Category: குடி அரசு 1931

நவஜவான் தொண்டரும் தலைவரும் 0

நவஜவான் தொண்டரும் தலைவரும்

நவஜவான் பாரத வீரர்கள் ‘காந்தி ஒழிக’ என்று சொல்லி தடுத்து நன்றாய் அடிப்பட்ட சேதி ஒரு பக்கம் இருக்க, நவஜவான் பாரத வீரர் சபை தலைவரான திரு. சுபாஸ் சந்திரபோஸ் அவர்கள் திரு. காந்தி வட்ட மேஜை மகாநாட்டுக்குப் போவதைப் பற்றி தங்களது திருப்தியையும் தாங்கள் திரு. காந்தியவர்களையே பின்பற்றி வருவதாகவும் உறுதிகூறி தந்தி அடித்திருக்கின்றார். (இது 29.8.31 தமிழ்நாட்டு பத்திரிகையில் இருக்கிறது.) இதிலிருந்து பாரத நவஜவான் சபை கொள்கைகளின் யோக்கியதையும் தலைவர்களின் யோக்கியதையும் விளங்குகின்றது. நவஜவான் பாரத வீரர்கள் என்று சொல்லிக்கொள்ளும் வாலிபர்கள் கவனிக்கத் தக்கதாகும். குடி அரசு – செய்திக் குறிப்பு – 06.09.1931

காந்திஜீ 0

காந்திஜீ

திரு காந்திஜீ அவர்களோ உலகம் தோன்றியது முதல் காணப்படாத வேடிக்கை மனிதராக இருந்து வருகின்றார். அதாவது தான் அரை வேஷ்டி கட்டி இருப்பதற்குக் காரணம் உலக மக்களுக்குத் தேவையான துணி கிடையாதாம்! ஆதலால் சிக்கனத்தை உத்தேசித்து அரை வேஷ்டியுடன் இருக்கின்றாராம்!! இதை உலகம் ஒப்புக்கொண்டு அவரை சபர்மதி ரிஷி என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள் நமது அரசியல் பாகவதர்கள். ஆனால் நம் நாட்டுமக்களில் அநேகருக்குக் கஞ்சிக்கே மார்க்கமில்லாமலி ருக்கும் போது ஆட்டுப்பாலும், ஆரஞ்சிப்பழரசமும் சாப்பிடுவது கவலைப் படக்கூடியதல்லவாம்! அது எப்படியோ போகட்டும். இதற்காக நாம் அவரை அவருக்குப் பிடிக்காத உணவை சாப்பிடச் சொல்லவில்லை. காந்திஜீ அவர்கள் தனது காலுக்குச் செருப்பு போட்டுக்கொள்ள வேண்டிய தற்காக தானாகவே செத்த மாட்டுத்தோலொன்றை கையில் கொண்டு போகின் றாராம்! ‘என்ன ஜீவகாருன்யம்!’ என்பதை நினைத்துப் பாருங்கள். உலகி லுள்ள 175 கோடி மக்களில் வேறு யாருக்காவது இந்த எண்ணம் தோன் றுமா? என்று பாருங்கள். சமணர்களுக்குக் கூட...

மாளவியாஜீ 0

மாளவியாஜீ

சேர்மாதேவி குருகுல சம்பந்தமாய் தூத்துக்குடி டி.ஆர். மகாதேவய் யர் என்கின்ற பார்ப்பனரை 100க்கு 90 பார்ப்பனரல்லாதார் நமது நாட்டில் குற்றம் சொன்னார்கள்-சொல்லுகின்றார்கள். இதனாலேயே அவரை அரசியல் உலகத்தை விட்டு ஓட்டியும் விட்டார்கள். அவரும் தனக்கும் அரசியலுக்கும் தகுதியில்லை என்று கருதி வாழ்க்கைக்கு வேறு வழியையும் தேடிக் கொண்டார். இதற்கெல்லாம் காரணம் என்ன? “பார்ப்பனன் சாப்பிடுவதை பார்ப்பனரல்லாதவன் பார்க்கக் கூடாது. பார்ப்பனனும் மற்றவனும் சமபந்தியாய் உட்காரக்கூடாது” என்று அவர் சொன்னதேயாகும். ஆனால் பண்டிதர் மதன்மோகன் மாளவியாஜீ அவர்கள் எந்த விதத்தில் திரு.மகா தேவய்யரைவிட  மேலானவர்? அரசியல் உலகத்திலிருக்கத் தகுந்தவர்? என்று கேட்கின்றோம். மகாதேவய்யராவது தன்னைப் பொறுத்தவரை நம் எதிரில் சாப்பிட்டார் – நம்முடன் உட்கார்ந்து சாப்பிட்டுமிருக்கிறார். மாளவியாஜீ  அவர்களோ, “கீழ்ஜாதிக்காரர்கள் கோயிலுக்குள் போகக் கூடாது” என்றும், “அவர்களுக்கு வேறு இடம் வேறு கோவில், வேறு பள்ளிக்கூடங்கள் இருக்க வேண்டும்” என்றும் சொல்லுகிறார். தனது சம்மந்தி பார்ப்பனரல்லாதவனிடம் உட்கார்ந்து சாப்பிட்ட வனிடம் உட்கார்ந்து சாப்பிட்டதற்கு ...

சத்தியாக்கிரகம் 0

சத்தியாக்கிரகம்

“சுயமரியாதை இயக்கமானது எவ்வித சத்தியாக்கிரகமும் செய்ய வில்லை” என்பது இன்றைய தினம் அதன் மீது துவேசமும், பொறாமையும் கொண்டவர்களால் சொல்லப்படும் ஒரு பெரிய குற்றமாகும். மற்றபடி அதன் கொள்கைகளைப் பற்றி யாரும் இதுவரை எவ்விதக் குற்றமும் சொல்லவில்லை. அன்றியும் இந்த மேற்கண்ட குற்றத்தை மனதில் வைத்துக்கொண்டுதான் “சுயமரியாதை இயக்கம் இதுவரை என்ன சாதித்துவிட்டது?” என்பதாகவும் சிலர் நம்மைக் கேட்கின்றார்கள். சுயமரியாதை இயக்கம் “சத்தியாக்கிரகம்” என்பதாக ஒரு கிளர்ச்சியை ஆரம்பித்து, சில வாலிபர்களைச் சேர்த்து அவர்களுக்கு சாப் பாடும் விளம்பரமும் கொடுத்து, ஏதோ இரண்டொரு கோவில்களின் முன்போ, அல்லது குளங்களின் முன்போ கொண்டுபோய் நிறுத்தி, அவ் வாலிபர்களுக்கு கொஞ்சம் அடியும் உதையும் வசவும் வாங்கிக்கொடுத்து, ஜெயிலுக்கும் சிலரை அனுப்பி, அதற்குத் தகுந்த விளம்பரங்களும் பாராட்டுக் கூட்டங்களும் போட்டு ஆடம்பரங்கள் செய்வதுமான காரியங் களைச் செய்திருக்குமேயானால் அந்தக் காரியங்களால் நமது லட்சியம் வெற்றி பெற்றாலும்-பெறாவிட்டாலும் லட்சியத்திற்கே முட்டுக்கட்டையாக இருந்தாலும்கூட, சிறிதும் கவலை இல்லாமல் “சுயமரியாதை...

திருச்சங்கோட்டில்                         உபன்யாசம் 0

திருச்சங்கோட்டில்                         உபன்யாசம்

நான் இங்கு இப்படி ஒரு கூட்டத்தில் பேசவேண்டியிருக்கும் என்று கருதவேயில்லை. ஜமீன்தாரர் (டாக்டர் சுப்பராயன்) அவர்கள் ஒரு காரியமாய் என்னை இங்கு வரவேண்டுமென்று 10, 15 நாட்களுக்கு முன்னமே எழுதியதை உத்தேசித்து அவர்களைக் காண நான் வந்தேன். சற்று முன்புதான் இங்கு ஒரு மீட்டிங்கு கூட்டப்பட்டிருப்பதை அறிந்தேன். இக்கூட்டம் ஜமீன்தாரர் அவர்களையும் திரு. கண்ணப்பர் அவர்களையும் உத்தேசித்தே கூட்டப்பட்டது என்பதையும் அறிந்தேன். இதில் நான் பேசுவது என்பது அசௌகரியமான காரியம் என்றாலும் நண்பர் நடேச முதலியார் அவர்கள் சொல்லையும் ஜமீன்தாரர் அவர்கள் சொல்லையும் தட்ட முடியாமல் ஏதோ சிறிது பேச வேண்டியவனாக இருக்கிறேன். இன்று பேசவேண்டிய விஷயம் “தற்கால இராஜ்ய நிலைமை” என்பதாக நோட்டீ சில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. நானோ இராஜிய திட்ட சம்பந்தமான விஷயங்களில் மாறுபட்ட ஒரு அபிப்பிராயம் கொண்டிருப்பவன். இராஜிய துறையில் சிறிதுகாலம் இருந்து பார்த்துவிட்டு அதன் கொள்கைகளில் அதிருப்தி கொண்டு வெளியேறி என் சொந்த இஷ்டப்படி சமூகத்துறையில் வேலை...

சுயமரியாதைக்காரனுக்கும் புராணமரியாதைக்காரனுக்கும் சம்பாஷணை                                                                                                                          – சித்திரபுத்திரன் 0

சுயமரியாதைக்காரனுக்கும் புராணமரியாதைக்காரனுக்கும் சம்பாஷணை                                                                                                                         – சித்திரபுத்திரன்

  சுயமரியாதைக்காரன்:-      வாருங்கள் ஐயா புராணமரியாதைக் காரரே! வெகுநாளாய்க்காணோமே,        எங்கு சென்றிருந்தீர்கள்? புராண மரியாதைக்காரன்:- எனது வயிற்றுக் கொடுமை தான் உமக்குத் தெரியுமே! புராணக் காலnக்ஷபம் செய்யப் போயிருந்தேன். சு-ம:-          அப்படியா? உங்கள் புராணக் காலnக்ஷபம் சரியாய் நடக் கின்றதா? ஜனங்கள் முன்போல் புராணங்களை மரியாதை செய்து கேட்கின் றார்களா? பு-ம:-அதை ஏன் கேட்கின்றீர்கள்? வரவர புராணம் என்றாலே மக்களுக்கு ஒருவித வெறுப்பு ஏற்பட்டுவிட்டது. நம்மை யாரும் லட்சியம் செய்வதே கிடையாது. சு-ம:-ஏன் அப்படிச் சொல்லுகிறீர்கள்? புராணங்கள் எல்லாம் பகவான்கள், ரிஷிகள், பரமசிவன், மகாவிஷ்ணு முதலியவர் வாக்கு என்ப தாக இருக்கும்போது புராணங்களுக்கு மரியாதைப் போய் விட்டது என்பது அதிசயமாகவல்லவா இருக்கிறது? பு-ம:- என்னைப் பரிகாசம் செய்கின்றீர்களா? என்ன? நீங்கள் போடு கின்றபோடுதான் நாட்டையே பாழாக்கி விட்டதே. நம்மைக் கண்டால் பையன்கள் கல்லெடுத்துப்போடுகின்றார்கள்? “ரிஷிகள் சொன்னார், பக வான் சொன்னார்” என்றால் “உனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்...

