Author: admin

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (17) மாநிலப் பிரிவினையில் நேருவின் சதி! வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (17) மாநிலப் பிரிவினையில் நேருவின் சதி! வாலாசா வல்லவன்

‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. புதிய ஆந்திர மாநிலம் உருவாக்க நீதிபதி வாஞ்சு தலைமையிலான குழு ஒன்றை அமைத்தது. இது குறித்து ‘விடுதலை’ ஏட்டில வந்த செய்திகள்: பிரகாசம் – வாஞ்சு சந்திப்பு 100 நிமிடம் பேச்சு: பல்வேறு தரப்பினரும் நீதிபதி வாஞ்சுவிடம் தம் கோரிக்கைகளை முன் வைத்தனர். தோழர் டி. பிரகாசம் நேற்று நீதிபதி வாஞ்சுவைக் கண்டு சுமார் 100 நிமிட நேரம் ஆந்திரப் பிரிவினைப் பிரச்சனைகளைக் குறித்துத் தமது கோரிக்கைகளை வெளியிட்டதாகவும் சென்னையில் இரு இராஜ்ஜியங்களின் தலைநகரங்களும் இருக்க வேண்டு மென்று வற்புறுத்தியதாகவும் தெரிகிறது. (விடுதலை 11.01.1953) கம்யூனிஸ்டுகள் சந்திப்பு: ஆந்திரக் கம்யூனிஸ்ட் கட்சியின் உட்குழுவினர்களாகிய தோழர்கள் டி. நாகி ரெட்டி, சி. ராஜேஸ்வரராவ், பி. வெங்கடேசுவரலு, ஓய். ஈஸ்வராரெட்டி, ஓய்.வி. கிருஷ்ணாராவ் ஆகியவர்கள்  நீதிபதி வாஞ்சுவை நேற்று பிற்பகல் கண்டு ஒரு மணி நேரம் வரை விவாதித்தனர். பொது...

ஏப். 14 புரட்சியாளர் பிறந்த நாள் ஜாதிகளின் பட்டியல்களே இந்து மதம் அம்பேத்கர்

ஏப். 14 புரட்சியாளர் பிறந்த நாள் ஜாதிகளின் பட்டியல்களே இந்து மதம் அம்பேத்கர்

இந்து பார்ப்பனிய மதத்தை எதிர்த்தவர் அம்பேத்கர். “இந்துவாக பிறந்தேன்; ஆனால் இந்துவாக சாக மாட்டேன்” என்று அறிவித்த அவரை ‘இந்துத்துவ’ ஆதரவாளராக சித்தரிக்க சங் பரிவாரங்கள் முயற்சிக்கின்றன. ‘இந்து’ மதம் ஒரு மதமல்ல; அது ஒரு சமூகமும் அல்ல; இந்து மதம் என்பதே ஜாதிகளின் தொகுப்பு என்கிறார் அம்பேத்கர். பொருளாதாரச் சார்பாகப் பார்த்தாலும், ஜாதி நன்மை தரக்கூடியதல்ல. ஜாதி ஏற்பாட்டினால் மக்கள் சமூகம் விருத்தியடைய முடியாது; விருத்தியடையவு மில்லை. எனினும் ஜாதியினால் ஒரு பலன் ஏற்பட்டிருக்கிறது. அதாவது ஜாதி, இந்து சமூகத்தைச் சின்னாபின்னமாக்கிச் சீரழித்து விட்டது. இந்து சமூகம் என்ற வார்த்தைக்கே பொருளில்லை; அது வெறும் கற்பனை. இதை நாம் முதன்முதலில் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்து என்ற பெயரே வெளிநாட்டார் சூட்டியது. தம்மையும் இந்தியச் சுதேசிகளையும் பிரித்துக் காட்டும் பொருட்டு முகம்மதியர் இந்தியச் சுதேசிகளை இந்துக்கள் என்று அழைத்தார்கள். முகம்மதியர் படையெடுப்புக்கு முன்னுள்ள சமஸ்கிருத நூல்களில் ‘இந்து’ என்ற பதமே...

கலைஞர் குறித்து வைகோவின் பேட்டியை  திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது

கலைஞர் குறித்து வைகோவின் பேட்டியை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது

மக்கள் நலக் கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் ‘வைகோ’ சென்னையில் அளித்த பேட்டியில் தி.மு.க. தலைவர் கலைஞர் பற்றி, அவர் பிறந்த ‘ஜாதி’யை மறைமுகமாக சுட்டிக்காட்டி வெளியிட்ட கருத்தை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாக கண்டிக்கிறது. அவர் வெளியிட்ட கருத்துகள் மிகவும் அதிர்ச்சியளித்தன. ‘வாழ்நாளில் செய்த பெரிய குற்றம், மன்னிப்புக் கோருகிறேன்’ என்று வைகோ உடனடியாக வருத்தம் தெரிவித்ததை ஒரு நல்ல முன் மாதிரியாகக் கருதி வரவேற்றாலும், அடிமனதில் ஆழமாக ஊறிருக்கும் உணர்வுகள்தான் ஆவேசம் கொள்ளும்போது, இயல்பாகவே வெளிவரும் என்பதையும் சுட்டிக்காட்ட வேண்டும். மனித குலத்தின் மிகப் பழமையான தொழில் என்று ‘பாலியல் தொழில்’ செய்வோரை சுட்டி, வைகோ இழிவாகப் பேசியதற்காக கலைஞரிடம் மன்னிப்புக் கேட்டதைப்போல், பெண்களிடமும் அவர் மன்னிப்புக் கேட்டிருக்க வேண்டும் என்பதே நமது கருத்து. 1929ஆம் ஆண்டு செங்கல்பட்டில் முதல் சுயமரியாதை மாநாட்டை நடத்திய பெரியார், மாநாட்டுக்கு மக்களை அழைத்தபோது, “தனிப்பட்ட ஸ்திரீகளும் தங்களை விதவைகள் என்றோ, வேசிகள் என்றோ நினைத்துக்...

கர்ப்பகிரக நுழைவு உரிமையை வென்றெடுத்தனர் மராட்டிய பெண்களின் புரட்சி

கர்ப்பகிரக நுழைவு உரிமையை வென்றெடுத்தனர் மராட்டிய பெண்களின் புரட்சி

மகாராஷ்டிரா மாநிலத்தில் அகமது நகர் மாவட்டத்தில் சிங்னாபூர் எனும் ஊரில் சனி பகவான் கோயிலின் கர்ப்பகிரகத்தில் நுழையும் உரிமையைப் பெண்கள் போராடி பெற்றுள்ளனர். இது மகத்தான வெற்றி. கோயில் கருவறைக்குள் பெண்கள் அனுமதிக்கப்படுவதை மறுத்து ‘பூமாதா பெண்கள் படை’ என்ற போராட்ட அமைப்பை பெண்கள் உருவாக்கினார்கள். துருப்தி தேசாய் என்பவர் தலைமையில் 3 மாத காலமாக பெண்கள் போராடினார்கள். பம்பாய் உயர்நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். கோயில் நுழைவு பெண் களின் அடிப்படை உரிமை என்றும், ஆண் களுக்கு உள்ள அத்தனை உரிமையும் பெண் களுக்கும் உண்டு என்றும் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அதிர்ச்சி அடைந்த கோயில் நிர்வாகம், கர்ப்ப கிரகத்துக்குள் இனி ஆண்களுக்கும்  அனுமதி இல்லை என்று அறிவித்தது. நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் நோக்கத்தையே திசை திருப்பிய இந்த முடிவால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கைச் சந்திக்க வேண்டி யிருக்கும் என்று அஞ்சிய கோயில் நிர்வாகம், பிறகு தனது முடிவை மாற்றிக் கொண்டு, பெண்களை...

மூத்த குடிமக்களே கேட்கிறார்கள்!

மூத்த குடிமக்களே கேட்கிறார்கள்!

“கூழுக்கு குழந்தைகள் அழும்போது குழவிக் கல்லுக்கு பாலாபிஷேகமா?” என்ற கேள்வியை பெரியார் இயக்கம், மக்கள் முன் வைத்தது. முடிவெய்திய சுயமரியாதை சுடரொளி சுவரெழுத்து சுப்பையா இதை சுவரெழுத்துகளில் தார் கொண்டு எழுதினார். பக்தியின் பெயரால் பொருள், பணம், நேரம் வீணாக்கப்படும் அவலம் உலகில் இந்த நாட்டைப் போல் வேறு எங்கும் பார்க்க முடியாது. கடந்த ஏப்.8ஆம் தேதி ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேட்டில் வந்த ஒரு செய்தி வியப்பிலாழ்த்தியது. சென்னையில் பெசன்ட் நகரில் ‘அஷ்டலட்சுமி’ கோயில் இருக்கிறது. கூட்டம் அதிகம் வரும் கோயில். பக்தர்கள் தேங்காய் உடைப்பார்கள்; தேங்காய்க்குள் உள்ள ‘இளநீர்’ வீணாக தரையில் ஓடும். பெசன்ட் நகர் குடியிருப்புகளில் வாழும் 50 மூத்த குடிமக்கள் ஒன்று சேர்ந்து இப்படி சிறந்த உணவான இளநீர் வீணாகிறதே என்று கவலைப் பட்டார்கள். மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ததோடு, தமிழக முதல்வருக்கும் கடிதம் எழுதப் போவதாகக் கூறுகிறார்கள். முதலமைச்சரே மூடத்தனத்தில் உறைந்து கிடக்கும்போது அவருக்கு கடிதம்...

