Category: பெரியார் முழக்கம் 2023

ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பில் 1 லட்சம் மாநாட்டு நிதி!

ஈரோடு வடக்கு மாவட்டம் சார்பில் 1 லட்சம் மாநாட்டு நிதி!

முதல் தவணையாக கழகத் தலைவரிடம் வழங்கினார்கள் ஈரோடு வடக்கு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக வருகின்ற  ஏப்ரல் 29, 30 சேலத்தில் நடைபெறும் இது தமிழ்நாடு! இளைய தலைமுறை யின் எச்சரிக்கை மாநாட்டிற்காக கழகத் தோழர்கள் ஈரோடு வடக்கு மாவட்டத் திற்கு உட்பட்ட கோபி, கொளப்பலூர், காசிபாளையம், அளுக்குளி, அந்தியூர், குருவரெட்டியூர், பவானி ஆகிய பகுதிகளில் கழக ஆதராவாளர்களிடம் துண்டறிக்கை அளித்தல் மற்றும் நன்கொடை திரட்டும் பணிகளில் சிறப்பாக செயல்பட்டனர்.  மாநில வெளியீட்டு செயலாளர் இராம. இளங்கோவன் தலைமையில் மாவட்ட தலைவர் நாத்திகசோதி, மாவட்ட செயலாளர் எலத்தூர் செல்வக்குமார் ஆகியோரின் ஒருங்கிணைப்பில் இரமேசு, அழகிரி, கிருஷ்ணமூர்த்தி, இராவணன், அருளானந்தம், வேணுகோபால், வீரகார்த்திக், சுந்தரம், வினோத், வேலுச்சாமி, கருப்பணன், சுப்பிரமணியம், ரகுநாதன், மூர்த்தி, நிவாஸ் ஆகியோர் கலந்து கொண்டு நன்கொடை திரட்டும் பணியில் இணைந்து செயல்பட்டனர். அவ்வாறு நன்கொடையாக பெறப்பட்ட மாநாட்டு நிதியை முதல் தவணையாக ரூ. 1,00,000 (ஒரு லட்சம்...

ட இது தமிழ் நாடு; இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு  ட கருத்துச் செறிவு அரங்கங்கள்; கலை நிகழ்ச்சிகள் அடர்த்தியான நிகழ்வுகளுடன் சேலம் மாநாடு

ட இது தமிழ் நாடு; இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு ட கருத்துச் செறிவு அரங்கங்கள்; கலை நிகழ்ச்சிகள் அடர்த்தியான நிகழ்வுகளுடன் சேலம் மாநாடு

ஏப்ரல் 29,30 – சேலம் : திராவிடர் விடுதலைக் கழகத்தின் 2 நாள் மாநில மாநாடு. 29.04.2023 – பெரியார் அரங்கம் : காலை 9.00 மணி – கழகக் கொடியேற்றம் – நிர்மல்குமார் மாநகர அமைப்பாளர், கோவை 9.30 – புதுவை “விடுதலைக் குரல்” கலைக்குழு இசை நிகழ்ச்சி. தொடக்க உரை : DNV செந்தில்குமார் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர், தி.மு.க. 10.30  – கருத்தரங்கம் – கருப்பு சிவப்பு நீலம் இணையும் புள்ளிகள் தலைமை : இராம இளங்கோவன் (வெளியீட்டு செயலாளர்) மாநில உரிமைகளில் : மருத்துவர் எழிலன் (ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர்) சனாதன எதிர்ப்பில் : பேராசிரியர் ஜெயராமன் (தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்) கார்ப்பரேட் சுரண்டலில் : மதுக்கூர் இராமலிங்கம் (தீக்கதிர் ஆசிரியர்) பெண்ணியலில் : முனைவர் சுந்தரவள்ளி (த.மு.எ.க.ச.) இட ஒதுக்கீட்டில் : கு.அன்பு தனசேகர் (கழக தலைமைக் குழு உறுப்பினர் போலி அறிவியல்...

கழகத் தோழர் திலீபன் மீது வன்முறைக் கும்பல் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

கழகத் தோழர் திலீபன் மீது வன்முறைக் கும்பல் தாக்குதலைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர்திலீபன் (பழனி) மீது கொடும் தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வேலூர் மாவட்ட செயலாளர் சிவா தலைமையில் பாணாவரம் காவல்நிலைய முற்றுகை போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, மக்கள் அதிகாரம், மக்கள் தமிழகம் கட்சி, ஊர் பொது மக்கள் தோழைமை இயக்கத் தோழர்கள் 100 மேற்பட்டோர் கலந்து கொண்டனர். போராட்டத்தின் முடிவில் தோழர்கள் கைது செய்யப்பட்டு மண்டபத்தில் சிறைவைக்கப்பட்டனர். நிகழ்வில் தலைமை குழு உறுப்பினர் அய்யனார், சென்னை மாவட்ட செயலாளர் உமாபதி, மக்கள் தமிழகம் கட்சி விஸ்வநாதன், மக்கள் குடியரசு இயக்கம் ஜான் மண்டேலா, திவிக பேரணாம்பட்டு நகர செயலாளர் தோழர்கள் ச.பார்த்திபன், மற்றும் மகிழவன், இரண்யா, அன்பழகன், ராஜேஷ், மணி, அருண், சூரியா, குமார் ஆகியோர் கலந்து கொண்டனர். பெரியார் முழக்கம் 20042023 இதழ்    

மாநாட்டு நன்கொடையை அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம்

மாநாட்டு நன்கொடையை அனுப்ப விரும்புவோர் கீழ்கண்ட வங்கிக் கணக்கிற்கு அனுப்பலாம்

வங்கிக் கணக்கு PURATCHI PERIYAR MUZHAKAM Karur Vysya Bank, Adyar Branch Current Acct No.: 1257115000002041 IFSC : KVBL0001257 ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ கரூர் வைஸ்யா வங்கி, அடையாறு கிளை ‘கரண்ட்’ அக்கவுண்ட் எண் :: 1257115000002041 IFSC : KVBL0001257 கூகுள் பே எண் : 9444115133   பெரியார் முழக்கம் 20042023 இதழ்

தலையங்கம் வடநாட்டுத் தொழிலாளர் பிரச்சினையில் பா.ஜ.க.வின் அற்ப அரசியல்

தலையங்கம் வடநாட்டுத் தொழிலாளர் பிரச்சினையில் பா.ஜ.க.வின் அற்ப அரசியல்

தமிழ்நாட்டில் வேலை தேடி வரும் வடமாநிலத்தவர்கள் படுகொலைக்கு உள்ளாகிறார்கள்; திட்டமிட்டு தாக்கப்படுகிறார்கள் என்று சமூக வலைதளங்களில் வதந்தியைப் பரப்பினார்கள். இதனால் அச்சமடைந்த வடமாநில தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பத் தொடங்கினர். வதந்தியைத் திட்டமிட்டு பரப்பியவர்கள் பா.ஜ.க.வினர். தமிழக முதல்வர் உடனடியாகத் தலையிட்டு பீகார் முதல்வர் நிதிஷ்குமாரிடம் பேசி தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட நிலை ஏதும் இல்லை என்று விளக்கி வடமாநிலத் தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்புகளை வழங்கி வருகிறது என்று விளக்கியுள்ளார். வதந்தியைப் பரப்பிய பா.ஜ.க.வைச் சார்ந்த பிரசாந்த் உமாரோ, சுபம் சுக்ளா, யுவராஜ் சிங்ராஜ்புட் ஆகியோர் மீதும் வடமாநில இந்தி பத்திரிகையான ‘தைனிக்’ ஆசிரியர் பாஸ்கர் மற்றும் ‘தன்வீர் போஸ்ட்’ பத்திரிகை ஆசிரியரான முகம்மது தன்வீர் ஆகியோர் மீதும் தமிழ்நாடு காவல்துறை வழக்குகளைப் பதிவு செய்துள்ளது. இவர்களைக் கைது செய்ய வடமாநிலங்களுக்கு தமிழகக் காவல்துறை தனிப் பிரிவு விரைந்துள்ளது. தமிழ்நாட்டில் நீண்டகாலமாக வடநாட்டு தொழிலாளர்கள் மீது தி.மு.க. வெறுப்பை விதைத்து வருகிறது என்று...

அரசியல் இலாபத்துக்காக நடத்தப்பட்டதே ‘புல்வாமா’ தாக்குதல்

அரசியல் இலாபத்துக்காக நடத்தப்பட்டதே ‘புல்வாமா’ தாக்குதல்

2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு பிப்ரவரி 14ஆம் தேதி ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் இந்திய ராணுவத்தினர் மீது தீவிரவாதிகளின் தற்கொலைப் படை தாக்குதல் ஒன்றை நடத்தியது. இந்த தாக்குதல் அப்போது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. 40 இந்திய ராணுவத்தினர் வீர மரணம் அடைந்தனர். பாஜக இதையே தன்னுடைய தேர்தல் பிரச்சாரமாகவும் மாற்றிக் கொண்டது. நாட்டின் பாதுகாப்பிற்கு ஆபத்து வந்துவிட்டது, பாஜக மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்ற பிரச்சாரத்தை அவர்கள் முடுக்கி விட்டார்கள். இது குறித்து அப்போது ஜம்மு காஷ்மீர் மாநில ஆளுநராக இருந்த சத்யபால் மாலிக் இரண்டு நாட்களுக்கு முன்பு “கூhந றுசைந” இணையதளத்திற்காக கரண் தாப்பருக்கு ஒரு பேட்டியை அளித்திருக்கிறார். அந்த பேட்டியில் அவர் தெரிவித்திருக்க கூடிய கருத்துக்கள் அதிர்ச்சி தரக்கூடியவை, இது அரசியல் நோக்கத்திற்காக நடத்தப்பட்ட தாக்குதல் என்பதை அவரும் உறுதிப்படுத்தியிருக்கிறார். இராணுவத்தினர் ஜம்முவில்...

