Category: மாவட்ட செய்திகள்

எழுச்சியோடு முடிந்த 2023 – கழகம் ஆற்றிய பணிகள்

எழுச்சியோடு முடிந்த 2023 – கழகம் ஆற்றிய பணிகள்

ஜனவரி: பொங்கல் விழா அழைப்பிதழில் “தமிழ்நாடு” என குறிப்பிட மறுத்தது, தமிழ்நாடு அரசின் இலச்சினையை பயன்படுத்த மறுத்தது,  பின்னர் எதிர்ப்புகளுக்கு அடிபணிந்தது என ஆளுநரின் அதிகார மீறல்களோடுதான் 2023 தொடங்கியது. சட்டப்பேரவையில் ஜனவரி 9-ஆம் தேதி ஆளுநர் உரையை வாசித்த ஆர்.என்.ரவி, சில முக்கியப் பகுதிகளை வெட்டியும் ஒட்டியும் திரித்தும் வாசித்தார். திராவிட மாடல், சுயமரியாதை, சமூக நீதி, சமத்துவம், பெரியார், அம்பேத்கர், அண்ணா, கலைஞர், காமாராசர் ஆகிய வார்த்தைகளை உச்சரிக்க மறுத்துவிட்டார். ஆனால் அரசு தயாரித்த உரைதான் பதிவேட்டில் இடம்பெறும் என முதலமைச்சர் தீர்மானம் கொண்டுவந்ததால், வேறு வழியின்றி சட்டமன்றத்தை விட்டு ஓட்டம்பிடித்தார் ஆர்.என். ரவி. ஆணவம் பிடித்த ஆளுநர் ஆர்.என்.ரவியை திரும்பப் பெறக்கோரி மேட்டூர், சேலம், ஈரோடு, திருப்பூர் பகுதிகளில் கழகத்தின் சார்பில் உடனடியாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. ஜனவரி 13-ஆம் தேதி சென்னை ராயப்பேட்டையில் மாவட்டக் கழகம் சார்பில் பொங்கல் விழா நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட...

இந்திய அரசியலும் பார்ப்பனியமும் – திருப்பூரில் கருத்தரங்கம்

இந்திய அரசியலும் பார்ப்பனியமும் – திருப்பூரில் கருத்தரங்கம்

திருப்பூர் : திருப்பூர் மாநகர கழக அமைப்பாளர் முத்து – வசந்தி இணையரின் மூத்த மகன் வெற்றிமாறனின்  4 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா மற்றும் இளைய மகன் பெயர் சூட்டும் விழா 07.01.2024 ஞாயிற்றுக்கிழமை மாலை 5 மணிக்கு திருப்பூர் கிருஷ்ணா நகரில் உள்ள அவரின் இல்லத்தில் நடைபெற்றது.   முதல் நிகழ்வாக வெற்றிமாறனின் பிறந்தநாள் கழகத் தலைவர் முன்னிலையில் கேக் வெட்டி மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டது. அடுத்ததாக வசந்தி – முத்து இணையரின் இரண்டாவது மகனுக்கு கழகத் தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் “மகிழ் மாறன்” என்று பெயர் சூட்டினார். பெயர் சூட்டு விழாவைத் தொடர்ந்து மாலை 6 மணிக்கு கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு முத்துலட்சுமி தலைமை தாங்கினார்,  சக்தி முன்னிலை வகித்தார், வசந்தி வரவேற்புரையாற்றினார். கழகத்தின் தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், கோவை மாவட்டத் தலைவர் மேட்டுப்பாளையம் பா.இராமச்சந்திரன், கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகப்...

சென்னை, திருப்பூரில் பொங்கல் விழா; ஏற்பாடுகள் தீவிரம்

சென்னை, திருப்பூரில் பொங்கல் விழா; ஏற்பாடுகள் தீவிரம்

_திருவல்லிக்கேணி பகுதி 24ம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் இராயப்பேட்டை வி.எம்.தெருவில் நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளை திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி சென்னை மேற்கு மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து குழந்தைகள் மற்றும் இளைஞர் – பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. 13.01.2024 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, வணக்கத்துக்குரிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, திரைப்பட இயக்குனர் மாரி செல்வராஜ் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுப் போட்டியில் வென்றவர்களுக்கு பரிசளித்து சிறப்புரையாற்றவுள்ளனர். மயிலாப்பூர் : மயிலாப்பூர் பகுதியில் 8ஆம் ஆண்டு பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி 07ம் தேதி சுப்பராயன் சாலையில் நடைபெற்றது. பரிசளிப்பு மற்றும் கலைநிகழ்ச்சிகள் ஜனவரி 15ஆம் தேதி நடைபெறும். வட சென்னை : தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் மற்றும்...

“இஸ்ரேல் முதல் பாலஸ்தீனம்” வரை நூல் வெளியிட்ட கழகத் தலைவர்

“இஸ்ரேல் முதல் பாலஸ்தீனம்” வரை நூல் வெளியிட்ட கழகத் தலைவர்

எழுத்தாளர் விஜயபாஸ்கர் புதிதாக எழுதியுள்ள “பாலஸ்தீனம் முதல் இஸ்ரேல் வரை – ஒரு வரலாற்றுச் சுருக்கம்” நூலை சென்னை புத்தகக் காட்சியில் பெரியார் புக்ஸ்.காம் அரங்கில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி வெளியிட கருப்புப் பிரதிகள் நீலகண்டன், பத்திரிகையாளர் நீரை.மகேந்திரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர். எழுத்தாளர் விஜயபாஸ்கர் “உயர்ஜாதியினருக்கு EWS இடஒதுக்கீடு சரியா? தவறா?” என்ற நூலை தொகுத்து  கவனம் ஈர்த்தவர். நிகழ்வில் அற்புதம்மாள், கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், கழக இணையதளப் பொறுப்பாளர் விஜயகுமார், பத்திரிகையாளர் ர.பிரகாசு, அன்னூர் விஷ்ணு உள்ளிட்டோர் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 11012024 இதழ்

குடும்ப விழாக்கள் நடத்த கோவை மாவட்டக் கழகம் முடிவு

குடும்ப விழாக்கள் நடத்த கோவை மாவட்டக் கழகம் முடிவு

கோவை மாவட்டக் கழக கலந்துரையாடல் கூட்டம் 11.01.2024, வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு கோவை அசோக் அலுவலகத்தில் நடைபெற்றது. கழக மாவட்டச் செயலாளர் சூலூர் பன்னீர்செல்வம் அவர்கள் தலைமை தாங்கினார். கூட்டத்தில் வருகிற மார்ச் மாதம் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் கருத்தரங்கம், தெருமுனைக் கூட்டங்களை நடத்துவது, கோவை மாவட்டக் கழகத்திற்கு மாவட்ட அலுவலகம் அமைப்பது, ஆண்டிற்கு ஒருமுறை கோவை மாவட்டத் தோழர்கள் ஒன்றிணைந்து குடும்ப விழா நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. கலந்துரையாடல் கூட்டத்தின் முடிவில் புரட்சிப் பெரியார் முழக்கம் சந்தா தொகையாக ரூ.25,000 வழங்கப்பட்டது. பெரியார் முழக்கம் 18012024  இதழ்