முஸ்லீம்கள் பிரச்சினை 0

முஸ்லீம்கள் பிரச்சினை

தனித்தொகுதிக்கு ஜனாப் ஜமால் மகமது ஆதரவு சென்னையில் பிரபல வியாபாரியும், இந்திய தோல் அரசரும் (ஐனேயை டுநயவாநச முiபே) முஸ்லீம் சமூக பிரமுகருமான திரு. ஜமால் மகமது சாயபு அவர்கள் தலைச்சேரி மாப்பிள்ளை முஸ்லீம்கள் மகாநாட்டில் தலைமை வகித்துப் பேசியதில் “ஸ்தானங்கள் ஒதுக்கி வைக்கப்பட்ட கூட்டுத் தொகுதி நல்லதானாலும் பல காரணங்களால் சென்னை முஸ்லீம்கள் செய்துள்ள தனித்தொகுதித் திட்டத்தைத் தான் ஆதரிப்பதாகவும் எல்லா முஸ்லீம் களும் ஆதரிக்கவேண்டு”மென்றும் சொல்லி இருக்கிறார். ஆகவே, தனித்தொகுதிக்கு எந்த முஸ்லீம் பிரமுகர் விரோதமாக இருக்கின்றார் என்பதை விளக்க வேண்டியது தேசீய முஸ்லீம்கள் என்பவர் களின் கடமையாகவும் தேசீய இந்துக்கள் என்பவர்களின் கடமையுமாகும். குடி அரசு – செய்தி விளக்கம் – 30.08.1931

ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் மாற்றம் 0

ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் மாற்றம்

ஈரோடு ரயில்வே ஸ்டேஷனானாது 25-8-31 தேதி முதல் இப்போது இருந்து வந்த ஸ்டேஷனுக்கு சுமார் ஒரு மைல் தூரம் மேற்கு புறமாகத் தள்ளி கட்டப்பட்டு அங்கு மாற்றப்பட்டுவிட்டது. சுமார் ஒருகோடி ரூபாய் வரை செலவு செய்து கட்டடங்கள் பல கட்டப்பட்டிருக்கின்றன. தென் இந்தியாவில் உள்ள பெரிய ஸ்டேஷன்களில் இதுவும் ஒரு பெரியதும் அதிக செலவிட்டு கட்டப்பட்டதுமாகும். நாளாவட்டத்தில் ஈரோடு தென் இந்திய ரயில்வே பெரிய வண்டிப்பாதைகளுக்கு ஒரு முக்கிய ஸ்தலமாக செய்யப்படக்கூடும். இதன் பயனாக சுமார் ஆயிரம் குடிகள் ஈரோட்டிற்கு அதிகமாகலாம். ஆனால் பிரயாணம் செய்கின்ற ஜனங்களுக்கு சிறிது கஷ்டம் ஏற்பட்டுவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். என்னவெனில் ஸ்டேஷனுக்கும் ஊருக்கும் முன்னையைவிட சற்று அதிக தூரமாகி விட்டது. ஸ்டேஷனுக்கு இரவு காலங்களில் முன்போல் தைரியமாய் போக முடியாமல் பயப்பட வேண்டியதாய் விட்டது. மோட்டார் கூலி வண்டி வாடகை முதலியவைகள் அதிகமாய் விட்டன. ரயிலுக்கு போவது வரு வதில் பிரயாணிகளுக்கு அரைமணி நேரம்...

விருதுநகர் மகாநாடு  ஐஐஐ 0

விருதுநகர் மகாநாடு  ஐஐஐ

மத நடுநிலைமைக் கொள்கை கண்டனத் தீர்மானம் விருதுநகர் மகாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்களில் மதங்கள் ஒழிக்கப்படவேண்டும் என்னும் தீர்மானத்தைப்பற்றி சென்ற வாரம் விளக்கி இருந்தோம். இவ்வாரம் மதநடுநிலைமை கொண்ட ஸ்தாபனங்களை மறுத்தும் மத நடுநிலைமை கொள்கையைக் கண்டனம் செய்தும் தீர்மானிக்கப்பட்ட தீர்மானத்தைப் பற்றி சற்று விளக்குவோம். தீர்மானமாவது:- “சமுதாய முற்போக்குகள் ஏற்படுவதற்கு ஆன முயற்சிகள் செய்யப் படும்போதெல்லாம் “மதம்போச்சு மதம் போச்சு” என்று பிற்போக்காளர்கள் கூப்பாடு போட்டுக்கொண்டே முட்டுக் கட்டையாய் இருந்து வருவதால் அரசாங்கத்தார் அனுசரித்து வரும் மத நடுநிலைமையை கண்டிப்பதோடு அதை ஆதரிக்கும் எந்த அரசியல் ஸ்தாபனங்களையும் ஒப்புக்கொள்ள முடியாது என்பதாக இந்த மகாநாடு தீர்மானிக்கிறது” என்பதாகும். அது போலவே “வர்ணாச்சிரம தர்மத்தை ஒப்புக்கொள்ளும் எந்த அரசியல் ஸ்தாபனத்தையும் ஒப்புக்கொள்ள முடியாது” என்பதுமாகும். இவை காங்கிரசையும் திரு.காந்தியையும் கண்டித்து செய்யப்பட்ட தீர்மானம் என்றே சொல்லலாம். ஏனெனில் மத நடுநிலைமையை காங்கிரஸ் ஒப்புக்கொள்ளுகின்றது. வருணாச்சிரம தர்மத்தை திரு.காந்தியவர்கள் ஒப்புக் கொள்ளுகிறார். ஆகவே இவ்விரு...

காந்தியின் யாத்திரை                         போனாலென்ன?  போகாவிட்டாலென்ன? 0

காந்தியின் யாத்திரை                         போனாலென்ன?  போகாவிட்டாலென்ன?

உயர்திரு. காந்தியவர்கள் இங்கிலாந்து போகும் விஷயமாய் போகா மல் தப்பித்துக் கொள்ள முயற்சித்துச் சர்க்காரார் மீது எவ்வளவோ குற்றப் பத்திரிகை வாசித்துப் பார்த்தும் கடைசியாக இப்போது அந்தப் பிரச்சினை யானது ஒன்று, “போய்த் தீரவேண்டியது” அல்லது “தாம் குற்றவாளியாக வேண்டியது” என்கின்ற நிலைமைக்கு வந்து விட்டதால் போவதா? இல்லையா? என்பது ஒவ்வொரு வினாடியும் ஒரு பெரிய விடுகதையாகவே இருந்து வந்தது. திரு. காந்தியவர்கள் சர்க்காரார் மீது ஒரு வண்டி குற்றங்கள் சுமத்தி நீண்டதொரு குற்றப் பத்திரிகை படித்தார். ஆனால் சர்.சி.பி.இராமசாமி அய்யரை சட்ட மந்திரியாகக் கொண்ட சர்க்காரார் அவ்வளவுக்கும் ஒரே அடியில் பதில் சொல்லி குற்றப்பத்திரிகை ஏற்படுத்தினவர்களை நடுங்கச் செய்து விட்டார்கள். அதன் சுருக்கமாவது:- “திரு.காந்தியவர்களே! நீங்கள் சாட்டிய குற்றப் பத்திரிகையை சர்க்காரார் ஒப்புக்கொள்ள முடியாது. காங்கிரஸ் ஒப்பந்தத்தை மீறி தப்பு செய்து வந்திருப்பவைகளை சர்க்காரார் அவ்வப்போது உங்களுக்கு எடுத்துக் காட்டி வந்திருக்கின்ற விபரம் தங்களுக்கே தெரிந்ததாகும்”. “காங்கிரஸ் செய்த தப்பிதங்களுக்கு...

பயமுறுத்தல் கடிதங்கள் 0

பயமுறுத்தல் கடிதங்கள்

அன்பர் திரு. ஜார்ஜ் ஜோசப் அவர்களை காங்கிரஸ் “பக்தர்”களில் யாரோ ஒருவர் வெட்டிப் புதைத்து விடுவதாய் அவருக்கு ஒரு கடிதம் எழுதி யிருப்பதாகவும் அது திரு.ஜோசப் அவரது மனைவியாரால் போலீசில் ஒப்பு விக்கப்பட்டதாகவும் பத்திரிகையில் பார்த்தோம். இக்கடிதம் எழுதக் காரணம் ‘குடி அர’சில் வார வாரம் வெளியான திரு.ஜோசப் அவர்களின் “காந்தியின் இராமராஜியம்” என்பது பற்றிய வியாசங்களின் காரணமாகவே இருக்கலாம். இருந்தாலும், இம்மாதிரி கடிதம் நமக்கும் பல வந்து கொண்டிருக்கின்றன. நண்பர்கள் திரு.ஏ.இராமசாமி முதலியார், திரு.பி.வரதராஜுலு நாயுடு ஆகியவர்களுக்கும் பல வந்ததாக நாம் சென்னையில் இருக்கும்போது பத்திரிகைகளில் பார்த்தோம். நமக்கு வந்த கடிதங்கள் 100க்கு மேற்பட்ட தாகும். வசவு கடிதங்கள் வர்ணிக்க முடியாத கருத்துக்களால் எழுதப்பட்ட வைகளும் இரத்தத்தினால் துவைத்து கையெழுத்துப் போடப்பட்டவை களும் ஆபாசமான சித்திரம் எழுதிக் காட்டியவைகளுமாக அநேக கடிதங் களுண்டு. இவை பெரிதும் பார்ப்பனர்களால் எழுதப்பட்டவைகள் என்று கருதக் கூடியவைகளானாலும் சில பார்ப்பனர்களல்லாத வாலிபர்களாலும் இருக்கலாம். ஒன்றிரண்டு...

சாரதா சட்டத்தை ஒழிக்க சூழ்ச்சி 0

சாரதா சட்டத்தை ஒழிக்க சூழ்ச்சி

சாரதா சட்டத்தை ஒழிப்பதற்காக இப்போது தென்னாட்டுப் பார்ப் பனர்கள் முஸ்லீம்களை தங்களுடன் சேர்த்துக்கொண்டு சூட்சி செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள். சமீபத்தில் கூடும் சட்டசபைக்கு தஞ்சை, திருச்சி ஜில்லாக்களின் பிரதிநிதியான திரு. கிருஷ்ணமாச்சாரியார் என்னும் பார்ப்பனர் திருத்தம் என்னும் பெயரால் ஒரு தீர்மானம் அனுப்பி இருக் கிறாராம். அதில் சாரதா சட்டத்தில் இருந்து முஸ்லீம்களையும், பார்ப்பனர் களையும் பிரித்து விட வேண்டுமென்று குறிப்பிட்டிருக்கின்றதாம்.  ஆகவே “சீர்திருத்தங்களுக்கு சர்க்காரார் முட்டுக்கட்டையாக இருக்கிறார்கள்” என்று சொல்லும் தேசீயவாதிகள் இதற்கு என்ன பதில் சொல்லுவார்களோ தெரியவில்லை. இது ஒரு புறமிருக்கட்டும். இத்திருத்தத்திற்கு சர்க்காரார் இணங்கி னால்தான் அது நிறைவேறக்கூடுமென்று தெரிய வருவதால் சர்க்காரார் இதற்கு இணங்கமாட்டார்களென்பதோடு நடுநிலைமையும் வகிக்காமல் எதிர்த்துத் தோற்கடிப்பார்களென்றே நம்புகின்றோம். ஏனெனில், இந்திய தேசீயவாதிகளால் மகாத்மா என்றும், சத்திய கீர்த்தி என்றும் சொல்லப்படும் லார்ட் இர்வினிடம் முஸ்லீம்களும், பார்ப்பனர்களும் இது விஷயமாய் தூது சென்ற காலத்தில் லார்ட் இர்வின் அவர்கள், “சாரதா சட்டம் என்பது மதப்...

ஈரோடு அர்பன் பாங்குத் தேர்தல் 0

ஈரோடு அர்பன் பாங்குத் தேர்தல்

ஈரோடு அர்பன் பாங்கி டைரக்டர்கள் (நிர்வாகஸ்தர்கள்) தேர்தல் இம் மாதம் 22-ந்தேதி நடைபெற்றது. அதில் இப் பாங்கி ஏற்பட்டு இதுவரை இல்லாத அளவு ஊக்கமும் பரபரப்பும் காணப்பட்டது. கடைசியாக 9 பார்ப்பனரல்லாதாரும் 2 பார்ப்பனரும் தெரிந்தெடுக் கப்பட்டார்கள். பார்ப்பனக்கோட்டையாயும் அவர்களது உண்மை சிஷ்யர் களுக்குத் தவிர மற்றவர்களுக்கு மழைக்குக்கூடத் தங்குவதற்கு இடமில்லா திருந்த இந்த அர்பன்பாங்கி பார்ப்பனரல்லாதார் இரண்டொருவரின் தியாகத்தின் காரணமாய் அவர்கள் வெளிப்படையாய் “கெட்டபேர்” வாங்கத் துணிந்ததின் காரணமாய் 9 பார்ப்பனரும் இரண்டு பார்ப்பனரல்லா தவருமாய் இருந்த ஸ்தாபனம் நாளாவட்டத்தில் சுயமரியாதை உணர்ச்சி யேற்பட்டு இப்போது 11-பேர்களில் 9-பேர் பார்ப்பனரல்லாதார் டைரக்டர் களாய் வர முடிந்தது. இதுவும் சரியான தேர்தல் என்று நம்மால் சொல்லிவிட முடியாது. தீண்டாதார் வகுப்புக்கு ஒரு டைரக்டரும் பெண்கள் வகுப்புக்கு குறைந்தபக்ஷம் ஒரு டைரக்டரும் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் அது உண்மையான பார்ப்பனரல்லாதார் உணர்ச்சியென்றே சொல்லலாம். அன்றி யும் இப்போது தெரிந்தெடுக்கப்பட்ட 11 பேர்களிலும் வக்கீல்களும் பாங்கர் களுமே ...