கல்வி, வேலை, சமூகத் துறைகளில் திராவிட இயக்கச் சாதனை ரம்யா

கல்வி, வேலை, சமூகத் துறைகளில் திராவிட இயக்கச் சாதனை ரம்யா

12.03.2023 அன்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற “அன்னை மணியம்மையார் பிறந்தநாள் மற்றும் மகளிர் தின பெண்கள் சந்திப்பு” நிகழ்ச்சியில் நிகழ்த்திய உரையின் சென்ற இதழ்த் தொடர்ச்சி. கல்வி, வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டுப் பெண்கள், மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் எவ்வளவு வேகமாக முன்னோக்கி ஓடிக் கொண்டிருக்கிறார்கள் என்பதே, திராவிட மாடலின் சாதனைக்கு சாட்சியாக இருக்கிறது. தமிழ்நாட்டில் எழுத்தறிவு இல்லாத இளம்பெண்கள் 15 முதல் 24 வயது வரை 2.93ரூ இருக்கிறார்கள். (2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்) இதில் கேரளா மட்டும்தான் நம்மை விட முன்னேறி இருக்கிறது. அங்கு எழுத்தறிவு இல்லாத இளம்பெண்கள் 0.09ரூ மட்டும்தான். ஆனால், பீகாரில் 36.2ரூ, ராஜஸ்தானில் 28.7ரூ, ஜார்கண்டில் 28.64ரூ, உத்திரப் பிரதேசத்தில் 24.22ரூ, மத்திய பிரதேசத்தில் 22.39ரூ, குஜராத்தில் 15ரூ என வட இந்தியாவின் பல இந்தி பேசும் மாநிலங்களில் இரட்டை இலக்கங்களில்தான் நிலைமை இருக்கிறது. தமிழ்நாட்டில் பெண்கள் எழுத்தறிவு அதிகம் பெற்றிருப்பதற்கு...

ட அமைச்சர் உதயநிதி – அய். பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர்களிடம் நேரில் மாநாட்டு அழைப்பிதழ்   ட நன்கொடை திரட்டும் பணியில் தோழர்கள் தீவிரம்  பேரெழுச்சியுடன் சேலம் மாநாட்டுப் பணிகள்

ட அமைச்சர் உதயநிதி – அய். பெரியசாமி, சட்டமன்ற உறுப்பினர்களிடம் நேரில் மாநாட்டு அழைப்பிதழ் ட நன்கொடை திரட்டும் பணியில் தோழர்கள் தீவிரம் பேரெழுச்சியுடன் சேலம் மாநாட்டுப் பணிகள்

சென்னை : சேலத்தில் வருகிற 29,30 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இது தமிழ்நாடு! இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு! அழைப்பிதழை, மாநாட்டில் சிறப்புரையாற்ற உள்ள மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினை கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா.உமாபதி உள்ளிட்ட கழகத் தோழர்கள் நேரில் சந்தித்து வழங்கினார்கள். சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியம், சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், நாடாளுமன்ற உறுப்பினரும், விசிக தலைவருமான தொல்.திருமாவளவன், விசிக துணைப் பொதுச்செயலாளர் வன்னிஅரசு, மக்கள் உரிமை பாதுகாப்பு மையம் மருதையன், தபெதிக பிரச்சார செயலாளர் சீனி.விடுதலை அரசு, திராவிட இயக்கத் தமிழர் பேரவை துணைப் பொதுச்செயலாளர் சிங்கராயர், கருஞ்சட்டைப் பதிப்பக இயக்குனர் பெல் ராஜன், யூடியூபர்கள் மைனர் வீரமணி, மகிழ்நன் உள்ளிட்ட தோழர்களுக்கு மாநாட்டு அழைப்பிதழை கழகத் தோழர்கள் வழங்கினார்கள். மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் த.வேலுவை சந்தித்து மாநாட்டு...

சேலம் மாநாடு: களப்பணிகளில் தோழர்கள் தீவிரம்

சேலம் மாநாடு: களப்பணிகளில் தோழர்கள் தீவிரம்

ஏப்ரல் 29, 30 ஆகிய தேதிகளில் சேலத்தில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் “இது தமிழ்நாடு! இளம் தலைமுறையின் எச்சரிக்கை” மாநாட்டையொட்டி சேலம் கிழக்கு மாவட்டக் கழகம் சார்பில் மார்ச் 04 ஆம் தேதி கொங்கனாபுரம் பகுதியில் கடைவீதி வசூல் மேற்கொள்ளப்பட்டது. முதல்நாள் வசூல் ரூ.5490/- ஆனது. மாநாட்டுத் துண்டறிக்கை பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மாநாட்டையொட்டி சுவரெழுத்துப் பணி களையும் சேலம் மாவட்டக் கழகத் தோழர்கள் தீவிரப்படுத்தியுள்ளனர். கோவை மேட்டுப்பாளையத்தில் மாவட்டத் தலைவர் பா.இராமசந்திரன்  ஏற்பாட்டில் சுவரெழுத்துப் பணிகள் நடைபெறுகிறது. மாநாட்டு நிகழ்ச்சி நிரல் இறுதி செய்யப்பட்டு வருகிறது.  மாநாட்டு நிதி திரட்டலுக்கான நன்கொடை சீட்டுகள் மாவட்டக் கழகங் களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.  தோழர்கள் குடும்பத்தோடு திரள ஆயத்தமாகிறார்கள். மாநாட்டின் தலைப்பையும் கருப்பு-சிவப்பு-நீலம் இணைந்து நிற்பதையும் பல்வேறு அமைப்புகள் வரவேற்றன. பெரியார் முழக்கம் 09032023 இதழ்

கலிபோர்னியா மாநிலத்தில் ஜாதிப் பாகுபாடுகளுக்குத் தடை

கலிபோர்னியா மாநிலத்தில் ஜாதிப் பாகுபாடுகளுக்குத் தடை

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலம், ஜாதிப் பாகுபாடுகளைத் தடை செய்யும் மசோதாவைக் கொண்டு வந்துள்ளது. ஏற்கனவே வாஷிங்டன் மாநிலத்திலுள்ள சீட்டில் நகரசபை இதேபோல ஒரு சட்டத்தை நிறைவேற்றி யுள்ளது. இப்போது அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலமே இப்படி ஒரு சட்டத்தைக் கொண்டு வந்திருக்கிறது. மாநில சட்டமன்ற செனட்டர் ஆயிஷா வகாப் என்ற முஸ்லிம் பெண், இந்த மசோதாவை அறிமுகம் செய்துள்ளார். இவர் ஆப்கானிஸ்தானத்தைப் பிறப்பிடமாகக் கொண்டு அமெரிக்காவின் குடியுரிமைப் பெற்று சட்டமன்ற உறுப்பினராகத் தேர்வு பெற்றுள்ளார். இது சமூகநீதி மனித உரிமைப் பிரச்சினை என்று அவர் கூறியுள்ளார். இந்த மசோதாவுக்கு அமெரிக்க இந்துக்கள் கூட்டமைப்பு போன்ற பார்ப்பன சனாதன அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. தகவல்: ‘டைம்ஸ் ஆப் இந்தியா’, மார்ச் 24, 2023 பெரியார் முழக்கம் 13042023 இதழ்

வைக்கம் போராட்டம்: சில வரலாற்றுக் குறிப்புகள் சனாதனத்தின் முகத்திரையைக் கிழிக்க சேலத்தில் கூடுவோம்; வாரீர்!

வைக்கம் போராட்டம்: சில வரலாற்றுக் குறிப்புகள் சனாதனத்தின் முகத்திரையைக் கிழிக்க சேலத்தில் கூடுவோம்; வாரீர்!

வைக்கத்தில் ‘முறை ஜெபம்’ என்ற சடங்கு நிகழும்போது, தீண்டப்படாதவர்கள் கோயிலைச் சுற்றி எந்த வீதிகளிலும் நடப்பதற்கு அனுமதிப்பது இல்லை. டி.கே. மாதவன் என்ற ஈழவ சமுதாய வழக்கறிஞர் நீதிமன்றம் போவதற்கான பாதை அடைக்கப்பட்டதால்தான் பிரச்சினை தீவிரமாகியது. அது என்ன முறை ஜெபம்? 6 ஆண்டுகளுக்கு ஒரு முறை நம்பூதிரி பார்ப்பனர்களுக்காக மட்டும் திருவிதாங்கூர் அரசர் நடத்தும் ஒரு சடங்குதான் ‘முறை ஜெபம்’. 150 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு மன்னர் ‘பிராமணன்’ ஒருவனைக் கொன்றதற்காக நடத்தப்படும் பிராயச்சித்த சடங்கு. 60 நாட்கள் இந்த ஜபம் நடக்கும். அனைத்து நம்பூதிரிகளும் பங்கேற்பார்கள். ஒவ்வொரு நம்பூதிரிக்கும் ஏதாவது வசதி குறைவுகள் இருக்கிறதா என்பதை அரசர் நேரில் கேட்டு அறிந்து குறைகளை உடனடியாகத் தீர்த்து வைப்பார். அவர்கள் தேவைகள் முழுமையாக நிறைவேற்றப்படும். 25 ஆண்டுகாலம் இந்த சடங்கை நடத்த வேண்டும் என்று தொடங்கியபோது முடிவு செய்யப்பட்டது. பார்ப்பனர்கள் விடுவார்களா? 25 ஆண்டுகாலத்துக்குப் பிறகும் இந்த சடங்கைத் தொடர்ந்து...

மீண்டும் ‘கருவறைத் தீண்டாமை’யை நிலைநாட்டத் துடிப்பு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தில் ‘ஓட்டை’ போட்டுவிட்டது நீதிமன்றம்

மீண்டும் ‘கருவறைத் தீண்டாமை’யை நிலைநாட்டத் துடிப்பு அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தில் ‘ஓட்டை’ போட்டுவிட்டது நீதிமன்றம்

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகரா கலாம் என்று திராவிட மாடல் அரசு கொண்டு வந்த சமூக புரட்சித் திட்டத்தில் மாபெரும் ஓட்டையைப் போட்டிருக்கிறது மதுரை உயர்நீதிமன்ற கிளை. மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் திருவரங்கம் குமர வயலூர் கோயிலில் நியமிக்கப்பட்ட பார்ப்பனரல்லாத அர்ச்சகர்களான எஸ்.பிரபு, எஸ்.ஜெயபால் ஆகியோரது நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட்டிருக்கிறார். அதற்கு அவர் கூறுகிற காரணம், “இந்தக் கோயில் காமிகா ஆகமத்தின் கீழ் வருகிறது. இந்தப் பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் அந்த ஆகமக் கோயிலில் பூஜை செய்ய முடியாது. ஆதி சிவாச்சாரியார், ஆதி சைவர்கள் மட்டும் தான் இங்கு பூஜை செய்ய உரிமை உண்டு” என்று அவர் கூறியிருக்கிறார். பார்ப்பனரல்லாத அர்ச்சகர்கள் தங்களை ‘அகஸ்தியர் குலம்’ என்று கூறியபோது அதற்கு சான்று கேட்டார் நீதிபதி. காமிகா ஆகமபடி ஆதி சிவாச்சாரியார்கள் தான் பூசை செய்ய வேண்டும் என்றால் அவர்கள் சிவாச்சாரியார் குலம் என்பதற்கு சான்று கேட்டீர்களா என்று வழக்கறிஞர்...

