Category: சிறப்பு கட்டுரை

சர்வதேசமே கண்டிக்கும் சங்பரிவார் மதவெறி கோயிலுக்குள் சிறுமியின் கோரக் கொலை

சர்வதேசமே கண்டிக்கும் சங்பரிவார் மதவெறி கோயிலுக்குள் சிறுமியின் கோரக் கொலை

ஜம்மு மாநிலத்தில் கோயிலுக்குள் அசீஃபா எனும் எட்டு வயது சிறுமி பாலுறவு வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட நிகழ்வு நாட்டையே அதிர்ச்சிக் குள்ளாக்கியிருக்கிறது. ஜம்மு காஷ்மீரிலுள்ள கதுவாவில் பலாத்காரம் செய்யப்பட்டு, சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டிருக்கிறாள் எட்டு வயது சிறுமி (ஆசிஃபா). கிராமத்தின் மையத்தில் உள்ள ஒரு கோயிலில் ஒரு வாரம் அடைத்து வைத்து, தொடர்ந்து மயக்க மருந்து கொடுத்து வன்புணர்ச்சி செய்திருக்கிறார்கள். அதில் காவலரும் கைது செய்யப்பட்டிருக்கிறார். இதற்கு காவல் துறையினரும் துணை நின்றிருக்கிறார்கள். காஷ்மீரத்தின் குளிர்காலத் தலைநகரான ஜம்முவிலிருந்து 88 கி.மீ. தொலைவில் உள்ள கதுவாவுக்கு  அருகே ரசனா கிராமத்தைச் சேர்ந்தவள் அந்தக் குழந்தை. அவளது வளர்ப்புத் தந்தை முகமது யூசுப் புஜ்வாலா, பக்கர்வால் சமூகத்தைச் சேர்ந்தவர். ஆடு, மாடு, குதிரை மேய்க்கும் நாடோடி சமூகம் இது. மதத்தால் இஸ்லாமியர். இந்தச் சமூகத்தினரை அந்தப் பகுதியிலிருந்து வெளியேற்ற வேண்டும் என்ற நோக்கில், ஜம்முவில் பெரும்பான்மையாக வசிப்பவர்களில் ஒரு தரப்பினர் தொடர்ந்து...

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (9) ஞான சம்பந்தனின் ‘அனல்-புனல்வாத’ மோசடிகள்

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (9) ஞான சம்பந்தனின் ‘அனல்-புனல்வாத’ மோசடிகள்

‘ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை… தமிழை மறுக்கும் வேதமரபுகள்’ என்ற தலைப்பில் ஜன.30, 2018 அன்று சென்னை இராயப்பேட்டை ஆனந்த் அரங்கில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையின் விரிவாக்கம். (சென்ற இதழ் தொடர்ச்சி) சைவத்தைப் பரப்பிய அப்பர், சம்பந்தர் ஆகியோர் குறித்த உண்மை வரலாறுகள் குழப்பம் நிறைந்தவை. தேவாரத்தில் உள்ள சில பாடல்கள்  பெரிய புராணம் கூறும் சில சம்பவங்கள், சமணர்களின் கிராமங்களில் வழங்கப்பட்ட வாய்மொழிக் கதைகள்தான் இவர்களைப் பற்றி பேசுகின்றன. புத்தர்களையும், சமணர்களையும் கடுமையாகத் தாக்கி அழிப்பது குறித்து தேவாரம், பெரிய புராணம் நூல்கள் பேசுகின்றன.  இதில் சைவமும் வைதீகமும் கைகோர்த்து நின்றிருக்கின்றன. ‘அப்பரும் சம்பந்தரும்’ என்ற அரிய ஆராய்ச்சி நூலை தமிழறிஞர் அ. பொன்னம்பலனார் எழுதினார். 1944இல் ‘குடிஅரசு’ பதிப்பகம் இந்த நூலை வெளியிட்டது. சமணம் தழைத்தோங்கி வைதிகம் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியிருந்த காலத்தில் சோழ நாடான சீர்காழியில்...

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் உச்சநீதிமன்றம் போடும் ஓட்டைகள்

வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தில் உச்சநீதிமன்றம் போடும் ஓட்டைகள்

இந்தியாவில் 18 கோடிக்கும் மேற்பட்டவர்கள் ஒடுக்கப்பட்ட சமூகத்தவர்கள். ஒவ்வொரு 15 நிமிடத் துக்கும் ஒரு முறை ஒரு தலித் தாக்கப்படுகிறார்; நாள்தோறும் 6 தலித் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாகின்றனர். 2007 முதல் 2017 வரையிலான பத்தாண்டுகளில் தலித்துகளுக்கு எதிரான குற்றச்செயல்கள் 66ரூ அதிகரித்துள்ளன. கடந்த பத்தாண்டுகளில், தலித் பெண்களைப் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்குவதும் இரட்டிப்பாகியிருக் கிறது. இந்த நிலையில்தான், வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் தொடர்பான வழக்கில் ‘அப்பாவிகள் மீது பொய்ப் புகார்கள் அளிக்கப்பட்டு அலைக்கழிக்கப் படுவதாகவும், குற்றம்சாட்டப்பட்டவர்கள் ஜாமீனில் வெளிவர முடியாமல் இருப்பதை நீக்க வேண்டும்’ என்றும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்திருக்கிறது. தலித் மக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக ‘தேசிய குற்றப்பதிவு ஆணையம்’ (என்சிஆர்பி) அளித்துள்ள தரவுகள் எள் முனையளவைப் போன்றது; பெரிய மலையளவுக்கு குற்றங்கள் மறைக்கப்படுகின்றன. காரணம், ஆதிக்க சாதியினர் பழிவாங்குவார்கள் என்ற அச்சத்தில் பெரும்பாலானவர்கள் புகார் செய்வதே இல்லை. அப்படியே புகார் ஏற்கப்பட்டு, நீதிமன்றத்தில் வழக்கு...

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (7) திரு.வி.க., வ.உ.சி., மறைமலையடிகளின் வைதிக எதிர்ப்பு

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (7) திரு.வி.க., வ.உ.சி., மறைமலையடிகளின் வைதிக எதிர்ப்பு

‘ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை… தமிழை மறுக்கும் வேதமரபுகள்’ என்ற தலைப்பில் ஜன.30, 2018 அன்று சென்னை இராயப்பேட்டை ஆனந்த் அரங்கில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையின் விரிவாக்கம். (சென்ற இதழ் தொடர்ச்சி) கோயில்களுக்கு பெரும் கோபுரங்கள் கட்டப் படுவதும் அந்தக் கோபுரங்களின் சிற்பக் கலைகள் குறித்து தமிழர் கட்டிடக் கலைப் பெருமை பேசுவதும் ஒரு பக்கம் இருக்கட்டும். கோயிலுக்கு முன் கோபுரங்கள் ஏன் கட்டப்பட்டன? அது பக்தர்கள் அனைவரையும் கோயிலுக்குள் அழைக்கத் தூண்டுவதற்காகவா? அது அனைத்து மக்களையும் கோயிலுக்குள் வாருங்கள் என்று வரவேற்கும் சிற்பக்கலை அலங்காரமா? நிச்சயமாகஇல்லை; பின் எதற்கு இந்தக் கோபுரங்கள்? வரலாற்று ஆய்வாளரும் பல மன்னர்களின் வரலாற்றை நூலாக எழுதியவருமான இரா.சிவ. சாம்பசிவ சர்மா எழுதிய ‘இராஜராஜசோழன்’ நூலில் கோபுரங்கள் ஏன் கட்டப்பட்டன என்பதை இவ்வாறு விளக்குகிறார்: “வர்ணாஸ்ரமங்களைக் கடை பிடித்தொழுகும் இந்துக்களில் சில ஜாதியார், கோயிலுக்குள்...

பெரியார் குறித்த பொய்யுரைகளுக்கு மறுப்பு

பெரியார் குறித்த பொய்யுரைகளுக்கு மறுப்பு

பொதுவாக ஆண்டின் சில குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே பேசுபொருளாக இருந்த பெரியார் இன்று ஹெச்.ராஜாவின் விரல் வித்தையில் ட்ரெண்டாகி இருக்கிறார். பெரியார் என்றும் ராமசாமி நாயக்கர் என்றும் இரு தரப்புகள் கருத்து மோதல் நடத்துகின்றன. ஒரு வகையில் இது ஆரோக்கியமான விஷயம்தான். விவாதங்களின் வழி வேறுபாட்டை ஒழிக்க வேண்டும் என்று பெரியாருமே ஆசைப்பட் டிருக்கிறார்தான். ஆனால் ராமசாமி என அடையாளப்படுத்தும் இளைஞர்கள் பலரும் வெறும் வாட்ஸ் அப்பில் வரும் அரைகுறை பார்வேர்டுகளை வைத்தே போர் தொடுக் கிறார்கள். ‘அவர் நிஜமாகவே அப்படி சொன்னாரா? அப்படியென்றால் ஏன் சொன்னார்?’ என திருப்பிக் கேட்டால் அவர்களிடத்தில் பதில் இல்லை. இப்படியான புரிதல் யாருக்கும் உதவப்போவதில்லை என்பதால் பெரியார் குறித்து சொல்லப்படும் சில அடிப்படை கேள்விகளுக்கான பதில்கள் இவை. இதில் எதுவுமே புதிது கிடையாது. பல ஆண்டு களாக… பலராலும் சொல்லப்படும் பதில்களின் டைம்லி ரீமேக்தான். கவலைப்படாதீர்கள்! வாட்ஸ் அப் பார்வேர்டுகளை வைத்து உளறிக் கொட்ட...

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (6) ‘உ.வே.சா.’வின் உத்தமதானபுரம் உருவான கதை

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (6) ‘உ.வே.சா.’வின் உத்தமதானபுரம் உருவான கதை

‘ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை… தமிழை மறுக்கும் வேதமரபுகள்’ என்ற தலைப்பில் ஜன.30, 2018 அன்று சென்னை இராயப்பேட்டை ஆனந்த் அரங்கில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையின் விரிவாக்கம். (8.3.2018 இதழ் தொடர்ச்சி) திருப்பள்ளியெழுச்சிக்கு எதிராக வடமொழியில் சுப்ரபாதம் ஏன் வந்தது என்பதைப் பார்த்தோம். வேத மதம் சமஸ்கிருத மொழியை மட்டுமே ஏற்கிறது. தமிழ் உள்ளிட்ட ஏனைய மொழிகளை வேத புரோகித மதம் ஏன் மறுக்கிறது என்பதற்கு வேதமே விளக்கம் தருகிறது. “தஸ் மாது ப்பிரா மணனே நம் பேச்சித வை நம அபபாஷித வை” இந்த சுக்ல யஜுர் வேதம் இதன் கருத்து என்ன? “தேவ-அசுரன் போராட்டத்தில் திராவிட-ஆரியருக்கான போரில் சமஸ்கிருதம் பேசிய தேவர்கள் வெற்றி பெற்றார்கள். சமஸ்கிருதம் பேசாத மிலேச்சர்கள் தோற்றார்கள். எனவே சமஸ்கிருதம் தவிர ஏனைய மொழிகள் கெட்ட மொழி; மிலேச்ச பாஷை” என்பதே இந்த சுலோகத்தின்...