சட்டசபையில் திரு.பாண்டியன் தீர்மானம் 0

சட்டசபையில் திரு.பாண்டியன் தீர்மானம்

உயர்திரு. று.ஞ.ஹ சௌந்திரபாண்டியன், எம்.எல்.சி. அவர்கள் “இராமனாதபுரம் ஜில்லா தேவகோட்டை முதலிய சுற்றுப்பக்கங்களிலுள்ள ஆதி திராவிடர்கள் என்பவர்களை அங்குள்ள உயர்ந்த ஜாதியார் களென்பவர்கள் மிகவும் கொடுமைப்படுத்தி வருவதால் அரசாங்கத்தார். அதை விசாரித்து உண்மை அறிந்து அதன்மேல் தக்க நடவடிக்கை எடுத்துக்கொள்ள ஒரு கமிட்டி நியமிக்க வேண்டு” மென்று சென்னை சட்டசபையில் ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். அதை அரசாங்க இந்திய அங்கத்தினரும் பார்ப்பன சட்டசபை அங்கத்தினர்களும் எதிர்த்தும், மந்திரிகள் விரோதமாய் ஓட்டுக் கொடுத்தும் தீர்மானம் நிறைவேறியது குறித்து மகிழ்வெய்துகின்றோம். ஆயினும் சர்க்காரார் அத்தீர்மானத்தை மதித்து ஒரு சரியான கமிட்டி நியமிக்கக் கவலையெடுத்து கொள்வார்களோ, அல்லது தீர்மானத்தை குப்பைத் தொட்டியில் போட்டு விடுவார்களோ என்பது சந்தேகமேயாகும். எனினும் திரு.பாண்டியன் அவர்களின் இம் முயற்சி போற்றத்தக்கதேயாகும். குடி அரசு – செய்திக் குறிப்பு – 23.08.1931

“வகுப்புவாதம்” 0

“வகுப்புவாதம்”

இன்றைய அரசியலில்-தேசீயத்தில் ஒரு மனிதன் அரசியல் ஞானி யாகவும், தீவிர தேசீயவாதியாகவும் ஆகவேண்டுமானால் அவன் எவ்வளவு அயோக்கியனாகவும், எவ்வளவு சுயநலக்காரனாகவும், சமயத்திற்குத் தகுந்தபடி குட்டிக்கரணம் போடுபவனாகவும் இருந்தாலும் ஒரு வார்த்தையை மாத்திரம் சொல்லிவிட்டால் போதும். அதாவது, “வகுப்புவாதம் கூடாது” என்றால், உடனே அவனுக்கு வேண்டிய விளம்பரங்களும் தேசாபிமானி-தேசபக்தன் என்கின்ற பட்டங்களும், அரசியல் ஞானி-தீவிர தேசீயவாதி என்கின்ற நாமகரணங்களும் ஏற்பட்டுவிடும். நமது பார்ப்பனர்களும் அப்படிப்பட்டவனை ஊரூராய் இழுத்துக் கொண்டு போய் உபசாரப் பத்திரங்கள் வாங்கிக்கொடுத்து, கூட்டம் கூட்டு வித்து, மாலைகள் போட்டு மறியாதை செய்து புகழ்மாலை பாடி அனுப்பி விடுவார்கள். மற்றபடி ஒருவன் எவ்வளவு யோக்கியனாயிருந்தாலும் நாணையக் காரனாகவும் உண்மையில் தேசத்திற்காகவே மக்களுக்காகவே பாடுபடு கின்றவனாகவும் பல தியாகங்கள் செய்து கஷ்ட நஷ்டப்பட்டவனாகவும் இருந்தாலும், “வகுப்பின் பேரால் கொடுமைப்படுத்தப்பட்டு மக்களோடு, மக்களாய் சேர்க்கப்படாமல் சட்டத்தின் படியும் சமூகப்பழக்க வழக்கத்தின் படியும் பிறித்து வைத்திருக்கும் மக்களுக்கு மற்ற மக்களுக்குண்டான வகுப்புரிமை கொடுக்கவேண்டமா”  என்று கேட்டுவிட்டால்...

விருதுநகர் மகாநாடு  ஐஐ                                                                    மதமொழிப்புத் தீர்மானம்     0

விருதுநகர் மகாநாடு  ஐஐ                                                                   மதமொழிப்புத் தீர்மானம்    

விருதுநகரில் கூடிய மூன்றாவது சுயமரியாதை மகாநாட்டு நடவடிக் கைகள் விஷயமாகவும், மகாநாடுகளின் வரவேற்புத் தலைவர்கள், தலைவர் கள் ஆகியவர்கள் உபன்யாசங்களைப் பற்றியும் சென்ற வாரம் எடுத்து எழுதி யிருந்தோம். மற்றும் அங்கு நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களைப் பற்றி மறு முறை எழுதுவதாகவும் குறிப்பிட்டிருந்தோம். ஆகவே அங்கு நிறை வேற்றப்பட்ட சில தீர்மானங்களைப்பற்றி இதில் ஆராய்வோம். “மனிதத் தன்மையைத் தடைப்படுத்துவதற்கு மதங்களின் பேரால் உள்ள பழக்க வழக்கங்கள் காரணமாயிருப்பதாலும், மதங்கள் ஒழியாமல் சகோதரத்தன்மை வளராதாதலினாலும் எல்லா மதங்களும் ஒழிந்து போக வேண்டுமென்று இம்மகாநாடு தீர்மானிக்கின்றது.” என்பது முதல் தீர்மான மாகும். இத்தீர்மானமானது இந்தியாவில் உள்ள தேசீய வாதிகள் என்பவர்கள் யாருக்குமே விரோதமானதாகும் என்பதோடு, தேசீயத் தலைவர்களுக்கும் தேசீயத்தொண்டர்களுக்கும் மிகமிக விரோதமானதாகும். மற்றும், “இந்தியத் தொழிலாளர்கள் தலைவர்களான”, திரு. கிரி திரு. சிவராவ் போன்றாருக்கும், சமதர்மத்தைப் பற்றிப் பேசிக்கொண்டிருக்கின்ற “நவஜவான் பாரத சபை வீரர்கள்” என்று சொல்லிக் கொள்ளும் திரு.போஸ் கூட்டத்தாருக்கும், இந்தியாவில் பூரண சுயேச்சையையும்,...

கோவையில் நபிகள் நாயகம்                  பிறந்தநாள் வைபவம் 0

கோவையில் நபிகள் நாயகம்                  பிறந்தநாள் வைபவம்

தலைவரவர்களே! நண்பர்களே! முஸ்லீம் சமூகத்திற்கே முக்கியமான இந்த நாளில் எனக்கும் ஒரு சந்தர்ப்பமளித்து இங்கு பேசும்படி செய்ததற்கு எனது நன்றி அறிதலை தெரிவித்துக் கொள்ளுகின்றேன். இங்கு எனக்கு முன்பாக மௌல்வி சாயபு அவர்களும் ராவ்சாகிப் இராமச்சந்திரன் செட்டி யார் அவர்களும் மிக்க அருமையான விஷயங்களை தக்க நூல் ஆதார ஆராய்ச்சியுடன் எடுத்துச்சொன்னார்கள். நானோ அந்தக் காரியத்தில் சூனியமானவன். அதாவது நூலராய்ச்சி என்பது எனக்கு கிடையாது. நான் அதில் அதிகக் கவலை செலுத்தியதுமில்லை. அது மாத்திரமல்லாமல் பெரியவர்கள், மதத்தலைவர்கள் என்பவர்களின் பெருமைகளும், அவர்களது உபதேசப் பெருமைகளுமே ஒரு சமூகத்தின் மேன்மைக்குப் போதுமானது என்று நான் கருதுகின்றவனுமல்ல. ஆதாரங்கள் எப்படிப் பட்டதாக இருந்தாலும், மதத்தலைவர்கள் ‘மத அவதார புருஷர்கள்’ என்பவர்கள் எவ்வளவு பெருமை பொருந்தியவர்களாக இருந்தாலும், இன்றைய நம்முடைய யோக்கியதை பிரத்தியட்சத்தில் எப்படி இருக் கின்றது? உலக மக்கள் வரிசையில் நமது நிலைமை என்ன? நமது பிரத்தி யட்ச அனுபவ நடவடிக்கையும், மதிப்பும் எவ்வளவில்...

“இந்து மதம்”  வாணியர் சூத்திரரில் சேர்ந்தவரானாலும் வாணியர் தாழ்ந்த ஜாதியாராம்! 0

“இந்து மதம்” வாணியர் சூத்திரரில் சேர்ந்தவரானாலும் வாணியர் தாழ்ந்த ஜாதியாராம்!

      “வாணிய வகுப்பார்” என்று தங்களைச் சொல்லிக்கொள்ளும் ஒரு வகுப்பார் இந்தியாவில் எங்கும் ஒவ்வொரு பட்டணங்களிலும் தாராளமாய் இருந்து வருகிறார்கள். அவர்கள் வியாபாரத்துறையில் மிகுதியும் ஈடுபட்டு பல இடங்களில் மிக செல்வந்தர்களாகவும், பிரபலஸ்தர்களாகவும், நாகரீக முடையவர்களாவும் இருந்து வருகின்றார்கள். பலர் ஆங்கிலக் கல்வியில் தேற்சியடைந்து உத்தியோகத்திலும், வக்கீல் தொழிலிலும் ஈடுபட்டு மிகப் பிரக்கியாதியாகவும் இருந்து வருகின்றார்கள். அப்படிப்பட்ட ஒரு நாகரீகமான சமூகம் இந்தியாவில் பிறந்ததி னாலும் இந்து மதத்தைச் சேர்ந்தவர்கள் என்று சொல்லிக் கொள்வதாலும் இந்த 20வது நூற்றாண்டிலும் தீண்டாதவர்களாகப் பாவிக்கப்பட வேண்டிய வர்களாக இருந்து வருகின்றார்கள். எப்படியெனில் திருவனந்தபுரம் ராஜிய எல்லைக்குள் அவர்கள் “அவர்ணஸ்தர்கள்” என்றே “ஈன ஜாதியார்” என்றே அரசியல் சமுதாய இயல்களில் எல்லாம் பதிவு செய்யப்பட்டு கோவில் பிரவேசமும், குளப்பிரவேசமும் தடுக்கப்பட்டு இருக்கின்றது. சென்னை மாகாணத்திலும், திருச்செந்தூரில் அவர்களுக்கு ஆலயப்பிரவேச உரிமை இல்லை என்று தீர்மானிக்கப்பட்டுவிட்டது. இப்போது சமீபத்தில் இந்த வாரத்திலேயே தஞ்சாவூர் ஜில்லாவிலுள்ள...

தமிழ் தினசரி 0

தமிழ் தினசரி

“சண்டமாருதம்” என்னும் தமிழ் தினசரிப் பத்திரிகை திருச்சியில் இருந்து சுயமரியாதை இயக்கத்திற்கு ஆக சுயமரியாதை சங்கத் தலைவர்க ளுடைய முயற்சியின் மீது ஆரம்பிக்கப்பட்டு இம்மாதம் 7ந்தேதி முதல் வெளியாகி இருக்கின்றது. அதை ஒரு லிமிடெட் கம்பெனி மூலம் வெளி யாக்கக் கருதி இருந்த விஷயம் பத்திரிகைகள் மூலம் ஏற்கனவே வாசகர் களுக்குத் தெரிந்ததாகும். லிமிடெட் கம்பெனி ரிஜிஸ்டர் செய்து பங்கு சேர்ந்த பிறகே பத்திரிகை வெளிவருவதென்றால் சற்று நாளாகும். ஆதலால் மகாநாடு நடைபெறும் நாளிலேயே எப்படியாவது பத்திரிகை வெளி யானால் அதற்கு அதிக ஆதரவு கிடைக்கும் என்கின்ற ஆசையின் மீது உயர்திரு.சௌந்திரபாண்டியன் அவர்கள் தற்கால சாந்தியாக சொந்தத்தில் ஏற்பாடு செய்து திரு.முருகப்பா அவர்கள் ஆசிரியத் தன்மையில் வெளிப் படுத்தப்பட்டதானது மிகுதியும் பாராட்டத்தக்கதும் நன்றி செலுத்தத்தக்க துமாகும். கூடிய சீக்கிரத்தில் கம்பெனி ரிஜிஸ்டர் செய்யப்பட்டு உயர்திரு. பாண்டியன் முதலியவர்கள் பங்கு சேர்க்க வருவார்கள். அந்தச்சமயம் பொது மக்களும் சிறப்பாக இயக்கத்தில் ஆர்வமுள்ள கனவான்களும்...

