட்டிலும் தகுதிபெற்று கதர்வேலை செய்ய முன்வரும் பிராமணரல்லாத தொண்டர்களைத்தான் ஏற்றுக் கொள்ளுவதை முறையாக வைத்திருக்கிறேன்’ என்று காணும் வாசகம் அம்மாதிரி கருத்தோடு நான் சொல்லவில்லையென்றும் பிராமணர்களைவிட பிராமணரல்லாத தொண்டர் களைத்தான் ஏற்றுக்கொண்டு வந்திருப்பதாகச் சொன்னதாகவும், இனியும் அம்மாதிரி வழக்கத்தையே கையாளப்போவதாகவும் சொன்னார் என இம் மாதிரி இன்னும் சில விஷயங்களையும் குறிப்பிட்டார். அன்றியும் முக்கியமான விஷயங்களில் நமது கொள்கைக்கு அவரது உள்ளத்தில் எவ்வித மாறுபாடும் இருப்பதாய்க் காணப்படவில்லையாத லாலும் அதை...

அரசியல் வாழ்வு 0

அரசியல் வாழ்வு

என்பது அயோக்கியர்களின் வயிற்று பிழைப்பு என்பதற்கு உதாரணம் இது போதாதா? மகாத்மா காங்கிரசில் தலையிட்டு ஒத்துழையாமை கொள்கையை நாட்டில் பகிஷ்காரத் திட்டத்தையும் நிர்மாணத் திட்டத்தையும் நிறைவேற்ற உழைத்து வந்த காலத்தில் நாமும் நம்போன்ற அநேகரும் யாதொரு நிபந்தனையுமில்லாது குருட்டு நம்பிக்கையுடன் மகாத்மாவை பின்பற்றி உழைத்து வந்தது தமிழ்நாட்டில் பெரும்பாலோருக்குத் தெரியாமலிருக்காது. மகாத்மா ஜெயிலுக்கு போனவுடன் மேற்கண்ட பகிஷ்காரத் திட்டத்திற்கும், நிர்மாணத் திட்டத்திற்கும் விரோதமாய் நமது நாட்டு பார்ப்பனர்கள் சூழ்ச்சி செய்து வந்த காலத்திலும் அதுகளுக்கு இடம் கொடுக்காமல் காங்கிரஸ் கட்டளை என்றும், காங்கிரஸ் கமிட்டி கட்டளை என்றும் கூட பார்க்காமல் ³ திட்டங்களை நிலைப்பிப்பதிலும், நிறைவேற்றுவதிலுமே வேலை செய்து வந்ததும் அநேகருக்கு தெரிந்திருக்கலாம். இந்த சந்தர்ப்பங்களில் நம்மை நமது எதிரிகளான அரசியல் பார்ப்பனர்களில் பலர் காங்கிரசுக்கு துரோகி என்றும், தேசத் துரோகி என்றும், காங்கிரசில் இருக்க யோக்கியதையற்றவன் என்றும், காங்கிரஸ் இருப்பதா இறப்பதா? என்றும் காங்கிரஸ் கமிட்டியை விட்டு நம்மை நீக்கிவிட...

திருவார்ப்பு சத்தியாக்கிரகம் 0

திருவார்ப்பு சத்தியாக்கிரகம்

திருவாங்கூர் ராஜ்ஜியத்தில் திருவார்ப்பு என்கிற இடத்தில் தாழ்ந்த ஜாதியார் என்பவர்கள் தெருவில் நடக்க சத்தியாக்கிரகம் ஆரம்பித்ததாக கேள்விப்பட்டு மகிழ்ச்சியடைந்தோம், அம்மகிழ்ச்சியை தெரிவித்துக் கொள்ளுமுன் அச்சத்தியாக்கிரகத்தை மகாத்மா நிறுத்துமாறு உத்திரவிட்டிருப் பதாய் தெரிகிறது. நீல் சத்தியாக்கிரகத்தை விட திருவார்ப்பு சத்தியாக்கிரகம் அவ்வளவு மோசமானதா என்பது நமக்கு விளங்கவில்லை. மகாராணியும், போலீஸ் கமிஷனரும் நன்மை செய்வார்கள் என்று தாம் அறிந்ததாக மகாத்மா தெரிவித்திருக்கிறார். இதை நாம் ஒப்புக் கொள்ள முடியாத நிலைமையில் இருக்கின்றோம். சுசீந்திரம் சத்தியாக்கிரகத்தில் சர்க்கார் நாணயம் இன்னது என்று தெரிந்து போய் விட்டது. வைக்கம் சத்தியாக்கிரகத்தின் போதும் மகாத்மா ராணியிடமும், திவானிடமும், போலீஸ் கமிஷனரிடமும் பேசி விட்டுத்தான் போனார். கடைசியாக அது வைக்கத்திற்கு மாத்திரம் முடிவதே பெரிய கஷ்டமாய் போய்விட்டது. மற்ற இடங்கள் எல்லாம் அப்படியேதான் இருக்கிறது. இதனால் லாபம் என்ன. ஜனங்களுடைய முயற்சியையும் உணர்ச்சியையும் கட்டுப்பாடாய் எழுந்த ஆசையையும் இம்மாதிரி தடங் கல்கள் அழித்து விடுகின்றன. மறுபடியும் ஆரம்பிப்பதென்றால் இலேசான...

