Category: குடி அரசு 1929

வேதாரண்யத்தில்  தேசிய (பார்ப்பனர்) மகாநாடு திரு. பட்டேலின் யோக்கியதை 0

வேதாரண்யத்தில் தேசிய (பார்ப்பனர்) மகாநாடு திரு. பட்டேலின் யோக்கியதை

கடந்த மூன்று வருட காலமாக நமது பார்ப்பனர்கள் விடா முயற்சியுடன் பிரயத்தனப்பட்டு வந்த தமிழ் மாகாணத் தேசிய மகாநாடு சென்ற மாதம் 31-ந் தேதி வேதாரண்யம் என்னும் ஓர் கிராமத்தில் கூடிக் கலைந்ததாக பேர் செய்து விளம்பரமும் செய்தாய்விட்டது. ஆனாலும் அம்மகாநாடு நடைபெற்றதன் யோக்கியதைதான் என்ன என்று பார்ப்போமானால், சுருங்கக் கூறுமிடத்து பார்ப்பனரல்லாதார் பணத்தையே இரண்டு பார்ப்பனத் தலைவர்கள் செலவு செய்து, பார்ப்பன ரல்லாதாருக்கு விரோதமாய் இருவரும் படை திரட்டிக் கொண்டு போய் ஒருவருக்கொருவர் தங்கள் சாமர்த்தியத்தை வெளியாக்கிக் கொண்டதுதான் வேதாரண்ய மகாநாட்டின் தத்துவம் என்று சொல்ல வேண்டும். அதாவது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் திரு.எஸ்.சீனிவாசய்யங்கார் அவர்கள் காங்கிரசின் பேரால் பொதுப் பணத்தை அள்ளிக் கொடுத்துச் சேர்த்து வைத்திருக்கும் படைகளான திருவாளர்கள் பழனியாண்டி பண்டாரம், சாமிநாத செட்டியார், அண்ணாமலை பிள்ளை, சத்தியமூர்த்தி, கிருஷ்ண சாமிப் பாவலர் முதலிய தேசீயத் தொண்டர்களாகிய திரு.அய்யங்கார் படைகள் ஒருபுறமும்; கதரின் பேரால் பார்ப்பனரல்லாதார் கொடுத்தப் பொதுப்பணத்...

திருவாங்கூரில் கோஷா விலக்கம் 0

திருவாங்கூரில் கோஷா விலக்கம்

வைதீகச் செருக்கும். பார்ப்பனீயக் கொடுமையும் இராமராச்சிய பரிபாலனமும் தலைவிரித்தாடும் திருவாங்கூரில், முதற்றரப் பார்ப்பனர்களாகிய நம்பூதிரிகளின் பெண்டிர் படுதாவைக் கடந்து வெளியேறி இருக்கின்றனர். படுதா என்பது ஒரு சமூகத்தின் மடமைக்கும் அம் மடமைக்கு அடிப்படையாய் உள்ள மதக் கோட்பாடுகள், சமூகக் கட்டுப்பாடுகள், பழக்க வழக்கங்கள் இவைகளின் அறிகுறியாய் நிலவுகின்றது. ஆடுமாடுகளும் வெளிச் செல்லும் உரிமை பெற்றிருக்கையில் மானுடப் பெண்கள் தம் கொழுநர்தம் வீடுகளில் சிறகிலாப் பறவைகளைப்போல் அடைக்கப்பட்டு வருகின்றனர். இதனைக் கடந்து வெளிச் செல்வதென்றால், மடமையே உருவமாக விளங்கும் ஒரு சமூகத்தில் எளியதோர் செயலன்று. நம் இயக்கத்தின் நற்பயனாக நம் தலைவர் அடிக்கடி அந்நாட்டுக்குச் சென்று சமத்துவக் கொடியை பறக்கச் செய்துவரும் அரும்பெரும் அறிவுரை மாரிகளின் பயனாக நம்பூதிரிப் பெண்களின் சமூகத்தில் சுயேச்சையும், சமத்துவமும் காட்டுத் தீப்போல் பற்றிக் கொண்டது. நம்மியக்கக் கதிரொளியால் அறியாமைப்பனி அக்கணமே அகன்று வருகின்றது. ஏனைப் பெண்டிரும் இதனைத் தமக்கோர் வழி காட்டி என மதித்து முன்வருமாறும், ஆடவர்கள்...

“சித்தாந்தம்”  ஆசிரியரின் கொடுமை 0

“சித்தாந்தம்” ஆசிரியரின் கொடுமை

சென்னை மணலி விடுதியில் நடந்த அக்கிரமம் நம் மனத்தைப் புண்படுத்துகின்றது. இவ்விடுதியிலுள்ள ஒரு பார்ப்பனரல்லாத மாணவன் தன்னை அறியாமல் ஒரு பார்ப்பன மாணவன் சாப்பாட்டுப் பேழையை (டிபன் பாக்ஸ்)த் தொட்டுவிட்டான், உடனே பார்ப்பனரல்லாதார் தருமத்திலிருந்து தெண்டச் சோறு சாப்பிடும் அப்பார்ப்பன மாணவனுக்கு கோபம் வந்துவிட்டது. என் சாப்பாட்டைத் தொடவா நேர்ந்தது என்று பலவாறு அரற்றி சாப்பாட்டை கீழே கொட்டிவிட்டு, பிராமண சூப்பரின்டெண்டெண்டிடம் போய் முறை யிட்டான். அவர் பார்ப்பனரல்லாத மாணவனைப் பார்ப்பனச் சாப்பாட்டைத் தொட்ட குற்றத்திற்காக வாயால் வசை புராணம் பாடி அனுப்பிவிட்டார். ஆனால், இது அப்பார்ப்பன மாணவனுக்கு ஒப்பவில்லை. தன் சாப்பாட்டைத் தொட்ட பார்ப்பனரல்லாத மாணவனுக்கு வெறும் வசை புராணம் மட்டுமா என்று ஆத்திரம் அவனுக்கு அடங்காது கிளம்பிவிட்டது. ஆகையால் அப் பார்ப்பன சூப்பரின்டெண்டெண்டுக்கு மேல் அதிகாரியாய் உள்ள “சித்தாந்தம்” ஆசிரியரும் ஒரு வக்கீலுமான திரு “பாலசுப்ரமண்யம்” அவர்களிடம் சென்று முறையிட்டான், முறையிட்டதுதான் தாமதம். நம் பார்ப்பன முதலியாராய திரு.பாலசுப்பிரமணியத்திற்கு...

தேசீய இயக்கம் 0

தேசீய இயக்கம்

சென்ற வாரம் சுயமரியாதை இயக்கம் என்னும் தலைப்புக்கொடுத்து, அவ்வியக்கத்தின் கொள்கைகளைப் பற்றியும், திட்டங்களைப் பற்றியும், அதன் நிலையைப் பற்றியும், செல்வாக்கைப் பற்றியும், இதுவரை அது செய்திருக்கும் வேலையைப் பற்றியும் ஒருவாறு குறிப்பிட்டிருந்தோம். இவ்வாரம் தேசீய இயக்கம் என்னும் தலைப்புப் பெயர் கொடுத்து அதன் கொள்கை, திட்டம், நிலைமை, செல்வாக்கு, அது இதுவரை செய்திருக்கும் வேலை ஆகியவைகளைப் பற்றியும் ஒருவாறு விவரிப்போம். அதன் பொருள் சாதாரணமாக யோசித்துப் பார்த்தோமானால் இந்தியாவில் தேசீயம் என்கின்ற பதமே தப்பான வழியில் மக்களை ஏமாற்றி பிழைக்க ஒரு கூட்டத் தார், அதாவது மேல் ஜாதியார் என்று சொல்லிக் கொள்ளும் பார்ப்பனர்களால் கற்பனை செய்யப்பட்டு, அவர்களுக்குத் தாசர்களாக இருந்தால்தான் பிழைக்க முடியும் என்று கருதிய சில பார்ப்பனரல்லாத படித்தவர்கள் என்பவர்களால் ஆதரிக்கப்பட்டு, இவ்விரு கூட்டத்தாரின் சூட்சியாலும் பாமர மக்களை ஏமாற்றி சிலர் பிழைக்க உபயோகப்பட்டு வரும் ஒரு பாதக மும் அபாயகரமுமான அர்த்தமற்ற ஒரு வார்த்தையாகும். இன்னும் விளக்கமாக...

சுயமரியாதை இயக்கம் 0

சுயமரியாதை இயக்கம்

சுயமரியாதை இயக்கமானது அரசியல்களின் பேரால் நமது நாட்டி லுள்ள பல கட்சிகளைப் போலல்லாமல் அன்னியர்களிடம் இருந்து யாதொருவிதமான சிறு விஷயத்தையும் எதிர்பாராமல் மக்களின் அறிவை விளக்கி அவரவர்களின் மனப்பான்மையை மாற்றுவதன் மூலமே உண்மை யான விடுதலையையும், சமத்துவத்தையும் தன் மதிப்பையும் உண்டாக்கக் கூடியதான ஒரு இயக்கமாகும். இவ்வியக்கத்தின் முக்கிய கொள்கை யெல்லாம் கட்டுப்பட்டு அடைப்பட்டிருக்கும் அறிவுக்கு விடுதலையை உண்டாக்குவதேயாகும். ஆதலால் சுயமரியாதை இயக்கம் என்பதை அறிவு விடுதலை இயக்கம் என்றே சொல்லலாம். இதன் உண்மை விளங்க வேண்டுமானால், ஒரு நேர்மையான மனிதன் தனது அறிவுக்கும் ஆராய்ச்சிக் கும் உள்ள கட்டுப்பாட்டையும் நிர்ப்பந்தத்தையும் நினைத்துப் பார்ப்பானே யானால் இவ்வியக்கத்தின் பெருமை தானாக விளங்கும். சாதாரணமாக இவ்வியக்கம் தோன்றி மூன்று நான்கு வருடங்களுக்குள்ளாக மக்களுக்கு அது உண்டாக்கி இருக்கும் உணர்ச்சியைப் பார்த்தாலும் கூட, இவ்வியக்கம் அறிவு விடுதலை இயக்கமா அல்லவா என்பது நன்றாய் விளங்கும். நிற்க, தங்களுடைய சொந்த அறிவினாலும் ஆற்றலினாலும் பிழைக்க முடியாமல்...

திரு. மகமது நபி பிறந்த நாள் கொண்டாட்டம் 0

திரு. மகமது நபி பிறந்த நாள் கொண்டாட்டம்

எனது அன்பார்ந்த இந்து முஸ்லீம் சகோதரர்களே! இன்றைய தினமானது ஒரு பெரிய மகானின் பிறந்த தினமாகக் கொண்டாடப்படும் தினமாகும். ஆனால், அம்மகான் முகமதியர்களுக்கு மாத்திரம் சொந்த மானவர் என்றும், ஆதலால் அவர்கள் மாத்திரம்தான் அம்மகானின் பிறந்த நாள் கொண்டாட உரிமையுடையவர்களென்றும் நம்மில் பலர் நினைத்துக் கொண்டிருக்கலாம். அவ்வளவோடு மாத்திரமல்லாமல் அக்கூட்டத்தில் ஒரு இந்து என்பவனாகிய நான் எப்படித் தலைமை வகிக்கக் கூடுமென்றுகூட பலர் கருதலாம். மேலும் இவற்றிற்கு நான் சமாதானம் கூறும்போது எனது இந்து சகோதரர்கள் என்பவர்கள் பலர் என் மீதும் சந்தேகப்பட்டு நான் மகமதியர் களுக்கோ, மகமதிய மதத்திற்கோ வக்காலத்து வாங்கிப் பேசுவதாகவும் கருதலாம் என்றாலும் இந்துக்கள் என்பவர்கள் என்னைப் பற்றி எப்படிக் கருதுகிறார்கள் என்பதைப் பற்றி நான் சற்றும் கவலைப்படாமல் எனது மகமதிய சகோதரர்கள் என்னை இவ்விழாவில் கலந்து கொள்ள சந்தர்ப்ப மளித்ததுடன், மிகப்பெருமையான இவ்விழாவிற்குத் தலைமை வகிக்கும் கௌரவத்தையும் எனக்களித்ததற்கு முதன் முதலாக நான் என் மனப்பூர்வ...