விருதுநகர் மகாநாடு  ஐ 0

விருதுநகர் மகாநாடு  ஐ

“சுயமரியாதை இயக்கம்” என்பதாக ஒரு இயக்கம் தோன்றி சுமார் 5,6 வருஷகாலமாகியிருந்தாலும், பொது மகாநாடு என்பதாக இந்த இரண்டு மூன்று வருஷங்களாகப் பெரிய பெரிய மகாநாடுகளும் அதற்கு முன்பிருந் தும் ஜில்லா, தாலூகா மகாநாடு என்பதாகப் பல மகாநாடுகளும் தமிழ் நாட்டில் கூட்டப்பட்டு வருவது யாவருமறிந்ததேயாகும். மற்றும் அது சம்பந்தமான பிரசாரங்களும் தமிழ்நாட்டில் ஆங்காங்கு தினந்தோறும் நடைபெற்று வருவதும் யாவருமறிந்ததாகும். இவற்றின் பயனாய் இந்துக்களென்று சொல்லிக்கொள்ளப்படும் பெரும்பான்மை மக்களுக்குள் ஒரு தலைகீழான பெரிய மனமாறுதலும் மற்றும் மத சம்பந்தமான சமூக சம்பந்தமான காரியங்களில் செய்கையிலே யுங்கூட ஒரு பெரிய மாறுதலும் ஏற்பட்டு வந்திருக்கின்ற விஷயமும் யாவரும் அறிந்ததேயாகும். இந்த இயக்கமும் இதற்கு ஏற்பட்டுள்ள பல அதிதீவிரக் கொள்கை களும் மதவுணர்ச்சிக்கும் பழக்க வழக்கத்திற்கும் நேர் மாறுதலானதாயிருந் தும் இவ்வளவு சொற்ப நாளில் இவ்வளவு தூரம் பரவியதற்குக் காரணம் என்னவென்றால் இவ்வியக்கம் கண்டும் இவ்வியக்கத்திற்கு சேவை புரிந்தும் வரும் மக்கள் யாவரும் ஏறக்குறைய...

சம்பளக் குறைவு 0

சம்பளக் குறைவு

மத்திய மாகாண அரசாங்க கல்வி மந்திரி உயர்தர வகுப்புப் பள்ளிக் கூடத்துப் பிள்ளைகளின் சம்பளங்களை அதாவது ஹைஸ்கூல் பிள்ளை களுக்கு 8-ல் ஒரு பங்கும், கலாசாலை மாணவர்களுக்கு 3-ல் ஒரு பங்குமே குறைத்திருக்கிறார்கள். இதற்குக் காரணம் சொல்லும்போது “ஏழைக் குடியானவர்களுடையவும், தொழிலாளிகளுடையவும் பிள்ளைகள் படிப்பதற்கு இப்போதைய சம்பளம் மிக அதிகமாயிருப்பதால் அதை குறைத்து அவர்களுக்குச் சௌகரியம் செய்ய வேண்டும் என்பதற்காகவே குறைக்கப்படுகின்றது” என்று சொல்லி இருக்கிறார். இதை அந்தச் சர்க்காராரும் ஒப்புக் கொண்டு விட்டார்கள். அது இந்த ஆகஸ்டு 1-ந் தேதி முதலே அமுலுக்கு வரப்படுமாம். அந்தப்படி இங்கும் நமது கல்வி மந்திரி பிள்ளைகள் சம்பளத்தை ஏன் குறைக்கப்படாது என்பதற்குக் காரணம் நமக்குத் தெரியவில்லை. குடி அரசு – துணைத் தலையங்கம் – 09.08.1931

இதற்கு என்ன சொல்லுகிறீர்கள்? 0

இதற்கு என்ன சொல்லுகிறீர்கள்?

உயர்திரு காந்தி அவர்கள் தமது 30-7-31 ² “யங் இந்தியா” பத்திரிகை யில் “நாம் இன்று செய்ய வேண்டியது எது?” என்னும் தலைப்பின் கீழ் “பொது ஜனங்களால் அதிகமாகக் கண்டிக்கப்படும் கராச்சி காங்கிரஸ் ஜீவாதார உரிமைகளைப் பற்றிய தீர்மானங்கள்” என்று ஆரம்பித்து, அவைகளை எல்லாம் எடுத்தெழுதி, அவைகளைப் பற்றி தமதபிப்பிராய மென்பதாக எழுதியிருப்பது என்னவென்றால், “ஜீவாதார உரிமைத் தீர்மானத்தில் குறிப்பிட்ட பல விஷயங் களில், அனேக விஷயங்களை இன்றே நடத்தி வைக்கக்கூடியவை களாகும். ஆதலால், அவற்றுள் சர்க்காரார் மூலம் சட்டம் செய்து நிறைவேற்றப்பட வேண்டிய சில விஷயங்கள் தவிர, பொது ஜனங் களால் செய்து முடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களை இப்பொழுதே நாம் செய்து முடிக்காவிட்டால் பிறகு, இதே பொது ஜனங்கள் தயவாலே இருக்கவேண்டிய அரசாங்கத்தால் எப்படி அவைகள் செய்து முடிக்கப்பட முடியும்?”. “இன்றைய தினமே, கண்டிப்பாய் மாற்றித்தீர வேண்டிய முக்கிய விஷயங்களை செய்யாமல் விட்டு விட்டால், நமக்கு அதிகாரம் வந்தபிறகு...

ஈரோட்டில் திரு. முகமதுநபி பிறந்தநாள் கொண்டாட்டம் 0

ஈரோட்டில் திரு. முகமதுநபி பிறந்தநாள் கொண்டாட்டம்

சகோதரர்களே! உங்கள் மத சம்பந்தமான ஒரு சிறந்த நாள் கொண் டாட்டத்திற்கு என்னைத் தலைமை வகிக்க அழைத்ததற்கு நான் நன்றி செலுத்துகிறேன். என்னை அநேகர் மத துவேஷி என்றும் கடவுள் மறுப்புக்காரன் என்றும் சொல்லுவார்கள். இந்த ஊரிலும் பலர் சொல்லுவார்கள். அப்படி யிருக்க நீங்கள் என்னை அழைத்து மிகவும் தைரியமென்றே சொல்ல வேண்டும். எப்படி இருந்தாலும் நான் இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் எனது அபிப்பிராயத்தை வெளியிட பின்வாங்குவதே இல்லை. சென்ற வருஷத் திலும் இதேமாதிரிகொண்டாட்டத்தில் நான் பேசி இருக்கின்றேன். அதிலும் பல இந்து முஸ்லீம்களுக்கு அதிருப்தி இருந்திருக்கலாமானாலும் அநேக ருக்கு திருப்தி ஏற்பட்டு முஸ்லீம்களால் அல்லாசாமிப் பண்டிகை நிறுத்தப் பட்டதற்கு நான் மகிழ்ச்சி அடைகின்றேன். ஆனால் என்பேரில் கோபித்துக் கொண்ட இந்துக்கள் இவ்வூரில் தங்கள் மாரியம்மன் பண்டிகையைக்கூட நிறுத்திவிட சம்மதிக்காமல் மிகுதியும் காட்டுமிராண்டித்தனமான முறையி லேயே நடத்துகின்றார்கள். இப்படியேதான் எங்கும் நடைபெறுகிறது. இந்துக்களை விட இஸ்லாமானவர்கள் அறிவுக்கு மதிப்புக் கொடுப்பவர்கள் என்பதும்...

சித்தோடு சீர்திருத்த சங்கம் 0

சித்தோடு சீர்திருத்த சங்கம்

  தலைவரவர்களே! சகோதரிகளே!! சகோதரர்களே!!! இன்று இந்து சமூகம் என்பதற்கென்று ஏற்படுத்திக்கொண்டிருக்கின்ற ஒரு பண்டிகை நாளைக்கொண்டு ஒரு கூட்டம் ஏற்பாடு செய்திருக்கிறீர்கள். ஆனால் வேறு இந்துக்கள் இம்மாதிரிகூட்டம் கூடினால் பண்டிகையின் புராணத்தைப் பற்றியும் அதைக் கொண்டாடினால் மோக்ஷம் அடையலாம் என்றும் பிரசங்கம் செய்யக் கூட்டுவார்கள். ஆனால் நீங்கள் இம்மாதிரி பண்டிகையை இனி வெறுக்கும்படி எடுத்துச் சொல்லும் உணர்ச்சி உள்ள வனை கூப்பிட்டிருப்பது மிகவும் போற்றத்தக்கதேயாகும். இக்கூட்டத்திற்கு நீங்கள் ஒரு அருமையான தலைவரைக் கண்டு பிடித்தது மிகவும் போற்றத்தக்கதேயாகும். தலைவர் திரு.வி.எஸ்.செங் கோட்டையா அவர்கள் பெரும் செல்வவான், பொதுஜனங்களுக்குப் பெரிதும் உபகாரியாய் இருந்து வருபவர், அநேக நல்ல பொதுக்காரியங் களில் ஈடுபட்டிருப்பார்கள். அதுபோலவே மத விஷயங்களிலும் பெரிதும் ஈடுபட்டு மதசம்மந்தமான விஷயங்களில் அநேக காரியங்கள் செய்து வரு பவர். ஆதலால் அவரை இந்தக்கூட்டத்திற்கு தலைமை வகிக்க ஏற்பாடு செய்த உங்களை பாராட்ட வேண்டியதே. எனது உபன்யாசம் பயன்படு மானால் தலைவரால் சீர்திருத்தத்துறைக்கு அநேக...

சிக்கனம்  சிக்கனமா? வரி குறைப்பா? 0

சிக்கனம் சிக்கனமா? வரி குறைப்பா?

    உணவுப் பொருள்களின் விலை சுமார் 30 வருஷத்திற்குமுன் இருந்தது போலவும், சிலவற்றிற்கு அதைவிட மலிவாகவும் குறைந்து போய் சர்க்காரார் வரிகட்டுவதற்கு மார்க்கமில்லாமல் குடியானவர்களுக்கும், வியாபாரிகளுக்கும் அதிகக்கஷ்டம் ஏற்பட்டு மக்கள் புழுவாய்த் துடித்துக் கொண்டிருக்கும் இக்காலத்தில், பொதுஜனத் தலைவர்கள் என்பவர்களும், தேசீயத் தலைவர்களென்பவர்களும், தேசீய ஸ்தாபனம் என்பவைகளும் சிறிதும் ஈவு, இரக்கம் யோக்கியப் பொறுப்பு இன்றி உத்தியோகங்கள் பெறவும், பெரும் பெரும் உத்தியோகங்களை சிருஷ்டிக்கவும் முயற்சிகள் செய்வதிலும், அவற்றிற்காகப் போட்டி போடுவதிலும் காலத்தைக் கழித்துக் கொண்டு வருவது இந்திய தேசத்திற்கே பெரிய மானக்கேடானதும், குடி களுக்கு அதிகக் கஷ்டம் கொடுக்கக் கூடியதுமான காரியமுமாகும் என்பதை நாம் எடுத்துக்காட்ட வேண்டியதில்லை. இந்தக் கொடுமையையும், அக்கிரமங்களையும் பொதுஜனங்கள் ஒருவாறு உணர்ந்து விட்டார்கள் என்பதை அறிந்த சர்க்காராரும், ஜனத் தலைவர் ஜனப்பிரதிநிதிகள் என்பவர்களும், பொது ஜனங்களை ஏமாற்ற சிக்கனம்-சிக்கனமென்ற பல்லவியைப் பாடிக்கொண்டு, ஒரு சிக்கன நாடகத்தை ஆரம்பித்து, பொது ஜனங்கள் கண்களில் மண்ணைப் போட...

