Category: சிறப்பு கட்டுரை

கூட்டாட்சி – ஒற்றை ஆட்சியாகும்; அதிபரே நாட்டை ஆள்வார் ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ உருவாக்கும் ஆபத்து

கூட்டாட்சி – ஒற்றை ஆட்சியாகும்; அதிபரே நாட்டை ஆள்வார் ‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ உருவாக்கும் ஆபத்து

‘ஒரே தேசம்; ஒரே தேர்தல்’ நடைமுறைக்கு வந்தால் கூட்டாட்சி தத்துவத்தையே தகர்த்து விடும் என்று பிரபல அரசியல் விமர்சகர் – எழுத்தாளர் ஏ.ஜி. நூரானி எச்சரித்திருக்கிறார். ‘டெக்கான் குரேனிக்கல்’ ஏடு (ஜூன் 30, 2019) அவரது கட்டுரையை வெளியிட் டிருக்கிறது. கட்டுரையில் அவர் பதிவு செய்துள்ள கருத்துகள்: பிரதமர் எந்த நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்று முடிவெடுக்கிறாரோ, அப்போதே குடியரசுத் தலைவரிடம் நாடாளு மன்றத்தைக் கலைக்கச் சொன்னால், நாடு முழுதும் தேர்தல் நடத்தும் நிலை வந்துவிடும். மாநில முதல்வர்களுக்குள்ள அதிகாரங்கள் ஆளுநருக்குப் போய் விடும். குடியரசுத் தலைவர் – நாடாளுமன்றத்தைக் கலைக்கும்போது, மாநில ஆளுநர்களும் சட்டமன்றங்களைக் கலைத்து விடுவார்கள். 1948ஆம் ஆண்டு அரசியல் நிர்ணய சபையிலேயே டாக்டர் அம்பேத்கர் இந்தக் கருத்தை சுட்டிக்காட்டியிருக்கிறார். 1948ஆம் ஆண்டு இது குறித்து மேலும் தெளிவான விளக்கங்களை முன் வைத்தார். “நமது அரசியல் சட்டத்தின் பிற மாநில அரசுகள், சட்டமியற்றுவதற்கோ, நிர்வாகத் துக்கோ, நடுவண்...

வைக்கம் போர்: கொச்சைப்படுத்தும் பார்ப்பனர்கள்

வைக்கம் போர்: கொச்சைப்படுத்தும் பார்ப்பனர்கள்

பெரியார் வைக்கம் போராட்டத்தில் இறுதி கட்டத்தில்தான் பங்கேற்றார் என்றும், வைக்கம் போராட்டத்தின் முழு பெருமையும் பெரியார் மீது ஏற்றிக் காட்டப்படுகிறது என்றும் பெரியாருக்கு எதிராகப் பேசுவதற்காகவே கிளம்பியுள்ள ஒரு கூட்டம் தொடர்ந்து பேசியும் எழுதியும் வருகிறது. ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் குருமூர்த்தி நடத்தி வரும் ‘துக்ளக்’ ஏடும் (26.10.2016) அதையே இப்போதும் எழுதி, அதில் ஒரு அற்ப மகிழ்ச்சி அடைகிறது. மாதவன் என்ற அப்போதைய ‘தீண்டப்படாத’ சமூகமான ஈழவ சமூகத்தைச் சார்ந்த வழக்கறிஞர், வைக்கம் கோயில் வீதிகளைக் கடந்து நீதிமன்றம் சென்றபோது தடுக்கப்பட்டார். கேரள காங்கிரஸ் தலைவர்கள் கோயிலைச் சுற்றிய வீதிகளில் நடமாடும் உரிமைகளை மறுக்கும் தீண்டாமையை எதிர்த்துப் போராட்டம் நடத்துவது என கேரள காங்கிரஸ் சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நாள் 16.2.1924. கேசவமேனன், ஜார்ஜ் ஜோசப் போன்ற 19 தலைவர்கள் போராட்டத்தைத் தொடங்கிய நாள் 30.3.1924. 6 மாதம் தண்டனை தரப்பட்டு  அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டதைத் தொடர்ந்து, போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தும்...

கூடங்குளத்தில் அணுக்கழிவு: தமிழர்கள் சோதனை எலிகளா?

கூடங்குளத்தில் அணுக்கழிவு: தமிழர்கள் சோதனை எலிகளா?

கூடங்குளம் அணு உலைகளில், எரி பொருளாகப் பயன்படும் யுரேனியம் பயன்பாட் டுக்குப் பிறகு புளூட்டோனியம் அணுக்கழிவாக மாறுகிறது. அந்தக் கழிவு, அணு உலைக்குக் கீழே உள்ள குட்டையில் சேமிக்கப்படுகிறது. அந்தக் குட்டையில் எட்டு ஆண்டுகளுக்கு மட்டுமே இந்தக் கழிவுகளை சேமிக்க முடியும். எனவே, அணுஉலையில் உருவாகும் புளூட் டோனியம் கழிவு உலைக்கு வெளியே எடுக்கப்பட்டு கூடங்குளம் வளாகத்துக் குள்ளாகவே பாதுகாப்பாக வைக்கப் போகிறார்களாம். இந்த செயல் முறைக்கு ‘ஹறயல குசடிஅ சுநயஉவடிச’ (ஹகுசு) என்று பெயர். இந்த மையத்திலும் கழிவுகள் நிரந்தரமாகச் சேமித்து வைக்கப் படாது; இது ஒரு தற்காலிகமான அணுக்கழிவு மையம் என்கிறார்கள். ஆனால், அணுக்கழிவை ‘ஆழ்நிலைக் கருவூலம்’ (னுநநயீ ழுநடிடடிபiஉயட சுநயீடிளவைடிசல-னுழுசு) என்னும் முறையில் நிரந்தரமாகச் சேமித்து வைப்பதுதான் சரியானது. அப்படி நிரந்தரமாகச் சேமித்து வைக்க வேண்டும் எனில் பூமிக்கு அடியில் பல கி.மீட்டர் ஆழத்தில் புதைக்க வேண்டும். தற்காலிகமாகச் சேமிக்கும் மையத்தில் பாதுகாப்பு இருக்காது. ஏதாவது அசம்பாவிதம்...

ஒற்றை இலக்க மதிப்பெண் பெற்றாலும் மருத்துவக் கல்லூரியில் இடம் உண்டு  ‘நீட்’ தகுதித் தேர்வு அல்ல; வணிகம்!

ஒற்றை இலக்க மதிப்பெண் பெற்றாலும் மருத்துவக் கல்லூரியில் இடம் உண்டு ‘நீட்’ தகுதித் தேர்வு அல்ல; வணிகம்!

‘நீட்’ தகுதித் தேர்வு என்ற வாதம் பொய்யானது. உண்மையில் அது கல்வி வணிகக் கொள்ளைக்குக் கதவைத் திறந்து விடுகிறது. நீட் தகுதியை உயர்த்துகிறதா? மருத்துவக் கல்லூரி படிப்பின் தகுதியை உயர்த்தவும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கட்டணக் கொள்ளையை முடிவுக்கு கொண்டு வருவதற்கும் ‘நீட்’ தேர்வை நடத்துவதாக நடுவண் அரசு வாதிட்டு வருகிறது. ஆனால், உண்மையில் ‘நீட்’ மேற்குறிப்பிட்ட இரண்டு பிரச்சினைகளுக்கும் நேர் எதிராகவே செயல்படுகிறது. இயற்பியல், வேதியல் என்ற இரண்டு பாடங் களுக்கான 180 மதிப்பெண்களில் ஒரு மதிப்பெண் கூட பெறாத பூஜ்யம் பெற்ற மாணவர்கள் 2017ஆம் ஆண்டு பஞ்சாபில் மருத்துவக் கல்லூரியில் இடம் பிடித்திருக் கிறார்கள். தவறான விடைக்கு மதிப்பெண் குறைக்கப் படும் என்ற அடிப்படையில் மேற்குறிப்பிட்ட இரண்டு பாடங்களிலும் மதிப்பெண்  குறைவுக்கு உள்ளானவர்கள் இந்த மாணவர்கள் இது குறித்து ‘டைம்ஸ் ஆப் இந்தியா’ நாளேடு (ஜூன் 15, 2019) அதிர்ச்சியான ஆய்வுச் செய்தி ஒன்றை வெளியிட் டுள்ளது. வேதியல்,...

தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்பதை உறுதி செய்யும் ஆய்வுகள்

தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்பதை உறுதி செய்யும் ஆய்வுகள்

“தாய்மொழியில் பயில்வதன் மூலம்தான் ஒரு குழந்தை, தன் அறிவுத்திறனின் உச்சத்தை அடைய முடியும். புகழ்பெற்ற மொழியியல் அறிஞர் நோம் சாம்ஸ்கி, ‘குழந்தைகள், மனதளவில் எந்தத் தொந்தரவும் இல்லாமல் ஒரு மிதிவண்டியை ஓட்டிப் பழகுவதுபோல தாய்மொழியைக் கற்றுக்கொள்கின்றனர்’ என்கிறார். தாய்மொழிக் கல்வியே சிறந்தது என்பதை உறுதிசெய்யும் பல ஆய்வுகள் உலக மெங்கும் நடைபெற்றுள்ளன. அதில் முக்கியமான இரண்டு ஆய்வுகள் அமெரிக்கா வில் நடைபெற்றவை. அமெரிக்க அரசு, தன் நாட்டில் வசிக்கும் மொழிச் சிறுபான்மையினருக்கு எந்தக் கல்விமுறையில் பயிற்றுவிப்பது என்பதை முடிவு செய்ய 1991இல் ‘ரமிரெஸ் எட் அல்’ (சுயஅசைநண நவ யட 1991) என்ற ஆய்வை நடத்தியது. பெரும் பொருள்செலவில் எட்டு ஆண்டு காலம் நடந்த இந்த ஆய்வின் பிரதான நோக்கம், ‘அமெரிக்காவில் வசிக்கும் லத்தீன் இன மாணவர்களுக்கு எந்தக் கல்விமுறையில் பாடம் நடத்துவது? ஆங்கில வழியிலா… தாய்மொழியான ஸ்பானிஷ் வழியிலா?’ என்ற கேள்விக்கு விடை கண்டறிவதே. 2,342 மாணவர்கள் இந்த ஆய்வில்...

இனமும் மொழியும் அடையாளங்கள்தான் கோட்பாடுகளே அனைத்தையும் தீர்மானிக்கும் தொல். திருமாவளவன்

இனமும் மொழியும் அடையாளங்கள்தான் கோட்பாடுகளே அனைத்தையும் தீர்மானிக்கும் தொல். திருமாவளவன்

இனத் தூய்மைப் பேசுகிறவன் – ஜாதித் தூய்மை பேசுகிறான்; ஜாதித் தூய்மை பேசுகிற சுத்தத் தமிழன்தான் இந்துத்துவத்துக்கும் ஜாதி வெறிக்கும் துணை போகிறான் என்று குறிப்பிட்டார், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன். பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவரின் இந்தத் தெளிவான ஆழமான பேச்சு சமூக ஊடகங்களில் பரவலாகி வருகிறது. உரையின் முக்கியத்துவம் கருதி ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ பதிவு செய்கிறது. பெரியாரைப் போய் அவர் தமிழர் இல்லை என்று சில அரைவேக்காடுகள் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். தந்தை பெரியார் தமிழர் அல்ல கன்னடர் என்று அவர்கள் சொல்வதை அங்கீகரித்தால் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களையே புறந்தள்ள வேண்டிய நிலை வரும். விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கும் தமிழ் உணர்வு உள்ளது. தமிழ் உணர்வு என்பது வேறு, இனத்தூய்மை என்பது வேறு. தமிழனுக்கு ஆட்சி அதிகாரம் வேண்டும் என்பது இன உரிமை. தமிழனின் தாய் மொழியான தமிழுக்கு மரியாதை வேண்டும்...

