Tagged: விடுதலை இராசேந்திரன்

மத பயங்கரவாதத்தை அம்பலப்படுத்தும் பத்திரிகையாளர்கள்!

தமிழ்நாடு மாணவர் கழக சார்பில் “யார் தேச விரோதிகள்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் சென்னையில் திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் 5.2.2017 அன்று மாலை நடைபெற்றது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் விரிவாக்கம். (சென்ற இதழ் தொடர்ச்சி) 2002ஆம் ஆண்டு குஜராத்தில் மோடி முதலமைச்சராக இருந்தபோதுதான் இஸ்லாமியர் களுக்கு எதிரான திட்டமிட்ட இனப்படுகொலை நடந்தது. பாபர் மஸ்ஜிதில் பூஜை முடிந்து, சபர்மதி துரித வண்டியில் திரும்பிய கரசேவகர்கள், இரயிலில் தீ வைக்கப்பட்டு எரிக்கப்பட்டனர். 56 பயணிகள் கொடூரமாக இறந்தனர். இந்த சதியை செய்தவர்கள் இஸ்லாமியர்கள் என்று குஜராத் காவல்துறையும் அரசும் குற்றம் சாட்டியது. சிறப்பு நீதிமன்றம் 9 ஆண்டுகளுக்குப் பிறகு 2011இல் அளித்த தீர்ப்பில் 11 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கி குற்றம்சாட்டப்பட்ட 63 பேரை விடுதலை செய்தது. இரயில் பெட்டியை வெளியிலிருந்து எரிப்பதற்கான வாய்ப்புகளே இல்லை; தீ – இரயில்...

தோழர் விடுதலை இராசேந்திரன் மின்னூல்கள்

இந்தியா விலைபோகிறது! – விடுதலை க. இராசேந்திரன் http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/9.pdf சிறப்பு பிரம்மதேய மண்டலங்கள் – விடுதலை இராசேந்திரன் http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/24.pdf தனியார் துறையில் இடஒதுக்கீடு ஏன்? எதற்கு? – விடுதலை இராசேந்திரன் http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/34.pdf பண்பாடு சமூகம் அரசியலில் மனுவின் ஆதிக்கம் – விடுதலை இராசேந்திரன் http://dvkperiyar.com/wp-content/uploads/2015/09/panpattu-samooka.pdf மரண தண்டனையை ஒழிப்போம் – விடுதலை இராசேந்திரன் http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/63.pdf மனுதர்மம் என்ற அதர்மம் – தொகுப்பு விடுதலை இராசேந்திரன்  http://dvkperiyar.com/wp-content/uploads/2015/08/67.pdf மோடித்துவ முகமூடி – விடுதலை க. இராசேந்திரன்  http://dvkperiyar.com/wp-content/uploads/2015/11/modithuva-mugamudi.pdf

அமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

அமெரிக்கப் பணத்தில் கொழிக்கிறது ஆர்.எஸ்.எஸ்.

இந்திய வளர்ச்சி மற்றும் புனர் வாழ்வு நிதியம் (India Development and Relief Fund – IDRF) என்ற ஒரு அமைப்பு அமெரிக்காவில் 1989 இல் பதிவு செய்யப்பட்டது. அந்நாட்டு வரிச் சலுகைக்கான சட்டம் 501(2) (3) பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட இந்த நிறுவனத்தின் நோக்கமாக, இந்தியாவின் கிராம வளர்ச்சி, பழங்குடியினர் நலம் மற்றும் நகர்ப்புற ஏழைகள் நலன் என்பவை நிர்ணயிக்கப்பட்டன. 2000-த்தில் – இந்த நிறுவனம் திரட்டிய தொகை 3.8 மில்லியன் அமெரிக்க டாலர், வினியோகிக்கப் பட்டுள்ளது. ‘அவுட்லுக்’ வார இதழ் (ஜூலை 22, 2002) வெளியிட்ட ஒரு கட்டுரையில், இந்த நிறுவனத்துக்கும் சங் பரிவார் அமைப்புகளுக்கும் உள்ள தொடர்புகளை அம்பலமாக்கியிருந்தது. உடனே அய்.டி.ஆர்.எப்., இந்த செய்தியைத் திட்டவட்டமாக மறுத்தது. தங்களுக்கும் எந்த ‘இசத்துக்கும்’, தத்துவத்துக்கும், கட்சிகளுக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது என்று அந்த மறுப்பு அறிக்கை கூறியது. ஆனால், ஆவணங்களைத் துல்லியமாக பரிசீலித்துப் பார்க்கும்போது, அய்.டி.டி.ஆர்.எப்.க்கும், சங்பரிவார்களுக்கும்...

புதிய அமைப்பு ஏன்? – தோழர்கள் கொளத்தூர் மணி & விடுதலை.க.இராசேந்திரன்

புதிய அமைப்பு ஏன்? – தோழர்கள் கொளத்தூர் மணி & விடுதலை.க.இராசேந்திரன்

“பெரியாரியலில் உண்மையான பற்றுதலும் – அதை நிறைவேற்றித் தீரவேண்டும் என்ற உந்துதலும், அதற்கென இழப்புகளையும் சந்தித்துக் களப்பணியாற்றும் துடிப்பும் கொண்ட பெரியாரின் தொண்டர்கள் ஒன்று திரண்டு செயலாற்றவேண்டும் என்ற வரலாற்றுக் கட்டாயம்தான் இப்போது உருவாகி இருக்கும் தந்தை பெரியார் திராவிடர் கழகம்” இது 2001 ஆம் ஆண்டில் 5 பெரியாரிய அமைப்புகள் ஒன்றாக இணைந்து தந்தைபெரியார் திராவிடர் கழகமாகச் செயல்பட முன்வந்தபோது மக்கள் முன் வைத்த பிரகடனம், இந்த ஐந்து அமைப்புகளும் தங்கள் அமைப்புகளின் அடையாளங்களைவிட பெரியாரின் இலட்சியத்தை கொண்டு செலுத்தலே முதன்மையான பணியாக ஏற்றன என்பதை இந்தப் பிரகடனம் தெளிவுபடுத்துகிறது. ஆனால் அந்த இலட்சியத்தை அடையவே இயக்கம் என்ற பாதைமாறி, தங்கள் முந்தைய இயக்க அடையாளத்தை முன்னிறுத்தலே முதன்மை இலக்கு என்ற நிலை, பெரியார் திராவிடர் கழகத்திற்குள் உருவாக்கப்படுவதுதான் இன்றைய நெருக்கடிகளுக்குக் காரணமாகும். பெரியாரின் அடிப்படைத் தத்துவமான சாதிஒழிப்பு என்ற இலட்சியத்தையே தந்தை பெரியார் திராவிடர் கழகம் ஏற்றுக்கொண்டது. அதன்...

விடுதலை இராசேந்திரன் மீதுகாவல்துறை வழக்கு

திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மீது 2015ஆம் ஆண்டு செப்டம்பர் 26ஆம் தேதி மயிலாடு துறையில் கழகப் பொதுக் கூட்டத்தில் பேசிய பேச்சுக்காக சுமார் ஓராண்டுக்குப் பிறகு காவல்துறை இப்போது வழக்குப்பதிவு செய்துள்ளது. “தந்தை பெரியாரை யார், எதற்காக எதிர்க்கிறார்கள்?” என்ற தலைப்பில் அப்பொதுக் கூட்டம் நடந்தது. இரு பிரிவினரிடையே வன்முறையை  தூண்டும் விதமாக பேசியதாக மயிலாடுதுறை காவல்துறை  இந்திய தண்டனைச் சட்டம் 153(ஏ), 153 (பி), 504 பிரிவு களின் கீழ் வழக்குப் பதிவுசெய்துள்ளது. இவை பிணையில் வெளி வர முடியாத பிரிவுகளாகும். இதைத் தொடர்ந்து கழக வழக்கறிஞர் துரை. அருண், உயர்நீதிமன்றத்தில் விடுதலை இராசேந்திரன் சார்பாக முன் ஜாமீன் மனு தாக்கல் செய்தார். உயர்நீதிமன்ற நீதிபதி வைத்தியநாதன் முன்பு கடந்த 28ஆம் தேதி மனு  விசாரணைக்கு வந்தது. “ஒரு வருடம் கழித்து, இப்போது  வழக்குப் பதிவு செய்வது ஏன்? இந்த பேச்சுக் குறித்து எவரிடமிருந்தும் புகாரும் வரவில்லை. இரு தரப்புக்கிடையே மோதல் உருவாகும் சூழலில்...