முகமதுநபி பிறந்தநாள் கொண்டாட்டம் 0

முகமதுநபி பிறந்தநாள் கொண்டாட்டம்

சகோதரர்களே! இன்று இங்கு கூட்டப்பட்டிருக்கும் ஒரு மதசம்பந்தமான இந்த முக்கியக் கொண்டாட்டத்திற்கு என்னைத் தலைமை வகிக்க அழைத்ததை உண்மையிலேயே நான் ஒரு பெருமையாய்க் கருதுகின்றேன். ஏனெனில், என்னைப்பற்றி எல்லா மத பக்தர்களும் சொல்லும் குறை கள் உலகம் அறிந்ததேயாகும். அதாவது நான் மதங்களைக் குற்றம் சொல்லுகின்றவன் என்றும், மதமே கூடாதென்று சொல்லுகின்றவன் என்பதோடு மாத்திரமல்லாமல் கடவுளைப் பற்றியே கூடத் தகறாரு சொல்லுகின்றவன் என்றும் சொல்லப்படுகின்றவனாவேன். அப்படிப்பட்ட என்னை, உலகத்திலுள்ள மற்ற மதக்காரர்களை எல்லாம் விட அதிகமான மதபக்தி கொண்டவர்கள் என்று சொல்லப்படு கின்ற இஸ்லாம் மார்க்கத்தை அனுசரிக்கின்றவர்கள் என்பவர்களாகிய நீங்கள் கூப்பிட்டிருப்பது மிகவும் அதிசயமென்று சொல்லப்பட வேண்டும் அல்லவா? நீங்கள் என்னைக் கூப்பிட்டது போல் இந்துக்கள் என்று சொல்லிக் கொள்ளுகின்றவர்கள் அவர்கள் மதசம்பந்தமான ஒரு நாயன்மாரோ, ஆழ்வாரோ பிறந்த நாள், செத்த நாள் “திருநக்ஷத்திரம்” என்று சொல்லப் படும் “விஷேச நாள்” கொண்டாட்டத்திற்கு ஒரு முஸ்லீமையோ, ஒரு கிறிஸ்துவனையோ சுலபத்தில் கூப்பிட்டு...

புதுக்கோட்டை 0

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் டவுன் முனிசிபல் சங்கத்தார் முனிசிபாலிடி வரியை வழக்கப்படி ஐந்து வருடங்களுக்கொரு தடவை பரிசீலனை செய்வது போன்ற முறையில் புதியவரிவிதிக்கப்பட்டதின் காரணமாக பொதுஜனங்கள் தங்களுடைய குறைகளை சமஸ்தான தலைமை அதிகாரி யாகிய உயர்திரு ராகவையாவிடம் கூட்டமாகச் சென்று சொல்லிக்கொண்ட தில் அவர் அளித்த பதில் திருப்தியில்லாமல் போனதின் காரணமாய் ஜனங் கள் ஆத்திரப்பட்டு, பொறுமையிழந்து, பெரிய கலவரம்  விளைவித்து விட்டதாகச் செய்தி கிடைத்திருக்கின்றது. அச்செய்திகளில் கலவரத்தின் பயனாய் பலாத்காரங்களும், அடிதடிகளும், உயிர்ச்சேதங்களும், பொருள் நஷ்டமுமேற்பட்டிருப்பதாக வும் தெரிய வருகிறது. அதிகாரிகள் கலவரத்தை யடக்க சக்தியற்றவர்களாகி அவர்களும் நிலைமை தவறி நடந்து கொண்டதாகவும், உயிருக்கு பயந்து ஓடிவிட்ட தாகவும் தெரியவருகிறது. அதிகாரிகள் ஓடியொழிந்துகொள்ள நேர்ந்ததை நம்மால் ஒப்புக்கொள்ள முடியவில்லை. கலகம் செய்தவர்கள் வரி போடப் பட்டக் காரணத்தைக் கொண்டு கலகம் செய்தார்களென்றாலும், கலகத்தின் தன்மையும், முக்கியமும் பார்ப்பனர் பேரிலுள்ள ஆத்திரமென்றே காணப் படுகின்றது. அதாவது அந்த சமஸ்தானத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்கமும், அவர்களால் மக்களுக்கேற்பட்டு...

குத்தும்  கொலை முயற்சியும்                        பம்பாய் கவர்னர் சுடப்பட்டார் 0

குத்தும்  கொலை முயற்சியும்                       பம்பாய் கவர்னர் சுடப்பட்டார்

  இவ்வாரத்தில் அரசியல் சம்பந்தமாய் குத்தும், கொலை முயற்சியும், கலகமும் நடைபெற்றிருப்பதாக பல இடங்களிலிருந்து செய்திகள் கிடைத் திருக்கிறது. பம்பாய் கவர்னரை பூனாவில் ஒரு வாலிபன் ஒரு புத்தகசாலையைப் பார்வையிடும் போது அவரை கொல்லக் கருதி துப்பாக்கியால் சுட்டிருக் கிறான். ஆனால் அக்கவர்னர் அதிசயமாய் தப்பித்துக் கொண்டிருக்கிறார். அதாவது அவரது சட்டப்பையில் இருந்த ஒரு தினக்குறிப்புப் புத்தகத்தின் மூடிப் பொத்தானின் பேரில் அக்குண்டு பட்டதால் அது உடலில் பாயாமல் சட்டைப் பையிலேயே அக்குண்டு தாங்கிவிட்டது. மற்றொரு தரம் சுட்டும் அது அவர்மீது படவில்லையாம். ஏனெனில் அவன் குறிபார்க்கும் போதே கவர்னர் அந்த வாலிபனைப் பிடிக்கப் போனதால் வாலிபனின் குறி தவறி குண்டு அவர்மேலே படாமல் போய்விட்டது. பிறகும் கவர்னரே தான் அந்த வாலிபனை எட்டிப் பிடித்தாராம். இந்தமாதிரி மற்றவர்களுக்கு நேர்ந்திருந்தால் “கடவுளே அந்த சட்டைப் பையிக்குள் வந்து இருந்துகொண்டு குண்டைப் பிடித்துக் கொண் டார்” என்றுதான் சொல்லுவார்கள். ஆனபோதிலும் இந்த கவர்னருடைய...

விருதுநகர் மகாநாடு 0

விருதுநகர் மகாநாடு

மூன்றாவது சுயமரியாதை மகாநாடு விருதுநகரில் ஆகஸ்டு மாதம் 8,9 தேதிகளில் திருவாளர் ஆர்.கே. ஷண்முகம் அவர்கள் தலைமையில் நடத்த தீர்மானமாகி எல்லா ஏற்பாடுகளும் வெகு மும்மரமாய் நடைபெற்று வருவதை வாசகர்கள் பத்திரிகைகளின் மூலம் அறிந்திருக்கலாம். இம் மகாநாடு இதற்கு முன் இரண்டு தடவை தேதிகள் குறிப்பிடப்பட்டு எதிர் பாராத சம்பவங்களால் தடைப்படுத்தப்பட்டு விட்டது. ஆனாலும், இப்போது முன் நடத்தப்பட்டிருந்தால் எவ்வளவு விசேஷமாய் நடைபெற்றிருக்குமோ அதை விட பன்மடங்கு விசேஷமாக நடந்தேர காரியங்கள் நடந்து வருவதானது தலைவர் திருவாளர் சௌந்தர பாண்டியன் அவர்கள் தீவிர முயற்சி எடுத்து சுற்றுப்பிரயாணம் முதலிய வைகள் செய்து வருகின்றதைப் பார்த்தாலே விளங்கும். கால நிலைமையும் முன்னைவிட இப்போது சற்று திருப்திகரமாகவே காணப்படுவது மற்றொரு விசேஷமாகும். அதாவது வெய்யில் கொடுமை தணிந்திருப்பது ஒன்று. தண்ணீர் சௌகரியத்திற்கு சற்று அனுகூலமேற்பட்டிருப்பது மற்றொன்று. இவ் விரண்டையும் விட சுயராஜ்ஜியம் என்னும் அரசியல் கிளர்ச்சி என் பதின் இரகசியம் பம்பாய் காரியக்கமிட்டியின் தீர்மானத்தால்...

மௌலானா ஷெளகத் அலி 0

மௌலானா ஷெளகத் அலி

மௌலானா ஷெளகத் அலி அவர்கள் முஸ்லீம்களுக்கு பிரதிநிதி யல்லவென்பதாகக் காங்கிரஸ் காரியக்கமிட்டி முடிவு செய்து விட்டது என்ப தாக உயர்திரு. காந்தியவர்கள் தமது 16-7-31 தேதி “யங் இந்தியா” பத்திரிகையின் தலையங்கத்தில் எழுதிவிட்டார். இதற்கு பதிலாக மௌலானா அவர்கள் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறார். அதன் சுருக்கம் மற்றொரு பக்கம் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. மௌலானா ஷெளகத்அலி அவர் களை “முஸ்லீம்கள் பிரதிநிதியல்ல” வென்று காங்கிரஸ் காரியக் கமிட்டி முடிவு செய்திருப்பதைப் பற்றி யோசித்துப் பார்த்தால் காங்கிரசானது யாரை யும் இலட்சியம் செய்யாமல் தனது போக்கில் மிகவும் தைரியத்தையும், உறுதியையும் கொண்டு விட்டதாகத் தான் சொல்ல வேண்டும். திரு. காந்தி யவர்களும் காங்கிரஸ் காரியகமிட்டியின் இந்த முடிவைப்பற்றி சிறிதும் யோசனை செய்யாமலும், காரியக்கமிட்டியைக் கண்டிக்காமலும் தமது பத்திரிகையில் விளம்பரம்படுத்தி விட்டதிலிருந்து அவரும் துணிந்து விட்டார் என்றுதான் சொல்ல வேண்டும். அதாவது “காந்தி-இர்வின்” ஒப்பந்தம் முடிந்தவுடன் “இந்து முஸ்லீம் ஒப்பந்தம் ஏற்படாவிடில் மேலால் என்ன செய்வது என்பது...

காங்கிரஸ் புரட்டும் – காந்தியின் தவறும் 0

காங்கிரஸ் புரட்டும் – காந்தியின் தவறும்

தலைவரவர்களே!  சகோதர சகோதரிகளே!! இன்று இக்கூட்டத்தில் நான் “காங்கிரஸ் புரட்டும் – காந்தியின் தவறும்”என்னும் விஷயத்தைப் பற்றி பேசவேண்டும் என்று குறிப்பிடப் பட்டிருக்கின்றது. இந்தத் தலைப்பைப் பார்த்த சிலருக்கு ஆத்திரமுண்டாகி யிருக்கலாம். கலகம் செய்யலாமா என்றுகூட கருதிக்கொண்டு வந்திருக் கலாம். இந்தப்படி ஆத்திரம் ஏற்படுவது சகஜமேயாகும். ஆனால், நான் மாத்திரம் 5,6 வருஷ காலமாகவே காங்கிரசை ஒரு புரட்டு ஸ்தாபனம் என்றும், அது பார்ப்பன ஆதிக்கத்திற்கு ஏற்பட்ட ஸ்தாபனமென்றும் சொல்லி வந்திருப்பதோடு, “திரு காந்தியவர்கள் பார்ப்பனப் பிரசாரகர் என்றும், பார்ப்பனீயத்திற்கு பாடுபடுகின்றவர்” என்றும் சொல்லி வந்திருக் கின்றேன். இந்த அபிப்பிராயம் எனது அனுபவத்தில் நாளுக்கு நாள் பலப்பட்டுகொண்டு வந்திருக்கின்றதேயொழிய சிறிதாவது குறைவுபடவே இல்லை. காங்கிரசு ஒரு வகுப்புவாத சபையேயாகும். “தேசிய”ப் போர்வை போர்த்த வகுப்புவாதக் குரங்கேயாகும். அதாவது பிடிவாத வகுப்பு வாத மாகும். தேசீயம் என்னும் பித்தலாட்ட வார்த்தையைச் சொல்லிக்கொண்டே வகுப்புவாதங்களை அதாவது “உயர்” வகுப்பு உரிமைகளைக் காப்பாற்று வதற்கு ஏற்பட்ட...