கழக இளைஞர்கள் தீச்சட்டி ஏந்தி அணிவகுத்து வந்தனர் மேட்டூரில் கொட்டும் மழையில் நாத்திகர் பேரணி

கழக இளைஞர்கள் தீச்சட்டி ஏந்தி அணிவகுத்து வந்தனர் மேட்டூரில் கொட்டும் மழையில் நாத்திகர் பேரணி

மே 25, 2019 அன்று மேட்டூர் ஆர்.எஸ். பகுதியில் மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணியும் பெரியார் அம்பேத்கர் பிறந்த நாள் விழா மற்றும் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு விழாவும் எழுச்சியுடன் நடை பெற்றது.  நாமக்கல், சேலம், ஈரோடு, திருப்பூர், கோவை, பொள்ளாச்சி, சென்னையிலிருந்து கழகத் தோழர்கள் பங்கேற்றனர். உயர்நீதிமன்றம் வழியாக உத்தரவு பெற்று நடந்த நாத்திகர் பேரணி மேட்டூர் கேம்ப் பகுதியில் தொடங்கி ஆர்.எஸ். பேருந்து நிறுத்தத்தில் முடிவடைந்தது. பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் பேரணியை மாலை 4 மணியளவில் கொடி அசைத்துத் தொடங்கி வைத்தார். பேரணி 2 மணி நேரம் நடந்தது. பேரணி வரும்போதே மழை கொட்டத் தொடங்கிவிட்டது. கொட்டும் மழையில் ஒரு மணி நேரம் தோழர்கள் மூடநம்பிக்கை ஒழிப்பு முழக்கங்களை எழுப்பி வந்தனர். பெண்களும் ஆண்களுமாக இளைஞர் கூட்டம். பேரணிக்காகவே தயாரிக்கப்பட்ட ‘டி சட்டைகளை’ அணிந்து முழக்கமிட்டு வந்த காட்சியை வீதியின் இருபுறங்களிலும் மக்கள் திரளாகக் கூடி நின்று பார்த்தனர்....

பார்ப்பன – மதவாத சக்திகளைப் புறக்கணித்தது பெரியார் மண்

பார்ப்பன – மதவாத சக்திகளைப் புறக்கணித்தது பெரியார் மண்

தனிப் பெரும்பான்மையுடன் – மீண்டும் பிரதமராகவிருக்கும் மோடி – இந்தியா வெற்றி பெற்றிருக்கிறது என்று தனது வெற்றியைக் குறிப்பிட்டுள்ளார். ‘மோடியே – இந்தியா’ என்ற சர்வாதிகாரத்தின்  வெளிப்பாடு இது. மோடியின் கூற்றுப்படி மோடியைப் புறக்கணித்த தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் இந்தியாவில் இல்லை என்றே நாம் முடிவுக்கு வர வேண்டி யிருக்கிறது. வடநாட்டுக்கும் தென்னகத்துக்குமிடையே உள்ள முரண்பாடுகளை இந்தத் தேர்தல் முடிவுகள் கூர்மைப்படுத்தியிருக்கிறது என்றே கூறவேண்டும். பாரதிய ஜனதா கட்சியின் தேசிய ஜனநாயக முன்னனி இந்தியா முழுமைக்கும் 43.86 சதவீதமும், காங்கிரஸ் தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணி 25.81 சதவீத வாக்குகளையும் இரண்டு தேசிய கூட்டணிகளிலும் இடம் பெறாத மாநிலக் கட்சிகள் 30.33 சதவித வாக்கு களையும்  பெற்றிருக்கின்றன. அதிகாரத்தைப் பிடித்துள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான –இரண்டு அணிகளும் 56.14 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கின்றனர். இந்தியா வின் தேர்தல் அமைப்பு முறையில் வாக்கு களின் சதவீதங்களுக்கு ஏற்ப இடங்கள்...

மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும் மாநில சுயாட்சி  – தென்மாநில கூட்டமைப்புக்கான குரலே முதன்மை பெற வேண்டும்

மத்தியில் எந்த ஆட்சி வந்தாலும் மாநில சுயாட்சி – தென்மாநில கூட்டமைப்புக்கான குரலே முதன்மை பெற வேண்டும்

5 ஆண்டு  மோடி ஆட்சி வட மாநிலங் களுக்கும்  தென் மாநிலங்களுக்கும் இடை யிலான முரண்பாட்டை கூர்மையாக்கி யுள்ளது. அடுத்து ஆட்சியை பா.ஜ.க. அமைத்தாலும் மாநிலக் கட்சிகள் காங்கிரஸ் ஆதரவோடு அமைத்தாலும் “மாநில சுயாட்சி மற்றும் தென் மாநிலங் களுக்கான கூட்டமைப்பு” என்ற முழக்கத்தை முன்னெடுத்தாக வேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. தென் மாநிலங்களின் இந்த கோரிக்கையில் நியாயம் இருக்கிறது. 2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் 15ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகள் அமையும் என்பதை சமீபத்தில் ஆங்கிலப் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த பேட்டியில் திட்டவட்டமாகப் பதிவு செய்தார் அதன் தலைவரான மாநிலங்களவை உறுப்பினர் திரு. என்.கே.சிங். 2017ஆம் ஆண்டின் இறுதியில் ஒன்றிய அரசால் 15ஆவது நிதிக்குழு அமைக்கப்பட்டு, அரசாணை யில் அதன் பணி வரன் முறைகள் (Terms of Reference) வழங்கப்பட்ட உடனேயே அது தென் மாநிலங்களில் மிகப்பெரிய சர்ச்சையையும், விவாதத்தையும் ஏற்படுத்தியது . அதற்கு முக்கியக் காரணம், 2020-21 முதல் 2024-25...

ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் வரலாற்று ஆவணம்

ஜாதி ஒழிப்புப் போராட்டத்தின் வரலாற்று ஆவணம்

வடவாரிய பார்ப்பன வந்தேறிகளின் சூழ்ச்சியால் திராவிட இன மக்களாகிய மண்ணின் மைந்தர்களுக்கு இடையே நால்வருண சாதி அடுக்குகளை உருவாக்கி, தீண்டாமையை நிலைப்படுத்தி விட்டனர். இந்த மனிதகுல விரோதக் கட்டமைப்பைச் சீர்குலைத்து விடாது மேலும் கெட்டிப்படுத்தும் வகையில் இந்திய அரசியலமைப்புச் சட்டம் பாதுகாப்பு வழங்கும் வகையில் உருவாக்கப்பட்டுவிட்டது சூது மதியினரால்! பிறப்பின் காரணமாக மனிதர்களிடையே ஏற்றத் தாழ்வையும், உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்ற பேதத்தையும் கற்பித்துக் கடைப்பிடிக்கப்பட்டு வருவதை எதிர்த்து மானுடப் பற்றாளரான பெரியார், சாதி-தீண்டாமை ஒழிப்புக்கான பிரச்சாரம் – போராட்டம் என நடத்தி மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தினார். இந்த வருண பேதம் கற்பிக்கும் சாஸ்திர-சம்பிரதாயங்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் அரசியல் அமைப்புச் சட்டத்தைத் தீ வைத்துக் கொளுத்துவேன் என்று போராட்ட அழைப்பை விடுத்து, இன இழிவு நீங்கிட, தீண்டாமை ஒழிந்திடப் போராட்டக் களம் நோக்கி வாருங்கள் என மக்களுக்கு அழைப்பு விடுத்தார் பெரியார்! பெரியாரின் போர்க் குரல் கேட்டு, சட்ட எரிப்புப் போராட்டத்தில் கலந்து...

ஈழத் தமிழர் பிரச்சினை: இலங்கை – இந்திய அரசுகளின் துரோகம்

ஈழத் தமிழர் பிரச்சினை: இலங்கை – இந்திய அரசுகளின் துரோகம்

முள்ளி வாய்க்கால் இனப் படுகொலை நடந்து 10 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. அய்.நா.வின் தலையீட்டுக்குப் பிறகும் இலங்கை அரசு தமிழர் உரிமைக்கான எந்த முன்னெடுப்பையும் செய்ய வில்லை. இப்போது என்ன நடக்கிறது என்பதை விளக்கி ஈழத் தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு விடுத்துள்ள அறிக்கை: இந்திய வான்படை வீரர் அபிநந்தன் வர்த்தமான் பாகிஸ்தானிடம் மாட்டிக் கொண்டு அவரது புகைப்படமும் காணொளியும் வெளிவந்தபோது ஜெனீவா உடன்படிக்கையின்படி போர் கைதிகளின் புகைப்படத்தை வெளியிடக் கூடாதென்று இந்தியா தெரிவித்தது. மேலும் ஐ.நா. மனித உரிமை அமைப்பில் இதுபற்றி முறையிடப் போவதாகவும் சொன்னது. அதே சர்வதேச சட்டவிதிகள் மீறப் பட்டே ஈழத்து இசைப்பிரியாக்களும் பாலசந்திரன் களும் அரசியல் பிரிவைச் சேர்ந்தவர்களும் சிறிலங்கா இராணுவத்தால் கொல்லப்பட்டனர். தன்னாட்டு வீரர்கள் பொருட்டு ஜெனீவா மன்றத்தில் முறையிடப் போவதாக சொல்லும் இந்திய அரசு, ஈழத் தமிழர் களின் பொருட்டோ குற்றமிழைத்த இலங்கையை ஆதரித்து நிற்கிறது. அபிநந்தன் வர்த்தமான்களுக்கு ஒரு நீதி? பாலசந்திரன்களுக்கு ஒரு...

7 தமிழர் விடுதலை – நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி – இடஒதுக்கீட்டில் பதவி உயர்வு உச்சநீதிமன்றத்தின் பாராட்டத்தக்கத் தீர்ப்புகள்

7 தமிழர் விடுதலை – நீதிபதிகள் நியமனத்தில் சமூக நீதி – இடஒதுக்கீட்டில் பதவி உயர்வு உச்சநீதிமன்றத்தின் பாராட்டத்தக்கத் தீர்ப்புகள்

உச்சநீதிமன்றம் அண்மையில் வெளியிட்டுள்ள இரண்டு தீர்ப்புகளும் நீதிபதிகள் நியமனம் தொடர்பான அறிவிப்பும் பாராட்டி வரவேற்கப்பட வேண்டியதாகும். முதலில் 7 தமிழர் விடுதலை தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பைக் குறிப்பிட வேண்டும். இராஜீவ் கொலையில் நேரடி தொடர்பில்லாத மறைமுக உதவி செய்ததார்கள் என்ற குற்றச்சாட்டில் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன், ராபர்ட் பயாஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் என்ற ஏழு தமிழர்கள் 28 ஆண்டுகளாக சிறையில் வாடி வருகிறார்கள். இதில் 3 பேர் தூக்குத் தண்டனையிலிருந்து ஆயுள் தண்டனையாக தண்டனைக் குறைப்புக்கு உள்ளானோர். இப்போது அனைவருமே தண்டனை அனுபவித்து வரும் சிறைவாசிகள். சிறைவாசிகளை தண்டனைக் குறைப்பு செய்து விடுதலை செய்யும் உரிமையை அரசியல் சட்டம் மாநில அரசுகளுக்கு 161ஆவது விதியின் கீழ் வழங்கியுள்ளது. இவர்கள் சி.பி.அய். என்ற மத்திய புலனாய்வுத் துறை விசாரணைக்கு உள்ளானவர்கள் என்பதால் மாநில அரசு இவர்களை விடுதலை செய்ய முடியாது என்று மத்திய காங்கிரஸ் ஆட்சி கூறி வந்தது....

