* உண்மையான சுத்தவீரன் “ பார்ப்பனர் கீழ் வேலை செய்வதைக் காட்டிலும் சாவதே மேல்”

செங்கல்பட்டு ஜில்லா பொன்னேரியில் காஞ்சீபுரம் ரிடயர்ட் சால்ட் சப்இன்ஸ்பெக்ட்டருடைய குமாரரான பி. சுப்பரமணிய முதலியார் என்கிற 22- வயதுள்ள ஒரு வாலிபர் ஒரு பார்ப்பனருக்குக் கீழ் இருந்து வேலை செய்வதைப் பார்க்கிலும் செத்துப்போவதே மேல் என்பதாகக் கருதி தன்னுடைய நண்பர் ஒருவருக்கு கீழ்க்கண்ட விதமாக ஒரு கடிதம் எழுதி வைத்துவிட்டுப் பாஷாண சம்பந்தமான மருந்தைச் சாப்பிட்டு விட்டு, உயிர் துறந்தார். அக்கடிதமாவது;-

பொன்னேரி லோகல் பண்டு ஆஸ்பத்திரி
7-4-27.

அன்புமிக்க மாணிக்கம்!
இந்தமாதம் 8- தேதி எனக்கு குறிப்பிடத்தக்க ஒரு அதிர்ஷ் டவசமான நாளாகும். அது என்னவென்றால் நான் இந்த உலகத்தையும், உன்னையும், எனது பந்துக்களையும் விட்டு சந்தோஷமாகவும், திருப்தி யாகவும் பிரியும் நாளாகும்.

ஒரு பார்ப்பன எஜமானன் கீழ் இருந்து வேலை செய்ய இனி என்னால் முடியாது. பார்ப்பன எஜமானன் கீழ் வேலைசெய்து ஜீவிப்பதைக் காட்டிலும், செத்துப்போவது மேலானதெனவும், புத்திசாலித்தனமான தெனவும் நான் தெரிந்து கொண்டேன்.

என்னுடைய பார்ப்பன எஜமானனுடைய பெயர் உனக்கு தெரிந்தது தானே. அந்த சீனிவாசப்பிரபு என்பவர், என்னையும் மற்றும் உள்ள சிப்பந்திகளையும், பார்ப்பன ஆதிக்கத்திற்காக உழைக்கிற தேவநேச சாமி என்கிற ஒரு பார்ப்பனரின் இஷ்டப்படியும், அவர் சொல்லுகிறபடியும் நடத்துகிறவராயிருக்கிறார். இதுவரை டாக்டர் நாயர், சர். தியாகராய செட்டி யார், எ. ராமசாமி முதலியார், சி. நடேச முதலியார் முதலியவர்கள் பார்ப்ப னர் கொடுமைகளை அடியோடு துலைப்பதற்காக செய்து வரும் பிரயத் தனங்களைத் தப்பிதமென்று நினைத்திருந்தேன். ஆனால், இப்போது அத்தலைவர்கள் வார்த்தைகள் ஒவ்வொன்றும் சத்தியமானது என்பது என் விஷயத்தில் மிகவும் ருஜூவாகி விட்டது. பார்ப்பனர்களை வெறுப்ப தாலாவது “ பார்ப்பனர்களின் கீழ் வேலை செய்யக்கூடாது என்று நினைத்து என்வேலையை ராஜீனாமா செய்து விடுவதினாலாவது வேறு வழியில் இந்த நாட்டில் பிழைக்கமுடியாதவனாயிருக்கிறபடியால் ஒரு கோப்பை பாலில் ஒரு அவுன்சு சியானிக் ஆசிடைக் ( ழலனசடி – ஊலயniஉ ஹஉனை ) கலந்து சாப்பிட்டு உயிரை மாய்த்துக்கொள்வதையே விரும்புகிறேன். ஆதலால் நான் ஒரு உண்மையான பார்ப்பனரல்லாத உணர்ச்சி உடையவனாகவும் எனது பார்ப்பனரல்லாதார் சகோதர சகோதரிகள் பார்ப்பனக் கொடுமையிலிருந்து நீங்குவதற்காக அப்பார்ப்பனக் கொடுமையை அழிக்க வேண்டியும், நான் பிராணனை விடுகிறேன். நான் செய்யும் இந்தக்காரியம் சரிதானே? இந்த விஷயத்தை மெயில் பத்திரிகையிலும் ஜஸ்டிஸ் பத்திரிகையிலும் பிரசுரிக்கச் செய்வதால் நமது சகோதரிகளையும் சகோதரர்களையும் பார்ப்பன சூழ்ச்சியில் சிக்கி ஏமாராமலிருப்பதற்காக இருந்து தப்புவிக்க உதவும் என நினைக்கிறேன். உன்னிடத்திலும் என் அன்பு நிறைந்த சிநேகதர் ஸ்ரீமான் சி.சி. மல்லி நாத் ஜெயின் இடத்திலும், எம்.எஸ்.எம். ரயில்வே பாக்காலா ஜில்லா இஞ்சினீர் ஆபிசு டைப் அடிப்பவரிடத்திலும் விடைபெற்றுக் கொள்ளுங்காலம் நெருங்கிவிட்டது. இதோடு நான் நல் விடைபெற்றுக்கொள்ளுகிறேன். இனி நீ பார்க்க முடியாததான என்னுடைய கடைசி கையெழுத்து இதுதான், என்னு டைய பிரேதத்தை பார்ப்பன தெருவுக்கு முன்னால் ஓடும் ஆரணி நதி மணலில் பார்க்கலாம்.

என்னுடைய சம்பள பாக்கியை நீ எனக்காக வாங்கி ஓட்டல்காரருக் கும் மற்றும் நான் கொடுக்கவேண்டிய கடன் காரருக்கும் கொடுத்து விடு

( ஒம். ) பி. சுப்பிரமணியன்.

You may also like...

Leave a Reply