Author: admin

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’  பத்திரிகையின் உரிமை விளக்க அறிவிக்கை 0

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பத்திரிகையின் உரிமை விளக்க அறிவிக்கை

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பத்திரிகையின் உரிமை விளக்க அறிவிக்கை படிவம் 4 (8வது விதி காண்க) 1. வெளியாகும் இடம் : 29, பத்திரிகையாளர் குடியிருப்பு, சென்னை-41. 2. வெளியாகும் காலம் : வாரம் ஒரு முறை 3. அச்சடிப்பவர் பெயர் : எஸ். தீமாஸ் இனம் : தமிழர் முகவரி லில்லி சூசை ஆப்செட், 8 முகமது உசேன் சந்து, சென்னை-14. 4. பதிப்பாளர் பெயர் : க. இராசேந்திரன் இனம் : தமிழர் முகவரி : 29, பத்திரிகையாளர் குடியிருப்பு, சென்னை-41. 5. ஆசிரியர் பெயர் : க. இராசேந்திரன் இனம் : தமிழர் முகவரி : 29, பத்திரிகையாளர் குடியிருப்பு, சென்னை-41. 6. ஒரு விழுக்காட்டிற்கு மேல் முதலீடு செய்யப்பட்டுள்ள பத்திரிகை உரிமையாளரும் கூட்டாளிகளும் பெயரும் முகவரியும் : இல்லை நான் இதன் மூலம் மேலே காணப்படும் விவரங்கள் யாவும் எனக்குத் தெரிந்த வரை முற்றிலும் உண்மையென நம்பகமாக அறிவிக்கிறேன். நாள்: 26-03-2015...

‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்!’-ஏன்? – துண்டறிக்கை 0

‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்!’-ஏன்? – துண்டறிக்கை

இதைத்தான் தாழ்த்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தமிழர் சமுதாய இளைஞர்களிடம் எடுத்துக் கூற உரிமையுடன் வந்திருக்கிறோம். பரம்பரை பரம்பரையாக நமது பாட்டன், பாட்டி காலங்களிலிருந்து நமக்கு ஜாதியைத்தான் சொல்லி சொல்லி வளர்த்தார்கள். ஜாதிப் பெருமையெல்லாம் பேசினோம்; என்ன பயன் கண்டோம்? இப்போதும் – தமிழர்கள் ஒன்று திரள விடாமல் நம்மைத் தடுப்பது எது? ஜாதிதான்! சொந்த ஜாதிகளுக்குள்ளேயே பங்காளிகளுக்குள் சண்டை; சொத்து சண்டை; ஊருக்குள் ஜாதிச் சண்டை; தாழ்த்தப்பட்டோர் மீது பிற்படுத்தப்பட்டவர்கள் நடத்தும் ஜாதிய ஒடுக்குமுறை; “கைகட்டி நின்ற பயல் நிமிர்ந்து போகிறானே, என்ன திமிர்?” என்ற ஜாதி ஆதிக்க சிந்தனை, சக மனிதர்களை மனிதர்களாகவே பார்க்க மறுக்க வைக்கிறது ஜாதி. கீழ் ஜாதி, படிக்கக் கூடாத ஜாதி, கூலிக்கார ஜாதி, எடுபிடி ஜாதி, அப்பன் தொழிலைச் செய்ய வேண்டிய ஜாதிகளாகக் கிடந்ததுதானே. நமது சமுதாயம். நமது சகோதரிகள் – வீட்டில் அடிமைகளாக்கப்பட்டு, பெண்கள் என்றால் வீட்டுக்கான வேலையாள் என்று தானே...

வழக்கறிஞர்கள் சமூக நீதி போராட்டத்தை ஒடுக்க பார்ப்பனர்கள் திரைமறைவு சதி! 0

வழக்கறிஞர்கள் சமூக நீதி போராட்டத்தை ஒடுக்க பார்ப்பனர்கள் திரைமறைவு சதி!

உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே 7 பார்ப்பனர் நீதிபதிகளாக தங்கள் விகிதாச்சாரத்துக்கு அதிகமாக உள்ள நிலையில் தலைமை நீதிபதியாக வந்துள்ள காஷ்மீர் பார்ப்பனர் – மேலும் பார்ப்பனர், முதலியார், கவுண்டர் பிரிவைச் சார்ந்தவர்களுக்கே கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்கி, முதல் பட்டியலை அனுப்பியுள்ளதாக நீதிமன்ற வட்டாரங்களில் கூறப்படுகிறது. இந்த நிலையில் சமூகநீதிக்குப் போராடும் வழக்கறிஞர்கள் மற்றும் சமூக நீதி அமைப்புகளின் கோரிக்கைகளை திசை திருப்பிட பார்ப்பன ஆதிக்க சக்திகள் தீவிரம் காட்டி வருகின்றன. முற்றுகைப் போராட்டம் நடக்கவிருந்த 16ஆம் தேதி அன்று ‘தமிழ் இந்து’, ‘ஆங்கில இந்து’ நாளேடுகளில் போராட்டத்துக்கு எதிரான கட்டுரைகளை முன்னாள் நீதிபதி சந்துரு எழுதியிருந்தார். வழமைக்கு மாறாக ஆங்கிலம், தமிழ் என்ற தனது இரண்டு இதழ் களிலும் ஒருவரே எழுதிய கட்டுரையை ஒரே நாளில் வெளியிட்டு சமூக நீதிப் போராட்டத்துக்கு ‘இந்து’ தனது எதிர்ப்பைக் காட்டியது. நீதிபதிகள் தேர்வு பட்டியலுக்கு எதிராக தமிழ்நாடு வழக்கறிஞர்கள் சங்கம் உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு, நீதிபதி...

தலையங்கம் – தமிழகத்தில் ஜாதி வெறிக் கொலைகள்! 0

தலையங்கம் – தமிழகத்தில் ஜாதி வெறிக் கொலைகள்!

ஜாதி எதிர்ப்புக் கருத்துகளை மக்களிடையே பரப்ப திராவிடர் விடுதலைக் கழகம், ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்’ என்ற முழக்கத்தை முன் வைத்து பரப்புரை இயக்கங்களைத் தொடங்கியிருக்கிறது. சமூகத்தின் அனைத்து பிரச்சினைகளுக்கும் நெருக்கடிகளுக்கும் மய்யமாக ஜாதியமைப்பே இருக்கிறது. அதற்குள் வெடித்துக் கிளம்பும் முரண்பாடுகளே ஜாதியக் கலவரங்களுக்குக் காரணம். இந்த ஜாதியமைப்புக்கான கருத்தியலை வழங்கி, ‘புனித’ப்படுத்துவது பார்ப்பனியம். மதவாதம் – மதவெறியாக ஜாதியம் – ஜாதி வெறியாக மிக எளிதாக ‘உருமாற்றம்’ பெற்றுவிடுகிறது. பெரியார் இயக்கம் நடத்திய மண்ணில் – ஜாதி மதவெறி சீர்குலைவு சக்திகள் தலைதூக்குகிறதே என்று உண்மையில் வேதனைப்படுவோர் உண்டு. பெரியார் இயக்கம் தோல்வி அடைந்து விட்டது என்று முத்திரை குத்தத் துடிப்போரும் உண்டு. ஆனால், பெரியாரைப் பேசும் அரசியல் கட்சிகளானாலும் பெரியாரை குறை கூறத் துடிக்கும் இயக்கங்கள் ஆனாலும் தமிழ்நாட்டில் தலைதூக்கிட முயற்சிக்கும் ஜாதிய மதவாத சக்திகளுக்கு எதிராக ஏன், ஒரு துரும்பைக்கூட கிள்ளிப்போட முன் வரவில்லையே என்று வேதனையுடன்...

சென்னை-ஈரோடு-தாரமங்கலம்-மயிலாடுதுறையிலிருந்து பரப்புரைப் பயணங்கள் தொடங்கின 0

சென்னை-ஈரோடு-தாரமங்கலம்-மயிலாடுதுறையிலிருந்து பரப்புரைப் பயணங்கள் தொடங்கின

சென்னை மண்டல திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், ‘பறி போகிறது எங்கள் நிலம்; கொள்ளை போகிறது கனிம வளம்; ஒழிகிறது வேலை வாய்ப்பு; ஓங்கி வளர்கிறது ஜாதி வெறி; எனவே எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்” என்று 20.3.2015 முதல் 31.3.2015 வரை 11 நாள் பரப்புரைப் பயணம் தொடங்கியுள்ளது. பயண தொடக்கக் கூட்டம், சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 20.3.2015 மாலை 5 மணியளவில் சென்னை பெரம்பூர் வீனஸ் மார்க்கெட், காந்தி சிலை அருகில் நடைபெற்றது. கூட்டத்திற்கு நா. பாஸ்கர் தலைமை வகிக்க, தோழர்கள் ஏசு குமார், துரை முனுசாமி, நாகேந்திரன் முன்னிலை வகித்தனர் தட்சணாமூர்த்தி வரவேற்புரை நிகழ்த்தினார். வழக்கறிஞர்கள் துரை அருண், திருமூர்த்தி, மாவட்டச் செயலாளர் உமாபதி, எழுத்தாளர் வே. மதிமாறன் உரையைத் தொடர்ந்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி பரப்புரைப் பயணத்தைத் தொடங்கி வைத்து, சிறப்புரை யாற்றினார். முன்னதாக, சம்பூகன் கலைக் குழுவினர் நாத்திகன்,...

விருத்தாசலத்தில் கழகப் பொதுக் கூட்டம் 0

விருத்தாசலத்தில் கழகப் பொதுக் கூட்டம்

15.03.2015 அன்று மாலை 3 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகத்தின் கொடி யேற்றுவிழா நடை பெற்றது. கழக கொடியை கழக தலைவர் கொளத்தூர் மணி ஏற்றிவைத்தார். இந் நிகழ்ச்சியில் கழக தலைமைக்குழு உறுப் பினர்கள் பால் பிரபாகரன், ஈரோடு ரத்தினசாமி, திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, தமிழ்நாடு மாணவர் கழக மாநில அமைப்பாளர் பாரி. சிவக்குமார் மற்றும் தோழர்கள் கலந்து கொண்டனர். கழக சார்பில் “தமிழ் இன உரிமை மீட்பு பொதுக்கூட்டம்” மாலை 6 மணிக்கு, விருத்தாசலம், வானொலித் திடலில் நடைபெற்றது. கழக தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். முன்னதாக மாலை 5 மணியளவில் துரை. தாமோதரன் “’மந்திரமா, தந்திரமா?” நிகழ்ச்சி நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகம், தமிழ்நாடு மாணவர் கழகம் ஆகிய அமைப்புகள் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தன. பெரியார் முழக்கம் 02042015 இதழ்

வரலாற்று ஆய்வு மய்யத்தில் ‘ஆரிய’ ஆதரவுக் குரல் 0

வரலாற்று ஆய்வு மய்யத்தில் ‘ஆரிய’ ஆதரவுக் குரல்

இந்திய வரலாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் புதுடில்லியில் மார்ச் 27ஆம் தேதி ‘நிறுவனர் நாள்’ கூட்டம் நடந்தது. அமெரிக்காவில் ‘வேதம்’ கற்றுத் தரும் டேவிட் ஃபிராலெ என்பவர் சிறப்பு விருந்தினராக பங்கேற்றுப் பேசினார். கூட்டத்தில் ‘சங்பரிவார்’ அமைப்பினர் கூடியிருந்தனர். ஃபிராலெ தனது உரையில், “ஆரியர் படை எடுத்து வந்தார்கள்” என்ற கருத்தே தவறானது என்று கூறினார். புராதன இந்தியப் பெருமைகள் இந்தியாவில் பாடத் திட்டத்தில் சேர்க்கப்படாததையும் அவர் குறை கூறினார். “பிரிட்டிஷ் ஆட்சியாளர்களும் மார்க்சிய வரலாற்று ஆசிரியர்களும்தான் ‘ஆரிய படை எடுப்பு’ என்ற தவறான கோட்பாட்டை கண்டுபிடித்தார்கள். இந்தியாவின் கல்வியாளர்களே பழம் பெருமைகளை மறந்துவிட்டு, ‘ஆரிய படை எடுப்பு’ என்றெல்லாம் நடக்காததைப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்” என்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது வரலாற்று ஆய்வு மய்யத்தின் உறுப்பினரும் செயலாளருமான கோபிநாத் இரவீந்திரன், இந்த பார்ப்பனிய அமெரிக்கரின் உரையிலிருந்து சில கேள்விகளை எழுப்பினார். குறிப்பாக ஆரிய படையெடுப்பு குறித்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தார். பல்வேறு...

