Category: திவிக

70 ஆண்டு மூட நம்பிக்கையை தகர்த்த – ஆத்தூர் தோழர்கள் அறிவியல் பரப்புரை

70 ஆண்டு மூட நம்பிக்கையை தகர்த்த – ஆத்தூர் தோழர்கள் அறிவியல் பரப்புரை

சேலம் மாவட்டம் ஆத்தூருக்கு அருகே ஒரு கிராமத்தில் 70 ஆண்டு களாக மாடி வீடுகளே கட்டப்படுவது இல்லை; அது ‘சாமி குத்தம்’ என்று மக்கள் அஞ்சி வாழ்ந்து கொண்டிருந்த நிலையில் கழகத் தோழர்கள் அந்த கிராமத்தில் அறிவியல் பரப்புரை நடத்தி மக்களின் அச்சத்தைத் தகர்த்தனர். இது குறித்த செய்தி: சேலம் மாவட்டம் ஆத்தூர் வட்டம் மல்லியக்கரை அஞ்சலுக்குட்பட்ட கருத்த ராஜப்பாளையம் என்ற கிராமத் தில் சுமார் 70 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு அடுக்கு மாடி வீடும் கட்டப்படவில்லை.காரணம் அங்கு அனைவராலும் மிகவும் அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ள பெரியசாமி கோவிலின் கோபுரத்தின் உயரத்திற்கு மேல்  அந்த பகுதியில் எந்த ஒரு வீடு கட்டினாலும் அவர் இறந்து விடுவார் அதுபோல் இறந்தும் இருக்கிறார் என்ற மிகப்பெரிய மூட நம்பிக்கையில் பயத்துடன் வாழ்ந்து வருகின்றனர். இந்த செய்தி ‘சன்’  மற்றும் ‘மக்கள்’ தொலைக்காட்சிகளிலும் நேரடியாக ஒளிபரப்பட்டுள்ளது. செய்தித்தாள் களிலும் வெளி வந்துள்ளது. அங்கு பொருளாதார வசதி...

பாதிரியார் சகாயராஜ் தீண்டாமை வெறி சங்கராபுரத்தில் ஆர்ப்பாட்டம்: தோழர்கள் கைது

விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தாலுகா மையனூர் கிராமத்தில் ஏசு குழந்தை பள்ளி இயங்கி வருகிறது. இதன் தலைமையாளர் பாதிரியார் சகாயராஜ் இந்த பள்ளியில் படிக்கும் நான்கு சிறுவர்களை செப்டம்பர் 5 அன்று அங்கு படிக்கும் மாணவர்களின் செருப்பை திருடியதாக பிடித்து, அதற்கு தண்டனையாக அடித்தும்,  விளையாட்டு திடலை சுற்றிவரச் சொல்லியும் கொடுமைப்படுத்தி யுள்ளனர். நான்கு பேரில் இருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை விட்டுவிட்டு,  இருளர் சமூகத்தை சேர்ந்த இருவரை கடுமையாக தாக்கியுள்ளனர். அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று வெளியூர் போக பணம் இல்லாததால் வீடு திரும்ப முயன்றபோது, பள்ளி ஊழியர்கள் பார்த்து பள்ளிக்கே கொண்டு சென்றனர். செய்தி பெற்றோர்களுக்கு தெரிந்து அவர்கள் பாதிரியார் சகாயராஜை சந்தித்து விவரம் கேட்டபோது, அவர் பெற்றோர்களை மிரட்டியதோடு இது பிற்படுத்தப்பட்டோர் பலம் வாய்ந்த பகுதி அவர்களை அழைத்து உங்களை தாக்குவேன். நாளை காலை வந்து விடுப்பு சான்றிதழ் (கூஊ) பெற்றுக்கொள்ளுங்கள் என்றிருக்கிறார். இவர்களும் இது...

நாச்சியார்கோவிலில் கொளத்தூர்மணி பேச்சு இடஒதுக்கீடு வறுமை ஒழிப்பு திட்டமல்ல

தஞ்சைமாவட்டம் திருவிடைமருதூர்ஒன்றிய திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 138வது பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் 17.10.2016 அன்று மாலை 6மணியளவில் நாச்சியார்கோவில் வடக்கு வீதியில் அமைக்கப்பட்ட சுயமரியாதைச் சுடரொளி குடந்தை ஆர்பிஎஸ் ஸ்டாலின் நினைவு மேடையில் தலைமை கழக பேச்சாளர் சாக்கோட்டை இளங்கோவன் தலைமையில் மிகுந்த எழுச்சியுடன் நடைப்பெற்றது. துவக்கத்தில், மக்கள்பாடகர் பள்ளத்தூர் நாவலரசன் குழுவினரின் பகுத்தறிவு பண்பாடும் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.  கும்பகோணம் ஒன்றிய அமைப்பாளர் சா. வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார்.  திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா. காளிதாசு, நாகை மாவட்ட செயலாளர் தெ. மகேசு, தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித. திருவேங்கடம் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.  பின்னர், பொதுக்கூட்டத்திற்கு தலைமையேற்று கழகப் பேச்சாளர் சாக்கோட்டை இளங்கோவன் தலைமை உரையாற்றினார். இறுதியாக, கழகத் தலைவர் கொளத்தூர்மணி சிறப்புரையாற்றினார்.  அவர் தனது உரையில், “ஜாதி ஒழிப்பிற்கு ஒரு இடைக்கால நிவாரணம் என்றால் அது அனைத்து ஜாதியை சேர்ந்தவர்களும்...

“தீபாவளி புனிதமா ? வணிகமா?” சென்னையில் தோழர்கள் துண்டறிக்கை விநியோகம்

விழிப்புணர்வு துண்டறிக்கை திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்ட தோழர்களால் தியாகராய நகர் கடைவீதியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. மாணவர்கள், மாணவியர்கள், தாய்மார்கள் என மக்கள் ஆர்வமாக துண்டறிக்கையை வாங்கி படித்தது அவர்களின் தேடலை, தேவையை நன்கு உணர்த்தியது. சிலர் இருபது முப்பது துண்டறிக்கை களை அவர்களின் பகுதியில் விநியோகிக்க வாங்கிச் சென்றதும், ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க கம்யூனிஸ்ட் தோழர் தாமாக முன் வந்து துண்டறிக்கை விநியோகத்திற்கு உதவியாய் வந்ததும், திருவல்லிக்கேணி தொகுதி எம்.எல்.ஏ. ஜெ. அன்பழகன் துண்டறிக்கையை பெற்றுக்கொண்டு தோழர்களின் பணியை பாராட்டியது, தோழர்களுக்கு பெரும் ஊக்கமாய் அமைந்தது. தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன் தலைமையில் மாவட்ட செயலாளர் இரா. உமாபதியுடன் தோழர்கள் துண்டறிக்கையை விநியோகம் செய்தனர். பெரியார் முழக்கம் 10112016 இதழ்

திருப்பூரில் அறிவியல் மன்றம் நடத்திய மகளிர் சந்திப்பு

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்திய மகளிர் சந்திப்பு திருப்பூரில் 23.10.2016 அன்று நடைபெற்றது. இதில் திருப்பூர் கோவை பகுதி தோழர்கள் 30 பேர் கலந்து கொண்டனர். காலை 11.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை நடந்த இந் நிகழ்வு பெரும் உற்சாகத் துடனும் பயனுள்ளதாகவும் நடைபெற்றது. முதல் நிகழ்வாக கலந்து கொண் டோர் தங்களைப் பற்றியும் தங்களுக்கு பொது வாழ்விலுள்ள பங்கு பற்றியும் அறிமுகப்படுத்திக் கொண்டனர். பிறகு அந்தக் காலப் பெண்கள் வாழ்வு தான் சிறந்தது என்று ஒரு குழுவும் அதனை மறுத்து இந்தக் காலப் பெண்கள் வாழ்வு தான் சிறந்தது என்று ஒரு குழுவும் விவாதித்தனர். இதில் பெண்களின் வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்கள் முன்னேற்றங்கள் குறித்து பல்வேறு கருத்துகள் முன் வைக்கப்பட்டு விவாதித்தனர். பிற்பகல் பெரியார் ஒர் அறிமுகம் என்ற தலைப்பில் சிவகாமி பேசினார். பிறகு பொட்டு வைத்தல், தாலி ஓர் அடிமைச் சின்னம், அணிகலன்...

