Category: திவிக

இராசிபுரத்தில் தெருமுனைக் கூட்டம்; கருத்தரங்கம்

இராசிபுரத்தில் தெருமுனைக் கூட்டம்; கருத்தரங்கம்

8.4.2018 காலை 10 மணிக்கு இராசிபுரம் பழைய பேருந்து நிலையம், லயன்ஸ் கிளப் ஹாலில் ‘ஆரியம்-திராவிடம்-தமிழ் தேசியம்’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. சுமதி மதிவதனி தலைமை வகித்தார். பிடல் சேகுவேரா முன்னிலையில் திருப்பூர் முத்துலட்சுமி வரவேற்புரையாற்றினார். நிகழ்வில் வி. பாலு, கலைமதி (திரைப்பட துணை இயக்குனர்), வீரா. கார்த்திக் (தமிழ்நாடு அறிவியல் மன்றம், மாவட்டச் செயலாளர், ஈரோடு வடக்கு), கோபி. வேலுச்சாமி (தலைமைக் கழகப் பேச்சாளர்) ஆகியோர் கருத்துரையாற்றினர். இறுதியாக மணிமேகலை நன்றி கூறினார். மாலை 6:30 மணியளவில் இராசிபுரம் பழைய கதர்க் கடை அருகே கொள்கை விளக்க தெருமுனைக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்வில் இரா.பிடல் சேகுவேரா, வி. பாலு  (தி.மு.க) ஆகியோர் உரைக்குப் பின் கோபி.வேலுச்சாமி,  கலைமதி (துணைஇயக்குனர், திரைப்படத்துறை) சிறப்புரையாற்றினர். திருப்பூர் சாரதி நன்றி கூறினார். பெரியார் முழக்கம் 12042018 இதழ்

தருமபுரியில் கழகப் பரப்புரைப் பயணம்

தருமபுரியில் கழகப் பரப்புரைப் பயணம்

20.03.2018 காலை 10.30 மணிக்கு பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து பரப்புரைப் பயணம் பென்னாகரம் பேருந்து நிலையத்தில் ஜிரிஸி இசைக் குழுவின் பறை முழக்கத்துடன் துவங்கியது. நிகழ்வின் நோக்கத்தைத் தொடக்க வுரையாக மாவட்ட அமைப்பாளர் சந்தோசுக்குமார் விளக்கினார். அடுத்து மடத்துக்குளம் மோகன் மந்திரமல்ல. தந்திரமே என்று அறிவியல் விளக்க  நிகழ்ச்சியுடன் பல்வேறு கருத்துகளை தொகுத்து வழங்கினார். கல்வி வேலை வாய்ப்பில் பறி போகும் உரிமைகள் பற்றி ஆரூர் பெருமாள் உரையாற்றினார். அடுத்து பொருளாளர் திருப்பூர் துரைசாமி – விவசாயிகளின் பறிபோகும் உரிமைகள் பற்றிய உரைக்குப் பின் தருமபுரி மாவட்ட செயலாளர் நன்றியுரையுடன் நிறைவு பெற்றது. மதிய உணவு சந்தோசு குமாரின் தொழிலகத்தில் வழங்கப் பட்டது. பி.அக்ரகாரம் பகுதியில்  சந்தோஸ் குமார் (மாவட்ட அமைப்பாளர்) தொடக்கவுரையாற்றினார். கொளத் தூர் பகுதி மாணவர் அமைப்பாளர் சந்தோஸ் கல்வி வேலை வாய்ப்புகள் பற்றி உரையாற்றினார், ஆருர் பெருமாள் உரையைத் தொடர்ந்து, இறுதியாக காரைக்குடி முத்து விரிவாக...

போராட்டக் களத்தில் கழகத் தோழர்கள்

போராட்டக் களத்தில் கழகத் தோழர்கள்

அய்.பி.எல். சுவர் விளம்பரம் : கழகத் தோழர்கள் அழித்தனர் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் தோழர்கள் மற்றும் மந்தவெளி விசாலாட்சி தோட்டம் பகுதி தோழர்கள் இணைந்து 05.04.2018 அன்று சென்னையில் நடைபெறவிருக்கும் ஐ.பி.எல் போட்டிக்காக வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களை அழித்து அதன் மேல் “ஐபிஎல் வேண்டாம்” – “காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும்” என்று எழுதி எதிர்ப்பைத் தெரிவித்தனர். மந்தவெளி இரயில் நிலையம் முற்றுகை திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் பகுதி தோழர்கள் மற்றும் விசாலாட்சி தோட்டம் பகுதியைச் சார்ந்த மக்கள் இணைந்து, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் மத்திய அரசைக் கண்டித்து 06.04.2018 காலை 11 மணிக்கு மந்தவெளி இரயில் நிலையத்தை கண்டன முழக்கத்தோடு முற்றுகை யிட்டனர். மந்தவெளி இரயில் தடத்தில் இறங்கி கண்டன முழக்கமிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு மந்தவெளி திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். விழுப்புரத்தில் அஞ்சலகம்...

எச். ராஜாவின் திமிர்ப் பேச்சைக் கண்டித்து மேட்டூரில் ஆர்ப்பாட்டம்

எச். ராஜாவின் திமிர்ப் பேச்சைக் கண்டித்து மேட்டூரில் ஆர்ப்பாட்டம்

பெரியார் சிலையை உடைக்கச் சொன்ன பாரதிய ஜனதா கட்சியின் தேசியச் செயலாளர் எச்.ராஜாவை குண்டர் சட்டத்தில் கைது செய்யக் கோரி 8.3.2018 அன்று மாலை 5 மணிக்கு மேட்டூர் பெரியார்  பேருந்து நிலையத் தில் மேட்டூர் நகர கழக ஒருங் கிணைப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. காவை இளவரசன் வரவேற்புரை யாற்ற மாவட்டத் தலைவர் சூரியக் குமார் தலைமை தாங்கினார். சு.கிருட் டிணசாமி (தி.மு.க.), எஸ்.பி.ராஜா (நகர அவைத் தலைவர் தி.மு.க.), வைகோ முருகன் (நகர செயலாளர் ம.தி.மு.க.), பாலு, தினேசு (நகர பொறுப்பாளர் நாம் தமிழர் கட்சி), ராசு குமார் (மாநில கொள்கைப் பரப்புச் செயலாளர், திராவிடர் இயக்கத் தமிழர் பேரவை), சிவக்குமார் (மேட்டூர் சட்டமன்ற தொகுதிச் செயலாளர் வி.சி.க.), மெய்யழகன் (மாவட்டச் செயலாளர் வி.சி.க), கருப்பண்ணன் (மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி), அ. சக்திவேல் (கழக மாநில தலைமைச் செயற்குழு உறுப்பினர்), இ. கோவிந்தராசு (கழக மாவட்டச் செயலாளர்) ஆகியோர்...

மேட்டூரில் மகளிர் நாள் விழா – கலை நிகழ்வுகளுடன் கருத்தரங்கு

மேட்டூரில் மகளிர் நாள் விழா – கலை நிகழ்வுகளுடன் கருத்தரங்கு

மேட்டூர் நகர கழகத்தின் சார்பில் 13.3.2018 மாலை 5.30 மணிக்கு மேட்டூர் சதுரங்காடியில் மகளிர் தின விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. ஓ. சுதா வரவேற்புரையாற்றினார். காஞ்சி மக்கள் மன்றத் தோழர்கள் பறை முழக்கத்தோடு பெரியார், அம்பேத்கர் பாடல்களும், சமூக இழிவு, சாதி ஒழிப்பு, பெண்ணுரிமைப் பாடல்களும் பாடினர். மு. கீதா தலைமையுரையாற்றினார். ‘சொத்து உரிமையில் பெண்கள்’ என்ற தலைப் பில் அனிதா, ‘விளம்பரத் துறையில் பெண்கள்’ என்ற தலைப்பில் ப. இனியா, ‘பெரியார் காண விரும்பிய விடுதலைப் பெண்’ என்ற தலைப்பில் கெ. ரூபா, ‘அலுவலகம் செல்லும் பெண்களின் நிலை’ என்ற தலைப்பில் இரண்யா உரையாற்றினர். தமிழ்நாடு அறிவியல் மன்ற அமைப்பாளர் சிவகாமி, அவரைத் தொடர்ந்து பேராசிரியர் சுந்தரவள்ளி சிறப்புரையாற்றினர். இந்திராணி நன்றி கூறினார். நிகழ்ச்சியை காயத்திரி, சரசுவதி தொகுத்து வழங்கினர்.  கூட்டத்திற்கு பல்வேறு பகுதிகளி லிருந்தும் பொது மக்களும் தோழர் களும் பெருமளவில் வந்திருந்து அறிவு விளக்கம் பெற்றனர். இந்நிகழ்வு...

