கழகத் தோழர் ராஜி ஆங்கில பயிற்சிப் பள்ளி திறப்பு விழா

திராவிடர் விடுதலைக் கழகத்தின் வடசென்னை மாவட்டக் கழகத் தோழர் ராஜி-சாரதி இணையர் களின் ‘கிருஷ்ணா அகாடெமி’ என்ற ஆங்கில வழி பயிற்சிப் பள்ளியை 3.5.2018 அன்று தொடங்கினார். (கிருஷ்ணா என்பது ராஜி அவர்களின் ஆசிரியர் பெயர்)

திறப்பு விழா நிகழ்வில் தென் சென்னை மாவட்டச் செயலாளர் இரா. உமாபதி, மாவட்டத் தலைவர்

மா. வேழவேந்தன், தலைமைக் குழு உறுப்பினர்

ந. அய்யனார், வடசென்னை மாவட்டத் தலைவர் ஏசுகுமார் மற்றும் கழகத் தோழர்கள் கலந்து கொண்டனர். திறப்பு விழா நிகழ்வாக பத்ரி நாராயணன் நினைவுச் சுவடுகள்’ நூலை மாவட்டத் தலைவர் மா.வேழவேந்தன் வழங்கினார்.  விழா மகிழ்வாக தோழர்கள்  ராஜி-சாரதி, கழக வார ஏட்டிற்கு ரூ.2000/- நன்கொடை வழங்கினர்.

பெரியார் முழக்கம் 10052018 இதழ்

You may also like...