சென்னை ஆர்ப்பாட்டத்தில் விடுதலை இராசேந்திரன் கேள்வி: இந்துக்களின் உண்மை எதிரிகள் யார்?

சென்னை ஆர்ப்பாட்டத்தில் விடுதலை இராசேந்திரன் கேள்வி: இந்துக்களின் உண்மை எதிரிகள் யார்?

அரசு அலுவலகங்கள் காவல் நிலையங்களில் ஆயுத பூஜைகள் நடத்துவதை நிறுத்தக் கோரி சென்னையில் அக். 10 ஆம் தேதி பகல் 11 மணியளவில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தலைமை தாங்கினார். அவர் ஆற்றிய உரையின் சுருக்கம்: ஒரு மதச் சார்பற்ற நாட்டில் அரசு அமைப்புகள் மத அடையாளங்கள் இன்றி இயங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தவே இந்த ஆர்ப்பாட்டங்களை நடத்துகிறோம். எந்த ஒரு வீட்டுக்குள் நடக்கும் மதச் சடங்குகளை தடைப்படுத்த வேண்டும் என்று கூறவில்லை. அதில் அடங்கியுள்ள மூடநம்பிக்கைகளை சமுதாய இழிவை கருத்துகளாக முன் வைக்கிறோம். அதை ஏற்பதும், ஏற்காததும் அவரவர் உரிமை. அரசு நிறுவனங்கள் பல்வேறு மதநம்பிக்கை யாளர்களுக்கும், கடவுள், மத நம்பிக்கை இல்லாதவர்களுக்கும் பொதுவானது. அதில் ஒரு மதம் தொடர்பான சடங்குகளை நடத்துவது எப்படி நியாயமாகும்? இந்த கேள்வியை உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற தீர்ப்புகளே கேட்டிருக்கின்றன. தாழையூத்து...

ஒவ்வொருவரிடம் ரூ.10 நன்கொடை

ஒவ்வொருவரிடம் ரூ.10 நன்கொடை

திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தும் ‘மக்கள் சந்திப்பு இயக்கம்’ திராவிடர் விடுதலைக் கழகம், ‘மக்கள் சந்திப்பு இயக்கம்’ என்ற இயக்கத்தைத் தொடங்குகிறது. இத்திட்டத்தின்படி உழைக்கும் மக்களை, மாணவர்களை, பெண்களை, ஆதரவாளர்களை, தோழர்களை சந்தித்து ஒவ்வொருவரிடமும் ரூ.10 நன்கொடைகளைத் திரட்ட  வேண்டும். இப்படி 10 ரூபாய் நிதி திரட்டும் இயக்கத்துக்கு ஒவ்வொரு தோழருக்கும் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு ரூ.10,000/-. நிதி திரட்டுவதோடு ஒவ்வொரு தோழரும் 5 புதிய தோழர்களை இயக்கத்துக்குக் கொண்டுவர வேண்டும். ‘நண்பர்களை தோழர்களாக்குவோம்; தோழர்களை இயக்கமாக்குவோம்’ என்ற குறிக்கோளோடு 10 ரூபாய் நிதி சேர்ப்புத் திட்டம் தொடங்குகிறது. இதற்கான நன்கொடை சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன. கழகத்தின் பொருளாளர் இரத்தினசாமி அவர்களுடன்  தோழர்கள் தொடர்புகொண்டு இதற்கான நன்கொடை ரசீதுகள் மற்றும் ஆலோசனைகளைப் பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். சேலம் சிறையில் உள்ள நமது கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இத் திட்டத்தில் தோழர்கள் முனைப்போடு களமிறங்க வேண்டும் என்ற வேண்டுகோளை முன் வைத்துள்ளார். தோழமை அமைப்புகளின்...

கொளத்தூர் மணி, தோழர்களை விடுதலை செய்: அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

கொளத்தூர் மணி, தோழர்களை விடுதலை செய்: அடக்குமுறை சட்டங்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி உள்ளிட்ட தோழர்களை விடுதலைச் செய்யக் கோரியும், பழ. நெடுமாறன் உள்ளிட்டோர் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறக் கோரியும் அடக்குமுறை சட்டங்கள் எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் நவம்பர் 23 ஆம் தேதி காலை 11 மணியளவில் சென்னை சேப்பாக்கத்தில் எழுச்சியான கண்டன ஆர்ப் பாட்டம் நடைபெற்றது. மனிதநேய மக்கள் கட்சித் தலைவரும் சட்டமன்ற உறுப் பினருமான பேராசிரியர் ஜவாஹிருல்லா தலைமை தாங்கினார். கொளத்தூர் மணியை விடுதலை செய்யக் கோரியும், அடக்குமுறை சட்டங்களை எதிர்த் தும் கண்டன முழக்கங்கள் எழுப்பப்பட்டன. விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் மல்லை சத்யா, திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், எஸ்.டி.பி.அய். கட்சி மாநிலத் தலைவர் தெகலான் பாகவி, தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல் முருகன், தோழர் தியாகு, தமிழ்நாடு மக்கள் கட்சித் தலைவர் தங்கத் தமிழ்வேலன்,...

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் உரை: ‘ஆதார்’ அடையாளம் அல்ல; ஆபத்து!

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் உரை: ‘ஆதார்’ அடையாளம் அல்ல; ஆபத்து!

14.12.2013 அன்று சென்னையில் மக்கள் சிவில் உரிமைக் கழகம் நடத்திய ‘ஆதார்’ குறித்த கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையின் சுருக்கம். ‘ஆதார்’ அடையாள அட்டையை கட்டாய மாக்கும் முயற்சிக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. ஆனாலும், சமையல் எரிவாயுவுக்கு மான்யம் பெற ஆதார் எண் அவசியம் என்று சில நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன. தமிழகத்தில் இன்னும் பல லட்சம் பேர் ஆதார் அட்டைகளைப் பெறவில்லை. இதற்கிடையே இதை வழங்கும் பணி டிசம்பர் 31 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. ஆதார் அட்டை வழியாக ஒருவரின் விரல் ரேகை, விழிப்படலம் என்று பல்வேறு அடையாளங்கள் பதியப்பட்டு, ஒவ்வொருவருக்கும் ஒரு குறியீட்டு எண் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு மாநிலத்தில் வாழும் குடி மக்களும் இதன் வழியாக இந்திய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்படு கிறார்கள் என்பது இதில் அடங்கியுள்ள ஆபத்தான அம்சம். இந்தத் திட்டத்தைப் பொறுத்தவரை மக்கள் நலத் திட்டங்களை...

அறிவுரைக் குழுமத்தின் முன் கழகத் தலைவர்-தோழர்கள் வாதுரை

அறிவுரைக் குழுமத்தின் முன் கழகத் தலைவர்-தோழர்கள் வாதுரை

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, சேலம் சிறையில் அடைக்கப்பட்டுள்ள திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மற்றும் தோழர்கள் கிருட்டிணன், அருள்குமார், அம்பிகாபதி ஆகியோர், கடந்த 17.12.2013 அன்று பிற்பகல் 3 மணியளவில் சென்னையில் அறிவுரைக் குழுமம் முன் நேர் நிறுத்தப்பட்டனர். சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் வளாகத்திலுள்ள அறிவுரைக் குழுமத்துக்கு தோழர்கள் வருவதை அறிந்த கழகத் தோழர்கள், ஆதரவாளர்கள், வழக்கறிஞர்கள் ஏராளமாகத் திரண்டு வந்திருந்தனர். தோழர்களை சந்திக்க காவல்துறை செய்த கெடுபிடி காரணமாக கடும் எதிர்ப்புகள் கிளம்பியதால் பதட்டம் நிலவியது. தோழர் கொளத்தூர் மணி சார்பில் விடுதலை இராசேந்திரனும், ஏனைய தோழர்களுக்கு பொருளாளர் இரத்தினசாமி, பரப்புரைச் செயலாளர் பால். பிரபாகரன், அமைப்புச் செயலாளர் தாமரைக் கண்ணன், குழுமத்தின் முன் வாதிட்டனர். கழகத் தலைவர் கொளத்தூர் மணி சுமார் 45 நிமிடங்கள் இந்த வழக்குப் பொய்யாக புனையப்பட்டது என்பதை காவல் துறை சாட்சி யங்கள், தேசியப் பாதுகாப்புச் சட்...