கோவையில் பெரியாரிய பெண்கள் சந்திப்பு

கோவையில் பெரியாரிய பெண்கள் சந்திப்பு

மாவட்ட வாரியாக நடந்து வந்த பெரியாரிய பெண்கள் சந்திப்பு 1.4.2018 அன்று கோவையில் நடந்தது. தோழர்களை உருவாக்குவதற்கும், உருவான தோழர்களை களப்பணியாளர்களாக தயாராவதற்காக வும் இந்த சந்திப்புகள் நடந்து வருகின்றன. கோவையில் இரத்தினசபாபதிபுரத்தில் (ஆர்.எஸ்.புரம்) பெரியார் பெருந்தொண்டர் கஸ்தூரியார் படிப்பகத்தில் அவருடைய மகன் தேவேந்திரன் சந்திப்பு நிகழ்வை நடத்த மகிழ்வுடன் அனுமதி அளித்தார். பெரியார் பிஞ்சு தமிழினி கடவுள் மறுப்பு சொல்லி நிகழ்வைத் தொடங்கி வைத்தார். சந்திப்பில் பல்வேறு தலைப்புகளில் தோழர்கள் பேசினர். ‘மதங்கள் பெண்களுக்கு எதிரானவை ஏன்?’ என்ற தலைப்பில் ஆனைமலை வினோதினி, ‘பெரியாரியக்கத்தின் பெண் தளபதிகள் பற்றிய நினைவுகள்’ என்ற தலைப்பில் கோபி மணிமொழி, ‘திராவிடர் இயக்கத்திற்கு முன்னும் பின்னும் பெண்கள் நிலை’ என்ற தலைப்பில் பவானிசாகர் கோமதி ஆகியோர் தங்கள் கருத்துகளை முன் வைத்தனர். ஒவ்வொருவர் கருத்திற்குமிடையேயும் விவாதங்கள் நடந்தன. இறுதியாக தோழர்களின் சந்தேகங்களுக்கும் மக்களிடையே உறவினர்களிடையே சந்திக்கும் சவால்கள் குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு ஆசிரியர் சிவகாமி...

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு: ஈரோட்டில் தெருமுனைக் கூட்டம்

வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு: ஈரோட்டில் தெருமுனைக் கூட்டம்

ஈரோடு தெற்கு மாவட்டக் கழகத்தின் சார்பாக ஈரோடு சி.எம்.  நகரில் 1 .4. 2018 ஞாயிறன்று காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதிலும் ஸ்டெர்லைட் ஆலை , நியூட்ரினோத் திட்டம் வழியாக மோடி பயங்கரவாத அரசு தமிழகத்தை வஞ்சித்து வருவதையும் மக்களிடையே தெளிவுபடுத்தும் தெருமுனைக் கூட்டம்  நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு சி.எம். நகர் பிரபு தலைமையேற்க யாழ் எழிலன் வரவேற்புரை நிகழ்த்தினார். மணிமேகலை, வீரா கார்த்தியைத் தொடர்ந்து தலைமைக் கழகப் பேச்சாளர் கோபி வேலுச்சாமி சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் அரங்கம்பாளையம் கிருஷ்ணன், சித்தோடு கமலக்கண்ணன், சென்னிமலை செல்வராஜ், சௌந்தர், சத்தியராஜ், கோபி தங்கம் போன்றோர் பங்கேற்க மாவட்டப் பொருளாளர் பெ.கிருஷ்ணமூர்த்தியின் நன்றியுரையோடு கூட்டம் சிறப்புடன் முடிந்தது. பெரியார் முழக்கம் 05042018 இதழ்

சென்னையில் வருமான வரித்துறை அலுவலகத்தை இழுத்து மூடச் சென்ற கழகத் தோழர்கள் கைது; வழக்குப் பதிவு

சென்னையில் வருமான வரித்துறை அலுவலகத்தை இழுத்து மூடச் சென்ற கழகத் தோழர்கள் கைது; வழக்குப் பதிவு

காவிரிப் பிரச்சினையில் பா.ஜ.க. ஆட்சியின் துரோகத்தைக் கண்டித்து சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் சென்னை நுங்கம்பாக் கத்திலுள்ள வருமான வரித்துறை அலுவலகத்தை இழுத்துப் பூட்டும் போராட்டத்தைக் கழகம் அறிவித்தது. வருமான வரித் துறை அலுவலகம் எதிரே கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமையில் தோழர்கள் தமிழ்நாட்டில் மத்திய அரசு அலுவலகங்களை இயங்கவிட மாட்டோம் என்ற முழக்கத்தோடு வருமான வரித் துறை அலுவலகம் நோக்கி சென்றனர். காவல்துறையினர் தடுத்து நிறுத்தி, கழகத் தோழர்களைக் கைது செய்தனர். பூட்டு – பூட்டுச் சங்கிலியை பறி முதல் செய்தனர். மாலை வரை ஆயிரம் விளக்கு சமூகநலக் கூடத் தில் வைக்கப்பட்டு, சொந்தப் பிணையில் காவல்துறை விடுதலை செய்தது. அனைவர் மீதும் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. சென்னை மாவட்டக் கழகப் பொறுப் பாளர்கள் வேழவேந்தன், உமாபதி, ஏசு, செந்தில் (எப்டி.எல்.), மயிலை சுகுமார், தலைமைக் கழகச் செயலாளர் தபசி குமரன், ஜாதி...

இந்து – இஸ்லாம் – கிறித்துவ மதங்களின் வன்முறைகள் விளக்கப்பட்டன கோவையில் பாரூக் நினைவேந்தல்

இந்து – இஸ்லாம் – கிறித்துவ மதங்களின் வன்முறைகள் விளக்கப்பட்டன கோவையில் பாரூக் நினைவேந்தல்

இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் மனித நேயப் போராளி பாரூக் முதலாமாண்டு நினைவு நாள் – குருதிக் கொடை முகாம் – மத எதிர்ப்புக் கருத்தரங்கம் – நினைவேந்தல் உரைகளுடன் கோவையில் மார்ச் 18 அன்று அண்ணாமலை அரங்கில் நிகழ்ந்தது. கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் ஏற்பாடு செய்திருந்த இந்த நினைவேந்தல் நிகழ்வில் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த தோழர்கள், உணர்வாளர்கள் குடும்பம் குடும்பமாகப் பங்கேற்று, தோழர் பாரூக்கிற்கு வீரவணக்கம் செலுத்தினர். பகல் 11 மணியளவில் அண்ணாமலை அரங்கில் குருதிக் கொடை முகாமை பாரூக்கின் மனித நேயப் பயணத்தில் துணை நின்ற அவரது துணைவியார் ரசிதா பாரூக் தொடங்கி வைத்தார். 50க்கும் மேற்பட்ட பெண்களும், ஆண்களும் குருதிக் கொடை வழங்கினர். மதத்திற்கு குருதி பேதம் இல்லை என்பதை உணர்த்தும் நோக்கத்துடன் இந்த முகாமை தோழர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். பிற்பகல் 4 மணியளவில் ‘வரலாற்றில் மதங்களின்...