நாமக்கல்லில் சட்ட விரோத கோயில் இடிப்பு! 0

நாமக்கல்லில் சட்ட விரோத கோயில் இடிப்பு!

அரசு மருத்துவமனை வளாகத்தில் சட்ட விரோதமாக கட்டப்பட்ட கோயில் கழக தோழர்களின் முயற்சியால் இடித்து அப்புறப்படுத்தப் பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அரசு மருத்துவ மனை வளாகத்தில் புதியதாக ஒரு வினாயகர் கோயில் கட்டப்பட்டு வந்தது. இந்த தகவலை அறிந்த கழகத் தோழர்கள், மாவட்ட செயலாளர் வைரவேல் தலைமையில் அந்த கோயிலை இடித்து ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தி மாவட்ட ஆட்சித் தலைவரிடம் மனு கொடுத்தனர். மேலும் 26.03.2015 அன்று அரசு மருத்துவமனை நிலத்தை ஆக்கிரமித்த மருத்துவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திருச்செங்கோடு நகர காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரைத் தொடர்ந்து மருத்துவமனை நிர்வாகமே இரவோடு இரவாக அந்த கோயிலை இடித்து கட்டுமான பொருட்களையும் அப்புறப்படுத்தினர். இந்த முயற்சிக்கு பள்ளிபாளையம், திருச்செங்கோடு பகுதி கழகத் தோழர்கள் பெரிதும் உழைத்தனர். பெரியார் முழக்கம் 02042015 இதழ்

பெண்ணுரிமையை மறுப்பதில் கைகோர்க்கும் மதங்கள் 0

பெண்ணுரிமையை மறுப்பதில் கைகோர்க்கும் மதங்கள்

பார்ப்பன சனாதன மத சக்திகள், இஸ்லாமி யர்களை எதிரிகளாகக் கட்டமைத்து, அவர்களை தேச விரோதிகளைப்போல சித்தரிக்கிறார்கள். தங்களின் மதவாத அரசியலைக் கட்டமைக்க ஏதேனும் ஒரு எதிரியை அடையாளப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் இவைகள் அரங்கேற்றப் படுகின்றன. ஆனால், பெண்கள் பிரச்சினையில் இவர்களின் குரல் பல நேரங்களில் ஒன்றாகவே ஒலிப்பதைக் கேட்க முடிகிறது. சென்னையில் காதலர் தின எதிர்ப்பில் இந்து மகாசபைக்காரர்களோடு சில இஸ்லாமிய அமைப்புகளும் இணைந்து கொண்டன. அவர்கள் காதலர் நாளுக்கு எதிராக ஒட்டிய சுவரொட்டிகளைக் காண முடிந்தது. இஸ்லாமிய மக்கள் கல்வி, வேலை, பொருளாதார வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்களாக, அவர்கள் வாழ்நிலை மிக மோசமான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பதற்கு நியாயமான குரல் கொடுக்க வேண்டிய அதே நேரத்தில் மதம் சார்ந்த பல பிற்போக்கு கொள்கைகளை நாம் சுட்டிக்காட்டி எதிர்க்க வேண்டியதும் அவசியமாகிறது. இது தொடர்பாக ஒரு செய்தியை சுட்டிக்காட்டியாக வேண்டும். பம்பாயிலிருந்து வெளிவரும் ‘அவதான்மா’ என்ற உருது நாளிதழின் ஆசிரியர் சிரின்தால்வி. இந்தியா வில்...

தி.க. தலைவரின் பேட்டியும் நேர்மையற்ற ‘பாண்டேக்களும்’! 0

தி.க. தலைவரின் பேட்டியும் நேர்மையற்ற ‘பாண்டேக்களும்’!

திராவிடர் கழகத் தலைவர் – தமிழகத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான கி.வீரமணி அவர்களின் நேர்முக பேட்டியை (மார்ச் 21, இரவு 10 மணி) ‘தந்தி’ தொலைக்காட்சியில் பார்த்தவர்கள் பலரும், அத்தொலைக்காட்சி பேட்டியாளரின் நேர்மை குறித்து கேள்விகளை எழுப்பவே செய்வார்கள். பாண்டே என்ற பெயரில் ‘தந்தி’ தொலைக்காட்சியில் விவாதங்களையும் நேர்முகப் பேட்டிகளையும் நடத்தி வரும் அவரது முதிர்ச்சியற்ற அரைவேக்காட்டுத்தனமான கேள்விகள், விவரமறிந்தவர்களை முகம் சுளிக்கவே வைக்கிறது. ‘பெரியார் ஒரு சகாப்தம்; ஒரு திருப்புமுனை’ என்று இரண்டே சொற்றொடர்களில் அறிஞர் அண்ணா படம் பிடித்தார். பெரியார் கொள்கைகளோடு முரண்பட்ட தலைவர்கள்கூட பெரியார் ஏற்றுக் கொண்ட இலட்சியத்தில் அவரது உண்மையான பங்களிப்பில் நேர்மையில் சந்தேகம் எழுப்பியது கிடையாது. பார்ப்பனர்கள் தங்களின் ‘பிதாமகராக’ ஏற்றுக் கொண்ட மறைந்த இராஜகோபலாச்சாரியாரையே இதற்கு உதாரணமாகக் கூற முடியும். பார்ப்பனரல்லாத வெகு மக்களின் மானத்துக்கும் உரிமைக்கும் களமாடியவர் பெரியார். மாறுபட்ட பல்வேறு அரசியல் சூழல்களில் தனது சமுதாய இலக்கை முன்னெடுப்பதை மட்டுமே...

தலையங்கம் – கருத்துரிமைக்கு ஆதரவாக  ஒரு தீர்ப்பு! 0

தலையங்கம் – கருத்துரிமைக்கு ஆதரவாக ஒரு தீர்ப்பு!

சமூக வலைத் தளங்களில் ஆட்சியாளர்களுக்கு எதிராக கருத்துக்களை பதிவு செய்வதை முடக்கி சிறையில் தள்ளும் கொடூரமான கருத்துரிமையை பறிக்கும் தகவல் தொழில்நுட்ப 66(ஏ) சட்டத்தை உச்சநீதிமன்றம் இரத்து செய்து விட்டது. 2008 ஆம் ஆண்டு அன்றைய அய்க்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சி கொண்டு வந்த சட்டம் இது. அப்போது எதிர்கட்சியாக இருந்த பா.ஜ.க. எதிர்த்தது. இப்போது ஆட்சிக்கு வந்துவிட்ட பா.ஜ.க. உச்சநீதிமன்றத்தில் இந்த சட்டத்துக்கு ஆதரவாகவே வாதாடியது. அதிகாரத்துக்கு வந்த பிறகு தங்களது ஊழல் முறைகேடுகள் அம்பலமாகிடக் கூடாது என்பதே ஆட்சியாளர்களின் நோக்கம்; அதற்காக எந்த அடக்குமுறை சட்டங்களையும் அவர்கள் கையில் எடுப்பார்கள். சிவசேனைத் தலைவர் பால்தாக்கரே மரணத்தையொட்டி மும்பையில் முழு அடைப்பு திணிக்கப்பட்டபோது அதை எதிர்த்து வலைதளத்தில் கருத்து தெரிவித்த கல்லூரி மாணவி ஷாகின் மீது இச்சட்டம் பாய்ந்தது. அவர் கைது செய்யப்பட்டார். அவரது கருத்துக்கு விருப்பம் தெரிவித்ததற்காக மற்றொரு மாணவி கைது செய்யப்பட்டார். இதேபோல் உ.பி. ஆளும் கட்சியான...

தாலி – கட்டுவது தமிழர் பண்பாடா? 0

தாலி – கட்டுவது தமிழர் பண்பாடா?

சர்வதேச மகளிர் தினத்தன்று “தாலி பெண்களை பெருமைப்படுத்துகிறதா? சிறுமைப்படுத்துகிறதா?” என்ற தலைப் பில் ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி விவாதம் ஒன்றை ஒழுங்கு செய்திருந்தது. இதற்கான முன்னோட்டம் வெளியான நிலையில், இந்து முன்னணி, இந்து மக்கள் கட்சி உள்ளிட்ட ஆர்.எஸ்.எஸ். பரி வாரத்தை சேர்ந்தவர்கள் அந்த தொலைக் காட்சி நிலையத்திற்கு படையெடுத்தனர். வாசலில் நின்றிருந்த ஒளிப்பதிவாளரை அடித்து நொறுக்கியதோடு, விலை உயர்ந்த ஒளிப்பதிவு சாதனத்தையும் நாசம் செய்தனர். தாலி இந்துக்களின் அடை யாளம் என்று கூறி இந்த விவாதத்தை நடத்தக் கூடாது என்று காலித்தனத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு வந்த பெண் செய்தியாளர் ஒருவரையும் கடுமையாக தாக்கியுள்ளனர். இதுதான் இவர்களின் அடையாளம். அந்த விவாதம் ஒளிபரப்பாவதற்கு முன்பே மதவெறி, சாதிவெறி தலைக்கேறி ருத்ரதாண்டவம் ஆடி முடித்துள்ளனர். கருத்துரிமைக்கு எதிராக இந்த வலதுசாரி பிற்போக்கு கும்பல் தொடர்ந்து கட்டாரி வீசி வருகிறது. அதன் தொடர்ச்சியே இது. அனைந்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் தனது அறிக்கையில்...