செங்கோட்டை போராட்டம் வெற்றி

செங்கோட்டை போராட்டம் வெற்றி

தோழர்களே! வணக்கம். கடந்த 06-03-2018 சென்னையில் நாம் திட்டமிட்டபடி, இராமராஜ்ஜிய இரத யாத்திரையை 20-03-2018 அன்று செங்கோட்டை தடுப்பு மறியல் போராட்டம் பெருந்திரளோடு நடந்து முடிந்துள்ளது. நாம் எதிர்பாராத அரசியல் விளைவுகள் மூலம் பலப்படுத்தியுள்ளது. பத்து மாவட்டங்களில் தயாரிப்புக் கூட்டங்கள் நடத்தப்பட்டது. சமூக ஊடகங்களில் பரவலாக்கப்பட்டது. #செங்கோட்டை_போராட்டம்_வெற்றி மார்ச் 20 இராமராஜ்ஜிய இரத யாத்திரை தடுப்பு மறியல் தலைவர்கள் தோழர் தொல்.திருமாவளவன் – வி.சி.க தோழர் கொளத்தூர் மணி – தி.வி.க தோழர் வேல்முருகன் – த.வா.க தோழர் கு.இராமகிருஷ்ணன் – த.பெ.தி.க தோழர் ஜவாஹிருல்லா – ம.ம.க தோழர் தெகலான்பாகவி – எஸ்.டி.பி.ஐ தோழர் கே.எம்.சரீப் – த.ம.ஜ.க தோழர் திருவள்ளுவன் – தமிழ்ப்புலிகள் உள்ளிட்ட தலைவர்கள் செங்கோட்டை மறியலுக்கு வரும் வழியில் செங்கல்பட்டு, மதுரை, கோவில்பட்டி, விருதுநகர் என முன்னெச்சரிக்கை எனும் பேரில் மார்ச் 19, 20 கைது செய்யப்பட்டனர். முதல் நாள் இரவு முதல் தமிழ்நாடெங்கும் முன்னெச்சரிக்கைக்...

கபாலி – கோயில் சொத்துக்களை விழுங்கும் ஆத்தீகர்கள்

கபாலி – கோயில் சொத்துக்களை விழுங்கும் ஆத்தீகர்கள்

“கோயில் சொத்துகளை எல்லாம் நாத்திகம் பேசும் திராவிடக் கட்சியினர் விழுங்கி வருகின்றனர். இந்து தர்மத்தைப் பாதுகாக்க வேண்டுமானால், அறநிலையத்துறையிடம் இருந்து கோயில்களை பிடுங்கி, சுதந்திரமான ஆன்மீகவாதிகள் அடங்கிய வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும்” என்று இந்து முன்னணி கோரி வருகிறது. மயிலை (சென்னை) கபாலீசுவரர் கோயிலுக்குச் சொந்தமான பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை வாடகையோ, குத்தகையோ கொடுக்காமல் அனுபவித்துக் கொண்டிருக்கும்  இந்து விரோதிகளின் பட்டியலை அக்கோயிலின் நிர்வாக அதிகாரியான பரஞ்சோதி வெளியிட்டிருக்கிறார். மொத்தம் 473 பேரில் இரண்டு பேர் மட்டுமே முஸ்லிம்கள். ஹிந்துக்கள் 471 பேரில் சில முதலியார்கள், நாடார்கள் தவிர ஆகப் பெரும்பான்மையினர்  அய்யர்-அய்யங்கார்களாகவே இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாடகை கொடுக்காத ப்ராடுகளின் பட்டியலில் முக்கியமானது பாரதிய வித்யா பவன். கதர் அணிந்த காக்கி டவுசர் பேர்வழியும்,  காந்தி கொலைக்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ். மீதான தடையை அகற்றுவதில் முக்கியப் பங்காற்றியவருமான கே.எம்.முன்ஷியால் தொடங்கப்பட்ட நிறுவனம்தான் பாரதிய வித்யா பவன்....

‘தேவதாசி’ முறையை உருவாக்கியது யார்? வாலாசா வல்லவன்

‘தேவதாசி’ முறையை உருவாக்கியது யார்? வாலாசா வல்லவன்

சைவத்தைப் பரப்புவதற்கு பாடுபட்டவர்கள் நாயன் மார்கள். இவர்கள் 63 பேர். வைணவத்தைப் பரப்பு வதற்காகப் பாடுபட்டவர்கள் ஆழ்வார்கள். இவர்கள் 12 பேர். இதில் ஆண்டாள் என்பவரும் ஒருவராவார். ஆண்டாள் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்ததாக வரலாற்றில் எழுதியுள்ளனர். கி.பி. ஏழாம் நூற்றாண்டு என்பது தமிழகத்தில் களப்பிரர்களை அழித்துவிட்டு பல்லவர்கள் கோலோச்சிய காலம். அதாவது சமணத்தையும், பௌத்தத்தையும் அழித்து சைவ, வைணவ சமயங்களைப் புதுப்பிக்கத் தொடங்கிய காலம். களப்பிரர் ஆட்சிக் காலத்தில் பார்ப்பனர் களுக்கு இருந்த உரிமைகள் நீக்கப்பட்டன. அவர்களுக்குக் கொடுக்கப்பட்டிருந்த நிலங்கள் பறிக்கப்பட்டு உழு குடிகளுக்கு கொடுக்கப் பட்டது. எனவே வரலாற்றில் அதை ‘இருண்ட காலம்’ என்று எழுதிவிட்டனர். குப்தர்கள் ஆட்சி ‘பொற்காலம்’ என்று படிக்கிறோம். என்ன காரணம்? பார்ப்பனர்களுக்கு பணமும், பொருளும் வாரிவாரி வழங்கப்பட்டன. இதிகாசங்களில் இடம் பெற்றிருந்த பெயர் களெல்லாம் ஊர்ப் பெயர்களாக மாற்றப்பட்டன. ஆகவே அது பொற்காலம் என அழைக்கப்படுகிறது. சுருக்கமாகச் சொன்னால், பார்ப்பனர்கள் சுகமாக இருந்தால்...

உள் துறை ஆதரவுடன் உலா வரும் ‘இராமராஜ்ய யாத்திரை’

உள் துறை ஆதரவுடன் உலா வரும் ‘இராமராஜ்ய யாத்திரை’

கடந்த கால கலவர யாத்திரைகளை கட்டமைத்தவர் இன்றைய பிரதமர் மோடி மீண்டும் இராம ராஜ்ய யாத்திரையை பா.ஜ.க. பின்னால் இருந்து கொண்டு பரிவாரங்களை முன்னிறுத்தித் தொடங்கியிருப்பதன் பின்னணியை  அலசுகிறது, கட்டுரை. 2014 ஆம் ஆண்டில், “ஊழல்” காங்கிரஸ் கட்சிக்கு எதிரான கடுமையான பிரச்சாரத்தின் மூலம்தான் ஆட்சி அமைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. பொருளாதார உதவி செய்யக் கூடிய உலகளாவிய ஆதரவாளர்களின் உதவியோடு, “அச்சே தின் (ஹஉஉhந னin)”, “தூய்மை இந்தியா” போன்ற அலங்காரப் சொற்களால் மக்களைக் கவர்ந்தார் மோடி. கடந்த 3 ஆண்டுகளில், பொது வாழ்க்கை சீரழிந்துவிட்டது. அதன் விளைவுகளிலிருந்து மீள்வது மிகக் கடினம்! ஃபாசிசக் கொள்கைகளை நடைமுறைப்படுத்தி காவிக் கும்பலை ஊக்குவிப்பதும், சிறுபான்மையினர் மீது பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து மதவாத நஞ்சைப் பரப்புவதும், ஜனநாயகத்தைத் திட்டமிட்டு சீரழிப்பதும், பாராளுமன்ற நல்லொழுக்கத்திற்குக் கேடு விளைவிப்பதும், நிறுவனங்களைக் காவி மயமாக்குவதும், பண மதிப்பிழப்பு (னுநஅடிnவைளையவiடிn) போன்ற பகுத்தறிவற்ற முடிவுகளை எடுப்பதும், ஜி.எஸ்.டி.யை அவசரமாக செயல்படுத்தியதும்,...

ஜாதி மறுப்பு திருமணங்களுடன் திருப்பூரில் கழகத்தின் மகளிர் நாள் எழுச்சி மாநாடு

ஜாதி மறுப்பு திருமணங்களுடன் திருப்பூரில் கழகத்தின் மகளிர் நாள் எழுச்சி மாநாடு

திராவிடர் விடுதலைக் கழகம் திருப்பூர் மாவட்டத்தின் சார்பில் மகளிர் நாள் மாவட்ட மாநாட்டு பேரணி  12.03.2018 திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் அருகில் இருந்து துவங்கியது. பேரணிக்கு முன்பாக புரட்சியாளர் அம்பேத்கர் சிலைக்கு ஜாதி ஒழிப்பு முழக்கங்களுடன் மாலை  அணிவித்தனர். பேரணியை கழகத் தலைவர் கொளத்தூர் மணி கொடி அசைத்து துவங்கி வைத்தார். பேரணிக்கு கழகத் தோழர் சுசீலா தலைமை தாங்கினார். பேரணி முன் வரிசையில் பறை முழக்கமும், கழக மகளிரின் நடனத்துடன் சென்றது. குழந்தைகள், பெண்கள், ஆண்கள் என வரிசையில் சுயமரியாதை இயக்கப்பெண்கள், சமூக செயற்பாட்டாளர்கள், போராளிகளின் படங்களை தாங்கிப் பிடித்தபடி கொள்கை முழக்கங்களுடன் எழுச்சியுடன் அணி வகுத்தனர். சாலையின் இருபுறமும் மக்கள் பேரணியை பார்வையிட்டனர். திருப்பூர் ரயில் நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலையை பேரணி அடைந்தது. கழகத் தலைவர்  கொளத்தூர் மணி பெரியார் சிலை, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார். அப்போது அங்கு...

அமேசானின் தானியங்கி சூப்பர் ஸ்டோர் பொருளாதார சுரண்டலை உறுதி செய்யும் முதலாளித்துவ கட்டமைப்பு

அமேசானின் தானியங்கி சூப்பர் ஸ்டோர் பொருளாதார சுரண்டலை உறுதி செய்யும் முதலாளித்துவ கட்டமைப்பு

அமேசான் நிறுவனம் அமெரிக்காவில் 100% தானியங்கி சூப்பர் ஸ்டோரை அமைத்திருக்கிறது. ஒரே ஒரு வேலையாள் கூட இல்லாத இது அறிவியல் வளர்ச்சியின் உச்ச கட்டம். நவீன விஞ்ஞானம் இயந்திரங்கள் மனிதனை உடல் உழைப்பிலிருந்து விடுவித்திருக்கின்றன. மனித உழைப்பை எளிதாக்கி, மனிதன் அதிக நேரத்தை தன் குடும்பத்தோடும், பொழுது போக்குக்காகவும் செலவிடலாம் என்கிற நிலையை உருவாக்கி இருக்கிறது. எந்த அறிவியல் கண்டுப்பிடிப்பும் தனி மனிதனால் கண்டுபிடிக்கப்படுவதாக தோன்றினாலும், உண்மை அப்படி இல்லை. உலக வரலாற்றில் மனித சமுதாயத்தின் வளர்ச்சியின் விளைவே அறிவியல் வளர்ச்சியும், மனித வாழ்வின் அனைத்து மேம்பாடுகளும். அமேசானின் அமெரிக்காவில் அமைத்திருக்கும் தானியங்கி சூப்பர் ஸ்டோர் மனித சமூகத்தின் வளர்ச்சியின் பெருமைக்குரிய மைல்கல். இதன் பலன்கள் மனித குலத்தின் பலனாக மாற்றப்பட்டிருக்க வேண்டும். அதனால் மிச்சப்படுத்தப்பபட்ட மனித உழைப்பின் பலன். தொழிலாளர்கள் வேலை நேரக் குறைப்பாக, பொருளாதாரப் பயன்கள் சமூக மேம்பாட்டின் உயர்வாக மாற வேண்டும். ஆனால் இதற்கு நேர் மாறாக...

நீதித்துறையில் காவிகளின் ஊடுறுவல் !  காவிகளின் மாநாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதி பங்கேற்பதா?

நீதித்துறையில் காவிகளின் ஊடுறுவல் ! காவிகளின் மாநாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதி பங்கேற்பதா?