மதுரையில் 480 தோழர்கள் கைது ஆணவக் கொலைகளைத் தடுக்காத காவல்துறை அலுவலகம் முற்றுகை

ஆணவக் கொலைகளைத்  தடுக்கத் தவறிய காவல்துறையைக் கண்டித்து, தென்மண்டல காவல் துறை ஐ.ஜி. அலுவலகத்தை முற்றுகை இடும் போராட்டம் 3.11.2016 அன்று, காலை 11-00 மணியளவில் நடைபெற்றது. மதுரை, புதூர் பேருந்து நிலையத்தில் அணி திரண்ட தோழர்களிடையே கூட்டமைப்பின் தலைவர்கள் உரையாற்றினர். போராட்ட ஒருங்கிணைப்பாளர்  தமிழ்ப்புலிகள்கட்சித் தலைவர் நாகை. திருவள்ளுவன் நோக்க உரையாற்றினார். திராவிடர் விடுதலை கழகத் தலைவர்கொளத்தூர்மணி, சி.பி.எம்.எல். மக்கள் விடுதலைக் கட்சியின் மீ.த.பாண்டியன், த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கோவை இராமக்கிருட்டிணன், மனிதநேய மக்கள் கட்சிப் பொதுச்செயலாளர் அப்துல் சமது, எச்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் தெகலான் பாகவி, ஆதிதமிழர்ப் பேரவைத் தலைவர் இரா.அதியமான், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் புதுக் கோட்டை செரீப், மக்கள் ஜனநாயக முன்னேற்றக் கழகப் பொதுச் செய்லாளர் பிரிசெல்லா பாண்டியன், இளந்தமிழகம் செந்தில், மே 17 இயக்கம் திருமுருகன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழ்நேசன், விடுதலைக் கட்சி துணைப் பொதுச்செயலாளர் ஆற்றலரசு ஆகியோர் உரையாற்றிய பின்னர்...

சென்னையில் முற்றுகைப்போராட்டம் ,கைது !

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 26.04.2016 செவ்வாய்க்கிழமை மாலை 5 மணியளவில் உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று நடைபாதை கோயில்களை உடனே அகற்று என தமிழக அரசை வலியுறுத்தி கழக பொதுச்செயலாளர் தோழர் தோழர் விடுதலை ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் சென்னை மாநகராட்சி, ரிப்பன் மாளிகை.முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது. இம்முறைக்கப்போராட்டத்தின் போது சட்ட விரோதமான உள்ள நடைபாதைக் கோயில்களை அகற்று !உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு பத்து ஆண்டுகள் ஆகியும் அத்தகைய கோயில்களை அகற்றாமல் இனியும் காலதாமதப்படுத்தாதே ! என தமிழக அரசை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன. முற்றுகையில் ஈடுபட்ட கழக தோழர்கள் கைதுசெய்யப்பட்டு மாலை 7 மணியளவில் விடுவிக்கப்பட்டார்கள். இம்முற்றுகைப் போராட்டத்தில் தலைமை நிலைய செயலாளர் தோழர் தபசி குமரன்,மாவட்ட தலைவர் வேழவேந்தன்,மாவட்ட செயலாளர் உமாபதி, தலைமைக்குழு உறுப்பினர் விழுப்புரம் அய்யனார், வடசென்னை மாவட்ட தலைவர் ஏசுகுமார்,கழக வழக்கறிஞர் அருண் உள்ளிட்ட 40 தோழர்கள் கலந்துகொண்டு கைதாகினர்.  

களை கட்டும் கழக கட்டமைப்பு நிதி திரட்டல் காவலாண்டியூர் 10112016

திராவிடர் விடுதலைக் கழக கட்டமைப்பு நிதி திரட்டல் கிளை : காவலாண்டியூர்  தி.வி.க ஆதரவாளர்கள் 1. திரு.ராமு போர்வெல் காண்ட்ரக்டர் கண்ணாமூச்சி ரூபாய் பத்தாயிரம் 10000/= 2. திரு.ராஜா தி.மு.க. (ஜல்லிமேடு) கண்ணாமூச்சி ரூபாய் பத்தாயிரம் 10000 | = 3.வளர்மதி விஸ்வநாதன் கண்ணாமூச்சி ரூபாய் ஐந்தாயிரம் 5000/= 4. திரு.சத்தியானந்தம் நெடுஞ்செழியன் நகர் செட்டியார் ரூபாய் ஐந்தாயிரம் 5000/= 5. திரு.இராஜா நஞ்சுண்டபுரம்.காவலாண்டியூர் ரூபாய் ஐந்தாயிரம் 5000/= 6. திரு. கார்த்திக் நஞ்சுண்டபுரம் காவலாண்டியூர் ரூ. ஐந்தாயிரம் 5000/= 7. திரு.சேகர் நஞ்சுண்டபுரம் காவலாண்டியூர் ரூ. ஐந்தாயிரம் 5000/= 8. திரு.கண்ணன் பழ வியாபாரி காவலான்டியூர் ரூ ஐந்தாயிரம் 5000 | = தோழர்கள்… 1. க ஈசுவரன ஒ். செயலாளர் தி.வி.க.காவலாண்டியூர் ரூ பத்தாயிரம் 10000/= 2. இரா.விசயக்குமார் கபிலன் ஸ்டுடியோ காலாண்டியூர் ரூ பத்தாயிரம் 10000/= 3. காவை . இளவரசன் மந்திரமா? தந்திரமா? நிகழ்ச்சியாளர் காவலாண்டியூர் ரூ. பத்தாயிரம்...

தருமபுரி கிருஷ்ணகிரி மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 09112016

திருப்பூர் துரைசாமி மாநில பொருளாளர் ரத்தினசாமி மாநில அமைப்புச் செயலாளர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது கலந்து கொண்டவர்கள் சூலூர் பன்னிர் செல்வம். தி.குமார் தலைவர் கிருட்டிணகிரி மாவட்டம் செயலாளர் காகுமார் அலேசீபம் இல்லத்தில் நடைபெற்றது துணைச் செயலாளர் ப வஞ்சிநாதன் சங்கர் அனுமந்தப்பா.இராஜேஷ் பிரபு மற்றும் 20 பேர் கலந்து கொண்டனர் டிசம்பர் 24 தஞ்சை நிகழ்வு கட்டமைவு நிதி . முழக்கம் சந்தா அமைப்பு செயல்பாடுகள் பற்றியும் விவாதிக்கப்பட்டது கா.குமார் நன்றி யுரை 2.00 முடிந்தது

கழகத் தோழர் பாரூக் அவர்களின் சார்பாக கழகத் தலைவர் அறிவுரை கழகத்தில் வாதம் சென்னை 09112016

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் மரண ஊர்வலத்தில் இந்து முன்னணியினர் நடத்திய கலவரத்தின் போது, காவல்துறை சில இந்து முன்னணியினரை கைது செய்ததோடு, இந்து முன்னணியினரை சமாதானப்படுத்தும் நோக்கில் சில இஸ்லாமியரை கைது செய்தது . அதில் கோவையை சேர்ந்த பெயரில் மட்டுமே இஸ்லாமிய அடையாளம் உடைய இறை மறுப்பாளரான திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் “பாரூக் ” கையும் கைது செய்து சேலம் சிறையில் அடைத்தது. இந்து அமைப்புகள் தந்த அழுத்தத்தால் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பதிந்தது காவல்துறை. அவருக்கு வழங்கப்படும் சட்ட வாய்ப்பான அறிவுரை கழகத்தின் ( Advisory board) முன்பு ஆஜர் படுத்த , இன்று சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். ” பாரூக் ” சார்பாக அவர் பக்க நியாயங்களை அறிவுரை கழகத்தில் உள்ள முன்னாள் நீதிபதிகள் முன்பு எடுத்துரைக்க கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி “பாரூக்...

கிறிஸ்துதாஸ் காந்தி அவர்களுக்கு ஆதரவாக கண்டன ஆர்ப்பாட்டம் சென்னை 03112016

முன்னாள் IAS அதிகாரி கிறிஸ்துதாஸ் காந்தி அவர்கள் ஊடகத்தில் புராண கற்பனை கதாபாத்திரமான இராமனை கொளுத்துவேன் தன் கருத்தினை பதித்ததற்காக … பார்ப்பன இந்துத்துவ ஊடகம் தினமலர் அவரை பற்றிய விவரங்களுடன் செய்தியை வெளியிட்டு, அவரின் அலைபேசி எண்ணையும் அதில் பதித்து, பார்ப்பன அடிமைகளை தூண்டும் விதமாக இந்த செய்திகளை வெளியிட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாய் பார்ப்பன கும்பல் ஒரு முன்னாள் அதிகாரி என்றும் கருத்தில் கொள்ளாமல் தன் காலித்தனத்தை காட்டும் விதமாக, அவரை தரக்குறைவான வார்த்தைகளாலும், அவரை ஜாதியின் பெயரால் இழிவு படுத்தியும், கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளது. அவர்களை கண்டித்து தலித் இயக்கங்களின் கூட்டமைப்பு மற்றும் மதச்சார்ப்பின்மை இயக்கம் வள்ளுவர் கோட்டத்தில் 03 11 2016 வியாழக்கிழமையன்று ஆர்ப்பாட்டம் நடந்தது . அதில் திராவிடர் விடுதலைக் கழகம் தலைமை நிலைய செயலர் தோழர் தபசி குமரன் தன் கண்டனத்தை இந்துத்துவ சக்திகளுக்கு எதிராக பதிவு செய்தார்.