கூட்டணிக்கு ஆள் கிடைக்காத பா.ஜ.க.

கூட்டணிக்கு ஆள் கிடைக்காத பா.ஜ.க.

தமிழ்நாட்டில் கூட்டணிக்கு கட்சி கிடைக் காமல் தனித்து விடப்பட்டிருக்கிறது பாரதிய ஜனதா. இந்து மக்கள் கட்சி நடத்தும் அர்ஜுன் சம்பத் கூட பா.ஜ.க.வுடன் கூட்டணி சேரவில்லை. அவர் வேட்பாளர்களை தனியாக நிறுத்தப் போவதாகக் கூறுகிறார். பா.ஜ.க.வின் தேசிய செயலாளர் என்ற பதவியில் இருக்கும் எச். ராஜா என்ற பார்ப்பனர், மத்தியில் அதிகாரத்துக்கு வந்துவிட்ட இறுமாப்பில், தடித்த வார்த்தைகளைப் பேசி வந்தார். இந்தியாவே தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதைப்போல அவர் காட்டிய திமிர் இப்போது பேர் சொல்வதற்குக் கூட ஒரு ஆதரவு கட்சி இல்லாமல் அநாதையாக அலையவிட்டிருக்கிறது. சமத்துவ மக்கள் கட்சியை நடத்தும் சரத்குமாரும், பா.ஜ.க.வோடு கூட்டணி பேசி முடித்த பிறகு ‘அம்போ’ என்று கைவிட்டு மீண்டும் போயஸ் கார்டனுக்கு ஓடி விட்டார். வாசனின் த.மா.க.வுடன் இரண்டு சுற்றுப் பேச்சு வார்த்தை முடிந்து விட்டது என்றார். மாநில தலைவர் தமிழிசை, வாசனும் ‘டாட்டா’ காட்டி விட்டார். “எங்கள் ஆதரவின்றி தமிழ்நாட்டில் எந்தக் கட்சியும் ஆட்சி...

குடும்ப சொத்தில் பெண்களுக்கு உரிமை வழங்கும் சட்டத்தை நீக்கியது மோடி ஆட்சி

குடும்ப சொத்தில் பெண்களுக்கு உரிமை வழங்கும் சட்டத்தை நீக்கியது மோடி ஆட்சி

குடும்ப சொத்தில் ஆண்களைப்போலவே பெண்களுக்கும் உரிமை வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தி, 1929இல் செங்கல்பட்டில் நடந்த தமிழ் மாகாண முதல் சுயமரியாதை மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1989ஆம் ஆண்டு தமிழ்நாட்டில் தி.மு.க. ஆட்சியின்போது அன்றைய முதல்வர் கலைஞர் இதை சட்டமாக்கினார். 2005ஆம் ஆண்டு அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் நாடாளுமன்றத்திலேயே குடும்ப சொத்தில் பெண்களின் பங்கை உறுதிப்படுத்தும் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இது ஏற்கெனவே அமுலில் இருந்து வந்த இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தமாகும். இந்த நிலையில் கடந்த 2015ஆம் ஆண்டு மத்தியில் உள்ள பா.ஜ.க. ஆட்சி தேவையற்ற சட்டங்கள் என்று சுமார் 140 சட்டங்களை நீக்கிவிட்டது. இனி இந்தச் சட்டங்கள் அமுலில் இல்லை என்று அறிவிக்கப்பட்டது. 2005ஆம் ஆண்டு நிறை வேற்றப்பட்ட இந்து வாரிசுரிமை திருத்தச் சட்டமும் இதில் இடம் பெற்றிருக்கிறது. பெண்களுக்கு குடும்ப சொத்தில் உரிய பங்கினை உறுதி செய்யும் ஒரு முக்கியமான சட்டத்தை எந்தவித...

திருப்பூரில் கருத்துகளை விதைத்த பெரியாரியல் பயிலரங்கம்

திருப்பூரில் கருத்துகளை விதைத்த பெரியாரியல் பயிலரங்கம்

திருப்பூரில் கோவை-திருப்பூர் மாவட்டக் கழகங்களின் தோழர்களுக்காக மார்ச் 3ஆம் தேதி ஒருநாள் பெரியார் பயிலரங்கம் சிறப்புடன் நடந்தது. தேர்தல் ஆணையம், தேர்தல் அரசியலில் பங்கேற்காத திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் பயிற்சி முகாம்களுக்கும் ‘கெடுபிடி’ காட்டுகிறது. மேட்டுப்பாளை யத்தில் பயிற்சி முகாம் நடத்த திட்ட மிடப்பட்டது. கோவை மாவட்டக் கழகத் தலைவர் இராமச்சந்திரன், இதற்காக மண்டபங்களை அணுகியபோது, “தேர்தல் ஆணையம் அனுமதியின்றி மண்டபத்தில் நிகழ்வு நடத்த அனுமதிக்க முடியாது. இது தேர்தல் ஆணையம் விதித்துள்ள கட்டுப் பாடு” என்று கூறி விட்டார்கள். இரண்டு நாள் பயிற்சி முகாமில் தோழர்கள் தங்குவதற்கும் அங்கே உணவு வழங்குவதற்கும் தேர்தல் ஆணையத்தின் அதிகாரிகள் அனுமதிக்க மறுத்து விட்டனர். இதனால் கழகப் பொருளாளர் துரைசாமி தமது இல்லத் தோட்டத்திலேயே பந்தல் அமைத்து பயிலரங்கம் நடத்த முன் வந்தார். திட்டமிட்டபடி பயிலரங்கம் நடந்தது. பயிலரங்கத்தில் பெண்கள்  உள்பட 70 தோழர்கள் பங்கேற்றனர். திருப்பூர் மாவட்ட செயலாளர் முகில் ராசு...

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (16) ம.பொ.சி. மட்டுமே சென்னை நகரை மீட்டுக் கொடுத்தாரா? வாலாசா வல்லவன்

வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (16) ம.பொ.சி. மட்டுமே சென்னை நகரை மீட்டுக் கொடுத்தாரா? வாலாசா வல்லவன்

‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. பெரும்பாலான தமிழ்த் தேசியவாதிகளில் ம.பொ.சி. மட்டும்தான் சென்னை நகரை மீட்டுக் கொடுத்தார் என்று நம்புகின்றனர். இது உண்மையல்ல என்பதை அனைவரும் உணர வேண்டும். இந்தியாவில் மொழிவழி மாநிலம்  பிரிப்பதற்காக இந்திய அரசினரால் முதன் முதலில் அமைக்கப்பட்டது  நீதிபதி தார் தலைமையிலான குழு ஆகும். குடிஅரசு தலைவரால் 1948இல் இக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் மொத்தம் நான்கு பேர் இருந்தனர் நீதிபதி எ.கே. தார் தலைவராகவும் டாக்டர் பன்னாலால், திரு ஜகத் நாரியன் லால், பி.சி. பானர்ஜி ஆகியோர் உறுப்பினர் களாகவும் இருந்தனர். இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் எழுதும் குழுவினருக்கு அறிவுரை வழங்குவதற்காக இந்த குழு உருவாக்கப்பட்டது. 10.12.1948இல் இந்திய அரசிடம் இக்குழு அறிக்கையைக் கொடுத்தது. இப்போது உள்ள நிலையில் புதிய மாநிலம் எதையும் உருவாக்கத் தேவை யில்லை என்று இக்குழு கருதியது. அந்த அறிக்கையில் மொழிவாரி மாநிலம்...