களைகட்டிய பொங்கல் நிகழ்ச்சிகள் சென்னையில் மேயர் பிரியாராஜன் பங்கேற்பு

களைகட்டிய பொங்கல் நிகழ்ச்சிகள் சென்னையில் மேயர் பிரியாராஜன் பங்கேற்பு

திருவல்லிக்கேணி பகுதி சார்பில் 24-ஆம் ஆண்டு தமிழர் திருநாள் பொங்கல் விழா விளையாட்டுப் போட்டிகள் 07.01.2024, ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணிக்கு நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளை திமுக இளைஞரணி மேற்கு மாவட்ட அமைப்பாளர் வழக்கறிஞர் பிரகாஷ் தொடங்கி வைத்தார். விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசளிப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகள் 13.01.2024, சனிக்கிழமை நடைபெற்றது. “மாணவக் கலைஞர்கள் குழுவின்” பறையிசை – ஒயிலாட்டம் – மரக்கால் ஆட்டம் – தீச்சிலம்பம் – மயிலாட்டம் – மாடாட்டம் – புலி ஆட்டம், Dude’z in Madras குழுவின் ராப் இசை, U Won Dance Crewe பகுதி மாணவிகளின் நடனம், கானா சுதாகர்‌ – புரட்சிமணியின் மக்களிசை சங்கமம் உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது. பரிசளிப்பு விழாவுக்கு மாவட்டச் செயலாளர் இரா.உமாபதி தலைமை தாங்கினார். இராஜேசு வரவேற்புரையாற்றினார். நிகழ்வில் வணக்கத்துக்குரிய சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, மாவட்டத் துணைச் செயலாளர் ஆர்.என்.துரை, 119வது வார்டு மாமன்ற...

கழகம் முன்னெடுத்த பொங்கல் விழாக்கள்

கழகம் முன்னெடுத்த பொங்கல் விழாக்கள்

மயிலைப்பகுதி 8ம் ஆண்டு தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் விழா பரிசளிப்பு – கலை நிகழ்ச்சிகள் 15.01.2024 அன்று சுப்பராயன் சாலை பெரியார் படிப்பகம் முன்பு நடைபெற்றது. நடனம் – சிலம்பாட்டம் – குத்துச்சண்டை – மயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்வுகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தென்சென்னை மாவட்ட வழக்கறிஞரணி துணை அமைப்பாளர் சரவணன், விசிக 126வது வட்ட செயலாளர் கண்ணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். விளையாட்டுப் போட்டிகளில் வென்றவர்களுக்கு மயிலாப்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மயிலை த.வேலு, மயிலாப்பூர் கிழக்கு பகுதிச் செயலாளர் முரளி, மயிலாப்பூர் மேற்கு பகுதிச் செயலாளர் நந்தனம் கி.மதி ஆகியோர் பரிசளித்து சிறப்பு செய்தனர்.. Arun Ace Dance குழு, ஆசான் ஆதி கேசவன் சிலம்பம் குழு, VS Boxing Club குழு மற்றும் SS மயிலாட்டம் குழுவினருக்கு பரிசுகளை வழங்கி பாராட்டுத் தெரிவித்தனர். மயிலைப் பகுதி பொங்கல் விழாக்குழு மயிலைப்பகுதி : தி.இராவணன், க.சுகுமாறன், ம.மனோகர்,...

மொழிப்போர் தியாகிகள் நினைவிடங்களில் மரியாதை

மொழிப்போர் தியாகிகள் நினைவிடங்களில் மரியாதை

மொழிப்போர் தியாகிகள் நினைவு நாளான ஜனவரி 25ஆம் தேதி அன்று சென்னை மூலக்கொத்தலத்தில் அமைந்துள்ள மொழிப்போர் தியாகிகள் நடராசன் – தாளமுத்து – தருமாம்பாள் அம்மையார் ஆகியோரின் நினைவு இடங்களில் கழகம் சார்பில் மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், தலைமைக்குழு உறுப்பினர் அய்யனார், காஞ்சிபுரம் மாவட்ட அமைப்பாளர் இரவி பாரதி, வடசென்னை துரை உள்ளிட்டோர் பங்கேற்று மரியாதை செலுத்தினர். பெரியார் முழக்கம் 01.02.2024 இதழ்

கழகத் தோழர் உடலுக்கு அரசு மரியாதை!

கழகத் தோழர் உடலுக்கு அரசு மரியாதை!

சேலம் : கோவில் வெள்ளாரை சேர்ந்த கழகத் தோழர் K. நாகராஜ் 22.01.2024 அன்று சாலை விபத்தில் முடிவெய்தினார். அவரது உடல் உறுப்புகள் குடும்பத்தினரின் ஒப்புதலுடன் தானமாக வழங்கப்பட்டது.  உடலுறுப்பு தானம் செய்வோரை அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. அதன்படி தோழர் நாகராஜின் உடல் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. தோழரின் உடலுக்கு கழகத் தலைமைக்குழு உறுப்பினர் காவை ஈசுவரன், சேலம் மேற்கு மாவட்டச் செயலாளர் கோவிந்தராசு ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இறுதி ஊர்வலத்தில் சேலம் மாவட்ட அமைப்பாளர் அண்ணாதுரை, கொளத்தூர் ஒன்றியப் பொறுப்பாளர் விஜி, நங்கவள்ளி ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணன், சேலம் கிழக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் தங்கதுரை, தங்கமாபுரிப்பட்டினம் ராமச்சந்திரன், நங்கவள்ளி நகர செயலாளர் பிரபாகரன், மூலப்பாதை கவியரசு, கோகுல்ராஜ் ஆகியோர் கலந்துகொண்டனர். வெள்ளார் சுற்றுவட்டாரப் பகுதியில் உடல் உறுப்பு தானம் செய்யப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை, திண்டுக்கல்லில் கலந்துரையாடல் கூட்டங்கள்