சென்னையில் மோடிக்கு கறுப்புக் கொடி 12042018

சென்னையில் மோடிக்கு கறுப்புக் கொடி 12042018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களை வஞ்சிக்கும் இந்திய நாட்டின் பிரதமர் மோடியை கண்டித்து இன்று சென்னைக்கு வருகை தந்த மோடிக்கு… கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட தோழர்கள் தமிழக கூட்டமைப்பு இயக்கங்களுடன் இணைந்து… இன்று (12.04.2018) காலை 8 மணிக்கு கிண்டியில் கறுப்புக் கொடி காட்டி எதிர்ப்பை தெரிவித்தனர். கறுப்புக் கொடி ஏந்தி கண்டன முழக்கத்தில் ஈடுபட்ட தோழர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டனர். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363 Like

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி உண்ணாவிரதம் சென்னை 12042018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி உண்ணாவிரதம் சென்னை 12042018

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரியும், வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ததை உடனடியாக திரும்ப பெறக் கோரியும்… கடந்த 4 நாட்களாக சென்னை பல்கலைக் கழகத்தை சார்ந்த மாணவர்கள் கார்த்திக், அன்பழகன், கார்த்திகேயன் ஆகியோர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்று (12.04.2018) மாலை 7 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன், இரா.உமாபதி (தென்சென்னை மாவட்டச் செயலாளர்) வேழவேந்தன் (தென்சென்னை மாவட்டத் தலைவர்), அய்யனார் (தலைமைக் குழு உறுப்பினர்)மற்றும் கழகத் தோழர்கள் மாணவர்களை நேரில் சந்தித்து பேசினர். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

தோழர் பத்ரி நாராயணன் நினைவு நாள் 30042018 சென்னை

தோழர் பத்ரி நாராயணன் நினைவு நாள் 30042018 சென்னை

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும்… தோழர்.பத்ரி நாராயணன் நினைவு நாள்… #நிலம்_பாழ்..#நீர்_மறுப்பு..#நீட்_திணிப்பு “தன்மான தன்னுரிமை மீட்பு” மண்டல மாநாடு…. நாள் : ஏப்ரல் 30, 2018 திங்கட்கிழமை மாலை 5 மணிக்கு… இடம் : வி.எம்.தெரு, இராயப்பேட்டை, சென்னை -14 வாருங்கள் தோழர்களே.! திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு 14042018 சென்னை

புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பு 14042018 சென்னை

டாக்டர் அண்ணல்.அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளான நாளை (14.04.2018) கழகப் பொதுச் செயலாளர் தோழர்.விடுதலை இராசேந்திரன் அவர்கள் தலைமையில் காலை 8 மணிக்கு சேத்துப்பட்டு பகுதியில் அமைந்துள்ள டாக்டர்.அம்பேத்கர் அவர்களின் திருஉருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்த உள்ளார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட பொறுப்பாளர்கள், தோழர்கள் அனைவரும் வருமாறு கேட்டுக் கொள்கிறோம். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

மதுரையில் ரயில் மறியல் போராட்டம் ! கைது !

மதுரையில் ரயில் மறியல் போராட்டம் ! கைது !

மதுரையில் ரயில் மறியல் போராட்டம் ! கைது ! 02.04.2018 – புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி. திராவிடர் விடுதலைக்கழகம் ஒருங்கிணைப்பில் தோழமை அமைப்புகளுடன் காவிரி நதி நீர் ஆணையம் அமைக்காத மத்திய பா.ஜ.க மோடி அரசைக் கண்டித்து . Pause -5:25 Additional visual settings Enter Watch and ScrollClick to enlarge Unmute

திருப்பூரில் ரயில் மறியல் போராட்டம் ! கைது !

திருப்பூரில் ரயில் மறியல் போராட்டம் ! கைது !

திருப்பூரில் ரயில் மறியல் போராட்டம் ! கைது ! திராவிடர் விடுதலைக்கழகம் திருப்பூர் மாவட்டம் சார்பில் தமிழக வாழ்வுரிமைக்கட்சி,தமிழ்நாடு மக்கள் கட்சி (வி) ஆகிய அமைப்புத் தோழர்கள் மாவட்டத் தலைவர் தோழர் முகில்ராசு தலைமையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்திற்கு பச்சை துரோகம் செய்யும் இந்திய நடுவண் பாஜக மோடி ஆட்சியை கண்டித்து ரயில் மறியல் போராட்டம் 05.04.2018 வியாழக்கிழமை காலை 10.00 மணியளவில் திருப்பூர் இரயில் நிலையத்தில் நடைபெற்றது. ரயில் மறியலில் ஈடுபட்ட திராவிடர் விடுதலைக்கழகம்,தமிழக வாழ்வுரிமைக்கட்சி,தமிழ்நாடு மக்கள் கட்சி (வி) தோழர்கள் கைது செய்யப்பட்டு தற்போது கல்லூரி சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் அடைக்கப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சியில் ரயில் மறியல் !

பொள்ளாச்சியில் ரயில் மறியல் !

பொள்ளாச்சியில் ரயில் மறியல் ! திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகளின் தோழர்கள் 180 பேர் கைது ! 05.04.2018 காலை 09.00 மணிக்கு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கும் மத்திய அரசை கண்டித்து பொள்ளாச்சியில் திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகளின் சார்பில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. பொள்ளாச்சி திருவள்ளுர் திடலில் இருந்து பேரணியாக சென்று பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் ரயிலை மறித்து போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் கலந்து கொண்ட 180 பேர் கைது செய்யப்பட்டு மாலை விடுதலை செய்யப்பட்டனர். போராட்டத்தில்,, திராவிடர் விடுதலை கழகம் திமுக தமிழ்நாடு திராவிடர் கழகம் வெல்ஃபேர் பார்ட்டி சிஅய்டியு காங்கிரஸ் தமிழ்ப் புலிகள் தமிழ்நாடு மாணவர் மன்றம் ஆகிய அமைப்புகளைச் சேர்ந்த தோழர்கள் பங்கேற்றனர்.

கோவையில் வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகை !

கோவையில் வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகை !

கோவையில் வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகை ! திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகளின் தோழர்கள் 10 பேர் கைது ! 05.04.2018 காலை 10.30.00 மணிக்கு காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க மறுக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோவையில் திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தோழமை அமைப்புகளின் சார்பில் வருமான வரித்துறை அலுவலகம் முற்றுகைப்போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்ட திவிக, தமிழ்ப்புலிகள்,பெரியார் அம்பேத்கர் வாசகர் வட்ட தோழர்கள் 10 பேர் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.

நாமக்கல் பள்ளிபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் !

நாமக்கல் பள்ளிபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் !

நாமக்கல் பள்ளிபாளையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் ! திராவிடர் விடுதலைக் கழகம் நாமக்கல் மாவட்டம் சார்பில்04.04.2018 புதன்கிழமை மாலை 5 மணியளவில் நாசகார ஸ்டெர்லை ஆலையை மூட வலியுறுத்தியும்,காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுக்கும் மத்திய பாஜக அரசைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தினமலர் நாளிதழ் எரிப்பு !

தினமலர் நாளிதழ் எரிப்பு !

