தோழர் சந்திரபோசு குடும்ப இணையேற்பு விழா ! பரமக்குடி 21042018

தோழர் சந்திரபோசு குடும்ப இணையேற்பு விழா !

21-4-2018 அன்று காலை 10-00 மணிக்கு, இராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி, லேனா மகாலில், தியாகி இமானுவேல் பேரவைப் பொதுச்செய்லாளர் சந்திர போசு-சரசுவதி இணையரின் மகன்களான ச.ச.அனீசுகுமார், அம்பேத்ராஜ் ஆகியோருக்கு, ஜாதி,சடங்கு,தாலி மறுப்பு சுயமரியாதை வாழ்க்கை இணையேற்பு விழா கழகத் தலைவர் கொளத்துர் மணி தலைமையில் நடைபெற்றது.

கழகத்தலைவர் கொளத்தூர் மணி வாழ்க்கைத்துணைநல ஒப்பந்த உறுதிமொழிகளைக் கூறிட, ஆணவக்கொலையில் தனது இணையர் சங்கரைப் பறிகொடுத்த தோழர் உடுமலை கவுசல்யா மாலைகளை எடுத்துக் கொடுக்க இணையேற்பு விழா நடந்தேறியது.

விழா சிறப்பாக திருமண முறை, பெண்ணுரிமை, ஜாதியொழிப்பு குறித்த கட்டுரைகள் அடங்கிய ‘தமிழ்த்தேசிய விடுதலைக்கான வாழ்வியல் பண்பாடு’ எனும் நூல் வெளியிடப்பட்டது.

தமிழ்த் தேசிய முன்னணியின் தோழர் பொழிலன், தமிழ்த்தேச விடுதலை முன்னணியின் தோழர் மீ.த.பாண்டியன்,தோழர் கிருஷ்ணஜோதி ஆகியோர் இணையேற்பு விழா விளக்கவுரையாற்றினர். விழாவினை தியாகி இமானுவேல் பேரவையின் இளைஞரணிச் செயலாளர் புலி.பாண்டியன் தொகுத்தார்

பல்வேறு அரசியல், சமூக, தமிழ்த்தேசிய அமைப்பினர் மிகப்பெருமளவில் கலந்து சிறபித்தனர்.

பட்டியலினத்தின் மூன்று பெரும் உட்பிரிவுகளுக்குள் நடந்தேறிய இவ்விணையேற்பு அனைத்து தரப்பினருக்கும் வழிகாட்டும் சிறப்புடையது என பலரும் போற்றி மகிழ்ந்தனர்.

Image may contain: 5 people, people on stage and people standing

You may also like...