வரலாற்றுப் புரட்டர்களுக்கு மறுப்பு (17) மாநிலப் பிரிவினையில் நேருவின் சதி! வாலாசா வல்லவன்
‘குணா’வின் வாரிசாக கிளம்பியுள்ள ஒருவர் அண்மையில் வெளியிட்டுள்ள நூலுக்கு இது ஒரு மறுப்பு. புதிய ஆந்திர மாநிலம் உருவாக்க நீதிபதி வாஞ்சு தலைமையிலான குழு ஒன்றை அமைத்தது. இது குறித்து ‘விடுதலை’ ஏட்டில வந்த செய்திகள்: பிரகாசம் – வாஞ்சு சந்திப்பு 100 நிமிடம் பேச்சு: பல்வேறு தரப்பினரும் நீதிபதி வாஞ்சுவிடம் தம் கோரிக்கைகளை முன் வைத்தனர். தோழர் டி. பிரகாசம் நேற்று நீதிபதி வாஞ்சுவைக் கண்டு சுமார் 100 நிமிட நேரம் ஆந்திரப் பிரிவினைப் பிரச்சனைகளைக் குறித்துத் தமது கோரிக்கைகளை வெளியிட்டதாகவும் சென்னையில் இரு இராஜ்ஜியங்களின் தலைநகரங்களும் இருக்க வேண்டு மென்று வற்புறுத்தியதாகவும் தெரிகிறது. (விடுதலை 11.01.1953) கம்யூனிஸ்டுகள் சந்திப்பு: ஆந்திரக் கம்யூனிஸ்ட் கட்சியின் உட்குழுவினர்களாகிய தோழர்கள் டி. நாகி ரெட்டி, சி. ராஜேஸ்வரராவ், பி. வெங்கடேசுவரலு, ஓய். ஈஸ்வராரெட்டி, ஓய்.வி. கிருஷ்ணாராவ் ஆகியவர்கள் நீதிபதி வாஞ்சுவை நேற்று பிற்பகல் கண்டு ஒரு மணி நேரம் வரை விவாதித்தனர். பொது...