தமிழ் நாட்டில் சத்தியாக்கிரகம் 0

தமிழ் நாட்டில் சத்தியாக்கிரகம்

தமிழ்நாட்டில் சுயமரியாதை சத்தியாக்கிரகம் ஆரம்பிக்கப் போவதாய் ஸ்ரீமான் தண்டபாணி பிள்ளை முதலியோர்கள் தெரிவித்துக் கொண்டதற்கு இணங்கவும், நாமும் விண்ணப்பித்துக் கொண்டதற்கு இணங்கவும் இதுவரை அநேக ஆதரவுகள் கிடைத்து வந்திருக்கின்றன. அதாவது பல இடங்களில் ‘சூத்திராள்’ என்று போடப்பட்டிருந்த விளம்பரங்கள் எடுபட்டு விட்ட தாகவும், பல மகாநாடுகளில் சுயமரியாதை சத்தியாக்கிரகத்தை ஆதரித்தும் அதற்கு உதவி செய்வதாகவும் தீர்மானங்களும் செய்யப்பட்டிருக்கின்றன. பல தனிப்பட்ட வாலிபர்களும் பெரியோர்களும் தங்களை சத்தியாக்கிரகி களாய்ப் பதிந்து கொள்ளும்படி வேண்டிக்கொண்டும் தெரிவித்துமிருக் கிறார்கள். சில பிரபுக்கள் தங்களால் கூடிய உதவி செய்யத் தயாராக இருப்ப தாகவும் தெரிவித்து இருக்கின்றார்கள். எனவே தக்கபடி பொறுப்புள்ள மக்கள் கூடி யோசித்து அதை எப்பொழுது எங்கு ஆரம்பிப்பது என்பதே இப்பொ ழுது கேள்வி யாயிருக்கின்றது. சமீபத்தில் ஸ்ரீமான் வரதராஜுலு நாயுடு அவர்களும் சென்னையில் இதைப்பற்றி சில கனவான்களிடத்தில் கலந்து பேசப் போவதாகவும் சமீபத்தில் அதாவது 22, 23 தேதிகளில் சென்னையில் நடக்கும் பார்ப்பனரல்லாத வாலிப...

துர் ஆக்கிரகம் 0

துர் ஆக்கிரகம்

சென்னையில் சிலர் சத்தியாக்கிரகம் என்னும் பேரால் நீல் துரை உருவச் சிலையை உடைத்தெறிய வேண்டுமென்று சொல்லிக் கொள்வதை ஒரு பெரும் தேசாபிமானமெனக் கருதி சில வாலிபர்கள் மூலம் போலிக் கிளர்ச்சி ஆரம்பித்து அதற்காக பல வாலிபர்களையும் சிறைக்கு அனுப்பி யாய் விட்டது. சில பெண்மணிகளையும் சிறைக்கு அனுப்பியாய் விட்டது. மகாத்மா காந்தியும் இச் சத்தியாக்கிரகத்தை ஆதரித்து ஆசிர்வதித்ததாகவும் வெளிப்படுத்தியாகி விட்டது. வரப் போகும் காங்கிரசிலும் இதை ஒரு பெரிய அகில இந்திய விஷயமாக்கவும் வேண்டிய முயற்சிகள் செய்யப்பட்டு வருகின்றது. தவிரவும் இதற்குச் சிலர் ரகசியமாய்ப் பணம் கொடுத்தது, மகாத்மா கொடுத்ததாகப் பெயர் செய்ய முயற்சிப்பதாகவும் கேள்விப் படுகிறோம். இவ்வளவும் உண்மையாகவே நடந்ததாயிருந்தாலும் இதை ஒழுங் கான காரியமென்று ஒருக்காலும் நம்மால் சொல்ல முடியாது. ஒரு சமயம் மகாத்மாவே ஒரு சத்தியாக்கிரகி ஆக வந்து தன் கையால் சம்மட்டி கொண்டு நீல் சிலையை உடைக்க முன் வந்தாலும்கூட இவற்றைத் துராக்கிரக மென்றுதான் சொல்லுவோமே...

மேட்டூர் திட்டம் 0

மேட்டூர் திட்டம்

“ மேட்டூர் அணை திட்டம்” விஷயமாய் அதிலுள்ள ஊழல்களையும் தனிப்பட்ட வகுப்பினர் நன்மைக்காக நமது பணம் எவ்வெவ் வழிகளில் வீணாவதாயிருக்கிறது என்பதுபற்றியும் “ ஜஸ்டிஸ்” பத்திரிகை கொஞ்ச நாளைக்கு முன் பொதுவாக சில குறிப்பு எழுதி இருந்ததற்காக சட்ட மெம்பர் ஸ்ரீமான் சி.பி. ராமசாமி அய்யர் அவர்கள் சட்டசபையில் வெகு ஆத்திர மாகவும் ஆணவமாகவும் அலட்சியமாகவும் அப்பத்திரிகையை பேர் சொல்லாமல் மறைமுகமாய் அவமதித்துப் பேசியதும் “ இதற்கெல்லாம் நான் பயப்படமாட்டேண்” என்று “ வீர முழக்கம்” செய்ததும் வாசகர்களுக்குத் தெரிந்திருக்கலாம். அதன் பேரில் “ ஜஸ்டிஸ்” பத்திரிகையானது அத் திட்டத் தின் உள் ரகசியங்களையும் புரட்டுகளையும் உள்ளங்கை நெல்லிக்கனி போல் புட்டு புட்டு விளக்கி மேட்டூர் திட்டத்தின் புரட்டு என்கிற தலையங்கத்தில் 3, 4 வியாசங்கள் எழுதினதும், சர். சி.பி அவர்களை குற்றவாளியாக்கி விசாரணை வைக்க வேண்டுமென்று எழுதி வந்ததும் வாசகர்களுக்கு தெரிந் திருக்கும். அதின் பேரில் சர்.சி.பி. அவர்கள் பெட்டியில்...