நங்கவள்ளி ஒன்றியத்தில் பகுத்தறிவுப் பரப்புரை

நங்கவள்ளி ஒன்றியத்தில் பகுத்தறிவுப் பரப்புரை

திராவிடர் விடுதலைக் கழக சேலம் மாவட்டம்,நங்கவள்ளி ஒன்றியத்தின் சார்பில் 22.02.2023 புதன்கிழமை கிராமப்புற பகுத்தறிவு பிரச்சார தெருமுனை கூட்டங்கள் நடைபெற்றன முதல் தெருமுனை கூட்டம் பக்க நாடு சந்தை அருகில் மாலை 5.00 மணிக்கு நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. காவை இளவரசனின் மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்வில் புதியவன், மாவட்ட அமைப்பாளர் நங்கவள்ளி சீ.அன்பு, கழக தலைமைக் குழு உறுப்பினர் சக்திவேல் ஆகியோர் கருத்துரை யாற்றினார்கள். இப்பகுதியில் பெருமளவில் மக்கள் ஆர்வத்துடன் பிரச்சாரத்தை உற்று கவனித்ததோடு உண்டியல் வசூல் 840 ரூபாய் வழங்கி ஆதரவளித்தனர். முடிவில் சிவக்குமார் நன்றியுரையாற்றினார். இரண்டாவது நிகழ்வு ஆடையூர் குடியிருப்பு பகுதியில் 7.00 மணி அளவில் நடைபெற்றது. மிகச் சிறப்பாக நடைபெற்ற இந்த கிராமப்புற பகுத்தறிவு பிரச்சார தெருமுனை கூட்டத்திற்கு நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இக் கூட்டத்தில் புதியவன் மற்றும் வழக்கறிஞர் வித்யாபதி...

விஞ்ஞானிகள் கடும் கண்டனம்: மருத்துவ சோதிட வகுப்பைத் தொடங்குகிறது மருத்துவக் கவுன்சில்

விஞ்ஞானிகள் கடும் கண்டனம்: மருத்துவ சோதிட வகுப்பைத் தொடங்குகிறது மருத்துவக் கவுன்சில்

ஆயுர்வேத மருத்துவப் படிப்பில் ‘மருத்துவ சோதிடம்’ என்ற புதிய வகுப்பை இந்திய மருத்துவக் கட்டமைப்புக்கான தேசிய கவுன்சில் உருவாக்கியுள்ளது. இதற்கு ‘அறிவியல் கழகம்; தடைகள் தகர்ப்பு’ என்று விஞ்ஞானிகள் – அறிவியலாளர்களைக் கொண்ட அமைப்பு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. வானத்திலுள்ள கிரகங்கள் மனித உடல்கள் மீதும் உணவியல் மீதும் தாக்கத்தை உருவாக்குகிறது என்பது அறிவியலுக்கு எதிரான மூடநம்பிக்கை. இந்த மூட நம்பிக்கைகளை அறிவியல் பாடத்தில் சேர்ப்பது கண்டனத்துக்குரியது என்று அந்த அமைப்பு அ றிக்கை வெளியிட்டுள்ளது. இந்த வகுப்புக்கு இதுவரை 1000 மாணவர்கள் பதிவு செய்துள்ளனர். மருத்துவ அறிவியல் பயிலும் மாணவர்களை மூடநம்பிக்கைகளில் ஆழ்த்தும் இந்த வகுப்பு, இந்திய கல்வி முறையை மதிப்பிழக்கச் செய்து நாட்டுக்கு கேடு விளைவிப்பதாகி விடும். இந்த கேலிக் கூத்து நாடகங்களை குடிமக்கள் வேடிக்கைப் பார்க்கக் கூடாது; எதிர்க்க வேண்டும் என்று அறிவியல் கழகம் தனது கண்டன அறிக்கையில் கூறியுள்ளது. பெரியார் முழக்கம் 02032023 இதழ்

இதுதான் தமிழ்நாடு; இதுதான் பெரியார் மண்!

இதுதான் தமிழ்நாடு; இதுதான் பெரியார் மண்!

மத்திய பிரதேச மாநிலத்திலிருந்து ஆர்.எஸ்.எஸ். குடும்பத்தைச் சார்ந்த ஒரு பட்டதாரி பெண்,  தன்னை நரபலி தரப்போகிறார்கள் என தனது குடும்பத்தினரிடம் பயந்து பாதுகாப்பு கேட்டு தமிழ்நாடு வந்துள்ளார். மூத்த வழக்கறிஞர் எஸ்.துரைசாமி, அவரை உயர்நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர் முன்னிலையில் ஒப்படைத்து, நீதிபதி உரிய பாதுகாப்பு வழங்குமாறு அரசு வழக்கறிஞருக்கு உத்தரவிட்டுள்ளார். அரசு வழக்கறிஞரும் பாதுகாப்பை உறுதி செய்துள்ளார். தமிழ்நாடு தான் தன்னைப் பாதுகாக்கும் என்று தமிழ்நாடு வந்ததாக அந்தப் பெண் கூறி உள்ளார். ஆர்.எஸ்.எஸ் குடும்பம், சொந்த மகளை நரபலி தருகிறது; பெரியார் மண் அவரை காப்பாற்றுகிறது. இதுதான் தமிழ்நாடு; இதுதான் பெரியார் மண். சங்கிகளே என்ன சொல்லப் போகிறீர்கள்? பெரியார் முழக்கம் 02032023 இதழ்

கோவை கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேச்சு

கோவை கருத்தரங்கில் கொளத்தூர் மணி பேச்சு

இலண்டனில் இறைச்சி சாப்பிட்ட வ.வே.சு. அய்யர் தான் சேரன்மாதேவி குருகுலத்தில் வர்ணத் தீண்டாமையை அமுல்படுத்தினார் ¨          செங்கல்பட்டு மாநாட்டுக்கு உலக பகுத்தறிவாளர்கள் அமைப்புகளை எடுத்துக்காட்டி மூடநம்பிக்கைகளை ஒழிக்க பெண்களுடன் வரவேண்டும் என்று அழைப்பு விடுத்தார் பெரியார். ¨          திருமணத்துக்கு தாலி என்ற திட்டத்துக்கு மாற்றாக கல்லூரி படிக்க வரும் பெண்களுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் தமிழக முதல்வரின் திட்டம் செங்கல்பட்டு சுயமரியாதை மாநாட்டுக் கோரிக்கையின் விரிவாக்கம் தான். பிப்ரவரி 18, 2023 அன்று கோவை மாநகரக் கழகம் நடத்திய “1929 செங்கல்பட்டு முதல் சுயமரியாதை இயக்க மாநாடும், தமிழ் நாட்டு அரசியலும் கருத்தரங்க”த்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆற்றிய உரை. சுயமரியாதை இயக்கம் 1929ஆம் ஆண்டு பிப்ரவரி 17, 18 ஆகிய தேதிகளில் நடந்தேறிய மாநாடு, முதல்நாள் மாநாடு என்பது பெரிய ஊர்வலம் வந்து சேர்வதற்கு நீண்ட நேரமானது. தலைமையுரை வரவேற்புரை யுடன் முதல்நாள் நிகழ்வு நிறைவு பெற்றது. அடுத்தநாள்...

மதுரையில் மணிமேகலை – மா.பா.மணி அமுதன் சுயமரியாதை இணையேற்பு விழா

மதுரையில் மணிமேகலை – மா.பா.மணி அமுதன் சுயமரியாதை இணையேற்பு விழா

திராவிடர் விடுதலைக் கழகத்தின் மதுரை மாவட்டச் செய லாளர் மா.பா மணியமுதன் – மணிமேகலை ஆகியோரின் சுயமரியாதை இணையேற்பு விழா 26.02.23 ஞாயிறு அன்று மதுரை மேலூர் ரஹ்மா திருமண மண்டபத்தில் காலை 10.30 மணியளவில் துவங்கி நடைபெற்றது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையேற்று திருமணத்தை நடத்தி வைத்தார். இணையேற்பு விழாவிற்கு ஆதித் தமிழர் பேரவையின் தலைவர் இரா.அதியமான் முன்னிலை வகித்தார். விழாவின் துவக்க நிகழ்வாக வானவில் இன உணர்வுப் பாடலைப் பாடினர். மணமக்களை வாழ்த்தி அண்ணா திராவிட மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் பசும்பொன் பாண்டியன், தமிழ் தேச மக்கள் முன்னணியின் தலைவர் மீ.த.பாண்டியன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச் செயலாளர்கள் வன்னி அரசு, கனியமுதன், தமிழ்மண் தன்னுரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் த. ஜெயராமன், கழகத்தின் பரப்புரைச் செயலாளர் பால் பிரபாகரன், கழகப் பொருளாளர் துரைசாமி ஆகியோர் பேசினர். தோழர்களின் வாழ்த்துரைகளுக்கு பின்பு கழகத் தலைவர்...

பெரியார் வெற்றி பெறுகிறார்!

பெரியார் வெற்றி பெறுகிறார்!

ராய்ப்பூரில் கூடிய காங்கிரஸ் கட்சி மாநாடு தன்னுடைய கட்சி விதிகளில் பல முக்கிய திருத்தங்களை மேற்கொண்டுள்ளது. பெரியார் காங்கிரஸ் கட்சியில் இருந்து ஏன் வெளியேறினார், வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்று அனைத்து சமூகத்தினரையும் உள்ளடக்கிய சமூக நீதிக் கொள்கையை காங்கிரஸ் கட்சி ஏற்க வேண்டும் என்று மாநாடுகளில் தீர்மானம் கொண்டு வந்து காங்கிரஸ் கட்சியின் பார்ப்பன தலைவர்கள் அந்த தீர்மானத்தை தோற்கடித்ததன் காரணமாக பெரியார் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகினார். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய பெரியார் கட்சியில் இருந்தபோது கதர் மூட்டைகளை தூக்கி கொண்டு ஊர் ஊராக விற்பனை செய்தவர் தான், கள்ளுண்ணாமை என்ற கொள்கையை ஆதரித்து தன் தோட்டத்திலிருந்த தென்னை மரங்களை எல்லாம் வெட்டி வீழ்த்தியவர் தான் பெரியார், கள்ளுக்கடை மறியல் போராட்டத்தை ஈரோட்டில் இந்தியாவே வியக்கும் அளவுக்கு நடத்தி முடித்தவர் தான் பெரியார், ஆனால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியதற்குப் பிறகு அதன் காந்தியக் கொள்கைகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்தினார்.  கதர்...

