Category: தலைமை கழகம்

தி.வி.க.வின் புதிய 52 மின்னூல்கள்

தி.வி.க.வின் புதிய 52 மின்னூல்கள்

பல்வேறு காலகட்டங்களில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய மாநாடுகள், பரப்புரைகள் மற்றும் பொதுக் கூட்டங்களில் தலைவர்களால் பேசப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த உரைகள் ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் அவ்வப்போது எழுத்து வடிவில் வெளியிடுவது உண்டு. அந்த வகையில் கடந்த 10 ஆண்டுகளில் முழக்கம் இதழ்களில் வெளிவந்த பேச்சுக்கள் மற்றும் செய்திகளின் தொகுப்பு பல்வேறு தலைப்புகளில் திரட்டப்பட்டு இளைய தலைமுறை மீண்டும் பெரியாரியலை உள்வாங்கி கொள்ள கழகத் தலைமையின் வழிகாட்டுதலில் இணைய தளப் பிரிவு தோழர்களால் மின்னூலாக்கி பதிவேற்றி உள்ளோம். கீழுள்ள இணைப்பின் வாயிலாகவோ கழகத்தின் இணையதளத்திற்கு சென்று தேவையான புத்தகங்களை தரவிறக்கி படித்துக் கொள்ளலாம். மின்னூல்கள் தொகுப்பு திவிக வெளியீடுகள் பட்டியல் : அணுஉலையின் ஆபத்து –- திவிக வெளியீடு; இந்து ராஷ்டிரத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை என்ன?  – அப்துல் சமது; இராஜராஜசோழனின் கதை என்ன – திவிக வெளியீடு; இளைய தலைமுறை பெரியாரை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும்? –...

கூடங்குளம் அணுஉலைக் கழிவுகளை தமிழ்நாட்டில் புதைக்காதே – எச்சரிக்கை ஆர்ப்பாட்டம் ஜனவரி 31 2022

கூடங்குளம் அணுஉலைக் கழிவுகளை தமிழ்நாட்டில் புதைக்காதே – எச்சரிக்கை ஆர்ப்பாட்டம் ஜனவரி 31 2022

#அணுசக்தி_எதிர்ப்பு_மக்கள்_கூட்டமைப்பு_தமிழ்நாடு_ஆலோசனைக்_கூட்டம்_11_01_2022 இணையவழியில் ஒருங்கிணைப்பாளர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 2012 முதல் தோழர்கள் கொளத்தூர் மணி, கண.குறிஞ்சி, மீ.த.பாண்டியன், அரங்க. குணசேகரன், திருநாவுக்கரசு, பானுமதி, செந்தில்  ஆகியோர் ஒருங்கிணைக்கும் செயற்குழுவாக இயங்கி வந்தோம். தோழர்கள் சுப.உதயகுமார், தியாகு, கு.இராமகிருஷ்ணன், நெல்லை முபாரக், அப்துல்சமது, திருமுருகன், சுந்தர்ராஜன் ஆகிய தோழர்களையும் இணைத்து விரிவாக்கப்படுகிறது என்பது கூட்டத்தில் முன்வைக்கப்பட்டு ஏற்கப்பட்டது. பங்கேற்றவர்கள்: மதிமுக – மல்லை சத்தியா பச்சைத்தமிழகம் – சுப.உதயகுமார் தபெதிக – கு.இராமகிருஷ்ணன் சிபிஐ (எம்_எல்) – என்.கே.நடராசன், இரமேஷ். தமஜக – கே.எம்.சரீப் எஸ்.டி.பி.ஐ – அப்துல் ஹமீது பியூசிஎல் – கண.குறிஞ்சி ததேமமு – மீ.த.பாண்டியன் மே 17 – திருமுருகன் இளந்தமிழகம் – செந்தில் தமிழர் பாசறை – எழிலரசு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். #கூடங்குளம்_அணுஉலைக்_கழிவுகளை_தமிழ்நாட்டில்_புதைக்காதே! என இந்திய ஒன்றிய அரசை எச்சரித்து 31-01-2022 அன்று தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டத்...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேச்சு வரலாற்றுப் பதிவுகளை நினைவூட்டும் கழக ஏட்டின் தலையங்கங்கள்

கழகத் தலைவர் கொளத்தூர் மணி பேச்சு வரலாற்றுப் பதிவுகளை நினைவூட்டும் கழக ஏட்டின் தலையங்கங்கள்

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டின் தலையங்கங்கள் வரலாற்று ரீதியான பதிவுகளையும் கழக நிலைப்பாடுகளையும் நினைவூட்டுகின்றன என்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி கூறினார். டிசம். 24, 2021 அன்று சென்னையில் ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ தலையங்கத் தொகுப்பு வெளியீட்டு நிகழ்வுக்கு தலைமையேற்று, கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார். அவர் உரையில் குறிப்பிட்டதாவது: திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறியவர்கள், வெளியேற்றப்பட்டவர்கள் அனைவரும் இணைந்து, தந்தை பெரியார் திராவிடர் கழகம் கட்டியமைக்கப் பட்டது. அப்போது, ‘பெரியார் காலத்து தமிழ் நாட்டை உருவாக்குவோம்’ என்பதைத் தான் இலட்சியமாக வைத்து தொடங்கினோம். பகுத்தறிவை முதன்மையாகக் கொள்ளாமல், ஜாதி ஒழிப்பை முதன்மையாகக் கொண்டு, கலந்து பேசி இந்த இயக்கத்தைத் தொடங்கினோம். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னுரையில் குறிப்பிட்டிருந்தார், பெரியாரின் சுயமரியாதை இயக்க காலத்து சிக்கல்கள் வேறு, தற்போது சமுதாயத்தில் நிலவும் சிக்கல்கள் வேறு’ என்று அதுபோல  பெரியார் காலத்தில் மரண தண்டனை சிக்கல்கள் இல்லை. சுற்றுச் சூழல்...

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ தலையங்கத் தொகுப்புகள் அய்ந்து தொகுதிகளாக வெளியிடப்பட்டது

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ தலையங்கத் தொகுப்புகள் அய்ந்து தொகுதிகளாக வெளியிடப்பட்டது

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வார ஏட்டின் ஆசிரியர் விடுதலை இராசேந்திரன் எழுதிய தலையங்களின் நான்கு தொகுப்புகளும் கோடங்குடி மாரிமுத்து என்ற புனைப் பெயரில் அவர் எழுதிய நய்யாண்டி எழுத்துகள் ஒரு தொகுதியாகவும் 5 தொகுதிகளாக வெளி வந்துள்ளது. பெரியார் நினைவு நாளான டிசம்பர் 24ஆம் தேதி மாலை 5 மணியளவில் சென்னை நிருபர்கள் சங்க அரங்கில் நடந்த நிகழ்வுக்கு தென்சென்னை மாவட்டக் கழக செயலாளர் இரா. உமாபதி வரவேற் புரையாற்றினார். திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். தமிழ்நாடு மாநில கொள்கை வளர்ச்சிக் குழுத் துணைத் தலைவர் முனைவர் ஜெ. ஜெயரஞ்சன் நூல்களை வெளியிட தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் ஆசிரியர் சிவகாமி பெற்றுக் கொண்டார். தொகுப்புகள் பற்றி மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமை கட்சித் தோழர் வாலாஜா வல்லவன் அறிமுக உரையாற்றினார். விடுதலை இராசேந்திரன் ஏற்புரை நிகழ்த்தினார். தோழர்கள் மேடைக்கு வந்து தொகுப்புகளை திராவிடர் விடுதலைக் கழகத்...

புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு கழக சார்பில் மாலை அணிவிப்பு

புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு கழக சார்பில் மாலை அணிவிப்பு

அம்பேத்கர் நினைவு நாளையொட்டி, சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பில், 06.12.2021 அன்று காலை 9 மணியளவில் கழக பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில், அம்பேத்கர் மணிமண்டபத்தில் மாலை அணிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மயிலாப்பூர் சுண்ணாம்பு கால்வாயில் அமைந்துள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. அடுத்து, இராயப்பேட்டை வி.எம்.தெரு பெரியார் படிப்பகத்தில் வைக்கப்பட்ட அம்பேத்கர் படத்திற்கு தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார் மாலை அணிவித்தார். தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டத் தலைவர் வேழவேந்தன், மாவட்ட செயலாளர் உமாபதி, வட சென்னை யேசுகுமார், மயிலை சுகுமார், இராவணன், மனோகர் ஆகியோர் உட்பட சென்னை கழக தோழர்கள் கலந்து கொண்டனர். திருப்பூரில் புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் 65ஆவது நினைவு நாள் நிகழ்வு திருப்பூர் திராவிடர் விடுதலை கழகத்தின் சார்பில் கடைபிடிக்கப்பட்டது. 06.12.2021 அன்று காலை 10.00 மணியளவில் திருப்பூரில் அமைந்துள்ள புரட்சியாளரின் சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கங்கள் எழுப்பப்பட்டன. கழகத் தோழர்கள்...

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஆண்டுக் கட்டணம் ரூ.250 ஆக உயர்வு

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஆண்டுக் கட்டணம் ரூ.250 ஆக உயர்வு

காகித விலை, அச்சுக்கான செலவுகள் அதிகரித்து விட்டதால், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஆண்டுக் கட்டணம் ரூ.250/- ஆக  தவிர்க்க இயலாத நிலையில் உயர்த்தப்படுகிறது. வாசகர்கள் தொடர்ந்து ஆதரவை வழங்குமாறு கேட்டுக்  கொள்கிறோம். – நிர்வாகி, ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’   பெரியார் முழக்கம் 09122021 இதழ்

‘ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கங்களும்’ – மாவீரர் நாளில் நூல் வெளியீடு

‘ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கங்களும்’ – மாவீரர் நாளில் நூல் வெளியீடு

புலியூரில் நடந்த மாவீரர் நாளில் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி எழுதிய ‘ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கங்களும்’ நூல் வெளி யீட்டு நிகழ்வு நடைபெற்றது. தமிழர் வாழ்வுரிமைக் கட்சி நிறுவனர் தி. வேல் முருகன் வெளியிட கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பெற்றுக் கொண்டார். ‘நன்செய் பிரசுரம்’ குறைந்த விலையில் ரூ.10/-க்கு நூலை வெளியிட்டுள்ளது. நிகழ்வுக்கு 800 பிரதிகள் மட்டுமே விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டன. அனைத்து நூல்களுமே விற்றுத் தீர்ந்து விட்டன. வெளியீட்டாளர் கவிஞர் தம்பி நிகழ்வில் பங்கேற்றார். நூலைப் பெற : 9566331195 / 7373684049 பெரியார் முழக்கம் 02122021 இதழ்

கொளத்தூர் – புலியூரில் எழுச்சியுடன் நடந்த மாவீரர் நாள்

கொளத்தூர் – புலியூரில் எழுச்சியுடன் நடந்த மாவீரர் நாள்

தமிழ் ஈழ விடுதலைப் போராட் டத்தில் களமாடி உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தும் நிகழ்வு நவம்பர் 27 அன்று கொளத்தூர் அருகே புலியூர் செல்லும் வழியில் அய்யம்புதூர் அன்னை கனகாம்பாள் திருமண மண்டபத்தில் நடந்தது. விடுதலைப் புலிகள் இராணுவப் பயிற்சி எடுத்த இடத்தின் அருகே திறந்தவெளியில் முகாமுக்கு தலைமையேற்று பயிற்சி யளித்து வீரமரணமடைந்த பொன்னம்மான் நினைவாக அமைக்கப்பட்ட புலியூர் ‘நிழற்குடை’ அருகே இதுவரை இந்த நிகழ்வு நடந்து வந்தது. மழை காரணமாக அருகே உள்ள திருமண மண்டபத்தில் இந்த ஆண்டு நிகழ்வு நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள், தமிழர் வாழ்வுரிமைக் கட்சித் தோழர்கள் 2000 பேர் திரண்டிருந்தனர். உலகம் முழுதும் 6.05 மணிக்கு நிகழ்வு நடத்தப்படுவதை யொட்டி அதே நேரத்தில் மாவீரர் வீரவணக்கப் பாடல் ஒலிக்கப்பட்டது. தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான தி.வேல்முருகன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மாவீரர் சுடரை ஏற்றினார். தொடர்ந்து...

தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளும் மூன்றாம் கட்டப்பயண விவரம்

தலைமைக் கழகப் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளும் மூன்றாம் கட்டப்பயண விவரம்

கழகப் பணிகளை தீவிரப்படுத்தவும் கழக ஏடான ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’, ‘நிமிர்வோம்’ ஏட்டுக்கு உறுப்பினர்கள் சேர்ப்பது குறித்து ஆராயவும், கழகப் பொறுப்பாளர்கள், கழகத் தோழர்களை சந்திக்க சுற்றுப் பயணம் வருகிறார்கள். 01.12.2021 புதன்கிழமை : காலை 10.00 மணி: தர்மபுரி மாவட்டம் – மதிய உணவு, மாலை 4.00 மணி: கிருட்டிணகிரி இரவு தங்கல் 02.12.2021 வியாழக்கிழமை : காலை 10.00 மணி வேலூர் மாவட்டம் மதிய உணவு மணல் 06.00 மணி: சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி மாவட்டம்.) 03.12.2021 – வெள்ளிக்கிழமை : காலை 10.00 மணி: விழுப்புரம் மாவட்டம். மூன்றாம் கட்ட பயணம் நிறைவு. நான்காம் கட்ட பயண விபரம். 12.12.2021 – ஞாயிறு : காலை 10.00 மணி ஈரோடு தெற்கு மாவட்டம் – மதிய உணவு, மாலை 4.00 மணி: கரூர் மாவட்டம் தூத்துக்குடி. திருநெல்வேலி. கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்கள் பின்னர் அறிவிக்கப்படும் பெரியார் முழக்கம் 25112021...

முதல் கட்ட சந்திப்பில் கழகத் தோழர்கள் உற்சாகம் கிராமங்களில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

முதல் கட்ட சந்திப்பில் கழகத் தோழர்கள் உற்சாகம் கிராமங்களில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை

கழகத் தோழர்களை பொறுப்பாளர்கள் சந்தித்து நிகழ்த்திய கலந்துரையாடல் நிகழ்வுகள் தோழர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைத் தந்துள்ளன. கிராமங்களில் ஜாதி எதிர்ப்புப் பரப்புரை நடத்தவும், ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ஏட்டுக்கு உறுப்பினர்கள் சேர்க்கவும் தோழர்கள் முனைப்புடன் செயல்பட முன் வந்துள்ளனர். முதல்கட்டப் பயணத்தில் கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன், தலைமைக் குழு உறுப்பினர் அய்யனார் பங்கேற்றனர். விரைவில் இரண்டாம் கட்டப் பயணம் தொடங்கவிருக்கிறது. பயணம் குறித்து விழுப்புரம் அய்யனார் தொகுத்து அனுப்பியுள்ள செய்தி. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெரும் தொற்றால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்ததோடு, இயக்க செயல்பாடுகளும் ஒரு சில நிகழ்வுகள் தவிர்த்து இணைய வழியில் மட்டுமே நடைபெற்று வந்தன. இயக்கப் பணிகள் சுணக்கம் ஆகிவிட்டன. இதனைப் போக்கும் வகையில் கழகப் பணிகளை தீவிரப்படுத்தும் கழக ஏடான, புரட்சிப் பெரியார் முழக்கம், நிமிர்வோம் ஏட்டிற்கு சந்தா சேர்த்திடவும், முதல் கட்டமாக 18.11. 2021 முதல் 20.11.2021 வரை...

தமிழ் இந்து- வின் ஊடக அறம் இது தானா ?

தமிழ் இந்து- வின் ஊடக அறம் இது தானா ?

‘தமிழ் இந்து’- வின் ஊடக அறம் இது தானா ? கடந்த காலங்களில் அரசு நியமிக்கும் குழுக்கள், கட்சி காரர்களுக்கு பதவி தருவதற்கே பயன்படுத்தப்பட்டன. தற்போது திமுக ஆட்சிக்கு வந்த பிறகு இதில் பண்பு மாற்றங்களை செய்து வருகிறது. துறை சார்ந்தவர்களை தேர்வு செய்து அவர்களின் திறமைகளை பயன்படுத்திக் கொள்ளும் நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் செயல்பட்டு வருகிறார். இது குறித்து தமிழ் இந்து நாளேடு (19.11.2021) எழுதியுள்ள தலையங்கம் ஊடக அறத்தை புறம் தள்ளி அரசுக்கு உள்நோக்கம் கற்பிக்கிறது. ‘சென்னை பெருநகர வெள்ளச் சேத தணிப்பு மேலான்மைகள்’ மற்றும் மேலான்மைகளுக்கான அறிவுரை குழுமத் தலைவராக ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ் அதிகாரி தமிழ்நாட்டைச் சேர்ந்த திருப்புகழ் நியமிக்கப்பட்டுள்ளார். பேரிடர் மேலான்மையில் மிகச் சிறந்த அனுபவம் பெற்ற இவர், குஜராத் முதல்வராக மோடி இருந்த போது அவரது நம்பிக்கைக்குரிய அதிகாரியாக செயல்பட்டார். மோடி பிரதமரானவுடன் அவரது திறமையை பயன்படுத்திக் கொள்ள, டெல்லிக்கு அழைத்து பேரிடர்...

மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள்

மாவட்ட கலந்துரையாடல் கூட்டங்கள்

*திராவிடர்* *விடுதலைக்* *கழக* *தோழர்களின்* *கவனத்திற்கு* தோழர்களுக்கு வணக்கம். கடந்த இரண்டு ஆண்டுகளாக (2020 , 2021) கொரோனா பெரும் தொற்றால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்ததோடு, இயக்க செயல்பாடுகளும் இணைய வழியில் மட்டும் நடைபெற்று வந்தன. ஒரு சில நிகழ்வுகள் தவிர்த்து இயக்க பணிகள் சுணக்கமாகி விட்டது. இதனை போக்கும் வகையில் மாவட்டம் தோறும் கழக பொருளாளர் , மற்றும் அமைப்பாளர் , பரப்புரை செயலாளர், தலைமைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் கலந்துரையாடல் கூட்டம் நடைபெற உள்ளது. கூட்டத்தில் இயக்க செயல்பாடு மற்றும் கழக ஏடுகள் (புரட்சிப் பெரியார் முழக்கம், நிமிர்வோம்) குறித்தும் தற்போது மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும் விவாதிக்க உள்ளனர். பொறுப்பாளர்களின் சுற்றுப்பயண நிகழ்வின் முதல் பட்டியல் வெளிடப்படுகிறது. வரும் வாரங்களில் மீதம் உள்ள மாவட்டத்திற்கான சுற்றுப்பயண விவர அறிக்கை வெளியாகும் *தலைமைகழக* *பொறுப்பாளர்கள்* *கலந்து* *கொள்ளும்* *கலந்துரையாடல்* *கூட்ட* *பயண* *விபரம்* *18.11.2021* . *வியாழக்கிழமை*...

தமிழ்நாடு மாணவர் கழகத்தின் மாநில அளவிலான கலந்துரையாடல் கூட்டம் 17.10.2021

தமிழ்நாடு மாணவர் கழகத்தின் மாநில அளவிலான கலந்துரையாடல் கூட்டம் 17.10.2021

தமிழ்நாடு மாணவர் கழகத்தின் மாநில அளவிலான கலந்துரையாடல் கூட்டம் 17.10.2021 அன்று காலை 11 மணியளவில், ஈரோடு பிரியாணிபாளையத்தில் நடைபெற்றது. சென்னிமலை கார்மேகம் வரவேற்பு கூறினார். யாழினி, யாழிசை ஆகியோர் பகுத்தறிவுப் பாடல் பாடினர். தமிழ்நாடு மாணவர் கழகம் பற்றியும், கலந்துரையாடலின் நோக்கம் பற்றியும் திருப்பூர் சந்தோஷ், ‘இட ஒதுக்கீட்டிற்கு வந்திருக்கும் ஆபத்து, நீட் தேர்வின் பாதிப்புகள், மதவாத சக்திகளின் சமூக சீர்கேட்டுச் செயல்பாடுகள் ஆகியவை பற்றியும், அவற்றிற்கு எதிர்வினையாற்ற ஒரு வலுவான, சமூகநீதியைக் கொள்கையாகக் கொண்ட மாணவர் அமைப்பின் தேவை’ குறித்து தனது அறிமுக உரையில் குறிப்பிட்டார். நிகழ்விற்கு திருப்பூர் சந்தோஷ் தலைமை வகித்தார். தொடர்ந்து, சென்னை, திருப்பூர், குமாரபாளையம், மேட்டூர், சேலம், சென்னிமலை, அன்னூர், பல்லடம், மேச்சேரி, பொள்ளாச்சி, பழனி ஆகிய பகுதிகளில் இருந்து கலந்து கொண்ட மாணவர்கள் அனைவரும் தங்களை அறிமுகப் படுத்திக் கொண்டனர். பின்னர் அவர்கள் தங்களது கருத்துக்களை கூறினர். அதன் மீதான கலந்துரையாடலும் நடைபெற்றது....