தொழிலாளர்கள் தற்கால காங்கிரஸ் தலைவர்களை நம்பக்கூடாது; அதில் சேரவும்கூடாது 0

தொழிலாளர்கள் தற்கால காங்கிரஸ் தலைவர்களை நம்பக்கூடாது; அதில் சேரவும்கூடாது

தொழிலாளர்கள் காங்கிரசில் சம்பந்தம் வைத்துக் கொண்டிருக் கிறவரை அவர்கள் உலகத்தாராலும், அதிகாரிகளாலும், முதலாளிகளாலும் மனிதர்களாகப் பாவிக்கப்பட மாட்டார்கள் என்பதுதான் நமது முடிவும். இதைப் பல இடங்களில் சொல்லியும், எழுதியும் வந்திருக்கிறோம். சமீபத்தில் சென்னை சட்டசபைக்கு ஒரு தொழிலாளியை நியமிக்க சர்க்கார் பிரயத் தினப்பட்டதில் அப்பதவிக்கு மூன்று பேர்கள் பிரஸ்தாபிக்கப்பட்டன. ஒருவர் ஸ்ரீமான் சீனிவாசய்யங்காரிடம் பணம் வாங்கிக்கொண்டு அவர் சொல்படி நடப்பாரோ, தொழிலாளிக்கு ஒரு நன்மையும் செய்ய மாட்டாரோ என்பதாக சந்தேகித்து சில தொழிலாளர்கள் ஆnக்ஷபித்ததினால் அவர் பெயர் அடிக்கப்பட்டது. மற்றவர் ஸ்ரீ பெசண்டம்மை கோஷ்டியைச் சேர்ந்தவர் என்று சிலர் ஆnக்ஷபித்ததால் அவர் பெயர் அடிக்கப்பட்டது. மற்றவர் பார்ப்பன அதிகாரிகளுக்கு திருப்தி இல்லாததால் அவர் பெயர் அடிக்கப் பட்டது. ஆதலால் இனியாவது தொழிலாளர்களுக்கு பிரதிநிதித்துவம் வேண்டுமானால் தொழிலாளருக்கு ஓட்டுக் கொடுத்து அவர்களால் தெரிந் தெடுக்கும்படி ஏற்பாடு செய்ய வேண்டுமே அல்லாமல் பார்ப்பனர் தயவில் சட்டசபைக்குப் போகலாம் என்பது முடியாத காரியம். போனாலும் பார்ப்பனர்...

குடி நிறுத்தும் யோக்கியர்கள் 0

குடி நிறுத்தும் யோக்கியர்கள்

ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியார் குடி நிறுத்தும் பேரால் தன் இனத் தாராகிய ஸ்ரீமான் சி.வி. வெங்கடரமணய்யங்காருக்கு ஓட்டு வாங்கிக் கொடுக்க பிரசாரம் செய்த காலத்தில் ஸ்ரீமான் அய்யங்காரவர்கள் குடியை அடியோடு உடனே நிறுத்திவிடப் போகிறாரென்றும், அவருக்கு ஓட்டுக் கொடுங்களென்றும் அவர் மரத்தில் முட்டி தொங்கினதைப் பார்த்த பிறகு கூட கிராமம் கிராமமாய்த் திரிந்து பிரசாரம் செய்ததும் இதற்காக மகாத்மா காந்தியின் சிபார்சு கூட வாங்கினதும் வாசகர்கள் இதற்குள் மறந்திருக்க முடியாது. ஆனால் இப்பொழுது ஸ்ரீமான் வெங்கடரமணய்யங்கார் சட்ட சபையில் என்ன செய்கிறார் என்று பாருங்கள். குடியை உடனே ஒழித்து விடுகிறேன் என்றவர் 10 வருஷத்தில் ஒழிய வேண்டும் என்று விரும்புவதாக வும், அதற்குத் தகுந்தபடி மந்திரிகள் வேலை செய்தால் போதுமென்றும், ஆனால் இதற்காக வேண்டி இப்போதிருக்கும் மந்திரியைத் தோற்கடிக்கவோ கலைக்கவோ விடமாட்டோமென்றும் பேசியிருக்கிறார். ஸ்ரீமான் ராஜகோபா லாச்சாரியார் ஓட்டு வாங்கிக்கொடுத்த பார்ப்பன கனவானின் யோக்கியதை யும் ஸ்ரீமான் ராஜகோபாலாச்சாரியால் ஏமாற்றப்பட்ட மகாத்மா காந்தியின்...