சுயமரியாதை வீரய்ய செட்டியாருக்கும்           சுய ஆக்ஷி சுப்பையருக்கும் சம்பாஷணை  – சித்திரபுத்திரன் 0

சுயமரியாதை வீரய்ய செட்டியாருக்கும்           சுய ஆக்ஷி சுப்பையருக்கும் சம்பாஷணை – சித்திரபுத்திரன்

சு.ம.வீரைய்யசெட்டியார்:- என்ன ஓய்!சு.ஆ. சுப்பைய்யரே நேற்றெல்லாம் சீமை வேட்டி கட்டிக் கொண்டிருந்தீர். இன்று திடீரென்று கதர் வேஷ்டியும், கதர்  குல்லாயும், தடபுடலாயிருக்கின்றதே? சு.ஆ:- சுப்பையர்:-  ஒன்றும் விசேஷமில்லை. இன்று முதல் காங்கிரசில் சேர்ந்து விட்டேன். சு.ம.வீ:- அதென்ன திடீரென்று சேர்ந்து விட்டாய் காங்கிரசைப்பற்றி குற்றம் சொல்லிக் கொண்டிருந்தாயே. சு.ஆ.சு:-                         நான் பி.ஏ. பாஸ் செய்து எத்தனை நாள் ஆச்சுது? சு.ம.வீ:-                          3 வருஷ மாச்சுது. சு.ஆ.சு:-                         உத்தியோகத்திற்கு எத்தனை விண்ணப்பம் போட்டேன் உனக்குத் தெரியாதா? சு.ம.வீ:- ஆம், சுமார் 50, 60 விண்ணப்பம் போட்டாய். அதற்கென்ன இப்போது? சு.ஆ.சு:-                         ஒரு விண்ணப்பத்திற்காவது பதில் கிடைத்ததா சொல் பார்ப்போம்? சு.ம.வீ:- அது சரி அதற்கு யார் என்ன செய்வார்கள். உத்தியோகம் இருந்தால் தானே கிடைக்கும். சு.ஆ.சு:-                         உத்தியோகம் காலியாகவா இல்லை? எனக்குப் பிறகு எஸ்.எஸ்.எல்.சி  பாசு பண்ணின அப்துல்ரகிமான், பறக்கருப்பன், ஜோசப்பு, இரங்கசாமி நாயக்கன், இராமசாமி...

காந்தியின் திண்டாட்டம் 0

காந்தியின் திண்டாட்டம்

உயர்திரு காந்தியவர்கள் லண்டன் மகாநாட்டிற்கு வருவதாக சர்க்காரிடம் உறுதிகொடுத்து ராஜிசெய்து கொண்டதிலிருந்து அவர்பாடு மிகத் திண்டாட்டமாகவேபோய்விட்டது. ஏனெனில் தான் வட்டமேஜை மகாநாட்டிற்கு போனால் என்ன செய்வது என்பது அவருக்கே புரியாததாய் இருக்கின்றதுடன் இவரது அபிப்பிராயத்தை ஆதரிக்க அங்கு போதிய ஆட்கள் கிடைக்குமா என்பதே பெரிய சந்தேகமாகி விட்டது. அரசியல் சுதந்திரத்தை விட சீர்திருத்த அதாவது சமத்துவ சுதந்திர உரிமை ஆகியவை கேட்கும் வேலையே அங்கு தலை சிறந்து விளங்கப் போகின் றது. ஆதலால் திரு காந்திக்கு அங்கு செல்வாக்கு இருக்கமுடியாது. திரு காந்தியை லங்காஷயர் உள்பட அநேக ஊர்காரர்கள் கூப்பிடுவதாயிருந் தாலும் அவர்கள் இவரைப் பார்க்க ஆசைப்படுவார்களே ஒழிய இவர் பேச்சைக் கேட்பவர்களாய் இருக்கமாட்டார்கள் என்பது திண்ணம். இது அவருக்கே தெரியும். ஆதலால் ஏதாவது ஒரு சாக்கைப் போட்டு போகாமல் தப்பித்துக் கொள்ளப்பார்க்கின்றார் என்பதாகவே நாம் கருதுகின்றோம். நம்மைப் பொறுத்தவரை அவர் போவதும் போகாததும் ஒன்றேதான். ஆனால் அவரைப்பொறுத்தவரை அவர்போகாமல் இருப்பதே...

ஈரோடு முனிபாசிலிட்டியும்,                          சென்னை அரசாங்கமும்  0

ஈரோடு முனிபாசிலிட்டியும்,                          சென்னை அரசாங்கமும் 

ஈரோடு மகாஜனங்கள் கண்டனம் ஈரோடு முனிசிபல் டவுனுக்கு எலக்ட்ரிக் விளக்குகள் போடும் விஷயமானது 1922-ம்´ முதல் ஈரோடு முனிசிபல் கவுன்சில் ஆலோசனையிலிருந்து வந்ததாகும். 1928 ம் வருஷம் முதல் இவ் விஷய மாய் தீவிரமான முயற்சிகள் எடுக்கப்பட்டு கவர்ன்மெண்டாருடன் கடிதப் போக்குவரவுகள் செய்யப்பட்டு வந்தன. அப்போது மைசூர் கவர்ன் மெண்டார் மேட்டூருக்கு மின்சாரசக்தி சப்ளை செய்துவந்தபடியினால் மேட்டூர் ஹெட்வர்க்ஸ்களிலிருந்தே ஈரோடு முனிசிபாலிட்டிக்கு மின்சார சக்தி கொண்டுவர வேண்டுமென்ற ஈரோடு முனிசிபல் கவுன்சிலின் பிரேரே பனையானது உடனே மதறாஸ் கவர்ன்மெண்டாரால் அங்கீகரிக்கப்பட்டு விட்டது. பிறகு ஈ.மு.கவுன்சில் மைசூர் கவர்ன்மெண்டாருடன் இது விஷயமாய் கடிதபோக்குவரவுகள் செய்து மைசூர் கவர்ன்மெண்டு எலக்டிரிக்கல் இன்ஜினீயரவர்களை சந்தித்துப் பேசி முடிவு செய்யும் பொருட்டு ஈரோடு முனிசிபல் சங்கத்தார் ஒரு கமிட்டியை நியமுகம் செய்தார்கள். அந்தக் கமிட்டியார் மைசூர் கவர்ன்மெண்டுடன் கலந்து பேசிய பிறகு அவ்விஷயம் அனுகூலமாய் முடிவுபெறும் நிலைமையில் இருக்கையில் மதறாஸ் கவர்ன்மெண்டார் இவ்விஷயத்தில் பிரவேசித்ததின் பேரில் திடீரென்று...

இன்னுமென்ன சந்தேகம்? 0

இன்னுமென்ன சந்தேகம்?

“பிராமணா! உன் வாக்குப் பலித்தது!”   ஒரு பார்ப்பனன் தன் பெண் ஜாதியின் நடத்தையில் சந்தேகங் கொண்டு அடிக்கடி அந்தம்மாளை “விபசாரி, விபசாரி” என்று கூறிக் கொண்டே வந்தான். ஆனால் அந்தம்மாள் தன் புருஷனின் சந்தேகத்திற்கிடமான காரியங்களுக்கெல்லாம் அவ்வப்போது பல சாக்குப் போக்குகள் சொல்லி புருஷனை அடக்கிக்கொண்டே வந்தாள். இப்படி இருக்கையில், அந்த பார்ப்பான் தன் மனைவி அன்னிய புருஷனிடம் சம்பந்தப்பட்டுக் கொண்டிருக்கையில் ஒரு நாள் கைப் பிடியாய் பிடித்துவிட்டான். அப்பொழுது அந்த அம்மாள் வேறு எவ்வித சாக்குப்போக்கும், சமாதானமும் சொல்லித் தப்பித்துக் கொள்ள முடியாமல் போய்விட்டதால் “பிராமணா! உன் வாக்குப் பலித்து விட்டது!! அதற்கு நான் என்ன செய்யட்டும்?”என்று பதில் சொல்லி மறுபடியும் புருஷன் மீதே குற்றத்தைச் சுமத்தினாள். அதாவது, புருஷனைப் பார்த்து “நீ அடிக்கடி என்னை விபசாரி, விபசாரிஎன்று உன் வாயால் சொல்லிக்கொண்டே வந்ததாலல்லவா (பிராமணன் வாக்கு பொய்க்காது, அது எப்படியும் பலித்துவிடும்) என்று சாஸ்திரங்களில் சொல்லி இருக்கின்றபடி...

விருதுநகர் விருந்து 0

விருதுநகர் விருந்து

கனவான்களே! திரு.வி.வி.இராமசாமி அவர்கள் சுயமரியாதைக்காரர்கள் தேவஸ் தானக் கமிட்டிக்குப் போகலாமா எனக்கேட்பது ஒரு நல்ல கேள்வியே யாகும். நான் சுயமரியாதை இயக்கம் ஏற்பட்டு 4,5 வருஷம் தேவஸ்தானக் கமிட்டியில் பிரசிடெண்டாகவும், வைஸ் பிரசிடெண்டாகவும் இருந்தேன். தேவஸ்தான செல்வங்களை பொது நலத்திற்குப் பயன்படும்படி செய்யக் கூடுமானால் அது நல்ல வேலைதான். அங்கு போக வேண்டியதும் அவசியந் தான் என்று கருதியே அங்கு இருந்தேன். இந்த எண்ணத்தின் மீதே தேவஸ் தான சட்டத்தையும் ஆதரித்தேன். ஆனால் அவை சரியான பலனைக் கொடுக்கவில்லை. ஆகவே நான் இராஜிநாமாச் செய்தேன். எனது சகபாடிகள் எனது இராஜினாமாவை ஒப்பாமல் எனது அபிப்பிராயத்தை ஆதரிப்பதாயும் ஆனால் பொது ஜனங்கள் அபிப்பிராயம் விரோதமென்றும் சொன்னார்கள். ஆனாலும் நான் வேறு வேலையில் இந்த கவனம் செலுத்தலாம் என்று ஒதுங்கிக் கொண்டேன். தகுந்த சகபாடிகள் இருந்தால் அதை நல்வழிப் படுத்தலாம் என்பதும் ஒரு அளவுக்கு உண்மைதான். இராமனாதபுரம் தேவஸ்தானக் கமிட்டி பிரசிடெண்ட் திரு. இராமச்சந்திரன்...

அதிசயச்சாமியாரும், நம் பாமர மக்களும்  நமக்கேன் சுயராஜியம்? 0

அதிசயச்சாமியாரும், நம் பாமர மக்களும் நமக்கேன் சுயராஜியம்?

சகோதரர்களே! இராமநாதபுரத்திற்கடுத்த சுமார் 15-மைலுக்கப்பால் திருப்பாலைக்குடி என்னும் ஊரில் ஓர் சாமியார் இருக்கின்றார். அவர் மகமதிய சாமியாராம். அவர் வெளிவந்து நான்கு மாதம் ஆயிற்றாம். அதற்கு மூன்று மாதங்களுக்கு முன் அவர் பூமிக்குள் உயிருடன் புதைக்கப்பட்டாராம். 3-மாத காலமாய் உள்ளேயே இருந்து பின் வெளிவந்து அந்த திருப்பாலைக் குடிக்குச் சென்று அங்குள்ள ஓர் வரண்ட குளத்தில்போய் அவர் கைவைத்த மாத்திரத்தில் தண்ணீர்பெருகிவிட்டதாம். அவரிடம் வரம் கேட்க போகின்றவர்களுக்கு அந்த குளத்துத் தண்ணீரை எடுத்துவரச்சொல்லி கொடுக்கின்ராறாம். அதைச்சாப்பிட்ட மாத்திரத்தில் சகல நோய்களும் ரோகங்களும் நிவர்த்தி யாகின்றதாம். ஆஹா!என்னே ஆச்சரியம்! இவ் விருபதாம் நூற்றாண்டில் கடவுள் என்ற ஒன்று அரூபி என்று சொல்லு வதற்கும் ஆதாரமில்லாமல் தத்தளிக்கும் பொழுது ஒரு மனிதன் மேற் சொன்ன கடவுளும் செய்யொணாத காரியங்கள் செய்வதென்றால், பகுத் தறிவுள்ள எவரும் நம்ப ஹேது வுண்டா? நிற்க, இன்னுமோர் அதிசயமாம். குழந்தையில்லாதவர்களுக்கு அந்தக் குளத்துத் தண்ணீரைச் சாப்பிட்டமாத்திரத்தில் கெர்ப்பம் உற்பத்தி யாகின்றதாம்!....