தினமலர் நாளிதழ் எரிப்பு ! தமிழை இழிவுபடுத்தி செய்தி வெளியிட்ட தினமலர் நாளிதழை 05.04.2018 அன்று திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நங்க வள்ளியில் கழகத்தோழர் எரித்து தினமலரை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

IPL கிரிக்கெட் சுவர் விளம்பரங்கள் அழிப்பு ! சென்னை

IPL கிரிக்கெட் சுவர் விளம்பரங்கள் அழிப்பு ! சென்னை

IPL கிரிக்கெட் சுவர் விளம்பரங்கள் அழிப்பு ! ”ஐபிஎல்_வேண்டாம் ! காவிரி மேலாண்மை வாரியம் வேண்டும் !” என்று எழுதி எதிர்ப்பை தெரிவித்தனர் ! 05.04.2018 அன்று திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் பகுதியை சார்ந்த தோழர்கள் மற்றும் மந்தவெளி விசாலாட்சி தோட்டம் பகுதி தோழர்களும் இணைந்து…. சென்னையில் நடைபெறவிருக்கும் ஐ.பி.எல் போட்டிக்காக வரையப்பட்டிருந்த சுவர் விளம்பரங்களை அழித்து அதன் மேல் “#ஐபிஎல்_வேண்டாம்” “#காவிரி_மேலாண்மை_வாரியம்_வேண்டும்” என்று எழுதி எதிர்ப்பை தெரிவித்தனர். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

திராவிடர் விடுதலைக் கழக ‘கொடி”

திராவிடர் விடுதலைக் கழக ‘கொடி”

திராவிடர் விடுதலைக் கழக ‘கொடி” தேவைப்படும் தோழர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய அலைபேசி எண் : 7299230363 கொடி அளவு : 3×2 விலை : ₹ 80/= (ரூபாய் எண்பது மட்டும்)

சென்னையில் இரயில் நிலையம் முற்றுகை ! கைது !

சென்னையில் இரயில் நிலையம் முற்றுகை ! கைது !

சென்னையில் இரயில் நிலையம் முற்றுகை ! கைது ! திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட மயிலாப்பூர் பகுதி தோழர்கள் மற்றும் விசாலாட்சி தோட்டம் பகுதியை சார்ந்த மக்கள் இணைந்து… காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை சீர்குலைக்கும் மத்திய அரசை கண்டித்து இன்று 06.04.2018 காலை 11 மணிக்கு மந்தவெளி இரயில் நிலையத்தை கண்டன முழக்கத்தோடு முற்றுகையிட்டனர். மந்தவெளி இரயில் தடத்தில் இறங்கி கண்டன முழக்கமிட்ட அனைவரும் கைது செய்யப்பட்டு மந்தவெளி கல்யாண மண்டபத்தில் அடைக்கப்பட்டனர். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

கோவையில்  பி.எஸ்.என்.எல். அலுவலகம் முற்றுகை – 90 பேர் கைது ! 10042018

கோவையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முற்றுகை – 90 பேர் கைது ! 10042018

  எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை திரும்ப பெறக்கோரி கோவை சமூக நீதிக்கான மக்கள் கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற இந்த போராட்ட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் பங்கேற்றது. 10.04.20188 அன்று கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர். சமூக நீதிக்கான மக்கள் கூட்டமைப்பு சார்பில் எஸ்.சி., எஸ்.டி. மக்களுக்கு எதிரான உச்ச நீதிமன்ற தீர்ப்பை திரும்ப பெறக்கோரி கோவை கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பி.எஸ்.என்.எல். அலுவலகம் எதிரே சாலை மறியல் நடைபெற்றது. அப்போது வன்கொடுமை தடுப்பு சட்டத்தை அமுல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். போராட்டத்துக்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநில துணை பொதுச்செயலாளர் சிவஞானம் தலைமை வகித்தார். தந்தை பெரியார் திராவிடர் கழகம் மாநில அமைப்பு செயலாளர் ஆறுச்சாமி,ஆதித்தமிழர் கட்சி மாநில தலைவர் வெண்மணி, ஆதித்தமிழர் பேரவை மாநில பொதுச்செயலாளர்...

“கல்வி- வேலை வாய்ப்பில் எங்கள் உரிமையை பறிக்காதே” – பரப்புரைப் பயணம். தூத்துக்குடி 14042018

“கல்வி- வேலை வாய்ப்பில் எங்கள் உரிமையை பறிக்காதே” – பரப்புரைப் பயணம். தூத்துக்குடி 14042018

  ‘தூத்துக்குடியிலிருந்து கீழப்பாவூர் வரை’ தூத்துக்குடி- திருநெல்வேலி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் “கல்வி- வேலை வாய்ப்பில் எங்கள் உரிமையை பறிக்காதே” எனும் தலைப்பில் தமிழக மாணவர்களின் உரிமை மீட்பு பரப்புரை பயணம் மாநில பரப்புரை செயலாளர் தோழர்.பால்.பிரபாகரன் அவர்களின் தலைமையில் தூத்துக்குடியிலிருந்து கீழப்பாவூர் வரை அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளான ஏப்ரல்14,15 ஆகிய இரண்டு நாட்களில் நடைபெற இருக்கிறது.. மீத்தேன், ஹைட்ரோ கார்பன், சாகர்மாலா, நியுட்ரினோ, ஸ்டெர்லைட், கூடங்களம் போன்ற தமிழ்நாட்டை சுடுகாடாக்கும் எண்ணற்ற நாசகர திட்டங்களை போட்டு தமிழக மக்களை வஞ்சிக்கும் மத்திய அரசு, இப்போது நம் தமிழ் மாணவர்களின் கல்வி உரிமையில் “புதிய கல்விக் கொள்கை” எனும் பெயரில் கை வைத்திருக்கிறது. இந்த புதிய கல்வி கொள்கையை மக்களிடையே அம்பலப்படுத்தும் நோக்கத்துடன் இப்பரப்புரை பயணத்தை திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தவிருக்கிறது.

கோபியில், மகளிர் தின விழா மாவட்ட மாநாடு ! 15042018

கோபியில், மகளிர் தின விழா மாவட்ட மாநாடு ! 15042018

பெண்ணே எழு விடுதலை முழக்கமிடு எனும் முழக்கத்துடன்……….. திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில்……… நாள் : 15.04.2018 ஞாயிறு நேரம் : மாலை 6.00 மணி இடம் : பெரியார் திடல்,கோபி. சிறப்புரை : தோழர் கொளத்தூர் மணி, தலைவர்,திராவிடர் விடுதலைக் கழகம். தோழர் கவுசல்யா, ஜாதி ஒழிப்புப்போராளி, தோழர் திவ்யபாரதி, கக்கூஸ் ஆவணப்பட இயக்குனர். தோழர் வளர்மதி, பொதுநல மாணவர் எழுச்சி இயக்கம். தோழர் சிவகாமி, தலைவர்,தமிழ்நாடு அறிவியல் மன்றம். ”நிமிர்வு” கலைக்குழுவின் பறை முழக்கம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

“தன்மானம் – தன்னுரிமை மீட்பு” மாநாட்டிற்கான ஆரம்ப பணியில் திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்.

“தன்மானம் – தன்னுரிமை மீட்பு” மாநாட்டிற்கான ஆரம்ப பணியில் திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம்.

  30.04.2018 அன்று “தோழர்.பத்ரி நாராயணன்” அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவு நாளில் இராயப்பேட்டை வி.எம்.தெருவில் நடைபெறவிருக்கும் மாநாட்டிற்கான சுவர் விளம்பர பணியில் கழகத்தோழர்கள். நிலம் பாழ்,நீர் மறுப்பு,நீட் திணிப்பு இவற்றிற்க்கெதிராக “தன்மானம் – தன்னுரிமை மீட்பு” மாநாடு நடைபெறவுள்ளது. திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

இராசிபுரத்தில்  “ஆரியம் – திராவிடம் – தமிழ் தேசியம் ” கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு.

இராசிபுரத்தில் “ஆரியம் – திராவிடம் – தமிழ் தேசியம் ” கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு.

