சி.ஏ.ஜி அறிக்கை அம்பலப்படுத்துகிறது பாஜகவுக்கு 77 கோடி நன்கொடை தந்ததற்காக விதிகளை மீறி டெண்டர்
மத்திய தணிக்கைத்துறை – ஒன்றிய ஆட்சி கட்டுப்பாட்டில் உள்ள நிறுவனம். அந்த நிறுவனமே இப்போது மோடி ஆட்சியின் ஊழல் முறைகேடுகளை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்திவருகிறது. • பாஜவுக்கு நிதி தந்தவர்களுக்கும் விதிகளை மீறி திட்ட அனுமதி • சமர்ப்பித்த ஆவணங்கள் தவறாக இருந்தும் அனுமதி வழங்கப்பட்ட அவலம் • உச்சநீதிமன்ற நீதிபதிகள் தாமாக முன்வந்து விசாரிக்கக்கூடிய அடுத்த ஊழல் அம்பலம் பிரதமரின் நெருக்கம் இருந்தால் போதும் கனவிலும் நினைக்காத திட்டங்களும் கிடைக்கும் என்பது ஒன்றிய பாஜ அரசின் சித்தாந்தமாக மாறிவிட்டதோ என்று ஐயப்படுகின்ற அளவுக்கு அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கிறார் அதானி. நாட்டின் எல்லைப் பகுதிகள், கடலோரப் பகுதிகள், துறைமுகங்கள், சுற்றுலா தலங்கள், 100 மாவட்ட தலைமையகங்கள் ஆகியவற்றை இணைக்கும் 34,800 கிமீ நீள சாலை அமைப்பது தான் பாரத் மாலா திட்டத்தின் நோக்கமாகும். நாட்டின் மிகப்பெரிய நெடுஞ்சாலைத் திட்டங்களில் ஒன்று என்பதால் தகுதி வாய்ந்த, முன் அனுபவம் பெற்ற நிறுவனங்களுக்குதான் இந்த திட்டம்...