சென்னை, திண்டுக்கல்லில் கலந்துரையாடல் கூட்டங்கள்

திருவல்லிக்கேணி : கழக திருவல்லிக்கேணி பகுதிக் கலந்துரையாடல் கூட்டம் 27.01.2024 அன்று இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில்  பகுதிச் செயலாளர் ப.அருண்குமார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நடந்து முடிந்த 24ஆம் ஆண்டு பொங்கல் விழா வரவு – செலவு விபரங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. பின்னர் பகுதி கழக செயல்வீரர்களுக்கு பயிலரங்கம், வருகிற நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தெருமுனைக் கூட்டங்கள் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது. திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 27.01.2024 அன்று மாவட்ட அமைப்பாளர் மருதமூர்த்தி தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழகத் தலைமைக்குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அடுத்தகட்டப் பணிகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தனர். பின்னர் பழனி அ.கலையம்புத்தூர் ஊராட்சி வண்டிவாய்க்காலில் அமைந்துள்ள தந்தை பெரியார் படிப்பகத்தை பார்வையிட்டனர். இதில் மாக்சிம் கார்க்கி, ராஜா, பெரியார், நாச்சிமுத்து, கபாலி, சங்கர், ஆயுதன், உஷாராணி, இம்ரான்...

கழகத் தோழர் நித்தியானந்தம் காலமானார்!

கழகத் தோழர் நித்தியானந்தம் காலமானார்!

கோவை மாவட்டம், பனப்பட்டியை சேர்ந்த கழகத் தோழர் நித்தியானந்தம் (37) 25.01.2024 அன்று உடல்நலக்குறைவால் காலமானார். மறைந்த நித்தியானந்தம் கடந்த 2015ஆம் ஆண்டு தன்னை கழகத்தில் இணைத்துக் கொண்டு தொடர்ந்து பணியாற்றி வந்தார். ஜாதி ஒழிப்பு இயக்கத்தில் இணைந்ததற்காக தனது குடும்பத்தில் இருந்து புறக்கணிக்கப்பட்ட இவர். இரட்டைக் குவளை முறை உள்ளிட்ட தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராக எந்தவித சமரசமின்றி போராடி வந்தார். ஊரின் எதிர்ப்பையும் மீறி கழகப் பரப்புரைக் கூட்டங்களை பனப்பட்டியில் கழகத் தோழர் முருகேசனுடன் இணைந்து நடத்தியவர். தொடர்ந்து தனது நண்பர்களுக்கு தனது சொந்த பணத்தை செலுத்தி புரட்சிப் பெரியார் முழக்கம் இதழை வழங்கி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பெரியார் முழக்கம் 01.02.2024 இதழ்

ஆகம உருட்டு

ஆகம உருட்டு

குலக்கல்வி திட்டத்தை ராஜாஜி திணிக்க முயன்றபோது, வருணாசிரம தர்மத்தை வேரறுக்க பிள்ளையார் பொம்மையை உடைக்கும் போராட்டத்தை அறிவித்தார் பெரியார். 27.05.1953 அன்று திராவிடர் கழகத்தினரால் தமிழ்நாட்டின் பட்டிதொட்டியெங்கும் பிள்ளையார் பொம்மைகள் உடைக்கப்பட்டன. “கடவுள் பொம்மையை உடைக்கிறார்களே” என்று ராஜாஜியிடம் சிலர் கேட்க, “அது ஆகம விதிப்படி வைக்கப்பட்ட சிலை அல்ல, களிமண்ணால் செய்யப்பட்ட பொம்மை” என்றார். ஆனால் சேலத்தில் 1971-இல் மூடநம்பிக்கை ஒழிப்பு மாநாட்டு ஊர்வலத்தில் எடுத்து வரப்பட்டதோ அட்டையால் செய்யப்பட்ட ராமன் படம். அப்போதும் ராஜாஜியிடம் கேட்டார்கள், “அது பரங்கிமலை போன்ற சின்ன விஷயம், இது இமயமலை போன்ற பெரிய விஷயம். இரண்டையும் ஒப்பிடக் கூடாது” என்றாராம் ராஜாஜி. ஆக இடத்திற்கேற்றால் போல் மாற்றிக்கொள்ளும் பார்ப்பன ‘உருட்டு’தான் ஆகமம் என்பதை அப்போதே தெளிவுபடுத்திவிட்டார் ராஜாஜி. பெரியார் முழக்கம் 01.02.2024 இதழ்

சென்னையில் பொதுக்கூட்டத்துடன் தொடங்குகிறது

சென்னையில் பொதுக்கூட்டத்துடன் தொடங்குகிறது

சென்னை மாவட்டக் கழக சார்பில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! 2024 – நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைப் பொதுக்கூட்டம் பிப்ரவரி 10, 2024, மாலை 6 மணிக்கு வேளச்சேரி காந்தி சாலையில் நடைபெறுகிறது. கூட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு, திராவிட முன்னேற்றக் கழக கலை இலக்கியப் பகுத்தறிவுப் பேரவை சென்னை தெற்கு மாவட்டத் துணை அமைப்பாளர் தடா ஓ.சுந்தரம், திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் உமா ஆகியோர் கலந்து கொண்டு விளக்க உரையாற்றவுள்ளனர். திண்டுக்கல் : பழனியில் சர்வாதிகாரத்தை வீழ்த்துவோம்! சமூக ஒற்றுமையைக் காப்போம்! பரப்புரை இயக்கம் பிப்ரவரி 10, 2024, காலை 10 மணிக்கு தொடங்குகிறது. பெரியார் முழக்கம் 08022024 இதழ்

சேலம் மாநாடு: களப்பணிகளில் தோழர்கள் தீவிரம்

சேலம் மாநாடு: களப்பணிகளில் தோழர்கள் தீவிரம்

ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் “இது தமிழ்நாடு! இளம் தலைமுறையின் எச்சரிக்கை” மாநாட்டையொட்டி சேலம் கிழக்கு மாவட்டக் கழகம் சார்பில் மார்ச் 04 ஆம் தேதி கொங்கனாபுரம் பகுதியில் கடைவீதி வசூல் மேற்கொள்ளப்பட்டது. முதல்நாள் வசூல் ரூ.5490/- ஆனது. மாநாட்டுத் துண்டறிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மாநாட்டையொட்டி சுவரெழுத்துப் பணி களையும் சேலம் மாவட்டக் கழகத் தோழர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். கோவை மேட்டுப்பாளையத்தில் மாவட்டத் தலைவர் பா.இராமசந்திரன்  ஏற்பாட்டில் சுவரெழுத்துப் பணிகள் நடைபெறுகிறது. மாநாட்டு நிகழ்ச்சி நிரல் இறுதி செய்யப்பட்டு வருகிறது.  மாநாட்டு நிதி திரட்டலுக்கான நன்கொடை சீட்டுகள் மாவட்டக் கழகங் களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  தோழர்கள் குடும்பத்தோடு திரள ஆயத்தமாகிறார்கள். மாநாட்டின் தலைப்பையும் கருப்பு-சிவப்பு-நீலம் இணைந்து நிற்பதையும் பல்வேறு அமைப்புகள் வரவேற்றன. பெரியார் முழக்கம் 09032023 இதழ்

சேலம் மாநாடு: கழகம் தயாராகிறது!