தலைமைக் கழகத்தில் நடந்த சாதி மறுப்பு மணவிழா

தலைமைக் கழகத்தில் நடந்த சாதி மறுப்பு மணவிழா

திராவிடர் விடுதலைக் கழக தலைமை அலுவலகத்தில் 15.12.13 அன்று காலை அமெரிக்காவில் ஆராய்ச்சிப் பட்டம் முடித்த தோழர் இராசசேகர குமார், ஆராய்ச்சியாளர் தோழியர் சிறீதேவி ஆகியோரின் சுயமரியாதை ஜாதி மறுப்பு மணவிழா சிறப்புடன் நடந்தது. இராசசேகர குமார், திருநெல்வேலியையும், சிறீதேவி கோவையையும் சேர்ந்தவர்கள். தமிழகத்தில் பட்ட மேற்படிப்பை முடித்து பிரான்சிலும், அமெரிக்காவிலும் ஆராய்ச்சி மேற்படிப்பை மேற்கொண்டவர்கள். தமிழச்சி (பிரான்°) அவர்களின் பெரியாரின் பதிவுகளை இணையத்தில் படித்து பெரியாரை உள்வாங்கிக் கொண்ட இவர்கள், நான்கு ஆண்டுகளாக திருமணம் செய்து கொள்ளாமலேயே இரு குடும்பத்தினரின் சம்மதமும் பெற்று இணையர்களாக வாழ்ந்து வருகின்றனர். இப்போது, பெரியாரின் சுயமரியாதை திருமண வழியில் திருமணத்தைப் பதிவு செய்ய விரும்பினர். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் திருமணத்தை தலைமை அலுவலகத்தில் நடத்தி வைத்தார். நிகழ்வில் மணமக்கள் இருவரும் பெரியாரியல் கொள்கைக்கு எப்படி வந்தோம் என்பதை அனுபவங்களின் வழியாக விளக்கி உரையாற்றினர். பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், பெரி யார்...

‘திராவிடர் விடுதலைக் கழகத்தின் தொடர்பயணம்’

‘திராவிடர் விடுதலைக் கழகத்தின் தொடர்பயணம்’

‘இலக்கு நோக்கிய பயணத்தில் இணைய வரும் தோழர்களே, வாருங்கள்!’ என்ற அழைப்பை ஏற்று வந்த தோழர்களுடன் 2012 Aug 12 ஆம் நாள் திராவிடர் விடுதலைக் கழகம் ஈரோட்டில் உதயமானது. 2001 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வந்த பெரியார் திராவிடர் கழகத்தில் தலைவராக இருந்த கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் விடுத்த அழைப்பை ஏற்று, விலகி வந்த பெரும்பாலான பெரியார் திராவிடர் கழக மத்தியக் குழு உறுப்பினர்களுடன் தொடங்கப் பட்ட இந்த அமைப்பு, திராவிடர் விடுதலைக் கழகம் என்ற தனிப் பெயரை சூட்டிக்கொண்டு, தனது பயணத்தைத் தொடர்ந்தது. இயக்கம் தொடங்கியதிலிருந்து – ஜாதி, தீண்டாமைக்கு எதிராக கழகத்தின் பணிகள் பெரியார் காட்டிய வழியில் தீவிரம் பெற்றன. புதிய சவால்களையும் கழகம் எதிர்கொண்டது. சமூக நீதியான இடஒதுக்கீட்டுக் கொள்கையைப் பயன்படுத்தி, தங்களை மீட்டெடுத்துக்கொண்ட, பிற்படுத்தப் பட்ட ஜாதிகளைச் சார்ந்த சில தலைவர்கள் ஜாதிய அமைப்புகளை ஒன்று சேர்த்துகொண்டு, தலித் மக்களுக்கு...

அம்பேத்கர் மணிமண்டபத்தில் கழக சார்பில் வீர வணக்கம்

அம்பேத்கர் மணிமண்டபத்தில் கழக சார்பில் வீர வணக்கம்

சென்னை மாவட்ட கழகத்தின் சார்பில் டிசம்பர் 6 அன்று புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளில், அம்பேத்கர் மணி மண்டபத்தில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் மாலை அணி வித்தார். இராயப் பேட்டை பத்ரி நாராயணன் படிப் பகத்தில் வைக்கப் பட்டிருந்த அம்பேத்கர் படத்துக்கும், மயிலை விசாலாட்சி தோட்டத்திலுள்ள அம்பேத்கர் சிலைக்கும் தோழர்கள் புடை சூழ, பொதுச் செயலாளர் ஜாதி ஒழிப்பு முழக்கங்களுடன் மாலை அணிவித்தார். பெரியார் முழக்கம் இதழ் 12122013

கழகத் தலைவர் கைதைக் கண்டித்து வைகோ நடத்திய பொதுக் கூட்டம்

கழகத் தலைவர் கைதைக் கண்டித்து வைகோ நடத்திய பொதுக் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி மீதான தேசிய பாதுகாப்புச் சட்டத்தைக் கண்டித்தும், அவர் மீதும் கழகத் தோழர்கள் மீதான தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நீக்கக் கோரியும் ம.தி.மு.க. சார்பில் 7.12.2013 மாலை புரசைவாக்கம் ‘தானா’ வீதியில் கண்டனக் கூட்டம் நடைபெற்றது. ம.தி.மு.க. மாவட்டப் பொறுப்பாளர் ஜீவா தலைமையில் நடந்த கூட்டத்தில் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்தின், த.பெ.தி.க. பொதுச் செயலாளர் கோவை இராமகிருட்டிணன், த.தே.பொ.க. சார்பில் அருண் பாரதி, கரும்பு விவசாயிகள் கழகத்தின் சார்பில் பொன்னையன், நாகை தருமன், ஈட்டிமுனை இளமாறன் உள்ளிட்ட பலரும் கண்டன உரையாற்றினர். மழையையும் பொருட்படுத்தாமல் கூட்டம் நடந்தது. மேடையின் பின்புறத்தில் தோழர் கொளத்தூர் மணி, சிறைக் கம்பிகளுக்குள் அடைபட்டிருப்பதுபோல் வண்ணப் பதாகை நிறுவப்பட்டிருந்தது. இதற்கிடையே மத்திய உள்துறை அமைச்சர் ஷிண்டேயை ம.தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர் கணேசமூர்த்தி நேரில் சந்தித்து, கொளத்தூர் மணியை விடுதலை செய்ய வேண்டும்...

அறிவுரைக் குழுமத்தில் தோழர்கள் நேர் நிறுத்தம்: தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நீக்குக!

அறிவுரைக் குழுமத்தில் தோழர்கள் நேர் நிறுத்தம்: தேசியப் பாதுகாப்புச் சட்டத்தை நீக்குக!

தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்கள் உமாபதி, இராவணன், மனோகரன், மாரிமுத்து ஆகியோர் 2013 டிசம்பர் 9 ஆம் தேதி அறிவுரைக் குழுமத்தின் முன் பிற்பகல் 3 மணி யளவில் நேர்நிறுத்தப்பட்டனர். உமாபதி, இராவணன் ஆகியோருக்காக பொதுச்செய லாளர் விடுதலை இராசேந்திரனும், மாரிமுத்து, மனோகரனுக்காக மருத்துவர் எழிலனும் வாதுரைத்தனர். விடுதலை இராசேந்திரன் நீதிபதிகள் முன் பேசுகையில் குறிப்பிட்டதாவது: “நாட்டின் பாதுகாப்புக்கு, பொது ஒழுங்குக்கு, சமுதாயத்துக்கு இன்றியமையாத பொருள்களை வழங்குதலுக்கு, அதற்கு சேவை ஆற்றுவதற்கு எதிராக பாதிப்புகளை ஏற்படுத்தினால் மட்டுமே தேசியப் பாதுகாப்புச் சட்டம் பயன்படுத்தப்படவேண்டும். அத்தகைய எந்தக் குற்றமும் சாட்டப்படாத நிலையில், தேசியப் பாதுகாப்புச் சட்டம் இந்த வழக்கில் முறைகேடாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது. தபால் நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தி யதாக பல்வேறு பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. வழக்குகளில் பிணை வழங்கப்படவில்லை. பிணை வழங்கு வதை நீதிமன்றம் நிலுவையில் வைத்துள்ளது. ஆனால்,...