பெண்களின் சுயமரியாதையை நிலைநாட்டும் திராவிட மாடல் (அன்றும்-இன்றும்)

பெண்களின் சுயமரியாதையை நிலைநாட்டும் திராவிட மாடல் (அன்றும்-இன்றும்)

12.03.2023 அன்று திராவிடர் விடுதலைக் கழகத் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற “அன்னை மணியம்மையார் பிறந்தநாள் மற்றும் மகளிர் தின பெண்கள் சந்திப்பு” நிகழ்ச்சியில் நிகழ்த்திய உரை. பெண்களின் சுயமரியாதை என்பது எதில் அடங்கியிருக்கிறது என்பதில் இருந்துதான் தலைப்பை ஆராய வேண்டியிருக்கிறது. கல்வி, வேலை வாய்ப்பு அதன்மூலம் சமூகத்தில் பெண்கள் அடையும் வளர்ச்சியில்தான் அவர்களின் சுயமரியாதை அடங்கியிருக்கிறது. பெண்கள் வளர்ச்சி இல்லாமல் ஒட்டுமொத்த சமூகத்தின் வளர்ச்சி இல்லை. அதை திராவிடர் இயக்கம் நன்கு புரிந்து வைத்திருந்தது. பெண் என்றால் எப்படி இருக்க வேண்டுமென்று இந்துமதம் நிறைய கட்டுபாடுகள் வைத்திருக்கிறது. இந்து மதம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், ஜாதிய கட்டமைப்பு பலமாக இருக்க வேண்டும். ஜாதிய கட்டமைப்பு பலமாக இருக்க வேண்டும் என்றால் பெண்களை அடக்கி, ஒடுக்கி வைத்திருக்க வேண்டும். ஏனென்றால் ஜாதி கவுரவம் பெண்களிடத்தில்தான் இருக்கிறது. பெண்களுடைய கற்பில்தான் குடும்ப கவுரவம், ஜாதிப் புனிதம் இருக்கிறது. ஒரு பெண் திருமணம் ஆகும்வரை...

தலையங்கம் மனு சாஸ்திரத்துக்கு சியாட்டில்  தந்த மரண அடி

தலையங்கம் மனு சாஸ்திரத்துக்கு சியாட்டில் தந்த மரண அடி

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு சென்ற இந்து சனாதனவாதிகள் தங்களின் ஜாதியையும் உடன் சுமந்து போய் ஜாதியமைப்பே இல்லாத நாட்டில் ஜாதியத்தையும் அதன் பாகுபாடுகளையும் திணித்து விட்டார்கள். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, மேலை நாட்டுக் கலாச்சாரம் – நமது சனாதன கலாசாரத்தை சீரழித்து விட்டது என்கிறார். உண்மையில் சனாதன கலாச்சாரம் தான் மேலை நாடுகளின் சமத்துவப் பண்பாட்டை சீர்குலைத்து வருகிறது. அதன் எதிரொலிதான் அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்திலுள்ள சியாட்டில் நகராட்சி ஜாதிப் பாகுபாடுகளைத் தடை செய்து தீர்மானம் நிறைவேற்றியதாகும். அமெரிக்காவுக்குக் குடியேறிய அந்நாட்டு குடிமக்களாகிய தெற்கு ஆசியர்களிடையே ‘இந்து சனாதனம்’ திணித்த ஜாதியப் பாகுபாடுகளால் பணியிடங்களிலும் குடியேறிய மக்களிடமும் பாகுபாடுகளைக் கொண்ட ‘மனுவாதம்’ தலைவிரித்தாடத் தொடங்கியது. நவீன தொழில்நுட்பங்களுடன் இயங்கும் தொழில் நிறுவனங்களிலும் அமெரிக்காவின் மிகப் பெரிய தொழில் நுட்பப் பூங்கா இயங்கும் சிலிகான் பள்ளத்தாக்கிலும் பணியிடங்களில் பாகுபாடுகள் காட்டப்படுகின்றன. இந்தப் பூங்காவில் மிகப் பெரிய தொழிலதிபராகக் கருதப்படும் சிஸ்கோ என்பவர், தொழிலாளர்கள்...

களப்பணி: செயல்வீரர்களுக்கு கழகத் தலைவர் பாராட்டு

களப்பணி: செயல்வீரர்களுக்கு கழகத் தலைவர் பாராட்டு

கழகம் நடத்தும் ஏப்.29, 30இல் “இளம் தலைமுறையின் எச்சரிக்கை” மாநாட்டிற்கான களப் பணியில் சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கும் சேலம் மாவட்ட கழகத் தோழர்களுக்கு கழகத் தலைவர் பாராட்டுதல்களை தெரிவித்து பயனாடை அணிவித்தார். கழகத் தலைவரின் ஆலோசனைப்படி சேலம் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் மாநாட்டிற்கான ஆதரவு திரட்டுதல் மற்றும் நிதி வசூலுக்காக நங்கவள்ளி அன்பு, இராஜேந்திரன் தலைமையில் சேலம் மேற்கு குழுவும், நங்கவள்ளி கிருஷ்ணன், இளம்பிள்ளை தங்கதுரை தலைமையில் சேலம் கிழக்கு குழுவும் அமைக்கப்பட்டு மாவட்டத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் துண்டறிக்கை வழங்குவது மற்றும் நிதிதிரட்டுவது ஆகியவற்றில் தோழர்கள்  தொய்வின்றி கடுமையான வெயிலையும் பொருட்படுத்தாமல் மிகச் சிறப்பாக களப்பணியாற்றி வந்ததை நாள்தோறும் கவனித்து வந்த கழகத் தலைவர், தோழர்களைப் பாராட்டும் விதமாக நிகழ்வு ஒன்றை மாவட்டக் கழகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யக் கேட்டுக்கொண்டார் அதன்படி மேட்டூர் கழக நகரத் தலைவர் செ. மார்ட்டின் உணவு ஏற்பாட்டுக்கான பொறுப்பை ஏற்றுக் கொண்டார். கொளத்தூர் உக்கம்பருத்திக்காடு கழகத் தோழர்கள்...

வைக்கம் : சில வரலாற்றுக் குறிப்புகள் காங்கிரஸ் பார்ப்பனர்களுக்கு ஒரு நீதி; பெரியாருக்கு ஒரு நீதி

வைக்கம் : சில வரலாற்றுக் குறிப்புகள் காங்கிரஸ் பார்ப்பனர்களுக்கு ஒரு நீதி; பெரியாருக்கு ஒரு நீதி

வைக்கம் போராட்டத்தில் பெரியார் சிறைச் சாலைகளையும் அடக்குமுறைகளையும் சந்தித்தார். அதே நேரத்தில் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த காங்கிரஸ் பார்ப்பனர்கள் மிகுந்த மரியாதையுடன் நடத்தப்பட்டனர். வைக்கம் போராட்டத்தைப் பார்வையிட வந்த காங்கிரஸ் தலைவர் சீனிவாச அய்யங்கார் வைக்கம் திவான் வீரராகவ அய்யங்கார் வீட்டில் தங்கினார். மற்றொரு காங்கிரஸ் தலைவர் எஸ்.வி. வெங்கட்ரமண அய்யங்கார், காவல்துறை ஆணையர் அனுப்பிய காரைப் பயன்படுத்தினார். தீண்டாமையை ஆதரித்த வைதீகர்களுடன் சேர்ந்து விருந்து உண்டார். வைக்கம் போராட்டத்தில் மன்னர் மரணமடைந்த வுடன் மகாராணி அதிகாரத்துக்கு வந்தவுடன் போராட்டத்தின் கோரிக்கைகளை ஏற்க முன் வந்தார். அப்போது திவான் பெரியாரோடு நாங்கள் பேச விரும்பவில்லை என்று கூறிவிட்டார். காரணம் பெரியார், திருவாங்கூர் சமஸ்தானத் துக்கும் வைதீகர்களுக்கும் எதிராக சமரசமின்றி போராடியது தான். இந்த நிலையில் ராஜாஜியை திவான் அழைத்து காந்தியாரோடு சமரசம் பேச ஏற்பாடு செய்யுமாறு கூறுகிறார். வைக்கம் போராட்டத்தில் பெரியார் பங்கேற்பதையே விரும்பாத ராஜாஜி, திவான் வேண்டுகோளை ஏற்று காந்தியாரோடு...

தலையங்கம் நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் மீது நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் வரவேண்டும்

தலையங்கம் நீதிபதி ஜி.ஆர். சாமிநாதன் மீது நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் வரவேண்டும்

மதுரை உயர்நீதிமன்ற கிளை நீதிபதியாக இருக்கிற ஜி.ஆர். சாமிநாதன் அரசியல் சட்டத்தை எதிர்த்தும், மதவாதக் கொள்கையை ஆதரித்தும் பகிரங்கமாக பேசத் தொடங்கி இருக்கிறார். மகர சடகோபன் என்பவர் எழுதிய “திருப்பாவையில் நிர்வாக மேலாண்மை” என்ற நூல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்திருக்கிறது. அந்த மேடையில் எச்.ராஜா, ரங்கராஜ் பாண்டே ஆகியோரும் கலந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களோடு மேடையை பகிர்ந்து கொண்ட உயர்நீதிமன்ற நீதிபதி ஜி.ஆர்.சாமிநாதன் ஆர்.எஸ்.எஸ். கருத்தை அப்படியே எதிரொலித்திருக்கிறார். இந்தியா இந்துக்கள் நாடாக இருக்கும் வரைத்தான் இங்கு மதச்சார்பின்மை நீடிக்க முடியும் என்று ஆர்.எஸ்.எஸ். கூறுகிறது. ஜி.ஆர்.சாமிநாதன் இதே கருத்தை பாரதிய சம்பிரதாயத்தை நாம் காப்பாற்றுகிற வரையில் தான் அரசியல் சட்டமே இங்கு இருக்கும் என்று கூறுகிறார். பாரதிய சம்பிரதாயம் என்றால் என்ன? அது பார்ப்பனிய சம்பிரதாயம். இந்திய சம்பிரதாயம் என்ற வார்த்தையைக் கூட அவர்கள் பயன்படுத்த தயாராக இல்லை. ஆர்.எஸ்.எஸ். பயன்படுத்தும் ‘பாரதிய’ என்ற சொற்றொடரைத் தான் இவரும் பயன்படுத்துகிறார்....