சேலம் மாநாடு: கழகம் தயாராகிறது!

சேலத்தில் ஏப்ரல் 29, 30 தேதிகளில் கழகம் நடத்தவிருக்கும் இரண்டு நாள் மாநாடு தோழர்களிடம் பெரும் உற்சாகத்தை உருவாக்கியுள்ளது. ‘இது தமிழ்நாடு; இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு’ என்ற தலைப்பு தோழர்களை ஈர்த்துள்ளது. சேலத்தில் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை யில் கூடி மாநாட்டுப் பணிகளை ஆலோசித்தது. 20.02.2023 திங்கள் மாலை 4.00 மணியளவில் கருப்பூர் சக்திவேல் இல்லத்தில் எதிர்வரும் ஏப்ரல் 29, 30 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறும் திராhவிடர் விடுதலைக் கழக மாநில மாநாடு குறித்து ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட கலந்துரை யாடல் கூட்டம் நடைபெற்றது. கலந்துரை யாடல் கூட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களும், பொறுப்பாளர் களும் மாநாடு குறித்தும், மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மற்றும் மாநாட்டினை குறித்து பொதுமக்களிடம் சுவரெழுத்து மற்றும் துண்டறிக்கைகள் வாயிலாக...

9 வது நாளாக திராவிடர் விடுதலைக்கழகத்தின் தொடர்ந்த வெள்ள மீட்புப்பணி

9 வது நாளாக திராவிடர் விடுதலைக்கழகத்தின் தொடர்ந்த வெள்ள மீட்புப்பணி

9 வது நாளாக (10.12.2015) சென்னை திராவிடர் விடுதலைக்கழகத்தின் தொடர்ந்த வெள்ள மீட்புப்பணி ! வெள்ள நிவாரணப்பணியில் தொடர்ந்து 9 வது நாளாக பணி செய்த திராவிடர் விடுதலைக் கழக தோழர்கள் 10.12.2015 அன்று நிவாரண பணிகள் மேற்கொண்ட இடங்கள் : குன்றத்தூர்,பெருங்குடி,கல்குடி நிவாரண பொருட்களுடன் 1500 பேருக்கு உணவும் வழங்கப்பட்டது. தோழர்களிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட வெள்ள நிவாரணப்பொருட்கள் விவரம் : ‘கோபி ‘ : ஆயில் -850 கிலோ , மைதா – 1 மூட்டை, அரிசி – 10 மூட்டை, அரிசி – 5 மூட்டை, நாப்கின் – 100 பீஸ், மருந்து – 1 பெட்டி, பாய் – 1 கட்டு, பிஸ்கட் – 2 பெட்டி, ஈரோடு : பெட்சீட் – 150, துணி – 1 பண்டல்.

பெரியார் பிறந்த நாள் விழா மற்றும்  தெரு முனை பிரச்சாரம்

பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் தெரு முனை பிரச்சாரம்

தந்தை பெரியாரின் 137-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு ஈரோடு வடக்கு மாவட்ட கழகத்தின் சார்பாக ஒவ்வொரு ஒன்றிய பகுதிகளிலும் கொடியேற்றுவிழா மற்றும் எங்கள் தலைமுறைக்கு ஜாதி வேண்டாம்! எங்கள் இளைய தலைமுறைக்கு வேலை வேண்டும் பிரச்சார பயணம் நடத்த திட்டமிடப்பட்டது. ஆதன் அடிப்படையில் கடந்த 22-09-15 அன்று கோபி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொளப்பலூர் பகுதியில் பெரியார் பிறந்த நாள் விழா மற்றும் தெருமுனை பிரச்சாரம் துவங்கியது. சிறுவலூர் அருகில் உள்ள எலந்தக்காடு பகுதியில் அமைந்துள்ள கழக கொடி கம்பத்தில் கழக கொடியினை ஏற்றிய பின் துவங்கிய பயணம் சிறுவலூர் பகுதியை அடைந்தது. அங்கு காவை இளவரசன் அவர்களின் மந்திரமல்ல தந்திரம் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியின் இடையே தோழர் காவை இளவரசன் அவர்கள் சாமியார்கள் லிங்கம் எடுப்பது, திருநீறு வரவழைப்பது எல்லாம் மந்திர வேலை அல்ல! எல்லாம் மக்களை ஏமாற்றும் வகையில் செய்யும் தந்திரம் தான் என பல்வேறு செயதிகளை கூறிக்...

தோழர் சம்சுதீன் ஹீரா அவர்கள் எழுதிய ”மெளனத்தின் சாட்சியங்கள்” நூல் அறிமுகவிழா !

தோழர் சம்சுதீன் ஹீரா அவர்கள் எழுதிய ”மெளனத்தின் சாட்சியங்கள்” நூல் அறிமுகவிழா ! நாள் : 03.10.2015 சனிக்கிழமை மாலை 6 மணி. இடம் : நல்லாயன் சமூக கூடம், வின்சென்ட் ரோடு, கோட்டை ,கோவை. சிறப்புரையாளர்கள் : தோழர் கொளத்தூர் மணி,தலைவர் , திராவிடர் விடுதலைக் கழகம், தோழர் ஜிவாஹிருல்லாஹ், மனித நேய மக்கள் கட்சி, தோழர் ரபீக் அகமது,SDPI தோழர் இரா.அதியமான்,ஆதித்தமிழர் பேரவை.

‘ஈழம் அமையும்’ நூல் வெளியீட்டு நிகழ்வில் விடுதலை இராசேந்திரன் உரை அமெரிக்க-இந்திய துரோகங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?

ஊடகவியலாளர்கள் அய்யநாதன் எழுதிய ‘ஈழம் அமையும்’ நூல் வெளியீட்டு நிகழ்வும் கருத்தரங்கமும் அக்.2, 2015 அன்று சென்னை ‘கவிக்கோ’ அரங்கில் காலை முதல் இரவு வரை ஒரு நாள் நிகழ்வாக நடந்தது. காலை அமர்வில் அந்நூலை பழ. நெடுமாறன் வெளியிட, வைகோ பெற்றுக் கொண்டார். வழக்கறிஞர் பானுமதி, டி.எஸ்.எஸ். மணி, பேராசிரியர் இராமு மணிவண்ணன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் அறிமுகவுரை நிகழ்த்தினர். இரண்டாம் கட்ட அமர்வாக பிற்பகல் 3 மணியளவில் “அய்.நா. மனித உரிமை மன்றத் தீர்மானம்: தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா?” என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி எம்.ஜி. தேவசகாயம் தலைமை யில் நடந்தது. நிகழ்வில் பங்கேற்று, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரை: எனது நீண்டகால நண்பர் அய்யநாதன் மிகச் சிறந்த பத்திரிகையாளர். ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் உந்தப்பட்ட அவர், தனது பத்திரிகையாளர் பணியையும் உதறிவிட்டு, செயல்களத்துக்கு வந்தவர். தமிழ் ஈழப்...

