ஈரோடு தெற்கு திவிக சார்பில் சித்தோட்டில் தெருமுனைக் கூட்டம் 01012017

தந்தை பெரியார் நினைவுநாளை முன்னிட்டு,திராவிடர் விடுதலைக் கழகம்,ஈரோடு தெற்கு மாவட்டம் ,சித்தோடு கிளைக் கழகம் சார்பாக 01.01.2017 ஞாயிறு மாலை 6 மணிக்கு, சித்தோடு சமத்துவபுரத்தில் தெருமுனைக்கூட்டம் நடந்தது..

தோழர்.கிருஷ்ணமூர்த்தி வரவேற்புரையாற்றினார்..

திராவிடர் விடுதலைக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்ட தோழர்.ஆசிரியர் செங்கோட்டையன் உரையாற்றினார்.

ஆசிரியர் வீரா கார்த்திக் மாட்டிறைச்சி அரசியல் பற்றி விளக்கிப் பேசினார்.

தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி சமூகத்தில் மலிந்து கிடக்கும் மூடநம்பிக்கைகள் குறித்தும்,கடவுளர் கதைகள் குறித்தும், திராவிடர் விடுதலைக் கழகத்தின் பணிகள் குறித்தும் சிறப்புரையாற்றினார்..
தோழர்.சித்தோடு முருகேஷ் சாதி ஒழிப்புப் பாடல்கள், பகுத்தறிவுப் பாடல்கள் பாடினார்..

தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் ஆசிரியர் சிவக்குமார் நன்றி கூறினார்.
கூட்ட ஏற்பாடுகளை சித்தோடு கமலக்கண்ணன்,யாழ் ஸ்டூடியோ எழிலன் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.. முன்னதாக சமத்துவபுரம் பகுதியிலுள்ள 120 வீடுகளுக்கும் சென்று துண்டறிக்கைகளை வழங்கினர்..

நமது கூட்டக் கருத்துகளால் ஈர்க்கப்பட்ட சமத்துவபுரம் பகுதி மாட்டுக்காரர் முருகன் அனைவருக்கும் தேநீர் வழங்கினார்..

கூட்டத்தில் சித்தோடு பகுதியைச் சார்ந்த 78 வயது பெரியார் தொண்டர் கலந்து கொண்டு நமது பிரச்சாரத்தைப் பாராட்டினார்.

கூட்டத்தில் தோழர்.சண்முகப்பிரியன்,தட்டாங்குட்டை பிரபு,சித்தோடு பிரபாகரன், ஜே.ஜே நகர் சங்கர்,சி.எம் நகர் பிரபு,சித்தோடு நடராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்..

0f351965-5b34-47e1-8091-6485e5b153d4 6a3acdd0-74d0-441d-aad8-d9a57d780d01 dbd5db0a-d8e0-40aa-a8a8-c1cd117143c6

பெரியார் முழக்கம் 12012017 இதழ்

You may also like...