பார்ப்பனர்களின் முட்டுக்கட்டை பூனைக்குட்டி வெளியாகிவிட்டது 0

பார்ப்பனர்களின் முட்டுக்கட்டை பூனைக்குட்டி வெளியாகிவிட்டது

சென்னை மந்திரிகள் “சுயராஜ்யக் கட்சிப் பார்ப்பனர்களும்”, “ஒத்துழையாமைப்” பார்ப்பனர்களும் தங்களுக்கு உள் உளவாய் இருக்கிறார் கள் என்கிற தைரியத்தினால் ஆளுக்கு ஒரு விதமாய் தலைவிரித்தான் கோலமாய் உளறிக்கொண்டு வருகிறார்கள். “கன்னா பின்னா காவரையே, கூவரையே உங்களப்பன் வீட்டுப் பெருச்சாளி” என்னும் உளறலை ஒரு விறகுத் தலையன் பாடம் செய்துகொண்டு ஒரு சமஸ்தானத்திற்குப் போய் இதை கவி என்று சொல்லி பரிசு கேட்டதாகவும், அங்கு இந்த விறகுத் தலையனுக்கு அனுகூலமாயிருந்த ஒரு வித்வான் இதற்கு வியாக்கியானம் செய்து பரிசு பெற உதவியாய் இருந்ததாகவும் தமிழ் இலக்கியத்தில் ஒரு கதை உண்டு. அதைப் போல் மந்திரிகள் உளறலுக்கு சுயராஜ்யக் கட்சியார் அதாவது ஸ்ரீமான் சத்தியமூர்த்தி அவர்கள் வியாக்கியானம் செய்து அவர்கள் பதவி நிலைக்க மந்திரிகளை மெச்சி நற்சாக்ஷி பத்திரம் அளிக்கிறார். உதாரணமாக ஒரு மந்திரி ஒரு ஊரில் படிப்படியாகத்தான் குடியை ஒழிக்க முடியும் என்றும் மற்றொரு மந்திரி குடி தப்பா சரியா என்பதை பற்றியே...

“சுதேசமித்திரனின்” உபத்திரவம் 0

“சுதேசமித்திரனின்” உபத்திரவம்

“சுதேசமித்திரன்” என்னும் பத்திரிகையைப் பற்றி அதாவது அது பார்ப்பன பத்திரிகை என்றும், அது பார்ப்பனரல்லாதார் முற்போக்குக்கு இடைஞ்சலாகவும், பார்ப்பன ஆதிக்கத்துக்கு அனுகூலமாகவும் பார்ப்பன பிரசாரம் செய்யும் பத்திரிகை என்பதாகவும் பல தடவைகளில் நாமும் மற்றும் அநேக கனவான்களும் அவ்வப்போது ஆதார பூர்வமாய் வெளிப்படுத்திக் கொண்டே வந்திருக்கிறோம். அதன் நிருபர்களும் ஆங்காங்கு உண்மைக்கு மாறாகவும் விஷமத்தனமானதாகவும், பார்ப்பன முன்னேற்றத்திற்கு தகுந்தாப் போலும் பார்ப்பனரல்லாதார்க்கு இழிவும் கெட்ட பெயரும் வரும்படியாகவும் அறிக்கை செய்து கொண்டு வருவதைப் பற்றியும் நாம் மாத்திரமல்லாமல் மற்றும் அநேகர்கள் கண்டித்தெழுதி வந்திருப்பதோடு அதை பகிஷ்கரித்து வந்திருப்பதும் வாசகர்கள் உணர்ந்திருக்கக்கூடும். அது மாத்திரமல்லாமல் அநேக முனிசிபாலிட்டி, தாலூகா, ஜில்லா போர்டு தலைவர்கள் “மித்திரன்” நிருபரை உள்ளே அனுமதிக்க மறுத்ததும், பார்ப்பன அங்கத்தினர்கள் சிபார்சு செய்திருப்பதும் அதே பத்திரிகையில் பார்த்திருக்கக்கூடும். என்ன செய்தும் பத்திரிகையினுடையவும் பத்திரிகை நிருபருடையவும் ஜாதிப் புத்தி கொஞ்ச மாவது மாற்றமடைந்ததாகக் காணமுடியவில்லை. கொஞ்ச நாளைக்கு முன் தஞ்சை ஜில்லா...

சென்னை சட்டசபை வரவு செலவு திட்டம் 0

சென்னை சட்டசபை வரவு செலவு திட்டம்

(ஜஸ்டிஸ் கட்சி கொள்கை) கனவான்களே! சென்னை சட்டசபையிலுள்ள வரவு செலவு திட்டத் தைப் பற்றி எனக்கு கொஞ்சமாவது கவலையில்லை. அதில் கவலை செலுத்துவதில் ஏதாவது பிரயோஜனம் உண்டாகுமா? என்கிற விஷயத்திலும் அதிகமான பிரயோஜனமிருக்காது என்கிற முடிவுக்கு வந்தவன். ஏழை மக்களிடம் வசூலித்த கோடி கோடியான வரிப் பணத்தை அம்மக்களுக்கு யாதொரு கிரமமான உபயோகமும் செய்யாமலேயே வெள்ளைக்காரரும் நமது படித்தக் கூட்டத்தாரும் எப்படி பங்கு போட்டுக்கொள்ளுவது என்பது தான் பட்ஜெட் (வரவு செலவு திட்ட) விவாதம் என்பது எனது முடிவான அபிப்பிராயம். சட்டசபை மாத்திரமல்ல இந்திய சட்டசபை அரசாங்க சபை ஆகிய எதுகளின் யோக்கியதையை பற்றியும் இம்மாதிரிதான் நினைக்கிறேன். பெரிய பெரிய திட்டம் என்பதெல்லாம் கூட இப்படியே ஜால வேடிக்கை யாகத்தான் முடிகிறது. உதாரணமாக மேட்டூர் திட்டம் முதலிய யானை விழுங்கி பிசாசு போன்ற திட்டங்களின் சூதுகளை கவனித்துப் பார்த்தால் மற்ற துகளைப்பற்றி யாருக்குமே சுலபமாய் விளங்கிவிடும். அத்திட்டங்களால் என்ன லாபம் என்பதை...