இடஒதுக்கீடு கொள்கை : மறு பரிசீலனை தேவையா? சங்பரிவாரங்கள் எழுப்பும் வாதங்களுக்கு மறுப்பு

இடஒதுக்கீட்டுக் கொள்கையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று ஆங்கில ஊடகங்கள் ஒரே குரலில் கூக்குரலிட்டு வரும் நிலையில் அதற்கு மறுப்பாக இடஒதுக்கீட்டுக் கொள்கை தொடர வேண்டும் என்று வலியுறுத்தி கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில நாளேட்டுக்கு (செப். 30, 2015) எழுதிய கட்டுரை இது. இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் அதன் இலக்கை எட்டுவதற்கு முன்பே ஒழிக்க வேண்டும் என்று கருத்துகளை உருவாக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்றும், பல ஆண்டுகாலமாக பின்பற்றப்பட்டு வரும் இடஒதுக்கீடு கொள்கைதான் தமிழகத்தை இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக உயர்த்தியிருக்கிறது என்றும் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. குறி பார்க்கும் முன்பே துப்பாக்கிக் குண்டு முந்திக் கொண்டு பாய்வது போன்றதே இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள் கருத்து உள்ளது என்பதுபோல்,“anti-quota can jumps the gun” என்று ‘டைம்ஸ்ஆப் இந்தியா நாளேடு இக்கட்டுரைக்கு தலைப்பிட்டுள்ளது. விடுதலை இராசேந்திரன் கட்டுரையின் தமிழ் வடிவம்: “எங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும்; இல்லையேல் இடஒதுக்கீடு எவருக்குமே இருக்கக்...

அரசு அலுவலகங்களில் ஆயுத பூஜை போடாதே குமரி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன் கழகம் ஆர்ப்பாட்டம்

13.9.2015 அன்று நடைபெற்ற கன்னியாகுமரி திராவிடர் விடுதலைக் கழக மாவட்டக் குழுக் கூட்டத்தில் அரசு அலுவலகங்களிலுள்ள கற்பனை கடவுளர் படங்களையும், வழிபாட்டுத் தலங்களையும் அகற்றவும், ஆயுத பூஜைப் போன்ற மதப் பண்டிகைகளை கொண்டாடவும், தடைவிதித்த அரசாணையையும், உயர்நீதிமன்றத் தீர்ப்பையும் அமுல்படுத்தக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, 25.9.15 வெள்ளிக் கிழமை காலை 10 மணிக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகர்கோவில் மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சதா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தோழர்கள் தமிழ் மதி, நீதி அரசர், சூசையப்பா, சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்ட இராம. இளங்கோவன் ஆகியோர் போராட்டத்தை விளக்கிப் பேசினர். ‘அரசு அலுவலகங்களை பூஜை மடங்களாக்காதே’ என்று முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நெல்லை மாவட்ட கழகம் சார்பாக மதியழகன், சாந்தா கலந்து கொண்டனர். குமரேசன் தலைமையில் ஆதித் தமிழர் பேரவையினரும், ஜான் விக்டர்தா° தலைமையில் ஆதி திராவிடர் முன்னேற்றக் கழகத் தோழர்களும் கலந்து கொண்டனர்....

பெரியார் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் – கிருஷ்ணகிரி இராயக்கோட்டை

கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் பெரியார் பிறந்தநாள் கூட்டம் இராயக்கோட்டை பேருந்து நிலையத்தில் 29.09.2015 மாலை 5 மணிக்கு நடைபெற்றது பொதுக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாக தோழர் மதிமாறன் கலந்துகொண்டு உரையாற்றினார் தோழர் கொளத்தூர் மணி சிறப்பரை ஆற்றினார்

கொளத்தூர் மணி குழந்தைக்கு சூட்டிய ‘திப்பு சுல்தான்’ பெயர்

தந்தை பெரியார் பிறந்தநாள் விழா ஒருங்கிணைப்புக் குழு சார்பில் காஞ்சிபுரத்தில் 17.09.2015 அன்று காஞ்சி மக்கள் மன்றத்தை சார்ந்த தோழர் பாலமுருகன் -உமா இணையரின் ஆண் குழந்தைக்கு பெயர் சூட்ட கழகத் தலைவர் கொளத்தூர்மணியிடம் கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் ‘திப்பு சுல்தான்’ என்று பெயர் சூட்டினார். அதைத் தொடர்ந்து அவர் பேசுகையில் குறிப்பிட்டதாவது: “மனு சாஸ்திரம் சொல்லுகிறது பார்ப் பனர்களுக்கு மங்கலமான பெயர்களை யும், சத்ரியர்களுக்கு வீரமான பெயர் களையும், வைசியர்களுக்கு பணத்தை, தனத்தை குறிக்கிற பெயர்களையும் சூத்திரர்களுக்கு இழிவான பெயர்களை யும் வைக்கச் சொல்லி சொல்லுகிறது. காலம் காலமாக குப்பனாய், பிச்சை யாய், மண்ணாங்கட்டியாய் வாழ்ந்த வருக்கு மனுசாஸ்திரம் தடைகளுக்கு மாறாக பின்னாளில் பெரியார் புரட்சிகரப் பெயர்களை வைத்தார். புராணத்தின் பெயரால் ராமனை தூக்கி பிடிக்கிற இந்த சமுதாயத்தில் இயக்க தோழர்களுக்கு இராவணன் என்று பெயர் வைத்தார். பார்ப்பனியத் திற்கு எதிராக நின்ற புத்தரின் பெயரை சித்தார்த்தன் என்று பெயர்...