சூலூரில் தாலி நீக்கம்; மாட்டுக்கறி விருந்து 0

சூலூரில் தாலி நீக்கம்; மாட்டுக்கறி விருந்து

‘சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகம்’ நடத்துகிறது சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகம் சார்பில் சூலூரில் ஏப்.3ஆம் தேதி தாலி நீக்குதல் மற்றும் மாட்டுக் கறி உணவு விருந்து நடைபெறுகிறது. சூலூர் எஸ்.ஆர்.எஸ். திருமண மண்டபத்தில் (கலங்கல் பாதை) காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை நடக்கும் நிகழ்வில் சுயமரியாதை கலைக்குழுவினரின் கலை நிகழ்ச்சிகளோடு நிகழ்ச்சி தொடங்குகிறது. தாலியில்லாமல் வாழும் இணையர்கள் அனுபவங்களை பகிர்ந்து கொள்கிறார்கள். தாலி வந்ததா? வரவழைக்கப்பட்டதா? என்ற கருத்தரங்கில் புலவர் செந்தலை கவுதமன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றுகிறார்கள். தாலி நீக்கும் நிகழ்வுகள் நடைபெறுகின்றன. பெரியார் முழக்கம் 02042015 இதழ்

“எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்” சேலம் மாவட்டத்தில்  9 நாள் எழுச்சிப் பரப்புரை 0

“எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்” சேலம் மாவட்டத்தில் 9 நாள் எழுச்சிப் பரப்புரை

“எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்” என்ற முழக்கத்தை முன் வைத்து சேலம் மேற்கு மாவட்டத்தின் சார்பாக ஐந்து நாட்கள் பரப்புரைப் பயணம் நடைபெற்றது. பயணத்தின் தொடக்க விழா பொதுக் கூட்டம் மார்ச் 21ஆம் தேதி மாலை 6 மணிக்கு தாரமங்கலத்தில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு சேலம் மேற்கு மாவட்டத் தலைவர் சூரியக்குமார் தலைமையேற்க, காவை. இளவரசனின் ‘மந்திரமா தந்திரமா?’ நிகழ்ச்சி நடைபெற்றது. பரப்புரைப் பயணத்தை விளக்கி, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்புரை யாற்றினார். மார்ச்-22 : நங்கவள்ளி அருகே உள்ள மசக் காளியூரில் மாலை 7 மணிக்கு பரப்புரை நடை பெற்றது. இதில் தோழர்கள் நங்கவள்ளி அன்பு, சேலம் பிரபு பயணத்தை விளக்கி உரையாற்றினர். சேலம் மேற்கு மாவட்ட செயலாளர் சி.கோவிந்தராஜ், ‘மந்திரமா தந்திரமா’ நிகழ்ச்சியை நடத்திக் காட்டினார். மார்ச்-23 : மேட்டூர் ஆர்.எ°. பகுதி வைதீ°வரா பள்ளி அருகில் மாலை 6 மணிக்கு பரப்புரை நடைபெற்றது. பயணத்தை...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

திருவெண்ணெய் நல்லூர் அருகே முருகன் கோயில் ‘வேல்’ மீது குத்தியிருந்த எலுமிச்சம் பழம் ரூ. 24 ஆயிரத்துக்கு ஏலம் போனது. – செய்தி அப்படியா! இந்த செய்தி, முருகனை முப்பாட்டனாக ஏற்றுள்ள கட்சிக்கு தெரியுமா? தெரிஞ்சிருந்தா அவுக ரூ. 24 இலட்சத்துகே ஏலம் எடுத்திருப்பாக! ஜெயலலிதா, ஊழல் வழக்கிலிருந்து விடுதலை பெற புதுக்கோட்டை கோயில்களில் யானைகள், குதிரைகள், பசுக்களுடன் கலெக்டர் முன்னிலையில் புரோகிதர்கள் ‘கஜபூஜை’ யாகம். – செய்தி அப்படியே அக்ரி கிருஷ்ணமூர்த்தியையும் அதுல சேர்த்துக்குங்க… எதுக்கு அவருக்காக ஒரு தனிச் செலவு! இந்திய ரூபாய் நோட்டுக்களை இனி இந்திய காகிதங்களிலேயே அச்சிட வேண்டும். – பிரதமர் மோடி ஏற்கெனவே நிறைய பேர் அப்படித்தான் அச்சிட்டுகிட்டு இருக்காங்க… நீங்கதான் அவர்களை ‘கள்ள நோட்டு பேர்வழிகள்’ன்னு ஏத்துக்க மாட்டேங்குறீங்க! மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்த்தப்பட்டதாக நிதியமைச்சகத்திலிருந்து வெளியான ஆணையை நம்பவேண்டாம்; அது போலி ஆணை. – நிதியமைச்சகம் அறிவிப்பு அப்ப, நிதியமைச்சகத்தை...

ஈரோடு, ஏற்காட்டில் பரப்புரைப் பயண எழுச்சி 0

ஈரோடு, ஏற்காட்டில் பரப்புரைப் பயண எழுச்சி

“எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்” என்னும் தலைப்பில் தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களிலும் கடந்த 20.03.2015 அன்று பரப்புரைப் பயணம் தொடங்கி நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக ஈரோடு வடக்கு மாவட்டத்தில் கடந்த 25.03.2015 அன்று காலை 10.00 மணிக்கு பவானி அந்தியூர் பிரிவு, மதியம் 12 மணிக்கு சித்தார், மாலை 3 மணிக்கு அம்மாபேட்டை என பரப்புரைப் பயணம் நடைபெற்றது. பரப்புரைக்கு ஈரோடு வடக்கு மாவட்டத் தலைவர் தோழர் நாத்திகஜோதி தலைமையில், ஈரோடு மாவட்ட செயலாளர் அருச்சுணன், பவானி கோட்ட பொறுப்பாளர் வேணுகோபால், அம்மாபேட்டை ஒன்றிய அமைப்பாளர் வேல்முருகன், நாமக்கல் மாவட்டத் தலைவர் சாமிநாதன், குமாரபாளையம் நகரத் தலைவர் தண்டபாணி, குமாரபாளையம் வெங்கட், பவானி வினோத், தோழியர்கள் மைவிழி, கமலம் ஆகியோர் பயணத்தில் கலந்து கொண்டு ஜாதி ஒழிப்பு பாடல்களை பாடியும், துண்டறிக்கைகள் கொடுத்தும் “ஜாதியை ஒழிக்கும் வழிகள்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பயணத்தில் கலந்து கொண்ட தோழர்களுக்கு ஈரோடு...

வறுமை ஒழிப்புக்கு தடையாக நிற்கும் ஜாதியமைப்பு 0

வறுமை ஒழிப்புக்கு தடையாக நிற்கும் ஜாதியமைப்பு

இந்தியாவில் ஜாதிய கட்டமைப்பு குறித்து ஊடகங்களோ, அரசியல் கட்சிகளோ, இயக்கங் களோ விவாதிக்கக்கூட தயாராக இல்லை. சமூகத்தில் ஆழமாக புரையோடிப் போயிருக்கும் ஜாதியத்தை தகர்க்காமல், எத்தனை பொருளாதாரத் திட்டங் களையும் அறிமுகப்படுத்தினாலும் வறுமையை ஒழித்துவிட முடியாது என்ற கருத்தை பெரியார் இயக்கம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது பல்வேறு ஆய்வுகளும் இதே கருத்தை உறுதி செய்து வருகின்றன. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு, வளர்ச்சிக்கான பொருளாதாரக் கொள்கைகள் உருவாக்கப்பட்டன. அப்போது சமூகவியலாளர்கள், மானுடவியலாளர்கள், அரசியல் ஆய்வாளர்கள் வறுமை ஒழிப்புக்கான திட்டங்களை தீட்டுவது குறித்து, தொடர்புடைய பல்வேறு சமூகப் பிரச் சினைகள் குறித்து ஆராய்ந்தனர். அத்தகைய ஆய்வு நடத்திய நார்வே நாட்டைச் சார்ந்த குன்னர்மிர்தால் என்ற சமூக ஆய்வாளர் ‘ஏசியன் டிராமா’ என்ற ஆய்வு நூலை 1968இல் எழுதினார். வறுமைக்கான பிரச்சினையை வறுமை என்ற எல்லைக்கோட்டுக்குள் நின்று பார்க்க முடியாது. இந்திய சமூகத்தில் இறுகிப் போய் நிற்கும் ‘ஜாதிய கட்டமைப்புடன்’ அதை இணைத்துப் பார்க்க...

மாட்டுக்கறி சாப்பிட்ட விவேகானந்தர்! 0

மாட்டுக்கறி சாப்பிட்ட விவேகானந்தர்!

மகாராஷ்டிரா, அரியானாவில் பா.ஜ.க. ஆட்சிகள், மாட்டுக்கறி விற்பதோ சாப்பிடுவதோ தண்டனைக்குரிய குற்றம் என்று சட்டம் கொண்டு வந்துவிட்டன. மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியா முழுமையும் மாட்டுக்கறிக்கு தடை விதிக்கும் சட்டத்தைக் கொண்டு வரவேண்டும் என்று கூறுகிறார். மகாராஷ்டிராவில் பார்ப்பன முதல்வர் தலைமையில் நடக்கும் பா.ஜ.க. ஆட்சி, பசுக்களை காளைகளை மட்டும் வெட்டக் கூடாது என்று சட்டம் கொண்டு வந்திருக்கிறது. எருமைகளுக்கு இது பொருந்தாது. ‘எருமை’ சூத்திர, பஞ்சமப் பிரிவைச் சார்ந்தது. ‘பசு’, பிராமண, சத்திரியப் பிரிவு. பார்ப் பனர்கள் எப்போதும் எருமை மாடுகளை வளர்ப்பது இல்லை. பசு மாட்டைத்தான் வளர்ப்பார்கள். பார்ப் பனர்கள் மாட்டுக்கறியை சுவைத்து சாப்பிட்டதை, ஏராளமான சுலோகங்கள் வழியாக வேதங்கள் உறுதிப்படுத்துகின்றன. யாகங்கள் என்ற பெயரால் ஆரியர்கள் ஆடு மாடுகளை தீயில் போட்டுக் கொளுத்தியதாலும், அந்த உணவை விரும்பி சாப்பிட்டதாலும் விவசாயத்துக்குத் தேவையான கால்நடைகள் கிடைக்காமல் போயின. இந்த நிலையில்தான் புத்தர், யாகங்களுக்கும், ஆரிய பார்ப்பனர்களுக்கும்...

சென்னை தோழர்களின் ஜாதி எதிர்ப்புப் பரப்புரைப் பயண எழுச்சி 6 மாவட்டங்கள்; 10 நாள்கள்; 40 கூட்டங்கள் 0

சென்னை தோழர்களின் ஜாதி எதிர்ப்புப் பரப்புரைப் பயண எழுச்சி 6 மாவட்டங்கள்; 10 நாள்கள்; 40 கூட்டங்கள்

“பறிபோகிறது எங்கள் நிலம்; கொள்ளைப் போகிறது கனிம வளம்; ஒழிகிறது வேலை வாய்ப்பு ஓங்கி வளருது ஜாதி வெறி; எனவே எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்” என்ற பரப்புரைப் பயணம், சென்னை மண்டல திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் திருவள்ளூர், சென்னை, கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் எழுச்சியுடன் நடைபெற்றது. இது சென்னை மண்டலம் நடத்தும் இரண்டாம் கட்டப் பரப்புரையாகும். பயணத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மார்ச் 20ஆம் தேதி சென்னை பெரம்பூர் பொதுக் கூட்டத்தில் தொடங்கி வைத்தார். பயணம் குறித்த செய்தி தொகுப்பு: பொன்னேரி : 21.3.2015 காலை 10 மணியளவில் பொன்னேரி பெரியார் சிலை அருகிலும், பிற்பகல் 12 மணியளவில் மீஞ்சூர் மார்க்கெட் அருகிலும், மாலை 4 மணியளவில் மணலி அண்ணா சிலை அருகிலும், மாலை 5.30 மணியளவில் திருவொற்றியூர் பெரியார் சிலை அருகிலும் பரப்புரை நடைபெற்றது. பொன்னேரியில் திராவிடர் கழகத்தைச் சார்ந்த பன்னீர்செல்வம்,...