பார்ப்பனீயப் பித்தலாட்டம் “சிரார்த்த சந்தேகம்” 0

பார்ப்பனீயப் பித்தலாட்டம் “சிரார்த்த சந்தேகம்”

ஸ்ரீ சங்கராச்சாரியர் மடம் ஆஸ்த்தான வித்துவான் ஸ்ரீ வெங்கிட்டராம சாஸ்திரியை சிரார்த்த விஷயமான பல சந்தேகங்களைப் பற்றி ஒரு நண்பர் எழுதிக் கேட்டிருந்தாராம். அதற்கு பதில் எழுத சாஸ்திரிக்கும் சாவகாச மில்லையாம். குடும்ப விஷயமாக கிராமத்திற்குப் போய்விட்டாராம். மித்திர னிலும் இடம் ஒதுக்க முடியாதாம். பத்திரிகைகள் மூலம் இம்மாதிரி சந்தேகங் களும் நீங்காதாம். ஜகத்குருசாமிகள் என்பவர் ஆரியதர்மம் என்று ஒரு பத்திரிகை போடுவாராம். அதை வாங்கிப் படித்தால் சந்தேகமெல்லாம் நிவர்த்தி ஆகி விடுமாம். இது ஸ்ரீ சோமதேவ சர்மா என்கிற ஒரு பார்ப்பனர் பேரால் 10. 3. 27 தேதி மித்திரனில் பிரசுரித்திருக்கிறது. இது என்ன புரட்டு? கள்ளு, சாராயம் விற்க பத்திரிகையில் இடமிருக்கிறது. வருணாசிரம தர்மம், ஆரியதர்மம், பிராமண தர்மம், சனாதன தர்மம், இந்து தர்மம் என்கிற பார்ப்பனர்கள் பிழைப்புக்கு ஏற்பட்ட மத விஷயங்களைப் பரப்ப மித்திரனில் இடமிருக்கிறது, சாஸ்திரிகளுக்கும் சர்மாக்களுக்கும் சாவகா முமிருக்கிறது. யாருக்காவது இதில் சந்தேகமேற்பட்டால் அதை...

முனிசிபல் பொது ரோட்டுகளில் மக்களுக்கு உள்ள சுதந்திரம் 0

முனிசிபல் பொது ரோட்டுகளில் மக்களுக்கு உள்ள சுதந்திரம்

பார்ப்பனரல்லாத ஜட்ஜிகளின் தீர்ப்பு ஏழு எட்டு மாதங்களுக்கு முன்பு பாலக்காடு கல்பாத்தி ரோட்டில் ஒரு ஆரிய சமாஜத்தைச் சேர்ந்த ஈழவர் ஸ்ரீ சங்கரன் என்பவர் சர்க்கார் வேலை யாக பைசைக்கிள் மீது சென்றதற்காக அவ்வீதியில் உள்ள ஒரு பார்ப்பனர் அவரைத் தடுத்து நிறுத்தி மிரட்டி ரோட்டிற்கு புண்ணியார்ச்சனையையும் கும்பாபிஷேகமும் செய்ய 15 ரூபாய் கொடுக்கும்படி கட்டாயப்படுத்தி வண்டியையும் மேல் வேஷ்டியையும் பிடுங்கி வைத்துக் கொண்டதற்காக, போலீசார் இவ்விஷயமறிந்து ஸ்தலத்திற்குப் போய் பைசைக்கிளையும் வேஷ்டியையும் பிடுங்கி கொடுத்துவிட்டு அந்தப் பார்ப்பனர் மீது கிரிமினல் நடவடிக்கை நடத்தினார்கள். அதில் பார்ப்பனருக்கு 30 ரூபாய் அபராதம் விழுந்தது. அதன் பேரில் பார்ப்பனர்கள் ஐகோர்ட்டில் அப்பீல் செய்து கொண்டார்கள். அப்பீலில், பார்ப்பனரல்லாத இரண்டு ஐகோர்ட் ஜட்ஜிகள் பார்ப்பனர் செய்தது அக்கிரம மென்றும் ஜனங்கள் வரிப் பணத்தில் முனிசிபா லிட்டியாரால் பரிபாலிக்கப்படும் எந்த ரோட்டிலும் யாரும் நடக்கலாம் என்றும், பார்ப்பனர் 30 ரூபாய் அபராதம் கொடுக்க வேண்டியதுதான் என்றும்...

எது வீணான அவதூறு ? 0

எது வீணான அவதூறு ?