‘ஜாதியற்ற சமூகத்தை உருவாக்குவதுதான் பெரியாரின் லட்சிய நோக்கமாக இருந்தது’ தந்தை பெரியார் 137வது பிறந்தநாள் கருத்தரங்கில் மன்னார்குடியில் தலித் முரசு ஆசிரியர் புனித பாண்டியன் பேச்சு

20.09.2015 அன்று திராவிடர் விடுதலைக்கழகம், அம்பேத்கர்-பெரியார் வாசகர் வட்டத்தின் சார்பில் தந்தை பெரியாரின் 137வது பிறந்தநாள் விழா கருத்தரங்கம் மற்றும் தஞ்சை பசு.கௌதமன் எழுதிய இந்து மதத்தில் அம்பேத்கரும் பெரியாரும் என்ற புத்தகத்தின் நூல் திறனாய்வு மன்னார்குடி சிட்டி ஹாலில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திராவிடர் விடுதலைக்கழக திருவாரூர் மாவட்ட செயலாளர் இரா.காளிதாசு தலைமை வகித்தார். நீடாமங்கலம் ஒன்றிய அமைப்பாளர் செந்தமிழன் வரவேற்றார். தஞ்சை மாவட்ட அமைப்பாளர் சித.திருவேங்கடம், முன்னாள் அமைப்பாளர் பாரி, புதுக்கோட்டை மாவட்ட அமைப்பாளர் பூபதி கார்த்திகேயன், தமிழ்நாடு அறிவியல் மன்ற மாவட்ட அமைப்பாளர் முரளி சங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துவக்கத்தில், இந்துத்துவ மதவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பகுதிதறிவு எழுத்தாளர்கள் நரேந்திரதபோல்கர், பேராசிரியர் கல்பர்கி ஆகியோரின் படத்தினை திறந்து வைத்து அம்பேத்கர் பெரியார் வாசகர் வட்ட செயலாளர் சேரன்குளம் செந்தில்குமார், திருவாரூர் நகர் மன்ற உறுப்பினர் வரதராஜன் ஆகியோர் உரையாற்றினர். அதனை தொடர்ந்த தஞ்சை பசுகௌதமன் எழுதிய இந்து...

பெரியார் பிறந்தநாள் விழா – மதுரை

மதுரை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் செப்டம்பர் 17 தந்தை பெரியார் பிறந்த நாளன்று மாலை 3 மணி அளவில் மதுரை தல்லாகுளம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து கொள்கை முழக்கம் எழுப்பப்பட்டது . மதுரை மாவட்டத் தலைவர் திலீபன் செந்தில்,மாவட்ட செயலாளர் மணிகண்டன் மா.பா,மாவட்ட அமைப்பாளர் மாப்பிள்ளை சாமி,மற்றும் கழக தோழர்கள் கலந்து கொண்டனர்

கொட்டும் மழையில் ஜாதிக்கெதிரான பொதுக்கூட்டம்

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் பேருந்து நிலையம் அருகில் “எங்கள் தலைமுறைக்கு ஜாதிவேண்டாம்” “இளையதலைமுறைக்கு வேலைவேண்டும்” என்கிற தலைப்பில் 27-09-2015,ஞாயிறன்று மாலை 5.00 மணிக்கு நடைபெற்றது. தோழர் துரை.தாமோதரன் அவர்களின்”மந்திரமா-தந்திரமா”நிகழ்ச்சியுடன் கூட்டம் தொடங்கியது. தொடர்ந்து திராவிடர் கலைக்குழுவின் நாடகங்கள் அரங்கேறியது. நமது கலைக்குழுவின் பகுத்தறிவு நாடகங்கள் பகுதியில் நல்ல வரவேற்பைப்பெற்றன. கூட்டத்தற்கு நகரசெயலாளர் தோழர் வெங்கட் தலைமையேற்றார். மாவட்டத்தலைவர் சாமிநாநன்,மாவட்ட செயலாளர் சரவணன்,மாவட்ட அமைப்பாளர் வைரவேல்,மாவட்ட பொருளாளர் முத்துப்பாண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழகத்தலைவர் தோழர் கொளத்தூர்மணி அவர்கள் நீண்டதொரு சிறப்புரையை நிகழ்த்தினார்கள். இறுதியாக தோழர் ப.செல்வம் நன்றியுரை கூற கூட்டம் நிறைவுற்றது. கொட்டும் மழையிலும் மக்கள் இறுதிவரை கூட்டத்தை கேட்டது குறிப்பிடத்தக்கது

பெரியார் பிறந்தநாள் விழா – காஞ்சிபுரம் மாவட்டம்

தந்தை பெரியார் 137வது பிறந்தநாள் விழா காஞ்சிபுரம் மாவட்டம் கூடுவாஞ்சேரியில் தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து சிறப்பாக கொண்டாடப்பட்டது மாவட்ட தலைவர் செங்குட்டுவன் தலைமையில், செயலாளர் தினேஷ்குமார், அமைப்பாளர் தெள்ளமிழ்து மற்றும் திராவிட விடுதலைக் கழக தோழர்கள், தந்தை பெரியாரின் சமுதாயப் பணிகளை விளக்கி பேருந்து நிலையம், அங்காடிகளில் துண்டறிக்கை விநியோகித்தனர். பொதுமக்கள் ஆர்வமுடன் துண்டறிக்கை படித்து தோழர்களிடம் விளக்கம் கேட்டனர். பின்பு மாலை தந்தை பெரியார் பிறந்தநாள் கூட்டமைப்பின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பிறந்தநாள் பேரணியில் கலந்துகொண்டனர்.

ஈ வெ ரா பெரியார் – வாழ்வும் பணியும் நூல் வெளியீட்டு விழா

          தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு எஸ். இராமகிருஷ்ணனின் ஈவெரா பெரியார் வாழ்வும் பணியும் நூல் வெளியீட்டு விழா பாரதி புத்தக அரங்கில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் முதல் படியை பெற்று கொண்டார்

பெரியார் விழா : காஞ்சி மாநகர் குலுங்கியது

செப்.17 அன்று காஞ்சியில் பெரியார் பிறந்த நாள் ஒருங்கிணைப்புக் குழு, பெரியார் பிறந்த நாள் விழா பேரணியையும், பொதுக் கூட்டத்தையும் எழுச்சியுடன் நடத்தியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி சிறப்புரையாற்றினார். காஞ்சி மாநகரையே கலக்கிய பேரணி-பொதுக் கூட்டக் காட்சிகள்.