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் வடசென்னை 05112016

வட சென்னை மாவட்டம் சார்பாக புளிந்தோப்பு கே.பி.பார்க் கில் தந்தை பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் 05112016 அன்று நடைபெற்றது. கழக பாடகர் தோழர் அருள்தாஸ் பகுத்தறிவு பாடல்களை பாடி கூட்டத்தை துவக்கி வைத்தார் . தொடர்ந்து தோழர் காவை இளவரசனின் மந்திரமல்ல தந்திரமே நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சி அப்பகுதி மழலைகளை மட்டுமில்லாமல் இளைஞர்களையும், பெண்களையும் பெரிதும் கவர்ந்தது. தொடர்ந்து முனைவர் .சுந்தரவள்ளி பெரியாரின் சிந்தனைகள் , கொள்கைகள் , இன்றைக்கும் ஏன் பெரியார் தேவைப்படுகிறார், இந்துத்துவத்தின் திணிப்பு போன்றவகளை பற்றி குழந்தைகளுக்கும் புரியும் எளிய முறையில் பேசினார். அவர் பேசிக் கொண்டிருக்கும் போது ஒருவர் முழுமையான டாஸ்மார்க் உதவியுடன் போதையில் இந்துத்துவ பிரதிநிதியாக வந்து இதெல்லாம் பேசக்கூடாது என்றார். எதெல்லாம் என்று கேட்டதற்கு அவரிடம் பதிலில்லை. அவருக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது அது மட்டும்தான் போலும், நம் தோழர்கள் அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். அதை தொடர்ந்து பேசிய முனைவர் அந்த அண்ணனுக்காகவும்...

அறிவுரைக் குழுமம் முன் கழகத் தலைவர் வாதம் சென்னை 08112016

இன்று 08.11.2016 மதியம் 2 மணியளவில் அறிவுரைக் குழுமம் முன் கழக தலைவர் அவர்கள் நேரில் வாதுரைக்கிறார். கடந்த மாதம் கோவையில் இந்து முன்னணி பிரமுகர் கொலை செய்யப்பட்டதையடுத்து கோவையில் இந்து மதவாதிகள் வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தினர். அந்த வன்முறை செயல்களுக்கு துளியும் சம்மந்தம் இல்லாத கழக தோழர் பாரூக் அவர்கள் மீது பொய் வழக்கு போட்டு தமிழக காவல் துறை அவரை சிறையில் அடைத்துள்ளது. மேலும் அவர் மீது குண்டர் சட்டத்தையும் பாய்ச்சியுள்ளது. இவ்வழக்கின் மீதான அறிவுரை குழுமத்தின் விசாரணை இன்று 8.11.2016 மதியம் 2 மணியளவில் சென்னை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறுகிறது.கழக தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் அவ்வமயம் நேரில் ஆஜராகி கழக தோழர் பாரூக் அவர்கள் தரப்பு வாதங்களை முன் வைக்கிறார்.  

தென்மண்டல ஐ.ஜி.அலுவலக முற்றுகை – ஆணவக்கொலை மதுரை 03112016

ஆணவக் கொலைகளைத்  தடுக்கத்  தவறிய காவல்துறைக் கண்டித்து, தென்மண்டல காவக்துறை ஐ.ஜி. அலுவலகத்தை முற்றுகை இடும் போராட்டம்  3-11-2016 அன்று, காலை 11-00 மணியளவில் நடைபெற்றது. மதுரை, புதூர் பேருந்து நிலையத்தில் அணிதிரண்ட தோழர்களிடையே கூட்டமைப்பின் தலைவர்கள் உரையாற்றினர். போராட்ட ஒருங்கிணைப்பாளர்  தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் நாகை.திருவள்ளுவன் நோக்க உரையாற்றினார். திராவிடர் விடுதலை கழகத் தலைவர் கொளத்தூர் மணி, சி.பி.எம்.எல். மக்கள் விடுதலைக் கட்சியின் மீ.த.பாண்டியன், த.பெ.தி.க. பொதுச்செயலாளர் கோவை இராமக்கிரிட்டிணன், மனிதநேய மக்கள் கட்சிப் பொதுச்செயலாளர் அப்துல் சமது, எச்.டி.பி.ஐ. கட்சித் தலைவர் தெகலான் பாகவி, ஆதிதமிழர்ப் பேரவைத் தலைவர் இரா.அதியமான், தமிழக மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் புதுக்கோட்டை செரீப், மக்கள் ஜனநாயக முன்னேஏற்றக் கழகப் பொதுச் செய்லாளர் பிரிசெல்லா பாண்டியன், இளந்தமிழகம் செந்தில், மே 17 இயக்கம் திருமுருகன் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தமிழ்நேசன், விடுதலைக் கட்சி துணைப் பொதுச்செயலாளர் ஆற்றலரசு போன்றோர் உரையாற்றிய பின்னர் ஐ.ஜி...

விருதுநகரில் பெரியார் பிறந்த நாள் மற்றும் கழக அறிமுக விழா பொதுக் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் எழுச்சியோடு தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் கழக அறிமுக விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. விருதுநகரில் தந்தை பெரியாரின் 138வது பிறந்த நாள் விழா மற்றும் கழக அறிமுக விழா பொதுக்கூட்டம். 01.10.2016 அன்று விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. செந்தில் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கவிஞர் வினோத் முன்னிலையில்,மாவட்ட தலைவர் பாண்டி வரவேற்புரை யாற்றினார். தமிழ்நாடு அறிவியல் மன்ற பொருப்பாளர் ஆசிரியர் சிவகாமி, டார்வின்தாசன், புதிய தமிழகம் மாநில மாணவரணி செயலாளர் குட்டிஜெகன், தமிழ்புலிகள் மாநில கொள்கை பரப்புச்செயலாளர் கலைவேந்தன் ஆகியோரின் உரைக்குபின் தியாகி இமானுவேல் பேரவை நிறுவனர் பூ.சந்திரபோஸ், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்வில் கழகப் பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன், கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, கழகப் பொருளாளர் துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வின்...

தூத்துக்குடியில் புதிய கல்விக்கு எதிர்ப்பு

தூத்துக்குடியில் புதிய கல்விக்கு எதிர்ப்பு

தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் தூத்துக்குடியில்  வடக்கு சோட்டையன் தோப்பில் 24.9.2016 சனிக்கிழமை மாலை 6 மணியளவில்  பெரியார் 138ஆவது பிறந்த நாள் விழா கல்வியை காவி மயக்கும்  புதிய கல்வி கொள்கை 2016யை கண்டித்து பொதுக் கூட்டம் நடை பெற்றது. மாவட்டத் தலைவர் பொறிஞர் சி. அம்புரோசு தலைமை வகித்தார். வடக்கு சோட்டைன், தோப்பு தோழர்கள் கே. சந்திரசேகர், செ. செல்லத் துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைச் செயலாளர் ச.கா. பால சுப்பிரமணியன் வரவேற்புரை ஆற்றினார். இந்திய பொதுவுடைமை கட்சி மாநகரச் செயலாளர் எஸ்.பி. ஞானசேகரன், இந்திய பொதுவுடைமை கட்சி (மார்க்சிஸ்ட்) ஒன்றிய செயலாளர் சங்கரன், கழக மாவட்ட துணைத் தலைவர் வே. பால்ராசு, ஆதித் தமிழர் கட்சி துணைப் பொதுச் செயலாளர் க. கண்ணன், விடுதலை சிறுத்தைக் கட்சி தூத்துக்குடி சட்டமன்ற தொகுதி செயலாளர்காமை. இக்பால், கழகத் தோழர் கோ. அ. குமார், வி.சி.க....