தாலியைப் பற்றி அம்பேத்கர் 0

தாலியைப் பற்றி அம்பேத்கர்

சென்னைஅரசாங்கத்தின் ஆணைப்படி வெளியிடப்பட்ட மலபார் அஞ்சேங்கோ கெஜட்டின் பதிப்பாசிரியர் சி.ஏ. கின்னஸ், அய்.சி.எஸ். பின்வருமாறு சொல்கிறார்: மருமக்கள் தாயம் என்ற முறையையும், மக்கள் தாயம் என்ற முறையையும் கடைப்பிடித்து வந்த எல்லாப் பிரிவு மக்களிடையிலும் வேறொரு திருமணச் சடங்கு முறை காணப்பட்டது. அந்தத் திருமண முறை, “தாலி கட்டுத் திருமணம்” என்று சொல்லப்பட்டது. மலையாளிகளின் திருமணப் பழக்கங்களில், இந்தத் தாலி கட்டுத் திருமணம் என்பது தனித்தன்மை வாய்ந்தது; புதுமையானது; வேறுபட்ட தன்மையுடையது என்றெல்லாம் சொல்லப்படுகிறது. ஒரு பெண் பூப்படைவதற்கு முன் அவள் கழுத்தில் ஒரு தாலியைக் கட்டுவதுதான் இந்தப் பழக்கத்தின் அடிப்படையாகும். அந்தப் பெண்ணின் ஜாதி அல்லது அவளைவிட உயர் ஜாதியைச் சேர்ந்த ஒரு மனிதனால் இந்தத் தாலி கட்டப்படுகிறது. அதற்குப் பிறகுதான் அந்தப் பெண் ‘சம்பந்தம்’ என்னும் மண ஒப்பந்தம் செய்வதற்குரிய உரிமையைப் பெறுகிறாள். தாலி கட்டுகிறவன் அல்லது மணவாளனுக்கு அந்தப் பெண்ணுடன் இணையும் உரிமையை வழங்குவதற்காகத்தான் ‘தாலி கட்டும்...

பசுவதை: காஞ்சி சங்கராச்சாரி ஆதரவு 0

பசுவதை: காஞ்சி சங்கராச்சாரி ஆதரவு

பா.ஜ.க. ஆட்சிகள் பசுவை வெட்டுவதற்கு தடைச் சட்டங்கள் போட்டு வருகின்றன. பசு இந்துக்களின் புனித தெய்வம் என்கிறார்கள். இதுகுறித்து விரிவான கட்டுரையை கடந்த வாரம் ‘புரட்சிப் பெரியார் முழக்க’த்தில் வெளியிடப்பட் டிருந்தது. ஆரியப் பார்ப்பனர்கள் யாகங்களில் பசுவை பலி கொடுத்ததை வேதங்கள் கூறுகின்றன. இப்போதும் யாகங்களில் பசுக்கள் கொண்டு வந்து நிறுத்தப்படு கின்றன. ஆனால், பலியிடப்படுவது இல்லை. அண்மையில் ஜெயலலிதா, ஊழல் வழக்கிலிருந்து விடுதலை பெற புதுக்கோட்டை மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் 108 பார்ப்பனர்களைக் கொண்டு நடத்திய யாகத்தில் ‘பசு மாடுகள்’ கொண்டு வந்து நிறுத்தப்பட்டிருந்தன. இறந்து போன காஞ்சி சங்கராச்சாரியே பசுக்களை பலியிடுவதில் தவறு இல்லை என்று கூறியிருக்கிறார். ‘தெய்வத்தின் குரல்’ என்ற பெயரில் வெளியிடப்பட்டுள்ள அவரது கருத்துகளடங்கிய நூலில் அவர் இவ்வாறு கூறுகிறார்: “தர்மத்துக்காகச் செய்ய வேண்டியது எப்படி இருந்தாலும் பண்ண வேண்டும். ஹிம்சை என்றும் பார்க்கக் கூடாது. யுத்தத்தில் சத்ருவதம் பண்ணுவதை சஹல ராஜ நீதிப் புத்தகங்களும் ஒப்புக்...

ஜெயகாந்தனின் புதுமையும் – குழப்பமும் 0

ஜெயகாந்தனின் புதுமையும் – குழப்பமும்

நவீன தமிழ் இலக்கிய ஆளுமை யாக, வாழ்ந்து காட்டிய ஜெயகாந்தன் முடிவெய்தி விட்டார். வாழ்க்கையின் நுட்பமான மனித உணர்வுகளை தனது எழுத்து வன்மையால் கதாபாத்திரங் களாக உலவவிட்ட பெருமை அவருக்கு உண்டு. இன்றைக்கு 50 வயதைக் கடந்தவர்களில் இலக்கிய ஈடுபாடு கொண்ட பெரும்பான்மை யோர் அவரது எழுத்துக்களால் பாதிக்கப்பட்டவர்களாகவே இருப் பார்கள் என்று கூற முடியும். தனது கதாபாத்திரங்களை உரத்தக் குரலில் விவாதிக்க வைத்தார். ‘ஆனந்த விகடனில்’ அவர் 1968இல் எழுதிய ‘அக்னி பரீட்சை’ கதை பலத்த விவா தங்களை எழுப்பியது. அப்பாவிப் பெண், ஒரு பணக்கார இளைஞனால் ஏமாற்றப்பட்டு, பாலியல் உறவுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் அந்தப் பெண்ணின் தலையில் தண்ணீரைத் தெளித்து எல்லாம் சரியாகப் போய் விட்டது என்று கூறுகிறார், அவள் தாய். இது நிகழ்வது ஒரு பார்ப்பனக் குடும்பத்தில். ‘கற்பு’ என்ற ‘புனித’த்தை கட்டுடைத்த கதை அது. கணவன், மனைவி மனப் போராட்டத்தை விவாதிக்கும், “கோகிலா என்ன செய்து...

பெரியார் பெயருடன் ஜாதியை இணைப்பதா? கொளத்தூர் மணி கடும் கண்டனம் 0

பெரியார் பெயருடன் ஜாதியை இணைப்பதா? கொளத்தூர் மணி கடும் கண்டனம்

“10ம் வகுப்பு தேர்வு வினாத் தாளில் பெரியார் பெயருடன் ஜாதிப் பெயரை இணைத்ததற்கு திராவிடர் விடுதலைக் கழகம் கடும் கண்டனம்.” இது குறித்து கழக தலைவர் கொளத்தூர் மணி வெளியிட்டுள்ள அறிக்கை: 10-04-2015 அன்று நடந்த பத்தாம் வகுப்புக்கான பொதுத் தேர்வு நடைபெற்றது. அதில் சமூக அறிவியல் பாட வினாத் தாளில் 4 ஆவது கேள்வி, தமிழ்நாட்டின் தலைசிறந்த சமுதாய சீர்திருத்தவாதி பற்றியதாக உள்ளது. அதில் நான்கு தலைவர்களின் பெயர்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அத்தலைவர்களில் ஒருவராய் உள்ள பெரியாரைக் குறிப்பிடும்போது, “ஈ.வே.ராமசாமி நாயக்கர்” என்று குறிப்பிடப்பட்டுள்ளதை திராவிடர் விடுதலைக் கழகம் வன்மையாகக் கண்டிக்கிறது. ஜாதிப்பெயரை விகுதியாகப் போடும் போக்கு இருந்த 1927ஆம் ஆண்டின் இறுதியிலேயே ஜாதி விகுதியை நீக்கி, தன் பெயரை ஈ.வெ. இராமசாமி என தனது ஏட்டில் வெளியிட்டவர். தான் நடத்திய சுயமரியாதை மாநாடுகளில் ஜாதிப் பின்னொட்டை அகற்றுமாறு தீர்மானங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றியவர். அதனால்தான் இன்றைய தமிழ்நாட்டின் ஜாதிச் சங்கத்...

தென் மாவட்டங்களில் ஜாதிவெறி: துணைபோகும் காவல்துறை 0

தென் மாவட்டங்களில் ஜாதிவெறி: துணைபோகும் காவல்துறை

தென் மாவட்டங்களில் ஜாதி வெறி தலைதூக்கி ஆடுகிறது; கொலைகள் தொடர் கதையாகின்றன. காவல்துறையில் அந்தந்த பகுதி ஆதிக்க ஜாதியினரை அதிகாரிகளாக நியமிக்கக் கூடாது என்று திராவிடர் விடுதலைக் கழகம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. கழகத்தின் கருத்தை உறுதி செய்து, காவல்துறையே ஜாதி உணர்வோடு செயல்படுவதை விளக்குகிறது இக்கட்டுரை. நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்கள் மறுபடியும் இரத்தச் சகதியில் மிதக்கின்றன. கடந்த ஏழு மாதங்களில் நெல்லை மாவட்டத்தில் மட்டும் நடந்திருக்கும் கொலைகளின் எண்ணிக்கை 100; தூத்துக்குடியில் 70. ஒவ்வொரு நாளும் கொலையோடு தான் விடிகிறது. தென் தமிழக மாவட்டங்களில் பதற்ற நிலை பரவிக் கொண்டிருக்கிறது. நடந்திருக்கும் கொலைகளில் சரி பாதிக்குக் காரணம்… ஜாதி. ஆனால், அந்தக் காரணங்கள் அனைத்தும் மிக அற்பமானவை. நாங்குநேரி அருகே இருக்கிறது பானாங்குளம், கரந்தநேரி ஆகிய இரு கிராமங்கள். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பானாங்குளத்தைச் சேர்ந்த இரண்டு பேர் டி.வி. பழுதுபார்க்க கரந்தநேரிக்குச் சென்றுள்ளனர். இருவரும் இரு சக்கர...

கோல்வாக்கர் கருத்தை நகல் எடுத்து வழங்குவார்களா? 0

கோல்வாக்கர் கருத்தை நகல் எடுத்து வழங்குவார்களா?

பெருமாள் முருகன் எழுதிய ‘மாதொரு பாகன்’ நாவல், திருச் செங்கோடு பெண்களின் ‘ஒழுக்கத் துக்கே’ சவால் விடுகிறது என்று கோவை ஈ°வரன் போன்ற கொங்கு வேளாள கவுண்டர் ஜாதித் தலைவர்கள், ஜாதி வெறியைத் தூண்டிவிட்டு, நாவலை முடக்கி, பெருமாள் முருகன் என்ற எழுத்தாளரையும் முடக்கி, மன்னிப்புக் கேட்கச் செய்தனர். குழந்தை இல்லாத மனைவி, திருச் செங்கோடு தேர்த் திருவிழாவில் வேறு இளைஞருடன் உறவு கொண்டு குழந்தைப் பெறும் வழக்கம் இருந்தது என்ற தொன்மக் கதையை முன் வைத்து எழுதப்பட்ட நாவல் இது. ஜாதி வெறியர்களின் இந்த மிரட்டலுக்கு இராம கோபாலன் போன்ற ‘சங்பரிவார்’ பார்ப்பனர்களும் சேர்ந்து கொண்டு இப்பிரச்சினையை ஊதிவிட்டனர். கேரளாவில் நம்பூதிரிப் பார்ப்பனர் களோடு உறவு கொண்டு ஏனைய ஜாதியினர் குழந்தைப் பெற்றுக் கொள்வதை பெருமையாகவே கருதினர். அப்படி ஒரு பழக்கம் – அங்கே நடைமுறையில் இருந்ததை அம்பேத்கரே எடுத்துக்காட்டி எழுதியிருக்கிறார். ஆர்.எ°.எ°. அமைப்புக்கு தலை வராகவும் தத்துவ வழிகாட்டியாக...