கூட்டணி பேரங்களைத் தடுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை

கூட்டணி பேரங்களைத் தடுக்கும் விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை

தேர்தலில் வேட்பாளர் செலவு தொகைக்கு ஆணையம் உச்சவரம்பு நிர்ணயித்துள்ளது. அதைத் தாண்டி கணக்கில் காட்டாமல் கோடி கோடியாக அள்ளி வீசப்படுகிறது. இதைக் கட்டுப்படுத்த தேர்தல் முறையில் சீர்திருத்தங்கள் தேவை என்று பல்வேறு கட்சி யினரும் பொதுநல அமைப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். இப்போது தொகுதி வாரியாக அரசியல் கட்சிகளின் வேட்பாளர் போட்டி என்ற நடைமுறை உள்ளது. இதில் மாற்றம் செய்து, ‘விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை’ கொண்டு வர பரிசீலிக்கலாம் என்று முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் லிங்டோ உள்ளிட்ட ஆய்வாளர்கள் யோசனை அளித்துள்ளனர். இந்நிலையில்தான் அந்தக் கேள்வி எழுகிறது. அது என்ன விகிதாச்சார பிரதிநிதித்துவ முறை? இதன் சிறப்பம்சங்கள் என்ன? விகிதாச்சார பிரதிநிதித்துவ முறையில் வேட்பாளர் இருக்க மாட்டார்கள். மாறாக அரசியல் கட்சிகள்தான் போட்டியிடும். கட்சி களின் பிரதிநிதிகள் பட்டியலை முறைப்படுத்தி முன்கூட்டியே சமர்ப்பிக்க வேண்டும். வாக்குப் பதிவு இயந்திரத்தில் கட்சி சின்னம் மட்டுமே இருக்கும். கட்சிக்கு கிடைக்கும் மொத்த வாக்குகளுக்கேற்ப எம்.பி.,...

வேதக் கல்வி நிறுவனத்துக்காக தலித் மக்களை வெளியேற்றிய ஆர்.எஸ்.எஸ்.

வேதக் கல்வி நிறுவனத்துக்காக தலித் மக்களை வெளியேற்றிய ஆர்.எஸ்.எஸ்.

ஜாதி அமைப்பையும் ‘மனுதர்மத்தை’யும் இலட்சியங்களாகக் கொண்டிருந்த ஆர்.எஸ்.எஸ். – நாக்பூரில் இந்துக்களுக்குள் பாகுபாடு கூடாது என்று பேசியிருப்பதை முன் வைத்து ‘தமிழ் இந்து’ நாளேட்டில் ‘சமஸ்’ எழுதிய கட்டுரை இது. “ஆர்.எஸ்.எஸ். வலிமையான பண்பாட்டு சக்தி” ஜாதியை ஒழிக்க ஆர்.எஸ்.எஸ்.சால்தான் முடியும் என்பது போன்ற கட்டுரையாளரின் கருத்தில் நமக்கு உடன்பாடு இல்லை என்றாலும், ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனி யத்துக்கு ஆதாரமான பல செய்திகள் இதில் இடம் பெற்றுள்ளன. மாறுபட்ட கருத்துகளையும் வெட்டி விடாமல் கட்டுரையை முழுமையாக வெளியிடு கிறோம். ‘ஜாதிய வன்முறைகள் நடக்கும் போதெல் லாம் ஆர்.எஸ்.எஸ். ஏன் வாய்மூடி இருக்கிறது?’ என்ற கேள்வி பொதுவாக எழுவதில்லை. சாதிய அமைப்புக்கு எதிராக எப்போதுமே பேசுவதில்லை என்பதால் தான். ‘இப்போது ஏன் பேசுவதில்லை’ என்ற கேள்வி யும் எழுவதில்லையோ என்றும் தோன்றுகிறது. இந்தியாவை நிலைகுலைய வைத்த எந்தச் சம்பவத்தின்போதும் ஆர்.எஸ்.எஸ். வாய் திறந்து பேசியதாகவோ, களத்தில் போய் நின்றதாகவோ தெரியவில்லை. சுதந்திர இந்தியாவை அதிரவைத்த...

பிரிட்டிஷ் ஆட்சியை வரவேற்றுப் பாடியதே ‘வந்தே மாதரம்’

பிரிட்டிஷ் ஆட்சியை வரவேற்றுப் பாடியதே ‘வந்தே மாதரம்’

இந்தியாவின் தேசிய கீதமான ‘ஜன கனமன’ பாடலுக்கு பதிலாக ‘வந்தே மாதரம்’ பாடலை பாட வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ். பொதுச் செயலாளர் பய்யாஜி ஜோஷி பேசிய செய்தி ஏடுகளில் வெளி வந்தது. இதற்கு கடும் எதிர்ப்புகள் வந்தன. இப்போது பய்யாஜி அப்படி கூறவில்லை என்று ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் மறுத்திருக்கிறார். அதே நேரத்தில் ஆர்.எஸ்.எஸ். பிரச்சார செயலாளராக உள்ள (இந்தப் பொறுப்புக்கு ஆர்.எஸ்.எஸ்.சில் ‘பிரச்சார் பிரமுக்’ என்று சமஸ்கிருதத்தில் பெயர் சூட்டப்பட்டுள்ளது) எம்.ஜி.வைத்யா, பய்யாஜி ஜோஷியின் கருத்துக்கு தனது வலைதளத்தில் விளக்கமளித்துள்ளார். “மூவர்ண தேசியக் கொடியை அரசியல் சட்டம் ஏற்றுள்ளது. இதை மதிக்க வேண்டும்; அதே நேரத்தல், நமது ‘பாரதத்தின்’ பூர்வீக கலாச்சாரத்தின் சின்னமாக காவிக் கொடி ‘தேசியக் கொடி’ உருவாவதற்கு முன்பிருந்தே இருந்து வந்திருக்கிறது. அதேபோல் ‘ஜனகணமன’ பாடல் நமது ‘இராஜ்யம்’ பற்றி கூறுகிறது. ஆனால், ‘வந்தே மாதரம்’, நமது கலாச்சாரத்தின் அடையாளம். எனவே நாம் காவிக் கொடி,...

ஜாதி கலவரங்களை தூண்டும் பேச்சு மதுரை திவிக மனு 04012017

கல்வி, பொருளாதார ரீதியில் மிகவும் பின் தங்கியுள்ள தேவர் சமூக மக்களை முன்னேற்றாமல், அவர்களை மூளை சலவை செய்து வன்முறையாளர்களாக மாற்றும் விதமாகவும், இரு தரப்பினரிடையே ஜாதி கலவரங்களை தூண்டும் விதமாகவும், பட்டியலின மக்களை கொலை செய்யம் படியும், இழிவுபடுத்தியும் பேசிய. -தமிழ் நாடு தேவர் பேரவை தலைவர். முத்தையா என்பவரை கைது செய்யக் கோரியும், இது போன்ற வன்மம் கக்கும் ஜாதி சங்கங்களை தடை செய்ய கோரியும் மதுரை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பிலும், புரட்சிகர இளைஞர் கழகம் சார்பிலும் மதுரை காவல் ஆணையாளர் அவர்களிடம் புகார் மனு 04012017 அன்று மாலை 5 மணிக்கு தோழர் மணிகண்டன் அவர்களால் அளிக்கப்பட்டது. உடன் புரட்சிப் புலிகள் மாவட்ட நிர்வாகிகள் பீமாராவ், அகிலன், ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சிதம்பரம், திவிக மாநகர் பொறுப்பாளர் காமாட்சி ஆகியோர் கலந்து கொண்டனர். விரைந்து நடவடிக்கை எடுப்பதாக காவல் துறையினர் உறுதியளித்துள்ளனர்.

நீதி கட்சி நூற்றாண்டு நிறைவுவிழா கருத்தரங்கம் சென்னை 03012017

சென்னை தெற்கு மாவட்ட தி.மு.க சார்பில் நீதி கட்சி நூற்றாண்டு நிறைவுவிழாவில் மாபெரும் கருத்தரங்கம் திரு மா சுப்பிரமணியன் MLA அவர்கள் தலைமையில் 03012017 மாலை 5.00 மணிக்கு சென்னை நீலாங்கரை சுகன்யா திருமண மண்டபத்தில் நடைபெற்றது இக்கருத்தரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் சமஸ்கிருத திணிப்பு என்னும் தலைப்பிலும், சுப.வீ அவர்கள் நீட் தேர்வு என்ற தலைப்பிலும், கோவை இராமகிருஷ்ணன் அவர்கள் பண்பாட்டு படையெடுப்பு என்ற தலைப்பிலும் நீண்டதொரு கருத்துரை வழங்கினார்கள்

திராவிடர் இயக்க நூற்றாண்டு நிறைவுப் பொதுக் கூட்டம் சூலூர் 01012017

சூலூர் ஒன்றியம் பட்டணம் இந்திரா நகரில் ஆதித் தமிழர் பேரவை சார்பில் திராவிடர் இயக்க நூற்றாண்டு நிறைவுப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக தோழர் கொளத்தூ மணி அவர்கள் கலந்து கொண்டு திவிக மாத இதழ் நிமிர் அறிமுகப்படுத்தி சிறப்புரை ஆற்றினார். விழாவில் தோழர் வழக்குறைஞர் வெண்மணி அவர்கள் மேடையில் புரட்சி பெரியார் முழக்கம் சந்தா தொகைகளை கழக தலைவரிடம் கொடுத்தார். செய்தி தோழர் சூலூர் பன்னீர்செல்வம் பெரியார் முழக்கம் 12012017 இதழ்  

திமுக தலைவர் கலைஞர் உடல்நலத்தை கழகத் தலைவர் விசாரிப்பு சென்னை 02012017

கலைஞரின் உடல் நலம் விசாரிப்பதற்காக அவர் இல்லம் சென்று கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மற்றும் கழகத் தோழர்கள் இன்று சென்றார்கள். அப்போது திமுக பொருளாளர் வரவேற்றார். அவருடன் முன்னாள் அமைச்சர் ஆ.இராசா, பொன்முடி இருந்தார்கள்.      