பெரியார் பிறந்தநாள் விழா கோபி

கோபிசெட்டிபாளையம் தந்தை பெரியார் பிறந்தநாள்விழா…. தமிழர் கூட்டமைப்பின் சார்பில் பேரணி………. கோபிசெட்டிபாளையம் தமிழர் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கட்சியினர் கலந்துகொண்ட ஊர்வலம் தந்தை பெரியாரின் பிறந்தநாளையெட்டி நடைபெற்றது… ஈரோடுமாவட்டம், கோபிசெட்டிபாளையம், தந்தை பெரியார் பிறந்தநாள் விழாவை ஒவ்வொரு வருடமும் வெகு சிறப்பாக தமிழர் கூட்டமைப்பின் சார்பில் கொண்டாடிவருகின்றனர். இந்தாண்டு தந்தை பெரியாரின் 137வது பிறந்தநாள் விழாவை திராவிடர் கழகம், தந்தை பெரியார் திராவிடர் கழகம், திராவிடர் விடுதலைக்கழகம், திராவிட முன்னேற்ற கழகம், மதிமுக, வி.சி.க, நாம்தமிழர் கட்சி உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்பினர்கள் ஒன்றிணைந்து தமிழர் கூட்டமைப்பின் சார்பில் பேரணியாக வந்து பெரியார்திடலில் அமைந்துள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புக்கள் வழங்கப்பட்டது. பேரணி ல.கள்ளிப்பட்டியில் தொடங்கி கச்சேரிமேடு, எம்.ஜி.ஆர்.சிலை, தினசரி மார்க்கெட் வீதி, கடைவீதி, பேருந்து நிலையம் வழியாக பெரியார் சிலை வந்ததடைந்தது. பேரணியின் போது பெரியாரின் கொள்கைகள் அடங்கிய...

தர்மபுரி மாவட்ட பெரியார் பிறந்தநாள் விழா

  தந்தை பெரியார் 137வது பிறந்தநாள் விழா 17.09.2015 தர்மபுரி மாவட்டத்தில் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது. மாவட்ட தலைவர் வேணுகோபால், செயலாளர் பரமசிவம், அமைப்பாளர் சந்தோஷ்குமார் மற்றும் நகர தலைவர் நாகராசன் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து எழுச்சியுடன் பிறந்தநாளை கொண்டாடினார்கள்

0

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையத்தில் கழக கொடியேற்றம், பெயர் பலகை திறப்பு, கிளை திறப்பு.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் வீரபாண்டி பிரிவில் ,20.09.2015 அன்று தந்தை பெரியாரின் 137- வது பிறந்த நாள் விழா கோவை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் கோவை புறநகர் மாவட்ட வீரபாண்டி பிரிவில் வெள்ளமடை மோகன் முன்னிலையில் காளிபாளையம் கணேஷ் மற்றும் வீரபாண்டி பாபு முன்னிலையிலும் நடைபெற்றது. கழக பெயர் பலகையை கழக மாநில பொருளாளர் தோழர் துரைசாமி அவர்கள் திறந்து வைத்தர் மாநில அறிவியல் மன்ற அமைப்பாளர் தோழர் சிவகாமி அவர்கள் கழக கொடியேற்றி வைத்தார். இந்நிகழ்வில் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் திருப்பூர் மாவட்ட செயலாளர் தோழர் முகில்ராசு அறிவியல் கோவை மாநகர மாவட்டத் தலைவர் தோழர் திருமணி மாவட்ட செயளாளர் தோழர் நிர்மல்குமார் புறநகர் சார்பாக புறநகர் மாவட்டத் தலைவர்த் தோழர் ராமசந்திரன் சூலூர் ஒன்றியப் பொருப்பாளர் தோழர் பன்னீர்செல்வம் மாநகரப் பெருளாளர் தோழர் கிருட்டிணன்,சமூக நீதி இயக்கம். சார்பாக தோழர் வெள்ளமடை நாகராசு திவிக தோழர்கள்...

தலித் – சிறுபான்மையினரின் நிலங்கள் மோசடி கும்பல் ஆக்கிரமிப்பைக் கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம் 0

தலித் – சிறுபான்மையினரின் நிலங்கள் மோசடி கும்பல் ஆக்கிரமிப்பைக் கண்டித்து திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் ராயபுரம், அணைமேடு பகுதியில் சுமார் 80 ஆண்டுகளுக்கு மேலாக தலித் மக்கள், சிறுபான்மை மக்கள் மற்றும் சில பிற்படுத்தப்பட்ட மக்கள் வசிக்கும் குடியிருப்பு பகுதியை நிலமோசடி கும்பல் போலி ஆவணங்கள் தயார் செய்து குண்டர்களை வைத்து மிரட்டி அபகரிக்க நினைப்பதை கண்டித்து திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு 14.09.2015 அன்று காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். கழகத் தலைவர் தன் கண்டன உரையின் போது, இந்த இடத்தை 80 ஆண்டுகளுக்கு மேல் வாழ்விடமாக கொண்டு வாழ்ந்து வரும் அம் மக்களை போலி ஆவணங்களை தயார் செய்து நிலமோசடி கும்பல் அபகரிக்க நினைப்பதையும், காவல்துறையும் கூட அதற்கு உடந்தையாக இருப்பதையும் வன்மையாக கண்டிக்கிறோம். மேலும் அந்த இடத்திற்கு உண்மையான உரிமையாளர்கள் யாரேனும் இருந்தால் அவர்களை கண்டுபிடித்து அவர்களிடமிருந்து இந்த நிலத்தை வாங்கி 80 ஆண்டுகளுக்கு மேல் அங்கு வாழும்...

பெரியார் 137 பிறந்தநாள் விழா செப்டம்பர் 17

  சங்குகள் நிறமும் மாறி சந்தனம் மணமும் மாறி செங்கதிர் திசையும் மாறி தெங்குநீர் குளிரும் மாறி திங்கள்தன் நிலையும் மாறி தெவிட்டமுது இனிப்பும் மாறி சங்கமும் மாறினாலும் தந்தைசொல் வாழும் நாளும். – பாவலர் பாலசுந்தரம்

0

சேஷசமுத்திரம் ஜாதிவெறியர்களை கண்டித்து ஆர்ப்பாட்டம்

சேஷசமுத்திரம் கிராமத்தில் தலித் மக்கள் மீது நடந்த ஜாதிவெறித் தாக்குதலை கண்டித்து திராவிடர் விடுதலைக் கழகத்தின் விழுப்புரம் மாவட்ட சார்பில் 24.08.2014 மாலை 3.00 மணிக்கு சங்கராபுரம் பேருந்து நிலையத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்தில் ஜாதி வெறியர்களுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பியும் காவல்துறையை நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தப்பட்டது. 50க்கும் அதிகமான தோழர்களை காவல்துறை கைது செய்து மாலை விடுவித்தது.