தலையங்கம் – அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் அடக்குமுறை 0

தலையங்கம் – அ.இ.அ.தி.மு.க. ஆட்சியின் அடக்குமுறை

பார்ப்பனர்களின் ஒடுக்குமுறை பண்பாடுகளை தமிழர்கள் ஏற்றுக் கொண்டேயாக வேண்டும் என்பதுதான் பார்ப்பனப் பாசிசம். மோடி ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பிறகு, சட்டத்தையும் அதிகாரத்தையும் காட்டி அச்சுறுத்தி, பார்ப்பன பண்பாடுகளை திணிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். மோடி ஆட்சி மட்டுமல்ல, அ.இ.அ.தி.மு.க. ஆட்சியும் அதன் காவல்துறை செயல்பாடுகளும் மோடி ஆட்சியைவிட தீவிரமான மதவாத ஆட்சியாகவே செயல்பட்டு வருகிறது. திராவிடர் கழகம் அவர்களுக்கு சொந்தமான பெரியார் திடலில் விரும்பியவர்கள் தாலியகற்றும், பெண்ணடிமைக்கு எதிரான ஒரு கருத்துப் பரப்புதலை நடத்துவதற்கு முன் வந்தால் அதை தமிழக அரசும் காவல்துறையும் ஏன் தடுக்க வேண்டும்? இந்த நிகழ்வைக்கூட இப்போது நடத்த வேண்டிய நிலையை உருவாக்கியது யார்? ‘புதிய தலைமுறை’ தொலைக்காட்சி, ‘சர்வதேச மகளிர் நாளில்’, ‘பெண்களுக்கு தாலி வேண்டுமா?’ என்ற ஒரு விவாத நிகழ்ச்சியை ஒளிபரப்பவிருந்தது. அதை ஒளிபரப்புவதற்கே எதிர்ப்பு தெரிவித்து ‘வெடிகுண்டு’களை வீசக் கிளம்பியது ஒரு கூட்டம். அதன் காரணமாக நிகழ்ச்சி ஒளிபரப்பாமல் நிறுத்தப்பட்டது. கணவனுக்கு அடங்கிப்போய் ‘கல்லானாலும்...

பாடு கண்ணே பாடு – ஏப்ரல் 29 புரட்சிக் கவிஞர் பிறந்தநாள் 0

பாடு கண்ணே பாடு – ஏப்ரல் 29 புரட்சிக் கவிஞர் பிறந்தநாள்

பாடு கண்ணே பாடு – பாவேந்தர் பாரதி தாசனார் பைந்தமிழ் பாட்டினைப் பாடு கண்ணே பாடு யாழோடும் குழலோடும் பறைமுழங்க ஊரோடும் இசையோடும் பாடு. அயர்வினை உன்னில் நீக்கும் – மின் ஆற்றலை உடலில் சேர்க்கும் துயருனை அண்டாது காக்கும் – வாழ்வில் தூயநல் இன்பமே தேக்கும் தீயதாம் அச்சத்தை ஓட்டும் – அஞ்சா துணிவெனும் ஆயுதம் நீட்டும் மாயையாம் மூடத்தைத் தீய்க்கும் – உன்னை மாசற்ற மனிதனா யாக்கும் மானுட அறிவினை பெருக்கும் – இன மானமே குருதியில் கலக்கும் ஊனினில் தமிழையே நாட்டும் – உரிமை விடுதலை புரட்சியை மூட்டும் கன்னல் பாகாய் வார்ப்பாய் – அமிழ்தாம் கருத்தை மீட்டியே ஆர்ப்பாய் அன்னைத் தமிழில் தீட்டிய – பாட்டை ஆருயிர் ஊறிட பாடு! – குயில்தாசன் பெரியார் முழக்கம் 16042015 இதழ்

தாம்பரம் காவல்துறையின் ‘அதிரடி’ ஆணை 0

தாம்பரம் காவல்துறையின் ‘அதிரடி’ ஆணை

மாடு, ஆடு, கோழி உள்ளிட்ட எந்த இறைச்சி உணவையும் சாப்பிட்டால் கைது செய்வோம்! பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா பொதுக் கூட்டம் கடந்த மார்ச் 30ஆம் தேதி நடக்க விருந்தது. கடைசி நேரத்தில் கூட் டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. தடையை எதிர்த்து காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர் செங்குட்டுவன், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை. அருண் ஆகியோர் நேர்நின்று வாதாடி, கூட்டத்துக்கான அனுமதியைப் பெற்றனர். ஏப்.14 ஆம் தேதி கூட்டம் நடத்த நீதிமன்றத்தின் அனுமதி பெற்று கூட்டம் நடந்தது. காவல்துறை கூட்டத்தை நடத்த விடாமல் தடுக்க கடும் நெருக்கடிகளை உருவாக்கியது. 22 நிபந்தனைகளை எழுத்துபூர்வமாக காவல்துறை விதித்தது. அதில் ஒன்று, கூட்டத்தின் இறுதியில் மாட்டு இறைச்சியோ அல்லது வேறு எந்த இறைச்சி உணவோ பிரியாணியாக வழங்கக்கூடாது என்பதாகும். தமிழ்நாட்டில் மாட்டிறைச்சிக்கு சட்டப்படி தடை இல்லை. ஆனால், மாட்டிறைச்சிக்கு மட்டுமல்ல, கோழி, ஆடு உள்ளிட்ட எந்த இறைச்சி உணவையும்...

பெரியார் இயக்கங்கள் கரம் கோர்த்து களமிறங்கும் பரப்புரை நிறைவு விழா எழுச்சி 0

பெரியார் இயக்கங்கள் கரம் கோர்த்து களமிறங்கும் பரப்புரை நிறைவு விழா எழுச்சி

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய 14 நாள் பரப்புரை நிறைவு விழா பொதுக் கூட்டத்தில், பெரியாரியலுக்கு எதிரான மிரட்டல்களை சந்திக்க, பெரியார் இயக்கங்கள் கரம் கோர்த்து களமிறங்கும் என்று தோழர்கள் சூளுரைத்தனர். சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்’ என்ற முழக்கத்தை முன் வைத்து, 14 நாள்கள் பரப்புரைப் பயணம் நடத்தியது. பரப்புரைப் பயணத் தின் நிறைவு விழா பொதுக் கூட்டம், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாள் விழாவாக தாம்பரத்தில் 14.4.2015 அன்று நடைபெற்றது. காஞ்சி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் நடந்த இப் பொதுக் கூட்டத்துக்கு மு.தினேஷ் குமார் தலைமை தாங்கினார். சு.செங் குட்டுவன் வரவேற்புரையாற்றினார். முன்னதாக சம்பூகன் இசைக் குழு வினரின் இசை நிகழ்ச்சி நடை பெற்றது. தொடர்ந்து சென்னை மாவட்ட கழகச் செயலாளர் உமாபதி, விஜயகுமார், வழக்கறிஞர்கள் துரை. அருண், திருமூர்த்தி, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செய்தி தொடர்பாளர்...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

‘மாட்டுக்கறி விருந்து’ நடத்துவது வேலை இல்லாதவர்கள் நடத்தும் போராட்டம். – அமைச்சர் பொன் இராதாகிருட்டிணன் உண்மைதான்! மாட்டுக்கறிக்கு தடை போட்டதால் அம்மாநிலங்களில் அதன் காரணமாக வேலை இழந்தவர்கள்தான் போராட்டம் நடத்துகிறார்கள். இந்திய வானொலியில் சமஸ்கிருதத்தில் செய்திகளை மீண்டும் ஒலி பரப்பலாம். – ஜெர்மனியில் மோடி அந்த செய்தியை கோயில் கர்ப்பகிரகத்தில் கொண்டு போய் ஒலி பரப்புங்க. ‘கடவுளுக்கு’ மட்டும்தான் அது புரியும்! அட்சய திருதியை நாளில் தங்க விற்பனையில் கலப்படம் அதிகம் நடக்கிறது. – நுகர்வோர் சங்கம் அன்றைய தினம் கலப்பட தங்கம் வாங்குவதே – அய்தீகம்ன்னு அறிவிச்சுடலாம். அப்போதும் கூட்டம் முண்டியடிக்கும். காஷ்மீரில் பண்டிட்டுகளுக்கு (பார்ப்பனர்களுக்கு) தனி நகரம் உருவாக்கி, தனி குடியிருப்பு அமைக்கப்படும். – காஷ்மீர் அரசு முடிவு அங்கே பண்டிட்டுகளே தெரு கூட்டுவார்கள்; அவர்களே சாக்கடை அள்ளுவார்கள்! கிரெடிட் கார்டு மோசடி: அமெரிக்காவில் இந்து சாமியாருக்கு 27 வருட சிறை. – செய்தி அமெரிக்காகாரன் இந்து ‘துவேஷி’ன்னு...

பார்ப்பனர்கள் விரிக்கும் சூழ்ச்சி வலையில் ‘விட்டில்பூச்சி’ ஆகாதீர்! “இந்து”க்களின் நண்பர்கள் யார்? “இந்து”க்களின் எதிரிகள் யார்? 0

பார்ப்பனர்கள் விரிக்கும் சூழ்ச்சி வலையில் ‘விட்டில்பூச்சி’ ஆகாதீர்! “இந்து”க்களின் நண்பர்கள் யார்? “இந்து”க்களின் எதிரிகள் யார்?

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப் பட்டவர்களாக அட்டவணைப்படுத்தப்பட்டவர்கள்தான் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர். இவர்கள் அனைவருக்குமே மதத்தின் அடையாளம்‘இந்து’தான். விரும்பாதவர்களுக்கும் சட்டம் இந்த மதத்தின் அடையாளத்தையே சுமத்திக் கொண்டிருக்கிறது. பார்ப்பனர்கள் தங்கள் ஆதிக்கத்தை சமுதாயத்தில் நிலைநிறுத்தவே பல்வேறு வழிபாடு, பழக்க வழக்கம், மரபுகளைக் கொண்டிருந்த வெகு மக்கள் மீது தங்களின் வேத மரபுகளை திணிக்க சூழ்ச்சிகரமாக திட்டமிட்டார்கள். பல்வேறு நம்பிக்கைகள், பண்பாடுகள் கொண்ட மக்களை ‘இந்து’ என்ற ஒற்றை அடையாளத்துக்குள் பிரிட்டிஷ்காரன், நிர்வாக வசதிக்காக அடைக்க முற்பட்டபோது, பார்ப்பனர்கள் ஆனந்தக் கூத்தாடினார்கள். காஞ்சிபுரம் சங்கராச்சாரி, ‘வெள்ளைக்காரனால் நாம் தப்பித்தோம்’ என்று வெளிப்படையாகவே எழுதினார். அதற்குப் பிறகு, வேத மதக் கருத்துகளே ‘இந்து’ மதக் கருத்து என்றார்கள் பார்ப்பனர்கள். அந்த நாளிலிருந்து பார்ப்பன வேத மதத்துக்குள் திணிக்கப்பட்ட வெகுமக்கள் உரிமைக்கான போராட்டம், பார்ப்பன அதிகாரத்துக்கு எதிராக தொடங்கிவிட்டது என்பதே வரலாறு. அந்தப் போராட்டத்தைத் தான் ஜோதிபாபுலே, அம்பேத்கர், பெரியார் முன்னெடுத்தார்கள். இந்த வெகுமக்களின் உரிமைகளுக்கும்...

