அம்பேத்கர் தந்த எச்சரிக்கை!
சமூக சமத்துவம் மறுக்கப்பட்டால், ஜனநாயகக் கட்டமைப்பையே மக்கள் தகர்த்து விடுவார்கள். இந்திய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்குவதற்காக அரசமைப்புச் சட்ட அவை 9.12.1946 அன்று முதன்முதலாகக் கூடியது. 25.11.1949 அன்று அரசமைப்புச் சட்டம் அரச மைப்புச் சட்ட அவையால் இறுதி செய்யப் பட்டது. 26.11.1949 அன்று நிறைவேற்றப்பட்டது. 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 17 நாள்கள் – அரசமைப்புச் சட்டம் உருவாக்கப்பட எடுத்துக் கொண்ட காலம் ஆகும். 25.11.1949 அன்று அரசமைப்புச் சட்ட அவையின் விவாதங்கள் முடிந்தபின், அரசமைப்புச் சட்ட வரைவுக் குழுவின் தலைவரான டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் இறுதியாக உரை நிகழ்த்தினார். அப்போது, எதிர்காலத்தில் இந்திய அரசமைப்புச் சட்டம் நடைமுறைப் படுத்துவது குறித்த தன் கவலையையும் எச்சரிக்கையையும் வெளிப்படுத்தினார். 1994இல் மகாராட்டிரா மாநில அரசு ஆங்கிலத்தில் இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதன்மையான கர்த்தா டாக்டர் அம்பேத்கர் என்ற தலைப்பில், அம்பேத்கர் எழுத்துகளும் பேச்சுகளும் நூல் வரிசையில் 13ஆவது தொகுதியாக வெளியிடப்பட்ட நூலில் உள்ள...