செய்தியாளர்கள் சந்திப்பு சென்னை 17032016 விடுதலை இராசேந்திரன்

கும்முடிப்பூண்டி இலங்கைத் தமிழர் முகாமில் சுபேந்திரன் அவர்களின் கால்கள் ஆய்வாளர் டெல்லிபாபுவால் உடைக்கப்பட்டது. முகாம் தலைவர் சிவக்குமார் அவர்களையும் கண்மூடித்தனமாகத் தாக்கி இழிவுபடுத்தியுள்ளார்கள். இதனை ஊடகங்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் செய்தியாளர் சந்திப்பு நேற்று 17.03.2016 வியாழன் அன்று காலை 11 மணியளவில் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது. அனைத்து ஊடகவியலாளர்களும் பத்திரிகையாளர்களும் கலந்து இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர். கால்கள் உடைபட்டுள்ள சுபேந்திரன் அவர்களை அவரின் துணைவியார், மகள் மற்றும் சிவகுமார் ஆகியோர் நேரில் வந்திருந்து செய்தியாளர்களிடம் தங்களுக்கு ஏற்பட்டதை முழுமையாக விளக்கினர். தோழர் தியாகு நமது கோரிக்கைகள் குறித்து விளக்கினார். மற்ற கேள்விகளுக்கும் பதிலளித்தார். திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், தந்தை பெரியார் திராவிடர் கழக வடக்கு மண்டல அமைப்பாளர் கரு.அண்ணாமலை, தமிழக மக்கள் முன்னணி வழக்குரைஞர் பாவேந்தன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் க.அருணபாரதி, இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர்...

திலீபன் மகேந்திரன் கையை முறித்த காவல்துறைக்கு கழகம் கடும் கண்டனம்

இந்திய தேசியக் கொடியை எரிக்கும் படத்தை தனது முகநூலில் வெளியிட்ட தற்காக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சார்ந்த தோழர் திலிபன் மகேந்திரனை காவல்துறை கைது செய்து, அவரது கையையும் மூன்று விரல்களையும் இரும்புக் கம்பியால் உடைத்திருக்கிறது. கொடி எரிப்பு அவமதிப்பு என்றால், அதற்கான சட்டப் பிரிவுகளில் வழக்கு தொடரட் டும். ஆனால், காவல்துறை காட்டு மிராண்டித்தனமாக கையை உடைக் கும் அளவுக்கு போயிருக்கிறது. திராவிடர் விடுதலைக் கழகம், காவல் துறையின் இந்த செயலை வன்மை யாகக் கண்டிக்கிறது. கடந்த 6ஆம் தேதி மயிலாடுதுறையில் “ஜாதிக் கொரு சுடுகாடு; இது சுதந்திர நாடா?” என்ற தலைப்பில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய பொதுக் கூட்டத்தில் கழகப் பொதுச் செய லாளர் விடுதலை இராசேந்திரன் இந்த செயலுக்காக காவல்துறைக்கு கடும் கண்டனம் தெரிவித்துப் பேசினார். சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தின் இந்த வன்முறை வெறியைக் கண்டித்து, கடந்த 8ஆம் தேதி காவல் நிலையத்தை...

விடுதலை இராசேந்திரன் பங்கேற்று உரை மாற்றுத் திறனாளிகள் நடத்திய சுயமரியாதை கருத்தரங்கம்

விடுதலை இராசேந்திரன் பங்கேற்று உரை மாற்றுத் திறனாளிகள் நடத்திய சுயமரியாதை கருத்தரங்கம்

மாற்றுத் திறனாளிகளுக்கான ‘டிசம்பர் 3’ இயக்கத்தின் சார்பில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தின கருத்தரங்கம் மற்றும் முதலாம் ஆண்டு உரிமை முழக்க விழா 9.1.2016 காலை 10 மணியளவில் சென்னை தேனாம்பேட்டை மாநகராட்சி சமூக நலக் கூடத்தில் புத்தன் கலைக் குழுவினர் பறை இசையுடன் தொடங்கியது. முதல் நிகழ்வாக, ‘சுயமரியாதை பார்வையில் மாற்றுத் திறனாளிகள் – மானம் – மாண்பு’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு தலைமையேற்ற கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், சுயமரி யாதைக்கான விளக்கங்களை முன் வைத்து உரையாற்றினார். அவர் உரையில் குறிப்பிட்டதாவது: “உலகிலேயே சுயமரியாதை என்ற சொல் இந்த மண்ணில்தான் அறிமுகமானது. அதை அறிமுகப்படுத்தி, சுயமரியாதைக்காக மக்களை திரட்டியவர் பெரியார். உலகம் முழுதும் ஒடுக்கப்பட்ட இனங்கள் சமத்துவத்துக்கும் உரிமைக்கும் போராடின. அதற்கான நியாயங்களை அவர்கள் உணர்ந்தார்கள். ஆனால் இந்த நாட்டில்தான் ஒடுக்கப்பட்ட ஜாதிக் காரனாகவும், உரிமைகள் மறுக்கப்பட்டவர்களாக வும் உயிர் வாழ்வதை ‘தர்மமாக’ ஏற்றுக்...

பெரியார் : தொடரப்பட வேண்டிய பயணம்

பெரியார் : தொடரப்பட வேண்டிய பயணம்

‘தி இந்து’ தமிழ் நாளேடு, பெரியார் நினைவு நாளன்று திருத்தங்களுடன் வெளியிட்ட பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் எழுதிய கட்டுரையின் முழு வடிவம் இங்கே வெளியிடப்படுகிறது. பெரியாரின் பொது வாழ்க்கை எதிர் நீச்சலிலே தொடங்கியது. காந்தியின் தீண்டாமை, மதுவிலக்கு, கதர் பரப்புதல் போன்ற சமூக சீர்திருத்தக் கொள்கைகளே அவரை காங்கிரசுக்குள் இழுத்தது. அவர் காங்கிரசில் இருந்தது 5 ஆண்டுகாலம் தான். இரண்டு முறை மாநில தலைவர், இரண்டு முறை மாநில செயலாளர். அந்த 5 ஆண்டுகாலமும் வைக்கத்தில் தீண்டாமை எதிர்ப்பு; காங்கிரஸ் கட்சியே நடத்திய சேரன்மாதேவி குருகுலத்தில் பார்ப்பனக் குழந்தைகளுக்கு தனி இடத்தில் சாப்பாடு போட்டதற்கு எதிர்ப்பு; ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவம்’ என்ற அனைத்துப் பிரிவு மக்களுக்கும் கல்வி, வேலை வாய்ப்பைப் பகிர்ந்து அளிக்கும் ‘வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தை’ காங்கிரஸ் கொள்கையாக ஏற்க வேண்டும் என்ற போராட்டம் – என்று போராட்டம் தான்! மாகாண தலைவர், செயலாளர் பதவி கட்சியில் கிடைத்ததற்காக அவர் திருப்தி...

திருச்சியில் கழகம் நடத்திய பெரியார் பயிலரங்கம்: பார்ப்பனியம்-உலகமயமாக்கல் உறவுகள்

திருச்சியில் கழகம் நடத்திய பெரியார் பயிலரங்கம்: பார்ப்பனியம்-உலகமயமாக்கல் உறவுகள்

திருச்சி மண்டல திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக திருவெறும்பூர் தி.மு.க. தொழிற்சங்கக் கட்டிடத்தில் 29.12.2013 அன்று ஒரு நாள் பெரியார் பயிலரங்கம் சிறப்புடன் நடந்தது. மண்டல அமைப்புச் செயலாளர் புதியவன் வரவேற்புரையாற்ற, மாவட்ட கழக அமைப்பாளர் குணாராஜ் அறிமுக உரை யாற்றினார். திருச்சி, பெரம்பலூர் பகுதியிலிருந்து 75 இளைஞர்கள் பயிற்சியில் பங்கேற்று, கேள்விகளை எழுப்பி, உரிய விளக்கங்களைப் பெற்றனர். முனைவர் ஜீவா, ‘உலக மயமாக்கல்’ என்ற தலைப்பிலும், எழுத்தாளர் மதிமாறன், ‘பெரியார்-அம்பேத்கர்’ என்ற தலைப்பிலும் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், ‘பெரியார் இயக்கம் எதிர்நோக்கும் சவால்கள்’ என்ற தலைப்பிலும் உரையாற்றினர். முனைவர் ஜீவா உரையின் சுருக்கம்: உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்று உலகமெங்கும் பரவிவரும் கொள்கை, இந்தியாவில் சமஸ்கிருதமயமாக்கலையும் சேர்த்துக் கொண்டு மக்களை சுரண்டி வருகிறது. 1991 ஆம் ஆண்டு நரசிம்மராவ் பிரதமராக இருந்தபோது, இந்தியா ‘உலகமயமாக்கல்’  என்ற வலைக்குள் சிக்கியது. டங்கல் திட்டத்தில் இந்தியா கையெழுத்திட்டது. அதன்படி, அன்னிய நாட்டு உற்பத்திகளை...