தமிழக அரசின் அலட்சியம்: கொளத்தூர் மணி கண்டனம் 0

தமிழக அரசின் அலட்சியம்: கொளத்தூர் மணி கண்டனம்

முற்றுகைப் போராட்டத்தின் நோக்கம் குறித்து திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஆந்திராவில் 20 தமிழர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளதில் தமிழக அரசின் அலட்சியத்தைக் கண்டித்தே இந்த முற்றுகைப் போராட்டத்தை நடத்துகிறோம். திருவண்ணாமலையில் சுட்டுக் கொல்லப்பட்ட 12 பேரில் 10 பேர் உடல்களை நேரில் பார்த்தபோது, உடல் முழுதும் தீக்காயங்களாகவே இருந்தன. கை, கால்கள் வெட்டப்பட்டும், துண்டிக்கப்பட்டும், ஒருவருக்கு இரண்டு கால் வெட்டப்பட்டும், ஒருவரின் ஆண்குறி துண்டிக்கப்பட்டும், ஒருவருக்கு பற்கள் பிடுங்கப்பட்டும் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட நிலையில் அந்த உடல்கள் காணப்பட்டன. படுகொலைகளை நியாயப்படுத்தும் ஆந்திர அரசையும் வாய் திறக்காமல் அமைதி காக்கும் மத்திய அரசையும் வன்மையாகக் கண்டித்து, போராட்டங்கள் நடக்கின்றன. அது நியாயமானதுதான். ஆனால், தமிழக அரசு காட்டும் அலட்சியத்தைக் கண்டிக்காமல், ஒதுங்கி நிற்க முடியாது. சடங்குக்காக ஒரு கடிதத்தை மட்டும் பிரதமருக்கு எழுதி, தனது கடமையை முடித்துக் கொண்டுவிட்டது. கண்துடைப்பு நடவடிக்கையாக வேலூரிலிருந்து மஞ்சுநாத் என்ற காவல்துறை...

20 தமிழர்கள் கொடூரக் கொலை: தமிழக அரசு அலட்சியம் தலைமைச் செயலகம் முற்றுகை: கைது 0

20 தமிழர்கள் கொடூரக் கொலை: தமிழக அரசு அலட்சியம் தலைமைச் செயலகம் முற்றுகை: கைது

20 தமிழர்கள் கொடூரக் கொலையில் தமிழக அரசின் அலட்சியத்தைக் கண்டித்து தலைமைச் செயலகத்தை முற்றுகையிடும் போராட்டம் ஏப்.16 அன்று பகல் 11 மணியளவில் நடந்தது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, மீ.த. பாண்டியன் (தமிழ்நாடு மக்கள் கட்சி), வே.பாரதி (தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்), செந்தில் (இளந்தமிழகம்), கோ. பாவேந்தன் (தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம்), சதிஷ் (சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை), மா.சேகர் (தொழிலாளர் சீரமைப்பு), தெய்வமணி (அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்கம்) ஆகியோர் தலைமையில் அந்தந்த அமைப்புகளைச் சார்ந்த 300 தோழர்கள் இந்த முற்றுகைப் போராட்டத்தில் பங்கேற்றனர். தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு, மாலையில் விடுதலை செய்யப்பட்டனர். போராட்டத்தில் முன் வைக்கப்பட்ட கோரிக்கைகள்: தமிழக அரசே! • தமிழர் இருபது பேர் படுகொலையில், ஏழு பேர் தமிழக எல்லைக்குள்ளிருந்துதான் ஆந்திர காவல்துறையால் கைது செய்யப்பட்டனர் என்பது வெட்டவெளிச்சமாகியுள்ளது. எனவே, தமிழக அரசு சார்பில் ஆள்கடத்தல், கொலை ஆகிய பிரிவுகளில்...

வினாக்கள்… விடைகள்…! 0

வினாக்கள்… விடைகள்…!

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவுக்கு எதிராக வாதாட தமிழக அமைச்சரவை நியமித்த பவானிசிங் நியமனம் செல்லாது. – உச்சநீதிமன்றம் அம்மாவுக்கு எதிராக அமைச்சரவையே இப்படி குழிபறித்துக் கொண்டு – இன்னொரு பக்கம் பிரார்த்தனைகளை நடத்துகிறார்கள் போலும்! பழைமை மாறாமல் இருப்பதற்கு பார்த்தசாரதி கோயில் – ‘மார்பிள்’ தரைகள் அகற்றப்பட்டு, கருங்கற்கள் பதிக்கப்படுகின்றன. – செய்தி அப்படியே மின்சாரத்தையும் சேர்த்து துண்டிச்சுடுங்க; பழைமை மாறாம இருக்கும். பெரியார் திடலில் தாலி அகற்றிய பெண்களின் கணவர்கள் செத்துவிட்டதாகக் கருதி, திருவண்ணாமலையில் புரோகிதர்கள் ‘கரும காரிய’ புரோகிதம் செய்ய முடிவு. – செய்தி பொய்யும் புரட்டுமே புரோகிதம் என்பதை வெட்கம், மானம் இல்லாமல் நிரூபித்துக்கொண்டிருக்கிறார்கள்! மதவிழாக்களுக்கு யானைகளை பயன்படுத்த தடை போடுக. – உச்சநீதிமன்றத்தில் வழக்கு யானைகளாக விரும்பி ‘மதம்’ பிடித்தால் பங்கேற்க அனுமதிக்கலாம்; அதற்கு தடை போட வேண்டாம்! இந்தியாவுக்கு ‘பரதன்’ பெயரை சூட்ட வேண்டும். – உச்சநீதிமன்றத்தில் வழக்கு ‘பரதன்’ பெயர் சூட்டினால்,...

பம்பாய் அய்.அய்.டி.யில் கடவுள் நம்பிக்கையற்றோர் 52 சதவீதம் 0

பம்பாய் அய்.அய்.டி.யில் கடவுள் நம்பிக்கையற்றோர் 52 சதவீதம்

பம்பாய் அய்.அய்.டி.யில் படிக்கும் மாணவர்களிடையே எடுக்கப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 50 சதவீதத்துக்கும் அதிகமானோர் கடவுள் நம்பிக்கை இல்லை என்று கூறியிருக்கிறார்கள். 22 சதவீதம் முழுமையாக நாத்திகர்கள் என்றும், 30 சதவீதம் பேர் கடவுள் பற்றி கவலைப்படாதவர்கள் என்றும் கூறியுள்ளனர். அய்.அய்.டி. நிறுவனத்துக்காக நடத்தப்படும் பத்திரிகைக்காக இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. பி.டெக். படிக்கும் மாணவர் ஒருவர் கூறுகையில், “நாங்கள் படிக்கும் பொறியியல் படிப்பு, அறிவியல் சார்ந்தது. அறிவியலை நம்பும் என்னைப்போன்ற பல மாணவர்கள், கடவுள் என்று ஒருவர் இருக்கிறார் என்பதை ஏற்கவியலாது” என்றார். 2014ஆம் ஆண்டில் அய்.அய்.டி.யில் சேர்ந்த 260 மாணவர்களிடம் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. (தகவல்: ‘டைம்ஸ் ஆப் இந்தியா’, ஏப்.20 2015) பெரியார் முழக்கம் 30042015 இதழ்

குழந்தை நலனைவிட ‘பசு’வின் பாதுகாப்பே முக்கியமாம்! 0

குழந்தை நலனைவிட ‘பசு’வின் பாதுகாப்பே முக்கியமாம்!

உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்தியாவின் எல்லை வழியாக வங்கதேசத்துக்கு மாடுகள் கடத்தப்படுவதை எல்லைப் பாதுகாப்பு படையினர் அனுமதிக்கக் கூடாது என்று கூறியிருப்பதோடு, வங்கதேசத்துக்காரர்களுக்கு மாட்டிறைச்சியே கிடைக்கக் கூடாது என்றும் கூறியிருக்கிறார். இந்தியாவில் எதற்கும் பயன்படாத அடிமாடுகள், வங்கதேசத்துக்கு கடத்தப்படுகின்றன. எல்லைப் பாதுகாப்புப் படையினரும் இதைத் தடுப்பது இல்லை. ஆண்டுதோறும் இப்படி கடத்தப்படும் மாடுகள் 25 இலட்சம். வங்க தேசத்தில் இந்த அடிமாடுகள் வெட்டப்பட்டு இறைச்சியாக பதப்படுத்தப்பட்டு, ‘வளைகுடா’ நாடுகளுக்கு வங்க தேசத்திலிருந்து ஏற்றுமதியாகின்றன. வங்க தேசத்தில் இதற்கான தேவை அதிகமாக இருக்கும். அதே நேரத்தில், இந்தியாவில் பயன்பாடு இல்லாத மாடுகளை பாதுகாக்க முடியாததால் விற்க வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. எனவே, எல்லையில் கடத்தல் ‘கண்டும் காணாமல்’ அனுமதிக்கப்பட்டு வந்த நிலையில் ராஜ்நாத் சிங், இப்போது கடுமை காட்டுமாறு கூறியிருக்கிறார். இதனால், பல்வேறு பசு பராமரிப்பு கொட்டடிகளில் மாடுகளை கூடுதலாக பராமரிக்க வேண்டிய நெருக்கடி உருவாகியுள்ளது. இதற்காக ரூ.31,000 கோடி கூடுதலாக செலவிட...

பூணூல் : காந்தியார் எதிர்ப்பு 0

பூணூல் : காந்தியார் எதிர்ப்பு

பூணூல் அணிவதை எதிர்த்து காந்தியார் பதிவு செய்த கருத்து: “இலட்சக்கணக்கான இந்துக்கள் பூணூல் தரிக்காமல் இருக்கும் போது அது எனக்கு அவசிய மென்று தோன்றவில்லை. ஆதலால் நான் அதை அணிய வில்லை. பூணூலை அணிபவன் உயர்ந்த வாழ்வு, மாசற்ற வாழ்வு வாழ வேண்டும்., ஆத்மார்த்தீக மான புனிதத் தன்மையின் அறிகுறியாக இருக்க வேண்டும் இப்பூணூல். இன்றுள்ள இந்துக்கள், இந்து, இந்து மதம் உள்ள நிலையில், இப்பூணூலை யும் அணிந்து கொள்வதற்குத் தகுதியுள்ளவர்களா என்பது எனக்கு சந்தேகம். இந்து மதத் திலுள்ள தீண்டாமை, உயர்வு தாழ்வு வேற்றுமை, இன்னும் பல கொடுமைகள், போலித்தனம், யாவும் ஒழிந்த பிறகுதான் இந்து வுக்கு பூணூல் அணியும் உரிமை உண்டு. ஆகையால் பூணூல் அணிவதை என் மனம் எதிர்க்கிறது. இந்து மதத்தை உயர்த்துவதற்கு இது ஒரு வழி என்று எனக்குத் தோன்றவில்லை”. (‘காந்தியார் சுயசரிதம்’, பக்.480) பெரியார் முழக்கம் 30042015 இதழ்

பூணூல் அறுப்பு நிகழ்ச்சி: கழகத்துக்கு ஏற்புடையதல்ல! 0

பூணூல் அறுப்பு நிகழ்ச்சி: கழகத்துக்கு ஏற்புடையதல்ல!