ஸ்ரீமான் எஸ்.ராமநாதன் காரைக்குடியில் சொன்னதாகக் காணப்படும் கதர் இயக்க சம்மந்தமான விஷயங்களுக்கு பதில் அடுத்த வாரம் எழுது வதாய் குறிப்பிட்டிருந்தோம். காரணம் என்னவென்றால் அவ்வார்த்தைகள் உண்மையாய் ஸ்ரீமான் ராமநாதன் அவர்களால் வெளியிடப்பட்டதுதானா என்றறிவதற்காக வேண்டியே அப்படி எழுதியிருந்தோம். ஆயினும் இதுவரை அவற்றை மறுக்கத்தக்க விஷயம் ஒன்றும் நமக்கு எட்டவில்லை. ஆதலால் அவற்றிற்கு நம்முடைய சமாதானத்தை எழுதிவிட வேண்டியவர் களாகிறோம். ஏனெனில் மக்களை ஏமாற்றி சிலர் பிழைப்பதற்காக செய்யப் படும் சூழ்ச்சிகளை நாம் கண்டிக்கப் புறப்படும் போதெல்லாம், இதுவரை நமது கண்டனத்தை கண்டிக்க வந்தவர்கள் ஒருவராவது நாம் என்ன சொன்னோம், அதற்கு அவர்கள் சொல்லுகிற பதில் என்ன? என்பதைக்காட்டாமல், வகுப்புத் துவேஷம், வகுப்பு உணர்ச்சி, பொறாமை, குரோதம் என்கிற வார்த்தைகளைச் சொல்லி தப்பிக்கவோ, மழுப்பவோ, ஏமாற்றவோ, பார்க்கிறார்களேயல்லாமல் யோக்கியப் பொறுப்புடன் நடந்து கொள்பவர்களை காண்பது அரியதாய் விட்டது. அப்படிப்பட்ட சமயத்தில் ஸ்ரீமான்கள் ராமநாதன், காசி விஸ்வ நாதஞ் செட்டியார் சம்பாஷணையானது, நாம் பொறாமை,...

பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் யுத்தம் தொடங்கப்பட்டு விட்டது 0

பார்ப்பனர் – பார்ப்பனரல்லாதார் யுத்தம் தொடங்கப்பட்டு விட்டது

கொஞ்ச காலமாக நம் நாட்டுப் பார்ப்பனரல்லாதார் மக்கள் தங்களது சுயமரியாதை உணர்ச்சி பெற்று பார்ப்பனீய அடிமைத் தன்மையில் இருந்து விடுபடவேண்டும் என்கிற உணர்ச்சி பெறுகிற காரணத்தால் இப்பார்ப்பனர் கள் இவ்வுணர்ச்சியை அடக்கி ஒழிக்க பல வழிகளிலும் முயற்சித்து வருவது பொது விஷயங்களில் கண்ணோட்டம் செலுத்திவரும் யாவரும் அறிந்ததே. அதாவது 10 வருஷங்களுக்கு முன்னால் டாக்டர் நாயர் பெருமானும் தியாகராய பெருமானும் அரசியல் துறையிலும் காங்கிரஸ் இயக்கத்திலும் எவ்வளவு தூரம் ஈடுபட்டிருந்தார்கள் என்பதும் அக்கால அரசியல் காங்கிரஸ் கான்பரன்சுகளில் தலைமை வகித்தல், அமிதவாதமான சொற்பொழிவு நிகழ்த்துதல், கமிட்டியில் சாட்சி சொல்லுதல், தேசீய அபிப்பிராயம் சொல்லு தல், இரகசிய போலீசாரின் கண்காணிப்புக்கு ஆளாகுதல் முதலிய காரியங் களில் தற்காலம் மிக பெரிய தேசபக்தர், தேசத் தொண்டர், தேசீய வீரர், தேசீயத் தலைவர் என்று சொல்லப்படுவார்கள். எவர்க்கும் இளைத்தவர்கள் அல்லாதாராயிருந்து வந்ததும் யாவரும் அறிந்ததே. இப்பொழுதாவது பார்ப்பனரல்லாதார் “தேசபக்தர்” ஆவதென்றால் வெகுசுலபமான காரியம். ஏனெனில் பார்ப்பனர்களுக்கு...

இதற்கு என்ன பெயர் 0

இதற்கு என்ன பெயர்

கோயமுத்தூர் நகர பரிபாலன சபையில் பார்ப்பன கவுன்சிலர்களின் துவேஷங்களும் உபத்திரவங்களும் கோயமுத்தூர் முனிசிபல் சேர்மனிடம் பொறாமைக் கொண்ட சில ஆசாமிகளின் விஷமங்களும் கோயமுத்தூர் விஷயங்களைப் பத்திரிகையில் கவனித்து வருகிறவர்களுக்கு நன்றாய் தெரிந்திருக்கும். இப்போது அது நாளுக்கு நாள் முற்றி வருவதுடன் அப் பார்ப்பனர்களுக்கு நாளுக்கு நாள் புத்திகூட மழுங்கிக்கொண்டு வருகிற தென்றே சொல்லவேண்டியிருக்கிறது. சென்ற வாரத்தில் கோயமுத்தூர் முனி சிபாலிட்டியில் ஒரு பார்ப்பனர் பார்ப்பனரல்லாத சேர்மெனைப் பற்றி ஒரு தீர்மானம் கொண்டு வந்த விஷயம், மற்றொரு இடத்தில் பிரசுரித்திருக் கிறோம். அதாவது சேர்மனுக்கு முனிசிபாலிட்டியில் அதிகமான வேலை இருப்பதால், அவர் தனக்குள்ள கௌரவ உத்தியோகங்களில் ஏதாவது ஒன்றை ராஜினாமா கொடுத்துவிடவேண்டும் என்ற பொருள் கொண்ட தீர்மானம் கொண்டு வந்தாராம். இத்தீர்மானத்தை ஈரோடு சேர்மன் ஸ்ரீமான் ஸ்ரீனிவாச முதலியார் அவர்களாயிருந்தால் காலடியில் போட்டு நசுக்கி இருப்பார். ஸ்ரீமான் ரத்தினசபாபதி முதலியாரோ அவ்விதம் செய்யாமல் வேண்டுமென்றே கண்ணியமாய் அதை ஏற்றுக்கொண்டு விவகாரத்திற்கு விட்டதோடு தானும்...