நீதித்துறையில் காவிகளின் ஊடுறுவல் ! காவிகளின் மாநாட்டில் உயர்நீதிமன்ற நீதிபதி பங்கேற்பதா? (24.02.2018) கோவையில் ஆர்.எஸ்.எஸ்.சின் வழக்கறிஞர் பிரிவான அகில பாரத அதிவக்த பரிஷத் எனும் அமைப்பும்,அகில பாரத வழக்கறிஞர்கள் சங்கத்தின் தமிழகப் பிரிவும் இணைந்து நடத்தும் மாநில வழக்கறிஞர் 2வது மாநாட்டை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி என்.சேஷசாயி துவக்கி வைத்து சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்ளவிருக்கிறார் என்கிற செய்தி மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. மேலும் இவ்ர் கோவையில் மாவட்ட நீதிபதியாக இருந்தபோது ஆர்.எஸ்.எஸ். மாணவர் அமைப்பான ABVP மாநாட்டில் பங்கேற்றவர் என்ற செய்தியை அறிய வரும்போது நமக்கு மேலும் பெரும் அதிர்ச்சியே ஏற்படுகிறது. இந்திய அரசியல் சட்டம் வலியுறுத்தும் மதசார்பற்றதன்மைக்கு இது எதிரான செயலாகும்.இந்திய அரசியல் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நீதித்துறையில் மிகப்பெரிய பொறுப்பில் இருக்கும் உயர்நீதிமன்ற நீதிபதியே இப்படி ஒரு மதவாத அமைப்பின் நிகழ்ச்சியை துவங்கி வைப்பது நீதித்துறையின் மத சார்பற்றதன்மையையும், நம்பிக்கையையும் சீர்குலைக்கும் செயலே ஆகும். முன்பு பெங்களூருவில் கர்நாடக...

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (5) ‘சுப்ரபாதம்’ எப்படி யாரால் வந்தது?

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (5) ‘சுப்ரபாதம்’ எப்படி யாரால் வந்தது?

‘ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை… தமிழை மறுக்கும் வேதமரபுகள்’ என்ற தலைப்பில் ஜன.30, 2018 அன்று சென்னை இராயப்பேட்டை ஆனந்த் அரங்கில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையிலிருந்து… (கடந்த வார தொடர்ச்சி) வைதீக மரபு என்ற பார்ப்பன மரபு தமிழை எப்படி ஊடுருவி அழித்தது என்பதற்கு ஒரு சான்றாக ‘நாலாயிர திவ்ய பிரபந்தத்தை’ சுட்டிக் காட்ட முடியும். தமிழ் ஆழ்வார்களால் பாடப்பட்ட நான்காயிரம் பக்திப் பாடல்களின் தொகுப்பு இது. திவ்யம் என்றால் ‘தூய்மை’ என்று பொருள். ப்ரபந்தம் என்றால் ‘திரட்டு’ என்பது பொருள். ‘ஆழ்வார்களின் நாலாயிர அருளிச் செயல்’ என்பதுதான் இந்த நூலுக்கான தமிழ்ப் பெயர். ஆனால் இது ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்ற சமஸ்கிருதப் பெயருக்கு  மாற்றப்பட்டது. இன்று வரை ‘நாலாயிர திவ்ய பிரபந்தம்’ என்ற சமஸ்கிருத பெயரையே தமிழில் எழுதப்பட்ட நான்காயிரம் பாடல் தொகுப்பும் தாங்கி நிற்கிறது. இது...

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (4) சங்கராச்சாரிகள் கர்ப்பகிரகத்துக்குள் நுழைவதே வேத மரபுக்கு எதிரானதுதான்!

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு (4) சங்கராச்சாரிகள் கர்ப்பகிரகத்துக்குள் நுழைவதே வேத மரபுக்கு எதிரானதுதான்!

‘ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை… தமிழை மறுக்கும் வேதமரபுகள்’ என்ற தலைப்பில் ஜன.30, 2018 அன்று சென்னை இராயப்பேட்டை ஆனந்த் அரங்கில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையிலிருந்து… (கடந்த வார தொடர்ச்சி) ஆண்டாள் தேவதாசி மரபில் வந்தவராக இருக்கலாம் என்று கூறியதற்கே ஆண்டாளை அவமதித்து விட்டதாக துள்ளிக் குதிக்கும் ஜீயர் – வைணவப் பார்ப்பனர்களுக்கு அவர்களின் வேதமரபு குறித்து சிலவற்றைக் குறிப்பிட்டாக வேண்டும். இதையெல்லாம் அவர்கள் பேச வைத்து விட்டார்கள். பெரியார் இயக்கத்தவர்களாகிய நாங்கள். அந்த ‘ஆபாசங்களை’ எல்லாம் இனியும் பேச வேண்டிய அவசியமில்லை என்று கடந்து போய்விட்டோம். ஆனால் எங்களை மீண்டும் வேத மரபின் வண்டவாளங்களைப் பேச வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை அவர்களே உருவாக்கியிருக்கிறார்கள். வேதங்கள் நான்கு. அய்ந்தாவதாக ஒரு வேதம் உண்டு. அதை ‘விவேக சாகரம்’ என்று கூறுகிறார்கள். அந்த ‘விவேக சாகரம்’ என்றால் என்ன என்பதை வைதீகத்தில்...

மருத்துவ மாணவர்களின் மர்ம மரணங்களுக்குக் காரணம் யார்?

மருத்துவ மாணவர்களின் மர்ம மரணங்களுக்குக் காரணம் யார்?

சண்டிகாரில் உள்ள பி.ஜி.அய்.எம்.இ.ஆர் – மத்திய அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவ மேல் பட்டப் படிப்பில் முதலாம் ஆண்டில் சேர்ந்த கிருஷ்ண பிரசாத் என்ற தமிழ்நாட்டு மாணவர் விடுதியில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் யு.சி.எம்.எஸ். மருத்துவக் கல்லூரியில் முதுநிலை மருத்துவம் பயின்றுவந்த தமிழக மாணவர் சரத்பிரபுவின் மர்ம மரணம் பல்வேறு சந்தேகங்களை எழுப்பியிருக்கிறது. 2016-ல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியில் படித்துவந்த தமிழக மருத்துவ மாணவர் சரவணன் மர்ம மரணம் ஏற்படுத்திய அதிர்ச்சி விலகாத நிலையில் நடந்திருக்கும் மற்றொரு சம்பவம் இது. சரவணன் போலவே சரத்பிரபுவும் விஷ ஊசி செலுத்தப்பட்டே இறந்திருக்கிறார். சரவணன் மரணத்தைப் பொறுத்தவரை, அது ஒரு தற்கொலை என்றே எய்ம்ஸ் நிர்வாகமும், டெல்லி காவல் துறையும் சொல்லிவந்தன. ஆனால் பிரேத பரிசோதனை முடிவுகள், அது தற்கொலை அல்ல என்பதை உறுதிப்படுத்தின. இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது வேறு விஷயம்! சில நாட்களுக்கு முன்பு,...

வேத மரபைத் தோலுரித்து, விடுதலை இராசேந்திரன் பேச்சு (3) ‘நாத்திகர்’களுக்கு சிகிச்சைத் தரக் கூடாது என்றவர் சங்கராச்சாரி

வேத மரபைத் தோலுரித்து, விடுதலை இராசேந்திரன் பேச்சு (3) ‘நாத்திகர்’களுக்கு சிகிச்சைத் தரக் கூடாது என்றவர் சங்கராச்சாரி

 ‘சதி’ நெருப்பில் பார்ப்பனர் தள்ளிய பெண்ணை மீட்ட பிரிட்டிஷ் அதிகாரி ‘ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை… தமிழை மறுக்கும் வேதமரபுகள்’ என்ற தலைப்பில் ஜன.30, 2018 அன்று சென்னை இராயப்பேட்டை ஆனந்த் அரங்கில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையிலிருந்து… (கடந்த வார தொடர்ச்சி) பிரிட்டிஷ் ஆட்சியில் சமஸ்கிருதத்துக்கு மட்டும் தனியே கல்லூரி தொடங்க பார்ப்பனர்கள் மனு தந்ததையும் அதற்கு இராஜாராம் மோகன்ராய் கடும் எதிர்ப்பு தெரிவித்ததையும் குறிப்பிட்டோம். இது குறித்து பல ஆண்டுகாலம் விவாதங்கள் நடந்தன. கடைசியில் பிரிட்டிஷ் அரசு சமஸ்கிருதக் கல்வித் திட்டத்தைக் கைவிட்டது. இதில் உறுதியாக செயல்பட்டவர். அப்போது  பிரிட்டிஷ் அமைச்சரவையில் சட்டக் குழு உறுப்பினராக இருந்த மெக்காலே தான், 1835ஆம் ஆண்டு எத்தகைய கல்வியை இந்தியாவுக்கு வழங்க வேண்டும் என்று அவர் முன் வைத்த கல்விக் குறிப்பு ஆவணம், வரலாற்று முக்கியத்துவம் கொண்டது. மெக்காலே ஆவணம் இவ்வாறு...

சூளுரைத்தார், கவிஞர் வைரமுத்து வடமொழி எதிர்ப்போடு தமிழின விடுதலையை முன்னெடுப்போம்

சூளுரைத்தார், கவிஞர் வைரமுத்து வடமொழி எதிர்ப்போடு தமிழின விடுதலையை முன்னெடுப்போம்

“வடமொழி எதிர்ப்பும் இனவிடுதலை இயக்கமும் மீண்டும் புத்துயிர் பெறச் செய்வோம்” என்று சூளுரைத்தார் – கவிஞர் வைரமுத்து. ஆண்டாள் தேவதாசி மரபில் வந்தவராக இருக்கலாம் என்று ஓர் ஆய்வாளர் கருத்தை மேற்கோள் காட்டினார் என்பதற்காக, கவிஞர் வைரமுத்துவை பார்ப்பனர்கள் மூர்க்கத்தனமாக எதிர்த்தனர். எச். ராஜா என்ற பார்ப்பனர், வைரமுத்துக் குடும்பத்தினரை இழிவுபடுத்தினார். அய்யங்கார் பார்ப்பனர்கள், வைரமுத்து, திருவில்லிபுத்தூர் கோயிலுக்கு வந்து ஆண்டாளிடம் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று திறந்தமேனியுடன் வீதிக்கு வந்து போராடினார்கள். ‘தினமணி’ ஆசிரியரான ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனர் வைத்தியநாதனுடன் கடந்த சில ஆண்டுகளாக நெருக்கம் காட்டி வந்தார் வைரமுத்து.  கட்டுரை வாசிப்பு நிகழ்ச்சிகளை பா.ஜ.க.வின் ஊதுகுழலான ‘தினமணி’யே ஏற்பாடு செய்து அந்தக் கட்டுரைகளை முழுமையாக ‘தினமணி’ வெளியிட்டு வந்தது. தருண் விஜய் என்ற ஆர்.எஸ்.எஸ்.காரர், திருக்குறள் பெருமை பேசினார் என்பதற்காக அவருக்கு தமிழகத்தில் மேடை அமைத்துக் கொடுத்தார் வைரமுத்து. பா.ஜ.க.விடம் வைரமுத்து காட்டிய ‘நேசக்கரம்’ நீண்ட நாள் நிலைக்கவில்லை. ‘ஆண்டாள்’...