சுயராஜியமும் சுதேச சமஸ்தானமும் 0

சுயராஜியமும் சுதேச சமஸ்தானமும்

இந்தியாவுக்கு வரப்போகும் சுயராஜியம் என்பதும் சீர்திருத்த மென்பதும் இப்போதிருப்பதை விட இன்னும் மோசமான அடிமை விலங்காகவே வந்து முடியப் போகின்றது. இந்தியாவுக்கு வந்த சைமன் கமிட்டியானது இந்தியாவின் உண்மை நிலைமையையும், தேவையையும் அறியத் தொடங்கியதால், நமது பார்ப் பனர்கள் அதற்கு இடம் கொடுத்தால் தங்களுக்கு ஆபத்து வந்துவிடுமென கருதி, ஏதாவது ஒரு தந்திரம் செய்து கமிஷன் விசாரணையை வெற்றிய டையாமல் செய்யவேண்டும் என்ற எண்ணத்தின்மீது அநேக சூட்சிகள் செய்தார்கள். அவைஒன்றும் தமிழ்நாட்டு மக்களிடம் பலிக்காமல்போகவே, கடைசியாகச் சத்தியாக்கிரகம் என்பதாக ஆரம்பிக்கச்செய்து ஒருபக்கம் கலகம் செய்தார்கள். இவற்றிற்கெல்லாம் காரணம் காங்கிரஸ் என்பதான பார்ப்பன ஸ்தாபனம் ஒன்று அவர்களுக்கு கை ஆயுதமாய் இருப்பதால் எதுவும் செய்ய முடிகின்றது என்பதுடன் மற்ற மக்களுக்கும் அதனால் பல தொல்லைகள் ஏற்பட முடிந்தன. இதனாலேயே சென்ற வருஷம் சத்தியாக் கிரகம் என்னும் பேரால் (பார்ப்பனத்)தொல்லை நிகழ்ந்தது எனினும், மற் றொரு பக்கம் சமதர்ம உண்மைக் கொள்கைகள் முன்னிலும் அதிகமாகத்...

காங்கிரசும் – சுயமரியாதையும் 0

காங்கிரசும் – சுயமரியாதையும்

அன்புள்ள தலைவரவர்களே! சகோதரிகளே!!  சகோதரர்களே!!! இன்று, இங்கு சுயமரியாதை வாசகசாலை ஆண்டுவிழாவை உத்தே சித்து நடைபெறும் உபந்யாசங்களில் நான் “காங்கிரசும் சுயமரியாதையும்” என்பதுபற்றி பேசவேண்டும் என்பதாய் குறிக்கப்பட்டிருக்கின்றது. இது விஷயமாய் எனது அபிப்பிராயங்கள் அனேகமாக தமிழ்நாடு முழுவதும் அறிந்ததேயாகும். எப்படியெனில் “குடி அரசு” பத்திரிகை வாயிலாகவும் அனேக உபந்யாசங்கள் மூலமாகவும், சுமார் 5, 6 வருஷங்க ளாக வெளிப்படுத்திக் கொண்டே வந்திருக்கின்றேன். அவற்றில் இருந்து மாறும்படியான நிலைமை இப்போது ஒன்றும் ஏற்பட்டுவிடவில்லை. சமீபகாலத்தில், அதாவது இந்த ஒருவருஷ காலத்தில் காங்கிரசிற்கு செய்யப்பட்ட விளம்பரத்தின் காரணமாய் பொது ஜனங்களில் பலருக்கு ஒரு உணர்ச்சி தோன்றி அதைப்பற்றி பேசப்படுகின்றது என்பதை தவிர வேறில்லை. ஒரு நாட்டில் புதிதாக ஏதாவது விஷயம் தோன்றினால் அதைப் பற்றி எங்கும் பேச்சாய் இருப்பது சகஜமேயாகும். அதுபோல்தான் இப்போது காங்கிரசைப் பற்றியும் பேசப்படுகின்றது. ஆதலாலேயே தான் நீங்களும் என்னை அதைப்பற்றியே பேசக்கேட்டு இருக்கின்றீர்கள் என்று கருதுகின்றேன். காங்கிரஸ் ஏற்பட்டு சுமார்...

தொழிலாளர்களும் காங்கிரஸ் இயக்கமும் 0

தொழிலாளர்களும் காங்கிரஸ் இயக்கமும்

“ காங்கிரஸ் தலைவர்கள் வீழ்க! டில்லி ஒப்பந்தக்காரர்கள் ஒழிக!!” சுபாஸ் சந்திரபோஸ் மீது நம்பிக்கையில்லை!!!  ” சக்லத்வாலா சேதி. – யார் எழுதினாலென்ன கல்கத்தாவில் தொழிலாளர்காங்கிரஸ் ஒன்று திரு. சுபாஸ்சந்திரபோஸ் தலைமையில் கூடிற்று. அது சமயம் பம்பாய் தொழிலாளர்கள் பிரதிநிதிகள் “காங்கிரஸ் தலைவர்கள் ஒழிக, டில்லி ஒப்பந்தக்காரர்கள் (அதாவது காந்தி) ஒழிக” என்று கோஷித்துக்கொண்டிருந்தார்கள். லண்டனிலிருந்து பொது உடைமைக்கட்சி திரு. சக்லத்வாலா அவர் கள் “சென்ற தடவை நான் இந்தியாவுக்கு வந்திருந்த பொழுது காந்தியின் வண்டவாளத்தையும் அவரைப் பின்பற்றுகின்றவர்களின் புரட்டுகளையும், துரோகங்களையும் வெளியிட்டேன். ஆனால் இந்த சமயம் பிரிட்டன் என்னை அங்குவர அனுமதிக்கவில்லை. ஆனாலும் இந்தியாவில் உள்ள பொது உடைமை மக்கள் காந்தியின் பித்தலாட்டத்தை தைரியமாய் வெளிப் படுத்தவேண்டும்” என்று எழுதியிருந்தார். சுபாஸ் சந்திரபோஸ் தலைமை பிரசங்கத்தில், கராச்சி காங்கிரஸ் தீர்மானத்தை வரவேற்று, அதில் காணும் வார்த்தைகளைவிட கருத்து நல்லதென்று சொன்னதுடன் ருஷிய மாஸ்கோ கட்டளைக்கு சரணாகதி அடைய வேண்டியதில்லை என்றும்...

லார்ட் வில்லிங்டனின் எச்சரிக்கை 0

லார்ட் வில்லிங்டனின் எச்சரிக்கை

லார்ட் வில்லிங்டன் பிரபு சென்ற மாதம் செம்ஸ்போர்ட் கிளப்பில் பேசியபோது இந்தியர்களுக்கு ஒரு எச்சரிக்கை செய்திருக்கிறார். அஃதென் னவென்றால், “நாட்டில் சமாதானத்தை ஏற்படுத்துவதற்கு நான் இருக்கிறேனே யொழிய ராஜியைக் காப்பாற்ற நான் (இங்கு வர) இல்லை” என்று பேசியிருக் கிறார். ஆகவே, சமாதானப்பங்கமேற்படும் என்று நான் அறிந்தேனே யானால் ராஜியைப்பற்றி சிறிதும் கவலைப்படாமல் சமாதானத்திற்காக எந்த முறையையும் அனுசரிக்க வேண்டிவரும்” என்று சூசனை காட்டி இருக் கிறார். அதோடு ராஜி விஷயத்தைப்பற்றியும் பேசும்போது காங்கிரசுக் காரர்கள் “ராஜியை ஒரு சமாதான அறிகுறியென்று கருதாமல் அடுத்த யுத்தத்திற்கு தயார் ஆவதற்கு ஏற்படுத்திக்கொண்ட சௌகரியமே என்பதாக காந்தி – இர்வின் ஒப்பந்தத்திற்கு வியாக்கியானம் கூறுகின்றார்கள்” என்றும், “இரண்டு பெரிய மனிதர்கள் என்பவர்கள் செய்து கொண்ட ஒப்பந்தம், அதாவது காந்தியும் – இர்வினும் செய்து கொண்ட ராஜி என்பதற்கு இந்த மாதிரி பொருள் கொள்வது சிறிதும் யோக்கியமான காரியமென்று நான் கருதவில்லை என்று தாராளமாய்ச் சொல்லுகிறேன்”...

காந்தியின் விளக்கம் 0

காந்தியின் விளக்கம்

பெருமாள் மாறி பெத்தப் பெருமாளானார் உயர்திரு. காந்தியவர்கள் சென்றமாதம் 12-ந்தேதி பரோடா சமஸ் தானம் மரோலி என்ற கிராமத்தில் மதுபானத்தைப் பற்றிப் பேசிய விபரங் களைப் பற்றிச் சென்ற வாரத்திற்கு முந்திய  ‘குடி அரசு’ பத்திரிகையில் “காந்தியின் உண்மைத் தோற்றம்” என்னும் தலைப்பில் திரு. காந்தி சொன்ன வார்த்தைகளை அப்படியே எடுத்து எழுதி அதின்மீது நமது அபிப்பிரா யத்தையும் எழுதியிருந்தோம். இதைப் பார்த்த சில பார்ப்பனர்கள் அதாவது தமிழ்நாட்டு காங்கிரஸ் தலைவர்கள் உடனே திரு. காந்திக்குத் தந்தி கொடுத்தார்கள். எப்படி என்றால், ‘தாங்கள் மதுபானத்தைப் பற்றி இம்மாதம் 12ந் தேதி மரோலியில் பேசிய பேச்சானது இங்கு சிலருக்கு பலவித அருத்தம் கொள்ளுவதற்கு இடமளிப்பதாய் இருப்பதால் அதை சரியானபடி விளக்க வேண்டும்’  என்பதாகக் கேட்டார்களாம். மற்றும் பலர் திரு. காந்தியைப் பாராட்டி அதாவது இப்போதாவது மதுபானத்தின் தத்துவத்தை அறிந்து அது விஷயமான கொள்கையை மாற்றிக்கொண்டதற்காக அவரைப் பாராட்டியும் எழுதினார்களாம். ஆகவே இவற்றிற்கெல்லாம் பதில்...

பொருளாதாரம் 0

பொருளாதாரம்

சகோதரர்களே! பொருளாதார மென்னும் விஷயத்தைப்பற்றி என்னைப் பேசும்படி கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள். பணம் சம்பாதிப்பதிலும், வரும்படி அடைவ திலும் நம்நாட்டு மக்கள் எந்தநிலைமையிலிருக்கிறார்கள்? அவர்களுக்கு அந்த வருவாயென்ன பலனளிக்கின்றது? அவர்களுக்கதிக வருவாய் கிட்டவுமது தக்க பயனளிக்கவும் வழியென்ன? என்பவைகள் போன்றது தான் பொருளாதாரமென்பது பற்றி நான் பேசப்போகும் விஷயத்தில் முக்கிய கவனிப்பாகும். ஆகவே இவ்விஷயங்களில் நமது நாட்டிற்கும் உலகிலுள்ள மற்ற நாடுகளுக்குமுள்ள வித்தியாசங்கள் முதலில் கவனிக்கப்பட வேண்டும். பொருளாதாரத்தில் மேல் நாட்டார் சராசரியாக ஒவ்வொரு நபரும் தினம் 2 ரூபாய் வீதம் சம்பாதிக்கின்றார்கள். நம் நாட்டார்களோ சராசரியாக ஒவ்வொரு வரும் தினம் 2 அணா வீதமே சம்பாதிக்கின்றார்களென்பது யாவருமறிந்த விஷயம். அன்றியும் இதுவே நம் நாட்டுப் பொருளாதாரப் பிரச்சினைக்கு முக்கிய பல்லவியுமாகும். இது உண்மையாகவே யிருக்கலாம். ஏனெனில் மேல் நாட்டில் பல லக்ஷ ரூபாய் சம்பாதிப்பவனிலிருந்து தினம் கால் அணா சம்பாதிப்பவன் வரையில் சகலரையும் ஒட்டு மொத்தம் கணக்கு சேர்த்துப் பிரித்து வகுத்துப்பார்த்தால் ஆளொன்றுக்கு...

சென்னிமலை யுவர் சங்க ஆண்டு விழா  “வாலிபர்களே ஜாக்கிரதை!”  “எழுச்சியினால் கண்மூடித்தனமாய் குழியில் விழுந்து விடாதீர்கள்” 0

சென்னிமலை யுவர் சங்க ஆண்டு விழா “வாலிபர்களே ஜாக்கிரதை!” “எழுச்சியினால் கண்மூடித்தனமாய் குழியில் விழுந்து விடாதீர்கள்”

  சகோதரர்களே! உங்கள் சங்க வருஷக் கொண்டாட்டத்தை முன் னிட்டு எனக்கு ஆடம்பரமான வரவேற்பளித்ததற்கும், என்னைத் தலைமை வகிக்கச் சொன்னதற்கும், எனக்கு வரவேற்புப் பத்திரம் வாசித்துக் கொடுத்த தற்கும் நான் பெரிதும் நன்றி பாராட்டக் கடமைப் பட்டவனாவேன். எனது கொள்கைகளுக்கு ஆதரவு காட்டும்முறையில் அப்பத்திரமிருப்பது பற்றியும், அக்கொள்கையிலுங்களுக்குள்ள பற்றுதல் காரணமாய் எனக்குப் புகழ்ச்சியுரைகள் கூறுகிறீர்களென்று நான் கருதுவது பற்றியும் அப் பத்திரத்தை நான் பெற்றுக் கொள்ளுகிறேன். விழாவின் வரவேற்புக் கமிட்டித் தலைவர் நண்பர் பழனியப்பன் வாசித்த வரவேற்புப் பத்திரத் திலும், பின்பு சங்க அறிக்கைப் பத்திரம் வாசித்துக் கொடுத்த நண்பர் என்.வி. பழனியப்பன் உரையிலும் நமது கொள்கை மிகவும் மலிந்து கிடக்கின்றது. நமதியக்கத்தை நீங்கள் எவ்வளவு தூரம் நன்குணர்ந்து அதைச் செயலிலும் செய்து வருகிறீர்களென்பதற் கவைகளே தக்க சாட்சிகளாயிருக்கின்றது. வரவேற்புத் தலைவர் உபன்யாசத்திலுள்ள பெரும் பகுதி விஷயங்கள் யாவும் எனது இன்றைய கொள்கைகளின் தத்துவங்களேயாகும். அதை விட நான் ஒன்றும் புதிதாகச்...