  இராசிபுரத்தில் திராவிடர்விடுதலைக்கழகத்தின் சார்பில் ஞாயிறு 08.04.18 அன்று”ஆரியம் – திராவிடம் – தமிழ் தேசியம்” எனும் தலைப்பில் கருத்தரங்கம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. தோழர் வசந்தி அவர்கள் வரவேற்புரையாற்றினார். தோழர் சுமதி மதிவதனி அவர்கள்கருத்தரங்கிற்கு தலைமை தாங்கினர். சிறப்பு அழைப்பாளராக திமுகவின் முன்னாள் மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் தோழர் வி.பாலு அவர்கள் கலந்து கொண்டார். கருத்துரையாக திரைப்பட துணை இயக்குநர் தோழர் கலைமதி, தமிழ்நாடு அறிவியல் மன்றத்தின் தோழர் வீரா.கார்த்திக், திவிகவின் தலைமைக் கழக பேச்சாளர் தோழர் கோபி.வேலுச்சாமி ஆகியோர் பேசினர். தோழர் ஈரோடு மணிமேகலை அவர்கள் நன்றியுரையாற்றினார்.ஏராளமான கழகத்தோழர்கள் ஆதரவாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

சேப்பாக்க ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் !

சேப்பாக்க ஐ.பி.எல்.கிரிக்கெட் போட்டிக்கு எதிரான போராட்டத்தில் திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் !

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களை வஞ்சிக்கும் மத்திய மாநில அரசை கண்டித்து தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் சேப்பாக்கம் விளையாட்டு அரங்கம் முற்றுகையிடப்பட்டது. சென்னை சேப்பாக்கம் ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியை நடத்தக் கூடாது என வலியுறுத்தி 10.04.2018 அன்று மாலை 5 மணியளவில் நடை பெற்ற இப்போராட்டத்தில் சென்னை அண்ணா சாலையில் (மவுண்ட் ரோடு), சாலை மறியலில் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சென்னை மாவட்ட தோழர்கள் ஈடுபட்டனர். திராவிடர் விடுதலைக் கழகம்- சென்னை மாவட்டம் தொடர்புக்கு : 7299230363

என் எல் சி முற்றுகைப் போராட்டம் 10042018 நெய்வேலி

என் எல் சி முற்றுகைப் போராட்டம் 10042018 நெய்வேலி

அண்ணன் பண்ருட்டி வேல்முருகன் அவர்கள் தமிழக வாழ்வுரிமை  கூட்டமைப்பின் சார்பாக எண்ணற்ற பல அமைப்பு சார்ந்த தலைவர்களும், தமிழர் நலம் சார்ந்த பல தலைவர்களும் சிறப்பு மிக்க பல ஆளுமைகளும், காவிரி மேலாண்மை வாரியம் வேண்டி மிகச்சிறப்பான முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது!!!! திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக தலைவர் தோழர் கொளத்தூர்மணி அவர்கள் தலைமையில் கடலூர் மாவட்டம் நட.பாரதிதாசன் தலைமையிலும் விழுப்புரம் மாவட்டம் தோழர் ராமர் தலைமையிலும் நாகப்பட்டினம் மாவட்டம் தோழர் விஜி மற்றும்  தோழர் மகேஷ் இவர்கள் தலைமையிலும், மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் இளையராஜா அவர்களும் புதுச்சேரி மாநிலம் தோழர் லோகு அய்யப்பன் அவர்கள் தலைமையிலும், புதுச்சேரி பெரியார் சிந்தனையாளர் இயக்கம் சார்பில் தோழர் தீனா மற்றும் தோழர் பரத் அவர்கள் தலைமையிலும், அரியலூர் மாவட்ட செயலாளர் தோழர் கோபால் இராமகிருட்டினன் அவர்களும் தோழர் அறிவழகன் ஆசிரியர் அவர்கள் தலைமையில் சில தோழர்களும் மற்றும் சில பொது நல தோழர்களுடன் நெய்வேலி முற்றுகையில் பெருந்திரளாக தலைவர் தலைமையில் திவிக சார்பாக கலந்து கொண்டனர் புகைப்படங்களுக்கு

‘சமூகச்சிந்தனையாளர் கி.கிருஷ்ணகுமார் எம்.ஏ.’அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ! பள்ளிகொண்டா 01042018

‘சமூகச்சிந்தனையாளர் கி.கிருஷ்ணகுமார் எம்.ஏ.’அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ! பள்ளிகொண்டா 01042018

‘சமூகச்சிந்தனையாளர் கி.கிருஷ்ணகுமார் எம்.ஏ.’அவர்களின் மூன்றாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு ! நாள் : 01.04.2018 ஞாயிற்றுக்கிழமை. நேரம் : காலை 09.00 மணி. இடம் : தனம்மாள் ரங்கநாதன் திருமண மண்டபம்,பள்ளி கொண்டா. கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி மற்றும் தோழமை அமைப்புகளின் தலைவர்கள் கலந்து கொண்டு நினைவேந்தல் உரையாற்றுகிறார்கள்.

”பாபாசாகிப் பி.ஆர்.அம்பேத்கரின் பன்முகப்பார்வை” –  சென்னை பல்கலைக் கழகம்(தெலுங்குத் துறை) நடத்தும்  ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம்.

”பாபாசாகிப் பி.ஆர்.அம்பேத்கரின் பன்முகப்பார்வை” – சென்னை பல்கலைக் கழகம்(தெலுங்குத் துறை) நடத்தும் ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம்.

”பாபாசாகிப் பி.ஆர்.அம்பேத்கரின் பன்முகப்பார்வை” – சென்னை பல்கலைக் கழகம்(தெலுங்குத் துறை) நடத்தும் ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம். கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள்  ”டாக்டர் அம்பேத்கர் – இந்திய சமூகம்” எனும் தலைப்பில் முற்பகல் முதல் அமர்வில் கருத்துரையாற்றுகிறார். பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நிகழவிருக்கிறது. நாள் : 03.04.2018 செவ்வாய்க்கிழமை. நேரம் : காலை 09.30.மணி. இடம் : பவளவிழா கலையரங்கம்,மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக் கழகம்.  · Provide translation into English

வருவாய்த் துறை அலுவலகம் முற்றுகை ! கைது ! புதுச்சேரி 02042018

வருவாய்த் துறை அலுவலகம் முற்றுகை ! கைது ! புதுச்சேரி 02042018

வருவாய்த் துறை அலுவலகம் முற்றுகை ! கைது ! புதுச்சேரி திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் .. காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காத மோடி அரசின் தமிழர் விரோதப் போக்கைக் கண்டித்தும் உடனடியாக காவேரி மேலாண்மை வாரியம் அமைத்திட வற்புறுத்தியும் புதுச்சேரி மகாத்மா காந்தி சாலையில் (சின்ன வாய்க்காலுக்கு அருகில்) உள்ள இந்திய வருவாய்த் துறை அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் (02.04.2018, திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் நடைபெற்றது முற்றுகைப் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட தமிழ் இன உணர்வாளர்கள் கைது திராவிடர் விடுதலைக் கழகம் புதுச்சேரி. காணொளிக்கு

சென்னையில் வருமான வரித்துறை அலுவலகத்தை இழுத்துப்பூட்டும் போராட்டம்.! கைது !

சென்னையில் வருமான வரித்துறை அலுவலகத்தை இழுத்துப்பூட்டும் போராட்டம்.! கைது !

சென்னையில் வருமான வரித்துறை அலுவலகத்தை இழுத்துப்பூட்டும் போராட்டம்.! கைது ! பொதுச் செயலாளர் விடுதலை ராஜேந்திரன் பேட்டி. திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் சார்பாக….. காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழகத்திற்கு துரோகம் செய்த மத்திய அரசை கண்டித்து…. இன்று 02.04.2018 (திங்கட்கிழமை) காலை 10.30 மணிக்கு நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகத்தை இழுத்துப்பூட்டும் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் ஈடுபட்ட தோழர்களை காவல்துறை கைது செய்தது. காணொளிக்கு

மதுரையில் ரயில் மறியல் போராட்டம் ! கைது !