ஆதாரங்களுடன் விடுதலை இராசேந்திரன் பேச்சு தமிழ் சமூகத்தையே சமஸ்கிருத மயமாக்கியவர்கள் பார்ப்பனர்கள்

ஆதாரங்களுடன் விடுதலை இராசேந்திரன் பேச்சு தமிழ் சமூகத்தையே சமஸ்கிருத மயமாக்கியவர்கள் பார்ப்பனர்கள்

‘ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை… தமிழை மறுக்கும் வேதமரபுகள்’ என்ற தலைப்பில் ஜன.30, 2018 அன்று சென்னை இராயப்பேட்டை ஆனந்த் அரங்கில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையிலிருந்து… (சென்ற இதழ் தொடர்ச்சி) திருவையாறு 
சமஸ்கிருதக் கல்லூரியில் தமிழுக்கு இழைத்த அவமதிப்பு தமிழைத் தீட்டு மொழி என்று கூறி, தமிழ் பேசினாலேயே உடல் முழுதும் குளியல் போட்டு தீட்டுக் கழிக்கும் ‘இவாள்’தான், ‘பெரியாரை – தமிழ் விரோதி’ என்கிறார்கள். புராணக் கதைகளிலும் இராமாயணப் பெருமைகளிலும் பக்தி இலக்கியங் களிலுமே மூழ்கிக் கிடக்கும் தமிழை அறிவியல் மொழியாக்க வேண்டும் என்றார் பெரியார். திருக்குறளுக்காக மாநாடு போட்டு, திருக்குறளை குறைந்த விலையில் கையடக்க நூலாக மக்களிடம் கொண்டு சென்றவர் பெரியார். தமிழ்ப் பாடல்களை அவமதித்து, அதைத் ‘துக்கடா’ என்று, இசை நிகழ்வில் ஒப்புக்காகப் பார்ப்பனர்கள் பாடியபோது, தமிழிசையைப் பாட மறுத்தபோது, அதற்காக இயக்கம் நடத்தியவர் பெரியார்....

அன்பைவிட நம்பிக்கையே முக்கியமானது! பிப்ரவரி 14 
உலக காதலர் நாள் சிந்தனை

அன்பைவிட நம்பிக்கையே முக்கியமானது! பிப்ரவரி 14 
உலக காதலர் நாள் சிந்தனை

சமத்துவமற்ற உலகில் எல்லோரும் எல்லோரிடமும் உண்மையான அன்பு செலுத்திட முடியாது. ஆணும் பெண்ணும் இங்கே சமமானவர்களாய் இல்லை. எனவே காதலும் சிக்கல் நிறைந்ததாகவே இருக்கும். அன்றைக்கும் புழுவினும் அடிமையாயிருந்த பெண் தனக்கென ஒரு அடையாளம் பெற்றபோது அங்கே காதல் மலர ஆரம்பித்தது. பிறகு ஆண்களால் துய்க்கப்படுவதற்கான போகமாய் மட்டும் இருந்தவள் மெல்ல சுவாசிக்க ஆரம்பித்த போது காதல் தன் மணத்தைப் பரப்பியது. இன்றைக்கு சந்தை உலகத்தில் விற்பனைப் பொருளாய் கருதப்படும் பெண் அதிலிருந்து மீள முயற்சிக்கும்போது காதல் அதற்கான விடுதலை கீதத்தை இசைக்கிறது. இதிலிருந்து தான் ஆணுக்கும் பெண்ணுக்குமான முரண்பாடுகள் கூர்மையடைகின்றன. இந்த முரண்பாடுகளை சரி செய்யவோ, இணக்கங்களை உருவாக்கவோ விரும்பாத சமூகம் காதலை உலகத்திலிருந்து தள்ளி வைக்கவும், கொச்சைப்படுத்தவும் முயலுகிறது. இதனை அறிவுபூர்வமாக ஆணும், பெண்ணும் புரிந்து கொண்டு, உணர்வுபூர்வமான உறவுகளை செழுமைப்படுத்திட முயற்சிக்க  வேண்டும். காமம், அன்பு, நம்பிக்கை, சுதந்திரம் என எல்லாம் கலந்த ஆண், பெண் உறவே...

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு தமிழை அவமதிப்பதே வேத மரபு

சென்னை கருத்தரங்கில் விடுதலை இராசேந்திரன் பேச்சு தமிழை அவமதிப்பதே வேத மரபு

‘ஆண்டாள் முதல் சங்கராச்சாரி வரை… தமிழை மறுக்கும் வேதமரபுகள்’ என்ற தலைப்பில் ஜன.30, 2018 அன்று சென்னை இராயப்பேட்டை ஆனந்த் அரங்கில் திராவிடர் விடுதலைக் கழகம் நடத்திய கருத்தரங்கில் பொதுச் செயலாளர் விடுதலை இராசேந்திரன் நிகழ்த்திய உரையிலிருந்து… இன்று காந்தி பார்ப்பனர்களால் படுகொலை செய்யப்பட்ட நாள். எனவே காந்தியாருக்கும் வேத மரபான பார்ப்பனியத்திற்கும் இடையிலான ‘உறவுகள்’ குறித்து சில கருத்துகளைப் பதிவு செய்துவிட்டு, பிறகு, எனது தலைப்புக்கு வருகிறேன். தமிழ்நாட்டில் காந்தி மேற்கொண்ட பயணங்களின் செய்திகளைத் தொகுத்து தமிழ்நாடு காதி வாரியம், ‘தமிழ்நாட்டில் காந்தி’ என்ற நூலை வெளியிட்டிருக் கிறது. தொகுத்தவர் பெயர் இராமசாமி. அதில் உள்ள தகவல்கள் இவை: 16.10.1927 அன்று பாலக்காட்டில் காஞ்சி மூத்த சங்கராச்சாரி சந்திரசேகரேந்திரசாமி காந்தியாரை சந்தித்தார். சந்தித்த இடம் மாட்டுக் கொட்டகை. காரணம், காந்தி பிறப்பால் ‘பிராமணன்’ அல்ல என்பதுதான். அப்போது தீண்டப்படாதவர்களாக புறக்கணிக்கப்பட்ட மக்களை கோயிலுக்குள் அனுமதிக்க வேண்டும் என்ற ‘ஆலயப் பிரவேசப்’...

தலைமைக் கழகக் கட்டமைப்பு நிதி

தலைமைக் கழகக் கட்டமைப்பு நிதி

கோபி இளங்கோவன்           –                 ரூ.1,00,000/- சென்னை கு. அன்பு தனசேகர்        –                 ரூ.1,00,000/- மேட்டூர் மார்டின்     –                 ரூ.50,000/- மேட்டூர் சம்பத்           –                 ரூ.50,000/- மயிலாடுதுறை இளையராசா      –                 ரூ.20,000/- மயிலாடுதுறை மகேஷ்    –                 ரூ.10,000/- சேலம் மேச்சேரி சூரி (எஸ். எஸ். சில்க்ஸ்)              –                 ரூ.10,000/- சூரிய குமார் (கொளத்தூர்)                 –                 ரூ.10,000/- வேணுகோபால்        –                 ரூ.10,000/- காவை சசி      –                 ரூ.10,000/- நல்லதம்பி மெடிக்கல்ஸ்                   –                 ரூ.10,000/- கோவிந்தராஜ்             –                 ரூ.5,000/- காவை இளவரசன்                   –                 ரூ.5,000/- விஜி    –                 ரூ.5,000/- ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ இதழ் வளர்ச்சி நிதி திராவிடர் விடுதலைக் கழகத்தின் மூத்த உறுப்பினர், திருவரங்கம்டாக்டர்...

நிறுவனமயமாக்கப்பட்ட பெரியார், தத்துவமயமாக்கப்பட வேண்டும்!

 ‘ஈ.வெ.ராமசாமி என்கின்ற நான்’ (பாரதி புத்தகாலயம்), ‘நான் சொன்னால் உனக்கு ஏன் கோபம் வரவேண்டும்?’ (நியூசெஞ்சுரிபுத்தக நிலையம்) ஆகிய இரண்டு பெருந்தொகுப்புகளினூடாக பரவலான கவனக் குவிப்பைப் பெற்றவர்; இன்னும் பல படைப்புகளை உருவாக்கும் ஆயத்தப்பணிகளில் இருக்கிறார். சூழலியலாளர். இயற்கைமுறை விவசாயத்திலும், மீன் வளர்ப்பிலும் முனைப்புடன் இருப்பவர். தன்னுடைய இயற்கை வேளாண் பண்ணையில் – எழில் கொஞ்சும் சூழலில் பல கேள்விகளுக்கு மடைதிறந்த வெள்ளமென பதிலளித்தார். அவர் எழுத்தாளராக உருவானது எப்படி? ஏன்? எந்த சூழல் தன்னை மாற்றியது உள்ளிட்ட பல விவரங்கள்.…. தன் உடல்நலத்தை பெருமளவுக்கு கண்டு கொள்ளாமல் பெரியாரை பெரியாராகவே அறிமுகப்படுத்தும் அவரது முனைப்பு தமிழ்ச் சமூகம் கண்டு கொள்ள வேண்டிய ஒன்றாகும். இனி உரையாடலிலிருந்து…. தங்களைப்பற்றிச் சொல்லுங்களேன்…? என் தந்தையார் ராணுவத்தில் பணியாற்றிவிட்டு பொன்மலை ரயில்வேதுறையில் பணியாற்றினார். அய்யா பெரியாருடனும், மணியம்மையாருடனும் ஆசிரியர் வீரமணி அவர்களுடனும் நெருக்கமான தொடர்பில் இருந்தவர். பழைய தஞ்சை மாவட்டத் தில் சுயமரியாதை இயக்க,...

இந்த உண்மைகளைப் படியுங்கள்; பரப்புங்கள்; பகிருங்கள்! மாணவர்களே! இருள்சூழ்ந்து நிற்கிறது, நமது எதிர்காலம்!

இந்த உண்மைகளைப் படியுங்கள்; பரப்புங்கள்; பகிருங்கள்! மாணவர்களே! இருள்சூழ்ந்து நிற்கிறது, நமது எதிர்காலம்!

தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட – முற்போக்குச் சிந்தனை கொண்ட மாணவர்களே! நமது எதிர்காலம் இருள்மயமாகி வருவதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறோம். இந்தத் துண்டறிக்கையைப் படியுங்கள்! மத்திய தொழிலாளர் நலத் துறை அமைச்சகம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அறிக்கையில் வேலை இல்லாத் திண்டாட்டத்தில் வளர்ச்சி பெற்ற மாநிலங்களிலேயே தமிழ்நாடு முதலிடத்துக்கு வந்துவிட்டது என்ற அதிர்ச்சியான தகவல் தரப் பட்டிருக்கிறது. இந்தியாவில் வேலை கிடைக்காத இளைஞர்களின் தேசிய சராசரியைவிட (3.6) தமிழ்நாடு கீழாக நிற்கிறது (3.7). 2.45 இலட்சம் பொறியாளர்களும், 4307 டாக்டர் பட்டம் பெற்ற மாணவர்களும், வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருக் கிறார்கள். 2017 மார்ச் 30 வரை வேலை வாய்ப்புக்காகப் பதிவு செய்து காத்திருக்கும் நமது இளைஞர்கள் 81.30 இலட்சம் பேர். பதிவு செய்யாமலே வேலை தேடி அலைவோர் இதைவிடப் பன்மடங்கு என்பதை சொல்லத் தேவை இல்லை. மத்திய அரசுப் பணிகளில் பிற்படுத்தப்பட் டோருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு...

உயர்கல்வி படிக்கச் சென்றால் மரணம்தான் பரிசா? – தமிழ்நாடு மாணவர் கழக துண்டறிக்கை

தமிழக மாணவர்களே! தமிழ்நாட்டிலிருந்து உயர்கல்வி படிக்கச் செல்லும் நமது மாணவர்கள், அந்தக் கல்வி நிறுவனங்கள்காட்டும் ‘பாகுபாடு’களாலும், ‘அவமதிப்பு’களாலும், ‘அழுத்தங்’களாலும் மரணத்துக்கு தள்ளப்படுகிறார்கள். தில்லி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில் ‘எம்.டி.’ மேல் பட்டப் படிப்பு படிக்கச் சென்ற திருப்பூர் மாணவர் சரத் பிரபு, தனது அறையில் மர்மமான முறையில் பிணமாகக் கிடந்தார் என்ற செய்தி நமது நெஞ்சை பிளக்கிறது. உயர் கல்வி பெற்ற ஒரு மருத்துவர் வரப் போகிறார் என்று அந்தக் குடும்பத்தினரின் மகிழ்ச்சிக் கனவு சிதைந்து போய் நிற்கிறது. இதேபோல்தான் புதுடில்லியில் உள்ள ‘எய்ம்ஸ்’ உயர் மருத்துவக் கல்வி நிறுவனத்துக்கான தேர்வை 2016இல் எழுதி, தமிழகத்திலிருந்து தேர்வு செய்யப்பட்ட ஒரே மாணவரான திருப்பூர் சரவணன், கல்லூரியில் சேர்ந்த சில நாட்களிலேயே விஷ ஊசி செலுத்திக் கொல்லப்பட்டார். நிர்வாகம் முதலில் தற்கொலை என சாதித்தது. விசாரணையில் கொலை என்பது உறுதியானது. மகனின் மரணத்துக்கு நியாயம் கேட்டு பெற்றோர்கள் நீதிமன்றத்தில் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இவர்கள்...