கரைபுரளும் உற்சாகம்; விளிம்புநிலை மக்களின் எளிய நன்கொடைகள் முழு வீச்சில் மாநாட்டுப் பணிகள்

கரைபுரளும் உற்சாகம்; விளிம்புநிலை மக்களின் எளிய நன்கொடைகள் முழு வீச்சில் மாநாட்டுப் பணிகள்

ஏப். 29, 30 தேதிகளில் கழக மாநாட்டுப் பணிகளில் கழகச் செயல் வீரர்கள் முழு வீச்சில் களத்தில் இறங்கியுள்ளனர். கோவை : கோவை மாவட்டக் கழகத்தினர் ஏப்ரல் 8-ஆம் தேதி மாலை 5 மணியளவில் வ.உ.சி மைதானத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மாநகராட்சி மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிச்செல்வன், மண்டலக்குழுத் தலைவர் கதிர்வேல், மாநகராட்சி கல்விக் குழுத் தலைவர் நா.மாலதி, கோவை தெற்கு மாவட்டச் செயலாளர் தளபதி முருகேசன், வடக்கு மாவட்டச் செயலாளர் தொ.ஆ.ரவி, வடவள்ளி சண்முகசுந்தரம் உள்ளிட்ட திமுக நிர்வாகிகளை சந்தித்து மாநாட்டு அழைப்பிதழை வழங்கினார்கள். கலந்து கொண்டோர்: தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர்செல்வம், நிர்மல் குமார், கிருட்டிணன், வெங்கட், மாதவன் சங்கர், துளசி, நிலா. ஏப்ரல் 7-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோவை காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் துண்டறிக்கை பரப்புரை நடைபெற்றது. பொள்ளாச்சி : கழக மாநாட்டு விளக்க தெருமுனைக்...

கழக ஏட்டுக்கு புதிய கணினியை நன்கொடையாக வழங்கினார் பெரியாரிஸ்ட் அசோக்குமார்

கழக ஏட்டுக்கு புதிய கணினியை நன்கொடையாக வழங்கினார் பெரியாரிஸ்ட் அசோக்குமார்

‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழுக்காக தொழில் முனைவரும் பெரியாரியலாளருமான கோவை அசோக்குமார், புதிய மடிகணினி (லேப் டாப்) கருவியை வழங்கி யுள்ளார். கழக சார்பில் தோழருக்கு நன்றி தெரிவிக்கிறோம். பெரியார் முழக்கம் 02032023 இதழ்

சென்னை மாவட்டக் கழகத்துக்கு திருவல்லிக்கேணி பகுதி தோழர்கள் ‘ஸ்கார்பியோ’ கார் பரிசளிப்பு

சென்னை மாவட்டக் கழகத்துக்கு திருவல்லிக்கேணி பகுதி தோழர்கள் ‘ஸ்கார்பியோ’ கார் பரிசளிப்பு

சென்னை மாவட்டம் திருவல்லிக்கேணி பகுதி கழகத் தோழர்கள் மாவட்டக் கழகப் பயன்பாட்டுக்கு ஸ்கார்பியோ கார் ஒன்றை வாங்கி (2009ஆம் ஆண்டு மாடல்) கழகத்துக்கு அளித்துள்ளனர். சென்னை மாவட்டக் கழகச் செயலாளர் இரா. உமாபதியிடம் அவரது பிறந்த நாளான பிப். 17 அன்று இராயப்பேட்டை பெரியார் படிப்பகத்தில் தலைமைக் கழகச் செயலாளர் தபசி. குமரன், உமாபதியிடம் வழங்கினார். கழகப் பணிகளுக்கு இந்த கார் பயன்படும். தனது பிறந்த நாளையொட்டி தோழர்கள் வழங்கிய ரூ.2500/- நன்கொடையை கழக ஏட்டுக்கு பொதுச் செயலாளரிடம் வழங்கினார் இரா. உமாபதி. பெரியார் முழக்கம் 02032023 இதழ்  

சேலம் மாநாடு: கழகம் தயாராகிறது!

சேலம் மாநாடு: கழகம் தயாராகிறது!

சேலத்தில் ஏப்ரல் 29, 30 தேதிகளில் கழகம் நடத்தவிருக்கும் இரண்டு நாள் மாநாடு தோழர்களிடம் பெரும் உற்சாகத்தை உருவாக்கியுள்ளது. ‘இது தமிழ்நாடு; இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு’ என்ற தலைப்பு தோழர்களை ஈர்த்துள்ளது. சேலத்தில் மாவட்டக் கழகக் கலந்துரையாடல் கூட்டம், கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை யில் கூடி மாநாட்டுப் பணிகளை ஆலோசித்தது. 20.02.2023 திங்கள் மாலை 4.00 மணியளவில் கருப்பூர் சக்திவேல் இல்லத்தில் எதிர்வரும் ஏப்ரல் 29, 30 (சனி, ஞாயிறு) ஆகிய இரண்டு நாட்களில் நடைபெறும் திராhவிடர் விடுதலைக் கழக மாநில மாநாடு குறித்து ஒருங்கிணைந்த சேலம் மாவட்ட கலந்துரை யாடல் கூட்டம் நடைபெற்றது. கலந்துரை யாடல் கூட்டத்திற்கு திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை வகித்தார். கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்ட தோழர்களும், பொறுப்பாளர் களும் மாநாடு குறித்தும், மாநாட்டிற்கான ஏற்பாடுகள் மற்றும் மாநாட்டினை குறித்து பொதுமக்களிடம் சுவரெழுத்து மற்றும் துண்டறிக்கைகள் வாயிலாக...

வைக்கம் போராட்டம்: பெரியாரை சிறுமைப்படுத்துவோருக்கு பதிலடி

வைக்கம் போராட்டம்: பெரியாரை சிறுமைப்படுத்துவோருக்கு பதிலடி

வைக்கம் போராட்டத்தில் பெரியார் பங்களிப்பு பெரிதாக இல்லை என்று சில பேர்வழிகள் உளறத் தொடங்கியிருக்கிறார்கள். பெரியார் மீதான காழ்ப்புணர்ச்சியில் வரலாறு புரியாது பேசும் அரை வேக்காடுகள் – வரலாற்றை ஒழுங்காகப் படித்து விட்டுப் பேச வேண்டும். வைக்கம் போராட்டத்தில் இரண்டு முறை சிறை சென்ற ஒரே தலைவர் பெரியார் மட்டுமே. முதலில் அருவிகுட்டியில் ஒரு மாதம் சிறை; பிறகு திருவனந்தபுரத்தில் 4 மாதம் கடும் சிறை. பெரியாருக்கு முன் கைது செய்யப்பட்ட அனைவரும் அரசியல் கைதிகளாகவே நடத்தப்பட்டனர். பெரியார் மட்டுமே கிரிமினல் கைதியாக கடும் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டார். பெரியாருக்கு சிறையில் சிறப்பு சலுகை எதுவும் தரப்படக் கூடாது என்று நீதிமன்றமே உத்தரவிட்டது. 24 மணி நேரமும் திருவனந்தபுரம் சிறையில் கை, கால்களில் விலங்குகளுடன் கிரிமினல் கைதிக்கான உடையோடு கழுத்தில் கைதி எண் பட்டை தொங்கவிடப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். வைக்கம் போராளிகளில் ஒருவரான கே.பி. கேசவமேனன், ‘பந்தனத்தில் நின்னு’ என்ற நூலில் இதைப்...

ஜாதித் தடைகளை உடைத்த வைக்கம்… நூற்றாண்டைத் தொட்ட வரலாற்றின் பக்கங்கள்…

ஜாதித் தடைகளை உடைத்த வைக்கம்… நூற்றாண்டைத் தொட்ட வரலாற்றின் பக்கங்கள்…

வைக்கம் என்ற சொல் கேரளாவில் பலவற்றுடன் தொடர்பு உடையது. எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர், பாடகர் வைக்கம் விஜயலட்சுமி, வைக்கத்தப்பன் கோயில் என வைக்கம் பல வகையில் பிரபலமானது. பெரும்பாலான இந்தியர்கள் காந்தியுடன் வைக்கத்தை தொடர்புப்படுத்தி பேசுவார்கள். தமிழ்நாட்டில் வைக்கம் என்றால் அது பெரியாரின் அடையாளமாக இருக்கிறது. ஆனால் சமூக இயக்கத்தின் அடிப்படை யிலான விளைவுகள் வைக்கத்திற்கு அதற்கும் மேல் இருக்கிறது. கேரள மாநிலம் கோட்டயத்தில் உள்ள வைக்கத்தோடு தொடர்புடைய மிக முக்கிய நாள் மார்ச் 30. வைக்கம் கோயில் தெரு நுழைவுப் போராட்டம் தொடங்கப்பட்டதன் நூற்றாண்டு, இந்த ஆண்டு மார்ச் 30ஆம் தேதி எட்டியிருக்கிறது. 1924ஆம் ஆண்டில் இதே நாளில்தான் அப்போராட்டம் தொடங்கப் பட்டது. இந்தியாவில் கோயில் நுழைவுப் போராட்டங்களின் மிக முக்கிய மைல்கல் வைக்கம் போராட்டம். வைக்கம் மகாதேவர் கோயிலைச் சுற்றியுள்ள சாலைகளைப் பயன்படுத்துவதில் ‘தீண்டப்படாதோர்’ எனக் கருதப்படும் சமூகங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக இந்த அகிம்சை...

வைக்கம் : சில வரலாற்றுக் குறிப்புகள் பெரியார் பேச்சு: மிரண்டது திருவாங்கூர் சமஸ்தானம்

வைக்கம் : சில வரலாற்றுக் குறிப்புகள் பெரியார் பேச்சு: மிரண்டது திருவாங்கூர் சமஸ்தானம்

  வைக்கம் : சில வரலாற்றுக் குறிப்புகள்  நம்பூதிரிகளின் திமிர் வைக்கத்தில் தீண்டாமையை நம்பூதிரிகளும் நாயர்களும் நியாயப் படுத்தினர். போராட்டத்தைக் கடுமையாக எதிர்த்தவர்களில் ஒருவர் தேவன் நீலகண்டன் நம்பியாத்திரி என்ற நம்பூதிரிப் பார்ப்பனர். காந்தி இவரை சந்தித்துப் பேச விரும்பினார். ‘இண்டம் துருத்திமனை’ என்ற இடத்தில் வாழ்ந்த இந்த நம்பூதிரி ஒரு நிலப்பிரபு. இவரது கட்டுப்பாட்டின் கீழ் 48 “பிராமணக்” குடும்பங்கள் இருந்தன. காந்தி வைசியர் என்பதால் இவரை தனது வீட்டுக்குள் விட மறுத்த இவர், தனியாக ஒரு தாழ்வாரத்தை உருவாக்கி காந்தியுடன் பேசினார். அவர் காந்தியுடன் பேசிய கருத்துகள் பச்சையான பார்ப்பன வெறியை வெளிப்படுத்தின. “முற்பிறப்பின் மோசமான கர்மாவின்படி நெருங்க முடியாத ஜாதியில் அவர்கள் பிறந்திருக்கிறார்கள்; எனவே அவர்களை அப்படித்தான் நடத்த வேண்டும்.” “கொள்ளையர்கள், குடிகாரர்களைவிட இவர்களை மோசமாக நடத்த வேண்டும்; இவர்கள் சட்டபடி குற்றவாளிகள் என்பதால் அவர்களை ஒதுக்கி வைக்க முடியும்; ஆனால் தீண்டப்படாத வர்களை சட்டம் தண்டிக்காத...