ஈரோடு தெற்கு திவிக சார்பில் சித்தோட்டில் தெருமுனைக் கூட்டம் 01012017

தந்தை பெரியார் நினைவுநாளை முன்னிட்டு,திராவிடர் விடுதலைக் கழகம்,ஈரோடு தெற்கு மாவட்டம் ,சித்தோடு கிளைக் கழகம் சார்பாக 01.01.2017 ஞாயிறு மாலை 6 மணிக்கு, சித்தோடு சமத்துவபுரத்தில் தெருமுனைக்கூட்டம் நடந்தது.. தோழர்.கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரையாற்றினார்.. திராவிடர் விடுதலைக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்ட தோழர்.ஆசிரியர் செங்கோட்டையன் உரையாற்றினார். ஆசிரியர் வீரா கார்த்திக் மாட்டிறைச்சி அரசியல் பற்றி விளக்கிப் பேசினார். தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி சமூகத்தில் மலிந்து கிடக்கும் மூடநம்பிக்கைகள் குறித்தும்,கடவுளர் கதைகள் குறித்தும், திராவிடர் விடுதலைக் கழகத்தின் பணிகள் குறித்தும் சிறப்புரையாற்றினார்.. தோழர்.சித்தோடு முருகேஷ் சாதி ஒழிப்புப் பாடல்கள், பகுத்தறிவுப் பாடல்கள் பாடினார்.. தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார். கூட்ட ஏற்பாடுகளை சித்தோடு கமலக்கண்ணன்,யாழ் ஸ்டூடியோ எழிலன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.. முன்னதாக சமத்துவபுரம் பகுதியிலுள்ள 120 வீடுகளுக்கும் சென்று துண்டறிக்கைகளை வழங்கினர்.. நமது கூட்டக் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட சமத்துவபுரம் பகுதி மாட்டுக்காரர் முருகன் அனைவருக்கும்...

மகளிர் சந்திப்பு ஈரோடு 31122016

  தமிழ்நாடு அறிவியல் மன்றம் சார்பில் ஈரோட்டில் 31.12.2016இல் நடந்த பெண்கள் சந்திப்பிற்கு திருப்பூர் சரசுவதி தலைமை தாங்கினார். தி.வி.க. மாநில அமைப்புச் செயலாளர் ரத்தினசாமி முன்னிலை வகித்தார். சுதா வரவேற் புரை ஆற்றினார். ‘ஊடகங்களில் பெண்கள்’ என்ற தலைப்பில் இசை மதி, ‘மனுதர்மமும் பெண்களும்’ என்ற தலைப்பில் மணிமொழி, ‘ஆடைக் கட்டுப்பாடு’ என்ற தலைப்பில் தனலட்சுமி, ‘குடும்பத்தில் முதல் பெரியாரியல் வாதியாக இருக்கும் பெண் சந்திக்கும் சிக்கல்கள்’ என்ற தலைப்பில் கோமதி, ‘பெரியாரியல் குடும்பங்களில் குழந்தைகள்’ என்ற தலைப்பில் கனல் மதி ஆகியோர் பேசினர்.  பின்னர் “பெரியாரின் அடிப்படைக் கொள்கைகள் மற்றும் பெண்ணுரிமைக் கோட்பாட்டில் பெரியாரின் தனித்தன்மை” என்ற தலைப்பில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினார். தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவக்குமார் நன்றி கூறினார். ஈரோடு தோழர்கள் நிகழ்ச்சி ஏற்பாடுகளைச் சிறப்பாக செய்திருந்தனர். மதிய உணவிற்குப் பின்னர் பெரியாரின் இல்லம் சென்று பார்வையிட்டனர். பெரியாரின் கொள்கைகளில் ஈடுபாடு...

பெரியார் அம்பேத்கர் நினைவு நாள் பொதுக்கூட்டம் பள்ளிபாளையம் 29122016

தந்தை பெரியார் அம்பேத்கர் நினைவு நாள் பொதுக்கூட்டம் 29122016 அன்று நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியின் தொடக்கத்தில் கருப்பரசன் நாடக குழுவினர் மிகச் சிறப்பாக பெரியாரிய கருத்துக்களால் உலுக்கிய எடுத்தார்.   கழக தலைவர் தோழர்.கொளத்தூர் மணி அவர்களின் உரை பார்க்க சொடுக்கவும் பகுதி 1 கழக தலைவர் தோழர்.கொளத்தூர் மணி அவர்களின் உரை பார்க்க சொடுக்கவும் பகுதி 2

மதுரையில் கழக பொதுக்கூட்டம் !

புரட்சியாளர் அம்பேத்கர் தந்தை பெரியார் நினைவு நாளையொட்டி மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளர் மா.பா. மணிகண்டன் தலைமை வகித்தார். மாநகர் பொறுப்பாளர் காமாட்சி பாண்டி வரவேற்புரையாற்றினார். மாவட்ட அமைப்பாளர் மாப்பிள்ளை சாமி முன்னிலை வகித்தார். தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழக மாவட்ட துனை செயலாளர் பிலால் ராஜா வாழ்த்துரை வழங்கினார். கழக தலைவர் கொளத்தூர் மணி, ஆதித்தமிழர்கட்சித் தலைவர் கு. ஜக்கையன் ,கழக மாநில பரப்புரை செயலாளர் ஆகியோர் சிறப்புரையாற்றினார். மேலூர் சத்திய மூர்த்தி நன்றி தெரிவித்தார். காவை இளவரசனின் மந்திரமா தந்திரமா நிகழ்ச்சி நடைபெற்றது.நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர். தோழர்கள் திருப்பதி, அழகர், பேரையூர் ராஜேஷ்,தளபதி உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாட்டில் மதிமுக நகர செயலாளர், இளங்குமரன் மதிமுக ஒன்றிய செயலாளர், ஜெயராஜ் ஆகியோர் ,தமிழ்நாடு முஸ்லீம் முனேற்ற கழக தோழர்கள்...

தமிழர்களே புரோகித சடங்குகளை புறக்கணிப்பீர்! சேலம் மாநாட்டின் ஒற்றைத் தீர்மானம்

24-12-2016 அன்று சேலத்தில், சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட சித்தர்கள், வள்ளலார், பெரியார் அடிச்சுவட்டில் ‘வேத மரபு மறுப்பு மாநாட்டில்’  கழகத் தலைவர் கொளத்தூர் மணி முன்மொழிந்த ஒற்றை தீர்மானம் : வேதங்கள் – பகவத்கீதை – மனுஸ்மிருதி அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட வேத மரபு – பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தமிழரின் திருக்குறள் மரபுக்கு எதிரானதாகும். வேதங்கள் உருவான காலத்திலிருந்து அதற்கு எதிர்ப்புகளும் தோன்றி விட்டன. பார்ப்பனீயம் இந்த எதிர்ப்புகளை சாதுரியமாக வீழ்த்தியிருப்பதை வரலாறுகள் உணர்த்துகின்றன. சார்வாகர் – சமணர் – புத்தர் – சித்தர்கள் – வடலூர் வள்ளலார் போன்று பலரும் போர்க் கொடி உயர்த்தி இருக்கிறார்கள். இறுதியாக வேதமதமாகிய பார்ப்பன மதம் பிரிட்டிஷ் ஆட்சியைப் பயன்படுத்தி ‘இந்து’ என்ற வலைக்குள் வெகு மக்களை நிர்பந்தமாக  உள்ளிழுத்துக் கொண்டது. இதன் வழியாக சமூக அதிகாரங்களை தனது வசமாக்கிக் கொண்டு அதனூடாக தன்னை அரசியல் அதிகார...