நாடார் மஹாஜன சங்க 11 – வது மகாநாடு 0

நாடார் மஹாஜன சங்க 11 – வது மகாநாடு

இம்மாதிரியான வகுப்பு மகாநாடுகள் நமது நாட்டில் நடந்து வருவது நாட்டின் முற்போக்குக்கு ஏற்றதா இல்லையா என்பது கேள்வி. பலர் இது கெடுதல் எனச் சொல்லுகிறார்கள். எனினும் வகுப்பு மகாநாடு அல்லாத (வகுப்பு வாதமல்லாத) மகாநாடுகளே இந்நாட்டில் இல்லை என்பதே எனது அபிப்பிராயம். ஒவ்வொரு வகுப்பாரும் தங்களுடைய உரிமைகளைக் கேட்கவே மகாநாடுகள் நடத்துகிறார்கள் . மற்றொரு வகுப்பார் தலையெடுக் காமல் அடிக்கவும், மற்ற வகுப்பார் உரிமைகள் பெறாமலிருக்கவுமே பலர் பல மகாநாடுகளை நடத்துகிறார்கள் . ஆனால் நமது நாடார் மகாநாடோ அப்படி இல்லை. பிறருக்கு கெடுதல் செய்யாமல் நாடார் மகாஜனங்களின் நன்மையை நாடியும், உரிமைகளைப் பெறவுமே இம்மகாநாடு நடைபெறு கின்றது. வகுப்பு மகாநாடுகளும், வகுப்பு வாதங்களும் மேல் ஜாதியாராலும் அவர்களுடைய கொடுமைகளாலும் தான் ஏற்பட்டவை. துவேஷத்தை உண் டாக்க நாம் மகாநாடுகள் கூட்டுவதில்லை. துவேஷம் வேண்டாம், எல்லோ ரும் சமம் என்று சொல்லுங்கள் என்று சொல்லவே நாம் இம்மகாநாடு கூட்டியிருக்கிறோம். நம் நாட்டில்...

மகாத்மா வரவேற்பு 0

மகாத்மா வரவேற்பு

கதரின் பேரால் நமது பார்ப்பனர்கள் பார்ப்பனரல்லாத சமூகத்திற்கு இடையூறு அதாவது அரசியலின் பேரினாலும் கடவுள், மோக்ஷம், மதம், என்னும் பேரினாலும் எவ்வளவு கொடுமையும், சூழ்ச்சிகளும் செய்து வந்தார் களோ வருகிறார்களோ அதுபோலவே ஸ்ரீமான் சி. இராஜகோபாலாச்சாரியார் முதலிய பார்ப்பனர்களும் அவருடைய பார்ப்பன சிஷ்யர்களும் பார்ப்பன ரல்லாத சில கூலிகளும் சூழ்ச்சி செய்து வருவதாக நாம் நினைப்பதற்கு இடமேற்பட்டு வருவதற்கு தகுந்தாற்போல் பல இடங்களில் இருந்து சமாச்சா ரங்களும் வந்து கொண்டிருக்கின்றன. இச்சூழ்ச்சிகளுக்கு பெரும்பாலும் மகாத்மா வரவை ஒரு ஆயுதமாக உபயோகப்படுத்திக் கொள்ளுகிறார்கள் என்றும் தெரியவருகிறது. “மகாத்மாவின் தென்னாட்டு விஜயம்” என்னும் பேரால் கதர் பண்டை செலவு செய்து ஆங்காங்கு போய் பார்ப்பனீய விஷங் களைப் பரப்ப உபயோகித்துக் கொள்ளுவதாகவும் தெரிகிறது. ஆன போதி லும் நமக்கு அதைப்பற்றிப் பயம் ஒரு சிறிதுமில்லை என்றே சொல்லுவோம். மகாத்மாவை நாம் எல்லோரும் சேர்ந்து வரவேற்க வேண்டியதுதான். நாம் எல்லோரும் அவரது வருகையின் கருத்துக்கு ஆதரவளிக்க...

