G-20 தலைமைப் பதவியால் இந்தியாவுக்கு தனிப் பெருமை ஏதும் இல்லை
G-20 நாடுகளின் தலைமைப் பொறுப்பு இப்போது இந்தியாவிற்கு வந்துள்ளது. இதில் இந்தியா பெருமை கொள்ள எதுவும் இல்லை. இந்த அமைப்பின் உறுப்பு நாடு ஒவ்வொன்றுக்கும் சுழற்சி முறையில் தலைமைப் பொறுப்பு வழங்கப்பட்டு வருகிறது. 19ஆவது சுற்றில் தலைமைப் பதவி மோடிக்கு கிடைத்திருக்கிறது. அந்த முறையில் தற்போது இந்தியாவிற்கு இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இதையொட்டி, டெல்லியில் பிரதமர், அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றை கூட்டி இந்தியா முழுவதும் 200 இடங்களில் இது தொடர்பான கூட்டங்களை நடத்துவது என்ற முடிவை எடுத்திருக்கிறார். தமிழ்நாடு முநலமைச்சர் மு.க. ஸ்டாலின் இதில் கலந்து கொண்டிருக்கிறார். மிகவும் பெருந்தன்மையோடு இந்த நிகழ்வுகள் அனைத்திற்கும் தமிழ்நாடு அரசு ஒத்துழைப்பு தரும் என்று அறிவித்திருக்கிறார். அரசியலுக்கு அப்பாற்பட்டு ஒரு ‘ளுவயவநளஅயn’ என்ற முறையில் தமிழ்நாடு அரசு எடுத்திருக்கிற ஒரு சிறப்பான முடிவு. இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களில் ஒருவரான சீதாராம் யெச்சூரி கூறியிருக்கிற கருத்தையும்...