சென்னையில் களப் போராளி பத்ரியின் 15ஆவது நினைவு நாள் உணர்வலைகளை உருவாக்கிய ‘வெளிச்சம் பெறாத தொண்டர்கள்’ விழா

சென்னையில் களப் போராளி பத்ரியின் 15ஆவது நினைவு நாள் உணர்வலைகளை உருவாக்கிய ‘வெளிச்சம் பெறாத தொண்டர்கள்’ விழா

கழகப் போராளி பத்ரி நாராயணன் 15ஆவது நினைவு நாள் ஏப்.30, 2019 அன்று சென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் ‘வெளிச்சத்துக்கு வராத தொண்டர்கள்’ விழாவாக நடத்தப்பட்டது. சென்னை இராயப்பேட்டைப் பகுதியை பெரியார் இயக்கத்தின் கோட்டையாக மாற்றிய களப் போராளி பத்ரி நாராயணன், சமூக விரோத சக்திகளால் 2004, ஏப். 30  அன்று பட்டப் பகலில் படுகொலைச் செய்யப்பட்டார். ஒரு காலத்தில் அவர் வாழ்ந்த இராயப்பேட்டை வி.எம். தெரு பகுதி, சமூக விரோதிகளின் கூடாரமாக இருந்தது. பல இளைஞர்களை அந்தப் பாதையி லிருந்து விடுவித்து பெரியார் கொள்கைகளை எடுத்துச் சொல்லி பெரியார் கொள்கைப் பாதைக்குத் திரும்பியவர் பத்ரி நாராயணன். அப்பகுதியில் அவரால் உருவாக்கிய 120 இளைஞர்களைக் கொண்டுதான் சென்னையில் பெரியார் திராவிடர் கழகம் 1996, ஜூலை 16ஆம் நாள் அண்ணா சாலையில் உள்ள பெரியார் சிலை முன்பு கூடி உறுதியேற்றுத் தொடங்கியது. பார்ப்பன ஆதிக்க எதிர்ப்புடன் இணைந்து பார்ப்பனியத்தில் மூழ்கி...

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிரான சதி

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு எதிரான சதி

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்மீது பாலியல் புகார் கொடுத்த பெண்மணி யார் என்றால், நீதிபதிகள் அளித்த தீர்ப்பையே தலைகீழாக மாற்றி தொழில் அதிபர்களால் இலாபம் அடைந்தவர் என்ற திடுக்கிடும் தகவல் வெளிவந்துள்ளது. தலைமை நீதிபதி மீது புகார் கூறிய பெண் மீது பல மோசடி வழக்குகள் உள்ளன. அதில் நீதிமன்றத் தீர்ப்புகளை ‘டைப்’ செய்யும் பணியில் இருந்த போது, நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில் “மோசம், மிக மோசம்” என்று கூறிய வரிகளை அப்படியே “நல்லது மிகவும் நல்லது” என்று தலைகீழாக மாற்றம் செய்து பதிவு செய்வார். முக்கியமாக வங்கிக் கடன் தொடர்பாக பெரிய நிறுவனத்தினர் மீது வரும் தீர்ப்புகளில் முன்கூட்டியே இவரிடம் நிறுவனத்தின் முக்கிய நபர்கள் பேசி வைத்ததைப் போல் இவர் மாற்றிவிடுவார். இதன்மூலம் பல பெரிய தொழில் நிறுவன முதலாளிகள் பயனடைந்துள்ளனர். இந்த விவகாரம் ரஞ்சன் கோகோய் தலைமையில் உள்ள குழுவில் இவர் எழுத்தராகச் சேர்ந்த 2015ஆம் ஆண்டில்...

பாடத் திட்டத்தில் மத நஞ்சைக் கலந்த மோடி ஆட்சி

பாடத் திட்டத்தில் மத நஞ்சைக் கலந்த மோடி ஆட்சி

மோடி ஆட்சியில் பாடத் திட்டத்தில் இந்துத்துவா திணிப்பு – காஷ்மீர் மக்கள் மீதான அடக்குமுறைகள் – வங்கிப் பண பரிமாற்றத்தில் நிகழ்ந்த மோசடிகள் பற்றிய ஒரு தொகுப்பு: மோடியின் ஐந்தாண்டுகளில் பள்ளிக் கல்வி : 2014இல் மோடியின் தேர்தல் அறிக்கையில், மாணவர்களுக்கு புதிய கல்வித் திட்டம் கொண்டு வரப்படும் என்று  சொல்லப்பட்டது. அதன்படி 2016ஆம் ஆண்டு ஒரு குழு நியமிக்கப்பட்டு 230 பக்க வரைவு தயார் செய்யப்பட்டது. பிறகு அதையும் மாற்றியமைத்து சுப்ரமணியம் என்பவர் தலைமையின் கீழ் ஒரு புதிய குழு தொடங்கப்பட்டு வரைவு தயாரிக்கும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. ஆனால் அதுவும் இன்று வரை முடியவில்லை. இந்தியாவில் 2009ஆம் ஆண்டு கல்விக்கான மசோதா நிறைவேற்றப்பட்டது. இதில் 1 முதல் 8ஆம் வகுப்பு சர்வ சிக்சா அபியான் திட்டத்தின் கீழும், 9 மற்றும் அதற்கு மேற்பட்ட வகுப்புகள் அனைத்தும் இராஷ்ட்ரிய மத்யமிக் சிக்சா பையன் திட்டத்தின் கீழும் தனித்தனியாக பட்ஜெட் ஒதுக்கப்பட்டது. ஆனால்,...

மதத்திற்காக மனிதனா? மனிதனுக்காக மதமா? பெரியார்

மதத்திற்காக மனிதனா? மனிதனுக்காக மதமா? பெரியார்

இலங்கையில் கிறித்தவர்களைக் குறி வைத்து நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 200க்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகிவிட்டன. இந்தியாவில் ‘இராம இராஜ்யம்’ அமைக்கத் துடிக்கும் சக்திகள், சிந்தனையாளர்களைக் கொலை செய்து வருகின்றன. இந்தப் பின்னணியில் மதம் குறித்து 78 ஆண்டுகளுக்கு முன்பு பெரியார் நிகழ்த்திய உரை இது. அக்கிரசானர்  அவர்களே! சகோதரிகளே! சகோதரர்களே! பொதுவாக சமயங்கள், மதங்கள், மார்க்கங்கள் என்பவைகள் எல்லாம் நல்ல அர்த்தத்தில் எடுத்துக் கொண்டாலும் அவை மனித சமூகத்தின் வாழ்க்கை நலத்திற்கே ஏற்படுத்தப்பட்டவையாகும். மனித வாழ்க்கைக் கேற்ற திட்டங்களே தான் சமயம் அல்லது மார்க்கம் என்று சொல்லப் படுவதுமாகும். ஒரு வாசக சாலையிலேயோ, உல்லாசக் கூட்ட சாலையிலேயோ, ஒரு சங்கத்திலேயோ சேர்ந்திருக்க வேண்டிய அங்கத்தினர்கள் அச்சங்கத்தின் நிர்வாகத்தின் அவசியத்திற்காக என்று தங்களுக்குள் விதிகளை நிர்ணயித்துக் கொள்வதுபோலவே ஒரு பிராந்தியத்தில் வாழும் ஜனங்கள் தாங்கள் சேர்ந்திருப்பதற்காகவும், தங்கள் வாழ்க்கை தடையின்றி முறையாய் மற்றவர்களுக்கு இடையூறு இல்லாமல் நடைபெறுவதற்காகவும் ஏற்படுத்திக் கொண்ட அல்லது யாராவது...

இலங்கையின் தொடர் குண்டு வெடிப்புகள் கடவுளின் ஆட்சிக்கு மனித உயிர்களை பலி கேட்கும் மதவெறி

இலங்கையின் தொடர் குண்டு வெடிப்புகள் கடவுளின் ஆட்சிக்கு மனித உயிர்களை பலி கேட்கும் மதவெறி

இலங்கையில் கிறித்துவர்களைக் குறி வைத்து அவர்களின் வழிபாட்டு இடங்களிலும் நட்சத்திர ஓட்டல்களிலும் குண்டு வெடித்து 310க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் பலியாகிவிட்டனர். 500 பேருக்கு மேல் படுகாயமடைந்துள்னர். மட்டக் களப்பில் ஈஸ்டர் நாள் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்த தமிழர்களும் குண்டு வெடிப்புக்கு பலியாகியுள்ளனர். இந்தியாவைச் சார்ந்த 5 பேர் உயிர்ப் பலியாகியுள்ளனர். சிறுபான்மை மக்களைக் குறி வைத்து நடத்தப்பட்ட இந்தக் கொடூரத் தாக்குதல் கடும் அதிர்வுகளை உருவாக்கியுள்ளது. இந்தத் தாக்குதலுக்கு எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை என்றாலும் தேசிய தவ்ஹீத் ஜமாத் என்ற அமைப்பு மீது இலங்கை அரசு சந்தேகம் தெரிவித்திருக்கிறது. ஆனாலும் தாக்குதலுக்கு குறி வைக்கப் பட்டவர்கள் – மதத்தின் அடிப்படையில் தான் என்பது மட்டும் உறுதியாகியிருக்கிறது. உலகம் முழுதும் மத பயங்கரவாதம் மனித குலத்தையே அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. ஈரான், சிரியா, ஆப்கானிஸ்தான் என்று இந்த பட்டியல் விரிவடைந்து நிற்கிறது. தங்களின் ‘கடவுள்’ ஆணையை ஏற்று ‘மத அரசாட்சியை’ உருவாக்குவதற்காக மனித...

காவிரி: பா.ஜ.க.வின் துரோகங்கள், நினைவிருக்கிறதா?

காவிரி: பா.ஜ.க.வின் துரோகங்கள், நினைவிருக்கிறதா?

காவிரிப் பிரச்சினையில் நடுவண் ஆட்சி பச்சையாக – தனது தேர்தல் அரசியல் நலனுக்காக தமிழ்நாட்டு மக்களின் உரிமைகளை திட்டமிட்டு துரோகம் செய்ததை மறக்க முடியுமா? 16.2.2018 அன்று உச்சநீதிமன்றம் அளித்த இறுதித் தீர்ப்பில், “6 வாரங்களுக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் – இந்த 6 வார காலக்கெடு எக்காரணம் கொண்டும் நீட்டிக்கப்பட மாட்டாது” என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தது. (It is hereby made clear that no extension shall be granted for framing the scheme on any ground – தீர்ப்பு பக்.451) 6 வார காலத்துக்குள் தீர்ப்பை அமுல்படுத்த முடியாது என்று தமிழகம் வந்த மத்திய அமைச்சர்கள் பேட்டி அளித்தனர். தீர்ப்பை செயல்படுத்த வேண்டிய மத்திய நீர்வளத் துறை செயலாளரும் இதே போன்ற கருத்துகளையே வெளியிட்டார். 6 வாரக் கெடு முடியும் வரை மத்திய அரசு தீர்ப்பை அமுல்படுத்த எந்த...