‘குடிஅரசு’ வழக்கு :‘விடுதலை’க்கு ஒரு விளக்கம் !

பெரியார் திராவிடர் கழகம் ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளியிட்டதை எதிர்த்து ரூ.15 இலட்சம் இழப்பீடு கேட்டார் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார இயக்கச் செயலாளர் கி.வீரமணி அவர்கள். ‘குடிஅரசு’ வெளியீட்டுக்கு இடைக்காலத் தடை இல்லை என்று உயர்நீதிமன்றம், உயர்நீதிமன்ற அமர்வு, உச்சநீதிமன்றம் வரை அறிவித்த பிறகும் இழப்பீடு கேட்கும் பிரதான வழக்கை அவர்கள் கைவிடத்தயாராக இல்லை. 2010க்குப் பிறகு மீண்டும் அந்த வழக்கைத் தொடர்ந்து நடத்தவே விரும்புகிறார்கள் என்பதையே ‘புரட்சிப் பெரியார் முழக்கம்’ ‘மீண்டும் வழக்கு’ என்று செய்தியாக வெளியிட்டது. முழக்கம்’ ‘மீண்டும் வழக்கு’ என்று செய்தியாக வெளியிட்டது. முழக்கம்’ ‘மீண்டும் வழக்கு’ என்று செய்தியாக வெளியிட்டது. “மீண்டும் நாங்கள் புதிய வழக்கைப் போடவில்லை; ‘புரட்சிப்பெரியார் முழக்கம்’ தவறான செய்தியை வெளியிடுகிறது” என‘விடுதலை’ ஏடு மறுத்துள்ளது. ‘குடிஅரசு’ வெளியீட்டுக்கு தடை இல்லை என்ற தீர்ப்புகள் வந்த பிறகும் வழக்கை அத்துடன் முடித்துக் கொள்ளாமல், பழைய வழக்கை பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தோண்டி எடுத்துத்...

பார்ப்பனிய அதிகாரப் பிடியில் மத்திய அரசு

பார்ப்பனிய அதிகாரப் பிடியில் மத்திய அரசு

ஒரு சதவீதம்கூட வங்கிகளில் பிற்படுத்தப்பட்ட அதிகாரிகள் இல்லை தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உயர் அதிகாரிகளாக ஒரு சதவீதம்கூட பிற்படுத்தப்பட்டோர் இல்லை. 1.10.2015ஆம் ஆண்டு நிலவரப்படி பொதுத் துறை வங்கிகளில் பொது மேலாளர் துணை பொது மேலாளர் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் எண்ணிக்கை: அலகாபாத் வங்கி: மொத்த பொது மேலாளர் பதவி 19. பிற்படுத்தப்பட்டோர் (பி.சி.) ஒருவர்கூட இல்லை. துணை மேலாளர் பதவி 63; பிற்படுத்தப் பட்டோர் (பி.சி.) ஒருவர்கூட இல்லை. ஆந்திரா வங்கி: மொத்த மேலாளர் பதவி 16இல், பி.சி. ஒருவர்கூட இல்லை. 48 துணை மேலாளர் பதவிகளில் பி.சி. ஒருவர்கூடஇல்லை. பேங்க் ஆப் பரோடா : 44 மேலாளர் பதவிகளில் பிற்படுத்தப்பட்டோர் ஒருவர் மட்டுமே. 122 துணை மேலாளர் பதவிகளில் பிற்படுத்தப்பட் டோர் ஒருவர். பேங்க் ஆப் இந்தியா : 37 மேலாளர் பதவிகளில் பி.சி. ஒருவர்கூட இல்லை. 126 துணை மேலாளர் பதவிகளில் பி.சி. ஒருவர் மட்டுமே. பேங்க் ஆப்...

பெரியாரின் ‘குடிஅரசு’ தொகுதிகளை வெளியிட்டதற்காக கழகத்திடம் ரூ.15 இலட்சம் இழப்பீடுக் கோரி மீண்டும் கி.வீரமணி வழக்கு

பெரியாரின் ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளியிட்டதற்காக பதிப்புரிமை சட்டப்படி தனக்கு ரூ.15 இலட்சம் இழப்பீடு தரவேண்டும் என்று பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் செயலாளர் கி. வீரமணி மீண்டும் உயர்நீதிமன்றம் வந்துள்ளார். பெரியாரின் ‘குடிஅரசு’ வார இதழில் இடம் பெற்றிருந்த பெரியாரின் பேச்சு எழுத்துக்கள் நீண்டகாலமாக பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனம் வெளியிடாத நிலையில் பெரியார் திராவிடர் கழகம், காலவரிசைப்படி தொகுத்து 27 தொகுதிகளாக வெளியிட்டது. பெரியாரின் ‘குடிஅரசு’ தொகுப்புகளை வெளியிடும் உரிமை தங்கள் நிறுவனத்துக்கு மட்டுமே உண்டு என்றும், பெரியார் திராவிடர் கழகம் வெளியிட உரிமை இல்லை என்றும், கி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ‘குடிஅரசு’ பதிப்பாசிரியரும், அன்றைய பெரியார் திராவிடர் கழகத்தின் தலைவருமான கொளத்தூர் மணி, பொதுச்செயலாளர் கோவை இராமகிருட்டிணன் மீது வழக்கு தொடரப்பட்டது. 2009ஆம் ஆண்டு வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.சந்துரு, பெரியார் தி.க. வெளியிட்ட ‘குடிஅரசு’ தொகுதிகளுக்கு 2008ஆம் ஆண்டு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை...

இந்திய அளவிலான வில்வித்தை – கழக மாணவர்கள் சாதனை

மேட்டூர் 7 ஸ்டார் ஆர்ச்சரி கிளப் மாணவர்கள் சாதனை இந்திய ஊரக விளையாடுக் குழுமம் நடத்திய தேசிய (இந்திய) அளவிலான வில்வித்தைப் போட்டி, ஜார்கண்ட் மாநிலம், ராஞ்சியில் உள்ள கேள்காண் விளையாட்டரங்கில், 2017 டிசம்பர் 25,26 ஆகிய நாட்களில் நடைபெற்றது. அதில் தமிழ்நாட்டு அணியை சார்பாக கலந்துகொண்ட, சேலம் மாவட்டம், காவலாண்டியூரைச் சேர்ந்த மாணவன் மா. இ.எழிலரசு 14 வயதுக்குட்பட்டோருக்கான ரீ கர்வ் வில் அம்பு பிரிவில் இந்திய அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் பெற்றார். இவர் கழகத் தோழர் காவை இளவரசன் – மாதவி இணையரின் மகன் ஆவார். இந்தியன் ரவுண்ட் பிரிவில் க.ப.வளவன் இந்திய முதலிடம் பிடித்து, தங்கப் பதக்கம் பெற்றார். இவர் கழகத் தோழர் கொளத்தூர் கபிலன் புகைப்பட நிலையம் விஜயகுமார் – கலைச்செல்வி ஆகியோரின் மகன் ஆவார். 17 வயதுக்கு உட்பட்டோருக்கான காம்பவுண்ட் பிரிவில் தோழர் கொளத்தூர் குமார் – தமிழரசி இணையரின் மகன்...

”கீழ்வெண்மணி: மறைக்கப்படும் உண்மைகள்.” – பசு.கவுதமன்

”கீழ்வெண்மணி: மறைக்கப்படும் உண்மைகள்.” – பசு.கவுதமன்

”கீழ்வெண்மணி: மறைக்கப்படும் உண்மைகள்.” – கீழ்வெண்மணி படுகொலையில் வரலாற்றில் மறைக்கப்படும் பகுதியை சுட்டிக்காட்டுகிறார் பசு.கவுதமன். ‘தடம்’ இதழுக்கு அவர் எழுதிய கட்டுரையின் முழுமையான வடிவம். 25.12.1968, மனிதகுல வரலாற்றில் மறக்கமுடியாத கருப்பு தினம் ! 44 மனித உயிர்கள், மனிதர்கள் என்று சொல்லப்பட்டவர்களாலேயே கொளுத்தப்பட்ட கொடும் கோரநாள். ஆயிற்று அய்ம்பது ஆண்டுகள் ! இந்த அய்ம்பது ஆண்டுகளிலும் எப்போதும் , எல்லோராலும் சொல்லப்பட்டது, “ அரைப்படி நெல் கூலிஉயர்வு கேட்டதற்காக…, ” – இது கூலி உயர்வு மட்டுமேயான பிரச்சனையா? அல்லது அந்த மிகப்பெரிய அவலச் சம்பவத்தை – துயர விளைவை அப்படித்தான் குறுக்கி, சுருக்கிவிட முடியுமா? 62களின் இறுதிகளிலிருந்து நாகை தாலுக்காவில் வளர்த்தெடுக்கப்பட்ட போராட்டச் சூழலில் , ஆய்மழை தங்கவேலு , சிக்கல் பக்கிரிசாமி, இருஞ்சூர் சின்னப்பிள்ளை, கேக்கரை ராமச்சந்திரன் ஆகியோர்களின் உயிர்பலி என்ற தொடர்ச்சியின் உச்சகட்ட வெளிப்பாடுதான் வெண்மணியின் 44 மனித உயிர்களை பலிகொண்ட தீயின் கங்குகள்.! “...

கழகத்திற்கு புதிய மின்னஞ்சல்

  கழகத்தின் சார்பில் மாவட்ட, மாநகர, ஒன்றிய, கிளைக் கழகங்கள் நடத்தும் ஆர்ப்பாட்டங்கள், போராட்டங்கள், பொதுக் கூட்டங்கள், தெருமுனைப் பிரச்சாரங்கள், அறிவிப்புகள் மற்றும் பிற செய்திகள் ஆகியவற்றை செய்திகளாக கழகத் தலைமைக்கு எளிமையாக அனுப்ப தோழர்களின் வசதிக்காக ஒரு புதிய  மின்னஞ்சல் முகவரி  உருவாக்கப்பட்டுள்ளது. செய்திகள் அனுப்பும் பொழுது நிகழ்வுகளின் புகைப்படங்கள், நாள், நேரம், கலந்து கொண்ட அமைப்புகள், கலந்து கொண்ட பொறுப்பாளர்கள் ஆகிய விபரங்களை தவறாமல் குறிப்பிட வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம். கழகத்தின் செயல்பாடுகளை கழக இதழான பெரியார் முழக்கம்,கழக இணையம், கழக சமூக வலைத் தளங்கள் வாயிலாக மக்கள் மன்றத்தின் பார்வைக்கு கொண்டு செல்ல தாங்கள் அனுப்பும் செய்தி பெரிதும் உதவும். ஆதலால்  கழக சார்பில் நடத்தப்படும் ஒவ்வொரு நிகழ்வுகளையும் தவறாமல் பதிவு செய்வதும் நிகழ்வின் ஓர் அங்கமே எனவே கீழ்காணும் மின்னஞ்சல் முகவரிக்கு தவறாமல் செய்திகளை அனுப்பி உதவுமாறு கேட்டுக் கொள்கிறோம். newsdvk@gmail.com – திராவிடர் விடுதலைக்...

மக்கள் போராளி முகிலனுக்கு குறி வைத்து நசுக்கும் காவல்துறை!

மக்கள் போராளி முகிலனுக்கு குறி வைத்து நசுக்கும் காவல்துறை!