வைக்கம் போராட்டத்தில் நாகம்மையார்

வைக்கம் போராட்டத்தில் நாகம்மையார்

பெரியாரின் இணையர் நாகம்மையார், சகோதரி கண்ணம்மாள் மற்றும் பெரியாரின் உறவுப் பெண்கள் வைக்கம் போராட்டத்தில் பங்கேற்றனர். 1924 – மே, ஜூன், ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் நாகம்மையார் வைக்கத்திலேயே தங்கி போராட் டத்தை நடத்தினார். நாகம்மையார் ‘தீண்டப்படாத’ பிரிவைச் சார்ந்தவர் அல்ல; எனவே அவர் வீதியில் அனுமதிக்கப்பட்டார். தன்னுடன் ‘தீண்டப்படாத’ ஜாதிப் பெண்ணையும் அழைத்துச் சென்றதால் அவருக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. வீதியில் நடந்து சென்று கோயிலுக்குள்ளும் நுழைந்து வழிபாடு நடத்த முயலுகிறார். உடன் தீண்டப்படாத ஜாதிப் பெண்ணை அழைத்து வந்ததால் எதிர்த்தார்கள். பிறகு கோயிலுக்கு வெளியே ‘தீண்டப்படாத’ ஜாதிப் பெண்ணுடன் சேர்ந்து வழிபாடு செய்தார். தனக்குக் கிடைத்த வீதிகளில் நடக்கும் உரிமையை கோயில் வழிபாட்டு உரிமையையும் தீண்டாமைக்கு எதிரான போராட்டத்துக்குப் பயன்படுத்தினார் நாகம்மையார். நாகம்மையார் ‘சாணார்’ பெண்களுடன் கோயில் வழிபாட்டுக்கு போகும்போது ஒரு பார்ப்பனர் பெரிய தடியை வைத்துத் தடுத்தார். அந்தப் பார்ப்பனர் பேச்சுத் திறனும் கேட்கும் திறனும் இழந்தவர். அருகில்...

கலாnக்ஷத்ராவைக் காப்பாற்றத் துடிக்கும் சனாதன சக்திகள்

கலாnக்ஷத்ராவைக் காப்பாற்றத் துடிக்கும் சனாதன சக்திகள்

பார்ப்பனர்களின் புனித பீடங்களாக கருதப்படுவதில் ஒன்று கலாnக்ஷத்ரா. நாடாளுமன்றத்தில் தனிச் சட்டம் ஒன்றைக் கொண்டுவந்து அதன் மூலம் உருவாக்கப்பட்ட நிறுவனம். அந் நிறுவனம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை வளைத்துப் போட்டிருக்கிறது. இங்கு நடைப்பெறுகிற நடனக் கல்லூரியில் நடனம் பயில்வதற்கு ஏராளமான வெளிநாட்டு மாணவ மாணவிகள் வருகிறார்கள். கடந்த ஐந்து ஆண்டுகளாக இக்கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தரப்படுவதாக புகார்கள் எழுந்து வருகின்றன. இந்த மாணவிகள் நிறுவனத்தின் இயக்குனர்களாக இருக்கிற ரேவதி ராமச்சந்திரன், நடனத்துறை தலைவராக இருக்கிற ஜோஷ்னா மேனன் ஆகியோரிடம் பாலியல் தொல்லைக் குறித்து பல புகார்கள் கூறியும் அதுவும் கடந்த ஐந்து ஆண்டுகளாக புகார்களை தந்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாணவிகள் போராட்டம் தீவிரமடைந்தது. இதற்குப் பிறகு கடந்த மார்ச் மாதம் 21ஆம் தேதி தேசிய மகளிர் ஆணையம் தலையிட்டு ஒரு பேராசிரியர் மீது பாலியல் தொந்தரவு செய்ததாக வழக்குப் பதிவு செய்யுமாறு தமிழ்நாடு காவல்துறை இயக்குனருக்கு அறிவுறுத்தியது....

கடைகடையாக வசூல் பணி : மக்களைச் சந்தித்து மாநாட்டுத் துண்டறிக்கைகள் களப்பணியில் தோழர்கள் உற்சாகம்

கடைகடையாக வசூல் பணி : மக்களைச் சந்தித்து மாநாட்டுத் துண்டறிக்கைகள் களப்பணியில் தோழர்கள் உற்சாகம்

ஏப். 29, 30 சேலம் மாநாட்டுப் பணிகளில் தோழர்கள் ஒவ்வொரு நாளும் கடை கடையாகச் சென்று வசூல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை : ஏப்ரல் 29.30 தேதிகளில் சேலத்தில் நடைபெறவுள்ள மாநில மாநாட்டை ஒட்டி சென்னை மாவட்டக் கழகத்தின் சார்பாக மார்ச் 29, புதன்கிழமை அன்று ஆயிரம் விளக்கு பகுதியில் பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடத்தில் துண்டறிக்கை வழங்கி பரப்புரை மேற்கொண்டனர். இரண்டாவது நாளாக 30.03.2023 அன்று மாலை 7 மணியளவில், சேத்துப்பட்டு பகுதி கடைவீதிகளில் நடைபெற்றது. திருவல்லிக்கேணி பகுதி அமைப்பாளர் இராஜேஷ் தலைமையில், வீரா, குமார், லட்சுமணன், மாணிக்கம், விஜயகாந்த், யாழினி, அருண்குமார், அருண் ஆகியோர் கலந்து கொண்டு துண்டறிக்கை பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். மயிலைப் பகுதி சார்பாக 30.03.2023 அன்று மாலை 7 மணியளவில் தேனாம்பேட்டை திருவள்ளூர் சாலையில் இராவணன் தலைமையில் பிரவின், கார்த்திக், உதயா, உமாபதி, சிவா, மனோகர் உள்ளிட்ட தோழர்கள் கடைவீதி வசூலை மேற்கொண்டனர். மூன்றாவது நாளாக...

“பெரியார் எனும் பெருவிளக்கு நமக்கு உறுதுணை”

“பெரியார் எனும் பெருவிளக்கு நமக்கு உறுதுணை”

அண்ணல் காந்தியும், தந்தை பெரியாரும் ஒப்பற்றத் தியாகிகளும் இணைந்து முன்னெடுத்த வைக்கம் போராட்டம், தமிழ்நாட்டில் சமூக நீதிப் போராட்டங்களுக்கு வழிகாட்டியாக இருந்தது. இதுவே பின்னாளில் இந்தியாவிற்கே சமூக நீதிக்கான விதையாக அமைந்தது. பெரியார், அய்யா முத்து, டி.கே. மாதவன், கேசவ மேனன், ஜார்ஜ் ஜோசப், நீலகண்ட சாஸ்திரி, காந்திராமன், மண்ணத்து பத்மநாபன் போன்ற தியாகிகளை மீண்டும் அறிமுகப்படுத்தி, அவர்களின் உணர்வுகளை இளைய சமுதாயத்திற்கும், மக்களுக்கும் ஊட்ட வேண்டிய பொறுப்பு இப்பொழுதும் நமக்கு இருக்கிறது. சனாதனக் கொடுமைகளைத் தகர்த்தெறிய வேண்டிய இந்த நேரத்தில் ஜாதிய மதவாத சக்திகளும் தலைதூக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருக்க வேண்டும். தேசத்தை இருளில் ஆழ்த்தும் இவர்களை விரட்ட பெரியார் எனும் பெருவிளக்கு நமக்கு உறுதுணையாக இருக்கும். எனக்கு மனிதப் பற்றைத் தவிர வேறு எந்தப் பற்றும் இல்லை என்று சொன்ன மாசற்றத் தலைவராய் சமூக சீர்திருத்தத்திற்கு வித்திட்டவர் தலைவர் பெரியார். அவரது தேவை தமிழ்நாடு மற்றும் இந்தியாவிற்கு...

மாநாட்டு மண்டபத்தை  தலைவர் பார்வையிட்டார்

மாநாட்டு மண்டபத்தை தலைவர் பார்வையிட்டார்

சேலம் மாநாடு நடக்கும் ‘சந்திர மகால்’ மண்டபத்தை கழகத் தலைவர், மாவட்டக் கழகத் தோழர்களுடன் சென்று பார்வையிட்டார். (பிப்.17, 2023) பெரியார் முழக்கம் 23022023 இதழ்  

சிங்காரவேலர் சிலைக்கு  கழக சார்பில் மாலை

சிங்காரவேலர் சிலைக்கு கழக சார்பில் மாலை

சிந்தனைச் சிற்பி ம.சிங்காரவேலரின் 164ஆவது பிறந்தநாளை முன்னிட்டு சிங்காரவேலர் மாளிகையில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு சென்னை மாவட்டக் கழகம் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கழகத் தலைமை நிலையச் செயலாளர் தபசி குமரன், மாவட்ட கழகச் செயலாளர் இரா. உமாபதி, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் திருமூர்த்தி, அருண், கிஷோர், மயிலைப் பகுதி கழகத் தலைவர் இராவணன், மனோகர், மக்கள் குடியரசு இயக்கம் ஜான் மண்டேலா, மே 17 இயக்கம் முகிலன், திராவிடர் கழகம் மாரிமுத்து உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர். பெரியார் முழக்கம் 23022023 இதழ்

1929 – சுயமரியாதை மாநாடும் தமிழ்நாட்டின் அரசியலும் கோவையில் கழகம் நடத்திய எழுச்சிக் கருத்தரங்கு

1929 – சுயமரியாதை மாநாடும் தமிழ்நாட்டின் அரசியலும் கோவையில் கழகம் நடத்திய எழுச்சிக் கருத்தரங்கு

கோவை மாநகரக் கழகம் ஏற்பாடு செய்த “1929 செங்கல் பட்டு முதல் சுயமரியாதை மாநாடும் தமிழ்நாட்டின் அரசிய லும்” கருத்தரங்கம் கோவை அண்ணாமலை அரங்கில் பிப்ரவரி 18, மாலை 5 மணிக்கு தொடங்கி நடைபெற்றது. நிகழ்விற்கு கழகத் தலைமைக் குழு உறுப்பினர் சூலூர் பன்னீர் செல்வம் தலைமை வகித்தார், கருத்தரங்கின் முதல் நிகழ்வாக பகுத்தறிவு பாடல்களை கழகத் தோழர்கள் கிருஷ்ணன், புரட்சித் தமிழன், யாழினி, தமிழினி, சுருதி, அம்பிகா, இசைமதி ஆகியோர் பாடினார்கள். சிவராசு வரவேற் புரையாற்றினார், அதைத் தொடர்ந்து மாநகரத் தோழர் வெங்கட் , மாவட்டத் தலைவர் இராமச்சந்திரன், மாவட்டச் செயலாளர் யாழ். வெள்ளிங்கிரி, கழகப் பொரு ளாளர் துரைசாமி, தமிழ்நாடு அறிவியல் மன்றப் பொறுப் பாளர் சிவகாமி ஆகியோர் உரையாற்றினர் . தமிழ்நாடு அறிவியல் மன்றத் தலைவர் சிவகாமி “பெண்களை கைப்பிடித்து அழைத்து வந்த தலைவர் பெரியார்” என்று தனது உரையில் குறிப்பிட்டார். அதைத் தொடர்ந்து சிறப்புரையாற்ற வந்த...