மோடியின் அடுக்கடுக்கான ‘பொய்’ (2)

மோடியின் அடுக்கடுக்கான ‘பொய்’ (2)

பகுதி 1   மோடி பேசி வரும் பொய்களின் ஒரு தொகுப்பு, இது. 600 கோடி ஓட்டு: மோடி உலக பொருளாதார மன்றத்தில் உரையாற்றிய மோடி, கடந்த 30 ஆண்டுகளில் முதன்முறையாக 600 கோடி மக்கள் ஓட்டு போட்டு என்னை பிரதமராக தேர்வு செய்திருக்கிறார்கள் என்றார். இந்தியாவின் மக்கள் தொகையே 120 கோடி மட்டும் தான். அதிலும் ஓட்டு போடும் மக்கள் 80 கோடி பேர் தான். இந்த 80 கோடி பேரில் 600 கோடி ஓட்டு பெற்று பிரதமர் ஆனதாக மோடி குறிப்பிடுகிறார். இப்படியொரு  அறிவாளி பிரதமரை இந்தியா கொண்டிருப்பதற்கு என்ன தவம் செய்ததோ! குஜராத்திலிருந்து முதல் பிரதமர்: மோடியின் பொய் குஜராத்திலிருந்து பிரதமராகும் முதல் நபர் தான் மட்டுமே என மோடி தனது தேர்தல் பிரச்சாரத்தின்போது கூறினார். ஆனால் உண்மை? இந்தியாவின் வரலாற்றில் நான்காவது பிரதமராக மொரார்ஜி தேசாய் குஜராத்திலிருந்து வந்தவர் தான். ஆனால் மோடி தன்னை குஜராத்திலிருந்து...

பகுத்தறிவாளர்கள் – சிந்தனையாளர்களைத் தண்டிக்கத் துடிக்கும் பா.ஜ.க. ஆட்சி மீண்டும் தொடரக் கூடாது 154 விஞ்ஞானிகள் அறைகூவல்

பகுத்தறிவாளர்கள் – சிந்தனையாளர்களைத் தண்டிக்கத் துடிக்கும் பா.ஜ.க. ஆட்சி மீண்டும் தொடரக் கூடாது 154 விஞ்ஞானிகள் அறைகூவல்

நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் பகுத்தறிவு சிந்தனையற்றவர்களுக்கு எதிராக வும், சாதி, மதம், இனம், மொழி, பிராந்தியம் ரீதியாக, மக்களைத் துண்டாட நினைப்பவர் களுக்கு எதிராகவும் வாக்களிப்போம் என்று நாடு முழுவதுமுள்ள விஞ்ஞானிகள் அறைகூவல் விடுத்துள்ளனர். கல்வியாளர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் அறிவியலாளர்களின் கூட்டமைப்பான இந்தியக் கலாச்சாரக் கழகம், இந்தியக் கல்வி அ றிவியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், இந்தியப் புள்ளியல் நிறுவனம், தேசிய உயிரியல் அறிவியல் மையம், இந்திய தொழில்நுட்பக் கழகம் மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றும் 154 விஞ்ஞானிகள் இணைந்து இந்த அறைகூவலை விடுத் துள்ளனர். அமித் ஆப்தே, சோரப் தலால், ரமா கோவிந்த ராஜன் உள்ளிட்ட பல விஞ்ஞானிகள் அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: “மக்களை மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும், மொழியின் பெயராலும், வாழும் பகுதியின் பெயராலும், பாலினத்தின் பெயராலும் மக்களுக்கு எதிராக பாகுபாட்டை ஏற்படுத்தி அவர்களைக் கொலை செய்பவர்களை நாம் நிராகரிக்க வேண்டும்....

பெரியார் – காந்தி சிலைகளுக்கு மாலை போட்டதற்காகவே கைது செய்ததை மறக்க முடியுமா?

பெரியார் – காந்தி சிலைகளுக்கு மாலை போட்டதற்காகவே கைது செய்ததை மறக்க முடியுமா?

”மறக்கமுடியுமா?” • சங்பரிவாரங்கள் நடத்திய ‘ராம ரதயாத்திரை’க்கு தமிடிநநாட்டில் காவல் துறை பாதுகாப்புடன் அனுமதி வழங்கியது எடப்பாடி ஆட்சி. தமிழ்நாட்டை மதக் கலவரமாக்கும் இந்த யாத்திரையை அனுமதிக்கக் கூடாது என்று மதவெறி எதிர்ப்புக் கூட்டு இயக்கத்தின் வேண்டுகோளைப் புறந்தள்ளி எதிர்ப்பு தெரிவித்த பல்லாயிரக்கணக்கான தோழர்களை கைது செய்தது எடப்பாடி அ.இ.அ.தி.மு.க. ஆட்சி. • முள்ளி வாய்க்கால் இனப்படுகொலைக்குள்ளான ஈழத் தமிழர்களுக்கு வீர வணக்கம் செலுத்த சென்னை மெரினா கடற்கரையில் திரண்ட இளைஞர்களைக் கைது செய்து 17 முன்னணித் தோழர்களை ‘ரிமாண்ட்’ செய்ததும் எடப்பாடி ஆட்சி தான். இவர்கள் தான் இப்போது ஈழத் தமிழர் பிரச்சினையின் ஆதரவாளர்களைப்போல் தேர்தல் பரப்புரைக் கூட்டங்களில் பேசி வருகிறார்கள். • அதே முள்ளிவாய்க்கால் வீரவணக்க நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்த திருமுருகன் காந்தி (மே 17), இளமாறன் மற்றும் டைசன் (தமிழர் விடியல் கட்சி) ஆகிய தோழர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்து சிறையிலடைத்து பா.ஜ.க. எஜமானர்களிடம் தனது...

மோடியின் ‘பொய்’கள் – 1

மோடியின் ‘பொய்’கள் – 1

மோடி பேசி வரும் பொய்களின் ஒரு தொகுப்பு, இது. அறிவியல் – மோடி ஒரு நாட்டின் மக்களை எப்படியெல்லாம் வழி நடத்த வேண்டும் என்று பல தலைவர்களின் பட்டியலைக் கொடுக்கலாம். ஆனால் எப்படி வழி நடத்தக் கூடாது என்று  கேட்டால் தயங்காமல் மோடியின் பெயரைப் பரிந்துரைக்கலாம். நாட்டின் அறிவியலாளர்கள், மருத்துவர்கள் அடங்கிய அவையில் மோடி பேசியது, “மகாபாரதத்தில் கர்ணன் தாயின் வயிற்றிலிருந்து பிறக்கவில்லை. இதற்குக் காரணம், அன்றைய காலக்கட்டத்திலேயே மரபணு அறிவியல் இருந்ததால் தான் இது நடந்திருக்கிறது. விநாயகரின் தலையைப் பாருங்கள், யானையின் தலை பொருத்தப் பட்டிருக்கிறது. அன்றே பிளாஸ்டிக் சர்ஜரி இருந்ததால் தான் இது நடந்திருக்ககிறது” என்றார். அறிவியல் பாதையில் உலகம் விண்வெளி யில் வீடு அமைக்கும் அளவுக்கு முன்னேறிக் கொண்டிருக்கும் காலத்தில் மத நம்பிக்கைகளை உட்புகுத்தி கிஞ்சிற்றும் அறிவுக்கு உட்படாத நிகழ்வுகளை அறிவாளர்கள் கலந்து கொள்ளும் நிகழ்வில் பேசுகிறார். தன் அரசியலுக்கு கர்ணனையும், விநாயகரையும்கூட விட்டு விட்டு வைக்க...

அனிதாவின் உயிர்பறித்த ‘நீட்’

தமிழ்நாட்டின் ஒருமித்த குரலை உதறித்  தள்ளி ‘நீட்’டை திணித்தது மோடி ஆட்சி. நீட் தேர்வை இரத்து செய்வோம் என்கிறது, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை. மருத்துவத் துறையில் இந்தியாவுக்கே வழி காட்டும் மாநிலம் தமிழ்நாடு. தமிழ் நாட்டைப்போல் மிகச் சிறந்த மருத்துவர்கள் வேறு மாநிலத்தில் இல்லை. ஒடுக்கப்பட்ட சமுதாயத்தில் பிறந்து, முதல், இரண்டாம் தலைமுறையாக இடஒதுக்கீட்டில் இடம் கிடைத்து படித்த நமது மருத்துவர்கள் மருத்துவத் துறையில் ஆற்றல் மிகுந்த நிபுணர்கள். இதய அறுவை சிகிச்சையிலிருந்து உறுப்பு மாற்று சிகிச்சை வரை இந்தியாவின் தலைசிறந்த  மருத்துவர்களை நாம் பெற்றிருக்கிறோம். அது நமது தமிழ் நாட்டின் பெருமை. இப்போது அந்தத் தனித் தன்மையை ஒழிக்க வந்தது ‘நீட்’ தேர்வு. 2006ஆம் ஆண்டிலேயே நாம் நுழைவுத் தேர்வை ஒழித்து விட்டோம். அது நமது கிராமப்புற மாணவர்களுக்கு பெரும் தடை என்பதை உணர்ந்தோம். ‘ப்ளஸ் டூ’ வரை கடுமையாக உழைத்து மதிப்பெண்களைப் பெறும் நமது பிள்ளைகள், நல்ல மதிப்பெண்...

அன்னையார் வாழ்க்கைப் பாதை

1919 மார்ச் மாதம் 10-ஆம் நாள் வேலூரில் வி. எஸ். கனகசபை – பத்மாவதி தம்பதியருக்கு மகளாய் பிறந்தார். உடன் பிறந்தவர்கள் சண்முகம், தியாகராஜன் ஆகிய இரண்டு சகோதரர்களும் கமலா என்ற ஒரு சகோதரி யும் ஆவார்கள். வேலூரில் உள்ள அரசு பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் பள்ளி இறுதி ஆண்டு (எஸ்.எஸ்.எல்.சி.,) வரை படித்தார். கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள குலசேகரப் பட்டினம் சி.டி. நாயகம் தமிழ்க் கல்லூரியில் தமிழ்ப் புலவர் வகுப்பு படிக்கையில் கல்வி தடைப்பட்டுவிட்டது. 1936 வேலூருக்கு ஒரு திருமணத்தில் கலந்து கொள்வதற்காக வந்த பெரியாரிடம் அறிமுகம் செய்துவைக்கப்பட்டார். அப்போது நான்காவது பாரம் (9ஆம் வகுப்பு) படித்துக் கொண்டிருந்த போது பெரியாரைச் சந்தித்த காரணத்திற்காக, பள்ளி நிர்வாகம் இவரை வகுப்பிலிருந்து வெளி யேற்றியது. 1943 செப்டம்பர் மாதம் 11 -ஆம் நாள் தந்தை பெரியாரின் சுயமரியாதைக் கருத்துகளால் கவரப்பட்டு அய்யாவின் தொண்டராகப் பணியாற்ற வந்தவர். 1944 சேலத்தில் ஜஸ்டிஸ் கட்சி ‘திராவிடர்...

ஊழலுக்கு அப்பாற்பட்டதா பா.ஜ.க.? அணிவகுக்கும் பட்டியல்கள்… ஆதாரங்களுடன்…

பா.ஜ.க., லஞ்சம் வாங்காத ஊழல் செய்யாத உலக உத்தம கட்சி என உலகம் முழுக்க பொய் பேசி வருகிறார் பிரதமர் மோடி. ஆனால் அவர் கட்சியும், அவரும் ஊழலில் செய்தே திளைத்தவர்கள். பா.ஜ.க. செய்யும் ஊழலில் நாட்டின் பணம் மட்டுமல்ல, இந்த நாட்டின் சாமான்ய மக்களின் உயிரும் ஆயிரக்கணக்கில் பலியாயிருக்கிறது. அந்த ஊழல்களின் பட்டியல்களில் சில:   2003 – 40 ஏக்கர் நில மோசடி – மோடியின் குஜராத் ஊழல் : குஜராத் மாநிலத்தின் கட்ச் நகரத்தில் உள்ள 40 ஏக்கர் நிலத்தை அலுமினியா  ரிஃபைனரி லிமிடெட் என்ற தனியார் நிறுவனத்திற்கு, மோடி முதலமைச்சராக இருந்த போது வழங்கினார். இதில் சட்ட விதிகள் மீறப்பட்டிருக்கிறது என்று உச்சநீதிமன்றம் கூறியிருக்கிறது. 2003ஆம் ஆண்டில் எந்த காரணத்திற்காக நிலம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்பபட்டதோ அந்த பணியினை பத்தாண்டுகள் ஆகியும் தொடங்கக் கூடவில்லை. இந்த நிலத்தின் மதிப்பு 2008ஆம் ஆண்டில் 4.35 கோடி. ஆனால் இதில்...