காங்கிரசும் – தேசியமும் 0

காங்கிரசும் – தேசியமும்

சென்னை மாகாணத்தில் காங்கிரசின் யோக்கியதையும், தேசியத்தின் யோக்கியதையும் எவ்வளவு தூரம் வெளியாகிவிட்டது என்பதும் அதை பொதுஜனங்கள் எவ்வளவு தூரம் மதிக்கின்றார்கள் என்பதும் சமீப காலமாக சென்னை நகரிலும் வெளியிடங்களிலும் நடந்துவரும் நடவடிக்கை களிலி ருந்து நன்றாய் அறியலாம். உதாரணமாக “காங்கிரசின் முக்கிய கொள்கைகள் எல்லா ஸ்தல ஸ்தாபனங்களைக் கைப்பற்றுவதுதான்” என்பதாக இருந்தும் மற்றும் எல்லாக் கட்சிகளும் அதாவது சுயராஜ்ஜியக் கட்சி, சுயாட்சி கட்சி, தேசப் பிரதானக் கட்சி, உத்தியோகப் பிரதானக் கட்சி, தேசியக் கட்சி, சுயேச்சை கட்சி என்கின்ற இத்தனை கட்சிகளும் கூட இதையே அதாவது தேர்தல் ஸ்தாபனங்களை கைப்பற்ற வேண்டியதே முக்கிய கடமை என்பதாக இருந்தும் கூட இவ்வளவு கட்சிகளும் சேர்ந்து ஒரே அடியாய் ஜஸ்டிஸ் கட்சியை அழிக்க வேண்டும் என்றும் அதன் ஆதிக்கத்தை ஒழிக்கவேண்டும் என்றும் இரவு பகலாய் எழுதியும் தொண்டை கிழிய கத்தியும் போதாக் குறைக்கு கூலி ஆட்களையும் காலி ஆட்களையும் விட்டு கத்தும்படி செய்தும் கலகம்...

மதிப்புரை – “விமோசனம்” 0

மதிப்புரை – “விமோசனம்”

திரு.ராஜகோபாலாச்சாரியவர்களால் புதிதாக வெளியிடப்படும் “விமோசனம்” என்னும் மாத வெளியீட்டு முதற்பகுதி ஒன்று நமது பார்வைக்கு வந்திருக்கிறது. அதைப் பற்றி “திராவிடன்” எழுதியிருக்கும் தலையங்கமே “விமோசன”த்தைப் பற்றிய மதிப்புரையாகக் கொண்டு கீழே எடுத்துக் காட்டுகின்றோம். ( ப-ர் ) திரு.சி.ராஜகோபாலாச்சாரியார் அவர்கள் காந்தி ஆச்சிரமத்தில் இருந்து “விமோசனம்” என்னும் ஒரு மாதப் பத்திரிகையை ஆரம்பித்திருக் கிறார். அதன் இப்போதைய உத்தேசம் மதுவிலக்கையே உறுதி கொண்டதாய் காணப்படுகின்றது. ஆனாலும் மிஸ் மேயோ அம்மையார் இந்தியத்தாய் என்னும் புத்தகத்தை எழுதியிருப்பதில் அதில் உள்ள விஷயங்கள் எவ்வளவு சரியாயிருந்தாலும், இந்தியாவின் மீது வெளிநாட்டார் தப்பர்த்தம் கொள்ள வும், இந்தியா “சுயராஜ்ஜியத்திற்கு” அருகதை இல்லை என்று பிறர் நினைக் கவும் கருதி எழுதப்பட்டதாய் எப்படி சொல்லப் படுகின்றதோ, அப்படிப் போலவே, திரு.ஆச்சாரியாரின் “விமோசனம்” என்னும் பத்திரிகையையும் அதில் உள்ள விஷயங்களை எல்லாம் சரி என்றே வைத்துக் கொள்வதா னாலும் – அது பார்ப்பனரல்லாதார் சிறிதளவாவது இப்போது அரசியலில் பெற்று...

திரு.நடராஜன் 0

திரு.நடராஜன்

தஞ்சை திரு. த.நா. நடராஜனைத் தமிழ் உலகம் நன்கறிந்திருக்கும். அவர் “எனது திடம்” என்னும் தலைப்பின் கீழ் “நேர்வழிகண்டது” என்ற உள் தலைப்பிட்டு எழுதியிருக்கும் ஒரு பகிரங்க அபிப்பிராயத்தை மற்றொரு பக்கம் வெளியிட்டிருப்பதைப் பார்த்தால், அவரது தேச தொண்டின் ஆர்வமும், பொதுநலத் தியாகமும் நன்றாய் தெரியவரும். சுமார் 20 வருடகாலமாய் பொதுவாழ்க்கையில் ஈடுபட்டுழைத்திருக்கும் அவர், மற்ற இயக்கங்களோடு கலந்து இருந்து ஒவ்வொன்றையும் கவனித்துப் பார்த்துக் கடைசியாக சுயமரியாதை இயக்கத்தில் ஒருவாறு பற்றுக் கொண்டு அக் கொள்கைகளில் பலவற்றையும் ஏற்றுக் கொண்டு அவற்றிற்காக தனது வாணாளை உபயோகிக்கத் தீர்மானம் செய்து கொண்டிருக்கின்றார் என்பது விளங்கும். இவ்வித உறுதி கொண்ட மக்களையே இதுபோது உலகம் சிறப்பாக நமது நாடு எதிர்பார்ப்பதுடன் லட்சியம் கைகூடும்வரை ஒரே உறுதியுடன் நின்று அதற்காக சகலவிதமான தியாகத்தையும் எதிர்ப்பார்க் கின்றது. நிற்க அவரது கடிதத்தில் சுயமரியாதை இயக்கக் கொள்கைகளில் வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தையும், அரசியல் கொள்கையையும் தம்மால் ஒப்புக் கொள்ள முடியவில்லை...

மதுவிலக்குப் பிரசாரக் கமிட்டி 0

மதுவிலக்குப் பிரசாரக் கமிட்டி

சென்னை மாகாணத்தில் மதுவிலக்குப் பிரசாரம் செய்வற்குச் சென்னை அரசாங்கத்தாரைச் சம்மதிக்கும்படியான நிலைமைக்குக் கொண்டு வந்த பெருமை நமது கலால் மந்திரி கனம் எஸ்.முத்தையா முதலியார் அவர்களுக்கே உரியதாகும். அதுபோலவே. அப்பிரசார திட்டத்திற்கு வேண்டுமென்றே துர் எண்ணம் கற்பித்து மதுவிலக்குப் பிரசாரம் செய்தால் மதுபானம் அதிகமாகுமென்று சொல்லி அதை நிறைவேறாமல் செய்ய முயற்சித்த “புண்ணிய கைங்கர்ய”த்தின் பெருமை காங்கிரஸ் சுயராஜ்ய கட்சிக்கும் தேசீயக் கட்சிக்குமே முழுவதும் போய்ச்சேர வேண்டியதாகும். அது போலவே இவ்விஷம முயற்சியை வெற்றிபெற வொட்டாது தலையிலடித்து ஒழித்து, மந்திரியின் திட்டத்தை நிறைவேற்றிய பெருமை ஜஸ்டிஸ் கட்சியாருக்கே உரித்தானதாகும். கலால் மந்திரி கனம் திரு.முத்தையா முதலியார் அவர்கள் மது விலக்குப் பிரசாரத்திற்காக நான்கு லட்ச ரூபாய் ஒதுக்கி வைத்து அப் பிரசாரத்திற்கென்று மத்திய கமிட்டியைத் தாமாகவே ஏற்படுத்தியிருந்தாலும் அக்கமிட்டி நியமனத்தில் மிக்க கவலையுடனும் பொறுப்புடனும் நடுநிலைமை வகித்து உண்மையான பொறுப்புள்ள கனவான்களாகவும், பொதுநலத்திற்குழைக்கும் சகல ஸ்தாபனங்களுக்கும் வகுப்புகளுக்கும் பிரதிநிதித்துவம் உள்ளதாகவும், யாராலும்...

ஒரு பாலிய விதவையின் பரிதாபம்! “ஹிந்து தருமத்தின் மகிமை” 0

ஒரு பாலிய விதவையின் பரிதாபம்! “ஹிந்து தருமத்தின் மகிமை”

17.7.29 ந் தேதி அலகாபாத் ஹைகோர்ட்டில் நீதிபதிகள் எங், பெனட் ஆகிய இருவர் முன்னிலையிலும் ஒரு அப்பீல் வழக்கு வாதிக்கப்பட்டது. தீதுவானி கிராமம் நாராயணசிங்கர் மகள் இருபத்திரண்டு வயதுள்ள பீபியா என்னும் ஒரு பெண்ணுக்கு 5-வது வயதிலேயே மணம் முடிக்கப் பட்டது. அடுத்து ஆண்டில் புருஷன் இறந்து போனான். இவளுடைய ஜாதியில் விதவாவிவாக அநுமதி இல்லாமையால் பீபியா மரண பரியந்தம் விதவையாகவே காலம் கழிக்கும்படி நேரிட்டது. அவள் தன்னுடைய புருஷன் குடும்பத்திலேயே வாழ்ந்து வந்தாள். சென்ற ஆண்டில் கருத்தரித்து விட்டாள். இவள் மாடு மேய்த்துக் கொண்டிருக்கும் போது பிரசவ வேதனை கண்டு குழந்தையைப் பெற்றுக் குழி தோண்டிப் புதைத்துவிட்டாள். மாடு மேய்ப்பவர்கள் மூலம் பரவின செய்தி போலீசாருக்கு அறிவிக்கப்பட்டதும் அவர்கள் பீபியாவை சிசுக் கொலை செய்ததாக நீதிபதி முன்பாக நிறுத்தி னார்கள். பீபியாவுக்கு நீதிபதிகள் தீவாந்திர சிட்சை விதித்து மாகாண அரசாங் கத்தார் கருணைக்கும் சிபார்சு செய்திருக்கின்றனர். இந்து தருமத்தின் மகிமையே...

கடவுளும் மதமும்                                                  ( 2 ) 0

கடவுளும் மதமும் ( 2 )

இத்தலைப்புக் கொண்ட முதலாவது வியாசத்தில் கடவுளைப் பற்றி அதாவது கடவுள் என்கின்ற உணர்ச்சி மக்களுக்கு எப்போது எப்படி உண்டாயிற்று என்பதைப்பற்றியும், அவ்வுணர்ச்சி மக்களுக்கு எதுவரையில் இருக்க முடியும் என்பதைப்பற்றியும் சுருக்கமாகச் சிறிது எழுதி இருந்தோம். அதாவது மனிதன் உலகத் தோற்றத்திற்கும் நடப்பிற்கும் சம்பவங்களுக்கும் காரணம் கண்டுபிடிக்க முடியாத நிலையில் கடவுள் சக்தி என்றும், கடவுள் செயல் என்றும் நினைத்துக் கொள்ளுவதும், உதாரணமாக அவற்றிற்குக் காரண காரியம் தோன்றிய பின்பு அந்நினைப்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறி விடுவதும் சகஜம் என்பதாக குறிப்பிட்டு இருந்தோம். இந்த முறையிலேயே கொஞ்ச காலத்திற்கு முன் அநேக விஷயங்கள் கடவுள் செயல் என்று எண்ணியிருந்த மக்கள் விஞ்ஞான (சையன்ஸ்) ஆராய்ச்சி ஏற்பட்ட பிறகு அவ்வெண்ணத்தை மாற்றிக் கொண்டு அநேக விஷயங்களை மனிதன் செயல் என்று சொல்ல தைரியம் கொண்டுவிட்டார்கள். உதாரணமாக, கம்பியில்லாத் தந்தி விஷயத்தை எடுத்துக் கொள்ளுவோம். கம்பியில்லாத் தந்தி ஏற்படுத்தி இருக்கும் விஷயமும், அது எப்படிச் செய்யப்படுவது...