இயற்கை வளங்களை சுரண்டும் கும்பலுக்கு எதிராகவும் மக்களை பேரழிவுக்கு உள்ளாக்கும் அணுமின்சாரம், மீத்தேன் போன்ற திட்டங்களையும் எதிர்த்து மக்கள் போராட்டங்களை நடத்தி வரும் போராளி முகிலன் தொடர்ந்து காவல்துறையால் குறி வைத்து சித்திரவதைக்கும் முறைகேடான கைதுக்கும் உள்ளாகி வருகிறார். ஆனாலும், அவரது கொள்கை உறுதியை இந்த அடக்குமுறைகள் சித்திரவதைகள் அசைத்துக் கூட பார்க்க முடியவில்லை. மக்கள் உரிமைக்காகப் போராடும் போராளிகளை காவல்துறையும் அரசும் எவ்வளவு மூர்க்கமாக ஒடுக்குகிறது என்பதை வெளிப்படுத்த புரட்சிப் பெரியார் முழக்கம் முகிலனின் இந்த கடிதத்தை வெளியிடுகிறது. போராளி முகிலன் ஒரு பொறியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார் முகிலன். சிறையிலிருந்து நெல்லை மாவட்டம் வள்ளியூர் குற்றவியல் நடுவருக்கு (மாஜிஸ்திரேட்) சிறை அதிகாரி வழியாக அனுப்பிய கடிதம் இது: “நான் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக தமிழகத்தின் இயற்கை வளங்கள் வரைமுறையற்று சூறையாடப்படுவதை எதிர்த்தும், தமிழகத்தின் தற்சார்பை பாதுகாக்கவும், மக்களின் கருத்துகளுக்கு எதிராக வளர்ச்சி...

”கீழ்வெண்மணி கலவரத்தின் போது பெரியார் ஆதிக்கச் சாதி மக்களுக்கு ஆதரவாக அமைதி காத்தாரா?” – தோழர் தியாகு.

”கீழ்வெண்மணி கலவரத்தின் போது பெரியார் ஆதிக்கச் சாதி மக்களுக்கு ஆதரவாக அமைதி காத்தாரா?” – தோழர் தியாகு.

”கீழ்வெண்மணி கலவரத்தின் போது பெரியார் ஆதிக்கச் சாதி மக்களுக்கு ஆதரவாக அமைதி காத்தாரா?” – தோழர் தியாகு. இதற்கான பதிலைத் தெரிந்து கொள்ளும் முன் முதுகுளத்தூர் கலவரத்தின் போது பெரியாரின் நிலைப்பாட்டையும் தெரிந்து கொள்ள வேண்டும். கலவரச் சூழல் குறைய முத்துராம லிங்கம் கைது செய்யப்பட வேண்டும் என வெளிப்படையாக ஆதிக்கச் சாதியினரை எதிர்த்து பாதிக்கப்பட்ட தலித் மக்களுக்கு ஆதரவு அளித்தார் பெரியார். கீழ்வென்மணியில் ‘திராவிட விவசாயத் தொழிற்சங்கம்’ சங்கம் என்ற அமைப்பு திராவிடர் கழகத் தோழர்களால் நடத்தப்பட்டு வந்தது. சாணிப்பால்,சவுக்கால் அடித்தது போன்ற வன்கொடுமைகளை திராவிடர் கழகம் எதிர்த்தது. கம்யூனிஸ்ட்டுகளும் எதிர்த்தனர். கூலி, குத்தகை, அவர்களின் வாழ்க்கைத்தரம், அவர்களுக்கு கல்வி போதிப்பது என அனைத்துக் களங்களிலும் திராவிடர் விவசாய தொழிலாளர் சங்கம் இயங்கியது. அவர்களுக்கானக் கொள்கைகளை விளக்கி விடுதலை சார்பாக சிறிய புத்தகமும் வெளியிடப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியால சாதிக்க முடியாததை, அவர்கள் இவ்வளவு காலம் போராடியும் செய்யமுடியாததை இராஜாஜி ஆட்சி...

கழகம் எடுத்த பெரியார் நினைவு நாள்

பேராவூரணி : பேராவூரணியில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திராவிடர் விடுதலைக் கழக மாவட்ட அமைப்பாளர் சித.திரு வேங்கடம் தலைமையில் ஒன்றியப் பொறுப்பாளர் சீனி. கண்ணன், தமிழக மக்கள் புரட்சிக் கழக பரப்புரைச்  செயலாளர் ஆறு நீலகண்டன் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்தனர். மெய்ச்சுடர் நா.வெங் கடேசன், த.ம.பு.க. இரா மதியழகன், ஆயில் மதியழகன், தி.வி.க நகர அமைப்பாளர் தா. கலைச்செல்வன் ஆகியோர் நிகழ்வில் கலந்து கொண்டனர். ஆணவப் படுகொலைகளைத் தடுக்க  தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும். காதல் திருமணம் செய்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று முழக்கமிட்டனர். குமரி : பெரியாரின் 44ஆவது, நினைவு நாளை முன்னிட்டு, திராவிடர் விடுதலைக் கழகம், குமரி மாவட்டம். சார்பாக 24-12-2017 ஞாயிறு காலை 9.00மணிக்கு தக்கலை வட்டாட்சியர் அலுவலகம் அருகே வீரவணக்க நிகழ்வு நடைப்பெற்றது.  நீதிஅரசர் (பெ.தொ.க தலைவர்)  தலைமை...

பெண்ணுரிமை; ஜாதி ஒழிப்பு; இந்துத்துவா எதிர்ப்பு; மாநில உரிமைகளுக்காக… 2017இல் கழகத்தின் செயல்பாடுகள்

பெண்ணுரிமை; ஜாதி ஒழிப்பு; இந்துத்துவா எதிர்ப்பு; மாநில உரிமைகளுக்காக… 2017இல் கழகத்தின் செயல்பாடுகள்

2017ஆம் ஆண்டு திராவிடர் விடுதலைக் கழகத்தின் முக்கிய களப்பணிகள் பற்றிய ஒரு தொகுப்பு: ஜனவரி – தமிழ்ப் புத்தாண்டு, தமிழர் திரு நாள் விழாக்கள், கலை நிகழ்ச்சிகளுடன் சென்னை, மயிலாப்பூர், கொளத்தூர், நங்க வள்ளி, கொளப் பலூர், திருப்பூர் உள்ளிட்ட பல்வேறு ஊர்களில் கழகத் தோழர்கள் கலை நிகழ்ச்சிகள், விளையாட்டுப் போட்டிகளுடன் மக்கள் விழாவாக நடத்தினர். அரியலூர் மாவட்டம் செந்துறை வட்டம் சிறுகாம்பூர் கிராமத்தில் நந்தினி என்ற தலித் மாணவி, இந்து முன்னணி கும்பலால் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, நந்தினிக்கு நீதிகேட்டு கழக சார்பில் குடியாத்தம், திருச்செங்கோடு, அரியலூர், மதுரை, ஆத்தூர், நங்கவள்ளி, திருப்பூர், மேட்டூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. பிப்ரவரி: காதலர் நாளை பிப். 12ஆம் தேதி ஒரு நாள் விழாவாக மேட்டூரில் கலை நிகழ்வுகளுடன் கழகத் தோழர்கள் நடத்தினர். ஜாதிவெறிக்கு கணவரை பலி கொடுத்து ஜாதி ஒழிப்புக் களத்தில் நிற்கும்...

குடும்பங்களில் பெண் குழந்தைகளுக்கு சுயமரியாதை உணர்வை ஊட்ட வேண்டும்

ஈரோடு பெண்கள் சுயமரியாதை மாநாட்டில் பங்கேற்று முன்னாள் மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி பேசுகையில் குறிப்பிட்டதாவது: “பெரியார் பிறந்த மண்ணில் பெண்கள் சுயமரியாதை மாநாடு வெற்றியுடன் நடந்து கொண்டிருக் கிறது. நாங்கள் நிகழ்த்துகிற உரைகளை விட இந்த மாநாட்டின் வெற்றிக்கு காஞ்சி மக்கள் மன்றம் நிகழ்த்திய கலைநிகழ்ச்சிகள் தான் முக்கிய பங்காற்றியிருக்கிறது என்று கூறுவேன். அவ்வளவு சிறப்பாக கருத்துகளை இசையாக – கலை நிகழ்வுகளாக வழங்கினர். அவர்களைப் பாராட்ட கடமைப்பட் டிருக்கிறேன். பெண்கள் மாநாடுகளை தொடர்ந்து திராவிடர் விடுதலைக் கழகம் நடத்தி வருவது அறிந்து மகிழ்ச்சியடைகிறேன். தந்தை பெரியாரின் சிந்தனைகள் இன்று உலக நாடுகளால் கவனிக்கப் பட்டு வருகிறது. நான் மத்திய அமைச்சராக இருந்தபோது பல்வேறு மாநிலங்களுக்கு போகும்போது சமூகநீதி என்றால் என்னவென்றே அம்மக்களுக்குத் தெரியவில்லை என்பதை உணர்ந்தேன். தமிழ்நாட்டில் பெரியார் ஆற்றிய தொண்டு, சமூக நீதி பற்றி நான் பங்கேற்கும் நிகழ்ச்சி களில் எல்லாம் தொடர்ந்து பேசுவேன். ஆண், பெண் சமத்துவத்தை...

மாநிலங்களின் மருத்துவத் துறையிலும் டில்லியின் அதிகாரப் பறிப்பு  சமூக நீதிக்கான மருத்துவர் சங்கத் தலைவர் இரவீந்திர நாத் அறிக்கை

மாநிலங்களின் மருத்துவத் துறையிலும் டில்லியின் அதிகாரப் பறிப்பு சமூக நீதிக்கான மருத்துவர் சங்கத் தலைவர் இரவீந்திர நாத் அறிக்கை

2012இல் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு வைத்து 11,000 செவிலியர்களைத் தமிழக அரசின் சுகாதாரத் துறை நியமனம் செய்தது. அவர்களுக்கு மாதம் ரூ.7,700 தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. கடும் பணிச்சுமை, குறைந்த சம்பளம், வாழ்வாதாரப் பிரச்சினைகள் என்று அல்லாடிக் கொண்டிருக்கிறார்கள் செவிலியர்கள். பணி நியமனத்தின்போதே அவர்களை நிரந்தர அடிப்படையில் நியமிக்காமல், ஒப்பந்த அடிப்படையில் நியமித்தது. மத்திய அரசின் தேசிய சுகாதார இயக்கம் மூலம் இவர்கள் நியமிக்கப்படு கிறார்கள் என்று அதற்குக் காரணமும் சொன்னது. இது ஒரு மிக முக்கியமான கேள்வியை எழுப்புகிறது. மாநில அரசின் கட்டுப்பாட்டில் உள்ள மருத்துவமனைகளுக்குப் பணி நியமனம், ஊதியம் வழங்கல் போன்ற விஷயங்களில் ஏன் மத்திய அரசு நேரடியாகத் தலையிடுகிறது? இது மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் செயலல்லவா? இந்த உரிமை பறிப்புக்கு ஏன் மாநில அரசு உடன்பட்டது என்று புரியவில்லை. பணியாளர் நியமனத்தில் மாநில உரிமை பறிக்கப்படுவது என்பது கூட்டாட்சிக் கோட்பாட்டுக்கு எதிரானது. மாநிலங்களின்...

ஈரோடு மாநாடு பெண்களுக்கு அழைப்பு சுயமரியாதைக்குப் போராடுங்கள்!