ஆர்.எஸ்.எஸ். அரசியலின் அர்த்தங்களை புரிந்து கொள்ள வேண்டும்: கொளத்தூர் மணி பேச்சு

ஆர்.எஸ்.எஸ். அரசியலின் அர்த்தங்களை புரிந்து கொள்ள வேண்டும்: கொளத்தூர் மணி பேச்சு

நாமக்கல் மாவட்டம், குமார பாளையத்தில் 06.10.2016 அன்று தந்தை பெரியாரின் 138 வது பிறந்தநாள் விழாப் பொதுக் கூட்டம் மிகவும் சிறப்பாக நடை பெற்றது. குமார பாளையம் நகர கழகத் தலைவர் மீ.த.தண்டபாணி வரவேற்புரையாற்றினார். நிகழ்வின் முன்னதாக பாவலர் இரா.நிறைமதி தலைமையில் “தந்தை பெரியார் ஒழிக்க உழைத்தது” என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது.தந்தை பெரியார் ஒழிக்க உழைத்தது “மதமே” என்ற தலைப்பில் பொன் கதிரவன், “பெண்ணடிமையே”என்ற தலைப்பில் நா.அன்பழகன், “சமூக அநீதியே” என்ற தலைப்பில் மதுபாரதி, “ஜாதியே” என்ற தலைப்பில் பகலவனும் கவிதை நடையில் சிறப்பாக எடுத்துரைத்தனர். கவியரங்கம் மிகவும் எழுச்சியோடு நடைபெற்றது. நிகழ்வின் ஒரு பகுதியாக  துரை தாமோதரனின் “மந்திரமல்ல தந்திரமே” நிகழ்ச்சி நடைபெற்றது. சாமியார்களின் மோசடித்தனங்களை விளக்கி மக்களின் அறியாமையைப் போக்கும் வகையில் இந்நிகழ்வு சிறப்பாக அமைந்தது. பின்னர் பா.செல்வம் தலைமையில் பொதுக்கூட்டம் துவங்கியது. பொதுக் கூட்டத்திற்கு நாமக்கல் மாவட்டத் தலைவர் மு.சாமிநாதன், செயலாளர் மு.சரவணன், அமைப்பாளர் மா.வைரவேல், ...

ஜாதி வெறியர்களை கண்டித்து சங்கராபுரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் 03112016

தலித்துகள் மீதான வன்கொடுமை தாக்குதல் விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் தாலுகா மையனூர் கிராமத்தில் ஏசு குழந்தை பள்ளி இயங்கி வருகிறது. இதன் தலைமையாளர் பாதிரியார் சகாயராஜ் இந்த பள்ளியில் படிக்கும் நான்கு சிறுவர்களை செப்டம்பர் 5 அன்று அங்கு படிக்கும் மாணவர்களின் செருப்பை திருடியதாக பிடித்து, அதற்கு தண்டனையாக அடித்தும், விளையாட்டு திடலை சுற்றிவர சொல்லியும் கொடுமை படுத்தியுள்ளனர். நான்கு பேரில் இருவர் பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களை விட்டுவிட்டு,இருளர் சமூகத்தை சேர்ந்த இருவரை கடுமையாக தாக்கியுள்ளனர் .அவர்கள் அங்கிருந்து தப்பிச்சென்று வெளியூர் போக பணம் இல்லாததால் வீடு திரும்ப முயன்றபோது, பள்ளி ஊழியர்கள் பார்த்து பள்ளிக்கே கொண்டு சென்றனர். செய்தி பெற்றோர்களுக்கு தெரிந்து அவர்கள் பாதிரியார் சகாயராஜை சந்தித்து விவரம் கேட்டபோது, அவர் பெற்றோர்களை மிரட்டியதோடு இது பிற்படுத்தப்பட்டோர் பலம் வாய்ந்த பகுதி அவர்களை அழைத்து உங்களை தாக்குவேன். நாளை காலை வந்து விடுப்பு சான்றிதழ் ( TC...

கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார் ஆந்திராவில் ‘இராவண விழா’

ஆந்திர மாநிலம் விசாகப் பட்டினத்தில் அகில இந்திய தலித் உரிமைகள் அமைப்பு ஆண்டுதோறும் இராவணன் விழாவை நடத்தி வருகிறது. இந்த ஆண்டு ‘இராவண விழா’ அக்டோபர் 9ஆம் தேதி விசாகப்பட்டினத்திலுள்ள ‘அம்பேத்கர் பவனில்’ எழுச்சி யுடன் நடந்தது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்பு விருந் தினராகப் பங்கேற்று, தமிழ் நாட்டில் பெரியார் நடத்திய இராமாயண எதிர்ப்பு இயக்கங்களின் வரலாறுகளையும் ‘இராமன்’ எரிப்புப் போராட்டம் மற்றும் ‘இராமலீலா’வுக்கு எதிராக நடத்திய ‘இராவண லீலா’ நிகழ்வுகளையும் விவரித்து விரிவாக ஆங்கிலத்தில் பேசினார். கழகத் தலைவர் உரையை தெலுங்கு மொழியில் பேராசிரியர் பிரக்ஞா மொழி பெயர்த்துக் கூறியபோது கூட்டத்தினர் பலத்த கரவொலி எழுப்பி வரவேற்றனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரையின் சுருக்கம். “இராம லீலா நடைபெறும் தருணத்தில் இராவணனின் மேன்மையைக் குறித்து பேச இங்கு கூடியிருக்கும் நம்மிடையே மூன்று கேள்விகள் எழுகின்றன. முதலாவதாக, இராமாயணம் என்பது வெறுமனே ஒரு கற்பனைக் கதை மட்டுமே என்பதை...

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா சென்னை 05112016

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா திராவிடர் விடுதலைக் கழகம் வடசென்னை மாவட்ட தோழர்கள் கழக பாடகர் தோழர் அருள்தாஸ் தலைமையில், தோழர் விஜயன் வரவேற்புரையில், தோழர் பாஸ்கர் தோழர் தட்சிணாமூர்த்தி முன்னிலையில் 5:11:2016 சனிக்கிழமை அன்று மாலை 6:00 மணியளவில் புளியந்தோப்பு கே.பி.பார்க்கில் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது . நிகழ்காலத்திலும் பெரியாரின் தேவையை உணர்த்தும் பல்வேறு தலைப்புகளில் பொதுச்செயலாளர் தோழர். விடுதலை இராசேந்திரன், முனைவர். சுந்தரவள்ளி உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் தோழர் திருமூர்த்தி, தோழர் துரை அருண், சிறப்புரையாற்றுகிறார்கள். தோழர் காவை. இளவரசன் வழங்கும் அறிவியல் நிகழ்ச்சி மந்திரமா – தந்திரமா மற்றும் சுயமரியாதை கலை பண்பாட்டுக் கழகத்தின் பகுத்தறிவு பாடல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. தோழர் வேலு நன்றியுரையுடன்நிகழ்ச்சியை முடித்து வைப்பார் . அனைத்து பகுதி தோழர்களும் தவறாது கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பிக்க வேண்டும். திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்

தென் மண்டல ஐ.ஜி அலுவலக முற்றுகைப் போராட்டம் மதுரை 03112016

இன்று 03112016 பெரியாரிய, தலித்திய, தமிழ்த்தேசிய மற்றும் முற்போக்கு இயக்கங்கள் ஒன்றிணைந்து நடத்தும் தென் மண்டல ஐ.ஜி அலுவலக முற்றுகைப் போராட்டம். நெல்லையில் திண்டுக்கல் சிவகுருநாதன், பெண் காவலர் ராமு, திண்டுக்கல்லில் பாண்டிச்செல்வி, தேனியில் தங்கபாண்டியன் ஆகியோரின் கொலைகளுக்கு காரணமான சாதி வெறி கொலையாளிகளை கைது செய். குற்றவாளிகளை தப்பவிடாதே! சாதிவெறிக்கு துணை போகாதே! சாதி ஆணவப் படுகொலைகளை தடுக்க தனிச்சட்டம் இயற்று. சாதி மறுப்பு திருமணம் செய்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்கு. சாதி ஆணவப் படுகொலைகளுக்கு சிபிஐ விசாரணை நடத்து. உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் தென் மண்டல ஐ.ஜி அலுவலக முற்றுகைப் போராட்டத்தினை அனைத்து தோழமை இயக்கங்களும் இணைந்து நவம்பர் 3 அன்று நடத்த உள்ளோம். வாய்ப்புள்ளோர் பங்கேற்கவும்

