பள்ளிகளில் தீண்டாமை ஜாதி வெறியைத் தூண்டும் ஜாதிக் கயிறுகளுக்கு தடை போடுக!
பள்ளி மாணவர்கள் அவரவர் ஜாதி அடையாளங்களைக் குறிக்கும் வண்ணத்துடன் கைகளில் கயிறு கட்டிக் கொள்ளும் பழக்கம் தமிழ்நாட்டில் பல பள்ளிகளில் இருந்து வருகிறது. குறிப்பாக பிற்படுத்தப்பட்ட ஜாதி மற்றும் பட்டியல் இனப் பிரிவு மாணவர்கள் இத்தகைய அடை யாளங்கள் வழியாகப் பள்ளிகளில் பாகுபாடுகளுடன் ஆசிரியர்களால் நடத்தப்படுகின்றனர். நெற்றியில் வைக்கப்படும் ‘விபூதி – குங்கும’த்திலும் ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொரு அடையாளம் வரையறுக்கப் பட்டுள்ளது. இதனால் தென் மாவட்டங்களில் தலித், பிற்படுத்தப்பட்ட ஜாதி மாணவர்களுக்கிடையே மோதல்கள் நடந்துள்ளன. கொலைகளும் நடந்துள்ளன. கடந்த 31ஆம் தேதி தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித் துறை இயக்குநர், பள்ளிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் இந்த ஜாதிக் கயிறு, ஜாதிப் பொட்டு, ஜாதி மோதிரங்களை அணியும் வழக்கத்தைத் தடை செய்ய வேண்டும் என்று ஒரு சுற்றறிக்கையை அனுப்பியிருந்தார். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன், இந்தச் சுற்றறிக்கை பற்றி தனக்கு ஏதும் தெரியாது என்று கூறினார். இப்படி ஒரு சுற்றறிக்கை ஆதிதிராவிடர்...