சென்னை கூட்டத்தில் விடுதலை இராசேந்திரன் பேச்சு : மண்டேலா-பெரியார் சந்தித்த போராட்டக் களங்கள்

சென்னை கூட்டத்தில் விடுதலை இராசேந்திரன் பேச்சு : மண்டேலா-பெரியார் சந்தித்த போராட்டக் களங்கள்

கறுப்பினப் போராளி நெல்சன் மண்டேலா, பெரியார் நினைவு நாள் பொதுக்கூட்டம், மயிலைப் பகுதி திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் மந்தைவெளியில் 27.12.2013 அன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் ஜான், மண்டல அமைப்புச் செயலாளர் அன்பு தனசேகர், வழக்கறிஞர் துரை, அருண், பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினர். கறுப்பர் இனத்தின் மீதான நிற ஒதுக்கல் என்ற அடிமைத்தனத்துக்கு எதிராக போராடி, 27 ஆண்டுகள் சிறையிலடைக்கப்பட்டு, உலக நாடுகள் தந்த அழுத்தத்தின் காரணமாக, விடுதலைப் பெற்று, வெள்ளை நிறவெறி அரசின் இனஒதுக்கல் கொள்கைக்கு முற்றுப் புள்ளி வைத்த மண்டேலா வின் போராட்ட வாழ்க்கையை விடுதலை இராசேந்திரன் சுட்டிக் காட்டினார் ரிவோலியா. நீதிமன்றத்தில் மண்டேலாவின் பிரகடனம், எந்த இனமும் மற்றொரு இனத்துக்கு அடிமையாவதை எதிர்த்தது. கறுப்பர், வெள்ளையர் என்ற இரு பிரிவினரும் சம உரிமைகளோடு வாழக்கூடிய ஒரு ஜனநாயக தாராள சுதந்திரக் கொள்கையையே அவர் வலியுறுத்தினார். வெள்ளை நிறவெறி ஆட்சி திணித்த இன ஒதுக்கல்...

மயிலாடுதுறையில் கழக சார்பில் ‘உயிர்வலி’ ஆவணப்படம் திரையீடு

மயிலாடுதுறையில் கழக சார்பில் ‘உயிர்வலி’ ஆவணப்படம் திரையீடு

மயிலாடுதுறை திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் ‘உயிர்வலி’ ஆவணப்படம் திரையிடப்படும் நிகழ்வு 30.12.2013 திங்கள் மாலை 6.30 மணியளவில் புத்தகச் சோலை மேல் தளத்தில் உள்ள பெரியார் அரங்கில் சிறப்புடன் நடந்தது. கழக மாவட்டத் தலைவர் மா.மகாலிங்கம் தலைமை தாங்கினார். டி.பன்னீர்செல்வம் (ம.தி.மு.க.), வழக்கறிஞர் வேலு. குபேந்திரன் (வி.சி.), சுப்பு மகேசு (தமிழர் உரிமை இயக்கம்), வழக்கறிஞர் ஜெ. சங்கர் (கிழக்கு கடல் மக்கள் பாதுகாப்பு இயக்கம்), தனவேந்திரன் (ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கம்), எஸ். சுந்தர் (உழைக்கும் விவசாயிகள் இயக்கம்), ந. கலிய பெருமாள் (திருக்குறள் பேரவை) ஆகியோர் உரையைத் தொடர்ந்து, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆவணப்படம் குறித்தும், பேரறிவாளன் உள்ளிட்ட தோழர்கள் மீதான வழக்குகளின், உச்சநீதிமன்ற விசாரணைகள் குறித்தும், ராஜீவ் கொலை வழக்கில் முறையான விசாரணைகள் நடத்தப்படாமை குறித்தும், அரிதிலும் அரிதான வழக்குகளை தீர்மானிப்பதில் நீதிமன்றங்களில் நடக்கும் குழப்பங்கள் குறித்தும் விரிவாக விளக்கிப் பேசினார். தொடர்ந்து ஆவணப்...

பல நூறு மேடைகளில் முழங்கிய பகுத்தறிவுக் குரல் ஓய்ந்தது : திருவாரூர் தங்கராசு விடை பெற்றார்

பல நூறு மேடைகளில் முழங்கிய பகுத்தறிவுக் குரல் ஓய்ந்தது : திருவாரூர் தங்கராசு விடை பெற்றார்

பெரியார் கொள்கைகளை மேடைகளிலும் கலை வடிவங்களிலும் அரை நூற்றாண்டுக்கு மேலாக மக்களிடம் கொண்டு செல்வதையே தனது வாழ்வின் இலட்சியமாகக் கொண்டு செயல்பட்ட திருவாரூர் தங்கராசு 5.1.2014 பிற்பகல் 3.45 மணியளவில் சென்னை ராஜா அண்ணா மலைபுரத்திலுள்ள அவரது இல்லத்தில் முடிவெய்தினார். நோய்வாய்ப்பட்டு படுக்கையில் வீழாமல் மரணத்தை சந்திக்கும் வரை வழமையாகவே இருந்தார். குடும்பத் துடன் உரையாடிக் கொண்டிருந்தவர், கழிப்பறைக்குச் சென்றார். அங்கேயே சாய்ந்துவிட்டார். அவரது மரணமும் சுயமரியாதையுடனேயே நிகழ்ந்துவிட்டது. 6 ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் ராஜா அண்ணாமலைபுரத்திலிருந்த அவரது இல்லத்திலிருந்து பெரியார் இயக்கத் தோழர்கள் அணி வகுப்புடன் இறுதி ஊர்வலம் புறப்பட்டது. பெசன்ட் நகரிலுள்ள மின் மயத்தில் உடல் வீரவணக்க முழக்கங்களுடன் எரி யூட்டப்பட்டது. முன்னதாக, ராஜா அண்ணாமலை புரத்திலுள்ள அவரது இல்ல வாயிலில் தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் ஆனூர் செகதீசன் தலைமையில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் டி.கே.எஸ்....

பாசிசத்தை ஆதரிக்கும் பார்ப்பனிய அமைப்பு பா.ஜ.க.

பாசிசத்தை ஆதரிக்கும் பார்ப்பனிய அமைப்பு பா.ஜ.க.

காந்தி படுகொலை செய்யப்பட்ட ஜன.30 அன்று சென்னையில் ‘பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா’ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த பாசிச எதிர்ப்பு பொதுக் கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆற்றிய உரையிலிருந்து: பாரதிய ஜனதா கட்சி, ஆர்.எஸ்.எஸ். கட்டுப்பாட்டில் செயல்படும் ஒரு அமைப்பு. பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள மோடி, ஆர்.எஸ்.எஸ். அமைப்பால் தேர்வு செய்யப்பட்டவர். மோடி-ஆர்.எஸ்.எஸ். பிரச்சாரகராக இருந்து, பிறகு பா.ஜ.க.வுக்குள் திணிக்கப்பட்டவர். மோடியை பிரதமர் வேட்பாளராக அத்வானி ஏற்க மறுத்தார். உடனே ஆர்.எஸ்.எஸ். தலையிட்டு சமரசம் செய்தது. அத்வானி விருப்பம் இல்லாவிடிலும் ஆர்.எஸ்.எஸ். கட்டளைக்கு அடிபணிந்தார். இப்போது ‘தேசம் – தேச முன்னேற்றம் – வல்லரசு – இந்திய குடிமகன்’ என்ற சொல்லாடல்களை முன் வைத்து பா.ஜ.க.வும் மோடியும் தேர்தலை அணுகுகிறது. தங்களின் ‘மதவாதம் – இந்துராஷ்டிரம்’ என்ற அடிப்படையான கொள்கைகளை தற்காலிகமாக மறைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆர்.எஸ்.எஸ்., இஸ்லாமியர்களை எதிரிகளாகக் கட்டமைத்து இந்துக்களின் ராஷ்டிரத்தை வேத புராண சாஸ்திரங்களின்...