தீபாவளி புனிதமா? வணிகமா? விழிப்புணர்வு துண்டறிக்கை

தீபாவளி புனிதமா? வணிகமா? விழிப்புணர்வு துண்டறிக்கை திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்ட தோழர்களால் தியாகராய நகர் கடைவீதியில் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது . மாணவர்கள், மாணவியர்கள் தாய்மார்கள் என மக்கள் ஆர்வமாக துண்டறிக்கையை வாங்கி படித்தது அவர்களின் தேடலை, தேவையை நன்கு உணர்த்தியது. சிலர் இருபது முப்பது துண்டறிக்கைகளை அவர்களின் பகுதியில் விநியோகிக்க வாங்கிச் சென்றதும், ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க கம்யூனிஸ்ட் தோழர் தாமாக முன் வந்து துண்டறிக்கை விநியோகத்திற்கு உதவியாய் வந்ததும், திருவல்லிக்கேணிதொகுதி MLA ஜெ. அன்பழகன் துண்டறிக்கையை பெற்றுக்கொண்டு தோழர்களின் பணியை பாராட்டியது, தோழர்களுக்கு பெரும் ஊக்கமாய் அமைந்தது. தலைமை நிலைய செயலாளர் தோழர் தபசி குமரன் தலைமையில் மாவட்ட செயலாளர் இரா.உமாபதியுடன் தோழர்கள் துண்டறிக்கையை விநியோகம் செய்தனர். செய்தி : தோழர் உமாபதி, மாவட்ட செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்

இலங்கை துணை தூதரக முற்றுகைப்போராட்டம் ! சென்னை 26102016

யாழ் பல்கலை மாணவர்கள்  சிங்களக் காவல்துறையால் சுட்டுக் கொலை: இலங்கைத் தூதரகம் முற்றுகை – 400 பேர் கைது. கடந்த 2016 அக்டோபர் 21அதிகாலை கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன், சுன்னாகத்தைச் சேர்ந்த விஜயகுமார் (பவுன்ராஜ்) சுலக்சன் ஆகிய யாழ்ப்பாணப் பலகலைக்கழகத்தின் மாணவர்கள் இருவர் சிங்களக் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிங்களக் காவல்துறை இரு தமிழ் மாணவர்களைச் சுட்டுக் கொன்ற உண்மையை மறைத்து, அவர்கள் சாலை விபத்தில் உயிரிழந்ததாகக் காட்டவே முதலில் முயன்றனர். அவர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தியை இப்போது சிறிலங்கா அரசு ஒப்புக் கொண்டிருந்தாலும், அது சொல்லியிருக்கும் சமாதானங்கள் ஏற்புடையவையாக இல்லை. இரு மாணவர்களும் காவலரணில் வண்டியை நிறுத்தாமல சென்றதால் சுட நேரிட்டது என்ற விளக்கத்தை இப்போதைய சிறிலங்கா அரசாங்கத்தில் அமைச்சராக உள்ள மனோ கணேசனே ஏற்கவில்லை. துரத்திப்பிடிக்கத்தானே உங்களுக்கு அதிநவீன 1000 சிசி மோட்டார் சைக்கிள்கள் தரப்பட்டுள்ளன என்று அவர் கேட்டுள்ளார். சுடுவதென்றாலும் முதலில் வான் நோக்கியும் பிறகு...

தோழர் கிருஸ்துதாஸ் காந்தியை ஆதரித்து கழகத்தின் சார்பில் சென்னையில் சுவரொட்டி

உண்மையை உரக்க சொன்ன தோழர் கிருஸ்துதாஸ் காந்தியை ஆதரித்து, அவருக்கு மிரட்டல் விடுக்கும் பார்ப்பனீய சக்திகளை எச்சரித்து கழகத்தின் சார்பில் சென்னையில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள்.

தோழர் தஞ்சை பசு.கௌதமன் உடல்நலத்தை கழக தலைவர் தோழர்.கொளத்தூர் மணி அவர்கள் விசாரித்தார்.

திராவிடர் விடுதலைக்கழக தோழர், எழுத்தாளர் தஞ்சை பசு. கௌதமன் அவர்கள் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்திற்காக தந்தை பெரியாரின் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு குறித்து பெரியாரின் பதிவுகளை ”நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?”என்கிற தலைப்பில் 5 தொகுதிகள் 6000 பக்கங்கள் அடங்கிய புத்தகத்தை கடந்த சில வருடங்களாக தொகுத்து வந்தார்.தொடர்ச்சியான ஓய்வில்லா எழுத்துபணி காரணமாக உடல் நலம் சற்று பாதிக்கப்பட்டுதிருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில்சேர்க்கப்பட்டு கடந்த 15 நாட்கள் சிகிச்சை பெற்று வந்தார்.உடல் நலம் தேறி தற்போது நலமாக உள்ளார்.. இச் செய்தியறிந்த திராவிடர் விடுதலைக்கழக தலைவர்தோழர். கொளத்தூர்மணி அவர்கள்17.10.2016 அன்று மதியம் தஞ்சையில் உள்ளதோழர் தஞ்சை பசு.கௌதமன் அவர்கள்இல்லத்திற்கு நேரில் சென்று உடல் நலம் விசாரித்தார்எழுத்தாளர் தஞ்சை சண்முகசுந்தரம் மற்றும்திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா. காளிதாசுமற்றும் கழக தோழர்கள் கோவில்வெண்ணி செந்தமிழன், தஞ்சை காசிம் ஆகியோர் உடன் இருந்தனர். பெரியார் முழக்கம் 27102016...

ஜாதிய வன்கொடுமைகள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார் தோழர். கொளத்தூர்மணி தஞ்சாவூர் உத்மதானி 18102016

தஞ்சை மாவட்டத்தில் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக தொடரும் ஜாதிய வன்கொடுமைகள் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்தார் தோழர். கொளத்தூர்மணி உலகில் எந்த நாட்டிலும் இல்லாத ஜாதிய கட்டமைப்பு ஜாதிய வன்கொடுமைகள். ஜாதி மறுப்புத் திருமணங்கள் செய்யும் தம்பதியினரை ஆணவப்படுகொலைகள் செய்வது, இரட்டை சுடுகாடு, இரட்டைக் குவளை முறை போன்ற பல்வேறு வடிவங்களில் விளிம்பு நிலை மக்களான தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்கள் மீது இடைநிலை ஜாதியினரால் இழைக்கப்படும் வன்கொடுமைகள் பார்;ப்பன மதமான இந்து மதத்தில் மலிந்து கிடக்கிறது. ஒரு மனிதனை பிறப்பின் அடிப்படையில் அவனை பல்வேறு ஜாதிகளாக பிரித்து சூத்திரர்களாக, பஞ்சமர்களாக அம்மக்களை சிறுமைப்படுத்தி பார்பனர்கள் தங்கள் மேலாண்மையை காலம் காலமாக கடவுளின் பெயரால், மதத்தின் பெயரால் தங்களை நிலைநிறுத்திக் கொள்கின்றனர். பார்;;ப்பனர்களால் வேசிமகன்கள் என இன்றும் இழிவுப்படுத்தப்படும் சூத்திர இடைநிலை ஜாதியை சேர்ந்தவர்கள் தங்களது சூத்திர இழிவு நிலைக்கு எதிராக போராடாமல், தங்களை இழிவுப்படுத்தும் பார்பனர்களையும், அவர்கள் தூக்கி பிடிக்கும் பார்பன...

”இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டமல்ல, வகுப்புவாரி உரிமை என்பது நமது பிறப்புரிமை”

”இடஒதுக்கீடு என்பது வறுமை ஒழிப்பு திட்டமல்ல, வகுப்புவாரி உரிமை என்பது நமது பிறப்புரிமை” – நாச்சியார்கோவிலில் தோழர் கொளத்தூர்மணி பேச்சு. தஞ்சைமாவட்டம் திருவிடைமருதூர்ஒன்றிய திராவிடர்விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் 138வது பிறந்தநாள்விழா பொதுக்கூட்டம் 17.10.2016 அன்று மாலை 6மணியளவில் நாச்சியார்கோவில் வடக்கு வீதியில் அமைக்கப்பட்ட சுயமரியாதைச்சுடரொளி குடந்தைஆர்பிஎஸ்ஸ்டாலின் நினைவு மேடையில் தலைமை கழக பேச்சாளர் சாக்கோட்டை இளங்கோவன் தலைமையில் மிகுந்த எழுச்சியுடன் நடைப்பெற்றது. துவக்கத்தில், மக்கள்பாடகர் பள்ளத்தூர்நாவலரசன் குழுவினரின் பகுத்தறிவு பண்பாடும் இசை நிகழ்;ச்சி நடைபெற்றது. கும்பகோணம் ஒன்றிய அமைப்பாளர் சா. வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா. காளிதாசு, நாகை மாவட்ட செயலாளர் தெ. மகேசு, தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித. திருவேங்கடம் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர். பின்னர், பொதுக்கூட்டத்திற்கு தலைமையேற்று கழகபேச்சாளர் சாக்கோட்டை இளங்கோவன் தலைமை உரையாற்றினார். இறுதியாக, கழகத்தலைவர் தோழர்கொளத்தூர்மணி அவர்கள் சிறப்புரையாற்றினார். அவர் தனது உரையில், ஜாதி ஒழிப்பிற்கு ஒரு இடைக்கால நிவாரணம்...

