தலையங்கம் திருக்குறளுக்குக் ‘காவிச் சாயம்’
தமிழக ஆளுநர் தமிழர் மறையான திருக்குறளையும் பக்தி இலக்கியத்தில் இணைத்து வேதங்களில் உள்ள கருத்துகள் திருக்குறளிலும் இருக்கிறது என்கிறார். திருக்குறளை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்த ஜி.யு. போப், திருக்குறளின் பக்தி உள்ளடக்கத்தை சீர்குலைத்து விட்டார் என்றும் குற்றம் சாட்டுகிறார். தமிழ் அறிஞர்கள் பலரும் திருக்குறளில் பக்தி உள்ளடக்கத்தைப் பேசியிருப் பதாக தமிழ் அறிஞர்களை தனக்கு ஆதரவாக இழுத்துக் கொள்கிறார். பரிமேலழகர், நாகசாமி, கி.வா. ஜெகநாதன், உ.வே.சா. போன்ற பார்ப்பனர்கள் திருக்குறளில் கூறப்படும் தர்மம் – மனுதர்மம் என்று கூறி, திருக்குறளுக்கு மதச்சாயம் பூச முயன்றனர். மாறாக தேவநேயப் பாவாணர், பாவலர் பெருஞ்சித்திரனார், மறைமலை யடிகள், வள்ளலார் இராமலிங்க அடிகளார், தெ.பொ. மீனாட்சி சுந்தரனார், திரு.வி.க., வ.உ.சிதம்பரனார், நாவலர் நெடுஞ்செழியன், கலைஞர் போன்று குறளுக்கு உரை எழுதிய ஏராளமான தமிழ் அறிஞர்கள் வைதீகத்துக்கு எதிரானதே ‘குறள்’ என்ற கருத்தையே நிறுவியுள்ளனர். வேதங்கள் எழுத்து வடிவம் பெற்றது மிக மிக பிற் காலத்தில் தான்....