தேர்தலை முன்னிட்டு பெரியார் சிலையை மூடும் எண்ணம் இல்லை – தேர்தல் ஆணையம்

”தேர்தலை முன்னிட்டு பெரியார் சிலையை மூடும் எண்ணம் இல்லை”
ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தகவல். (11.13.2016)
(தினத்தந்தி செய்தி)
சென்னை, மார்ச்.12
தேர்தலை முன்னிட்டு தமிழகம் முழுவதுமுள்ள பெரியார் சிலைகளை மூடும் எண்ணம் இல்லை என்று ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
திராவிடர் விடுதலை கழகத்தின் அமைப்பு செயலாளர் ரத்தினசாமி. இவர், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
”மூடநம்பிக்கை சமுதாயத்தில் உள்ள சாதி வேற்றுமையை ஒழித்து, பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பாடுபட்டவர் தந்தை பெரியார். இவர், மூடநம்பிக்கை எதிராக கடுமையாக போராடியவர். பெரியாரின் கொள்கையை எங்கள் அமைப்பு மக்களுக்கு எடுத்துக்கூறி வருகிறது. இந்த நிலையில், தமிழக சட்டமன்றத்துக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. கோவையில் உள்ள தேர்தல் அதிகாரிகள், எங்கள் அமைப்பின் நிர்வாகிகளிடம் வந்து தந்தை பெரியாரின் திருவுருவ சிலையை துணிகளை கட்டி மூடவேண்டும். திராவிடர் விடுதலை கழகத்தின் கொடிகளை பறக்க விடக்கூடாது என்று கடந்த 5-ந்தேதி உத்தரவிட்டுள்ளனர்.
சீர்திருத்தவாதி எங்களது இயக்கம், அரசியல் கட்சி கிடையாது. தேர்தலிலும் போட்டியிடவில்லை. அதேபோல, தந்தை பெரியார் அரசியல் தலைவர் இல்லை. அவர் சமூக சீர்திருத்தவாதி.கடந்த முறை தேர்தலின்போது, பெரியாரின் சிலைகள் இதுபோல் மூடவேண்டும் என்று அதிகாரிகள் கூறியபோது, ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தோம். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு பெரியாரின் சிலையை மறைக்க தேவையில்லை என்று உத்தரவிட்டுள்ளது. இந்த தீர்ப்பு விவரங்களை, கோவை தேர்தல் அதிகாரிகளிடம் எடுத்துக்கூறியும், அவர்கள் பெரியாரின் சிலையை துணியால் கட்டி மறைத்துவிட்டனர். மறைக்கக்கூடாது எனவே, தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் உள்ள பெரியார் சிலையை மறைக்க கூடாது என்று தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடவேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த மனு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், எஸ்.விமலா ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் வக்கீல் டி.அருண், தேர்தல் ஆணையத்தின் சார்பில் வக்கீல் நிரஞ்சன் ஆகியோர் ஆஜராகி வாதிட்டனர். இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:-
எண்ணம் இல்லைதேர்தல் ஆணையத்தின் சார்பில் ஆஜரான வக்கீல், தந்தை பெரியாரின் சிலையை மறைக்கும் எண்ணம் தேர்தல் ஆணையத்திடம் இல்லை என்றார். இதற்கு அர்த்தம் என்ன அர்த்தம் என்றால்? மாநிலம் முழுவதுமுள்ள பெரியாரின் சிலைகள் மறைக்கப்படாது என்பதாகும். மேலும், கொடியை பொருத்தவரை, தேர்தல் ஆணையத்திடம் மனுதாரர் கோரிக்கை மனு கொடுக்கவேண்டும். அந்த மனுவை தேர்தல் ஆணையம் விரைவாக பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்கவேண்டும். இந்த மனுவை முடித்துவைக்கிறோம்.
இவ்வாறு நீதிபதிகள் கூறியுள்ளனர்.
நீதி மன்ற உத்தரவு நகல்களும்
செய்தித்தாள்களின் செய்திகளும் இணைக்கப்பட்டுள்ளன:
court ec 1 court ec2

You may also like...