கலப்பு திருமணம் ஜாதி சான்றிதழ் – நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப எம்.பி. க்களுக்கு கொளத்தூர் மணி கோரிக்கை

கலப்பு திருமணம் ஜாதி சான்றிதழ் – நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப எம்.பி. க்களுக்கு கொளத்தூர் மணி கோரிக்கை

கலப்பு திருமணம் செய்த பெற்றோருக்கு பிறக்கும் குழந்தைக்கு தந்தையின் ஜாதி அல்லது தாயின் ஜாதி, இதில் இருவருக்கும் எதில் விருப்பமோ அதன் அடிப்படையில் குழந்தைக்கு ஜாதி சான்றிதழை வழங்க வேண்டும் என தமிழக அரசு சமீபத்தில் கூட அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இதுபோன்ற உத்தரவுகள் நாடு முழுவதும் இருந்து வருகிறது. இதன் அடிப்படையில் கலப்புத் திருமணம் புரிந்தோர் தங்கள் வாரிசுகளுக்கு ஏதேனும் ஒரு ஜாதி சான்றிதழ் பெற்று வருகின்றனர். ஆனால் மத்திய அரசின் உயர் பதவிகளுக்கு செல்லும் இடங்களில் ஜாதி சான்றிதழ் சரிபார்ப்பின் போது பல்வேறு சிக்கல்கள் ஏற்படுவதாக கூறப்படுகின்றது. உதாரணமாக சில ஆண்டுகளுக்கு முன் பீகார் மாநிலம் கயா மாவட்டத்தைச் சார்ந்த அஞ்சன் குமார் என்பவர் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றிபெற்று, அவருடைய சான்றிதழ் சரிபார்ப்பில் அவருடைய தாயாரின் ஜாதி அடிப்படையில் எஸ்டி ஜான்றிதழ் பெற்றிருந்தபோதும், அவருடைய தந்தை பிற்படுத்தப்பட்டவர் என்பதால் இந்த ஜான்றிதழ் செல்லாது என அறிவிக்கப்பட்டது. 2006...

பேராசிரியர் செயராமனை மிரட்டியிருக்கிற நாம் தமிழர் கட்சி -மயிலாடுதுறை அரம்பர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – கூட்டறிக்கை

பேராசிரியர் செயராமனை மிரட்டியிருக்கிற நாம் தமிழர் கட்சி -மயிலாடுதுறை அரம்பர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் – கூட்டறிக்கை

० பேராசிரியர் செயராமனை மிரட்டியிருக்கிற நாம் தமிழர் கட்சி -மயிலாடுதுறை அரம்பர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.. ० தமிழ்நாட்டு அரசின் கவனத்திற்கும், தமிழ்நாடு காவல்துறை தலைமைக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் அறவியலுக்குரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்துகிறோம் ०००० இரண்டு நாட்களாக மயிலாடுதுறையில் நிகழ்ந்திடும் சம்பவங்கள்தாம் அவை.. தமிழ்த்தேசத்தின் எதிரி யார்? என்ற தலைப்பில் 19 9 2021 ஞாயிற்றுக்கிழமை மாலை சென்னையில் நடந்த கருத்தரங்கத்தில் உரையாற்றியவர் மீத்தேன் திட்ட எதிர்ப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் செயராமன் அவர்கள் ஆவார்கள் அந்த உரையில் தமிழ்த்தேசியம் என்ற பெயரால் திராவிட எதிர்ப்பு என்பதையும், பெரியார் எதிர்ப்பு என்பதையும் ஓங்கிப் பேசியவர்களில் முதன்மையானவர்களான தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் தோழர் பெ மணியரசன், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் ஆகியோரது உரைகளுக்கு விடையளித்தும் மேலும் தேவையான விளக்கங்களளித்தும் உரையாற்றியிருந்தார்.. வட இந்தியாவில் சங்கிகள் நடத்தையை அப்படியே மறு வார்ப்பாக இங்கு செய்து...

பெரியார் பிறந்த நாளில், திராவிடர் விடுதலைக் கழத் தோழர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதி மொழி

பெரியார் பிறந்த நாளில், திராவிடர் விடுதலைக் கழத் தோழர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதி மொழி

கழகத் தோழர்களுக்கு ஒரு அறிவிப்பு : பெரியார் பிறந்தநாளை சமூக நீதி நாளாக அறிவித்து அமையப் போகும் எதிர்கால தமிழ்நாட்டின் இலக்கினை அடையாளம் காட்டிய தமிழக முதல்வருக்கும், தமிழக அரசுக்கும் நன்றி செலுத்துகிறோம். —– பெரியார் பிறந்த நாளில், திராவிடர் விடுதலைக் கழத் தோழர்கள் எடுத்துக் கொள்ள வேண்டிய உறுதி மொழியைக் கீழே கொடுத்துள்ளோம். —– “ஜாதி, மத அடையாளங்களைக் காட்டி பாகுபாடு காட்டுவது, பெண்களின் உரிமைகளை மறுத்து அடக்கி ஒடுக்குவது, அறிவியலுக்கு எதிரான சடங்குகளை, நம்பிக்கைகளை – பண்பாட்டுப் பெருமைகளாக பேசி வளர்ச்சிக்கான சிந்தனைகளை முடக்குவது, ஒன்றியத்தை ஒற்றை ஆட்சியாக மாற்றி அமைப்பதற்கு தமிழ்நாட்டின் கல்வி, பொருளாதாரம், விவசாயம், சுற்றுச்சூழல், அரசியல் உரிமைகளை பறிப்பது, சமஸ்கிருத பண்பாட்டைத் தேசிய பண்பாடாக மாற்றுவது” உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைளும் சமூக நீதியைக் குழி தோண்டிப் புதைப்பதே ஆகும். இம்முயற்சிகளை முறியடிக்க பெண்கள் ஆண்கள் அடங்கிய இளைய சமூகத்தை அணிதிரட்டி சமூக நீதியை நோக்கி...

சமூக நீதி நாள் உறுதிமொழி

சமூக நீதி நாள் உறுதிமொழி

*செப்டம்பர் 17 சமூக நீதி நாள் உறுதிமொழி* பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற அன்பு நெறியும், யாதும் ஊரே யாவரும் கேளீர் என்ற பண்பு நெறியும், எனது வாழ்வியல் நெறிமுறையாக கடைப்பிடிப்பேன். சுயமரியாதை ஆளுமை திறனும், பகுத்தறிவு கூர்மை பார்வையும் கொண்டதாக எமது செயல்பாடுகள் அமையும். சமத்துவம், சகோதரத்துவம், சமதர்மம் ஆகிய கொள்கைகளுக்காக என்னை நான் ஒப்படைத்துக் கொள்வேன். மானுட மற்றும் மனிதாபிமானமும் ஒன்றே எனது இரத்த ஓட்டமாக அமையும். சமூக நீதியை அடித்தளமாக கொண்டு சமுதாயம் அமைக்கும் எனது பயணம் தொடர இந்த நாளில் உறுதி ஏற்கிறேன் தந்தை பெரியார் பிறந்தநாள் சமூக நீதி நாள்

தமிழ்த்தேசியமும், தந்தை பெரியாரும்! – தோழர் திருமாவேலன்

தமிழ்த்தேசியமும், தந்தை பெரியாரும்! – தோழர் திருமாவேலன்

தோழர் ப.திருமாவேலன் அவர்களின் முக்கியமான கட்டுரை. தமிழ்த்தேசியமும், தந்தை பெரியாரும்! அனைவருக்கும் மீண்டும் ஒரு அன்பான வணக்கம். ‘தமிழ்த் தேசியமும், தந்தை பெரியாரும்” என்கின்ற தலைப்பு எனக்குத் தரப்பட்டு இருக்கிறது. உண்மையில் ஒரு வில்லங்கமான தலைப்பு எனக்குத் தரப்பட்டு இருக்கிறது. தமிழ்நாட்டில் பொருளற்று, இன்னும் சொன்னால், அதனுடைய உண்மையான சித்தாந்தங்களை உண ராமல், அதற்கான எந்த அர்ப்பணிப்பு உணர்வும் இல்லாமல், அதற்கான தத்துவார்த்த பின்புலங்கள் எதுவும் தெரியாமல், பல்வேறு சிந்தனையற்ற மனிதர் களின் கையில் சிக்கிக் கொண்டிருக்கின்ற ஒரு வார்த்தை இருக்குமானால், அதற்குப் பெயர்தான் தமிழ்த் தேசியம். தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை திராவிட இயக்கம் என்கின்ற சொல்லுக்குள் இருக்கிறது தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை திராவிட இயக்கம் என்கின்ற சொல்லுக்குள் இருக்கிறது. தமிழ்த் தேசியம் என்கின்ற வார்த்தை தந்தை பெரியார் என் கின்ற வார்த்தைக்குள் இருக்கிறது; அவருடைய வாழ்க் கைக்குள் இருக்கிறது. தமிழ்த் தேசியத்தினுடைய பிதாமகர்கள் என்று இன்றைக்குத் தங்களுக்குத்...

கறுப்பு ஜூலை ! தமிழின அழிப்பின் கொடூர நிகழ்வு !

கறுப்பு ஜூலை ! தமிழின அழிப்பின் கொடூர நிகழ்வு !

*கறுப்பு ஜூலை !* தமிழின அழிப்பின் கொடூர நிகழ்வு ! – திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் *கொளத்தூர் மணி அறிக்கை !* இலங்கையில் 1983-ல் நடைபெற்ற இந்த மறக்கவியலா வரலாற்று பேரவலமான தமிழர்கள் மீதான அழிப்பு நடவடிக்கையின் 37 ம் ஆண்டு நினைவு நாள் இன்று. ஆண்டுகள் இத்தனை கடந்தாலும் அன்று தமிழர்கள் மீது நடந்தப்பட்ட கொடூர தாக்குதல்கள்,ஈவு இரக்கமின்றி நிகழ்த்தப்பட்ட படுகொலைகளின் நினைவுகள் ஆறாத வடுக்களாக இன்னமும் உலகத் தமிழர் மனதில் ஆழமாய் பதிந்து இருக்கிறது. ஒவ்வொரு வருடம் ஜூலை மாதமும் கறுப்பு ஜூலை என அழைக்கப்படும் அளவிற்கு இலங்கையின் சிங்கள பேரினவாதத்தின் கோர தாக்குதல் குறித்து இத்தலைமுறையும் அறிந்து கொள்வது அவசியம். தற்போதைய சூழலை மட்டும் கருத்தில் கொண்டு ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்தை மேலோட்டமாக பார்க்காமல் அதன் வரலாற்று பின்னணி, விடுதலைப் போராட்டத்தின் தேவை, ஆயுதம் தாங்க வேண்டிய கட்டாயம் தமிழர்களுக்கு ஏன் ஏற்பட்டது என்பதை...

தமிழ்நாட்டு அரசின் உடனடி நடவடிக்கையும், அரசு அதிகாரிகளுக்கு தமிழ்நாட்டு அரசின் எச்சரிக்கையும் !  – திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !

தமிழ்நாட்டு அரசின் உடனடி நடவடிக்கையும், அரசு அதிகாரிகளுக்கு தமிழ்நாட்டு அரசின் எச்சரிக்கையும் ! – திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !

தமிழ்நாட்டு அரசின் உடனடி நடவடிக்கையும், அரசு அதிகாரிகளுக்கு தமிழ்நாட்டு அரசின் எச்சரிக்கையும் ! – திராவிடர் விடுதலைக்கழகத் தலைவர் *தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !* RSS தலைவர் மோகன் பகவத் என்பவர் 22.07.2021 அன்று மதுரை வருவதையொட்டி மதுரை மாநகராட்சி உதவி ஆணையர் சார்பில் சில முன்னேற்பாடுகளுக்காக பிறப்பித்த குறிப்பாணை  ஒன்று நேற்று சமூக வலைதளங்களில் மிக வேகமாகப் பரவியது. அரசு அதிகாரியின் இந்த செயல் மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்புக்குள்ளானது. பெரியாரிய, முற்போக்கு இயக்கங்கள் இந்த குறிப்பாணையைப் பிறப்பித்த அதிகாரியை மிக வன்மையாக கண்டித்தன. கடும் எதிர்ப்பின் காரணமாக உடனடியாக மதுரை மாநகராட்சியின் சார்பில் ஆணைக்கான ஒரு அவசர விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த ஆணை தமிழ்நாட்டு முதல்வர் நேரடி பார்வையின் கீழ் பிறப்பிக்கப்பட்டு இருக்க வாய்ப்பில்லை என்றாலும் இந்த ஆணைக்கு எதிரான கொந்தளிப்பான சூழலை உடனடியாக கவனத்தில் கொண்ட தமிழ்நாட்டு அரசு உடனடியாக தலையிட்டு இந்த ஆணையைப் பிறப்பித்த...

*சென்னை ஐ.ஐ.டி யில் தலைவிரித்தாடும் சாதியப் பாகுபாடு…*  *இட ஒதுக்கீடு மீறல்கள்…*  *பேராசிரியர்கள் மாணவர்கள் மீது தொடரும் சாதிக்கொடுமைகள்*  *சூலை 5: தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்*

*சென்னை ஐ.ஐ.டி யில் தலைவிரித்தாடும் சாதியப் பாகுபாடு…* *இட ஒதுக்கீடு மீறல்கள்…* *பேராசிரியர்கள் மாணவர்கள் மீது தொடரும் சாதிக்கொடுமைகள்* *சூலை 5: தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்*

தோழர்கள் அனைவருக்கும் வணக்கம். தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஒருங்கிணைந்து ஐஐடியில் கடைப்பிடிக்கப்படுகின்ற சாதிய தீண்டாமை கொடுமைகளைக் கண்டித்து தமிழ்நாடு முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துகின்றது. அந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகமும் பங்கேற்கின்றது. தோழர்கள் வாய்ப்புள்ள இடங்களில் தவறாது ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்குமாறு வேண்டுகிறேன். தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொறுப்பாளர்களின் தொடர்பு எண்கள் இணைக்கப் பட்டுள்ளன. விவரங்களுக்கு தோழர்கள் அந்தந்த பகுதி பொறுப்பாளர்களுடன் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். கொளத்துர் மணி, தலைவர், திராவிடர் விடுதலைக் கழகம். *சென்னை ஐ.ஐ.டி யில் தலைவிரித்தாடும் சாதியப் பாகுபாடு…* *இட ஒதுக்கீடு மீறல்கள்…* *பேராசிரியர்கள் மாணவர்கள் மீது தொடரும் சாதிக்கொடுமைகள்* *சூலை 5: தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்* ஐ. ஐ. டி யை சனாதனத்தின் பிடியில் இருந்த மீட்க 5.7.2021 அன்று தமிழ்நாடு முழுவதும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம். சென்னை உள்ளிட்ட இந்தியாவின் ஏறக்குறைய அனைத்து ஐ. ஐ. டி களிலும் இட ஒதுக்கீட்டை முறையாக...

நீட் தேர்வு – நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிற்கு கருத்து அனுப்புவது தொடர்பான அறிவிப்பு !

நீட் தேர்வு – நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிற்கு கருத்து அனுப்புவது தொடர்பான அறிவிப்பு !

நீட் தேர்வு – நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிற்கு கருத்து அனுப்புவது தொடர்பான அறிவிப்பு ! நீட் தேர்வினால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைத்துள்ளது. அக்குழு பொதுமக்களிடம் கருத்துக்களை கேட்டுள்ளது.கருத்துக்கள் சென்று சேர கடைசி நாள் நாளை 22.06.2021 நீட் தேர்வின் பாதிப்புகள் குறித்து நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவினரிடம் கருத்து தெரிவிக்க விரும்புவோர் கீழ்காணும் கருத்துக்களையும் கவனத்தில் கொள்ளும்படி கேட்டுக் கொள்கிறோம். கருத்துக்களை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி : neetimpact2021@gmail.com – திராவிடர் விடுதலைக் கழகம், 21.06.2021 ——————————————— நீட் தேர்வு ஏன் வேண்டாம்? 12 ஆண்டுகளாக பள்ளிகளில் பயின்று ஒவ்வொரு ஆண்டும் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று வந்துள்ள மாணவர்களின் எந்த ஒரு தேர்வும் மதிக்கப்படாமல் நீட் என்ற பெயரால் எழுதும் வடிகட்டும் ஒற்றை தேர்வை மட்டும் அளவீடாக கொண்டு முடிவு செய்வது நியாயமானதல்ல. பள்ளிகளில்...

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு

திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு

தலைமைக் குழு – 20.06.2021. திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக் குழு கூட்டம் 20.06.2021 ஞாயிறு மாலை 5 மணிக்கு இணையம் வழியாக நடைபெற்றது. தலைமை குழுவிற்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார்,கழக பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். கழகத்தின் அடுத்த கட்ட நகர்வுகள், இணையதள செயல்பாடுகள் குறித்து பொதுச் செயலாளர் அவர்கள் அறிமுக உரையாற்றினார். நடைபெற்ற தலைமைக் குழுவில் திமுக அரசின் சிறப்பான செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது. திமுக அரசு நடைமுறைப் படுத்த முயற்சிக்கும் சமூக நீதி திட்டங்களான அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர், தமிழர் வேலைவாய்ப்பு உரிமை, 7 தமிழர் விடுதலை, பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீடு இவற்றிற்கு ஒன்றிய பாஜக அரசும், ஆதிக்க பார்ப்பன சக்திகளும் ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இடையூறுகள் குறித்து பேசப்பட்டது. கோயில் நிலங்கள் மீட்பு நடவடிக்கை. ஈழத்தமிழ் ஏதிலியர்களுக்கான கொரோனா நிவாரண பொருட்கள் வழங்கியமை, நீட் பாதிப்புகளை ஆய்வு செய்ய...

திராவிடர் விடுதலைக் கழக செயலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் திருச்சி 06032021

திராவிடர் விடுதலைக் கழக செயலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் திருச்சி 06032021

06.03.2021 சனிக்கிழமை, திருச்சி மாநகர் இரவி மினி அரங்கில் காலை 10 மணியளவில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்ற திராவிடர் விடுதலைக் கழக செயலவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள். 1) தமிழ்நாட்டில் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் வழமையாக வந்து போகும் தேர்தலாக இல்லை ! ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் – தமிழ்நாட்டின் திராவிட அடையாளத்தையும் அழித்து மதவெறி- மனுவாத மண்ணாக மாற்றுவதற்கு தனது சகல அதிகாரங்களையும் – சூழ்ச்சிகளையும் பயன்படுத்தி ஒன்றிய பாஜக அரசு படை எடுப்பையே நடத்தி வருகிறது. நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் தொடங்கி படிப்படியாக வளர்த்தெடுத்த சுயமரியாதை, சமூகநீதி, பகுத்தறிவுக் கொள்கைகளை அழிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன; தமிழ்நாட்டையும் வடமாநிலங்களைப் போல் ஆக்கிவிட்டால், இந்துத்துவம் என்ற மனுவாத மண்ணாக தமிழ்நாட்டை மாற்றி விட முடியும் என்பதே அவர்களின் திட்டம் ; இந்த ஆபத்தான படை எடுப்புக்கு, ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளத் துடிக்கும் அ.இ.அ.தி.மு.க ஆட்சி தமிழினத்திற்கு துரோகம்...

தேர்தலை முன்னிட்டு பெரியார் சிலையை மூடும் எண்ணம் இல்லை – தேர்தல் ஆணையம்

தேர்தலை முன்னிட்டு பெரியார் சிலையை மூடும் எண்ணம் இல்லை – தேர்தல் ஆணையம்

”தேர்தலை முன்னிட்டு பெரியார் சிலையை மூடும் எண்ணம் இல்லை” ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல். (11.13.2016) (தினத்தந்தி செய்தி) சென்னை, மார்ச்.12 தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதுமுள்ள பெரியார் சிலைகளை மூடும் எண்ணம் இல்லை என்று ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது. திராவிடர் விடுதலை கழகத்தின் அமைப்பு செயலாளர் ரத்தினசாமி. இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- ”மூடநம்பிக்கை சமுதாயத்தில் உள்ள சாதி வேற்றுமையை ஒழித்து, பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர் தந்தை பெரியார். இவர், மூடநம்பிக்கை எதிராக கடுமையாக போராடியவர். பெரியாரின் கொள்கையை எங்கள் அமைப்பு மக்களுக்கு எடுத்துக்கூறி வருகிறது. இந்த நிலையில், தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. கோவையில் உள்ள தேர்தல் அதிகாரிகள், எங்கள் அமைப்பின் நிர்வாகிகளிடம் வந்து தந்தை பெரியாரின் திருவுருவ சிலையை துணிகளை கட்டி மூடவேண்டும். திராவிடர் விடுதலை கழகத்தின் கொடிகளை பறக்க விடக்கூடாது...

திராவிடர் விடுதலைக் கழக செயலவை கூட்ட அறிவிப்பு !

திராவிடர் விடுதலைக் கழக செயலவை கூட்ட அறிவிப்பு !