மதுரையில் ரயில் மறியல் போராட்டம் ! கைது !

மதுரையில் ரயில் மறியல் போராட்டம் ! கைது ! 02.04.2018 – புதிய தலைமுறை தொலைக்காட்சி செய்தி. திராவிடர் விடுதலைக்கழகம் ஒருங்கிணைப்பில் தோழமை அமைப்புகளுடன் காவிரி நதி நீர் ஆணையம் அமைக்காத மத்திய பா.ஜ.க மோடி அரசைக் கண்டித்து .   காணொளிக்கு

“குழந்தைகள் பழகு முகாம் – 2018”

“குழந்தைகள் பழகு முகாம் – 2018”

“5 நாட்கள் ” ‘முன் பதிவு ஆரம்பம்.’ வரும் 2018 மே மாதம் கோடைக்கால பள்ளி விடுமுறையில் “தமிழ்நாடு அறிவியல் மன்றம்” நடத்தும் ‘குழந்தைகள் பழகு முகாம்’ (5 நாட்கள்) நடைபெற உள்ளது. குழந்தைகள் பழகு முகாமில் கற்பனைத் திறன் வளர்த்தல், படைப்பாற்றல் பெருக்குதல், குழு உரையாடல், கதை உருவாக்கல், ஓவியப் பயிற்சி, கவிதை புனைதல், கட்டுரை வரைதல், அறிவியல் சார்ந்த விளையாட்டுகள் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெறும் ‘தேதி, இடம், கட்டணம் ஆகியவை விரைவில் அறிவிக்கப்படும்’ கோடையில் கொண்டாடுவோம் ! பள்ளி விடுமுறையை பயனுள்ளதாக்குவோம் ! 10 வயது முதல் 15 வயது முடிய உள்ள குழந்தைகள் பங்கேற்கலாம். முன் பதிவு அவசியம். பதிவு செய்ய விரும்புவோர் தொடர்பு கொள்ள : தோழர் ஆசிரியர் சிவகாமி, தலைவர், தமிழ்நாடு அறிவியல் மன்றம் அலைபேசி எண் : 87785 43882 வாட்ஸ் அப் எண் : 99437 48175

”பாபாசாகிப் பி.ஆர்.அம்பேத்கரின் பன்முகப்பார்வை” –  சென்னை பல்கலைக் கழகம்(தெலுங்குத் துறை) நடத்தும்  ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம்

”பாபாசாகிப் பி.ஆர்.அம்பேத்கரின் பன்முகப்பார்வை” – சென்னை பல்கலைக் கழகம்(தெலுங்குத் துறை) நடத்தும் ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம்

”பாபாசாகிப் பி.ஆர்.அம்பேத்கரின் பன்முகப்பார்வை” – சென்னை பல்கலைக் கழகம்(தெலுங்குத் துறை) நடத்தும் ஒரு நாள் தேசியக் கருத்தரங்கம். கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள்  ”டாக்டர் அம்பேத்கர் – இந்திய சமூகம்” எனும் தலைப்பில் முற்பகல் முதல் அமர்வில் கருத்துரையாற்றுகிறார். பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்கம் நிகழவிருக்கிறது. நாள் : 03.04.2018 செவ்வாய்க்கிழமை. நேரம் : காலை 09.30.மணி. இடம் : பவளவிழா கலையரங்கம்,மெரினா வளாகம், சென்னைப் பல்கலைக் கழகம்.

வருமான வரித்துறை அலுவலகம் பூட்டுபோடும் போராட்டம்.!

வருமான வரித்துறை அலுவலகம் பூட்டுபோடும் போராட்டம்.!

திராவிடர் விடுதலைக் கழகம் சென்னை மாவட்டம் சார்பாக… காவேரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் தமிழக மக்களின் வாழ்வாதாரத்தை சீர்க்குலைக்கும் மத்திய அரசை கண்டித்து…. நாள் : 02.04.2018 (திங்கட்கிழமை) நேரம் : காலை 10 மணி இடம் : நுங்கம்பாக்கம் வருமானவரித்துறை அலுவலகம், சென்னை.

செங்கோட்டை போராட்டம் வெற்றி

செங்கோட்டை போராட்டம் வெற்றி

தோழர்களே! வணக்கம். கடந்த 06-03-2018 சென்னையில் நாம் திட்டமிட்டபடி, இராமராஜ்ஜிய இரத யாத்திரையை 20-03-2018 அன்று செங்கோட்டை தடுப்பு மறியல் போராட்டம் பெருந்திரளோடு நடந்து முடிந்துள்ளது. நாம் எதிர்பாராத அரசியல் விளைவுகள் மூலம் பலப்படுத்தியுள்ளது. பத்து மாவட்டங்களில் தயாரிப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. சமூக ஊடகங்களில் பரவலாக்கப்பட்டது. #செங்கோட்டை_போராட்டம்_வெற்றி மார்ச் 20 இராமராஜ்ஜிய இரத யாத்திரை தடுப்பு மறியல் தலைவர்கள் தோழர் தொல்.திருமாவளவன் – வி.சி.க தோழர் கொளத்தூர் மணி – தி.வி.க தோழர் வேல்முருகன் – த.வா.க தோழர் கு.இராமகிருஷ்ணன் – த.பெ.தி.க தோழர் ஜவாஹிருல்லா – ம.ம.க தோழர் தெகலான்பாகவி – எஸ்.டி.பி.ஐ தோழர் கே.எம்.சரீப் – த.ம.ஜ.க தோழர் திருவள்ளுவன் – தமிழ்ப்புலிகள் உள்ளிட்ட தலைவர்கள் செங்கோட்டை மறியலுக்கு வரும் வழியில் செங்கல்பட்டு, மதுரை, கோவில்பட்டி, விருதுநகர் என முன்னெச்சரிக்கை எனும் பேரில் மார்ச் 19, 20 கைது செய்யப்பட்டனர். முதல் நாள் இரவு முதல் தமிழ்நாடெங்கும் முன்னெச்சரிக்கைக்...

இராமராஜ்ஜிய இரத யாத்திரையை தடுத்து நிறுத்துவோம் செங்கோட்டை 20032018

இராமராஜ்ஜிய இரத யாத்திரையை தடுத்து நிறுத்துவோம் செங்கோட்டை 20032018

மார்ச் 20 காலை 8மணி தமிழக எல்லை செங்கோட்டை_புளியரை_சந்திப்பில் இராமராஜ்ஜிய இரத யாத்திரையை தடுத்து நிறுத்துவோம் செங்கோட்டை புளியரை சந்திப்பு மார்ச் 20 காலை 8 மணி இராமராஜ்ஜிய இரத யாத்திரை தடுப்பு மறியல் தலைவர்கள் தோழர் வை.கோ – ம.தி.மு.க தோழர் தொல்.திருமாவளவன் – வி.சி.க தோழர் சீமான் – நாம் தமிழர் தோழர் கொளத்தூர் மணி – தி.வி.க தோழர் வேல்முருகன் – த.வா.க தோழர் கு.இராமகிருஷ்ணன் – த.பெ.தி.க தோழர் ஜவாஹிருல்லா – ம.ம.க தோழர் தெகலான்பாகவி – எஸ்.டி.பி.ஐ தோழர் எஸ்.எஸ்.ஆரூண்ரசீது – ம.ஜ.கட்சி தோழர் சரீப் – த.ம.ஜ.க தோழர் பாளை ரஃபீக் – ம.ம.மு.கழகம் தோழர் பாலன் – த.தே.ம.முன்னணி தோழர் அதியமான் – ஆ.த.பேரவை தோழர் திருவள்ளுவன் – தமிழ்ப்புலிகள் தோழர் ஜக்கையன் – ஆ.த.கட்சி தோழர் பொழிலன் – த.ம.மு தோழர் வெண்மணி – ஆ.த.கட்சி தோழர் தமிழ்நேயன் –...