வைதிகர்களின் இறக்கம் 0

வைதிகர்களின் இறக்கம்

பெண்களுக்குக் கல்வி கற்பிக்கக்கூடாது. ஒரு பெண் தனது கணவ னையே தெய்வமாக மதித்துக் கீழ்ப்படிந்து நடக்கவேண்டும். அவர்களுக்குச் சுதந்தரமே கிடையாது என்று சனாதன தருமத்தின் பேராலும், சாஸ்திரத்தின் பேராலும், கடவுளின் பேராலும் இதுவரை கண்மூடித்தனமாகக் கூச்சல் போட்டுவந்த வைதிகர்களுக்கு இப்போதுதான் சிறிது சிறிதாகப் புத்தி உதயம் ஆகி வருவதாகத் தெரிகிறது. நமது சுயமரியாதை இயக்கத்தைப் பார்ப்பனர் களும் அவர்களுடைய கூலிகளும், “நாஸ்திக” இயக்கம் என்று கூறி பாமர மக்களை ஏமாற்றி வந்தாலும், நமது கொள்கைகளும், தீர்மானங்களும், பிரசாரமும் அவர்களை நேர் வழியில் நடக்கும்படி நிர்ப்பந்தித்து வருகின்றன என்பதிற் சந்தேகமில்லை. நாம் ஒவ்வொரு கூட்டத்திலும் மகாநாட்டிலும் பெண் மக்களின் பொருளாதார உரிமை, பாலிய விவாகம் ஒழித்தல், விதவா விவாகம் செய்தல் முதலிய நியாயமான உரிமைகட்காக பேசியும் தீர்மானங் கள் செய்தும் போராடி வருவது எல்லாருக்கும் தெரியும். சில நாட்களுக்கு முன்னர் திருவல்லிக்கேணியில் பெரிய பெரிய சாஸ்திரிகள் என்பவர்களும் பண்டிதர் என்பவர்களும் ஒன்று கூடி...

கண்ணப்பர் வாசக சாலைத் திறப்பு விழா 0

கண்ணப்பர் வாசக சாலைத் திறப்பு விழா

நேரம் மிகுதியாகி விட்டதால் நான் உங்களை அதிகமாகக் காத்திருக் கச் செய்ய விரும்பவில்லை. எனினும், நீங்கள் என்னை முக்கியமாய் பேசும்படி வற்புறுத்திக் கேட்டுக் கொண்டதை முன்னிட்டு உங்களுக்கு ஒன்றை மட்டும் குறிப்பாக எடுத்துக்காட்டிப் பேச விரும்புகின்றேன். ஆதி திராவிட மக்களாகிய நீங்களும் மனிதர்களேயாயினும் சமூக வாழ்க்கையில் மிருகங்களைவிடக் கேவலமாகத்தான் நடத்தப்படுகின்றீர்கள் என்பதை நீங்களே ஓப்புக் கொள்வீர்களென்று நம்புகின்றேன். உங்களுள் சிலர் ராவ் பகதூர்களாயும், ராவ்சாகிப்களாயும், மோட்டார் வாகனங்களிலும், கோச்சு களிலும் செல்லத்தக்க பணக்காரர்களாயுமிருக்கலாம். மற்றும் உங்களுள் ஞானமுள்ள அறிவாளிகளும், படிப்பாளிகளுமிருக்கலாம். எவ்வாறிருந் தாலும் அத்தகையவர்களையும் பிறந்த ஜாதியை யொட்டித் தாழ்மையாகத் தான் கருதப்பட்டு வருகின்றதென்பதை நீங்கள் மறுக்கமாட்டீர்கள். அதற்கு ஒரே ஒரு காரணந்தான் இருக்கிறதென்று சொல்ல வேண்டும். அது ஜாதி வித்தியாசக் கொடுமையே யாகும். ஆதிதிராவிடர்கள் என்றால் கோயிலரு கிலும் வரக்கூடாதென்கிறார்கள். அவர்களும் இந்துக்கள் தாமென ஒப்புக் கொள்ளப்பட்டபோதிலும் அவர்களை இழிவுபடுத்திக் கொடுமை செய்வதில் ஒரு சிறிதும் பின் வாங்குவதில்லை. இந்து...

காந்தியின் கண் விழிப்பு 0

காந்தியின் கண் விழிப்பு

கதர் விஷயத்தில் இப்போது இருக்கும் திட்டம் பயன்படாதென்றும், இது ஒரு பெண்மணிக்கு ஒரு மணி நேரம் வேலை செய்தால் ஒரு பை வீதம் தான் கூலி கிடைக்கக் கூடியதாய் இருக்கின்றதென்றும், அதுவும் அக்கதர்த் துணியை வாங்கி கட்டுகின்ற மக்கள் ஒன்றுக்கு இரண்டாகவோ மூன்றாகவோ அதிகப் பணம் கொடுத்து வாங்கினால் தான் முடியுமென்றும் மற்றபடி மில் துணி களுடனும் வெளிநாட்டுத் துணிகளுடனும் போட்டி போடுவதாயிருந்தால் நூற்கின்ற பெண்மணிகள் தங்கள் நூற்புக் கூலியையும் விட்டு மேல் கொண்டு மணிக்கு ஒரு பை வீதம் கையிலிருந்து காசு கொடுத்தால் தான் கட்டுமென்றும் சொல்லி வந்ததைச் சிலர் கதரின் மீதுள்ள மூடப்பக்தியால் நம்மீது ஆத்திரங் கொள்ளத் தொடங்கினார்கள். சிலர் நம்மீது பொது மக்களுக்குத் துவேஷம் உண்டாக்கக் கருதி தங்கள் விஷமப் பிரசாரத்திற்கு இதை ஒரு ஆயுதமாகவும் உபயோகித்தார்கள். நாம் எதற்கும் பின் வாங்காது உண்மையை தைரியமாய் எடுத்துச் சொல்லி கதரின் பயனற்ற தன்மையை எடுத்துக் காட்டிய பிறகு...

திரு. தண்டபாணியின் தொல்லை  சென்னை, ஆக°டு, 2 0

திரு. தண்டபாணியின் தொல்லை சென்னை, ஆக°டு, 2

‘திராவிடன்’ பத்திரிகைக்கு விளம்பரம் பிடித்துக்கொடுக்கும் ஏஜண்டாயிருந்த திரு.என். தண்டபாணிபிள்ளை திராவிடன் பத்திரிகைக்கு விளம்பரம் பிடித்துக்கொடுத்ததன் சம்பந்தமாக தமக்கு கமிஷனாகவும் தம் ஏஜண்ஸியை நிறுத்தித் தம்மை நீக்கியதன் சம்பந்தமாகத் தமக்கு மூன்று வருட நஷ்ட ஈடாகவும் மொத்தத்தில் பன்னீராயிரத்துச் சொச்சம் ரூபாய் சேர வேண்டுமென்று ஐகோர்ட்டில் திரு.ஈ.வெ.ராம சாமியார் மீது அசல் தரப்பில் கொண்டு வந்துள்ள வழக்கு சம்பந்தமாய் திரு. ராமசாமியார் திரு.ஸி.ஜெயராம் நாயுடுவுக்கு 13 ஆயிரம் ரூபாய் கடன் கொடுக்க வேண்டுமென்று பலவாறு புகார் சொல்லி அவ்வழக்கில் தீர்ப்பு சொல்லுமுன் திராவிடன் ஆபீ° சொத்துக்களை உடன் ஜப்தி செய்து வைக்க உத்தரவாக வேண்டுமென்றும், இல்லாவிட்டால் சொத்துக்களை பராதீனம் செய்து விட்டு ஊரைவிட்டு ஓடி விடுவாரென்றும் திரு. தண்டபாணி போட்டி ருந்த மனு நீதிபதி பண்டலே முன் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் சம்பந்தமாக செங்கல்பட்டு ஜில்லா போர்டு உபதலைவரான திரு.ஸி.ஜெயராம் நாயுடு அவர்கள் கோர்ட்டில் தாக்கல் செய்த பிரமாண வாக்கு மூலமொன்றில்,...

செங்கற்பட்டு ஜில்லாவில் பார்ப்பனீய மகாநாடு 0

செங்கற்பட்டு ஜில்லாவில் பார்ப்பனீய மகாநாடு

செங்கற்பட்டில் மாகாண சுயமரியாதை மாநாடு நடந்த பிறகு சில பார்ப்பன தாசர்களுக்கு அடியோடு செல்வாக்குப் போய்விட்டபடியால் அதை மறுபடியும் சம்பாதிப்பதற்கென்று சமீபத்தில் காங்கிரசின் பேரால் ஒரு மகாநாடு கூட்டினார்கள். அம்மகாநாடு கூட்டுவதற்கு சில நாளைக்கு முன்பிருந்தே திரு.இராஜகோபாலாச்சாரியாரைக்கொண்டு அவர் தனது தாசர்களுடன் அச்சில்லாவில் பல பாகங்களிலும் மதுவிலக்கின் பேரால் சுயமரியாதை இயக்கத்தையும் ஜ°டி° கட்சியையும் நினைத்தபடிக்கெல் லாம் தூஷித்தும் பழி சுமத்தியும் விஷமப்பிரசாரம் செய்தும் பார்த்தார்கள். என்னசெய்தும் வழிவழியாக வந்த பார்ப்பனதாசர்களைத் தவிர வேறுயாரும் அம்மகாநாட்டிற்கு செல்லவில்லை என்றே தெரிய வருகின்றது. சென்னையில் இருந்து திரு. எ°. சீனிவாசய்யங்கார் மாத்திரம் தன் சொந்த செலவில் ஒரு கூலிப்படையைத் திரட்டிக் கொண்டு போனார். மற்றபடி அம்மகாநாட்டில் நடந்த பிரசங்கங்களும் தீர்மானங்களும் பெரிதும் ஜ°டி° கட்சியையும் சுயமரியாதை இயக்கத்தையும் செங்கற்பட்டு ஜில்லா போர்டு பிரசிடெண்ட் திரு. ராவ்பகதூர் எம்.கே. ரெட்டியையும் அய்யங்கார் மெச்சும்படி வைததைத் தவிர வேறு ஒன்றும் செய்ததாக அவர்களாலேயே சொல்ல முடியாது...

வகுப்புவாரி பிரதிநிதித்துவம் 0

வகுப்புவாரி பிரதிநிதித்துவம்

நமது இந்திய நாடானது சுதந்திரமும் சுயமரியாதையும் பெற வேண்டுமானால் முதலாவது இந்திய மக்களுக்குள் ஒற்றுமையும் பரஸ்பர நம்பிக்கையும் ஏற்பட வேண்டும் என்பதும், அவ்வித ஒற்றுமையும் பரஸ்பர நம்பிக்கையும் ஏற்படுவதற்கு இடமில்லாமலிருக்கும்படியான அளவுக்கு இந்தியாவானது பல்வேறு மதங்களாகவும், தேசத்தார்களாகவும், ஜாதி களாகவும், அவற்றுள் அளவற்ற வகுப்புகளாகவும் பிரிந்திருக்கின்றது என்பதும் யாவருமே அறிந்த விஷயமாகும். இவ்வித்தியாசங்களை ஒழிப்ப தற்கென்று வெகு காலமாகவே அநேக பெரியார்கள் அரசியலில் பேராலும், சமூக இயலின் பேராலும் எவ்வளவோ பாடுபட்டுப் பார்த்தும் சிறிதும் பயன்படாமல் நாளுக்குநாள் புதிது புதிதாக மதங்களும் ஜாதிகளும், வகுப்பு களும் வளர்ந்து கொண்டு போவதல்லாமல் குறைந்து வந்ததாகவோ, அல்லது குறைவதற்குள்ள குறிகள் காணப்படுவதாகவோ சொல்லுவதற்கில்லாமலும் இருந்து வருகின்றது. இவைகளை யாரும் மறைத்துப் பேச முடியாதென்பதே நமது அபிப்பிராயம். அதிலும் என்று முதல் அரசாங்கத்தாரிடம் இந்தியர்கள் அரசியல் சுதந்தரம் கேட்பதென்றும், அரசாங்கத்தார் நமக்குச் சிறிது சிறிதாய்ச் கொடுப்பதென்றும் ஏற்பட்டதோ, அன்று முதல் அப்படிக் கொடுப்ப தென்பதும் பெருத்த...