46 ஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாராட்டு: மேடையில் மதமறுப்பு திருமணம்

46 ஜாதி மறுப்பு இணையர்களுக்கு பாராட்டு: மேடையில் மதமறுப்பு திருமணம்

கோவையில் காதலர் திருவிழா கோவையில் பிப்.14 அன்று காதலர் திருவிழா, காலை தொடங்கி மாலை வரை கலை நிகழ்ச்சிகள், கருத்துரைகளுடன் மகிழ்ச்சியாகக் கொண்டாடப்பட்டது.  காந்திபுரம் ‘பாத்திமா சர்ச்’ கலை அரங்கில் நடந்த இந்த கொண்டாட்ட விழாவை திராவிடர் விடுதலைக் கழகத்தின் முன்னணி அமைப்பான ஜாதி மத எதிர்ப்பு காதல் மணம் புரிந்தோர் நலச் சங்கம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட் டிருந்தது. திராவிடர் விடுதலைக் கழகத் தோழர்களுடன், தமிழ்நாடு திரைக் கலைஞர் அனைத்து தொழிலாளர் கூட்டமைப்பைச் சார்ந்த தோழர் களும் தோழியர்களும் பெருமளவில் பங்கேற்று கலைநிகழ்ச்சிகளை வழங்கினர். ஜாதி மறுப்பு மணம் புரிந்த பல இணையர்கள் விழாவில் பங் கேற்றது குறிப்பிடத்தக்கதாகும். பகல் 11.45 மணியளவில் ஜாதி எதிர்ப்பு உறுதி ஏற்புடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. ‘சன்’ தொலைக்காட்சி வி.ஜெகன் குழுவினர் பல குரல் நிகழ்ச்சி, கோவை பிரியாவின் கரகாட்டம், நாட்டுப் புற கலைஞர் செந்தில் கிராமிய நிகழ்ச்சி, ரெஜிதாவின் பாடல் உள்ளிட்ட கலை...

ராஜிவ் கொலை விசாரணையில் காங்கிரசின்  துரோகம்

ராஜிவ் கொலை விசாரணையில் காங்கிரசின் துரோகம்

தமிழக முதல்வர் 7 பேரை விடுதலை செய்தவுடன் துள்ளி குதிக்கும் காங்கிரசார், ராஜிவ் மீது உண்மையான பற்று கொண்டவர்கள் தானா? ராஜீவ் பாதுகாப்பில் அலட்சியம் காட்டியதோடு தவறு செய்தவர்களை காப்hபற்ற முயன்றார்கள். இதோ, ஆதாரங்களுடன்…. ராஜீவ் காந்தி கொலை நடந்தபோது மத்தியில் ராஜீவின் ‘எடுபிடி’யான சந்திரசேகர் தலைமை யிலான ஆட்சி நடந்தது. வி.பி. சிங் ஆட்சியைகவிழ்த்த காங்கிரஸ், தனது ஆதரவோடு சந்திர சேகர் தலைமையில் ஒரு பொம்மை ஆட்சியை உருவாக்கியிருந்தது. சந்திரசேகர் ஆட்சியில் சட்ட அமைச்சராக இருந்தவர் சுப்ரமணியசாமி. ராஜீவ் கொலை நடந்த அடுத்த 6வது நாளில் ஜெக்தீஷ் சரண்வர்மா (ஜெ. எஸ். வர்மா) என்ற உச்சநீதி மன்ற தலைமையில் ஒரு விசாரணை ஆணை யத்தை சந்திரசேகர் ஆட்சியில் உள்துறை அமைச்சராக இருந்த சுபத்காந்த் சகாய், 1991 மே 27 ஆம் தேதி அறிவித்தார். ராஜீவ் காந்திக்கு செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளில் கோளாறுகள், குறைகள் நடந்தனவா என்பது குறித்து ஆராய்வதே இந்த...

மார்ச் 29இல் மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம்

மார்ச் 29இல் மயிலாடுதுறையில் திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம்

  எதிர்வரும் 29-03-2014 சனிக்கிழமை அன்று காலை 10.00 மணிக்கு, நாகை மாவட்டம் மயிலாடுதுறையில், ( நிகழ்விடம் பின்னர் அறிவிக்கப்படும்) திராவிடர் விடுதலைக் கழக செயலவைக் கூட்டம் கீழ்கண்ட பொருள்கள் குறித்து விவாதிக்க, கழக செயலவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி அவர்கள் தலைமையில், நடைபெற  உள்ளது. அனைத்து செயலவை உறுப்பினர்களும் தவறாது கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம் பொருள்: இந்துத்துவ எதிர்ப்புப் பரப்புரை பரப்புரை வாகனம் வாங்குதல் மய்ய அரசுப் பணிகளில் தென்னாட்டுக்கு வஞ்சனை பல்கலைக் கழகங்களில் சோதிடக் கல்வி பகுத்தறிவு பரப்புரை தொடர் கூட்டங்கள் ஆண்டுக்கு ஆயிரம் ரூபாய் நன்கொடை திட்டம் எதிர்கால வேலைத் திட்டம் கொளத்தூர் மணி   விடுதலை இராசேந்திரன் (தலைவர்)    (பொதுச் செயலாளர்) பெரியார் முழக்கம் 20032014 இதழ்

மே மாதம் முழுதும் கழக பயிற்சி முகாம்கள்!

மே மாதம் முழுதும் கழக பயிற்சி முகாம்கள்!

11.3.2014 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் சென்னை தலைமை நிலைய அலுவலகத்தில் திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு கூடியது. கழக செயலவைத் தலைவர் சு.துரைசாமி தலைமையில், கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ஆகியோர் முன்னிலையில் கூடிய இக்கலந்துரையாடல் கூட்டத்தில் கீழ்கண்டோர் பங்கேற்றனர்: ஈரோடு ப. இரத்தினசாமி, பால். பிரபாகரன், தி.தாமரைக்கண்ணன், தபசி. குமரன், சூலூர் தமிழ்ச்செல்வி, புதுவை லோகு அய்யப்பன், அன்பு. தனசேகரன், இராம. இளங்கோவன், பல்லடம் விஜயன், மேட்டூர் அ. சக்திவேல், மயிலாடுதுறை இளையராஜா, திண்டுக்கல் இராவணன், கொளத்தூர் குமார், திருப்பூர் சிவகாமி, பேராசிரியர் இராமகிருட்டிணன். தலைமைக் குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகள்: பொறுப்பாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள்: சேலம் மண்டல பொறுப்பாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மே மாதம் 2, 3, 4 ஆகிய மூன்று நாட்கள் ஏற்காட்டிலும், கோவை மண்டல பொறுப்பாளர்களுக்கான பயிற்சி வகுப்புகள் மே மாதம் 12, 13, 14 ஆகிய மூன்று...

திராவிடர் விடுதலைக் கழக செயலவை நிகழ்வுகள்

திராவிடர் விடுதலைக் கழக செயலவை நிகழ்வுகள்

29.3.2014 அன்று மயிலாடு துறையில் திராவிடர் விடுதலைக் கழக செயலவை – செயலவைத் தலைவர் திருப்பூர் சு.துரைசாமி தலைமையில் நடந்தது. நாகை மாவட்ட கழகத் தலைவர் மகா லிங்கம், ‘கடவுள்-ஆத்மா’ மறுப்பு களைக் கூற, தஞ்சை மண்டலச் செயலாளர் வழக்கறிஞர் இளைய ராசா வரவேற்றுப் பேசினார். கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் தொடக்க உரையாற்றினார். பொருளாளர் இரத்தினசாமி, கழகப் பரப்புரைக்காக 30 பேர் பயணிக்கக்கூடிய பயன்படுத்தப் பட்ட வாகனம், கழகத் தலைவர் ஒப்புதலுடன் வாங்கப்பட் டுள்ளதையும், அதற்குத் தேவை யான நிதி குறித்தும் விளக்கினார். ஒவ்வொரு மாவட்டக் கழகமும் வாகனத்துக்கான நன்கொடை யாக பொது மக்களிடமிருந்து திரட்டித்தரக்கூடிய நிதி மற்றும் குடும்ப ரீதியாக வழங்கக்கூடிய நிதியை நிர்ணயம் செய்யலாம் என்ற ஆலோசனையை முன் வைத்தார். அதன்படி செயலவை உறுப்பினர்கள் இயக்கம் மற்றும் குடும்ப சார்பில் வழங்கக் கூடிய நன்கொடையைத் தெரிவித்தனர். உரையாற்றிய மாவட்ட பொறுப்பாளர்கள் : சென்னை ஜான், காஞ்சிபுரம்...