சென்னைக் கூட்டத்தில் பால். பிரபாகரன் உரை ஆஷ்துரையை வாஞ்சி சுட்டது ஏன்?

சென்னைக் கூட்டத்தில் பால். பிரபாகரன் உரை ஆஷ்துரையை வாஞ்சி சுட்டது ஏன்?

பிப்.6, 2023 அன்று மயிலைப் பகுதியில் கழகம் நடத்திய காந்தி படுகொலைக் கண்டன நாள் பொதுக் கூட்டத்தில் கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் நிகழ்த்திய உரை. (சென்ற இதழ் தொடர்ச்சி) கல்புர்கி, கவுரி லங்கேசு இவர்களைக் கொன்ற துப்பாக்கியில் ஒரே ஒரு துப்பாக்கி. அது ஒரே வகை தோட்டா என்று இப்போது அறிக்கையிலே வெளி வந்திருக்கிறது. அவர்களைப் பிடித்து விசாரித்தால் அனைவரும் சொல்கிறார்கள் அமைப்பு ஒண்ணு இருக்குதுன்றான் என்னடா அமைப்பு? அப்படீன்னு கேட்டா, சனாதன, சன்ஸ்தா என்கிற அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்று. அவர்கள் சாஸ்திர தர்மம் என்று புத்தகம் எழுதியிருக்கிறார்கள். அந்த புத்தகத்தைப் படித்ததற்குப் பிறகு படித்தவன் யாரெல்லாம் இந்த சனாதன் தர்மத்தை எதிர்க்கிறார்களோ அவர்களை தீர்த்துக் கட்டுவதே அவர்களின் நோக்கமாக இருக்கும். ஏதோ சுதந்திரத்திற்குப் பின்பு தான் இந்த கொலை நடந்திருக்கிறது என்று நீங்கள் தயவு செய்து நினைக்க வேண்டும். சனாதனத்தைக் காப்பாற்றுவதற்காக கொலை. இந்தியர்களை மட்டுமல்ல பிரிட்டிஷார் ...

வெளிப்படையான நிர்வாகம் என்பது…

வெளிப்படையான நிர்வாகம் என்பது…

தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்து 20 மாதங்கள் தான் முடிந்திருக்கிறது. இன்னும் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஆட்சியில் இருக்கப் போகிறது. ஆனால் தேர்தல் வாக்குறுதிகளில் அறிவிக்கப்பட்டதை ஏன் இன்னும் நிறைவேற்றவில்லை என்று எடப்பாடி பழனிச்சாமி போன்றவர்கள் பொறுப்பில்லாமல் மேடையில் பேசிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த 20 மாத கால ஆட்சி திமுக அறிவித்த திட்டங்கள் எந்தளவுக்கு செயல்பாட்டிற்கு வந்திருக்கின்றன என்பது குறித்து கள ஆய்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு இருக்கிறார். மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் செய்து அதிகாரிகளை சந்தித்து இந்த திட்டங்கள் மக்களை சென்றடைந்ததுள்ளனவா? என்பது பற்றி எல்லாம் ஆய்வு செய்து இந்த ஆண்டு இறுதிக்குள் திட்டங்கள் எல்லாம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று செயல்பட்டு வருகிறார். வெளிப்படையான நிர்வாகம் என்பது இதுவரை பேசப்பட்டுத்தான் வந்தது. ஆனால் அத்தகைய நிர்வாகம் என்ன என்பது பற்றி மக்களுக்குத் தெரியாது. இப்போது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தான் நாம் நேரடியாக பார்க்க முடிகிறது. இது தவிர...

தலையங்கம் பிரபாகரன்?

தலையங்கம் பிரபாகரன்?

தமிழ் ஈழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிரோடு இருக்கிறார் என்று உலகத் தமிழர்களின் பிரதிநிதி என்ற நிலையில் தன்னை நிறுத்திக்கொண்டு பழ. நெடுமாறன் அவர்கள் அறிவித்திருப்பது கடும் சர்ச்சைகளை உருவாக்கியுள்ளது. பழ. நெடுமாறன் அவர்கள் இதை அறிவித்த செய்தியாளர் சந்திப்பில் தமிழ்நாட்டில் தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் களமாடிய முன்னோடி தலைவர்கள் எவரும் அவருடன் இல்லை. இந்த அறிவிப்பிலிருந்து அவர்கள் விலகி நிற்க முடிவு செய்துவிட்டனர். அவ்வப்போது பிரபாகரன் உயிருடன் இருப்பதாகக் கூறி வந்த பழ. நெடுமாறன் அவர்கள், அண்மைக்காலமாக இதில் அமைதி காத்து வந்த நிலையில், இப்போது இதை அறிவிக்க வேண்டிய தேவை – அவசியம் ஏன் வந்தது? மோடி தலைமையிலான ஒன்றிய ஆட்சி, ஈழத் தமிழர்களுக்கு 13ஆவது சட்டத் திருத்தத்தின்படி உரிமைகளை வழங்க வேண்டும் என்று இலங்கை அரசை வலியுறுத்தி வருகிறது. இந்த முயற்சியை ஈழத் தமிழர்களுக்கு ஆதரவான சர்வதேச சூழல்  என்று கருதும் பழ. நெடுமாறன், அதைச்...

சிவராத்திரி: அறிவியலுக்கு எதிரான மூட நம்பிக்கை

சிவராத்திரி: அறிவியலுக்கு எதிரான மூட நம்பிக்கை

சிவராத்திரி விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண் டாடப்படுகிறது, இது மக்கள் பக்தியின் மீது வைத்திருக்கின்ற நம்பிக்கை; அந்த நம்பிக்கையில் நாம் குறுக்கிடுவதற்குத் தயாராக இல்லை. ஆனாலும் சிவராத்திரி ஏன் கொண்டாடப்படுகிறது என்பது குறித்த விளக்கங்கள் மக்களிடம் தரப்படுவதில்லை. இதுகுறித்து பல புராணக் கதைகள் கூறப்படு கின்றன. ஒரு கதை, பாற்கடலை தேவர்கள் வாசுகி என்ற விஷம் நிறைந்த பாம்பைக் கயிராகக் கொண்டு கடைந்தார்கள். அப்போது தேவர்கள் கடைந்த விஷம் கடலில் கலந்தது. இதனால் முழு உலகமும் அழிந்து விடுமோ என்ற அச்சத்தில் தேவர்கள் சிவபெருமானிடம் உதவி கேட்கிறார்கள். சிவ பெருமான் ஓடி வந்து அந்த விஷத்தைத் தானே குடித்தார். ஆனால் அந்த விஷத்தைத் தொண்டையில் வைத்துக் கொண்டார். வயிற்றுக்குள் அனுப்பவில்லை. இது நடைபெற்ற காலம் சிவராத்திரி இரவு. அந்த நாள் தான் சிவராத்திரியாக கொண் டாடப்படுகிறது. இது ஒரு கதை. மற்றொரு கதை பிரம்மாவுக்கும் விஷ்ணுவுக்கும் யார் பெரியவர் என்ற...

சேலத்தில் ஏப்ரல் 29, 30 தேதிகளில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்துகிறது “இது தமிழ்நாடு; இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு”

சேலத்தில் ஏப்ரல் 29, 30 தேதிகளில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்துகிறது “இது தமிழ்நாடு; இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு”

  திராவிடர் விடுதலைக் கழகத் தலைமைக் குழு பிப்.15, 2023 பகல் 11 மணியளவில் சென்னை தலைமை அலுவலகத்தில் கூடியது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் இரத்தினசாமி, பொருளாளர் திருப்பூர் துரைசாமி, கழக வெளியீட்டுச் செயலாளர் இராம. இளங்கோவன், பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், தலைமை நிலையச் செயலாளர் தபசி. குமரன், தலைமைக் குழு உறுப்பினர்கள் சூலூர் பன்னீர்செல்வம், ஆசிரியர் சிவகாமி, சென்னை உமாபதி, விழுப்புரம் அய்யனார், பரிமளராசன், காவலாண்டியூர் ஈசுவரன், மயிலாடுதுறை இளையராசா ஆகியோர் பங்கேற்றனர். ஏப்ரல் 29, 30 தேதிகளில் சேலத்தில் கழகத்தின் மாநில மாநாடு நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டு அது குறித்து நிகழ்ச்சிகள், தலைப்புகள், மாநாட்டு நோக்கங்கள், மாநாட்டுக்கான பேச்சாளர்கள், மாநாட்டுக்கு நன்கொடை திரட்டும் வழிமுறைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. “இது தமிழ்நாடு; இளம் தலைமுறையின் எச்சரிக்கை மாநாடு” என்று மாநாட்டின் தலைப்பு முடிவு செய்யப்பட்டது....

ஜாதி மத மறுப்புத் திருமணம் செய்து கொள்ள விருப்பமா?

ஜாதி மத மறுப்புத் திருமணம் செய்து கொள்ள விருப்பமா?