திருப்பூரில் “பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சி” 23102016

திருப்பூரில் “பெண்கள் சந்திப்பு நிகழ்ச்சி” நாள் : 23.10.16 ஞாயிற்றுக்கிழமை இடம் : தோழர் சிவகாமி ஆசிரியர் இல்லம், பெரியார் காலனி, (T.T.P மில் பின்புறம்)திருப்பூர். நேரம் : காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை தொடர்புக்கு : தோழர் சிவகாமி ஆசிரியர், அமைப்பாளர், தமிழ்நாடு அறிவியல் மன்றம். 9842448175. வாய்ப்பு உள்ள பெண்கள் இச்சந்திப்பு நிகழ்வில்கலந்து கொண்டு சிறப்பிக்கும் படி கேட்டுக் கொள்கிறோம். தோழர்கள் இச்செய்தியை பரவலாக்கி தங்கள் இல்ல பெண்களையும் இந்த நிகழ்வில் பங்கேற்க செய்ய கேட்டுக் கொள்கிறோம்.

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நாச்சியார் கோயில் 17102016

17.10.2016 6.00 மணிக்கு நாச்சியார் கோயிலில் தந்தை பெரியார் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம். கழக தலைவர் சிறப்புரை.

மதுரையில் ரயில் மறியல் போரட்டம் (14.10.2016) ! 67 பேர் கைது !

ரயில் மறியல் போரட்டம் (14.10.2016) ! 67 பேர் கைது ! காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் தமிழர் நலனுக்கு எதிராக செயல்படும் மதவெறி பாஜகவின் மத்திய அரசை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழக ஒருங்கிணைப்பில் தோழமை அமைப்புகள் பங்கேற்ற ரயில் மறியல் போராட்டம் 14.10.2016 காலை 11 மணியளவில் மதுரை ரயில் நிலையம் முன்பு நடைபெற்றது. கழக அமைப்புச்செயலாளர் ரத்தினசாமி,பொருளாளர் துரைசாமி,பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன்,மாவட்ட செயலாளர் மணிகண்டன் மா.பா.,தோழர் காமாட்சி பாண்டி,மாவட்ட செயலாளர் திலீபன் செந்தில், மாவட்ட அமைப்பாளர் மாப்பிள்ளை சாமி உள்ளிட்ட கழக தோழர்களும்,தோழர் மீ.த.பாண்டியன் (சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை),மேரி (சி.பி.எம்.எல்.மக்கள் விடுதலை), சிதம்பரம்(ஆதித்தமிழர் கட்சி),தமிழ் நேயன் (தமிழ் தேச மக்கள் கட்சி), குமரன்,புரட்சிகர இளைஞர் முண்ணனி, நாகை.திருவள்ளுவன்(தமிழ் புலிகள் கட்சி), ஆதவன் (ஆதித்தமிழர் பேரவை), பரிதி (தமிழ் தமிழர் இயக்கம்), தோழர் ரபீக்(இளந்தமிழகம்), அண்ணாமலை (சட்டபஞ்சாயத்து இயக்கம்) ஆகியோர் உள்ளிட்ட இயக்க தோழர்கள் இப்போராட்டத்தில் கலந்து...

நடுரோட்டில் ஆயுதபூஜைக்கு உடைக்கப்பட்ட பூசணிக்காயால் இளைஞர் பலி

திருச்செங்கோட்டில் 13.10.2016 அன்று நடுரோட்டில் ஆயுதபூஜைக்கு உடைக்கப்பட்ட பூசணிக்காயால் வழுக்கி விழுந்து மூளைச்சிதறி சௌந்தர்ராஜன் எனும் இளைஞன் மரணமடைந்தார். சட்டவிரோதமாக நடு ரோட்டில் பூசணிக்காயை உடைத்து விபத்தை ஏற்படுத்தி உயிர் இழப்பிற்கு காரணமான கடை உரிமையாளரை கைது செய்ய வலியுறுத்தி திவிக சார்பில் காவல் நிலையத்தில் மனு அளிக்கப்பட்டது. மாநில அமைப்பு செயலாளர் ரத்தினசாமி, மாவட்ட அமைப்பாளர் வைரவேல், திருச்செங்கோடு நகர இளைஞரணி செயலாளர் பிரகாசு,நாமக்கல் மாவட்ட பொருளாளர் முத்துப்பாண்டி ஆகிய தோழர்கள் மனு அளித்தனர்.

“கொலைக் களமாகும் சிறைக்கூடம் ” -கருத்தரங்கம் திருப்பூர் 16102016

“கொலைக் களமாகும் சிறைக்கூடம் ” -கருத்தரங்கம். 16.10.16 ஞாயிறு மாலை 5 மணிக்கு திருப்பூர்,பல்லடம் சாலை, DRG CLASSIC ஹோட்டலில் “கொலைக் களமாகும் சிறைக்கூடம் ” எனும் தலைப்பில் நடைபெற்ற கருத்தரங்கில் கழக தலைவர் கலந்து கொண்டு திருப்பூர் குணா அவர்கள் எழுதியுள்ள “தமிழகம் தன் இசுலாமியப் பிள்ளைகளின் விடுதலையைப் பேசட்டும்” நூலை வெளியிட்டு கருத்துரை வழங்கினார். இந்நிகழ்வில் “கோவை கலவரத்தில் எனது சாட்சியம்” நூல் அறிமுகம் நடைபெற்றது.இந்நூலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.வி.அப்துல்நாசர் அவர்கள் எழுதியுள்ளார்,இந்நூலை தோழர் பழனி சஹான் அவர்கள் தொகுத்துள்ளார். மேலும் இந்நிகழ்வில் அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி, பதியம் பாரதிவாசன்,எழுத்தாளர் திருப்பூர் குணா,வழக்கறிஞர் உமர்கயான் (தமிழக மக்கள ஜனநாயக கட்சி),அருண் (திருவள்ளுவர் பேரவை,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஏ.வி.அப்துல்நாசர் , தோழர் பழனி சஹான்,ஷேக் பரீத்,வழக்கறிஞர் ராமராஜ்,தங்கராஜ் பாண்டியர், செல்வாபாண்டியர் ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : தமிழக மக்கள் சனநாயகக் கட்சி, தமிழர் நடுவம்,...

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் மகளிர் சந்திப்பு ! கோபி

“மகளிர் சந்திப்பு.” தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் மகளிர் சந்திப்பு ! நாள் : 16.10.2016. ஞாயிறு நேரம் : காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை. இடம்: L.கள்ளிப்பட்டி, கோபிசெட்டிபாளையம். தமிழ்நாடு அறிவியல் மன்றம் சார்பில் மகளிர் சந்திப்பு நிகழ்சி 16.10.2016. ஞாயிறு காலை 10.00 மணி முதல் மாலைவரை கோபிசெட்டிபாளையம்,L.கள்ளிப்பட்டியில் உள்ள தோழர் மணி மொழி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. 17 பெண்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.பல்வேறு தலைப்புகளில் உரையாடல்கள் இடம்பெற்றன.பொது இடங்களில் பெண்களுக்கான இயல்பான உரிமைகள் மறுக்கப்படுவது குறித்தும் பொது இடங்களில் பெண்களின் உரிமைகளை நிலை நிறுத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது. கலந்து கொண்ட தோழர்கள் மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்தனர். தொடர்புக்கு: தோழர் மணிமொழி, 9786922952. ந்தி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தடையாக இருக்கும் மோடி அரசைக் கண்டித்து திவிக சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தடையாக இருக்கும் மோடி அரசைக் கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ஈரோட்டில் ஆர்ப்பாட்டம்.. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கத் தடையாக இருக்கும் மோடி அரசைக் கண்டித்து, 10.10.2016 அன்று மாலை 4 மணிக்கு ஈரோடு வீரப்பன்சத்திரத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிடர் விடுதலைக் கழகம் ஒருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அ.கணேசமூர்த்தி தலைமை தாங்கினார். திவிக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி வரவேற்புரையாற்றினார். பல்வேறு அமைப்புகளின் சார்பாக அவற்றின் நிர்வாகிகள் கண்டன உரையாற்றினர்.. கண்டன உரையாற்றியோர்: பிரபு,தி.க குமரகுருபரன்,த.பெ.தி.க விநாயகமூர்த்தி,விடுதலைச் சிறுத்தைகள் கி.வே.பொன்னையன்,தற்சார்பு விவசாயிகள் சங்கம் சித்திக், த.மு.மு.க பார்த்திபன், பி.யு.சி.எல் நிலவன்,தமிழ்த்தேச நடுவம் சிந்தனைச் செல்வன், தமிழ்ப்புலிகள் தமிழ் இன்பன், விடுதலை வேங்கைககள் பெரியசாமி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி திருநாவுக்கரசு, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பெரியசாமி, காந்திய மக்கள் இயக்கம் விடுதலைச் செல்வன், தலித் விடுதலைக் கட்சி லுக்மான், எஸ்.டி.பி.ஐ ஆதவன், தமிழக...

