விருதுநகரில் பெரியார் பிறந்த நாள் மற்றும் கழக அறிமுக விழா பொதுக் கூட்டம்

விருதுநகர் மாவட்டத்தில் எழுச்சியோடு தந்தை பெரியார் பிறந்த நாள் மற்றும் கழக அறிமுக விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. விருதுநகரில் தந்தை பெரியாரின் 138வது பிறந்த நாள் விழா மற்றும் கழக அறிமுக விழா பொதுக்கூட்டம். 01.10.2016 அன்று விருதுநகர் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள அண்ணா சிலை அருகில் நடைபெற்றது. செந்தில் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கவிஞர் வினோத் முன்னிலையில்,மாவட்ட தலைவர் பாண்டி வரவேற்புரை யாற்றினார்.

தமிழ்நாடு அறிவியல் மன்ற பொருப்பாளர் ஆசிரியர் சிவகாமி, டார்வின்தாசன், புதிய தமிழகம் மாநில மாணவரணி செயலாளர் குட்டிஜெகன், தமிழ்புலிகள் மாநில கொள்கை பரப்புச்செயலாளர் கலைவேந்தன் ஆகியோரின் உரைக்குபின் தியாகி இமானுவேல் பேரவை நிறுவனர் பூ.சந்திரபோஸ், திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிகழ்வில் கழகப் பரப்புரை செயலாளர் பால். பிரபாகரன், கழக அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, கழகப் பொருளாளர் துரைசாமி ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்வின் தொடக்கமாக பெரம்பலூர் தாமோதரனின் ‘மந்திரமல்ல தந்திரமே(என்ற அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.

இப்பொதுக் கூட்டத்தை ஜெயக்குமார், கணேசமூர்த்தி, சந்துரு, செல்வம், முனியசாமி, ஆசைத்தம்பி, ஜெயராம், மணி, முத்தையா, மருதுராஜன், கலைச் செல்வன், குருசாமி, சிவா, பழனி ஆகியோர் மிகச்சிறப்பாக ஏற்பாடு செய் திருந்தனர். மதுரை மாவட்ட அமைப்பாளர் மாப்பிள்ளை சாமி, திருப்பூர் சங்கீதா, மதுரை மாவட்ட செயலாளர் மா.பா.மணிகண்டன், திருப்பூர் முத்து லட்சுமி, சாலினி, சூலூர் பன்னீர் செல்வம், குறும்பை மாசிலாமணி, நெல்லை பால் வண்ணன் மற்றும் கழகத் தோழர்களும், இமானுவேல் பேரவை, தமிழ்புலிகள், புதிய தமிழகம் மற்றும் திராவிடர் கழகத் தோழர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

பெரியார் முழக்கம 03112016 இதழ்

You may also like...