திராவிடர் விடுதலைக் கழக செயலவை கூட்ட அறிவிப்பு ! 06.03.2021 – திருச்சி கழகத் தோழர்களுக்கு, வணக்கம். எதிர்வரும் 06.03.2021 சனிக்கிழமை காலை சரியாக 10-00 மணிக்கு, திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், கலைஞர் அறிவாலயம் அருகில் உள்ள ரவி மினிஹால் அரங்கில், திராவிடர் விடுதலைக் கழகத்தின் செயலவை, திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமையிலும், பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் அவர்கள் முன்னிலையிலும் நடைபெற உள்ளது. பொருள்: 1) கழகத்தின் தேர்தல் நிலைப்பாடு 2) இயக்க ஏடுகள் பரப்பல் 3) அடுத்த காலாண்டு செயல்திட்டங்கள் 4) மாவட்ட பயிற்சி வகுப்புகள் செயலவை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல், உரிய நேரத்தில் வருகை தந்து சிறப்பிக்குமாறு அன்புடன் வேண்டுகிறோம். – தபசி குமரன், தலைமை நிலையச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம் 01.03.2021

தமிழின அழிப்பு செய்த சிறிலங்காவை அனைத்துலகக்குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் இயற்றுக

தமிழின அழிப்பு செய்த சிறிலங்காவை அனைத்துலகக்குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் இயற்றுக

தமிழின அழிப்பு செய்த சிறிலங்காவை அனைத்துலகக்குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்தக் கோரி தமிழ்நாடு சட்டப்பேரவையிலும் இந்திய நாடாளுமன்றத்திலும் தீர்மானம் இயற்றுக! நடந்து கொண்டிருக்கும் ஐ.நா. மாந்தவுரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடரில் அவ்வாறே தீர்மானம் நிறைவேற்ற வழிவகுத்திடுக! தமிழக, இந்திய அரசுகளுக்கு ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் கோரிக்கை ஐ.நா. மாந்தவுரிமைப் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் பிப்ரவரி 22 தொடங்கி நடந்து கொண்டிருக்கிறது. மார்ச் 23இல் கூட்டத்தொடர் நிறைவடைகிறது. சிறிலங்காவில் அனைத்துத் தமிழ்த்தேசியக் கட்சிகள், சமய அமைப்புகள், சிவில் சமூகம், குறிப்பாக வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கான சங்கம் ஆகியவை இணைந்து சனவரி 15ஆம் நாள் உறுப்பரசுகளுக்கு எழுதிய கூட்டு மடலில் நான்கு கோரிக்கைகளை முன்வைத்துள்ளன. சிறிலங்கா செய்த இன அழிப்புக் குற்றங்கள், மாந்த குலத்திற்கு எதிரானக் குற்றங்கள், போர்க்குற்றங்கள் மீதான புலனாய்வு செய்வதற்கு உள்நாட்டுப் புலனாய்வை ஏற்க முடியாதென்று அறிவித்து, அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரை செய்ய புதிய தீர்மானமொன்றை உறுப்பரசுகள் நிறைவேற்ற  வேண்டும்...

தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் வீரவணக்கம்

தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் வீரவணக்கம்

தோழர் தா.பாண்டியன் அவர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் வீரவணக்கம்.. தோழர் தா.பா முடிவெய்திவிட்டார். தா.பாண்டியன் அவர்களின் கம்பீரமான குரல் இன்று மவுனித்துவிட்டது. கடந்தகாலத் தலைமுறையில் மிக மூத்த பொதுவுடமைத் தலைவராக வாழ்ந்து மறைந்திருக்கிறார். தன்னுடைய 88 ஆவது வயதில் முழுவாழ்வு வாழ்ந்து மறைந்திருக்கிறார். கடந்த பத்து ஆண்டுகளாக சிறுநீரக தொற்றால் அவதிக்குள்ளாகி, டையாலிசிஸ் சிகிச்சையில் இருந்தார். ஆனாலும் அவர் பொது வாழ்க்கையில் இருந்து ஓய்வு எடுத்துக்கொள்ளவே இல்லை. இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு கூட கட்சியின் மாநில மாநாட்டில் கலந்து கொண்டு பேசினார். பெரியார் இயக்கம், பொதுவுடமை இயக்கம் இரண்டும் சேர்ந்து பயணிக்க வேண்டும். வர்க்க பேதம், வர்ண பேதம் இரண்டுக்கும் எதிரான ஒரு மக்கள் அணி திரட்டல் இந்த நாட்டில் உருவாக்க வேண்டும் என்று அவர் பொதுவுடமை மேடைகளிலும் பேசினார், பெரியார் இயக்க மேடைகளிலும் பேசினார். இட ஒதுக்கீட்டில் மிகுந்த நம்பிக்கை கொண்டிருந்தவர். எம்.ஜி.ஆர் ஆட்சி காலத்தில், முதன்முதலில் பிற்படுத்தப்பட்டோர்...

தோழர் பொழிலன் நூலுக்குத் தடை ! கிரிமினல் வழக்குகள் பதிவு ! திராவிடர் விடுதலைக்கழகம் கடும் கண்டனம்

தோழர் பொழிலன் நூலுக்குத் தடை ! கிரிமினல் வழக்குகள் பதிவு ! திராவிடர் விடுதலைக்கழகம் கடும் கண்டனம்

*தோழர் பொழிலன் நூலுக்குத் தடை !* கிரிமினல் வழக்குகள் பதிவு ! *திராவிடர் விடுதலைக்கழகம் கடும் கண்டனம் !* நூலின் மீதான தடையை நீக்கவும், தோழர் பொழிலன் மீதான வழக்குகளை திரும்ப பெற தமிழக அரசை வலியுறுத்தி கழக *பொதுச்செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அறிக்கை !* தோழர் பொழிலன் அவர்கள் எழுதிய வேத வெறி இந்தியா எனும் நூலுக்கு தமிழக அரசு தடை விதித்து பொழிலன் மீது பல வேறு கிரிமினல் சட்டங்களின் கீழ் குற்றச்சாட்டுகளை பதிவு செய்திருக்கிறது. தமிழ்நாட்டில் நடப்பது அஇஅதிமுக ஆட்சியா? அல்லது ஆர்எஸ்எஸ் பார்ப்பனர்களின் வேத ஆட்சியா ?என்று சொல்லுகிற அளவிற்கு மிக மிக மோசமான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறது.இது மிகச்சிறந்த ஒரு ஆய்வு நூல். வேதங்களின் காலம், வேதங்களின் உள்ளடக்கம், பழந்தமிழ் இலக்கியங்களில் வேதங்கள், சைவர்கள் வேதத்தை எதிர்த்தது ஏன் ?, ஆரியச் சார்பு ஆய்வாளர்களாக இருந்த பரிமேலழகர்,பாரதியார் சித்பவானந்தர் போன்றவர்கள் வேதம்...

இந்திய ஒன்றியம் தமிழர்களுக்கென குற்றப்பரம்பரை சட்டத்தை வைத்துள்ளதா? – திவிக தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன் காட்டம்

இந்திய ஒன்றியம் தமிழர்களுக்கென குற்றப்பரம்பரை சட்டத்தை வைத்துள்ளதா? – திவிக தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன் காட்டம்

தமிழ்நாடு நாள் விழாவை கொண்டாடியதாக தோழர் பொழிலன் உள்ளிட்ட 15 தோழர்களை சிறைப்படுத்திய தமிழ்நாடு அரசை கண்டிக்கின்றோம்! தமிழ்நாடு உருவான நவம்பர் ஒன்றாம் நாள் தமிழ்நாடு நாளாக அரசு விழா எடுத்து கொண்டாடி வரும் வேளையில், தமிழ்நாடு நாள் விழா மற்றும் தமிழ்நாட்டு கொடி ஏற்றியதற்காக தமிழக மக்கள் முன்னனியின் தலைவரும், பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான தோழர் பொழிலன், தோழர் ஜான் மண்டேலா ஆகியோர் செங்கற்பட்டு சிறையிலும் மற்றும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் தோழர்கள் (ஏசு) ச.குமார், சு.நாகேந்திரன், சு.செல்வம் மற்றும் வட சென்னையை சேர்ந்த தோழர்கள் சேகர் (MRF), ஆ.பாரத்குமார், அ.லோகநாதன், கு.பார்த்திபன், மு.சதிஷ், சு.சுரேஷ், சு.முரளி, இரா.அண்ணாதுரை, பு.சந்தோஷ், சி.வீரன் ஆகியோரை 124-A உள்ளிட்ட பல பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, பொன்னேரி சிறையிலும் சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். பாஜக- அதிமுக அரசுகளின் இந்த அடக்குமுறையை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம். ஒருபக்கம் தமிழ்நாடு நாள் விழாவை அரசு விழா என்று...

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் *தோழர் பொழிலன் உள்ளிட்ட தோழர்களை உடனே விடுதலை செய்க !*  – *கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !*

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் *தோழர் பொழிலன் உள்ளிட்ட தோழர்களை உடனே விடுதலை செய்க !* – *கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !*

பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் *தோழர் பொழிலன் உள்ளிட்ட தோழர்களை உடனே விடுதலை செய்க !* – *கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அறிக்கை !* தமிழ்நாடு மொழிவழி மாநிலமாக அமைந்த நவம்பர் முதல் நாளை தமிழ்நாடு விழாவாகக் கொண்டாட பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு முடிவு செய்திருந்தது. ஏற்கனவே தமிழ்நாடு அரசும் கடந்த ஆண்டு தனது தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 10 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு நாளைக் கொண்டாட முடிவு செய்து அரசாணை வெளியிட்டு இருந்தது. கர்நாடகம், காஷ்மீரம், ஆந்திரம் போன்ற பல மாநிலங்கள் இப்படிப்பட்ட விழாவை தங்கள் மாநிலத்திற்கு என்று தனிக்கொடி அமைத்துக்கொண்டு கொண்டாடுவதைப் போல தமிழ்நாடும் கொண்டாடவேண்டும் என்று விரும்பி அதற்கென தமிழ்நாட்டின் ‘வரைபடத்தைக் கொண்ட ஒரு தற்காலிக கொடியினையும் பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பு அறிமுகம் செய்திருந்தது. மாநில உரிமைகள் பறிக்கப்படுவதை சுட்டிக்காட்டியும், மாநிலங்களுக்கு கூடுதல் அதிகாரம் வழங்கப்படவும், தங்கள் மாநிலத்தின் சமூகம்,...

தமிழ்நாடு விழா – கொடி

தமிழ் நாட்டுக் கொடி வென்றிருக்கிறது ! பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு உருவாக்கிய தமிழ் நாட்டுக் கொடியை ஒட்டுமொத்த தமிழர்களும் அங்கீகரிப்பதற்கு முன் மத்திய உளவுத்துறையும், தமிழகக் காவல்துறையும் அங்கீகரித்து இருக்கின்றன. தமிழ்நாட்டுக் கொடி என இக் கொடியை ஏற்றுவது தமிழர்களுக்குத் தன்னுரிமை உணர்வையும், இனப் பற்றையும், ஓர்மையையும் கொடுத்துவிடும் என்று இந்த அரசுகள் அச்சப்படுகின்றன. அதனால் தான் நேற்று 30.10.2020 மாலை வரை அமைதியாக இருந்த தமிழகக் காவல்துறை தனித் தனியாக இரவோடு இரவாக பெரியாரிய உணர்வாளர் கூட்டமைப்பில் இடம் பெற்றுள்ள தோழர்களின் வீடுகளுக்கு சென்று ஒவ்வொருவரின் பெயரிலேயே தடை உத்தரவை வழங்கியிருக்கிறது. அதில் அவர்கள் தேசத்துரோகச் சட்டம் ஆன 124 ஏ பாய்ச்சப்படும் என அச்சுறுத்தியும் இருக்கிறார்கள். இதிலிருந்து நாம் நன்கு உணர்ந்து கொள்வது தமிழ் நாட்டுக் கொடியை பெரியாரிய உணர்வாளர்கள், மக்கள் மத்தியில் எளிமையாய் கொண்டு போய் சேர்த்து விடும் வலிமை உடையவர்கள் என்று காவல்துறை நன்கு உணர்ந்திருக்கிறது...