¨  மணமுறிவு பெற்றவர்கள் ¨   துணையை இழந்தவர்கள் ¨  மாற்றுத் திறனாளிகள் – ஆகியோரும் Manitham Matrimony இணையதளத்தில் இலவசமாகப் பதிவு செய்து பயன் பெறலாம். இச்சேவையை Google Play  அலைப்பேசி செயலியாகவும் (Mobile Apps) பதிவிறக்கம் செய்து பயன் பெறலாம். மனிதம் திருமண தகவல் நிலையம் எண்.5/9, பாலமுத்துகிருஷ்ணா தெரு தர்மாபுரம், தியாகராய நகர், சென்னை – 600 017. அலைபேசி எண். 7604977781 மின்னஞ்சல் : manithammatrimonial@gmail.com web: http//manithammatrimony.com பெரியார் முழக்கம் 16022023 இதழ்

பராசக்தி திரைப்படத்தில் சமூக நீதிக் கருத்துகள்: கொளத்தூர் மணி உரை

பராசக்தி திரைப்படத்தில் சமூக நீதிக் கருத்துகள்: கொளத்தூர் மணி உரை

ஊடகம் மற்றும் சமூக அறிவியல் மையம், மூங்கில்பாடி,சேலம் மற்றும் சேலம்  ஏ.வி.எஸ். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன் துறை நடத்திய தேசிய அளவிலான இரண்டு நாள் மாநாடு நடந்தது. “திரைப் படங்களில் திராவிடக் கதையாடல்கள்”: “பராசக்தி திரைப்படம்” – ‘வாசிப்பு மற்றும் மீள் வாசிப்பு’ எனும் தலைப்பில் நடைபெற்ற 2 நாள் மாநாட்டில் 10.02.2023 வெள்ளி காலை 10.00 மணியளவில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி பங்கேற்று “பராசக்தி திரைப்படத்தில் சமூக நீதிக் கருத்துகள்” எனும் தலைப்பில் சிறப்புரையாற்றினார். பெரியார் முழக்கம் 16022023 இதழ்

சேத்துப்பட்டு இராஜேந்திரன்-அலமேலு மணிவிழா

சேத்துப்பட்டு இராஜேந்திரன்-அலமேலு மணிவிழா

பெரியாரியலாளர் சேத்துப் பட்டு க. இராஜேந்திரன் – அலமேலு மணிவிழா பிப்.22ஆம் தேதி அயனாவரம் ‘ஸ்ரீசக்தி பார்ட்டி ஹாலில்’ ஆனூர் ஜெகதீசன் (தலைவர் த.பெ.தி.க.) தலைமையில் நிகழவிருக்கிறது. தமிழ்நாடு ஆதி திராவிடர் பழங் குடி ஆணைய துணைத் தலைவர் புனித பாண்டியன், உறுப்பினர் வழக்கறிஞர் குமாரதேவன், அன்பு தனசேகர் (தி.வி.க.) சிறப்புரையாற்றுகிறார்கள். மணிவிழா மகிழ்வாக ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ வளர்ச்சி நிதிக்கு ரூ.2000/- வழங்கியுள்ளார்கள். பெரியார் முழக்கம் 16022023 இதழ்

கருத்துரிமையைப் பறிக்கும் ஒன்றிய ஆட்சியின் அச்சுறுத்தல் சட்டம் எட்வின் பிரபாகரன்

கருத்துரிமையைப் பறிக்கும் ஒன்றிய ஆட்சியின் அச்சுறுத்தல் சட்டம் எட்வின் பிரபாகரன்

பாஜகவுக்கு எதிரான செய்திகள் பரவுவதைத் தடுப்பதற்காக, புதிய சட்டத்திருத்தம் (IT Act 2021 – 3[1][b][v]) ஒன்றை ஒன்றிய அரசு கொண்டு வர உள்ளது. பத்திரிக்கைத் தகவல் பணியகமோ (PIB), ஒன்றிய அரசால் அங்கீகரிக் கப்பட்ட வேறொரு நிறுவனமோ, ஒரு செய்தியை போலி செய்தி என்று அறிவித்து விட்டால், அந்தச் செய்தி எந்த ஒரு இணைய ஊடகத்திலிருந்தும் உடனடியாக நீக்கப்பட வேண் டும் என்பதே அந்த சட்டத்திருத்தம். இதனை மின்ன ணுவியல் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சகம் கொண்டு வரவுள்ளது. எந்த ஒரு ஒழுங்கு முறை அதிகாரமும் இல்லாத PIBயிடம், உண்மை சரிபார்ப்பு & கட்டுப்பாட்டு பொறுப்பை ஒன்றிய அரசு வழங்க விருக்கும் செயல், கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. அரசின் கொள்கைகள், திட்டங் கள், முன்னெடுப்புகள் & சாதனை கள் தொடர்பான செய்திகளை, அச்சு ஊடகங்களுக்கும் இணைய ஊடகங்களுக்கும் வழங்குவது தான், பத்திரிக்கைத் தகவல் பணியகத்தின் வேலையாக இருந்து வருகிறது....

சென்னைக் கூட்டத்தில் பால். பிரபாகரன் உரை காந்தியார் கொலை: பெரியார் முன்கூட்டியே எச்சரித்தார்

சென்னைக் கூட்டத்தில் பால். பிரபாகரன் உரை காந்தியார் கொலை: பெரியார் முன்கூட்டியே எச்சரித்தார்

¨        காந்தியார் கொலை வரலாறு மறைக்கப் படுகிறது. ¨        காந்தியாரிடம் பெரியார் இயக்கத்துக்கு முரண் உண்டு. இரட்டை வாக்குரிமை ஓர் உதாரணம். ¨        அம்பேத்கர் ஒன்றிய அரசுப் பதவிகளில் ஆதிராவிடர் இடஒதுக்கீட்டை 1943லேயே பெற்றுத் தந்தவர் பிப்.6, 2023 அன்று மயிலைப் பகுதியில் கழகம் நடத்திய காந்தி படுகொலைக் கண்டன நாள் பொதுக் கூட்டத்தில் கழகப் பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன் நிகழ்த்திய உரை. இப்போது எதற்காக திராவிடர் விடுதலைக் கழகம், காந்தியார் படுகொலை நாள் கூட்டத்தை நடத்துகிறது என்று சொன்னால், இப்போது ஆண்டு கொண்டிருக்கிற ஒன்றிய அரசாங்கம், பல்வேறு வரலாற்றுத் திரிபுவாதங்களை செய்து கொண்டிருக்கிறது. குஜராத்தினுடைய பாடப் புத்தகங்களிலே மத்திய அரசினுடைய பாடப் புத்தகங்களிலே 1948ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் தேதி காந்தியடிகள் இறந்து போனார் என்று எழுதி வைத்திருக்கிறார்கள். ஏதோ நோய் வாய்ப்பட்டு இறந்தது மாதிரியோ அவர் ஆஸ்பத்திரியில் இருந்து பிழைக்க மாட்டார் என்று சொல்லி அவர்...

1954இல் ஆச்சாரியார் கொண்டு வந்த “இல்லம் தேடிக் கல்வி”

1954இல் ஆச்சாரியார் கொண்டு வந்த “இல்லம் தேடிக் கல்வி”

கொரோனா காலத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் கல்வி இழப்பை சரி செய்வதற்காக தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்ட ஒரு புதுமையான திட்டம் தான் இல்லம் தேடி கல்வித் திட்டம். கடந்த ஓராண்டு காலமாக இத்திட்டம் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது என்று மாநில திட்டக் குழுவின் மதிப்பீட்டு அறிக்கை கூறுகிறது, இந்த மதிப்பீட்டு அறிக்கையை மாநில திட்ட குழுவின் துணைத் தலைவர் ஜெயரஞ்சன் அவர்கள் தமிழ்நாடு முதல்வர் அவர்களிடம் அளித்திருக்கிறார். அதில் இத்திட்டம் பற்றி ஆய்வுகள் செய்யப்பட்டு இருக்கின்றன. 6 மாவட்டங்களில் 362 பள்ளிகள், 679 தன்னார்வலர்கள், 362 தலைமையாசிரியர்கள், 362 ஆசிரியர்கள், 724 பெற்றோர்களிடம் கருத்துகள் கேட்கப்பட்டு இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டு இருக்கிறது. அந்த அறிக்கையில் கூறியிருக்கிற சில முக்கிய பரிந்துரைகள் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் எளிய கற்றல் முறைகள் மாணவர்களுடன் வலிமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை குறிப்பிட்டிருக்கிறது. இல்லம் தேடி கல்வித் திட்டத்தை தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிற இந்த...

தலையங்கம் ஆளுநரே! பதில் கூறுங்கள்!

தலையங்கம் ஆளுநரே! பதில் கூறுங்கள்!

சனாதனப் பெருமைப் பேசி வந்த தமிழக ஆளுநர் ரவி இப்போது திடீரென்று தமிழ்நாட்டில் தலித் மக்கள் உரிமைகளுக்காக கண்ணீர் வடிக்கத் தொடங்கியிருக்கிறார். இது தான் ‘திராவிட மாடல் ஆட்சியா?’ என்று மேடைப் பேச்சாளர் போல் நக்கலடித்தும் இருக்கிறார். ஆளுநர் ரவி புரோகித – வைதீக வட்டாரங்களிலும் ஆகமக் கோயில்கள் சடங்குகளிலும் பங்கேற்கும் சனாதனவாதியாகவே செயல்பட்டு வரும் நிலையில் இந்த மாற்றத்துக்கு என்ன காரணம் என்ற கேள்வி எழுந்து நிற்கிறது. ஆளுநர் முதலில் சில அடிப்படையான கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டும். ஆளுநர் பேசும் சனாதனம் என்ற ‘வர்ணாஸ்ரமம்’ தான் ஜாதிக்கும் தீண்டாமைக்கும் ஆணிவேர் என்பதை ஆளுநர் மறுக்க முடியுமா? சனாதனத்தைப் போற்றிக் கொண்டு தீண்டாமைக்கு எதிராகப் பேசுவது இரட்டை வேடமல்லவா? இந்து மதம் – இந்து தர்மம் என்பவை இந்தியா தோன்றுவதற்கு முன்பே வந்து விட்டது என்று பேசிய ஆளுநர் அவர்களே! அதே ‘இந்து தர்மம்’ தானே மனிதர்களுக்குள் ஜாதியையும் தீண்டாமையையும்...

வினா விடை

வினா விடை

செவ்வாய்கிரகத்தில் ஆறுகள் இருந்திருக்கின்றன. – நாசா அப்படி வாங்க வழிக்கு. அதுல ஒன்னுதான் எங்க வேதத்தில் கூறப்படும் சரஸ்வதி ஆறு. செவ்வாய்கிரகத்திலேயே எங்களாவாதான் பூர்விகக் குடிகள், புரியுதோ! 3 ஆளுநர்களைத் தந்து தமிழர்களுக்கு பெருமை சேர்த்திருக்கிறார், பிரதமர் மோடி. – பா.ஜ.க. என்ன குரல் மாறுது? மூன்று சனாதன ‘இந்துக்களைத் தந்து’ என்று தானே சொல்லணும். இப்போ, மதம் போய் – தமிழன் வந்துட்டானா? இந்துமாக் கடல் – சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருக்கும் நிலையில் பிரபாகரன் வெளிப்படுவதற்கான சூழல் உருவாகி யுள்ளது. – பழ. நெடுமாறன் இந்தியப் பெருங்கடல் இந்துமாக் கடலாக மாறி விட்டதா, அய்யா! பா.ஜ.கவின் கனவைத் தவிர்க்க பிரபாகரன் மீண்டும் ஈழத்துக்கு வரவேண்டும்! – கோவை இராமகிருட்டிணன் அறிக்கை அப்ப, தமிழ் ஈழத்துக்காக வரவேண்டாமா? அப்படியே ஈரோடு இடைத்தேர்தலுக்கும் வந்து பா.ஜ.க.வின் கனவைத் தவிர்த்தால் நல்லது. வருமான வரித் துறையில் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் சிறப்பு அழைப்பாளராகப்...