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ முக்கிய அறிவிப்பு

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ முக்கிய அறிவிப்பு

டிசம்பர் மாதத்தோடு சந்தா முடிவடையும் வாசகர்களுக்கு ஜனவரியிலிருந்து இதழ் அனுப்புவது நிறுத்தப்படும். தோழர்கள் சந்தாவை புதுப்பிக்க வேண்டுகிறோம். – நிர்வாகி ஆண்டுக்கட்டணம் ரூ.200 பெரியார் முழக்கம் 29122016 இதழ்

‘சங்கீதா மெடிக்கல்’ பாலசுப்பிரமணியம் ஒரு இலட்சம் நன்கொடை

‘சங்கீதா மெடிக்கல்’ பாலசுப்பிரமணியம் ஒரு இலட்சம் நன்கொடை

மாநாட்டில் கழகத் தோழர் சேலம் ‘சங்கீதா மெடிக்கல்’ பாலசுப்பிரமணியம் மாநாட்டுக்கு ரூ.50,000-மும், கழகக் கட்டமைப்பு நிதிக்கு முதல் தவணையாக ரூ.50,000-மும் கழகத் தலைவர் கொளத்தூர் மணியிடம் வழங்கினார். பெரியார் முழக்கம் 29122016 இதழ்

சேலம் மாநாட்டு களத்திலிருந்து…

திராவிடர் விடுதலைக் கழகம் இதுவரை நடத்திய மாநாடுகளி லிருந்து தனித்துவம் பெற்ற மாநாடாக வேதமரபு மறுப்பு மாநாடு இருந்தது. மாநாட்டு அரங்குகளில் வேத மரபை மறுத்த கபிலர், திருமூலர், வள்ளார் கருத்துகளும், நூற்றாண்டு காணும் எழுத்தாளர் விந்தன் எழுதிய ‘பெரியார் அறிவுச்சுவடி’யில் இடம் பெற்ற வாசகங்களும் பதாகைகளில் எழுதப்பட்டிருந்தன. இவர் களுடன் பெரியார், அம்பேத்கர், புரட்சிக் கவிஞர் கருத்துகளும் வைக்கப்பட்டிருந்தன. காலை அமர்வு நடந்த அரங்கிற்கு கபிலர், திருமூலர் அரங்கு என்றும், மாலை நடந்த திறந்தவெளி மாநாட்டு அரங்கிற்கு தவத்திரு குன்றக்குடி அடிகளார் அரங்கு என்றும் பெயர் சூட்டப்பட் டிருந்தது. இறை நம்பிக்கைக் கொண்ட வேத மரபுகளை எதிர்த்த பார்ப்பன எதிர்ப்பாளர்களின் பெயர்களும் படங்களும் கடவுள் மறுப்பு தத்துவத்தை ஏற்றுக் கொண்ட பெரியார் இயக்கத்தின் மாநாட்டு மேடைகளுக்கு சூட்டப் பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. பெரியாரின் கடவுள் மறுப்பு தத்துவத்தின் நோக்கம், ஒடுக்கப் பட்ட மக்கள் மீதான இழிவு ஒழிப்பு மற்றும் சமூக உரிமை...

இறை நம்பிக்கையாளர்களையும் இன உணர்வாளர்களையும் இணைத்தது – சேலம் மாநாடு

வேத மரபுக்கு எதிராகப் போர்க்குரல்! இந்து மதத்துக்கு தாங்களே உரிமைக் குரியவர்கள் போல் வெகுமக்களை ஏமாற்றி வந்த பார்ப்பனிய மிரட்டலுக்கு பதிலடி தந்துள்ளது சேலம் மாநாடு. வேத மரபினை மறுப்போம், வெகு மக்கள் உரிமைகளை மீட்போம் என்கிற பார்ப்பன இந்துத்துவ எதிர்ப்பு இலட்சிய முழக்கத்தை முன் வைத்து சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சித்தர்கள், வள்ளலார், பெரியார் அடிச்சுவட்டில் வேத மரபு மறுப்பு மாநாடு டிசம்பர் 24, 2016 அன்று சேலம் போஸ் மைதானம் அருகில் உள்ள நேரு கலையரங்கத்தில் இசை நிகழ்ச்சி, கருத்தரங்கம், வீதிநாடகம், கழகத் தலைவருக்கு பிரச்சார ஊர்தி வழங்குதல், புரட்சி பெரியார் முழக்க சந்தா வழங்குதல் கழக கட்டமைப்பு நிதி மற்றும் பொது மாநாடு எழுச்சியுடன் நடைப்பெற்றது. முன்னதாக தந்தை பெரியாரின் 40ஆவது நினைவு நாளை முன்னிட்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு கழகத் தலைவர் கொளத்தூர்...

வேத மரபு மறுப்பு மாநாடு சேலம் 24122016 தீர்மானங்கள்

24-12-2016 அன்று சேலத்தில் ,சேலம் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட சித்தர்கள், வள்ளலார், பெரியார் அடிச்சுவட்டில் ‘வேத மரபு மறுப்பு மாநாட்டில்’  நிறைவேற்றப்பட்ட தீர்மானம். வேதங்கள் – பகவத்கீதை – மனுஸ்மிருதி அடிப்படையில் கட்டமைக்கப்பட்ட வேத மரபு – பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தமிழரின் திருக்குறள் மரபுக்கு எதிரானதாகும். வேதங்கள் உருவான காலத்திலிருந்து அதற்கு எதிர்ப்புகளும் தோன்றிவிட்டன. பார்ப்பனீயம் இந்த எதிர்ப்புகளை சாதுரியமாக வீழ்த்தியிருப்பதை வரலாறுகள் உணர்த்துகின்றன. சார்வாகர் – சமணர் –  புத்தர் – சித்தர்கள் – வடலூர் வள்ளலார் போன்று பலரும் போர்க் கொடி உயர்த்தி இருக்கிறார்கள். இறுதியாக வேதமதமாகிய பார்ப்பன மதம் பிரிட்டிஷ் ஆட்சியைப் பயன்படுத்தி ‘இந்து’ என்ற வலைக்குள் வெகு மக்களை நிர்பந்தமாக  உள்ளிழுத்துக் கொண்டது. இதன் வழியாக சமூக அதிகாரங்களை தனது வசமாக்கிக் கொண்டு அதனூடாக தன்னை அரசியல் அதிகார சக்தியாகவும் மாற்றிக் கொண்டது. அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி –...

புனிதங்களைப் பொசுக்கியவர் : புகழ்பெற்ற அரசியல் அறிஞர் பார்வையில் பெரியார்!

பேராசிரியர் சுனில் கில்னானி இந்தியாவின் முன்னணி அரசியல் அறிஞர். அவருடைய, ‘IDEA OF INDIA’ நூல் இந்தியாவைப் புரிந்துகொள்ள மிகச்சிறந்த நூல் என்று உலகம் முழுக்கப் பரிந்துரைக்கப்படுகிறது. இங்கிலாந்தின் தொன்மை மிகுந்த கிங்ஸ் கல்லூரியில் பேராசிரியராக உள்ளார். அவருடைய, ‘INCARNATIONS: INDIA IN FIFTY LIVES’ நூலில்… தந்தை பெரியார் குறித்து இடம்பெற்ற ‘SNIPER OF THE SACRED COWS’ கட்டுரை ஆசிரியரின் அனுமதி பெற்று மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது: இந்தியாவில் வாழும் அனைத்துப் பெண்களையும் தனியாகப் பிரித்து ஒரு தேசத்தை நாம் கட்டமைப்பதாக வைத்துக்கொள்வோம். இதை, ‘இந்தியப் பெண்கள் குடியரசு’ என்போம். இந்த நாட்டில், 60 கோடி பேர் இருப்பார்கள். ஆண்களால் மோசமாக ஆளப்படும் இந்தியாவுக்கு அடுத்த, பெரிய தேசமாக அது திகழும். அந்தத் தேசத்தின் மனிதவள வளர்ச்சிக் குறியீடானது மியான்மர், ருவாண்டா முதலிய நாடுகளுக்கு இடையே மோசமான இடத்தைப் பெறும். அந்தத் தேசத்தில் பள்ளிக்குச் செல்லும் சராசரி வருடங்கள் அதிர்ச்சி...

திராவிடர் விடுதலைக் கழகம்

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ முக்கிய அறிவிப்பு

டிசம்பர் மாதத்தோடு சந்தா முடிவடையும் வாசகர்களுக்கு ஜனவரியிலிருந்து இதழ் அனுப்புவது நிறுத்தப்படும். தோழர்கள் சந்தாவை புதுப்பிக்க வேண்டுகிறோம். – நிர்வாகி பெரியார் முழக்கம் 22122016 இதழ்

‘துக்ளக்’ சோவின் இனப்பற்று; படம் பிடிக்கிறார், பாவலரேறு பெருஞ்சித்திரனார்

பாவலரேறு பெருஞ்சித்திரனார் 1973ஆம் ஆண்டு ‘தென்மொழி’ ஏட்டில் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி: ‘இராசாசி நினைவாலயத்துக்கு’ இவர்கள் தரும் விளம்பரம், காந்திக்குக் கூடத் தந்ததில்லை. ‘தமிழகத்தில் இராசாசி காலடிப்பட்ட இடங்களை யெல்லாம் புண்ணியதலமாகக் கருத வேண்டும்’ என்று ‘சுதந்திர’க்கட்சி சா. கணேசன் வெளிப்படுத்திய கருத்தை இவர்கள் மிகப் பெருமையுடன் வெளி யிட்டுக் கொண்டனர். (சா. கணேசன் மூளையில் இவ்வளவு அடிமைத்தனம் புகுந்திருக்கக் கூடாது) துக்ளக்கில் ‘சோ’ இவர்கள் இனத் தலைவர் இராசாசியைப் பற்றி இப்படி எழுதி யிருந்தார்: “இராசாசியைப் பாராட்டுவதற்கோ அல்லது அவரிடம் குற்றம் காண் பதற்கோ அவருக்கு நிகரானவர்கள் யாரும் இந்நாட்டில் இல்லாமல் போய் விட்டார்கள்… மனம், சிந்தனை, வாக்கு, செயல் எல்லாவற்றிலும் பரிபூரணத் தூய்மையுடன் விளங்கிய ஒரு அசாதாரணமான மனிதரை மிகச் சாதாரணமாக மதித்துவிட்ட மடத் தனத்தின் விளைவுகளிலிருந்து இந்த நாடு என்று விடுபடுமோ தெரியாது… இராசாசி தெய்வ நம்பிக்கை மிகுந்தவர். அந்த ஒரு கரணியத்திற்காகவாவது அவர் வாழ்ந்த...

