தாம்பரம் காவல்துறையின் ‘அதிரடி’ ஆணை

மாடு, ஆடு, கோழி உள்ளிட்ட எந்த இறைச்சி உணவையும் சாப்பிட்டால் கைது செய்வோம்!

பரப்புரைப் பயணத்தின் நிறைவு விழா பொதுக் கூட்டம் கடந்த மார்ச் 30ஆம் தேதி நடக்க விருந்தது. கடைசி நேரத்தில் கூட் டத்துக்கு காவல்துறை அனுமதி மறுத்தது. தடையை எதிர்த்து காஞ்சிபுரம் மாவட்ட கழகத் தலைவர் செங்குட்டுவன், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கறிஞர்கள் திருமூர்த்தி, துரை. அருண் ஆகியோர் நேர்நின்று வாதாடி, கூட்டத்துக்கான அனுமதியைப் பெற்றனர். ஏப்.14 ஆம் தேதி கூட்டம் நடத்த நீதிமன்றத்தின் அனுமதி பெற்று கூட்டம் நடந்தது. காவல்துறை கூட்டத்தை நடத்த விடாமல் தடுக்க கடும் நெருக்கடிகளை உருவாக்கியது. 22 நிபந்தனைகளை எழுத்துபூர்வமாக காவல்துறை விதித்தது. அதில் ஒன்று, கூட்டத்தின் இறுதியில் மாட்டு இறைச்சியோ அல்லது வேறு எந்த இறைச்சி உணவோ பிரியாணியாக வழங்கக்கூடாது என்பதாகும். தமிழ்நாட்டில் மாட்டிறைச்சிக்கு சட்டப்படி தடை இல்லை. ஆனால், மாட்டிறைச்சிக்கு மட்டுமல்ல, கோழி, ஆடு உள்ளிட்ட எந்த இறைச்சி உணவையும் சாப்பிட அனுமதிக்க மாட்டோம் என்று காவல்துறை உதவி ஆணையாளர் மனோகரன் என்பவர் கையெழுத்திட்டு உத்தரவு பிறப்பித்திருந்தார். இது காவல்துறையின் அதிகார எல்லை மீறலை அப்பட்டமாக வெளிப்படுத்துவதாக இருந்தது.

பெரியார் முழக்கம் 16042015 இதழ்

You may also like...

Leave a Reply