கடவுளும் மதமும்                                                   ( 1 ) 0

கடவுளும் மதமும் ( 1 )

இவ்வாரத்திய தலையங்கம் கடவுளும் மதமும் என்று தலைப் பெயர் கொடுத்து எழுதப்புகுந்ததன் முக்கிய நோக்கம் என்னவெனில், சுயமரியாதை இயக்கம் நாட்டில் பரவ ஆரம்பித்தபிறகு அதிலும் அவ்வியக்கம் நாட்டில் சற்று செல்வாக்குப் பெறத் தொடங்கிய பின்பு மக்களுக்குள் தானாகவே ஒருவித குழப்ப உணர்ச்சி தோன்றியிருப்பதை உணர்கின்றோமாத லினாலேயாம். அதோடுகூட பார்ப்பனர்களும் பார்ப்பனரல்லாதார்களில் அரசியல், தேசீயம் ஆகியவைகளின் பேரால் பிழைக்கும் பிழைப்புக்காரர் களும், சமயம், புராணம், பிரசங்கம் ஆகியவைகளின் பேரால் பிழைக்கும் பிழைப்புக்காரர்களும் இவ்வியக்கத்தை எதிர்க்கக் கடவுளையும் மதத்தை யும் பற்றிய பொது மக்களின் குழப்பத்தைத் தங்களுக்கு ஆதாரமாய் வைத்துக் கொண்டும், மற்றும் திரித்துக் கூறிக் கொண்டும் விஷமப் பிரசாரம் செய்து வருவதானாலும், நமது இயக்கத்தில் உண்மையான பற்றுக் கொண்ட உண்மை நண்பர்களில் சிலர் இவ்விஷமப் பிரசாரத்தைக் கண்டு பயப் படுவதாகத் தெரிவதாலும், மற்றும் சில பெரியோர்களும், சமய சம்பந்தமாக மனத் துடிப்புக் கொள்வதாலும் நமது நிலையையும், கடவுள் மதம் என்பது பற்றி நாம்...

ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு 0

ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு

சென்னை நேபியர் பார்க்கில் (தில்லை வனத்தில்) ஆதி திராவிட சுயமரியாதை மகாநாடு கூடிய விபரம் மற்ற பக்கத்தில் வெளியாயிருக் கின்றது. அதில் ஒரு முக்கியத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து நாம் மகிழ்ச்சியடைகின்றோம். அதாவது:- “ஆறரைக் கோடி மக்கள் அடங்கிய எங்களுடைய பெரும் சமூகமானது இந்து மதத்தில் சேர்க்கப்பட்டிருப்பதன் நிமித்தம் தீண்டப்படாதவர்களாயிருப்பதாலும், அம்மதத்தில் சமத்துவ உரிமை இல்லாதிருப்பதாலும் இனி அடுத்து வருகின்ற சென்சஸ் கணக்கில் எங்களை இந்துக்கள் என்று பதியாமலிருக்கும்படியும், சர்க்கார் தஸ்தாவேஜுகளிலும் எங்களை இந்துக்கள் என்கின்ற பதவியிலிருந்து நீக்கிவிடும்படிக்கும் செய்யும்படி சர்க்காரையும், சட்டசபை அங்கத்தினர்களையும் இம்மகாநாடு வேண்டிக் கொள்ளுகின்றது.” என்பதாக தீர்மானித்திருக்கின்றது. திருவாங்கூர் ராஜ்யத்திலும் சுமார் 3 வருடங்களுக்கு முன்பாக முதுகுளத்தூர் என்கின்ற இடத்தில் கூடிய ஒரு எஸ்.என்.டி.பி. யோகத்தில் அதாவது ஈழவ சமுதாய மகாநாட்டில் இதை அநுசரித்து ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அதாவது “இந்து மதத்தில் மனித சுதந்திரம் இல்லாததால் இம்மதத்தை விட்டு வேறு மதத்திற்கு போய்விட வேண்டும்”...

கோவில் பிரவேசம் 0

கோவில் பிரவேசம்

வங்காளத்தைச் சேர்ந்த குல்னாகாளி கோவிலுக்குள் தீண்டாதார் எனப்படுவோர் செல்ல வேண்டுமென்று சத்தியாக்கிரகம் செய்து வந்ததும், அதனால் சிலர் கைதியானதும் சென்ற வாரப் பத்திரிகையில் தெரிந்திருக் கலாம். இப்போது இந்துக்கள் என்பவர்கள் எல்லோரும் தீண்டாதார் எனப்படுவோர் உள்பட தாராளமாய் கோயிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என்பதாக மேல் ஜாதியார் என்பவர்கள் ஒப்புக் கொண்டு ராஜி ஏற்பட்டு கைதியாக்கப்பட்டவர்களையும் விடுதலை செய்துவிட்டார்கள். குடி அரசு – செய்திக் குறிப்பு – 21.07.1929

சென்னை காங்கிரஸ் கமிட்டி 0

சென்னை காங்கிரஸ் கமிட்டி

இந்த வருஷம் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கூட்டங்கள் கூடுமிடங் களிலெல்லாம் தகராறு இல்லாமல் நடைபெறுவதாகக் காணவில்லை. வேதா ரண்ய மகாநாட்டுத் தலைவர் தேர்தல் சூழ்ச்சிகள் தமிழ்நாடு பத்திரிகையில் இருந்து தெரிந்திருக்கலாம். சென்னை காங்கிரஸ் கமிட்டி கூட்டம் சென்னை மவுண்ட்ரோட் மகாஜன சபை மண்டபத்தில் திரு. சீனிவாசய்யங்கார் காலிகளைக் கொண்டு போய் வைத்துக் கொண்டு கூட்டங்கூட்டியிருப்பதாய்த் தெரிகின்றது. அப்படி இருந்தும் அய்யங்காருக்கு விரோதமான கூட்டமே மெஜாரிட்டியாக வந்து கூடிவிட்டார்கள். திரு.சத்தியமூர்த்தி அக்கிராசனம் வகித்து, நமக்கு வேண்டிய வர்கள் போக, மற்றவர்கள் ஓட்டுச் செய்யாமலிருக்கும்படியாக தந்திரமாய் இத்தனையாந் தேதிக்குமேல் அங்கத்தினரானவர்கள் தவிர மற்றவர்கள் ஓட்டுக் கொடுக்கக் கூடாது என்று ரூலிங் கொடுத்துவிட்டாராம். அதன் பேரில் திரு.சத்தியமூர்த்தி, திரு. கிருஷ்ணசாமிப் பாவலர் என்பவரை ஏவிவிட்டுக் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களை கன்னா பின்னா என்று வையச் சொன்னாராம். கூட்டம் தைரியமாய் எதற்கும் தயாராயிருந்து எதிர்க்கவே திரு.அய்யங்காரும் அவரது தாசர்களும், கூலிகளும் எழுந்து ஓடிப்போய் விட்டார்களாம். பிறகு மற்றவர்கள் இருந்து...

சென்னை ஆதிதிராவிடர்  சுயமரியாதை மகாநாடு 0

சென்னை ஆதிதிராவிடர் சுயமரியாதை மகாநாடு

சகோதரர்களே! ஆதிதிராவிட சமூகத்தின் பேரால் சுயமரியாதை மகாநாடு கூட்டப் பட்டிருப்பதைக் கண்டு நான் மிகுதியும் மகிழ்ச்சி அடைகின்றேன். சிலர் சுயமரியாதை என்கின்ற பெயர் தங்களுக்குப் பிடிக்கவில்லை என்றும், ஆனால் அதன் கொள்கைகள் எல்லாம் சரியென்றும் மிக்க அவசியமான தென்றும் சொல்லுகின்றார்கள். அதற்குக் காரணம் என்னவென்றால் அந்த பெயரிலிருந்து தங்களுக்குச் சுயமரியாதை இல்லை என்று அர்த்தம் ஏற்படுகின்றதாம். இதற்கு நான் சொன்ன பதில் என்ன வென்றால் நமக்குச் சுயமரியாதை இருக்கின்றதா இல்லையா? என்பது வேறு விஷயம் என்றும் சுயமரியாதை சங்கம் என்று பெயரிடுவதாலேயே அதில் சேர்ந்தவர்கள் சுயமரியாதை அற்றவர்கள் என்கின்ற அருத்தமாகாதென்றும் அப்படியானால் இப்போது பலர் சன்மார்க்க சங்கம் என்பதாக பல சங்கங்கள் ஏற்படுத்து கின்றார்களே அச்சங்கங்களில் அங்கத்தினர்களாயிருப்பவர்களுக்குச் சன்மார்க்கமில்லை யென்பது பொருளா? என்றும், அச்சங்கம் ஏற்படுத்துபவர் கள் துன்மார்க்கர்களா? என்றும்தான் பதில் கேட்டேன். தவிர உண்மை யிலேயே நமக்குச் சுயமரியாதை உணர்ச்சி இருக்கின்றதா என்பதையும் சற்று யோசித்துப் பாருங்கள். முதலாவது உங்களைப்...

சம்மத வயது கமிட்டி  மதமும் சீர்திருத்தமும் 0

சம்மத வயது கமிட்டி மதமும் சீர்திருத்தமும்

இளங்குழந்தைகளின் கலியாணங்களைத் தடுப்பதற்காக நமது நாட்டில் வெகு காலமாகவே முயற்சிகள் செய்யப்பட்டு வந்தாலும் அவை பயன்படாதிருக்க எதிர்முயற்சிகளும் செய்யப்பட்டு காலம் கடத்திவரும் விஷயம் தமிழ் மக்கள் அறிந்ததாகும். ஆனால் சமீப காலத்தில் மற்ற மேல் நாடுகளின் முற்போக்கைப் பார்த்த சிலர் இப்போது இதுவிஷயமாய் தீவிர கிளர்ச்சி செய்ய ஆரம்பித்ததன் பலனாகவும், தேக தத்துவ சாஸ்திரத்தின் முறைப்படியும், வைத்திய சாஸ்திர முறைப்படியும், குழந்தை மணங்களினு டையவும், குழந்தைச் சேர்க்கைகளினுடையவும், குற்றங்களை மக்கள் அறியத் தொடங்கியதன் பயனாகவும், பாமர மக்களுக்குச் சற்று கல்வியும் உலக அறிவும் எட்டுவதற்கு இடமேற்பட்டதன் பலனாகவும், குழந்தைகள் விவாகத்தைத் தடுக்க வேண்டுமென்கின்ற முயற்சியோடு குழந்தைகளின் சேர்க்கையையும் அதாவது சரியான பருவம் அடைவதற்கு முன் ஆண் பெண் சேர்க்கை கூடாது என்பதாகவும் கருத இடமேற்பட்டு, அவற்றைத் தடுக்க சட்டங்கள் செய்யவும் முற்பட்டு, சட்டசபைகளில் மசோதாக்கள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. நமது அரசாங்கத்தார் என்பவர்கள் நம் நாட்டைப் பொறுத்தவரை நமது நாட்டுப் பார்ப்பனர்களைப் போலவே சுயநலக்காரரும்...

தேவஸ்தானக் கமிட்டி              ஈ.வெ.ராமசாமியார் ராஜிநாமா 0

தேவஸ்தானக் கமிட்டி ஈ.வெ.ராமசாமியார் ராஜிநாமா

திரு. ஈரோடு சர்க்கிள் தேவஸ்தானக் கமிட்டி பிரசிடெண்டு அவர்களுக்கும், மெம்பர் கனவான்கள் அவர்களுக்கும், மேற்படி கமிட்டி வைஸ் பிரசிடெண்டு ஈ.வெ.ராமசாமி வணக்கமாய் எழுதிக் கொண்டது:- கனவான்களே! மேற்படி கமிட்டியின் பொது மீட்டிங்குக்கும் ஸ்பெஷல் மீட்டிங்குக்கும் 4. 7. 29 ம் தேதி போடப்பட்டிருக்கும் அஜண்டா நோட்டீஸ் எனக்கு சென்னையில் கிடைத்தது. மேற்படி நோட்டீசானது என் கைக்குக் கிடைப்பதற்கு முன்பாகவே அந்த தேதியில் ஒரு முக்கியமான காரியத்திற்காக நான் சென்னையில் இருக்க வேண்டியதாய் ஏற்படுத்திக் கொண்டுவிட்ட படியால் குறிப்பிட்ட மீட்டிங்குகளுக்கு ஆஜராக முடியாததற்கு வருந்துகிறேன். நிற்க, மேற்படி 4-ந் தேதியில் ஏற்பாடு செய்திருக்கும் மற்றொரு மீட்டிங்கான ஸ்பெஷல் மீட்டிங்கில் குறிப்பிட்ட தீர்மானமானது சற்று முக்கியமானதென்றும், ஒரு தடவை இதே கமிட்டியாரால் செய்யப்பட்ட ஒரு தீர்மானத்தைக் கான்சல் செய்யத்தக்கதாய் இருப்பதால் அப்படி கான்சல் செய்யப்படுவதானது எனது முக்கிய கொள்கையை பாதிக்கக் கூடியதென்றும், மேலும் தேசத்தின் பொதுநல முற்போக்குக்கும், மனிதத்தன்மையின் உரிமைக்கும் நீதிக்கும் விரோதமானதென்றும் நான்...