நிதி தாரீர் ! “வேத மரபு மறுப்பு மாநாட்டிற்காக…….”

  திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் வரும் 24.12.2016 சனிக்கிழமை காலை முதல் மாலை வரை வேத மரபு மறுப்பு மாநாடு சேலம், நேரு கலையரங்கம், போஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது. கருத்தரங்கம்- பேரணி – கலை நிகழ்ச்சி – பொது மாநாடு என ஒரு நாள் முழுவதும் நடைபெற உள்ள மாநாட்டிற்கான பணியில் கழகத் தோழர்கள் இரவு,பகலாக பணி செய்து வருகிறார்கள். மாநாட்டு பணிக்கான நிதியை கழக ஆதரவாளர்களிடம் பொது மக்களிடம் அணுகி திரட்டியும் கழகத் தோழர்கள் தங்கள் பங்களிப்பை செலுத்தியும் பணியைத் தொடர்ந்து வருகிறார்கள். இதற்கிடையில் மத்திய பா.ஜ.க அரசின் திடீர் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் மாநாட்டு பணிக்கான நிதி திரட்டும் பணி நெருக்கடியை சந்தித்துள்ளது. இம்மாநாட்டில் கழகம் வேத மரபிற்கெதிராக ஒரு புதிய அணிச்சேர்க்கையை முன்மொழிகிறது. இது பல்வேறு தரப்பினரின் வரவேற்பைப் பெற்றுள்ளது. வேத மரபிற்கெதிரான கடவுள் நம்பிக்கையுள்ளவர்களும் கூட பங்கேற்று தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து...

நிமிர் மாத இதழ்

நாள்காட்டி தயார்! சேலம் மாநாட்டில் கிடைக்கும்! நாள்காட்டியின் : விலை : ரூ. 60 தொடர்புக்கு :  தபசி. குமரன், தலைமைக் கழகச் செயலாளர், பேசி: 9941759641   சேலம் மாநாட்டில் கிடைக்கும்! ‘நிமிர்’ கழக மாத இதழ் பேராசிரியர் அரசு வ. கீதா ஆய்வாளர் ஆர். முத்துக்குமார் பேராசிரியர் ஜெயரஞ்சன் எழுத்தாளர் ஜெயராணி கட்டுரைகளுடன் கருத்துக் கருவூலமாக வெளி வருகிறது.

‘கீதை’யின் வஞ்சகப் பின்னணி!

சேலம் மாநாட்டுச் சிந்தனை ட           கீதையின் காலம் குறித்தும் – அது ஒருவரால் தான் இயற்றப்பட்டது என்பது குறித்தும் – குழப்பமான கருத்துகள் நிலவுகின்றன. ட           “சாதியக் கட்டமைப்பின் இறுக்கம் நொறுங்கிக் கொண்டிருந்த கால கட்டத்தில் மீண்டும் சாதியக் கட்டுமானத்தை வலிமைப் படுத்தவே கீதை வந்தது என்கிறார், ஆய்வாளர் டி.பி.ஹில். ட           பாரதப் போரில் அர்ச்சுணனுக்கு, தேரோட்டுபவனாக இருந்த கிருஷ்ணன், அர்ச்சுனனுக்கு கூறிய அறிவுரைதான் கீதை என்ற கருத்தை ஏற்க இயலாது. போர்க் களத்தில் போர்ச் சூழல் பற்றிய உரையாடல்கள் தான் நடந்திருக்க முடியுமே தவிர வேறு பல தத்துவங்கள் பற்றிப் பேச, போர்க் களம் உரிய இடமாக இருக்காது. எனவே கீதையின் உள்ளடக்கம், பிற்காலத்தில் விரிவுபடுத்தி எழுதப் பட்டது என்பது பல ஆய்வாளர் களின் கருத்து. ஆனால் பகவத்கீதை இறைவனால் ‘அருளப்பட்டது’ என்று பார்ப்பனர்கள் கூறு கிறார்கள். ட           கீதை – ஒரு வரலாற்று நிகழ்வு என்பது சந்தேகத்துக்குரியது என்கிறார்...

‘ஆர்யபட்டரை’ வெறுத்து ஒதுக்கிய பார்ப்பனர்கள்

சேலம் மாநாட்டுச் சிந்தனை ட           பார்ப்பனியத்தின் உயிர்நாடி, வேத மதத்தின் அடிப்படைக் கருத்தியல்கள், உபநிடதங்களின் உள்ளுறை, தர்ம சாத்திரங்களின் தகிடுதத்தங்கள் ஆகிய அனைத்தும் கீதையில் உள்ளடங்கியிருப்பதை உணர்ந்து கொண்ட பார்ப்பனர்கள், எதிரிகளை சிதறடிப்பதற்கான ஆயுதமாக கீதையைப் பயன்படுத்திக் கொண்டார்கள். ட           கீதை – புரட்சிகரமாக தோற்றம் காட்டக்கூடிய வெற்று முழக்கங்களை மிக சாமர்த்தியமாக முன்னிறுத்துகிறது. எனவே கீதைக்கு விளக்க உரை எழுதியவர்களும், இந்த முழக்கங்களை முன்னிறுத்துவதையே கலாச் சாரமாக்கிக் கொண்டார்கள். பிறகு இந்துத்துவமே முழக்கங்களில் உயிர் வாழும் ஒரு இயக்கமாகி விட்டது. ட           “கதம்பக் குவியலான கீதைத் தத்துவம், புதிது புதிதான விளக்கங்களை நுழைப்பதற்கு இடமளிக்கும் வகையில்தான் அமைந்துள்ளது. ஆனால் சமூகத் தடைகளைக் கடந்து புதுவழியில் செல்வதற்கு அது வழிகாட்ட வில்லை” என் கிறார் வரலாற்று ஆய்வாளர் கோசாம்பி. ட           கீதையின் முரண்பாடுகளைப் போலவே – இந்துக்களின் பண்பு நலனும் சொல் ஒன்று, செயலொன்றாகியது. உயர்ந்த தத்துவங்களைப் பேசும் அறிவு ஜீவி...

பவுத்தர்களை வீழ்த்திய பார்ப்பனர்கள்

சேலம் வேத மரபு மறுப்பு மாநாட்டு சிந்தனை வேத மரபுகளை எதிர்த்தவர்களை பார்ப்பனர்கள் சூழ்ச்சிகரமாக வீழ்த்திய வரலாறு – கடந்த இரண்டு இதழ்களில் வெளி வந்தது. பவுத்தத்தை வேத மரபு வீழ்த்தியது எப்படி? ட           பவுத்தத்தை முற்றிலுமாக ஒழித்து, மீண்டும் வேதத்தை அரியணையில் ஏற்றத் துடித்தார்கள் பார்ப்பனர்கள். இதற்கு – முதலில் கடவுள் மறுப்புக் கொள்கையாளர்களின் படைப்பு இலக்கி யங்களை எல்லாம் அழித்து ஒழிக்கும் வேலையைத் துவக்கினர். குறிப்பாக நாத்திகத்தை வலியுறுத்திய லோகாயதவாதிகளின் இலக்கி யங்களை முழுமையாக மீட்கவே முடியாதவாறு அழித்து ஒழித்து விட்டனர். இந்த லோகாயதர் களின் வேத-கடவுள் மறுப்பு சிந்தனைகளை எதிர்த்தும், இகழ்ந்தும் பார்ப்பனர்கள் எழுதிய நூல்களிலிருந்து தான் துண்டுதுண்டாக லோகாயத வாதம் பற்றிய கருத்துகள் காணக் கிடக்கின்றன. இதுபற்றி பிரபல ஆய்வாளர்  பிரசாத் சட்போ பாத்யாயா இவ்வாறு கூறுகிறார்: “பிற சிந்தனை மரபுகளின் படைப்பிலக்கியங் களாவது ஓரளவுக்குக் கிடைக்கப் பெற்றுள்ளன. ஆனால் லோகாயதர்களின் உன்னதப் படைப் பிலக்கியங்களின்...