தமிழ்நாடு விழா – கழகத் தலைவர் கொளத்தூர் மணி அறிக்கை

அனைவருக்கும் வணக்கம். ஒரு சில செய்திகளை உங்கள் அனைவரின் கவனத்துக்குக் கொண்டு வருவதற்காக இவ்வறிக்கையை  எழுதுகிறோம். தமிழ்நாடு மொழிவழி மாநிலமாக அமைந்த நவம்பர் ஒன்றாம் தேதியை ‘தமிழ்நாடு விழா’வாகக் கொண்டாட வேண்டும் என்று பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு தீர்மானித்து அதன் அடிப்படையில் அதற்கான பணிகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறோம். தமிழ்நாடு அரசும், கர்நாடகம் போன்ற சில மாநிலங்களில் எழுச்சியோடு கொண்டாடுவது போல தமிழ்நாட்டிலும் கொண்டாட வேண்டும் என்று கருதி அதற்கென்று தமிழ் பண்பாட்டு துறையின் சார்பில்  தமிழ்நாடு விழா நடத்துவதற்காக 10,00, 000 ரூபாய்களை ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டிருந்தது. அவ்வரசாணையைக் குறிப்பிட்டு தமிழ்நாடு அரசுக்கு, மாநில உரிமை பற்றிய சிந்தனையோடு இவ்வாறான ஆணையை பிறப்பித்ததற்கு பாராட்டுகளைத் தெரிவித்திருந்தோம். பாராட்டு தெரிவித்தும், தமிழ்நாடு விழாவை கொண்டாடுவதற்கு ஒரு தற்காலிக கொடியினை உருவாக்கி இருக்கிறோம் என்பதையும், தமிழ்நாடு அரசு ஏதேனும் ஒரு புதிய கொடியினை அறிமுகப்படுத்தினால் அதனை ஏற்று செயல்பட அணியமாய் இருக்கிறோம் என்பதையும்...

முகநூலில் இயங்கும் பெரியார் இயக்கத் தோழர்களுக்கும்,முற்போக்கு சக்திகளுக்கும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் வேண்டுகோள் !

முகநூலில் இயங்கும் பெரியார் இயக்கத் தோழர்களுக்கும்,முற்போக்கு சக்திகளுக்கும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் வேண்டுகோள் !

முகநூலில் இயங்கும் பெரியார் இயக்கத் தோழர்களுக்கும்,முற்போக்கு சக்திகளுக்கும் திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்களின் வேண்டுகோள் ! ___________________________________ அன்பார்ந்த தோழர்களே! வணக்கம். நேற்று (22-7-2020) கோவை மாவட்டம், அன்னூரில் பெரியாரிய இயக்கத் தோழர்களும், ஜனாயக சக்திகளும் இணைந்து முன்னெடுத்த ஒரு போராட்டம், நம்மைப் போன்ற முற்போக்கு இயக்கங்களைச் சார்ந்த தோழர்களைச் சிந்திக்க வைத்திருக்கிறது. என்னதான் நடந்தது? அன்னூருக்கு அருகிலுள்ள நல்லி செட்டிப் பாளையம் எனும் ஊரைச் சேர்ந்த தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர் சண்முகநாதன் என்பவர் மோடி குறித்தும் கந்தசஷ்டிக் கவச சிக்கல் குறித்தும் முகநூலில் பதிவிட்டிருந்தார் என்பதற்காக இந்து அமைப்பினர் அன்னூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். உடனே, அன்னூர் காவல்துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு ஒன்றினைப் பதிவு செய்து 21.07. 2020 அன்று மாலை அத்தோழரைக் கைது செய்துள்ளனர். அதேவேளையில் பெரியார் குறித்து மிகக்கேவலமாக முகநூலில் பதிவுகளைப் போட்டுள்ள அன்னூர்...

இனவழிப்புக்கு நீதி கோரவும், தமிழீழ இறைமை மீட்புக்கும் பாடுபடும் புதிய அரசியல் தலைமையை வார்க்கும் களமாக இலங்கை நாடாளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்துக!

இனவழிப்புக்கு நீதி கோரவும், தமிழீழ இறைமை மீட்புக்கும் பாடுபடும் புதிய அரசியல் தலைமையை வார்க்கும் களமாக இலங்கை நாடாளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்துக!

18-7-2020 இனவழிப்புக்கு நீதி கோரவும், தமிழீழ இறைமை மீட்புக்கும் பாடுபடும் புதிய அரசியல் தலைமையை வார்க்கும் களமாக இலங்கை நாடாளுமன்றத் தேர்தலைப் பயன்படுத்துக! ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் அறிக்கை கொரோனாவின் வருகை. வரலாற்று வளர்ச்சிப் போக்கை விரைவுபடுத்தியுள்ளது. அந்த வேகத்திற்கு ஈடுகொடுக்க வேண்டியவர்களாக தமிழ் மக்களாகிய நாமும் உள்ளோம். கொரோனா ஏற்படுத்தும் அரசியல் பொருளியல் சங்கிலித் தொடர் நிகழ்வுகளால் எழப்போகும் போராட்டங்களும் கொரோனா போலவே உலகெங்கும் பரவுவது திண்ணம். மென்மேலும் மக்கள்திரளின் காலமாக எதிர்காலம் விரிகிறது. ஆயினும் அந்த மக்கள்திரளின் கருத்தை அறிவதற்குத் தேர்தல் வழியாக அந்த மக்களால் தெரிவு செய்யப்பட்ட பெயராளர்களின் கருத்தையே இன்றைய பன்னாட்டுலக அரசுகள் கோரி நிற்கின்றன. இது அரசியலில் ஒரு குடியாட்சிய மரபாக வளர்ந்து வந்திருக்கக் காண்கிறோம். ஒற்றையாட்சி அரசமைப்புக்கு உட்பட்ட நாடாளுமன்றத்திற்கான இடங்களைப் பிடிப்பதால் இலங்கைத் தீவுக்குள் ஈழத் தமிழர்களுக்கு பெரிதாக ஒன்றும் ஆகப்போவதில்லை. ஆனால், இலங்கைத் தீவுக்கு வெளியே பன்னாட்டரங்கில் தமிழர்களின் வேணவாக்களை...

கருப்பர் கூட்டத்தின் மீது பாஜக கொடுத்த வழக்கு

கருப்பர் கூட்டத்தின் மீது பாஜக கொடுத்த வழக்கு

“கருப்பர் கூட்டத்தின் மீது பாஜக கொடுத்த வழக்கு பற்றி #திராவிடர்_விடுதலைக்_கழகப் #பொதுச்செயலாளர் #விடுதலை_இராசேந்திரன்” “YouTube channel ஒன்றின் மீது, பாஜக காவல்துறையிடம் புகார் அளித்திருக்கிறது. “இந்த channel ஹிந்து கடவுள்களின் புனிதத்தை கெடுக்கிறது; கடவுள்களுக்கு பாலியல் விளக்கங்களை அளிக்கிறது; இது மதத்தின் பல்வேறு குழுக்களிடையே பகைமையை உருவாக்குகிறது” என்று அந்த புகார் கூறுகிறது. தமிழ்நாடு காவல்துறையின் cyber crime, இது குறித்து விசாரித்து, 5 பிரிவுகளின் கீழ், அந்த youtube channel மீது வழக்குகளை பதிவு செய்திருப்பதாக செய்திகள் வந்திருக்கின்றன. ஜாதி, மதம், இனம், மொழி சம்மந்தமாக விரோத உணர்வை தூண்டுகின்ற 5 பிரிவுகள் இந்த வழக்குகளாகும். உண்மையில் இந்த youtube channel என்ன செய்திருக்கிறது? ஹிந்து கடவுள்களுக்கான பல்வேறு புராணங்களில், 1. ஹிந்து கடவுள்களின் பிறப்புகள், 2. அவர்களின் அவதார மகிமைகள், 3. சடங்கு ஆச்சாரங்களுக்கு ஹிந்து புராண நூல்களில் கூறப்படுகின்ற விளக்கங்கள் இவற்றை அந்த நூல்களில் இருந்து எடுத்துக்காட்டி...

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்தும் இணையவழி கருத்தரங்குகள்

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்தும் இணையவழி கருத்தரங்குகள்

பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நடத்தும் இணையவழி கருத்தரங்குகள்… – – – – – – – – – – – – – முதல் அமர்வு – – – – – – – – – – – – – சூலை 17, 18, 19 (வெள்ளி, காரி, ஞாயிறு – மாலை 6.30 மணி முதல் இரவு 8.30 வரை) கருத்தரங்கம் 1 (சூலை 17) ————————- தலைப்பு: மநு நூலும் வேத புராண சாஸ்திரங்களும் தமிழருக்கு எதிரானவை.. தலைமை: தோழர் கோவை கு. இராமக்கிருட்டிணன் கருத்துரையாளர்கள்: பேராசிரியர் வீ அரசு தோழர் குடந்தை அரசன் தோழர் நிலவழகன் கருத்தரங்கம் 2 (சூலை 18) ————————- தலைப்பு: ஆரியப் பார்ப்பனியம் ஏன் எதிர்க்கப்பட வேண்டியது.. தலைமை: தோழர் வாலாசா வல்லவன் கருத்துரையாளர்கள்: தோழர் இரா.அதியமான் பேராசிரியர் கருணானந்தம் வழக்கறிஞர் அருள்மொழி கருத்தரங்கம் 3...

ஊடகத்துறையிலும் வகுப்புவாரி உரிமைப் போரைத் தொடங்குவோம்! #SaveJournalismfromBrahmanism

ஊடகத்துறையிலும் வகுப்புவாரி உரிமைப் போரைத் தொடங்குவோம்! தமிழ்நாட்டு வரலாற்றில் பல நூற்றாண்டுகால இடைவெளிக்குப் பிறகு பார்ப்பன ஆதிக்கத்தோடு மிகக் கடுமையான போராட்டத்தைத் தொடங்கியவர் தோழர் பெரியார். சுயமரியாதை இயக்கம், நீதிக்கட்சி, திராவிடர்கழகம் என பல இயக்கங்களின் தலைவராக இயங்கினாலும், அவரது பார்ப்பன ஆதிக்க அழிப்புப் போரின் தொடக்கம் “குடிஅரசு” எனும் ஊடகம் தான். வடநாடுகளில் பார்ப்பன ஆதிக்க அழிப்புப் போரைத் தொடங்கிய தோழர் அம்பேத்கரின் தொடக்கமும் “மூக்நாயக்” எனும் ஊடகம் ஏடுதான்.  பார்ப்பனப் பத்திரிகைகளின் நிலைபற்றிய தோழர் அம்பேத்கரின் வரிகள்…. “வெளிநாடுகளில் உள்ளவர்கள் இந்தியாவைப் பற்றிய செய்திகளைப் பார்த்தால், காங்கிரஸ் கட்சி தான் ஒட்டுமொத்த இந்திய மக்களின் பிரதிநிதியாகத் திகழ்கிறது என்று தான் எண்ணுவார்கள். தலித் மக்கள் உட்பட அனைவரின் பிரதிநிதியாக காங்கிரஸ் கட்சியைத்தான் கருதுவார்கள். இதற்கு முக்கியக் காரணம் தலித் மக்களுக்கென்று தனியாக ஒரு ஊடகம் இல்லை. காங்கிரஸின் கருத்துக்களுக்கு மாற்றான உண்மைகளை எழுத பட்டியலின மக்களிடம் பத்திரிகைகள் எதுவுமே...