மலேசியாவில் தோழர் ஃபாரூக்கின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு !

மலேசியாவில் தோழர் ஃபாரூக்கின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு !

மலேசியாவில் தோழர் ஃபாரூக்கின் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு ! நேற்று 17.3.2018. மாலை மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் திராவிடர் விடுதலை கழகத்தின் கொள்கை வீரர் தோழர் ஃ பாரூக் அவர்கட்கு முதலாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்வில் கலந்துகொண்டு நினைவுரை ஆற்றிய சான்றோர்கள். மலேசிய திராவிடர் கழகத்தின் தேசிய தலைவர். மானமிகு ஐயா. எப்.காந்தராசு. மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவர். எழுத்தாண்மை ஏந்தல் பெரு. அ. தமிழ்மணி. மலேசிய மாந்தநேயத் திராவிடர் கழகத்தின் கோலாலம்பூர் மாநில தலைவர். மானமிகு தோழர். அன்பு இதயன். மருத்துவர். ஐயா. பாரி சுந்தரம். தோழர். ரபீக். மருத்துவர். விஜயப்பிரியா. மானமிகு தோழர். மக்கள் பிரதிநிதி சரவணன். மானமிகு தோழர். காஞ்சி அசோக். மலேசிய மேனாள் காவல்துறை துணை ஆய்வாளர். மானமிகு ஐயா. மதியழகன். மற்றும், தோழர்கள் .   படங்களுக்கு https://www.facebook.com/dvk12/posts/2096859697264586

எச்.ராஜாவைக் கைது செய்! கொந்தளித்தது தமிழகம்!

எச்.ராஜாவைக் கைது செய்! கொந்தளித்தது தமிழகம்!

எச். ராஜாவைக் கண்டித்து, திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ஆர்ப்பாட்டங்கள் உருவ பொம்மை எரிப்புகள் நடந்தன. குமரி மாவட்டத்தில் 07-03-2017 புதன் கிழமை, காலை 11.00 மணிக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிறீநாத்திடம் புகார் மனு வழக்குரைஞர் வே.சதா (மாவட்டத் தலைவர்) தலைமையில் தமிழ்மதி (மாவட்டச் செயலாளர்), நீதி அரசர் (தலைவர், பெரியார் தொழிலாளர் கழகம்), சூசையப்பா (முன்னாள் மாவட்டத் தலைவர்), அப்பாஜி (வழக்குரைஞர் அணி துணைச் செயலாளர், தி.மு.க), வைகுண்ட ராமன், வின்சென்ட் ஆகியோரால் வழங்கப் பட்டது. ஆனைமலை : கண்டன ஆர்ப்பாட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின்  ஒருங் கிணைப்பில் அனைத்து கட்சிகளின் சார்பில் 07-03-2018 மாலை 5 மணிக்கு ஆனைமலை முக்கோணத்தில் நடைபெற்றது. ஆனைமலை நகரச் செயலர் வே.அரிதாசு தலைமையில், நகர தலைவர் சோ.மணிமொழி முன்னிலையில் நடைபெற்றது. கண்டன உரையாக நாகராசு (திராவிடர் கழகம்), பரமசிவம் (சிபிஎம் ), மணிமாறன்  (வெல்ஃபேர் பார்ட்டி), அப்பன்குமார் (விசிக), சாந்துசாகுல்அமீது (இந்திய...

தூத்துக்குடியில் பெரியாரியல் பயிலரங்கம்

தூத்துக்குடியில் பெரியாரியல் பயிலரங்கம்

தூத்துக்குடி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக 11-03-2018 அன்று தூத்துக்குடி முத்து மஹாலில் ஒரு நாள் “பெரியாரியல் பயிலரங்கம்” நடைபெற்றது. இதில் திராவிடர் இயக்க வரலாறு பற்றியும், வகுப்புரிமை வரலாறு பற்றியும், தந்தை பெரியாரின் போராட்ட வரலாறு பற்றியும், தமிழர்- திராவிடர் பற்றிய விளக்கங்களையும், திராவிடர் இயக்கத்தின் மீதான அவதூறுகளுக்கு விளக்கங்களையும்,  திராவிடர் விடுதலைக் கழகத்தின் போராட்ட வரலாறு பற்றியும் மாநில பரப்புரை செயலாளர் பால்.பிரபாகரன் விரிவாக பயிற்சியளித்தார். பயிற்சி வகுப்புக்கு பின்னர் கலந்து கொண்ட பயிற்சி யாளர்கள் தங்களுக்கு தோன்றிய சந்தேகங்களை கேள்விகளாக கேட்டு விளக்கம் பெற்றனர். இப்பயிற்சி வகுப்பில் 25க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர். காலை மாலை தேநீருடன் மதிய உணவாக பிரியாணி வழங்கப் பட்டது. இப்பயிற்ச்சி வகுப்புக்கான ஏற்பாட்டை தூத்துக்குடி திவிக மாவட்டச் செயலாளர் இரவி சங்கர் மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார். பெரியார் முழக்கம் 15032018 இதழ்  

”திருப்பூரில் மகளிர் நாள் மாவட்ட மாநாடு.”

”திருப்பூரில் மகளிர் நாள் மாவட்ட மாநாடு.”

”திருப்பூரில் மகளிர் நாள் மாவட்ட மாநாடு.” திருப்பூர் இராயபுரத்தில் 12.03.2018 மாலை 6 மணியளவில் மகளிர் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின.மாநாட்டிற்கு தோழர் பார்வதி தலைமையேற்றார்.தோழர் சரண்யா வரவேற்புரையாற்றினார். முதல் நிகழ்வாக பெரியார் பிஞ்சுகள் யாழினி,யாழிசை,அமுதினி ஆகியோரும் மாணவர்கழகத்தின் வினோதினி,வைத்தீஸ்வரி, சுதா,மணிமொழி,கனல்மதி ஆகியோர் பெரியார் இயக்கப்பாடல்களை பாடினார்கள். தொடர்ந்து கோவை நிமிர்வு கலையகத்தின் அதிரும் பறையிசை மேடையில் துவங்கியது. பறை இசையின் தொன்மை,புகழ் ஆகியவற்றின் விளங்கங்களுடன் அதன் தேவையையும் நடனத்துடன் கூடிய விளக்கமாக நிகழ்த்தியது பொதுமக்களின் கரவொலியுடன் பேராதரவை பெற்றது. மாணவர்கழகத்தின் காருண்யா அவர்கள் மகளிர் தினம் குறித்த அறிமுக உரை நிகழ்த்தினார்.அடுத்து பகுத்தறிவு வழக்காடு மன்றம் நடைபெற்றது. கருத்துச்செறிவுடன் நடந்த விவாதக்களத்தில் வாதங்கள் விசாரிக்கப்பட்டு தீர்ப்பு வழங்க்கப்பட்டது. மாலை நிகழ்விற்கு தலைமையேற்ற தோழர் பார்வதி அவர்கள் பெரியாரியல் தன் வாழ்வில் கொடுத்த தன்நம்பிக்கையையும், துணிச்சலையும் எடுத்துரைத்தார். தோழர் பசு.கவுதமன் அவர்களின் நூல் வெளியீட்டு நிகழ்ச்சி மாநாட்டில் நடைபெற்றது.இரண்டு ஜாதி மறுப்புத் திருமணங்களும்...

தோழர் பசு.கவுதமன் அவர்கள் எழுதிய நூல்கள் வெளியீடு !

தோழர் பசு.கவுதமன் அவர்கள் எழுதிய நூல்கள் வெளியீடு !