கோயிலுக்கு வராதே!

“மனம் புண்படுகிறது என்று நினைப்பவர்கள் எல்லாம் எனது நாடகத்தைப் பார்க்க வரவேண்டாம்” என்று அறிவித்தார், மறைந்த புரட்சி நடிகர் நடிகவேள் எம்.ஆர். ராதா. இது நேர்மையான ஒரு கடவுள் “மறுப்பாளனின்” பிரகடனம்! “கோயில் கருவறைக்குள் நுழையாதே! இங்கே நான் மட்டுமே கடவுளின் பிரதிநிதி. இதோ பார், எங்களிடம் உச்சநீதிமன்றத் தீர்ப்பே இருக்கிறது” என்று பூணூல் மார்பை தட்டிக் கொண்டே பேசுகிறார்கள் அர்ச்சகப் பார்ப்பனர்கள். இது பார்ப்பனத் திமிரின் அடையாளம். “உன்னை இழிவு செய்யும் கோயிலுக்கு ஏன் மானங்கெட்டுப் போகிறாய்? அங்கே அர்ச்சகப் பார்ப்பானிடம் தட்சணையை கொடுத்துவிட்டு, கை கட்டி கர்ப்பகிரகத்துக்கு வெளியே நிற்கிறாயே; இது அவமான மில்லையா? அப்படியே உனக்கு பக்தி பீறிட்டு நிற்கிறது என்றால் உடைக்க வேண்டிய தேங்காயையும், கொளுத்த வேண்டிய கற்பூரத்தையும் கோயிலுக்கு வெளியே உடைத்து, நீயே வீட்டுக்கு எடுத்துக் கொண்டு போ. ‘சூத்திரன்’ என்று இழிவுபடுத்தும் அர்ச்சகப் பார்ப்பானிடம் கை கட்டி நிற்காதே.” இது பெரியாரின் சுயமரியாதைக்கான...

மோடி அறிவிப்பால் கறுப்புப் பணம் ஒழிந்து விடுமா? பேராசிரியர் ஜெயரஞ்சன்

சராசரியாக ஆண்டுக்கு ரூ.35 லட்சம் கோடி கள்ளப் பணம் பன்னாட்டு வர்த்தகம் வாயிலாக வெளியேறுகிறது கறுப்புப் பணம் உள்நாட்டில் முதலீடு செய்யப்படுவது மிகவும் சொற்பம். இதுகுறித்து ஆய்வு நடத்திய தேவ்கர் என்ற பொருளாதார வல்லுநர், 2010ஆம் ஆண்டு அவர் வெளியிட்ட ‘The Driver and Dynamics of Illicit Financial Flows’ என்ற நெடிய ஆய்வுக் கட்டுரையில், இந்திய நாட்டில் உருவாகும் கறுப்புப் பணத்தில் ஐந்தில் ஒரு பகுதி மட்டுமே உள்நாட்டு சொத்துகளில் முதலீடு செய்யப்படு வதாக நிறுவுகிறார். மீதமுள்ள கறுப்புப் பணம் அனைத்தும் வெளிநாடுகளில்தான் முதலீடு செய்யப்படு கிறது. இத்தகைய பணம் அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்குத்தான் பெருமளவில் சென்றடைகின்றன என்பதையும் அவர் பொதுவெளியில் உள்ள புள்ளி விவரங்களைப் பயன்படுத்தி கண்டுபிடித்துள்ளார். இவ்வாறு வெளியேறும் பணத்தின் அளவின்படி பார்த்தால் இந்தியா, உலகிலேயே மூன்றாவது இடத்தில் உள்ளது. மிக முக்கியமாக, அவரது ஆய்வின் வாயிலாக நாம் நமது நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு எடுத்துச் செல்லப்பட்ட கள்ளப்...

மறுவாழ்வு ஆணையருக்கு தமிழீழ ஏதிலியர் உரிமை கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை

அய்யா!       வணக்கம். அண்மையில் வந்துபோன வர்தா புயல் தந்த பாதிப்புகளை நீங்கள் அறிவீர்கள். அரசு உடனடி நடவடிக்கைகள் செய்ததும் சென்னை மாநகராட்சி தொய்வின்றிச் செய்யும் பணிகளும் நம்மை மீட்டுள்ளன.  முழுமையாக மீளவேண்டியுள்ளது என்பது வேறு செய்தி.        புலம்பெயர்ந்து இங்கே வாழ்ந்து வரும் ஈழத் தமிழரின் முகாம்கள் எந்த நிலையில் உள்ளன என்பதை நீங்கள் இந்நேரம் அறிந்திருக்கக் கூடும்.எவ்வித  மீட்புப்  பணிகளும் குறிப்பாக கும்முடிப்பூண்டி முகாமில் நடைபெறவில்லை என்பதை உங்கள் கவனத்திற்குக்  கொண்டு வர விழைகிறோம்.        இப்போதுவரை அங்கே மின்சாரம் மருந்துக்கும் இல்லை. அதனால் தண்ணீரை மேலேற்ற முடியவில்லை. குடிப்பதற்கோ கழுவிக்கொள்வதற்கோ  தண்ணீர் இன்றி தவிக்கின்றனர். சில தன்னார்வலர்கள் உதவியால் ஏதோ அடிப்படைத் தேவைகளை சிக்கனமாய் நிறைவு செய்துகொள்ளும் அவலநிலை. இரவெல்லாம் இருண்ட வனவாழ்வு வாழ்கின்றனர். மரங்கள் வீடுகள் மேல் விழுந்ததை அப்புறப்படுத்த அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத் தரப்பில் எவ்வித முயற்சியும் இல்லை....

”புயலில் அழிந்த ஈழத் தமிழர் முகாம் மீட்டெடுக்க தலைவர் கொளத்தூர் மணி வேண்டுகோள் !”

அன்பிற்குரியீர்! வணக்கம். வர்தா புயலால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் எண்ணிலடங்காதவை. இன்னும் சென்னை மக்கள் வாழ்வு முழுமையாக மீண்டுவிடவில்லை. புயல் கடந்த அடுத்த நாளிலிருந்து மீட்புப் பணிகள் சென்னையெங்கும் நடைபெற்று வருவதை மறுக்க முடியாது. இன்னும் சீராகாதது புயல் வேகத்தின் அளவை நமக்கு உணர்த்துவதாகவே உள்ளன. அப்படி ஒரு நாளில் நம் வாழ்வை அடியோடு புரட்டிப் போட்டுவிட்டது வர்தா புயல். அரசு வேரோடு சரிந்த மரங்கள், மின்கம்பங்கள் உள்ளிட்டவற்றை அப்புறப்படுத்தி வருகிறது. கொஞ்சம் கொஞ்சமாக மின்சாரத்தை தர முயற்சிக்கிறது. நமக்கு இப்படி எல்லாமும் முழுமையாக இல்லாவிட்டாலும் நடந்து கொண்டுள்ளன. ஆனால் ஈழத் தமிழர் முகாம்களின் நிலை முற்றிலும் வேறாக உள்ளது. புயல் வந்து போய் ஒரு வாரமாகியும் இப்போது வரை கும்முடிப்பூண்டி ஈழத் தமிழர் முகாமில் எந்தப் பணியையும் இதுவரைக்கும் அரசு நிர்வாகம் தொடங்கவேயில்லை. கூரைகளாலும் சிமிண்ட் ஓடுகளாலும் வானம் மறைத்த வீடுகள், இன்னும் சரியாகச் சொன்னால் கூடுகள்தான் அவை. அனைத்தும் பெயர்ந்து...

”வேத மரபு மறுப்பு மாநாடு” சேலம் 24122016

திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில்… ”வேத மரபு மறுப்பு மாநாடு” கருத்தரங்கம் – பேரணி – பொதுமாநாடு. நாள் : 24.12.2016 சனிக்கிழமை, இடம் : நேரு கலையரங்கம்,போஸ் மைதானம்,சேலம். ✪ கழகத்தலைவருக்கு ஊர்தி வழங்குதல், ✪ கட்டமைப்பு நிதி வழங்குதல், ✪ புரட்சிப்பெரியார் முழக்கம் சந்தா ஒப்படைத்தல். ✪ ”நிமிர்” – கழக மாத இதழ் வெளியீடு

கட்டைமைப்பு நிதி வழங்கும் விழா ! 30112016 குருவரெட்டியூர்

ஈரோடு வடக்கு மாவட்டத்தின் சார்பில் முதல் தவணையாக கழக தலைவர் அவர்களிடம் ரூ.1,10,000.00 (ரூபாய் ஒரு லட்சத்து பத்தாயிரம் மட்டும்) வழங்கப்பட்டது. கழக தலைமையினால் அறிவிக்கப்பட்டு நடைபெற்றுக்கொண்டிருக்கும் கழக கட்டமைப்பிற்கு கழக தோழர்களால் நிதி சேகரிப்பு நிகழ்வு நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.அதன் ஒரு பகுதியாக ஈரோடு வடக்குமாவட்டத்தின் சார்பில் அதன் மாவட்ட தலைவர் தோழர் நாத்திக ஜோதி அவர்கள் தலைமையில் 30.11.2016 அன்று குருவரெட்டியூரில் ”கட்டமைப்பு நிதி பெரும் விழா” நடைபெற்றது. கழக ஆதரவாளர்களிடம் நிதி திரட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் ஆதரவாளர்கள் ஏராளமாக கலந்து கொண்டு கழகத்திற்கு நிதி உதவி அளித்து ஆதரவளித்தனர். அந்நிகழ்வில் மட்டும் திரட்டப்பட்ட நிதியான ஒரு லட்சத்து பத்தாயிரம் ரூபாயை முதல் தவணை நிதியாக கழக தலைவர் அவர்களிடம் ஈரோடு கிழக்கு மாவட்ட செயலாளர் தோழர் நாத்திகஜோதி அளித்தார். இந்நிதி வழங்கும் நிகழ்வில் அமைப்புச்செயலாளர் தோழர் ஈரோடு ரத்தினசாமி,பொருளாளர் தோழர் திருப்பூர் துரைசாமி,தோழர் காவலாண்டியூர் ஈஸ்வரன்,தோழர் செட்டியூர்...