சென்னையில் சில பகுதிகளில் பார்ப்பனர்களின் பூணூல்களை அறுத்ததாக திராவிடர் விடுதலைக் கழகத்தைச் சார்ந்த 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இந்த பூணூல் அறுப்பு, திராவிடர் விடுதலைக் கழகத்துக்கு உடன்பாடானது அல்ல. இதை அவர்கள் செய்திருக்கக்கூடாது என்பதே திராவிடர் விடுதலைக் கழகத்தின் நிலைப்பாடு. ‘பூணூல்’ என்ற பிறப்பின் ஆதிக்க சின்னத்தை கருத்தியலாக மக்களிடையே எடுத்து விளக்கி வருகிறது, பெரியார் இயக்கம். இந்த நிகழ்வை -திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்கவில்லை என்றாலும் இதை தனித்துப் பார்க்காமல் அண்மைக்காலமாக பெரியாரை இழிவாக தரம் தாழ்ந்து விமர்சிக்கும் கருத்துகளோடு இணைத்துப் பார்க்க வேண்டும். எச். ராஜா போன்ற பார்ப்பனர்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்களில் பெரியார் படங்கள் கொளுத்தப்படுவதையும், செருப்பாலடிக்கப்படுவதையும் காவல்துறை தடுக்காமல் அனுமதித்து வருகிறது. தாலியகற்றிய பெண்களை சிவப்பு விளக்குப் பகுதியிலிருந்து வந்தவர்கள் என்று அதே பார்ப்பனர் பேட்டி தருகிறார். பெரியார் இயக்கம் நடத்தும் நிகழ்வுகளில் கலவரம் விளைவிப்பது, தடுக்க முயற்சிப்பது போன்ற நடவடிக்கைகள் தொடர்ந்து வருகின்றன. இந்த...

‘நாம் தமிழர் கட்சி’ அறிவிப்பு பெரியார் மீது ‘அவதூறு’ கூறுவோர் கட்சி நீக்கம் செய்யப்படுவர் 0

‘நாம் தமிழர் கட்சி’ அறிவிப்பு பெரியார் மீது ‘அவதூறு’ கூறுவோர் கட்சி நீக்கம் செய்யப்படுவர்

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் சீரிய அறிவுறுத்தலின் அடிப்படையில் இந்த அறிவிப்பு வெளியிடப்படுகிறது. தமிழ்ச்சமூகத்தில் மூடநம்பிக்கை ஒழிப்பு, சாதி மத எதிர்ப்பு, பெண்ணடிமை தகர்ப்பு, போன்ற பல்வேறு தளங்களில் தந்தை பெரியார் ஆற்றியுள்ள பங்களிப்பினை என்றும் மிகவும் நன்றியுடன் நினைவு கூர்கின்ற நாம் தமிழர் கட்சி, அவரை தனது பெருமைமிக்க வழிகாட்டிகளில் ஒருவராக வைத்து போற்றுகிறது… சமீப காலமாக இணைய வெளிகளில் பெரியார் தொடர்பான கண்டிக்கத்தக்க, அருவருக்கத்தக்க, அவதூறு மிக்க பதிவுகள் உலவி வருவதை நாம் கவனிக்கிறோம். மேற்கண்ட பதிவுகளில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சிலரின் பங்களிப்பினையும் நாம் கண்காணித்து வருகிறோம். இந்துத்துவா-காவி அபாயம் சூழ்ந்துள்ள இக்காலத்தில் தந்தை பெரியாரை இழிவுப்படுத்துகிற எச்செயலும் இந்துத்துவா-காவி கும்பலுக்கு வலு சேர்க்கிற செயல்களாகவே அமைந்துவிடும் என்பது உறுதி. நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங் கிணைப்பாளர் சீமான் தமிழ்த் தேசிய இன விடுதலைப் பாதையில் மாபெரும் வழிகாட்டியாக தந்தை பெரியார்...

தலையங்கம் – திருநங்கைகள் உரிமை 0

தலையங்கம் – திருநங்கைகள் உரிமை

திருநங்கைகளுக்கு சம உரிமை வழங்க வலியுறுத்தி தி.மு.க. உறுப்பினர் திருச்சி சிவா, மாநிலங்களவையில் கொண்டு வந்து தீர்மானம் நிறைவேற்றியிருப்பது வரவேற்கக்கூடிய வரலாற்றுச் சிறப்பு மிக்க நிகழ்வாகும். இதை ஒருமித்த தீர்மானமாக நிறைவேற்றிட அவையின் முழுமையான ஆதரவைப் பெறுவதற்கு ஒத்துழைத்த மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லியையும் கருத்து மாறுபாடுகளுக்கு அப்பால் பாராட்ட வேண்டும். பிறப்பின் அடிப்படையில் சமூகத்தில் வேறுபாடுகளையோ, இழிவுபடுத்துதலையோ சகிக்க முடியாது. அதை ஒழித்தாக வேண்டும் என்பதே பெரியாரியல். திருநங்கைகள் உரிமைகளும் அவர்களின் சுயமரியாதையும் அங்கீகரிக்கப்பட வேண்டும். இப்போது மேலவையில் குரல் வாக்கெடுப்பு வழியாக நிறைவேற்றப்பட்டுள்ள ‘திருநங்கைகள் உரிமைச் சட்டம்-2014’ நாடாளுமன்றத்தின் விவாதத்துக்கும், வாக்கெடுப்புக்கும் அனுப்பி வைக்கப்படவிருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களும் மாநிலங்களவை காட்டிய வழியில் வழிமொழிந்து திருநங்கைகளின் உரிமைக் கதவுகளை திறந்துவிட வேண்டும் என்பதே மனித சமத்துவம் பேணும் அனைவரின் எதிர்பார்ப்பும் ஆகும். 45 ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முறையாக தனிநபர் கொண்டுவந்த ஒருவரைவுத் தீர்மானம் ஒரு மனதாக ஏற்கப்பட்டு, சட்டமாக்கப்பட்டுள்ளது. இது...

ஜாதி வெறியைத் தூண்டுவது யார்? கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை 0

ஜாதி வெறியைத் தூண்டுவது யார்? கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை

கோயில் கட்டுகிறவர்கள் – கல்லூரி வியாபாரம் நடத்துகிறவர்கள் – தங்கள் சுயநலனுக்காக ஜாதி வெறியைத் தூண்டி விடுகிறார்கள் என்று ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்’ பரப்புரை இயக்கத்தை 20-03-2015 அன்று சென்னை பெரம்பூரில் தொடங்கி வைத்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையின் சில பகுதிகள். “எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம்” என்ற பரப்புரை பயணம் சென்னை மாவட்டக் கழக தோழர்களால் நடத்தப்படுவது இது இரண்டாவது முறை. இந்த முறை திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக தமிழகம் முழுவதும் ஆறு முனைகளில் இருந்து தொடங்குகிறது. தொடர்ச்சியாக இப்படிப்பட்ட செயல் திட்டங்களை நாங்கள் எடுத்து வந்த போதும், இன்றைய சூழலில் –கடந்த இரண்டு ஆண்டுகளாக, ஓரிரு ஜாதியவாதிகள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக, வளர்த்துக் கொள்வதற்காக பொதுமக்களிடம் ஜாதி உணர்வை தூண்டிவிட்டதை பார்த்து ஒவ்வொரு ஜாதியினரும் அவ்வாறு நடக்க தொடங்கிவிட்ட சூழலில் தான் இப்படிப்பட்ட ஒரு பயணத்தை நாம் நடத்தவேண்டிய தேவை வந்தது. இந்த...

“சாமி சிலையை தொட உங்களுக்கு அருகதை இல்லை!” 0

“சாமி சிலையை தொட உங்களுக்கு அருகதை இல்லை!”

‘பூணூல் அறுப்பு’ குறித்து ‘நக்கீரன்’ (ஏப்.25-28) ஏடு வெளியிட்ட செய்தி கட்டுரையின் சில பகுதிகள்: ஆள் அரவமற்று இருந்தது முதியவர் தாக்கப்பட்ட அந்த சின்ன முண்டக்கன்னி கோயில் தெரு. வரிசை வீடுகளின் வாசல்கள் வெறிச்சோடி கிடக்க, நாம் அப்படியே காரணீ°வரர் கோயில் நோக்கிச் சென்றோம். சில தேநீர் கடைகள், ஆட்டோ °டாண்ட் கண்ணுக்குத் தென்பட அங்கே விசாரித்தோம். “தாக்கியது பெரியார் கட்சிக்காரங்க இல்ல. வேற ஆட்கள் இங்க இந்த கோயில்ல குருக்களா இருக்குற அவங்க பையன் சண்முக குருக்களை குறி வச்சுதான் வந்தாங்க. அதுல விசுவநாதன் மாட்டிக் கிட்டாரு” என்றார் ஒருவர். ‘இது என்ன புதிய திருப்பமாக இருக்கிறதே?’ என்ற ஒருவரிடம் மேலும் பேச்சு கொடுத்தோம். “இங்க இந்த காரணீ°வரர் கோயிலுக்கு எதிர்க்க ஆட்டோ °டாண்டுல சின்னதா ஒரு பிள்ளையார் சிலை இருக்கு. ஆட்டோக் காரங்களே இதுக்கு பூஜை போடுவோம். அப்படிதான் ஒருநாள் காலையில ஒரு டிரைவர், சிலைக்கு சந்தனக் காப்பு...

அந்தக் கால ஜாதி சங்கங்கள் உரிமைக்குப் போராடின கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை 0

அந்தக் கால ஜாதி சங்கங்கள் உரிமைக்குப் போராடின கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை

கோயில் கட்டுகிறவர்கள் – கல்லூரி வியாபாரம் நடத்துகிறவர்கள் – தங்கள் சுயநலனுக்காக ஜாதி வெறியைத் தூண்டி விடுகிறார்கள் என்று ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்’ பரப்புரை இயக்கத்தை 20-03-2015 அன்று சென்னை பெரம்பூரில் தொடங்கி வைத்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையின் சில பகுதிகள். (சென்ற இதழ் தொடர்ச்சி) 1930 இல் நடைபெற்ற கொங்கு வேளாளர் மாநாட்டில், “இனி விதவைகளை வெள்ளாடை உடுத்த கட்டாயப்படுத்தக் கூடாது; விரும்பிய ஆடைகளை உடுத்த அனுமதிக்க வேண்டும்; குழந்தை இல்லாத இளம் கைம்பெண்களுக்கு மறுமணம் அனுமதிக்க வேண்டும்” என்று தீர்மானம் நிறை வேற்றினார்கள். கல்வி நிறுவனங்களை உருவாக்க வேண்டும் என்ற நாடார் சங்கங்கள் இருந்தன. இப்படி மக்கள் நலனில் அக்கறையுள்ள ஜாதி சங்கங்கள்தான் அந்த காலத்தில் இருந்தன. ஆனால் இப்போது எதற்காக ஜாதி சங்கங்கள் இருக்கின்றது? ஜாதி சங்கங்களை வைத்திருப்பவர்கள் யார்? ஒரு ஊரில் புதுக் கோவில் உருவானால், முன்பெல்லாம் அது கந்துவட்டிக்காரனால்...

எச்சில் இலை சடங்குக்கு தடை 0

எச்சில் இலை சடங்குக்கு தடை

கருநாடகாவில் பார்ப்பன புரோகிதர்கள் சாப்பிட்டு வீசிய எச்சில் இலைகளில் ‘உருண்டு புரளும்’ சடங்குகளுக்கு கருநாடக அரசு தடை விதித்தது. நீண்டகாலமாக நடக்கும் இந்த அய்தீகத்தை தடை செய்யக் கூடாது என்று பார்ப்பனர்கள் தொடர்ந்த வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதேபோல் கரூர் மாவட்டம் நெடூர் கிராமத்தில் சதாசிவ பிரமேத்திரா கோயிலில் எச்சில் இலை யில் உருளும் சடங்கு 100 ஆண்டுகளாக நடந்து வந்தது. வி. தலித் பாண்டியன் என்பவர் இதை எதிர்த்து மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந் தார். நீதிமன்றம் பார்ப்பனர் திணித்த இந்த இழிவான சடங்குக்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. நீதிபதிகள் எஸ்.மாணிக்கம், வி.எம். வேலுமணி ஆகியோர் இந்தத் தடையை விதித்துள்ளனர். தாலி நீக்கம் : பழ. கருப்பையா கேள்வி அ.இ.அ.தி.மு.க. சட்டமன்ற உறுப்பினர் பழ. கருப்பையா, ‘நக்கீரன்’ வார இதழில் எழுதிய கட்டுரையில், தாலி அகற்றும் நிகழ்வை எதிர்க்கும் மதவெறி சக்திகளை கடுமையாக சாடியுள்ளார். தாலியை அணிந்து கொண்டவர்கள்...