பெரியார் மீது அவதூறு கக்கும் ம.பொ.சி. பரம்பரைக்கு மறுப்பு

பெரியார் மீது அவதூறு கக்கும் ம.பொ.சி. பரம்பரைக்கு மறுப்பு

மதிவண்ணன் நூல் வெளியீட்டு நிகழ்வில் பேசிய பத்திரிகையாளர் விஷ்ணுபுரம் சரவணன், பெரியார் மீது ம.பொ.சி.யின் பேத்தி பரமேசுவரி என்பவர், இணையதளத்தில் அவதூறுகள் எழுதி வருவதை சுட்டிக்காட்டி பேசினார். அவரது உரையையும், அவதூறுக்கு மறுப்பாக ‘குடிஅரசு’ பதிவுகளையும் (4 ஆம் பக்கம்) வெளியிடுகிறோம். ராவ் சாகிப் எல்.சி.குருசாமி சட்டமேலவை உரைகள் மற்றும் மதிவண்ணன் எழுதிய, ‘உள் ஒதுக்கீடு’; ‘தொடரும் விவாதம்’; ‘மெல்ல முகிழ்க்கும் உரையாடல்’, ‘ஏதிலியைத் தொடர்ந்து வரும் நிலா’ ஆகிய மூன்று நூல்கள் வெளியீட்டு நிகழ்வு 15.3.2014 அன்று சென்னை அய்கப் அரங்கில் நடைபெற்றது. ‘கருப்புப் பிரதிகள்’ இந்த நூல்களை வெளியிட் டுள்ளது. நூல்களை ஆதித் தமிழர் பேரவைத் தலைவர் அதியமான் வெளியிட, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பெற்றுக் கொண்டார். வ.கீதா, புனித பாண்டியன் மற்றும் தோழர்கள் உரையாற்றினர். நீலகண்டன் தொகுத்து வழங்கினார். ‘மெல்ல முகிழ்க்கும் உரையாடல்’ நூலை அறிமுகம் செய்து பத்திரிகையாளர் விஷ்ணுபுரம் சரவணன் எழுத்துப்பூர்வமாக பதிவு செய்த...

திராவிடர் விடுதலைக் கழக இணையதள செயல்பாட்டாளர்களின் கலந் துரையாடல் மற்றும் பயிற்சி வகுப்பு

திராவிடர் விடுதலைக் கழக இணையதள செயல்பாட்டாளர்களின் கலந் துரையாடல் மற்றும் பயிற்சி வகுப்பு

6.4.2014 ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை சென்னை நுங்கம்பாக்கம் இரயில் நிலையம் எதிரிலுள்ள ‘பிரிட்ஜ் அகடாமி’ அரங்கில், திராவிடர் விடுதலைக் கழக இணையதள செயல்பாட்டாளர்களின் கலந் துரையாடல் மற்றும் பயிற்சி வகுப்பு நடைபெற்றது. கழக இணைய தள செயலாளர் அன்பு. தனசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், கழதத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், அமைப்புச் செயலாளர் தி.தாமரைக் கண்ணன் உள்பட 50 தோழர்கள் கலந்து கொண்டனர். திராவிடர் விடுதலைக் கழக அதிகாரபூர்வ இணையதளமான செழுமைப்படுத்துவது குறித்து கலந்தாலோசிக்கப்பட்டது. இணையதளங்களில் பெரியார் பற்றியும், பெரியார் இயக்கங்கள் பற்றியும் அவதூறு பரப்புவதை, எப்படி எதிர்கொள்வது என்றும் விளக்கமளிக்கப்பட்டது. இணையதளத்தில் பெரியார் முழக்கம், புகைப்படம், ஒலி, ஒளி, அறிக்கைகள், நிகழ்வுகள், மின்னூல்கள் முதலியவற்றை பதிவேற்றுவதற்கு தனித்தனியாக பொறுப்பாளர்கள் கீழ்கண்டவாறு நியமிக்கப்பட்டனர். ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழை இணையத்தில் பதிவேற்றும் பணி,...

மயிலாடுதுறை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் விளக்கம்: சமூக மாற்றம்-வளர்ச்சிகளை தடைப்படுத்தும் ஜாதியம்

மயிலாடுதுறை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் விளக்கம்: சமூக மாற்றம்-வளர்ச்சிகளை தடைப்படுத்தும் ஜாதியம்

சமூகத்தில் நிகழும் அரசியல்-பொருளாதார செயல்பாடுகளை மக்கள் மேம்பாட்டுக்கு பயன்படவிடாது, ஜாதியம் விழுங்கி செரிமானம் செய்கிறது என்று பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் குறிப்பிட்டார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மயிலாடுதுறையில் 30.3.2014 அன்று சிறப்புக் கருத்தரங்கம், வருவாய்த் துறை அலுவலர் சங்கக் கட்டிடத்தில் சிறப்புடன் நடைபெற்றது. காலை 10.30 மணிக்கு மாநிலக் குழுத் தலைவர் எல்.பி. சாமி தலைமையில் நடந்த முதல் அமர்வில் ‘ஜாதியப் பாகுபாடுகளும் வன்கொடுமைகளும்’ என்ற தலைப்பில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் உரையாற்றினார். “ஜாதியப் பாகுபாடுகளுக்கு அடிப்படையானது ஜாதியமைப்பு; ஜாதியமைப்பு உலகிலே எங்கும் இல்லாது இந்தியாவில் மட்டுமே இயங்கிக் கொண் டிருக்கிற பார்ப்பனர்களால் கட்டி எழுப்பப்பட்ட அமைப்பு. பிரிட்டிஷ்காரர்கள் இந்தியாவுக்கு வரும் வரை இந்தியா என்ற ஒன்று உருவாகவில்லை. ஆனால், வேத காலத்தில் தொடங்கிய பார்ப்பனர் களின் புரோகித ஆட்சிகளையே அரசர்களும் குறுநில மன்னர்களும் நடத்தி வந்தனர். இதனால் உலகில் பல்வேறு சமூக அமைப்புகளில்...

‘இந்து’ மதப் போர்வைக்குள் பதுங்கிக் கிடக்கும் பார்ப்பன பயங்கரவாதம் முகமூடியைக் கிழித்தது ஈரோடு மாநாடு 

‘இந்து’, ‘இந்துத்துவம்’ என்ற கூச்சல் களுக்குப் பின்னால் பதுங்கிக் கிடப்பது பார்ப்பனர்களும் பார்ப்பனியமும்தான் என்ற உண்மையை வரலாற்றிலிருந்தும் பா.ஜ.க. பரிவாரங்களின் ஆட்சி அதிகார செயல்பாடு களிலிருந்தும் ஏராளமான தகவல்களை முன் வைத்தது, ஈரோட்டில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய ‘இந்து’ பார்ப்பன பயங்கரவாத எதிர்ப்பு மாநாடு. மாநாட்டில் உரையாற்றிய பலரும் உண்மையான எதிரிகளை அடையாளப் படுத்தும் சரியான மாநாடு என்று பாராட்டினர். வெற்று ஆரவாரங்கள் – தனி நபர் துதிகள் இல்லாமல் தொடக்கம் முதல் இறுதி வரை அறிவார்ந்த கருத்துகளையும் சிந்தனைகளையும் முன் வைத்ததும், மாநாட்டுப் பார்வையாளர்கள் இறுதிவரை செவிமெடுத்ததும் இந்த நாட்டின் சிறப்பாகும். மாநாட்டு நிகழ்ச்சிகள் பற்றிய ஓர் தொகுப்பு: ஈரோடு மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டு மண்ணில் “இந்து பார்ப்பன-பயங்காரவாத எதிர்ப்பு மாநாடு” நவம்பர் 8 ஞாயிறு பகல் 11 மணியளவில் ஈரோடு பவானி ரோடு கே.கே.எஸ்.கே. திருமண மண்டபத்தில் பார்ப்பன...