கட்டமைப்பு நிதி வழங்கும் நிகழ்வு மற்றும் புதிய பொறுப்பாளர்கள் திருப்பூர் 11122016

திருப்பூர் மாவட்ட திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் கழக தலைவரிடம் முதல் தவணையாக ரூ.1,67,500(ரூபாய் ஒரு லட்சத்து அறுபத்தி ஏழாயிரத்து ஐநூறு மட்டும்) வழங்கப்பட்டது. திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் கழக கட்டமைப்பு நிதி வழங்கும் நிகழ்வு 11.12.2016 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணியளவில் திருப்பூர், வீரபாண்டி பிரிவு, கழக பொருளாளர் தோழர் துரைசாமி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. கழக அமைப்புச் செயலாளர் தோழர் ஈரோடு ரத்தினசாமி, அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் சிவகாமி, தோழர் சூலூர் பன்னீர்செல்வம், சங்கீதா, யமுனா, கோவை கிருஷ்ணன், நிர்மல், அகிலன், நீதிராசன், கார்த்தி, பரிமளராசன் உள்ளிட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். நிதி வழங்கியவர்கள் விவரம் : முகில் ராசு – 70,000 (முதல் தவணை) துரைசாமி – 50,000 ராமசாமி – 10,000 முத்து – 10,000 பார்வதி, நீதிராசன் – 5000 சாலினி, சத்யமூர்த்தி – 2000. பிரசாந்த் – 1000 அகிலன் -5,000 இளஞாயிறு...

தோழர் பாரூக் கோவையில் வரவேற்பு

75 நாள் சிறை வாசம் 23 சசிகுமார் கொலையினால் ஏற்படுத்தப்பட்ட கலவரத்தில் கடைக்கு சென்ற திவிக தோழர் பெயர் பாரூக் என்ற ஒற்றை காரணத்திற்காக நள்ளிரவில் கைது செய்ப்பட்டு சேலம் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார் அடுத்த சிலதினங்களில் தோழர் மீது குண்டாஸ் பாய்ந்தது கடந்த மாதம் 8 ம் தேதி கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் சென்னையில் அறிவுரை குழுமத்தில் வாதாடினார் தோழருக்காக மட்டும் அல்லாமல் கோவையில் நடந்த கலவரத்தை அப்பட்டமாக்கினார் உடைந்தது குண்டாஸ் அனைவர் மீதும் தோழர் கலையரசன் வழக்குறைஞரால் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டு இன்று பினையில் விடுதலை பெற்றார் தலைவருடன் தலைமைகழக அமைப்பாளர் இரத்தினசாமி தோழர்கள் பன்னீர்செல்வம், சேலம் மாவட்ட தோழர்கள், ஈரோடு தோழர்கள் அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி, கவிஞர்கனல்மதி, திருப்பூர் முகில்ராசு, சங்கீதா உள்ளிட்ட தோழர்கள் அனைத்து விதத்திலும் உதவிகரமாக இருந்த தோழர் நங்கவள்ளி கிருஷ்னன் ,திருசங்கோடு வைரவேல் உள்ளிட்ட தோழர்கள் அனைவருக்கும் வழக்கறிஞர்...

கழகத் தோழர் பாரூக் விடுதலை !

கழக தோழர் முகமது பாரூக் அவர்கள் மீது புனையப்பட்ட குண்டர் தடுப்புச் சட்டத்தை அறிவுரை குழு (Advisory board) 30.11.2016 அன்று தள்ளுபடி செய்து பிறப்பித்துள்ள ஆணை ! குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்ட கழக தோழர் பாரூக் அவர்கள் இன்று 07.12.2016 சேலம் சிறையிலிருந்து விடுதலை செய்யப்பட்டார். தோழருக்கு கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கறுப்பாடை அணிவித்து வரவேற்றார். கழக அமைப்புச் செயலாளர் தோழர் ஈரோடு ரத்தினசாமி,சேலம் மாவட்ட செயலாளர் தோழர் சேலம் டேவிட்,கோவை மாவட்ட அமைப்பாளர் நேருதாஸ்,சூலூர் பன்னீர் செல்வம்,நங்கவள்ளி கிருஷ்ணன் உள்ளிட்ட கழக தோழர்கள் நிர்வாகிகள் தோழர் பாரூக் அவர்களுக்கு சேலம் சிறைவாயிலில் வரவேற்பளித்தனர்.

வெங்கட்-இராஜலட்சுமி ஜாதி மறுப்புத் திருமணம்

4.12.2016 ஞாயிறு அன்று திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் செ.வெங்கட் (எ) வெங்கடேசனுக்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தோழர் இராஜலட்சுமிக்கும் எமகண்ட நேரத்தில் ஜாதி மறுத்து தாலிமறுத்து சுயமரியாதை திருமணமாக கோவையில் நடைபெற்றது. தோழர் சூலூர் பன்னீர்செல்வம் திருமணத்தை நடத்தி வைத்தார். இதில் திக, தபெதிக,திவிக தோழர்கள் மற்றும் நண்பர்கள், உறவினர்கள் கலந்து கொண்டனர். இணையர்கள் இணையேற்பின் நினைவாக ‘புரட்சிப் பெரியார் முழக்க’ இதழ் வளர்ச்சி நிதியாக 1000 ரூபாயும் கழக கட்டமைப்பு நிதியாக 1000 ரூபாயும் சேர்த்து 2000 ரூபாயை சூலூர் பன்னீர் செல்வத்திடம் வழங்கினார்கள். பெரியார் முழக்கம் 15122016 இதழ்

வேத மரபை எதிர்த்துப் போராடிய வைகுண்ட சாமிகள்

வேத மரபை எதிர்த்துப் போராடிய வைகுண்ட சாமிகள்

வேத மரபை எதிர்த்த முன்னோடிகளில் ஒருவர் வைகுண்ட சாமிகள். கன்யாகுமரிக்கு அருகே பூவண்டன் தோப்பு எனும் கிராமத்தில் ஓர் ஏழை நாடார் குடும்பத்தில் 1809ஆம் ஆண்டு பிறந்தார். இவருக்கு பெற்றோர் சூட்டிய பெயர் ‘முடி சூடும் பெருமாள்’. ஆனால் அந்த காலத்தில் மன்னர்கள் அல்லது பார்ப்பன உயர்ஜாதியினர் வைத்துக் கொள்ளும் பெயர்களை ‘தாழ்ந்த’ ஜாதியினராக கருதப்பட்டவர்கள் வைத்துக் கொள்ளக் கூடாது. எனவே இப்பெயர் வைத்தமைக்காக பார்ப்பனர், உயர்ஜாதியினர் அரசு அதிகாரிகளிடம் புகார் செய்தனர். அவர்களும் பெயரை மாற்ற உத்தரவிட்டனர். வேறு வழியின்றி பெற்றோர்கள், பெயரை ‘முத்துக்குட்டி’ என்று மாற்றினர். 1833இலிருந்து பொது வாழ்வில் இறங்கினார். தொடக்கத்தில் விஷ்ணு பக்தராக இருந்த இவர், தனது பெயரை ‘வைகுண்டர்’ என மாற்றிக் கொண்டார். குமரிப் பகுதி அப்போது திருவாங்கூர் சமஸ்தானத்தின் நிர்வாகத்தில் இருந்தது. ஜாதி வெறியோடு ஆட்சி நடத்திய அரசர்கள், ஒடுக்கப்பட்ட ஜாதியினரை அடிமைகளாக நடத்தினர். அநியாயமாக வரி போட்டனர். மன்னனை எதிர்த்து துணிவோடு...