பட்டீஸ்வரத்தில் சீர்திருத்தத் திருமணம் 0

பட்டீஸ்வரத்தில் சீர்திருத்தத் திருமணம்

சகோதரிகளே!சகோதரர்களே!!இன்று நீங்கள் சுயமரியாதைத் திருமணம் எப்படி நடத்தப்பட்டதென்பதைப் பார்த்தீர்கள். இம்மாதிரியான விவாகங்கள்தான் முழு சுயமரியாதைத் திருமணங்களென்று கூறி விடமுடியாது. பெண்களுக்குப் போதிய அறிவில்லாதிருப்பதனாலும், அவர்களுக்குச் சுதந்திரமளிக்கப்படாதிருப்பதனாலுமே முழு சுயமரியாதை முறையில் திருமணம் என்பது நடைபெற முடியவில்லை. எப்பொழுது மணமகனால் மணமகளுக்கு கழுத்தில் தாலி கட்டப்பட்டதோ அது அடிமைத் தனத்தைத்தான் குறிப்பிடுகின்றது. நியாயமாகவே மணமகள் தாலிகட்டிக் கொள்ளத் தனது கழுத்தை அளித்தே யிருக்கக்கூடாது. மண மகளுக்குத் தாலி கட்டினால், மணமகனுக்கும் மணமகளால் தாலிகட்டப் படவேண்டும். புரோகிதமில்லாவிட்டாலும், புகைச்சலில்லா விட்டாலும் கூட, இந்த விவாகத் தில் “புரோகிதச்” செலவு குறைக்கப்பட்டிருப்பதாக நான் கருதுவதற்கில்லை. சகோதரர்களே! நாம் பொதுவாக விவாகத்தைக்கூடக் கடவுளின் தலையிலேயே சுமத்தி விடுகின்றோம். “என்ன செய்வது! விவாகம் திடீரென கூடிவிட்டது! அந்தநேரம் ( தாலிகழுத்துக்கு ஏறும் நேரம்) வந்துவிட்டால் யார்தான் என்னசெய்ய முடியு?” மென்பதாக உரைக்கின்றோமேயல்லாது, விவாகத்தின் உண்மைத்தத்துவத்தை அறிந்து நமது நாட்டில் விவாகங்கள் நடைபெறுவதாகப் புலப்படவில்லை. இருவருடைய சம்மதமுமின்றியே, அவர்களுடைய வயதையும்...

அருஞ்சொல் பொருள் 0

அருஞ்சொல் பொருள்

ஆஸ்பதமான   –               இடமான,  பற்றுக்கோடான ஆனந்த பாஷ்யம்            –               ஆனந்தக் கண்ணீர் தாரதம்மியம்    –               ஏற்றத் தாழ்வு மூர்த்தண்ணியமாக       –               ஊக்க மிகுதி யாதாஸ்து         –               அறிக்கை, குறிப்பு யாதாஸ்து         –               அறிக்கை, குறிப்பு விருத்தாப்பியம்              –               முதுமைக்காலம் வேறது                 –               வாய்ப்பு பர்த்தி   –               இணை, ஒப்பு, நிரப்பல் பிரக்யாதி            –               நன்கு அறியப்படுதல், கீர்த்தி, தாத்பர்யம்          –               பொருள், விளக்கம் உபதானம்          –               அரிசிபிச்சை தற்பித்து             –               பயிற்சி சரீரப் பிரயாசை               –               உடலுழைப்பு முகாலோபம்    –               முகம் காட்டல், முகம் பார்த்தல் கிரீடை                –               விளையாட்டு பத்ததி –               ஒழுங்கு, வழக்கம்

சித்தயங்கோட்டை “மக்கள் விடுதலை சேவை சங்கம்” திறப்பு விழா  0

சித்தயங்கோட்டை “மக்கள் விடுதலை சேவை சங்கம்” திறப்பு விழா 

  ஆர்வமுள்ள அக்கிராசனாதிபதி அவர்களே! சகோதரிகளே!!  சகோதரர்களே!!! இந்த ஊரில் மக்கள் விடுதலைசேவை சங்கம் என்பதாக  ஓர் சங்கம் புதிதாக ஏற்படுத்த யுத்தேசித்து, அதை திறந்து வைக்க வேண்டுமென என்னை அழைத்ததற்காக நான் நன்றி செலுத்துகின்றேன்.  இவ்வூர் பிரமுகர் கள் அளித்த வரவேற்புக்கும், வாசித்துக் கொடுத்த உபசாரப் பத்திரப் புகழ் மொழிக்கும் நன்றி செலுத்தக் கடமைப்பட்டிருக்கின்றேன்.  அவை எனது தகுதிக்கும்,  அளவுக்கும் மீறிய வகையில் செய்யப் பட்டிருப்பதால், அவை களை நான் ஏற்றுக்கொண்டேனென சொல்லுவதற்கு முடியாத நிலைமை யிலிருக்கிறேன். இயக்கத்தினிடம் உங்களுக்கிருக்கும் ஆசையால் மெய் மறந்து, அன்பினால் மரியாதை செய்திருக்கிறீர்கள். ஏனெனில், எனக்குப் பொருந்தாததும், மேம்பட்டதுமான வாசகங்கள் வரவேற்புப் பத்திரத்தில் மிகுதியும் காணப்பட்டிருக்கிறது.  நமது அக்கிராசனர் உரைத்தது போல் மரியாதை செய்யும் முறையில் அதிகமாகச் செய்யப் பட்டிருக்கிற தென்ப தாகவே கருதினாலும் அவ்வார்த்தைகள் எனது கொள்கைகளுக்காதார மாயிருக்குமென நினைத்து அதன்மூலம் நீங்கள் ஆதரவளிப்பதாய்க் கருதி உங்களுக்கு நன்றி செலுத்துகிறேன். சகோதரர்களே! இன்று,...

இந்து முஸ்லீம் 0

இந்து முஸ்லீம்

இந்த நாட்டில், இந்துக்கள், முஸ்லீம்கள் என்கின்ற இரண்டு சமூகங் களும் பெரும்பான்மையான மக்கள் எண்ணிக்கையுடைய சமூகங்களாகும்.  ஆனால் அவை இரண்டும் தங்கள் தங்களது நடை உடை ஆச்சாரம் அனுஷ் டானம் ஆகியவைகளில் ஒன்றுக்கொன்று நேர் விரோதமான சமூகங்கள் என்பதோடு உண்மையைப் பேச வேண்டுமானால் இவ்விரு சமூகங்களும் அரசியலிலும் மத விஷயத்திலும் ஒவ்வொருவருடைய இலக்ஷியங்க ளிலுங்கூட வேறுபட்ட தென்று சொல்லும்படியான சமூகங்களாகும். உதாரணமாக நடை உடை ஆசார அனுஷ்டானங்களிலுள்ள மாறு பாட்டைப் பற்றி நாம் யாருக்கும் எதுவும் எடுத்துச் சொல்ல வேண்டிய தில்லை என்று கருதினாலும், அரசியல் மத இயல் இலட்சியங்களில் இருவரும் வேறுபட்டவர்கள் என்பதில் சிலருக்காவது விவரம் தெரிய வேண்டியிருக் கலாம். ஆதலால் அதைப் பற்றிக் கவனிப்போம். இந்தியாவிலிருக்கும் இந்துக்களில் 1000க்கு 998 பெயர்கள் மத உணர்ச்சியின் பயனாகவே மகமதியர்களை வெறுக்கின்றார்கள் என்று சொல்லுவதிலும் அதுபோலவே இந்தியாவின் பெரும் பகுதியில் உள்ள மகமதியர்களில் 1000க்கு 999 பெயர்கள் இந்துக்கள் என்பவர்களை வெறுக்...

ஊ.ஐ.னு.திரு.காந்தியின் தீண்டாமையின் திருகணி வியாக்கியானம் 0

ஊ.ஐ.னு.திரு.காந்தியின் தீண்டாமையின் திருகணி வியாக்கியானம்

உயர் திரு காந்தியவர்களை ஒரு தென்னாட்டுப் பார்ப்பனர் ஒருவர் தீண்டாமையைப் பற்றி சந்தேகம் தெரிவிக்குமாறு ஒரு கடிதம் எழுதி இருந் தார். அதற்கு பதிலாக திரு. காந்தி எழுதி இருப்பதில் காணும் குறிப்பாவது, தீண்டாமை விஷயமான காங்கிரஸ் தீர்மானங்கள் இன்னும் அரசியல் திட்டத்தில் ஒன்றாக நிருவப்படவில்லை. அதாவது நான் சொல்லுவதுதானே ஒழிய இன்னமும், அரசியல் கொள்கையாக ஒப்புக்கொள்ளவில்லை. ப-ர்) அப்படி நிறுவப்பட்டாலும் நீதிஸ்தலங்கள் (அதாவது கோர்ட்டுகள்) இவற்றை கவனித்துக்கொள்ளும். வேதங்களினுடையவும் சாஸ்திரங்களினுடையவும் கட்டளைகளை புறக்கணிக்கப்படமாட்டாது. (அதாவது அவைகளுக்கு விறோதமாக ஒன்றும் செய்யப்படமாட்டாது. ப-ர்) காங்கிரஸ் அமைப்பு போது மான அளவு விரிவுள்ளதாகவே இருக்கின்றது. (அதாவது எப்படி வேண்டு மானாலும் வியாக்கியானம் செய்து கொள்ள தகுதியாகவே இருக்கின்றது.              ப-ர் ) குடி அரசு – பத்திராதிபர் குறிப்பு – 21.06.1931

துருக்கியில் பெண்கள் முன்னேற்றம் 0

துருக்கியில் பெண்கள் முன்னேற்றம்

திறைமறைவில் உரை போட்டுக் கொண்டு இருக்க வேண்டிய பெண்கள் இன்று துருக்கியில் பிறந்ததின் பயனாய் திறையை அவிழ்த்துத் தள்ளி உரையைக் கழட்டி எறிந்து விட்டதோடல்லாமல் “எங்களுக்குக் கல்யாணம் வேண்டாம். கல்யாணம் செய்து கொள்ளுவதன் மூலம் புருஷர்களுக்கு அடிமையாய் இருக்க இனி நாங்கள் சம்மதிக்கமாட்டோம்” என்று சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். இதோடு நிற்காமல் ‘ எங்களுக்கு உத்தியோகம் வேண்டும்’ என்றும் சொல்ல ஆரம்பித்து விட்டார்கள். புர்தாவை-கோஷாவை-படுதாவை “மதக்கட்டளை” என்று சொல்லப்பட்ட மார்க்கத்தில் பிறந்தும்-இஸ்லாம் மார்க்கத்தின் பிரமுகரான கலீபா இருந்த பிரதான நகரமாகிய துருக்கியில் பிறந்தும் துருக்கியானது கமால்பாஷா என்கின்ற ஒப்பற்ற ஒரு வீரரின் ஆக்ஷியில் இருக்க நேர்ந்ததின் பயனாய் இன்று அப்பெண்மணிகள் “எங்களுக்கு கல்யாணம் வேண்டாம், உத்தியோகம் வேண்டும்” என்று சொல்லக்கூடிய யோக்கியதை அடைந்து விட்டார்கள். அவ்வளவோடு மாத்திரமல்லாமல் பாங்கி முதலிய வியாபார ஸ்தலங்களிலும் அதாவது சதா பல புருஷர்கள் நடமாடும் இடங்களிலும் தங்கள் தலையைக் கத்தரித்துக் கொண்ட அழகான முஸ்லீம் பெண்கள்...