காஞ்சி மடத்தின் ஆணையை மீறிய குன்றக்குடி அடிகளார்
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகராவதற்கு வழி செய்வதற்கான மசோதாவை தி.மு.க. அரசு கொண்டு வந்தது. சட்ட மேலவையில் இந்த மசோதாவை எதிர்க்கும் படி காஞ்சி காமகோடி பீடத்திலிருந்து குன்றக்குடி அடிகளாருக்கு கோரிக்கை வந்தது. பழைய தஞ்சாவூர் மாவட்டத்தின் மயிலாடுதுறையை அடுத்துள்ள திருவாளப் புத்தூருக்கு அருகேயுள்ள நடுத்திட்டு என்னும் கிராமத்தில் சீனிவாசப் பிள்ளை-சொர்ணத்தம்மாள் இணையருக்கு 1925ஆம் ஆண்டு சூலை மாதம் 11ஆம் நாள் பிறந்தவர் குன்றக்குடி அடிகளார். அவரது இயற்பெயர் அரங்கநாதன். 1952ஆம் ஆண்டு முதல் 1995ஆம் ஆண்டுவரை குன்றக்குடி மடத்தின் தலைமை ஆதினமாக இருந்தவர். ஆன்மீகவாதியாக இருந்தாலும்கூட சமூக-சமத்துவத் தளங்களில் தமிழ்ச் சமூகத்துக்கு தொண்டாற்றிய பெருமையும் குன்றக்குடி அடிகளாருக்கு உண்டு. பெரியாரின் நாத்திகக் கருத்துகளோடு ஏராளமான முரண்பாடுகள் இருந்தாலும், ஜாதி ஒழிப்புக் கருத்துகளுக்கு இசைந்து பெரியாரோடு அந்தப் புள்ளியில் இணைந்தவர் குன்றக்குடி அடிகளார். சன்னிதானங்கள் பவனி வர பயன்படுத்தி வந்த பல்லக்கை தான் ஆதீனமாகப் பொறுப்பேற்ற ஆரம்பத்திலேயே தவிர்த்தது போன்ற எண்ணற்ற...