‘பெண்கள் சுயமரியாதைக்குப் போராட முன் வரவேண்டும்’ என்று ஈரோடடில் நடந்த சுய மரியாதை மாநாடு பெண்களுக்கு அறைகூவலை விடுத்தது. அரங்குகளில் மண்டபங்களில் மட்டுமே ஒலித்து வந்த பெண்ணுரிமைக் கருத்துகளை திறந்தவெளி மாநாடாக நடத்தி வருகிறது திராவிடர் விடுதலைக் கழகம். சென்னையில் ஜாதி ஒழிப்புக்கு அழைப்பு விடுத்தது பெண்கள் மாநாடு. ஈரோட்டில் பெண்கள் சுயமரியாதைக்குப் போராட முன்வரவேண்டும் என்று வேண்டுகோள் விடுத் துள்ளது. ஈரோட்டில் திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக பெண்கள் சுயமரியாதை மாநாடு டிசம்பர் 16 மாலை, வீரப்பன் சத்திரம் சாலையில் எழுச்சியுடன் நடைபெற்றது. கோவை, சேலம், மேட்டூர், திருப்பூர், ஈரோடு, சென்னை, நாமக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து தோழர்கள், தோழியர்கள் மாநாட்டுக்கு திரண்டு வந்திருந்தனர். காஞ்சி மக்கள் மன்றத்தின் பறையிசையோடு நிகழ்ச்சிகள் தொடங்கின.  தொடர்ந்து பெண்ணுரிமை, ஜாதி எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு கருத்துகளைக் கொண்டு பாடல்களையும், இசை நாடகங்களையும் நிகழ்த்தினர். கலை நிகழ்ச்சிகள் பார்வையாளர்களை மிகவும் ஈர்த்தன. பெரியார் படத்துடன்...

திராவிட இயக்கம் கடக்க வேண்டிய பாதை  விடுதலை இராசேந்திரன்

திராவிட இயக்கம் கடக்க வேண்டிய பாதை விடுதலை இராசேந்திரன்

‘தமிழ் இந்து’ வெளியிட்ட ‘தெற்கிலிருந்து ஒரு சூரியன்’ மலருக்கு எழுதிய கட்டுரையின் முழு வடிவம். கட்டுரையின் பல பகுதிகள் மலரில் இடம் பெறவில்லை. திராவிட இயக்கம் குறித்து ‘இந்து’ குடும்பத்திலிருந்து வெளிவரும் ‘தமிழ் இந்து’ சிறப்பு மலர் வெளியிட முன்வரும் ‘வரலாற்றுச் சூழல்’ நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் தருகிறது. நல்ல முயற்சிக்கு எனது பாராட்டு களோடு, சில கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அடையாளங்களை மீட்கும் அரசியல் மற்றும் விடுதலைப் போராட்டங்களை உலகம் சந்தித்திருக்கிறது. இனம் – மொழி – பண்பாட்டு அடையாளங்களோடு உருவான திராவிடர் இயக்கத்தின் ‘அடையாள அரசியல்’ அதிலிருந்து மாறுபட்டது என்பதைக் குறிப்பிட வேண்டும். சமூகத்தின் ஒடுக்குமுறை வடிவமான ஜாதியமைப்பு வழியாக கட்டமைத்து மக்கள் மீது திணித்த அடக்குமுறை அடையாளங் களிலிருந்து மீட்டெடுத்து அவர்களின் உரிமை களுக்கான அடையாளங்களை முன் வைத்தது தான் திராவிட இயக்கத்தின் தோற்றுவாய். ஒரு இனத்தின் சுயமரியாதைக்கான அடையாளமாக பெரியார் அதை வார்த்தெடுத்தார். பழமை மீட்புக்குள்...

சிறைகளை நிரப்பி, உயிர் துறந்த பெரியார் தொண்டர்களின்  ஜாதி ஒழிப்புப் போராட்டக் களத்தின் உணர்ச்சிப் பதிவுகள்

சிறைகளை நிரப்பி, உயிர் துறந்த பெரியார் தொண்டர்களின் ஜாதி ஒழிப்புப் போராட்டக் களத்தின் உணர்ச்சிப் பதிவுகள்

1957ஆம் ஆண்டு நவம்பர் 26, பெரியார் இயக்க வரலாற்றில் முக்கியத்துவம் பெற்ற நாள். இந்திய அரசியல் சட்டத்தின் உட்பிரிவுகள் 13, 25, 368, 372 ஆகிய பிரிவுகள் ஜாதி ஒழிப்புக்கு முழுதும் தடையாய் இருப்பதால், அப் பிரிவுகளை தீயிட்டு எரிக்கும் போராட்டத்தை பெரியார், அறிவார்ந்த போராட்டம் நடப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்பு 3.11.1959 அன்று தஞ்சையில் சிறப்பு மாநாட்டைக் கூட்டி அறிவிக்கப்பட்ட போராட்டம் அது. பெரியாரின் எடைக்கு எடை வெள்ளி நாணயங்களை அம்மாநாட்டில் வழங்கி மகிழ்ந்தனர் பெரியார் தொண்டர்கள். சட்டத்தை எரித்தோம் என்று ஒப்புக்கொண்டு எதிராக வழக்கை நடத்தாமல் 6 மாதத்திலிருந்து மூன்று ஆண்டுகள் வரை – பெரியார் தொண்டர்கள் சிறைத் தண்டனையை ஏற்றார்கள். பெண்கள், கைக் குழந்தைகளோடு கைதானவர்களும் உண்டு. கிரிமினல் கைதிகளாகவே அனைவரும் நடத்தப்பட்டு சிறையில் வேலை வாங்கப்பட்டனர். அடிப்படை வசதிகள், சுகாதாரமே இல்லாத அன்றைய சிறை, பல தோழர்களின் உடல்நலத்தை கடுமையாக பாதிக்கச் செய்தது. சிறைக்குள்ளேயே பட்டுக்கோட்டை...

‘உரிமை மீட்பு கூட்டியக்கம்’ நடத்திய ‘மனித உரிமை நாளில்’ விடுதலை இராசேந்திரன் பேச்சு ‘சித்திரவதைகளைத்’ தடை செய்ய மறுக்கும் இந்திய அரசு

டிசம்பர் 10, அய்.நா. மனித உரிமை நாளையொட்டி சென்னை மற்றும் காஞ்சி மாவட்ட மக்கள் சிவில் உரிமைக் கழக முன்முயற்சியால் உருவாக்கப்பட்ட 40 அமைப்புகளைக் கொண்ட உரிமை மீட்பு கூட்டியக்கம் சென்னை மயிலாப்பூர், மாங்கொல்லையில் உரிமை மீட்பு பொதுக் கூட்டம் ஒன்றை சிறப்பாக நடத்தியது. மாற்றுக் கலை ஊடகம், காஞ்சி மக்கள் மன்றத்தின் புரட்சிகர கலை நிகழ்ச்சிகளோடு நடந்த இந்த நிகழ்வுக்கு சென்னை தொழிலாளர் சங்கத்தைச் சார்ந்த எஸ்.நடராசன் தலைமை தாங்கினார். பி.யு.சி.எல். அமைப்பைச் சார்ந்த டி.எஸ்.எஸ்.மணி, பொதுக் கூட்டத்துக்கான ஏற்பாடுகளை முன்முயற்சி எடுத்து ஒருங்கிணைத்தார். வெள்ளையன் (வணிகர் சங்கப் பேரவை), ஹாஜா கனி (த.முமு.க) அமீர் (திரைப்பட இயக்குநர்), ஓவியா (புதிய குரல்), வழக்கறிஞர் அருள்மொழி (திராவிடர் கழகம்), எஸ்.எம்.பாக்கர் (இந்திய தவ்ஹீத்), பேராசிரியர் சரசுவதி (பி.யு.சி.எல்.), வினோத் (ஆதித் தமிழர் விடுலை இயக்கம்), கிரேஸ் பானு (திருநங்கை அமைப்பு) உள்ளிட்ட பலரும் உரையாற்றினர். கழக சார்பில் பொதுச் செயலாளர்...

பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு பாதியளவுகூட நிரப்பப்படவில்லை நடுவண்அரசுகளின் துரோகம்

பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீடு பாதியளவுகூட நிரப்பப்படவில்லை நடுவண்அரசுகளின் துரோகம்

பிற்படுத்தப்பட்டோருக்கு மத்திய அரசு பதவிகளில் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஆணையைப் பிறப்பித்தார், சமூக நீதிக் காவலரான பிரதமர் வி.பி.சிங். 24 ஆண்டுகள் கழிந்த பிறகும் 27 சதவீதத்தில் இன்னும் பாதியளவுகூட பிற்படுத்தப்பட்டோருக்குப் பணிகள் வழங்கப்படவில்லை என்ற அதிர்ச்சியான தகவல்கள் வெளி வந்துள்ளன. தகவல் அறியும் சட்டத்தின் கீழ் பெறப்பட்டுள்ள தகவல்கள் அதிர்ச்சியூட்டுகின்றன. 1993 செப்டம்பர் 8ஆம் தேதி பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீடு நடைமுறைக்கு வந்தது. இப்போது என்ன நிலை? மத்திய அரசின் வேலை வாய்ப்புத் துறை அமைச்சகம் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் வெளியிட்டுள்ள தகவலின்படி ஜனவரி 1, 2017 வரை இதுதான் நிலை. 24 மத்திய அமைச்சகங்களில் குரூப் ‘ஏ’ பிரிவு அதிகாரிகளில் பிற்படுத்தப்பட்டோர் 17 சதவீதம் பேரும் ‘பி’ பிரிவில் 14 சதவீதம் பேர் மட்டுமே பணியாற்றுகிறார்கள். ‘சி’ பிரிவு ஊழியர்களில் 11 சதவீதம் பேரும், ‘டி’ பிரிவில் 10 சதவீதம் பேரும்...

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கு தண்டனைக் குறைப்பு வழங்க உதவுங்கள் : சோனியாவுக்கு நீதிபதி கே.டி.தாமஸ் உருக்கமான கடிதம்

பேரறிவாளன் உள்ளிட்ட 7 தமிழர்களுக்கு தண்டனைக் குறைப்பு வழங்க உதவுங்கள் : சோனியாவுக்கு நீதிபதி கே.டி.தாமஸ் உருக்கமான கடிதம்

ராஜிவ் காந்தி கொலை வழக்கு விசாரணையில் குற்றம்சாட்டப்பட்ட மூவருக்கு தூக்குத் தண்டனை விதித்து உச்சநீதிமன்ற அமர்வுக்கு தலைமை தாங்கிய நீதிபதி கே.டி.தாமஸ், காங்கிரஸ் தலைவரும் ராஜிவ் காந்தி மனைவியுமான சோனியாவுக்கு அக்டோபர் 18ஆம் தேதி ஒரு கடிதம் எழுதியுள்ளார். 1991ஆம் ஆண்டு முதல் இந்த வழக்கில் சிறைப் படுத்தப்பட்டுள்ளோரின் தண்டனை குறைப்புக்கு பரந்த உள்ளத்தோடு, சோனியா தனது சம்மத்தை தெரிவிக்க முன்வர வேண்டும் என்று அந்த கடிதத்தில் கேட்டுள்ளார். அவரது கடிதத்தின் விவரம்: “2014ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு, ராஜிவ் கொலையில் தண்டிக்கப்பட்டு சிறையிலிருக்கும் 7 பேருக்கும் தண்டனைக் குறைப்பு வழங்க தமிழ்நாடு அரசு முன் வந்தபோது மத்திய அரசு எதிர்த்தது. அந்த வழக்கு இப்போது உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் நீங்களும் ராகுல் காந்தியும், வாய்ப்பிருந்தால் பிரியங்காவும் குடியரசுத் தலைவருக்கு தண்டனைக் குறைப்பு வழங்கலாம் என்று உங்கள் சம்மதத்தை தெரிவித்து ஒரு கடிதம் எழுதுவீர்களே யானால், மத்திய அரசு,...