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பெரியார் நூல் ஒரு பார்வை  –   மா.பொழிலன்

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பெரியார் நூல் ஒரு பார்வை – மா.பொழிலன்

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் பெரியார் நூல் ஒரு பார்வை  –   மா.பொழிலன் மா. பொழிலன்:  pozhilantamizh@gmail.com பாவலரேறு  ஐயா பெருஞ்சித்திரனார்  அவர்களின்  எழுத்தாற்றல், நூலாக்கங்கள் குறித்தெல்லாம் மணிக்கணக்காக, நாள் கணக்காகப் பேசிக் கொண்டிருக்கவும், எழுதிடவும் இயலும். அதே போல் மறு அச்சாக்கம் செய்யப்பெற்று அண்மையில் வெளிவந்துள்ள ஐயா அவர்களின் நான்கு நூல்களுள் செயலும் செயல் திறனும், ஓ…ஓ.. தமிழர்களே!, சாதி ஒழிப்பு  குறித்தெல்லாம் விரிவாக, அறிந்திட ஏராளமான செய்திகள் உள்ளன. இந்நிலையில், ஐயா அவர்கள் ‘பெரியார்’ குறித்து எழுதிய கட்டுரைகள், பாடல்களின் தொகுப்பாகவே இந்நூல் வெளி வந்துள்ளது. அண்மையில் பெரியார்  படத்தைத் தீயிட்டுக் கொளுத்தவும், அவர் படத்தின் மீது சிறுநீர் பெய்து இழிவுபடுத்தியதுமான நிகழ்வுகள் நடைபெற்ற சூழலில் பெரியார் குறித்து அறிய வேண்டுவதும், ஆய்வு செய்ய வேண்டுவதும், இன்றியமையாததாகவே எண்ணுகிறோம். பெரியாரின் படத்தைச் சில நாள்களுக்கு முன்னர் எரித்தவர்கள் ஆரியப் பார்ப்பனர்களோ வைதீகக் கருத்துடைய வர்களோ மட்டும் அல்லர்; தமிழ்த்தேசம் தேவை என்பதாகக்...

பெரியார் என்ன பெருங்கேடரா….?  – தென்மொழிச் செல்வன் கொழுமம் ஆதி

பெரியார் என்ன பெருங்கேடரா….? – தென்மொழிச் செல்வன் கொழுமம் ஆதி

பெரியார் என்ன பெருங்கேடரா….?                                                    – தென்மொழிச் செல்வன் கொழுமம் ஆதி கடந்த மார்ச்சுத் திங்களில் சென்னையில் நிகழ்ந்த பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கனிச்சாறு பாடல்தொகுப்பு வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டேன். அங்கு நிகழ்வரங்கின் நுழைவாயிலில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த நூல்களுள் நாம் வெளியிட்ட தூயதமிழ்ப்பெயர்கள் – நூலினையும் விற்பனைக்கு வைத்திருந்தோம்.  மேற்பார்வைக்கு எம்முடன் வந்த சிறுவன் ஒருவனை அமர்த்தியிருந்தேன்.  அந்தத் தூயதமிழ்ப் பெயர்கள் நூலின் முன்அட்டையில் திருவள்ளுவர் படமும் பின்அட்டையில் பாவாணர், பாவேந்தர், பாவலரேறு படங்களுடன் பகுத்தறிவுத் தந்தை பெரியாரின் படமும் அச்சிட்டிருந்தோம்.  அந்த நூலைப் பார்த்த தோழர் ஒருவர், அதிலிருந்த பெரியாரின் படத்தைப் பார்த்து, “இவனைப் போட்டிருப்பதால் தான் இதை வாங்க யோசிக்கிறேன்…” என்றாராம்.  நிகழ்வின் இறுதியில் நாங்கள் புறப்படும்போதுதான் இதை அந்தச் சிறுவன் எங்களிடம்...

திவிக தலைமைக் குழு கூட்டம் 30062020

திவிக தலைமைக் குழு கூட்டம் 30062020

*திராவிடர் விடுதலைக் கழக தலைமைக்குழு தீர்மானங்கள் :* திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமைக்குழுக் கூட்டம் 30.06.2020 செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணியளவில் டீம் லிங்க் செயலி வழியாக நடைபெற்றது. தலைமைக் குழுக் கூட்டத்திற்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் தோழர் விடுதலை க.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். தலைமைக் குழுக் கூட்டத்தில் அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, பரப்புரைச் செயலாளர் பால்.பிரபாகரன், தலைமை நிலையச் செயலாளர் தபசி.குமரன், அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் சிவகாமி, இணையதள பொறுப்பாளர் விஜயகுமார், முகநூல் பொறுப்பாளர் பரிமளராஜன், அன்பு தனசேகர், சூலூர் பன்னீர்செல்வம், உமாபதி, மடத்துக்குளம் மோகன், அய்யனார், இளையராஜா, காவலாண்டியூர் ஈஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். தலைமைக் குழுக் கூட்டம் காலை 10.30 மணி அளவில் துவங்கி மதியம் 2 30 மணி வரை நடைபெற்றது. கழக அமைப்பின் இணையதள செயல்பாடுகள், கருத்தரங்குகள், கொரோனா பேரிடர் காலத்தில்...

இணைய வழி தொடர் கருத்தரங்கம்

திராவிடர் விடுதலைக் கழகத்தின் இணைய வழி தொடர் கருத்தரங்கம் நேரம் : மாலை 6:30 மணிக்கு தமிழ்நாடு மாணவர் கழக தோழர்களின் அறிமுக உரையோடு பல்வேறு இயக்க தலைவர்களின் கருத்துரைகள் திராவிடர் விடுதலைக் கழக முகநூல் பக்கத்திலும் facebook.com/dvk12 யூ ட்யூப் பக்கத்திலும் youtube.com/dvkperiyar நேரலையில் காணலாம் தோழர்கள் அனைவரும் தவறாது கலந்துக்கொள்ளவும். திவிக இணைய தள பிரிவு

ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கங்களும் 3 – கொளத்தூர் மணி

ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கங்களும் 3 – கொளத்தூர் மணி

திமுக பங்கு முந்தைய கட்டுரை படிக்க தி.மு.கவின் பங்கும் குறைந்ததல்ல. 22.9.1981 அன்று நடைபெற்ற ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான இலங்கைத் தூதரக முற்றுகைப் போரில் ஏராளமானோர் சிறைப்பட்டனர். திராவிடர் கழகம் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் ஒருங்கிணைத்து, சிறைப்படுத்தப்பட்டவர்களை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையோடு மிகப்பெரிய பொதுக் கூட்டத்தினை சில நாட்களில் நடத்தியது. ஈழப் போராளித் தலைவர்கள் குட்டிமணி, செகன், தங்கதுரை ஆகியோர் சிங்கள அரசால் தூக்கிலிடப்பட்டதைக் கண்டித்து, 28.8.1982ஆம் நாளை ஈழத்தமிழர் பாதுகாப்பு நாளாக அறிவித்து, அனைவரையும் கருப்புப் பட்டை அணிய வலியுறுத்தியதோடு தமிழ்நாடு முழுதும் கண்டனக் கூட்டங்களை தி.மு.க நடத்தியது. திராவிடர் கழகத்தினரும் இணைந்து அக்கூட்டங்களை நடத்தினர். பாண்டியனார் சந்தை (பசார்) வழக்கு போன்ற அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெறுமாறும், இலங்கை அரசு கேட்டிருந்தவாறு போராளித் தலைவர்களை இலங்கை அரசிடம் ஒப்படைக்கக் கூடாது போன்ற முடிவுகள் திராவிடர் கழகத்தால் 18.6.83 அன்று கூட்டப்பட்ட அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடி வெடுக்கப்பட்டு, 2.7.1983...

ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கங்களும் 2 – கொளத்தூர் மணி

உள்நுழையும் முன் முன்னுரை படிக்க தமிழ்நாட்டில் இருந்து பிழைப்பு தேடி, இலங்கை மலையக இரப்பர் தோட்டங்களுக்கு வேலைக்குப் போய், கொத்தடிமைகளாய் உழன்று வந்தனர், ‘இந்திய வம்சாவழித் தமிழர்கள்’. அம்மலையகத் தமிழர்களின் வாக்கு உரிமை பறிப்பு, குடியுரிமை நீக்கம் 1940களின் இறுதியில் நிகழ்ந்தது. அப்போது அம்மக்களுக்கு ஆதரவான குரல்கள் தமிழ்நாட்டில் எழுந்தன. அம் மக்களின் நிலை குறித்து விரிவான கட்டுரைகளும் செய்தித் தாள்களின் முதன்மைச் செய்திகளும் நூல்களும் வெளிவந்தன. அரசியல் அமைப்புகள் மாநாட்டுத் தீர்மானங்களாகவும், செயற்குழு தீர்மானங்களாகவும் அம் மக்களுக்கான ஆதரவைத் தெரிவித்தன. தமிழக, இந்திய ஒன்றிய அரசுகளை அம்மக்களுக்கு ஆதரவாக செயலாற்றத் தூண்டின. அவற்றை செய்தவை திராவிடர் கழகமும், அப்போது புதிதாய் தோன்றியிருந்த திராவிடர் முன்னேற்றக் கழகமுமே ஆகும். ஈழக் கோரிக்கையை ஆதரித்து அதைத் தொடர்ந்து 1970களின் பிற்பகுதியில் எழுந்த தனித்தமிழ் ஈழக் கோரிக்கையை ஆதரித்து குரல் கொடுத்தவையும் இவ்விரு கழகங்களேயாகும். ஈழத்தமிழர்களின் அறவழிப் போராட்டங்கள் எல்லாம் அரசுப் படைகளால் அடித்துத்...