தலையங்கம் – தமிழகத்திலா இந்த அவலம்! 0

தலையங்கம் – தமிழகத்திலா இந்த அவலம்!

இந்தியாவில் எந்த மாநிலங்களிலும் நடக்காத ஒரு ‘சமூகப் புரட்சி’ தமிழ்நாட்டில் மட்டும் நடந்தது. அந்தப் ‘புரட்சி’தான் இந்த மண்ணில் சமூக-பொருளியல் மாற்றங்களுக்காக வித்திட்டது. அதுதான் கடந்த காலங்களில் நடந்த ‘கல்விப் புரட்சி’. இராஜகோபாலாச்சாரி முதல்வராக இருந்தபோது பள்ளிகளை மூடினார். ‘குலக்கல்வித் திட்டத்தை’க் கொண்டு வந்தார். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட பெரும்பான்மை மக்களின் கல்வி உரிமைக்காக தொடர்ந்து போராடி வந்த பெரியாரின் இயக்கம் வெகுண்டு எழுந்தது. கல்வி உரிமைகளை நசுக்கிய இராஜகோபாலாச்சாரியை பதவியிலிருந்து ஓட வைத்தது. அதற்கான போராட்டச் சங்கை ஊதியவர் பெரியார். பெரியாரின் ஆதரவோடு அடுத்து ஆட்சிக்கு வந்தார் காமராசர். மூடிய பள்ளிகளைத் திறந்தார். மேலும் கூடுதலாக பள்ளிகளைத் திறந்தார். கல்லூரிகள் தொடங்கப்பட்டன; மதிய உணவுத் திட்டம் மற்றும் இலவசக் கல்வி வந்தது. அரசுப் பள்ளிகளும், அரசுக் கல்லூரிகளும், அரசு தொழில்நுட்ப நிறுவனங்களும் முதல் தலைமுறையாக படிக்க வந்த தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் வாழ்க்கையில் ஒளியேற்றின. தமிழகம் ஏனைய மாநிலங்களிலிருந்து இப்போதும்கூட ஒப்பீட்டளவில்...

பூணூல் பற்றி விவேகானந்தர் 0

பூணூல் பற்றி விவேகானந்தர்

விவேகானந்தர் 1897ஆம் ஆண்டு மே மாதத்தில் ஆலம்பஜார் மடத்தில் தங்கி சிஷ்யர்களிடம் கலந்துரையாடிக் கொண் டிருந்தார். அப்போது சிஷ்யர்களில் ஒருவர் பூணூல் பற்றிக் கேட்டதற்கு விவேகானந்தர் விளக்கம் அளித்துக் கூறுகையில், “பழைய காலத்திலே சிஷ்யர்கள் கையில் சமத்துகளை எடுத்துக்கொண்டு, குரு வினுடைய பர்ண சாலைக்குப் போவார்கள். குருவும் அவனுடைய தகுதியை அறிந்து மனம், வாக்கு, காயம் ஆகிய மூன்றினையும் அவன் அடக்கி வைத்திருப்பதற்கு அடையாளமாக முப்புரியாகிய ‘முஞ்சா’ என்னும் புல்லினை அவனுடைய இடுப்பிலே கட்டி அவனுக்குத் தீட்சை செய்து வேதங்களை போதிப்பார். அரையிலே (இடுப்பில்) கட்டிய முப்புரியாகிய இப்புல்லிலே கௌபீனத்தை (கோவணம்) கட்டிக் கொள்வான். முஞ்சா என்னும் இப் புல்லினால் ஆக்கப்பட்ட கவசத்திற்குப் பதிலாக முப்புரி நூலை அணிந்து கொள்ளும் வழக்கம் பின் நாளில் ஏற்பட்டது” என்றார். உடனே சிஷ்யன், “அய்யா, அப்படியானால் முப்புரி நூலை அணியும் வழக்கம் வைதீக வழக்க மில்லை என்று சொல்லுவீரோ?” என்றான். அதற்கு விவேகானந்தர், “வேதங்களில்...

முனைவர் புரட்சிக்கொடிக்கு விருது 0

முனைவர் புரட்சிக்கொடிக்கு விருது

திருச்சி அண்ணா பல்கலைக் கழகத்தின் மருந்தியல் தொழில் நுட்பத்துறையில் உதவிப் பேராசிரியர் பெரியாரியலாளர் முனைவர் புரட்சிக்கொடி 08.05.2015 அன்று சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் “TECHNOLOGY INNOVATION AWARD” என்ற பெருமைக் குரிய விருதைப் பெற்றுள்ளார். தமிழக அரசின் மிக உயரிய விருதான ”‘தமிழ்நாடு இளம் பெண் அறிவியலாளர் விருது’” (Tamilnadu Young Women Scientist Award), Fast track Young Scientist Research award  போன்ற விருதுகளையும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது பெற்றோர் புலவர் ஆய்.அறிவன் – அறிவொளி இருவரும் பெரியார் தொண்டர்கள். ஜாதி, தாலி மறுப்புத் திருமணம் செய்தவர்கள். புரட்சிக் கொடியும் ஜாதி, தாலி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர். இவரது வாழ்வினையர் கழகத்தின் தலைமைக்குழு உறுப்பினர் தாமரைக் கண்ணன் ஆவார். அவருக்குப் ‘புரட்சிகொடி’ என்று பெயர் சூட்டியவர் பெரியார் என்பது கூடுதல் பெருமை… 72 ஆய்வுக்கட்டுரைகளை எழுதி யுள்ளார். உலகப்புகழ்பெற்ற அறிவியல் இதழ்களில் இவரது ஆய்வுக்...

காவல்துறை எல்லை மீறுகிறது 0

காவல்துறை எல்லை மீறுகிறது

ஜெயலலிதாவுக்கு பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் 2014 செப்டம்பரில் 4 ஆண்டு சிறைத் தண்டனை வழங்கியபோது தமிழ்நாடு முழுதும் ஆளும் கட்சியினர் சட்டத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொண்டனர். பேருந்துகள் தீ வைக்கப் பட்டன; கடைகள் அடித்து நொறுக்கப்பட்டன. காவல்துறை அனுமதியின்றியே சாலை மறியல் போராட்டங்கள் நடந்தன. காவல்துறை வேடிக்கை பார்த்தது. எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால், ஆந்திர காவல்துறை 20 தமிழர்களை கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்ததை எதிர்த்து ஆந்திர பேருந்துகளை தாக்கிய தமிழ் உணர்வாளர்களை காவல்துறை கைது செய்து பிணையில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்கு தொடர்ந்து சிறையில் அடைத்தது. கொழும்பில் நடந்த காமன்வெல்த் மாநாட்டில் மோடி பங்கேற்கக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்க, சேலம் வருமானவரித்துறை அலுவலக வாயிலில் ஒரு கோணிப்பையை மண்ணெண்ணெயில் மூழ்கச் செய்து வீசிய குற்றத்துக்காக திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களையும், தலைவர் கொளத்தூர் மணியையும் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து...

மத்திய அரசுப் பதவிகளில் பிற்படுத்தப்பட்டவர்தான் ‘சின்னஜாதி’ கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை 0

மத்திய அரசுப் பதவிகளில் பிற்படுத்தப்பட்டவர்தான் ‘சின்னஜாதி’ கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரை

கோயில் கட்டுகிறவர்கள் – கல்லூரி வியாபாரம் நடத்துகிறவர்கள் – தங்கள் சுயநலனுக்காக ஜாதி வெறியைத் தூண்டி விடுகிறார்கள் என்று ‘எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்’ பரப்புரை இயக்கத்தை 20-03-2015 அன்று சென்னை பெரம்பூரில் தொடங்கி வைத்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையின் சில பகுதிகள். (சென்ற இதழ் தொடர்ச்சி) உயர் கல்வியில் இட ஒதுக்கீடு வந்தவுடன் வந்த போராட்டங்களை நீங்கள் மீண்டும் யோசித்துப் பாருங்கள். 2006ஆம் ஆண்டு வரை அய்.அய்.டி போன்ற உயர் கல்வி நிலையங்களில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு இல்லை. பிற்படுத்தப்பட்ட மக்கள் அறுபது எழுபது சதவீதத்திற்கு மேல் இருக்கக் கூடும் என்று நாம் கருதுகின்றோம். மண்டல் கணக்கெடுப்பின் படி 52 சதவீதம் என்று சொல்கிறார். மத்திய கல்வி அமைச்சர் மத்திய அரசின் உயர்கல்வி நிலையங்களில் 27 சதவீதம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு ஒதுக்க வேண்டும் என்று சொல்லி விட்டார். அதற்கே பார்ப்பன மாணவர்கள் போராட்டம்; உடனே அரசு இறங்கி...

தலையங்கம் – தீர்ப்பு வந்துவிட்டது! 0

தலையங்கம் – தீர்ப்பு வந்துவிட்டது!

19 ஆண்டுகாலம் இழுத்தடிக்கப்பட்ட ஒரு வழக்கை இரண்டே நிமிடங்களில் தீர்ப்பளித்து தீர்வு கண்டுவிட்டது கருநாடக உயர்நீதிமன்றம். ஜெயலலிதா மற்றும் அவரது குழுவினரான சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்பட எவரும் வருமானத்துக்கு அதிகமாக சொத்து ஏதும் சேர்க்கவில்லை என்பதே நீதிமன்றத்தின் தீர்ப்பு. ஆம்! இப்போது இவர்கள் சட்டப்படி ஊழல் ஏதும் இழைத்திடாத குற்றமற்றவர்கள்! “நான் புடம் போட்ட தங்கமாக மீண்டு வந்துவிட்டேன்” என்று ஜெயலலிதாவும் அறிவித்திருக்கிறார். அ.இ.அ.தி.மு.க. அமைச்சர்களும் அந்த கட்சியினரும் வெற்றியைக் கொண்டாடி மகிழும்போது எதிர்கட்சிகளோ வியப்பிலும் அதிர்ச்சியிலும் மூழ்கியுள்ளன. எப்போதுமே இந்த ‘பாரத புண்ணிய பூமி’யில் ஊழல் இரண்டு முகம்களைக் கொண்டிருக்கிறது. ஒன்று ‘பிராமண’ ஊழல்; மற்றொன்று ‘சூத்திர’ ஊழல். குற்றம் செய்தவர்கள் பார்ப்பனர்களாக இருந்தால், அவர்களை தண்டிக்கக் கூடாது என்று மனுசா°திரம் கண்டிப்பாக கூறிவிட்டது. அந்த ‘மனு’ இப்போது வேறு வடிவங்களில் இயங்கிக் கொண்டு இருக்கிறது. இதற்கு அண்மைக்கால உதாரணங்களே உண்டு. லல்லுபிரசாத், ஓம்பிரகாஷ் சவுதாலா, கனிமொழி, அ.இராசா...