தமிழ்மீது நஞ்சு கக்கும் நாகசாமிக்கு செம்மொழி ஆய்வுக் குழுவில் பதவியா? ஒ. சுந்தரம்

மத்திய செம்மொழித் தமிழாய்வு மையம் (Central Institute of Classical Tamil) சார்பாக, தமிழறிஞர்களுக்குக் குடியரசுத் தலைவர் வழங்கும் விருதுக்கானத் தேர்வுக் குழுவில், உறுப்பினராக தொல்லியல் துறை இயக்குனராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றுவிட்ட திரு. நாகசாமியை நியமித்து இருப்பதான அறிவிப்பிற்கு பல்வேறு தமிழ் அறிஞர்களும், கடும் கண்டனம் தெரிவித்து இருக்கின்றனர்.   திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், “வேதங்களில் இருந்து திருக்குறள் வந்தது என அய்யன் திருவள்ளுவரைச் சிறுமைப் படுத்தி, திரிபுவாதத்தை முன்வைத்த முன்னாள் தொல்லியல் அதிகாரி நாகசாமியை, செம்மொழி விருதுத் தேர்வுக் கமிட்டியில் நியமித்திருப்பதைக் கண்டிப்பதாகவும், ஒரு ஆய்வல்ல, பல்வேறு ஆய்வுகளைக் கலப்படமான, ஆதாரமில்லாத, இட்டுக்கட்டிய தகவல்களின் அடிப்படையில் வெளியிட்டு, சமஸ்கிருதமும் வேதங்களும்தான் தமிழ் மண்ணுக்குச் சொந்தம் என்ற விஷமப் பிரச்சாரத்தில் தொடர்ந்து ஈடுபட்டிருக்கும் ஒருவர் எப்படிப் பாரபட்சமின்றி செம்மொழி விருதுகளைத் தேர்வு செய்ய முடியும் என்றும், செம்மொழித் தமிழ் மீது அடர்த்தியான...

தி.மு.க. கூட்டணியை ஆதரிக்க  தமிழக மக்களுக்கு கழகம் வேண்டுகோள்

தி.மு.க. கூட்டணியை ஆதரிக்க தமிழக மக்களுக்கு கழகம் வேண்டுகோள்

கழகப் பொருளாளர் துரைசாமி இல்லத்தில் திருப்பூரில் 20.3.2019 அன்று திராவிடர் விடுதலைக் கழக தலைமைக் குழு, கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் பொதுச்செயலாளர் விடுதலை இராசேந்திரன் முன்னிலையில் கூடியது. கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் களம் – தமிழ் நாட்டுக்கு மிகவும் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. கடந்த அய்ந்து ஆண்டுகால பாஜக நடுவண் ஆட்சியில் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தில் தனித்துவத்தோடு நாம் கட்டி எழுப்பிய உரிமைகளை ஒவ்வொன்றாகப் பறித்து தமிழ் நாட்டின் மீது போர் தொடுத்தது பாஜக ஆட்சி. கல்வி உரிமைகள் பறிப்பு, நீட் திணிப்பு, இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, காவிரி நீர் உரிமையில் வஞ்சகம், மத்திய அரசு பணிகளில் வடநாட்டவர் திணிப்பு, மதவெறி திணிப்பு, ஏழு தமிழர் விடுதலைக்கு மறுப்பு என்று தமிழகத்தை வஞ்சித்து வந்த பாஜக ஆட்சியை எதிர்த்து திராவிடர் விடுதலைக் கழகமும், தேர்தல் அரசியலில் ஈடுபடாத இயக்கங்களும், அமைப்புகளும் தொடர்ந்து போராடி...

மதவெறி எதிர்ப்புக் கருத்தரங்குடன் நடந்த ஃபாரூக் நினைவு நாள்  மேடையில் புரட்சிகர சுயமரியாதைத் திருமணம்

மதவெறி எதிர்ப்புக் கருத்தரங்குடன் நடந்த ஃபாரூக் நினைவு நாள் மேடையில் புரட்சிகர சுயமரியாதைத் திருமணம்

கோவையில் அண்ணாமலை அரங்கில் மத அடிப்படைவாதிகளால் படுகொலை செய்யப்பட்ட பாரூக்கின் இரண்டாம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. கடந்த இரண்டு ஆண்டு களுக்கு முன்பு திராவிடர் விடுதலைக் கழகத் தோழர் ஃபாரூக் மதவெறியர்களால் படுகொலை செய்யப் பட்டார். இதைக் கண்டித்து மனிதநேய அமைப்புகள் மற்றும் திராவிட அமைப்புகள் பல்வேறு போராட்டங்களையும், எதிர்ப்புகளையும் தெரிவித்தனர். ஃபாரூக் படுகொலையைக் கண்டித்து ஆண்டுதோறும் நினைவேந்தல் கூட்டங்கள் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் நடைபெற்று வருகிறது. நிகழ்வின் தொடக்கத்தில் இணையதள பொறுப்பாளர் விஜய்குமார் சமூக ஊடகங்களில் மதவெறி பற்றியும், கழகப் பகுத்தறிவு பரப்புரைக்கு சமூக ஊடகங்களின் தாக்கம் மற்றும் டுவிட்டர் பயன்பாடு பற்றியும் பயிற்சி அளித்தார். இந்தக் கூட்டத்தில் ‘மதங்களை மறப்போம், மனிதத்தை விதைப்போம்’  என தலைவர்கள் பேசினர். அதேபோல, மதங்களால் நடைபெறும் படு கொலைகள் தடுக்கப்படவேண்டும், மத அடிப்படை வாதங்கள் மாற வேண்டும் என்று இந்தக் கூட்டத்தில் பேசப்பட்டது. திருப்பூர் முகில்ராசு, பொள்ளாச்சி வெள்ளியங்கிரி, மேட்டுப்பாளையம்...

அரசியல் மணி என்னும் அணையா விளக்கு!

அரசியல் மணி என்னும் அணையா விளக்கு!

தமிழக அரசியல் வரலாற்றை எழுதும் யாராலும் தவிர்க்க முடியாத பெயர் மணியம்மை. தி.மு.க என்னும் அரசியல் கட்சி உருவாகக் காரணமாக இருந்தவர், தமிழகத்தில் முதன்முதலாக ஓர் இயக்கத்துக்குத் தலைமை தாங்கிய பெண், உலகளவில் ஒரு நாத்திக இயக்கத்துக்குத் தலைமை தாங்கிய பெண் என்னும் சிறப்புகள் மணியம்மைக்கு உண்டு. இத்தகைய வரலாற்றுச்சிறப்புமிக்க மணியம்மையின் நூற்றாண்டுவிழா இந்த ஆண்டு தொடங்குகிறது. 1920, மார்ச் 10-ல் வேலூரில் கனகசபை – பத்மாவதி தம்பதிக்குப் பிறந்தவர் காந்திமதி. கனகசபையும் பத்மாவதியும் பெரியாரின் கொள்கைகளில் பற்றுகொண்டவர்கள். கனகசபையின் நண்பர், தனித்தமிழ் ஆர்வலர் கு.மு.அண்ணல்தங்கோ காந்திமதிக்கு ‘அரசியல் மணி’ என்னும் பெயரைச் சூட்டினார். கே.அரசியல்மணி என்பது கே.ஏ.மணி என்றாகி, ‘மணியம்மையார்’ என்று காலத்தில் நிலைத்தது. 1943-ல் அரசியல்மணியின் தந்தை இறந்தார். ஒருமாதத்திலேயே இயக்கப்பணிகளில் தன்னை முழுவதுமாக ஈடுபடுத்திக்கொண்டார் மணியம்மை. பேச்சாளராக, கட்டுரையாளராக, போராட்டங்களில் பங்கெடுப்பவராக மணியம்மையின் இயக்க வாழ்க்கை அமைந்தது. திராவிடர் கழகக் கொடியின் தத்துவம், பெண்ணுரிமை, அண்ணல் அம்பேத்கர்...

தலைநகரில் தொடங்கி வைத்தது திராவிடர் விடுதலைக் கழகம் மணியம்மையார் நூற்றாண்டு விழா; மேடையில் ஜாதி மறுப்புத் திருமணம்

தலைநகரில் தொடங்கி வைத்தது திராவிடர் விடுதலைக் கழகம் மணியம்மையார் நூற்றாண்டு விழா; மேடையில் ஜாதி மறுப்புத் திருமணம்

அன்னை மணியம்மையார் நூற்றாண்டு 2019 மார்ச் 10இல் தொடங்குகிறது. மார்ச் 9ஆம் தேதியன்றே சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகம் தமிழ்நாட்டில் அன்னையின் நூற்றாண்டு விழாவை முதன்முதலாக தொடங்கி வைத்துள்ளது. வடசென்னை மாவட்ட திராவிடர் விடுதலைக் கழக சார்பில் அன்னை மணியம்மையார் நூற்றாண்டு மற்றும் மகளிர் தின விழா, பெரம்பூர் பாரதி சாலையில் எழுச்சியுடன் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் இராஜி தலைமை தாங்கினார். இரண்யா வரவேற்புரையாற்றினார். தோழர்கள் தேவி, ஜெயஸ்ரீ, வெண்ணிலா, சங்கவி முன்னிலை வகித்தனர். ‘விரட்டு’ கலைக் குழுவினரின் பறை இசை, நாடகம், கலை நிகழ்வுகளோடு நிகழ்ச்சிகள் நடந்தன. தமிழ்நாடு அறிவியல் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் சிவகாமி, மணிமேகலை, புதிய குரல் நிறுவனர் ஓவியா, கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன், கழகத் தலைவர் கொளத்தூர் மணி உரையாற்றினர். அன்னை மணியம்மையாரின் தியாக வாழ்வு,  எளிமை, பெரியாரை 95 ஆண்டுகள் வரை அவர் உடல்நலன் பேணிக் காத்த அர்ப்பணிப்பு, இராவண லீலா...

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (11) அரசை மிரள வைத்த தேசியக் கொடி எரிப்பு அறிவிப்பு

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (11) அரசை மிரள வைத்த தேசியக் கொடி எரிப்பு அறிவிப்பு

22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையின் விரிவாக்கம். பகுதி 10 1955 ஜூலை 17இல் திருச்சியில் நடந்த திராவிடர் கழக மத்திய நிர்வாகக் குழுக் கூட்டத்தில் இந்தித் திணிப்பை எதிர்த்தும், இந்தியக் கூட்டாட்சிக்குள் தமிழர்கள் இருக்க விரும்பவில்லை என்பதை உணர்த்தவும், 1955 ஆகஸ்டு 1இல் நாடெங்கிலும் இந்தியத் தேசியக் கொடியை எரிக்க வேண்டும் என்ற தமது போராட்டத் திட்டத்தைப் பெரியார் அறிவித்தார். “இந்திய அரசாங்க தேசியக் கொடியைக் கொளுத்துவது என்பது மிகக் கடினமான தீர்மானம் என்பதாகக் கருதக் கூடும். இது இந்திய அரசாங்கத்தைக் கவிழ்க்கவோ ஒழித்துக் கட்டவோ கருத்துக் கொண்டு செய்யப்பட்ட கொடி கொளுத்தும் தீர்மானம் அல்ல.” “எங்களுக்கு – தமிழர்களுக்கு – தமிழ் நாட்டாருக்கு இந்திய அரசாங்கம் வேண்டாம்; தமிழ்நாடு – தமிழர்கள் இந்திய அரசாங்கத்தின் கூட்டு...