காங்கிரசின் யோக்கியதை 0

காங்கிரசின் யோக்கியதை

இந்திய தேசீய காங்கிரசின் யோக்கியதைக்கும் கட்டுப்பாட்டிற்கும் தேசத்தில் எவ்வளவு மதிப்பும் செல்வாக்கும் பின்பற்றுபவர்களும் இருக்கின்றார்கள் என்பதற்குக் காங்கிரஸ் நிர்வாகக் கமிட்டியினுடையவும், திரு.காந்தியவர்களுடையவும் தீர்மானங்களின் கதியும் பின்பற்றுபவர்களின் யோக்கியதையும் பார்த்தால் விளங்காமற் போகாது. முதலாவது சர்வ கட்சி மகாநாட்டு தீர்மானம் என்பதை முஸ்லீம்களில் நூற்றுக்கு 97 பேர் மறுத்தும், தாழ்த்தப்பட்ட மக்களில் 100-க்கு 99 முக்காலே மூன்று வீசம் பேர் மறுத்தும், பார்ப்பனர்களில் 100-க்கு 95 பேருக்கு மேலாகவே வைதீகர்கள் என்பவர்களும் மறுத்ததோடு மற்றும் பார்ப்பனரல்லாதவர்களிலும் இந்து மகாசபையின் மூலமும் பார்ப்பனரல்லாதார் சபையின் மூலமும் அது மறுக்கப்பட்டு விட்டது. பொதுவாகச் சொல்ல வேண்டுமானால் 33 கோடி இந்தியர்களில் அரசியல் பேரால் பிழைக்க இருக்கும் சிலராகிய விரல் விட்டெண்ணத் தக்கவர்கள் தவிர மற்றவர்கள் எல்லோரும் ஆட்சேபித்துவிட்டார்கள் என்றே சொல்ல வேண்டும். அதுவும் எந்தக் காரணத்தால் மறுத்தார்கள் என்று பார்ப்போமானால் அது எல்லாவற்றையும் விட வேடிக்கையான சங்கதியாகவே தோன்றும். உண்மையில் அரசியல் திட்டம் என்பதாகிய குடியேற்ற...

ஈரோடு ஆலயப் பிரவேசம் 0

ஈரோடு ஆலயப் பிரவேசம்

ஈரோடு சர்க்கிள் தேவ°தானக் கமிட்டியார் 30-3-29 ல் செய்த தீர்மான மானது இதுவரையில் மாற்றப்படவில்லை. ஆனால் “தமிழ்நாடு” பத்திரி கையாலும், அதன் நிருபர்களாலும் திரு. வரதராஜுலுவாலும் இவ்விஷயத் தில் தங்களுக்கு ஏற்பட்ட பொறாமையால் எவ்வளவு தூரம் கேவலமான முறைகளில் மேற்படி தீர்மானத்திற்கு எதிரிடையாக விஷமம் செய்யப்பட முடியுமோ அவ்வளவும் விடாமல் செய்யப்பட்டு வருகின்றது. முதலாவதாக இத்தீர்மானம் செய்யப்பட்டபொழுதே இதைத் திரித்துக்கூறி தலையங்கம் எழுதிற்று. பிறகு சென்ற மாதத்தில் திருப்பூரில் கூடின தேவ°தான கூட்டத் தில் இத்தீர்மானம் நீக்கப்பட்டு விட்டதென்றும், சுயமரியாதைக்காரர்கள் குட்டிக்கரணம் போட்டுவிட்டார்கள் என்றும் மனதறிந்த பொய்யை வேண்டு மென்றே திரு. ராமசாமி மீது மக்களுக்கு ஒருவித வெறுப்பை உண்டாக்க பிரசாரம் செய்தது. இதை நாம் மறுத்து எழுதிய பிறகும், அது மனிதத் தன்மை முறையில் நடைபெறும் பத்திரிகையாயிருக்குமானால் அது தனது தவறு தலுக்கு வருந்தியிருக்கும். அப்படிக்கில்லாமல் மேலும் அதே காரியத்தை செய்யும் துறையில் முனைந்து நிற்கின்றது. அதாவது 8-7-29 ல்...

தமிழ்நாடு மாகாண மகாநாடு 0

தமிழ்நாடு மாகாண மகாநாடு

தமிழ்நாடு மாகாண மகாநாடு வேதாரண்யத்தில் கூடுவதாக இரண்டு மூன்று மாதமாக பத்திரிகைகளில் பெருத்த விளம்பரங்களும், ஆடம்பரங்களும் நடைபெற்றன. தமிழ்நாடு மாகாண மகாநாடு சென்னையில் 1926-ல், கோகலே ஹாலில் நடந்த பிறகு 27லும் 28லும் நடைபெற முடியாமலே போய்விட்டது வாசகர்களுக்குத் தெரியும். ஆனால் இந்த வருஷம் தேர்தல் வரக்கூடும் என்று கருதி, அதுவும் கனம் திரு.முத்தையா முதலியார் அவர்களை எப்படியாவது தோற்கடிக்க வேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீது தனியாகவே பார்ப்பனர்களால் வேதாரண்யத்தில் மகாநாடு ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்காக கூலிகளை விட்டும் எவ்வளவோ பிரசாரமும் செய்யப்பட்டது என்றாலும், அந்த மகாநாட்டுத் தலைமைப் பதவியை ஏதாவது ஒரு பார்ப்பனரல்லாதார் தலைமை வகிக்க ஏற்பட்டு விட்டால் தங்கள் ஜில்லாவின் பெருமைக்கு ஹானி வந்துவிடும் என்றும், அவர்களால் ஏதாவது வகுப்பு விஷமம் புகுத்தப்பட்டு விடுமென்றும் கருதி ஒரு பார்ப்பனரைத் தலைவராக்கக் காங்கிரசு ஆபீஸ் சிப்பந்திகளும், காங்கிரசு பார்ப்பனத் தலைவர்களும் ஊர் ஊராய்ச் சென்று விஷமப் பிரசாரம் செய்து திரு.சத்தியமூர்த்தியைத்...

திருவாங்கூரில் பத்மநாப சுவாமி ராஜ்யம் 0

திருவாங்கூரில் பத்மநாப சுவாமி ராஜ்யம்

திருவாங்கூர் அரசாங்கம் வரவர அசல் ராமராஜ்யமாக மாறி சுயராஜ்ய தேசமாகி வருகின்றது. எனவே, இனி உலகத்தில் யாருக்காவது ராமராஜ்யத் தில் வசிக்கவோ, சுயராஜ்யத்தில் வசிக்கவோ வேண்டுமென்கின்ற ஆசை யிருக்குமானால், அவர்கள் தயவு செய்து மற்ற இடங்களை ராமராஜ்யமாக் கவோ, சுயராஜ்யமாக்கவோ முயற்சிக்காமல் பெண்டுபிள்ளைகளுடன் திருவாங்கூர் ராஜ்யத்திற்கு போய்க் குடியிருந்து கொள்ள வேண்டுமாய்க் கேட்டுக் கொள்ளுகின்றோம். ஏனெனில், திருவாங்கூர் சமத்தானம் ராம ராஜ்யத்திலும் நம்முடைய பழைய சுயராஜ்ஜியத்திலும் இருந்தது போலவே சாதிகளைக் காப்பாற்ற மிக்க முயற்சி எடுத்துக் கொண்டு வருகின்றது. திருவாங்கூர் ராஜ்யமானது இன்றைய தினம் “சாட்சாத் மகாவிஷ்ணு”வினால் ஆளப்பட்டு வரும் ராஜ்யமாகும். எப்படியென்றால், திருவாங்கூர் ராஜ்யம் பத்மநாப சாமிக்குச் சொந்தமானது. இப்போதிருக்கும் திருவாங்கூர் ராஜாவும் ராணிகளும் பத்மநாப சுவாமியின் தாசர்களாய் (அடிமையாய்) அவருக்குப் பதிலாக ஆளும் பிரதிநிதிகளாவார்கள். பத்மநாம சுவாமி என்பதோ “மகா விஷ்ணு”வாகும். எனவே “மகாவிஷ்ணு”வின் அவதாரமாகிய ராம ராஜ் யத்தைவிட மகாவிஷ்ணுவே நேராகத் தமது தாசர்களையும் தாசிகளையும் விட்டு...

திரு. ஆர்.எ°. நாயுடுவின் பெருந்தன்மை. 0

திரு. ஆர்.எ°. நாயுடுவின் பெருந்தன்மை.

மதுரை முனிசிபல் சேர்மென் திரு.ஆர்.எ°. நாயுடு அவர்களைத் தமிழ்நாட்டவர்கள் நன்கு அறிவார்கள். அவர் பழம் பெரும் கீர்த்தி வாய்ந்த நாயுடு குடும்பத்தில் தோன்றி மேல் நாட்டுக்குச் சென்று படித்து பாரி°டர் பரீட்சையில் தேறி மதுரை ஜில்லாவில் ஒரு பிரபல வக்கீலாக இருந்தவர். அவருடைய நாணயத்தையும் பெருந்தன்மையையும் சாமார்த்தியத்தையும், அறிந்த மதுரைவாசிகள் அவரை மதுரை நகர முனிசிபல் கவுன்சிலுக்குச் சம்பளம் பெறும் சேர்மெனாகத் தெரிந்தெடுத்து அவரிடம் முனிசிபல் ஆட்சியைப் ஒப்புவித்தார்கள். அவர் சற்று பார்ப்பனரல்லாதார் உணர்ச்சியு டையவராதலால் மதுரைப் பார்ப்பனர்கள் அவருக்கு பலவிதத்திலும் தொல்லை விளைவித்து வந்தும் அதாவது சென்னை கார்ப்பரேஷனில் திரு.ஜெ. வெங்கிட்ட நாராயண நாயுடு அவர்களைச் சுயராஜ்ஜியக் கட்சியின் பெயரால் சென்னை பார்ப்பனர்கள் நசுங்குச் சேட்டைகள் செய்து வந்தது போல் செய்து வந்தார்கள். திரு.ஆர்.எ°. நாயுடு அவர்கள் அவ்வளவையும் சமாளித்து தைரியமாய் நின்று மேற்படி பார்ப்பனர்களுடைய சூழ்ச்சி களுக்கும் விஷமங்களுக்கும் சற்றும் சளைக்காமல் ஒரே முகமாய் நின்று அம்முனிசிபாலிட்டியை முன்...

வரதராஜுலுக்கும் ஒரு கட்சி 0

வரதராஜுலுக்கும் ஒரு கட்சி

திரு.பி.வரதராஜுலுக்கு தனக்கு ஒரு கட்சி இருக்கவேண்டுமென்று அவர் பொது வாழ்வில் இறங்கினது முதல் வெகுகாலமாய் பிரயத்தனப் பட்டுக் கொண்டுவரும் விஷயம் யாவரும் அறிந்ததேயாகும். இதற்கு ஏற்ப அவரால் அது முதல் இதுவரை பெற்றெடுக்கப்பட்டு சாகக் கொடுத்த கட்சிகள் இவ்வளவென்று அவருக்கே ஞாபகமில்லாமல் இருக்கலாம். திருப்பூரிலும், சேலத்திலும், சென்னையிலும் மற்றும் வெளியிடங்களிலும் எத்தனையோ கட்சிகள் அவரால் உற்பத்தி செய்யப்பட்டு அழுவாரற்று அழிந்துபோனது கணக்கு வழக்கிலடங்கக் கூடியதல்ல. கட்சி ஏற்படுத்துவதற்காக திரு.வரத ராஜுலுவால் கூட்டப்படும் கூட்டங்களுக்கே ஜில்லாவுக்கு இத்தனை பேர்தான் வரவேண்டும் என்று பொதுவாக பத்திரிகையில் விளம்பரப் படுத்துவதும், ‘தமிழ் நாடு’ ஆபீசில், ஆபீஸ் சிப்பந்திகளையும், சில பிரசாரக் காரரையும் வைத்து கூட்டம் நடத்தினதாக ஏற்பாடு செய்து தான் தலைவ ராகவும், மற்றும் சிலர் தனது சகா நிர்வாகக் கூட்டத்தார்களாகவும் பத்திரிகை களுக்குச் செய்தி அனுப்பி பிரசுரிக்கச் செய்வதும் தவிர, இதுவரை ஒரு கட்சியாவது ஏற்பட்டதற்கு மறுநாள் உயிருடனிருந்து எந்த வேலை யாவது செய்ததாக...

