ஸ்ரீனிவாசய்யங்கார் பணத்தின் மகிமை

சென்ற வாரம் தூத்துக்குடியில் ஸ்ரீமான் ஸ்ரீனிவாசய்யங்கார் சிஷ்யர் களில் ஒருவரான ஒரு குப்புசாமி முதலியார் அவர்கள் தூத்துக்குடியில் “காங்கிரஸ்” (பார்ப்பன) பிரசாரம் செய்யும் போது ஒரு கூட்டத்தில் ஸ்ரீமான் ஈ. வெ. ராமசாமி நாயக்கரும் தானும் ஒரே கள்ளுக்கடையில் கள்ளுக்குடித் தோம் என்றும் தனக்கு சீனிவாசய்யங்கார் சிலவுக்குக் கொடுக்கிறார் என்றும் மற்றும் பலவிதமாய் பெண்டு பிள்ளைகளைக் குறித்தும் வேடிக்கையாகப் பிரசங்கம் செய்தார் என்றும் அக்கூட்டத்தில் உள்ள பார்ப்பனர்கள் குலுங்கி குலுங்கி நகைத்தார்கள் என்றும் ஸ்ரீனிவாசய்யங்கார் கக்ஷியாரை ஆதரிப் பதாக சொல்லிக்கொள்ளும் சில பார்ப்பனரல்லாதார்கள் கூட இதைப்பற்றி வருத்தப்பட்டார்கள் என்றும் ஸ்ரீமான் வெ. நாராயணன் என்பவர் தூத்துக்குடி யில் சில கனவான்கள் முன்னிலையில் நமக்குச் சொன்னார். இது உண்மை யானால் ஸ்ரீ. ஸ்ரீனிவாசய்யங்காரின் பணத்தின் மகிமையே மகிமை.

குடி அரசு – செய்தி விளக்கம் – 12.06.1927

You may also like...

Leave a Reply