உடுமலை சங்கர் கொலை வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கடும் அதிர்ச்சி அளிக்கிறது! – திவிக அறிக்கை

உடுமலை சங்கர் கொலை வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கடும் அதிர்ச்சி அளிக்கிறது! – திவிக அறிக்கை

உடுமலை சங்கர் கொலை வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு கடும் அதிர்ச்சி அளிக்கிறது! ஜாதி ஆணவப்படுகொலை செய்பவர்களுக்கு இத்தீர்ப்பு துணிச்சலைக் கொடுத்துவிடுமோ என்கிற அச்சம் எழுகிறது! திராவிடர் விடுதலைக் கழக அறிக்கை : 2016 மார்ச் 13 அன்று ஜாதி மறுப்புத் திருமணம் செய்தார் என்கின்ற ஒரே காரணத்திற்காக உடுமலையில் பட்டப்பகலில் நடுவீதியில் சங்கர் மிகக் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவர் பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர். அவர் காதலித்து திருமணம் செய்த கௌசல்யா பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சார்ந்தவர். அதனால் பிற்படுத்தப்பட்ட ஜாதி வெறியர்கள் பட்டியல் சமூகத்தை சேர்ந்த சங்கரைப் படுகொலை செய்தனர் என்பது தான் இந்த படுகொலைக்கும் கௌசல்யா மீதான கொடூர கொலை முயற்சி தாக்குதலுக்கும் அடிப்படையான காரணம். இது கொலை வழக்கு மட்டுமல்ல கொலை செய்யும் நோக்கில் கொடுங்காயம் ஏற்படுத்திய கொலை முயற்சி வழக்கும் கூட. இதற்கு ஜாதிய ஏற்றதாழ்வுகள் மட்டுமே காரணம். சங்கரைப் படுகொலை செய்யும்...

ஈழ விடுதலையும் திராவிடர் இயக்கங்களும் – கொளத்தூர் மணி

முன்னுரை தமிழ்நாட்டில் ஏறத்தாழ எல்லோருடைய உணர்வுகளும் ஈழத்துக்கும், ஈழ விடுதலைக்கும் ஆதரவானவைகளாக உள்ளன. ஆனால் செயல்தளத்தில், ஈழ ஆதரவு செயல்பாடுகளில் அவ்வாறு கூறிவிட முடியாது. மற்றொரு பக்கம், ஈழ ஆதரவு என்பதை, சொற்களால் பெரும் உணர்ச்சிகளை வெளிப்படுத்துபவர்களில் பெரும்பாலானோர் செயல்பாட்டுத் தளத்துக்கு வந்ததில்லை. ஈழத்தில் 2009 மே திங்களில் நடந்து முடிந்த கடைசிக் கட்டப் போரில் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராகவும், ஈழத்தின் அப்பாவித் தமிழ் மக்களை அழித்தொழித்தும் வெறியாட்டம் ஆடிய இலங்கை அரசுக்கு, இந்திய காங்கிரசு அரசு ஆயுதம், ஆளணி, உளவு, தொழில்நுட்ப உதவிகள் என முழுமையாய்த் துணை நின்றது. அவ்வரசின் கூட்டாளியாக இருந்த தி.மு.க. தன்னல நோக்கில் அமைதி காத்தும், தமிழ்நாட்டில் தன்னெழுச்சியாய் நடந்த ஈழ ஆதரவுப் போராட்டங்களைத் தந்திரமான பட்டினிப் போர், பகட்டுப் பேச்சுக்களாலும் – கூர்மழுங்கவும் செய்தது. உள்ளுக்குள் உறைந்து கிடந்த விடுதலைப் புலிகள் மீதான பகையுணர்வு அவ்வாறு வெளிப்பட்டது. அது அந்தக் கட்சியில் பெரும்பான்மையாக...

ஜெ.அன்பழகன் மறைவு ! திராவிடர் விடுதலைக் கழகம் ஆழ்ந்த இரங்கல் !

ஜெ.அன்பழகன் மறைவு ! திராவிடர் விடுதலைக் கழகம் ஆழ்ந்த இரங்கல் !

ஜெ.அன்பழகன் மறைவு ! திராவிடர் விடுதலைக் கழகம் ஆழ்ந்த இரங்கல் ! மக்கள் பணியில் உயிர்நீத்த திமுக சட்டமன்ற உறுப்பினர் ஜெ.அன்பழகன் அவர்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் அளித்துள்ள இரங்கல் செய்தி : திராவிட முன்னேற்ற கழகத்தின் சட்டமன்ற உறுப்பினரும் அக்கட்சியின் சென்னை மாவட்டச் செயலாளர்களில் ஒருவருமான ஜெ.அன்பழகன் இன்று மரணமடைந்துவிட்டார்.கொரானோ தொற்றுக்கு பலியாகி இருக்கிறார். கடந்த சில வாரங்களாக கட்சியின் தலைமை ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உணவுப் பொருள்களை வழங்குகிற உதவிகளை செய்துவந்தது. “ஒன்றிணைவோம் வா” என்ற பெயரில் செயல்பட்ட அத்திட்டத்தில் தீவிரமாக பங்கேற்று செயலாற்றி வந்தார் ஜெ.அன்பழகன். 1995ம் ஆண்டு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டவர் அவர். மருத்துவர்கள் ஆலோசனையை மீறி பொது தொண்டாற்ற வந்தார் அவர். பொதுத்தொண்டின் வழியாக கிடைக்கின்ற மரணம் என்பது உண்மையிலேயே பெருமைக்குரிய மரணம்தான். இந்த மரணம் அவருக்கும்...

விகடன் பத்திரிக்கை குழுமத்தில் 170 தொழிலாளர்கள் பணி நீக்கம் – கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் கடும் கண்டனம்

விகடன் பத்திரிக்கை குழுமத்தில் 170 தொழிலாளர்கள் பணி நீக்கம் – கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன் கடும் கண்டனம்

விகடன் பத்திரிக்கை குழுமத்தில் 170 தொழிலாளர்கள் பணி நீக்கம், திராவிடர்விடுதலைக் கழகம் கடும் கண்டனம். இந்த சட்டவிரோத, தொழிலாளர் விரோத நடவடிக்கைக்கு எதிரான போராட்டங்களுக்கு திவிக முழு ஆதரவு ! இது குறித்து திராவிடர் விடுதலைக் கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராஜேந்திரன் அவர்கள் விடுத்துள்ள அறிக்கை : விகடன் பத்திரிக்கை குழுமம் 170 தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்யப் போவதாக ஒரு செய்தி வந்திருக்கிறது. கொரோனா காலத்தில் வாழ்க்கை போராட்டம் நடத்திக் கொண்டிருக்கின்ற தொழிலாளர்களுக்கு இப்படி ஒரு பேரதிர்ச்சியை விகடன் குழு கொடுப்பது வன்மையான கண்டனத்திற்கு உரியது. 1947ம் ஆண்டு தொழில் தகராறு சட்டப்படி இது சட்ட விரோத நடவடிக்கையாகும். கடந்த மார்ச் மாதம் மத்திய அரசு பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மாநில அரசுகளுக்கு ஒரு தாக்கீதை பிறப்பித்திருந்தது இந்த ஊரடங்கு காலத்தில் எந்த ஒரு நிறுவனமும் தொழிலாளர்களுக்கு சம்பளம் தராமல் இருக்கக் கூடாது என்பதோடு அவர்களை...

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல போதிய இரயில்களை உடனடியாக ஏற்பாடு செய்க!

புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல போதிய இரயில்களை உடனடியாக ஏற்பாடு செய்க!

“புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்குச் செல்ல போதிய இரயில்களை உடனடியாக ஏற்பாடு செய்க!” – கூட்டறிக்கை – 16.05.2020 புலம்பெயர்தொழிலாளர்களைக் கொத்தடிமைகளாக நடத்தக் கூடாது! சொந்த மாநிலங்களுக்குச் செல்ல போதிய இரயில்களை உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும்! தொழிலாளர்கள் நடந்து செல்லும் அவலத்தை ஏற்படுத்தக் கூடாது! சனநாயக ஆற்றல்கள், இயக்கங்கள்,கட்சிகளின் கூட்டறிக்கை! பிரதமர் மோடி தலைமையிலான நடுவண் அரசின் திட்டமிடப்படாத ஊரடங்கு அறிவிப்பால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் சிக்கியுள்ள இலட்சக்கணக்கான புலம்பெயர் தொழிலாளர்கள் சொல்லொணா துயரத்தில் தள்ளப்பட்டுள்ளனர்.கடந்த 50 நாட்களாக அவர்கள் கைக்குழந்தைகளுடன் வெறுங்கால்களிலும் சொந்த ஊர் நோக்கி நடந்தே செல்லும் காட்சிகளைப் பார்த்து வருகிறோம். கொரோனா பேரிடரின் போதும் பெருமுதலாளிகளுக்கு 68,000 கோடி கடனைத் தள்ளுபடி செய்யும் நடுவண் அரசு, புலம்பெயர் தொழிலாளர்களுக்கு சொந்த ஊர் செல்வதற்கு போக்குவரத்தைக்கூட ஏற்பாடு செய்யாமல் மிக மோசமாக புறக்கணித்தது. முதல்சுற்று ஊரடங்கு அறிவிப்பின்போதே தேசிய நெடுஞ்சாலைகளில் நடந்தே செல்லும் தொழிலாளர்களைக் காப்பாற்ற நடவடிக்கை...

காவி நிறக் குட்டிக்கு பாலும்  கருஞ் சாந்துநிறக் குட்டிக்கு காலும்.!  உச்சநீதிமன்றத்தில் மறுக்கப்படும் சமூக நீதி

காவி நிறக் குட்டிக்கு பாலும் கருஞ் சாந்துநிறக் குட்டிக்கு காலும்.! உச்சநீதிமன்றத்தில் மறுக்கப்படும் சமூக நீதி

காவி நிறக் குட்டிக்கு பாலும் கருஞ் சாந்துநிறக் குட்டிக்கு காலும்.! உச்சநீதிமன்றத்தில் மறுக்கப்படும் சமூக நீதி உச்சநீதிமன்றம் இந்திய அரசியல் சட்டத்தில் மிக முக்கிய அங்கம்.அரசியலமைப்புச் சட்டம் அதன் பாதையில் பயணிக்கின்றதா எனக் கண்காணிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் காவல் நாயாக விளங்கும் மக்களாட்சியின் மூன்று பெரிய தூண்களில் ஒன்று. ஆனால் இன்று அந்த  தூண் கறையான் அரித்து உளுத்துப் போனதற்கு சமூக நீதி என்ற பாதுகாப்பு இல்லாததே முக்கிய காரணம். உச்ச நீதிமன்றம் ஏழைகளுக்கு எட்டாத எட்டிக்காயாகவும் அங்கு கட்சிக்காரர்களைப் பொறுத்தும் வழக்கறிஞர்களுக்கு ஏற்பவும்  தீர்ப்புகளும் வழங்கப்படுகின்றன என பொதுமக்கள் நம்பிக்கை இழந்ததற்கும் அதுவே காரணம். மெட்றாஸ் உயர்நீதிமன்ற நீதிபதியாக விசாரணை நீதிபதி பதவியில் இருந்து உயர்வு பெற்ற  தமிழகத்தைச் சேர்ந்த  திருமிகு ஏ. வரதராஜன் பின்னர் 10.12.1980 அன்று திருமதி இந்திரா காந்தி அமைச்சரவையில்  ஆந்திராவைச் சேர்ந்த துணிச்சலான திருமிகு பி.சிவசங்கர் அவர்கள்  சட்ட அமைச்சராக இருந்தபோது உச்ச நீதிமன்ற...