தோழர் பசு.கவுதமன் அவர்கள் எழுதிய நூல்கள் வெளியீடு ! திருப்பூரில் 12.03.2018 அன்று நடைபெற்ற மகளிர் நாள் மாநாட்டில் தோழர் பசு கவுதமன் அவர்கள் எழுதிய ”பெரியாரிய பெண்ணிய சிந்தனைகள்” எனும் நூலை தோழர் சிவகுரு (பாரதி புத்தகாலயம்) அவர்கள் வெளியிட தோழர் ஈரோடு பிரேமா அவர்கள் பெற்றுக்கொண்டார். ‘பெண் ஏன் அடிமையானாள்?’ நூலை கழகத்தலைவர் வெளியிட தோழர் காருண்யா பெற்றுக்கொண்டார். தோழர் சிவகுரு நூல்கள் குறித்து அறிமுகம் செய்து உரையாற்றினார்.

மாநாட்டு மேடையில் சிறப்பு நிகழ்வாக நடைபெற்ற  ”ஜாதி மறுப்புத்திருமணங்கள்’

மாநாட்டு மேடையில் சிறப்பு நிகழ்வாக நடைபெற்ற ”ஜாதி மறுப்புத்திருமணங்கள்’

மாநாட்டு மேடையில் சிறப்பு நிகழ்வாக நடைபெற்ற ”ஜாதி மறுப்புத்திருமணங்கள்” 12-3-2018 திருப்பூரில் நடைபெற்ற மகளிர் தின மாநாட்டில் இரண்டு ஜாதிமறுப்புத் திருமணங்கள் நடைபெற்றன. வாழ்க்கை இணையேற்பு ஒப்பந்தத்தை கழகத் தலைவர் கொளத்தூர் மணி நிறைவேற்றிவைத்தார். சேலம் மாவட்டம், எடப்பாடி வட்டம், ஆவணியூர், வி.என்.பாளையம் தங்கம்மாள்-அண்ணாமலை ஆகியோரின் மகன் செல்வகுமார் – எடப்பாடி வட்டம்,ஜலகண்டபுரம் சாலை காவலர் குடியிருப்பில் வசிக்கும் சின்னராசு-மயில் ஆகியோரின் மகள் ஸ்வாதிப்பிரியா ஆகியோருக்கும், சேலம்,உடையாப்பட்டி, சாந்தி-கிருஷ்ணன் ஆகியோரின் மகன் பிரபு – பழனியில் வசிக்கும் செல்வி-வடிவேல் ஆகியோரின் மகள் பிரியதர்ஷினி ஆகியோருக்கும் மாநாட்டு மேடையில் வாழ்க்கை இணையேற்பு நிகழ்ந்தது. இரண்டு இணையேற்பும் பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர் ஆகியோர் இடையே நிகழ்ந்தவை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

”திருப்பூரில் மகளிர் நாள் மாவட்ட மாநாடு.”  ‘எழுச்சியுடன் நடைபெற்ற பேரணி’

”திருப்பூரில் மகளிர் நாள் மாவட்ட மாநாடு.” ‘எழுச்சியுடன் நடைபெற்ற பேரணி’

”திருப்பூரில் மகளிர் நாள் மாவட்ட மாநாடு.” ‘எழுச்சியுடன் நடைபெற்ற பேரணி’ திராவிடர் விடுதலைக் கழகம் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் மகளிர் நாள் மாவட்ட மாநாட்டு பேரணி 12.03.2018 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் இருந்து துவங்கியது. பேரணிக்கு முன்பாக புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு கழகத்தின் மகளிர் ஜாதி ஒழிப்பு முழக்கங்களுடன் மாலை அணிவித்தனர். பேரணியை கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் கொடி அசைத்து துவங்கி வைத்தார்.பேரணியை கழகத்தோழர் சுசீலா அவர்கள் தலைமை தாங்கி நடத்தினார். பேரணி முன் வரிசையில் பறைமுழக்கமும்,கழக மகளிரின் நடனத்துடன் சென்றது.குழந்தைகள், பெண்கள்,ஆண்கள் என வரிசையில் சுயமரியாதை இயக்கப்பெண்கள்,சமூக செயற்பாட்டாளர்கள்,போராளிகளின் படங்களை தாங்கிப்பிடித்தபடி கொள்கை முழக்கங்களுடன் எழுச்சியுடன் பேரணி நடந்தது.சாலையின் இருபுறமும் மக்கள் நடைபெற்ற பேரணியை உன்னிப்பாக கவனித்தனர். திருப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலையை பேரணி அடைந்தது. கழகத்தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் பெரியார் சிலை,அண்ணா...

“சங்கர் சமூக நீதி அறக்கட்டளை” அறிமுக விழா உடுமலைப்பேட்டை 13032018

“சங்கர் சமூக நீதி அறக்கட்டளை” அறிமுக விழா உடுமலைப்பேட்டை 13032018

(13.03.2018) உடுமலைப்பேட்டையில், தோழர் கெளசல்யா அவர்களின் “சங்கர் சமூக நீதி அறக்கட்டளை” அறிமுக விழா ! கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி அவர்கள் மற்றும் தோழமை அமைப்புகளின் தலைவர்களும் பங்கேற்கிறார்கள். நாள் : 13.03.2018 செவ்வாய் நேரம்: மாலை 3 மணி இடம்: காயத்திரி திருமண மண்டபம், கொழுமம், உடுமலைப்பேட்டை.

எச் இராஜாவை வளைக்கும் சட்டப்பிரிவுகள்

எச் இராஜாவை வளைக்கும் சட்டப்பிரிவுகள்

ராஜாவை வளைக்கும் சட்டப் பிரிவுகள்! பெரியார் சிலை பற்றி பாஜக தேசியச் செயலாளர் ஹெச்.ராஜா சமூக வலைதலத்தில் தெரிவித்த கருத்துகள் தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டிருக்கிறது. ராஜாவின் பதிவைத் தொடர்ந்தே திருப்பத்தூரில் பெரியார் சிலை தாக்கப்பட்டது. எனவே தமிழகத்தில் வன்முறையைத் தூண்டிவிட்டு, நல்லிணக்கத்தை சிதைக்கும் வகையில் செயல்படும் ராஜாவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் திராவிடர் விடுதலைக் கழக விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயரட்சகன் புகார் அளித்தார். அதன் மீது காவல் துறையினர் நடவடிக்கை எடுக்காததால், வழக்குபதிவு செய்ய உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் அவர் மனுத்தாக்கல் செய்துள்ளார். இதுபற்றி ஜெயரட்சகன் சார்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கும் வழக்கறிஞர் துரை அருணிடம் பேசினோம். “பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்தே ஹெச்.ராஜா தொடர்ந்து இரு தரப்பினருக்கிடையில் பகைமையை மூட்டும் வகையில் பேசிவருகிறார். சமூக...

ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைக்கும் ஜாதி எதிர்ப்பு போராளிகளுக்கும் பாராட்டு விழா !

ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைக்கும் ஜாதி எதிர்ப்பு போராளிகளுக்கும் பாராட்டு விழா !

மதுரையில், ஜாதி மறுப்பு இணையோர்களுக்கும், ஜாதி மறுப்பு திருமணம் செய்து வைக்கும் ஜாதி எதிர்ப்பு போராளிகளுக்கும் பாராட்டு விழா ! மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் 13.02.2018 அன்று மாலை 5 மணிக்கு மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் எதிரில் உள்ள ராமசுப்பு அரங்கத்தில் நடைபெற்றது. சிறப்புரை : கழக பரப்புரை செயலாளர்.பால்.பிரபாகரன் ஆதித்தமிழர் கட்சி தலைவர் ஜக்கையன் தமிழ் புலிகள் கட்சி பொது செயலாளர் பேரறிவாளன் சிபிஎம்எல் மக்கள் விடுதலை பாரதி கண்ணம்மா -பாரதி கண்ணம்மா அறக்கட்டளை பேராசிரியர் முரளி -Pucl ரபீக்ராஜா-இளந்தமிழகம் வெண்மணி -தபெதிக ஆனந்தி – குறிஞ்சியர் விடுதலை இயக்கம் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : திராவிடர் விடுதலைக் கழகம்,மதுரை மாவட்டம்.