‘புதிய குரல்’ நடத்திய பெரியார் குடும்பங்களின் சந்திப்பு

‘புதிய குரல்’ நடத்திய பெரியார் குடும்பங்களின் சந்திப்பு

ஜாதி மறுப்புக் கொள்கைகளை வாழ்வியலாக்கி வாழும் பெரியார் குடும்பங்களின் சந்திப்பு பயிற்சியரங்கை ‘புதிய குரல்’ அமைப்பு ஆண்டுக்கு இரு முறை கூடி நடத்தி வருகிறது. பெரியார் இயக்கங்களுக்கும் அப்பால் வாழும் குடும்பங்களை ஒன்று திரட்டி கருத்துப் பரிமாற்றத்தோடு கொள்கை உறவுகளை வளர்த்தெடுக்கும் முயற்சியில் தோழர் ஓவியாவும் அவரது தோழர்களும் இணைந்து செயல்பட்டு வருகின்றனர். கடந்த 23, 24, 25 தேதிகளில் கன்னியாகுமரியில் நடந்த குடும்ப சந்திப்பு நிகழ்வில், மதம்-மூடநம்பிக்கை-பெண்ணுரிமை குறித்த கருத்துகள் விவாதிக்கப்பட்டன. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, மதம் குறித்து உரையாற்றி, விவாதங்களிலும் பங்கேற்றார். குழந்தை களுக்கான அறிவியல் கலந்துரையாடல் நிகழ்வுகள் இசைப் பாடல்களோடும் தனியே நிகழ்ந்தன. அ. மார்க்ஸ் மதத்தின் சர்வதேச அரசியல் குறித்துப் பேசினார். அமைப்பின் தோழர்கள் தோழியர்கள் கருத்துகளைப் பகிர்ந்தனர். இரவில் ஆவணப் படங்கள் திரையிடப்பட்டன. பெரியார் முழக்கம் 05062014 இதழ்

திருவாரூர் தங்கராசு படத்திறப்பு

திருவாரூர் தங்கராசு படத்திறப்பு

சென்னை திருவான்மியூர் ‘குத்தூசி குருசாமி-குருவிக்கரம்பை வேலு சுயமரியாதைப் பேரவை’ சார்பில், 16.3.2014 ஞாயிறு அன்று திருவாரூர் கே.தங்கராசு படம் திறந்து வைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மதுரை மரு.அ.சவுந்திர பாண்டியன் தலைமை வகித்தார். புதுகை க. இராசேந்திரன் வரவேற்புரையாற்றினார். திருவாரூர் தங்கராசு படத்தை திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரனும், திராவிடர் கழகப் பொருளாளர் கோ.சாமிதுரை படத்தை இனமானக் கவிஞர் செ.வை.ர. சிகாமணியும் திறந்து வைத்து உரை நிகழ்த்தினர். ‘அறிவின் வழி’ மாத இதழ் ஆசிரியர் கவிஞர் குடந்தையார் சிறப்புரையாற்றினார். பெரியார் முழக்கம் 19062014 இதழ்

தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் மதவாதத்திற்கு எதிரான கருத்தரங்கம் சென்னை 28112014 விடுதலை இராசேந்திரன் உரை

தமிழகத்தில் காலூன்றத் துடிக்கும் ஆர்.எஸ்.எஸ் மதவாதத்திற்கு எதிரான கருத்தரங்கம் சென்னை 28112014 விடுதலை இராசேந்திரன் உரை

பெரியார் ஏன் எதிர்க்கப்படுகிறார்? மயிலாடுதுறையில் கழகம் நடத்திய விளக்கக் கூட்டம்

திராவிடர் விடுதலைக் கழகத் தின் சார்பாக மயிலாடுதுறை சின்னக்கடை வீதியில் 26.09.2015 சனிக் கிழமை அன்று பெரியார்: யாரால், எதற்க்காக, எதிர்க்கப் படுகிறார்? என்ற தலைப்பில் பெரியார் பிறந்தநாள் கூட்டம் நடைப்பெற்றது. கூட்டத்திற்கு நகர அமைப் பாளர் கு.செந்தில்குமார் தலைமை வகித்தார். திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், எழுத்தாளர் வே.மதிமாறன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மத அடிப்படை வாதிகளும், ஜாதிய ஆதிக்கவாதிகளும்தான் பெரியாரை எதிர்க்கின்றனர் என்றும், கல்வி, வேலை வாய்ப்புகளில் போராடிப் பெற்ற இடஓதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இடங்களில் இன்றும் அவர்கள் முழுமையாக அதில் பலன் பெற முடியாமல் பல்வேறு இடையூறுகளை ஏற்ப்படுத்தி இட ஒதுக் கீட்டை ஒழிக்கும் சதி திட்டமிட்டு நடைபெறுவதாக விடுதலை இராசேந்திரன் கூறினார். எழுத்தாளர் மதிமாறன் பேசும்போது திருக்குறளை இரண்டாயிரம் ஆண்டுகளாக ஆண்ட மன்னர்கள் மக்களிடம் கொண்டு சேர்க்காமல் புராணங்களை கதாகாலேட்சபம் செய்து கொண்டிருந்த வேளையில் பெரியார் தான் திருக்குறள் மாநாடு...

‘ஈழம் அமையும்’ நூல் வெளியீட்டு நிகழ்வில் விடுதலை இராசேந்திரன் உரை அமெரிக்க-இந்திய துரோகங்களை எப்படி எதிர்கொள்ளப் போகிறோம்?

ஊடகவியலாளர்கள் அய்யநாதன் எழுதிய ‘ஈழம் அமையும்’ நூல் வெளியீட்டு நிகழ்வும் கருத்தரங்கமும் அக்.2, 2015 அன்று சென்னை ‘கவிக்கோ’ அரங்கில் காலை முதல் இரவு வரை ஒரு நாள் நிகழ்வாக நடந்தது. காலை அமர்வில் அந்நூலை பழ. நெடுமாறன் வெளியிட, வைகோ பெற்றுக் கொண்டார். வழக்கறிஞர் பானுமதி, டி.எஸ்.எஸ். மணி, பேராசிரியர் இராமு மணிவண்ணன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி ஆகியோர் அறிமுகவுரை நிகழ்த்தினர். இரண்டாம் கட்ட அமர்வாக பிற்பகல் 3 மணியளவில் “அய்.நா. மனித உரிமை மன்றத் தீர்மானம்: தமிழர்களுக்கு நீதி கிடைக்குமா?” என்ற தலைப்பில் ஓய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரி எம்.ஜி. தேவசகாயம் தலைமை யில் நடந்தது. நிகழ்வில் பங்கேற்று, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரை: எனது நீண்டகால நண்பர் அய்யநாதன் மிகச் சிறந்த பத்திரிகையாளர். ஈழத் தமிழர்கள் பிரச்சினையில் உந்தப்பட்ட அவர், தனது பத்திரிகையாளர் பணியையும் உதறிவிட்டு, செயல்களத்துக்கு வந்தவர். தமிழ் ஈழப்...

இடஒதுக்கீடு கொள்கை : மறு பரிசீலனை தேவையா? சங்பரிவாரங்கள் எழுப்பும் வாதங்களுக்கு மறுப்பு

இடஒதுக்கீட்டுக் கொள்கையை மறு ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று ஆங்கில ஊடகங்கள் ஒரே குரலில் கூக்குரலிட்டு வரும் நிலையில் அதற்கு மறுப்பாக இடஒதுக்கீட்டுக் கொள்கை தொடர வேண்டும் என்று வலியுறுத்தி கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ ஆங்கில நாளேட்டுக்கு (செப். 30, 2015) எழுதிய கட்டுரை இது. இடஒதுக்கீட்டை எதிர்ப்பவர்கள் அதன் இலக்கை எட்டுவதற்கு முன்பே ஒழிக்க வேண்டும் என்று கருத்துகளை உருவாக்கத் தொடங்கியிருக்கிறார்கள் என்றும், பல ஆண்டுகாலமாக பின்பற்றப்பட்டு வரும் இடஒதுக்கீடு கொள்கைதான் தமிழகத்தை இந்தியாவுக்கே முன்னோடி மாநிலமாக உயர்த்தியிருக்கிறது என்றும் கட்டுரை சுட்டிக்காட்டுகிறது. குறி பார்க்கும் முன்பே துப்பாக்கிக் குண்டு முந்திக் கொண்டு பாய்வது போன்றதே இடஒதுக்கீடு எதிர்ப்பாளர்கள் கருத்து உள்ளது என்பதுபோல்,“anti-quota can jumps the gun” என்று ‘டைம்ஸ்ஆப் இந்தியா நாளேடு இக்கட்டுரைக்கு தலைப்பிட்டுள்ளது. விடுதலை இராசேந்திரன் கட்டுரையின் தமிழ் வடிவம்: “எங்களுக்கும் இடஒதுக்கீடு வேண்டும்; இல்லையேல் இடஒதுக்கீடு எவருக்குமே இருக்கக்...

ஈ வெ ரா பெரியார் – வாழ்வும் பணியும் நூல் வெளியீட்டு விழா

          தந்தை பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு எஸ். இராமகிருஷ்ணனின் ஈவெரா பெரியார் வாழ்வும் பணியும் நூல் வெளியீட்டு விழா பாரதி புத்தக அரங்கில் நடைபெற்றது. பொதுச்செயலாளர் முதல் படியை பெற்று கொண்டார்