தமிழர் சங்கம் 0

தமிழர் சங்கம்

சென்னையில் சீர்திருத்தத்திற்காகத் தமிழர் சங்கம் என்பதை திருத்தி அமைக்கப்பட்டு இருக்கின்றது. இச்சங்கத்தை ஆதியில் தோற்றுவித்தவர் பச்சையப்பன் கலாசாலைத் தமிழ்ப் பண்டிதர். திரு.மணி திருநாவுக்கரசு முதலியார் ஆவார். இவர் சைவ சமயப்பற்றுடையவர். தமிழ்ப் பாஷை, கலை இலக்கிய, இலக்கணம் ஆகியவைகளில் வல்லவர் எனினும் சமயமும், கலையும், பாஷையும் நாட்டிற்கும் பொதுமக்களுக்கும் பயன்படாமல் ஒரு சிறு துறையாகிய அதுவும் ஜாதி மத சமயத் துறையையே முக்கியமாய் பற்றிக் கொண்டிருப்பதால் நாட்டில் அவர்களின் வளர்ச்சி குன்றிவருவதை அறிந்து, அவைகள் உண்மையில் வளர்ச்சி பெறவும் நாட்டின் பொது நலத்திற்கும் பயன்படவும் ஏற்றவாறு செய்ய எண்ணி அச்சங்கத்தை முன் குறிப்பிட்டபடி சமூக சீர்திருத்தத் துறைக்குத் திருத்தி அமைத்து அதற்கு தற்கால தேவைக் கேற்றபடி கொள்கைகளையும் வகுத்து அக்கொள்கைகளைப் பரப்புவதற்கேற்ற நிர்வாக சபையையும் அமைக்கப்பட்டிருக்கின்றதாக அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகின்றோம். சங்கத்தின் முக்கியக் கொள்கைகள் தீண்டாமை ஒழிப்பது, மது பானத்தை விலக்கச் செய்வது, சுகாதாரத்தை ஏற்படுத்துவது, தமிழ் மொழியை வளர்ப்பது,...

திரு. சொ.முருகப்பர் 0

திரு. சொ.முருகப்பர்

உயர்திரு. சொ.முருகப்பர் அவர்களுக்கும் திரு.மரகதவல்லிக்கும் மணம் நடந்த செய்தி மற்றொரு பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டிருக்கின்றது. திரு.முருகப்பர் அவர்கள் இம்மணம் செய்து கொண்டதன் மூலம் பெண்கள் உலகத்திற்கு ஓர் பெரிய உபகாரம் செய்தவராவார். நாட்டில் உள்ள கஷ்டங்களை எல்லாம்விட பெண்களின் விதவைத் தன்மையின் கொடுமையை பெரிய கஷ்டம் என்று சொல்லுவோம். நமது நாட்டு நாகரிகம், ஒழுக்கம், சமயப் பற்று, கடவுள் பற்று என்பவைகள் எல்லாம் நன்மையான காரியங்களைப் பற்றி சற்றும் கவலை செய்யாமல் அடியோடு அலட்சியமாய் விடப்பட்டிருப்பதோடு கெடுதலா னதும் நியாயத்திற்கும் மனிதத் தன்மைக்கும் விரோதமானதுமான காரியங்களைக் கெட்டியாய்க் குரங்குப் பிடியாய் பிடித்துக் கொண்டிருக் கின்றன. இந்நிலையில் இவைகளைத் திருத்துவது என்பது சுலபத்தில் முடியக்கூடிய காரியமல்ல. அன்றியும் அதில் பிரவேசிப்பவர்களுக்கு ஏற்படும் கஷ்டம், நஷ்டம், பழிச்சொல் ஆகியவைகளும் கொஞ்ச நஞ்சமல்ல. அப்படிப்பட்ட கஷ்டமான காரியத்தில் திரு.முருகப்பர் அவர்கள் பிரவேசித்து திருத்த முற்பட்டது பெருத்த தியாக புத்தியும் வீரமுமான காரியம் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தக்...

அனுதாபம் 0

அனுதாபம்

நாடார் மகாஜன சங்கத்து மாஜி தலைவரும், பிரபல செல்வந்தரும் பழம் பெருங்கீர்த்தி வாய்ந்தவரும் தற்போது நாடார் சங்கத்துத் தலைவர் திரு.கனகசபை நாடார் அவர்களின் சகோதரருமான, பொறையார் பாலகுரு சாமி நாடார் 5-ந் தேதி வெள்ளிக்கிழமை இரவு தனது 32-ம் வயதில் காலஞ்சென்ற விவரம் அறிந்து துக்கமடைவதுடன் அவரது குடும்பத்தாருக் கும் சகோதரருக்கும் நமது அநுதாபத்தைத் தெரிவித்துக் கொள்ளுகிறோம். ( ப.ர். ) குடி அரசு – இரங்கல் செய்தி – 07.07.1929

பார்ப்பனரல்லாத மாணவர் படிப்பின்	கஷ்டமும் பார்ப்பன உபாத்தியாயர்களின் கொடுமையும் 0

பார்ப்பனரல்லாத மாணவர் படிப்பின் கஷ்டமும் பார்ப்பன உபாத்தியாயர்களின் கொடுமையும்

எங்கு பார்த்தபோதிலும் பார்ப்பன உபாத்தியாயர்களின் கொடுமை யானது சகிக்க முடியாத அளவில் பெருகிக்கொண்டே வருவதாக தினமும் நமக்குச் சங்கதிகள் எட்டிக் கொண்டே வருகின்றன. அவற்றுள் அநேகம் வெளியிடவே மனம் கூசுகின்றது. அரசாங்கக் கல்வி இலாகா மந்திரி ஒரு பார்ப்பனரல்லாதாராயிருந்தும் ஸ்தல ஸ்தாபனங்களின் தலைவர்களும், மற்றும் தனிப்பட்ட பள்ளிக் கூடங்களின் நிர்வாகஸ்தர்களும் பார்ப்பன ரல்லாதாரராகவே இருந்தும் பார்ப்பனரல்லாத பிள்ளைகளின் கஷ்டம் சற்றாவது நிவர்த்தியானதாகக் காண்பதற்கில்லை. இனி சீக்கிரத்தில் நிவர்த்தி யாவதற்கு மார்க்கம் ஏற்படும் என்றும் கருதுவதற்கில்லை. இதற்கு முக்கிய காரணம் என்னவென்று பார்ப்போமானால் அநேகமாய் கல்வி இலாகா உத்தியோகங்களில் பெரிதும் பார்ப்பனர்களே அதிகாரிகளால் இருந்து வருவதும், பரீட்சை அதிகாரிகளும் பார்ப்பனர்களாகவே இருந்து வருவதும் அவர்களது சலுகைக்குப் பாத்திரமான உபாத்தியாயர்களும் தலைமை உபாத்தியாயர்களும் பார்ப்பனர்களாகவே இருந்து வருவதும் தவிர வேறு காரணம் சொல்வதற்கில்லை என்றே சொல்லுவோம். யோக்கியமாகவும், நியாயமாகவும் பேசுவோமேயானால் கல்வி இலாகாவில் பார்ப்பனர்கள் என்பவர்கள் கண்டிப்பாய், அதிகாரியாகவோ உபாத்தியாயர்களாகவோ இருக்கக் கூடாதென்றே சொல்லுவோம்....

மரகதவல்லி மணம் மறுமணமும் கலப்பு மணமும் கலந்த காதல் மணம் 0

மரகதவல்லி மணம் மறுமணமும் கலப்பு மணமும் கலந்த காதல் மணம்

அருமை மணமக்களே! இங்கு கூடியுள்ள சகோதரிகளே! சகோதரர் களே! இங்கு நடைபெற்ற மணத்தைப் பார்த்த பின்பு சீர்திருத்த மணமென்பது எத்தகையது என்பது இப்போது உங்களுக்கு நன்றாய் விளங்கியிருக்கும். பண்டைக் காலத்திலும் நம் நாட்டில் இம்முறையில்தான் மணங்கள் நடை பெற்று வந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். ஆனால் இடையில் இம்முறை எப்படி மாறிற்று என்பதுதான் அதிசயமாய் இருக்கின்றது. இப்போது நம் நாட்டில் நடைபெற்றுவரும் மணங்கள் பெரிதும் மணத்தின் உண்மைத் தத்துவமற்றதும், அர்த்தமற்ற வெறும் சடங்கையே முக்கியமாக கொண்டதுமாய் நடைபெறுகின்றன. மணமக்கள் தங்களுக்குள் செய்து கொண்ட ஒப்பந்தத்தை காப்பாற்று தற்குப் பலர் முன் உறுதிப்படுத்துவதற்காக ஏற்படுத்தப்பட்ட மண முறை யானது தற்காலம் வெறும் சடங்குகளையும் அர்த்தமற்ற பழக்க வழக்கங் களையும் காப்பாற்றும் முறையாய்த் திகழ்கின்றது. மணத்தின் லட்சியம் முழுவதும் சடங்காய் ஏற்பட்டுவிட்டது. இயற்கை எழுச்சியாலும் உணர்ச்சி யாலும் ஏற்படவேண்டிய மணம் செயற்கையில் நிகழ வேண்டியதாய்விட்டது. அது போலவே, இயற்கைக் காதலும் இன்பமும்கூட செயற்கைக் காதலாகவும் இன்பமாகவும்...

அருஞ்சொல் பொருள் 0

அருஞ்சொல் பொருள்

அப்யசிக்கின்றவர்கள் – பயிலுகின்றவர்கள் அம்மன்காசு – ரூபாயில் 320 இல் ஒரு பங்கு மதிப்புள்ள காசு ( 1 ரூபாய் = 16 அணா ; 1 அணா = 20 அம்மன் காசு ) அந்நியோன்யம் – ஒற்றுமை, ஒன்றிப்பு அனாதரக்ஷகன் – ஆதரவற்றோரைப் பாதுகாப்பவன் ஆபத்பாந்தவன் – இடரில் உதவுவோன் ஆப்த – நம்பகமான ஆஸ்பதம் – இடம், பற்றுக்கோடு இகத்தை ( இகம் ) – இவ்வுலகம் ( பரம் – மறு உலகம் ) இரசவாதம் – இரும்பு போன்றவற்றை தங்கமாக மாற்றுதல் உபதானம் – அரிசி பிச்சை உபத்ரவித்தல் – தொல்லை படுத்தல் உயிர்பித்துக்கொண்டு – உயர்த்திக்கொண்டு கடாக்ஷித்து – அருள் பாலித்து கண்டனை – கண்டித்தல், எச்சரித்தல் கனதனவான்கள் – செல்வந்தர்கள் கன்மனம் – கல் மனம் சிலாக்கியம் – மெச்சத் தகுந்தது சுதாவாய் – தானாக, தன்விருப்பமாக சுவதந்திரியம் – சுதந்திரம்...

நல்ல வர்க்கம் – சித்திரபுத்திரன் 0

நல்ல வர்க்கம் – சித்திரபுத்திரன்

நமது நாட்டில் கல்யாணம் செய்வதில் பெற்றோர்கள் தங்கள் பிள்ளை களுக்கு பெண் தேடுவதிலோ, மாப்பிள்ளை தேடுவதிலோ நல்ல வர்க்கமாக இருக்க வேண்டும் என்கின்ற சாக்கைச் சொல்லிக் கொண்டு பணக்காரர்கள், பிரபுக்கள் வீட்டிலேயே போய் சம்மந்தம் வைத்துக் கொள்ள பிரயத்தனப் படுவதைப் பார்க்கின்றோம். ஆனால் பிரபுக்கள் வீட்டுப் பிள்ளைகளில் அதுவும் சரியான பிரபுக்கள் என்கின்றவர்களின் வீட்டுப் பிள்ளைகளில் பெரிதும் சமையல்காரன் வர்க்கமாகவும், மோட்டார் டிரைவர் வர்க்கமாக வுமே முடிந்து விடுகின்றது. அந்த பிரபுக்கள் வர்க்கமெல்லாம் தாசி களிடமுமே போய் சேர்ந்து விடுகின்றது. ஏனெனில் பிரபுக்கள் என்றால் அவர்களுக்குக் கட்டாயம் தாசிகள் இருந்தாக வேண்டும். இல்லாவிட்டால் பிரபுப்பட்டம் பூர்த்தியாவதில்லை. ஆதலால் இவர்கள் வர்க்கம் தாசிகளிடமே இறங்கி விடுகின்றது. அப்பிரபுக்களின் மனைவிமார்கள் ஐயோ பாவம்! வேறு வகையின்றியும் குடும்பத்தின் கௌரவத்தைக் காப்பாற்ற வேண்டாமா என்கின்ற கவலை மீதும், தங்கள் கணவர்களைப் போல் வெளியில் வேறு தக்க மனிதர்களின் சிநேகம் வைத்துக் கொள்ளாமல் வீட்டுக்குள்ளாகவே சரிபண்ணிக் கொள்ளக்...