சங்கிகளின் கேள்விகளுக்கு நெத்தியடி பதில் (4) பூணூலும் கருஞ்சட்டையும் ஒன்று தானா? ஒ. சுந்தரம்

சங்கிகளின் கேள்விகளுக்கு நெத்தியடி பதில் (4) பூணூலும் கருஞ்சட்டையும் ஒன்று தானா? ஒ. சுந்தரம்

பெரியார் இயக்கத்தை நோக்கி சமூக வலைதளங்களில் பார்ப்பனிய நேரடி – மறைமுக ஆதரவு சக்திகள் முன் வைத்து வரும் கேள்விகளுக்கு நெத்தியடி பதில். பகுதி 3 கேள்வி : ‘ஹிந்துக்கள்’ தாலி அணிகிறார்கள். கிறிஸ்தவர்கள் திருமண மோதிரம் அணிகிறார்கள். முஸ்லிம்கள் பர்தா அணிகிறார்கள். ‘ஹிந்துக்கள்’ தாலி அறுக்கும் போராட்டம் நடத்திய நீங்கள், கிறிஸ்தர்கள் மோதிரம் கழற்றும் போராட்டமும், பர்தா கழற்றும் நிகழ்ச்சியும் நடத்தும் ஆண்மை இருக்கிறதா? பதில் : ‘தாலி’  அறுப்புப் போராட்டம் என தவறாகக் கூறுவது பற்றியும் ‘ஹிந்துக்கள்’ பற்றியும் ஏற்கெனவே விளக்கியாகிவிட்டது. சிறுபான்மை கிறித்துவ மக்கள் மோதிரம் மாற்றி, திருமண பந்தத்தைக் காட்டுவது, ஒருவருக்கொருவர் மோதிரம் அணிவிப்பது போல், இந்துக்கள் என்பாரும் ஆணும் பெண்ணுமாகவா தாலி கட்டிக் கொள்கிறார்கள்? இல்லையே! பெண்ணுக்கு மட்டும்தானே தாலி? கிறித்துவ சிறுபான்மை மக்களின், இஸ்லாமிய சிறுபான்மை மக்களின் பர்தா அணிதல் உட்பட்ட பழக்க வழக்கங்கள், அந்த மதக் குழுக்களின் அடையாளங்கள், அவற்றை மதித்து...

சங்கிகளின் கேள்விகளுக்கு நெத்தியடி பதில் (3) காந்தியிலிருந்து கவுரி வரை கொலை செய்தது யார்? ஒ. சுந்தரம்

சங்கிகளின் கேள்விகளுக்கு நெத்தியடி பதில் (3) காந்தியிலிருந்து கவுரி வரை கொலை செய்தது யார்? ஒ. சுந்தரம்

பெரியார் இயக்கத்தை நோக்கி சமூக வலைதளங்களில் பார்ப்பனிய- பார்ப்பனிய நேரடி – மறைமுக ஆதரவு சக்திகள் முன் வைத்து வரும் கேள்விகளுக்கு நெத்தியடி பதில். பகுதி 2 கேள்வி : நாட்டில் நடந்துள்ள கொலைகள், குண்டு வெடிப்புகள், கொள்ளைகள், ஹவாலா திருட்டுகள், இவற்றில் இந்துக்கள் பங்கு எவ்வளவு சதவிகிதம்? பிற மதத்தினரின் பங்கு எவ்வளவு சதவிகிதம் என்ற விவரங்கள் உங்களிடம் உண்டா? அதை மேடையில் பட்டியலிடும் துணிவு இருக்கிறதா? பதில் : தேசியக் குற்றப் புலனாய்வு ஆய்வு மையத்திடம் கேட்க வேண்டிய கேள்வியை உள் நோக்கத்துடன் எம்மிடம் கேட்கிறீர். சிறுபான்மை முஸ்லீமானவர்களை குறை சொல்லும், குற்றம் சாட்டும் உங்கள் காவி வண்ண எண்ணம் எமக்குப் புரியாமலில்லை. கொலை, களவு, மோசடிக் குற்றங்களில் ஈடுபடுவோர் எவராயினும் தண்டிக்கப்பட வேண்டியவர்களே. இவர்களுக்கு ஜாதி, மதம், கடவுள், இனம் என்ற பாகுபாடெல்லாம் இல்லை. ஏதாவது ஒரு பயன் நோக்கிச் செயல்படுவதே நோக்கமாய் கொண்டவர்கள். எனினும், பாபர்...

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (10) ஒரே சிறையில் பெரியாரும் அண்ணாவும்

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (10) ஒரே சிறையில் பெரியாரும் அண்ணாவும்

22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையின் விரிவாக்கம். சென்ற இதழ் படிக்க பகுதி 9 பொன்மொழி நூலைப் பறிமுதல் செய்து, பெரியாருக்குத் தண்டனை வழங்கி, அவரது வாகனத்தையும் ஏலம் விட்ட அரசின் அடக்கு முறையை எதிர்த்து, கருஞ்சட்டைத் தோழர்கள் பொங்கி எழுந்தனர். தமிழ்நாடு முழுதும் கண்டனக் கூட்டங்கள் போராட்டங்கள் வெடித்தன. தீர்ப்பு வெளியான அன்றே ஈரோட்டில் கண்டனக் கூட்டம் சுவரொட்டி இயக்கங்கள் தொடங்கி விட்டன. சென்னை யில் தொடர்ந்து ஒரு வாரம் கண்டனக் கூட்டங்கள் அறிவிக்கப் பட்டன. சென்னை ராபின்சன் பூங்காவில் நடந்த கண்டனக் கூட்டத்தில் எஸ். இராம நாதன், சாமி சிதம்பரனார், ‘சண்டே அப்சர்வர்’ பி. பால சுப்பிரமணியம், குத்தூசி குருசாமி கண்டன முழக்கமிட்டனர். பார்ப்பன ஏடுகளான ‘ஹிந்து’, ‘சுதேச மித்திரன்’ தீயிட்டு எரிக்கப் பட்டன. கிளர்ச்சியில்...

மறைக்க முடியாது; மக்கள் பாடம் புகட்டுவார்கள் தேசிய வெறிக்குப் பின்னால் பதுங்குகிறார், மோடி

மறைக்க முடியாது; மக்கள் பாடம் புகட்டுவார்கள் தேசிய வெறிக்குப் பின்னால் பதுங்குகிறார், மோடி

அய்ந்தாண்டுகளாக கார்ப்பரேட்டுகளுக்காக சேவை செய்து மக்களை துன்பத்தில் ஆழ்த்தி மாபெரும் ரஃபேல் ஊழலையும் செய்துவிட்டு மாநில உரிமைகளை நசுக்கி விட்டு போர் வெறியையும், தேசிய வெறியையும் தேர்தலுக்காகத் தூண்டுகிறார் மோடி ! இந்த தேசிய வெறியின் பின்னால் பா.ஜ.க. மறக்கடிக்க முயல்வது…. எதை? எதை? *     ரஃபேல் விமான பேர ஊழல். *     செல்லாத நோட்டில் செத்து மடிந்த உயிர்கள். *     பண மதிப்பு நீக்கத்தால் நொடித்துப்போன தொழில்கள், இழந்த வேலைவாய்ப்புகள். *     ஜி.எஸ்.டி. எனும் வரிவிதிப்பால் நிர்மூலமாகிப்போன தொழில் துறை. *     வேலை வாய்ப்பு வீழ்ச்சியில்1970-களின் நிலைமைக்கு சென்று விட்ட இந்தியா. *     நீட் தேர்வு என்ற பெயரில் நொறுக்கப்பட்ட ஏழை மாணவர் களின் மருத்துவ கனவு. *     அனிதாவின் உயிர். *     ரிசர்வ் வங்கி, நிதி ஆயோக், சி.பி.அய்., தேர்தல் ஆணையம் உள்ளிட்ட அனைத்து நிர்வாக அமைப்புகளையும் காவி...

இனப்படுகொலையை ‘தூசி’யாகக் கருதுகிறாரா இந்து ராம்?

இனப்படுகொலையை ‘தூசி’யாகக் கருதுகிறாரா இந்து ராம்?

இனப்படுகொலையாளன் இராஜபக்சேவை வைத்து பெங்களூரில் கூட்டம் நடத்தினார், இந்து குழுமத் தலைவர் ராம். அவர் அங்கே வெளியிட்ட கருத்துகளுக்கு மறுப்பு: “போரை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக வும் உள்கட்டமைப்பை கட்டியெழுப்பியதற்காகவும் நீங்கள் பாராட்டப்பட்டீர்கள். தமிழ்ச் சமூகத்தின் பொருட்டு கொஞ்சம் தூசி துடைக்கப்பட வேண்டி யுள்ளது.” 2019, பிப்ரவரி 9 அன்று பெங்களூருவில் மேற் கண்ட வரிகள் ஒரு கேள்வியாக இந்துக் குழுமத்தின் தலைவர் என்.ராமால் இலங்கையின் முன்னாள் அதிபர் இராசபக்சேவிடம் கேட்கப் பட்டதாகும். வாகனத்தை ஓட்டினால் தூசி படியத் தான் செய்யும். அதற்காக வாகனத்தை ஓட்டாமல் இருக்க முடியாது. வாகனத்தை ஓட்டிவிட்டு தூசியைத் துடைக்க வேண்டும் என்று சொல்வது போல் இராசபக்சே நடத்திய போரும், அவர் அதை முடிவுக்கு கொண்டு வந்ததையும் அதைக் கொண்டு வந்த விதத்தையும் அங்கீகரித்த வண்ணம் அதனால் படிந்துகிடக்கும் ’தூசி’ பத்தாண்டுகள் ஆன பின்பும் இன்னும் துடைக்கப்படாமல் இருக்கிறது என்றும் என்.ராம் சொல்கிறார். எந்த சட்டமன்றத்தில் அனைத்துக்...

தமிழர், தலையில் சுமந்த  செருப்பை,  முதல் முதலாகக்  காலில்போட்டு மிதித்தது,  பெரியார் ஒருவரே!  – பிரபஞ்சன்

தமிழர், தலையில் சுமந்த செருப்பை, முதல் முதலாகக் காலில்போட்டு மிதித்தது, பெரியார் ஒருவரே! – பிரபஞ்சன்

தலையில் சுமந்த செருப்பை காலில் மிதித்த தலைவர் செருப்புக்குத் தமிழர் சரித்திரத்தில் இடமுண்டு ஈசன் படியளந்த இதிகாசக் காலத்தில் ராமன் செருப்புகளே ராஜ்ஜியத்தை ஆண்டன. அரியாசனத்திலிருந்து ஆட்சி செய்தன செருப்புகள். ராஜராஜனுக்குப் பின் ராஜேந்திரன் வந்ததுபோல் அப்பன் செருப்புக்குப் பின் மகன் செருப்பு… ராம செருப்புக்கு வாரிசுச் செருப்புகள் வந்தன. பேட்டா செருப்புகள் போல வேதச் செருப்புகள் – மத வாதச் செருப்புகள் – பல வருணச் செருப்புகள். மறுபாதிச் செருப்புகள் மனுநீதிச் செருப்புகள்… தமிழ்நாட்டில், ஓராயிரம் ஆண்டு ஓய்ந்து கிடந்த பின்னர் வாராது போல் வந்தது ஓர் வார்ச் செருப்பு! ஆரஞ்சு பச்சை அதன் நடுவே வெள்ளையென்று வண்ணம் கொண்ட வார்ச்செருப்பு, பழஞ்செருப்பு! அது, வெள்ளைச் செருப்பின் வாரிசுச் செருப்பு! ராமச் செருப்பும், வெள்ளைச் செருப்பும் தில்லிச் செருப்பும் தமிழனின் காலைக் கடிக்கும் கள்ளச் செருப்பே! எந்தச் செருப்பு எங்களுக்குப் பொருந்தும் என்று தமிழர் நொந்து கிடந்த நோய்க் காலத்தில்,...