0

சமகால வாழ்வியலும் ஜாதிய வண்கொடுமைகளும் – கருத்தரங்கம்

23.08.2015 மாலை 5.30 மணியளவில் திராவிட விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் தமிழ்நாடு மாணவர் கழகம் சார்பாக “சமகால வாழ்வியலும் ஜாதிய வண்கொடுமைகளும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்களில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த மாணவர்கள் கலந்துகொண்டனர். சிறப்புரை தோழர் மதிமாறன் மற்றும் கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் பல்வேறு கருத்துரைகளை பதிவு செய்தனர். இரவு 9 மணிக்கு நிகழ்ச்சி முடிந்தது கருத்தரங்கின் காணொளி விரைவில் பதிவேற்றப்படும்

0

தூத்துக்குடி மாவட்டக் கலந்துரையாடல்

20-8-2015 அன்று மாலை 4-00 மணிக்கு, தூத்துக்குடி மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், கழகப் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது. முன்னதாக தோழர் க.மதன் படத்திறப்பு விழா நடைபெற்றது. கழக கழகப் பொருளாளர் திருப்பூர் துரைசாமி, அமைப்புச் செயலாளர் ஈரோடு இரத்தினசாமி, பரப்புரை செயலாளர் பால் பிரபாகரன் மற்றும் இயக்க தோழர்கள் கழக பணிகளை மேற்கொண்டு செல்ல ஆலோசனை வழங்கினர்.

0

விருதுநகர் மாவட்டக் கலந்துரையாடல்

20-8-2015 அன்று காலை 11-00 மணிக்கு, விருதுநகர் , பாண்டியன் நகரில் உள்ள தோழர் கணேசமூர்த்தியின் இல்லத்தில், மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது.

0

புதுச்சேரி பெரியாரியல் பயிற்சி வகுப்பு

16-8-2015 அன்று காலை முதல் மாலை வரை புதுச்சேரி மாநில திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பாக ‘ பெரியாரியல் பயிற்சி வகுப்பு, அரியாங்குப்பத்தை அடுத்த அலுத்துவேலியில் உள்ள தோழர் பழனிராசா தோட்டத்தின் இயற்கை எழில் கொஞ்சும்  தென்னந்தோப்பில்  நடந்தது. அறிமுக உரையை ஆற்றிய மாநிலக் கழகத் தலைவர் லோகு அய்யப்பன் மாநிலக் கழகம் எடுத்த முடிவை ஒட்டி மாதந்தோறும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ள பெரியாரியல் பயிற்சி வகுப்பின் தொடக்க நிகழ்வே இது என்று குறிப்பிட்டார். கழகத் தோழர்கள் யார் எந்தவகையான கேள்விகளை  கேட்டாலும் உடனே பதிலளிக்கும் அளவுக்கு கொள்கைத் தெளிவு உள்ளவர்களாக வளர்த்தெடுக்கும் முயற்சியே இது என்றார். தொடர்ந்து கழகத் தலைவர் கொளத்தூர் மணி, “பெரியார் என்றொரு மனிதர்” என்ற தலைப்பில் பெரியாரின் இளமைக் காலம்யற்சி முதற்கொண்டு அவர் பெரும் மானுடநேயராக, ஜாதி ஒழிப்பு, பெண்ணூரிமைப் போராளியாகப் பரிணமித்ததற்கான பின்புலம் போன்றவற்றை விளக்கி 11-00 மணி முதல் நண்பகல் 2-00 மணிவரை விளக்கினார். மதிய...

0

ஜாதி வெறியன் யுவராஜை உடனே கைது செய்ய தமிழக அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் திருச்செங்கோடு 17082015

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியைச் சேர்ந்தவர் பொறியாளர் கோகுல்ராஜ். நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் ஒத்தகடை பகுதியைச் சேர்ந்தவர் சுவாதி. இருவரும் ஒரே கல்லூரியில் படித்து பழகியுள்ளனர். கடந்த 50 நாட்களுக்கு முன்னர் பொறியாளர் கோகுல்ராஜூம், சுவாதியும் திருச்செங்கோட்டில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் மலைக்கோவிலுக்கு இருவரும் வந்த போது அவர்களை ஜாதியின் பெயரால் பிரிக்கும் நோக்கத்தில் தீரன்சின்னமலை கவுண்டர் பேரவை என்கிற ஜாதி அமைப்பின் நிறுவனர் யுவராஜ் என்பவர் தலைமையில் 20 க்கு மேற்பட்ட ரவுடிகள் கோகுல்ராஜ் சுவாதி ஆகியோரைப் பிடித்து அவர்களின் ஜாதிகளைப் பற்றி விசாரித்த பின்னர் சுவாதியை மட்டும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர் என்கிற காரணத்தினால் ஜாதிய வெறியோடு பொறியாளர் கோகுல் ராஜை கடத்தி சென்று அவரை கொலை செய்து தலையை துண்டித்து பள்ளி பாளையம் ரயில் மார்க்கத்தில் தொட்டிபாளையம் என்ற பகுதியில் இரயில்வே தண்டவாளத்தில் தூக்கி எறிந்துவிட்டுச் சென்றனர். தமிழக முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்திய இந்த...

0

விழுப்புரம் மாவட்டக் கலந்துரையாடல்

விழுப்புரம் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம், 14-8-2015 அன்று நண்பகல் 12-00 மணிக்கு, சங்கராபுரம், வாசவி அரங்கில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையிலும் நடைபெற்றது.  

0

கடலூர் மாவட்டக் கலந்துரையாடல்

13-8-2015 அன்று மாலை 6-00 மணிக்கு, கடலூர் மாவட்டக் கலந்துரையாடல் கூட்டம், கம்மாபுரம், திருச்சிக்காரர் மண்டபத்தில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையிலும், கழகப்  பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னினையிலும் நடைபெற்றது.

0

மூத்த பெரியாரியர் ஆர்.பி.எஸ்.ஸ்டாலின் சந்திப்பு

13-8-2015 அன்று நண்பகல் 2-00 மணிக்கு, மூத்த பெரியாரியரும், கீழ்வெண்மணி கோபாலகிருஷ்ண நாயுடு கொலை வழக்கில் கைதான 11 திராவிடர்க் கழகத் தோழர்களுக்கான வழக்கை முன்னின்று நடத்தியவரும், குடிதாங்கி நிகழ்வில் மையப் புள்ளியாய் நின்று இயங்கியவரும் ஆன ஆர்.பி.எஸ்.ஸ்டாலின் உடல் நலிவுற்றிருக்கிற செய்தி அறிந்து, கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழக முன்னணித் தோழரும்,  எழுத்தாளருமான தஞ்சை பசு. கவுதமன் ஆகியோர் கும்பகோனத்தில், அம்பேத்கர் வளாகம், தந்தை பெரியார் இல்லத்தில்  சந்தித்தனர். அவரிடம் கீழ்வெண்மணி கொலை, குடிதாங்கி நிகழ்வு போன்றவற்றில் உள்ள அய்யங்களைக் கேட்டறிந்ததோடு, நிகழ்கால அரசியல் குறித்தும் இரண்டு மணி நேரம் உரையாடிவிட்டு விடைபெற்றனர்.