பெரியாருக்கு எதிராக அம்பேத்கரை நிறுத்தும் பார்ப்பனியம்! – கார்த்திக் ராம் மனோகர்-எஸ். ஆனந்தி

பெரியாருக்கு எதிராக அம்பேத்கரை நிறுத்தும் பார்ப்பனியம்! – கார்த்திக் ராம் மனோகர்-எஸ். ஆனந்தி

‘தி ஒயர்’ ஆங்கில இணையதளத்தில் பெரியாரைக் கடுமையாக விமர்சித்து பி.ஏ. கிருஷ்ணன் என்பவர் (இவர் தமிழ்நாட்டுப் பார்ப்பனர்) ஒரு கட்டுரை எழுதியிருந்தார். பார்ப்பனிய எதிர்ப்பு என்ற பெயரால் பெரியார் பார்ப்பனர்களை எதிர்த்த இனவாதி; பொருளாதாரக் கொள்கையில் அவருக்கு தெளிவான பார்வை கிடையாது; அம்பேத்கர் ஆழமான சிந்தனையாளர்; பெரியார் தெருச் சண்டைக்காரர் என்று பெரியாருக்கு எதிராக நஞ்சு கக்கியது அக்கட்டுரை. இதற்கு விரிவான பதிலளித்து ‘தி ஒயர்’ ஏட்டுக்கு பேராசிரியர்கள் ராம் கார்த்திக் மனோகர், பேரா. ஆனந்தி ஆகியோர் எழுதிய கட்டுரை இது. தமிழில் ‘இரா’.   இந்தியாவின் ‘சுதந்திரப்’ போராட் டத்தில் பெரியார் முழுமையான உடன்பாடு  கொள்ள வில்லை என்பதற்கான காரணம் இந்த சுதந்திரத்தால் பயனடையப் போவது யார்? சுதந்திரத்தின் பயன் கிடைக்காமல் விலக்கி வைக்கப்படுவோர் யார்? என்பதுதான். அந்த நிலைப்பாட்டை பிரிட்டிஷ் ஆட்சிக்கு ஆதரவாக செயல்பட்டார் என்று முத்திரை குத்திவிட முடியாது. இந்து வலதுசாரி சிந்தனையாளர்கள் பெரியார் மீது வெறுப்பைக்...

பெரியார் பெண் விடுதலையின் தந்தை மட்டுமல்ல; தமிழ்மண் விடுதலையின் தந்தை

பெரியார் பெண் விடுதலையின் தந்தை மட்டுமல்ல; தமிழ்மண் விடுதலையின் தந்தை

அக்டோபர் 7ஆம் தேதி பெரம்பூர் பெரவள்ளூர் சதுக்கத்தில் நடந்த பொதுக் கூட்டத்தில் உடுமலை கவுசல்யாவின் எழுச்சி உரை இந்த மேடை நமக்கெல்லாம்  கற்றுத்தரும் அரசியல் பாடம் ஈடிணையற்றது என்று நான் இந்த அழைப்பிதழ் பார்த்ததிலிருந்தே உணர்கிறேன். நான் அறிந்து மேடையில் உள்ள ஒவ்வொரு வரும் சமூகத்தில் ஒவ்வொரு அடையாளங்களைப் பெற்றிருக்கிறார்கள். அது ஒடுக்கப்பட்டோரின் குரலாகவே தம் குரலை ஆக்கிக் கொண்டவர்கள், சாதி ஒழிப்பில் எவ்வகையிலும் சமரசமற்றவர்கள், மீத்தேன் ஹைட்ரோ கார்பன் அழிவுத் திட்டங்களுக்கு எதிராகக் களத்தில் அஞ்சாது நிற்கும் போராளிகள், அடிப்படையில் இடதுசாரிச் சிந்தனையில் ஊன்றி நிற்பவர்கள் என எல்லாப் பெண்களும் பெண் விடுதலையின் அடையாளமாகவே தமது வாழ்வை அமைத்துக் கொண்டவர்கள். இன்னொரு வகையில் சமூகத்தின் விலங்குகளையும் பண்பாட்டுச் சிறைகளையும் உடைத்து விடுதலைப் பெண்ணாகவே வாழாமல் இப்படிப்பட்ட அடையாளங்களோடு பெண்கள் நிலைபெற்று வெற்றி பெற முடியாது. விடுதலை வாழ்வை பெண்கள் விட்டுக் கொடுக்காமல் வாழ்வதன் மூலம்தான், மக்களுக்கான போராட்ட வாழ்வை மேற்கொள்ள...

திவ்யபாரதி ஆவேச உரை  இரயில் நிலையங்களில் கையால் மலம் எடுக்கிறார்கள்; இதை ஒழிக்க வக்கில்லாமல் புல்லட் இரயில் விடுகிறார் மோடி

திவ்யபாரதி ஆவேச உரை இரயில் நிலையங்களில் கையால் மலம் எடுக்கிறார்கள்; இதை ஒழிக்க வக்கில்லாமல் புல்லட் இரயில் விடுகிறார் மோடி

சென்னையில் ஜாதி எதிர்ப்புக்கான பெண் போராளிகளின் அறைகூவல் பொதுக் கூட்டத்தில் ‘கக்கூஸ்’ ஆவணப் பட இயக்குனர் திவ்யபாரதி உரையில் குறிப்பிட்டதாவது: சமுதாயப் பிரச்சினைக்காகப் போராடுகிறவர்கள் மீது ‘தேச விரோதிகள்’ என்று குற்றம்சாட்டு கிறார்கள். இங்கே இவ்வளவு பெரிய அளவில் திரண்டிருக்கிற நாம் எல்லோரும் ‘சங்பரிவார்’ பார்வை யில் தேச விரோதிகள். சாவர்க்கார் பிரிட்டிஷ் அதிகாரியைக் கொலை செய்த குற்றத்தில் தண்டிக்கப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட் டிருந்தபோது பிரிட்டிஷ் ஆட்சியிடம் மன்னிப்புக் கேட்டு விடுதலையானவர். அவரை ‘வீர சாவர்க்கார்’ என்று கூறுகிற கூட்டம், நம்மைப் பார்த்து தேச விரோதி என்கிறது. நான் எடுத்த ‘கக்கூஸ்’ ஆவணப் படத்துக்காக கடும் எதிர்நீச்சல் போட வேண்டியிருந்தது. 25 இடங்களை மய்யமாக வைத்து அங்கே மனித மலத்தை மனிதர் அள்ளும் இழிவு தொடர்வதைப் படம் பிடித்தோம். நகரங்களிலுமா இப்படி நடக்கிறது என்று கேட்டார்கள். ஜாதி இழிவு கிராமத்தில் தான் இருக்கிறது, நகரங்களில் இல்லை என்பது ஒரு மூட...

இளைஞர்களே, ‘சுயஜாதி’ மறுப்பாளர்களாகி ஜாதி சங்கங்களை புறக்கணிப்போம் பெண் போராளிகள் அறைகூவல்

இளைஞர்களே, ‘சுயஜாதி’ மறுப்பாளர்களாகி ஜாதி சங்கங்களை புறக்கணிப்போம் பெண் போராளிகள் அறைகூவல்

“இளைஞர்களே; ஜாதி சங்கங்களைப் புறக்கணியுங்கள்; சுய ஜாதி எதிர்ப் பாளர்களாக மாறுங்கள்; ஜாதி ஒழிப்புக் களம் நோக்கி வாருங்கள்; நமது தலைமுறையிலேயே ஜாதி அமைப்பை முடித்து வைப்போம்!” என்று பெண் போராளிகள் அறைகூவல் விடுத்தார்கள். சென்னையில் திராவிடர் விடுதலைக் கழகம், ஜாதி ஒழிப்புக் களம் நோக்கி பெண் போராளிகள் அறைகூவல் விடுக்கும் பொது மேடை ஒன்றை உருவாக்கித் தந்தது. பெரம்பூர்  பெரவள்ளூர் சதுக்கத்தில் அக்டோபர் 7 ஆம் தேதி நடந்த எழுச்சி நிகழ்வில் பல்வேறு இயக்கங்களைச் சார்ந்த தோழர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த கழகத் தோழர்கள் பெருமளவில் பங்கேற்றனர். நெடிய வீதி முழுதும் மக்கள் தலைகளாகவே காட்சி அளித்தது. 6 மணி யளவில் மக்கள் மன்றத்தின் பறை இசை; புரட்சிகரப் பாடல்களுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. நேரம் செல்ல செல்ல கூட்டம் அதிகரித்தது. கூடுதல் இருக்கைகள் போடப்பட்டுக் கொண்டே இருந்தன. இருக்கைகளுக்குப் பின்னாலும் வீதியின் ஓரங்களிலும் அடர்த்தியாக இளைஞர்களும் பொது மக்களும்...

விருதுநகர் சுயமரியாதை மாநாட்டுத் தீர்மானங்கள் சங்பரிவாரங்களின் சவாலை முறியடிக்க சூளுரைப்போம்

விருதுநகர் மாவட்ட திராவிடர் விடுதலைக் கழகம் சார்பாக ‘விருதுநகர் சுயமரியாதை மாநாடு’ 23.9.2017 அன்று மாலை விருதுநகர் விஸ்வேஸ்வரர் அரங்கில் சிறப்புடன் நடைபெற்றது. 1931ஆம் ஆண்டு விருதுநகரில் நடந்த மூன்றாவது சுயமரியாதை மாநாட்டின் வரலாற்றை நினைவு கூர்ந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது இம்மாநாடு. மாநாட்டையொட்டி விருதுநகர் மாவட்டத்தில் பெரியார் பங்கேற்ற நிகழ்ச்சிகளின் வரலாற்றுப் பதிவுகள் பேரறிஞர் அண்ணா சிலை வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்தது. கழகத் தலைவர் கொளத்தூர் மணி, இந்த வரலாற்றுச் சுவடுகள் கண்காட்சியை திறந்து வைத்தார். அங்கிருந்து பறை இசை முழங்க ஊர்வலமாக புறப்பட்டு மாநாட்டு அரங்கிற்கு தோழர்கள் வந்து சேர்ந்தனர். டபிள்யூ.பி.ஏ. சவுந்தரபாண்டியன் நினைவரங்கத்தில் கழகத் தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கின. மாவட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் வரவேற்புரையாற்றினார். மாவட்ட கழகத் தலைவர் அல்லம்பட்டி நாத்திகபாண்டி முன்னிலை வகித்தார். தோழர்கள் டார்வின்தாசன் (திருச்சி மாவட்ட கழகப் பொறுப்பாளர்), ஆசிரியர் சிவகாமி (தமிழ்நாடு அறிவியல் மன்றம்), இரா உமாபதி (சென்னை...

மக்கள் பொது விசாரணை – தமிழகமும் ஜாதிய படுகொலைகளும் – எவிடென்ஸ் 24092017 திருச்சி

நேற்று எவிடென்ஸ் அமைப்பு திருச்சியில் தமிழகமும் சாதிய படுகொலைகளும் குறித்த பொது விசாரணை நடத்தியது.இந்த விசாரணைக்கு என்று 600 பக்கங்கள் கொண்ட சட்ட ஆவணங்கள் தயாரிக்கப்பட்டது.வழி நடத்திய 8 நடக்குவர்களுக்கும் அந்த ஆவணங்கள் கொடுக்கப்பட்டன.விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 30 வழக்குகளில் 20 வழக்குகள் சார்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் வாக்குமூலம் கொடுத்தனர்.அம்பேத்கர் படம் போட்ட கயிறு கட்டி இருந்ததற்காக ஒரு இளைஞர் கொலை செய்யப்பட்டு உள்ளார்.கபடி போட்டியில் கால் பட்டதனால் ஒரு தலித் மாணவர் கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.ஒரு சிறுமியின் பாலியல் வன்புணர்ச்சி சம்பவத்தை நேரடியாக பார்த்த வெட்டியான் வேலை செய்ய கூடிய ஒரு தொழிலாளி தட்டி கேட்டதற்காக கொலை செய்யப்பட்டு இருக்கிறார்.ஒரு தலித் பெண்ணை பாலியல் வன்புணர்ச்சி செய்து கொலை செய்துவிட்டு உடலை கிணற்றில் வீசிவிட்டு அன்று இரவே விமானம் பிடித்து வெளிநாட்டிற்கு தப்பித்து ஓடி இருக்கிறான் ஒரு சாதி வெறியன்.நடுவர்களின் ஒருவராக இருந்த அண்ணன் பவா செல்லத்துரை அழுது கொண்டே இருந்தார்.சவிதா...