மதுரையில் ரயில் மறியல் போராட்டம்!

14.10.2016 மதுரையில் ரயில் மறியல் போராட்டம்! கழக தலைவர் தலைமையில் நடக்கவுள்ளது. காவிரி பிரச்சனையில் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் மத்திய ஆளும் பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ் ஐ கண்டித்து. தோழமை அமைப்புகள் பங்கேற்கின்றன.

பள்ளிபாளையம் காவல்நிலையம் முற்றுகை !

ஆயுத பூஜை கழக தோழர்களால் தடுத்து நிறுத்தப்பட்டது. சட்ட விரோதமாக ஆயுதபூஜை கொண்டாடிய பள்ளிபாளையம் காவல்நிலையத்தில்… நாமக்கல் மாவட்டத்தில் உள்ள காவல்நிலைங்களில் இந்து மத பண்டிகையான ஆயுதபூஜை கொண்டாட கூடாது என்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் ஏற்கனவே மனு அளிக்கப்பட்டிருந்தது. கழகத்தின் கோரிக்கையையும் ஏற்காமலும், அரசின் சட்ட விதிகளையும் மதிக்காமல் சட்ட விரோதமாக அரசின் மதசார்பினையை சீர்குலைக்கும் வகையில் பள்ளிபாளையம் காவல்நிலையத்தில் ஆயுதபூஜை கொண்டாட ஏற்பாடுகள் நடந்து வந்தது,இதை அறிந்து நாமக்கல் மாவட்ட அமைப்பாளர் தோழர் வைரவேல் தலைமையில் கழக தோழர்கள் காவல்நிலையம் சென்று விசாரித்தனர். பள்ளிபாளையம் காவல்துறை துணை ஆய்வாளர் ராஜா தோழர்களிடம் ஒருமையில் பேசி கலைந்து செல்லுமாறு மிரட்டியதோடு உள்ளே வைத்து அடித்து விடுவதாகவும் மிரட்டினார். உடனடியாக தோழர்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டு ஆயுத பூஜையை நிறுத்துமாறும், பூஜைக்கு தயார்படுத்திய பொருட்களை அப்புறப் படுத்துமாறும், ஒருமையில் தகாத வார்த்தைகளை பேசிய துணை ஆய்வாளர் ராஜாவை மன்னிப்பு கேட்குமாறும் கோரிக்கை வைத்தனர்,...

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்ற ஒப்புதல் தேவையில்லை – மன்னார்குடியில் கண்டன பொதுக்கூட்டம்

“காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நாடாளுமன்ற ஒப்புதல் தேவையில்லை வாக்கு அரசியலுக்காக தமிழகத்தை மத்திய அரசு வஞ்சிக்கிறது” மன்னார்குடியில் மதிமுக மாநில பேச்சாளர் தஞ்சை விடுதலைவேந்தன் பேச்சு! காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என அறிவித்துள்ள மத்திய அரசை கண்டித்து திராவிடர் விடுதலைக்கழகத்தின் சார்பில் கண்டன பொதுக்கூட்டம் மன்னார்குடியில் திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு, அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார்தலைமையில் நடைபெற்றது. சிறப்புரையாற்றிய மதிமுக மாநில பேச்சாளர் தஞ்சை விடுதலைவேந்தன் பேசியபோது, ‘இதுவரை இந்தியாவை ஆட்சி செய்த எந்தஒரு மத்திய அரசும், ஒரு மாநிலத்திற்கெதிராக வெளிப்படையாக செயல்பட்டதில்லை ஆனால் மோடி தலைமையிலான பாஜக அரசு மட்டும் தான் காவிரி நதிநீர் பிரச்சனையில் உச்சநீதிமன்றம் காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க உத்திரவிட்டும், அத்தீர்ப்பினை மதிக்காமல் கர்நாடத்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ள சட்ட மன்ற தேர்தலை கருத்தில் கொண்டு அங்கு பாஜக ஆட்சியை பிடிக்க...

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் மகளிர் சந்திப்பு !

தமிழ்நாடு அறிவியல் மன்றம் நடத்தும் மகளிர் சந்திப்பு ! நாள் : 09.10.2016. ஞாயிறு நேரம் : காலை 10.00 மணி முதல் பிற்பகல் 3.OO மணி வரை. இடம்: சீதாராம்பாளையம்,தெப்பாறை, திருச்செங்கோடு தமிழ்நாடு அறிவியல் மன்றம் சார்பில் ”மகளிர் சந்திப்பு” 9.10.2016. ஞாயிறு அன்று திருச்செங்கோடு சீதாராம்பாளையம் செப்பாறையில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் தோழர் தனலட்சுமி அவர்கள் இல்லத்தில் நடைபெற்றது. காலை 10.30 மணி முதல் பிற்பகல் 4.00 மணி வரை நடைபெற்ற இந்நிகழ்வில் அப்பகுதி பெண்கள் 6 பேர் உள்ளிட்ட 11 பேர் கலந்து கொண்டனர்.இச்சந்திப்பில் கலந்துகொண்ட மகளிர் தங்கள் வாழ்வில் பெரியாரியலின் தாக்கங்கள் குறித்து தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். பெரியாரியல் அறிமுகமான பிறகுதான் வாழ்க்கை குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டதாக கூறினர்.பெரியாரியல் வாழ்க்கை நெறியில் கணவருடன் சிக்கல்களை ஆலோசித்து முடிவெடுப்பதாகவும் முரண்பாடுகளை எளிதில் களைய முடிகிறது எனவும் மகிழ்ச்சியுடன் கூறினர். மாநில அமைப்பாளர் தோழர் சிவகாமி அவர்கள் தாய்வழிசமூக...

மத சார்ப்பற்ற அரசு அலுவலகங்களில் கடவுள் படங்களை வைப்பதும் , ஆயுத பூஜை செய்வதும் சட்டப்படி குற்றமாகும் – பொள்ளாச்சி ஆனைமலை

திராவிடர் விடுதலைக் கழகம்- பொள்ளாச்சி & ஆனைமலை பகுதியில் மதசார்பற்ற அரசு அலுவலகங்களில் கடவுளர் படங்கள் வைப்பதும் ஆயுதபூஜை வழிபாடு நடத்துவதும் சட்ட விரோதமாகும் என்றும், அரசு மற்றும் காவல்துறையை நீதிமன்றத் தீர்ப்பை அவமதிக்காதே என்றும் கழகத் தோழர்களின் பதாகை மற்றும் சுவரொட்டிகள்  

பாஜக தலைமை அலுவலக முற்றுகைப்போராட்டம் ! சென்னை 07102016

திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என கூறி தமிழர்களுக்கு துரோகம் இழைக்கும் மதவாத பா.ஜ.க வை கண்டித்து முற்றுகையிட்ட கழக தோழர்கள் 54 பேர் கைது ! 07.10.2016 காலை மாவட்ட செயலாளர் தோழர் உமாபதி தலைமையில் பாஜகவை கண்டித்து முழக்கமிட்டு சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தமிழக தலைமை அலுவலகத்தை முற்றுகையிட சென்ற கழக தோழர்கள் கைது செய்யப்பட்டனர். கழக பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன், தலைமை நிலைய செயலாளர் தபசி குமரன், மாவட்ட செயலாளர் உமாபதி,தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார்,காஞ்சீபுரம் ரவிபாரதி,மாவட்ட பொறுப்பாளர்கள் வேழவேந்தன்,ஏசுகுமார், பிரகாசு உள்ளிட்ட தோழர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டம் ! ஈரோடு 10102016

திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகள் ஒருங்கிணைப்பில், காவிரி ஆணையம் அமைக்க முடியாது என கூறி ஒட்டு மொத்த தமிழர்களுக்கும் எதிராக செயல்படும் மதவாத பாஜக வை கண்டித்து, நாள் : 10.10.16 திங்கட் கிழமை நேரம் : மாலை 4 மணி. இடம் : வீரப்பன் சத்திரம்பேருந்து நிலையம் அருகில், ஈரோடு. மேற்கு மண்டல தோழர்கள் அனைவரும் கலந்து கொள்ளவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வாருங்கள் !