கடவுள் திருவிளையாடல்                                  ஒரு கொலைக்கு ஒன்பது கொலை 0

கடவுள் திருவிளையாடல் ஒரு கொலைக்கு ஒன்பது கொலை

மத்திய ஆசியாவில் உள்ள ஆஸ்பெக் என்னும் ஊரில் ஒரு புஸ்தக ஆசிரியர் நாஸ்திக பிரசாரம் செய்ததற்காக அவரைச் சில மதக் குருக்கள்கள் கொன்று விட்டதற்காக நியாயஸ்தலத்தில் ஒன்பது குருக்களுக்கு தூக்கு தண்ட னையும், ஏழு பேர்களுக்குக் காவல் தண்டனையும், 19 பேர்களுக்குத் தேசப் பிரஷ்டத் தண்டனையும், கொடுக்கப்பட்டிருக்கின்றது. எனவே கடவுள் இல்லையென்று சொன்னவனைக் கொன்று கடவுளைக் காப்பாற்றி புண்ணிய கைங்கரியத்திற்காக 9 பேர் கொல்லப்படுவதென்றால் கடவுளுக்கு ஏதாவது நன்றி விசுவாசம் இருக்கின்றதா? மேலும் கடவுள் கட்டளை இல்லாமலும், கடவுள் சம்மதமில்லாமலும் அந்தப் பாதிரிகள் நாஸ்திகனான கடவுள் விரோதி யைக் கொன்றிருக்க முடியுமா? அதுபோலவே அவ்வரசாங்கத்தாரும் நீதிபதி யும் கடவுள் சித்தமில்லாமல் கடவுள் பக்தர்களைக் கொலை செய்ய தீர்ப்புக் கூறி இருக்க முடியுமா? கடவுள் இல்லை என்பதற்காக ஒருவன் சாவதும், உண்டு என்பதற்காக ஒன்பது பேர் தூக்கிலிடப்படுவதும் என்றால் கடவுள் திருவிளையாடலின் பெருமைதான் என்னே? என்னே.? குடி அரசு – செய்தி விமர்சனம்...

எது வேண்டும்? 0

எது வேண்டும்?

இந்திய நாடு பார்ப்பனர் என்னும் ஆரியர்களால் சமூகத்துறையில் அடிமைப்படுத்தப்பட்ட காலம் முதல் இன்றைய வரை அரசியலிலும் சமூகத்துறையிலும் நாம் அடிமைப்பட்டிருக்கும் அளவுக்கு அடிமைப்பட்டி ருக்காவிட்டாலும் அதனால் செல்வத்துறையில் மிகுதியும் அடிமைப் பட்டிருக்கின்றோம் என்பதை எவரும் ஒப்புக் கொண்டுதானாகவேண்டும். இதற்குக் காரணம் என்னவென்றால் சமூகத் துறையில் நம்மை அடிமைப் படுத்தி வைத்திருக்கும் பார்ப்பனர்கள் அவ்வடிமைத் தன்மையை என்றென் றைக்கும் தங்களுக்கு அனுகூலமாய் நிலைநிறுத்திக் கொள்ள வேண்டும் என்கின்ற எண்ணத்தின் மீது இந்திய உள்நாட்டு மக்கள் ஆட்சி செய்வதை அழியச் செய்து அவைகளுக்கு பதிலாக வெளிநாடுகளிலிருந்தே ஆட்சிகளைக் கொண்டுவந்து அவர்களுக்கு இடம் கொடுப்பதன் மூலம் தங்கள் ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொண்ட முறையில் நாட்டைப் பழாக்கி வந்திருக்கின்றார்கள். உதாரணமாக இன்றைக்கு ஆயிர வருஷகாலமாக இந்தியாவை ஏகபோகமாய் அரசாட்சி புரிந்த அரசர்கள் வருணாச்சிரமத் திலும் சாதி வித்தியாசத்திலும் சிறிதும் நம்பிக்கை இல்லாதவர்களாயிருந்தும், தங்கள் தங்கள் நாட்டில் உள்ளதையும் ஒழித்து வந்தும் கூட தாங்கள் இந் நாட்டிலிருந்து...

புரசைவாக்கம் அருணகிரி சபை                தர்மத்தின் உண்மை விளக்கம்         நாடும் சமூகமும் நன்மை பெறும் வழிகள் 0

புரசைவாக்கம் அருணகிரி சபை தர்மத்தின் உண்மை விளக்கம் நாடும் சமூகமும் நன்மை பெறும் வழிகள்

நான் பேசுவதற்கு முன்னே அக்கிராசனர் என்னைக் குறித்து வெகு வாகப் புகழ்ந்து கூறிவிட்டார்கள்; அதனால் பேச வேண்டியதையும் மறந்துவிட்டேன். அவர் என்னைக் குறித்து அவ்வளவு பெருமையாக எடுத்து சொன்னதை நான் ஒப்புக்கொள்ள முடியாதாயினும், அக்கிராசன ருக்கு என்னிடத்திலுள்ள அதிக அன்பினால் பலவாறு புகழ்ந்து பேசியிருக் கின்றார். நான் இன்று பேசக்கூடியது உங்கள் மனதுக்கு வருத்தத்தைக் கொடுக்கக் கூடுமெனக்கருதித்தான் அக்கிராசனர் முன் எச்சரிக்கையாகச் சிலவார்த்தைகள் கூறினார். நான் யாருக்காகப் பேச வந்தேனோ அவர்களை வருத்தமுறச் செய்வதில் என்ன பயன்? முரட்டுத் தனமாகப் பிறர் உணர்ச்சி யைப் புண்படுத்தக் கூடியவாறு பேசுவதில் யாதொரு பயனும் இல்லை என்பதை அறிவேன். ஆயினும் எனக்குச் சரி எனத் தோன்றுவதை நான் வெளியிட்டுப் பேசுவதில் பின்வாங்குவதில்லை யாதலால்தான் அக்கிராசனர் அதை யாரும் குற்றமாகக் கொள்ளக்கூடாதெனக் குறிப்பிட்டுப் பேசினார். எனக்கு முன் பேசிய நண்பர் குருசாமி தர்மத்தைக் குறித்தும் அருணகிரி நாதரைப் பற்றியும் சில வார்த்தைகள் சொன்னார். அவர் வாலிபராதலால்...

ஆஸ்திகர்களே இதற்கு யார் பொறுப்பாளி? – சித்திரபுத்திரன் 0

ஆஸ்திகர்களே இதற்கு யார் பொறுப்பாளி? – சித்திரபுத்திரன்

இந்த ஒரு வார காலமாக எங்கு பார்த்தாலும் கொடுமை! கொடுமை!! கொடுமை!!! மயமாகவே செய்திகள் வந்து கொண்டு இருக்கின்றன. ஜப்பானைச் சேர்ந்த டோக்கியோவில் எரிமலை வெடித்துத் தீப்பொறிகளும், தீக்குழம்புகளும், புகைகளும் கிளம்பி அநேக கிராமங்களை சாம்பலாக்கி விட்டதென்றும், அதனால் அநேக பொருள்களுக்கும் உயிர்களுக்கும் நஷ்டமேற்பட்டுவிட்டதென்றும் நியூசிலாண்டிலும் ஆஸ்டீரியாவிலும் பூகம்பங்கள் ஏற்பட்டு அநேக கட்டிடங்கள் இடிந்து விழுந்தும் அநேக உயிர்கள் மடிந்தும் பலத்த சேத மேற்பட்டு வருகின்றதென்றும், இங்கிலாந் திலும் லண்டனிலும் புயல் காற்றும் மழையும் வெள்ளமும் அடித்து அநேக பட்டிணங்களும் உயிர்களும் சாமான்களும் தொழிற்சாலைகளும் அழிந்து சேதமும் நஷ்டமுமுண்டாய்விட்டதென்றும், வங்காளம், அஸ்ஸாம், சைல்சாட் பிரதேசங்களில் ஐந்நூறு சதுர மைல்கள் மழையினால் வெள்ளம் ஏற்பட்டு அநேக கிராமங்களையும் அநேக மனித உயிர்களையும், ஏராள மான கால் நடை ஜீவன்களையும் அடித்துக் கொண்டு போய்விட்டதென்றும், திருவாங் கூரிலும் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டதென்றும் பம்பாய், சைனா முதலிய இடங்களில் நெருப்பு பிடித்து அநேகக் கட்டிடங்களும் பொருள்...

மறுபடியும் திரு.ராஜகோபாலாச்சாரியார் 0

மறுபடியும் திரு.ராஜகோபாலாச்சாரியார்

திரு.ராஜகோபாலாச்சாரியார் தேர்தலுக்காக கள்ளின் பேரால் வழக்கம்போல் அவருடைய சூழ்ச்சி விஷமப் பிரசாரத்தைத் துவக்கி விட்டார். சேலம், வடஆற்காடு ஜில்லாக்களில் இப்போது செய்து கொண்டும் வருகின்றார். பார்ப்பனரல்லாதார் இயக்கத்தை அழித்துப் பார்ப்பன ஆதிக் கத்தை நிலை நிறுத்த அவர் எந்த காரியம் வேண்டுமானாலும் செய்யலா மென்கின்ற முடிவு கொண்டவர். அவருடைய மனச்சாட்சி என்பது கொலை, கொள்ளை, புரட்டு, நம்பிக்கை துரோகம், சித்திரவதை முதலிய எவ்வளவு கடினமான காரியத்திற்கும், சற்றும் அசையாது; எந்த வேடம் போடுவதற்கும் சற்றும் பின்வாங்கார். இப்பேர்ப்பட்ட ஒரு மகா புருடருக்கு, மகாத்மா என்னும் உலகப் பிரசித்தியும், மதிப்பும், மரியாதையும் பெற்ற திரு.காந்தி தமது சிஷ்யக் கோடிகளுடன் கையாளாகவும் கிடைத்திருக்கின்றார். இவ்வளவும் போதாமல் மேற்கண்ட பெருமையுடைய திரு.காந்தியார் இந்திய மக்களிடமிருந்து கொள்ளை போல் வசூலிக்கப்பட்ட பத்து லட்சக்கணக்கான ரூபாய்கள் கொண்ட பொக்கிஷமும் அவர் வசமிருக்கின்றது. இவ்வளவும் போதாமல் ஈவு இரக்கமற்றதும் சூழ்ச்சியும், தந்திரமும், விஷமமும் பொருந்தியதுமான மனோ சக்தியும் ஏற்பட்டிருக்கின்றது. தம்...

பிரம்மஞான சங்கம் 0

பிரம்மஞான சங்கம்

தியசாபிகல் சொசைட்டி என்பதாகவும் பிரம்மஞான சங்கம் என்பதாக ஒரு சங்கம் நமது நாட்டில் பார்ப்பனீய மதத்தையும் ஆதாரங்களையும் அஸ்திவாரமாகக் கொண்டு 30 – 40 வருஷ காலமாக இந்தியாவில் செல்வாக்குப் பெற்றுவரும் விஷயம் யாவருக்கும் தெரிந்ததாகும். பார்ப்பன மதத்தையும் ஆதாரங்களையும் அஸ்திவாரமாகக் கொண்டு வேறு எவ்விதக் கொள்கையுடன் ஏற்படுத்தும் சங்கமோ, இயக்கமோ ஆனாலும் பார்ப்பனர்கள் அதை எவ்விதத்திலும் ஆதரித்தே தீருவார்கள். ஏனெனில் பார்ப்பன மதத்திற்கு மற்றொரு ஆதரவும் உபகரணமும் கிடைத்தது என்கின்ற எண்ணத்தோடு அதை வரவேற்பார்கள். அவர்கள் மதத்திற்கும் ஆதாரத்திற்கும் ஆட்சேபணையோ மறுப்போ கொண்டதான ஏதாவதொன் றைச் சொல்லி விட்டோமேயானால், அது எவ்வளவு நன்மையும் உயர்ந்த தத்துவத்தையும் கொண்டதானாலும் அவற்றை எப்பாடுபட்டாவது ஒழித்துவிட முயற்சி செய்ய வேண்டியது பார்ப்பனர்கள் கடமையும் வழிவழிச் செய்கையுமாகும். உதாரணமாக, புத்தமதம், சமணமதம் போன்ற ஒழுக்கமும் ஜீவ காருண்யமும் முதன்மையாகக் கொண்ட பிரத்தியட்ச அறிவு மதங்கள் எல்லாம் நமது நாட்டில் இருக்கின்ற இடம் தெரியாமல் போனதும், கொலையும்,...

