பூணூல் : காந்தியார் எதிர்ப்பு

பூணூல் அணிவதை எதிர்த்து காந்தியார் பதிவு செய்த கருத்து:
“இலட்சக்கணக்கான இந்துக்கள் பூணூல் தரிக்காமல் இருக்கும் போது அது எனக்கு அவசிய மென்று தோன்றவில்லை. ஆதலால் நான் அதை அணிய வில்லை. பூணூலை அணிபவன் உயர்ந்த வாழ்வு, மாசற்ற வாழ்வு வாழ வேண்டும்., ஆத்மார்த்தீக மான புனிதத் தன்மையின் அறிகுறியாக இருக்க வேண்டும் இப்பூணூல். இன்றுள்ள இந்துக்கள், இந்து, இந்து மதம் உள்ள நிலையில், இப்பூணூலை யும் அணிந்து கொள்வதற்குத் தகுதியுள்ளவர்களா என்பது எனக்கு சந்தேகம். இந்து மதத் திலுள்ள தீண்டாமை, உயர்வு தாழ்வு வேற்றுமை, இன்னும் பல கொடுமைகள், போலித்தனம், யாவும் ஒழிந்த பிறகுதான் இந்து வுக்கு பூணூல் அணியும் உரிமை உண்டு. ஆகையால் பூணூல் அணிவதை என் மனம் எதிர்க்கிறது. இந்து மதத்தை உயர்த்துவதற்கு இது ஒரு வழி என்று எனக்குத் தோன்றவில்லை”. (‘காந்தியார் சுயசரிதம்’, பக்.480)

பெரியார் முழக்கம் 30042015 இதழ்

You may also like...

Leave a Reply