தலையங்கம் அமர்த்தியாசென் கூறுகிறார்!
“இந்தியாவிலுள்ள மாநிலங்களை ஒப்பிட்டு நோக்கத்திற்காகத் தனித்தனி நாடுகளாக கருதிப் பார்ப்போமேயானால் கேரளாவும், தமிழ்நாடும், மற்றெல்லா மாநிலங்களைவிடவும் மேலாக முதல் நிலையில் இருக்கும் உத்தரபிரதேசமும், மத்திய பிரதேசமும் மிகவும் கடைசி நிலையில் இருக்கும்.” நோபல் பரிசு பெற்ற அமர்த்தியா சென் மற்றும் ஜீன் டி ரெஸ் ஆகியோர் இணைந்து எழுதிய நூலில் (நிலையில்லா புகழ் – இந்தியாவும் அதன் முரண்பாடுகளும்) இவ்வாறு குறிப்பிட் டுள்ளனர். அதுமட்டுமல்ல, இந்த மாநிலங்களிலிருந்து கிடைக்கும் அனுபவங்களையே படிப் பினையாகக் கொண்டு வேறு மாநிலங்கள் தங்கள் முன்னேற்றத்துக்குத் திட்டமிட வேண்டும் என்றும் அந்த நூலில் குறிப்பிட் டுள்ளனர். இந்தியா என்ற நுகத்தடியில் சிக்கிக் கொண்டதன் காரணமாக பார்ப்பனிய மேலாதிக்கத்துக்கு உட்பட்டு தமிழகம் அதன் முன்னேற்றங்களை விரைவு படுத்த முடியாது தடைபட்டு நிற்கிறது. பார்ப்பனியமும், இந்துமத வெறியும், ஜாதிக் கட்டமைப்பும் இறுகிப் போய்க் கிடக்கும் உ.பி., ம.பி. போன்ற மாநிலங்கள் அவைகள் தனி நாடுகளாக இருந்திருக்கு மானால், கடைசி இடங்களில்...