பெண்களின் புனிதத்தைக் கெடுக்கிறதா ஸ்மார்ட் போன்கள்? ர. பிரகாசு

இந்தியாவில் மொபைல் போன்கள் பயன்பாட்டில் காணப்படும் பாலினப் பாகுபாடுகள் குறித்து ஹார்வர்டு கென்னடி ஸ்கூல் ஆய்வு நடத்தி அறிக்கையாக வெளியிட்டுள்ளது. A tough call: Understanding barriers to and impacts of women’s mobile phone adoption in India  என்ற தலைப்பில் இந்த ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் மொபைல் போன்கள் பயன்படுத்துவதிலும் கூட பெருமளவில் பாலினப் பாகுபாடு நிலவுவதை இந்த ஆய்வறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. இந்தியாவில் மட்டுமல்ல; பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் போன்ற நாடுகளிலும் மொபைல் பயன்பாட்டில் ஆண்-பெண் பாலினப் பாகுபாடு மிகுந்துள்ளது. நாம் இங்கு இந்தியாவைக் கணக்கில் கொள்வோம். இந்தியாவில் 71 விழுக்காடு ஆண்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், 38 விழுக்காடு மட்டுமே பெண்கள் மொபைல் போன்களைப் பயன்படுத்துகின்றனர். இதில் ஆண்களுக்கும் பெண்களுக்குமான இடைவெளி 31 விழுக்காடாக உள்ளது. இதை வெறுமனே பொருளாதாரக் காரணி என்ற அளவில் மட்டும் சுருக்கிவிட இயலாது. சாதி, மத, சமூகக் கட்டமைப்பு...

கறுஞ்சட்டை அணிய வேண்டும் ஏன்? பெரியார்

மதுரை கறுஞ்சட்டைப் படை மாநாட்டுப் பந்தல் எரிக்கப்பட்டதைத் தொடர்ந்து கறுஞ்சட்டைப் படைக்கு தமிழக அரசு தடை போட்டது. அது குறித்து பெரியார் விடுத்த அறிக்கை: திராவிடர் கழகக் கொள்கைகளை விளக்கு முன்னால், கறுஞ்சட்டை ஸ்தாபனத் தின் மீது விதிக்கப்பட்டு இருக்கிறது என்னும் தடையுத்தரவு குறித்து சில கூற விரும்புகிறேன். நமது மாகாண சர்க்கார், கறுஞ்சட்டை ஸ்தாபனம் சட்டவிரோதமான ஸ்தாபனம் என்று பிரகடனப்படுத்தி இருக்கிறார்கள். அம்மாதிரி ஸ்தாபனமொன்றும் திராவிடர் கழகத்தின் சார்பாகவோ தனிப்பட்ட தன்மையிலோ இல்லை. ஆனால், ஒரு காலத்தில் பொதுக் கூட்டங்களின் போதும், மாநாடுகளின் போதும் தொண்டர்களாயிருந்து பணியாற்ற ஒரு கறுஞ்சட்டைக் கூட்டத்தை ஏற்படுத்துவது நலமென்று கருதி, ஒரு ஏற்பாடு செய்ய வேண்டு மென்று நினைத்து அறிக்கை விட்டோம். அதையொட்டி அக்கூட்டத்தில் இருந்து தொண்டாற்ற விரும்பும் தோழர்களைச் சில கேள்விகள் கேட்டோம். உங்களால் கழகத்துக்கு முழு நேரத்தை தொண்டாற்ற முடியுமா? அல்லது தேவைப்பட்ட நேரத்தில்தான் தொண் டாற்ற முடியுமா? என்று கேட்டோம்....

அய்.நா.வில் தலித் பெண்கள் சமர்ப்பித்த ஆவணம்

‘தலித்’ என்ற சொல்லைப் பயன்படுத்தக் கூடாது என்று அறிவித்த மத்திய சமூக நலத் துறை அய்.நா.விலும் தலித் உரிமைகளைப் பேசுவதற்கு எதிர்ப்பு  தெரிவித்திருக்கிறது. இந்தியாவில் நடக்கும் ஜாதிய ஒடுக்கு முறை தலித் மீதான வன்முறைகள் குறித்து அய்.நா.வின் மனித உரிமை ஆணையத்தில் ‘தலித் பெண்கள் ஒருங்கிணைப்பு’ என்ற பெண்கள் அமைப்பு விரிவான அறிக்கை ஒன்றைத் தாக்கல் செய்திருக்கிறது. தலித் மனித உரிமைகளுக்கான இயக்கம் என்ற அமைப்பின் ஒரு பகுதியாக தலித் பெண்கள் ஒருங்கிணைப்பு என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. அய்.நா. மனித உரிமை ஆணையம் நடத்தும் விவாத அரங்குகளில் பங்கேற்று முதன்முதலாக இந்தியாவில் நிலவும் ஜாதி பாகுபாடு மற்றும் தலித் மக்கள் மீதான பிரச்சினையை அறிக்கையாக்கி சர்வதேச நாடுகளின் ஆதரவைக் கோரியிருப்பது மிகவும் குறிப்பிடத்தக்கதாகும். “ஜாதிய ஒடுக்குமுறைக்கு எதிரான குரல்: இந்தியாவில் ‘தலித் பெண்களின் கதை’ என்ற தலைப்பில் இந்த விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டு ஜூன் 21ஆம் தேதி ஜெனிவாவில்...

அரசியல் சட்டமும் நாத்திகர் உரிமைகளும்: நீதிமன்றத் தீர்ப்புகள் கூறுவது என்ன?

கடவுள் மத மறுப்புக் கொள்கைகளைப் பரப்பும் உரிமையையும் அடிப்படை உரிமையாக அரசியல் சட்டத்தில் சேர்க்கும்போதுதான்  அரசியல் சட்டம் கூறும் அனைவருக்குமான உரிமை – அர்த்தம் பெறும். இந்தியாவில் 13 சதவீதம் பேர் மத நம்பிக்கையில்லாதவர்கள்; 3 சதவீதம் பேர் நாத்திகர்கள் என்று அறிவித்துக் கொண்டிருப் பவர்கள். இது 2012ஆம் ஆண்டு ஒருநிறுவனம் தந்துள்ள புள்ளி விவரம் (றin பயடடரயீ சநயீடிசவ – 2012) உண்மையில் மதவாதிகள் என்று கூறிக் கொண்டிருப்பவர் களானாலும் சரி; கடவுள் நம்பிக்கையாளர்கள் என்று கூறிக் கொண்டிருப் பவர்களானாலும் சரி; அந்த நம்பிக்கை களிலிருந்து முற்றாக விலகிய வாழ்க்கையைத் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். குறியீடு மற்றும் சடங்குகளில்தான் இந்த நம்பிக்கைகள் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. நாத்திகர் என்போர் கடவுள் மறுப் பாளர்கள் அல்ல; வேதத்தை மறுப்போர்தான் என்று காஞ்சி சந்திரசேகரேந்திர சரசுவதி கூறி யிருக்கிறார். வேதங்கள் தோன்றிய காலத் திலேயே வேத மறுப்பும் – கடவுள் மறுப்பும் தோன்றிவிட்டன. சார்வாகம்,...

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (9) ‘பெரியார் பொன்மொழி’ நூலுக்குத் தடை: சிறை

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (9) ‘பெரியார் பொன்மொழி’ நூலுக்குத் தடை: சிறை

22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையின் விரிவாக்கம். சென்ற இதழ் தொடர்ச்சி பெரியார் கருத்துகளைத் தொகுத்து வெளி யிடப்பட்ட ‘பெரியார் பொன்மொழிகள்’ என்ற நூலுக்கு 1947ஆம் ஆண்டு அன்றைய காங்கிரஸ் ஆட்சி தடை செய்தது. பெரியார் மீது ‘வகுப்பு நிந்தனை’ சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடர்ந்து பெரியார் கைது செய்யப்பட்டார். ‘பொன்மொழிகள்’ என்ற கருத்துகளின் தொகுப்பை ஒரு பதிப்பகம் நூலாக வெளியிட்டதற்கே பெரியார், அரசின்  அடக்குமுறைகளை சந்திக்க வேண்டி யிருந்தது. இந்த  பொன்மொழிகள் நூலை வெளியிட்டது – திருச்சியில் திராவிட மணி பதிப்பகத்தை நடத்தி வந்த தோழர் டி.எம். முத்து. இப்படி ஒரு தொகுப்பு நூல் வெளி வரப் போவது குறித்து பெரியாருக்கே தெரியாது. வெவ்வேறு காலகட்டங்களில் அவர் பேசியதை, டி.எம். முத்து, பெரியார் நடத்திய ஏடுகளிலிருந்து...

இனப்படுகொலையை ‘தூசி’யாகக் கருதுகிறாரா இந்து ராம்?

இனப்படுகொலையை ‘தூசி’யாகக் கருதுகிறாரா இந்து ராம்?

இனப்படுகொலையாளன் இராஜபக்சேவை வைத்து பெங்களூரில் கூட்டம் நடத்தினார், இந்து குழுமத் தலைவர் ராம். அவர் அங்கே வெளியிட்ட கருத்துகளுக்கு மறுப்பு: “போரை முடிவுக்குக் கொண்டு வந்ததற்காக வும் உள்கட்டமைப்பை கட்டியெழுப்பியதற்காகவும் நீங்கள் பாராட்டப்பட்டீர்கள். தமிழ்ச் சமூகத்தின் பொருட்டு கொஞ்சம் தூசி துடைக்கப்பட வேண்டி யுள்ளது.” 2019, பிப்ரவரி 9 அன்று பெங்களூருவில் மேற் கண்ட வரிகள் ஒரு கேள்வியாக இந்துக் குழுமத்தின் தலைவர் என்.ராமால் இலங்கையின் முன்னாள் அதிபர் இராசபக்சேவிடம் கேட்கப் பட்டதாகும். வாகனத்தை ஓட்டினால் தூசி படியத் தான் செய்யும். அதற்காக வாகனத்தை ஓட்டாமல் இருக்க முடியாது. வாகனத்தை ஓட்டிவிட்டு தூசியைத் துடைக்க வேண்டும் என்று சொல்வது போல் இராசபக்சே நடத்திய போரும், அவர் அதை முடிவுக்கு கொண்டு வந்ததையும் அதைக் கொண்டு வந்த விதத்தையும் அங்கீகரித்த வண்ணம் அதனால் படிந்துகிடக்கும் ’தூசி’ பத்தாண்டுகள் ஆன பின்பும் இன்னும் துடைக்கப்படாமல் இருக்கிறது என்றும் என்.ராம் சொல்கிறார். எந்த சட்டமன்றத்தில் அனைத்துக்...

அய்.அய்.டி. – அய்.அய்.எம்.களில் பார்ப்பன ஆதிக்கம்! எஸ்.சி.-பி.சி.க்கு கிடைத்துள்ளது 9 சதவீதம் மட்டுமே!

அய்.அய்.டி. – அய்.அய்.எம்.களில் பார்ப்பன ஆதிக்கம்! எஸ்.சி.-பி.சி.க்கு கிடைத்துள்ளது 9 சதவீதம் மட்டுமே!