பெண்ணின் பெருமை அல்லது              வாழ்க்கைத் துணை 0

பெண்ணின் பெருமை அல்லது வாழ்க்கைத் துணை

இதன் ஆசிரியர் திருவாளர் வி.கல்யாணசுந்தர முதலியாரைப் பற்றி தமிழுலகிற்கு அறிமுகஞ் செய்ய வேண்டிய அவசியமின்று. அன்னார் இதுகாலை எழுதி வெளிப்படுத்தியுள்ள பெண்ணின் பெருமை என்னும் புத்தகத்தைக் கண்டு மகிழ்ந்தேன். தேனினுமினிய செந்தமிழ் நடையில் வாழ்க்கையில் பெண்ணுக்குள்ள இடத்தையும், உரிமையையும், ஆண் பெண் மாறுபாடுகளையும் பெண்பாலாரின் பெருமைகளையும், அவைகட்கேற்ப பெண் தெய்வங்களை ஆண்கள் நடத்த வேண்டிய முறையும், மற்றும் இல்லறம் துறவறம் இரண்டின் விளக்கமும், பெண் ஆண்கள் தங்கள் வாழ்க்கையில் அறிந்து கொள்ள வேண்டிய பல Žநுட்பங்களையும், எல்லாவற் றிற்கு மேல் பெண்ணின் பால் உள்ள இறையொளியையும் மிகத் தெளிவாக எடுத்து விளக்கி மற்றப் பதிப்புகளைப் போலன்றி நல்ல தாளில் நல்ல கட்டடத் துடன் கண்ணைக் கவரும் வகையில் பதிப்பிக்கப்பட்டுள்ளது. பெண்களின் விடுதலை வேண்டு மென்று பாடுபடும் இக்காலத்து இத்தகைய புத்தகங்கள் பல கட்டாயம் வெளிவர வேண்டும். விலை ரூ 2. கிடைக்குமிடம்:- முருகவேள் புத்தக சாலை ராயப்பேட்டை சென்னை. குடி அரசு...

அடுத்த வாரம் 0

அடுத்த வாரம்

27-9-27 தேதி ஊழியன் என்னும் ஒரு பத்திரிகையின் முதல் கலத்தில் “ வீணான அவதூறு” என்ற தலைப்பில் ஸ்ரீமான் காசி விஸ்வநாதன் செட்டியார் அவர்களுக்கும், ஸ்ரீமான். எஸ். ராமனாதன் அவர்களுக்கும் நடந்ததாக ஒரு சம்பாஷணை காணப்படுகின்றது. இதற்கு சமாதானம் எழுத வேண்டிய பொறுப்பு ‘திராவிடனுக்கும்’ ‘குடி அரசுக்கும்’ ஏற்பட்டதோடு ராமசாமி நாயக்கருக்கும் ஏற்பட்டிருக்கிறது. இம்மாதிரியான ஒரு சந்தர்ப்பம் அளிக்கப் பட்டதற்கு நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறோம். எனினும் இந்த சம்பாஷணைகளில் கண்ட வர்த்தமானங்கள் முழுதும் ஸ்ரீமான் ராமநாதன் அவர்களால் சொல்லப்பட்டது தானா என்பதை நாம் மற்றுமொரு முறை கேட்டுத் தெரிந்து கொண்டு பதில் எழுத வேண்டிய நிலைமையில் அச்சம்பாஷணையில் சில பாகம் இருக்கின்றது. ஆகவே அது முழுவதும் உண்மைதான் என்றாவது, உண்மையல்ல வென்றாவது தெரிந்துகொண்டு அடுத்தவார ஆரம்பத்தில் எழுதுகிறோம். இதற்கு இரண்டில் ஒன்று பதில் இல்லாத பட்சம் சம்பாஷணை நடந்தது வாஸ்த வம் என்றும் அதில் கண்டது முழுவதும் உண்மை என்றும்...

மதுரையில் ராஜியும் ஒற்றுமை மகாநாடும் 0

மதுரையில் ராஜியும் ஒற்றுமை மகாநாடும்

மகாத்மா காந்தி பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் என்கிற விஷயத்தைப் பற்றி ராஜிபேசி ஏதாவது ஒரு முடிவு செய்ய பார்ப்பனரல்லாதார் தலைவர் என்கிற முறையில் உங்களை கூப்பிட்டால் வருவீர்களா என்பதாக சில பத்திராதிபர்களும் சமாச்சார வியாபார பிரதிநிதிகளும் வந்து நம்மைக் கேட்கிறார்கள். தவிர, மதுரையில் பார்ப்பனர் பார்ப்பனரல்லாதார் ஒற்றுமை மகாநாடு என்பதாக ஒன்றைக் கூட்டி மகாத்மாவைத் தலைமையாக வைத்து பேசு வதானால் வரத் தயாராயிருக்கின்றீர்களா என்று பார்ப்பனரல்லாத பிரமுகர் களில் சிலரும் கேட்கிறார்கள். இவற்றிற்கு பதில் சொல்லவேண்டியது அவசி யமாகின்றது. முதலில் மகாத்மா கூப்பிட்டால் என்பதற்கு பதில் சொல்லிவிட்டு மகாநாட்டுக்கு பதில் சொல்லுவோம். மகாத்மா கூப்பிடுகிறாரா இல்லையா என்பது தெரியாமல் கூப்பிட்டால் வரத் தயாராயிருக்கிறேன் என்று சொல்ல நாம் தயாராயில்லை. அல்லாமலும் எதற்காக கூப்பிடுகிறார் என்பதும், பார்ப்பனருக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் ஒற்றுமைக் குறைவாயிருக்கும் விஷயங்களில் மகாத்மா அவர்களின் சொந்த கொள்கை என்ன என்பதை நாம் அறிந்து கொள்ளாமலும், மகாத்மா அழைப்புக்கு வரும் பார்ப்பனர்கள் மகாத்மா சொல்லும்...