கண்டனக்கூட்டம் ! மன்னார்குடி 08102016

கண்டனக்கூட்டம் ! காவிரியில் தமிழகத்தை வஞ்சிக்கும் பாஜகவின் மோடி அரசைக் கண்டித்து. திருவாரூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில்….. நாள் : 08.10.2016 அன்று மாலை 6மணியளவில் இடம் : பந்தலடி கீழ்புறம்,மன்னார்குடி. சிறப்புரை : தோழர்.தஞ்சை விடுதலைவேந்தன், (மதிமுக தலைமை கழக பேச்சாளர்)

ஈரோட்டில் ஜாதி வெறி ‘சித்திரவதை முகாம்’

நவீனா ஒரு பொறியியல் கல்லூரி மாணவி; கொங்கு வேளாளர் சமூகத்தில் பிறந்தவர். பெரியண்ணன் பேருந்தில் ஓட்டுநராகப் பணியாற்றுபவர்; நாடார் சமூகத்தில் பிறந்தவர், இருவருக்கும் இடையே மலர்ந்த காதல், திருமணத்தில் முடிகிறது. 2016 மே மாதத்தில் ஈரோடு திண்டல் முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்ட அவர்கள் இருவரும் அதோடு மனநிறைவடையாமல் சேலம் மாவட்டம், கொளத்தூர் ஒன்றியத் திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களை அணுகி தங்கள் திருமணத்தை, பெரியாரின் சுயமரியாதைத் திருமணமாய் நடத்திக் கொள்ள தாங்கள் விரும்புவதாகக் கூறியுள்ளனர். மேட்டூர் பெரியார் படிப்பகத்தில் கொளத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர் ஈசுவரன் தலைமையில் சுயமரியாதைத் திருமணம் செய்துகொள்கின்றனர். அத்திருமணமும் மேட்டூர் சார்பதிவாளர் அலுவலகத்தில் 11-7-2016 அன்று பதிவும் செய்யப்பட்டுள்ளது. திருமணம் பதிவு செய்த பின்னர் இருவரும், பெரியண்ணனின் சகோதரியின் ஊரான ஈரோடு மாவட்டம் தொட்டிபாளையத்தில் தங்கி தங்கள் இல்லற வாழ்வைத் தொடங்கினர். ஜாதி மாறி நடந்த திருமணத்தைச் சகித்துக்கொள்ள முடியாத தன்னை ஜாதியின் காப்பாளனாகக் கருதிக்கொள்ளும்...

நீண்டநாள் சிறைவாசிகளை விடுதலை செய்!

9-9-2016 அன்று பிற்பகல் சென்னை, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில், தமிழக மக்கள் ஜனயாகக் கட்சியின் ஒருங்கிணைப்பில், அக்கட்சியி தலைவர் புதுக்கோட்டை ஷெரீப் தலைமையில்,  பத்து ஆண்டுகள் சிறைவாசம் முடித்த அனைத்து சிறைவாசிகளையும், மத பேதம் இன பேதம் பார்க்காமல் விடுதலை செய் என்ற ஒற்றைக் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அவ்வார்ப்பாட்டத்தில் அனைத்துக் கட்சி, அமைப்புகள், ஜனநாயக சக்திகளும் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் உள்ளிட்ட கழகத் தோழர்கள் கலந்துகொண்டனர்.

குறவர் இனமக்கள் போராட்டம் 09092016 சென்னை

9-9-2016 அன்று குறிஞ்சி நிலக் குறவர் இன மக்களின் மனித உரிமை மாண்பைப் பாதுகாக்கவும், தேசிய பட்டியல் சாதியினருக்கான ஆணையத்தின் பரிந்துரைகளைத் தமிழக அரசு ஏற்று உடனடியாக நடைமுறைப் படுத்தக் கோரியும், அனைத்துக் கட்சித் தலைவர்கள், சமூக இயக்கத் தலைவர்கள் மற்றும் ஜனநாயக சக்திகள் பங்கேற்ற தொடர் முழக்க ஆர்ப்பாட்டம், சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே காளை 10-00 மணி முதல் மாலை 5-00 மணீவரை நடை பெற்றது. அவ்வார்ப்பட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்துகொண்டு கோரிக்கைகளை ஆதரித்தும், எண்ணிக்கை பலமும், பொருளாதார பலமும் இன்றியும், இன்னமும் அமைப்பாக்கப் படாமல் உள்ள அம்மக்களின் நியாமான கோரிக்கைகளுக்கு ஆதரவு தெரிவித்தும், குரலற்ற அம்மக்களுக்கு திராவிடர் விடுதலைக் கழகம்  எப்போதும் குரலாக இருக்கும் என்றும் உறுதி கூறியும் உரையாற்றினார்.. பெரியார் முழக்கம் 13102016 இதழ்

இரமேசு பெரியார் – அல்லி வாழ்க்கை இணையேற்பு விழா சித்தையன் கோட்டை 11092016

11-9-2016 ஜாதி ஒழிப்புப் போராளி தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளில் திண்டுக்கல் மாவட்டம் சித்தையன் கோட்டையில் தோழர்கள் அல்லி – இரமேசு பெரியார் ஆகியோரது வாழ்க்கைத் துணை ஒப்பந்தவிழா, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் நடைபெற்றது. விழாவில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன், வே.மதிமாறன்,  மக்கள் மன்றம் மகேஸ்   புத்தர் கலைக்குழு மணிமாறன், ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தோழர் இரமேசு பெரியார், ஒப்பந்தவிழாவில் பெரியாரின் உடையாகிய கருப்பு சட்டை லுங்கியுடன் இருந்தார். மாலைகள் அணிவதற்கு முன்னர் இருவரும் ஒருவருக்கொருவர் பறையை அணிவித்துக் கொண்டனர். விழா முடிவில் மாட்டுக் கறி உணவு வழங்கப்பட்டது. தங்கள் திருமணம் தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளில்தான் நடைபெறவேண்டும் என்பதிலும், மாட்டுக்கறி உணவு வழங்கப்பட வேண்டும் என்பதிலும் உறுதியாக இருந்த தோழர்கள் அல்லி- இரமேசு பெரியார்  இருவரும் வெவ்வேறு பிற்படுத்தப்பட்ட  ஜாதிகளைச் சேர்ந்த பெற்றோரின் பிள்ளைகள் ஆவர். தோழர் இரமேசு பெரியார் மக்கள்...

இந்து முன்னணி வன்முறை கும்பலை தடை செய்! திருப்பூரில் 2500 தோழர்கள் கைது!

தமிழகம் குஜராத்தாக மாறும் என அச்சுறுத்தும் இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியத்தை கைது செய் என வலியுறுத்தி திருப்பூரில் காவல்துறையின் தடையை மீறி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்ற 2500க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 30.09.16 வெள்ளிக்கிழமை மாலை 3 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்தப் போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் உள்ளிட்ட 32 அமைப்புகள் ஒருங்கிணைந்து பங்கேற்றன. மதபயங்கரவாதத்திற்கு எதிரான மக்கள் கூட்டமைப்பு ஒருங்கிணைத்த இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, கழகத் தோழர்களுடன் கலந்து கொண்டு கைதானார். பல்வேறு ஊர்களில் இருந்து வந்து கழகத் தோழர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்தனர். கைது செய்யப்பட்ட ஆயிரக்கணக்கானோர் 3 திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். அப்போது பேசிய பல்வேறு அமைப்புகளின் தலைவர்கள் தமிழகத்தில் சமூக அமைதிக்கும், கடைகளுக்கு அச்சுறுத்தலாககலவரத்தை ஏற்படுத்தும் இந்து முன்னணியை தடை செய்யவும், அதன் தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியத்தை கைது  செய்யவும் வலியுறுத்திப் பேசினர்.கோவையில்...