வினாக்கள்… விடைகள்…!

விவசாயிகளுக்கு நன்மை செய்யவே நிலத்தைக் கைப்பற்றும் சட்டம். – பிரதமர் மோடி
விவசாயம் செய்து நஷ்டம் ஏற்பட்டு தற்கொலை செய்து கொள்ள வேண்டாமே என்ற நல்ல எண்ணம் போல!
திருப்பதி கோயிலில் மொட்டை அடிக்க பெண்கள் நியமனம். – தேவஸ்தானம் அறிவிப்பு
மொட்டை போட மட்டும் பெண்களுக்கு உரிமை தருவீங்க… ஆனால், லட்டு தயாரிப்புகோ ‘பிராமண ஆண்களுக்கு’ மட்டும். நன்னா, இருக்கு!

கோவாவில் மாட்டிறைச்சிக்கு தடை போட மாட்டோம். – கோவா பா.ஜ.க. முதல்வர்
எதுக்கும், குடியரசுத் தலைவர் உங்க ஆட்சியைக் கலைச்சிடாம பாத்துக்குங்க!

மோடி ஆட்சியில் 300 நாள்களில் 600 மதக் கலவரங்கள்; 49 பேர் மரணம். – செய்தி
600 மதக்கலவரங்கள் நடந்தும் இறப்பு விகிதத்தை 49 ஆக அரசு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதே மிகப் பெரும் சாதனைன்னு சொல்வீங்களே!

நாகர்கோயில் காவல் நிலையத்தில் வைக்கப்பட்ட விநாயகன் சிலை இரவோடு இரவாக மறைந்தது. – செய்தி
மீண்டும் காவல்துறை தேடிப் பிடித்து கொண்டு வராமல் இருந்தால் சரி.

மத்திய அரசு அலுவலகங்களை சுத்தப்படுத்த ‘பினாயில்’ போன்ற திரவ வேதியப் பொருள்களுக்கு மாற்றாக பசு மாட்டு சிறுநீரைப் பயன்படுத்தலாம். – மேனகா காந்தி பேட்டி
ஆனால்! பசு மாட்டு சிறுநீரை மட்டுமே பயன்படுத்த வேண்டும்; எவராவது எருமை மாட்டு சிறுநீரைப் பயன்படுத்தினா, 5 ஆண்டு சிறை!

பெரியார் முழக்கம் 26032015 இதழ்

You may also like...

Leave a Reply