முன்னேறிய ஜாதிப் பிரிவினருக்கு 10 சதவீத இடஒதுக்கீட்டைப் பொருளாதார அடிப்படையில் இடஒதுக்கீடு செய்யும் சட்டத்திருத்தத்தை அவசர அவசரமாகக் கொண்டு வந்துள்ளது நடுவண் ஆட்சி; ஆனால் அய்.அய்.டி., அய்.அய்.எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பேராசிரியர் களாக பார்ப்பனர் உயர்ஜாதியினர் ஆதிக்கமே மேலோங்கி நிற்கிறது. தலித், பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை மிக மோசமான நிலையில் இருப்பதை அண்மை யில் வெளிவந்துள்ள புள்ளி விவரங்கள் உணர்த்துகின்றன. கடந்த டிசம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் மத்திய மனிதவளத் துறை அமைச்சகம் சமர்ப்பித்த அறிக்கையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் இவை: இந்தியன் ‘இன்ஸ்டிடியூட் ஆப் மேனேஜ் மென்ட்’ (அய்.அய்.எம்.) என்ற உயர்கல்வி நிறுவனத்தில் 784 பேராசிரியர் பதவிகளுக்கு அரசு ஒப்புதல் வழங்கியிருக்கிறது. இதில் ‘தலித்’ பிரிவைச் சார்ந்தவர்கள் 8 பேர் மட்டுமே. பழங்குடிப் பிரிவைச் சார்ந்தவர் – 2 பேர் மட்டுமே. பிற்படுத்தப்பட் டோர் 784 பதவிகளில் 27 பேர் மட்டுமே. மொத்த பேராசிரியர் பதவிகளில் தலித், பிற்படுத்தப்பட்டோரின் பிரதிநிதித்துவம் 6...

‘நீட்’ தேர்வுக்கு தமிழகம் தயாராகி விட்டதா? கல்வியாளர்கள் மறுக்கிறார்கள்

‘நீட்’ தேர்வுக்கு தமிழகம் தயாராகி விட்டதா? கல்வியாளர்கள் மறுக்கிறார்கள்

முதுநிலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தேர்வில் தமிழக மாணவர்கள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளதையடுத்து ‘நீட்’டுக்கு தமிழகம் தயாராகி விட்டதுபோல ஒரு கருத்துருவாக்கம் நடக்கிறது. எப்படி தமிழக மாணவர்கள் அதில் அதிக அளவு தேர்ச்சி பெற முடிந்தது என்பதை ஆராய்ந்தால் மருத்துவப் படிப்புக்கு ‘நீட்’ தடையாகவே இருக்கிறது என்ற உண்மை விளங்கும். ‘நீட் தேர்வில் தமிழகம் முதலிடம்’ – கடந்த வாரத்துப் பரபர செய்திகளில் இதுவும் ஒன்று.  அகில இந்திய அளவில் நடைபெற்ற நீட் தேர்வில் தமிழகத்தின் சார்பில் 17,067 பேர் தேர்வெழுதி, அதில் 11,121 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியத் தகவல். ‘நீட்டையே வேண்டாம் என்று எதிர்த் தீர்கள். இப்போது பாருங்கள் தமிழ்நாடு தான் நம்பர் ஒன்’ எனப் பலரும் சமூக வலை தளங்களில் மார்தட்டினர். ஆனால், இந்தத் தேர்வு முடிவு, முதுநிலை மருத்துவப் படிப்புக்கான தேர்வு முடிவு என்பதுதான் பலரும் கவனிக்கத் தவறிய தகவல். இந்த ஆண்டு...

ஆளுநர் அலட்சியத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது 7 பேர் விடுதலை: அடுத்தக் கட்ட நகர்வுகள் என்ன?

ஆளுநர் அலட்சியத்துக்கு எதிர்ப்பு வலுக்கிறது 7 பேர் விடுதலை: அடுத்தக் கட்ட நகர்வுகள் என்ன?

7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி தமிழ்நாடு திராவிடர் கழகம் நடத்திய மக்கள் சந்திப்பு இயக்கத்தில் ஆளுநர் அலட்சியத்துக்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. அடுத்தக் கட்ட நகர்வுகள் குறித்து சென்னையில் நடந்த பொதுக் கூட்டத்தில் ஆலோசனைகள் முன் வைக்கப்பட்டன. 7 தமிழர் விடுதலையை வலியுறுத்தி கா.சு. நாகராசன் தலைமையில் தமிழ்நாடு திராவிடர்கழகம் நீதி கேட்கும் மக்கள் சந்திப்பு இயக்கத்தை பொள்ளாச்சியில் பிப்.3 ஆம் தேதி தொடங்கியது. திராவிடர் விடுதலைக் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தொடங்கி வைத்தார். 8ஆம் தேதி இந்த இயக்கம் புதுவையில் நிறைவடைந்தது. 15 தமிழ்நாடு திராவிடர் கழகத் தோழர்கள் இதில் பங்கேற்றனர். ஈரோடு, மேட்டூர், சேலம், தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி, வேலூர், காஞ்சி, சென்னையில் பூந்தமல்லி, சைதாப் பேட்டை, தேனாம்பேட்டை ஆகிய பகுதிகளில் தெருமுனைக் கூட்டங்கள் வழியாக ஏழு தமிழர் விடுதலையை வலியுறுத்தி மக்களை சந்தித்தது இந்தக் குழு. 7ஆம் தேதி மாலை சென்னை இராயப்பேட்டை வி.எம். தெருவில்...

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (7) வைக்கம் போராட்டம்: பெரியாரே கூறும் வரலாறு

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (7) வைக்கம் போராட்டம்: பெரியாரே கூறும் வரலாறு

22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையிலிருந்து. பகுதி 6 வைக்கம் போராட்டத்துக்காக நான் வருகிறேன் என்ற விஷயம் தெரிந்து கொண்டு, போலீஸ் கமிஷனர் பிட், இன்னொரு அய்யர் (அவர் பெயர் இப்போது சரியாய் ஞாபகத்திற்கு வரவில்லை. திவான் பேஷ்தாரர் சுப்பிரமணிய அய்யர் என்று நினைக்கிறேன்), ஒரு தாசில்தார் (விசுவநாத அய்யர்) எல்லோரும் என்னைப் படகிலிருந்து நான் இறங்கும் போதே வரவேற்றார்கள். மகாராஜா அவர்கள், எங்களை அவர்கள் சார்பில் வரவேற்று வேண்டிய எல்லா சவுகரியங்களையும் பண்ணித் தரச் சொன்னார் என்று சொல்லி எங்களை வர வேற்றார்கள். இது எனக்குப் பெரும் ஆச்சரியத்தைத் தந்தது என்றாலும், ஏன் மகாராஜா அப்படிச் செய்தார் என்றால்  அதற்கு 3 மாதத்திற்கு முன்பு இருந்த இராஜா டெல்லிக்குப் போகிறதற்கு ஈரோடு வழியாக வந்து, ஒரு நாள்...

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (6) வைக்கம் போராட்டம்: பெரியாரே கூறும் வரலாறு

பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் (6) வைக்கம் போராட்டம்: பெரியாரே கூறும் வரலாறு

22.9.2018 அன்று பெரம்பூரில் வடசென்னை மாவட்டக் கழகம் நடத்திய கருத்தரங்கில் கழகப் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் ‘பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள்’ என்ற தலைப்பில் நிகழ்த்திய உரையிலிருந்து. பகுதி 5 பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறைகள் குறித்து இங்கே நான் பேசும் கருத்துகள் இளைய தலைமுறையினருக்கு வரலாறுகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தான். பொதுவாக பெரியார் இயக்கத்தினருக்கு இது ஏற்ககனவே தெரிந்த வரலாறுகள்தான் என்றாலும் இளைய தலைமுறைக்கு நாம் அதைக் கொண்டு செல்ல வேண்டிய அவசியம் இருக்கிறது. இப்போது வைக்கம் போராட்டம் வரலாறு குறித்து பெரியார் ஆற்றிய உரையை எடுத்துக் காட்ட விரும்புகிறேன். இது பெரியார் சந்தித்த அடக்குமுறைகளில் ஒன்றாகக் குறிப்பிடலாமே தவிர, பெரியார் இயக்கம் சந்தித்த அடக்குமுறையாகக் குறிப்பிட முடியாது. காரணம் இந்தப் போராட்டம் நடந்தபோது பெரியார், தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர். போராட்ட வரலாறு குறித்து 1959ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் தேதி குமரி...

பா.ஜ.க. மண்டல் பரிந்துரையை ஆதரித்ததா? வரலாற்றுப் புரட்டுகளுக்கு மறுப்பு

பா.ஜ.க. மண்டல் பரிந்துரையை ஆதரித்ததா? வரலாற்றுப் புரட்டுகளுக்கு மறுப்பு

தொலைக்காட்சி விவாதங்களில் பேசி வரும் சில பா.ஜ.க.வினர், மண்டல் பரிந்துரையை நியமித்தது தங்கள் கட்சி தான்; அதை ஆதரித்ததும் தங்கள் கட்சி தான் என்றும் வாதிட்டு வருகிறார்கள். இது அப்பட்டமான பொய். மொரார்ஜி தேசாய் தலைமையில் ஜனதா கட்சி ஆட்சி வந்தபோது ஜனதாவில் ஜன சங்கமும் தன்னை இணைத்துக் கொண் டிருந்தது. அந்த அமைச்சரவையில் வாஜ்பாய் வெளிநாட்டுத் துறை அமைச்சர், உள்துறை  அமைச்சர் சரண்சிங், ஜாட் சமூகத்தைச் சார்ந்த விவசாயியான சரண்சிங், பிற்படுத்தப் பட்டோர் உரிமைகளில் மிகவும் ஈடுபாடு கொண்டவர். அவரது முயற்சியால் அமைக்கப்பட்டது தான் மண்டல் ஆணையம். தொடர்ந்து மொரார்ஜி ஆட்சி கவிழ்ந்து சரண்சிங் பிரதமராக சில மாத காலம் நீடித்தபோது பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டுக்கு அரசாணை பிறப்பிக்கும் முயற்சிகளில் சரண்சிங் ஈடுபட்டார். பார்ப்பன அதிகாரவர்க்கம் அந்த முயற்சியை முறியடித்தது. 1980இல் மண்டல் பரிந்துரை அரசிடம் வழங்கப்பட்டது. ஆட்சிக்கு வந்த இந்திரா, மண்டல் பரிந்துரையை கிடப்பில் போட்டார். 1990ஆம் ஆண்டு தான்...

குடி அரசு வழக்கு- முக்கிய திருப்பம்

குடி அரசு வழக்கு- முக்கிய திருப்பம்

ஏற்கனவே 21.01.2019 அன்று, கொளத்தூர் மணி மற்றும் கோவை இராமகிருட்டிணன் சார்பாக மூத்த வழக்கறிஞர் எஸ். துரைசாமி அவர்கள் பெரியாரின் எழுத்தும் பேச்சும் ஏற்கனவே பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்து விட்டது ஆகவே யாரும் சொந்தம் கொண்டாட முடியாது என்று பல ஆவணங்களையும், உயர்நீதிமன்ற, உச்சநீதி மன்ற தீர்ப்புகளையும் காரணம் காட்டி வாதிட்டார். மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவன செயலாளர் மற்றும் திராவிடர் கழகத் தலைவர் திரு கி. வீரமணி அவர்கள் சார்பாக வழக்கறிஞர் திரு வீரசேகரன் ஆஜராகி இரண்டு புதிய ஆவணங்களை நீதிபதி முன் சமர்ப்பித்தார். அதில் ஒரு ஆவணம் வரும் 31.01.2019 அன்று கோவையில் நடைபெறும் ஒரு பொதுக்கூட்டத்தில் மூவரும் அதாவது திரு கி.வீரமணி, திரு கொளத்தூர் மணி மற்றும் திரு இராமகிருட்டிணன் ஒன்றாக கலந்து கொள்கிறார்கள், அதற்கான அழைப்பிதழ் என்றும் மற்றொன்று மேற்படி அழைப்பிதழ் விடுதலை பத்திரிக்கையில் பிரசுரம் ஆகி உள்ளது என்றும்...