“நாஸ்திக”த்தின் சக்தி 0

“நாஸ்திக”த்தின் சக்தி

ருஷியாவில் கடவுளே இல்லை என்றும், கடவுள் மீது நம்பிக்கை இல்லை என்றும் சபைகளும் மகாநாடுகளும் கூட்டி, கடவுள் மறுப்புக் கண்காட்சிகளும் வெகு சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டு, கடவுளுக்கு எதிர் பிரசாரம் பலமாக நடைபெறுகின்றது. இதன் பலனாக கடவுளால் முடியாத காரியங்களைக் கூட அந்தத் தேசத்தில் உள்ளவர்கள் செய்து காட்டி வரு கின்றனர். அதாவது செத்தவர்களை பிழைக்க வைத்து விடுகின்ற விஷயம் பத்திரிகைகளில் பறந்த வண்ணமாயிருக்கின்றது. கடவுளுக்குப் பிறக்கச் செய்வதும் இறக்கச் செய்வதும்தான் தெரியுமேயொழிய செத்தவர்களுக்கு உயிர் கொடுக்கத் தெரியாது. இந்த வேலை தமக்குத் தெரியாது, சக்தியில்லை என்று அவர் பேசாமல் அடங்கி விட்டாரோ என்னமோ தெரியவில்லை. அல்லது இந்தப் புதிய வேலையை அவர்களே செய்து கொள்ளட்டும், நமக்கு ஏன் இந்த வீண் தொல்லை என்று கருதி பிறப்பிப்பதும், காயலாக் கொடுத்து சாகடிப்பதுமான இந்த இரண்டு வேலையுடன் சும்மா இருந்துவிட்டார் போலும். “நாஸ்திக”த்தின் சக்தியே சக்தி! குடி அரசு – செய்தி விளக்கம்...

மிஸ். மேயோ 0

மிஸ். மேயோ

மிஸ். மேயோ என்னும் ஓர் அமெரிக்க மாதால் இந்தியாவிலுள்ள சமூக மத ஆபாசங்களைப் பற்றி எழுதப்பட்ட “இந்திய தாய்” என்னும் புத்தகத் தில் உள்ள விஷயங்களை அநேகமாகப் பத்திரிகை உலகத்தில் கலந்திருக்கும் மக்கள் எல்லோரும் அறிந்திருக்கக் கூடும். அதோடு சீர்திருத்த உலகத்திலும் வைதீக உலகத்திலும் நடந்துள்ள சாதக பாதகமான அபிப்பிராயமுடைய வர்கள் எல்லோரும் அநேகமாக அறிந்திருக்கலாம். ஆனால் அப் புத்தகங்களிலுள்ள விஷயங்களை நம் நாட்டிள்ள எல்லா பத்திரிகைக்காரர் களும், அரசியல்காரர்களும், எல்லாச் சீர்த்திருத்தக்காரர்களும், எல்லா வைதீகர்களும், எல்லா மேடைப் பிரசங்கிகளும் வெளியிட்டு மிஸ். மேயோ அம்மையை கைவலிக்க வாய்வலிக்க இழி மொழிகளால் வைதார்களே ஒழிய இன்றையவரையில் இனிமேலாவது இதைப்போல் இனியுமொரு புத்தகம் ஒருவரும் எழுதாமலிருப்பதற்கு எவ்வித ஏற்பாடுகளும் செய்தார்கள் இல்லை. அன்றியும் அவ்வம்மை எழுதிய விஷயங்களை தைரியமாய் மறுத்துக் கூறி வாதுக்கழைத்தார்களும் இல்லை. ஆனால் அப்புத்தகத்திற்கு ‘பதில்’ என்பதாக ஏதேதோ பொருத்தமற்ற குப்பைக் கூளங்களையும் பழி வாங்கும் நோக்கம் கொண்ட இழிவான...

பார்ப்பனனுக்கும் சைவனுக்கும் சம்பாஷனை  – சித்திரபுத்திரன் 0

பார்ப்பனனுக்கும் சைவனுக்கும் சம்பாஷனை – சித்திரபுத்திரன்

சைவன் :– ஓய்! என்னாங்காணும்! அய்யரே! நீர் இப்போது மாமிசம் சாப்பிடுகின்றீரே! என்ன இப்படி கெட்டுப் போய்விட்டீர். பார்ப்பனன் :– வாரும், வாரும், பிள்ளைவாள்! எனக்கு வரவர ஜீவ ஹிம்சை என்றால் சற்றும் பிடிப்பதே இல்லை. இன்றைக்கு சாகின்றோமோ, நாளைக்கு சாகின்றோமோ; இதற்குள் ஏன் அநியாயமாய் பல ஜீவன்களை இம்சை செய்ய வேண்டும் என்பதாகக் கருதியே இனிமேல் காய்கறிகள் சாப்பிடுவதில்லை என்று தீர்மானித்து மாமிசம் சாப்பிட துணிந்துவிட்டேன். சைவன் :- என்னங்காணும் பார்ப்பனர் ஜீவ இம்சை கூடாது என்கின்றீர். அதற்காக மாமிசம் சாப்பிடுகின்றேன் என்கின்றீர். இது என்ன, போக்கிரித்தனமா அல்லவா? பார்ப்பனன்:- கோபித்துக் கொள்ளாதீர் ஐயா! நீர் சைவர் அல்லவா? உமக்கு வெறும் கோபம்தான் வருமேயொழிய விஷயம் புலப்படுவதுதான் கஷ்டம். சைவன்:- என்ன பார்ப்பனக் குறும்பு நம்மிடம் காட்டுகிறாய். பார்ப்பான் மாமிசம் சாப்பிட்டுத்தான் இந்த நாடு பாழாச்சுது. பார்ப்பனன் :– இந்த நாடுதான் பார்ப்பனன் மாமிசம் சாப்பிட்டு பாழாச்சுது, சரி வெள்ளைக்கார...

* ருஷியாவிலும் “கடவுளுக்கு ஆபத்து” மாஸ்கோவில் கடவுள் மறுப்பு மகாநாடு 0

* ருஷியாவிலும் “கடவுளுக்கு ஆபத்து” மாஸ்கோவில் கடவுள் மறுப்பு மகாநாடு

10-6-29 ² யில் மாஸ்கோ நகரத்தில் கடவுள் மறுப்பு மகாநாடு ஒன்று நடைபெற்றது. அதற்கு சோவியத் ராஜ்யம் முழுவதிலுமிருந்து 700 பிரதிநிதிகளும், ஜர்மனி, பிரான்ஸ், பெல்ஜியம், ஸ்வீடன் முதலிய ஐரோப்பிய நாடு முழுவதிலுமிருந்து பல பிரதிநிதிகளும் அன்பர்களும் விஜயம் செய்தி ருந்தார்கள். இம்மகாநாட்டின் சார்பாக கடவுள் மறுப்பு கண்காட்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. கடவுள் மறுப்புக் கொண்டாட்டங்களும் நடை பெற்றன. * * சுயமரியாதை மாகாணச் சங்கம் காரியதரிசி, சுயமரியாதை மாகாணச் சங்கம், “ திராவிடன்” பதிப்பகம், 14, மவுண்ட் ரோடு, சென்னை. ஐயா, என்னைத் தங்கள் சங்கத்தின் அங்கத்தினராய்ச் சேர்த்துக் கொள்ள கேட்டுக் கொள்ளுகின்றேன். இத்துடன் ஓர் ஆண்டுக் கட்டணம் 0-2-0 அனுப்பி யிருக்கின்றேன். பெயர் …………………………………………………………………………………………………….. விலாசம் ………………………………………………………………………………………………… ………………………………………………………………………………………………….. (இதில் கையொப்பமிட்டு வெட்டி அனுப்பவும்)

நமதியக்க ஸ்தாபனம் 0

நமதியக்க ஸ்தாபனம்

சுயமரியாதை இயக்க ஸ்தாபனமானது சென்னையில் பொது ஸ்தாபன பதிவுச் சட்டபடி சென்னையில் பதிவு செய்வதற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து வரப்படுகின்றன. அது முடிந்தவுடன் ‘குடி அரசு’ ‘ரிவோல்ட்’ ஆகிய வாரப் பத்திரிகைகளும் ‘பகுத்தறிவு’ என்னும் மாதப் பத்திரிகையும் சுயமரியாதை சங்கச் சார்பாகவே பிரசுரிக்கப்படும். ‘திராவிடன்’ தினசரிப் பத்திரிகையும் அதன் நிர்வாகப் பொறுப்பும் நம்மிடம் இருக்கும்வரை இச்சங்கச் சார்பாகவே பதிப்பித்து வரப்படும். சுமார் இரண்டு வருஷ காலமாகவே பத்திரிகைகள் நடத்தும் பொறுப்பை யார் வசமாவது ஒப்புவித்து விடுவதற்கு நாம் மிகுதியும் முயற்சி செய்து வந்தது நாம் பல நண்பர்களிடம் நேரில் தெரிவித்து கொண்டதாலும் பத்திரிகையின் ஒவ்வொரு ஆண்டுத் தொடக்கத்தில் எழுதிவரும் தலையங்கத்தாலும் நன்றாய்த் தெரிந்திருக்கலாம். பத்திரிகை நடத்துவதில் உள்ள கஷ்டம், அதுவும், ஒரு குறிப்பிட்ட லட்சியத்தின் பிரசாரத்திற்காக நடத்தப்படும் பத்திரிகைகளுக்கு இருக்கும் கஷ்டம் அதை அனுபவித் தவர்களுக்குத்தான் தெரியவரும். உதாரணமாக “ஜஸ்டிஸ்” “திராவிடன்” பத்திரிகைகள் தென்னிந்திய நலஉரிமை சங்கச் சார்பாக சுமார் 12...

தென்னாற்காடு ஜில்லா  ஆதிதிராவிடர் மகாநாடு  கள்ளக்குறிச்சி தாலூகா ஆ:தி: மகாநாடு 0

தென்னாற்காடு ஜில்லா ஆதிதிராவிடர் மகாநாடு கள்ளக்குறிச்சி தாலூகா ஆ:தி: மகாநாடு

சகோதர சகோதரிகளே! இந்த ஜில்லா ஆதிதிராவிடர்கள் மகாநாட்டுக்கு நான் இதற்கு முன் நான்கைந்து தடவை அழைக்கப்பட்டிருந்தாலும், அப்போது பல காரணங்களால் எனக்கு வர முடியாமல் போய் விட்டதால், இந்தத் தடவை கட்டாயமாய் எப்படியாவது வரவேண்டுமென்று கருதியே வந்து சேர்ந்தேன். வரவேற்பு கழகத் தலைவர் என்னைப் பற்றிப் பிரமாதமாகப் புகழ்ந்து கூறினார். அவ்வளவு புகழ்ச்சி எனக்கு வெட்கத்தை கொடுத்ததேயல்லாமல் மற்றபடி அதில் உண்மை இல்லை என்று சொல்லுவேன். தீண்டாமை விலக்கு என்னும் விஷயத்தில் நான் ஏதாவது ஒரு சிறிதாகிலும் வேலை செய்திருப்பதாக ஏற்படுமானால், அது எங்கள் நலத்திற்கு செய்ததாகுமேயொழிய உங்கள் நலத்திற்கு என்று செய்ததாக மாட்டாது. ஏனெனில் உங்களுக்கும் எங்களுக்கும் சமூக வாழ்வின் பொதுத் தத்துவத்தில் சிறிதும் பேதமில்லை. அநுபோகத்தில் மாத்திரம் ஏதாவது அளவு வித்தியாசமிருக்கலாம். உதாரணமாக நீங்கள் எப்படி தீண்டப்படா தவர்களோ, அப்படியே தான் உங்களை விட சிறிது மேல் வகுப்பார் என்கின்ற நாங்களும் ஒரு வகுப்பாருக்கு – அதாவது கடவுள்...